ஸ்வாமி சின்மயாநந்த சரஸ்வதி (தோற்றம் 8-5-1916 சமாதி
3-8-1993) தனது சின்மயா மிஷன் மூலமாக உலகெங்கும் ஹிந்து மதத் தத்துவங்களைப் பரப்பினார்.
இதன் கிளைகள் இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் தொடங்கப்பட்டன. சுமார் 300க்கும் மேற்பட்ட
இந்தக் கிளைகள் அத்வைத ஸித்தாந்தத்தைப் பரப்பி உலக மக்களை அத்வைத ஸித்தாந்தத்தின் மீது
ஈடுபட வைத்தன. அவரது பகவத் கீதா உரைகளும் உபநிடத உரைகளும் அனைவரையும் கவர்ந்தன.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில்
சிலவற்றை இங்கு பார்க்கலாம்
***
ஒரு சமயம் யாகம் ஒன்று நடந்தது. யாகசாலையில் எதிரொலி சத்தம்
கேட்டது.
ஒரு அன்பர் ஸ்வாமிஜியிடம்,”ஸ்வாமிஜி, யாகசாலையில் ஏன் எதிரொலி கேட்கிறது?” என்று வினவினார்.
அதற்கு ஸ்வாமிஜி, “ அவைகள் கேட்கப்படாத வார்த்தைகள். ஆகவே திரும்பி
வருகின்றன” என்றார்.
மனதில் உள் வாங்கிய வார்த்தைகள் திருப்பி வராதல்லவா?
“Swamiji, there is echo on the Yagnasala,
Why?”
“Oh!
They are words returned unlistened.” replied Swamiji
***
ஸ்வாமிஜி தனது குடிலில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த ஜன்னல்
வழியே வெளியில் பார்த்தார். பூத்துக் குலுங்கும் மரம் ஒன்று தெரிந்தது.
“நமது தோட்டத்தில் மலர்ச் செடிகள் உள்ளன. மலர்களைப் பார்க்க
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் அவர்.
அவர் அருகில் இருந்த ஒரு பக்தர், “மலர்களைப் பார்த்தாலேயே உள்ளார்ந்த
மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்றார்.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
“ஆமாம்! உள்ளார்ந்த மகிழ்ச்சியில் நாம் வாழவில்லை எனில், அதை
எழுப்பித் தர மலர்கள் தான் மிக அருகில் உள்ள
ஒரு வழி” என்றார் ஸ்வாமிஜி, ஒரு அர்த்தமுள்ள புன்னகையுடன்!
“We have flowers in our garden.. It is
indeed nice to see flowers” said Swamiji.
“The
sight of flowers gives us sublime happiness” remarked one of the devotees by
his side.
“Yes
– If we cannot live in the sublime Happiness within ourselves, then flowers are
the ‘nearest’ means to invoke it” added Swamiji with a meaningful smile.
***
பூஜ்ய குருதேவர் உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று தன் உலகப்
பயணத்தை முடித்துக் கொண்டு பம்பாய் விமானநிலையத்திற்குத் திரும்பினார். விமான நிலையத்தில்
அவரை வரவேற்கப் பெருந்திரளான கூட்டம் குழுமி இருந்தது. வி.ஐ.பி. அறைக்கு அவர் அழைத்துச்
செல்லப்பட்டார்.
அவரது பக்தர்களில் சிலர் அங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள். (சுங்க
அதிகாரிகள்). அவர்களும் ஸ்வாமிஜியை தரிசிக்க அங்கு வந்தனர்.
