காலம் என்னும் அற்புதம் பற்றி முப்பது பொன் மொழிகள்!

clock

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – மன்மத வருடம்- சித்திரை (April 2015)

இந்த பிளாக்—கில் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆயிரத்துக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத பொன் மொழிகள் வெளியிடப் பட்டுள்ளன! படித்துப் பயன் பெறுக!!

Compiled by London Swaminathan

Article No.1758;  Dated 30 March 2015.

Uploaded at London time 9-45 (GMT 8-45)

 

முக்கிய நாட்கள்/ விழாக்கள்:– ஏப்ரல் 2- மஹாவீர் ஜயந்தி,

புனித வெள்ளி, ஈஸ்டர் ஞாயிறு, ஈஸ்டர் திங்கள் – ஏப்ரல் 3, 5, 6;

விஷு, தமிழ் புத்தாண்டு – ஏப்ரல் 14; அக்ஷய திரிதியை- 21, மதுரை மீனாட்சி திருக் கல்யாணம்- ஏப்ரல் 30.

 

ஏகாதசி  : 15 ,  29/30; அமாவாசை-18; பவுர்ணமி (சந்திர கிரஹணம்)- ஏப்ரல் 4.

முகூர்த்த நாட்கள்:– 1, 3,6,8,10,15, 22

 

 end-of-time

 

1 புதன் கிழமை

காலோ ஹி துரதிக்ரம:

காலத்தை வெல்ல முடியாது –ராமாயணம்

2 வியாழக் கிழமை

காலே தத்தம் வரம் ஹ்யால்பம காலே பஹுணாபி கிம் – கதாசரித்சாகர:

சரியான காலத்தில் உதவி குறைந்தாலும் சிறந்ததே. தேவை இல்லாத காலத்தில் கூடக் கிடைத்தாலும் என்ன பயன்?

 

3 வெள்ளிக் கிழமை

கால சுப்தேசு ஜாகர்தி – சாணக்ய நீதி தர்பண:

நாம் தூங்கிக்கொண்டிருந்தாலும் காலம் விழித்துக் கொண்டிருக்கிறது

4 சனிக் கிழமை

க: கம் சக்தோ ரக்ஷிதும் ம்ருத்யு காலே  ரஜ்ஜுச் சேதே கே கடம் தாரயந்தி  – ஸ்வப்ன வாசவ தத்தா

மரண காலம் வந்துவிட்டால் யார் யாரைக் காப்பாற்ற முடியும்? நைந்து போன கயிற்றில் தொங்கும் (கிணற்றுப்) பானையை யார் (விழாமல்) பிடிக்க முடியும்?

 

5 ஞாயிற்றுக் கிழமை

அபி தன்வந்தரீ வைத்ய: கிம் கரோதி கதாயுஷி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

வயது போனபின்பு தன்வந்த்ரியே வந்து வைத்தியம் செய்தாலும் பயன் என்ன?

 

The_Value_of_Time

6 திங்கட் கிழமை

ஆயுர்யாதி க்ஷணே க்ஷணே

ஒவ்வொரு வினாடியும் ஆயுள் கழிந்து கொண்டே இருக்கிறது!

 

7 செவ்வாய்க் கிழமை

காலக் கலயதாம் அஹம் –

எண்ணக்கூடிய விஷயங்களில் நான் காலமாக இருக்கிறேன்; அஹம் ஏவ அக்ஷய காலோ— அழிவில்லாத/முடிவில்லாத காலம் நானே!–பகவத் கீதை

 

8 புதன் கிழமை

அந்ததோ அஸ்மாபி ஜீர்யதி

பாறையானாலும் இறுதியில் அழிந்து போகும் (மண் ஆகிவிடும்) – சம்ஸ்கிருத பொன்மொழி

9 வியாழக் கிழமை

அகாலேதுர்லபோ ம்ருத்யு:, ஸ்த்ரியா வா புருஷச்ய வா—- ராமாயணம்

ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும்—மரணம் என்பது அகாலத்தில் ஏற்படுவது அரிது.

 

10 வெள்ளிக் கிழமை

ஆயுஷ: க்ஷண ஏகோபி சர்வரத்னைர் ந லப்யதே

நீயதே தத்வ்ருதா யேன ப்ரபாத: சுமஹானஹோ – யோகவாசிஷ்டம்

எல்லா ரத்னங்களையும் கொடுத்தாலும் ஒரு வினாடி ஆயுளைக் கூட விலைக்கு வாங்க இயலாது. அதை வீணாக்குவது எப்பேற்பட்ட மடமை!

time

11 சனிக் கிழமை

ஞாலம் கருதினும் கைகூடும் — காலம் கருதி இடத்தாற் செயின் – திருக்குறள் 484

சமயே ஹி சர்வம் உபகாரி க்ருதம் – சிசுபாலவதம்

சமயம் அறிந்து செய்வது பலன் தரும்.

12 ஞாயிற்றுக் கிழமை

க: காலஸ்ய ந கோசராந்தரகத:  — பர்த்ருஹரி

காலத்தின் பிடியில் சிக்காதவன் யார்?

 

13 திங்கட் கிழமை

கால க்ரீடதி கச்சத்யாயு: – சங்கரரின் மோஹமுத்கரம்

காலம் விளையாடுகிறது. ஆயுள் போய்க்கொண்டிருக்கிறது

 

14 செவ்வாய்க் கிழமை

காலஸ்ய குடிலா கதி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

காலத்தினுடைய போக்கு புரிந்துகொள்ள முடியாதது.

 

15 புதன் கிழமை

காலோ ந யாதோ வயமேவ யாதா; :  — பர்த்ருஹரி

காலம் செல்லவில்லை; நாம்தான் சென்று கொண்டிருக்கிறோம் (நம் ஆயுள் ஒவ்வொரு நிமிடமும் சென்று கொண்டிருக்கிறது)

clock big

16 வியாழக் கிழமை

கத: காலோ ந சாயாதி

கடந்த காலம் திரும்பிவாராது

 

17 வெள்ளிக் கிழமை

கதஸ்ய சோசனம் நாஸ்தி– சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

சென்றது இனி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் (பாரதி)

18 சனிக் கிழமை

கதே ஸோகோ ந கர்தவ்யோ பவிஷ்யன்னைவ  சிந்தயேத் – சாணக்ய நீதி

சென்றதனைக் குறித்தல் வேண்டாம்; எதிர்காலத்தை எண்ண வேண்டாம் (நிகழ்காலத்தை பயனளிக்கும் வகையில் செலவிடு))

19 ஞாயிற்றுக் கிழமை

ந ஸ்வ: ஸ்வ: உபாசித் கோ ஹி மனுஷ்யஸ்ய ஸ்வோ வேத:– சதபத பிராமணம்

நாளை நாளை எண்ணாதே! நாளை வீணில் போக்காதே! நாளை நம்முடைய முறையோ; நமனுடைய முறையோ; யார் அறிவார்?

 

20 திங்கட் கிழமை

நீசைர் கச்சத்யுபரி ச தசா  சக்ர்நேமி  க்ரமேன – மேகதுதம்

வண்டிச் சக்கரம் போன்றதே வாழ்க்கைச் சக்கரம்; மேலும் கீழும் போய்வரும்.

foot steps

21 செவ்வாய்க் கிழமை

பவந்த்யுதய காலே ஹி சத் கல்யாண பரம்பரா: — கதா சரித் சாகரம்

நல்ல காலம் வந்து விட்டால் மங்கள விஷயங்கள் தொடர்ந்து வரும் (தை பிறந்தால் வழி பிறக்கும்)

 

22 புதன் கிழமை

விநாச காலே விபரீத புத்தி: — சாணக்ய நீதி தர்ப்பண:

கெட்ட காலத்தில் புத்தி பேதலிக்கும்.

