அளவறிந்து வாழ்க! (Post No.2710)

borosilicate-glass-beaker-lf

Written by S NAGARAJAN

Date: 10 April 2016

 

Post No. 2710

 

Time uploaded in London :–  7-07  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வள்ளுவர் வழி

 

அளவறிந்து வாழ்க!

 

ச.நாகராஜன்

 

 

அளவறிந்து வாழ்க!

 weights

உலகில் யாரும் சொல்லாத சூத்திரங்களைத் தொகுத்துச் சுருக்கமாக ஆங்காங்கே குறளில் சொல்லியுள்ளார் வள்ளுவர்.

வாழ்க்கை நெறிகளைப் பற்றிச் சொல்லும் போது அளவறிந்து என்ற வார்த்தையை அவர் மூன்று இடங்களில் பயன்படுத்துகிறார்.

 

 

அளவறிந்து உண்க!

 

ஒன்றின் மூலம் பெறுதற்கரிய வாழ்க்கையைப் பெற்ற போது நீண்ட நாள் வாழ வழியைச் சொல்கிறார்.

 

அற்றால் அளவறிந்து உண்க அஃது உடம்பு                        பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு     குறள் 943

 

அளவறிந்து உண்க என்பதன் மூலம் ஆழ்ந்த பொருளை விளக்குகிறார். அதனால் உடம்பு பெற்ற பயனைக் கொண்டு நீண்ட நாள் வாழ முடியும்.

 

 

அளவறிந்து கற்க!

 

அடுத்து அளவறிந்து கற்க என்கிறார் அவர். கற்க வேண்டியதைக் கசடறக் கற்பதோடு அளவறிந்து கற்க வேண்டும் என்பது அவர் அறிவுரை.

 

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா                 மாற்றம் கொடுத்தற் பொருட்டு         குறள்  725

 

இதனால் எந்த அவையின் முன்னாலும் பேசலாம். உலகப் பெரும் தலைவர் ஆகலாம் என்பது அவரது வழிகாட்டுதல்!

ounce

 

அளவறிந்து ஈக!

 

அடுத்து பெற்ற பொருளைப் பேணிக் காக்க ஒரு வழியையும் கூறுகிறார். அளவறிந்து ஈக என்பது அவரது அறிவுரை.

 

ஆற்றின் அளவறிந்து ஈக அது பொருள்                         போற்றி வழங்கும் நெறி              குறள் 477

 

வருவாய்க்குத் தக்கபடி கொடுக்க வேண்டும் என்பது சுருக்கமான சூத்திரம் போன்ற அறிவுரை.

ஒன்றின் மூலம் நீண்ட நாள் வாழ வழி தந்து, இன்னொன்றின் மூலம் அவையஞ்சா தலைமை கொள்ள வழி காட்டி கடைசிக் குறளின் மூலம் சம்பாதித்த பொருளைப் போற்றும் நெறியைக் காட்டுகிறார்.

 

 

அளவறிந்து வாழவில்லையேல்?

 

இப்படி அளவறிந்து வாழவில்லை என்றால் என்ன ஆகும்?

அதற்கும் அவர் பதில் தருகிறார் இப்படி:

 

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல                   இல்லாகித் தோன்றாக் கெடும்                    குறள் 479

 

தன் வலிமையை அறிந்து வாழ்; தன் வரவை அறிந்து வாழ்; தன் அறிவை அறிந்து வாழ்; தன் உடம்பை அறிந்து வாழ்; அப்படி வாழவில்லையேல் அது வாழ்க்கை நன்றாக இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தைக் காட்டி உன்னைக் கெடுத்து விடும் என்கிறார் அவர்.

 

units_of_measure

அறம் நிற்கும் இடம்!

 

அளவறிந்தார் நெஞ்சத்  தறம் போல் நிற்கும்                 களவறிந்தார் நெஞ்சில் கரவு           குறள் 288

 

அறம் எங்கே நிற்கும்? உலகின் தர்ம மரபுகளை அறிந்து வாழ்க்கையை அளவோடு வாழ வேண்டும் என்று நினைப்பவரின் மனதில் அறம் நிற்கும். அது எப்படி இருக்கிறது என்றால் பாவச் செயல்களைச் செய்வதிலேயே பழக்கப்பட்டவர்களின் மனதில் வஞ்சனை நீங்காது நிலைத்துக் குடி கொள்வது போல இருக்கும்!

என்ன அழகான விளக்கம்!

 

 

அளவறிந்து என்ற சொல்லின் பொருளை அறிய வள்ளுவரின் குறளில் அளவு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்திய இதர சில குறள்களையும் படித்தால் முழுப் பொருளையும் அறியலாம்.

வாழ்க்கை முழுவதும் கற்க வேண்டிய நூல் வள்ளுவரின் குறள்!

அதைப் பயில்வது தமிழரின் பாக்கியம்!

 

********

கோடிக் கணக்கான டன் கழிவுப் பொருட்கள்! (Post No. 2704)

rubbish1

Written by S NAGARAJAN (வானொலி உரை)
Date: 8 April 2016

 

Post No. 2704

 

Time uploaded in London :–  8-57  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சுற்றுப்புறச் சூழல் பற்றிய சில சிந்தனைகள்

 

rubbish2

      ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் வீணாக்கும் பொருளின் அளவு எவ்வளவு என்று தெரிந்து கொண்டால் திகைத்து மலைக்க நேரிடும். ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனில் மட்டும் 28 கோடி டன்கள் கழிவுகளாக உருவாகிறது. இதை எடுத்துச் செல்ல ஏழு லட்சம் விமானயகள் வேண்டும்.

 

நம்மையும் அறியாமல் நாம் உணவு, பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள், கண்ணாடி பாட்டில்கள், கேன்கள், புத்தக அட்டைகள், பேப்பர்கள் ஆகியவற்றை அவ்வப்பொழுது தூக்கி எறிந்து கொண்டே இருக்கிறோம்.

 

இவற்றில் பல இயற்கை ஆதார வளங்களினால் உருவாக்கப்படுகிறது என்பதை நம்மில் பலர் மறந்தே விடுகிறோம். நிலக்கரி, மரங்கள், எண்ணெய்கள், அலுமினியம் போன்றவற்றால் உருவாக்கப்படுவதை நாம் சர்வ சாதாரணமாகத் தூக்கி எறிந்து விடுகிறோம்.

 

இந்த நிலை மாற மறு சுழற்சிக்குள்ளாக்குதல் என்ற புதிய உத்தியை உலகினர் அனைவரும் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர். நாம் தூக்கி எறிபவற்றில் பலவற்றை நல்ல உரமாக மாற்ற முடியும்.

 

ரீ சைக்கிள் வங்கி (Recycle Bank) என புதிய வங்கியை சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் இன்று உருவாக்கி வருகின்றனர். இதில் பிளாஸ்டிக், கார்ட் போர்டிலிருந்து அனைத்துப் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. மறு சுழற்சிக்குள்ளாகும் பொருள்களை இவை மறு சுழற்சிக்குள்ளாக்குகின்றன.

