சம்ஸ்கிருதத்தால் வந்த சனியன்! (Post No.2348)

brahmin5

மெத்தப்படித்து புத்தி மோசம் போன கதை! சம்ஸ்கிருதத்தால் வந்த சனியன்!

 

Compiled by London swaminathan

Date: 21 November 2015

Post No.2348

 

Time uploaded in London :– 6-43 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

 

சோமளேஸ்வரன் பேட்டையில் சம்ஸ்கிருத பாஷையில் பூரண பாண்டித்யமுடைய கோகர்ண தீக்ஷதர் என்பவர் ஒரு நாள் இரவு சாஸ்திரப் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதுசமயம் திருடன் ஒருவன் பூட்டாமல் திறந்திருந்த தீக்ஷதர் வீட்டுக் கதவைச் சத்தமின்றித் திறந்து உள்ளே நுழைந்து கதவைச் சத்தமுண்டாக்கும்படி சாத்தினான்.

 

அப்போது தீக்ஷதர், “கபாட சப்தம் கிம்?”, அதாவது கதவு சாத்தப்பட்டதே யார்? என்றார். அதற்குத் திருடன் பயமின்றி, “சோ” என்று சொன்னான். அதைக் கேட்ட சம்ஸ்கிருத வித்வானாகிய தீக்ஷதர் சோ—வென்ற பதத்துக்குத் தாத்பர்யம் தெரியாது அகராதியைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்குள் உள்ளே நுழைந்த திருடன், ரொக்கசொக்கம்  எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பாத்திரப்பண்டங்கள் பாக்கியன்னியில் கொல்லைப்புறம் கடத்திவிட்டு, மறுபடியும் வெளியே போகும்போது சத்தமுண்டாக்கும் வண்ணம் கதவைச் சாத்தினான்.

 

அப்போது தீக்ஷதர், “புன கபாட சப்தம்கிம்?”, அதாவது மறுபடியும் கதவில் சத்தம் உண்டாக்குவது யார்? என்றார். அதற்குப் பக்காத் திருடன் “ரன்” என்று சொல்லி ஓடிவிட்டான்.

 

‘ரன்’ என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாதபடி, தீக்ஷதர் மீண்டும் அகராதியைப் புரட்டினார். இரண்டு நாழிகையாகியும் அவருக்கு அர்த்தம் புலப்படாததால், முதலின் என்ன சொன்னான், ‘சோ’, பின்னர் என்ன சொன்னான் ‘ரன்”!

அடக் கடவுளே இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் “சோரன்” என்று வருகிறதே என்று சொல்லிப் பதறினார். “சோரன்” என்றால் திருடன் என்று பொருள்.

 

ஒஹோ! திருடனல்லாவா வந்திருக்கான் என்று அறிந்து கையில் விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டில் தேடிப் பார்க்கையில், வீட்டில் தூசி தும்பட்டை எதுவுமில்லாமல் ஜாடாக எல்லாவற்றையும் திருடன் கொண்டு சென்றது தெரிந்தது. “ஐயோ, ஐயோ” என்று கத்திக்கொண்டு வெளியே சென்று பார்க்கையில் அங்கு எவரு மில்லை. பின்னர் வயிற்றிலும், வாயிலுமடித்துக்கொண்டு, “தன்படிப்பே தனக்குத் தண்டாவாச்சுதே” என்று விசனப்பட்டுக் கொண்டு வேறு ஜீவனம் செய்து காலம் கழித்து வந்தார்.

(சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஜோக்)

–மேலும் வரும்………………………………………………..

சுப்பிரமணியர் மீது விகடத் துதி

murugan vattam

Compiled by London swaminathan

Date: 9 November 2015

Post No:2315

Time uploaded in London :– 17-16

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த பாடல்.

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

இராகம்- எதுகுல காம்போதி, தாளம்- ஏகம்

பல்லவி

சொல்லையா கந்தா- துரை மகனே அதைச்

சொல்லையா கந்தா

murugam balan

அநுபல்லவி

தெள்ளுமயிலிருக்கத் தெய்வானையும் இருக்க

வள்ளி மயிலுக்காக வனந்தேடிப் போனதென்ன (சொல்லையா…)

சரணங்கள்

தாரமிரண்டிருக்கத் தால மாமனுமிருக்க

ஆருமறியாத அகதிபோலானதென்ன (சொல்லையா…)

அன்னை தந்தைகளிருக்க அம்மான் மகளிருக்கச்

சன்னாசிக் கோலமான சங்கதியெல்லாம எனக்குச் ((சொல்லையா…)

தந்தையைச் சுற்றிவந்து தமையன் கனியெடுத்தான்

மந்தையைச் சுற்றிவந்து மதிகெட்டுப் போனதென்ன (சொல்லையா…)

கூறிய அஞ்சுமுகன் குழந்தை நீயானாக்கால்

ஆறுமுகமான அதிசயத்தையெனக்குச் (சொல்லையா…)

உற்றுவளர்த்த பிள்ளை ஒன்றுக்கிரண்டிருக்க

பெற்றதகப்பன் முந்திப் பிச்சையெடுத்துண்டதென்ன (சொல்லையா…)

வல்லப்புரம் செயிக்க மாட்டாமலுங்களப்பன்

பல்லைத் திறந்துவிட்ட பரியாசத்தையெனக்குச் (சொல்லையா…)

சேமநிதியிருக்கத் திருப்பாற்கடலிருக்க

மாமன் பசித்ததென்று மண்ணைவாரியுண்டதென்ன (சொல்லையா…)

மண்ணையுண்டு மாமன் வயிற்றுக்குப் போதாமல்

வெண்ணைதிருடியுண்ட விபரமெல்லாமெனக்குச் (சொல்லையா…)

சைவசமயத்துக்குத்  தலைவனீயானாக்கால்

தையல் குறத்தியை நீ சம்மந்தஞ்செய்ததென்ன (சொல்லையா…)

மங்கையிருவரையும் மணம் செய்துவைத்துவிட்டுப்

பங்கமில்லாத சடைப் பண்டாரமானதென்ன (சொல்லையா…)

சீப்பிட்ட கூந்தல் வள்ளி தெய்வானையைக் கலந்து

சாப்பிட்டிருக்காமல் சன்யாசியானதென்ன (சொல்லையா…)

தேவியிருவருக்கும்  தீராத சண்டையினால்

கோவித்துக் கொண்டிருந்தக் கோலமெடுத்தாயோ (சொல்லையா…)

-சுபம்-

நவம்பர் 2015 காலண்டர்

saint3

(மன்மத வருடம் ஐப்பசி/ கார்த்திகை)

இந்த மாதக் காலண்டரில், 30 அபூர்வ தமிழ் பழமொழிள் இடம்பெறுகின்றன.

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 30 October 2015.