23 வியாழக் கிழமை

சமய ஏவ கரோதி பலாபலம் – சிசுபாலவதம்

காலமே ஒருவனை பலவானாகவும் பலவீனனாகவும் ஆக்குகிறது

 

24 வெள்ளிக் கிழமை

கொக்கொக்க கூம்பும் பருவத்து (குறள் 490) ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவு வாடி இருக்குமாம் கொக்கு (வாக்குண்டாம்-அவ்வையார்)

உரிய காலம் வரும் வரை கொக்கு போல காத்திரு!

25 சனிக் கிழமை

ஹா ஹந்த சம்ப்ரமதி கதானி தினானி தானி

அடடா! இதோ இந்த நொடி (இப்பொழுது) சென்று விட்டதே!!!

(ஒவ்வொரு வினாடியும் வங்கியில் சேமித்த நம் வாழ்நாள் கழிந்து கொண்டே இருக்கிறது. இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது)

 

time handy

26 ஞாயிற்றுக் கிழமை

கால கரோதி கார்யாணி கால ஏவ நிஹந்தி ச

காலமே எல்லா காரியங்களையும் முடிக்கிறது.

27 திங்கட் கிழமை

க்ருத ப்ரயத்னோபி  க்ருஹே ந ஜீவதி

என்ன முயன்றாலும் வீட்டில் வாழமுடியாது (இறுதி நேரம் வந்துவிட்டால்)

28 செவ்வாய்க் கிழமை

காலோ ஹி பலவத்தர:

காலம் என்பது வலிமையானது

29 புதன் கிழமை

கதம் கதம் நைவ து சந்நிவர்ததே

போனது போனதுதான்; திரும்பிவாராது.

30 வியாழக் கிழமை

நஹி ஸ்வமாயுசிசகிதேசகிதே ஜனேஷு

மனிதர்களில் தன் ஆயுளை அறிந்தவன் எவனும் இல்லை.

time gita

ஒரு நிமிட ராமாயணம், பாகவதம், மஹாபாரதம்!

IMG_2564

சபரி – ராமன் சந்திப்பு

Article No.1754; Date:- 28  March, 2015

Written by London Swaminathan

Uploaded at London time  6-19 (GMT)

 

நூறு ஆண்டுகளுக்கு முன் எல்லா இந்துக் குழந்தைகளுக்கும் வீட்டிலுள்ள பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் நிறைய நீதிக் கதைகள் சொல்லுவார்கள். இவ்வாறு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியவுடன் இரவு நேரம் ஆகிவிட்டால் குழந்தைகள் தாமாகவே அவர்களிடம் செல்லுவர். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி பல நல்ல பாடல்களையும் ஸ்லோகங்களையும் சொல்லிக் கொடுப்பர். ஒரே ஸ்லோகத்தில் ராமாயணம், பாகவதம், மஹாபாரதம் முதலியவற்றையும் கற்றுத்தருவர்.

18 புராணங்கள், 12 ஜோதிர்லிங்கத் தலங்கள், தமிழில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நூல்கள் ஆகியவற்றுக்கான பாடல்களையும் மாணவர்கள் அறிவர். பாடல் வரிகள் என்பன பத்திரிகைகளில் உள்ள துணைத் தலைப்பு அல்லது பெரிய தலைப்புகள் போன்றன. சிறு வயதிலேயே இவைகளைப் பயிற்றுவித்தால் அதை அவர்கள் மறக்கவே  மாட்டார்கள்.

இந்தவகையில் ஏக ஸ்லோக (ஒரே பாட்டில்) ராமாயணம், ஏக ஸ்லோக பாகவதம், ஏக ஸ்லோக மஹாபாரதம் என்பன முக்கியமானவை.

hanuma crossing

ஏக ஸ்லோக ராமாயணம்

 

ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

பொருள்: ஆதியில் ராமன் காடு செல்லல்

பொன் மானைக் கொல்லல்

சீதா தேவி கடத்தல்

ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்

வாலீ அழிவு,

கடல் தாண்டல்

இலங்கை எரிப்பு

பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ராமாயணம்

 

 butter krishna

ஏக ஸ்லோக பாகவதம்

 

ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,

மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

 

கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்

சைதத் பாகவதம்  புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

 

பொருள்: ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

கோபியர் வீட்டில் வளர்ப்பு

மாயா உருவ பூதனையின் அழிவு

கோவர்த்தன மலையின் உயர்வு

கம்ச, கௌரவர்கள் அழிவு

குந்தீ மகன் காப்பு

இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

 ganesh writing

 

ஏக ஸ்லோக மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

 

பொருள்: ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு

அரக்கு மாளிகை எரிப்பு

சூதாட்டத்தில் நாடு இழப்பு

காட்டில் சுற்றல்

மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு

ஆநிரை கவர்தல்

போரில் அழிவு

சமாதான உடன்படிக்கை மீறல்

பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்

இதுவே மஹா பாரதம்

pandavas

பஞ்ச பாண்டவர் படம்

அனைவரும் கற்போம்! இந்து தர்மம் காப்போம்!!

 

இராமாயண வெண்பா!

IMG_2564

Rare Pictures of Ramayana from Picture Ramayana

Shabari worshipping Rama

Article No.1751; Date:- 27  March, 2015

Written by S NAGARAJAN

Uploaded at London time  8-19 GMT

 

28-3-2015  ஶ்ரீ ராம நவமி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது! ராமரின் அருள் வேண்டி அவர் பாதம் பணிவோம்; நலம் பெறுவோம்! லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து!

.நாகராஜன்

 

 

இராமாயண நூல்கள்

ஆதி கவி வால்மீகி ராமாயணத்தைப் பற்றிய பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இராமாயணத்தை பல்வேறு கவிஞர்களும் காவியங்களாகத் தங்கள் தங்கள் மொழியில் இயற்றியுள்ளனர். பல்வேறு நாடுகளில் இன்று புழக்கத்திலிருந்து வரும் இராமாயணக் கதைகளும் ஏராளம். கம்ப இராமாயணம், துளஸி இராமாயணம், பவபூதியின் உத்தர ராம சரிதம், வாசிஷ்ட இராமாயணம், ஆனந்த ராமாயணம் என்று நூல்களின் பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இராமாயண வெண்பா

இந்த வரிசையில் தமிழில் வெண்பாவைக் கொண்டு மட்டுமே இயற்றப்பட்டுள்ள அரிய நூல் இராமாயண வெண்பா. இதை இயற்றியவர் சமீப காலத்தில் மதுரையில் வாழ்ந்த மதுரகவி ஶ்ரீநிவாசையங்கார் என்பவர். இவர் வாழ்ந்த காலம் 1863-1937 என்பது தெரிய வருகிறது. இயற்றுவதற்கு மிகவும் கஷ்டமான வெண்பா பாக்களால் அமுதூறும் அழகிய சொற்களால் இராமாயணத்தை இயற்றியுள்ளது ஒன்றே இவரது அரிய புலமைக்கு ஒரு சான்றாகும்.இருபதாம் நூற்றாண்டில் மதுரையில் உள்ள சிறிய கிராமத்தில் இவர் வாழ்ந்திருந்தார் என்பதையும் தனது இந்த நூலை தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைத்திருந்தார் என்பதையும் நாம் அறிய முடிகிறது. கிட்கிந்தா காண்டம் முடிய 1853 வெண்பாக்களும், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டத்தில்  2061 வெண்பாக்களும் அடங்கியுள்ள அரிய நூல் இது!

IMG_2560

Hanuman crossing the Ocean

நூலின் பெருமையை முதல் பாடலே நன்கு விளக்கி விடுகிறது!

உலகம் புகழ் அமுதம் ஒப்பாகும் தூய
நலன்மலிரா மாயணத்தை நன்கு – நிலன்மிசையான்
வெண்பாவால் பாடி வினைகடிய எப்பொழுதும்
கண்பாராய் மாருதிநீ காண்….   பாடல் 9

‘அமுதத்திற்கு ஒப்பாகும்; தூய நலன் மலி இராமாயணம்’ என்று இராமாயணத்தைப் புகழ்ந்து துதித்து அதை வெண்பாவால் பாட அனுமனைத் துதிக்கிறார் கவிஞர்.

