கம்ப ராமாயணப் பொன்மொழிகள் (கிஷ்கிந்தா காண்டம்)(Post No.3301)

om-muruga

 

Compiled  by London Swaminathan

Date: 29 October 2016

Time uploaded in London: 15-28

Post No.3301

Pictures are taken from various sources; thanks

நவம்பர் 2016 காலண்டர் (துன்முகி, ஐப்பசி-கார்த்திகை)

 திருவிழா நாட்கள்:- நவம்பர் 5-கந்த சஷ்டி விரதம்,சூர சம்ஹாரம்; நவம்பர் 14 குருநானக் ஜயந்தி, குழந்தைகள் தினம்; 15 கடைமுக ஸ்நானம்’ ;16 கார்த்திகை மாதப் பிறப்பு, முடவன் முழக்கு, சபரிமலை மாலை அணியும் நாள்; நவம்பர் 22 கால பைரவ அஷ்டமி; நவம்பர் 23 சத்ய சாய்பாபா பிறந்த தினம்

 

அமாவாசை- நவம்பர் 29 , பௌர்ணமி- நவம்பர் 14, ஏகாதசி-11, 25, நவம்பர் முகூர்த்த நாட்கள்-2, 4, 6, 7, 9, 11, 20, 27

 

நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்

பூரியர் ஒரு வழிப்புகுந்தது ஆம் என(18 மொழிகளில் தேர்ச்சி பெறாதோர் ஆரவாரம் செய்வது போல பறவைகள் ஒலித்தன)

 

Xxx

நவம்பர் 2 புதன்கிழமை

 

எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன

கவ்வு மீனொடு முழுகின எழுவன காரண்டம் ( ஜனன-மரண சுழற்சியை மீனுடன் முழுகி எழுந்த காகங்கள் காட்டின)

Xxx

நவம்பர் 3 வியாழக்கிழமை

 

ஒண்ணும் என்னின் அஃதுதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ (தம்மால் முடியுமானால் ஒரு பொருளை உதவாமல் கருகிமியாக இருப்போர், உயர்ந்தோர் ஆவரோ!)

Xxx

நவம்பர் 4 வெள்ளிக்கிழமை

 

ஒளிப்பாரோடும் உறவுண்டோ (ஒன்றை வைத்துக் கொண்டு, இல்லை என்பாருடன் உறவு உண்டோ)

 

Xxx

நவம்பர் 5 சனிக்கிழமை

 

அன்பெனும் ஆர் அணி பூண்ட தம்பி (அன்பு எனும் பெறுவதற்கு அரிய ஆபரணத்தை அணிந்த தம்பி- இலக்குவன்)

Xxx

 

murugan-arathy-fb

நவம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை

 

அன்பினுக்கு அவதி இல்லை (அன்புக்கு ஓர் எல்லை இல்லை)

 

Xxx

 

நவம்பர் 7 திங்கட்கிழமை

கவ்வை இன்றாக நுங்கள் வரவு ( உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக)

xxx

நவம்பர் 8 செவ்வாய்க்கிழமை

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன் (கற்காத கலைகள் இல்லை, கடல் போலப் பரந்த வேதங்கள் அறிவு, இவன் பேச்சில் தெரிகிறது இனிய சொற்களைச் செல்வமாகப் பெற்ற இவன் (இந்த அனுமன்) யார்?)

Xxx

 

நவம்பர் 9 புதன்கிழமை

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ (தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வதைக் காட்டிலும் மேம்பட்ட அறமும் உண்டோ)

 

Xxx

நவம்பர் 10 வியாழக்கிழமை

உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது என் காதல்

சுற்றம் உன்சுற்றம் நீ என் உயிர்த் துணைவன் என்றான் (சுக்ரீவ ன் – ராமன் நட்புறவு ஒப்பந்தம்)

murugan-moustacheorissa

Xxxx

நவம்பர் 11 வெள்ளிக்கிழமை

பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் (உன் பெண்மை இயல்பால் நீ இங்கனம் தவறு செய்துவிட்டாய் (வாலி, தன் மனைவியிடம் சொன்னது.)