Post No:2286

Time uploaded in London :–  14-26

(Thanks  for the pictures) 

முக்கிய நாட்கள்: நவம்பர் 10-தீபாவளி (தமிழ் நாட்டில்),

11—பிற மாநிலங்களில் தீபாவளி;

நவம்பர் 25- கார்த்திகை தீபம் (திருவண்ணாமலை)-

பாஞ்சராத்ர தீபம்- 26

கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்- 12

கந்த சஷ்டி/ சூர சம்ஹாரம்- 17

ஐயப்பன் விரதம் ஆரம்பம் (கார்த்திகை மாதப் பிறப்பு)- 17

குழந்தைகள் தினம்- நவம்பர் 14

அமாவாசை – நவம்பர் 11

ஏகாதசி –7, 22

பௌர்ணமி—நவம்பர் 25 (திருக் கார்த்திகை)

முகூர்த்த நாட்கள்: 2, 8, 13, 15,18, 22, 27, 29, 30

saint4

நவம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை

கடலிலே பிறக்கும் உப்புக்கும், மலையிலே விளையும் நாரத்தம் காய்க்கும் தொந்தம்

There is a union between the salt born in the sea, and the lemon that grows on the hills. (These two are united in pickles. The saying is applied to two people who are born in different countries, but who meet and act together.)

நவம்பர் 2 திங்கட்கிழமை

நார் அறுந்தால் முடியலாம், நரம்பு அறுந்தால் முடியலாம், மனம் அறுந்தால் முடியாது

If a fibre breaks it may be joined again, if a vein breaks, it may be joined together, but if the heart breaks, it cannot be joined.

நவம்பர் 3 செவ்வாய்க்கிழமை

பத்துப் பேருக்குப் பல்குச்சி, ஒருவனுக்குத் தலைச் சுமை

For ten persons it is as light as a tooth brush/ a small twig; if one has to carry it, it will be a heavy burden.

நவம்பர் 4 புதன்கிழமை

காசிக்குப் போனேன், காவடி கொண்டு வந்தேன்

I went to Benares, and brought back the Kavadi

Said to one who spins yarns, when wanted to be brief.

நவம்பர் 5 வியாழக்கிழமை

மை மை சுந்தரி, கதவை ஒஞ்சரி

My pretty maid, leave the door a jar.

(Said in a sarcasm to a maid or child, who, when relating something, goes too much into details.)

saint2

நவம்பர் 6 வெள்ளிக்கிழமை

வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடி போய் வா என்கிறான்

Though you enter his doorway as his friend of your own accord, he says hypocritically, ‘Come some other day!’

நவம்பர் 7 சனிக்கிழமை

அழையா வீட்டுக்கு நுழையாச் சம்பந்தி

Intrusion: A relative who invites himself to a house from which he has received no invitation. (The proverb is a sarcasm on all those unavoidable parasites, who come uninvited to all weddings and feasts in Hindu houses

English: fiddlers, dogs and flees come to a feast uncalled.

நவம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை

பிடாரியைப் பிடித்துத் தள்ளத் தள்ள, பெண்ணுடைய சிற்றப்பன் என்று நுழைகிறானாம்

Intrusion: Though taken by the neck and turned out over and over again, he slips in, saying that he is my wife’s sister’s husband.

English: Follow love and it will flee; flee love and it will follow thee

நவம்பர் 9 திங்கட்கிழமை

கம்மாளன் நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா?

Will the blacksmith’s dog fear the sound of hammer?

நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை

கோணிக் கோடி கொடுப்பதிலும், கோணாமல் காணி கொடுப்பது நல்லது

Instead of giving much with a wry face, it is better to give a little willingly.

saint9

நவம்பர் 11 புதன்கிழமை

மாவு இடித்தால் மண்டி கொள்ளுகிறது, கூழ் கொதித்தால் கூடிக் கொள்ளுகிறது

If the rice is being pounded they draw near, if the gruel is being boiled they come as friends to eat.

English: Daub yourself with honey, and you will have plenty of flies.

(said of one who does not care for others unless he can profit by them).

நவம்பர் 12 வியாழக்கிழமை

நெல் விளைகிற நிலமும் தெரியாது, நிலாக் காய்கிற இடமும் தெரியாது

Stupid or wilfully speaks as if he did not know:- He does not know a field in which rice is growing, and he does not know a place on which the moon is shining.

நவம்பர் 13 வெள்ளிக்கிழமை

அகல இருந்தால் நிகள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை

If separated by a long distance, there will be one lived friendship, but if they are near each other, there will be perfect hatred.

English: Friends agree at a distance.

நவம்பர் 14 சனிக்கிழமை

நல்லாரை நாவில் உரை, பொன்னைக் கல்லில் உரை 2691

Find out the good by their tongue, and pure gold by the touch stone.

English: Speech is the picture of the mind.

நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை

பாலைக் குடித்தவனுக்கு பால் ஏப்பம் வரும், கள்ளைக் குடித்தவனுக்கு கள் ஏப்பம் வரும்

He who has drunk milk will belch milk, and he who has drunk toddy will belch toddy

English: from a clear spring clear water flows.

saint6

நவம்பர் 16 திங்கட்கிழமை

ஒட்டினால் தொட்டிலும் கொள்ளும், ஒட்டாவிட்டால் கட்டிலும் கொள்ளாது

Will power: when there is agreement between the two, the very cradle can hold it! When there is no agreement, even a cot cannot hold it.

நவம்பர் 17 செவ்வாய்க்கிழமை

மருவில் உண்ட சாப்பாட்டை இலங்கணத்தில் நினைத்துக் கொண்டது போல.

Like thinking, during one’s fast, of the food eaten by him at the feast given in his honour by his bride’s family

English: The memory of happiness makes misery woeful.

The dream of past glory in the midst of present distress.

நவம்பர் 18 புதன்கிழமை

அக்குத் தொக்கு இல்லாதவனுக்கு துக்கம் ஏது?

Anxiety:- What sorrow has he, who has no family and no wealth?

நவம்பர் 19 வியாழக்கிழமை

குருடி தண்ணீருக்குப் போனால், எட்டாள் மினக்கெடு

Waste:- If a blind woman goes for water, eight persons have to forego work (as she cant find her way, one is sent to find her, and another to find these two and so on.

நவம்பர் 20 வெள்ளிக்கிழமை

அலுத்துப் பொலுத்து அக்காளண்டை போனால், அக்காள் இழுத்து மச்சானிடத்தில் விட்டாளாம்

If weary and fatigues she (left her husband) and went to her elder sister’s house (hoping to rest a while from worry), her elder sister dragged her back to her brother in law.

saint1

நவம்பர் 21 சனிக்கிழமை

கற்பக விருக்ஷமண்டை போய், எட்டிக்காய் வாங்கினது போல

Unlucky:- He went to the Kalpaka Tree, Wish Fulfilling Tree, but got poisonous fruit.

நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை

அளகேசன் ஆனாலும், அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்

Though as rich as Kubera, the God of Riches, know how much you have and then lay out your money.

நவம்பர் 23 திங்கட்கிழமை

இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது

A hand that has laid hold of iron and a hand that has itch will not keep quiet

English: Itch and case can no man please.

நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை

சுருட்டை சோறு இடும், பம்பை பால் வார்க்கும், கோரை குடி கெடுக்கும்

Signs and Omens: Curly hair gives food, thick hair brings milk, and very stiff hair destroys family.

(These different kinds of hair are to be noted when selecting a girl for a wife- Ruthusastram) .