ஆழ்வார்கள் பாடிய பாடல்களில் தெரிந்தெடுத்த அமுதூறும் சொற்களை நூல் முழுவதும் ஆங்காங்கே பார்க்க முடியும்.

கவிச் சுவையும் சொற் சுவையும் பொருள் சுவையும் உள்ள பாடல்களில் சுந்தர காண்டத்தில் உள்ள சில பாக்களை இங்கு பார்ப்போம்.

தவம் இருந்த தையல்!

எண்ண லெழுத லிசைத்த லெழின்மலர்ப்பூங்

கண்ணுறவே நோக்கல் கவினறிதல் – உண்ணுதலோ

டெல்லா மிராம னெனத் துயிலுங் கொண்டறியாள்

பொல்லா மணிநேரப் பொன்            —–சுந்தர காண்டம் பாடல் 120

எண்ணுதல், எழுதல், இசைத்தல், கண்ணுற நோக்கல், கவின் அறிதல், உண்ணுதல் இவை எல்லாம் சீதைக்கு இராமன் என்ற எண்ணம் தான் என்பதைச் சொல்லி அவள் தூங்காமல் தவம் இருந்ததை துயிலும் கொண்டறியாள் என்ற வார்த்தைகளால் சொல்லி சீதையின் தவத்தை கவிஞர் அற்புதமாக ஒரே வெண்பாவில் விளக்கி விடுகிறார்.

IMG_2568

Ravana attacking Jatayu

அனுமன் சீதையைக் கண்ட காட்சியைக் கவிஞர் இப்படி நயத்துடன் கூறுகிறார்:

இலக்கணமுஞ் சீரு மெழிலு மியல்புஞ்

சொலத்தகுந்த மற்றைத் துறையுஞ் – சிலைப்புயத்தான்

எம்பிரான் சொற்ற எமதனையே யென்றறிந்தான்

வம்புலாந் தார்க்கான் மகன்               — சுந்தர காண்டம் பாடல் 142

“எம்பிரான் சொன்ன எம் அன்னை சீதை இவளே தான்” என்பதை இலக்கணமும் சீரும் அழகும், அவள் இயல்பும், இதர துறைகளும் காட்டி விடுவதை பல்துறை வித்தகனான அனுமன் அறிந்து கொண்டான்.

IMG_2572

Ramayana donning garments to go to forest

யான் செய்த தவமோ!

சீதையைக் கண்ட அனுமன் வியக்கிறான்!

யான் செய்த மாதவமோ வன்றே லருளுடையான்

தான் செய்த வாடாத் தனித்தவமோ – வான் செய்த

நல்லுலகு செய் தவமோ நாகாப திர்தவமோ

சொல்லரிய தென்றான் துதித்து

நான் செய்த தவமா? அருள் உடையான் செய்த தவமா? வான் உலகு செய்த தவமா? நாகாபதிர் தவமோ? என்று மகிழ்கிறான் அனுமன்.

இராவணன் காம வெறியுடன் சீதையை அணுகி அவள் காலில் விழுவதையும் சீதா பிராட்டி வெகுண்டு அவனைக் கடிந்து துரத்துவதையும் மதுர கவி கவிஞர் விவரிக்கும் பாங்கே அலாதி!-

அணியிழாய்! காதல் அடங்காததாக , பிணி அகல வாழ்வி! எனப் பேணி – மணி வாள் முடி கீழ் உறவே முழு மாமலை போல அடி மேல் வீழ்ந்தான் அயர்ந்து!

IMG_2576

Rama breaking the Bow (Shiva Dhanus)

ஏடா! மாடே! பேயே! முடி பத்தும் விழும்! திண்ணம் இது!

சீதை கூறுகிறாள்:-

ஏடா! நிருதற் கிறையே யிரக்கமிலா

மாடே! யறிவிலாவன் பேயே – நாடாமல்

என் சொன்னாய் வாழ்நாட் கிறுதியேன் செய்வாய்

வான் மின் செய்த தென்ன விரைந்து

ஆழிமழைக்கண்ண னருத னாடவர் கோன்

பாழியந்தோள் வீரன் படு சரத்தா – லேழைமதி

நின்முடிகள் பத்துநிலன் வீழுந் திண்ணமிது

கன்மனத்தா யெனவழிவாய் காண்!

ஏடா, இரக்கமிலா மாடே, வன் பேயே என்ற இந்த சுடு சொற்கள் போதாதா ராவணன் அழிவிற்கு!

என் தெய்வமும் நீ; செல்வமும் நீ!

அனுமன் அண்ணல் ராமனைப் பற்றிக் கூற அதைக் கேட்ட சீதை கூறுகிறாள்:-

எங்கோ மகனுக் கிருந்தூது வந்தெனது

பங்கமெலாம் நீத்துயிரும் பாலித்தாய் – இங்குனக்குச்

செய்யுங் கைமாறுளதோ தெய்வமுநீ செல்வமுநீ

அய்யனுநீ யன்னையுநீ யால்!

“என் கோமனுக்காக தூது வந்து என் பங்கம் நீத்து உயிர் பாலித்தாய். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். என் தெய்வம் நீ! செல்வமும் நீ! என் தந்தை நீ! என் தாயும் நீயே” என்ற சீதா பிராட்டியின் வார்த்தைகள் நம்மை உருக்குகின்றன!

அழகு ஊறும் அமுதச் சொற்களை உடைய இராமாயண வெண்பாவில் சில பாக்களைப் படிக்கும் போதே அதை முழுவதும் படிக்கும் ஆர்வம் எழும்.

rama

Ramayana Sculptures from South East Asia

கம்பனுடன் கலந்து வாழி

இறுதியாக நூலின் முடிவில் உள்ள வாழ்த்துப் பாவில் கம்பனையும் மறக்கவில்லை கவிஞர்.

வாழி அனுமந்த நகர் வாழி மதுரகவி

வாழியவன் நூல்கள் வழிவழியே –வாழியவே

இம்பர் இராமாயண வெண்பா இன்னுரை

கம்பனுடன் வாழி கலந்து

காலம் காலமாகத் தோன்றி வரும் இராமபிரான் அடியார்களில் அற்புதமாக சமீபத்தில் மதுரையில் தோன்றி அழியாத நூலைத் தந்துள்ள மதுரகவி ஶ்ரீநிவாசையங்காரை வணங்கி அவர் நூலை  வாழ்த்தி மகிழ்வோம்!

************

குறிப்பு:-

இந்த நூலை www.projectmadurai.org என்ற தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அரும் பணியைச் செய்துள்ள மதுரை தமிழ் இலக்கிய  மின் தொகுப்புத் திட்டத்தின் பொறுப்பாளர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்து அரும் பணி ஆற்றியோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அவர்களுக்கு தமிழ் உலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. நன்றி!

பாவாஹரி பாபா கதை! கல் மனமும் கரைந்தது!

thief

Article No.1748; Date:- 25  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  8-07

சொன்னவர்: சுதந்திரப்போராட்ட வீரர் ஸ்ரீயுத சுப்பிரமணிய சிவம் (சுதந்திராநந்தர்)

காசிபுரத்தில் குகை ஒன்றில் பாவாஹரி பாபா என்ற மஹான் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் பிரம்ம நிஷ்டையில் இருக்கும் போது ஒரு திருடன் குகைக்குள் வந்தான். அவருடைய பூஜா பாத்திரங்கள் அனைத்தையும் (பூஜைக்குப் பயன்படுத்தும் சாமான்கள்) மூட்டை கட்டிக் கொண்டு நழுவ முயன்றான். அந்த நேரத்தில், தியானம் கலைந்து பாபா முழித்துப் பார்த்தார்.

