பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்! (Post No.4175)

Written by S.NAGARAJAN

 

Date: 31 August 2017

 

Time uploaded in London-11-43 am

 

Post No. 4175

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

by ச.நாகராஜன்

 

 

அனுபவம் பேசுகிறது

பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்!

 

ச.நாகராஜன்

 

லெப்டினண்ட் கர்னல் சிஷிர் கோகலே ராணுவத்தின் பாதுகாப்புத் துறையில் பல்லாண்டு பணியாற்றிய மூத்த டாக்டர். விஞ்ஞான மனப்பான்மை கொண்ட அவர் ஆதிவாசிகளின் “தாழ்ந்த” நிலைமையைக் கொண்டு வருத்தம் அடைந்தார்.

அவர்களை எப்படியேனும் “முன்னேற்ற” வேண்டும் என்று கங்கணம் பூண்ட அவர் தனது “நல்ல காரியத்தை” அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தார்.

 

நடந்தது என்ன?

 

அவரே தனது அனுபவத்தை ஒரு கட்டுரையில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

 

அந்தமானில் வாழ்ந்து வந்த பூர்வ குடிகளின் குடிசைகள் மிக மோசமாக இருந்தன.அவை மரத்தால் ஆனவை. ஓலைகள் வேயப்பட்டவை. திடீர் திடீர் என்று பெய்யும் கனமழையாலும் வெயிலாலும் பழங்கால முறையிலான கற்களை அடுப்பாக வைத்து விறகை வைத்து சமைக்கும் முறையினாலும் குடிசைகள் பார்க்கச் சகிக்க முடியாதவையாக் இருந்தன.

அதனால் அங்கு வாழ்பவரின் கண்கள் சிவந்திருந்தன; சுவாசக் கோளாறுகள் வேறு இருந்தன.

 

இதை எப்படிப் போக்குவது?

 

தீவிர சிந்தனைக்குப் பிறகு  புகையற்ற ஸ்டவ்களை அங்கு சில குடிசைகளில் நிரமாணித்தார் கோகலே. அவர்கள் இருமுவது குறைந்தது. சமைக்கும் போது புகையினால் கண்களிலிருந்து பெருகும் நீர் குறைந்தது. பார்க்க சந்தோஷமான காட்சி. கோகலே மகிழ்ந்தார்.

 

இதைப் பார்த்த பூர்வ குடியினரில் ஏனையோரும் இந்தப் புதிய முறையை விரும்பி ஏற்றுக் கொண்டனர்.

 

ஒரு வருடம் கழிந்தது.

 

தாங்கள் நிறுவி ‘புது வழி’ காட்டியதால் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு மிகிழ அங்கு சென்றார் கோகலே.

 

சந்தோஷமான முகங்களைக் காணப் போகிறோம் என்று சென்ற அவரது குழுவினருக்கு ஒரு திகைப்பூட்டுக் காட்சி காத்திருந்தது.

அங்கு கிராமத்தையே காணோம்.

 

திகைப்படைந்த அவர்கள் பூர்வ குடியினரைத் தேடி காட்டின் உட்பகுதிக்குச் சென்றனர்.

அங்கே புதிதாக அமைக்கப்பட்ட குடிசைகளில் அவர்கள் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் கோபத்துடன் கோகலே குழுவினரைச் சூழ்ந்து கொண்டனர்.

 

 

கோபமான குரலில், “ நீங்கள் எங்களுக்குப் பெரும் தீங்கு இழைத்து விட்டீர்கள். எங்கள் முன்னோர் எங்களுக்கு வலுவான வீடுகளை அமைத்துக் கொடுத்திருந்தனர். தலைமுறை தலைமுறையாக் அதில் வாழ்ந்து வந்தோம். அவற்றை ஒரே ஆண்டில் அழிக்க வகை செய்து விட்டீர்களே! உடனே இங்கிருந்து ஓடிப் போய் விடுங்கள்” என்று அவர்கள் கத்தினர்.

அனைவரும் திகைத்தனர்.

திகைப்புடன் திரும்பினாலும் அவர்களிடம் இருந்த விஞ்ஞான மனப்பான்மை அவர்களை பழைய குடிசைகளை நோக்கிப் போக வைத்தது.

 

அந்தக் குடிசைகளில் இருந்த மரங்கள் கறையானால் அரிக்கப்பட்டு உளுத்துப் போயிருந்தன. கூரை விட்டங்கள் வளைந்திருந்தன.பலவித பூச்சிகள் கட்டைகளையும் குடிசைப் பகுதிகளையும் விதம் விதமாக் ஆக்கிரமித்திருந்தன.

வாழவே முடியாத ஒரு கோரம்!

 

கொசுக்களும் பூச்சிகளும் குழுவினரைச் சூழ்ந்து கடிக்க உள்ளே அவர்கள் பார்த்த போது அவர்கள் தந்த புகையில்லா ஸ்டவ் மட்டும் அலங்காரமாக அப்படியே இருந்தது!

திகைப்பும் வியப்பும் ஆட்கொள்ள அவர்கள் தங்கள் கூடாரத்திற்குத் திரும்பினர்.

 

அப்போது வழியிலே அவர்களைப் பார்த்த பழங்குடியினரில் வயதான ஒருவர்,’என்ன கவலையுடன் இருக்கிறீர்களே! என்ன விஷயம்?” என்று கனிவாகக் கேட்டார்.

நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்ல அவர் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டார்.

 

 

“இன்று களைப்புடன் இருக்கிறீர்கள். மன உளைச்சல் வேறு.

ஆகவே நாளை உங்களுடன் நானும் வருகிறேன். அவர்களைப் பார்ப்போம்” என்றார் அவர்.

 

கோகலே குழுவினரைப் போல ஏராளமான “குழுவினரை”ப் பார்த்து விட்ட அனுபவம் அவர் முகத்தில் தெரிந்தது.

மறுநாள் அவரும் கூட வந்தார்.

பழைய குடிசைகளில் சிதிலமடைந்து கிடந்த கட்டைகள், சில பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றை ஆய்வுக்காக சேர்த்தது விஞ்ஞானக் குழு.

 

“அவர்களுக்கு உதவவே முன் வந்தோம். அவர்களோ எங்களைத் தீய ஆவிகளைக் கொண்டு வந்து விட்டு விட்டோம் என்கிறார்கள். நீங்களும் ஒரு பழங்குடியினர் தானே. நாங்கள் தீய ஆவிகளையா இங்கு விட்டோம், சொல்லுங்கள்” என்று கேட்டார் கோகலே.

“இல்லை, நீங்கள் தீய ஆவிகளை இங்கு விடவில்லை” என்றார் அந்தப் பெரியவர்.

 

 

அவர் சொற்கள் சற்று ஆறுதல் அளித்தன.

“ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கிருந்த நல்ல ஆவிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று விட்டீர்கள்’ என்று தொடர்ந்து கூறினார் அவர்.

 

 

இதைக் கேட்ட குழுவினர் திகைத்தனர்.

 

அவர் தொடர்ந்தார்: “ தீ மூட்டி சமைப்பது புனிதமானது. அது நல்ல ஆவிகளையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. புகையும் சாம்பலும் குடிசை நீடித்திருக்க நமது உடலுக்கு உணவு போல அவசியமானது. புகையும் வெப்பமும் பூச்சிகள், கரையான் போன்ற தீய ஆவிகளை ஒண்ட விடாது. அந்த புகை என்ற நல்ல ஆவியை விரட்டி விட்டு கரையான் என்ற தீய ஆவிகளைத் தந்ததால் தான் அவர்கள் உங்கள் மீது கோபப் படுகிறார்கள்.இந்தக் குடிசைகளுக்குப் விறகு வைத்து கல்லினால் ஆன அடுப்பில் சமைப்பதே சிறந்த பாதுகாப்பு!”

 

 

படிப்பறிவே இல்லாத சாமானிய பூர்வீக பழங்குடிப் பெரியவரின் வார்த்தைகள் அவர்களை பிரமிக்க வைத்தன.

சிறிய வார்த்தைகள் மூலம் அரிய உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

 

அந்தக் கணம் முதல் படிப்பறிவில்லாதவன், பழங்குடி என்றெல்லாம் சொல்லி அவர்களை கேலி செய்யக் கூடாது அவர்களின் அறிவுக்கும் அனுபவத்திற்கும் முன்னால் விஞ்ஞான மனப்பான்மை கூட பல சமயம் தோற்று விடும் என்பதை கோகலே உணர்ந்து கொண்டார்.

 

 

இந்த அனுபவத்தை ஒரு கட்டுரை வாயிலாக அவர் தெரிவித்து “விஞ்ஞானம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் தானா கற்பிக்கப்படுகிறது? அறியப்படுகிறது?” என்ற கேள்வியையும் கட்டுரையின் முடிவில் எழுப்புகிறார்!

உண்மை தான்!

 

அறிய வேண்டிய நல்ல விஷயங்கள் எல்லா இடங்களிலுமே இருக்கின்றன.

 

பூர்வ குடியினரிடமும் கூட!