நவம்பர் 25 புதன்கிழமை

போன சனியன் போச்சுது என்று இருந்தேன், மயிருக்குள் இருந்து கீச்சு கீச்சு என்கிறது

Signs and Omens:-I believed the Saturn was gone, but he squeaks in my hair.

saint5

நவம்பர் 26 வியாழக்கிழமை

ஆறு காதம் என்கிற போதே கோவணத்தை அவிழ்த்துக் குடுமியிலே கட்டிக் கொண்டானாம்

Haste:- When the river was still sixty miles off, he untied his loin cloth and put it on his head.

English: Do not strip before bed time.

நவம்பர் 27 வெள்ளிக்கிழமை

காசியில் இருந்தவன் கண்ணைக் குத்தக் காஞ்சீபுரத்திலிருந்தே கை நீட்டிக்கொண்டு போனானாம்

Haste: – While in Kancheepuram he stretched out his arm to strike the eye of a man in Varanasi

English: Make not the sauce till you have caught the fish.

நவம்பர் 28 சனிக்கிழமை

பகலிலேயே பசு மாடு தெரியாது, இரவில் எருமை தெரியுமா?

Stupid Person: – During the day he does not know what a cow is; will he know a buffalo at night?

நவம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை

பாண்டவாள் தெரியாதா? கட்டில் காலு போல, மூன்று பேர் என்று வாயால் சொல்லி, இரண்டு விரலைக் காட்டி, நிலத்தில் ஒரு கோடு எழுதினானாம்

Stupidity:- Don’t you know how many Panadava princes there were? They were as amny as the legs of a bed – three.  So said a fool, and held up tow fingers, and made a single mark on the ground!

saint7

நவம்பர் 30 திங்கட்கிழமை

பிரசவ வைராக்கியம், புராண வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம்

The renunciation of sexual intercourse made by a woman when suffering the pain of child birth, the renunciation of worldly things made after studying the sacred books, the renunciation of worldly things made after seeing corpses burned (all temporary).

The chamber of sickness is the chapel of devotion

Vows made in storms are forgotten in calms.

They who worship god merely in fear, would worship the devil should he appear.

The devil was sick, the devil a monk would be.

The devil grew well, the devil a monk was he.

435-Swami-Rama-Tirtha

Source: A classified collection of Tamil Proverbs, Herman Jensen Year 1897

–subham–

ஏன் தூக்கம் வருவதில்லை? 2000 ஆண்டுக்கு முன் நடந்த ஆய்வு முடிவு!

wpid-sleepless_nights_rumi2

Compiled  by London swaminathan

Post No.2281

Date: 28 October 2015

Time uploaded in London: 16-25

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog it for at least a week.

பாரத நாட்டு மக்கள் மிகப்பெரிய விஞ்ஞானிகள்; உளவியல் நிபுணர்கள் (சைக்காலஜிஸ்ட்ஸ்)!! மனித உள்ளத்தின் ஆழம் கண்ட அற்புத ஞானிகள்! இதோ அவர்களின் அரிய கருத்துக்கள்:–

கருட புராணம் சொல்லுகிறது:–

குதோ நித்ரா தரித்ரஸ்ய பரப்ரேஷ்யசரஸ்ய ச

பர நாரீ ப்ரசக்தஸ்ய பர த்ரவ்ய ஹரஸ்ய ச

யாருக்குத் தூக்கம் வராது? கீழ்கண்ட நால்வருக்குத் தூக்கம் வராது:

தரித்ர: – வறுமையில் உழல்வோன்

பரப்ரேஷ்யசர: – வெளிநாட்டீல் உளவு வேலை செய்பவன்

(ஜேம்ஸ்பாண்ட் போன்றவர்கள்)

பர நாரீ ப்ரசக்த: — ராவணன் போன்றோர்; மாற்றான் மனைவியைக் குறிவைத்து ஏங்குவோர்

பர த்ரவ்ய ஹர: – மற்றவர் செல்வத்தை அபஹரித்தோன்; திருடன் (ஊழல் செய்த அரசியல் வாதிகள், ஸ்விஸ் வங்கியில் திருட்டுத்தனமாக, லாக்கர்களில் திருட்டுத் தனமாக பணம், தங்க கட்டிகள் வைத்திருப்போர்)

மேலே சொன்னது கருட புராண விஷயம்.

நானாகச் சேர்ப்பது:

இலக்கியத் திருடர்கள்

நாள்தோறும் என்னுடைய, எனது சஹோதர சஹோதரியினுடைய நண்பர்கள் இலக்கியத் திருடர்கள் பற்றி தகவல் அனுப்புகின்றனர். அதாவது எங்கள் பிளாக் கட்டுரைகளை அவர்களுடையது போல வெளியிட்டுவிட்டு, அதற்கு வரும் பாராட்டுதல்களையும் ஏற்கின்றனர் எழுத்து ராவணன்கள்!!! அவர்களை மனச்சாட்சி குத்திக் கொண்டே யிருப்பதால், அது போன்ற இலக்கியத் திருடர்களுக்கும் தூக்கம் வராது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடுகிறது. அவர்கள் அம்மாவும், அப்பாவுமே, மகனே இப்படிச் செய்யாதே, உனது பிறப்பையே சந்தேகிப்பார்கள் என்று சொல்லுவதும் காதில் விழுகிறது.

இது இலக்கிய ராவணன்கள் விஷயம்

xxxxx

sleepless

மன்னிக்க முடியாத நால்வர் யார்?

மித்ரத்ருஹ – நண்பனுக்குத் துரோஹம் செய்வோன்

க்ருதக்ன – நன்றி மறந்தோன் (இதைப் புற நானூறும், வள்ளுவன் குறளும் கூறுகிறது)

ஸ்த்ரீக்ன – பெண் கொலை புரிந்தோன் (நன்னன் என்ற பெண்கொலை புரிந்தவ மன்னனை சங்கத் தமிழ் நூல்கள் ஏசுகின்றன)

பிசுன: — பிசிநாரிகள்; அடுத்தவர்களைப் பற்றி நாக்கில் நரம்பில்லாமல் அவதூறு பரப்புவோர்.

இந்த விஷயம் சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் அற்புதமான சம்ஸ்கிருத தனிப்பாடல் திரட்டில் உளது.

மித்ரத்ருஹ: க்ருதக்னஸ்ய ஸ்த்ரீக்னஸ்ய பிசுனஸ்ய ச

சதுர்ணாமபி சைதேஷாம் நிஷ்க்ருதி: நைவ விஸ்ருதா

xxxxx

Number4

மனிதர்களில் நான்கு வகை (நீதி சதகம் 64)
சத் புருஷ – நல்லவன், பலனை எதிர்பார்க்காமல் உதவி செய்வோன்

சாமான்ய – பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவுபவன் (இவர்களை அறநிலை வணிகன் என்று சங்கத் தமிழ் நூல்கள் இயம்பும்)

மானுஷ ராக்ஷசா: – சுயநலத்துக்காக மற்றவர்களை அழிப்பவன் (சினிமாவில் வரும் வில்லன்கள் போன்றோர்)

நிரர்த்தகம் பரஹிதம் நிக்னந்தி – காரணமே இல்லாமல் மற்றவர்களைத் துன்புறுத்தி அதில் இன்பம் அடைவோர் (மனித உருவில் நடமாடும் மிருகங்கள், பேய்கள்)

