புத்தாண்டு தினத்தன்று ஏழு கோவிலுக்குச் செல்லும் பிரிட்டிஷ் எம்.பி. (Post No.3115)

பிரிட்டிஷ் அமைச்சர் ப்ரீதி படேல்(Just outside the hall)

 

Written  by London Swaminathan

 

Date: 3  November 2016

 

Time uploaded in London: 6-30 AM

 

Post No.3315

 

 

Pictures are taken by London swaminathan.

 

 

பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ராபர்ட்சனும் பிளாக்மேனும்

 

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அக்டோபர் 26 புதன்கிழமையன்று பிரிட்டிஷ் ஹிந்து மன்றம் (Hindu Forum of Britain) தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியது. அதன் சிறப்பு அம்சங்களை மட்டும் சுருக்கி வரைகிறேன்.

 

பாப் பிளாக்மேன் (Bob Black man)  என்ற எம். பி பேசுகையில் ஆண்டுதோறும் புத்தாண்டு நாளன்று ஏழு கோவில்களுக்குச் சென்று வருவதாகவும் அடுத்த முறை எட்டு அல்லது ஒன்பது கோவில் போக திட்டமிட்டிருப்பதாகவும் கூறியவுடன் பலத்த கரஒலி எழுந்தது. காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு வாக்கில் புனித யாத்திரையை முடிக்கிறார் இந்த கிறிஸ்தவ இந்து!

 

அவரை அடுத்து ஸ்காட்லந்தில் மிகப் பெரிய கட்சியின் எம்.பி ஆங்கஸ் ராபர்ட்சன் பேசினார். “நான் உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இங்கிலாந்தை விட ஸ்காட்லாந்தில் இந்தக் குளிர் காலத்தில் இருட்டு அதிகம். நீங்கள் இந்துக்கள்; தீபாவளி மூலம் பிரகாசத்தைக் கொண்டு வருகிறீர்கள். ஸ்காட்லாந்திலோ அதிகம் இந்துக்கள் இல்லை. நீங்கள் பெருமளவில் வந்து எங்கள் பிராந்தியத்தில் வெளிச்சம் உண்டாக்குங்கள் என்றார். உடனே கர ஒலி மண்டபத்தின் கூரையைப் பிய்த்துக் கொண்டு சென்றது.

குஜராத்தி இனிப்புகள் (கூட்ட அறையில்)

 

காஷ்மீர் தினமும் இதே நாளன்று கொண்டாடப் பட்டதால் அதற்காக வந்திருந்த காஷ்மீர் மஹாராஜாவின் பேரன் தீபாவளித் திருநாளிலும் கலந்து கொண்டார். அவரது தாத்தா பெரிய தேசபக்தர் என்பதால் இந்தியாவுடன் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று உடன்படிக்கை செய்தார். அவருக்கும் மாலை போட்டு கவுரவித்தோம் ( நான் ஹிந்து போரத்தின் தேசிய கமிட்டி உறுப்பினர்)

 

புதிதாக பிரபுக்கள் சபைக்கு நியமிக்கப்பட்ட ஹிதேஷ் காதியா பேசுகையில் முதல் தடவையாக மஹாரணிக்கு முன்னிலையில் ரிக் வேதத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்ததாகவும் உலகின் மிகப் பழைய நூல் என்பதோடு ரிக் வேதத்தில் எல்லோருக்கும் பொருந்தும் அருமையான பாடல்கள் உள்ளன என்றும் சொன்னவுடன் அனைவரும் கைதட்டி அதை ஆமோதித்தனர்.

 

பிரதம மந்திரி தெரெசா மே, இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரியாவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதை பிளாக் மேன் வாசித்து அனைவரையும் மகிழ்வித்தார்.

 

மேலும் பல எம்.பி.க்களும் பிரபுக்களும் நல்லுரை ஆற்றினர். இராமன் அயோத்தி திரும்பிய நல்ல நாள் இது. இருளிலிருந்து வெளிச்சத்துக்கும் அறியாமையிலுலிருந்து ஞானத்துக்கும் செல்லும் நாள் இந்த தீபத் திருநாள் என்று குறிப்பிட்டனர்.

 

பிரிட்டிஷ் அமைச்சர் பிரீதி படேல் பேசுகையில் பிரிட்டிஷ் இந்துவாக இருப்பதிலும் அனைவருக்கும் சேவை செய்வதிலும் பெருமைப்படுவதாகக் கூறினார்.

பார்லிமெண்டின் மேல் மாடியில் தேம்ஸ் நதியை நோக்கிய ஹாலில் இக்கூட்டம் 300 பேருடன் நடந்தது. இன்னிசை நிகழ்ச்சியும் வயிற்றுக்குச் சிறிது உணவும் வழங்கப்பட்டது.

மன்றத்தின் தலைவி திருமதி திருப்தி படேலும் (President HFB), செயலர் செல்வி பன்னா வகாரியாவும் (Secretary General)  செம்மையான ஏற்பாடுகளைச் செய்து சிறப்பெய்தினர்.

சாயி பள்ளி மாணவிகள்

 

–சுபம்–

 

நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும்! (Post No.3305)

Written by S. NAGARAJAN

 

Date: 31 October 2016

 

Time uploaded in London: 5-35 AM

 

Post No.3305

 

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 3

 

நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் !

 

                        ச.நாகராஜன்

                            

எட்டுத் தொகை நூல்களை விளக்கும் பாடல் இது:

 

நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,                      ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,

கற்றறிந்தார் ஏத்தும் கலியே, அகம், புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை

 

நற்றிணை ஒன்பது முதல் பன்னிரெண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி. இதை நற்றிணை நானூறு என்றும் குறிப்பிடுவர்.

 

நற்றிணையின் கடவுள் வாழ்த்தை பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியுள்ளார். அதைப் பார்ப்போம்:

 

 

‘மா நிலம் சேவடி ஆக, தூ நீர்

வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,

விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,

பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,

இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய

வேத முதல்வன்’ – என்ப-

‘தீது அற விளங்கிய திகிரியோனே’

 

முதலில் பரம்பொருளின் திருவடியை நினைவு கூர்கிறார் பெரும் புலவர்.

பெரிய நிலப்பரப்பைத் தன் சிவந்த அடிகளாகக் கொண்ட்வன்; தூவுகின்ற அலை நீரினைக் கொண்டதும்,சங்கினம் ஆரவாரித்துக் கொண்டிருப்பதுமான கடலினையே  தன் இடுப்பில் உடுக்கையாக அணிந்திருப்பவ்ன, நீலவண்ண ஆகாயத்தினையே தன் திருமேனியாகக் கொண்டிருப்பவன், நான்கு திசைகளையே கைகளாகக் கொண்டிருப்பவன் பசுங்கதிர் நிலவையும் ஒளிக் கதிர் கொண்ட சூரியனையும் கண்களாகக் கொண்டிருப்பவன் இவ்வுலகில் உள்ள அனைத்திலும்பொருந்தி நின்றவன், அவற்றைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அநேகனாய் அதே சமயம் ஏகனாய் இருப்பவன், நான்மறைகளுக்கும் முதல்வனாக இருப்பவன், அந்தத் திருமால் இந்த நூலை உலகிடத்தே இனிது நிலைபெறச் செய்ய அருள்வானாக என்பதே இந்தப் பாடலின் பொருள்.

 

 

திருமாலை வேத முதல்வன் என்று குறிப்பிடுவதை உற்று நோக்கினால் சங்க இலக்கிய காலத்திற்கு முன்பிருந்தே திருமாலை வழிபடுதலும் வேதத்தைப் போற்றுதலும் தமிழகத்தில் நிலைபெற்றிருந்ததை உணர முடிகிறது.

 

ரிக், யஜுர், சாம, அதர்வண்ம் ஆகிய நான்கு வேதங்களே நான்மறை ஆகும்.

 

மறை என்பது இரகசியப் பொருளைக் கொண்டது என்பதை உணர்த்தும். மேலெழுந்தவாரியாக அர்த்தம் பார்க்கக் கூடாது என்பதே இதன் பொருள்.

 

சுருதி என்பதால் கேட்கப் படுவது என்ற அர்த்தத்தைத் தரும்,வேதம் என்பது வித் = அறிதல் என்பதிலிருந்த எழுந்த பதம். கேள்வி, எழுதாக் கிளவி, முதுநூல், என்றெல்லாம் சிறப்புற நான்மறை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது

அகப்பொருளில் உள்ள நானூறு பாடல்களின் தொகுப்பே அகநானூறு ஆகும். ஆசிரியப்பாவில் 13 அடிகள் முதல் 31 அடிகள் வரை இப்பாடல்கள் கொண்டிருக்கும்.