இதைக் கண்ட திருடன் பயந்து நடுக்கி மூட்டையைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான். பாபாவும் மூட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் பின்னால் ஓடினார். அவர் தொடர்ந்து வருவதைப் பார்த்த திருடனுக்கு பயம் அதிகரிக்கவே மேலும் வேகமாக ஓடினான். ஆனால் யோக சக்தியால் உடலைப் பக்குவமாக வைத்திருந்த பாபா, அவனை முந்திச் சென்று அவனைத் தடுத்து நிறுத்தினார். அவன் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, “அன்பனே, இவை எனக்கு வேண்டாம். நீயே எடுத்துகொள்ளலாம்” என்று சொல்லி அவன் கைகளில் கொடுத்தார்.

அந்தக் கள்ளனின் கல் மனமும் உருகிவிட்டது. அன்றுமுதல் அவன் அவருடைய பக்தனாக மாறி, அவருக்குச் சேவகம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

(குறள் 71:– அன்பைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் தாழ்ப்பாள் இருக்கிறதா? அன்புடையார் கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீர்த் துளிகளே உள்ளத்தில் கிடக்கும் அன்பினை எல்லோருக்கும் காட்டிவிடும்)

ascetic

Image of an acetic

மற்றொரு சமயம் ஒரு கிருஷ்ண சர்ப்பம் (நாகப் பாம்பு) அவரைக் கடித்துவிட்டது. அப்போது அவர் நிஷ்டையில் இருந்தார். யாருக்கும் பக்கத்தில் செல்ல பயம். அவர் இறந்தேவிட்டார் என்று எல்லோரும் எண்ணினர். அவர் நிஷ்டை கழிந்து ஒன்றும் நடவாதவர் போல நடந்துவந்தார். பாம்பு கடித்தும் எப்படி உயிருடன் வந்தீர்கள்? என்று பக்தர்கள் வியப்புடன் கேட்டனர். “கடவுளின் தூதர் என்னைப் பார்த்துவிட்டுப் போனார்” – என்று அவர் பதில் கொடுத்தார்.

வசந்த கால வருகையும் புண்ணிய பலனும்!

spring-blooming-trees

Article No.1746; Date:- 24  March, 2015

Written by S.NAGARAJAN

Uploaded at London time  காலை 10-47

 

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

26. வசந்த கால வருகையும் புண்ணிய பலனும்!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

तृणजालुकन्यायः

trnajalauka nyayah

த்ருணஜாலுக நியாயம்

புழு பற்றிய நியாயம் இது.

earthworm_2561331b

ஒரு புழுவானது தான் இருக்கும் இலையை விட்டு இன்னொறு பற்றுக்கோடு இல்லாமல் அகல்வதில்லை. இது போலவே ஒருவன் இன்னொரு நல்ல வேலை கிடைக்காமல் இருக்கும் போது கையிலிருக்கும் வேலையை விட்டு விடக் கூடாது. இன்னொரு வருவாய்க்கான வழி இல்லாமல் இருக்கும் போது கையில் இருக்கும் வேலையை விடலாமா?

ஆங்கிலப் பழமொழியான ‘A bird in hand is worth two in the bush’ என்ற பழமொழியை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

द्राविडप्राणायामन्यायः

dravidapranayama nyayah

த்ராவிட ப்ராணாயாம நியாயம்

ப்ராணாயாமத்தை செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் மிகவும் கஷ்டமான முறையில் செய்வது பற்றிய நியாயம் இது.

yogic_pranayama_

பிராணாயாமம் செய்வதற்கான வழி முறைகள் உள்ளன. மூக்கை கைவிரல்களால் பிடித்து மூச்சை உள்ளிழுத்து, நிறுத்தி, பின்னர் வெளியே விடுவதற்கு உரிய முறையை குருவிடமிருந்து கற்க வேண்டும். ஆனால் இப்படிச் செய்யாமல் கையைக் கழுத்தைச் சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டால் அது எப்படி இருக்கும்?

சுலபமாகச் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை அப்படிச் செய்யாமல் சுற்றி வளைத்துக் மிகவும்கஷ்டப்பட்டுச் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

धर्मवसन्तागमन्यायः

dharmavasantagama nyayah

தர்ம வசந்தாகம நியாயம்

செய்த தர்ம காரியங்கள் பற்றிஅதாவது புண்ணியம் பற்றியும் வசந்தகால வருகையையும் பற்றிய நியாயம் இது.

வசந்த காலம் வரும் போது இயற்கையின் மலர்ந்த சூழ்நிலை மனதைக் கவரும் ஒன்று. மரங்கள் செழிக்கும். புஷ்பங்கள் பூத்துக் குலுங்கும். மனோரம்யமான சூழ்நிலை உருவாகும். அனைவரின் மனதிலும் ஆனந்தம் ஏற்படும். இது போல தர்ம காரியகளினால் ஏற்படும் புண்ணியம் சேர்ந்தவுடன் செல்வமும் ஆனந்தமும் தானே தொடர்ந்து வரும்.

தர்மம் செய்ய வேண்டுவதன் அவசியத்தை இந்த நியாயம் வலியுறுத்துகிறது.

spring red

 

धान्यपलालन्यायः

dhanyapalala nyayah

தான்யபலால நியாயம்

நெல்லும் களையும் பற்றிய நியாயம் இது.

நெல்லை விதைக்கும் போது சரியாக விதைக்க வேண்டும். இல்லையேல் களையாக மாறி விடும். இதே போல ஞானம், பக்தி ஆகிய விதைகள் மனதில் சரியாக விதைக்கப் பட வேண்டும். தேவையற்ற களை போன்ற எண்ணங்களை விளைவிக்க வழி வகுத்து விடக் கூடாது. கவனம் தேவை என்கிறது இந்த நியாயம்.

natru nadal

नष्टाश्वदग्धरथन्यायः

nastasvadagdharatha nyayah

 

நஷ்டாஸ்வதக்த ரத நியாயம்

அஸ்வம்குதிரை; ரதம்வண்டி

சேதம் அடைந்த வண்டியையும் குதிரையையும் பற்றிய நியாயம் இது.

kuthiraivandi

இந்த நியாயம் எழுந்ததற்கான கதை இது தான்:- ஒருநாள் இரண்டு பேர்கள் தங்கள் தங்கள் வண்டியில் அயலூருக்குப் புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் ஒருவனது  குதிரை தொலைந்து விட்டது. இன்னொருவனுடைய வண்டியோ இரவில், கிராமத்தில் வண்டியை நிறுத்தி இருந்த சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் எரிந்து விட்டது. இருவரும் சேர்ந்து குதிரையை இருக்கின்ற வண்டியில் பூட்டி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ஒற்றுமையே பலம் என்பதை உணர்த்த வந்த நியாயம் இது. ஒருவருக்கொருவர் உதவினால் அனைவருமே பயன் பெற முடியும்!

Pictures are used from face book and other sites;thanks.

*************

பேய்களை விரட்ட வெண் கடுகு!!

Mustard-Seed

வெண் கடுகு (ஐயவி)ம், சாதாரணக் கடுகும்

Research Article No.1745; Date:- 24  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-25

(வெண்கடுகு =  ஐயவி = பஜ = சினாபிஸ் ஆல்பா அல்லது பிராஸ்ஸிகா ஆல்பா = ஒயிட் மஸ்டர்ட்)

“ஆ சேது ஹிமாசல பர்யந்தம்” – என்று சம்ஸ்கிருத மொழியில் ஒரு மரபுச் சொற்றொடர் உண்டு. இமயம் முதல் குமரி வரை – என்பது இதன் பொருளாம். சேது என்று குமரி முனைக்கும் ஒரு பெயர் முன்பொரு காலத்தில் இருந்தது. இதை அங்குள்ள பிராமணர்கள் தங்களுடைய பூஜை புனஸ்கார சங்கல்ப மந்திரங்களில் சொல்லி வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் நிலவியதை நாம் பல கட்டுரைகளில் கண்டோம். இப்பொழுது எனது ஆராய்ச்சியில் மேலும் ஒரு சான்று கிடைத்துளது. அது என்ன புதிய சான்று?