இதோ அந்த நீதி சதக ஸ்லோகம்:–

ஏதே சத் புருஷா: பரார்த்தகடகா: ஸ்வார்த்தம் பரித்ஜ்யஜ்ய யே

சமான்யாஸ்து பரார்த்டமுத்யமப்ருத: ஸ்வார்த்த விரோதேன யே

தேஸ்மி மானுஷ ரக்ஷசா: பரஹிதம் ஸ்வார்த்தாய நிக்னந்தி யே

யே நிக்னந்தி நிரர்த்தகம் பரஹிதம் தே கே ந ஜானீமஹே

-சுபம்-

இந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி?- பகுதி 1

IMG_6746 (2)

மதுரை மீனாட்சி கோவில் கோபுரத்திலுள்ள சிற்பத்தின் வரைபடம்

Research article by London swaminathan

Post No.2232

Date: 10  October 2015

Time uploaded in London: 15-01

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

பாரதியார் பாடினார்:

“கணிதம் பன்னிரெண்டாண்டு பயில்வர், பின்

கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”

— 12 ஆண்டு கணிதம் பயின்ற பின்னர், ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரம், கோள் முதலியவற்றின் நிலை என்ன என்று தெரிவதில்லையே என்று வருத்தப்படுகிறார்.

அந்தக் காலத்தில் கிராமப்புற மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும், வானத்திலுள்ள கிரகங்கள் நட்சத்திரங்களின் பெயர்களையும் நிலையையும் அறிந்து வைத்திருந்தனர். தங்களைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடி, பறவைகள், மூலிகைகள் ஆகியவற்றை அடையாளம் காணவும் அறிந்திருந்தனர். ஏட்டுக் கல்வி வந்த பின்னர், கையில் ‘டிகிரி’ வாங்கிய பின்னரும் கூட அடிப்படை அறிவு இருப்பதில்லை. இதுதான் பாரதியாரிம் வருத்தத்துக்குக் காரணம். சுற்றியுள்ள மரம் செடி, கொடிகளின் பெயர்களும் தெரியாது; வானத்திலுள்ள நட்சத்திரங்கள் என்ன என்றும் சொல்லத் தெரியாது! இதே நிலையில்தான், கோவில் சிலைகள் பற்றிய அறிவும் உளது.

சங்க இலக்கிய நூலான பரிபாடலில் (19ம் பாடல்) ஒரு காட்சி வருகிறது: கணவன், மனைவி ஆகிய இருவர் திருப்பறங்குன்றத் தில் உள்ள ஓவியங்களைக் காணும் போது, ஒரு பூனை ஓவியத்தைப் பார்த்து மனைவி வியக்கிறாள். கணவனிடம் கேட்கவே, உடனே கணவன், “இது உனக்குத் தெரியாதா? இதோ இந்திரன், அகலிகையை மானபங்கப்படுத்திய பின்னர், பூனை வடிவில் பயந்து ஓடுகிறான்” என்று பதில் தருகிறான். மக்களுக்கு ஓவியத்தில் வரும் புராணக் காட்சிகள் எல்லாம் அத்துபடியாக இருந்தன, இது 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலை.

இன்றோ நமது குழந்தைகள், ஒரு கோவில் சிலையைக் காட்டி இது யாருடைய உருவம்? கைகளில் என்ன , என்ன இருக்கிறது? என்று கேட்டால் நமக்குச் சொல்லத் தெரியுமா என்பது சந்தேகமே!

இந்தியாவிலாவது பல கடவுள் திரு உருவங்களை அடையாளம் கண்டு விடலாம். தென்கிழக்காசிய நாடுகளின் சிலைகளில் விஷ்ணுவைத் தவிர வேறு எவரையும் அடையாளம் காணமுடியாது. விஷ்ணுவின் தோள்களில் அல்லது கைகளில் சங்கு சக்ரம் இருப்பதால் இது எளிதாகிறது.

IMG_6747 (2)

மியூசியங்களுக்குப் போனால் இதைவிடப் பெரிய குழப்பம் காத்திருக்கும். புத்தமத, சமணமத கடவுளர் சிலைகளையும் ஒரே காட்சிக்கூடத்தில் வைத்திருப்பர். இந்துக் கடவுள் போலத் தோன்றும். ஆனால் வேறு பெயர்கள் எழுதப்பட்டிருக்கும்.

முன்காலத்தில் சிலைகளையும், விக்ரஹங்களையும் வடித்தவர்கள் சம்ஸ்கிருத நூல்களில் ஸ்லோகங்களாக எழுதப்பட்ட மூர்த்திகளின் வடிவங்களை மனதிற்கொண்டு அவைகளைச் செய்தனர். அவைகளைக் ‘காப்பி’ அடித்த புத்த, சமண மதச் சிற்பிகள் அவரவர்களுடைய கற்பனைக்கேற்ப கொஞ்சம் மாற்றி வடிவமைத்தனர். ஆனால் கூர்ந்து கவனிப்போர் எது, என்ன என்று சொல்லிவிடுவர்.

இந்துக் கடவுளரின் பட்டியல் மிக நீண்டது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு நிகழ்ச்சி நடந்து இருப்பதாலும், பல அசுரர்களைக் கொல்ல பல உருவம் எடுத்ததாலும் சிற்சில வேறுபாடுகள் இருக்கும். இதைத்தவிர உள்ளூர், பிராந்திய கடவுளரும் உண்டு. வடக்கே இருப்பவர்க்கு அய்யனார், சாஸ்தா பற்றித் தெரிய வாய்ப்பு இல்லை. தெற்கே இருப்பவர்க்கு சந்தோஷி மாதா முதலிய உருவங்கள் தெரியாது. ஓரிடத்தில் அனுமார் பிரம்மச்சாரி, இன்னொரு இடத்தில் பிள்ளையார் பிரம்மச்சாரி. ஆகையாலெங்கு மனைவியருடன் தெய்வங்கள் உளதோ அதன் தத்துவ விளக்கங்களையும் கடவுளரின் கையிலுள்ள பொருள்களின் விளக்கங்களையும் அறிந்து வைக்கவேண்டும்.

பிள்ளையாரின் இரண்டு மனைவியரின் பெயர் சித்தி, புத்தி என்று சொன்னால், பிள்ளையாரைக் கும்பிடுவோருக்கு காரிய ‘சித்தி’யும் (வெற்றி), அதை அடைய நல்ல ‘புத்தி’யையும் (அறிவு) கொடுப்பார் என்று பொருள். சூரியனின் மனைவி பெயர் ‘சாயா’ (நிழல்) என்றால் வெளிச்சம் இருக்கும் இடத்தில் பொருள்களின் நிழலும் அதைத் தொடரும் என்பதே பொருள். சம்ஸ்கிருத அறிவு இருந்தால் ஓரளவு பொருளை உணர்ந்து நாமே மற்றவர்க்கும் விளக்கலாம். எல்லாவற்றையும் கதைகள் மூலமும், உவமைகள் மூலமும், அடையாளச் சின்னங்கள் மூலமும் விளக்குவது நம் முன்னோர் இயல்பு. ஆனால் காலப் போக்கில், உணர்த்தவந்த தத்துவத்தை மறந்துவிட்டு, கதைகளை மட்டுமே பரப்பியதால் அவைகள் புராணங்களாகிவிட்டன.

vishnu

கடவுளரின் வாஹனங்கள், அவர்களின் அடையாளச் சின்னங்கள் என்ன, என்ன வென்று தெரிந்து கொண்டால்  வெறும் தலை அல்லது தோள் மட்டும் தெரிந்தால் கூட அது யாருடையது என்று சொல்லிவிடலாம். கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ஒரு பட்டியலைத் தருகிறேன். அது முக்கியக் கடவுள் திருமேனிகளை அடையாளம் காண ஓரளவுக்கு உதவும்.

