120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -1 (Post No. 2747)

Hsu-Yun-

Compiled  BY S NAGARAJAN

Date: 22 April 2016

 

Post No. 2747

 

 

Time uploaded in London :–  11-23  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய  கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது இன்னும் சிலர் பற்றி அறிவோம்.)

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -1

 

.நாகராஜன்

ஒவ்வொரு புத்த மடாலயத்திலும், சீனாவில் ஒவ்வொரு இல்லத்திலும் மிக்க பயபக்தியுடன் உச்சரிக்கப்படும் பெயர் ஸு யுன்!

 120 ஆண்டுகள் வாழ்ந்ததோடு நேரடியாக ஆன்மீக வாழ்க்கையை 101 ஆண்டுகள் புத்த துறவியாக இருந்து வாழ்ந்து காட்டிய ஒரு பெரியவர் என்பதால் அவர் ஒரு அதிசய புருஷர்!

அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் நிறைந்திருப்பதால் அவர் வாழ்க்கை சரிதம் ஒரு அபூர்வ சரிதம்!

நூற்றுக்கணக்கான சீடர்களை அவர் ஆங்காங்கே உருவாக்கினார். சில சமயம் அவரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் திரண்டது.

மிங் வமிசத்தில் மாஸ்டர் ஹான் ஷான் (1546-1623) என்பவருக்கு மட்டுமே இப்படிப்பட்ட ஒரு பெரும் சீடர் கூட்டம் இருந்தது.

 

 

அவர் காலத்திலும் ‘தர்மா’ (புத்த தர்மம்) நலிவுற்று அழியும் தருணத்தில் இருந்தது. அதற்குப் புத்துயிரூட்டி நலிவடைந்திருந்த ஏராளமான ஆலயங்களை புனருத்தாரணம் செய்தார் அவர்.

அதே போல ஸூ யுன் காலத்திலும் சீனாவில் மாசேதுங் ஆட்சியால் புத்த தர்மத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. அந்தக் காலத்திலும் கூட இவர் தளரவில்லை. இவர் பட்ட கொடுமைகள் சகிக்க முடியாதவை.

இருந்தாலும் ஏராளமான புத்த ஆலயங்களை இவர் புதுப்பித்தார். புத்த தர்மத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அளித்தார்.

ஆகவே இந்த இரு புத்த குருமார்களையும் வரலாறு ஒப்பிடுகிறது. இவரை ஹான் – ஷான் திரும்பி வந்து விட்டார் என்று சீன மக்கள் செல்லமாகக் குறிப்பிட்டனர்.

இருவரின் வாழ்க்கையிலும் ஏராளமான ஒற்றுமை சம்பவங்கள் உண்டு.

 

1840 ஆம் ஆண்டு ஸூ யுன் பிறந்தார்.ஓபியம் போர் முடிவுக்கு வந்த காலம் அது.1843ஆம் ஆண்டு ஹாங்காங் நகரம் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மஞ்சு வமிசம் 1911இல் முடிவுக்கு வந்தது. சீனாவின் புதிய தலைவர்கள் புத்த மதத்திற்கு எதிராகவே திரும்பி விட்ட தருணம் ஆரம்பித்தது.

ஏராளமான புத்த மடாலயங்கள் கம்யூனிஸ கொடுங்கோலர்களால் தரைமட்டமாக்கப்பட்டன. ஏற்கனவே சிதிலமாக இருந்த மடாலயங்கள் வேறு இடிந்து வீழ்ந்தன. பஞ்சம், கொடும் நோய்கள் என சீனாவை துயரம் பிடித்து ஆட்டியது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜப்பானிய படை வேறு வட சீனாவை ஆக்கிரமித்தது.

hsu yun 2

இப்படிப்பட்ட ஒரு மோசமான கால கட்டத்தில் தான் ஸூ யுன் தோன்றினார்.

ஆனால் அவர் மதிப்போ மிகவும் பெரிது. அவர் தாய்லாந்து விஜயம் செய்த சமயம் அந்த நாட்டின் மன்னரே அவரிடம் தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

தான் வாழ்ந்த நீண்ட 120 ஆண்டுகள் முழுவதும் மிகவும் எளிமையாக வாழ்ந்தார் அவர்.

ஒரு மடாலயத்தைப் புனருத்தாரணம் செய்ய நிச்சயித்து அந்த  இடத்திற்கு அவர் சென்றால் கையில் ஒரு கம்புடன் மட்டுமே செல்வார். அந்த கம்பு ஒன்றே அவரது உடைமை.

அந்த மடாலயம் அல்லது கோவிலின் புனருத்தாரண வேலை முடிந்து விட்டால் அவர் அங்கிருந்து கிளம்பி விடுவார் – கையில் இருந்த ஒரே உடைமையான கம்பை அந்த இடத்தில் போட்டு விட்டு!

அபூர்வமான அந்த அற்புத புருஷரின் வாழ்க்கை சரிதத்தை இங்கு வழங்குவதில் பெருமிதப்படுகிறோம்.

                                        -தொடரும்

 

 

கவிதைச் சித்தன் கும்மாளம்! (Post No.2743)

IMG_3286

Compiled  BY S NAGARAJAN

Date: 21 April 2016

 

Post No. 2743

 

 

Time uploaded in London :–  9-15  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழ் என்னும் விந்தை

கவிதைச் சித்தன் கும்மாளம்!

புலவர் குடந்தை வேலன்

.நாகராஜன் (எனது நோட்புக்கிலிருந்து)

 

கவிஞன் ஒருவனின் கும்மாளத்தைச் சித்தரிக்கும் கவிதை ஒன்று இது.
இது போன்றதொரு கவிதையை யாரும் பார்த்திருக்க முடியாது; படித்திருக்க முடியாது.

