கஞ்சக் கோமுட்டி, பேராசைப் பிராமணன் கதை

brahmin 2

Compiled by London swaminathan

Article No. 1793;11th  April 2015

Uploaded from London at   5-34 am

 

 

ஒரு ஊரில் ஒரு கோமுட்டிச் செட்டி இருந்தார். அவர் மஹா கஞ்சன். அதே ஊரில் புரோகிதம் செய்யும் ஒரு பிராமணர் இருந்தார். அவர் மிகவும் பேராசைக்காரர். ஒரு ஆடி அமாவாசை அன்று எல்லோரும் நதிக்கரையில் நீத்தார் நினைவாக தர்ப்பணம்-திதி கொடுத்தனர். கோமுட்டி செட்டியாரும் அவ்வாறு செய்ய எண்ணினார். காலையில் போனால், ஐயருக்கு நாலு அணா தட்சிணை கொடுக்க வேண்டி இருக்கும், நாம் மெதுவாக உச்சிப் பொழுதில் போவோம் என்று உச்சிப் பொழுதில் நதிக் கரைக்குப் புறப்பட்டார்.

அப்போதுதான் பிராமணர் தர்ப்பைக்கட்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானார். செட்டியாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி. வாங்கோ செட்டியார்வாள், என்ன தாமதம்? அதனால் என்ன, வாங்கோ, உங்களுக்கும் பண்ணி வைக்கிறேன் என்று தர்ப்பைக் கட்டை அவிழ்த்து ஆயத்தமானார்.

ChettiarBommai

செட்டியார் பொம்மை (கொலுவில்)

செட்டியாருக்கு  தர்ம சங்கடமான நிலை. பிராமணரிடம் மாட்டேன் என்று சொல்லி அவர் சாபத்துக்கு ஆளாக முடியாது. அடடா, இடுப்பில் பணத்தை முடிந்துகொள மறந்துவிட்டேனே, என்றார்.

அட, செட்டியார்வாள், உமது கிருஹம் (வீடு)தான் எனக்கு நன்றாகத் தெரியுமே. நாளை நானே வீட்டுக்க்கு வந்து தட்சிணை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவருக்கு தர்ப்பணம் செய்துவைத்தார். செட்டியார் மனதில் பலா  ஐடியாக்கள் உதித்தன. சரி என்று சொல்லி உட்கார்ந்து எல்லாம் முடிந்தபின்னர் விடை பெற்றுக் கொண்டார்.

அந்தப் பிராமணர், மறுநாள் அதிகாலையில் செட்டியார் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினார். ஜன்னல் வழியாகப் பிராமணரைப் பார்த்தவுடன் மனைவியிடம், “நான் செத்துப் ஓய்விட்டேன் என்று சொல்லி விடு, அவர் பணம் வாங்க வந்திருக்கிறார்” என்று சொன்னார். மனைவியும் அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாக வந்து கதவைத் திறந்து, ஐயஹோ, அவர் போய்விட்டாரே என்று கதறினார்.

 

பிராமணர் மனதில் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டது. அதற்கென்ன நானே காரியம் எல்லாம் செய்து முடிக்கிறேன், கவலைப் படாதீர்கள் என்று சொல்லி ஈமக் கிரியைகளுக்கு ஆட்களை ஏற்பாடு செய்தார். செட்டியார் கொஞ்சமும் பயப்படவில்லை. பிணமாகக் கிடந்தார். வீட்டின் முன்னால் பாடை தயாராகி, அவரைத் தூக்கி வைத்தனர். சங்கு ஊதியது, மணி அடித்தது, இறுதி ஊர்வலமும் புறப்பட்டது. ஐயர் முன்னே செல்ல நெருங்கிய உறவினர்கள் பின்னே வர, ஊர்வலம் சுடுகாட்டை அடைந்தது.

அந்தப் பிராமணர் எல்லா கிரியைகளையும் முடித்த பின்னர் சிதைக்குத் தீ மூட்டப்பட்டது. சுடுகாட்டில் பிணத்துக்கு தீ வைத்த பின்னர் யாரும் திரும்பிப் பார்க்கக்கூடாது என்ற சம்பிரதாயம் உண்டு. ஆகவே பிராமணர் திரும்பிப் பார்க்காமல் சென்று ஒரு மரத்தின் பின்னர் ஒளிந்து கொண்டார். சிதைத் தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. யாரும் இல்லை என்பதை ஓரக் கண்ணால் பார்த்த செட்டியார், தாவிக் குதித்து வெளியே வந்தார். அப்பாடா, அந்தப் பிராமணனுக்குக் காசு கொடுக்காமல் தப்பிக்க எவ்வளவு சிரமப் பட்டுவிட்டேன் என்று சொல்லி பெருமூச்சு விட்டார். மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்த பிராமணருக்குச் செட்டியாரின் குரல் தேன் போல ஒலித்தது. செட்டியார் முன்னால் தாவிக் குதித்து வந்து, எங்கே என் நாலணா? என்று கேட்டார்.

brahmin

“கள்ளனுக்குக் குள்ளன்” — என்பது தமிழ்ப் பழமொழி

நீ பாய்க்கு அடியில் போனால் நான் கோலத்துக்கு அடியில் போவேன் என்பது – கன்னடப் பழமொழி!

swami_48@yahoo.com

சாமியார் தேன் சட்டி உடைத்த கதை!!

honeycomb

Honey comb picture தேன் கூடு படம்

Compiled by London swaminathan

Article No. 1791 Date 10th  April 2015

Uploaded from London at   8-43

 

ஒரு காட்டில் ஒரு சாமியார் இருந்தார். அவர் மிகவும் நல்லவர். இதனால் அவர் புகழ் பரவியது. ஒரு வியாபாரி அவரைக் காண வந்தார். அவர் மீது பக்தி பூண்டு, சுவாமிகளே, காட்டுக்குள் தனியாக வசிக்கிறீர்களே, தங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அவர் ஒன்றையும் வாங்கிக் கொள்ள மறுத்தவுடன் நான் உங்கள் பூஜைக்குத் தினமும் தேன் அனுப்புகிறேன், என்று சொல்லி தினமும் ஒரு சட்டித் தேனை அனுப்பி வைத்தார்.

அளவுக்கு அதிகமாக தேன் கிடைத்ததால் சாமியார் அதைப் பெரிய பானையில் கொட்டி உறி கட்டி, அதை மேலே தொங்க விட்டார். நாள் ஆக, ஆக தேன் சாப்பிட்டு அவர் உடம்பும் தினவெடுக்கத் துவங்கியது. கற்பனை வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்தார்.

அட, இப்படியே நான் நிறைய தேன் சேகரித்தால் ஒரு நாள் அதை விற்று இரண்டு ஆடுகள் வாங்குவேன். அந்த ஆடுகள் சில ஆண்டுகளில் பெருகியவுடன் அதன் ரோமத்தில் கம்பளி நெய்வேன். அதை விற்றுப் பெரிய பணக்காரன் ஆவேன். பின்னர் ஒரு ராஜகுமாரியைத் திருமணம் செய்துகொள்வேன். எனக்கு குழந்தைகள் பிறக்கும்.

அந்தக் குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் வளர்ப்பேன். டேய், மகனே இங்கே வா, இதைச் செய் – என்று கட்டளை இடுவேன். அவன் பணத் திமிரில் எனக்குக் கீழ்ப் படியாமல் இருந்தால், இந்தக் கம்பை வைத்து முதுகில் ஒரு அடி கொடுப்பேன் – என்று சொல்லியவாறே பக்கத்தில் இருந்த கம்பை எடுத்து சுழற்றினார். அது மேலே உள்ள தேன் பானையை கீழே தள்ளி சுக்கு நூறாக உடைத்தது. அவரது கனவெல்லாம் தேன் துளிகள் போலச் சிதறின.

ஆசைப் பட்டு மோசம் போனேனே என்று எண்ணி மீண்டும் தவம் செய்யத் துவங்கினார்.

பேராசை பெரு நஷ்டம்!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் — என்பது பழமொழி. அளவுக்கு மிஞ்சினால் தேனும் விஷம் என்பது புது மொழி.

தேவைக்கு அதிகமாக எதையும் சேர்க்காதீர்கள்.

swami_48@yahoo.com  

ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் : அறிமுகம்

gold  ganesh

Compiled by London swaminathan

Article No. 1791 Date 10th  April 2015

Uploaded from London at   8-13 am

 

This is an interview given by my brother S NAGARAJAN who contributes regularly to our blogs.

ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் : அறிமுகம்

.நாகராஜன்அறிமுகம்

 

திரு.நாகராஜன் பாரம்பரியமிக்க தேசபக்த குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தந்தையார் திரு வெ.சந்தானம் சுதந்திரப் போரிலே ஈடுபட்டு சிறை சென்றவர்.மணிக்கொடி திரு பி.எஸ்.ராமையாவுடன் இணைந்து தமிழ் பத்திரிகை உலகில் ஒரு புது சகாப்தத்தைத் தோற்றுவித்தவர். சிறந்த பத்திரிக்கையாளராக விளங்கிய இவர் மதுரை தினமணிப் பதிப்பின் பொறுப்பாசிரியராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்தவர்.

 

தஞ்சை மாவட்டம் கீவளூரில் பிறந்த திரு ச.நாகராஜன் இது வரை சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகள், நாடகங்கள், மதிப்புரைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

 

விண்வெளி சாதனைகள் உள்ளிட்ட அறிவியல் கட்டுரைகள்,ஜோதிடம், வானியல்,வரலாறு, இலக்கியம்,சுற்றுலா இடங்கள்,புலன் கடந்த உணர்வியல்,கடல் வளம், மிருக இயல்,இசை, மந்திரம்,யந்திரம், சாதனையாளர்கள், உடல் ஆரோக்கியம், யோகா, வாஸ்து,ஹாலிவுட் சினிமா, தமிழ் திரை இசைப்  பாடல்கள் உள்ளிட்ட பல பொருள்களிலும் கட்டுரை படைத்திருப்பது இவரது தனிச் சிறப்பு.