பேய்களை விரட்ட அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட அதே வெண் கடுகுப் (ஐயவி) பொடியைத் தான் சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தினர் என்பதை 3000 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய அதர்வண வேத மந்திரங்களும் 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்களும் செப்புகின்றன.

white mustard

வேதத்தில் காணப்படும் கற்புக்கரசி அருந்ததி, புனித இமய மலை, புனித கங்கை நதி, மான்கள் விளையாடும் இமய மலையில் வாழும் முனிவர்கள், ராஜசூய யக்ஞம், பருந்து வடிவ ஹோம குண்டம், ஏழு அடி நடந்து சென்று விருந்தினர்களை வழி அனுப்புதல், ஆறு வகைப் பருவங்கள், நால் வகைப் படைகள், அறம்-பொருள்-இன்பம் (தர்மார்த்த காம), எண்வகைத் திருமணங்கள், நான் மறைகள், கொடிகள், வெண் கொற்றக் குடை, இந்திரன் -வருணன் – சிவன் – விஷ்ணு- வாஹனங்கள், சகுனம், சோதிடம், வெள்ளி கிரகம்-மழை தொடர்பு- ஆகிய நூற்றுக்கணக்கான விஷயங்கள் அப்படியே புறநானூற்றிலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை ஆதாரங்களுடன் கண்டோம்.

ஆரிய-திராவிடப் பிரிவினை வாதம் பேசியவர்களுக்கு இவை எல்லாம் அடி மேல் அடி கொடுத்து, அந்த வாதங்களைப் ‘புல்டோசர்’ கொண்டு, பொடிப் பொடியாக்கிவிட்டது. இனியும் இப்படி ஆரிய திராவிட இன பேதம் பேசுவோரின் சவப் பெட்டியில் மேலும் ஒரு ஆணி அறைய இதோ புறநானூற்றுச் சான்று:—

white-yellow-mustard-

கடுகுச் செடி

பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-

1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்

2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்

3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்

4.யாழ் இசைக்க வேண்டும்

5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்

6.மணி அடிக்கவேண்டும்

7.காஞ்சி பாட வேண்டும்

8.அகில் புகை போட வேண்டும்

இதோ பாடல்கள்:—

புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென

உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)

 

தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க

கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி

ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,

இசை மணி எறிந்து, காஞ்சி பாடி

நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)

 

வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)

 

பொருள்:

 

போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.

இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்

சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)

 

நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்

விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி

புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… (நற்.370)

 

பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்……………..

நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்…………….

திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.

Neem-flower

வேப்ப மரம்

அதர்வண வேத மந்திரங்கள்

அதர்வண வேதத்தில் கருச் சிதைவு நிகழாமல் இருக்கவும், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க வும், கண்வ (2-25-3) எனப்படும் தீய சக்திகளை

விரட்டவும் வெண் கடுகு, ப்ரிஸ்னிபரணி மூலிகை கூறப்பட்டுள்ளது:–

கர்ப்பிணிகள் வெண் கடுகு தாயத்து உடலில் அணிய வேண்டும். தீய சக்திகள் உண்டாக்கும் கருச் சிதைவை இது அகற்றும் (அ.வே. 8-6-9)

தீய சக்திகள் இடுப்பு வலியை உண்டாக்கும் அல்லது கருவை விழுங்கிவிடும்.(8-6-23) குழந்தையை கருவிலோ பிறந்த பின்னரோ இறக்கச் செய்யும் தீய சக்திகள் (8-6-18);மலடித் தன்மை, குழந்தை இழப்பு ஆகியவற்றை வெண் கடுகு தடுக்கும் (8-6-26)

மேலும் ஆராய வேண்டும்!
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக வடவிமயம் முதல் தென்குமரி ஈறாக —16 லட்சம் சதுர மைல் பரப்பில் —- கர்ப்பிணிப் பெண்களும் காயமடைந்தோரும் வெண் கடுகைப் பயன்படுத்தியதால் இதன் மருத்துவ குணங்களை விஞ்ஞான முறையில் ஆராய்வது பலன்  தரும். இதில் பாக்டீரியா தடுப்பு, வைரஸ் தடுப்பு சக்திகள் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

வாழ்க அதர்வண வேதம்! வளர்க சங்க இலக்கியம்!!

பெண்கள் மட்டுமே ஆண்ட அதிசய நாடு!

jhansi

Research Article No.1744; Date:- 23  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-40

பாட்டிமார்களிடம் பழங்கதைகள் கேட்டவர்களுக்கும் பழைய கால சிறுவர் கதைப் புத்தகங்கள், பத்திரிக்கைகள் (அம்புலிமாமா, கண்ணன், கோகுலம்) ஆகியன படித்தவர்களுக்கும் மிகவும் பிரபலமான வாசகம் “56 தேச ராஜாக்கள்”. அதாவது பட்டபிஷேகம், ராஜா வீட்டுக் கல்யாணம், ஸ்வயம்வரம் எதுவானாலும் அக்காலத்தில் 56 தேச ராஜாக்களும் வந்திருந்ததாகச் சொல்லி கதையைத் துவக்குவர். இந்தியா இப்பொழுது மாநிலங்களாகவும் யூனியன் பிரதேசங்களாகவும் எப்படிப் பிரிக்கப்பட்டதோ அப்படியே அக்காலத்தில் 56 தேசங்களாகப் பிரிக்கட்டிருந்தது.

ஒரு சக்ரவர்த்தி வந்து, பல தேசங்களை வென்று, தமது பேரரசுக்குள் சேர்த்திருந் தாலும் அந்நாட்டு ராஜாக்கள் கப்பம் கட்டி விட்டு தனது ராஜா பதவியைத் தக்க வைத்துக் கொள்வார். 56 தேசங்களின் பட்டியல் அபிதான சிந்தாமணி போன்ற கலைக் களஞ்சியங்களில் உள்ளது.

மஹாபாரதத்தில் குறைந்து 29 நாடுகளின் பெயர்கள் வருகின்றன. புத்தர் காலத்தில் 16 பெரிய பிரிவுகள் (மஹாஜனபத) இருந்தன. தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டியருக்கும் கீழே பல சிறிய அரசர்கள் இருந்ததுபோல பல சிற்றரசர் நாடுகளும் இருந்தன.

Rani-Lakshmi-Bai

லெட்சுமி பாய்

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்ற நூலிலும், வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்ரத்திலும் ஸ்த்ரீ ராஜ்யம் என்று ஒரு நாட்டைக் குறிப்பிடுகின்றனர். இது ஒரு வியப்பான விஷயமாகும். அதவது பெண்கள் ராஜ்யம் என்று பெயர். கிரேக்க நாட்டில் இப்படி ஒரு கதை உண்டு. ஆனால் அங்கே அவர்களை நல்லபடி சித்தரிக்கவில்லை. நமது நாட்டில் பெண்கள் போர்ப் பயிற்சி பற்றி புகழ்ச்சியாகவே சொல்லியுள்ளனர். நம் நாட்டுக்கு வந்த, அல்லது நம் நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட கிரேக்க ஆசிரியர்கள் நம் வீராங்கனைகளைப் புகழ்ந்து எழுதியுள்ளனர்.

கி.பி.600 வாக்கில் இந்நட்டுக்கு வந்த சீன யாத்ரீகன் யுவாங் சுவாங்கும் பெண்கள் நாடு இருப்பது பற்றி எழுதியுள்ளார்.

மெகஸ்தனீஸ் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டில் ஒரு ராணி ஆள்வதாக எழுதியுள்ளார். ஒருவேளை இது அன்னை மீனாட்சியைக் குறிப்பதாக இருக்கும் என்று அறிஞர்கள் கூறுவர்.

மௌர்ய சந்திரகுப்தன் பல்லக்கைச் சுற்றி பெண் வீராங்கணைகள் செல்லும் காட்சியை வேறு ஒரு கிரேக்க ஆசிரியர் எழுதி வைத்துள்ளார். ராமாயணக் கதைக்கு உயிரே கைகேயி பெற்ற இரண்டு வரங்கள் தான் என்பதை நாம் அறிவோம். யுத்த களத்தில் கைகேயி திறம்பட தேரைச் செலுத்தி தசரதனுக்குக்கு வெற்றி தேடித் தந்த செய்தியையும் நாம் அறிவோம்.

chennamma

கௌடில்யர் அர்த்தசாஸ்திர நூலிலும் பெண்கள் படை பற்றி எழுதியுள்ளார். ஆக, 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் போர்ப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கைகேயி யுத்த்களத்தில் தசரதனுக்கு சாரதியாக (டிரைவர்) போய் இருக்கமாட்டாள்.