 

‘கவிஞராக’ என்ற புத்தகத்தில் அ.கி,பரந்தாமனார் எடுத்துக்காட்டாகத் தந்த இந்த ‘கவிதைச் சித்தன் கும்மாளம்’ என்ற கவிதை எனது நோட்டுப் புத்தகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குறித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது செல்லரித்துப் போன நிலையில் எனது சகோதரர் திரு சீனிவாசன் திடீரென்று அது கிடைத்து விட்டதாககக் கூறி தனது குறிப்பேட்டிலிருந்து அதை போட்டோ பிடித்து அனுப்பி இருந்தார்.

 

இதை எழுதியவர் குடந்தை வேலன். இவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் அற்புதமான கவிஞர் இவர் என்பதில் ஐயமே இல்லை. கவிதையைப் படித்தோர் கும்மாளம் போட்டுச் சொல்லும் உண்மை இது.

நல்ல கவிதை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அதை இங்கு பகிர்கிறேன்.

 

கவிதைச் சித்தன் கும்மாளம்!

எழுதியவர் குடந்தை வேலன்

 

கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்

கற்றறி மூடர்களே – ஒரு

சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு

சூளை கிளப்பிடுவோம்

 

ஆனையைப் பானையில் மூடி வைப்போமந்த

அண்டப் பெருவெளியும் – மிகக்

கூனிக் குறுகியெம் சொல்லெனும் மாயக்

குடுக்கையில் நின்றாடும்

 

வெண்ணெயை வைத்திட்டு நெய்க்கு அலைந்திடு

வீணர்களே வாரும் – இந்த

மண்ணில் இருக்குது விண்ணுலகம் எங்கள்

மந்திரத்தில் பாரும்

 

சப்பி எறிந்திட்ட கொட்டையில் மாமரம்

சட்டென ஓங்குது பார் – எழில்

சிப்பியில் முத்தெனச் சொல்லினில் வையச்

சிலிர்ப்பு கிளம்புது பார்

 

ஐந்தலைப் பாம்பையும் ஆட்டிப் பிடித்தே

அடக்கி மடக்கிடுவோம் –கர்ம

சிந்தையில் சீறிடும் அஞ்சு புலன்களைச்

சிந்தில் ஒடுக்கிடுவோம்

 

வானத்தில் வில்லை வளைத்திடுவோம் அந்த

மண்ணைச் சுருட்டிடுவோம் பர

மோனத்தை ஞானத்தளையில் பிடித்தே

மூப்பில் ஆழ்த்திடுவோம்

IMG_4972

நச்சினைத் தேனென்று மாந்திடுவோம் இசை

ஞான நடம் புரி கொள்வோம் –அந்த

அச்சிவ சங்கரன் நச்சை அயின்றதும்

அற்புதம் அற்புதமோ

 

வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்

வீழ்ந்தே  உடைந்ததடா –யாம்

நாதக்குழம்பில் புனைந்திட்ட சொற்கடம்

ஞானம் முழங்குதடா

(சொற்கடம் என்பதை சொற்கள் தம் எனப் பிரிக்க வேண்டும்)

 

என்ன ஒரு அருமையான கவிதை! இது போலொரு கவிதையை நான் கவிக் கூற்றாக எந்த ஒரு மொழியிலும் படித்ததில்லை.

 

இதை இயற்றியவரைப் பற்றிய குறிப்புகள் இல்லையே என மனம் ஏங்குகிறது.

 

அவரது இதர கவிதைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதையும் மனம் சிந்தித்து உவகை கொள்கிறது!

*****

 

 

‘சட்டை பட்டன் ரகசியம்’ – சர் வால்டர் ஸ்காட்டுக்குத் தெரியும்! (Post No 2742)

walter-scott-portrait

Written by London swaminathan

Date: 20 April 2016

 

Post No. 2742

 

Time uploaded in London :– 15-25

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

scott on stamp

புகழ்பெற்ற ஆங்கிலப் புலவரும் கதாசிரியருமான சர் வால்ட்டர் ஸ்காட் வாழ்வில் நடந்த சில சுவையான சம்பவங்கள்:–

துரியோதணன் உயிர் தொடையில் இருந்தது. அதை கண்ணன் சுட்டிக் காட்டவே, பீமன் கதையால் அடித்து வீழ்த்தினான். சில மாணவர்களின் “உயிர்” எங்கே இருக்கிறது என்பது ஒரு சுவையான விஷயம். ஸ்காட் அப்படி ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை. இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கையில் வாத்தியார் கேட்கும் கேள்விக்கு யார் முதலில் பதில் சொல்கிறாரோ அவருக்குத்தான் முதல் வரிசையில், முதல் பெஞ்ச்சில் இடம்.

 

ஸ்காட்டை விட புத்திசலியான ஒரு மாணவன், எல்லா கேள்விகளுக்கும், முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு பதில் சொல்லி வந்தான். ஆனால் அவனை உற்று நோக்கி வந்த ஸ்காட், ஒரு ரஹசியத்தைக் கண்டு பிடித்தார். அவன் ஒவ்வொரு முறை பதில் சொல்லும்போதும், சட்டையிலுள்ள பட்டனை (பொத்தானை) தடவிக்கொண்டெ பதில் சொன்னான். ஸ்காட் நினைத்தார்- இவன் உயிர் இதில்தான் இருக்கிறது என்று எண்ணி, ஒரு நாள் பள்ளிக்கு வந்தவுடனே அவனது பட்டனை கூரான கத்தி கொண்டு கத்தரித்துவிட்டார். இது அந்த மாணவனுக்குத் தெரியாது.