 

திருச்சி வானொலி நிலையம் வாயிலாக இவரது நாடகப் படைப்புகள் ஒலிபரப்பாகி உள்ளன.ரேடியோ உரைகளும் மதுரை மற்றும் சென்னை வானொலி மூலமாக ஒலிபரப்பாகி உள்ளன.200க்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டு உரைகளை சென்னை வானொலிக்காக இவர் படைத்துள்ளார்.ரெயின்போ வானொலிக்காக இல்லத்திலிருந்தே இணைப்பைப் பெற்று வானியலில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படும் போதெல்லாம் அவை பற்றிய செய்திகளைத் தந்ததோடு நேயர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.

 

இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழ் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜயா டி.வியில் சுமார் 50 நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். திருப்பாவைக்கு 30 நாட்கள் விஞ்ஞான ரீதியில் இவர் அளித்த விளக்கங்கள் நேயர்களின் கவனத்தைப் பெரிய அளவில் ஈர்த்தன.ஜயா தொலைக்காட்சி இவரை காலைமலர் நிகழ்ச்சியில் பேட்டி கண்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

 

வின் டி.வியில் நேரடி ஒளிபரப்பில் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் பற்றி அறிவியல் ரீதியாகக் கருத்துக்களை அளித்துள்ளார்.வசந்த் தொலைக்காட்சியில் ஹிக்ஸ்போஸன் பற்றிய அறிவியல் விளக்கம் தந்துள்ளார்.

 

சுயமுன்னேற்றம், படைப்பாற்றல் திறன், நிர்வாக இயல் உள்ளிட்ட புதிய உத்திகள் பற்றி உரைகள் ஆற்றியும், பயிற்சி முகாம் நடத்தியும் வந்துள்ளார். பல பொறியியல், கலைக் கல்லூரிகளில் மாணவ மாணவியருக்காக இவர் நடத்திய பயிற்சி முகாம்கள் அவர்களை மேம்பட வழி வகுத்தவை.

 

வாகன கட்டுமானத் துறையில் தென்னகத்தின் சிறந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றியுள்ளார்.

 

இலங்கை, பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று பரந்த அனுபவம் பெற்றிருக்கிறார்.

 

இவரது படைப்புகள் தினமணி, தினமணி கதிர், தினபூமி, ஆனந்தவிகடன், பாக்யா,கலைமகள், மஞ்சரி, மங்கையர் மலர்,கோகுலம் கதிர், இதயம் பேசுகிறது, ஞான ஆலயம், சினேகிதி, சின்னத்திரை,ஜெம்மாலஜியும் ஜோதிடமும், ஆதிபிரான், ஹெல்த்கேர், குவைத் தமிழ் அமுதம்,THE HINDU உள்ளிட்ட பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுள்ளன.

 

இவரது அறிவியல் தொடரானவிண்வெளியில் மனித சாதனைகள்’  மூன்று வருடங்களாக பாக்யா இதழில் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றது. இந்தியப் பத்திரிக்கைகளிலேயே விண்வெளி சாதனைகளைப் பற்றிய மிக நீண்ட தொடர் இவருடையதே என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

இவரதுமாயாலோகம்தொடர் 78 வாரங்கள் பாக்யாவில் தொடர்ந்து வெளி வந்தது. தற்போது அறிவியல் துளிகள் 210 வாரங்களைக் கடந்து பாக்யா இதழில் தொடர்கிறது.

இவரது படைப்புகள் வாரந்தோறும் http://www.nilacharal.com மின் இதழில் வெளிவருகிறது.

இவரது சகோதரர் திரு ச.சுவாமிநாதனின் swamiindology.blogspot.com மற்றும் tamilandvedas.blogspot.com ஆகிய தளங்களில் இவர் கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

 s nagarajan

Picture of S Nagarajan

இதுவரை இவர் படைப்புகளானவெற்றிக்கலை, அறிவியல் வியக்கும் ஆன்மீகம், நவகிரகங்கள்,அதிரடிமன்னன் ஜாக்கிசான்.அறிவுக்கும் அப்பால், பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும், அற்புத அவதாரம் ஸ்ரீ சத்யசாயிபாபா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலம் அறிவோமா, விந்தை மனிதர்கள், சிறுவர்க்கான புராணக் கதைகள், உலகின் அதிசய இடங்கள், நாகநங்கை (சரித்திர நாவல்), விஜயதீபம் (சரித்திர நாவல்), வியப்பூட்டும் விஞ்ஞான புதுமைகள் 100, அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள், பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும், திறன் கூட்டும் தியானம் விண்வெளியில் மனித சாதனைகள், விலங்கியல் உலகம், ஆஹா! அப்படியா (விஞ்ஞான கேள்வி பதில்கள்), ஆன்மீக ரகசியங்கள் உள்ளிட்ட 23 புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

 

இவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலக் கட்டுரைகள் உலகின் தலை சிறந்த வலைத்தளமான http://www.ezinearticles.com-இல் வெளிவந்துள்ளன. இந்தக் கட்டுரைகளை 100184 வாசகர்கள் படித்துப் பயன்பெற்றுள்ளனர், இந்தக் கட்டுரைகளை பல நாடுகளிலும் உள்ள 1614 மின்னனு பத்திரிக்கைகள் விரும்பி மறுபிரசுரம் செய்துள்ளன.

இவரது ஆங்கிலப் புத்தகமான Breakthrough to Success என்ற வாழ்வியல் நூலை லண்டனிலிருந்து நிலா பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

நிலா பப்ளிஷர்ஸ் இவரது 52 தமிழ் நூல்களை மின்னணு நூல்களாக வெளியிட்டுள்ளனர்.

 

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு சுமார் 10000க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கலைச் சொற்களை இவர் தமிழாக்கம் செய்துள்ளார்அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இவரது மொழியாக்கத் தமிழ்ச் சேவையை விரும்பிப் பெறுகின்றன.

இவர் பெற்ற பாராட்டுரைகளில் சில:

 

இயக்குநர் திரு கே.பாக்யராஜ்

வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நூலாசிரியர் நேர் சிந்தனையுடனும், நியாயமாகவும், நளினமாகவும், சிறப்பாகவும், சீராகவும் வெற்றிக்கலையின் ரகசியத்தை வெளியிடும் தன் பணியைச் செய்து முடித்திருக்கிறார்.

(வெற்றிக்கலை நூல் முன்னுரையில்)

***

திரு இராம.கோபாலன் இந்து முன்னணித் தலைவர்

பாரத நாட்டின் ஆன்மீகம் பற்றி நமது நாட்டினர்க்கே தெரிவதில்லை.இதன் காரணமாக தேசீயத் தன்மான உணர்வு கிட்டத் தட்ட இல்லையென்றே கூறி விடலாம். திரு.நாகராஜனின் இந்த அரிய தொண்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(அறிவியல் வியக்கும் ஆன்மீக ரகசியம் நூல் வாழ்த்துரையில்)

****

 chicago1

This picture was taken by my eldest brother S SRINIVASAN in Chicago where Swami Vivekananda addressed the World Parliament of Religions.

எழுத்தாளர் திரு அசோகமித்திரன்

பிரமிப்புஎன்ற தலைப்பில்..

திரு நாகராஜன் அவர்கள் எழுதியஆன்மீக ரகசியங்கள்என்ற நூலின் 27 கட்டுரைகளையும் படித்தபோது எனக்குப் பிரமிப்பு தான் முதலில் ஏற்பட்டது. ஆசிரியர் தான் எவ்வளவு விஷயங்களை அறிந்து அவற்றைத் தனதாக்கி இருக்கிறார்! ஒரு பெரிய நூலிலிருந்து மேற்கோள் காட்டி விடுவது எளிது. ஆனால் அதைத் தன் அனுபவபூர்வமாக உணர்ந்து இன்னொருவருக்குக் கூறுவது மிகுந்த, பயிற்சி, சிந்தனை, சிரத்தை இருந்தால் தான் சாத்தியம். நாகராஜனின் ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள ஏராளமான விஷயங்கள் இதைக் காட்டுகின்றன.

 

நாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(ஆன்மீக ரகசியங்கள் நூல் முன்னுரையில்)

***

 

தமிழறிஞரும் முன்னாள் டி..ஜியுமான திரு சு. ஸ்ரீபால் அவர்கள்

அதிசயமான சாதனைகள் படைத்தவர்களைப் பற்றி அற்புதமாக நூலாசிரியர் எழுதியிருக்கிறார். எனது பாராட்டுதல்கள்.

(விந்தை மனிதர்கள் நூல் முன்னுரையில்)

***

 

பிரபல விஞ்ஞானியும் DRDOவில் பல்லாண்டுகள் பணியாற்றியவருமான அறிஞர் திரு K.G.நாராயணன் அவர்கள்

ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட  பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும்  தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது.    திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத்  திகழ்கிறது. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.

(அறிவியல் துளிகள் நூல் முன்னுரையில்)

****

 

பிரபல விஞ்ஞானியும் ASIEOவில் பல்லாண்டுகள் பணியாற்றியவருமான திரு V தேசிகன் அவர்கள்

விண்வெளியில் மனித சாதனைகள்நூலானது வானவியல், விண்வெளி வீர்ர்கள், விண்வெளிப் பயணங்கள் மற்றும் இவற்றிற்குப் பின்னணியில் இருந்தோர் பற்றிய அனைத்தையும் கலந்து தரும் ஒன்று.

