லண்டனில் நான் கற்ற பாடம் Post No.4022)

Written by London Swaminathan
Date: 21 June 2017
Time uploaded in London- 15-12
Post No. 4022
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

1987 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி லண்டனில் தரை இறங்கினேன். பி.பி.சி. ( B B C Wold Service) தமிழோசை ஒலிபரப்புக்காக பிரிட்டிஷ் அரசு என்னை அழைத்தது (உலக சேவை அரசின் நேரடி பார்வையில் உடையது. சாதரண பி.பி.சி.(BBC One, BBC Two) மக்கள் தரும் லைசென்ஸ் பணத்தில் ஓடும் அமைப்பு).

 

இந்தியாவில் 25 ஆண்டுக்காலம் ஆர்.எஸ்.எஸ். முதலிய அமைப்புகளில் இருந்தும்கூட லண்டனில், — புதிய நாடு, புதிய தட்ப வெப்ப நிலை, புதிய சூழ்நிலை காரணமாக — ஒன்றும் செய்ய இயலவில்லை. இப்போது போல தடுக்கி விழுந்தால் தமிழர்களைக் காணும் காலம் அல்ல அது. தமிழர்களும், வெஜிட்டேரியன் உணவும் தேடிக் கண்டு பிடித்த காலம் அது. இப்பொழுது தோழான், துருத்தி அகதி, சகதி எல்லோரும் வரலாம்.

 

 

1993 முதல்தான் நிறைய பொதுப் பணிகள் செய்ய வாய்ப்பு கிடைத்தது. நாலு சங்கங் களில் பொறுப்பு வகித்து சுமார் பத்து அமைப்புகளுக்கு இரண்டு லட்சம் பவுன்களுக்கு மேலாக நிதி சேகரித்து அளித்தேன். அதில் ஒரு அனுபவம்:—

 

பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாவட்டம் தேனியில் இருந்து சுவாமி ஓம்காரானந்தா வந்தார். அவர் இரு முறை லண்டனுக்கு வந்த போதும் நான் சார்ந்திருந்த அமைப்புகள் மூலம் பல இடங்களில் கூட்டங்கள் ஏற்பாடு செய்தேன் அவர் பெரிய தத்துவ வித்தகர். உண்மைச் சாமியார்; நான் கூட்டம் ஏற்பாடு செய்த கோவில்களில் ஒன்று லூயிஷாம் என்னும் இடத்திலுள்ள சிவன் கோவில்; இலங்கைத் தமிழர்களால் சிறப்பாக நடத்தப்படும் கோவில்.

 

ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தால் அதற்கு முதல் நாள் அவர்களுக்கு நினைவுபடுத்தி “எப்போது அழைத்து வரலாம், எவ்வளவு நேரம் பேச வேண்டும், என்ன வயதுக்கார ர்கள்? எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்? என்றெல்லாம் விசாரித்து பேச்சாளர்களுக்கு சொல்லுவது என் வழக்கம். அதன்படி சிவன் கோவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளரை டெலிபோனில் அழைத்து விசாரித்தேன்.

“தம்பி நாளை காலை பத்து மணிக்கு சுவாமிகள் பேசலாம். பின்னர் கேள்விகள் கேட்டால் பதில் சொல்லட்டும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் இருந், தால் போதும்; அப்புறம் கோவில் நிர்வாகிகளும் குருக்கள்களும் மரியாதை செய்வார்கள் என்றார். யார் வருகிறார்கள் என்று கேட்டேன்.

“அதுவா, நம்ம தமிழ் ஸ்கூல் பிள்ளைகள்தான். ஆரம்ப வகுப்பு முதல் பள்ளி இறுதிப் படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர். ஆனால் பெருமளவு சின்னக் குழந்தைகள்தான்” என்றார்.

 

எனக்கு தூக்கிவாரி போட்டது. டெலிபோனில் அதைக் காட்டவா முடியும்? பெரிய பதட்டத்துடன் “அடக் கடவுளே, அவர் பெரிய அறிஞர். வேதங்கள், உபநிஷத்துகள், கீதை பற்றி பெரியோர்களுக்காக பேசக்கூடியவர். அரிய வாய்ப்பை நழுவவிடுகிறீர்களே” — என்றேன்.

அவரோ நிதானமாக ,

“தம்பி; நீங்கள் அவர் ஒரு நல்ல , உண்மையான சந்யாசி என்று சொன்னதால்தான் இப்படி செய்திருக்கிறேன். எங்கள் பிள்ளைகள் பார்ப்பது எல்லாம் சினிமாவில்—தெய்வீகத்  திரைப்படங்களில் வரும் நடிப்பு சந்யாசிகளைத் தான் பார்த்திருக்கிறார்கள்; நிஜ வாழ்விலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. நாங்கள் சொல்லினால் விளக்கி புரியவும் வைக்க முடியாது. ஆகையால் கூப்பிட்டுக் கொண்டு வாருங்கள் அவரைப் பார்த்தால் போதும். அவர் எதுவும் பேசலாம்; ஆசியைகளுக்கும் கோவிலுக்கு வரும் மற்ற பெரியோர்களுக்கும் அறிவித்திருக்கிறோம் அவர்களும் வருவார்கள்” என்றார்.

என் கண்களில் நீர் வராத குறைதான். அவருடைடய அணுகுமுறை என் உள்ளத்தை உருக்கிவிட்டது. நானும் ஒரு பாடம் கற் றேன். ஒரு தனி மனிதன் நல்லவனாக இருந்தால், ஆன்மீக வாதியாக இருந்தால் அவருடைய தோற்றம் எத்தனை இளம் உள்ளங்களின் அடி மனதில் — பிஞ்சுப் பருவத்தில் – பதியும் என்று அந்த கோவில் நிர்வாகிக்கு இருந்த அனுபவ அறிவு எனக்கு இல்லாததை உண ர்ந்தேன்.

சுவாமிகளும் எல்லா வயதினரையும் வசப்படுத்தும் — பரவசப்படுத்தும் — அருளுரை வழங்கினார்.

 

இதை நான் சென்ற சனிக்கிழமை லண்டன் மித்ர சேவா அமைப்பில் பேசியபோது சொன்னேன்; எனது ஆங்கிலக் கட்டுரையில் கொடுத்தும் இருக்கிறேன்.

 

ஆக நமக்கு வேண்டியது எல்லாம் உதாரண புருஷர்களே; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ரமண மகரிஷி போன்று ஏழைக் குடிசையில், ரிஷி முனிவர் போல, வாழ்பவர்கள் காலில் உலகமே விழும்; சரண் அடையும்.

 

(( இப்பொழுது என் மனதில் ஓடும் எண்ணங்களையும் எழுதுகிறேன்:

நடிகர்கள் என்பவர்கள் வெறும் நடிகர்களே; சுய வாழ்வில் யோக்கியர்கள் அல்ல. நடிப்புக்கு பணம் வாங்குதலிருந்து எல்லாமே திரை மறைவு வேலைகள்தான். அவர்கள் உலகிற்குப் பாடம் கற்பிக்க முடியாது. இதே போல திருக்குறளை மேடையில் முழக்கி நாம் எல்லோரும் தமிழர்கள் என்றும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதை நூறு முறை சொல்லி ஏமாற்றும் மேடைப் பேச்சாளர்களையும் நாம் அறிவோம்.

இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. எங்கு சத்தியம் இல்லையோ அது அழிந்தே தீரும் இது நானோ ஒரு சந்யாசியோ போடும் சாபம் அல்ல. இயற்கை நியதி. பாரதியார் பாஞ்சாலி சபதத்தின் இறுதியில் சொன்னது நினைவுக்கு வருகிறது

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்”.

–SUBHAM–

லிப்ஸ்டிக்! ஸ்டிரா!! – கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்! (Post No.4020)

Written by S NAGARAJAN

 

Date: 21 June 2017

 

Time uploaded in London:-  5-44  am

 

 

Post No.4020

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

கம்ப சித்திரம்

 

இலங்கை மங்கையின் லிப்ஸ்டிக்! அயோத்தி மங்கையின் ஸ்டிரா!! – கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்!

 

ச.நாகராஜன்

 

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணத்தில் ஏராளமான சுவையான செய்திகளைத் தந்துள்ளான்.

 

உற்றுக் கவனித்து ரசிப்போர் வியப்பது நிச்சயம்.

எடுத்துக்காட்டாக அவன் லிப்ஸ்டிக்கையும் ஸ்டிராவையும் குறிப்பிட்டிருப்பதைச் சொல்லலாம்.