 

அகநானூறில் 181ஆம் பாடலில் சிவனையும் நான்மறையையும்  பற்றிய குறிப்பைக் காணலாம் முதுபெரும் புலவர் கபிலர் இப்பாடலில் காவிரியாற்றையும் அதன் சுற்றுப்புறத்தையும் அழகுற கவிதைநயம் படச் சொல்கிறார்.

 

 

நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆல முற்றம் கவின்பெறத் தைஇய  (வரிகள் 16,17)
இப்பாடலை முழுமையாகப் படித்தால் சங்க கால மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு நான்மறை என்ற சொல் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிக்கிறது என்பதும்  முது நூல் என்பதால் அது தொன்று தொட்டு இருந்து வருவதும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டதுமாகிய  உலகப் புகழ் பெற்ற வேத  நூல் என்பதும் முக்கட் செல்வன் என்பதால் மூன்று கண்களை உடைய சிவன் என்பதும் தெரிய வருகிறது.ஆலமுற்றம் என்பதால் கல்லால மரத்தின் கீழ் தவம் செய்யும் சிவபெருமானைப் பற்றித் குறிப்பாகச் சொல்லப்படுவதை உணர முடிகிறது.

 

 

இந்தக் கட்டுரையின் கருப்பொருளை எண்ணி உரிய பகுதிகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது. முழுப் பாடலை தமிழ் அன்பர்கள் தாமே படித்து இன்புறலாம். உண்மை அர்த்தத்தைக் கண்டு மகிழலாம்.

 

 

நல்ல விளக்க உரைகளை மட்டுமே நாடுதல் வேண்டும். திரித்தும், முறித்தும், பழித்தும், இழித்தும், தனது சுயநல நோக்கத்திற்காக நினைத்ததை எழுதும் உரைகளை அறவே நீக்குதல் வேண்டும் சிலர் பாடல்களில் வரும் வேதம், நான்மறை என்ற மூலச் சொற்களைக் கூட விட்டு விட்டு உரை எழுதுகிறார்கள்.

 

 

இவர்களின் தீய நோக்கத்தை உண்மை நாடும் தமிழ் அன்பர்கள் உடனே புரிந்து கொள்ளலாம்..

*********

 

திருமுருகாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்! (Post No.3299)

img_4204

Written by S. NAGARAJAN

 

Date: 29 October 2016

 

Time uploaded in London: 9-11 AM

 

Post No.3299

 

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 2

 

திருமுருகாற்றுப்படையில் அந்தணரும் வேதமும் !

 

                      ச.நாகராஜன்  

317 அடிகள் கொண்ட திருமுருகாற்றுப்படை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய அற்புத நூலாகும்.

பாட்டுடைத் தெயவம் குமரவேள். பத்துப் பாட்டில் இடம் பெறுகிறது இது.

சங்க இலக்கியம் தோன்றிய காலத்தில் பிற்பகுதியில் இயற்றப்பட்ட நூல் இது என்பர் சிலர்.

12 திருமுறைகளில் 11ஆம் திருமுறையில் இது இடம் பெறுகிறது.

முருக பக்த்ரகளுக்கு (விவாதம் தாண்டிய) பக்தி உணர்ச்சியைத் தரும் பக்தி நூல் இது. இலக்கிய அன்பர்களுக்கோ சிலிர்க்க வைக்கும் தமிழ் இன்பத்தை ஊட்டும் நூல். ஆய்வாளர்களுக்கோ பல்வேறு துறைகளில் ஆய்வை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பை நல்கும் சிந்தனைக் களஞ்சியமான  நூல்.

 

 

குமரவேளின் அருமைக்காக ஒரு முறையும், தமிழ்ச் சொற்களின் அழகிய இயல்புக்காக ஒரு முறையும், படிக்கும் போது மீதூறி வரும் பக்திக்காக ஒரு முறையும், தமிழர் தம் பண்பாட்டை தெள்ளிதின் தெரிந்து கொள்வதற்காக ஒரு முறையும், அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற பிரப்ஞ்ச நியதியைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு முறையும், மேலாம் முக்தி நிலையை அடைய வழிகாட்டி அழைத்துச் செல்லும் நூல் என்பதால் ஒருமுறையும் ஆக ஆறுமுகத்தைப் போற்றும் இந்த நூலை ஆறுமுறை அவ்வப்பொழுது படிக்கலாம்.

 

 

ஒருமையுடன் மனதைச் செலுத்திப் படிப்போர் இன்பம் அடைவது உறுதி. இந்தக் கட்டுரைக்கான வடிவமைப்பில் நாம் பார்க்க வேண்டிய அந்தணர், வேதம் ஆகியவை வரும் பகுதிகளை (மட்டும்) இனிப் பார்ப்போம்.

 

முதலில் 177 முதல் 183 முடிய உள்ள வரிகளைப் பார்ப்போம்:

 

“இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறுநான்கு இரட்டி இளமை நல்யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்”

 

அந்தணர் பற்றிய விரிவான விளக்கத்தை இப்பகுதி தருகிறது.

இதில் குறிப்பிடப்பெறும் இரு மூன்று எய்திய இயல்பு ஓதல்  என்பது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,ஈதல், ஏற்றல் என்னும் ஆறாகிய நன்மையைக் குறிக்கிறது. அந்தணர் குல  மரபின் படி இந்த ஆறு தொழில்களையும் வழுவாது பரம்பரை பரம்பரையாகக் காத்து வருபவர்கள் அந்தணர் எனப்து இதனால் பெறப்படுகிறது.

 

 

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி என்பதால்  தாய் வழியிலும் தந்தை வழியிலும் தூய்மையான  குடியினைச் சேர்ந்தவர்கள் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.

குடி என்பது கோத்திரத்தைக் குறிக்கிறது. கௌசிகம், வாதூலம், கச்யபம் போன்ற கோத்திரங்கள் இந்த வார்த்தையால் குறிக்கப்படுகிறது.

 

 

அறுநான்கு என்றால் இருபத்திநான்கு அதை இரட்டித்தால் வருவது 48. ஆக 48 ஆண்டுக் காலம் பிரமசரியத்தைக் காத்தலை இந்த வரி காட்டுகிறது.

 

48 ஆண்டுகள் பிரமசரியம் காக்கும் பழக்கத்தை இறையனார் அகப்பொருளுரையில் “நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியம் காத்தான்” என்ற வரியாலும் தொல்காப்பிய களவியல் உரையிலும் கூடக் காணலாம்.

 

 

அறன் நவில் கொள்கை என்பதால் அந்த அந்தணர்கள் அறத்தைத் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டும் பண்பைக் கொண்டவர்கள் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. அற வாழ்க்கையே அவர்களது message!

மூன்று வகை குறித்த மூத்தீச் செல்வம் என்பது காருகபத்தியம்,ஆகவனீயம்,தட்சிணாக்கினி ஆகிய மூன்று வகை அக்கினியைக் குறிக்கும். மூன்று வகை அக்கினிக்கும் வெவ்வேறு வடிவங்கள் உண்டு. சிறப்புகள் உண்டு. இது பற்றிய விளக்கத்தைக் கல்ப சாஸ்திரத்தில் விரிவாகக் காணலாம்.

இருபிறப்பாளர் என்பது அந்தணர் தாய் வயிற்றில் அடையும் ஒரு பிறப்பையும் பின்னர் உபநயனத்தின் போது காயத்ரி மந்திரத்தை உபதேசமாகப் பெறும் போது அடையும் ஞானப் பிறப்பாம் இரண்டாம் பிறப்பையும் கொள்வதைக் குறிப்பிடுகிறது. அந்தணருக்கான இன்னொரு பெயரே இருபிறப்பாளர்.

 

 

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் என்பதால் ஒன்பது இழைகளைக் கொண்ட பூணூலை அணிந்த அந்தணர்கள் என்பது காட்டப்படுகிறது. மூன்று மூன்று இழைகளாக மூன்று பூணூலை அதாவ்து  மொத்தம் ஒன்பது இழைகளைக் கொண்ட பூணூலை அணிந்தவர்கள் என்பது திருத்தமாக விளக்கப்படுகிறது.

img_4205

அடுத்து 185,186,187 அடிகளைக் காண்போம்;

 

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து

ஆறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி

நாவில் மருங்கின் நவிலப் பாடி

 

என்பதால்

தலைக்கு மேலே குவித்து வைத்த கைகளுடன் முருகனைத் துதித்து ஆறு எழுத்து அடங்கிய இரகசியமான மந்திரத்தை  (நம; குமாராய) நாக்கு அசையும் அளவில் பயிலும் படி உச்சரிக்கும் அந்தணர்  என்பது பெறப்படுகிறது.