 

மரக் கன்றுகளை நடும் இயக்கம் உலகெங்கும் இன்று பரவலாக பரவி வருகிறது. மரங்களைக் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் பேப்பர்களும் கூட மறு சுழற்சிக்குள்ளாக்கப்படுகின்றன. ஒரு பக்கம் மட்டும் எழுதப்பட்ட பேப்பர்களை வீணாக்காது குறிப்பு எழுத உதவும் சிறு நோட்டுகளாக அவை மாற்றப்படுகின்றன.

நாம் பயன்படுத்தாத ஆடைகள் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் புதிய வழி உலகெங்கும் பரவி வருகிறது. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளை கட்டாயம் எடுத்துச் செல்வது பழக்கமாகி வருவதால் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் அருகி குறைந்து வருகிறது.

 

நண்பர்கள் மற்றும் உறவினரிடம் கலந்துரையாடும் போது சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் புதிய உத்திகளைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பயன்களைப் பற்றியும் சொல்வதும் இன்றைய நடைமுறை வழக்கமாக ஆகி வருகிறது. இந்தத் தொண்டர் தம் திருக்கூட்டத்தில் நாமும் இணையலாமே!

xxxxx

ஆய கலைகள் 64 முழு விவரம் – பகுதி-2 (Post No 2699)

chatus-shasti-kala

Compiled by london swaminathan

Date: 6 April, 2016

Post No. 2699

Time uploaded in London :–  8-11 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நேற்று இதன் முதல் பகுதி வெளியிடப்பட்டது. அதில் முதல் 21 கலைகளின் விவரங்கள் உள்ளன.

 

முந்தைய கட்டுரைகள்

Previous articles on 64 Arts:

உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !! ( 4 May 2014)

 

Wonderful Syllabus for Women (Posted on 4 May 2014)

பெண்களின் 64 கலைகள்! (29 May 2012)

Techniques of Secret Writing in India ( 19 March 2013)

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி ( 19 March 2013)

64 art-13

 

64 art-14

 

 

64 art -15

64 art-15

 

64 art-16

64 art-17

64 art-18

64 art-19

 

64 art-20

 

64 art-21

 

64 art-22

 

64 art-23

 

64 art-24

64 art-25

64 art-26

–சுபம்–

 

 

நவக்கிரகங்கள் பூஜித்த தலங்கள் (Post No. 2692)

 

NAV1

Written by S NAGARAJAN

Date: 4 April 2016

 

Post No. 2692

 

Time uploaded in London :–  8-35  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம்  ஏப்ரல் 2016 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

 

 

.நாகராஜன்

Navagraha(route map)

கிரகங்களை ஆக்டிவேட் செய்வதா?

 

ஆன்மீகத்திற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத பத்திரிகைகள் மற்றும் தொலைக் காட்சி சானல்களில் நட்சத்திர ஸ்தலங்கள், நவக்கிரகங்கள் பூஜை செய்த ஸ்தலங்கள் என்று நாளுக்கு ஒரு பட்டியல் வருகிறது. நவக்கிரகங்களை ‘ஆக்டிவேட்’ செய்யும் மாயாஜால வேலைகளை சிலர் செய்வது கண்டு ஆன்மீக அன்பர்கள் மனம் நொந்தூ போகிறார்கள். இது இயல்பே.

நெட் உலகில் வைக்கோல்போரில் ஊசி தேடுவது போல உண்மையைத் தேட வேண்டியிருக்கிறது.

 

 

தமிழ்த்தாத்தாவும் தி.வே.கோபாலையரும்

 

இந்த வகையில் நவக்கிரகங்கள் பூஜித்த தலங்களைப் பற்றிய சரியான உண்மையைத் தேடுவோருக்கு தமிழ்த்தாத்தா மஹாமஹோபாத்யாய உ.வே.சாமிநாதையரின் குறிப்புகள் பேருதவியாக இருக்கும். ஊர் ஊராகச் சென்று அனைத்துச் சுவடிகளையும் சேகரித்து அவற்றிலிருந்து அவர் எடுத்த குறிப்புகள் ஏராளம். ஸ்தலங்களைப் பற்றி அவர் எடுத்த குறிப்புகள் இரு பாகங்களாகப் பல்லாண்டுகளுக்கு முன்னர் வெளி வந்துள்ளன.

இன்னொரு தமிழ் அறிஞர் தி..வே. கோபாலையர். வெளி உலக விளம்பரத்தை விரும்பாது பாண்டிச்சேரியிலிருந்து இவர் ஆற்றிய பணி மிகவும் அரிய் பணி. தேவார ஆய்வுத் துணை என்ற நூலில் ஸ்தலங்களைப் பற்றி இவர் சேகரித்த ஆய்வுக் குறிப்புகள் அற்புதமானவை.

 

அந்தக் குறிப்புகளிலிருந்து சில தகவல்களைக் கீழே வழங்குகிறோம். இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் அந்தந்த தலங்களுக்குச் சென்று குறிப்பிட்ட கிரகங்களை ப்ரீதி செய்யும் விவரங்களைக் கேட்டு உரியனவற்றைச் செய்யலாம். சில சமயம் நாம் அறிந்த தகவல்களைப் பற்றி விசாரிக்கும் போது அந்த தலத்தின் குருக்களே, ‘அப்படியா’  என்று வியப்படைவதைக் கண்டு நாம் வியப்படைய வேண்டியதாக இருக்கிறது!

 

navagraha, irumbai

சூரியன் பூஜித்த ஸ்தலங்கள் 12

 

  1. கேதாரம்: இமயமலையில் உள்ளது
  2. திருக்கோலக்கா: சூரிய புட்கரணி உள்ள ஸ்தலம். கார்த்திகை ஞாயிறு விசேடம்.
  3. திருவெண்காடு: சூரிய புட்கரணி.ஆவணி ஞாயிறு விசேடம்.
  4. சாயாவனம்: ஆதித்ய புட்கரணி உள்ள ஸ்தலம்.கார்த்திகை ஞாயிறு விசேடம்.
  5. கருங்குயில்நாதபுரம்: மித்திர புட்கரணி. காவேரியில் கார்த்திகை ஞாயிறு விசேடம்
  6. திருத்துருத்தி: ரவி தீர்த்தம். கார்த்திகை ஞாயிறு கார்த்திகையில் விசேடம்,
  7. ஸ்ரீ வாஞ்சியம்: பூஷண தீர்த்தம். குப்த கங்கை. கார்த்திகை ஞாயிறு விசேடம்
  8. திருநாகேஸ்வரம்: சக்தி தீர்த்தம். கார்த்திகை ஞாயிறு விசேடம்
  9. குடந்தைக் கீழ்க்கோட்டம்: காவேரியில் மரீசி தீர்த்தம். கார்த்திகை ஞாயிறு விசேடம்
  10. தேதியூர்: அர்க்க புட்கரணி. கார்த்திகை ஞாயிறு விசேடம்
  11. மீயச்சூர் : ரத ஸப்தமி
  12. திருவாவடுதுறை: ரத ஸப்தமி. மீயச்சூரிலும் திருவாவடுதுறையிலும் திதி விசேஷம். இந்த ஸப்தமியில் ஞாயிறு சேர்ந்தால் மஹாயோகம்