 

மற்ற கிரகங்களில் மனிதனின் குடியேறுவதற்கான ஆர்வமூட்டும் சாத்தியக் கூறுகளையும், பிக் பேங் பற்றிய ஒரு சிறிய சுருக்கத்தையும் நீங்கள் இதில் படிக்கலாம். இந்த நூலானது விண்வெளிக் கொள்கை ஒப்பந்தம் பற்றியும் மனிதன் கற்பனையில் தோன்றிய சுவையான பல சிறிய கதைகளையும், ஒரு விண்வெளி வீராங்கனை தனது ஒப்பனைப் பொருள்களை விண்வெளிப் பயணத்தின் போது கொண்டு சென்றது போன்ற துணுக்குச் செய்திகளையும் கூடத் தருகிறது.

 

சில புத்தகங்களை சுவைக்க வேண்டும்; மற்றவற்றை முழுங்க வேண்டும், ஆனால்  குறைந்த சில புத்தகங்களை மட்டுமே அசை போட்டு ஜீரணிக்க வேண்டும்இந்தப் புத்தகம் மூன்றாவது வகையில் நிச்சயமாகச் சேர்கிறது.

இந்த புத்தகத்தை அசை போட உங்களுக்கு என் இனிய வேண்டுகோள்.

(விண்வெளியில் மனித சாதனைகள் நூல் முன்னுரையில்)

***

 

Professor Benjamin LE BEAU    (Paris) 

If we think that ‘positive thinking’ is a product of the 20th century (thanks to Dale Carnegie, James Allen and or Norman Vincent Peale…), then Mr.S.Nagarajan, the author of  ‘BREAKTHROUGH TO SUCCESS’ has aptly proved that it is an Indian product that existed  ever since thousands and thousands of years.

In short, the book seems to be a cocktail of many individual articles previously published in ezines of the internet. The author certainly armed with patience collected quite a number of quotations & citations and skillfully used them to support his points of view. 

 In many places Mr. Nagarajan gives the gist of the articles in a sentence with simple words and that is his plus point. The author, perhaps a bibliophil merits applauses because he has imbibed in so many books.  Bravo!

(‘BREAKTHROUGH TO SUCCESS’ ஆங்கில நூலின் முன்னுரையில்)

****

அபஸ்வரம் திரு.ராம்ஜி

திரு.நாகராஜன் எழுதிய அதிரடி மன்னன் ஜாக்கிசான் என்ற நூலைப் படிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. மிகுந்த ஆராய்ச்சியுடனும் கடின உழைப்புடனும்  இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.இதன் ஆசிரியருக்கு எனது பாராட்டுதல்கள்

(அதிரடி மன்னன் ஜாக்கிசான் நூல் முன்னுரையில்)

*********

 

டாக்டர் திருமதி கமலி ஸ்ரீபால் (கோகுலம் கதிர் இதழ் ஆசிரியர்)

படிக்கத் தொடங்கினால் படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் நூல்.ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். இறைவன் அருளால் திரு ச.நாகராஜன் அவர்களின் இலக்கியப் பணி மேன்மேலும் வளர மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

(திறன் கூட்டும் தியானம் நூல் முன்னுரையில்)

*******

 

கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

விநாயகா பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் இந்த நூலில் திரு நாகராஜனின் பேனா பல இடங்களில் வித்தை காட்டி பறக்கும் தட்டுகளை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கின்றன.அவருக்குப் பாராட்டுக்கள்.பாடத் திட்டத்திற்கும் ஏற்ற நூல் இது.

(பறக்கும் தட்டுகளும் அயல் கிரகவாசிகளும் நூல் முன்னுரையில்)

***********

 

தமிழறிஞரும் இந்திய இயல் ஆராய்ச்சியாளருமான திரு ச.சுவாமிநாதன்

தமிழும் சம்ஸ்கிருதமும் பாரத நாட்டின் இரண்டு கண்கள்.

இவைகளில், பழமை, புதுமை, பெருமை, அருமை ஆகிய நான்கு குணங்களைப் பெற்றது சம்ஸ்கிருத மொழி. அந்த மொழியின் ஆழமான கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள உதவுவது சுபாஷிதங்கள் எனப்படும் பழமொழி அல்லது பொன்மொழிகள். பலாப் பழத்தையோ ஆரஞ்சுப் பழத்தையோ ஒருவர் தனித் தனி சுளைகளாகக் கொடுக்கும்போது நாம் உடனே கையில் வாங்கி வாயில் போடுகிறோம். சம்ஸ்கிருத செல்வம் என்ற தொடரில் வந்த கட்டுரைகள் இத்தகைய பழச் சுளைகள். அதை நாகராஜன் அவர்களின் எழுத்து வடிவில் காணும் போது கொஞ்சம் சர்க்கரையும் தோய்த்துச் சாப்பிட்டது போல் இருக்கிறது. கூடுதல் இனிப்பு! ஆயினும் திகட்டாமல் மேலும் மேலும் சுவைக்கத் தோன்றுகிறது.

சம்ஸ்கிருதச் செல்வம் நூல் (சுபாஷிதங்கள் தொகுப்பு) முதல் பாகம் முன்னுரையில்

***

திருமதி  மஞ்சுளா ரமேஷ் (ஞான ஆலயம், சினேகிதி, ஶ்ரீ ஜோசியம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்)

நமது ஆன்மீகத்தில் எத்தனை விஞ்ஞானமும் அதிசயங்களும் நிறைந்துள்ளன என்பதை ஆராய்ந்து அறியும் போது வியப்பும் பிரமிப்பும் தான் ஏற்படுகின்றன.ஆனால் இவற்றையெல்லாம் விளக்குபவர்கள் தான் குறைவாக உள்ளனர்.

  அப்படிப்பட்டவர்களில் மிக அபூர்வமானவர் என்றே திரு ச.நாகராஜன் அவர்களை சொல்லலாம். வேதங்கள், சாஸ்திரங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் உள்ள உன்னதமான விஷயங்களை அறிவியல் ரீதியாக விளக்கி, அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் அவர் ஞான ஆலயத்திற்கு எழுதி அனுப்புவார். வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் என அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   எங்களுடைய இன்னொரு பத்திரிகையானஶ்ரீ ஜோசியம்பத்திரிகைக்கு விஞ்ஞானத்துடன் கூடிய ஜோதிட ரீதியான கட்டுரைகளை அனுப்பியிருந்தார். பிரமிக்க வைக்கும் தகவல்களை அவைகள் தந்தன.

    எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு பணியாற்று வரும் ச.நாகராஜன் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இலக்கியப் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மாநூல் முன்னுரையில்

***

 

திருவள்ளூர் N.C.ஶ்ரீதரன், MANAGEMENT CONSULTANT மற்றும் கல்வியாளர்

திரு. நாகராஜன் அவர்களின்சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்நான்காம் பாகம் படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம்.

சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பற்றி இவ்வளவு எளிமையான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வேறு யாராலும் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம். ஒவ்வொரு பகுதியிலும் அவர் கொடுத்திருக்கும் விவரங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. படிப்பவர்கள் மிக மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

   இந்தப் புத்தகம் அனைத்துப் பள்ளியிலும் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை தினமும் பள்ளிகளில் இறை வணக்க கூட்டத்தில் படிக்க வேண்டும்.

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்நான்காம் பாகம் முன்னுரையில்

***

 

தற்போது குடும்பத்துடன் சென்னையில் இவர் வசித்து வருகிறார்.

இவரது மின்னஞ்சல் முகவரி : snagarajans@gmail.com

*************************

swami_48@yahoo.com

முடிவுரை: சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம் (Sanskrit Nyayangal)

tamil muchu

Article written by S NAGARAJAN

Post No. 1788; Date 9th April 2015

Uploaded from London at 6-08 am

  1. முடிவுரை

.நாகராஜன்

 

தொன்று தொட்டு நம் நாட்டிற்கே உரித்தான சிறப்பியல்புகளில் ஒன்று நியாயங்களை எடுத்துக் காண்பித்து ஒரு நிலையை நடுநிலைமையுடன் அணுகுவது.

எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்க!

இது உங்களுக்கே நியாயமா படுதா?

இது எந்த வகை நியாயத்திலே சேர்த்தி?

இந்த அநியாயம் அடுக்காதப்பா!

கடவுள் உனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுவார்!

நியாயமா நடந்து பார்த்துப் பிழை!

இப்படி அன்றாட வாழ்வில் இடம் பெறும் இது போன்ற வாக்கியங்களின் அடிநாதமாக இருப்பது பல்வேறு நியாயங்கள்.

அந்த நியாயங்கள் இன்று தொகுப்பாரின்றி விளக்குவாரின்றி அருகிக் கிடக்கின்றன.

அதைப் போக்கவே இந்த எளிய முயற்சி!

சுமார் 900 நியாயங்கள் இருப்பதாக பல்வேறு அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இன்னும் நுணுகி ஆராய்ந்தால் மேலும் பல நூறு நியாயங்கள் கிடைக்கக் கூடும்.

இவையெல்லாம் பல்வேறு பாஷ்யங்களில்விளக்கவுரைகளில்பல அரிய உண்மைகளை விளக்கும் போது சுட்டிக் காட்டப்படுகின்றன.

ஆழ்ந்த சம்ஸ்கிருத ஞானமும், பல் வேறு நூல்களில் உள்ளவற்றைக் கற்கும் ஆர்வமும், அதற்கான நேரமும் இருப்போருக்கு இந்த நியாயங்கள் எளிதில் பிடிபடும்.

இவற்றில் சிலவற்றையாவது தமிழில் தரவேண்டும் என நீண்ட காலமாக எண்ணி வந்துள்ளேன்.

tamil

அதன் அடிப்படையில் சுமார் 132 நியாயங்களை இது வரை பார்த்துள்ளோம்.