 

வகுப்பறையில் கேள்வி நேரமும் வந்தது. ஆசிரியர் கேள்வி கேட்டார். அந்தப் பையனுக்கு விடை தெரியும். உடனே பொத்தானைத் தடவ முயற்சித்தான். அங்கே பட்டன் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனே ஸ்காட் எழுந்து பதில் தந்தார். ஸ்காட்டுக்கு பரம சந்தோஷம் – தனது சதித்திட்டம் வெற்றி பெற்றதில்-

scott 2

ஸ்காட் மிகவும் இளகிய மனமுடையவர்.ஒரு முறை அவரது வீட்டில் திருடிய ஒருவனை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

ஸ்காட்: ஏய், நீ திருடினாயா?

பிடிபட்ட ஆள்: ஆமாங்க சாமி! நான் திருடியது உண்மைதான். என் குடும்பம் பட்டினியால் வாடுகிறது. நான் திருடிப் பணம் கொடுக்காவிடில், சோற்றுக்கு வழி இல்லாமல் நாங்கள் இறக்க நேரிடும்” என்றான். அவன் உண்மையைச் சொன்னதில் ஸ்காட்டுக்கு மகிழ்ச்சி. அவனுக்கு தனது ஆடு மாடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்தார். அவன் மிக விசுவாசமாக, ஸ்காட் வீட்டில் 20 ஆண்டுகளுக்கு வேலை செய்தான்! அவன் இறந்த அன்றைக்கு ஸ்காட் கண்ணீர் விட்டு அழுதார். நல்லவனாக மாறிய திருடன் மீது அவ்வளவு பாசம்!

 

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல, ஸ்காட் சிறு வயதிலேயே எதையும் ஊன்றிப் படிப்பார். படித்த விசயத்தில் ஆழ்ந்து ஐக்கியமாகி விடுவார். ஒரு முறை கப்பல் மூழ்குவது பற்றிப் படித்துக் கொண்டிருந்தார். அதிலுள்ளவர்கள் தப்பிக்க முயல்வது போல தாமும் தப்பிக்கும் கூச்சலை இட்டார். வீட்டிலுள்ள எல்லோரும் அதை வேடிக்கை பார்த்தனர்.

 

ஸ்காட் எழுதிய வேவர்லி கதை, “எழுதியவர் பெயரில்லாமல்” வெளியிடப்பட்டது. ஆசிரியர் பெயர் இல்லாத புத்தகம் என்றவுடன் அதற்கு நிறைய ஆதரவு கிடைத்தது. ஆயிரக் கணக்கில் விற்றது. ஆனால் எழுத்து நடையை வைத்தே, அது ஸ்காட்டினுடைய படைப்பே என்று ரசிகர்கள், கண்டு பிடித்துவிட்டனர்.

 

சிறு வயது முதல் ஸ்காட்டுக்குக் கவிதைகளும் பாடல்களும் பிடிக்கும். தனது ஸ்காட்லாந்து பற்றிய பாடல்களைப் படித்துக்கொண்டே இருப்பார்; பாடவும் செய்வார்; யார் குறுக்கிட்டாலும் நிறுத்த மாட்டார். பாடி முடித்த பின்னரே பதில் சொல்லுவார்.

novel scottnovel scott

ஸ்காட் எழுதிய புகழ் பெற்ற நூல்கள்:–

பிறந்த தேதி:-15-8-1771

இறந்த தேதி:- 21-9-1832

நிறைய கவிதைகளையும் கீழ்கண்ட புகழ்பெற்ற நாவல்களையும் எழுதினார்:–

Guy Mannering, Kenilworth, Ivanhoe, Waverly, Rob Roy, The Pirate, The Antiquary, The Black Dwarf, Woodstock, The Fortunes of Nigel, The Heart of Midloathian etc.

–சுபம்–

 

ஒரு நடிகையின் விநோத ஆசை!

sarah-bernhardt-5

Compiled by London swaminathan

Date: 18 April 2016

 

Post No. 2736

 

Time uploaded in London :–  20-58

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சென்ற நூற்றாண்டின் புகழ் பெற்ற நாடக நடிகை சாரா பெர்னார்ட். அவர் நோவாய்ப்பட்டு படுத்த படுக்கையாய்க் கிடந்தார். அவர் உயிர் பிழைக்க வேண்டுமானால், ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியவுடன் நடிப்பதையே விட்டுவிட வேண்டுமென்று  டாக்டர்கள் அறிவுரை பகன்றனர்.

ஆனால் அவரோ, படுக்கையை விட்டு எழுந்தவுடன் மீண்டும் நடிப்புத் தொழிலுக்கு வந்தார்.

Sarah-Bernhardt-portrait

இவ்வாறு அவர் மீண்டும் நடிக்க வந்தவுடன் ரசிகர்களுக்கு பரம சந்தோஷம். ஒரு பணக்கார ரசிகர் அவரிடம் ,நேரில் போய் உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்? சொல்லுங்கள்; எதைக் கேட்டாலும் செய்கிறேன் என்றார். அவரும் தயங்காமல் எனக்கு ஒரு சவப்பெட்டி வேண்டும். நான் நடிக்கத் துவங்கினால், எந்த நிமிடமும் சாவு நேரிடும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள் என்றார். அந்த ரசிகரும் கொஞ்சமும் தயங்கவில்லை. அதற்கு ஏற்பாடு செய்தார்.