அவர்களில் ஒருவரைப் பார்த்துப் புன் சிரிப்புடன் ஸ்வாமிஜி கூறினார்:
“ நான் ஒரு பெரிய கடத்தல்காரன் என்பது உங்களுக்குத் தான் நன்றாகத்
தெரியுமே! இந்த தடவை முந்தைய தடவைகளை விட அதிகமாக -ஏராளமான – இதயங்களைக் கடத்தி வந்திருக்கிறேன்” என்றார் அவர். அங்கு குழுமியிருந்தோர் அனைவரும் மலர்ச்சியுடன்
சிரித்து மகிழ்ந்தனர்.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
A
smiling Gurudev told one of those Customs Officers, “ You know that I am a
great smuggler… this time I have smuggled in many more hearts than ever
before.” The observations sent the
entire assemblage into a rapturous laughter.
ஹாலந்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு விட்டு லண்டனில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த டாக்டர் ஆர். சத்ய நாராயணன் (Dr R Sathyanarayanan, Charge de Recherche, Sanskrit, Ecole Francaise D’extreme -Orient, Centre de Pondichery)அவர்களை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரி வளாகத்தில் 22-7-2019 சந்தித்தேன். அவரும் அவரை அழைத்து வந்த கல்யாண சுந்தர சிவாச்சார்யாவும் பல அரிய விஷயங்களைச் சொன்னார்கள்.
முதலில் நூல் வெளியீட்டு விழா பற்றிக் காண்போம். டாக்டர் ஆர்.சத்ய நாராயணன், பாண்டிச்சேரியிலுள்ள கீழ்திசை ஆராய்ச்சி நிலையத்தில் ஸம்ஸ்க்ருத ஆராய்ச்சித் துறைக்குப் பொறுப்பு வகிக்கிறார். அவர் பிரெஞ்சு ஆளுகைக்குட்பட்ட பல தென் கிழக்காசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்தவர். பல நூல்க ளை இயற்றியுள்ளார். ஜூலை 21, 2019ல் லண்டனில் அவர் எழுதிய “ருத்ராக்ஷ மாஹாத்ம்யம்” வெளியிடப்பட்டது. இந்த நூல் பரமசிவேந்திர சரஸ்வதி அவர்களால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. அதை தமிழ் முன்னுரையுடன் கிரந்தத்திலும் தேவ நாகரி லிபியிலும் அப்படியே வெளிட்டுள்ளனர். பல சுவடிகளில் பல பிழைகள் இருப்பதால அவைகளை நீக்கி ஆராய்ச்சிப் பதிப்பாக வெளியிட்டுள்ளார் டாக்டர் சத்யநாராயண சர்மா. இது ஏற்கனவே 10 நூல்களை வெளியிட்ட லண்டன் வேதாகம அகாடமியின் பதிப்பாக வந்துள்ளது. சிவ ஸ்ரீ கல்யாண சுந்தர சிவம், நூலின் ஜெனரல் எடிட்டர் (General Editor).
இதில்
எத்தனை வகை ருத்ராக்ஷங்கள் உள்ளன, யார்
யார் எதை அணிய வேண்டும், அதன் பலன்கள் என்ன என்பன
வெளியிடப்பட்டுள்ளன. பேரூர்ப் புராணத்தில் காணப்படும் அரிய விஷயங்களும்
முன்னுரையில் உள.
பிளாக்குகள், பேஸ் புக், வாட்ஸ் அப் முதலியன வந்த பின்னர் யார்
வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதி பொய்யுரைகளையும், பரபரப்பான விஷயங்களையும் பரப்பலாம்
என்ற நிலையில் எது உண்மை, எது பொய் என்பதே தெரியாத மயக்க நிலை
வந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் சுவடிகளில் இருந்து இப்படி அதிகாரபூர்வமாக
விஷயங்களை வெளியிடுவது இன்றியமையாதது; பாராட்டுக்குரியது. ஆயினும் கிரந்தம், நாகரி லிபியில் உள்ள முழு
விஷயங்களையும் மொழி பெயர்த்து வெளியிட்டால் பல்லாயிரக் கணக்கானோர் பயனடைவர்.
தற்போதைய
பதிப்பில் நூலின் சுருக்கம் இருக்கிறது.