–தொடரும்…………………………

2.தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK -2 (Second Part)

Compiled by London swaminathan

Post No.2222

Date: 7   October 2015

Time uploaded in London: 21-20

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

First part of Proverb book –Two was published yesterday. This is second part of Book Two.

ஒரு காசு பேணின்,  இரு காசு  தேறும்

கழுதை அறியுமா கந்தப் பொடி வாசனை (கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?)

கரும்புள்ளபோதே ஆட்டிக் கொள்

குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால குட்டுப்படனும்

கெண்டையைப் போட்டு வராலை   இழுக்கிறது

கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி

சட்டியி்ல், இருந்தால்தானே அகப்பையில் வரும்.

to be continued…………………………………….

பாரதியார் கவிநயம்

bharathi9-150x150

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 9

Compiled by ச.நாகராஜன்

Post No.2213

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 11-47

Don’t use pictures. Don’t reblog for at least a week.

ச.நாகராஜன்

பாரதியார் கவிநயம்

ரா.அ.பத்மநாபன் தொகுத்துள்ள அருமையான இந்த நூல் பாரதி நூற்றாண்டு வெளியீடாக 1982 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 248 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் அன்றைய விலை ரூ12.50

 

ரா..பத்மநாபன் பற்றிய அறிமுகம் பாரதி அன்பர்களுக்குத் தேவையில்லை. பாரதி பணியில் தன் வாழ்நாளை ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து ஏராளமான பாரதியார் படைப்புகளைக் கண்டெடுத்து தமிழுலகிற்கு நல்கியவர்.

பாரதியார் கவிநயம் என்ற இந்த நூலில் 34 அரிய கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்

 

பழைய கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பத்இல், தற்சமயம் ஜீவியர்களாக இராதவர்களது கட்டுரைகளைத் தேர்ந்து பாதுகாத்தல் எனது முதல் நோக்கமாக இருந்ததுஎன்கிறார் அவர் தனது முகவுரையில்

 

 

அறிஞர்களின் கட்டுரைகள்

சுவாமி விபுலானந்தா,நாவலர் எஸ்.சோமசுந்தர பாரதியார், பரலி சு.நெல்லையப்பர், .ரா., சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், பி.ஶ்ரீ., பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, கு..ராஜகோபாலன், டாக்டர் மு.வரதராசன், மா.அனந்த நாராயணன், திருலோக சீதாராம், பெ.நா.அப்புஸ்வாமி, .ஜீவானந்தம், டி.கே.சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் .சீனிவாசராகவன், கி.சந்திரசேகரன், ‘குகப்ரியை’, ரா.ஶ்ரீ. தேசிகன், அமுதன், டாக்டர் தி.சௌ.ராஜன், சங்கு சுப்ரஹ்மண்யன், ரா.நாராயணன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், டர்பன் எஸ்.முனுசாமிப் பிள்ளை, .சிதம்பர சுப்ரமண்யன், வை.மு.கோதைநாயகி அம்மாள், .சுப்பு ரெட்டியார், ..மகரபூஷணம், பேராசிரியர் கே.ஸ்வாமி நாதன், ‘மாரார்’, மணிக்கொடி கு.ஶ்ரீநிவாஸன் ஆகிய 31 அறிஞர்களின் கட்டுரைகள் என்றால் அதன் சுவை பற்றிச் சொல்லவா வேண்டும்.

 

 

அறிஞர்களின் கருத்துக்கள்

சுவாமி விபுலானந்தர்:- கண்ணனின் குழலிசையை அநேக கவிகள் வருணித்திருக்கிறார்கள். ஆனால் பாரதியாரைப் போல் ஒருவரும் இவ்வளவு அழகாக, “மாம்பழ வாயினிலே குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம்என்று பாடினதில்லை.

 

 

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்:- 1906ஆம் வருஷம். நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் அவரை முதல் முதல் சந்தித்தேன். சென்னையில் தம்புச் செட்டித் தெரு அல்லது லிங்கிச் செட்டித் தெரு இரண்டில் ஒன்று. அங்கே, ஒரு வீட்டுத் திண்ணையில் கல்கத்தா காங்கிரஸுக்குப் போக அவரும் ஆயத்தமாக இருந்தார். என்னுடைய வக்கீல் தொழில் தோழர், இப்போது, ‘நரசிம்ம ஸ்வாமிஎன்று சொல்லப்படும் சேலத்து நரசிம்மய்யரும், நானும், பாரதியாரோடு சேர்ந்து, மூவருமாக கல்கத்த்ஆ போக ஏற்பாடு செய்து கொண்டு சந்தித்தோம். தேஜஸ் பொருந்திய முகம், உருமாலையுமில்லை; கையில் தடியுமில்லை; அழகும் ஒளியும் சிரிப்பும் வீசிய முகம். பளிச்சென்று இப்போதும் கண் முன் வந்து நிற்கிறது.பிறகு புதுச்சேரியிலும் அந்த முகத்தைக் கண்டேன். இரு தடவை கண்டேன். குதித்துக் குதித்துப் பாடுவதையும் கேட்டேன். நல்ல சாப்பாடும் போட்டார். எனக்கும் ஆர்.வி.கிருஷ்ணய்யர் (அவரும் அப்போது சேலத்தில் வக்கீல்) இருவருக்கும் சாப்பாடு போட்டு, பாடவும் பாடினார். பிறகு சென்னையில் பல முறை சந்தித்திருக்கிறோம்; ஒரு முறை மகாத்மா காந்தி முன்னிலையில்.

(தினமணி சுடர் , சென்னை பாரதி அநுபந்தம், 5-9-1954 இதழில் எழுதியது)

 

 bharathi

கு..ராஜகோபாலன்: ‘ஞாயிறு வையமாகிய கழனியில் வயிர வொளியாகிய நீர் பாய்ச்சுகிறது’   – இத்தகைய அகண்டமான கற்பனையைகவிக்குக் கவிஎன்று சொல்லப்படும் ஷெல்லி முதலியவர்களின் வாக்குக்கு வெளியே காண்பது கடினம்.

 

கி.சந்திரசேகரன்:- பாரதியின்ஞாயிறுஎன்ற வசன காவியத் துணுக்குகளை வாசித்தால் வேதபாஷை நடையையும் வேத இலக்கியத்தின் சுடர்ப் பொறிகளையும் அவன் தனதாக்கிக் கொண்டிருப்பது தெளிவாகும்.

அமுதன்:- பாரதி தமிழின் உயிருக்கு உயிராகியவர். தமிழ் உயிர் திரண்டு உருண்டு உருவாகிய போது, பாரதி ஆயிற்று.