 

ஆறுமுகத்தின் செயல்களை விளக்க வரும் நக்கீரர்,

 

ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வி யோர்க்கும்மே (வரிகள் 94,95,96)

என்று கூறுகிறார்.

 

அதாவது முருகனின் ஒரு முகம் மந்திரத்தை உடைய வேதத்திலே விதித்தலை உடைய ம்ரபு வழி வந்த பிராமணர்களின் யாகங்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் நிலையாக் நிற்கும் படி காக்கின்ற தொழிலை மேற்கொள்கிறதாம்!.

 

அந்தணரைக் காப்பதும் அவரது வேள்வி நன்கு நடக்கும் படி அருளுவதும் வெற்றிவேலனின் திருவருட்செய்கையாக இயல்பாகவே இருக்கிறது.

 

இனி 155,156ஆம் அடிகளில் இந்திரனைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.

 

நூற்றுப்பத்தடுக்கிய நாட்டத்து நூறுபல்

வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து”

 

இந்திர பதவியை அடைவது என்பது எளிதல்ல. நூறு அஸ்வமேத யாகம் செய்த ஒருவ்ரே இந்திர பதவி பெறும் தகுதி உடையவராவார்.  நூறு பல்வேள்வி முற்றிய இந்திரன் நூற்றுப்பத்தடுக்கிய கண்களை உடையவன். அதாவது ஆயிரம் கண்களை உடையவன்.

 

 

அவன் இந்த வேள்வி பலத்தினால் பகைவரை வெற்றி கொள்பவன் (வெனறடு கொற்றம்)!!

இங்கு யாகத்தின் சிறப்பு கூறப்படுகிறது.

 

ஆக அந்தணர் பெருமை, அவர்களைக் காக்கும் முருகனின் அருள் திறம், வேள்வி பல் செய்ததால் இந்திர பதவி அடைதல் உள்ளிட்ட நுட்பமான கருத்துக்களைத் திருமுருகாற்றுப்படை தெளிவாக விளக்குகிறது.

 

 

பண்டைய தமிழ்ச் சமுதாயத்தில் அந்தணர் பெற்றிருந்த இடத்தையும், அவர்கள் இயல்பையும், வேள்வியின் மஹிமையையும் திருமுருகாற்றுப்படையின் இப்பகுதிகள் விளக்குகின்றன.

******

சங்க இலக்கிய ஆய்வில் முதலாவது கட்டுரை :  திருக்குறளில் அந்தணரும் வேதமும்.

மறு வெளியீடு செய்ய விரும்புவோர் தவறாது ப்ளாக்கின் பெயர், கட்டுரையாளர் பெயரை வெளியிட வேண்டுகிறோம்.

 

 

 

சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! – 2 (Post No.3290)

pallakku-tiruvaiyaru

Written by S. NAGARAJAN

Date: 26 October 2016

Time uploaded in London: 4-54 AM

Post No.3290

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

 

திருக்குறள்  பெருமை

 

சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! – 2

 

                       By ச.நாகராஜன்

 

 

               alum-pallaku-4                         

செகவீரபாண்டியனாரின் உரை தொடர்கிறது:

 

முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்        

  பிற்பெரிய செல்வம் பெறுபவோ – வைப்போ                  

  டிகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம்                          

முதலிலார்க்கு ஊதியம் இல   (பழமொழி)

 

செய்தீவினை யிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்                 எயத வருமோ இருநிதியம்  – வையத்து                     அறும்பாவம் என்ன அறிந் தன்றிடார்க்கு                  வெறும்பானை பொங்குமோ மேல்   (நல்வழி 17)

 

அறம் செய்யாதவர் அல்லல் உறுவர் என இவை குறித்துள்ளன. உவமைகள் கூர்ந்து ஓர்ந்து உணர வுரியன.

 

செய்குவம் கொல்லோ நல்வினை எனவே                    

ஐயம் அறாஅர் கசடீண்டு  காட்சி                                

நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே                    

 யானை வேட்டுவன் யானையும் பெறுமே                        

 குறும்பூழ் வேட்டுவன்  வறுங்கையும் வருமே               

அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோரே                

 செய்வினை  மருங்கின் எய்தல் உண்டெனின்                       

செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்                           

செய்யா உலகத்து நுகர்ச்சி இல் லெனின்                           

மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்                            

மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக்                                

 கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்                                    

 தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே (புறநானூறு  214)

 

நல்வினையால் எல்லா இன்ப நலங்களும் உளவாம்; அதனை எவ்வழியும் செவ்வையாச் செய்ய வேண்டும் என ஒரு சோழ மன்னன் இன்னவாறு அறத்தைப் புகழ்ந்து கூறியிருக்கிறான்.

 

செல்வ வளங்களை அடைந்து ஒருவன் சுகபோகமாய் வாழ்வது புண்ணியத்தினாலேயாம்;  அந்த இன்ப வகைகளுள் சிவிகை ஒன்று. ஆதலால் அது இங்கே நன்கு காண வந்தது.

 

சிவிகை = தண்டிகை, பல்லக்கு

 

மனிதனை மனிதர் சுமந்து  கொண்டு போவது உயர்வையும் இழிவையும் ஒருங்கே வரைந்து காட்டியது. ஒரு சிவிகையைச் சுமப்பவர் எண்மர் ஆதலால் பொறுத்தார் என்று பன்மையில் குறித்திருக்க வேண்டும். ஒருமையைக் கொண்டே அவருடைய சிறுமையைத் தனித் தனி நுனித்து உணர்ந்து  கொள்ள நின்றது.

 

பொறுத்தான் என்ற உரைக்குறிப்பால்  அல்லல்களைச் சகித்துக் கொண்டு சுமையைப் பொறுமையோடு தாங்கிப் போகும் பாங்கு தெரிய வ்ந்தது.

”நான் என்ன பாவம் செய்தேனோ இப்படிக் கழுதைப் பொதி சும்க்கிறேன்” என்று சுமையாளர் நெஞ்சு நொந்து பேசுவதையும்  உலகம் கேட்டு வருகிறது.

 

இன்ப நிலையில் ஒருவன் இனிது வீற்றிருக்கிறான்; துன்பம் தோய்ந்து ப்லர் அவனைச் சுமந்து போகின்றார். அதனை நேரே கண்ட தேவர் புண்ணியத்தின் பயனையும், அதனை இழந்து நின்றவர் பின்பு உழந்துபடும் துயரையும் நினைந்து வியந்து நெஞ்சம் வருந்தினார். அவ்வாறு உள்ளம் ப்ரிந்து இரங்கியபோது பாடிய பாட்டே அறத்தை ஈண்டு இவ்வாறு எடுத்துக் காட்டியது.

 

ஊர்ந்தான் இடை வேண்டா என்றது அங்கே அறத்தின் பெருமித இன்பத்தையும், மறத்தின் சிறுமையான துன்பத்தையும் நேரே காண்கின்ற நீங்களே நன்கு தெளிந்து கொள்ளலாம்;  வேறே நான் யாதும் கூற வேண்டியதில்லை என்று கூறாமல் கூறியருளினார். இது கூர்மையுற மொழிந்த படியாம்.

 

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை                    

பொறுத்தானோ டூர்ந்தா னிடையை – ம்றுத்தார்சம்                       

பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்                               

றுந்தும் சிவிகையினை யூர்ந்து   (நால்வர் நான்மணி மாலை, 33)

pallakkil-perumal

திருஞான சம்பந்தர் சமய போதனை செய்யச் சிவிகை யூர்ந்து சென்றார். அவர் முருகப் பெருமான் அவதாரம் ஆதலால் அவரது சிவிகையைத் தாங்கினவர் பின்பு அமரர் ஆய்ச் சிவிகையூர் நேர்ந்தார். அதனை வித்தக வினோதமாயச் சிவப்பிரகாசர் இப்படி விளக்கியிருக்கிறார். இந்த அருமைத் திருக்குறள் அந்தக் கவிஞர் உள்ளத்தைக் கவர்ந்துள்ள நிலையை இதனால் நாம் உணர்ந்து கொள்கிறோம். அறம் புரிபவன் தருமவானாய்ப் பெருமையுறுகிறான்.