 

இருபதாம் நூற்றாண்டில் நவ நாகரிக மங்கையர்  மேக் அப் செய்து கொள்ளூம் போது லிப் ஸ்டிக்கைப் பூசாமல் இருப்பது இல்லை.

 

இந்த உதட்டில் பூசும் அழகிய சாயம் பற்றி கம்பன் குறிப்பிடும் பாடல் இது:

 

 

குண்டலக் குழைமுகக் குங்கும கொங்கையார்

வண்டலைத் தெழுகுழற் கற்றைகால் வருடவே

விண்டலத் தகவிரைக் குமுதவாய் விரிதலால்

அண்டமுற் றுளதவூ ரழுதபே ரமலையே

     (அக்ககுமாரன் வதைப் படலம் பாடல் 42- வை.மு.கோ பதிப்பு)

 

 

இப்பாட்டின் பொருள் : குண்டலமென்ற காதணி அணிந்த செவி உடைய முகத்தையுடைய குங்குமக் குழம்பை அணிந்த மார்பகம் கொண்டவரான இராக்ஷஸ மகளிர்  வண்டுகளை அலையச் செய்து  மேல் எழுப்பப் பெற்ற கூந்தல் தொகுதி அவிழ்ந்து காலகளிலே விழுந்து புரண்டு கொண்டிருக்க நறுமணமுள்ள ஆம்பல் போன்ற செம்பஞ்சு ஊட்டிய வாய்களை திறந்து விரிவதனால் அந்த இலங்கையில் உள்ளார் அழுத பெரும் குரலோசை மேல் உலகம் வரை எட்டிற்று.

 

 

இலங்கை ராக்ஷஸ மகளிர் செம்பஞ்சுக் குழம்பை வாயில் அழகுக்காகப் பூசியதை கம்ப சித்திரம் காட்டுகிறது.

சிந்தாமணியிலும் கூட ‘அம்மலரடியுங்கையும் அணி கிளர் பவளவாயும் செம்மலர் நுதலு நாவும் திருந்தொளி யுகிரோடங்கே, விம்மிதப்பட்டு வீழ வலத்தகமெழுதியிட்டாள் என்று வருகிறது.

 

 

அலத்தகக் குமுதம் என்பது செங்குமுதம் ஆகும். அந்தக் காலத்திலேயே மகளிர் அனைவரும் செம்பஞ்சுக் குழம்பை வாயில் பூசிக் கொள்வது வழக்கம்  என்பது தெரிய வருகிறது.

அலத்தகம் என்பது தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது!

 

 Ms Lalita malar maniam of Kualalumpur enjoying tender coconut water with a straw.

 

ஆக லிப்ஸ்டிக்கை சுந்தர காண்டத்தில் கூறிய கம்பன். நாம் இன்று இளநீர் குடிக்கவும், குளிர் பானங்களைக் குடிக்கவும் பயன்படுத்தும் ஸ்டிரா பயன்பாட்டையும் பால காண்டத்தில் உண்டாட்டு படலத்தில் குறிப்பிடுகிறான்.

பாடலைப் பார்ப்போம்:

 

 

 

வான் துணை பிரிதலாற்றா வண்டினம் வச்சை மாக்கள்

ஏன்றமா நிதியம் வேட்ட விரவல ரென்ன வார்ப்பத்

தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தன ணுகர நாணி

ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால் ஒருத்தி உண்டாள்.

        (பாடல் 19)

 

 

தசரதனுடன் மிதிலை நோக்கிச் சென்றது அவனது சேனை.

அப்போது நடந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூறுகிறான் கம்பன்.

 

பிரிய மாட்டாமல் ஆகாயம் வரை வண்டுகள்  மொய்த்துக் கொண்டிருக்கின்றன.கஞ்சனிடத்தில் இருக்கின்ற பெருஞ்செல்வத்தைக் கேட்க வந்துள்ள யாசகர்கள் போல அந்த வண்டுகள் ஆர்ப்பரிக்க சேனைக் கூட்டத்தில் சென்ற ஒருத்தி  தேனைச் சொரிகின்ற தாமரை மலர் போல உள்ள தனது செந்நிற வாயைத் திறந்து  மதுவைப் பருகுவதற்குக் கூசி, செங்கழுநீரின் உள் துளையுள்ள தண்டினால் கிண்ணத்தில் இருந்ததை உறிஞ்சிப் பருகலானாள்.

மதுவைப் பருக நாணிய அயோத்தி மங்கை செங்கழுநீரின் உள் துளை உள்ள தண்டை ஸ்டிராவாகப் பயன்படுத்தினாள். அந்தத் துளை வழியே மதுவை உண்டாள்.

 

 

ஆக லிப்ஸ்டிக்கும், லிப் மூலமாக உறிஞ்சிக் குடிக்கும் ஸ்டிராவும் கூட கம்ப சித்திரத்தில் இடம் பெற்று விட்டதை எண்ணி ரசிக்கலாம்; மகிழலாம்.

 

போகிற போக்கில் கம்பன் தரும் சின்னச் சின்ன தகவல்கள் இவை.

அந்தக் காலத்திலேயே லிப்ஸ்டிக்; அந்தக் காலத்திலேயே ஸ்டிரா!

அழகு தானே!

****

லண்டனில் தமிழ் வளர்ந்த கதை! (Post No.4015)

Written by London Swaminathan
Date: 19 June 2017
Time uploaded in London- 14-39
Post No. 4015
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

தமிழ்  வாய்மொழி வரலாறு திட்டம்

 

லண்டனில் மித்ரசேவா (MITRASEVA) என்ற அமைப்பு முதியோருக்காக — குறிப்பாக தென் இந்தியாவில் இருந்து வந்த முதியோருக்காக– துவக்கப்பட்டது. அதனுடைய ஆண்டு விழா 17 ஜூன் 2017 சனிக்கிழமை அன்று லண்டனில் நடந்தது. அதில் என்னுடைய நிதி குவிப்பு அறப்பணிகள் பற்றிப் பேச அழைத்திருந்தனர்.

 

லண்டனில் நான் கடந்த 25 ஆண்டுகளில் லண்டன் சத் சங்கம் (London Sath Sangam) , சவுத் இந்தியன் சொசைட்டி (South Indian Society) , தமிழ் ஹெரிட்டேஜ் பவுண்டேஷன் (தமிழ் மரபு அறக்கட்டளை Tamil Heritage Foundation) , உலக இந்து மஹா சங்கம், பாரதீய வித்யா பவன் , லண்டன் தமிழ் சங்கம், சிந்தி மந்திர் (Sindhi Mandhir), Tamil and Malayalee Health Advocacy Project முதலிய பல அமைப்புகளுக்கு இரண்டு லட்சம் பவுண்களுக்கு மேலாக நிதி சேர்த்ததையும் அந்த நிதி எந்த அமைப்புகளால் கொடுக்கப்பட்டன என்பதையும் சொன்னேன் (எனது ஆங்கிலக் கட்டுரையில் விரிவாகக் கொடுத்துள்ளேன்; ஏனெனில் என்னை ஆங்கிலத்தில் பேச அழைத்திருந்தனர்)

 

 

அந்தக் கூட்டத்தில் நான் தமிழர்களின் வாய்மொழி வரலாறு (Tamil Oral History Project) பற்றி வெளியிட்ட சி.டி (Compact Disc) . நாங்கள் வெளியிட்ட கம்யூனிட்டி நியூஸ்லெட்டர் (Community Newsletter) முதலியவற்றையும் காட்டினேன். அதில் வாய்மொழி வரலாற்று விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறேன். இந்த சி.டி. லண்டனிலுள்ள லைப்ரரிகளுக்கு அனுப்பப்பட்டது. பேட்டி கொடுத்த 30 பேருக்கும் பேட்டி எடுத்த 30 பேருக்கும் அனுப்பப்பட்டது. இது எதிர்கால ஆராய்ச்சியாளருக்கு உதவும்.

25 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்த தமிழர்களுக்கு என்ன பிரச்சனைகள் இருந்தன, அவர்கள் அதையும் மீறி எப்படி ஆடலையும் பாடலையும் நாடகத்தையும் வளர்த்தனர் என்பதை கேள்விகள் மூலம் வரவழைத்து ரிகார்ட் செய்தோம் ஒவ்வொரு பேட்டியும்  20 முதல் 40 நிமிடங்கள்– அதன் சுருக்கம் மட்டும்தான் இந்த C.D. யில் இருக்கின்றது.