 

சங்கு சுப்ரஹ்மண்யன்:- அவரது வாழ்க்கையின்று என்னைப் போன்றவர்களுக்கு ஒரு படிப்பினை உண்டு.’எத்தகைய துன்பங்களுற்றாலும், பட்டினி கிடந்தாலும் தேசப் பணியையும், தாய்மொழித் தொண்டையும் மறக்கலாகாதுஎன்பதே அந்தப் படிப்பினை. (‘சுதந்திரச் சங்குசென்னை 9-9-1931 இதழில் எழுதியது)

 

அருமையான கண்ணோட்டங்கள்

பாரதியார் கவிநயம். பாரதியார் பாநலம், பாரதியும் வேதாந்தப் பேழையும், பாரதியாரின் வாழ்க்கைத் தத்துவம், பாரதியார் கவிதை, கவிதை ரஸாயனம், பாரதியும் விஞ்ஞானமும், பாரதி நடந்த பாதை, பாரதியின் மந்திரக் கவிகள் என்பன போன்ற தலைப்புகளைப் பார்த்தாலேயே பாரதியாரை அறிஞர்கள் எத்தனை விதமாகப்பார்த்துள்ளார்கள் என்பதை உணரலாம். ராஜாஜி முதல் தென்னாப்பிரிக்கா டர்பன் எஸ்.முனுசாமிப் பிள்ளை வரை பாரதியாரை நன்கு அறிந்தவர்கள் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளனர் என்பது ஒரு தனிச் சிறப்பு.

 

பாரதி ஆர்வலர்கள் ஒவ்வொரு கட்டுரையாக பல்வேறு பழைய இதழ்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா? முடியாது.

அற்புதமான இந்த கட்டுரைக் கோவையை ரா..பத்மநாபன் போன்ற பாரதி பக்தர் ஒருவராலேயெ தொகுக்க முடியும். அவருக்குத் தமிழ் உலகம் என்றும் கடமைப் பட்டுள்ளது.

 

பாரதி ஆர்வலர்களுக்கான இன்றியமையாத ஒரு நூல்: ”பாரதியார் கவிநயம்

*******

மைல் கல் பற்றிய 1921 ஆம் ஆண்டு கவிதை

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 30  September 2015

Post No: 2200

Time uploaded in London :– 5-50 (காலை)

(Thanks  for the pictures) 

bhavnagar milestone

1920 ஆம் ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான செய்யுள் தொகுப்பில் வழக்கமான தமிழ் செய்யுட்களுடன் தனியாரின் சில கவிதைகளும் இடம் பெற்றன. அதில் ஒன்று சாலைகளில் காணப்படும் மைல் கல் பற்றியது. இப்பொழுது வெளிநாடுகளைப் போல உயரத்தில் தொங்கும் போர்டுகள் வந்துவிட்டதால் அடுத்த தலை முறைக்கு மைல் கல் என்றால் என்ன என்றே தெரியாது. ‘கூகுள்’ மூலம் கிடைத்த சில படங்களை இணத்துள்ளேன். அவை தற்காலத்தியவை. அந்தப் பழைய நூலுக்கும் இவைகளுக்கும் தொடர்பு இல்லை.

கவிதையை இயற்றியவர் ஆனைமலை ஸ்ரீ ஸ்ரீநிவாச முதலியார் . ஷேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட் ஜூலியட்டைப் பாடல் வடிவில் தமிழில் மொழிபெயர்த்தவர்!! இப்போது பெரிய பல்கலைக்கழகங்களும் சாதிக்க முடியாத பணிகளைப் பல தமிழ் ஆர்வலர்கள் 1900- 1940 ஆண்டுகளில் சாத்தித்துள்ளனர். புத்தகம் இருப்பிடம்: பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்.

IMG_6263 (2)

IMG_6367 (2)

IMG_6368 (2)

IMG_6369 (2)

KM-Milestone_On_the_Munnar_Road

IMG_6370 (2)

–சுபம்—

கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்!

symposiumIII

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Wriiten  by S NAGARAJAN

Date: 28 September 2015

Post No: 2194

Time uploaded in London :– 15-12

(Thanks  for the pictures)

 

கம்பன் காவிய இன்பம்

கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்!

.நாகராஜன

 

கண்ணாடி

உலக மகாகவி கம்பன் என்று சொன்னால் உதட்டைப் பிதுக்குவர் ஆங்கில இலக்கியம் நன்கு அறிந்தோர் – பழைய காலத்தில்!

அது ஆங்கிலேயர் அரசாண்ட காலம். தமிழைப் படிக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தாலும் தமிழில் ஒன்றும் இல்லை என்று சொல்வது ஒரு வித கௌரவம்!

இரண்டு மொழிகளின் இலக்கியங்களையும், கூடவே சம்ஸ்கிருத இலக்கியங்களையும் படித்தோர் இன்று மனமார ஒப்புக் கொள்வர் கம்பன் உலக மகா கவி தான் என்று.

உதாரணத்திற்கு ஒரே ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.

ஆடி! கண்ணாடி!!

mirror2

வள்ளுவரின் கண்ணாடி

வள்ளுவர், குறளில் எதிரில் இருப்பதை உள்ளபடி கண்ணாடி பிரதிபலிப்பது போல நெஞ்சம் கடுத்ததைக் காட்டி விடும் முகம் என்றார். கண்ணாடிக்கு அவர் பயன்படுத்திய சொல் பளிங்கு.

“அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்” (குறள் 706)

வள்ளுவரிலிருந்தே கண்ணாடி உவமை பல்வேறு விதமாக காவியங்களில் இடம் பெற்று வந்துள்ளது.

mirror1

ஆலங்குடி வங்கனாரின் கண்ணாடி

குறுந்தொகையில் ஒரு பாடல் (எண் 8). ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் பாடிய பாடல் இது.

பரத்தை ஒருத்தி வீட்டிலிருந்து தன் இல்லம் ஏகிய தலைவன் ஒருவனை, அந்தப் பரத்தை தன் பெண்டாட்டி சொன்னபடி அவன் ஆடுவதாக எல்லோரும் கேட்க (எரிச்சலுடன் நையாண்டியாக) இதைக் கூறுகிறாள்.

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம்மில் பெருமொழி கூறித் தம்மில்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப்பாவை போல

மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே

வயலில் இருக்கும் மரம் ஒன்றிலிருந்து கீழே விழும் இனிய பழத்தைக் குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்விப் பிடிக்கும் நாட்டவனான ஊரன், என்னுடைய வீட்டில் இருக்கும் போது பெரும் பேச்சைப் பேசுவான் (அதாவது பரத்தை வீட்டில் ஆட்டம் போடுவான்) ஆனால் தன் இல்லம் ஏகி விட்டாலோ கண்ணாடி முன்னால் கையைத் தூக்கினால் அதுவும் தூக்குவது போல தன் மனைவிக்குப் பணிவிடை செய்வான். (அவள் பேச்சு தான் அங்கே; அங்கு ஆட்டம் மாறும் – அவள் சொல்வதற்கு ஆடுவான்! அதாவது விளையாட்டு விதிகளே மாறி விடும்).