காலம் கனிந்து இறைவன் அருள் கைகூடுமானால் மேலும் பல நியாயங்களைத தமிழில்  அளிக்க முயல்வேன்.

சம்ஸ்கிருத செல்வம் முதல் பாகத்தில் சுபாஷிதங்கள் பலவற்றைப் பார்த்தோம்.

இந்த இரண்டாம் பாகத்தில் நியாயங்களைப் பார்த்துள்ளோம்.(ராமாயண வழிகாட்டியில் வால்மீகி ராமாயணத்தில் முக்கியமான சில ஸ்லோகங்களைப் பார்த்தோம்)

சம்ஸ்கிருதம் ஒரு பாற்கடல்.

சுவைக்கச் சுவைக்க அமிர்தம் தான்!

அமிர்தக் கடலில் நடுவிலும் கூட மூழ்கலாம்! ஏனெனில் அமிர்தக் கடலில் மூழ்கினால் மரணமே தான் கிடையாதே!

ஆகவே சம்ஸ்கிருதப் பாற்கடலில் இன்னும் சற்று மூழ்குவோம்.

அடுத்த பாகம் மலரும்விரைவில்!

அன்புடன்

.நாகராஜன்

snagarajans@gmail.com

சான்பிரான்ஸிஸ்கோ

நாள் : 31-3-2015

இதைப் பரப்புவோர் தயவு செய்து என் சகோதரர் திரு சுவாமிநாதனின் ப்ளாக் பெயரையும் கட்டுரையின் முழு வடிவத்தில் இதை ஆக்கியோன் பெயர் உள்ளிட்டவற்றை அப்படியே வெளியிடுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி. வணக்கம்.

namaste2

72 Books!

I give below the 72 Books written by my brother S NAGARAJAN. He has written over 2000 articles to Tamil magazines and some blogs:–

 

கீழ்க்கண்ட 52 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் National Library Board, Singapore- சிங்கப்பூர் தேசீய நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூல்கள் பற்றிய விவரங்களை www.nilacharal.com இணையதளத்திலிருந்து பெறலாம்.

 

ஆங்கில நூல்

Breakthrough to Success

சுய முன்னேற்றம்

வெற்றிக்கலை

ஜோதிடம்

ஜோதிடம் உண்மையா?

ஜோதிட மேதைகளின் வரலாறு!

நவகிரகங்கள்

நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!

திரைப்படம்

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்

அதிரடி மன்னன் ஜாக்கிசான்

ஹா! ஹா!! ஹாலிவுட்!!!

உலகம்

உலகின் அதிசய இடங்கள்

அதீத புலனாற்றல்

அறிவுக்கும் அப்பால்

பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றல் அதிசயங்களும்

அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்

பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

விந்தை மனிதர்கள்

மாயாலோகம்! (பாகம் 1)

மாயாலோகம்! (பாகம் 2)

மாயாலோகம்! (பாகம் 3)

வாழ்க்கை வரலாறு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

டயானாவின் கதை

சரித்திர நாவல்

நாக நங்கை

விஜயதீபம்

அறிவியல் கேள்வி-பதில்

ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான கேள்வி பதில்கள்)

விலங்கியல்

விலங்கு உலகப் புதுமைகள்!

தொலைக்காட்சி

உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்

ஆன்மீகம்

சேது தரிசனம் (ராமரின் சேது உண்மையா?)

அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

திறன் கூட்டும் தியானம்

ஆன்மீக ரகசியங்கள்!

அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள்

சிறுவர் புராணக் கதைகள்

புராணத் துளிகள்!

விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!

அறிவியல்

விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 1)

விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 2)

விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 3)

அறிவியல் துளிகள்! (பாகம் 1)

அறிவியல் துளிகள்! (பாகம் 2)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 4)

வானொலி உரைகள்

ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 1)

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 2)

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 3)

வானொலி நாடகங்கள்

வருவார் காந்திஜி!

புதிர்கள்

மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்

மொழி

ஆங்கிலம் அறிவோமா?

ஆரோக்கியம்

அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 1)

அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 2)

குறிப்பு:- மேற்கண்ட 52 நூல்களில் 17 நூல்கள் விநாயகா பதிப்பகம் ராயப்பேட்டை, சென்னை, உரிமையாளர், திரு சுவாமிநாதன் அவர்களால் அச்சிடப்பட்டு அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

 

கீழ்க்கண்ட 15 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்படத் தயாராக உள்ளன.

அறிவியல்

அறிவியல் துளிகள்! (பாகம் 3)

அறிவியல் துளிகள்! (பாகம் 4)

அறிவியல் துளிகள்! (பாகம் 5)

அறிவியல் துளிகள்! (பாகம் 6)

பெண்ணியம்

ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்

மாறி வரும் பெண்கள் உலகம்

ஆன்மீகம்

அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!

புராணத் துளிகள் பாகம் 2

சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 1

(சுபாஷித ஸ்லோகங்களின் தொகுப்பு)

ராமாயண வழிகாட்டி பாகம் 1

ஸ்வர்ண லோகம் பாகம் 1

பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!!

ஆரோக்கியம்

அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 3

வானொலி உரைகள்

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 4

உலகம்

இன்றைய பார்வையில் சில உலக நாடுகள்

கீழ்க்கண்ட 5 நூல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு நூல்களாக ஆக்கம் செய்யப்படத் தயாராக உள்ளன.

அறிவியல் துளிகள்! (பாகம் 7)

அறிவியல் துளிகள்! (பாகம் 8)

சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 2

(நியாயங்கள் பற்றிய தொகுப்பு)

தமிழ் என்னும் விந்தை பாகம் 1

முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்!

(சுய முன்னேற்ற நூல் – ஆங்கில நூலின் தமிழாக்கம்)

If you want to buy them, please contact the publishers. You can continue reading his new articles in this blog free of cost—London swaminathan.

(Pictures are taken from different sources;thanks for the pictures)

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?

Mango-Tree

மரத்தில் மாம்பழங்கள்

Article written by S NAGARAJAN

Post No. 1785; Date 8th April 2015

Uploaded from London at 8-21 am

 

சம்ஸ்கிருதச் செல்வம்இரண்டாம் பாகம்

29. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் இறுதி அத்தியாயத்திற்கு வந்து விட்டோம். மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

फलवत्सहकारन्यायः

phalavatsahakara nyayah

பலவத்ஸஹகார நியாயம்

பழுத்துக் குலுங்கும் பழங்களுடன் கூடிய ஒரு மாமரம் பற்றிய நியாயம் இது.

மாம்பழங்கள் பழுத்துக் குலுங்க இருக்கும் ஒரு மாமரத்தின் நிழலில் ஒருவன் தங்கினால் நிழல் மட்டுமா அவனுக்குக் கிடைக்கும். கூடவே பசியாற மாம்பழங்களும் கூடவே கிடைக்கும் அல்லவா! அது போல நிஜமான ஒரு பெரிய மனிதரை அண்டினால், கேட்காமலேயே அறிவு உட்பட அனைத்தும் அல்லவா கிடைக்கும்!

Bael tree

வில்வ மரம்; வில்வம் பழம்

बिल्वखल्वाटन्यायः

bilvakhalvata nyayah

பில்வ கல்வாட நியாயம்

வில்வ மரத்தின் அடியில் அமர்ந்த ஒரு வழுக்கைத் தலையர் பற்றிய நியாயம் இது. இதற்கான கதை ஒன்று உண்டு. ஒரு வழுக்கைத் தலையர் வில்வ மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார். அப்போது வில்வப் பழம் ஒன்று அவர் தலை மீது விழ, அவர் மண்டை உடைபட்டது. அது தற்செயலாக நடந்து விட்ட ஒன்று. இப்படித் தற்செயலாக நடக்கும் சம்பவங்களைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுகிறது.

newton apple

बीजांकुरन्यायः

bijankura nyayah

பீஜாங்குர நியாயம்

பீஜம்விதை

விதையும் முளையும் பற்றிய நியாயம் இது.

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா என்பது பழமொழி.

எது விதைத்தாயோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது வழக்கமாகச் சொல்லப்படும் ஒரு உண்மை. விதைப்பது தான் முளைப்பதற்கு காரணம். முளைத்து வருவதிலிருந்தே மீண்டும் விதை உருவாகிறது. இப்படி காரணமும் காரியமும் ஒன்றையொன்று பற்றி இருப்பதைக் காட்ட இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.

Germination20of20seeds

விதையும் முளையும்

भुलिन्गपक्षिन्यायः

bhulingapaksi nyayah

பூலிங்க பக்ஷி நியாயம்

பூலிங்கம் என்ற பறவை பற்றிய நியாயம் இது.

பூலிங்கம் என்ற அபூர்வமான பறவை ஒன்று எப்போதும்மா சாஹஸம்” – சாகஸ செயல்களில் ஈடுபடாதேஎன்று சொல்லிக் கொண்டே இருக்கும். ஆனால் அது எப்போதும் தான் சாகஸ செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும். சிங்கத்தின் வாயில் புகுந்து அங்கிருக்கும் மாமிசத் துணுக்குகளை தனக்கு உணவாக அது எடுத்துக் கொண்டு வரும்!

அசாதாரணமான சாகஸங்களைச் செய்வோர் பற்றி இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

bhulinga

(‘மஹாபாரதத்தில் பூலிங்கப் பறவை’, ‘கலியுக    அறிகுறிகள்: குருமார்கள் குலிங்கப் பக்ஷி…. ‘என்ற இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முழு விவரம் காண்க)

भ्रमरन्यायः

bhramara nyayah

ப்ரமர நியாயம்

ப்ரமரம்கருவண்டு

கருவண்டு பற்றிய நியாயம் இது.