 

ஸி.டி.யைத் தயாரிக்கும் பணியை திருமதி நிர்மலா ராஜு செவ்வனே செய்து கொடுத்தார். இதில் பேட்டி கொடுத்த லண்டன் கலைஞர்களின் பட்டியல் இதோ:

 

1.திருமதி பிரேமலீலா கணேசன், வாய்ப்பாட்டு, மற்றும் வீணை

2.திருமதி சரோஜினி சுந்தரேசன், வாய்ப்பாட்டு

3,திருமதி கோகிலா தங்கராசா வாய்ப்பாட்டு

4.திருமதி பத்மினி குணசீலன், நடனம்

5.திருமதி சுகிர்தலா கடாட்சம், வாய்ப்பாட்டு, மற்றும் வயலின்

 

6.திருமதி விஜயாம்பிகை இந்திரகுமார், நடனம்

7.திரு சத்திய மூர்த்தி, மெல்லிசைக் கலைஞர்

8.திருமதி சீதா வெங்கட்  ராமன்   , வாய்ப்பாட்டு, மற்றும் நாடகம்

9.திரு உமேஷ், மெல்லிசைக் கலைஞர்

10.திரு.கோதண்டபாணி, வயலின்

11.டாக்டர் முசாபர் , மெல்லிசை

12.திரு. பாலா ரவி, கவிஞர்

13.திரு முரளி, நாடகம்

14.திரு முத்துகுமார் சிவ ராஜா, மிருதங்கம்

15.திரு. பி.கே. ராமகிருஷ்ணன், நாடகம்

16.திருமதி லதா மூர்த்தி, நாடகம்

17.திருமதி துஷ்யந்தி தியாகராஜா   , நடனம்

18.திரு.பாலேந்திரா , நாடகம்

19.திருமதி கலா யோகராஜா, வாய்ப்பாட்டு

20.திருமதி சரஸ்வதி பாக்கியராஜா, வயலின்

21.திரு. உன்னி கிருஷ்ணன், நடனம்

22.திருமதி. கீதா ஸ்ரீஇதர், நடனம்

  1. திருமதி பவித்ரா மகேஷ், வாய்ப்பாட்டு மற்றும் வீணை
  2. திருமதி ஹரிணி ரகு, வாய்ப்பாட்டு

25.திருமதி. அன்னபூரணி சத்தியமூர்த்தி, நடனம்

  1. திரு காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, மிருதங்கம்

27.திருமதி லக்ஷ்மி ஜயன், வாய்ப்பாட்டு மற்றும் வயலின்

28.திரு மாணிக்கம் யோகேஸ்வரன், வாய்ப் பாட்டு

  1. திருமதி சிவ சக்தி சிவநேசன், வாய்ப்பாட்டு மற்றும் வீணை
  2. திருமதி புஷ்கலா கோபால், நடனம்

நிதி வாங்கிய அமைப்பு- லண்டன் சத் சங்கம் (செயலர், சந்தானம் சுவாமிநாதன்)

நிதி கொடுத்த அமைப்பு- கலொஸ்த் குல்பெங்கியன் பவுண்டேஷன்

 

Fund Received by London Sath Sangam

Fund Given by Calouste Gulbenkian Foundation for Tamil Oral History Project.

Year 2004

 

—Subham–

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ!- வள்ளுவன், மனு ‘மூட நம்பிக்கை’

Written by London Swaminathan
Date: 15 June 2017
Time uploaded in London- 11-16 am
Post No. 4003
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

வள்ளுவன், காளிதாசன், மனு ஆகியோர் எல்லாம் ஒரு கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றனர். ஆனால் பகுத்தறிவு பேசும் பகலவன்களுக்கு அது வேப்பங் காயாகக் கசக்கும். ஒரு நாட்டில் நல்லாட்சி நடைபெற்றால் அங்கு விதை விதைக்காமலேயே தானியம் முளைக்குமாம்! நல்ல அறுவடை கிடைக்குமாம்!

 

அதே போல விருந்தாளிகளைக் கவனித்தால் நல்ல விளைச்சல் வருமாம். விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத எதுவும் மூட நம்பிக்கைதானே

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம் (85)

 

பொருள்:

வந்த விருந்தினரை முதலில் உண்ண வைத்துவிட்டுப் பின்னர் மீதியை உண்பவனுடைய விளை நிலத்திற்கு விதையும் விதைக்க வேண்டுமா?

 

அதாவது அவன் நிலத்தில் தானாக தானியம் முளைக்கும்; நெல் விளையும்!!

விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களில் அப்படிப்பட்ட விருந்தாளிகளை வரவேற்க தேவலோகத்தில் தேவர்கள்வேறு காத்திருப்பார்கள் என்று இன்னும் ஒரு குறளில் செப்புகிறான். சங்க இலக்கிய நூலான புறநானூறும் செப்புவது அதே! ஆய் அண்டிரன் இறந்தவுடன் இந்திர லோகத்தில் அவனை வரவேற்க டமாரங்கள் (முரசு) முழங்கினவாம்.

 

மனு நீதி நூலும் இதையே பகர்வது பகுத்தறிவுப் பகலவர்களுக்குப் பாகற்காயாகக் கசக்கும்:

நல்லாட்சி நடத்தும் அரசன்  நாட்டில் விவசயிகள் பயிரிட்டது போல பயிர்கள் தானே விளையுமாம்; குழந்தைகள் இளம் வயதில் சாக மாட்டர்களாம். யாரும் உடலூனத்துடன் பிறக்க மாட்டார்களாம்! (மனு 9-247)

 

வள்ளுவனும், மனுவும் சொல்லுவது மூட நம்பிக்கையா?

 

இதற்கெல்லாம் மூல காரணம் வேதங்கள் ஆகும். ஆரமபத்திலேயே “அதிதி தேவோ பவ” = ‘விருந்தாளிகள் கடவுள்’ (தைத்ரீய உபநிஷத், சிக்ஷாவல்லி 1-20) என்று சொல்லிவிட்டது.

வேதத்தில் பல இடங்களில் விருந்தோம்பல் கருத்து உளது:

அதர்வ வேதத்தில் (14-11) ஒரு பாடல்-

“இந்த அறிவு உடைய விராத்யன் விருந்தாளியாக வரட்டும்;

உடனே எழுந்து நின்று, விராத்யனே, நீ  நேற்று இரவு எங்கு தங்கினாய்? இதோ தண்ணீர் இருக்கிறது.

முதலில் கொஞ்சம் சிரம பரிகாரம் செய்; உனக்கு என்ன வேண்டுமோ அதெல்லாம் கிடைக்கும், விராத்ய, நீ விரும்பியதெல்லாம் நடக்கட்டும்; விராத்ய, உன் ஆசைகள் எல் லாம் நிறைவேறட்டும்

 

இது போன்ற கருத்து ரிக் வேதத்திலும் உள்ளது (10-117); பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் கருத்து இப்பாட்டில் தொனிக்கிறது.

 

நல்லாட்சி நடந்தால் புலியும் மானும் ஒன்றை ஒன்று தாக்காது என்று காளிதாசன், கம்பன், இளங்கோ சொல்லியதை முன்பே கண்டோம். இதுவும் பகுத்தறிவுகளுக்கு ஒவ்வாத தமிழ் மூட நம்பிக்கை.

 

இந்த விருந்தோம்பல் என்னும் கருத்து வெளி நாட்டுப் பண்பாட்டில் அறவே கிடையாது! ஆனால் நம் நாட்டிலோ இமயம் முதல் குமரி வரை அன்ன சத்திரங்கள் ஆயிரம் ஆயிரம். அதாவது Free Boarding and Lodging ( போர்டிங் அண்ட் லாட்ஜிங் ப்ரீ)! சாப்பாடும் தங்கும் இடமும் இலவசம். உலகில் எங்கும் இல்லாப் புதுமை. ஆரியர்கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கும் அம்சம்.

இது ஏன் வெளி நாட்டில் இல்லை?  இமயம் முதல் குமரி வரை குறைந்தது 2500 ஆண்டுகளுக்காவது உளதே? என்றால் பேந்தப் பேந்த முழிப்பர். இது இந்தியாவில் வந்தவுடன் அவர்கள் உருவாக்கியது என்று சொல்லி பூசி மெழுகுவர்; அதாவது கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதை! அவர்களை எல்லாம் மறந்துவிட்டு இந்த அற்புதமான கருத்தை சீதையும் கண்ணகியும் தன் வாக்கில் சொல்லி மகிழ்வதை மீண்டும் நினைவு கொள்வோம்.