டாக்டர்
சத்யநாராயணன் பேட்டியில் சொன்ன விஷயங்கள்:
பாண்டிச்சேரியில்
இரண்டு ஆராய்ச்சி நிறுவனக்கள் இருக்கின்றன. பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் மற்றும்
கீழ்திசை பிரெஞ்சு பள்ளி (கல்வி நிறுவனம்). இவை இரண்டும் 10,000-க்கும் மேலான ஓலைச் சுவடி அல்லது
எழுதப்பட்ட கட்டுகளை வைத்துள்ளன. ஒவ்வொரு சுவடிக்
கட்டிலும் ஒரு நூலும் இருக்கலாம்; பல நூல்களும் இருக்கலாம். கிடைத்த கட்டுகளை கிடைத்தது போலவே வைத்திருந்தால்
அவை ஆராய்ச்சியாளருக்கு பல விஷயங்களைச் சொல்லும். இவைகளை ஆராய்ச்சிப் பதிப்புகளக
வெயிட்டுவருவதால் இன்னும் வெளியாகாத பல விஷயங்கள் இருக்கின்றன. இவை சமயம், வரலாறு, தொல்பொருட்துறை, மருத்துவம் எனப்பல விஷயங்களைச்
சொல்பவை.
பிரான்ஸ்
தேசம் தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா, இந்துமஹா சமுத்திரம் போன்ற பல பிரதேசங்களை ஆண்டதால் ஆங்காங்கே
கிடைத்த அரிய பொக்கிஷங்களை உலகம் முழுதுமுள்ள 18 இடங்களில் சேகரித்து வைத்துள்ளனர்.
பாண்டிச்சேரி இதற்கெல்லாம் திலகமாக, தலைமையகமாக உள்ளது.
டாக்டர்
சத்யநாராயனன் ஒரு சம்ஸ்க்ருத அறிஞர். அவர் ஏற்கனவே 3 நூல்களை எழுதியுள்ளார். அவர் சிவதர்ம, சிவாகமங்களில் அதிக ஈடுபாடுடையவர்.
அததகைய சுவடிகள், எழுத்துக்களை ஆராய்ச்சிப் பதிப்பாக வெளியிடுவதில் ஈடுபட்டுள்ளார்.
புதுவையிலுள்ள
இரண்டு ஆராய்ச்சி நிலையங்களும் சைவ, வைஷ்ணவ விஷயங்களைச் சேகரித்து
வைத்துள்ளன. ஒவ்வொன்றும் ஒன்றில் விசேஷ கவனம் செலுத்தும்; ஆகையால் சைவ விஷயங்கள் ஒரு ஆய்வுக்
கழகத்திலும் வைணவ விஷயங்கள் மற்றொரு இடத்திலும் இருக்கும்.
கிடைக்கும்
விஷயங்களை இப்பொழுது கம்யூட்டரில் ஏற்றி வருகின்றனர். யுனஸ்கோ (UNESCO) நிறுவனம் இதை அங்கீகரித்துள்ளது.
இந்த
இரண்டு நிறுவனங்களின் மிகப்பெரிய பொக்கிஷம் லட்சத்துக்கும்
அதிகமான புகைப்படங்களாகும். அந்தக் காலத்திலேயே அரிய, முற்போக்கு சிந்தனையுடன் தென்னிந்தியக்
கோவில்களையும் விக்கிரகங்களையும் படம்பிடித்து வைத்த
பிரமாண்டமான பொக்கிஷம் இங்கு உள்ளது.
சிலைத்
திருட்டுகளும் சிலைக் கடத்தல்களும் அன்றாடச் செய்தியாகிவிட்ட இந்தக் காலத்தில்
இந்த அரிய கறுப்பு- வெள்ளை புகைப்படங்கள் நியாயத்துக்கும் நேர்மைக்கும் துணையாக
நிற்கின்றன. பிரெஞ்சுக்கார்களின் இந்த அரிய சேவைக்கு ஆயிரம் நன்றிகள் சொல்ல
வேண்டும்.