****

 

SEPTEMBER 2017 GOOD THOUGHT CALENDAR (Post No.4174)

30 Quotations on Chaste women

written by London Swaminathan

 

Date: 30 August 2017

 

Time uploaded in London- 19-27

 

Post No. 4174

 

 

FESTIVE DAYS : Sep.4- Onam, Sep 6- Yajur Upakarma, September 11- Bharati Memorial Day,  21- Navaratri begins,, 28- Sarasvati Puka, Durga Ashtami, 29- Sarasvati Puja, Maha Navami, 30- Dusserah, Vijaya Dasami

Sep 6- Malaya Paksham begins

 

 

EKADASI FASING DAYS- 1 or 2, 16

FULL MOON- 6

NEW MOON- Mahalaya Amavasai 19

AUSPICIOUS DAYS- 4, 8, 15

 

SEPTEMBER 1 FRIDAY

Chaste women are by nature truthful- Bharat Katha Manjari

SEPTEMBER 2 SATURDAY

The mind of chaste women finds happiness in the glorious tales of virtuous women- Bharat Katha Manjari (BKM)

 

SEPTEMBER 3 SUNDAY

Universally, virtuous women are desireless- Katha Sarit Sagara (KSS)

SEPTEMBER 4 MONDAY

Women of great calibre committed to their husbands are glorified in Heavens too- Valmiki Ramayana 2-118-12

SEPTEMBER 5 TUESDAY

Which chaste women  will defy her husbands instructions?- KSS

SEPTEMBER 6 WEDNESDAY

A chaste woman has no independent happiness, but her husband’s happiness is hers. -KSS

SEPTEMBER 7 THURSDAY

Noble women do not oppose the  desires of their husbands- KSS

 

SEPTEMBER 8 FRIDAY

It is sheer cruelty  on the part of a woman to desert her husband- Valmiki Ramayana 2-24-12

 

SEPTEMBER 9 SATURDAY

A woman attains supreme heaven by serving her husband – Valmiki Ramayana 2-24-36

 

SEPTEMBER 10 SUNDAY

Noble women are single pointedly focussed on the welfare of their husbands- BKM

SEPTEMBER 11 MONDAY

For women their husband’s desires are  paramount, not crores of sons- Valmiki Ramayana 2-35-8

SEPTEMBER 12 TUESDAY

The wife alone enjoys the fortunes of her husband- Valmiki Ramarayana 2-27-5

SEPTEMBER 13 WEDNESDAY

Women have their husbands as their Lords (PN)

 

SEPTEMBER 14 THURSDAY

Chaste women are protected by the strength of their character alone- KSS

 

SEPTEMBER 15FRIDAY

 

Modesty is the insignia of  chaste women -KSS

SEPTEMBER 16 SATURDAY

Chastity is a very challenging vow (Proverb)

SEPTEMBER 17 SUNDAY

Noble women do not visit their residence of their husband’s friend – (Proverb).

SEPTEMBER 18 MONDAY

Invincible indeed is the power of chaste women- BKM

SEPTEMBER 19 TUESDAY

For the chaste women husbands is GOD- BM

 

SEPTEMBER 20 WEDNESDAY

Following the path tread by their husbands is the ultimate vow of women- KSS

SEPTEMBER 21 THURSDAY

Women have their husbands as GODS – PN

 

SEPTEMBER 22 FRIDAY

Noble wives, ever engaged in the welfare of their husbands, endure all sorrows – BKM

SEPTEMBER 23 SATURDAY

Though the husband be ruthless, the minds of chaste women will not stray- KSS

SEPTEMBER 24 SUNDAY

When my husband is blnd why shy should I deck myself?-KR

 

SEPTEMBER 25 MONDAY

Gods alone protect women of moral integrity in their hour of danger KSS

SEPTEMBER 26 TUESDAY

For women husband himself is the lord- V Ramayana, 7-95

SEPTEMBER 27 WEDNESDAY

Good women, desirous of the welfare of their husbands , pay no heed to the malice of the others KSS

SEPTEMBER 28 THURSDAY

Tears of chaste women do not  wet the earth esaily- Valmiki Ramarayana 6-14-67

 

SEPTEMBER 29 FRIDAY

There is no vow ordained for women other than serving their husbands- Valmiki Ramarayana 2-118.9

 

SEPTEMBER 30 SATURDAY

The mind of a chaste woman is tender-KSS

 

–SUBHAM–

 

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்! (Post No.4171)

Written by S.NAGARAJAN

 

Date: 29 August 2017

 

Time uploaded in London- 5-40 am

 

Post No. 4171

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சிந்திக்க வேண்டும் தோழர்களே!

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்!

 

ச.நாகராஜன்

 

கார்ல்மார்க்ஸ் ஒரு புது வித தத்துவத்தைத் தந்து விட்டார் எனவும் அது உலகத்தையே உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் சொல்லும் கம்யூனிஸ்டுகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.

 

பாரத தேசத்தின் பழம் பெரும் அறிவுக் கருவூலங்களைப் படித்தவர்கள் அனைவருக்கும அந்தச் சிரிப்பு வரும்.

உன் சக்திக்குத் தக உழை; உன் தேவைக்குத் தக எடுத்துக் கொள்; உலகத் தொழிலாள வர்க்கமே ஒன்று படு

என்று இப்படியெல்லாம் கோஷம் எழுப்பி இது ஒரு புதிய கண்டு பிடிப்பு போல கம்யூனிஸ்டுகள் “அபூர்வக் காட்சியைத்” தருவது அவர்கள் சம்ஸ்கிருத செல்வத்தையோ அல்லது குறைந்த பட்சம் வள்ளலாரின் திரு அருட்பாவையோ கூடப் படிக்காததால் தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

 

“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே  நினதருட்புகழை

இயம்பியிடல் வேண்டும்”

 

 

என்று அவர் கூறும் போது அந்த மனம் எவ்வளவு விசாலமானது; இதை விட ஒரு பெரிய கருத்தையா கார்ல் மார்க்ஸ் சொல்லி விட்டார் என்று கேட்கத்த் தோன்றும்.

கம்யூனிஸத்திற்கும் அருட்பா கொள்கைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

 

கம்யூனிஸம் அடிதடி, வன்முறை, கொள்ளை, பணக்காரனை ஒழி; அழி என்று கூறும். ஆனால் அருட்பாவோ அனைவரும் நன்றாக வாழட்டும்; அன்பு பொங்க வாழட்டும் என்கிறது.

எது உயர்ந்தது? யார் வேண்டுமானாலும் சிந்தித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!

 

 

அடுத்து காலத்தாற் முற்பட்ட பாகவத ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம்:

“ஒரு மனிதன் அவன் உயிர் வாழ எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டுமே கொள்ள அவனுக்குத் தகுதி உண்டு;  அதை விட மேலாக ஒருவன் அடைய முற்படுவானேயானால் அவன் ஒரு திருடனாகக் கருதப்பட வேண்டும்; அவன் தண்டனைக்கு உரியவனே” என்கிறது பாகவதம்.

 

“யாவத் ப்ரீயேத ஜாதரம் தாவத் ஸ்வத்வம் ஹி தேஹினாம் I

அதிகம் யோபிமான்யேத ச ஸ்தனோ தண்டமார்ஹதி” II

 

ஈஸாவாஸ்ய உபநிடதத்தின் முதல் ஸ்லோகமும் கூட அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது. இதில் அடுத்தவன் தனத்திற்கு ஆசைப்படாதே என்று அருளுரை பகர்கிறது.

 

மனுவைத் திட்டும் திராவிடப் பிசாசுகளும் கம்யூனிஸ சைத்தான்களும் மனுவைச் சரியாகப் படிக்கவில்லை என்று அடித்துக் கூறலாம்.

 

ஏனெனில் அவர்கள் கூறும் தத்துவத்தை விட அழகாக அவர் கூறுவது:

 

“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”

ஆச்சரியமாக இருக்கிறதா? மனுவைப் படிக்க வேண்டும்!

ஸ்தாணுச்சேதஸ்ய கேதாரமாஹு சல்யவதோ ம்ருஹம்

என்கிறார் மனு.இது தான் மனு நீதி!

மனு நீதி பாரதம் முழுவதற்கும் பொது;

க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்

உலகம் முழுவதையும் பண்பாடுள்ளதாக மாற்றுவோம் என்பது வேத முழக்கம்.

 

 

ஆகவே மனு நீதி உலகம் முழுமைக்கும் பொது!

வேதம் என்பது தனி மனிதனின் சொத்து அல்ல; அது பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு வருணத்திற்கும் உரியது. பொது.

 

 

ரஷியாவிலும் கூட, ஏன் சீனாவிலும் கூட கொள்கை வகுக்கும் அறிவு சால் மக்கள் அல்லது தலைவர்கள் அல்லது அனைவருக்கும் இதத்தைத் தர உழைப்பவர்கள்- பிராமணர்கள் – உள்ளனர்.

 

அங்கும் நாட்டைப் பாதுகாக்க ராணுவத்தினர் – க்ஷத்ரியர் – உள்ளனர்.

அங்கும் வணிகம் புரியும் வணிகர் – வைசியர் – உள்ளனர்.

அங்கும் அன்றாட இதரப் பணிகளைப் புரிவோர் – சூத்ரர் – உள்ளனர்.

 

 

இந்த நான்கு வகுப்பில் உயர்வு தாழ்வு இல்லை.

ஒரு சமூகத்திற்குத் தேவையானது இந்த அமைப்பு; அவ்வளவு தான்.

 

வேதமறிந்தவன் பார்ப்பான், பல

  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல்  – தண்ட

   நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

    பட்டினி தீர்ப்பவன் செட்டி

 

தொண்டரென்றோர் வகுப்பில்லை – தொழில்

    சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே – இந்த

      நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே செத்து

    வீழ்ந்திடும் மானிடச் சாதி

 

என்ற பாரதியின் வார்த்தைகளை விட வேறு எந்த வார்த்தைகளால் இந்த நான்கு வருண தத்துவத்தைக் கூற முடியும்?

 

பண்டைய ரிஷிகளும் தொடர்ந்து தோன்றி வரும் பாரத மகான்களும் – வியாசர் முதல் வள்ளலார் வரை அனைவரும் -வலியுறுத்தும் கருத்து ஒன்றே தான்!

 

ஆருயிர் அனைத்தும் ஒரே நிறை; ஒரே எடை; ஆருயிர்க்கெல்லாம் அனைவரும் அன்பு செய்தல் வேண்டும்

 

கார்ல் மார்க்ஸ் தத்துவத்தை விட பாரத மகான்கள் வலியுறுத்தும் தத்துவம் மிக மேலானதா, இல்லையா?

தோழர்கள் சிந்திக்க வேண்டும்!