My Old Articles on the Hospitality

உண்டி கொடுத்தோர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/உண்டி-கொடுத்தோ…

 

Written by London swaminathan. Date: 7 APRIL 2017. Time uploaded in London:- 14-55. Post No. 3796. Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com. விருந்தோம்பல் என்னும் …

மணிமேகலை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மணிமேகலை/

 

விருந்தோம்பல், தேவதானம், புலவரை ஆதரித்தல் என்பது வேறு. சமூக சேவை என்பது வேறு. தண்ணீர் பந்தல் கதைகளும் மணிமேகலை சிறைச் …

 

—subham–

‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’- ஞான சம்பந்தர் உறுதி மொழி (Post No.4000)

Thank you for reading our 4000 posts!

‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’- ஞான சம்பந்தர் உறுதி மொழி (Post No.4000)

 

Written by London Swaminathan
Date: 14 June 2017
Time uploaded in London- 11-02 am
Post No. 4000
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

நம்முடைய முன்னோர்கள், தெய்வத்தின் மூலமாக, பெரிய நம்பிக்கை உணர்வை ஊட்டினர். வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பது நாம் அறிந்ததே; கோடீஸ்வர்களுக்கும் மனத்துயரம் உண்டு; பயம் உண்டு; உடல் உபாதைகளும் உண்டு; சாலையில் வசிக்கும் ஏழைகளுக்கும் இன்பம் உண்டு. எல்லோரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று உறுதிபடக் கூறுகிறார் திருஞான சம்பந்தர். இதை அவர் சொன்னபோது அவருக்கு 16 வயத்துக்கும் குறைவு. இறைவனின் உரையை தனதுரையாக வழங்கியவர் சம்பந்தர். ஆகையால்தான் அதை நாம் வேத வாக்கியம் என்கிறோம்; தமிழ் மறை என்கிறோம்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
 

 

சமயச் சொற்பொழிவாற்றுவோர் எல்லோரும் “லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து” என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி முடிப்பர். நல்ல மழை பெய்யட்டும்; நாடு செழிக்கட்டும்;

Thank you for supporting my two blogs

உயிரினங்கள் எல்லாம் சுகமாக வாழட்டும்; அரசர்கள் நன்முறையில் ஆட்சி செய்யட்டும்; உலகம் முழுதும் — மக்கள் யாவரும் – வாழ்க வளமுடன்! – என்று சொல்லி முடிப்பர். என்ன அருமையான சிந்தனை.

 

 

உலகில் காக்கை, குருவி, பசு, நாய் போன்ற ஏனைய உயிரினங்களுக்கும் சேர்ந்து பிரார்த்தனை செய்வர் இந்துக்கள்!

மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல்

முறைசெயும் அரசர் திங்கள் மும்மழை வாழி மெய்மை

இறையவனிராமன்   வாழி இக்கதை கேட்போர் வாழி

அறைபுகழ்ச் சடையன் வாழி அரும்புகழ் ராமன் வாழி

–யுத்தகாண்டம், விடைகொடுத்த வாழ்த்து

 

இந்து மதம் விஞ்ஞான முறையில் அமைந்த மதம்; பாம்புகளும், வாழ்ந்தால்தான் எலிகள் குறையும்; அறுவடை பெருகும் என்ற அறிவியல் உண்மை அவர்களுக்குத் தெரியும் ஆதலால் அதற்கு நாக பூஜையும் செய்வர்; அதையும் தினமும் வாழ்த்துவர்.

கம்பன் ஆறு காண்டங்களிலும் இக்கருத்தைப் பல முறை பாடியிருப்பதால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இதற்கு முன்னரே சம்பந்தர் (வாழ்க அந்தணர்

…), அதற்கும் முன்னரே இளங்கோ (சில ப்பதிகாரம்), ஓரம் போகியார் (ஐங்குறு நூறு) ஆகியோர் இவ்வாறு பாடியுள்ளனர்.

 

இதைத்தான் கம்பனும் சொல்லி வைத்தான்; இது பேரறிஞர் வையாபுரிப்பிள்ளை, கம்ப ராமாயண ஏட்டுப் பிரதிகளில் இருக்கிது; ஆனால் அச்சுப்பதிப்பில் இல்லை என்று காட்டிய பாடல் (காண்க- தமிழ் சுடர் மணிகள்)

Thank you all for your four million hits!

தொல்காப்பியர் அவரவர் குலதெய்வம் காப்பாற்றும் வாழ்த்து ஒன்றைத் தொல்காப்பிய பொருளாதிகாரத்தில் பாடுவார்:

 

‘வழிபடு தெய்வம் நின் புறங்காப்பப்
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து,
பொலிமின்’ என்னும் புறநிலை வாழ்த்தே;
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ

-1367, பொருள் அதிகாரம்

 

“வழிபடும் தெய்வம் உன்னைக்  காப்பாற்றட்டும்;  நிறைய செல்வத்துடன் இன்பமாக வாழ்வாயாக! – என்பது இதன் பொருள்.

 

‘ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செயல் வேண்டும்’ என்பது வள்ளலாரின் வேண்டு கோள்.

 

“நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”- என்பது திருமூலரின் ஆசை.

 

‘இன்பம் இடயறாது ஈண்டும்’ (குறள் 369)

‘மன்னுயிர்க்கெல்லாம் இனிது’ (குறள் 68) என்பது வள்ளுவன் வாழ்த்து. எல்லா உயிர்களும் என்பது இந்து சிந்தனை; வேறு எங்கும் காண முடியாது.

 

“இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால்” என்பது பாரதியின் உறுதி.

 

“இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”  என்பது அப்பர் பெருமான் அடித்துக் கூறும் உண்மை.

 

இப்படி எங்கு நோக்கினும் “எல்லோரும் வாழ்க, இனிதாக வாழ்க” என்று தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.

 

 

உங்கள் ஆதரவினால்  4000 கட்டுரைகளை இந்த பிளாக்குகளில் ஏற்ற முடிந்தது! அனைவருக்கும் நன்றி.

எல்லோரும் வாழ்க; இனிதே வாழ்க!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! நன்றி.

 

–Subham–

புருஷ மேத யாகத்தில் 184 மனிதர்களை பலியிட்டார்களா? (Post No.3998)

Research Article Written by London Swaminathan
Date: 13 June 2017
Time uploaded in London- 21-09
Post No. 3998
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

அஸ்வ மேத யாகத்தில் ஒரு குதிரை பலியிடப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். இதை நாம் அப்படியே எடுத்துக்கொண்டு நம்பினாலும் இதுவரை அஸ்வமேத யாகம் செய்த வரலாற்று அரசர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இதிஹாச புராண புருஷர்களையும் சேர்த்தாலும் வெள்ளைக்காரர்களும் முஸ்லீம்களும் நாள்தோறும் கொல்லும் கோடிக்கணக்கான மிருகங்களைப் பார்க்கையில் இது கால் தூசுக்கு சமம். அதுமட்டுமல்ல அவர்கள் மாடுகள், கோழிகளைச் செய்யும் சித்திரவதைப் படங்களைப் பார்த்து, அழுதுவிட்டு, வெஜிட்டேரியன்களாக மாறிய வெள்ளைக்காரச் சிறுவர்கள் ஏராளம். இவர்கள் ஏன் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது எவருக்கும் விளங்காது. நிற்க.

 

 

அஸ்வமேத யாகத்தில் 200 வெவ்வேறு வகையான உயிரினங்களை   பலியிட்டதாகச் சொல்லுவர். ஆனால் வேடிக்கை என்னவென்றால் அதற்கான ஆதாரம் ஏதுமில்லை. மேலும் அந்த உயிரினங்களின் பட்டியலில் பாதிப்பெயர்களுக்கு அர்த்தமே விளங்கவில்ல!. இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம் என்று ஒரு ஊகத்தில் மொழி பெயர்த்து எழுதியுள்ளனர்.

 

 

ஆனால் அக நானுற்றுச் செய்யுள் ஒன்றில் வேள்விக்  குண்ட ஆமை ஒன்று ஊர்ந்து வந்ததை ஒரு பாட்டில் காணும் போது அவர்கள் , பல உயிரினங்களை அடையாளபூர்வமாக ஒரு கம்பத்தில் கட்டிவிட்டு அவிழ்த்து விட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

 

மேலும் யஜூர் வேதத்தில் ‘நெல்’லை மாமிசத்துக்குப் பதிலாகப் பயன்படுத்திய செய்தியும் உளது.