கருவண்டு எப்போதும் மலர்களில் உள்ள தேனையே அருந்தும். வேறு எந்த வித சாறையும், அது எவ்வளவு இனிமையாக இருந்தாலும் அருந்தாது.

ஒரு பெரிய மனிதர் எப்போதும் மற்றவரின் நல்ல குணங்களையே எடுத்துக் கொள்வார். கெட்ட குணங்களைப் பெரிது படுத்த மாட்டார்.

அப்படிப்பட்ட அரும் மனிதர்களைச் சுட்டிக் காட்ட ப்ரமர நியாயம் பயன்படும்.

இத்துடன் இந்த நியாய வரிசைத் தொடர் தற்போதைக்கு நிறைவு பெறுகிறது. வாய்ப்பு கிடைக்கும் போது மேலும் பல நியாயங்களை அறியலாம்.

PollenBeetles435

பூவில் வண்டுகள்

நாளை முடிவுரை வெளியாகும்.

****************       முற்றும்

 

‘நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர்’: சுவையான கதை!

gurukulam

குரு குல முறையில் வேதாத்யயனம்

Article written by London swaminathan

Post No. 1780; Date 6th April 2015

Uploaded from London at  காலை 9-22

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் 
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி 
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் 
கருமமே கண்ணாயி னார்நீதி நெறி விளக்கம்

 

ஒரு செயலில் முனைப்பாக இருப்பவர் உடலுக்கு வரும் வருத்தம், நோய் நொடிகளைப் பொருட்படுத்த மாட்டார். பசித்தாலும் கவலைப்படமாட்டார். தூங்க மாட்டார். யாரேனும் கெடுதல் செய்தாலும் அதையும் மனதிற் கொள்ளார். காலம் பற்றியும் கவலைப்படமாட்டார். தனக்கு வரும் அவமதிப்பையும் எடுத்துக்கொள்ளார்.

கற்றவனுக்கு அடையாளம் என்ன?

ஒரு சுவையான கதை கேளுங்கள். ஒரு படிக்காத இளைஞனை நன்றாகப் படித்த பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். நாளாக ஆக இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. அவளும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ இவனை குத்திக் காட்டினாள். இவன் ஒரு முடிவுக்கு வந்தான். நன்கு கல்வி கற்ற பின்னரே வீட்டுக்கு வருவேன் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான்.

ganapati2

நல்ல மாணவர்கள் பசி நோக்கார்

அந்தக் காலத்தில் காசி என்ற தலமே கற்றோர் நிறைந்த ஊர். ஆகையால் பெரிய அறிவாளிகள் எல்லாம் காசிக்குச் சென்று கற்று வருவர். இவனும் காசிக்குப் போனான். அங்கே ஒரு வயதான ஆசிரியரைக் கண்டான். தனது சோகக் கதையைச் சொல்லி தனக்கு கல்வி புகட்டும்படி மன்றாடினான். அவரும் இவனை சிஷ்யனாக ஏற்றார்.

இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடின. நல்ல சீடனாகவே இருந்து எல்லாவற்றையும் ஆர்வத்தோடு கற்றான். குரு, ஒரு நாள் தனது மனைவியை அழைத்து, நாலை முதல் இவனுக்குப் பரிமாறும் உணவில் ஒரு உத்தரணி (ஸ்பூன்) அளவுக்கு வேப்ப எண்ணையைக் கலந்து பரிமாறு என்றார். ஆனால் அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த நாளைன்றே என்னிடம் சொல்லிவிடு என்றார்.

குருவின் மனைவிக்கு ஏன் என்று புரியவில்லை. இருந்தாலும் கணவன் இட்ட கட்டளையை மீறாத பத்தினி அவள். அந்த சிஷ்யனும் முகம் கோணாது சாப்பிட்டு வந்தான். குருவின் மனைவிக்குக் கூட கொஞ்சம் பரிதாபம் மனதில் ஏற்பட்டது. வேப்ப எண்ணையைக் கலக்காமல் விட்டுவிடலாமா என்று எண்ணிணாள். ஆயினும் அவளுக்கு அந்தத் துணிவு வரவில்லை.

dhanus

மெய் வருத்தம் பாரார்

இவ்வாறு வேப்ப எண்ணை கலந்த சாப்பாடு மூன்று மாதம் பரிமாறப்பட்டது. ஒரு நாளைக்கு சிஷ்யன், குருவின் மனைவியைப் பார்த்து, “அம்மையே, உங்களுடைய சாப்பாடு எப்போதும் அமிர்தமயமாகவே இருக்கும். கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் வேறுபாடு தெரிகிறது. ஏதோ வேப்பெண்ணை வாசனை அடிக்கிறது” என்றான். குருவின் மனைவியும் சமாளித்துக் கொண்டு, “அப்படியா? என்ன காரணம் என்று கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

ரகசியமாக கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள், “உங்கள் சீடனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் வேப்பெண்ணை வாசனையைக் கண்டுபிடித்துவிட்டான்” என்றாள். குரு சிரித்துக் கொண்டே, சிஷ்யனைக் கூப்பிட்டார்.

“சிஷ்யா! நீ நல்ல மாணவன். மூன்று ஆண்டுகளாக எல்லாவற்றையும் உண்மையான ஆர்வத்தோடு பயின்றாய். நீ எல்லாவற்றையும் கற்றுமுடித்த அறிகுறிகள் தென்படுகின்றன. நாளை காலை நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பலாம். உனக்கு என்னுடைய பரிபூரண ஆசீர்வாதம்” என்றார். சீடனுக்கு மிகவும் சந்தோஷம். மறுநாள் காலையில் தக்க குரு தட்சிணை கொடுத்து, நமஸ்கரித்துவிட்டுப் புறப்பட்டான்.

குருவின் மனைவி வியப்புடன் கேட்டாள், “நாதா! வேப்பெண்ணைக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு விளங்கவில்லையே!”

குரு சொன்னார், “அன்பே, நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் என்ற ஆன்றோர் வாக்கை நீ கேட்டது இல்லையா? ஒருவனுக்கு கல்வியில் நாட்டம் உள்ளவரை வேறு எதிலும் சுவை இருக்காது. சொல்லப்போனால் சுவையே தெரியாது. அவனுக்கு கல்வியில் முழு கவனம் இருக்கும் வரை அவனுக்கு ருசியே தெரியவில்லை. அந்த நாட்டம் குறைந்தவுடன் அவனுக்கு ருசி தெரிந்துவிட்டது. ஆகையால்தான் அவனை ஊருக்கு அனுப்பிவைத்தேன். அவன் இனிமேல் பிழைத்துக் கொள்வான்” என்றார்.

children,mumbai

கருமமே கண்ணாயினார்

–சுபம்

கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கலாமா?

http://regex.info/blog/2007-05-23/466

Article written by S NAGARAJAN

Post No. 1779; Date 6th April 2015

Uploaded from London at 7-20 am

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்இரண்டாம் பாகம்

28. கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கலாமா?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

पञ्जरमुक्तपक्षिन्यायः

panjaramuktapaksi nyayah

பஞ்சர முக்த பக்ஷி நியாயம்

கூண்டிலிருந்து விடுதலையாகும் பறவை பற்றிய நியாயம் இது.

இறப்பின் போது உடலிலிருந்து ஆன்மா, கூண்டிலிருந்து விடுதலையாகிப் பறந்து வானில் செல்லும் பறவையைப் போல பறந்து செல்கிறது என்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது.

bird_escaping_from_cage

கூண்டுக் கிளி பறந்தது (குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே

உடம்போடடு   உயிரிடை நட்பு – குறள்  338)

प्रथममल्लन्यायः

prathanamalla nyayah

பிரதம மல்ல நியாயம்

மல்யுத்த வீரர்களின் தலைவனைத் தோற்க அடிப்பது குறித்த நியாயம் இது.

பல பேரை எதிர்க்க வேண்டியுள்ள ஒருவன் எதிர்ப்பவர்களில் வலிமையாக இருக்கும் தலைவனைத் தோற்க அடித்து விட்டால் ஏனையோரைப் பற்றிக் கவலையே பட வேண்டாம், இல்லையா! அது போல, பல வித கொள்கைகளை எதிர்த்து தன்  கொள்கையை ஸ்தாபிதம் செய்ய நினைக்கும் ஒருவர் ஒவ்வொரு கொள்கையாக எடுத்து எதிர்த்து தன் கொள்கையாக நிர்ணயிக்காமல், பிரதானமாக இருக்கும் கொள்கையை எதிர்த்து தன் கொள்கையை ஸ்தாபித்து விட்டால் ஒவ்வொரு கொள்கைக்கும் பதில் சொல்ல வேண்டாம். இதைச் சுட்டிக் காட்டும்வலியவனை வெல்என்னும் நியாயம் இது.

kushti 2

குஸ்தி, மல்யுத்தம் படம்

बकबन्धनन्यायः

bakabandhana nyayah

பக பந்தன நியாயம்

 

கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கும் நியாயம் என்ற இந்த நியாயம் பிரசித்தி பெற்ற ஒன்று. சாதாரணமாக வழக்கில் இருந்து வரும் ஒன்றும் கூட!

கொக்கைப் பிடிக்க ஒருவன் நினைத்தான். அதற்கு அவன் கண்டு பிடித்த வழி, அதன் தலையில் முதலில் வெண்ணெய் வைக்க வேண்டும். அது சூரிய வெப்பத்தில் உருகி கொக்கின் கண்ணை மறைத்தவுடன், கொக்கு குருடாகி விடும். அப்போது அதை சுலபமாகப் பிடித்து விடலாம். எப்படிப்பட்ட யோசனை! இப்படி முட்டாள்தனமான யோசனைகளை ஒருவர் கூறும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

kokku

கொக்கின்   தலையில் வெண்ணை?