மேற்கண்டவற்றில் சூரியனுக்கு ஆலயங்கள் உள்ள இடங்களாவன: ,மீயச்சூர்,திரு நாகேஸ்வரம், குடந்தைக் கீழ்க்கோட்டம்,

சூரியன் பூஜித்த இதர ஸ்தலங்கள்; இன்னம்பர் (இனன் என்றால் சூரியன்), திருவையாறு,திருத்தாளமுடையார் கோயில், கழுக்குன்றம், பருதி நியமம் மற்றும் ஆடானை

 

 

சந்திரன் பூஜித்தவை:

 

  • கேதாரம் 2) சோமநாதம் 3) கஞ்சனூர் 4) அச்சுதமங்கலம் 5) குடந்தைச் சோமேசம் 6) மானாமதுரை 7)திருவெண்காடு (சந்திர புட்கரணி) 8) பிரயாகை

சோமன் அதாவது சந்திரனால் பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் சோமேசுவரர் எனப் பெயர் பெறுவார்.

 

 

அங்காரகன் பூஜித்தவை

 

  • கேதாரம் 2)வேளூர் 3)அத்திப்புலியூர் (தை செவ்வாய்) 4) இலந்துறை (கார்த்திகைச் செவ்வாய்) 5) மங்கலக்குடி (மார்கழிச் செவ்வாய்) 6) கச்சித் திருநெறிக்காரைக்காடு

 

புதன் பூஜித்தவை

  • கேதாரம்
  • வெண்காடு (சந்திர புட்கரணியில் புத தீர்த்தம்.  வடக்கே தரையில் புதன் இருக்கிறார் ஆனி, புரட்டாசி புதன்கிழமை விசேடம்

3) சீர்காழி

4) குருகாவூர்

navabhasanam

 

குரு பூஜித்தவை

 

1.கேதாரம் 2) திருக்கொண்டீஸ்வரம் (கார்த்திகை வியாழன் விசேடம்)

3) பெருஞ்சேரி (மார்கழி வியாழன் விசேடம்)

4) மாங்குடி (பங்குனி வியாழன் விசேடம். இந்த ஊர் கொல்லு மாங்குடிக்கு மேல்புறம் உள்ளது)

5) சிதம்பரம்

 

 

சுக்கிரன் பூஜித்தவை

 

  • கேதாரம் 2) வாஞ்சியம் (ஆடி வெள்ளி விசேடம்)

3)சிதம்பரம்: புரட்டாசி வெள்ளி விசேடம். 4)திருக்கோடிகா (வைகாசி வெள்ளி விசேடம்) 4) காஞ்சீபுரம் (தை வெள்ளி ஸ்நான விசேடம்) 5) கரையபுரம்

 

 

சனி பூஜித்தவை

 

  • கேதாரம் 2) வழுவூர் (தை, மாசி சனி விசேடம்) 3) திருநள்ளாறு: (வைகாசிச் சனி விசேடம்) 4)வேதாரணியம் (கார்த்திகைச் சனி விசேடம்) 5)ஆரூர்: மேற்படி ஸ்நான விசேடம் 6) திருச்செங்காட்டங்குடி

ராகு பூஜித்தவை

 

  • கேதாரம் 2) சீர்காழி

கேது பூஜித்தவை

 

  • கேதீஸ்வரம் (இலங்கையில் உள்ளது)

 

சூரிய பூஜை ஸ்தலங்கள்

 

சூரியனின் கிரணங்கள் குறிப்பிட்ட நாளில் சிவலிங்கத்தின் மீது பட்டு சூரியன் பூஜை செய்வதை பல ஸ்தலங்களில் பார்க்கலாம்.  இப்படிப்பட்ட ஸ்தலங்கள் பாரதம் முழுவதும் ஏராளம் உள்ளன.

தமிழறிஞர் தி.வே.கோபாலையர் அவர்களின் குறிப்பின் படி:

 

  • கண்டியூர் 2) குடந்தைத் திருக்கோட்டம் 3) தெளிச்சேரி 4) நெல்லிக்கா 5) புறவார் பனங்காட்டூர் 6) வேதிகுடி ஆகிய ஸ்தலங்கள் சூரிய பூஜை ஸ்தலங்களாகும்

திங்களூர் சந்திர பூஜை ஸ்தலமாகும்.

இந்தப் பேரறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகள் கூறும் ஸ்தலங்கள் ஆன்மீக பக்தர்களின் யாத்திரைக்கு உகந்தவை. இவையல்லாது நவக்கிரகங்களை ஆக்டிவேட் செய்பவர்க்ள் கூறும் ஸ்தலங்கள், அவர்களால் “ஆக்டிவேட்” செய்யப்படுபவையே என்று கொள்ளலாம்!

 

********

 

 

சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்! (Post No.2679)

china-sequence_1559762b

Written by S NAGARAJAN

Date: 31 March 2016

 

Post No. 2679

 

Time uploaded in London :–  6-09 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 1-4-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்!

 

ச.நாகராஜன்

 

(This article is written for Bhagya Magazineby my brother S NAGARAJAN- londonswaminathan)

 eclipse solar

“கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்காமல் இருப்பது நல்லது”. – ஜெஃப் கோல்ட்ப்ளம்

 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூரிய ஒளி மறைக்கப்படுவதை சூரிய கிரகணம் என்கிறோம். 2016ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதை ஒரு சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடிந்தது.

 

 

சூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி.

சூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் உணவு உண்பதில்லை; பிரார்த்தனைக்கான நேரம் கிரகண காலம் என்பர்.

பொதுவாக சூரிய கிரகண காலத்தில் ஆளும் மன்னருக்கு ஆகாது என்பது உலக நாடுகள் பலவற்றிலும் நிலவி வரும் நம்பிக்கை.

கிரகணம் பற்றிய சில சுவையான அறிவியல், சமூக மற்றும் ஆன்மீகத் தகவல்களைப் பார்ப்போம்:

 

 

1919ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி உலகில் மிக முக்கியமான கிரகணம் ஒன்று ஏற்பட்டது. உலகின் மிக பிரபலமான மேதை ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தத்துவப் படி புவி ஈர்ப்பு விசை ஒளியை வளைக்க வேண்டும். முதல் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் இந்த சூரிய ஒளி பற்றிய ஆய்வுக்கு இரு இடங்களைத் தேர்ந்தெடுத்தது. அங்கு பார்வையாளர்களை அனுப்பியது. சூரியனின் ஒளி தற்காலிகமாகத் தடைப்பட்ட போது வானவியல் விஞ்ஞானியான சர் ஆர்தர் எடிங்டனும் அவரது குழுவினரும் தொலைதூரத்திலுள்ள நட்சத்திரங்களிலிருந்து கிளம்பும் ஒளி சூரியனின் ஈர்ப்பு விசையால் வளைந்ததைக் கண்டனர், வியந்தனர். இதன் மூலம் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை சரியே என்பது நிரூபிக்கப்பட்டது.