 

அந்த ஊரிலேயே மிகவும் புகழ்பெற்ற, மரணக்கிரியை அலுவலத்திலிருந்து நடிகைக்கு தகவல் வந்தது. உங்களுக்கு சவப் பெட்டி செய்யும்படி எங்களுக்கு ஒரு ‘ஆர்டர்’ வந்துள்ளது. உங்களுக்கு எந்த மாதிரி சவப்பெட்டி வேண்டும் என்று சொல்லுங்கள்.

 

உடனே நடிகை சாரா, எனக்கு நல்ல கருங்காலி மரத்தில் சவப்பெட்டி செய்து, அதற்கு வெள்ளியில் கைப்பிடிகள் வையுங்கள் என்றார். சிறிது காலத்துக்குப் பின்னர், அந்த வெள்ளி கைப்பிடிகள், தங்கக் கைப்பிடிகளாக மாற்றப்பட்டன.

இவ்வாறு சவப்பெட்டி செய்யப்பட்ட பின்பும் அவர் நீண்ட நாட்கள் உயிரோடிருந்தார். ஆனால் ஒரு போதும் சவப்பெட்டியைவிட்டு அவர் அகலவேயில்லை. அவருடைய கால் மாட்டிலேயே ஒரு ஸ்டாண்டில் அந்த சவப் பெட்டி வைக்கப்படிருந்தது. அவர் எங்கு சுற்றுப் பயணம் செய்தாலும், அந்த சவப்பெட்டியும் அவர் பின்னாலேயே கொண்டு செல்லப்பட்டது!

ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர் சொன்னார்: “என்னுடைய பூத உடல் விரைவில் மண்ணோடு மண்ணாகிவிடும். ஆனால் என் புகழ் என்றும் நீடிக்கும்” என்றார்.

Xxx

hippopotamus-meat-1

நீர்யானை!!!

லண்டன் மிருகக்காட்சிசாலைக்கு ஒரு பெண்மணி வந்தார். நீர் யானை இருக்கும் பகுதிக்குச் சென்றார். அங்குள்ள பாதுகாவலரிடம் கேட்டார்:-

ஐயா, இந்த நீர் யானை பெண்ணா? ஆணா?

விலங்கின் பாதுகவலர் சொன்னார்:

அம்மணி! இது என்ன கேள்வி. அது ஆணா, பெண்ணா என்பது இன்னொரு நீர்யானை கண்டறிய வேண்டிய விஷயம்” என்று!

Xxx சுபம் xxx

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -5 (Post No 2732)

happy_birthday_100_years_old_card-

(ஸ்ரீ நிரோத்பரன் –அரவிந்த ஆசிரமம்

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 17 April 2016

 

Post No. 2732

 

Time uploaded in London :–  6-59  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வேத வழி

இதற்கு முந்தைய நான்கு கட்டுரைகளைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் வெளியாகும்  இறுதிக் கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -5

(ஸ்ரீ நிரோத்பரன் –அரவிந்த ஆசிரமம்)

 

.நாகராஜன்

 

 

FTSHappyBirthday

மஹரிஷி அரவிந்தர் காட்டிய நெறியில் வாழ்ந்து நூறு வயதைத் தாண்டிய பெரியார் ஸ்ரீ நிரோத்பரன்.

 

ஒரு பெரும் மஹாபுருஷருடன் நெருக்கமானத் தொடர்பை நீண்ட காலம் கொண்டிருந்ததால் இவர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு.

 

மேலும் அரவிந்தர் சாதாரணமாக யாருடனும் பேசுவதுமில்லை; பேட்டி கொடுப்பதுமில்லை. நிர்ணயிக்கப்பட்ட சில நாட்களில் மட்டும் ஆசிரமத்தில் வருகை புரிந்தோருக்கு அவரது தரிசனம் கிடைக்கப் பெறும். அந்த நிலையில் அவருடன் நெருக்கம் கொள்ளும் அபூர்வ பாக்கியத்தைக் கொண்டவர் நிரோத்.

 

நிரோத்பரன் 1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். 103 ஆண்டுகள் வாழ்ந்து 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மறைந்தார்.

 

 

எடின்பரோவில் மருத்துவக் கல்வி கற்ற நிரோத் பிரபல இசை விற்பன்னரான திலிப் குமார் ராய் மூலமாக (பாரிஸில் இருந்த போது) அரவிந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.1930ஆம் ஆண்டு அரவிந்த ஆசிரமம் வந்து அன்னையை தரிசித்தார். பின்னர் பர்மா சென்று  சுமார் இரு ஆண்டுகள் மருத்துவராகத் தொழில் புரிந்தார். பின்னர் யோகத்தில் ஆர்வம் ஏற்பட, அரவிந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆசிரம டாக்டராகப் பணியாற்றத் துவங்கிய நிரோத் அரவிந்தரை நேரில் பார்க்க முடியாத நிலையில் தன் சந்தேகங்களைக் கடிதம் மூலம் அனுப்பிப் பதிலைப் பெறலானார்.

 

 

இப்படி சுமார் 4000 கடிதங்களை அவர் எழுதி இருக்கிறார் என்றால் அவரது அருமையை நாம் எளிதில் உணரலாம்.

 

1938ஆம் ஆண்டு அரவிந்தரின் கால் உடையவே நிரோத்பரன் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க அழைக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு அரவிந்தருடனான நெருக்கம் அதிகரித்தது.