 

தருமத்தை உரிமையாச் செய்து கொள்ளுங்கள்; அது உங்களுக்குப் பெருமகிமைகளை அருளும்; அதனை இழந்து நின்றால் இழிந்த துயரங்களை அடைய நேரும் என்று அறிவுறுத்தியுள்ளார். புண்ணியம் புரிந்து கண்ணியம் பெறுக.

 

உயர்ந்த நீதியும் சிறந்த அரச இன்பமும் அறத்தால் பெறலாம். இவ்வுண்மையை மூர்த்தி நாயனார் உணர்த்தி நின்றார்.

 

சரிதம்

இவர் பாண்டி நாட்டிலே மதுரையம்பதியில்  இருந்தவர். வணிகர் மரபினர். சிவபெருமான்பால் பேரன்புடையவர். நறும் சந்தனம் அரைத்து நாளும் சிவபூசைக்குக் கொடுத்து வருவது இவரிடம் வழக்காமாயிருந்தது. உல்கப் பாசம் இன்றிப் பிரம்ச்சாரியாய்த் துறவி நிலையில் இருந்த இவர் யாண்டும் அறவினையே ஆற்றி வந்தார். அவ்வாறு வருங்கால் கருநடன் என்னும் மறுபுலத்து அர்சன் இந்நாட்டின் மேல் படை எடுத்து வந்து அரசைக் கவர்ந்து கொண்டான். அவன் சமண சமயத்தவன் ஆதலால் இவருடைய சிவபூசைக்கு இடர்கள் பல செய்தான். இடையூறுகளைப் பொறுத்து வந்தார்; ஒருநாள் பொறுக்க முடியாமல் இறைவனை நினைந்து இவர் உருகி அழுதார்; மறுநாள் கருநடன் இறந்து போனான். அரசு இல்லையானால் நாடு கேடாம் என்று அமைச்சர் யாவரும் ஆலோசித்து முடிவில் பட்டத்து யானையை அலங்கரித்துக் கண்ணைக் கட்டி வெளியே விட்டார்.

“இந்த  மதயானை யாரை  மதித்து எடுத்து வருமோ அவரே அரசர்” என உறுதி செய்து உய்த்தார். வேழம் விரைந்து நடந்தது. கோவில் முகப்பில் இளம் துறவியாய் ஒதுங்கியிருந்த இவரை உவந்து எடுத்து முதுகில் வைத்துக் கொண்டு வீர கம்பீரமாய் மீண்டு வந்தது; வரவே யாவரும் இவரைத் தொழுது வணங்கி அரியணையில் அமர்த்தி அரசுமுடி சூட்டிப் பரசி நின்றனர்.

(இங்கு செகவீர பாண்டியனார் பெரிய புராணம் ,மூர்த்தி நாயனார் வரலாறில் உள்ள 35,36,37 செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார்)

 

இங்ஙனம் அரசன் ஆனபின் நீதிநெறியோடு நாட்டை இவர் பாதுகாத்து வந்தார். இவரது சிவிகையைக் கருநடனது உறவினரே தாங்கி வர நேர்ந்தனர். பல்லக்குப் போகிகள் என அவர்  ஒரு தொகையினராய்  அரசுக்கு ஊழியம் செய்து வந்தனர். அறம் புரிந்தவர் சிவிகை ஊர்வர்; அது புரியாதவர் குவிகையராய் ஊழியம் புரிவர் என்பதை உலகம் இவர் பால் உணர்ந்து நின்றது.

 

ஆண்டவனாய் நின்றறவோன் ஆள்வான் அஃதில்லான்     பூண்டடிமை யாவன் புகுந்து

 

அறம் அரசன் ஆக்கும்.

 

என்று இவ்வாறு தன் உரையை முடிக்கிறார்.

 

pallakku-thuukki

என்ன ஒரு அற்புதமான உரை. இப்படி விளக்கத்தைப் படித்தால் திருக்குறளின் மாண்பு புரியும்.

ஆனால் நாத்திகரின் உரையைப் படித்தால் இருக்கும் நல்லதும் நம்மிடமிருந்து போய் விடும் அல்லவா!

செகவீரபாண்டியனாரின் புத்தகத்தை வாங்கிப் படித்தால் திருக்குறளின் உண்மைப் பொருள் விளங்கும். எப்பொருள் எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு.

அதை விட்டு விட்டு பகுத்தறிவுச் சிங்கங்கள் எழுதும் பசப்பல் மொழிகளையும் பொய்யுரைகளையும் படிக்கக் கூடாது என்பதற்கு இந்த சிவிகைக் குறளே சீரிய உதாரணம் ஆகிறது!

********* ( இந்தக் கட்டுரைத் தொடர் முற்றும்)

 pallakku

குறிப்பு : (1-1-1957 இல் வெளியிடப்பட்ட மூன்றாம் பதிப்பு) திருக்குறட் குமரேச வெண்பா நூலிலிருந்து செகவீரபாண்டியனாரின் அருமையான விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

பாரி மகள் போட்ட தங்க சோறு! தமிழர் வளம்!! (Post No.3288)

gold

Written by London Swaminathan

 

Date: 25 October 2016

 

Time uploaded in London: 19-32

 

Post No.3288

 

Pictures are taken from various sources; thanks. They are used for representational purpose. They may not have direct connection to the article below.

 

 

தயிர் சாதம், புளியஞ் சாதம், சாம்பார் சாதம் — எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தங்க (Gold) சாதம், தங்க சோறு கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

 

செல்வம் கொழிக்கும் நாட்டில் மட்டுமே இது சாத்தியம் ஆகும். பாரி வள்ளல் ஆண்ட தமிழகத்தில் தங்கத்துக்குப் (Gold) பஞ்சமில்லை!

 

பாரி வள்ளல் இறந்த பின்னர் ஒரு நாள் பாரியின் மகளிர் சங்கவை, அங்கவை ஆகியோர் இருந்த இடத்துக்கு பாணர் குல மகளிர் பாடிக்கொண்டு வந்தனர். அப்படி வருவோருக்கு உணவும், உடையும், பொன்னும் கொடுப்பது பாரி கடைப்பிடித்த நடைமுறை.

 

ஆனால் பாரி மகளிர் வீட்டில் அரிசியும் இல்லை, பொங்குவதற்குப் பானையும் இல்லை.

ஏனெனில் வறட்சி நிலவிய காலம் அது.

பெண் என்றால் ஏதாவது தங்க நகை அணிந்திருப்பார்கள் அல்லவா? அதுவும் பாரி மன்னனின் மகள்கள் என்றால் நகை இல்லாமலா போகும்?

 

தாங்கள் அணிந்திருந்த பொன் நகைகளை அப்படியே உலையில் இட்டு அதையே சோறாக இலையில் போட்டார்கள் பாரி மகளிர். இல்லை என்ற சொல்லை அகராதியில் காணாத குடும்பம் பாரி மன்னன் குடும்பம்.

 

இந்தச் செய்திக்கு ஆதாரம் என்ன?

1200 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பழமொழி 400 என்னும் நூலில் அருமையான ஒரு பாடல் இந்தச் செய்தியைக் கூறுகிறது:–

 

மாரியொன்றின்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு – நீருலையுள்

பொன்றிறந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்றுறா முனிறிலோ வில் – பழமொழி

 

pot-of-gold-psd87858

இன்னொரு பாடலில் கோழியை விரட்ட ஒரு பெண் தன் காதில் அணிந்த தங்க குண்டலங்களை எறிந்ததாக உள்ளது. இதை மிகைப்படுத்தப்பட்டக் கற்பனை என்று யாராவது நினைத்தாலும், அந்தக் கற்பனையும் கூட தங்கம் செழிக்கும் நாட்டில்தான் வர முடியும். பிச்சைக்காரகள் உள்ள சமுதாயத்தில் கல்லும் மண்ணாங்கட்டியும்தான் உவமையாக வரும்!

 

மனைவி பற்றி யஜூர் வேதம் (Post No3280)

bengali-blow

Written by London Swaminathan

 

Date: 23 October 2016

 

Time uploaded in London: 7-07 AM

 

Post No.3280

 

Pictures are taken from Facebook and other sources; thanks. (Pictures are used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

 

This article is available in English as well

girls-i-daydr-sudha-galavagunta

மனைவி என்பவள் கணவனில் பாதி — என்று யஜூர் வேதம் சொல்கிறது.

அர்த்தோவா ஏஷ ஆத்மேனோய பத்னீ.