***

கர்நாடக அதிசயங்கள்-1; 35,000 சிற்பங்கள்! (Post No.4167)

Written by London Swaminathan

 

Date: 27 August 2017

 

Time uploaded in London- 11-59 am

 

Post No. 4167

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

எனக்கு ரொம்பநாளாக ஒரு ஆசை! பேலூர், ஹளபீடு, சோமநாதபுரம் சிற்பங்களைப் படங்களில் பார்க்கையில் என்றவது ஒரு நாள் நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்று.

 

நாங்கள் பெங்களூரிலிருந்து காரில் புறப்பட்டு சிருங்கேரி சென்றபோது கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன் கோவில் செல்ல திட்டமிட்டோம். ஆனால் போகும் போதோ அல்லது வரும்போதோ பத்து மணி நேரத்துக்கு மேல் காரில் அமர வேண்டியிருக்கும் என்று டிரைவர் எச்சரித்தார். ஏற்கனவே மதுரை, மாயுரம், மதறாஸ் என்று காரில் நீண்ட பயணம் செய்ததால் அது வேண்டாம் என்று தீர்மானித்தோம். ஆனால் டிரைவர் ஒரு போனஸ் திட்டத்தை முன் வைத்தார்.

 

பேலூர், ஹளபீடு, அன்னபூர்னேஸ்வரி கோவில்களும் சிரவண பெலகோலாவும் வழியில் இருப்பதால் அவைகளுக்கு அழைத்துச் செ வதாகச் சொன்னார். பரம சந்தோஷம்; ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ இருந்தது. ஆனால் சிருங்கேரியில் கொட்டிய மழையைப் பார்த்தவுடன் அன்ன பூர்னேஸ்வரி கோவிலை விட்டுவிட்டு மற்ற இடங்களுக்குச் சென்றோம்.

 

ஹளபீடு சிற்பங்களைப் ஆர்த்தவுடன் நான் மீனாட்சி கோவில் பற்றி பெருமை பேசியதெல்லாம் தவறோ என்ற எண்ணம் மேலிட்டது. எனது மதுரை மீனாட்சி கோவில் உலகப் புகழ்பெற்றதுதான். கல்லூரிப் படிப்பு படிக்கும் வரை, தடுக்கி விழுந்தால் மீனாட்சி கோவிலில்தான் விழுவேன். ஊருக்கு வரும் விருந்தாளிகளைப் பெருமையுடன் சுற்றிக் காண்பிப்பேன். அப்போதெல்லாம் இந்தக் கோவில் கோபுரங்களிலும், பிரகாரங்களிலும் 30,00-த்துக்கும் மேலான சுதைகள்- சிற்பங்கள் இருப்பதாகப் பெருமை அடித்துக் கொள்வேன். அவ்வளவும் உண்மையே!

 

ஹளபீடு கோவிலில், கடுகு இடம் கூட வீணடிக்காமல் சிற்பங்களை அள்ளி வீசி விட்டார்கள் ஹோய்சாள வம்ச சிற்பிகள். சுமார் 1200 ஆண்டுப் பழமையான இந்தக் கோவிலில் வழிபாடு இல்லைதான். போய் தரிசிக்க கட்டணமும் இல்லை. ஒவ்வொரு சிற்பத்தையும் நன்றாகப் புகைப்படம் எடுத்தால் ஒவ்வொன்றும் போட்டோ போட்டியில் பரிசு பெறும்!

 

உலகிலேயே பணக்கார நாடு இந்தியா என்ற தலைப்பில் ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளை எழுதியபோது இதற்கு ஆதாரமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன். அது என்ன வென்றால் இன்டிய சிற்பங்களில் காணப்படும் நகை நட்டுகள் போல உலகில் எந்த நாட்டிலும் காண முடியாது. கிரேக்க சிற்பங்களில் நகையே இராது. பாபிலோனிய, எகிப்திய, மாயன் நாகரீகங்களில் கொஞ்சம் நகைகள் இருக்கும். நமக்குக் கொஞ்சம் நெருங்கி வருவோர் எகிப்தியர்கள் மட்டுமே.

வேதங்களிலும் , ராமாயண மஹாபாரத இதிஹாசங்களிலும் ஏராளமான நகைகள் குறிப்பிடப்படுகின்றன. சீதையின் மோதிரமும் சகுந்தலையின் மோதிரமும் நம் இதிஹாசங்களில் முக்கியப் பங்காற்றுகின்றன. அது மட்டுமல்ல; சிந்துவெளி நடன மாது கழுத்தில் கூட நகை இருக்கும்; 2300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தமத சிற்பங்களில் இருந்து இன்றுவரையுள்ள சிற்பங்களில் எண்ணற்ற நகைகளை காணலாம். இதில் என்ன அதிசயம் என்றால் பெண்களுக்குப் போட்டியாக, ஆண்கள் உடம்பிலும் ஏராளமான நகைகள் இருக்கும் இது உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை.

 

ஹளபீடு சிற்பங்களில் யானை, குதிரை, மன்னர்கள், கடவுளர் அத்தனை பேருக்கும் நகைகள். ஒரு மனிதன் கற்பனையில் சில விஷயங்களை எழுத வேண்டுமானாலும், அது அந்தக் காலத்தில் இருந்தால்தான் எழுத முடியும், வரைய முடியும், செதுக்க முடியும்.

 

இது ஒரு புறமிருக்க சிற்பியின் கைவண்ணத்தை எப்படிப் புகழ்வது! இதை நேரில் சென்று பார்த்தால்தான் புரியும். நாங்கள் ஒரு மணி நேரம் கண்டு களித்தோம். ஆயினும் பல நாட்கள் தங்கி ஆராய்ந்தாலோ அ ல்லது புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டே பார்த்தாலோதான் எல்லாம் விளங்கும்.

 

உஙகளுக்கு ஹளபீடு செல்ல வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விடாதீர்கள்.

 

இனி சில புள்ளி விவரங்கள்:–

 

1.ஹோய்சாள மன்னர்களின் தலைநகர் இது. பழைய பெயர் துவாரசமுத்திரம். 1200 ஆண்டுப் பழமை உடைத்து

 

2.விஷ்ணுவர்த்தனின் மகனான இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் புகழ் கொடிகட்டிப் பறந்தது. காவிரி நதி முதல் கிருஷ்ணா நதிவரை இடைப்பட்ட பிரதேசம் எல்லாம் அவன் வசப்பட்டது.

 

3.ஆயினும் 1311ல் டில்லித் துருக்கர் வசமானது. நல்லவேளை. முஸ்லிம்களின் அழிவுப்படை இந்தச் சிறபங்களில் கை வைக்கவில்லை. நாம் செய்த புண்ணியமே!

 

  1. துருக்கப் படைத் தளபதி, டன் கணக்கில் தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் மட்டும் எடுத்துச் சென்றான்.

 

5.ஹளபீடு என்றால் பழைய தலை நகர் என்று பொருள்; காரணம்- இதற்குப் பின்னர் புதிய தலைநகர் உருவானது.

 

150 அற்புதக் கோவில்கள்

 

6.ஹோய்சாலர்கள் கர்நாடகம் மாநிலம் முழுதும் 150 கோவில்களைக் கட்டினர். ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் அற்புதம்.

 

  1. இந்த ஊர், பெங்களூரில் இருந்து 214 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது

 

8.முக்கியக் கோவில் ஹோய்சாளேஸ்வரர் சிவன் கோவில். ஜேம்ஸ் பெர்குசன் இதை ஏதென்ஸின் பார்த்தினானுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் நான் சென்ற மாதம் பார்த்தினானைப் பார்த்து வந்ததால், ஹளபீடுக் க்கு 100 மார்க்கும் இன்றுள்ள பார்த்தினான் கோவிலுக்கு 35 மார்க்கும் கொடுப்பேன் (எல்லா சிலைகளையும் கிறிஸ்தவ, முஸ்லீம் படை எடுப்பாளர்கள் ஒழித்துக் கட்டி விட்டார்கள் ஏதென்ஸில்)

 

9.இரண்டு கோவில்கள் அருகருகே உள்ளன. ஒன்றில் பெரிய நந்தி. இது விஷ்ணுவர்த்தனின் அன்பு மனைவி சாந்தலாதேவியின் பெயர் சூட்டப்பட்ட கோவில்.

 

  1. என்ன என்ன சிற்பங்களைக் காணலாம்?

எல்லா வகை மிருகங்களோடு மகரம் , ஹம்சம் போன்ற கற்பனை உருவங்கள்;

எல்லா வகை தெய்வங்கள்

பால கிருஷ்ணனின் லீலைகள்

கர்ண– அர்ஜுனன் யுத்தம்

கோவர்தன மலையைத் தூக்கும் கிருஷ்ணன்

கஜேந்திர மோட்சம்

சிவ தாண்டவம்

சிவனின் ரிஷப வாஹன கோலம்

ராவணன் தூக்கும் கயிலை மலை

ராமாயணக் காட்சிகள்

சிவலிங்கம், நந்தி, மந்தாகினி என்னும் அழகிகள், ஏழு குதிரைகளுடன் சூரியனின் ரதம், வித விதமான தூண்கள், விஷ்ணுவின் அவதாரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

35,000 சிற்பங்கள்!

மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் கண் வீச்சில் 35000 சிற்பங்களைக் காணலாம்! அதனால்தான் பிரம்மாண்ட மீனாட்சி கோவிலைவிட இது சிறந்த வேலைப்பாடு உடைத்து என்கிறேன்.

 

‘கடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’ என்று தி ருக்குறளை எப்படி பாராட்டினரோ அப்படி, குறுகி இடத்தில் 35000 சிற்பங்களை உருவாக்கிய காட்சி உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லவே இல்லை!!!