பெண்கள் நாடு எங்கே இருந்தது?

இது இருந்த இடம் பற்றி நாம் ஊகிக்கவே முடிகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இது வடமேற்கு இந்தியாவில் இருந்ததாக வராஹமிகிரர் எழுதியுள்ளார். இது இமயமலை சட்லெJ நதிப் பிரதேசம் என்று யுவாங் சுவாங் சொல்கிறார். பிரம்மபுத்ரா நதிக்கு வடகே இமய மலையில் இருந்ததாக டே என்பவர் குறிப்பிடுவதால் இது குமாவூன், கார்வால் பகுதியாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கிழக்கு திபெத்தில், நுவாங் என்ற மலைஜாதி மக்களிடையே பிஞ்சு என்ற ராணி ஒருத்தி இருந்ததாகவும் அவரைத் தொடர்ந்து அந்நாட்டில் பெண்களே ஆட்சி புரிந்ததாகவும் ஆட்கின்ஸன் என்பவர் எழுதுகிறார். வாத்ஸ்யாயனரின் காமசூத்ரத்துக்கு உரை எழுதிய யசோதரர் என்பவர் இது வங்க தேசத்துக்கு மேற்கே இருந்த நாடு என்பார். ஆக இமய மலைப் பகுதியில் இது இருந்தது உறுதியாகிறது.

Anushka-Rudramadevi

ராணி ருத்ரமா தேவி

வராஹமிகிரர் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நாடுகளின் பட்டியலைத் தருகிறார். ( ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க). ஒரு குறிப்பிட்ட ஜாதி, இன மக்கள் குழுவின் பெயரில்தான் நாடுகள் பெயர் இடப்பட்டன. காம்போஜர்கள் பெரும்பாலும் வாழ்ந்த பகுதியை காம்போஜர் என்றனர். ஆனால் இவர்களே காலப் போக்கில் பல இடங்களுக்குச் சென்று காலனிகளை அமைத்தபோது அதையும் காம்போஜம் என்றனர். இதனால் ஒரே பெயர் மேலும் சில இடங்களில் கானப்படும். சிலநேரங்களில் மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டால், பூகோளப் படத்தில் அந்த நாட்டின் பெயரே வேறு இடத்தில் இருக்கும். அதாவது எல்லைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

RD parade rehearsal

அபிதான சிந்தாமணி போன்ற கலைக் களஞ்சியங்களில் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் என்ற நாடு காட்டப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் பெயர்களுக்குப் பின்னர், திராவிடம் என்ற நாடும் உள்ளதால் தமிழ் நாட்டுக்கு வடக்கேயிருந்த பகுதியை அப்படி அழைத்தனர் என்பது தெரிகிறது. திராவிட பாஷைகளுக்கு எல்லாம் தமிழே தலைமை என்பதால் பின்னர் அது தமிழுக்கும் உரித்தானது.

திராவிட = த்ரமிள = தமிழ் என்று ஆனதாகவும் தமிழ்= த்ரமிள- த்ராவிட என்று ஆனதாகவும் வாதிப்போர் தங்கள் கொள்கைக்க்கு ஏற்றவாறு இதை மாற்றிக் கொள்வர். திராவிட என்பது வெள்ளைக்கார்கள் பயன்படுத்திய இனப் பெயராக இல்லாமல், தெற்கு என்ற திசைப் பெயராகவே முற்காலத்தில் விளங்கிற்று.

புலி மூஞ்சி, குதிரை மூஞ்சி, மூன்று கண் மனிதர்கள்!

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் 14-ஆவது அத்தியாயத்தில் திசை வாரியாக நாடுகளைக் குறிப்பிடுகிறார். இதில் உள்ள சில சுவையான செய்திகளை மட்டும் காண்போம்.

மிலேச்சர்கள் பற்றி இவர் இரண்டு இடங்களில் குறிப்பிடுவார். இது அங்கே யவனர்களைக் குறித்த சொல் ஆகும். அல்பெரூனி காலத்தில் இது அராபியர்களைக் குறித்தது. தமிழிலும் இதே கதை என்பதை எனது முந்தைய கட்டுரையில் தந்துள்ளேன்.

புலி முக மனிதர்கள், குதிரை முக மனிதர்கள், பாம்புக் கழுத்து மனிதர்கள், நீண்ட கழுத்து மனிதர்கள், நாய் முக மனிதர்கள், கோரைப் பல் மனிதர்கள், சப்பை மூக்கு மனிதர்கள், தழை உடை மனிதர்கள், சபரர்கள், நிஷாதர்கள், உயர்ந்த கழுத்து மனிதர்கள், தாடிவாலாக்கள், முடி நிறைந்த தேகம் உடையோர், முக்கண்ணர்கள், ஒற்றைக் காலர்கள் என்று பலவகையான மக்கள் இனங்களையும் அவர்கள் ஆளுமிடங்களையும் குறிப்பிடுகிறார். இவை எல்லாம் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள். ஒவ்வொரு இனமக்களும் தங்களை அடையாளம் காட்ட ஒவ்வொரு சின்னத்தைப் பச்சைக் குத்திக் கொண்டனர். அதனால் அவர்கள் அப்பெயர்களில் அழைக்கப்பட்டனர். சிக்கிம், பூடான் போன்ற நாடுகளில் இன்றும் கூட முகமூடி அணிந்து நடனம் ஆடுவர். பூதம் போல முகமூடிகளை அணிவதால் அந்நாட்டுக்கு பூதஸ்தான் (பூட்டான்) என்று பெயர். இது போன்ற வழக்கங்கள் அக்காலத்தில் பெருவாரியாக இருந்திருக்க வேண்டும்.

indian women

ராமாயணத்தில் வரும் குரங்குகள் (ஹனுமார்), கரடிகள் (ஜாம்பவான்), கழுகுகள் (ஜடாயு) ஆகியவர்கள் மிருகங்கள் அல்ல. அவர்கள் உடலில் வரைந்த ஒவியங்கள் (பச்சைக் குத்தல்) அல்லது அவர்கள் சில நேரங்களில் அணியும் முகமூடிகளைப் பொருத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிவிட்டதால், அனுமார் என்றால், குரங்குகள் என்பது போலக் கதை சொல்லத் துவங்கிவிட்டனர்.

பத்து தலை ராவணன் என்றால், பத்து தலைகள் என்பது பொருளல்ல. ஒருவனுக்குப் பத்து திசைகளிலும் பார்த்து, எதிரிகளை வெல்லும் திறமை இருந்தால் இப்படி அழைப்பர். தசரதன் என்றால் அவனுக்கு பத்து தேர்கள் மட்டுமே இருந்தன என்பது பொருளல்ல. அவன் பத்து திசைகளிலும் உள்ள எதிரிகளை தேரில் சென்று, ஒடுக்கியவன் என்பது பொருள். உலகில் எல்லோருக்கும் எட்டு திசைகள் மட்டுமே தெரியும். இந்துக்களுக்கு மட்டும் பத்து திசைகள். அதாவது தசரதன், ராவணன் போன்ற வீரர்கள் மேல் உலகம், கீழ் (பாதாள) உலகம் உள்பட எல்லா இடங்களிலும் ஆட்சிச் சக்கரத்தைப் பரப்பினார்கள்.

ஆக பழங்கால இலக்கியங்களில் உள்ள முக்கண் மக்கள். ஒற்றைக் கால் மக்கள், புலி-நாய்-குதிரை முக மக்கள் என்பனவற்றை ஆராய்வது பலனளிக்கும் முயற்சியாகும்.

brooklyn museum

நியூயார்க் ப்ரூக்ளின் மியூசிய சிலை

வாழ்க வராஹமிகிரர்! படிக்க பிருஹத் சம்ஹிதா!!!