बधिरकर्णजपन्यायः

badhira karnajapa nyayah

பதிர கர்ண ஜப நியாயம்

செவிடன் காதில் முணுமுணுப்பது பற்றிய நியாயம் இது.

ஒன்றுமே காதில் விழாத ஒரு செவிடனிடம் முணுமுணுப்பதால் என்ன பிரயோஜனம்? வீணான ஒரு வேலையை ஒருவர் மேற்கொள்ளும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

deaf_grandma_small

செவிடன் காதில்  – ஊதிய சங்கு

 

बहूनामनुग्रहो न्यायः

bahunamanugraho nyayyah

 

பஹுனாமனுக்ரஹோ நியாயம்

 

பலர் ஒன்று கூடி சேர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது. தன் பந்து மித்திரர்களுடன்உற்றார் உறவினருடன்சேர்ந்து இருந்து அவர்களின் ஆதரவைப் பெற்றால் அது மிகவும் நல்லது, அல்லவா! அனைவரது ஒத்துழைப்பும் நல்லாசிகளும் கிடைக்கும். இந்த ஒற்றுமையைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

large family

நல்ல குடும்பம், பெரிய குடும்பம்

*****************

கலியுக அறிகுறி- குருமார்கள் குலிங்க பக்ஷி போலத்திரிவர்!! 8 வயதில் குழந்தை பெறுவர்!

PloverCrocodileSymbiosis

Research Article written by London swaminathan

Post No. 1774; Date 4th April 2015

Uploaded from London at  13-10 (லண்டன் நேரம்)

கல்கி புராணம்

சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் கு.அனந்தாசாரியார் – 1903 — விலை12 அணா

 

சென்ற வாரம் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று கல்கி புராணத்தைப் படித்தேன். அதிலுள்ள சில சுவையான விஷயங்களைத் தருகிறேன். கூடிய மட்டிலும் கு.அனந்தாசாரியார் 1903-ல் பயன்படுத்திய சொற்களை அப்படியே தருகிறேன். குலிங்க பக்ஷி பற்றி கல்கி புராணம் கூறுவது முன்னர் நான் எழுதிய “மஹா பாரதத்தில் ஒரு அதிசயப் பறவை” (ஜூலை1, 2014) என்ற கட்டுரையில் சொன்ன பூலிங்கப் பறவையே என்பதும் தெரிந்தது. இது பற்றி வைஷ்ணவப் பெரியார் ஸ்ரீ வேதாந்த தேசிகன் (கி.பி 1268—1370) எழுதிய தயா சதகத்தில் வரும் சுவையான விஷயத்தையும் கீழே படியுங்கள்:–

ஓ, சூத முனிவரே! மனிதர்கள் முப்பதடிப் பிரமாணமுள்ளவர்கள்,கலி யுகத்தில் முடிவில் மூன்றங்குலப் பிரமாணமாகி விடுவர்.

கலியுகத்தில், ஜனங்கள் அன்ன விக்ரயம் (விற்பது) செய்வார்கள்; அந்தணர்கள் மந்திரங்களை விற்பார்கள்; ஸ்த்ரீகள் பதிவ்ரதா தர்மத்தை (கற்பை) விற்பார்கள்.

பிராமணர்கள், வேதங்களைக் கீழ்ப்பட்ட ஜாதியினருக்குச் சொல்லிப் பிழைப்பர். பிராமண ஸ்த்ரீகள் மோர், தயிர், பால் விற்பார்கள்; வைஸ்யர்கள் எல்லோரும் மாமிசம் விற்பார்கள்

symbiosis

மானுக்குதவி செய்யும் பறவை

கலியுகத்தில் பிராமணாதி மூன்று வர்கத்தினர் ஸ்வதர்மத்தை இழந்து வயிறு நிறைப்பதிலும், மாதர்களைப் புணர்வதிலும் ஆசை கொள்வர்.  சூத்திரர்கள் நற்செய்கை, நல்லொழுக்கம் உள்ளவர்களாயிருப்பார்கள்.

ஸ்த்ரீகள் (பெண்கள்) எல்லோரும் எட்டாவது வருஷத்தில் புத்திரர்களைப் பிரசவிப்பார்கள்- நியாயாநியாயாயமில்லா மல் (நியாயம்+ அநியாயம்) புருஷர்களைப் புணருவார்கள்.

மாதர்கள் யாவரும் பன்றிபோல் பத்து எட்டு குழவிகளைப் பெறுவார்கள். இரு கரத்தாலும் சிரத்தை (தலையை) சொறியப்போகிறார்கள்.

ஓ, புத்திமானே, மாதர்கள் புருஷனை வஞ்சனை செய்து, புருஷனுக்கு முன் உண்ணுதலும், உறங்குதலும் செய்யப்போகிறார்கள்

பூமிகளெல்லாம் சுரமில்லாமல் சுவல்பப் பலனாய் பலிக்கப்போகிறது. கொடிகள் யாவும் செழிப்பாக வளர மாட்டா.

Kalki

கல்கி அவதாரம்

விவாக ரத்து அதிகரிக்கும்!

ஜனங்களைப் பிணிகள் பீடிக்கப் போகிறது. விதவைகள் ஒரு புருஷனை மணந்து சந்ததியுண்டு பண்ணுவர். சுமங்கலி ஸ்த்ரீக்கள் புருஷனோடு சண்டையிட்டு விதவைகளைப் போல் ஆவர் (டைவர்ஸ்- விவாக ரத்து அதிகரிக்கும் என்று சொல்வதாக நான் அர்த்தம் செய்கிறேன். பம்பாய், கலகத்தா, டில்லி, சென்னை ஒவ்வொரு நகரத்திலும் ஆண்டுக்கு 8000 விவாகரத்து வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்த நம் முன்னோர்களை எண்ணி வியக்கிறேன்)

கலியுகத்தில் கொடையாளிகள், தரித்திரர்களாகவும் கிருபணன், தனிகனாகவும், பாபி, தீர்க்கயுஸ் உடையவனாகவும், நல்லவன் அல்பாயுஸ் உள்ளவனாகவும், அல்ப ஜாதிகள் மஹாராஜாவாகவும், உத்தம குணத்தினர் அவர்களுக்குப் பணிவாகவும் இருப்பர்

பெருங்காற்று- சுவல்ப மழை- க்ஷாமம் உண்டாகும்

எல்லா ஜனங்களும் வேதாந்தம் பேசுவர்- ஒருவரும் தத்துவத்தை அறியார். அந்தணர்கள் வெகுவாக வாதம் பண்ணுவர். வேஷத்தில் மட்டும் அந்தணர்களாக இருப்பர்.

கலியுகத்தில் மனிதர்கள் பொய்யை சத்தியமாகவும், மெய்யை அசத்தியமாகவும் செய்வர். வேத மார்க்க கர்மங்களை தூஷிப்பர் – நீதியை அனுசரியார்.

Hippo and Oxpeckers - Highly Commended - Paula Martin

நீர் யானைக்குதவும் பறவைகள்

குலிங்கப் பறவைகளும் குருமார்களும்

கலியுகத்தில் சில குருமார்கள், நித்திய கர்மங்களை இழந்து இதரர்களுக்கு மாத்திரம் ஞானத்தைப் போதித்து குலிங்க பக்ஷிக்கள் போல் சஞ்சரிப்பார்கள்.

எனது கருத்து

குலிங்க பறவை பற்றிய ஒன்றிரண்டு கதைகள் மஹாபரதத்தில் வருகின்றன. ஆனால் அவை மேற்கூறிய குருமார்கள் விஷயத்தில் பொருந்தாததால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் எழுதிய தயா சதக மேற்கோளைப் பார்த்தேன். மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இதோ அந்த ஸ்லோகமும் அதன் விளக்கமும்:–

மாசாஹசஸ் உக்தி கந கஞ்சுக வஞ்சித அந்ய

பத்யத்ஸு தேஷு விததாமி அதி சாஹசானி

பத்மா சஹாய கருணே ந ருணத்ஸி கிம் த்வம்

கோரம் குலிங்கம் சகுநே: இவ சேஷ்டிதம் மே (ஸ்லோகம் 94)

பொருள் விளக்கம்:

தயாதேவியே! சாஹசச் செயல்களைச் செய்யாதே என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு – உத்தமன் போல வேஷம் போட்டு —  அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நான் சாஹசச் செயல்களில் இறங்குகிறேன். குலிங்கப் பறவை போல நான் செய்யும் சாஹசச் செயல்களை நீ கண்டிக்காமல் இருப்பது ஏன்? (என்னை சரியான பாதையில் செலுத்துவது தாய் போன்ற உனது கடமை இல்லையா?)

குலிங்கம் என்னும் பறவை கத்துவது — மா ஸாஹஸம் குரு—

சாகசம் செய்யாதே – என்று சொல்லுவது போல இருக்குமாம். இப்படிச் சொல்லிக்கொண்டே, கொட்டாவி விடும் சிங்கத்தின் வாயில் புகுந்து அதன் பற்களில் சிக்கியுள்ள மாமிசத் துண்டுகளை இழுக்குமாம். சிங்கம் வாயை மூடினால் அதற்கு என்ன நேரிடும்?