என்ன ஒரு பாடல் பாருங்கள், கண்ணாடியை மையமாக வைத்து! செய்ததைச் செய்யும் கண்ணாடி போல ஆகி விடுவானாம் அங்கே. மனைவி கையைத் தூக்கினால் இவனும் ஆடி போலத் தூக்கி ஆட வேண்டியது தான்!

big_square_gilt_mirror_left

முகுரவானனன்

திருதராஷ்டிரனை விவரிக்க வந்த வில்லிப்புத்தூரார் வில்லி பாரதத்தில் முகுரவானனன் என்று கூறுகிறார் (ஆதிபருவம் சம்பவச் சருக்கம் பாடல் 115)

முகுரம் என்றால் கண்ணாடி. ஆனனம் என்றால் முகம். கண்ணாடி போன்ற முகத்தை உடையவன் என்று பொருள். கண்ணாடி எப்படி தான் பிறரால் காணப்பட்டு பிறரைத் தான் காணும் உணர்ச்சி அற்று இருக்கிறதோ அது போல திருதராஷ்டிரனை அனைவரும் பார்க்க முடிந்தாலும் அவர்களைக் காண முடியாத பிறவிக் குருடன் அவன் என்பதை இந்தப் பெயர் விளங்கச் சொல்கிறது.

இனி உலக இலக்கியத்திற்கு வருவோம்.

ஷேக்ஸ்பியரின் கண்ணாடி

ஷேக்ஸ்பியர்! இலக்கியப் பிரியர்கள் விழிகளை விரிப்பர். அவர் இயற்றிய 43 நூல்களில் எட்டு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து நானூற்றி இருபத்தியொன்று (8,84,421) வார்த்தைகள் இருப்பதாக எழுத்தெண்ணிப் படித்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த எட்டு லட்சத்து எண்பத்திநான்காயிரம் + வார்த்தைகளில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாத வார்த்தைகள் 10. அதில் கண்ணாடியும் ஒன்று!

அவரது படைப்பான Measure for Measure இல் (II.II) ஒரு காட்சி. இஸபெல்லாவின் சகோதரனான க்ளாடியோவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது – லார்ட் ஏஞ்சலோவின் ஆணைப்படி. இஸபெல்லா தன் சகோதரனை விடுவிக்க வேண்டும் என்று ஏஞ்சலோவிடம் மன்றாடுகிறாள் இருவரும் மனிதர்களிடம் உள்ள குறைபாடுகளைப் பற்றி விவாதிக்கின்றனர். அப்போது, “Mankind’s glassy essence’ என்று ஷேக்ஸ்பியர் கூறுகிறார். இதன் அர்த்தம் யாருக்கும் சரிவர இன்று வரை விளங்கவில்லை. Glassy என்றால் கண்ணாடி போல உடை படுவதா? அல்லது பிரதிபலிப்பதா? அல்லது குணாதிசயம் அல்லது மனநிலை என்ற உளவியல் பொருளை எடுத்துக் கொள்வதா? இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. (அர்த்தம் சரிவர விளங்காத ஷேக்ஸ்பியருடைய இதர ஒன்பது வார்த்தைகள்: Armgaunt, balk’d, Braid, Cock- a-hoop, Demuring, Eftest, Impeticos, Portagem Watch-case)

427-Kambar

கம்பனின் இரு கண்ணாடிகள்

இனி கம்பனுக்கு வருவோம்:

சுந்தரகாண்டம், கடல் தாவு படலத்தில் ‘எழுந்தோடி’ எனத் தொடங்கும் 41வது பாடல்!

அநுமன் கடலிலிருந்து எழுந்த மைநாக மலையைப் பார்க்கும் காட்சி!

அழுங்கா மனத்து அண்ணல் (அற்புதமான இந்த சொல் தொடரைப் பற்றிய எமது கட்டுரை ஞான ஆலயம் இதழில் வெளியிடப்பட்டுள்ளதைப் படிக்கலாம்)

‘எழுந்து ஓங்கி விண்ணோடு மண் ஒக்க, இலங்கும் ஆடி

உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் ஓங்கிக்

கொழுந்து ஓடி நின்ற கொழுங் குன்றை வியந்து நோக்கி,

அழுங்கா மனத்து அண்ணல், ‘இது என் கொல்?’ எனா அயிர்த்தான்’

எதற்கும் சலியாத மனத்தினாகிய அநுமன் விளங்குகின்ற கண்ணாடி ஒன்றின் மீது  இட்ட ஓர் உளுந்து உருள்கின்ற காலத்திற்குள்ளே ஆகாயத்திற்கும் மேலாக வியாபித்து மேலும் கீழும் எங்கும் முடியும் அடியும் படர்ந்து நின்ற மைநாக மலையை ஆச்சரியத்துடன் பார்த்து , ‘இது என்ன’  எனச் சந்தேகித்தான்.

கண்ணாடி ஒன்றில் உளுந்து ஒன்றை உருட்டிப் பாருங்கள். அது எந்த வித உராய்வுமின்றி விரைந்து ஓடும் ஒரு க்ஷணத்திற்குள்ளாகவே. இதில் உள்ளிருந்த மைநாக மலை பிரதிபலிப்பு போல வந்ததையும் பிரதிபிம்பம் காட்டும் கண்ணாடி உவமை எடுத்துக் காட்டுகிறது.தடையின்றி இயங்குதல், விரைவு, பிரதிபிம்பம் ஆகிய மூன்றை கண்ணாடியில் உருளும் உளுந்து காட்டுகிறது.

இலங்கை நகரை வர்ணிக்க வேண்டும். ராவணனின் இலங்கையை யாராலாவது சரியாக வர்ணிக்க முடியுமா? உலகப் பெரும் புலவராக இருந்தாலும் சரி தான்! முடியுமா?

இப்போது கண்ணாடியின் உதவியை நாடுகிறான் கம்பன். இன்னொரு கண்ணாடியைக் கம்பன் உவமையாகக் காட்டுகிறான். இலங்கை நகருக்காக! அந்த அருமையான பாடல் இது:-

அநுமன் இலங்கைக்கு இப்பால் உள்ள பவள மலை மீது கால் பதிக்கிறான். இலங்கையை நோக்குகிறான்.

மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மை

எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,

விண்ணிடை, உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்

கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான்

(பாடல் 79, கடல் தாவு படலம்)

நிலவுலகின் அடிப்பாகம் வரையிலும் வேர் ஊன்றப் பெற்று,உச்சியோ வானுலகில் பொருந்துதலால், உலகத்தின் மேல் மற்றும் கீழ் எல்லை நிலையை மதிப்பிடுவது போன்றதும் தன்னுடைய பாதம் தங்கியதுமான அந்தப் பவள மலையின் மீது நின்று அநுமன், வானத்திலுள்ள தேவலோகமாகிய பெண் தனது வடிவழகைப் பார்ப்பது போல  நிலைக் கண்ணாடி வைத்தது போல விளங்குகின்ற இலங்கையைப் பார்த்தான். வானுலகத்தின் மறுபதிப்பு அல்ல, அல்ல, பிரதிபிம்பமே இலங்கை.

mirror-03

நமக்கு நாமே உருவகப்படுத்த வேண்டும்

கண்ணாடி உவமை கவிஞனின் வேலையைக் கவினுற முடித்து விட்டது. கண்ணாடியின் மீது உளுந்து ஓடுவதை எந்த ஒருவராலும் தானே எளிதில் செய்து பார்க்க முடியும். தடையின்மை, வேகம், பிரதிபிம்பம் ஆகியவற்றை நேரில் உணர முடியும். இலங்கை கண்ணாடியோ ஒவ்வொருவரின் கற்பனையைப் பொருத்து அமையும். தேவலோகம் பற்றிய கற்பனையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்து கொள்ளலாம். அதன் பிரதிபிம்பமே இலங்கை.