12 வருட கால அனுபவங்களை அவர் நினைவு  மஞ்சரியாக ‘12 இயர்ஸ் விந்த் ஸ்ரீ அரவிந்தோ’ (12 years wth sri Aurobindo) என்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார். மஹரிஷியுடன் அவர் பேசிய பேச்சுக்கள் (Talks with Sri Aurobindo) 3 தொகுதிகளாக வெளியாகி உள்ளன. அவரது கடிதப் பொக்கிஷங்களும் கூட (Correspondence with Sri Aurobindo) வெளியாகி உள்ளன.

 

 

அரவிந்தரைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்களைக் கூட அவர் அவரிடமே கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறார்.

ஒரு முறை அவர் அரவிந்தரிடம்,“ஏன் கன்பூஷியஸ், அரவிந்தர் போன்றோர் மண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்?” என்று கேட்ட போது அரவிந்தர், “அது இயல்பானதே! ஆன்மீக மாறுதலுக்கு முன்னர் அவர்கள் மணம் புரிந்து கொண்டனர். மாற்றம் வந்த பிறகு திருமணம் பழைய ஆன்மாவிடம் இருந்தது. புதிய ஆளுக்கு இல்லை” என்று பதிலிறுத்தார்.

 

 

 

ஆன்மீக வாழ்க்கையின் இரகசியத்தை அரவிந்தர் ஒரு முறை இப்படி விளக்கினார்: “அதற்கு இரண்டு படிகள் உள்ளன”

முதல் படி என்ன என்பதை அரவிந்தர் பாசு என்பவருக்கு எழுதிய கடிதத்தில்,“அன்னையிடம் சரணாகதி அடைவதே முதல் படி”

 (“One of the two great steps in this yoga is to take refuge in the Mother”) என் று விளக்கினார்.

 

 

அடுத்த இரண்டாம் படி?

 

அதை நிரோத்பரனிடம் அவர் விளக்கினார்: “தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற சாதகனின் துடிப்பான ஆர்வம் (“Aspiration of the sadhak for the divine life.”)

 

 

அரவிந்தரின் யோக முறையின் படி வாழப் புகுந்த நிரோத்பரன் பெரும் உயரிய நிலையை அடைந்ததும் ஆச்சரியம் இல்லை; 103 ஆண்டுகள் அவர் வாழ்ந்ததும் ஆச்சரியம் இல்லை.

அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான பணி – அரவிந்தர் போதித்த பொக்கிஷம் போன்ற ஆன்மீக ரகசியங்களை அவர் வெளியிட்டது தான்!

 

அவரது நினைவலைகள், கடிதங்கள், அரவிந்தர் வரலாறு, அரவிந்தருடனான அவரது சம்பாஷணைகள் ஆகியவை எந்தவொரு ஆன்மீக சாதகருக்கும் கிடைத்தற்கரிய ஒரு அரும் பொக்கிஷமாகும்.

 

***********                                                       இந்தத் தொடர் இத்துடன் நிறைவடைகிறது பண்டிட் ஸ்ரீ சாதவலேகர், காஞ்சி பெரியவாள், யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசார்யா, ஸ்ரீ நிரோத்பரன் ஆகியோரின் நூல்களையும் அவர்களைப் பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களையும் படித்து அனைவரும் உத்வேகம் பெறலாம். ஹிந்து  மதத்தின் வாழ்க்கை முறைக்கான நேரடிப் பலனை நிரூபித்தவர்கள் அண்மையில், சமகாலத்தில் வாழ்ந்த இவர்கள் என்பதே இவர்கள் அனைவரது பொதுவான தனிச் சிறப்பாகும்.

முற்றும்.

.

 

யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா (Post No.2725)

4bb116e0a41af94e-Krishnamacharya_Anjali_Mudra

WRITTEN BY S NAGARAJAN

Date: 15 April 2016

 

Post No. 2725

 

Time uploaded in London :–  9-38  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வேத வழி

 

இதற்கு முந்தைய மூன்று கட்டுரைகளைத் தொடர்ந்து, வெளியாகும் நான்காவது கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -4

(யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா)

 

.நாகராஜன்

 jnanayoginet_whois3

யோகம் காட்டிய நெறியில் வாழ்ந்து நூறு வயதை எட்டிய பெரியவர் யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா.

1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிறந்த இவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்து 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மறைந்தார்.

 

 

யோகா முறையை அதன் அற்புத பலன்களை நிரூபித்து எங்கும் பரப்பிய இவரது வாழ்க்கை முழுவதும் அதிசயமான சுவையான சம்பவங்கள் நிறைந்த ஒன்றாகும்.

 

 

மைசூர் மஹாராஜா கிருஷ்ண ராஜ உடையார் (1884-1840) தன் தாயாரின் 60வது பிறந்த தினத்தைக் கொண்டாட காசி சென்றார். அங்கு யோகி கிருஷ்ணமாசார்யாவின் பெருமையைக் கேட்டறிந்து அவரைச் சந்தித்தார். தம்முடன் மைசூர் வருமாறு அவரை அழைத்தார். அதை ஏற்ற கிருஷ்ணமாசார்யா மைசூருக்குக் குடியேறினார். மைசூர் அரண்மனையில் யோகம் கற்பிக்க ஆரம்பித்தார்.

 

 

யோகத்தின் அபூர்வ ஆற்றல்களைப் பரப்பும் விதமாக தானே ப்ல நேர்முக செய்முறை விளக்கங்களை ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் அவர் செய்து காண்பித்தார்.

தனது நாடித்துடிப்பை அவர் நிறுத்திக் காட்டினார். உலகமே அதிசயித்தது.

 

 

வெறும் கையினால் ஓடுகின்ற காரை நிறுத்திக் காட்டினார். தனது பற்களால் கனமான பொருள்களைத் தூக்கிக் காட்டினார்.