(வேதாந்த தேசிகர் மிகப் பெரிய மஹான். பணிவின் காரணமாகவும் நம்மைப் போன்றோருக்கு அறிவுறுத்தவும் தன்னைக் குலிங்க பறவைக்கு ஒப்பிடுகிறார். மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் தன்னை நூற்றுக்கும் மேலான பாடல்களில் நாயுடன் ஒப்பிட்டுப் பாடியிருப்பதை நினைவிற் கொள்ளுதல் பொருத்தம்)

இரு வகை பிராணிகள் இடையே நிலவும் ஒத்துழைப்பை உயிரியல் விஞ்ஞானிகள் ‘’சிம்பியாஸிஸ்’’ என்று அழைப்பர். முதலையின் வாயில் சிக்கும் மாமிசத் துண்டுகளை எடுத்து சுத்தம் செய்யும் ப்ளோவர் பறவைகளின் வரவுக்காக முதலைகள் வாயைத் திறந்துகொண்டு காத்திருக்கும். அவைகளுக்கு ஒரு தீங்கும் செய்யா. ஆனால் சிங்கம் புலி போன்ற மிருகங்களிடையே இப்படி நடப்பதாக பதிவு செய்யப்படவில்லை. இந்தியக் காடுகளில் இத்தகைய செயல்கலைக் கண்ட நம் முன்னோர்கள் தக்க இடத்தில் அதை உவமையாகப் பயன்படுத்துவது சிறப்புடைத்து.

time1

ஏற்கனவே ஆதி சங்கரர் ஒரு நாலு வரிப் பாட்டிலேயே நான்கு பறவைகளை உவமையாக்கியது பற்றியும் தத்தாத்ரேயர் இருபதுக்கும் மேலான பறவை, விலங்குகள், பூச்சிகளிடமிருந்து தான் கற்ற போதனைகளை பாகவத புராணத்தில் சொல்லியிருப்பதையும், மரத்தின் மீது ஏறும் அதிசய அங்கோல மர விதைகள் பற்றி ஆதி சங்கரர் பாடியிருப்பது பற்றியும் பல கட்டுரைகளில் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

இனி, கல்கி புராணத்தில், மேலும் உள்ள விஷயங்களைக் காண்போம்:–

கலியுகத்தில் பிராமணாதி வர்ணத்தினர் நித்திய கர்மங்களை இழந்து, அதர்மங்களைச் செய்து சாராயம், கள், மாம்ஸம் முதலான தாமஸ பதார்த்தங்களைப் புசித்து உலகத்து ஜனங்கள் (அவர்களை) நிந்திக்கப் போகிறார்கள்.

கலியுகத்தில் வித்தியா குருவென்றும், மந்திரோபதேசக்  குருவென்றும், சிஷ்யன் என்கிற பேதமுமில்லாமல் நாம வாசகத்தால் மட்டும் பேதத்தை அடைந்து ஆசார்யப் பத்தினியை சீஷனும், சிஷ்ய பத்தினியை குருவும் அனுபவிக்கப் போகிறார்கள்.

கலியுகத்தில் எவன் தனிகனோ (பணக்காரன்) அவன் நல்ல குலத்தில் பிறந்தவனாகிறான் (கருதப்படுவான்). தரித்ரனானவன் துஷ் குலத்தில் பிறந்தவனாகிறான் (கருதப்படுவான்).சிலவிடங்களில் ஜாதி பேதமில்லாமல் இருக்கும்.

கலியில் மிருகங்கள் முதலிய ஜந்துக்களின் வயிற்றில் விசித்திர கர்மமும், கலியுக முடிவில் மனுஷ்ய யோனியில் அல்ப மிருகங்களும் உண்டாகப் போகின்றது.

kaliyuga_spencer_sass

யோகிகளுக்குள் சிறந்தவரான சூத புராணிகன், கலியுக தர்மம் யாவையும் ரிஷிகளுள் சிறந்தவரான  வியாச மாமுனியிடத்தில் கேட்டு, பரம ஆச்சரியத்தை அடைந்து மறுபடியும் கிருத யுக தர்மத்தைக் கேட்டார்.

(இதற்குப் பின்னர் கிருதயுக தர்மம் பற்றி வருகிறது. இது 1903 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அடைப்புக் குறிக்குள் இருப்பது எனது விளக்கங்கள்).

தேங்காய்க்குள் இளநீர் எப்படி வந்தது?

ilaneer (2)

Written by S NAGARAJAN

Article No.1762;  Dated 31 March 2015.

Uploaded at London time 11-04 (GMT 10-04)

 

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

27. தேங்காய்க்குள் இளநீர் எப்படி வந்தது?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

नारीकेलफलांबुन्यायः

narikelaphalambu nyayah

நாரிகேள பலாம்பு நியாயம்

இளநீர் பற்றிய நியாயம் இது.

தேங்காய்க்குள் இளநீர் எப்படி புகுந்தது என்பதை யாராலும் விளக்க முடியாது அல்லவா! இறைவனின் சித்தமும் அவனது வழிமுறைகளும் சாதாரணமாக யாருக்கும் புரியாது; அவற்றை விளக்கவும் முடியாது. இது தெய்வசித்தத்தையும் அதன் வழிகளையும் பற்றி விளக்க வந்த எளிமையான நியாயம்.

water_milk_021

नीरक्षीरविवेकन्यायः

niraksira viveka nyayah

நீர க்ஷீர விவேக நியாயம்

க்ஷீரம் – பால்

நீரில் கலந்த பால் பற்றிய நியாயம் இது.

அன்னத்திடம் நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அது நீரைப் பிரித்து பாலை மட்டுமே குடிக்கும்.  நல்ல புத்திசாலியான ஒருவர் இன்னொருவரை மதிப்பிடும் போது அவரது நற்குணங்களை மனதில் எடுத்துக் கொள்வர். சிறு சிறு குறைகளைப் பெரிது படுத்த மாட்டார்.

பெரியோரின் மதிப்பீட்டு முறைகளை அன்னத்தின் அரிய குணத்துடன் ஒப்பிடும் நியாயம் இது.

roadside barber

नृपनापितन्यायः

nrpanapitaputra nyayah

ந்ருபநாபித புத்ர நியாயம்

அரசரும் அவரது நாவிதரும் பற்றிய நியாயம் இது.

ஒருவனது சொந்த உறவின் மீது, அந்த உறவுக்காரர் எவ்வளவு அவலட்சணமாக மற்றவருக்குத் தோன்றினாலும் சரி, ஒருவனுக்குள்ள பற்றைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியை இந்த நியாயம் நினைவு படுத்தும்.

இது தோன்றியதற்கு கதை ஒன்று உண்டு.

ஒரு அரசன் தனது நாவிதரை அழைத்து தனது ராஜ்யத்தில் உள்ள அழகிய சிறுவனைக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு கூறினான். நாவிதனும் ராஜ்யத்தின் எல்லா பகுதிகளிலும் அலைந்து திரிந்தான். ஆனால் அரசன் கேட்டுக் கொண்டபடி அழகிய சிறுவன் யாருமே அவன் கண்களுக்குத் தென்படவில்லை. பெரிதும் ஏமாற்றத்துடன் அவன் வீடு திரும்பினான். என்ன ஆச்சரியம், அவனது மகனைப் பார்த்தான். அழகு சொட்டும் முகமாக அவனுக்குத் தோன்றியது! ஆனால் உண்மையில் அவன் அஷ்டகோணலான உருவை உடையவன்! மிகவும் அவலட்சணமானவன்!

தன் மகனை அழைத்துக் கொண்டு அரசனிடம் சென்ற அவன் தன் மகனைக் காட்டி இவனே இந்த ராஜ்யத்தில் மிகவும் அழகான சிறுவன் என்றான்.

சிறுவனைப் பார்த்த அரசன் பெரும் கோபம் அடைந்தான். தன்னை நாவிதன் ஏமாற்றி விட்டான் என்று முதலில் அவனுக்கு கோபம் வந்தாலும் சற்று ஆலோசித்துப் பார்த்த பின்னர் அது தணிந்தது. அவனை அரசன் மன்னித்து விட்டான். தனது சொந்த மகனை ராஜ்யத்தில் உள்ள மற்ற சிறுவர்களைக் காட்டிலும் சிறந்த அழகன் என்று அவன் கூறுவது மனித மனத்தின் இயல்பே என அரசன் தெளிந்தான்.

அதிலிருந்து மனித மனத்தின் போக்கைச் சுட்டிக் காட்டும் இந்த நியாயம் எழுந்தது!

shadow

पराह्नछायान्यायः

parahnacchaya nyayah

பராஹ்னசாயா  நியாயம்

மத்தியான நிழல் பற்றிய நியாயம் இது.

மத்தியான நேரத்தில் ஒரு மரத்தின் நிழல் சிறிது நேரமே நீடித்திருப்பதைப் போல

அதிகாரமும் செல்வாக்கும் வாழ்க்கையின் இறுதி நாட்கள்

வரும் போது சிறிது காலமே நீடித்திருக்கும். இதைச் சுட்டிக்காட்டும் நியாயம் இது.

granite  bricks

पाषाणेष्टिकान्यायः

pasanestika nyayah

பாஷானேஷ்டிகா நியாயம்

கருங்கல்லையும் செங்கலையும் பற்றிய நியாயம் இது.

பெரிதான கருங்கல்லையும் சிறிதான செங்கலையும் வைத்து வீடு கட்டி முடிப்பதைப் போல ஒரு விஷயத்தை பெரிய மனிதர்கள் மற்றும் சிறிய மனிதர்கள் ஆகிய அனைவரின் ஒன்றுபட்ட முயற்சியால் முடிப்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. அனைவரது முயற்சியும் ஒரு காரியத்தை முடிக்கத் தேவை!

*****************

அண்ணாமலை அதிசயம்!!

ramana

ரமண மஹரிஷி படம்

Post No.1759; Date 30th March 2015

This is written by my brother S Nagarajan for Jnana Alayam- Tamil Magazine: swami

ப்ரணவ தேஹம் பெற்ற மஹான்கள்!