This article is available in English as well

இது பற்றி ப்ருஹஸ்பதி எழுதிய வியாக்கியானத்தில் (உரையில்) கூறுவார்:-

கணவனில் பாதி மனைவி என்று கருதப்படுகிறது. இதனால் அவன் செய்யும் பாவ, புண்ணியங்களிலும் அவளுக்கு சரிபாதியைப் பங்கிட்டுக் கொள்வாள்.

 

மஹாபாரதமும் மனைவி என்பவள் , கணவனில் சரிபாதி என்று சொல்லும் ஸ்லோகத்தை மோனியர் வில்லியம்ஸ் எடுத்துக்காட்டுகிறார்:-

 

 

மனைவி, மனிதனில் பாதி; கணவனின் உண்மை நண்பன்

அன்புள்ள மனைவி குணம், இன்பம், ப்செல்வம் – ஆகியவற்றின்

ஊற்று; விசுவாசமான மனைவிசொர்க லோகம் புகவும் துணை புரிவாள்

இனிமையாகப் பேசும் மனைவி தனிமைத் துயரைப் போக்குவாள்;

அறிவுரை வழங்குவதில் அவள் தந்தையைப் போன்றவள்

வாழ்க்கை என்னும் வறண்ட வழியில் அவள் ஒரு ஓய்வுவிடுதி!

 

பத்மபுராணம் சொல்லுகிறது:-

 

பதிரேவ ப்ரிய: ஸ்த்ரீணாம், ப்ரஹ்மாதிப்யோபி சர்வச:

ஆத்மானம் ச ஸ்வபர்தார மேக்வபிண்ட மனீஷயா

பர்துராக்ஞாம் வினா நைவ கிஞ்சித் தர்ம சமாசரேத்

 

பொருள்:-

மனைவியின் அன்புக்குப் பாத்திரமானவன் கணவன்

எல்லாக் கடவுளரையும் விட அவளே நெருக்கமனவள்

அவளும், அவள் கணவனும்

உடல் வேறு; உயிர் ஒன்றே!

கணவனின் அனுமதியின்றி

எந்த வழிபாட்டையும் அவள் செய்யக்கூடாது.

beauty-with-puukkuutai

தெய்வப் புலவர் திருவள்ளுவரும் சொல்லுவார்:-

தெய்வந்தொழாஅள் கொழுநந்தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை – குறள் 55

 

பொருள்:-

வேறு எந்தத் தெய்வத்தையும் தொழாது, தன்னைக் கொண்ட கணவனையும் மட்டும் தொழுது, துயில் நீங்கி எழும் மனைவி, பெய் என்று சொன்னால் உடனே அவள் சொற்படி மழை கொட்டும்.

 

இந்துமதத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர தத்துவம் (சிவன் பாதி, உமா பாதி) ஆண்-பெண் சரி நிகர் தத்துவத்தை விளக்க வந்ததே.

 

அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது– என்பதை அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்லவேண்டும்.

 

இந்துமதச் சடங்குகளை மனைவி இல்லாதவர் செய்ய முடியாது. மேலும் கணவனுடன் மனைவியும் நிற்கவோ- உட்காரவோ வேண்டும் அல்லது சடங்குகள நிறைவு பெறாது.

 

பெரும்பாலான இந்துமதப் பெண்கள், குடும்பத்தின் நலன் கருதி ஏதேனும் ஒரு காரணத்துக்காக விரதம் இருக்கிறாள். உப்பில்லாமல், ஒரு நாள் முழுதும் உணவருந்துவாள். சிலசமயம் முழுச் ச்சாப்பாட்டையும் தவிர்ப்பாள்.  இன்னும் சிலர் வேறு சில நேர்த்திக் கடன்களை செலுத்துவர். பண்டிகைகளை முறைப்படி கடைப்பிடிக்க பெண் இனமே உதவுகிறது. குழந்தைகளை மதாசாரப்படி வளர்ப்பவளும் தாய்தான்.

india-anni-sarojini-6

காந்திஜியின் அன்னையும் சிவாஜியின் அன்னையும் சொன்ன கதைகள்ள்தான் அவர்களைப் பெருந்தலைவர்கள் ஆக்கியது.

 

உபநிஷத (கி.மு.850) காலப் பெண்கள், ஞான முதிர்ச்சியில் ஆண்களையும் மிதமிஞ்சினர். மைத்ரேயி, கார்கி வாசக்னவி, காத்யாயனி போன்ற பெண்கள், ஆன்மீக வரலாற்றில் அழியா இடம் பெற்றுவிட்டனர்.

 

mdu-girls

–subham–

தொல்காப்பியர் சொல்லும் அதிசயச் செய்தி- உவம உருபுகள் (Post No.3273)

img_9178

Written by London Swaminathan

 

Date: 21 October 2016

 

Time uploaded in London: 5-50 AM

 

Post No.3273

 

Pictures are taken from Wikipedia and other sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

 

நான் தொல்காப்பிய அதிசயங்கள் என்று எழுதிய இரண்டு கட்டுரைகளில் 17 அதிசயங்களை விளக்கினேன். இப்பொழுது இன்னொரு அதிசயத்தை விரிவாகக் காண்போம். இது தவிர தொல்காப்பியம் பற்றி பத்துக்கும் மேலான கட்டுரைகள் எழுதினேன். அவைகளையும் காண்க.

 

38 உவம உருபுகள் பட்டியலைத் தொல்காப்பியர் தருகிறார். ஆனால் இவைகளில் 14 உவம உருபுகள் சங்க இலக்கியத்தில் கூடக் காணப்படவில்லை. இதனால் நாம் அறிவது யாது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

முதலில் உவம உருபு என்றால் என்ன தெரியாதவர்களுக்கு அதை விளக்குகிறேன்:-

 

ராமனைப் போல பரதன் நல்லவன் (Rama is LIKE Bharata; Rama is as good as Bharata)

 

சீதையைப் போல (LIKE) சாவித்திரி ஒரு பத்தினிப் பெண்

 

என்பதில் போல (LIKE, As) என்பது உவம உருபாகும். உவம என்பது சம்ஸ்கிருதச் சொல். ஆனால் தொல்காப்பியர் இதை ஒரு இயலுக்குத் தலைப்பாகக் கொடுக்கவும் தயங்கவில்லை.

img_9179

 

நமக்குத் தெரிந்தது “போல” “நிகர்த்த” என்ற சில சொற்கள்தான். ஆனால் அவரோ 38 உருபுகளைப் பட்டியலிடுகிறார். அதில் 14 உருபுகளை 400-க்கும் மேலான புலவர்கள் எழுதிய சுமார் 2500 பாடல்களில் காணக்கூட இயலவில்லை.

 

இதன் பொருள் என்ன?

 

நான் முன்பு எழுதிய பல கட்டுரைகளில் தொல் காப்பியம் என்பது தற்போதைய நிலையில் கிடைப்பது கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததுதான் என்றும் அவரே 250-க்கும் மேலான இடங்களில் மற்றவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் (என்ப, மொழிப) என்றெல்லாம் எழுதி இருக்கிறார் என்றும் எழுதினேன்.

 

ஆக தொல் காப்பியர் தனக்கு முன்னால் இருந்த இலக்கிய, இலக்கண நூல்களில் இருந்ததைத் தொகுத்துத் தந்திருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

 

இதில் அதிசயம் என்ன இருக்கிறது?

 

சங்க இலக்கியத்திலேயே 14 உவம உருப்புகள்  மறைந்து, தொல்காப்பியர் சொல்லாத சில உவம உருபுகளும் வந்திருப்பதால் — பலர் கருதுவது போல தொல்காப்பியத்தை முதல் நூற்றாண்டை ஒட்டிய நூல் என்று கொண்டால் — அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னராவது தமிழ் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அதாவது கி.மு 500 வாக்கில் பல தமிழ் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அவை எல்லாம் காலப் போக்கில் மறைந்து விட்டதால் 14 உவம உருபுகள் பயனில்லாமற் போய்விட்டன அல்லது மறந்து போயினர்.

 

சிலர், இதைக் கொண்டு, அப்படியானால் தொல்காப்பியரும் காலத்தினால் முந்தையவராகத்தானே இருக்க வேண்டும் என்று வாதிடலாம். அப்படி வாதிட முடியாமைக்கான காரணங்களை தொல்காப்பியர் காலம் தவறு என்ற தலைப்பில் 3 கட்டுரைகளில் தந்து விட்டதால் அரைத்த மாவையே அரைக்கப் போவதில்லை.