மைசூர் மஹாராஜாவின் மறைவுக்குப் பின்னர் சென்னையில் குடியேறிய அவர் அங்கு யோகா பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தார்.

 

 

ஆயுர்வேதத்திலும் மிகுந்த பயிற்சி உடையவராதலால் பல நோய்களைக் குணப்படுத்தும் அபூர்வ ஆற்றலும் அவருக்கு இருந்தது.

 

 

யோக மகரந்தம், யோக ரகஸ்யம் உள்ளிட்ட பல் நூலகளை அவர் இயற்றியுள்ளார்.

 

 

1935ஆம் ஆண்டில் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் தெரீஸ் ப்ராஸ் என்ற கார்டியாலஜிஸ்ட்   (There Brosse) முன்னர் அவன் தனது இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டினார். தனது கருவி மூலம் அவரது இதயத்துடிப்பைக் கண்காணித்த ப்ராஸ் அது ஜீரோவைக் காட்டவே திகைத்துப் போனார். மருத்துவ ரீதியாக யோகி கிருஷ்ணமாசார்யா‘இறந்து விட்டதாகவே’கூற வேண்டும் என்றார் அவ்ர். பல வினாடிகள் இந்த நிலை நீடித்தது. பின்னர் இயல்பான நிலைக்கு அவர் வர இதயத்துடிப்பு வழக்கம் போல இயங்க ஆரம்பித்தது!

1961ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இப்படி இதயத்துடிப்பை நிறுத்துவோரை ஆராய வந்த ஒரு குழுவினர் முன்னும் அவர் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். உலகமே யோகத்தின் அற்புத ஆற்றலைக் கண்டு வியந்தது!

 

 

96ஆம் வயதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. ஆனால் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவர் மறுத்து விட்டார். படுக்கையில் இருந்தவாறே பல பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை குணப்படுத்திக் கொண்ட அவர் நூறாண்டு நிறை வாழ்வை வாழ்ந்தார்.

 

 

அவருக்கு யோகாவில் பல சிஷ்யர்கள் உருவாயினர். அவர்கள் அவர் காட்டிய வழியில் யோக முறையைப் பரப்பும் நற்பணியை மேற்கொண்டனர்.

 

 

நவீன அறிவியல் யுகத்தில் யோகாவின் ஆற்றலையும் பெருமையையும் உலகிற்குக் காண்பித்த அவர், யோகா நெறியின் படி வாழ்ந்தால் நூறு என்ற பூரண வயதை எட்ட முடியும் என்பதை நிரூபித்தார்.

yogi

வேத வழியில் வாழ்ந்த பெரியோர்களின் பட்டியலில் யோகி கிருஷ்ணமாசார்யாவுக்குத் தனியிடம் உண்டு.

*****                                                           (அடுத்த கட்டுரையுடன் இந்தக் கட்டுரைத் தொடர் முடியும்)

 

 

 

 

அனக்ராம் – 3 (Post No.2723)

lisanagram

WRITTEN BY S NAGARAJAN

Date: 14 April 2016

 

Post No. 2723

 

Time uploaded in London :–  8-27  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Fun with English

 

அனக்ராம் – 3

 

ச.நாகராஜன்

 onager

ஆங்கிலத்தில் அனக்ராம் பைத்தியங்கள் ஏராளம் உண்டு,

Alice in Wonderland என்ற அற்புதமான நாவலை எழுதிய லூயிஸ் கரோலை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் ஒரு நாள் முழுவதும் கண் விழித்து ஒரு அனக்ராமை உருவாக்கினாராம்.

என்ன அனக்ராம்?

 

 

பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த William Ewart Gladstoneக்கு ஒரு அனக்ராமை உருவாக்க அவர் விரும்பினார்.

 

கஷ்டப்பட்டு அவர் மனம் போல உருவாக்கிய அன்க்ராம் இது:

 

“WILD AGITATOR. MEANS WELL”

 

மாமியாரைப் பிடிக்காத ஒருவர் கண்ட அனக்ராம் இது:

 

Mother-in-law – woman hitler

 

கணிதம் பிடிக்காத கிண்டல் பேர்வழியின் கைவண்ணம் இது:

 

Eleven plus two – twelve plus one

 

 

ஒஸாமா பின் லேடனுக்கு என்ன அனக்ராம்? இதோ:

 

Osama Bin Laden – an Islam bad one, anal media slob, a damn alien S.O.B.

 

எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, படிக்க!

 

இறுதிச் சடங்கைக் கூட விடவில்லை அனக்ராம் பிரியர்கள்:

Funeral – real fun

 

தண்டனைக்கு என்ன அனக்ராம்?

 

Punishment – nine thumps

 

ஆபாசத்திற்கும் ஒரு அன்க்ராம் உண்டு!

Porn is good – dong is poor

chickenanagram

 

இன்னும் சில அனக்ராம்கள்:

 

Elvis Presley – Presley lives

Desperation – a rope ends it

Information superhighway – a rough wimper of insanity

California – African oil

Vanilla Pepsi – nipple saliva

Austin Powers – power us satin

John Kerry – horny jerk

Justin Timberlake – im a jerk, but listen

Los Angeles Dogers – all negro goddesses

The Simpsons – mens hot piss

Halloween – awe hell no!

Cats meow – cows mate

Prostitute – tourist pet

Enduring – nude grin

Pi r squared (the formula for finding the area of a circle) – squid raper

 

அனக்ராம் கண்டுபிடிப்பதில் மனம் ஈடுபட்டால் அவ்வளவு தான், அதிலேயே லயித்துப் போவோம்!