 

 

ஞான ஆலயம் ஏப்ரல் 2015 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நன்றி:ஞான ஆலயம்

மிகப் பெரும் அருளாளரான பகவான் ரமண மஹரிஷியைப் போற்றித் துதிக்கும் சிறப்புக் கட்டுரை! (ரமண மஹரிஷி அவதார தோற்றம்: 30-12-1879 சமாதி: 14-4-1950

ச.நாகராஜன்

ramana-stamp

Ramana Stamp– ரமணர் தபால் தலை

வள்ளலாரும் ரமணரும்

ஹிந்து மதத்தின் மகத்தான சிறப்புக்களில் ஒன்று, அது சுட்டிக் காட்டும் பேருண்மைகளை அனாயசமாக நிரூபிக்கும் மகான்கள் பாரதத்தின் பல இடங்களிலும் அவ்வப்பொழுது தோன்றிக் கொண்டே இருப்பது தான்! இவர்களுள் மிக பிரம்மாண்டமான நிலையை எய்தியதோடு தம்மை அப்படிப்பட்ட பெரும் நிலையை எய்தியவர்கள் என்று சிறிதும் காண்பிக்காமல் மிக எளிமையாக வாழ்ந்து அருளுரை பகர்ந்த இருவர் வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகளும் பகவான் ரமண மஹரிஷியும் ஆவர்.இவர்கள் மிக சமீப காலத்திலேயே வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம். ஆகவே இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்களும் செய்திகளும் முழு விவரங்களுடன் தேதி வாரியாக அதிகாரபூர்வமாக நம்மிடையே உள்ளது.

வள்ளலார் உடலுடனேயே ஜோதி மயமாக ஆகி விட்டவர். ரமண மஹரிஷியோ தான் மறையும் அதே கணத்தின் போது தன் ஜோதி ஸ்வரூபத்திற்கு, வானில் பறந்து செல்லும் ஜோதியை சாட்சியாக காண்பித்துச் சென்றவர்.

 

ramana-maharshi

முற்றும் துறந்த ஞானி ரமணர்

மூன்று தேகங்கள்!

வள்ளலார் மனித தேகத்தின் மூலமாகப் பெறக்கூடிய அரிய மூன்று நிலைகளைத் தன் பாடல்களில் தன் அனுபவத்தின் வாயிலாக வடித்துள்ளார். மிக மிகத் தூய்மையாக இருக்கும் நிலையில் ஒருவர் எய்துவது சுத்த தேகம். அதற்கு அடுத்த நிலை பிரணவ தேகம். இதற்கும் அடுத்த உயரிய நிலை ஞான தேகம்.இதை அவர் அடைந்துள்ளதற்கு அவர் சித்தி வளாகத்தில் உடலோடு தன் அறையில் புகுந்து பின் மறைந்த சம்பவமே சான்றாகும்.

ரமணரின் பிரணவ தேகம்

ரமண மஹரிஷியின் வாழ்வில் அவர் பிரணவ தேகத்துடன் இருந்ததை அவரது அணுக்கத் தொண்டர்களுள் ஒருவரான குஞ்சு சுவாமிகள் இப்படி விவரிக்கிறார்:-.

“பகவானுக்கு சில நேரங்களில் திடீரென மின்னலடித்தாற்போல தன் தேகம் மறைந்து அணுக்களாகச் சிதறிப் பரந்து, புகை போன்று ஒரு உருவெளித் தோற்றம் உண்டாகி அதன் பிறகு பனித்துகள் போன்று ஒன்று சேர்ந்து மறுபடியும் தெரியுமாம். இவ்வநுபவம் ஒரே நிலையில் இருக்கும் போதும், ஆகாரம் இல்லாமல் தேகம் ஒடுங்கி இருக்கும் போதும் உண்டாகுமாம். இவ்வாறு அணுக்களாக விரிந்து தேகமற்று பஞ்சபூதத்துடன் கலந்து விடும் நிலைக்கு “பிரணவ தேகம்” எனப் பெயராகும்.

ஒரு முறை பகவான் ரமணர் உபவாசமாக இருந்து பிரணவ தேஹி ஆகி விடலாம் என்ற எண்ணத்துடன் தனித்து ஒருநாள் காலையில் திருவண்ணா மலையில் உள்ள பச்சையம்மன் கோவில் பக்கம் காட்டிற்குள் புகுந்து செல்ல ஆரம்பித்தார். அச்சமயம் சிறு பையனாக இருந்து வேத பாடசாலையில் படித்து வந்த வாசுதேவ சாஸ்திரி ரமண மஹரிஷியைப் பார்த்து விட்டு ஓடி வந்து இப்படித் தனியாக வந்திருக்கிறீர்களே, வாருங்கள் விருபாக்ஷிக்குப் போகலாம் என அழைத்தார். அதற்கு அவர், ‘ நான் காட்டிற்குள் இரண்டு நாள் தங்கி விட்டு வருகிறேன், நீ போ” என்று பதில் கூறினார். இதைக் கேட்ட வாசுதேவன் அழ ஆரம்பித்தார். பகவான் அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த சமயம் ஈசான்ய மடத்தின் அதிபதியான சாத்தப்ப சுவாமிகள் யதேச்சையாக அங்கு வர, பகவானைப் பார்த்து விட்டுத் தம்முடன் அவரை அழைத்துச் சென்றார். பகவானை நம்மிடம் பல காலம் இருக்கச் செய்யக் காரணமானவர் சாத்தப்ப சுவாமிகளே!

பகவான் இப்படிச் செல்ல முயலும் போதெல்லாம் அன்னை மீனாட்சி அவரைச் செல்ல அனுமதிக்கவில்லை. இதை பகவானே,”இங்கு இருக்கும்படி சொல்லி இம்சைப் படுத்தறா” என்று கூறி அருளி இருக்கிறார். கோடானு கோடிப் பேர்கள் கடைத்தேற அனுப்பப்பட்ட பகவானை அவ்வளவு சீக்கிரம் ப்ரணவ தேஹியாக மாற அன்னையின் ஆணை இல்லை என்பது ஜீவர்களின் மீதுள்ள மீனாட்சியின் எல்லையற்ற கருணைக்கு ஒரு உதாரணம்!

tv malai

திருவண்ணாமலை கோவில் படம்

அண்ணாமலை அதிசயம்

அன்னை மீனாட்சி அவருக்குப் பல அற்புத காட்சிகளைக் காண்பித்ததில் சிலவற்றை அவரே மிக அரிதாக அன்பர்களிடம் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்று திருவண்ணாமலை பற்றிய அதிசயம்!

ஒரு நாள் சாக்கிர, சொப்பனம் இரண்டும் இல்லாத நிலையில் பகவான் விருபாக்ஷி குகையில் இருக்கும் போது, தாம் மலையில் உள்ள ஒரு குகையினுள் நுழைந்து சென்றார். அங்கே பர்ணசாலைகளும் ரமணீயமான தடாகங்களும், பூத்துக் குலுங்கும் மரம், செடி, கொடிகளுமாக அதி அற்புதத்துடன் விளங்கும் காட்சியைக் கண்டார். அது புதிய இடமாக இல்லாமல் தான் முன்பே பார்த்துப் பழகிய இடமாக அவருக்கு ஒரு காட்சி தோன்றிற்று. பின்னர் அடியண்ணாமலை கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் திருப்பணி செய்து கொண்டிருந்தவர்கள் கோவிலின் கிழக்குப் பக்கத்திலிருந்து மலைக்குள் ஒரு சுரங்கம் செல்வதைக் கண்டு ஓடோடி வந்து பகவானிடம் அதைத் தெரிவித்தனர். மறுநாள் பகவான் கிரி பிரதக்ஷிணம் செய்யும் போது அச்சுரங்கம் இருக்கும் இடம் சென்று அதைப் பார்த்தார். அது தான் முன்னர் கண்ட காக்ஷியில் இருந்ததைப் போலவே இருப்பது கண்டு மனதிற்குள் வியந்தார்.வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. அதை எந்த வித சோதனையும் செய்யாமல் உடனே மூடச் சொன்னார். ஆனால் அதே காட்சியை அருணாசல மாகாத்மியம் விவரிப்பதைக் கண்டு அந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்தைத்  தமிழில் மொழி பெயர்த்தார்.

நமது அறநூல்கள் உரைக்கும் அனைத்துமே வார்த்தைக்கு வார்த்தை உண்மை தான் என்பதை ரமண மஹரிஷி போன்ற பெரும் மகான்கள் சொல்லும் போது தான் அந்த உண்மையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொண்டு பிரமிக்க முடிகிறது.

ramana_maharshi-30

குடையாளி – ஆன்மீகக் கொடையாளி !!

எந்த நிலை என்று சொல்ல முடியாத அரிய நிலை

பகவானின் ஆழத்தை அளக்க முயன்றவர்களுள் மாபெரும் மஹானான சேஷாத்திரி ஸ்வாமிகளும் ஒருவர். ஒரு நாள் அவர் பகவானின் முன்னிலையில் அபூர்வமாக வந்து நெடுநேரம் அமர்ந்திருந்தார். இருவரும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் இருந்தனர்.

பின்னர் சேஷாத்திரி ஸ்வாமிகள் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து விட்டார்.

“ஹூம், இவர் எப்படிப்பட்ட சொரூபம் கொண்டவர் என்று பார்க்கலாம் என்று பார்த்தேன். விடவே இல்லையே!” என்று அவர் கூறி வியந்தார்.

மஹா பெரிய மஹானான சேஷாத்திரி ஸ்வாமிகளே வியக்கும் ஒரு பெரிய உயரிய நிலையைக் கொண்ட அருளாளர் நம்மிடையே வாழ்ந்து வந்தார்; இன்றும் அவரை நினைப்பவர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் என்பது நமது பாக்கியமே, அல்லவா!

3bd17-ramanaspose

***************