 

தொல்காப்பியர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்லுகிறார். அதாவது 38 உவம உருபுகளை நான்கு குழுக்களாகப் பிரித்து அவை சிற்சில இடங்களில் மட்டுமே பயன்படுதப்படும் என்கிறார். சங்க காலத்தில் அப்படிக் குறிப்பிட்ட வரையறைக்குள் உவம உருபுகள் பயன்படுத்தப் படவில்லை. ஆக சங்க இலக்கியத்துக்கு முன்னர் ஒரு பெரிய தொகுதி தமிழ் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அதில் தொல்காப்பியர் சொல்லும் இலக்கண விதிகள் பின்பற்றப்படிருக்க வேண்டும். இவை எல்லாம் தமிழ் அன்பர்களுக்கு இனிப்பான செய்தி.

 

இன்னொரு சுவையான விஷயம் அவர் சொல்லும் பல உவமை உருபுகளை நாம் இன்று வேறு பொருளில் பயன்படுத்துகிறோம். “ஏய்க்கும்: என்றால் ஏமாற்றும் என்று நாம் அர்த்தம் செய்வோம். ஆனால் இதற்குப் “போல” (Like) என்று அர்த்தம்! இதே போல காய்ப்ப, கடுப்ப, கள்ள, ஒடுங்க, நாட, வியப்ப, வென்ற, வெல்ல முதலிய பல சொற்கள் “போல” (like) என்ற உவம உருபு போல பயன்படுத்தப் படுகின்றன.

 

இந்த உவம உருபுகள் பட்டியலை டாக்டர் ரா. சீனிவாசன் எழுதிய சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற ஆராய்ச்சி நூலில் கொடுத்துள்ளார். இதோ அந்தப் பட்டியல்:-

img_9177

“தொல்காப்பியர் உவம உருபுகளை வினை, பயன், மெய், உரு என நான்கு வகைகளாகப் பிரித்து 38 உவம உருபுகளும் எந்த வகை என்றும் கொடுத்துள்ளார். இந்த வரையறை சங்க காலத்தில் பின்பற்றப்படவில்லை.

 

சூத்திரம் 286-இல் 36 உவம உருபுகளையும், 287- இல் ஒன்றும் சூத்திரம் 291-இல் ஒன்றுமாக 38 உருபுகள் உள்ளன.

 

அகர வரிசையில் உவம உருபுகள்:

அன்ன, ஆங்க, இறப்ப, உறழ, என்ன, எள்ள, ஏய்ப்ப, ஒன்ற, ஒடுங்க, ஒப்ப, ஒட்ட, ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, நேர, நோக்க, புல்ல, புரைய, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள, மறுப்ப, மான, மாற்ற, வியப்ப, விளைய, வீழ, வெல்ல, வென்ற

 

இவைகலைள தனித் தனியே கொடுத்தால் நாம் இன்று வேறு அர்த்தம் சொல்லுவோம். அத்தனைக்கும் “போல” (LIKE) என்றே பொருள்!

 

இந்தப் பட்டியலில்  சங்க இலக்கியத்தில் வழக்கொழிந்த 14 உவம உருபுகள்:–

இறப்ப, ஒன்ற, ஒடுங்க, ஓட, ஒட்ட, கள்ள, நடுங்க, நந்த, நாட புல்ல, மதிப்ப, மறுப்ப, வியப்ப

 

சங்க கலத்தில் தொல்காப்பியர் சொல்லாத 28 புதிய உவம உருபுகளும் வந்துவிட்டன! அவை:- அமர், அவிர், ஆக, இகலிய, இயல், ஈர், உரைக்கும், ஏக்குறும், ஏதம் ஏர், ஓடு, ஓங்கு, ஓர்க்கும், சால, சினை இய, சேர், செத்து, தேர், தோய், நவில, நான நாறு ,மலி, மயங்கு, மாய் முரணிய, வாய்ந்த வவ்வும்.

 

தமிழ் எவ்வளவு வளமான மொழி, எவ்வளவு பழமையான மொழி, என்பதற்கு இவை எல்லாம் சான்று பகரும். அதுமட்டுமல்ல. பழைய உவம உருபுகள் மறைந்து புதிய உருபுகள் தோன்ற எவ்வளவு கால இடைவெளி ஏற்பட்டிருக்கும் பாருங்கள்!

 

சில சுவையான எடுத்துக் காட்டுகள்

 

ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் – கலித்தொகை 20-11

வாயில் ஊறும் இதழ்நீர் அமிர்தம் போல இருக்கும்.

ஏய்க்கும்= போல

கார்மழை முழக்கிசை கடுக்கும் – அகம் 14

கார்காலத்து மழை, முழவு ஒலி எழுப்புவது போல ஒலிக்கும்

கடுக்கும் =போல

 

செத்த, இறப்ப என்றால் நாம் மரணம் என்று பொருள் கொள்ளுவோம். ஆனால் அந்தக் காலத்தில் இவை “போல” (LIKE) என்ற பொருளில் பயனடுத்தப்பட்டன!

 

வாழ்க தொல்காப்பியர்! வளர்க தமிழ்!!

 

–SUBHAM–

நூலகத்தின் மாண்பு (Post No.3272)

 

dave-isay

Picture: Dave Isay and his book

Written by S. NAGARAJAN

Date: 21 October 2016

Time uploaded in London: 5-02 AM

Post No.3272

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com 

 

பாக்யா 21-10-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நூலகத்தின் மாண்பு

 

By ச.நாகராஜன்

இணைய தளத்தில் ஆயிரக்கணக்கான ப்ளாக்குகள் மற்றும் தளங்கள்! ‘Brain pickings.org’ – ‘ப்ரெய்ன் பிக்கிங்ஸ்.ஓஆர்ஜி என்ற தளத்தில் அருமையான புத்தகங்களைப் பற்றிய அரிய தகவல்கள் தரப்படுகிறது. சற்று வித்தியாசமான புத்தகங்கள்! அறிவுஜீவிகள் விரும்பக்கூடியவை. இணையதள இணணப்பு இருந்தால் வாராவாரம் உங்கள் இல்லம் தேடி வரும்.. சந்தா இலவசம். 2016, அக்டோபர் 6 தேதியிட்ட இதழில் வந்துள்ள புத்தகங்களில் ஒன்றே ஒன்றை (Callings : The Purpose and Passion of Work  என்ற நூல்) இங்கு பார்ப்போம்:

 

 

அமெரிக்காவின் பூர்வ குடிகளில் ஒரு எளிய விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி தான் ஸ்டார்ம் ரேயஸ். வயலில் கடுமையாக இடையறாது உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்வே அது தான்! தாயும் தகப்பனும் சாராயத்தில் திளைப்பவர்கள். வீட்டில் அடி, உதை, திட்டு, ஆவேசமான சண்டைகள்.. ரேயஸ் சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொள்ளும் முன்னரே கத்தியைக் கையில் பிடித்துக் கொண்டு சண்டை போடக் கற்றுக் கொண்டாள்.

 

purpose-passion-of-work

வயிறு பசித்தால் உணவு, வயல்வெளியில் வேலை, நடுநடுவே சண்டைகள்… இது தான் வாழ்க்கையா?!

 

அவளுக்கு பன்னிரெண்டு வயது ஆன போது புத்தகங்களைச் சுமந்து கொண்டு வரும் வேன் ஒன்று – புக் மொபைல் – அவள் இருக்குமிடம் வந்து ஒரு போர்வையையும் கொஞ்சம் உணவையும் தந்தது.

 

ரேயஸ் நைஸாக வேனுக்குள் எட்டிப் பார்த்தாள். புத்தகம், புத்தகம், புத்தகம்!

 

கனமான புத்தகத்தை எடுத்துச் செல்ல அவள் அனுமதிக்கப்பட்டதே இல்லை. தூக்கிச் செல்ல நிறைய இருக்கும் போது படிக்க புத்தகம் ஒரு கேடா?

 

ரேயஸ் மெதுவாக் விரக்தியுடன் நகர்ந்தாள். வேனில் இருந்த ஒருவர் அவளைக் கைதட்டி அழைத்தார்.

 

“இதோ, புத்தகங்கள். இதில் எது வேண்டுமானாலும் நீ எடுத்துக் கொண்டு போகலாம்”

 

ரேயஸுக்கு சந்தேகம். இதில் ஏதோ இருக்கிறது. சும்மா புத்தகத்தைத் தருவார்களா, என்ன!

 

“இதை எடுத்துக் கொண்டு போக நான் என்ன தர வேண்டும்?”

“ஒன்றும் தர வேண்டாம். பதினைந்து நாட்கள் கழித்து புத்தகத்தைப் பத்திரமாகத் திருப்பித் தர வேண்டும்.அவ்வளவு தான்”

 

 

ரேயஸால் நம்பமுடியவில்லை. அருகிலுள்ள மவுண்ட் ரெய்னர் என்ற எரிமலை வெடிக்கப் போகிறது என்று அடிக்கடி பேச்சு எழும்பும்.