Xxx

நவம்பர் 12 சனிக்கிழமை

எய்தவர் பெறுவர் என்றால் இணையடி இறைஞ்சி ஏவல்

செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைது ஆமோ (ராமா! உன் அம்பு பட்டு இறந்தவர்களும் வீடு பேறு அடைவர் என்றால் உனக்கு குற்றேவல் செய்வர் வீடு பேறு அடைவதை சொல்லவும் வேண்டுமா– வாலி சொன்னது)

Xxxxx

நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை

 

பெற்றாருழைப் பெற்றபயன் பெறும் பெற்றி அல்லால்

அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்கொல் என்றான்

(குற்றமில்லாதவர் என்று யாரைச் சொல்லமுடியும்? நண்பர்களிடத்தில் பொருந்திய நற்பயனை எடுத்துக்கொள வேண்டும்- லெட்சுமணனிடம் ராமன்)

 

Xxx

நவம்பர் 14 திங்கட்கிழமை

 

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே

இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்

செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்

 

xxx

நவம்பர் 15 செவ்வாய்க்கிழமை

தீமைதான் பிறரைக் காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ (மற்றவர்களைத் தீய செயலிலிருந்து தவிர்த்துவிட்டு, தானே தீமை செய்தால் அது குற்றமற்றதாகிவிடுமோ?)

Xxxx

rk-nagar-muruga

நவம்பர் 16 புதன்கிழமை

மெலியவர் பாலதேயோ ஒழுக்கமும் விருப்பம்தானும்

வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ (ஒழுக்கமும், சிறப்பும் மெலியவரிடத்தில் மட்டுமா?வலியவர் இழிசெயல் செய்தாலும் புகழ்தானோ? ராமன் பற்றி வாலியின் கிண்டல்)

Xxx

நவம்பர் 17 வியாழக்கிழமை

ஏதிலாறும் எளியர் என்றால் அவர் தீது தீர்ப்பது என் சிந்தைக்கு கருத்து அரோ (எளியவரைக் காப்பது என் கருத்து; வாலிக்கு ராமன் பதில்)

Xxx

நவம்பர் 18 வெள்ளிக்கிழமை

 

தக்க இன்ன தகாதன இன்ன என்று

ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள

மக்களும் விலங்கே மனுவின் நெறி

புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே (எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம்)

Xxxx

நவம்பர் 19 சனிக்கிழமை

 

எக்குலத்து யாவர்க்கும் வினையால் வரும் மேன்மையும் கீழ்மையும்

(எந்த ஜாதிக்காரன் ஆனாலும் அவன் செய்யும் செயலால்தான்

உயர்வும் தாழ்வும் வரும் என்பதே மனு நீதி)

 

Xxxx

நவம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை

நாய் என் நின்ற எம்பால் நவை அற உணரலாமே

தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான் (நாய் போன்ற என்னைப் போன்றவர்களின் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று சிறிய எண்ணம் இல்லாத வாலி, ராமனிடம் வேண்டினான்)

Xxxxx

diwali-drawing-2

நவம்பர் 21 திங்கட்கிழமை

அறைகழல் இராமன் ஆகி அறநெறி நிறுத்த வந்தது (தர்மத்தை நிலைநாட்டவே இந்த இராமாவதாரம் வந்தது– வாலி சொன்னது)

Xxxxx

நவம்பர் 22 செவ்வாய்க்கிழமை

சிறியாரோ உபகாரம் சிந்தியார் ( நீ செய்த பேருதவியை எண்ணிப் பார்க்காத சிறியவனா?)

 

xxx

நவம்பர் 23 புதன்கிழமை

 

தர்மம் பற்றிய தக்கவர்க்கு எலாம்

கருமம் கட்டளை என்றல் கட்டதோ (அறவழியில் செல்வோருக்கு அவரவர் செயல்தான் உரைகல் என்பது கட்டுக்கதை ஆகிவிட்டதா– தாரை புலம்பல்)

Xxxx

நவம்பர் 24 வியாழக்கிழமை

 

புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனலங்கு ( புகை இருந்தால் தீ இருக்கும்)

 

Xxxx

நவம்பர் 25 வெள்ளிக்கிழமை

 

நகையுடை முகத்தை ஆகி இன்னுரை நல்கு நாவால் (முக மலர்ச்சியுடன் இரு; இனிய சொற்களைப் பேசு – சுக்ரீவனுக்கு இராமன் அறிவுரை)

b_id_406817_kawadiyan

xxx

 

நவம்பர் 26 சனிக்கிழமை

 

செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை

வைவன வந்த போதும் வசையில் இனிய கூறல் (செய்ய வேண்டியதை செய்; எப்போதும் தப்பானவைகளை நினைக்காதே; மற்றவர்கள் திட்டினாலும் இனிய சொற்களைச் சொல்- சுக்ரீவனுக்கு இராமன் அறிவுரை)