 

 

இந்த கிரகணம் உலகின் மிக பிரம்மாண்டமான அறிவியல் கொள்கையை மெய்ப்பித்தது. ஒரே நாளில் உலகமே ஐன்ஸ்டீனைக் கொண்டாடியது.

 

 

1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று இந்தியாவில் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது. வானவியல் நிபுணர் ஜூல்ஸ் ஜன்ஸென் (Jules Janssen) அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஸ்பெக்ட்ரோகிராப் கருவியைச் சூரியனை நோக்கித் திருப்பிப் பார்த்தார். சூரியனின் க்ரோமோஸ்பியரில் ஒரு அசாதாரண சிறப்பு அலைமாலையைக் (spectral signature) கண்டார். இது கிரகணத்தின் போது மட்டுமே காணப்பட்ட ஒரு நிகழ்வு. இதில் ஒரு புதிய மூலகத்தை அவர் கண்டு  பிடித்தார். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பை உலகம் லேசில் ஏற்கவில்லை. இது மிக மிக இலேசான வாயு. இதன் பெயர் தான் ஹீலியம். கிரேக்க புராணங்களில் வரும் சூரியனுக்கான பெயர் ஹீலியோஸ். அதிலிருந்து இந்தப் பெயர் இந்த வாயுவுக்குச் சூட்டப்பட்டது.

annular-eclipse

 

கிரகணத்தினால் அறிவியலுக்குக் கிடைத்த ஆதாயங்கள் இவை என்றால் பல சரித்திர சம்பவங்கள் கிரகணத்தின் பாதகமான விளைவுகளைச் சுட்டிக் காட்டுகின்றன!

 

 

முதலில் மஹாபாரதத்தை எடுத்துக் கொள்வோம். பீஷ்ம பர்வத்திலும் உத்யோக பர்வத்திலும் ஏராளமான வானவியல் குறிப்புகள் வருகின்றன.

 

 

மஹாபாரத யுத்தம் வருவதைச் சுட்டிக் காட்டும் மோசமான வானியல் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று பதின்மூன்றாம் நாளே அமாவாசை வருவது.

 

 

ஒரு சந்திர கிரகணமும் அதைத் தொடர்ந்து ஒரு சூரிய கிரகணமும் வருவது உலகில் நடைபெறாத ஒரு சம்பவம். அத்தோடு கிரகங்கள் வக்கிர நிலையை அடைகின்றன. இவை அனைத்தும் உலகில் இதுவரை நிகழாத ஒரு மாபெரும் போர் நிகழ இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள்.

இதைத் தொடர்ந்து இன்னும் பல துர் சகுனங்களை மஹாபாரதம் விளக்குகிறது. ஆக, அசாதாரணமான இரு கிரகணங்கள் பெரும் போரை உலகில் விளைவித்ததை மஹாபாரதம் தெளிவாக்குகிறது.

 

 

அடுத்து மிகவும் சிக்கலான ஒரு கிரகணத்தை புனிதர்கள் மார்க், மாத்யூ, ல்யூக் ஆகியோர் பூடகமாக சுட்டிக் காட்டுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தன்று உலகம் இருளில் மூழ்கியது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது சூரிய கிரகண நிகழ்வா என்ற விவாதம் இன்றளவும் தொடர்கிறது. ஆனால் புனிதர் ஜான் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. வானியல் வல்லுநர்கள் கி.பி. 29ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மத்திய கிழக்கில் ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்ததையும் கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்ததையும் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுகள் சிலுவையில் அறையப்படும் தினத்துடன் பொருந்தவில்லையே என்ற விவாதம் தொடர்வதால் சிலுவையில் ஏசு அறையுண்டதற்கும் கிரகணத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.

total-solar-eclipse-2015-svalbard-totality

அடுத்து கொலம்பஸை கிரகணத்துடன் தொடர்பு படுத்தும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. புது நாடு காணப் புறப்பட்ட கொலம்பஸுக்கு வானியல் அறிவு நிறையவே உண்டு. வானில் உள்ள கிரக சஞ்சாரம், நட்சத்திர இயக்கம் ஆகியவற்றை வைத்தே அவர் தன் பயணத்தைத் தைரியமாக மேற்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது கப்பல் 1509 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி  ஜமைக்கா அருகே விபத்திற்குள்ளாக சுமார் எட்டு மாதங்கள் தன் குழுவினருடன் ஒரு தீவில் அவர் தங்க வேண்டி நேர்ந்தது. சாப்பாட்டிற்கு வழி?

 

 

அங்கிருந்த பூர்வகுடிகள் அவரது குழுவினருக்கு உதவ முன் வந்தனர். இதற்குக் காரணம் அவரது வானியல் அறிவு தான். அதன் மூலம் பூர்வ குடிகளின் தலைவனை அவர் மிகவும் கவர்ந்தார். ஆனால் இந்த இலவச சாப்பாடு தொடர்ந்து நடக்கவில்லை. ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அவர்கள் உணவு கொடுப்பதை நிறுத்திக் கொண்டனர். தனது வானியல் அறிவால் கொலம்பஸ் அன்று சந்திர கிரகணம் ஏற்படுவதைக் கணக்கிட்டார்.பூர்வ குடியினரின் தலைவனை அழைத்த கொலம்பஸ் அவர்கள் தனது குழுவினருக்கு உணவு அளிப்பதை நிறுத்தி விட்டதால் கடவுளின் சாபம் அவர்கள் மீது ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அன்று சந்திரன் மறைந்தே போவான் என்றும் கூறினா. சற்று நேரத்தில் சந்திரனை முழுவதுமாகக் காணோம்!

 

 

 

பூர்வ குடிகளின் தலைவன் தன்னை மன்னிக்குமாறு கூறவே அதை கொலம்பஸ் கடவுளிடம் “எடுத்துச் சொல்லி” சந்திரனை சற்று நேரத்தில் மீட்டுக் கொண்டு வரவே தீவே ஒரே உற்சாகமயமாக ஆனது! கொலம்பஸ் குழுவினருக்கு உணவும் பூர்வ குடிகளுக்கு சந்திரனும் கிடைத்தன! இந்த உண்மை நிகழ்ச்சியை பல்வேறு எழுத்தாளர்கள் தங்கள் கதையில் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பிடத்தக்க ஒரு பிரபலமான நாவல் மார்க் ட்வெய்ன் எழுதிய ‘எ கனெக்டிகட் யாங்கி இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட் (A Connecticut Yankee in King Arthur’s Court) என்ற நாவலாகும்!

 

 

இனி கிரகணத்தால் மன்னர்களுக்கு ஏற்பட்ட அபாயங்களைப் பார்ப்போம்.

 

Basic RGB

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

மைக்கேல் ஷெர்மர் உலகப் பகுத்தறிவுக் கழகத்தின் தலைவர். விஞ்ஞானபூர்வமாக இல்லாத எதையும் நம்பக் கூடாது என்று வலியுறுத்தி வருபவர். இவரது கழகத்தில் சுமார் 55000 உறுப்பினர்கள் உள்ளனர். ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் 2001 ஏப்ரல் மாத இதழிலிருந்து பகுத்தறிவுப் பகுதியை எழுதி வருபவர் இவர்.இவரது பகுத்தறிவை ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவரது திருமண தினமான 2014 ஜூன் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அதை இவரே தனது ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகை பகுதியில் பகிர்ந்து கொண்டது தான் சுவாரசியமான விஷயம்!