 

 

  1. காளிதாசி என்ற சிற்பி இதை உருவாக்கியதாகக் கல்வெட்டு சொல்கிறது

 

  1. உண்மையைச் சொல்லி விடுகிறேன்; எனது காமிரா பார்த்த அளவுக்கு என் கண்கள் காணவில்லை

வானிலுள்ள நடசத்திரங்களை பைனாகுலரும் , டெலஸ்கோப்பும் நன்கு காணும்; நமது ஊனக் கண்களோ மேம்போக்காகவே காணும்.

 

அருகிலுள்ள ஏனைய கோவில்களைக் காண நேரம் கிடைக்கவில்லை. அடுத்த முறை போகும்போது லண்டனில் நூலத்திலுள்ள புத்தகங்களைப் படித்துவிட்டுப் போவேன்!

 

 

வாழ்க ஹோய்சாளர்கள் (ஹோய்சாள = புலிகடிமால்);

வளர்க அவர்தம் கலைகள்!

 

–subam—

 

தமிழ்ச் சுவடி மர்மம்! மாயச் சதுரச் சுவடி- PART 1 ( Post No.4166)

Written by S.NAGARAJAN

 

Date: 27 August 2017

 

Time uploaded in London- 4-48 am

 

Post No. 4166

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

தமிழ்ச் சுவடி மர்மம்!

மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 1

 

ச.நாகராஜன்

 

தமிழின் பெயரைச் சொல்லிச் சொல்லியே தங்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் தரங்கெட்டவர்கள் செழித்து வளர்கின்றனர்.

 

ஆனால் உண்மையாகத் தமிழை ஆராய்ந்து தமிழில் உள்ள சுவடிகளின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் தமிழர்களைத் தமிழர்கள் கவனிப்பதே இல்லை; கவனித்தால் அல்லவா பாராட்ட முடியும்.

 

தமிழை வளர்க்கும் அரிய பெண்மணியாக விளங்குகிறார் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முனைவரான முனைவர் திருமதி கா.சத்தியபாமா.

இவர் செய்த அரும்பணி மாயச் சதுரங்களைப் பற்றிய பழைய தமிழ்ச் சுவடிகளைப் படித்து ஆராய்ந்து புரிந்து கொண்டு அதை உலகிற்கு வெளிப்படுத்தியதே ஆகும்.

 

தமிழின் அருமை சில சொற்களால் அமைந்த பாடல்களால் பெரிய கணித வித்தைகளை விளக்குவதாகும். இதே போன்ற சூத்திரப் பாடல்களால் சோதிடமும் விளக்கப்படுவது தமிழின் தனிச் சிறப்பு.

 

எனது பழைய கட்டுரை ஒன்றில் எப்படி சதுரங்க பந்தப் பாடல் ஒன்றின் புதிரை அவிழ்க்க பல காலம் நான் முயன்று திடீரென்று (கடவுள் அருளால்) வெற்றி பெற்றதை விளக்கியுள்ளேன்.

திருமதி சத்தியபாமாவோ அனாயாசமாக பல சிக்கலான பாடல்களை விளக்குகிறார்.

 

இவரை உரிய முறையில் தமிழ் உலகம் கௌரவிக்கவில்லையே என வருந்துகிறேன். இப்படிப்பட்ட திறமைசாலியான தமிழ்ச் செல்விகளையும் தமிழ்ச் செல்வர்களையும் தமிழ் உலகம் உணர்ந்து போற்றும் நாள் எந்த நாளோ அந்த நாளே தமிழுக்கான நன்னாள் ஆகும்.

 

விஷயத்திற்கு வருவோம்.

 

சுவடிகளை ஆராய்ந்த சத்தியபாமா 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழில் இப்படி சிக்கலான புதிர்களை அவிழ்க்கும் வழிகள் பாடல்களில் உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மாயச சதுரங்களை அமைப்பதில் மூன்று வழிமுறைகள் உள்ளன.

 

 

  • வரிசையாக எண்களை எழுதி மாயச் சதுரங்களை அமைத்தல்
  • பரிபாஷையாகக் கூறப்பட்டுள்ள எண்களை வரிசையாக எழுதி மாயச் சதுரங்களை அமைத்தல்
  • கொடுக்கப்பட்டுள்ள கூட்டுத் தொகை எண்களுக்கான மாயச் சதுரம் அமைத்தல்

மேலே கூறப்பட்டுள்ள அனைத்தையும் சுவடிப் பாடல்கள் தருகின்றன!

 

என்ன ஒரு பிரம்மாண்டமான அறிவு! தமிழரின் பண்டைய நூல்களில் இது போல ஆயிரக்கணக்கான அற்புதங்கள் உள்ளன!!

 

முதல் வகையில் உள்ள ஒரு பாடலை விளக்குகிறார் மாயச் சதுரப் பெண்மணி:-

 

சீர்பெறும் ஈரே ழொன்று சியபணி ரெண்டும் ஏழு

ஏர்பெறும் பதினொன் றெட்டு இயல்பதி மூன்று ரெண்டு

பேர்பெறும் ஐந்தீர் ஐந்து பெருகுமூன்று பின்னீ ரெட்டு

கூர்பெறும் நால்மு வைந்தாற் குறிப்புடன் ஒன்ப தாமே

            (சுவடி எண் 1475)

 

இப்பாடலில் வரிசையாகக் கூறப்பட்டுள்ள எண்களை கட்டங்களில் இப்படி அமைக்க வேண்டும்.

 

14 1 12 7
11 8 13 2
5 10 3 16
4 15 6 9

 

மேலே உள்ள மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 34!

 

சிறிய ஒரு பாட்டு சிக்கலான அமைப்பை விளக்கி விட்டது.

 

அடுத் பரிபாஷை வகைப் பாடலுக்கு உதாரணத்தைத் தருகிறார் தமிழ் முனைவர்:

 

மேசமே இலக்க தாக விளங்கிய சோதி பத்தாம்

பூசமாம் சுப்பிர தீபம் பதினான்கு புந்தி பொன்னன்

மாசில்லா கும்பம் காரி மணிசித்ர பானு இந்து

ஆசில்லா மீனம் வெள்ளி ஆறரை அத்த மாமே

          (சுவடி எண் 1475)

 

இந்தப் பாடலைப் பார்த்தால் சோதிடப் பாடல் போல இருக்கிறது.

 

ஆனால் பரிபாஷை மர்மத்தை விண்டு பார்த்தால் வருவது அழகிய மாயச் சதுரம்!

 

மேஷம் – இராசிகளில் முதலாவதாக் அமைவது. ஆகவே இங்கு சுட்டிக் காட்டப்படும் எண் 1

ஸ்வாதி – நட்சத்திரங்களில் பதினைந்தாவது. ஆகவே வரும் எண் 15

 

பூசம் : நட்சத்திரங்களில் எட்டாவது. ஆகவே எண் 8

புந்தி : புதனின் மற்றொரு பெயர் புந்தி. வாரத்தின் நான்காவது நாள். ஆகவே வரும் எண் 4

பொன்னன்: வியாழனின் இன்னொரு பெயர் பொன்னன். வாரத்தின் ஐந்தாவது நாள். ஆகவே எண் 5

கும்பம் : இராசிகளில் பதினொன்றாம் இராசி. ஆகவே எண் 11

 

காரி – சனியின் மற்றொரு பெயர் காரி. வாரத்தின் ஏழாவது நாள். ஆகவே வரும் எண் 7

மணி : நவமணிகள் ஒன்பது. ஆகவே 9

சித்ரபானு : தமிழ் வருடங்களில் பதினாறாவது. ஆகவே 16

இந்து:  சந்திரனின் மற்றொரு பெயர் இந்து. வாரத்தின் இரண்டாவது நாள். ஆகவே எண் 2

மீனம் : இராசிகளில் பனிரெண்டாவது இராசி. ஆகவே எண் 12

 

வெள்ளி : வாரத்தின் ஆறாவது நாள். ஆகவே 6

ஆறரை : ஆறு அரை = 3; (6 x ½)  = 3  ஆகவே 3

அத்தம் : ஹஸ்தம் தமிழில் அத்தம் என வழங்கப்பெறும். இது 27 நட்சத்திர வரிசையில் பதின்மூன்றாவது நட்சத்திரம்.

ஆகவே எண் 13

பத்து என்ற எண்ணும், 14 என்ற எண்ணும் பாடலில் நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளது.

இனி சுலபம் தான் – மாயச் சதுரத்தை அமைப்பது!

 

 

1 15 10 8
14 4 5 11
7 9 16 2
12 6 3 13

 

இந்த மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 34!

 

அதே சமயம் முந்தைய மாயச் சதுரமும் இந்த மாயச் சதுரமும் கூட்டுத்தொகையான் முப்பத்திநான்கால் ஒன்று பட்டிருப்பினும் அமைப்பால் வேறு பட்டுள்ளது.

என்ன ஒரு தமிழ்ச் சாமர்த்தியம்.

அழகிய சிறு பாடலில் ஒரு பெரிய கணிதப் புதிரின் விளக்கம்.

 

சுலபமாக நினைவில் கொள்ளவே பாடல் வடிவில் புதிரும் விளக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

 

தமிழில் இதை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. இது எவ்வளவு பழமையானது என்பதும் தெரியவில்லை.

இந்தப் புலவரைப் பாராட்டுவோம்; அத்துடன் இதைத் தமிழுக்கு மீட்டுத் தந்து விளக்கமும் அளித்த முனைவர் சத்தியபாமாவை மனமுவந்து பாராட்டுவோம்!

இந்தப் பாடல்க்ள் பற்றிய கட்டுரையின் தலைப்பு :

பழந்தமிழ்ப் பாடல்களில் மாயச் சதுரங்கள்.

நூலின் பெயர்:  வளரும் தமிழ் (பல கட்டுரைகள் அடங்கியுள்ள இந்த நூலின் பக்கங்கள் 279. விலை ரூ60; வெளியான ஆண்டு 2003. அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூ வெளியிட்டுள்ள நூல் இது)

 

தமிழ்க் கழகத்தின் அரிய பணி! சீரிய பணி! வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில் மூன்றாவது வகைப் பாடலைப் பார்ப்போம்.