 

 

எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதி வெளியிட்ட யஜூர்வேதக் கதைகள் என்ற நூலில் கீழ்கண்ட கதை உளது:-

“ஆதியிலே யக்ஞம் செய்யுங்கால்

மனிதனை பலியயளிக்க தேவர்கள் நினைத்தார்கள்.  அவனை எண்ணியவுடன் அவனிடமிருந்த யக்ஞசாரம் சென்றுவிட்டது. உடனே ஒவ்வொரு மிருககங்களாக எல்லா மிருகங்களையும் அளிக்க எண்ணியவுடன்  அவைகளிடமிருந்து  யக்ஞசாரம் எல்லாம் சென்றுவிட்டன. எங்கு சென்றன என்று தேடியபோது அவை பூமியிலே சென்று மறைந்துவிட்டன. பூமியிலிருந்து எடுத்தவுடன் அது நெல் தானியமாயிற்று. இந்த நெல் தானியத்தை அளிப்பதே மிருக பலி அளிப்பது போலாகும் என்று ரிஷி ஒருவர் சொல்லியதற்கு அது எப்படியாகும்? என்று சீடன் ஒருவன் வினவினான்.

 

அதற்கு ரிஷி பதில் அளித்ததாவது:-

அதன் நுணுக்குகள் ரோமம் போலாகும். சலத்துடன் கலந்தால் அது மாமிசம் போலாகும். சுட்டால் அது எலும்பாகும்.  நெருப்பிலிருந்து எடுத்து நெய்யுடன் கலந்தால் தாது போலாகும்” (1-2-3-7-9)

இந்தக் கதையைப் பார்க்கையில் வேத காலத்திலேயே நெல் தானியத்தைப் “பலி” கொடுத்து ஒவ்வொரு பிராணியையும் பலியிட்டதாக எண்ணினர் போலும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இதே போல புருஷமேத யக்ஞத்தில் 184 தொழில் செய்வோர் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோரை அடையாளம் கூடக் காண முடியவில்லை.

 

ஆயிரக்கணக்கிலுள்ள இந்து சமய நூல்களில் அரிச்சந்திரன்   மகன்  ஒருவனைப் பற்றி மட்டுமே புருஷ மேதம் தொடர்பான செய்தி உளது. அதிலும் கூட அவனை விஸ்வாமித்ரர் கூட்டிச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆக புருஷமேத யாகத்தில் எவரும் பலியிட்டதாக எழுத்தில் கூட இல்லை. ஆனால் உலகில் போரில் பலியிடுவோரின், பலி இடப்படுவோரின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இதைப் பறேறி வெளிநாட்டினர் எழுத நியாயமே இல்லை.

வாஜசயனேயி சம்ஹிதையில் அத்தியாயம் 36 முதல் 40 வரை பல புதுவகை யக்ஞங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இந்தப் புருஷமேதம்.

 

உலகில் கோண்டு (Khonds) இனப் பழங்குடி மக்கள், கெல்த் (Celt) இன மக்கள், எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், அஸ்தெக் (Aztec) நாகரீக மக்கள் எல்லோரும் உண்மையிலேயே மக்களைப் பலியிட்டதை விரிவாக எழுதி வைத்துள்ளனர். அப்படிப்பட்ட எந்த வருண னையும் நம் நாட்டிலுள்ள பல்லாயிரக் கணக்கா சமய நூல்களில் இல்லை. இது ஒரு பெரிய வித்தியாசம். இதுவே நமது கலாசாரம் பழங்காலத்தில்     மற்றவர்களை விட  எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தது என்பதைக் காட்டுகிறது. அஸ்வமேத யாகப் பட்டியலில் உள்ள 200-க்கும் மேலான உயிரினங்கள், புருஷ மேத யாகத்திலுள்ள 184 வகையான மனிதர்கள் — இவை எல்லாம் வெளிநாட்டுக் காரர்களுக்கு விளங்கவே இல்லை. யாகத்தில் பலியிடுவோர் பட்டியலில் குஷ்டரோகி முதலிய வியாதிக்காரர்களும் சேர்க்கப் பட்டிருப்பதால் அவர்கள் பலியிடப் படவில்லை; அவர்கள் எல்லோரும் நலம்பெற வேண்டுவதே புருஷ மேத யாகம் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். யஜூர் வேதத்தில் ஒரு அத்தியாயம் முழுதும் புருஷமேதம் பற்றி இருக்கிறது. ஆனால் எவராலும் வாயே திறக்க முடியவில்லை!

Article related to this topic:-

தித்தியம், ஆமை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தித்தியம்-ஆமை/

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). அகநானூற்றுப் பாடல் 361ல், வேள்விக் குண்ட ஆமை (தித்தியம் ஆமை ) பற்றி சொல்லப்படுகிறதே; …

 

 

–சுபம்—

 

 

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி (Post No.3995)

Written by London Swaminathan
Date: 12 June 2017
Time uploaded in London- 20-12
Post No. 3995
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

நம்மில் பலருக்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணம் நமது பேச்சுதான். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ (நுணல்= தவளை) என்பது போல எதையாவது பேஸ்புக் ( Facebook) -கிலோ,  ஈ மெயி (E mail) லிலோ, கட்டுரையிலோ எழுதி வைப்போம்; அல்லது வீட்டில் மனைவியிடம் ஏதாவது திட்டி வைப்போம்; அதுவுமில்லாவிடில் அலுவலகத்தில் வேண்டாத உரையாடலில் ஈடுபட்டு அதிகாரியைப் பற்றி ஏதாவது சொல்லி இருப்போம். அதை அதிகாரியிடம் போய்ச் சொல்லிக் கொடுத்து பதவி உயர்வு பெறவும் சலுகைகளைப் பெறவும் ஒரு கும்பல் இருக்கும்.

 

 

இப்படி எல்லாம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்கத்தான் வள்ளுவன்  ‘யாகாவாராயினும் நா காக்க’ என்று சொல்லி வைத்தான். ஆனால் அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? நம்மால், சாப்பாட்டு விஷயத்திலும் நாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை; பேச்சு விஷயத்திலும் நாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

இப்படிக் கட்டுபடுத்த முடியாதவர்களுக்கு ஒரு நல்ல வழியையும் ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர். பேசாமல் மவுனமாக இருக்கப் பழகிக்கொள் என்று

 

மௌனமாக இருந்துவிட்டால் அங்கு சண்டை , சச்சரவுகள், தகராறுகள் கலகங்கள் வெடிக்காது.

 

உற்றதொழில் செய்வோர்க் குறுபஞ்ச மில்லையாம்

பற்று செபத் தோர்க்கில்லை பாவங்கள் — முற்றும்

மவுனத்தோர்க்  கில்லை வருகலகம் துஞ்சாப்

பவனத்தோர்க்  கில்லை பயம்

–நீதி வெண்பா செய்யுள்

 

தமக்கேற்ற தொழிலைச் செய்வோருக்கு பணப் பற்றாக்குறை வராது;

அன்போடு வழிபடுவோருக்கு கர்ம வினை என்பது ஒட்டாது;

சிறிதும் பேசாமல் மவுனத்தைக் கடைப்பிடிப்போருக்கு தகராறு, கலகம் என்பதே கிடையாது;

துஞ்சுதல் (உறங்குதல்) இல்லாத தேவர்களுக்கு  பயம் என்பதே இல்லை. (கண்ணை மூடினால்தானே பயம்!)

மவுனம் பற்றிய இதே கருத்து சாணக்கிய நீதியிலும் வேறு பல நூல்களிலும் உளது. இதோ சில பொன் மொழிகள்:-

 

மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)

xxxx

 

மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45

பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

 

xxx

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9

மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.

xxx

 

வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.

பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.

 

My old articles on Silence:

மௌனம் சம்மதத்துக்கு சமம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/மௌனம்-சம்மதத்துக…

Article No.1734; Date:- 20th March, 2015. Written by London swaminathan. Uploaded at London time 9-04 am. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி, பழி ஓரிடம் பாவம் வேறிடம்.

மௌனம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மௌனம்/

மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள் … மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா).