 

***************

 

 

அனக்ராம் – 2 (Post No.2716)

anagram2

Date: 12 April 2016

 

Post No. 2716

 

Time uploaded in London :–  8-20  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Fun with English

 

அனக்ராம் – 2

 

ச.நாகராஜன்

 

அனக்ராமைப் பற்றிப் பேசும் போது சுவையான ஒரு  சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

 

17ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது:

பிரான்ஸில் ஆந்த்ரே போஸ்லே (ANDRE POSLE) என்ற குஷால் பேர்வழி ஒருவரிடம் அவனுடைய நண்பன் ஒருவன் ஒரு நாள் சொன்னான் இப்படி: “ஆந்த்ரே போஸ்லே! உன்னுடைய பெயரை மாற்றி அமைத்தால் PERDEUA LYONS என்று வருகிறதே! இதற்குப் பொருள் லியோன்ஸில் சாவு என்பது. ஒருவேளை உனக்குச் சாவு லியோன்ஸில் தானா?”

 

 

இயற்கையாகவே பயப்படும் மனப்போக்கை உடைய ஆந்த்ரே இந்த தமாஷ் பேச்சைக் கேட்டுக் கதிகலங்கிப் போனான். பிரான்ஸில் உள்ள லியோன்ஸ் என்ற நகரத்தில் பயங்கர குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கும் விசேஷ நீதி மன்றம் ஒன்று இருந்தது.

 

 

அந்தக் கோர்ட்டில் தன் மீது வழக்குப் போடப்படலாம் என்று அவன் எண்ணினான். விடாது இந்த நினைவு அவனைத் துன்புறுத்தத் தொடங்கியது.

 

தனக்கு தண்டனை நிச்சயம் என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்ட அவன், தன்னை ஏதோ ஒன்று ஆட்டிப் படைப்பதாக உணரலானான். கடைசியில் ஒரு கொலை வழக்கில் சிக்கிய அவனுக்கு அதே லியோன்ஸ் நகர் நீதி மன்றத்தில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

anagrams

விளையாட்டுச் சொல் வினையானது.

இதைப் போலவே மாவீரன் நெப்போலியன் போனபார்ட்- இன் பெயரிலேயே அவனது எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை அனக்ராம் வடிவத்தில் இருந்ததாம்!

 

NAPOLEION BONAPARTE என்பதன் அனக்ராம் NO, APPEAR NOT ON ELBA! – வேண்டாம்,, எல்பாவுக்கு வராதே என்பதாகும்.

இறுதியில் அவன் எல்பா தீவுக்கு அனுப்பப்பட்டு அங்கேயே இறந்தது வரலாறாகும்.

 

இத்துடன் எனது நூலான ‘ஆங்கிலம் அறிவோமா’ வில் அனக்ராம் பற்றிய அத்தியாயம் முடிகிறது.

 

இனி அனக்ராம் பற்றி இன்னும் கொஞ்சம் தொடர்வோம்:

 

சில அனக்ராம்களைப் பார்ப்போமா?

 

WILLIAM SHAKESPEARE  – I AM A WEAKISH SPELLER

ALEXANDER THE GREAT – EXTRA HATED GENERAL

CHRISTIANITY – IT’S ON CHARITY

CHRISTMAS – TRIMS CASH

NUCLEAR – AN ULCER

 

END OF AMERICA எப்படி ஏற்படும் என்று ஒருவர் அனக்ராம் போட்டுப் பார்த்தார். பதில் இப்படி வந்தது:

 

DEMONIAC FEAR –

 

பெரும் பயத்தால் தான் அமெரிக்காவுக்கு அழிவு வரும்!

FEAR WILL BE OUR DOWNFALL – ஆகவே அஞ்சாமல் முன்னேறுவோம் என்கிறார் ஒரு அமெரிக்கர்!

 

இன்னும் சில அனக்ராம் செய்திகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

**********

 

அனக்ராம் – 1 (Post No.2713)

anagrams-

Fun with English

 

அனக்ராம் – 1

 

Written by S NAGARAJAN
Date: 11 April 2016

 

Post No. 2713

 

Time uploaded in London :–  7-58  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 anagramically

ச.நாகராஜன்

 

ஆங்கிலம் அறிவோமா என்ற எனது நூலில் முதல் அத்தியாயத்தில் உள்ள 15ஆம் பகுதி அனக்ராம் பற்றியது.

அதை  இங்கே தருகிறேன். இந்த நூல் ஆங்கில மொழியில் உள்ள

வேடிக்கை விநோதங்களைத் தொகுத்துத் தரும் ஒரு நூல்.

 

 

அனக்ராம் (ANAGRAM) என்றால் என்ன?

 

ஒரு சொல் அல்லது பெயரில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு மாறுபட்ட பொருள் தரும் வேறொரு சொல்லோ, சொல் தொடரோ உண்டாக்குதல் என்று இதற்குப் பொருள். எடுத்துக்காட்டாக TELEGRAPH என்ற வார்த்தையில்  9 எழுத்துக்கள் உள்ளன.

 

 

இதையே மாற்றி GREAT HELP என்ற இரு வார்த்தைகளாக அமைக்கலாம். TELEGRAPH மக்களுக்கு பேருதவி புரிகிறதல்லவா?

 

 

இப்படி மூலச் சொல்லும் புதியதாக உருவாக்கப்பட்ட சொல்லும் ஏதோ ஒரு விதத்தில் விசித்திரமான தொடர்பு கொண்டிருப்பது சுவையான விஷயம்.