கற்பனை செய்து கண்டு கொள் என்ற இந்த உத்தி, உலக மகா கவிகளுள்ளே உன்னதமான ஒருவருக்கு மட்டுமே உதிக்க முடியும்! கம்பன் அப்படிப்பட்ட அருமையான கவி. உலக மகாகவியைக் கண்ணாடி முன்னால் நிறுத்தினால் அதன் பிரதிபிம்பமாக கம்பன் அமைவான். (இங்கும் அவனது கண்ணாடி உவமை தான் உதவுகிறது!!!)

உலகின் ஒப்பற்ற கவிஞன் கம்பன்

இப்போது பார்ப்போம் :- வள்ளுவரின் கண்ணாடி உளவியல் ரீதியிலான நெறி முறைக் கண்ணாடி. ஆலங்குடி வங்கனாரின் கண்ணாடி வாழ்வியல் அங்கத்தின் நாடக பாணியிலான கண்ணாடி. வில்லிப்புத்தூராரின் கண்ணாடி ஒரு மனிதரை விளக்க வந்த கண்ணாடி. ஷேக்ஸ்பியரின் கண்ணாடி தெளிவற்ற கண்ணாடி. கம்பனின் இரு கண்ணாடிகளோ ஒன்று செய்முறைக்கு எளிது; இன்னொன்றோ கற்பனைக்கும் அரிது; அவரவர் மனக்குதிரையின் வேகத்தையே அது பொருத்திருக்கும்.

இப்போது எடை போட்டுப் பார்த்தால் கண்ணாடி (முன்னாடி) முன்னர் ஷேக்ஸ்பியர், கம்பரில் யார் ஜொலிக்கிறார்கள்?!

முடிவு உங்கள் கையில்!

***********

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 8

bharati stat4

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES;

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by S NAGARAJAN

Date: 27 September 2015

Post No: 2192

Time uploaded in London :– 14-12

(Thanks  for the pictures) 

ச.நாகராஜன்

Subramania Bharati  –  Patriot and Poet

அருமையான இந்த ஆங்கில நூலை எழுதியவர் பி.மஹாதேவன். 1957, செப்டம்பரில் இது அத்ரி பப்ளிஷர்ஸ், சென்னை-17ஆல் வெளியிடப்பட்டது. அப்போது இதன் விலை மூன்று ரூபாய். 231 பக்கங்கள். ஆங்கிலத்தில் பாரதி பற்றி அறிய விரும்புவோர் நிச்சயம் வாங்க வேண்டிய நூல் இது.

 

பத்தொன்பது அத்தியாயங்களில் பாரதியார் வாழ்க்கை

 

பத்தொன்பது அத்தியாயங்கள் : Roots, Nonage, Prodigy, Northward Ho!, Interest in Politics, In Search of a Job, Hack-work and Politics, Vande Matharam, Boycott and Swadeshi, Poet and Patron, The Congress Split, The Split and After, At Pondicherry, The Return of the Native, Back in Madras, Bharati the Man, The Bharati Circle, Bharati’s works: Poems, Bharati’s Prose Works, Conclusions என்ற அத்தியாயங்களின் தலைப்புகளைப் பார்த்தாலேயே விஷயம் எவ்வளவு நுணுக்கமாகப் பகுக்கப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து விடலாம்.

 

அழகிய ஆங்கில நடை; விஷயங்களை அதிகாரபூர்வமாக ஆராய்ந்து சொல்லி இருக்கும் பாங்குபடிப்பவரை நன்கு கவரும்.

வைர வியாபாரியும் பாரதியாரும்

பாண்டிச்சேரியில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி விரிவாக இதில் காணலாம்.

நூலிலிருந்து சில சிறிய பகுதிகள்:

 

“The coming together of such noted fire-brands as Sri Aurobindo, V.V.S.Aiyar and Bharati made the British Government uneasy. Indian Police officials naturally came to the conclusion that they would organize more terrorism from Pondicherry and direct operations in British India without exposing themselves to the risks of arrest or imprisonment.”

 

“On another occasion, it was a ‘diamond merchant’ who came to him with samples of his stock in trade, expatiating upon the virtues of stones, and speaking with quiet assurance of flaws and defects sure that he was dealing with another emissary of the C.I.D. the alleged merchant glanced about the house with furtive looks, like one in search of a hidden object and very evidently making mental notes of all that he saw. After some minutes, Bharati opened his counter-attack. ‘Very well, my dear sir.’ He said, ‘I too have quite a varied assortment of diamonds and all other precious stones. I suppose you buy and sell; so will you please help me to dispose of some of my stock?’ Though unprepared for such a poser, the merchant was equal to the occasion, and replied: ‘That depends: I must have a look at them. What other stones do you have besides diamonds – rubies, emeralds..?’ “Yes, all the nine varieties.” replied Bharati briskly, and reaching out for some his note-books on the table, offered them to the merchant. ‘There’ exclaimed Bharati in a tone of sublime pride, ‘are my precious stones, not even millionaires can find the money to buy them; please take them to your masters, and tell them to recommend to the government to purchase them from me.’ ‘I don’t quite follow you’ faltered the merchant, when Bharati replied: ‘I feared you wouldn’t. These are my poems which the government will not allow me to publish: they are more priceless than all your diamonds!’ The bogus merchant collapsed, fell at the feet of Bharati and begged his pardon.

 

ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம். நூல் முழுவதும் நிரம்பிக் கிடக்கும் சுவையான சம்பவங்களின் நடை இது தான்.

 

ஆங்கில மொழிபெயர்ப்பு

மஹாகவியின் கவிச்சுவையையும் ஆசிரியர் விட்டு வைக்கவில்லை. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு ஆகியவற்றில் சில பகுதிகள் அற்புதமாக ஆங்கில ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

Dhrupad’s daughter you stacked last –

    Dhrishtadhymuna’s sister

A fatal throw of the dice you cast,

    And said, “Mong slaves I list her!”

Past all endurance is this shame –

      Sahadev, prepare a brand –

For having sulled our holy flame

    Let us burn up his hand!’

 

துருபதன் மகளைத்திட்டத் துய்நனுடற் பிறப்பை

இருபகடை என்றாய்ஐயோ! இவர்க்கு அடிமை என்றாய்.

இது பொறுப்பதில்லைதம்பி! எரிதழல் கொண்டு வா

கதிரை வைத்திழந்தான்அண்ணன் கையை எரித்திடுவோம்

என்ற வீமனின் உரையை நூலாசியர் மொழி பெயர்த்துள்ளதை மேலே பார்க்கிறோம்.

இத்துடன் பாரதியாரின் ஆங்கிலப் படைப்புகள் சிலவும் பிற்சேர்க்கையில் காணலாம்.

மொத்தத்தில் பாரதியார் பற்றிய சுவையான ஆங்கில விருந்து.

தமிழ் பாரதியை உலகெங்கும் அறிமுகப்படுத்த எடுத்த இந்த முயற்சியைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

பேராசிரியர் மகாதேவனின் தொண்டு மறக்க முடியாத தொண்டு!

 

************