புதிய
தர்மா ப்ராஜெக்ட் (Sivadharma Project)
ஐரோப்பிய
ஆராய்ச்சிக் கவுன்ஸில் (ERC) நிதியுதவியுடன் சிவதர்மா திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சைவ சம்பந்தமான வரலாறு முழுதும் வெளியிடப்படும். கடந்த சில
நூற்றாண்டுகளில் மடங்கள், கோவில்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி முதலியன அதிகாரபூர்வமாக, ஆதாரங்களுடன் எழுதப்படும். கல்வெட்டு, நூல்கள், சுவடிகளைக் கொண்டு எழுதப்படும் இவை
அனைத்தும் எல்லோருக்கும் எங்கும் கிடைக்கும் வண், ணம் நவீன தொழில்நுட்பத்தில்
வெளியாகும்.
அது
சரி! இவ்வளவு ஆராய்ச்சிப் பொக்கிஷங்கள் இருக்கின்றனவே/ இவை எங்களைப் போன்ர பொது
மக்களுக்குக் கிடைக்குமா? என்று வினவினேன்.
பொழுதைக்
கழிக்க வேண்டுமே என்று நூலகத்துக்குப் போவோருக்குக் கிடைக்காது. குறிப்பிட்ட
ஆராய்ச்சிக்காகச் செல்லும் எல்லோருக்கும் , இலவச அனுமதி உண்டு. அவர்கள் நூலகத்தில்
நுழைய ஏதேனும் ஐ.டி. (அடையாள அட்டை) இருந்தால் போதும் என்றார்.
சுருக்கமாகச்
சொன்னால், ஆராய்ச்சியில்
நாட்டம் உடையோருக்கான இடம் இது.
ஏற்கனவே ஏராளமான ஆராய்ச்சி நூல்களை வெளியிட்ட இந்த நிறுவனங்களிடம் இருந்து மேலும்
பல புதிய விஷயங்க ளை எதிர்பார்க்கலாம்.
ஆயினும் அவை அனைத்தும் ஆராய்ச்சிப் பதிப்புகள் என்பதால் பரபரப்பான பத்திரிகைகளில்
தலைப்புச் செய்திகளாக வராது. நம்மைப் போன்ற எவரேனும் ஒருவர் அதிலுள்ள
சுவையான விஷயங்களை எழுதி
மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
தற்போதைய
ருத்ராக்ஷ மாகாத்மியம் புஸ்தகத்தில் ருத்ராக்ஷங்களின் அளவு, வகை, யார், எதை எப்போது அணியவேண்டும்
என்பனவெல்லாம் உளது. ஸம்ஸ்க்ருதம் தெரியாவிட்டாலும் 12 பக்க சுருக்காத் படித்தாலேயே போதும்
புஸ்தகத்தின் மஹிமை விளங்கிவிடும்.
The Śivadharma and the Making of
Regional Religious Traditions in Premodern South Asia
(Acronym: Shivadharma)
This
is a 5-year ERC Starting Grant Project (2018-2023) granted to Florinda De
Simini at the University of Naples “L’Orientale”. In this period of time, a
group of scholars active at the host institution, along with several other team
members working at partner institutions in Italy and India, will study the
immense wealth of materials related to the “Śivadharma” tradition, a successful
phenomenon that accompanied and influenced the regional spread of Śaivism in
South Asia from the Middle Ages up to modern times.