 

 

ஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபை அவர் மணமுடிக்க முடிவு செய்தார். ஜென்னிபருக்கு அவரது தாத்தா என்றால் உயிர். ஆனால் அவரது 16ஆம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார்.  தாத்தா பயன்படுத்திய 1978ஆம் வருட பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரை அவர் போற்றிப் பாதுகாத்து வந்தார்.

அது இயங்கவில்லை. எவ்வளவோ முயன்ற போதும் கூட அதை ரிப்பேர் செய்ய முடியவில்லை.

 

கல்யாண நாளன்று திடீரென்று அந்த ரேடியோ பாட ஆரம்பித்தது!

பகுத்தறிவுக் கழகத் தலைவர் அசந்து போனார். ஜென்னிபரும் அதே அளவு பகுத்தறிவுவாதி தான்!! அவரும் திகைத்தார். கூடியிருந்தோர் குதூகலப்பட்டனர்.

 

மணநாளன்று மட்டும் ஒலித்த அந்த ரேடியோ மறு நாளிலிருந்து இயங்கவில்லை.

தன் தாத்தா தன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி  விட்ட ஜென்னிபர். ஆமாம் ஆமாம் அது உண்மையே என்கிறார் ஷெர்மரும்.

 

“என் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும் அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் இயங்க முடியும். என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கமும் கொடுக்க முடியவில்லை” என்று ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்!

அற்புதங்கள் என்றும் நிகழும்!

*********

இந்த நூல் எது? – 1 (Post No.2676)

VectorToons.com

Written by S NAGARAJAN
Date: 30 March 2016

 

Post No. 2676

 

Time uploaded in London :–  8-04 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தெரிந்து கொள்ள வேண்டிய நூல்

 

இந்த நூல் எது? – 1

.நாகராஜன்

 

QuestionMark

மாபெரும் மன்னன் இவன். பெரும் அறிவாளி. சகல கலா வல்லவன்.

சுமார் 84க்கும் மேற்பட்ட இவனது நூல்கள் உலகினரை பிரமிக்க வைப்பவை.

காதலை பிரதானமாகக் கொண்டு இவன் எழுதிய இந்த நூலுக்கு ஈடு இணை இல்லை.

அபிலாஷா, ஆகாங்க்ஷா, அபேக்ஷா, உத்கந்தா உள்ளிட்ட 64 வகைகள் காதலில் உண்டு.

இந்த 64 வகைகளில் ஒவ்வொன்றுக்கும் எட்டு வடிவங்கள் உண்டு.

 பரத முனிவரின் பரத சாஸ்திரத்தில் உள்ளது போல இவனது நூலிலும் 36 அத்தியாயங்கள் உள்ளன.

ரஸம் என்பது வாழ்க்கையின் பிரதானமான அம்சம். அதனால் தான் ரஸிகன் என்று  மனிதன் அழைக்கப்படுகிறான்.

சப்தம், அர்த்தம், சாஹித்யம் ஆகிய மூன்றிற்கும் இவன் தரும் விரிவான விளக்கங்கள் அற்புதமானவை.

சாஹித்யம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கான இலக்கணத்தை இவன் தரும் பாங்கே தனி! வாக்ய தர்மம் என்பதை எடுத்துக் கொண்டால் அதில் மட்டும் 48 வகை உண்டு.

அவற்றிற்கான இவனது விளக்கங்கள் அற்புதமானவை. சொற்களில் உள்ள தோஷங்கள் உள்ளிட்ட இவன் விளக்காத விஷயங்களே இல்லை.

கவிதையை அனுபவிக்கத் துடிப்பவர்கள் இவனது நூலைப் படித்த பின்னரே ஒரு கவிதையைத் தொட வேண்டும்.

சிருங்காரம் என்ற ரஸத்தைப் பிழிந்து அதன் சுவையை இவனைப் போல இன்னொரு கவிஞன் தந்ததில்லை என்பது மட்டும் உண்மை.

இவனது நூலைப் படிக்காதவர்களே இன்று திரைப்படத்தில் நாம் காணும்  மலினமான சில காதல் காட்சிகளை உருவாக்குகிறார்கள் என்றால் அது மிகையல்ல!

இந்திய நாட்டிற்கே, ஹிந்து தர்மத்திற்கே பெருமை தரும் இந்த மன்னன் எழுதிய நூலின் பெயர் என்ன?

  விடை: போஜ ராஜன் எழுதிய சிருங்கார ப்ரகாசா

–சுபம்–

 

 

சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்! (Post No.2673)

Apollo_17_Cernan_on_moon

Written by S NAGARAJAN ( for Bhagya Magazine)

Date: 29 March 2016

 

Post No. 2673

 

Time uploaded in London :–  8-05 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் 25-3-2016 இதழில் வெளி வந்த கட்டுரை

 

 

சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்!

 

ச.நாகராஜன்

apollo 17,schmidt

“சந்திரனில் நின்று முதலில் பூமியைத் திரும்பிப் பார்த்த போது நான் அழுதேன்” – விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட்

 

நீல் ஆர்ம்ஸட் ராங் சந்திரனில் முதன் முதலாகக் கால் பதித்தவுடன் சந்திரப் பயணம் ஆரம்பித்தது. இது சூடு பிடித்து பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனால் அமெரிக்க விண்வெளி வீரரான செர்னான் சந்திரனில் கால் பதித்து 44 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை யாரும் சந்திர பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

இதுவரை மொத்தம் பன்னிரண்டு பேர் சந்திரனில் இறங்கியுள்ளனர்.

 

 

இவர்களில் யாரும் ஒரு தடவைக்கு மேல் சந்திரனில் இறங்கவில்லை என்பதும் ஒரு சுவாரசியமான செய்தி தான்!

அபல்லோ 11

 

1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நீல் ஆர்ம்ஸ்ட் ராங் சந்திரனில் இறங்கி பெரும் சாதனையைப் படைத்தார். இவரைத் தொடர்ந்த் பஸ் ஆல்ட் ரின் (Buzz Aldrin)  அங்கு இறங்கினார். அவர்கள் அமெரிக்க கொடியை அங்கு நாட்டினர். பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

அபல்லோ 12

இந்தக் கலத்தில் சென்றவர்கள் பீட் கான்ராட் மற்றும் ஆலன் பீன் (Pete Conrad & Alan Bean) இவர்கள் இருவரும் 1969ஆம் ஆண்டு நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்கள் அங்கு இருந்தனர்.

 

அபல்லோ 13

இதில் சென்றவர் யாரும் சந்திரனில் இறங்கவில்லை. ஆக்ஸிஜன் டேங்க் ஒன்று வெடிக்கவே கலம் பெருத்த அபாயத்திலிருந்து தப்பியது.