****

உலகிலேயே மிகப்பெரிய வீணையைக் கண்டேன்! (Post No. 4164)

Veena is seen behind Aum and under Adi shankara

Written by London Swaminathan

 

Date: 26 August 2017

 

Time uploaded in London- 7-49 am

 

Post No. 4164

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

கர்நாடக மாநிலம் ஏராளமான அதிசயங்களைக் கொண்ட மாநிலம். அது பற்றி பெரிய புத்தகமே எழுதலாம். சிருங்கேரிக்குச் சென்று சாரதாம்பாள் கோவிலைலயும் சங்கராச்சார்ய சுவாமிகளையும் காண நீண்ட காலமாக ஆசை. இரண்டும் ஆகஸ்ட் (2017) மாதம் நடந்தேறியது. அத்தோடு ஒரு போனஸும் கிடைத்தது. சிருங்கேரி சங்கராசார்ய மடத்தில் உலகிலேயே பெரிய வீணை உள்ளது. அது இருக்கும் கண்ணாடிப் பெட்டியை உரசிக் கொண்டு நின்ற போதும் மேடையில் சங்கராசார்ய சுவாமிகள் அருளாசி வழங்கும் நேரத்தில் அதை நெருங்கிப் புகைப்படம் எடுக்க மனது உடன்படவில்லை. தொலைவில் இருந்து ஒரு படம் எடுத்தேன்.

 

இந்த வீணை பற்றிய தகவல்கள்:

இது சார்வபௌம வீணை என்று அழைக்கப்ப்டும். தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு 2003ல் மடத்திற்கு வழங்கப்பட்டது.

சாதாரண வீணை 132 சென்டிமீட்டர் நீளமே இருக்கும். ஆனால் அங்குள்ள சார்வ பௌம வீணை 305 செ.மீ. நீளம் உடையது அதாவது சுமார் பத்து அடி நீளம் கொண்டது. அதன் அகலம் 76 சென்டிமீட்டர் உயரம் 74 சென்டிமீட்டர்.

எடை 70 கிலோ! சாதாரண வீணையோ 10 கிலோதான். அருகில் நின்று பார்த்தால் நாம் தூக்க முடியுமா என்று திகைத்து நிற்போம். இதை 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாரதா பீடத்தில் கொண்டு வைத்தனர்.

 

இந்த வீணை தாமரை வடிவ ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ளது, அதாவது நிற்கும்படி செய்யப்பட்டுள்ளது. ஒன்றின் மேல் சுவாமி விவேகாநந்தர் உருவமும் மற்றொன்றின் மீது ஒரு பொன்மொழியும் பொறிக்கப்பட்டுள்ளது.

“நாம் ஒன்று சேருவது துவக்கம்

நான் ஒன்றாக நீடிப்பது முன்னேற்றம்

நாம் ஒன்றாக வேலை செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்”

என்ற பொன்மொழி செதுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மஹா சார்வ பௌம வீணை ஒரே மரக்கட்டையைக் குடைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட வீணை வேறு கிடையாது!

இந்த வீணையின் குடம் முதலிய பகுதிகளில் சங்கீத மும்மூர்த்திகளின் படங்கள், பிள்ளையார், சரஸ்வதி, லெட்சுமி படங்கள், எந்தரோ மஹானுபாவுலு பாடலின் முதல் வ ரி ஆகியன செத்க்கபட்டு இருக்கிறது.

கனகதாசர், புரந் தரதாசர், ராகவேந்திரர் ஆகியோர் படங்களுடன் இதை உருவாக்கிய சிவா மியூசிகல்ஸின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.

சப்த ஸ்வரங்கள், அவற்றைக் குறிக்கும் ஏழு கடவுள்கள், 7 ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தும் பிராணிகள் ஆகியனவும் வரையப்பட்டுள்ளன. வெறும் இசைக் கருவியாக நில்லாமல் ஒரு சங்கீத என்சைக்ளோபீடியாவாக இது திகழ்கிறது.

 

வீணையின் கழுத்துப் பகுதியில் இதை உருவாக்கிய கர்நாடக கலாஸ்ரீ சின்னப்ப நடராஜர் பெயர், காந்திஜி, அசோகச் சக்கர உருவம் ஆகியனவும் உள்ளன. கண்ட பேரண்டம் எனப்படும் இருதலைப் பறவையும் இதை அலங்கரிக்கிறது.

 

முனைப் பகுதியில் யாளியின் பட உருவமும் காணப்படுகிறது.கர்நாடக மாநில அசெம்பிளி, வீரர் கம்பகவுட, பொறியியல் வல்லுநர் விஸ்வேரையா ஆகியோர் திரு உருவங்களும் வீணையில் இடம் பெறுகின்றன.

SARVABHOWMA VEENA 
Length – 305cm
Width (Kodam) – 76cm
Height (Kodam) – 74cm
Dimension (Kodam) – 225cm
Length of Dandi – 128cm
Frets – 12mm
Weight – 70Kg
Left Stand (Burude)
Height – 46cm
Dimension – 144cm

CONVENTIONAL VEENA

Length – 132cm
Width (Kodam) – 36cm
Height (Kodam) – 33cm
Dimension (Kodam) -115cm
Length of Dandi – 62cm
Frets – 6mm
Weight – 10Kg
Left Stand (Burude)
Height – 23cm
Dimension – 82cm 
Veena Details are  taken from Shiva Musicals site.

நல்லதோர் வீணை செய்து அதை நாடு புகழும் மண்டபத்தில் வைத்தது சிறப்பான செயல்; அதைத் தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது!!

கர்நாடக மாநிலத்தில் இன்னும் பல அதிசயங்கள் இருக்கின்றன. அவைகளையும் எழுத்தில் செதுக்குவேன்!

 

TAGS: பெரிய வீணை, உலகிலேயே, சார்வபௌம, சிருங்கேரி

 

–subahm–

 

டாக்டர் இரா.நாகசாமியுடன் சந்திப்பு (Post No. 4162)

S Nagarajan, Dr Nagaswamy and london swaminathan

 

Written by London Swaminathan

 

Date: 25 August 2017

 

Time uploaded in London- 20-27

 

Post No. 4162

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

நான் எம்.ஏ. வரலாற்று (M. A. History) மாணவன். மதுரை தினமணியில் உதவி ஆசிரியராக ( Senior Sub Editor, Dinamani, Madurai) வேலை பார்த்தபோது  — 1977 ஆம் ஆண்டு என்று ஞாபகம்– டாக்டர் இரா.நாகசாமி தொல்பொருட்  துறை இயக்குநராக (Director of Archaeology)  இருந்தார். அதற்கு முன்னர் அந்த இலாகாவை எல்லோரும் “புதை” பொருள் ஆராய்ச்சி இலாகா என்று எழுதி வந்தோம். என்ன நிதர்சனமான உண்மை!! அது அப்படித்தான் “புதை பொருள்” ஆராய்ச்சி இலாகாவாக இருந்தது! எவருக்கும் அப்படி ஒரு இலாகா இருப்பதே தெரியாது! டாக்டர் இரா. நாகசாமி பொறுப்பேற்றவுடன் அது தொல்பொருட் துறை என பெயர் பெற்றது. நாள் தோறும் நாங்கள் தினமணியில் ஏதாவது ஒரு கல்வெட்டு கண்டுபிடிப்புச் செய்தியைப் போடுவோம்.

 

டாக்டர் நாகசாமி சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆனால் சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றின் கரை கண்டவர். அது மட்டுமல்ல. அதை ஆங்கிலத்தில் அழகாக தொகுத்து வழங்க வல்லவர். தமிழனுக்கு ஒரு பெரிய வீக்னெஸ் (Weakenss) உண்டு. தமிழைத் தவிர வேறு மொழி இலக்கியம் தெரியாது. ஆகையால் கிணற்றுத் தவளையாக ஏதாவது உளறிக் கொண்டிருப்பான். அப்படி இல்லாமல் நாகசாமி அவர்கள் மும்மொழி பாண்டித்தியம் பெற்றதால் அவருக்கு உலகம் முழுதும் புகழ். இங்கு லண்டனுக்கு வரும்போதெல்லாம் வீட்டிற்கு அழைப்பேன்.

Dr Nagaswamy with his awards

1977ம் ஆண்டில் அவர் பேசிய ஒரு கூட்டத்தில் பத்திரிக்கை நிருபர் போல நானும் அமர்ந்தேன். அதில் 40+ தமிழ் ஆசிரியர்களுக்குக் கல்வெட்டுப் பயிற்சி தருவதாகவும் சிதம்பரம் முதல் திருவனந்தபுரம் வரை சுமார் 1000 மைல் இலவச தொல்பொருட் துறை சுற்றுப் பயணம் அதில் அடக்கம் என்றும் பத்திரிக்கை நிருபர் கூட்டத்தில் அறிவித்தார். உடனே அவரிடம் நான் சென்று ‘நானும் ஒரு ஆசிரியர்’ (பத்திரிக்கை உதவி ஆசிரியர்) என்றும் ‘இடமிருந்தால் நானும் வரலாமா?’ என்றும் கேட்டேன். ‘தாராளமாக வாருங்கள்’ என்றார். உடனே அலுவலகத்துக்குச் சென்று அவர் வழங்கிய பேட்டியின் சாராம்சத்தை எழுதிவிட்டு என் பாஸ் (boss)ஸிடம் லீவு கேட்டேன். லீவும் கிடைத்தது. எங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பரும் சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியருமான வி.ஜி. சீனிவாசனும் அந்தப் பயணத்தில் வந்ததால் ஆயிரம் மைல் பயணமும் இனிதே முடிந்தது.

 

அது பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.