 

Xxxxx

நவம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை

 

சிறியர் என்றிகழ்ந்து நோவு செய்வன செய்யல் (வலிமை குன்றியவர் இடத்தில், வருத்தம் தரும் செயலைச் செய்யாதே)

 

Xxxx

நவம்பர் 28 திங்கட்கிழமை

 

மங்கை பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்  (பெண்கள் பிரச்சனைகளில் மரணம் கூட ஏற்படும்)

 

xxxx

 

நவம்பர் 29 செவ்வாய்க்கிழமை

 

தீயன வந்தபோது சுடுதியால் தீமையோரை ( தீயவரைத் தண்டிக்கும்போது எல்லை மீறாதபடி தண்டிக்கவேண்டும்)

 

Xxxx

 

நவம்பர் 30 புதன்கிழமை

 

பாக்கியம் அன்றி என்றும் பாவத்தைப் பற்றலாமோ (செல்வத்துக்குக் காரணமான நல்லவற்றைச் செய்யாமல் வறுமைக்குக் காரணமான தீயவற்றைச் செய்யலாமோ!)

 

—SUBHAM–

 

 

மனைவி பற்றி யஜூர் வேதம் (Post No3280)

bengali-blow

Written by London Swaminathan

 

Date: 23 October 2016

 

Time uploaded in London: 7-07 AM

 

Post No.3280

 

Pictures are taken from Facebook and other sources; thanks. (Pictures are used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

 

This article is available in English as well

girls-i-daydr-sudha-galavagunta

மனைவி என்பவள் கணவனில் பாதி — என்று யஜூர் வேதம் சொல்கிறது.

அர்த்தோவா ஏஷ ஆத்மேனோய பத்னீ.

This article is available in English as well

இது பற்றி ப்ருஹஸ்பதி எழுதிய வியாக்கியானத்தில் (உரையில்) கூறுவார்:-

கணவனில் பாதி மனைவி என்று கருதப்படுகிறது. இதனால் அவன் செய்யும் பாவ, புண்ணியங்களிலும் அவளுக்கு சரிபாதியைப் பங்கிட்டுக் கொள்வாள்.

 

மஹாபாரதமும் மனைவி என்பவள் , கணவனில் சரிபாதி என்று சொல்லும் ஸ்லோகத்தை மோனியர் வில்லியம்ஸ் எடுத்துக்காட்டுகிறார்:-

 

 

மனைவி, மனிதனில் பாதி; கணவனின் உண்மை நண்பன்

அன்புள்ள மனைவி குணம், இன்பம், ப்செல்வம் – ஆகியவற்றின்

ஊற்று; விசுவாசமான மனைவிசொர்க லோகம் புகவும் துணை புரிவாள்

இனிமையாகப் பேசும் மனைவி தனிமைத் துயரைப் போக்குவாள்;

அறிவுரை வழங்குவதில் அவள் தந்தையைப் போன்றவள்

வாழ்க்கை என்னும் வறண்ட வழியில் அவள் ஒரு ஓய்வுவிடுதி!

 

பத்மபுராணம் சொல்லுகிறது:-

 

பதிரேவ ப்ரிய: ஸ்த்ரீணாம், ப்ரஹ்மாதிப்யோபி சர்வச:

ஆத்மானம் ச ஸ்வபர்தார மேக்வபிண்ட மனீஷயா

பர்துராக்ஞாம் வினா நைவ கிஞ்சித் தர்ம சமாசரேத்

 

பொருள்:-

மனைவியின் அன்புக்குப் பாத்திரமானவன் கணவன்

எல்லாக் கடவுளரையும் விட அவளே நெருக்கமனவள்

அவளும், அவள் கணவனும்

உடல் வேறு; உயிர் ஒன்றே!

கணவனின் அனுமதியின்றி

எந்த வழிபாட்டையும் அவள் செய்யக்கூடாது.

beauty-with-puukkuutai

தெய்வப் புலவர் திருவள்ளுவரும் சொல்லுவார்:-

தெய்வந்தொழாஅள் கொழுநந்தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை – குறள் 55

 

பொருள்:-

வேறு எந்தத் தெய்வத்தையும் தொழாது, தன்னைக் கொண்ட கணவனையும் மட்டும் தொழுது, துயில் நீங்கி எழும் மனைவி, பெய் என்று சொன்னால் உடனே அவள் சொற்படி மழை கொட்டும்.

 

இந்துமதத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர தத்துவம் (சிவன் பாதி, உமா பாதி) ஆண்-பெண் சரி நிகர் தத்துவத்தை விளக்க வந்ததே.