 

அபல்லோ 14

இதில் பயணப்பட்ட ஆலன் ஷெப்பர்ட் மற்றும் எட்கர் மிட்செல்  (Alan Shepard & Edgar Mitchell) 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாளன்று சந்திரனில் இறங்கினர். இதில் ஷெப்பர்ட் கோல்ப் பந்துகளை இரு முறை அடித்துப் பார்த்தார்.

 

அபல்லோ 15

இந்தக் கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் (David Scott & James Irwin) ஆகிய இருவரும் 1971 ஜூலை 31ஆம் தேதி சந்திரனில் இறங்கினர். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்த பின்னர்  ஆகஸ்ட் 2ஆம் நாளன்று பூமிக்குப் பத்திரமாகத் திரும்பினர். பதினெட்டரை மணி நேரம் இவர்கள் கலத்தின் வெளியே இருந்து லூனார் ரோவரை இயக்கிப் பார்த்தனர்.  சுமார் 77 கிலோ எடையுள்ள சந்திரக் கற்களையும் இவர்கள் பூமிக்குக் கொண்டு வந்தனர்.

 

அபல்லோ 16

இந்தக் கலத்தில் பயணித்த ஜான் யங் மற்றும் சார்லஸ் ட்யூக் (John Young & Charles Duke) ஆகிய இருவரும் சந்திரனில் வெற்றிகரமாக இறங்கினர். 1972ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் இவர்கள் அங்கு இருந்தனர். சுமார் 71 மணிகள் அங்கிருந்த இவர்கள் மூன்று சந்திர நடைப் பயணத்தை மேற்கொண்டனர். சுமார் 20 மணி 14 நிமிடங்கள் இந்த நடைப் பயணம் நீடித்தது. இவர்கள் லூனார் ரோவரை 26.7 கிலோமீட்டர் இயக்கினர்.

apollo-17

Apollo 17 was the sixth and last Apollo mission in which humans walked on the lunar surface. On Dec. 11, Lunar Module Pilot Harrison H. Schmitt and Commander Eugene A. Cernan, landed on the moon’s Taurus-Littrow region in the Lunar Module, while Command Module Pilot Ron Evans continued in lunar orbit.

அபல்லோ 17

இந்தக் கலத்தில் ப்யணித்த யூஜீன் செர்னான் மற்றும் ஹாரிஸன் ஷ்மிட் (Eugene Cernan & Harrison Schmitt) ஆகிய இருவர் தான் சந்திரனில் கடைசியாக இறங்கிய மனிதர்கள். இவர்களுக்குப் பின்னர் இது வரையிலும் யாருமே சந்திரனுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. அபல்லோ 17 விண்கலம் 1972 டிசம்பர் 11ம் தேதி சந்திரனில் இறங்கியது. இந்த சந்திரப் பயணிகள் டிசம்பர் 19ஆம் தேதியன்று பூமிக்குப் பத்திரமாகத் திரும்பினர். மூன்று நாட்கள் இவர்கள் சந்திரனில் இருந்தனர். கலத்தின் மொத்தப் பயண நாட்கள் 12. சந்திரனை விட்டுக் கிளம்பும் முன்னர் செர்னான் தனது மகள் ட்ரேஸியின் இனிஷியல்களை சந்திரனில் எழுதினார். அங்கு காற்றோ மழையோ பெய்யாது என்பதினால் இன்று வரை அந்தப் பெயரின் முதலெழுத்துகள் அங்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

சுமார் 566 மணிகள் 15 நிமிடங்கள் விண்வெளியில் கழித்திருக்கும் செர்னான் 73 மணிகள் சந்திரனில் இருந்திருக்கிறார் என்பது ஒரு தனிப் பெருமையாகும்.

 

சந்திரனில் கடைசியாக இறங்கிய மனிதர் என்ற பெருமைக்குரிய செர்னான் தனது பயண அனுபவத்தை ‘தி லாஸ்ட் மேன் ஆன் தி மூன் (The Last Man on the Moon) என்ற டாகுமெண்டரி படத்தில் சுவைபடச் சொல்லியுள்ளார். இந்தப் படம் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதியன்று அமெரிக்க தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

“சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு பையன் கனவிலும் நினைக்க முடியாத் ஒரு பயணத்தை மேற்கொண்ட கதை இது”” என்கிறார் இந்தப் படம் பற்றி செர்னான்.

 

இந்தப் படம் தயாரிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் பிடித்தன. இதில்  செர்னான் எப்படி ஒரு விண்வெளி வீரர் கடினமான பயிற்சிகளைப் பெறுகிறார் என்பதை விளக்குகிறார். ஒரு விண்வெளி வீரர் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவே முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்யும் அவர், “ஏனெனில் ஒரு விண்வெளி வீரர் வாரத்திற்கு எட்டு நாட்கள் வேலை செய்யவேண்டியிருக்கிறது” என்று நகைச்சுவையுடன் வேலைப்பளு பற்றிக் குறிப்பிடுகிறார்.  இந்தப் படம் விண்வெளி ஆர்வலர்களுக்கு பிடித்த படமாக இருப்பதோடு அடுத்து சந்திரனுக்கு ஒரு மனிதன் பயணப்பட வேண்டும் என்ற ஆசையையும் உருவாக்கியுள்ளது.

 

einstein

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் மகாத்மா காந்திஜியின் தொண்டர்களுள் ஒருவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடுடன் கலந்து கொண்ட அவரை காந்திஜி சுதந்திர இயக்கச் செய்திகளை மேலை நாடுகளில் பரப்புமாறு பணித்தார். இந்த ஆணையை சிரமேற்கொண்ட சுந்தரம் ஏழு மாத காலம் மேலை நாடுகளில் பயணித்தார். அப்போது பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனையும் சந்தித்து மஹாத்மாவின் அஹிம்சைப் போராட்டம் பற்றி விளக்கினார். இதனால் பெரிதும் கவரப்பட்ட ஐன்ஸ்டீன் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதி அதை சுந்தரத்திடம் கொடுத்து காந்திஜியிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டினார்.

அதில் காந்திஜியின் அஹிம்சா வழியை பாராட்டியதோடு, “ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க முடியும் என்று  நம்புகிறேன்” என்று ஐன்ஸ்டீன் எழுதியிருந்தார். (I hope that I will be able to meet you face to face some day.)

 

இதைப் பார்த்து மகிழ்ந்த காந்திஜி தனது கொள்கைகளை ஐன்ஸ்டீன் ஏற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து 18-10-1931 தேதியிட்ட கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினார். அதில் ஐன்ஸ்டீன் தெரிவித்திருந்த விருப்பத்தை வரவேற்று, “நானும் உங்களை நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன், அதுவும் இந்தியாவில் என் ஆசிரம்த்தில்” (I do indeed wish that we could meet face to face and that too in India at my Ashram.)  என்று எழுதி அனுப்பினார்.

 

ஆனால் இருவரும் நேரில் சந்திக்க முடியவே இல்லை! மனதால் இணைந்தனர் மஹாத்மாவும் மாபெரும் விஞ்ஞானியும்!