The Śivadharma Project will produce a variety of output, ranging
from the production of critical editions and translations into English of Sanskrit texts — notably the Śivadharmottara, the Umāmaheśvarasaṃvāda, the Umottarasaṃvāda, the Dharmaputrikā, and the Lalitavistara — to the first translations
of Tamil texts such
as the Civatarumōttaram and
its commentary, as well as the 18th century Tamil Talapurāṇas that are among
the research topics of the subproject “Tamil”. Critical work will also involve
other texts that are relevant for our project, such as the Haracaritacintāmaṇi, the Bṛhaddharmapurāṇa, the Devīpurāṇa, the Kālikāpurāṇa and the Ekāmrapurāṇa, of which the team will edit,
translate and study only selected chapters.
XXXX
The French Institute of
Pondicherry (IFP), UMIFRE 21 CNRS-MAEE, is a research institution under the
joint supervision of the French Ministry of Foreign Affairs and the French
National Centre for Scientific Research (CNRS). It is an integral part of the
network of 27 research centres connected to this Ministry. It is also part of
the Research Unit USR 3330 “Savoirs et Mondes Indiens” of the CNRS, along with
the Centre de Sciences Humaines (CSH) in New Delhi.
XXXX
École française d’Extrême-Orient: Pondicherry
Center Library
The Pondicherry Center library is
home to an exceptional collection, built thanks to materials from the various
programs carried out by the EFEO Pondicherry Research Center. Holdings
comprise11,400 printed volumes, 46 periodical titles and 1,633 palm-leaf
manuscripts, as well as the private collections of Marguerite Adiceam and
Françoise L’Hernault. The collection spans all branches of Indology: art,
archeology, epigraphy, grammar, linguistics, Sanskrit and Tamil literature,
traditional medicine, philosophy, religion, etc. EFEO researchers also benefit
from access to the IFP – French Institute of Pondicherry’s well-stocked
Indology Library, which it helped create, and housed up to 2002.
Library holdings include a collection
of plans and elevations of South Indian temples, Tamil and colonial houses,
maps of South-Indian towns and cities, and a unique collection of 1,633
palm-leaf manuscripts, most of which are devoted to Vaishnava texts in
Sanskrit, Tamil, and Manipravalam (a mixture of Sanskrit and Tamil).
The Library recently launched an
initiative to archive its digital data in via the SITA archive (South Indian
Temple Archives).
ஹிந்து பண்பாட்டின் சிகரமாக விளங்குபவை நமது ஆலயங்கள். அற்புதமான
அமைப்பைக் கொண்டிருக்கும் ஆலயங்களில் ஒரு அதிசயமாக விளங்குபவை சூரிய பூஜை ஸ்தலங்கள்.
சிவன் கோவில்களில் சூரியனுக்குத் தனி இடம் ஒன்று உண்டு. சிவ
பூஜையில் சூரிய பூஜைக்குத் தனியான இடம் உண்டு.
சூரியனுக்கென்றே தனியாகக் கோவில்களும் உண்டு; சில சிவன் கோவில்களில் தனி இடமும் உண்டு.
SUN TEMPLE AT MODHERASUN LIGHT DOING WONDERS AT PONDY VARADARAJA PERUMAL TEMPLE
சூரியனைத் தொழுவதால் பாவம் தொலையும்; புண்ணியம் சேரும்; ஆக இது
இனி வரும் பிறவிகளுக்கான நல்ல ஒரு அஸ்திவாரமாக அமையும்.
சூரிய வழிபாடு உடல் நலத்தை வாழ்நாள் முழுவதும் சீராக இருக்கச்
செய்து பூரண ஆயுளை நல்கும். சூரிய நமஸ்காரம் நல்ல பல உடற்பயிற்சிகளை முறையாகத் தொகுத்து
நம்மை மேம்பட வைக்கும் ஒரு யோகா பயிற்சி.
அடுத்து சூரிய வழிபாடு எதிரிகளை அழிக்கும். புற எதிரிகளையும்
அழிக்கும், அகத்திலே தோன்றுகின்ற காம, க்ரோதம் போன்றவற்றையும் அகற்றும்.