 

இவ்வளவு காலம் — நீண்ட நெடுங்காலம்– தொடர்பு இருந்ததால் இந்தியாவுக்குச் செல்லும்போதெல்லாம அவரை சந்திப்பது வழக்கம். அவர் லண்டனுக்கு பல நாடகக் குழுக்களை  அழைத்து வந்த போதெல்லாம் அவருடனே சென்று கூட்டங்களில் பங்கு கொள்வேன். பி.பி.சி. BBC தமிழ்ழோசையில் வேலை பார்த்தபோது அவரைச் சில முறை பேட்டி கண்டு அதை பி.பி.ஸி.யில் ஒலிபரப்பினேன். நேயர்களின் பெருத்த ஆதரவு கிடைத்தது. அவர் வரும் போது அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிமேகலை, ராஜேந்திர சோழன் முதலிய நாடகங்களை லண்டனில் உள்ள கோவில்கள் சார்பாகவும், சவுத் இண்டியன் சொஸைட்டி South Indian Society சார்பாகவும், பிரிட்டிஷ் மியூசியம், விக்டோரியா ஆல்பெர்ட் மியூசியம் சார்பாகவும்  மேடை எற்றினோம். லண்டன் வாழ் தமிழர்களுக்கு அது பெரிய விருந்து. வெள்ளைக்கார இடங்களுக்குச் சென்றபோது ஆங்கில மொழி பெயர்ப்பும் உண்டு.

 

Dr Nagaswamy, Dr N Kala, S Swaminathan and S Nagarajan

சென்னையில் சந்திப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னைக்குப் புறப்பட இருந்த தருணத்தில் எல்லா விமானங்களும் ரத்தானதால் டாக்டர் நாகசாமி அவர்களைப் பார்க்காமலேயே லண்டனுக்குத் திரும்பினேன். இந்த முறை ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன் ஜெட் களைப்பு Jet lag பற்றிப் பாராமல் ஒரு ஆட்டோவில் நானும் என் அண்ணனும் அவரைப் பார்க்க பெஸண்ட் நகருக்கு விரைந்தோம்.

 

இன்முகத்துடன் வரவேற்றார்; இது மரியாதையின் (Courtesy Call) பொருட்டு நடைபெறும் சந்திப்புதான் என்றும் அதிகம் அவரைத் தொந்தரவு செய்யப் போவதில்லை என்றும் பீடிகை போட்டுப் பேச்சைத் தொடங்கினேன். அவரது மகள் டாக்டர் என். கலா எங்களுக்கு இனிப்பும் தேநீரும் வழங்க, டாக்டர் ரமாதேவி என்ற மாணவி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள உதவ, ஒரு மணி நேரம் ஓடிப் போயிற்று!

 

என்ன பேசினோம்?

 

நான் அவருடைய லேடஸ்ட் (Latest Research) ஆராய்ச்சி பற்றிக் கேட்டு பேச்சைத் துவக்கினேன். திருக்குறளின் அறத்துப் பாலும், பொருட்பாலும் அப்படியே சம்ஸ்கிருத நூல்களில் இருப்பதாகவும் அது பற்றி எழுதப் போவதாகவும் சொன்னார். ஜி.யூ. போப் எப்படி திருக்குறளை கிறிஸ்தவ நூல் போலத் திரிக்க முயன்றார் என்பதையும் எடுத்துரைத்தார்.

 

பின்னர் நான் அவரிடம் இரண்டு வேண்டு கோள்களை முன்வைத்தேன்:

  1. அவருக்கும் காஞ்சி பரமாசார்ய சுவாமிக ளுக்கும் நடந்த உரையாடல்களை எழுத வேண்டும்
  2. சத்திரங்கள் (Choultries) என்பது இந்தியாவின் ஒப்பற்ற பண்பாட்டின் தடயம்; வேறு உலகில் எங்கும் காணாத புதுமை; ஆகையால் இது பற்றி கிடைக்கும் தகவல்களை அவர் எழுத வேண்டும்–

என்று கேட்டுக் கொண்டேன்.

Dr R Nagaswamy and his student Dr Ramadevi

உடனே அவர் சத்திரம் பற்றியும், பிராமணர் குடியேற்றத்துக்கு சோழ மன்னர்கள் எடுத்த முயற்சிகளையும் புள்ளி விவரம் வாரியாகச் சொன்னார்.

இந்த வயதிலும் அவர் எல்லா எண்கள், புள்ளி விவரங்களைப் புத்தகத் துணை இல்லாமல் வாரி வழங்கியது எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

எனது அண்னன் நாகராஜன், உடனே அவர் யூ You Tube ட்யூபில் நாள் தோறும் இது போல ஏ தாவது சொன்னால் பலனுடையதாக இருக்கும் என்றான். அருகில் நின்ற டாக்டர் ரமாதேவியிடம், அவரைப் போன்ற இளம் வயதினர் உதவி செய்தால், டாக்டர் நாகசாமி எளிதில் செய்யலாம் என்றான் . அந்தப் பெண்மணியும் ஆவன செய்வதாகக் கூறினார்.

 

டாக்டர் நாகசாமி கடைசியாக வெளியிட்ட நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவருடைய மகள் டாக்டர் கலா சென்னைப் பல்கலைக்கழக சைபர் க்ரைம் இயல் (Department of Cyber Crime) தலைவி என்றும் அவரும் சிறுவர்களுக்காக ஒரு நூல் எழுதி இருப்பதாகவும் சொல்லி ஒரு நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

அடுத்த முறை அவருடைய லண்டன் பயணம் எப்போது? என்று ஆவலுடன் கேட்டேன். வயதாகிவிட்டதால் அவர் ‘பார்க்கலாம்’ என்று கமிட் commit செய்யாமல் பதில் கொடுத்தார். ஏனென்றால் அவரை பிரிட்டிஷ் மியூசியம் அழைத்தது. அதாவது லண்டனிலேயே தங்கி அவர்கள் கருவூலத்தில் உள்ள இந்திய சிலைகளை ( Bronzes and Statues) அடையாளம் காண உதவி கேட்டனர். அவர்களே, இரண்டு மாதம் தங்க வசதி செய்வதாகவும் சொன்னார்கள். ஆனால் அப்படிப்பட்ட கமிட்மெண்டை Commitment – பணியை— ஏற்க முடியாத சுறுசுறுப்பான வாழ்வை உடையவர் டாக்டர் நாகசாமி. அவரை விட்டால் தெளிவாக, கன கச்சிதமாக சிலைகளை, செப்புத் திருமேனிகளை அடையாளம் காணுமறிவுடையோர் இல்லை என்றே சொல்லலாம்.

கற்றோருக்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்பு என்பதற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் டாக்டர் நாகசாமி. அவர் பேசும் பேச்சில் (Waste) வீண் என்று எதுவும் இராது. ஒவ்வொரு சொல்லும் அக்ஷர லக்ஷம் பெறும்.

 

ஒரு அறிஞர் இருக்கும் போதே — உயிர் வாழும்போதே— அவரை மதித்துப் போற்றி வாழ்த்தி வணங்குவதே சாலச் சிறந்தது. அவரைச் சந்தித்ததில் நானும் என் கடமையில் ஏதோ ஒரு பகுதியை நிறைவு செய்தது போல ஒரு உணர்வு.

 

வாழ்க நாகசாமி அவர்கள்! வளர்க அவர்தம் புகழ்!

–Subham–

புறநானூற்று முதல் பாட லில் அதிசயச் செய்திகள்! (Post No.4148)

Written by London Swaminathan

 

Date: 11 August 2017

 

Time uploaded in London- 7-25 am

 

Post No. 4148

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே-

 

புறநானூற்றின் முதல் பாட்டு கடவுள் வாழ்த்து. அதாவது தமிழர்களின் முதல் பாட்டே திராவிடப் பேய்களுக்கு செமை அடி கொடுக்கும் பாடல். பேய்கள் யார்? கடவுள் இல்லை என்று சொல்வோர் பேய்மகன்களாம். நான் சொல்லவில்லை; வள்ளுவர் சொல்கிறார்

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் — குறள் 850

 

“உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது புல்லறிவால் இல்லை என்று மறுப்பவன் இப்பூமியில் காணப்படும்  பேய் என்றே கருதப்படுவான்”.

கடவுள் வாழ்த்து பற்றித் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் உள்ளது. ஆகவே கடவுளை நம்பாதவன் தமிழன் அல்ல; பேய்கள்!

கடவுளை நம்பாதவன் தமிழ் பற்றிப் பேசினால் தமிழ்த் தாய் பொறுத்துக் கொள்ளமாட்டாள்!

 

இன்னும் ஒரு அதிசயம். முதல் பாட்டிலேயே அந்தணர், வேதம் எல்லாம் புகழப்படுகிறது. இதுவும் திராவிடப் பண்பாடு தனிப்பட்டது என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கிறது.

இதைவிட அதிசயம் பாடலை எழுதியவர் பெயர் மஹாதேவன். சிவனுடைய பெயர். ஆகையால் இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் எல்லாம் சிவன் பற்றியது. புற நானூற்றுக் காலத்திலேயே, பல புலவர்கள் தங்கள் பெயர்களைத் தமிழ் படுத்தியுள்ளனர். காமாட்சி என்பதை காமக் கண்ணி என்றும் மஹாதேவன் என்பதை பெருந்தேவன் என்றும் கண்ணதாசன் என்பதை கண்ணந்தாயன் என்றும் விஷ்ணுதாசன் என்பதை  விண்ணந்தாயன் என்றும் தமிழ்படுத்தி இருக்கின்றனர்

இன்னும் ஒரு சுவையான செய்தி மக்களை    ஆரியர், திராவிடர் என்று வெள்ளைக்கரப் பாதிரியார்கள் பிரித்தது பயங்கரப் புளுகு என்று காட்டுகிறது. 2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் மஹாதேவனும் செப்பியுள்ளார்.

 

முதல் பாட்டிலேயே கங்கை, வேதம், பிராமணர், சம்ஸ்கிருதம்!