******

பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை (Post No. 2656)

blind muslim

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 23 March 2016

 

Post No. 2656

 

Time uploaded in London :–  8-17 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாராட்டு

 

பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை

 

ச.நாகராஜன்

o-MUSLIM-GIRL-facebook

 

நல்ல செய்திகளை அரிதாகவே கேட்க முடிகிறது. அதைப் பாராட்டுபவர்களையோ இன்னும் அரிதாகவே பார்க்க முடிகிறது.

 

 

நாம் நல்லதைப் பாராடுகின்ற அரியவர்கள் பட்டியலில் நம்மை இணைத்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரீடா ஜெஹ்ரா என்ற ஏழு வயது முஸ்லீம் சிறுமி கைகளைக் கூப்பியவாறே கீதை சொல்லும் அழகு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

 

 

மீரட்டில் வாழும் ரீடா கீதை நூலைக் கண்ணால் கண்டதில்லை. பிறக்கும் போதே 80 சதவிகிதம் பார்வையை இழந்த குழந்தை மூன்று வயதிலிருந்தே ஒரு பராமரிப்புப் பள்ளியில் இருந்து வருகிறாள். அவருடைய ஆசிரியர் அவளுக்கு கீதையைப் படித்துக் காண்பிக்க அவள் அதை மனதில் வாங்கிக் கொண்டு சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

இத்தனைக்கும் அவள் பார்வையற்றோருக்கான ப்ரெய்லி கூட கற்கவில்லை.

 

 

எந்தக் கடவுளாய் இருந்தால் என்ன, என்னால் பார்க்க முடியப் போவதில்லை. கீதையோ குர் ஆனோ அதைப் படித்து கடவுளை நான் துதிக்கிறேன்” என்று நம்மை நெகிழ வைக்கும் சொற்களைக் கூறும் ரீடா மீரட்டில் ஜாக்ரிதி விஹாரில் பார்வையற்றோருக்காக அமைந்துள்ள ப்ரிஜ் மோகன் பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கிறாள். ரிடாவின் பெற்றோரும் உடன்பிறப்புகளும் லோஹியா நகரில் வசிக்கின்றனர். கோடை விடுமுறைக்கும் பண்டிகைகளுக்கும் தவறாமல் வீட்டுக்குச் சென்று விடுவாள் ரீடா.

அவளுடைய பள்ளி முதல்வர் ப்ரவீண் சர்மா, “2015ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான கீதை சொல்லும் போட்டி ஒன்று நடக்கவிருப்பது பற்றி அறிந்தேன். ஏன் நமது பள்ளிக் குழந்தைகளும் இதில் சேரக் கூடாது என்று நினைத்தேன். ரீடா கீதையை நன்கு கற்றுக் கொண்டாள்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

 

 

ரீடாவின் பெற்றோருக்கு பாராட்டு. ரீடாவின் பிரின்ஸிபாலுக்கும் கீதையைக் கற்றுத் தந்த ஆசிரியருக்கும் பாராட்டு.

 

 

ரீடாவுக்கு…

 

நமது பாராட்டோ பாராட்டு.

குழந்தைக்குக் கண்ணனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க கண்ணனை வேண்டுவோம்!

 

maryam

மரியம், என்ற பெண் கீதை போட்டியில் முதலாவது வந்தாள்.

**********

இளவரசர் ஹாரிக்கு ‘பஞ்ச கன்யா’ பெண்கள் வரவேற்பு (Post No 2654)

harry with kunkum

Written by london swaminathan

 

Date: 22 March 2016

 

Post No. 2654

 

Time uploaded in London :– 12-20

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

panchakanya 3

நேபாள நாட்டிற்குச் சென்ற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு ஐந்து இளம்பெண்கள் வரவேற்பு கொடுத்தது பற்றி நேற்று லண்டன் பத்திரிக்கைகளில் நிறைய படங்களும் விரிவான செய்தியும் வந்துள்ளன. அவைகள் மூலம் பல இந்துமத வழக்கங்களை நேபாளியர், அர்த்தம் தெரியாமலேயே பின்பற்றுவது தெரிந்தது.

 

எல்லா ஆங்கிலப் பத்திரிக்கைகளும் ‘பஞ்ச கன்யா’ என்பதை, ‘ஐந்து கன்னிப் பெண்கள்’ என்றும் ‘ஐந்து திருமணமாகாத பெண்கள்’ என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு ஐந்து என்பது நேபாளியருக்கு அதிர்ஷ்டகர எண் என்றும் எழுதியுள்ளன. ஆனால் மேற்கொண்டு எந்த விளக்கமும் இல்லை.

 

‘பஞ்சகன்யா’ என்பது இந்து மதத்தில் ஐந்து பதிவ்ரதைகளைக் குறிக்கும். அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் ‘பிராத ஸ்மரனம்’ என்ற புனிதர் பட்டியலை வாசிப்பார்கள்- அதாவது மனப்பாடமாக குளிக்கும்போதோ, பெண்கள் சமைக்கும்போதோ சொல்லுவார்கள். இப்பொழுது அதை, ஆர்.எஸ்.எஸ். இயக்க ஷாகாக்களில் மட்டுமே கேட்க முடிகிறது.

 

அஹல்யா, த்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்

–என்பது அந்த வடமொழி பாட்டின் வரிகள்.

இந்த ஐந்து பெண்களின் கதை தெரியாதோர் பாரத நாட்டில் இல்லை. சம்ஸ்கிருத ஸ்லோகம் தெரிகிறதோ, புரிகிறதோ என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஐந்து பெண்களின் மகத்துவத்தை அறியாதோர் இல்லை.அவர்களை நினைத்த மாத்திரத்தில் எல்லா பாபங்களும் அழிந்துவிடும் என்று கடைசி வரி கூறுகிறது.

prince-harry-nepal_3597889b

சங்க இலக்கிய நூலான பரிபாடலில், மதுரை திருப்பறங்குன்றத்துக்கு வந்த கணவன் மனைவி இந்திரன் – அஹல்யை-கௌதம மகரிஷி ஓவியத்தைக் கோவில் சுவரில் கண்டு விவாதித்ததை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

 

இங்கே இந்த ஐந்து பேரின் வரலாற்றை எழுதப்போவதில்லை. இதிலுள்ள இரண்டு சூட்சுமங்களை மட்டும் ஆராய்வோம். பட்டியலிலுள்ள அகல்யை, திரவுபதி, சீதை, தாரா, மண்டோதரி – யாருமே கன்னிப் பெண் அல்ல. எல்லோரும் திருமணமானவர்கள். பின்னர் ஏன் பஞ்சகன்யா என்று சொல்லுகிறோம்? அவர்கள், மனதளவில் ஒரு கன்னிப் பெண் போல தூய்மையானவர்கள். வேறு ஆடவரை எண்ணாதவர்கள்; ‘செக்ஸ்’ என்பதை, சிற்றின்பக் கருவியாகப் பயன்படுத்தாமல் வம்ச விருத்திக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள். அகல்யைகூட இந்திரனால் ஏமாற்றப்பட்டவளே தவிர தானாக அவனை நாடிச் செல்லவில்லை. மேலும் அஹல்யை கதையில், பாபம் செய்தோருக்கும் விமோசனம் உண்டு என்ற தாத்பர்யமும் – உட்கருத்தும் – பொதிந்துள்ளது.