 

–Subham–

தேன் நிலவு- சுவையான Honeymoon ஹனீமூன் சம்பவங்கள் (Post No.3986)

Written by London Swaminathan

 

Date: 9 June 2017

 

Time uploaded in London- 15-45

 

Post No. 3986

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஹனீமூன் — தேன் நிலவு — பற்றிய உண்மைச் சம்பவங்கள்; எட்டுக்கட்டியதல்ல– மொழி பெயர்த்தவர் சுவாமி நாதன்.

 

காரி க்ராண்ட் (Cary Grant) என்பவர் பார்பரா ஹுட்டன் (Barbara Hutton) என்ற பெண்மணியை மணந்துகொண்டார். தேன் நிலவுக்குப் போக முடியவில்லை. காரணம்–

முன் ஒரு காலத்தில் தேன் நிலவு (Once upon a Honeymoon) – என்ற படத்துக்காக அவர் அதே இடத்தில் இருக்க வேண்டியதாயிற்று; என்ன விந்தை? ஹனீமூனே ஹனீமூனை கெடுத்துவிட்டது!

xxxx

 

ஸ்நேக் சார்மர்! Snake Charmer

திடீர்க் காதல் — இருவரிடையே! நீண்ட நாள் கல்யாணம் தாமதமாகியது; பிறகு ஓடிப்போய்தான் திருமணம் செய்ய நேரிட்டது. இதெல்லாம் முடிந்து ஹனீமூனுக்குப் போனபோது தனது காதலி ஒர் பாம்பாட்டி (Snake Charmer) என்பது தெரிய வந்தது.

அடிக் கள்ளீ! இவ்வளவு காலமாகக் காதலித்தோம்; ஒரு நாளும் நீ பாம்புப் பிடாரி என்பதைச் சொல்லவில்லையே என்று கோபமும் கொஞ்சலும் கலந்த தொனியில் கணவன் கேட்டான்.

அட, நீங்க ஒண்ணு; நீங்களாவது நான் பாம்பாட்டியா என்று கேட்டிருக்கக் கூடாதா? என்றாள் அந்த மேதாவி!

 

XXX

ஹனீ, ஓ, ஹனீ! கதவைத் திற;

 

புது மணத் தம்பதியர் புதிய நாட்டில் புதிய நகரத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு ஹோட்டலில் தங்கினர். சில நாட்களில் நல்ல பழகிப் போனவுடம் அந்த இளம் பெண் மதிய வேளையில் சாமான்கள் வாங்க கடைத் தெருவுக்குப் போனாள்; கணவன், அவள் எப்படித் திரும்பி வரவேண்டும், எப்படி லிப்டி(Lift)லிருந்து இறங்கி எந்தப் பக்கம் திரும்பி எத்தனையாவது அறைக்கு வரவேண்டும் என்றெல்லாம் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தான்.

அப்பெண்ணும் “அத்தான்! கவலையை விடுங்கள் அரை மணி நேரத்தில் அறைக்குத் திரும்புவேன்” என்று பகர்ந்து வெளியே போனாள்.

ஹோட்டலுக்கு அரை மணி நேரத்தில் சாமான்களுடன் திரும்பியும் வந்தாள். லிப்டில் பலர், பல மாடிகளில் இறங்க வெவ்வேறு பட்டன்களை அமுக்கினர். இந்தப் பெண தவறான மாடியில் தனது மாடி என்று நினைத்து வெளியே வந்து விட்டாள். கணவன் சொன்ன கட்டளைகளை  அப்படியே பின்பற்றி தனது அறை என்று அவள் தப்புக் கணக்குப் போட்ட அறையின் கதவுக்கு வந்தாள்.

புது மணப் பெண் அல்லவா?

குனிந்த தலை நிமிரவில்லை!

கொஞ்சும் குரலில், “அத்தான்! அத்தான்!! கதவைத் திறங்கள்; நான் தான்!”– என்றாள். கதவு திறக்கவில்லை!

 

சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு மீண்டும் “அத்தான்! அத்தான்!! கதவைத் திறங்கள்; நான் தான்!”– என்று உரத்த குரலில் கூவினாள்.

உள்ளே இருந்து கோப த்வனியில் கர்ண கடூரமாக ஒரு குரல் ஒலித்தது:

 

“அத்தானும் இல்லை; குழம்புத் தானும் இல்லை! இது சமையல் அறையும் இல்லை; இது பாத் ரூம் (குளியல் அறை)”.

 

அந்தப் பெண் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிப் போய் தனது சரியான   அறையைக் கண்டுபிடித்தாள்

XXX

டிக்கெட்டை எடுத்துக்கிட்டீங்களா?

கல்யாணம் என்றாலே மப்பிள்ளைகளுக்குப் பெண்களை விடக் கொஞ்சம்   கூடுதல் உதறல்தான்; ஏனெனில் பெண்ணுக்குத் தோழிகளும், அம்மா  மார்களும் மற்ற உறவுப் பெண்களும் எல்லாவற்றையும்   செய்து கொடுத்துவிடுவர்.

அப்பாவி ஆண்மகனுக்கோ எவரும் உதவவும் மாட்டார்; அந்தப் பிள்ளையாண்டானுக்கு சகோதரனிடம் கேட்கக்கூட வெட்கம். இந்த சூழ் நிலையில் ஒரு இளம் தம்பதியினரின் கல்யாணம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

மறு நாள், காரில் ஏற்றி ஸ்டேஷனில் இறக்கிவிட எல்லோரும் வந்தனர். ஸ்டேஷனில் ரயில் வரப்போகும் அறிவிப்பும் வந்தது.

 

புதுமணப் பெண் வெட்கத்தோடு, என்னங்க, என்னங்க, அத்தான்; உங்களைத்தான், டிக்கெட்டெல்லாம் எடுத்து வச்சீங்களா பைக்குள்ள?

 

மாப்பிள்ளைக்கு ‘பகீர்’ என்றது. வேக மாக கால் சட்டைப்பைக்குள் கையை விட்டான்; ஒரு டிக்கெட் (Only one Ticket) மட்டும் வெளியே எட்டிப் பார்த்தது.

அதை “அவளும் நோக்கினாள்; அண்ணலும் நோக்கினான்  ”

என்ன பதில்சொல்ல என்று திணறிப் போனான் மாப்பிள்ளைப் பையன்.

 

நல்ல வேளை! நிறைய தமிழ் சினிமா பார்த்து இருந்ததால் தக்க வசனம் வாயில் வந்தது!

 

“தேனே! மானே! கண்ணே! கற்கண்டே!

உன்னைப் பார்த்த நாள் முதல், நான் என்னையே மறந்து விட்டேன்; இதோ உன் டிக்கெட்” என்று கையில் கொடுத்தான்”.

 

சினிமா வசனம் பேசினாலும் முகத்தில் அசடு வழிந்தது!

“போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட” என்று வீட்டுக்குத் திரும்பி வந்தனர்!

 

–சுபம்–

பகுத்தறிவாளர்களுக்கு சவால்! (Post No.3966)

Written by S NAGARAJAN

 

Date: 3 June 2017

 

Time uploaded in London:-  6-29  am

 

 

Post No.3966

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருக்குறள் மர்மம்

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

 

ச.நாகராஜன்

 

 

வள்ளுவர் தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கையாளும் மஹாகவி. மஹரிஷி.

 

அவரது குறளில் பகுத்தறிவு என்ற ஒரு அறிவைப் பற்றிச் சொல்லவே இல்லை.

பகுத்து என்ற வார்த்தை,

 

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)

 

என்ற ஒரே ஒரு குறளில் மட்டுமே வருகிறது. பகுத்து உண் என்பதில் மட்டுமே பகுத்து என்ற வார்த்தை வருகிறது.

பகுத்தறிவு என்பதைச் சொல்லாத வள்ளுவர் அறிவை அற்புதமாக மூன்று விதமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

கார் அறிவு (குறள் 287)

களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார் கண் இல்

 

இங்கு கார் அறிவு என்பது குறுமதி அல்லது இருண்ட அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது.

ஆக அறிவில் கீழ்த்தரமான கீழ் மக்களது அறிவு கார் அறிவு.

அடுத்து பேரறிவு (குறள் 215)

 

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு

 

பொது சேவையில் ஈடுபடும் ஒருவனது பேரறிவை இக்குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

ஆக கார் அறிவு மற்றும் பேரறிவைச் சொல்லிய வள்ளுவர் இன்னொரு அறிவைச் சொல்கிறார்.

வால் அறிவு (குறள் 2)

 

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

 

வால் அறிவு இறைவனது அறிவு. தூய அறிவு.