சில அனக்ராம்களைப் பார்க்கலாம்:

 

 Speak-Good-English-Movement

  1. SWEET HEART (அன்பிற்கினியாள்)
  2. MINISTER (மந்திரி)
  3. DEMOCRATIC (ஜனநாயகம்)
  4. PARLIAMENT (மக்கள் சபை)
  5. ASTRONOMERS (வானியல் நிபுணர்)

 

இவற்றிற்கான அனக்ராம்கள் என்ன?

முதல் அனக்ராமை இப்படி அமைக்கலாம்.

  THERE WE SAT (அங்கே நாம் அமர்ந்தோம்)

 

 

மந்திரியை மாற்றினால் வருவது ‘பாவத்தைச் செலுத்துதல்’ – PERMIT SIN

 

 

ஜனநாயகம் மாற்றப்படும் போது கிடைப்பது ‘தமாஷ் வியாபாரம்’. –  COMIC TRADE 

 

 

மக்கள் சபை மாறுவது அரைகுறை மனிதர் – PARTIAL MEN

என்று.  கடைசிச் சொல்லான வானியல் நிபுணர்

 மாற்றப்படும் போது கிடைப்பது இனிமேலும் நட்சத்திரங்கள் இல்லை – NO MORE STARS!

 

 

ஒரு விசித்திரமான தொடர்புள்ள வார்த்தைகளைக் கண்டு மகிழ்வது சுவையான அனுபவம் தானே!

இன்னும் சில எடுத்துக் காட்டுகள் இதோ:

 

  1. A SHARP LIFTER

HAS TO PILFER

 

\     2.  THE EYES

            THEY SEE

 

  1. DECIMAL POINT

I’M A DOT IN PLACE

 

  1. THE COUNTRY SIDE

NO CITY DUST HERE

 

  1. THE DETECTIVES

DETECT THIEVES

 

  1. THE NUDIST COLONY

NO UNTIDY CLOTHES

funny english 

நேர் எதிர்மாறான பொருள் தரும் சில அனக்ராம்கள்:-

 

  1. MISFORTUNE

IT’S MORE FUN

 

  1. VIOLENCE

NICE LOVE

 

  1. EVANGELISTS

EVIL’S AGENTS

 

இப்படி எழுத்துக்களை மாற்றி அமைத்துப் புதுச் சொற்களை அமைப்பது ஐரோப்பாவில் ஒரு காலத்தில் பிரபலமான பொழுது போக்காக இருந்தது.

 

அடுத்து அனக்ராம் பற்றி சில சுவையான தகவல்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

********

கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711)

modi humility

Compiled by london swaminathan

Date: 10 April, 2016

 

Post No. 2711

 

Time uploaded in London :–  8-47

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

‘அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்’- வெற்றிவேற்கை

dinamalar humility

ஸ்கட்லாந்தில் எடின்பர்க் நகரத்தில் கல்லூரி முதல்வர் ஜான் கேர்ன்ஸ் பற்றி அறியாதோர் எவருமிலர். ஒருமுறை ஒரு பெரிய பொதுக்கூட்டத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவர் அடக்கத்தின் சின்னம்; பணிவின் இலக்கணம்; எளிமைக்கு எடுத்துக்காட்டு.

 

அவர் கூட்டத்தில் நுழைந்தவுடன் ஒரே கரகோஷம்! அவர், இது தனக்காக இல்லை, வேறு யாரோ ஒருவருக்கு என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தார். ஊர் பேர் தெரியாத ஒரு குள்ளமான ஆசாமி அவர் பின்னால் வந்தார். பிரின்ஸிபால் கேர்ன்ஸ், தலையை பவ்யமாகக் குனிந்து, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து, அவரை முன்னே போகவிட்டார். அவர்தான் அன்றைய கூட்டத்தின் கதாநாயகர் என்று கேர்ன்ஸ் நினைத்தார். இப்படி அவர் பணிவுடன் நடந்ததைப் பார்த்த மக்கள் கூட்டம் விண்ணதிர கைதட்டி ஆரவாரம் செய்தது. அந்த மண்டபமே இடிந்து விழும் அளவுக்கு கரகோஷம்; பின்னர்தான் தெரிந்தது தனக்குத் தான் அந்த வரவேற்பு என்பது! கூட்டத்தை ஏற்பாடு செய்தோர், கேர்ன்ஸை மரியாதையுடன் மேடைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தனர்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் – வள்ளுவன் குறள் 125.

 

Xxxx

 

Park Ave Lady_profile

முற்றும் உணர்ந்தவரில்லை முழுவதூஉங்

கற்றனம் என்று களியற்க – சிற்றுளியாற்

கல்லும் தகரும், தகரா கனங்குழாய்!

கொல்லுலைக் கூடத்தினால் (நீதிநெறி விளக்கம்)

 

அடக்கமில்லாப் பெண்!

ஆங்கிலப் பேரகராதியை முறையாகத் தயாரித்து பெரும்புகழ் பெற்றவர் சாமுவேல் ஜான்சன். அவருடைய அறையில் சுவையான பல விஷயங்கள் விவாதிக்கப்படும். ஒரு முறை, அந்த விவாதம் ‘பலான’ விஷயங்களை நோக்கித் திசை திரும்பியது. உடனே ஒரு பெண்மணி, மிகவும் நல்ல பத்தினி போல, முகத்தைச் சுழித்துக்கொண்டு, வெளியேறினார்.

உடனே ஜான்சன் சொன்னார்:

“இப்போது போனாளே, ஒரு பதிவிரதை, அவள்தான், இந்த அறையிலேயே அடக்கமில்லாத பெண்”.

 

–சுபம்–