இரண்டாவது சூட்சுமம்- ஆரிய,திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது. இந்துமத புராணங்களில் அசுரர்களும், தேவர்களும் காச்யப ரிஷியின் பிள்ளை என்று சொன்னபோதிலும், வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு அடிவருடிய திராவிட இயக்கங்களும் அசுரர்களை திராவிடர் என்றும் தேவர்களை ஆரியர் என்றும் முத்திரை குத்தி எழுதிவருகின்றனர். மேற்கண்ட பட்டியலில் மண்டோதரி என்பார், ராட்சச ராவணனின் மனைவி! தாரா என்பவளோ, குரங்கின அரசன் வாலியின் மனைவி. இவர்களை, தினமும் நினைக்கவேண்டிய புனிதர் பட்டியலில் பழங்காலத்திலேயே சேர்த்து வேற்றுமை பாராட்டாது எல்லாப் பெண்களும் சொல்லிவருவது, ஆரிய-திராவிட இனவெறிப் பிதற்றல்வாதிகளின் மூஞ்சியில் கரி பூசுகிறது.

 

ஆக, நேபாளத்தில் கொடுக்கப்பட்ட பஞ்சகன்யா வரவேற்பு, இது எல்லாவற்றையும் நினைவுபடுத்தும். நேபாளத் தலைநகரான காட்மண்டில் ஒரு புத்தர் கோவில் உட்புறம் முழுதும் தங்கத் தகடால் மூடப்பட்டுள்ளதால் அதையும் பொற்கோவில் என்றழைப்பர் (எல்லோரும் அறிந்த பொற்கோயில் சீக்கியர்களின் அமிர்தசரஸில் உளது; அதைவிட அதிக தங்கம் உடைய கோவில் வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவில்; என் முந்தைய கட்டுரைகளில் விவரம் காண்க). நேபாளத்தில் இந்த புத்தர் கோவிலுக்கும் ஹாரி சென்றுவிட்டு மஞ்சள் துண்டு, செங் குங்குமப்பொட்டு ஆகியவறுடன் கூர்க்கா வீடுகளுக்குச் சென்றார்.

ஆக இளவரசர் ஹாரியின் விஜயம், பஞ்சகன்யா பெருமையை அனைவருக்கும் நினைவுபடுத்தும்.

 

–சுபம்–

 

 

பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்! (Post No 2653)

vivekananda saffron

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 22 March 2016

 

Post No. 2653

 

Time uploaded in London :–  6-07 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

விவேகானந்தர் வழி

 

பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்!

 

ச.நாகராஜன்

 

கல்கத்தாவில் தன்னைச் சந்திக்க வந்த சிஷ்யர் பிரியநாத் சின்ஹாவிடம், ‘ஒரு மனிதன் தன் ம்தத்தை உண்மையாக நேசிக்கையில் அவன் தைரியசாலியாகவும்  துணிச்சலுடனும் திகழ்வான். அப்படிப்பட்ட தைரியம் ஒற்றுமையை உருவாக்கும்.

அது தான் ஹிந்துக்களிடையே இல்லை’ என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்.

 

 

இதைத் தொடர்ந்து தனது அனுபவம் ஒன்றையும் அவர் கூறலானார்.

 

அவர் மேலை நாட்டுக்குச் செல்கையில் கடற்பயணத்தின் போது இரு பாதிரியார்கள் அவ்ரிடம் வந்து கிறிஸ்தவ மதம் ஹிந்து மதம் ஆகிய இரு மதங்களுக்கிடையே உள்ள நல்ல் அம்சங்கள் மற்றும் தீய அம்சங்களைப் பற்றி விவாதிக்க வலியுறுத்தினர். வாதம் ஆரம்பமானது.

 

 

தங்கள் பக்கம் தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையில் அந்த பாதிரிமார்கள் இருவரும் மிக மோசமாக ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் திட்ட ஆரம்பித்தனர். ஸ்வாமிஜி பொறுத்துப் பார்த்தார்.

 

 

வசை பாடல் தொடர்ந்தது. ஸ்வாமிஜியால் பொறுக்க முடியாத சூழ்நிலை. ஸ்வாமிஜி இருவரில் ஒருவரின் காலரைப் பற்றினார்.

சிரித்தவாறே ஆனால் மிகவும் தீவிரமான தொனியில் , :”இனியும் என் மதத்தைப் பற்றி தூஷித்தால் இந்தக் கடலில் உங்களைத் தூக்கி வீசி எறிந்து விடுவேன்” என்றார்.

 

ஸ்வாமிஜியின் கட்டுமஸ்தான உடல் வாகு அனைவரும் அறிந்ததே!

 

நடுநடுங்கிப் போன பாதிரியார், “ஐயா! என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்.இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்” என்று கெஞ்சலானார்.

 

ஸ்வாமிஜி அவரை விடுவித்தார். அன்று முதல் அந்த்ப் பயணம் முழுவதும் ஸ்வாமிஜியிடம் அந்தப் பாதிரியார் மிகுந்த மரியாதையுடன் நடக்கலானார்.இதைக் கூறி முடித்த ஸ்வாமிஜி பிரியநாத்திடம், “உன்னிடம் உன் தாயாரைப் பற்றி ஒருவர் தூஷித்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்.

“அவன் கழுத்தைப் பிடித்து அவனுக்குத் தக்க பாடம் கற்பிப்பேன்” என்றார் பிரியநாத்.

 

அந்த பதிலால் ஸ்வாமிஜி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

“நன்றாய் சொன்னாய், சின்ஹா! நீ இப்படி அசைக்க முடியாத நம்பிக்கையை உன் ம்தத்தின் மீது கொண்டால், இந்த பாரத நாட்டின் மீது கொண்டால், உன் சகோதர ஹிந்துக்களை இந்த பாதிரிமார்கள் மதமாற்றம் செய்வதைக் காணப் பொறுக்கமாட்டாய்.. ஒவ்வொரு நாளும் இந்த மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் கூட நீ சும்மாதான் இருக்கிறாய்? எங்கே உன் மதப்பற்று? எங்கே உன் தேசபக்தி? ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ பிரசாரகர்கள் உன் கண் முன்னாலேயே ஹிந்து மதத்தை இழிவு படுத்திப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் கண்டித்து ஹிந்து மதத்தைக் காப்பாற்றும் வகையில் எத்தனை பேர் முன் வருகிறார்கள்?” என்று கேட்டார்.

 

ஸ்வாமிஜி எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்று சொன்ன அதே தருணம் நம் மதத்தை நேசித்துப் போற்றுதல் மட்டும் போதாது; மதமாற்றம் என்று வரும் போது அதைத் தடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

அதற்குத் தானே உதாரணமாக இருந்ததை தன் கடல் பயண சம்பவம் மூலம் உணர்த்தினார்.

 

 

ஸ்வாமிஜி கூறிய வழியில் நடக்க வேண்டியது நமது கடமை!

************