பிராமணர் பாடும் வேதம் பற்றிச் சொன்னதோடு கங்கை நதி பற்றியும் முதல் பாட்டிலேயே வந்து விடுகிறது. சிவனிடம் உள்ள வற்றாத நீரூற்று என்பதை உரைகாரர்கள் கங்கை என்றே பகர்வர்.

இதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்?

தேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்.

 

நாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது. இது பற்றி முன்னரே எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் வேத கால எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன்.

இன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-

 

கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர்

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும் உரகர் சுரர் சாரணர்

முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; கந்தருவர்

தாரகைகள் காணப் பிசாசகணம் ஏந்து புகழ் மேய விராக்கதரோ

டாய்ந்ததிறர் போகா வியல்புடைய போகபுவியுருடனே ஆகாசவாசிகளாவர்

 

வெளி உலகவாசிகள் பற்றி புறநானூறு

 

புறநானூற்றில் பைலட் இல்லாத ஏரோப் பிளேன் (Pilotless Plane/ drone வலவன் ஏவா வான ஊர்தி- பாடல் 27) முதலிய பல அறிவியல் கூற்றுகள் இருப்பது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். முதல் பாட்டில் வெளி உலகத்தில் அறிவுசார்ந்த உயிரினங்கள் உண்டு என்பதை உறுதிபடக்  கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன். இவர் அந்தக் காலத்திலேயே மஹாபாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவானார் என்று அழைக்கப்படுகிறார். இவர் வானுலகவாசிகள் பற்றிச் சொல்லும் செய்தி சுவைமிக்கது; 18 கணங்களில் ஆகாசவாசிகள், நட்சத்திரங்கள் பற்றி வருகிறது. அர்ஜுனனை மாதரி என்பவன் வெளி உலகத்துக்கு அழைத்துச் சென்றபோது விண்வெளி ஓடத்திலிருந்து ஒளிமிகுந்த பொருள்களைக் கண்டு ஆச்சர்யத்தோடு வினவுகிறான்.

இவைகளைத்தான் பூமியில் உள்ளோர் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர் என்று மாதரி விளக்குகிறான். இது மஹாபாரதம் வனபர்வத்தில் உள்ள விஷயம்.

 

எகிப்தியர்களும் மன்னர்கள் இறந்தவுடன் நட்சத்திரத்தோடு கலந்துவிடுவதாக நம்பினர். நாமும் துருவன் அகஸ்தியர் ஏழு ரிஷிகள், அருந்ததி ஆகியோரை நட்சத்திரங்களாக வணங்குகிறோம். இந்துக்களின் வெளி உலக வாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் முதல்பாட்டிலேயே கச்சேரி களை கட்டத் துவங்குகிறது.

ஆதாம் (Adam) என்னும் ஆணின் இடது விலா எலும்பை ஒடித்துப் பெண்களைக் (Eve) கடவுள் உருவாக்கினான் என்ற பைபிள் கதை, சிவனின் இடது பாகத்தில் இருக்கும் உமை பற்றிய அர்த்த நாரீஸ்வரர் கதையிலிருந்து வந்தது என்பதையும் “பைபிளும் சம்ஸ்கிருதமும்” என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன்

இதோ பாடலும் அதன் பொருளும்:

 

கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்

வண்ண மார்பின் தாரும் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே; சிறந்த

சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப;

கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை

பதினென்கணனும் ஏத்தவும் படுமே —

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீர் அறவு அறியாக் கரகத்து,

தாழ்சடைப் பொலிந்த, அருந்தவத்தோற்கே

 

— முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்

 

வண்ணம், தவம், கணம் ஏமம் முதலிய பல சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. கொடி வாஹனம் ஆகிய விஷயங்களும் சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் கருத்துகளே.

 

பாடலின் பொருள்:-

சிவபெருமான் எல்லா உயிர்களுக்கும் காவலாய் உள்ளவன்; நீர் வற்றப் பெறாத கரகத்தை உடையவன்; தாழ்ந்த சடையுடையவன்; சிறந்த தவத்தோன். அவனது தலையில் அணியப் பெறுவதும் (கண்ணி) மார்பில் அணியப் படுவதும் (தார்=மாலை) கார்காலத்தில் பூக்கும் கொன்றைப் பூ. அவன் ஏறி வருவது வெள்ளை நிறக் காளை; அவனது கொடியில் உள்ளதும் அஃதே. அவனது கழுத்து விஷம் உண்டதால் கறுத்தது; அது களங்கமாகத் தோன்றினும் தேவர்களை உயிர்பிழைக்க வைத்ததால், வேதத்தைப் பயிலும் அந்தணர்களால் போற்றப்படுகிறது. அவனது உடலின் ஒரு பகுதி பெண் (அர்த்தநாரீஸ்வரர்);  அது அவனுள்ளே ஒடுங்கியும் இருக்கும்; பிறைச் சந்திரன் நெற்றிக்கு அழகூட்டும் அதை 18 கணத்தவரும் புகழ்வர்.

 

18 கணங்களும் சிவனை வணங்குவதாகக் கூறுவதால் அசுரர்களும், இராக்கதரும் இந்துக்களே—- அவர்களும் சிவனை வேண்டி வரம் பெற்றவர்களே என்பது வேத காலம் முதற்கொண்டு இருந்து வரும் கோட்பாடு. ஆனால் பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் வெள்ளைத் தோலினர்,  அவர்களை திராவிடர்கள் என்றும் பழங்குடி மக்கள் என்றும் முத்திரை குத்தியது ஜகஜ்ஜாலப் புரட்டு, பொய், பித்தலாட்டம் என்பதை அழகாகக் கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன்

 

புறநானூற்றுக்கு நான் புது உரை எழுதி வருகிறேன்; மேலும் வரும்!

சில சொற்களுக்குப் பொருள்:

நீரறவறியாக் கரகம் = கங்கை; கண்ணி = தலையில் அணியும் மாலை; தார் = மார்பில் சூடும் மாலை, காமர் = அழகு

வாழ்க பாரதம் பாடிய பெருந்தேவனார்; வளர்க தமிழ்!

 

—–subam—-

 

 

 

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே – புற நானூறு (Post No.4143)

Written by London Swaminathan

 

Date: 9 August 2017

 

Time uploaded in London- 21-17

 

Post No. 4143

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சங்க இலக்கிய நூல்கள் 18-ல் மிகவும் முக்கியமானது புறநானூறு. தமிழர்களின் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் அறிந்த வாழ்வியல் கோட்பாடுகளையும் அறிவியல் உண்மைகளையும் எடுத்துரைக்கிறது

 

புற நானூற்றில் 18 ஆவது பாடல் குடபுலவியனார் பாடியது. முதலில் புலவரின் பெயரே பல புதிர்களைப் போடுகிறது. எவருக்கும் சரியாகப் பொருள் சொல்ல முடியவில்லை ஒருவேளை, புலஸ்த்ய மகரிஷியின் குடியைச் சேர்ந்தவரோ என்று (குடி புலஸ்திய) என்று ஐயப்பாடு எழுப்பியோர் உண்டு. ஆனால் அதுவும் சரியாகத் தோன்றவில்லை. இவர் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார்.

 

இந்தப் பாடலில் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன?

ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை …………

இதைப் பலவகையாக நோக்கலாம்

1, 10, 100, 1000, 10,000, 100,000, கோடி, பத்து கோடி, 100 கோடி, 1000 கோடி

தசாம்ச முறை எனப்படும் டெஸிமல் சிஸ்ட (Decimal System) த்தைக் கண்டுபிடித்தவர்கள் வேத கால ரிஷிகள். உலகின் பழைய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் டெஸிமல் முறை காணப்படுவதோடு சஹஸ்ரநாமம், லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று நம் சமய வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது. இந்துக்களின் பழமொழிகள் கூட டெஸிமல் மு முறையில் இருக்கும். சாபம் இடும் இடங்களில் கூட உன் தலை சுக்கு நூறாக உடையட்டும் என்று தசாம்ச முறையில்தான் இருக்கும்.

அணைகள் கட்ட அறிவுரை

நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம, இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே

 

மக்களுக்கான குடிநீர் வசதிகளைச் செய்து தா; அணகள் கட்டி நீர்ப்பாசனத்துக் கு உதவுக என்பது புலவரின் அறிவுரை. இது அக்காலத்தில் நடந்த அறப்பணிகளையும் பொதுநல சிந்தனையையும் காட்டுகிறது. புலவர் தனக்கு தங்கம் கொடு, நிலம் கொடு என்று கேட்காமல் பொது மக்களுக்கு வசதிகள் செய்து தா என்று இறைஞ்சுகிறார்.

 

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே

உலகில் குடி நீர் இல்லாமல் யாரும் நீண்ட காலம் வாழ முடியாது

யார் ஒருவர் அன்னதானம் செய்கிறாரோ அவர், மற்றவர்களுக்கு உயிர் கொடுத்ததற்குச் சமம்

 

இதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் சொல்லுவார்:

அன்னாத் பவதி பூதானி பர்ஜன்யாத் அன்ன ஸம்பவ:

யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யஜ்ஞ கர்ம ஸமுத்பவ: (3-14)

 

உணவிலிருந்தே உயிர்கள் உண்டாகின்றன

மழையிலுருந்து உணவு உண்டாகின்றது

யக்ஞத்திலிருந்து மழை உண்டாகின்றது

நல்வினைகளில் இருந்து  வேள்வி உண்டாகின்றது.

 

 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை – என்பது ஆன்றோர் வாக்கு. வள்ளுவரும் பத்தினிப் பெ ண்களால் மழை பெய்யும். நல்லாட்சி நடைபெறும் வேந்தன் நாட்டில்  முயற்சியின்றியே அறுவடைகள் பெருகும் என்றெல்லாம் செப்புகிறார்.