ஆக இப்படி கார் அறிவு, பேரறிவு, வாலறிவு ஆக மூன்று விதமாக நுண்ணறிவைப் பிரிக்கிறார் வள்ளுவர்.

பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு புது வித இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைப் படிக்க ஆர்வப்படலாமா?

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.

 

எடுத்துக்காட்டிற்காக சில குறள்களை மட்டும் கீழே காணலாம்:

  • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.

கேள்வி: பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர். அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும்? உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா? யாருமே பெய் என்று சொல்லி மழை பெய்ததைப் பார்க்க முடியவில்லையே!

  • வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ர் என்று (குறள் 1317)

3) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று (குறள் 1318)

 

தும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம்? காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா?

 

  • அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொற்த்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

சிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆயிரக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறார். முதலாளி அமர்கிறான்.

இது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். எங்கள் பகுத்தறிவுக்கு இது ஒத்ததல்ல.

  • மலர்மிசை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3) நீண்ட ஆயுளுக்கும் இறைவனுக்கும் என்ன சம்ப்ந்தம்?
  • கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

கொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்?

  • மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

எந்நோற்றான் கொல் எனும் சொல்

தந்தை நோன்புக்கும் மகனுக்கும் என்ன தொடர்பு? அவனவன் வாய்ப்பு, அறிவு, பணம் போன்றவற்றிற்குத் தக முன்னேறுகிறான். தந்தை உதவி செய்யாவிட்டாலும் கூட பலர் முன்னேறவில்லையா, என்ன?

  • ஊழிற் பெருவலி யா உள? மற்றொன்று

சூழினும் தான் முந்துறும் (குறள் 380)

விதி எப்படியும் தான் செய்வதைச் செய்தே தீரும் என்பது பொருந்தாத ஒன்று.

விதியின் மீதே பகுத்தறிவாளருக்கு நம்பிக்கை இல்லை. ஆக வள்ளுவரின் இந்தக் குறள் பகுத்தறிவுக்குப் பொருந்துமா?

  • ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398)

இந்தப் பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறவிகளில் பயன் தரும்.

மனிதனுக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு. அதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டியது தான். எங்கிருந்து வந்தது ஏழு பிறவி? இது இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாதே. அவர்கள் ஒரு பிறவி நம்பிக்கை உடையவர்கள் அல்லவா? ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

 

 

இப்படிப் பல குறள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐயன் வள்ளுவனுக்கு விழா எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு விழாவைத் தவறாமல் எடுத்துக் கொள்ளும் பகுத்தறிவுத் தலைவருக்கும் அவரது அன்புத் தம்பிகளுக்கும் இந்த வள்ளுவர் சரிப்பட்டு வருவாரா?

ஒன்று தங்கத் தம்பிகள் தவறாக வழி சொல்லும் தலைவனைக் கைவிட வேண்டும். அல்லது வள்ளுவரைக் கைவிட வேண்டும்.

 

 

சற்று சிந்தித்தால் ஒரே ஒரு விஷயம் புலப்படும்.

வள்ளுவரின் குறள்கள் ஆழ்ந்த தத்துவங்களின் அடிப்படையில் எழுந்தவை. காலம் காலமாக நிற்பவை. காலத்தை வென்றும் நிலைப்பவை.

 

எளிதில் மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படும் பொருளுக்கும் அப்பாற்பட்டு ஆழ்ந்த உட்கருத்தைக் கொண்டவை.

 

அதனால் தான் வேதங்களுக்குச் சொல்லப்படும் புகழ்மொழியான மறை என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தமிழில் இருப்பதால் தமிழ் மறை.

 

 

அதி மானுடவியல் என்னும் சைக்கிக், அதற்கும அப்பாற்ப்ட்ட வால் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இவற்றின் உட்பொருளை ஒருவர் அறிய முடியும்.

புண்ணிய பாவங்கள் பிறப்பைத் தரும்.

 

அதற்கேற்ப இன்றைய வாழ்வு அமையும்.

நல்லதைச் செய்து நல்ல பிறவியை எடு.

பின்னர் பிறவிச் சுழலிலிருந்து இறைவனை வேண்டி அவன் அருள் பெற்று விடுபடு.

 

கற்பில் சிறந்தவள் கடவுளே. அவள் ஆணைக்கு பஞ்ச பூதங்களும் அடி பணியும்.

 

நோன்பு அல்லது தவம் செய்தால் நன் மக்களைப் பெறலாம்.

எண்ணம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் நினைக்கும் போது அதே லயத்தைக் கொண்டவர்க்கு எண்ண சக்தியின் ஓட்டம் தெரியும்.

 

இப்படி அதிமானுடவியல், ஹிந்து தத்துவம், சாஸ்திரங்கள் அல்லது அறநூல்களின் அடிப்படையில் மட்டுமே வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய பகுத்தறிவின் அடிப்படைக்கு அப்பாற்பட்டவர் வள்ளுவர்.

 

 

தமிழ் மக்கள் செய்த தவத்தால் வந்தவர் வள்ளுவ.ர்

கார் அறிவை (இன்றைய பகுத்தறிவு) விட்டு விட்டு பேரறிவை ஈட்டி, அடைந்து, வாலறிவனை அறியும் முயற்சியில் ஈடுபடும் போது வள்ளுவம் புரியும்; வாழ்க்கையும் சிறக்கும்!

****

 

 

 

 

சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு (Post No.3964)

 

Research ArticleWritten by London Swaminathan

 

Date: 2 June 2017

 

Time uploaded in London- 8-40 am

 

Post No. 3964

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

(I wrote this for ‘Soundaryam’ published by Hindu Tamil Cultural Association, Enfield,London)

 

“ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்

கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—

வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,

ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

(வேட்டுவ வரி, சிலப்பதிகாரம்)

 

செந்தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” — என்று பாரதியாரால் போற்றப்பட்ட அற்புத காவியம். பழந்தமிழ் நாட்டில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நாநிலப் பிரிவுகளுக்கு முறையே விஷ்ணு,முருகன், இந்திரன், வருணன் தெய்வங்களாக இருந்ததை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” எழுதிய தொல்காப்பிய சூத்திரம் மூலம் அறிகிறோம்:

மாயோன் மேய காடுறை யுலகமுஞ்

சேயோன் மேய மைவரை யுலகமும்

வேந்தன் மேய தீம்புன லுலகமும்

வருணன் மேய பெருமணலுலகமும்

முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

(தொல். பொருள். 1-5)

 

இந்த நாநிலம் அதன் நிலை திரிந்து வறண்டு போனால் அது பாலை நிலம் எனப்படும். அதற்கான தெய்வம் கொற்றவை என்னும் ‘தேவி’யாகும். சம்ஸ்கிருதத்தில் கொற்றவையை ‘துர்கா’ என்று அழைப்போம். கொற்றவை வழிபாடு குறித்து பல சுவையான தகவல்களை, நமக்கு, இளங்கோ அடிகள் யாத்த, சிலப்பதிகாரம் தருகிறது. அவை இன்று வழக்கற்றுப் போனது மேலும் வியப்பை ஏற்படுத்தும்.

 

தற்போதுள்ள உலக மதங்களில் இந்து மதம் ஒன்றில் மட்டுமே கடவுளைப் பெண் வடிவத்திலும் வணங்குகிறோம். அந்த அளவுக்குப் பெண்களுக்கு உயர்நிலை கொடுக்கப்பட்டது. சங்க காலம் முதல் இந்தக் கொற்றவை எனும் பெண் தெய்வம் (முருகு.368, பெரும்.583, நெடு.192) வழிபாடு இருப்பதற்குப் பல சான்றுகள் உள. இக்கட்டுரையில் சிலப்பதிகாரக் குறிப்புகளை மட்டும் காண்போம்:

மான் வாகனம்

துர்கைக்கு/ கொற்றவைக்கு மான் வாகனம் என்ற குறிப்பு சிலம்பில் வருகிறது. பிற்காலத்தில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரும் மான் வாகன தேவி பற்றி (கலையதூர்தி) என்று பாடுகிறார். ஆனால் சிங்கத்தின் மீதும், புலியின் மீதும் காட்சி தரும் தற்கால துர்கை, மான் வாகனத்தில் அமர்ந்த கட்சி எங்கேயும் காணக் கிடைக்கவில்லை; அதாவது சிலையிலோ, படத்திலோ இல்லை! இது ஒரு வியப்பான செய்தி. இளங்கோ பாடிய சிலம்பிலிருந்து, சம்பந்தர் பாடிய தேவாரம் வரை காணப்படும் கொற்றவையின் மான்  வாகன ‘’போஸ்’’ நமக்குக் கிடைத்தில.