 

ரேயஸ் கேட்டாள்: “எனக்கு எரிமலையைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை. புத்தகம் இருக்கிறதா?”

“ஓ, இதோ எரிமலையைப் பற்றிய புத்தகம். எந்த ஒரு விஷயத்தைப் பற்றி மிக நன்கு அறிந்து கொண்டாலும் பயம் போய்விடும், தெரியுமா” – புத்தகத்தைத் தந்தவர் சொன்னார்.

டைனோஸரைப் பற்றிய புத்தக்ம் ஒன்றையும் சேர்த்து எடுத்துக் கொண்டாள் ரேயஸ்.

 

அவளுக்குப் பதினைந்து வயது ஆன போது அவள் படித்த புத்தகங்கள் ஏராள்மாகி விட்டன.

 

தன் வயல்வெளி, வீடு தவிர அற்புதமான வெளி உலகம் ஒன்று இருக்கிறது என்பதை ரேயஸ் நன்கு உணர்ந்து கொண்டாள். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் ரேயஸ் ஸ்டெனோகிராபர் டிகிரியும் வாங்கினாள்.  பியர்ஸ் கண்ட் லைபரரியில் ஒரு நூலகர் வேலை காலியாக இருக்கிறது என்று அவள் கேள்விப்பட்டாள். அதற்கு விண்ணப்பிக்க வேலை கிடைத்தது.

 

அடுத்த 32 ஆண்டுகள் நூலகத்தில் பணியாற்றிய ரேயஸ் ஆயிரக்கணக்கானோரைப் படிப்பதற்கு ஊக்கப்படுத்தினாள். அவர்களின் வாழ்வையே மாற்றினாள்.

 

ஆமாம், அவள் கண்டு கொண்ட புதிய உண்மை, நூலகம் வாழ்க்கையைக் காப்பாற்றுகிறது.

 

ரேயஸ் தன் அற்புதமான வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் அனிமேஷன் படம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

ஆம், Libraries Save Lives!!

 

–SUBHAM–

 

 

பருப்பு இல்லாத கல்யாணமா? பட்டாசு இல்லாத தீபாவளியா? (Post No.3270)

bob-diwali

Written by London Swaminathan

 

Date: 20 October 2016

 

Time uploaded in London: 6-21

 

Post No.3270

 

Pictures are taken from Wikipedia and other sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

deepavali-israel

காலையில் பத்திரிக்கையில் ஒரு புகைப்படம் பார்த்தேன். சில அப்பாவிப் பள்ளிக்கூட பெண்கள் கைகளில் சில அட்டைகள். அதில் “பட்டாசு வேண்டாம், புறச்சூழலைப் பாதுகாக்கும் தீபாவளியைக் கொண்டாடுவோம்! பச்சை நிற தீபாவளியைக் கொண்டாடுங்கள் “என்றெல்லாம் எழுதப் பட்டிருந்தது. உடனே சில எண்ணங்கள் மனதில் எழுந்தன. இது சரியான அணுகு முறை அல்ல. பருப்பு இல்லாத கல்யாண சாப்பாடு எப்படி இல்லையோ அப்படி பட்டாசு இல்லாத தீபாவளி சோபிக்காது!

 

காரணம் ?

தீபாவளிப் பட்டாசு தொழிலில் முன்னனியில் நிற்கும் மாநிலம் தமிழ் நாடு. வறண்ட சிவகாசி, ராமநாதபுரம் கோவில்பட்டி பகுதிகளில் மிளகாய் வற்றல் காயப்போடுதல், பட்டாசு செய்தல், தீப்பெட்டி செய்தல் முதலிய தொழில்கள் மட்டுமே செய்ய முடியும். தண்ணீர் என்பது அபூர்வமான பொருள். சூரிய ஒளிதான் செல்வம். அவர்கள் வயிற்றில் அடிக்கக்கூடாது. மேலும் எதிர்காலத்தில், நா ம் பட்டாசு செய்யாமல் போனால் அந்த இடத்தை சீனப் பட்டாசுகள் நிறைவு செய்யும் அபாயம் உள்ளது.

 

ஒருகாலத்தில் களி மண்ணில் பிள்ளையார் செய்து ஆற்றில் கரைத்தோம்; இப்பொழுது கலர் பிள்ளையார், பெரிய பிள்ளையார் செய்யக்கூடாதென்றால் அதில் நியாயம் இருக்கலாம். ஆனால் பட்டாசே இல்லாமல் தீபாவளி வேண்டும் என்பதற்குப் பதிலாக நிதானத்தைக் கடைப்பிடிக்கும் விழிப்புணர்வை உண்டாக்கலாம். இரவு 11 மணிக்கு மேலாக சத்தம் கொடுக்கும் வெடிகளை வெடிக்காதீர்கள் என்று கேட்கலாம். அதுவும் இந்துக்களே முடிவு செய்ய வேண்டும். கோர்ட்டோ அரசாங்கமோ இதில் தலை இடக்கூடாது.

 

சர்ச்சுகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றுகின்றனர். பலருடைய

பகுத்தறிவுச் சமாதிகளில் ஜோதி எரிகிறது. இதெல்லாம் கூட புறச்சூழலைப் பாதிக்கக்கூடியதே. மரக்கறி உணவைவிட மாமிசம் உண்ணூவோரால் புறச்சூழல் பாதிப்படைவதாக விஞ்ஞான சஞ்சிகைகள் எழுதுகின்றன.

diwali-crackers

சிகரெட்டையும் பீடியையும் தடை செய்!

உலகில் ஒவ்வோரு நிமிடமும் பல கோடி சிகரெட்டுகளும் பீடிகளும் புகைக்கப்படுகின்றன. இவற்றால் புறச்சூழல் பாதிப்பதோடு புற்றுநோயும் பரவுகிறது. ஆகையால பீடிகளையும் சிகரெட்டுகளையும் தடை செய்க! மாமிச உணவுகளைத் தடை செய்க! என்றெல்லாம் கோஷம் எழுப்பினால் அதில் பசை இருக்கிறது. வருடத்தில் ஒரே ஒரு நாளோ, இரண்டே இரண்டு நாளோ வெடிக்கும் பட்டாசுகளுக்கு ‘நோ’ NO சொல்லுங்கள் என்பது மடமையிலும் மடமை.

 

ஒலிம்பிக் போட்டியின்போது வெடிக்கும் பட்டாசுகள், புத்தாண்டின்போது உலகெங்கிலும் வெடிக்கும் பட்டாசுகள் , அமெரிக்க சுதந்திர தினத்தின் போது வெடிக்கும் பட்டாசுகள் இவையெல்லாம் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி வெடிக்கிறார்கள். நாம் ஒரு நாள் வெடிப்பதை விட இவை எல்லாம் நூறு மடங்கு அதிகம்!

ஆகையால் குடிசைத் தொழிலான பட்டாசுத் தொழிலாளர்களின் வயிற்றிலும் வாயிலும் அடிக்காமல், பட்டாசு வாங்கிக் கொளுத்துங்கள் நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். காசைக் கரியாக்குவதிலும் அர்த்தம் இருக்கட்டும். நாங்கள் எல்லோரும் சிறுவயதில் அனுபவித்த பட்டாசு மத்தாப்புகளை எதிர்கால சந்ததியும் அனுபவிக்கட்டும்.

diwali_in_mumbai_3498310k

நான், சிறுவயதில் ரசித்த பட்டாசுகளை, லண்டனில் வாழும் என் பிள்ளைகள் அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்தி ஒவ்வொரு முறை இந்தியா வருகையிலும் எங்கேயாவது பட்டாசுகளைத் தேடிப்பிடித்தது வெடித்திருக்கிறோம் அதாவது தீபாவளி கழிந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர்!

 

இனிமேல் கல்யாணங்களில் 10,000 வாலா சீனி பட்டாசு வேண்டாம் என்று சொல்லுங்கள் அது நியாயமே. இனிமேல் தேர்தல் வெற்றிக்கு பட்டாசு வெடிக்காதீர்கள் என்று சொல்லுங்கள் அது நியாயமே.. பீடி, சிகரெட் குடிப்போரின் தலையில் அடித்து அதைப் பிடுங்கி எறியுங்கள் அது நியாயமே. பக்ரீத் பண்டிகயின்போது ஆயிரக்கணகான மிருகங்களைப் பலி கொடுப்பதை நிறுத்துங்கள் அது நியாயமே; எல்லாக் கசாப்புக் கடை வாசல்களிலும் ம,றியல் செய்யுங்கள் அது நியாயமே: பட்டாசு வெடிப்பதைவிட மாமிச உணவு, புறச்சுழலை அதிகம் பாதிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுங்கள் அது நியாமே.