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே = நல்ல நிலமும் நல்ல நீர்ப் பாசனமும் இருந்தால்தான் உணவு விளைச்சல் கிடைக்கும்.

 

மேலும் நீரும் ஒரு உணவு. இதை வள்ளுவரும் சொன்னார்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ  மழைகுறள் 12

உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவ்வுணவுகளை உண்பவர்க்குத் தாமும் உணவாகி, இருப்பதும் மழையே.

 

இதைத்தான் குடபுலவியனாரும் செப்பினார்.

இன்னொரு படலில் ‘’நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’–186- மோசிகீரனார்

என்று சொல்லுவதிலிருந்து நெல்லும் (நிலம்) நீரும் உயிருக்கு இன்றியமையாதவை என்பது புலப்படும்

 

இவைகளை எல்லாம் பார்க்கையில் குடபுலவியனார் ஏன் இப்படிச் சொன்னார் என்று தெளிவாகிறது.

 

உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

 

இது பகவத் கீதையிலும் உள்ளது. தனக்கென மட்டும் உணவு சமைப்பவன் பாவி என்று கண்ணன் உரைப்பான் (பகவத் கீதை 3-13)

யே ஆத்ம காரணாத் பசந்தி, தே பாபா: அகம் புஞ்சதே.

 

இப்பொழுது புறநானூற்றுப் பாடலின் முழுப் பொருளையும் பார்ப்போம்:

கடல் சூழ்ந்த உலகில் முயற்சியால் புகழை நிலைநாட்டிய அரசர் வழி வந்தவனே! சங்கம் எனச் சொல்லப்படும் பெரிய எண் அளவுக்கு உன் வாழ்நாள் அமையட்டும். வாளை, ஆரல், வரால், கெடிற்று மீன்களை உடைய நீர் நிலைலகளையும் உயர்ந்த மதிலிலையும் உடையவனே!

நீ மறுமைச் செல்வம் விரும்பினாலும், மன்னர்களை வென்று புகழ்பெற விரும்பினாலும் அதற்கான வழியை நான் சொல்லித் தருகிறேன்.

நீரை முக்கியமாக கொண்டுள்ள உடம்புக்கு உணவு கொடுத்தவர் உயிர் கொக்டுத்ததற்குச் சமம்.

அந்த நெல்லையும் நீரையும் ஒன்றாகச் சேர்த்தவர் உயிரையும் உடலையும் சேர்த்தவர் ஆவர். நெல் முதலியவற்றை விளைவிக்கும் நிலம் பெரிதாக இருந்தாலும் மன்னன் முயற்சிக்குப் பலன் தராது; ஒரு வழி சொல்லித் தருகிறேன். அதைக் கடைப் பிடிப்பாயாக. பள்ளமான இடத்தில் நீர் தேங்கும்படி செய்தவர்கள் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்த்தவர் ஆவர்; அதோடு புகழும் கிட்டும் அப்படிச் செய்யாதவர் புகழ் நிற்காது. எனவே நீயும் நீர் நிலை பெருகச் செய்வாய்.

 

இதில் 4 வகை மீன்களைச் சொல்லுவதைக் கவனிக்கவும். நீர் சூழ்ந்த உலகம என்னும் அறிவியல் உண்மை சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் திரும்பித் திரும்பி வரும். இந்த பூமியில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் நிரம்பிய உண்மை இந்தியர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். அது மட்டும் அல்ல; “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பது மணிமேகலையிலும் நீரின்றமையாது உலகம் என்னும் வரி திருக்குறளிலும் வருவது காண்க. உணவும் நீரும் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்னும் இந்து மதக் கருத்தும் பாரதத்தில் மட்டுமே காணப்படும். பிற நாட்டு இலக்கியத்தில் இப்படிப்பட்ட கொள்கைகளைக் காண முடியாது.

வாழ்க குடபுலவியனார்.

சாக்ரடீஸை கிண்டல் அடிக்கும் கிரேக்கர்கள்! (Post No.4140)

Written by London Swaminathan

 

Date: 8 August 2017

 

Time uploaded in London- 20-46

 

Post No. 4140

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நம்முடைய கண்ணோட்டத்தில் சாக்ரடீஸ் ஒரு சிந்தனைச் சிற்பி; பேரறிஞர்! ஆனால் அவர் காலத்திய கிரேக்க அறிஞர்கள் அவரை பைத்தியக்கரப் பயல் என்று சித்தரித்துள்ளனர். நான் ஏதென்ஸ் நகரில் ஆவலோடு வாங்கிய சீட்டுக் கட்டில் ஜோக்கர் கார்டில் சாக்ரடீஸ் உள்ளார். ஆனால் வேறு ஒரு கார்டிலும் சாக்ரடீஸ் படம் இருந்தது எனக்குக் கொஞ்சம் திருப்தி. இதைப் பார்க்கையில் சாக்ரடீஸ் பற்றி இரு வேறு கருத்துகள் உண்டோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயினும் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நாடகங்கள் எழுதி புகழ் சேர்த்த அரிஸ்டோபனிஸ் என்பவர், எல்லா தத்துவ அறிஞர்களும் தீய கருத்துக்களைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் சாக்ரடீஸை பைத்தியக்காரன் என்கிறார்.

 

 

நம்மூர் அரசியல்வாதிகளைப் பார்க்கையில் சாக்ரடீஸ் பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரன்தான். கிரேக்கம் எனப்படும் கிரீஸ் நாட்டில் அக்காலத்தில் தூக்குத் தண்டனை, சிரச் சேதம் முதலியன கிடையா. எவருக்கேனும் மரண தண்டனை விதிக்கப்பட்டால் உன் கொள்கைகளைக் கைவிடுகிறாயா? அல்லது விஷத்தைக் குடிக்கிறாயா? என்று கேட்பர். அப்பாவி சாக்ரடீஸ் எனக்கு இருக்கும் ஒரே சொத்து என் கொள்கைதான்; அது என்னுடன் இருக்கட்டும் என்று சொல்லி விஷத்தைக் குடித்தார்.

அவரது ஆத்ம சிநேகிதனான கிரீட்டோ, தப்பித்துச் செல்ல வழிவகைளைக் கூறியும் சிறையிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார். கடைசியில் கிரீட்டோவை அழைத்து, “கிரீட்டொ! நான் வேண்டிக்கொண்ட தெய்வத்துக்கு ஒரு கோழியைப் பலி கொடுக்க மறந்து விடாதே” என்று சொல்லிவிட்டு ஹெம்லாக் என்னும் விஷத்தைக் குடித்தார். நிற்க.

 

இவரை நையாண்டி செய்து, நக்கல் அடித்த அரிஸ்டோபனிஸ், 40 நாடகங்களுக்கு மேல் எழுதினார். ஆனால் நம் கைகளில் சிக்கியது 11 நாடகங்கள்தான்.

இவருடைய வாழ்க்கைச் சரிதம் முழுதும் கிடைக்கவில்லை. ஆனால் ஏதென்ஸ் நகரில் பிறந்து 20 வயதுக்குள்ளேயே நகைச்சுவை நாடகங்களை எழுதத் துவங்கினார். இவரது  காலத்தில் ஏதன்ஸுக்கும் ஸ்பார்டாவுக்கும் 27 ஆண்டுகளுக்கு நடந்த போரில் ஏதென்ஸ் தோல்வி அடைந்தது. அத்துடன் மிகப்பெரிய கிரேக்க நாகரீகம் சீரழியத் தொடங்கியது. ஊழல் தலைவிரித்தாடியது. அவைகளக் குறை கூறியும் கிண்டல் செய்தும் நகைச் சுவை நாடகங்களை எழுதினார்.

 

இவருடைய நாடகங்கள் அங்கத நாடகங்கள் இரு பொருள்பட இருக்கும். இவரது புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்று தவளைகள் பற்றியது. ரிக் வேதத்தில் வரும் தவளைப் பாடலுடன் அதை ஒப்பிட்டு ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

 

பிறந்த ஆண்டு- கி.மு.450

இறந்த ஆண்டு – கி.மு.385

 

My old article:

 Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …

tamilandvedas.com/2016/12/15/aristophanes…

राजेंद्र गुप्ता Rajendra Gupta has left a new comment on your post “Aristophanes, Vashistha and the Frog Song in the R…”

 

XXXX

 

80 நாடகம் எழுதிய ஏஸ்கைலஸ்!

கிரேக்க நாடகத்தின் முன்னோடி இவர். ஏஸ்கைலஸ்– சோக நாடகங்களின் மன்னன். ஏதென்ஸ் அருகில் பிறந்தவர். அடிக்கடி இதாலிக்குச் சொந்தமான சிசிலி தீவுக்குப் போய் வந்தார். அங்கேதான் இறந்தார்.

 

மராத்தன் போரிலும் சலாமிஸ் போரிலும் பங்கேற்றவர்.

 

80 நாடகம் எழுதி 52 முறை முதல் பரிசு பெற்றவர் ஏஸ்கைலஸ் . ஆனால் நமக்குக் கிடைத்தவை ஏழே நாடகங்கள் தான்.

கிரேக்க புராணக் கதைகளைப் பயன்படுத்தி அரசியல் செய்திகளை அளித்தார். இவருடைய நாடகம் பற்றிய சிறப்பு என்னவென்றால் 2500 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் இவருடைய நாடகங்கள் மேடையில் நடிக்கப்படுகின்றன (நம்முடைய மஹாபாரத நாடகங்கள் இன்றும் இந்தோநேஷியாவில் நடப்பது போல).

 

இவரது காலத்தில் பாரசீகத்துடன் நடந்த சண்டையில் கிரேக்கம் வெற்றி பெற்றது. அதன் விளைவாக போர்க்கால துன்பங்களை இவரது நாடகத்தில் காணலாம்.

பிறந்த ஆண்டு- கி.மு. 524

இறந்த ஆண்டு – கி.மு.456

 

–Subham–