வறுத்த விதை முளைக்குமா?

Research Article No.1742; Date:- 23  March, 2015

Written by S Nagarajan

Uploaded at London time 7-56 am

 

 roasted sunflower seeds

Roasted Sunflower seeds

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

25. வறுத்த விதை முளைக்குமா?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

दग्धबीजन्यायः

dagdhabaja nyayah

தக்தபீஜ நியாயம்

வறுத்த விதை பற்றிய நியாயம் இது.

விதைகளை வறுத்து விட்டால் அவை நிலத்தில் விதைக்கப்பட்டாலும் முளைக்க மாட்டா.

பெரிய ஞானிகள் தம் கர்மாக்களைக் கழித்து விட்ட பின்னர் அவர்கள் மீண்டும் பிறக்கத் தேவையே இல்லை. வறுத்த விதை போல அவர்கள் பூமி மீது இருந்தாலும் நடந்தாலும் அவர்களைக் கர்மங்கள் கட்டுப் படுத்தாது. ஞானம் அவர்களின் அஞ்ஞானத்தைச் சுட்டெரித்து விட்டதால் அவர்கள் ஜீவமுக்தர்கள் ஆகி விடுவர்.

இதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

aduppu3

Old Type Fuel Oven (Virahu Aduppu in Tamil)

दग्धेन्धनवह्निन्यायः

dagdhendhanavahni nyayah

தக்தேந்தனவஹ்னி நியாயம்

எரிபொருளையும் தீயையும் பற்றிய நியாயம் இது.

எரி பொருளாக இருக்கும் விறகு, மண்ணெண்ணெய் ,எரிவாயு எதுவாக இருந்தாலும் சரி, அது முற்றிலுமாக தீர்ந்து விட்டால் தீயும் தானே அணைந்து விடும்.

எடுத்த வேலையை முடிக்காமல் இலட்சியவாதியான ஒருவன் ஓயமாட்டான். எரிபொருளாக இருந்து தன் வேலையை முடித்த பின்னரே அவன் அணைந்த தீ போல ஆவான். ஓய்வெடுப்பான்!

beating snake

Beating a snake with a stick

दण्डसर्पमारणन्यायः

dandasarpamarana nyayah

தண்டசர்ப்பமாரண நியாயம்

தண்டம்தடி; கம்பு; சர்ப்பம்பாம்பு மாரணம்கொல்லுதல்

தடியும் பாம்பும் பற்றிய நியாயம் இது.

தடியை எடுத்து ஒரு பாம்பை அடிக்கும் போது பாம்பும் சாக வேண்டும், அதே சமயம் தடியும் உடைந்து விடக் கூடாது. புத்திசாலியான ஒருவன் ஒரு வேலையை முடிக்கும் போது அவன் செய்வதற்கு எடுத்த காரியமும் நன்கு முடிய வேண்டும், அதே சமயம் தனது கருவிக்கோ அல்லது மற்ற யாருக்குமோ எந்த விதமான ஆபத்தோ அல்லது ஊறோ ஏற்பட்டு விடக் கூடாது. செய்யும் வேலையைத் திறம்படச் செய் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

akbar-birbal-

King and a commoner

दुर्बलैरपि वध्यन्ते पुरुषाः पार्थिवाश्रितैः

durbalairapi vadhyante purusah parthivasritaih

துர்பலைரபி வத்யந்தே புருஷா: பார்திவாஷ்ரிதை: நியாயம்

சமான்யனான ஒருவன் அரசனுக்கு அருகில் இருந்தால் அவன் அந்தஸ்தே தனி தான். தற்காலத்தைக் கூட எடுத்துக் கொண்டால் பாஸ் (Boss) அல்லது உயர் அதிகாரி அருகே இருக்கும் ஒருவன் பலமுள்ளவனாக இருக்கிறான். அவன் சொல்வதை அனைவரும் கேட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவன் சாதாரணமானவனாக இருந்தாலும் இருக்கும் இடத்தால் ஏற்படும் மஹிமை அது.

இதைச் சுட்டிக்காட்டும் நியாயம்.

देवदत्तहन्तृहतन्यायः

devadattahantrhata nyayah

தேவதத்த ஹந்த்ருஹத நியாயம்

தேவதத்தனைக் கொன்றவன் கொல்லப்பட்டான் என்னும் நியாயம் இது.

தேவதத்தன் என்பவனை ஒருவன் கொன்று விட்டான். ஆனால் அந்தக் கொலையாளியை இன்னொருவன் கொன்று  விட்டான் என்ற கதையைச் சொல்லும் நியாயம் இது.

kennedy and oswald

US President J F Kennedy was shot dead by Oswald. And Oswald was shot dead by Jack Ruby(1963)

இது சுட்டிக் காட்டுவது எதை? யாருமே பலசாலி இல்லை என்பதைத் தான்! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழி! பலசாலியான ஒருவனுக்கு மேலே இன்னொரு பலசாலியும் இருப்பான்! இந்த நியாயம் கொலையாளி கொலை செய்யப்பட்டாலும் அவனால் கொலையுண்டவன் மீண்டும் எழுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

************

சொட்டை, யாராவது வந்திருக்கானா? குருகைக்காவலன் கேள்வி!

natha
நாதமுனி
Article No.1740; Date:- 22  March, 2015
Written by London swaminathan
Uploaded at London time 11-37 காலை

சொன்னவர்: சுதந்திரப்போராட்ட வீரர் ஸ்ரீயுத சுப்பிரமணிய சிவம் (சுதந்திராநந்தர்)

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீகுருகைக் காவலப்பன் என்ற பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது பெருமையை மணக்கால் நம்பியிடமிருந்து அறிந்த ஆளவந்தார், அவரைக் காணச் சென்றார்.

ஆளவந்தார் என்பவர் ஸ்ரீ நாதமுனிகளின் பேரன். அவர் சென்ற நிமிடம் குருகைக் காவலப்பன் தியானத்தில் இருந்தார். ஆளவந்தாருக்கும் அவருக்கும் இடையே ஒரு பெரிய தட்டி இருந்தது. அதற்குப் பின்னால் நின்று அவர் நீண்ட நேரம் காத்திருந்தார்.

திடீரென்று ஒரு சத்தம் வந்தது, “ அங்கே யாராவது சொட்டை வந்திருக்கானா? என்று.

சொட்டை என்பது நாதமுனிகள் வம்சத்தினரின் குடும்பப்பெயர். ஆளவந்தாருக்கு மிகவும் ஆச்சரியம். குருகைக்காவலரைத் தரிசித்துவிட்டு, நான் மறைவான தட்டிக்கு அந்தப் பகத்தில் நின்றேனே, நான் வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டார்.

ஸ்ரீமன் நாராயணன் லெட்சுமி தேவி வந்தால் கூடத் திரும்பிப் பார்க்கமாட்டாதவர். அவர் என் தோள் பட்டையை அமுக்கிக்கொண்டு இரண்டு மூன்று தடவை நீ இருக்கும் திசையை எட்டிப் பார்த்தார். இப்படிப்பட்ட பாக்கியம் சொட்டை குடும்பத்துக்கு உண்டு என்று எனக்குத் தெரியும். ஆகையால்தான் அவரது குடும்பத்தினர் வந்திருக்கிறார்களோ என்று வினவினேன் என்றார்.

chotainambi alavandar

சொட்டை நம்பி ஆளவந்தார்

பேரழகி லெட்சுமி; பெரும் செல்வத்துக்கு அதிதேவதை; அவளுடைய வலையில் கூட எளிதில் சிக்காத பகவான், பக்தர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவான்! அவன் கருணைப் பெருங்கடல்!