 

முகமது நபி இஸ்லாமிய மத்ததைத் தோற்றுவித்தபோது ஒலிபெருக்கி ‘மைக்’ எதுவும் கிடையாது. அப்படி இருக்கையில் தினமும் 5 முறை கூப்பாடு போடுவதை —- ஒலிபெருக்கிகளால் கூச்சல் போடுவதை —-அனுமதிக்கிறோம் அதுபோல நரகாசுரனை கிருஷ்ணன் வதை செய்தபோது பட்டாசு இருந்ததோ இல்லையோ கவலை வேண்டாம். மக்களுக்கு மகிழ்ச்சி தருவதை வரவேற்போம்.

 

மாமிசம் சாப்பிடுவோரும் சிகரெட் குடிப்போரும் புறச்சூழல் பாதிப்பு பற்றிப் பேச என்ன நியாயம் இருக்கிறது?

diwali-sparklers

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுங்கள்; சிறு தொழில்கள் சிறக்கட்டும்.

 

–SUBHAM—

ஆர்.எஸ்.எஸ்: நான்யபந்தா வித்யதே! (Post No.3240)

1679-dr-k-b-hedgewar-india-stamp-1999

Written by S. NAGARAJAN

Date: 11 October 2016

Time uploaded in London: 5-56 AM

Post No.3240

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் வெற்றித் திருநாள் விஜயதசமி! ஆர்.எஸ்.எஸ். உதயமான தினம்! சிறப்புக் கட்டுரை

 

ஆர்.எஸ்.எஸ்: நான்யபந்தா வித்யதே!

By ச.நாகராஜன்

 

hedgewar

ஒரு முக்கியமான கால கட்டத்தில் ஹிந்துக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

 

ஹிந்து இனம் அடி வாங்கி வாங்கி உடம்பெல்லாம் இரத்தமயமான இனம்.இனி அடி வாங்க உடம்பில் இடமும் இல்லை. திராணியும் இல்லை!

 

ஹூண்ர்கள், முகலாயர்கள், கிறிஸ்தவர்கள் என்று இந்த ஹிந்துக்களை அடிக்காத இனமே இல்லை.

 

அடி வாங்குவதற்கென்றே பிறந்த “சபிக்கப்பட்ட இனமா” இது!

உலகின் தலைசிறந்த தத்துவங்களைத் தந்த ஹிந்துக்கள், எந்த மதமும் சம்மதம் என்று சொல்லும் ஹிந்துக்கள், சகல கலைகளிலும் முன்னோடிகளாக விளங்கிய ஹிந்துக்கள், வீரத்திலும் அறப் பண்பிலும் உலகிற்கே வழி காட்டிய ஹிந்துக்கள், தொன்று தொட்டு இன்று வரை எந்த இடம் என்று இல்லாமல் குக்கிராமங்களிலிருந்து பெரும் நகரங்கள் வரை ஆங்காங்கே ரிஷிகள்,  முனிவர்கள், மகான்கள், தபஸ்விகள், சித்தர்கள், ஞானிகள், கவிஞர்கள், வீரர்கள், பெரும் மேதைகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் என அனைத்துத் துறைகளிலும் விற்பன்னர்களைத் தொடர்ந்து தோற்றுவித்த ஹிந்து இனத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள்.. இப்படி அடி வாங்குவது காலத்தின் கோலமா? ஹிந்து இனத்தில் உள்ள குறைகளா?

 

 

இதை ஆராய்ந்தார் ஒரு மஹரிஷி போன்ற மனிதர்.

ஆபத்துக்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.

ஜிஹாத் என்று சொல்லி தீவிரவாத முஸ்லீம்கள் அடி அடி என்று ஹிந்துக்களை அடிக்கும் கோரம் ஒரு புறம்..

 

இந்தியாவில் உங்களுக்கு நல்ல அறுவடை இருக்கிறது, அவர்கள்,  மதத்தை மாற்றுங்கள், ஹிந்துக்களை அழியுங்கள், கிறிஸ்தவர்களாக்குங்கள் என்று பகிரங்கமாக அறைகூவல் விடும் கிறிஸ்தவ மேலிடம் ஒரு புறம்..

 

மதம் ஒரு அபின் அதை ஒழி என்று உலக் கோஷம் இட்டு விட்டு ஹிந்துக்களிடம் மட்டும (இஸ்லாம், கிறிஸ்தவத்தை மறந்தும் அணுகாமல்) அதை பிரசாரம் செய்யும் தேசபக்தியற்ற கம்யூனிஸ்டுகள் ஒரு புறம்.

 

ஹிந்துக்கள் சின்னாபின்னமாக இதை விட வேறு என்ன வேண்டும்?

 

இல்லை இல்லை, இன்னும் ஒன்றும் மிச்சம் இருக்கிறது. மேல் சொன்னவர்களின் கூட்டாளிக்ளாக அவர்களுடன் இணைந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தங்களை மேம்படுத்திக் கொள்ள ஹிந்துக்களைப் பழிக்கும் திராவிட தீய் சக்திகள் உள்ளிட்ட சொந்த இனத்து துரோகிகள் இன்னும் ஒரு புறம்.

மேல் சொன்ன நால்வரில் நான்காம் படை மிக  மோசமானது,

இவர்களை எதிர்கொள்ள வேண்டுமே! ஹிந்து இனத்தின் குறைகள் யாவை?

 

இரண்டு!

  • ஒற்றுமையின்மை 2) சமூகப் பொறுப்பின்மை

அஹிம்சை, பொறுத்துப் போதல் என்ற ஹிந்து மதத்தின் அருங்குணங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு தங்களை அடிக்கும் போதெல்லாம், தங்கள் மதத்தைத் துணிந்து அழிக்கும் போதெல்லாம், ஏன் தங்கள் உயர் தெய்வமான ராம்ரைச் செருப்பால் அடிப்பது உள்ளிட்ட தீய செயல்களைச் செய்யும் போதெல்லாம் ‘கடவுள் பாத்துக்குவார்’ என்று சொல்லும் கையாலாகாததனம் அவர்களது சமூகப் பொறுப்பின்மையைக் காட்டுகிறது.

rss-chief

 

ஆங்காங்கே ஹிந்துக்களுக்கு இழைக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்க ஒரு ஒற்றுமையுள்ள இனமாக ஹிந்து இனம் ஒன்று சேர்ந்து பாடுபட்டதில்லை. சமூகப் பொறுப்பினமையோடு ஒற்றுமையும் இல்லை!

 

 

இந்த இரு குறைகளைக் கண்ட மஹரிஷி போன்ற மனிதர் ஆழ்ந்து சிந்தித்தார். ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

கண்டுபிடித்த மஹரிஷியின் பெயர் டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார்.

 

அவர் கண்டு பிடித்த வழி. ஒற்றுமையையும் ச்மூகப் பொறுப்பையும் கொண்ட ஒரு வலிமை வாய்ந்த ஹிந்து சமுதாயத்தை உருவாக்கி ஹிந்து ராஷ்ட்ரத்தை பாரதத்தில் நிர்மாணித்து ஹிந்து இனம் உலக அரங்கில் ஓங்கி உயர ஒரு சங்கத்தை அமைப்பது.

 

அவர் அமைத்த சங்கம் தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்.

1925ஆம் ஆண்டு வெற்றித் திருநாளாலான விஜய தசமி அன்று சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று கம்பீரமாக ஹிந்துக்களைத் த்லை நிமிரச் செய்கிறது.

ஹிந்து மதத்தை அழிக்க்வும் ஒழிக்கவும் நினைக்கும் ராக்ஷஸ சக்திகளை அழிக்க ஒவ்வொருவரும் ராமராக, கிருஷ்ணராக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்துவது ஆர்.எஸ்.எஸ்.

ஹிந்து மதம் என்றுமுள்ள  மதமாக உலக அரங்கில் மிளிர ஒரே வழி ஆர் எஸ் எஸ் தான்.

keshav-baliram-hedgewar-poster

உபநிடத வாக்கியத்தைக் கடன் வாங்கிச் சொல்வதென்றால்

நான்யபந்தா வித்யதே!                              (அன்ய பந்தா – வேறு வழி   ந வித்யதே –இல்லை)

அதை விட்டால் வேறு வழி இல்லை!!

 

******