அது ஜயத்தைத் தரக் கூடியதும் கூட. இராமரே அகஸ்தியரால் ஆதித்ய
ஹ்ருதயம் உபதேசிக்கப்பட்ட பின்னரே இராவணனை அழிக்கிறார்.
பரம மங்களகரமானது. ஐஸ்வர்யத்தையும், பல சித்திகளையும் நல்க வல்லது.
ஒரிஸாவில் புவனேஸ்வரத்திற்கு அருகில் அமைந்துள்ள கொனார்க் சூரிய
கோவில் கற்களினால் அமைந்தது. அற்புத சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டது.
குஜராத்தில் உள்ள மெசேனா மாவட்டத்தில் புஷ்பவதி நதி தீரத்தில்
மொதிராவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சூரியன் கோவில் ஒரு உலக அதிசயம்.
இரவும் பகலும் சம கால நேரங்களாக வரும் மார்ச் 21 மற்றும் செப்டம்பர்
21 ஆகிய நாட்களில் (Spring and Autumnal Equinoxes) சூரிய ஒளி நேராக
மூலக் கோயிலில் விழுகிறது. அதாவது சூரிய பூஜை நிகழ்கிறது.
இப்படி சூரிய ஒளி நேராக கர்பக்ருஹத்தில் விழுந்து சூரியன் இறைவனை
பூஜிக்கும் ஸ்தலங்கள் பாரதம் நெடுக ஏராளம் உண்டு.
தொகுப்பின் ஒரு பெரிய கலைக்களஞ்சியமாகி விடும்.
சூரியன் பூஜித்த தலங்கள் 12.
1.கேதாரம்
2. திருக்கோலக்கா – சூரிய புட்கரிணி; கார்த்திகை ஞாயிறு விசேஷம்
3. திருவெண்காடு – சூரிய புட்கரிணி; ஆவணி ஞாயிறு விசேஷம்
இவற்றில் சூரியனுக்கு ஆலயமுள்ள இடங்கள் – மீயச்சூர்,
திருநாகேஸ்வரம், குடந்தைக் கீழ்க்கோட்டம் ஆகியவை.
சூரியன் பூஜித்த இதர ஸ்தலங்களில் குறிப்பிடத்தகுந்தவை
– இன்னம்பர் ( இனன் என்றால் சூரியன்), திருவையாறு, திருத்தானமுடையார் கோயில், திருக்கழுக்குன்றம்,
பருத்திநியமம், ஆடானை
தமிழ்நாட்டில் சூரிய ஒளி மூலக் கோயிலில் விழும் கோயில்கள் பல. மாதவாரியாக அப்படி அதிசய நிகழ்வு ஏற்படும் ஸ்தலங்களின் பட்டியல் வருமாறு :
சித்திரை
1,2,3 தேதி கூடலை ஆற்றூர்
1 முதல் 7 தேதி புறவார் பனங்காட்டூர்
5,6,7 தேதி ஆடுதுறை
7 முதல் 18 முடிய 12 நாட்கள் செம்பொன்பள்ளி
11,12,13 தேதி குடந்தைக் கீழ்க்கோட்டம் – நாகேஸ்வர ஸ்வாமி
புரட்டாசி
7,8,9 தேதி பைஞ்ஞீலி
19,20,21 தேதி புள்ளிருக்கு வேளூர் (மாலையில்)
19,20,21 கடவூர் (மாலையில்)
ஐப்பசி
9 முதல் 15 முடிய (7 நாட்கள்) எத்தாப்பூர் சாம்பமூர்த்தி கோயில்
14ஆம் தேய்பிறை நாள் முதல் 7 நாட்கள் நெல்லிக்கா (மாலையில்)
மாசி
1 முதல் 7 முடிய 7 நாட்கள் எத்தாப்பூர் சாம்பமூர்த்தி கோயில்
13,14,15 கண்டியூர்
(மாலையில்)
17 முதல் 21 முடிய 5 நாட்கள் குன்றத்தூர் (சேக்கிழார்)
18 முதல் 24 முடிய 7 நாட்கள் நெல்லிக்கா (மாலையில்)
19,20,21 புள்ளிருக்கு வேளூர் (மாலையில்)