 

பாலைவனத்தில் வாழ்வோர் மறவர்கள் ஆவர். அவர்கள் கொலைக்கும் அஞ்சாத வீரர்கள். பாலைவனம் வழியாகக் கடந்து செல்லும் வணிகர், தூதர் முதலியோரைத் தாக்கி, அவர்களைக் கொன்று, பொருள்களை வவ்வுவதே பாலை நில மக்களின் தொழில். தாங்கள் கொன்ற மிருகங்களை கொற்றவைக்குப் படைப்பதும் இவர்கள் வழக்கமாகும்.

சிலப்பதிகாரத்தில் ஐயை, கார்த்திகை என்ற பெயர்களுடைய பெண்களும் காட்சி தருகின்றனர். அவை துர்க்கையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,

மையறு சிறப்பின் வான நாடி

ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்”

(காடுகாண் காதை, சிலம்பு)

 

இதைத் தொடர்ந்துவரும் வேட்டுவ வரிப் பாடல் முழுதும் கொற்றவை வருணனை வருகிறது.

கொற்றவை கோவிலில் சாலினி வெறியாடியதை (சாமி ஆடல்)  எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். கலையமர் செல்விக்கு பலிதந்தால்தான் நன்மைகள் விளையும் என்று அவள் சாமி ஆடுகையில் முழங்குகிறாள். இதோ இளங்கோவின் வரிகள்:

 

“கலையமர் செல்வி கடன் உணின் அல்லது

சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்;

மட்டு உண் வாழ்க்கை வேண்டுதீர் ஆயின்

கட்டு உண் மாக்கள்! கடம் தரும் என் ஆங்கு”

(கலை= மான்)

பெண்ணுக்கு கொற்றவை வேஷம்

இன்னொரு விநோத வழக்கத்தையும் சிலம்பு பாடுகிறது. அதாவது ஒரு சிறு பெண்ணை கொற்றவை போல அலங்கரித்து மான் வாஹனத்தில் ஏற்றி ஊர்வலம் விட்டு வணங்கியதையும் இளங்கோ சொல்லுகிறார். சங்க காலத்தில் நடந்த இக்கொற்றவை வழிபாடு இன்று எங்கும் காணக் கிடக்கில. நேபாள  நாட்டில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து “குமாரி” என்று தெய்வமாக வழிபடுவதை இன்றும் காணலாம்.

 

“பழங்குடிக் குமரியின் முடியை உயர்த்திப் பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் கொம்பை பிறைச் சந்திரன் போல அவளுக்கு அணிவித்தனர். புலிப்பல் தாலியை அணிவித்து புலித்தோலை ஆடையாகப் போர்த்தி, அவளை மான் மீது ஏற்றி ஊர்வலம் விட்டனர். அவள் கையில் கிளி, கோழி முதலியவற்றைக் கொடுத்து வழிபட்டனர். அவளைத் தொடர்ந்து பெண்கள் பலர், சோறு, எள்ளுருண்டை, நிணச் சோறு, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். பெரிய வாத்தியங்கள் முழங்கின. இது இளங்கோ அடிகள் நமக்கு அளிக்கும் செய்தி.

 

இதற்குப் பிறகு இளங்கோ அடிகள், துர்கையை மஹிஷாசுரமர்த்தனியாக வருணிக்கிறார். இன்றும் மாமல்லபுரத்தில் “எருமை அசுரனை” (மஹிச அசுரன்) தேவி, வதம் செய்த காட்சி, அருமையானச் சிலை வடிவில் காட்சிதருகிறது;

பல்லவர்கள் சிலை செய்வதற்கு முன்னரே இளங்கோ அடிகள் செய்யுள் வடிவில் ஓவியம் தீட்டிவிட்டார்:

 

“மதியின் வெண்தோடு சூடும் சென்னி

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்

பவள வாய்ச்சி, தவளவாள் நகைச்சி,

நஞ்சு உண்டு கறுத்த கண்டி, வெஞ்சினத்து

அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்

துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி,

வளியுடைக் கையில் சூலம் ஏந்தி

கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,

வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை!

இரண்டு வேறு உருவின் திரண்டதோள் அவுணன்

தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்

அமரி, குமரி, கவுரி, சமரி,

சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை

ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்

பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை;

ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை

தமர் தொழ வந்த குமரிக் கோலத்து

அமர் இளங்குமரியும் அருளினள்

வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே”

 

பொருள்: சந்திரப் பிறை சூடிய தலை; நெற்றிக் கண்; பவள வாய், முத்துச் சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பையே கயிறாகக் கொண்டு மேரு மலையை வில்லாக  வளைத்த வில்லி; துளை அமைந்த பல்லுடைய விஷப் பாம்பையே கச்சு ஆக அணிந்த முலையுடையாள்; வளைகள் அணிந்த கையில் சூலம், யானைத்தோல் போர்வை, புலித்தோல் மேகலை, இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, மகிஷாசுரன் தலையில் நிற்பவள்; எல்லோரும் தொழும்குமரி, கறுப்பி, போரின் அதிதேவதை, சூலம் ஏந்திய பெண்; நீல நிறத்தவள்; எம் தலைவி, செய்யவள், தடக் கையில் கொடிய வாளேந்திய நங்கை; பாயும் மான் மீது ஏறி வருபவள்; மலைமகள், கலைமகள், திருமகளின் உருவம்; இளங்குமரி; அவள் அருள் நமக்குக் கிடைத்துவிட்டது.

 

வழக்குரை காதையிலும் கண்ணகியின் தலைவிரி கோலத்தைக் கண்டவுடன், வாயிற்காப்போன், பாண்டிய மன்னனிடத்தில் சொல்லுகையில் வாசலில் வந்து நிற்கும் பெண் கொற்றவை அல்லள், காளி அல்லள், பிடாரி அல்லள் என்று பல பெண் தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லுகிறான். சங்க காலத்தில் பெண் தெய்வ வழிபாடு, குறிப்பாக கொற்றவை வழிபாடு, எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைக் காண முடிகிறது. புராணத்தில் வரும் மஹிஷாசுர மர்தனி, அர்த்தநாரி முதலிய கருத்துகளும் துர்கை என்பவள் சிவன், நாராயணன் எனும் வடிவத்தின் பெண் உரு என்ற கருத்தும் மூன்று தேவியரின் மாற்று உரு என்றும் கருத்து தொனிக்கும் அற்புத வரிகள் இவை. சங்க காலத்தில் ஒரே தெய்வம் என்ற கொள்கையை மக்கள் உணர்ந்த போதிலும் அவளைப் பல்வேறு வடிவங்களில் வழிபட முழ்டியும் என்பதை இளங்கோ சொல்லும் போது நாம் துர்கா அஷ்டோத்திரம் படிக்கும் உணர்வு ஏற்படும்!

 

மேலும், வேட்டுவ வரி முழுதும் கொற்றவை வழிபாடுதான்; படிக்கப்படிக்கக் கழிபேருவகை தரும்!

 

கண்ணகி, தனது கணவன் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டவுடன், அவள் வளையல்களை உடைத்தெரிகிறாள். இதுவும் கொற்றவை கோவிலில் நடந்த நிகழ்ச்சி.

 

சிலப்பதிகாரம் தவிர தமிழில் பல்வேறு கால கட்டங்களில் எழுந்த இலக்கியங்களில் கொற்றவைக்குப் பல பெயர்கள் காணப்படுகின்றன:

அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, ஆளியூர்தி, பாலைக் கிழத்தி, வீரச் செல்வி, மகிடற்செற்றாள், குமரி, கலையதூர்தி, கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசயை, அரியூர்தி, நாரணி, விந்தை, நீலி, காத்தியாயனி, சுந்தரி, யாமலை, சயமகள், மேதிச் சென்னி, மிதித்த மெல்லியல், கௌரி, ஐயை, பகவதி, கொற்றி, சக்கராயுதத்தி, மாலுக்கிளையநங்கை, சூலி, வீரி, சண்டிகை, கன்னி, கார்த்திகை, நாராயணி, தாருக விநாசினி

 

வாழ்க கொற்றவை / துர்க்கை புகழ்!

பெருகுக! தேவியின் அருள்!

எங்கும் மங்களம் பொங்குக!!!

 

-Subham-