ஆதாரம்: மோக்ஷ சாதன ரஹஸ்யம் (சுப்பிரமணிய சிவா எழுதியது)

தாலாட்டுப் பாடல்களில் ராமர்

yogya-ramayana-ballet-2084-r001-030

ராமாயண நாட்டிய நாடகம், இந்தோநேஷியா

Article No.1739; Date:- 22  March, 2015

Written by S Nagarajan

Uploaded at London time காலை 7-02

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 14

ச.நாகராஜன்

லாலி! லாலி! ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே!

 

தாலாட்டில் ராமர்

 

தமிழ் திரைப்படங்களில் தாலாட்டுப் பாடல்களுக்கு தனி இடம் ஒன்று உண்டு, ‘

‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ என்ற சோகமான பாகப்பிரிவினை படப் பாட்டு ஒரு ரகம் என்றால் ‘தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே’ என்ற நாயகன் படப் பாடல் இன்னொரு ரகம்.

ஆனால் ராமரையும் கௌஸல்யையும் கம்பனையும் வால்மீகியையும், தியாகையரையும் பாடல் வரிகளில் இடம் கொண்ட லாலி லாலி பாடல் அற்புதமான ஒரு பாடல்.

தெலுங்கு படமான ஸ்வாதி முத்யத்தில் இந்த தாலாட்டுப் பாட்டை எழுதியவர் டாக்டர் சி.வி. நாராயண ரெட்டி. தமிழில் சிப்பிக்குள் முத்து படத்திற்காக எழுதியவர் கவிஞர் வைரமுத்து.அற்புதமாக இதைப் பாடியிருப்பவர் பி.சுசீலா.

 

 

வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்

        ராம பக்தரான ஶ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் 24000 கிருதிகளை இயற்றியவர். ஆனால் 700 கிருதிகளே நம்மிடம் இன்று உள்ளன. கம்பனோ பத்தாயிரம் பாடல்களில் ராமனைப் பாடிப் பாடி மகிழ்ந்தான். வால்மீகியோ 24000 ஸ்லோகங்களில் ராமனின் அமுதக் கதையை அமிர்தமாக வர்ஷித்தார். வால்மீகி ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் அன்றாடம் சொல்லும் தியான ஸ்லோகங்களில்  வால்மீகிக்கு வணக்கம் தெரிவிக்கும் ஸ்லோகம் முக்கியமான ஒன்று; சுவையானதும் கூட!

 

 

கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் I

ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II

 

ஆருஹ்ய கவிதா ஷாகாம்கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி

கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும்

வந்தே வால்மீகி கோகிலம்அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்

 

முதல் காவியத்தை இயற்றியதால் வால்மீகி ஆதி கவி எனப்படுகிறார். முதல் காவியம் ராமாயணம் என்பதால் இது ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. கவிதையின் சிகரத்தில் ஏறியவர் என்பதோடு ராம நாமத்தைக் கூவிக் கூவிப் பாடும் குயில் என வால்மீகி அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட ராம நாமம் கூவும் குயிலைக் கொண்டாடுவது குழந்தையின் தாலாட்டிலிருந்தே ஹிந்துப் பண்பாட்டுக் குடும்பங்களில் ஆரம்பித்து விடுகிறது!

im159.guimet-B

தெலுங்குப் பாடல்லாலி லாலி

 

டாக்டர் சி.வி.நாராயண ரெட்டி எழுதிய தெலுங்குப் பாடலின் ஒரு சில வரிகளை முதலில் பார்ப்போம்:-

வடபத்ரசாயிக்கு வரஹால லாலி
ராஜீவ நேத்ருனுக்கி ரத்னால லாலி
முரிபால கிருஷ்ணுனிக்கி முத்யால லாலி
ஜகமேல ஸ்வாமிக்கி பகடால லாலி

கல்யாண ராமுனிகி கௌஸல்யா லாலி

யதுவம்ச விபுனுகி யசோதை லாலி என்று இப்படி அற்புதமான வரிகளுடன் தெலுங்குப் பாடல் அமைந்திருக்கிறது.

 

பாடலுக்கு மிக அற்புதமாக இசை அமைத்திருப்பவர் இளையராஜா

 

 

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

 

இந்தப் படத்தில் ராமன் கதை கேளுங்கள் பாடலைத் தொடர்ந்து ராமனை நினைவூட்டும் இரண்டாவது பாடல் இது. தமிழில் இதே இசைக்குத் தக ஆழ்ந்த  பொருளுடன் அமைக்கப்பட்ட பாடலைப் பார்ப்போம்:-

லாலி லாலி லாலி லாலி                 லாலி லாலி லாலி லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி      ராஜாதிராஜனுக்கு இதமான லாலி                          வரம் தந்த சாமிக்கு பதமான லாலி       ராஜாதிராஜனுக்கு இதமான லாலி                       குறும்பான கண்ணனுக்கு ஆ..         குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி                    ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி (வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ                  ஆரிராரோ ஆரிராரோ

கல்யாணராமனுக்கு கௌஸல்யை நானே

கல்யாணராமனுக்கு கௌஸல்யை நானே     யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே  யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே           கரு யானை முகனுக்கு மலையன்னை நானே           கரு யானை முகனுக்கு மலையன்னை நானே                                                       பார்போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே (வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ         ஆரிராரோ ஆரிராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே            ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே          ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே                                            ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே        ராமராஜனுக்கு வால்மீகி நானே                      ராமராஜனுக்கு வால்மீகி நானே                                                                                     ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே   ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே (வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ        ஆரிராரோ ஆரிராரோ

ராதிகா துளியில் குழந்தையை ஆட்டுவதும், குழந்தையை முதுகில் சுமந்தவாறே கோலம் போடுவதும், தையல் மெஷினை இயக்குவதுமாக பின்னணிக் காட்சிகள் இருக்க பாடல்  பல கருத்துக்களை முன்னணியில் முன் வைக்கிறது!

 

lord rama,fb

கௌசல்யையும் யசோதையும்

 

பாரதத்தில் பிறந்த ஒவ்வொரு அன்னையும் பிள்ளையைப் பெற்றவுடன் அந்த வரத்தைத் தந்தருளிய இறைவனுக்கு நன்றி சொல்வது வழக்கம். புத் என்ற நரகம் செல்ல விடாமல் தடுப்பதனாலேயே புத்திரன் என்று அழைக்கப்படுகிறான்.

ஆக அப்படி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி பாடல் இசைக்கப்படுகிறது. தன் மகனை ஒரு ராமனாக, கண்ணனாக, கஜமுகனாக, முருகனாக நினைத்துப் பாடுகிறாள் தாய். தன்னை வால்மீகியாக, கம்பனாக, ஆழ்வாராக, தியாகையராக நினைத்துப் பாடும் இந்தப் பாடலின் கருத்தை எண்ணி மகிழலாம்.

குறிப்பாக தியாகராஜ ஸ்வாமிகள் (யதுகுல காம்போஜி ராகத்தில்) பாடியுள்ள கீர்த்தனையான

“ஶ்ரீராம ஜெயராம ச்ருங்கார ராமயநி

சிஞ்சிஞ்ச ராதே ஓ மனஸா

தலுகு செக்குல முது பேட்ட கௌசல்யா முனு

தபமேமி ஜேசெனொ தெலியா”

என்ற கீர்த்தனையில் கௌசல்யை ராமனின் முத்தம் பெற்று அவனை வளர்க்க என்ன தவம் செய்தாளோ என்று உருகுகிறார்!

அதே போல, பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியுள்ள அருமையான பாடலான

“என்ன தவம் செய்தனை யசோதா

என்ன தவம் செய்தனை

எங்கும் நிறை பரப்ரம்மம் – அம்மா வென்றழைக்க

என்ன தவம் செய்தனை

என்பதையும் இங்கு நினைவு கூரலாம்.

ஒரு தாலாட்டுப் பாடலில் பிரம்மாண்டமான பாரம்பரிய வரலாறுகளைச் சித்தரிக்கும் இந்தப் பாடல்  தாலாட்டுப் பாடல்களில் சிறந்த ஒன்று என்று தயங்காமல் கூறலாம்!

*****************