21 முதல் 25 முடிய 5 நாட்கள் பூந்தமல்லி வைத்தியநாதர்
23,24,25 அழுந்தூர்
பங்குனி
1 முதல் 7 முடிய 7 நாட்கள் மாயூரம் வள்ளலார் கோவில் (மாலையில்)
7,8,9 பைஞ்ஞீலி
12,13,14 சித்தூர் மாவட்டம் நாகலாபுரம்
13 முதல் 22 முடிய 10 நாட்கள் தெளிச்சேரி (மாலையில்)
13,14,15 வேதிகுடி, திருத்தணி ஆறுமுகசாமி
23 முதல் 27 முடிய 5 நாட்கள் நாவலூர்
25 முதல் 29 முடிய 5 நாட்கள் மாயூர வட்டம் பொன்னூர்
மேற்குறித்த தேதிகளுக்கு ஆதாரமாக இருப்பவை சிவத்தல மஞ்சரியும்
பஞ்சாங்கங்களும் ஆகும்.
இன்னும் மதுரை, லால்குடி, காவிரி தென்கரையில் உள்ள கண்ணம்பாடி
அருகில் உள்ள இடத்துறை என்பன போன்ற இடங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
திருப்பனந்தாளில் சூரிய தீர்த்தம் புழுதிகுடி மடத்திற்குப் பின்னால்
உள்ளது.இங்கு பைரவர் காவலாக இருக்கிறார். சூரியன் பூஜித்தது பாஸ்கர லிங்கம்.
மதுரை மாரியம்மன் கோவிலின் அருகில் அமைந்துள்ள முக்தீஸ்வரர்
கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி முடிய, செப்டம்பர்
மாதம் 18ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி முடிய சூரிய ஒளிகிரணம் மூலவர் மீது விழுகிறது.
ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த நாட்களில் கூடுவது வழக்கமாகி விட்டது!
இன்னும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சூரியனார் கோவில்
உள்ளிட்ட புகழ் பெற்ற தலங்களின் பெருமையைச் சொல்ல ஆரம்பித்தால்
முடிவே இருக்காது. சூரிய என்சைக்ளோபீடியா தான் தயாரிக்க வேண்டும்!
இப்படிப்பட்ட கோவில்களின் சிற்ப அமைப்பை யாராலும் வியக்காமல்
இருக்க முடியாது.
சூரியனின் ஒளிக்கிரணங்கள் நேராக மூலவர் மேல் விழும்படி எப்படி
சிற்பிகள் கோவிலை நிர்மாணித்தனர், கிழக்கு நோக்கிய கோவில்களில் காலையிலும் மேற்கு நோக்கிய
கோவில்களில் மாலையிலும் காலம் காலமாக இன்று வரை சூரிய கிரணங்கள் எப்படி விழுகின்றன
என்பதை நினைத்துப் பார்த்தால் பாரதத்தின் சிற்பக் கலையின் மேன்மையையும், நமது பக்தியின்
உச்ச நிலையையும் உணர்ந்து மகிழலாம்.
இப்படி சூரிய ஒளி விழும் நாட்கள் சூரிய பூஜை நாட்கள் என்று விசேஷமாகச்
சிறப்பிக்கப்பட்டு அந்த நாட்களில் அந்த வேளையில்
சிறப்பு பூஜைகள் நிகழ்கின்றன.
இந்த நாட்கள் பெரும்பாலான இடங்களில் சௌரமான கணக்குப்படி அமைந்திருப்பதும்
ஒரு அதிசயமே.
சூரிய பூஜை நிகழும்
அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் சென்று நாமும் வணங்கி வழிபட்டு மேன்மை அடையலாம்!