 

அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது– என்பதை அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்லவேண்டும்.

 

இந்துமதச் சடங்குகளை மனைவி இல்லாதவர் செய்ய முடியாது. மேலும் கணவனுடன் மனைவியும் நிற்கவோ- உட்காரவோ வேண்டும் அல்லது சடங்குகள நிறைவு பெறாது.

 

பெரும்பாலான இந்துமதப் பெண்கள், குடும்பத்தின் நலன் கருதி ஏதேனும் ஒரு காரணத்துக்காக விரதம் இருக்கிறாள். உப்பில்லாமல், ஒரு நாள் முழுதும் உணவருந்துவாள். சிலசமயம் முழுச் ச்சாப்பாட்டையும் தவிர்ப்பாள்.  இன்னும் சிலர் வேறு சில நேர்த்திக் கடன்களை செலுத்துவர். பண்டிகைகளை முறைப்படி கடைப்பிடிக்க பெண் இனமே உதவுகிறது. குழந்தைகளை மதாசாரப்படி வளர்ப்பவளும் தாய்தான்.

india-anni-sarojini-6

காந்திஜியின் அன்னையும் சிவாஜியின் அன்னையும் சொன்ன கதைகள்ள்தான் அவர்களைப் பெருந்தலைவர்கள் ஆக்கியது.

 

உபநிஷத (கி.மு.850) காலப் பெண்கள், ஞான முதிர்ச்சியில் ஆண்களையும் மிதமிஞ்சினர். மைத்ரேயி, கார்கி வாசக்னவி, காத்யாயனி போன்ற பெண்கள், ஆன்மீக வரலாற்றில் அழியா இடம் பெற்றுவிட்டனர்.

 

mdu-girls

–subham–

வள்ளுவரும் வானவரும்! (Post No.3260)

hy14-pushkar_2472025g-jpghindu-2

Written by S. NAGARAJAN

Date: 17 October 2016

Time uploaded in London: 5-21 AM

Post No.3260

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

திருக்குறளில் தேவர் உலகம்

வள்ளுவரும் வானவரும்!

By ச.நாகராஜன்

 

 

 img_5160-2

பாரத நாடெங்கும் தொன்று தொட்டு இருந்து வ்ரும் பண்பாடு ஒன்றே தான்!

 

மிகப் பழைய சங்க இலக்கிய  நூலான திருக்குறளில் இந்தப் பண்பாட்டை விளக்கும் நூற்றுக் கணக்கான குறட்பாக்களைக் காணலாம்.

 

தேவர் அல்லது வானவரைப் பற்றிய ஏராளமான செய்திகளை பாரத நாடெங்கும் உள்ள மக்கள் அறிவர். ஹிந்துப் பண்பாட்டை விளக்கும் ஏராளமான கதைகளும் அதைச் சார்ந்த சடங்குகளும், விழாக்களும், நம்பிக்கைகளும் தொன்மங்களும் வான உலகில் –விண்ணுலகில் – இருக்கும் வானவரைச் சார்ந்தே உள்ளன.

 

 

திருக்குறளை இயற்றிய வள்ளுவருக்கே தேவர் என்ற பெயரும் உண்டு. அவருக்குரிய பத்துப் பெயர்களும் அவரது உயரிய பண்பையும் அருமையையும் எண்ணி, போற்றித் தரப்பட்டு வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன.

 

 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்                   

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை                        

 திருவாசகமும் திருமூலர் சொல்லும்                        

ஒருவா சகமென் றுணர் 

 

–என்ற ஔவையாரின் பாடலில் தமிழ்ம்றையும் நான்மறையும் ஒன்றே என்று அறுதியிட்டு உறுதி கூறப்படுகிறது!

 

 img_5163-2

இனி, வள்ளுவரின் கிண்டல் குறள்கள் அவரது அரிய மேதைத் தனமையையும் அதில் இழைந்து ஊடாடி விளங்கும் நகைச்சுவையையும் காட்டுவன.

 

 

இந்த நகைச்சுவைக் குறள்களில் முக்கியமான குறள் ஒன்று தேவர் குறள்.

 

 

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுகலான்        –  குறள் 1073

 

“தேவர் அனையர் கயவர்”

தேவரும் கயவரும் ஒன்று போலத் தான் என்று வள்ளுவர் கூறியதைக் கேட்டவுடன் திடுக்கிடுகிறோம். தூக்கிவாரிப் போடுகிறது.

 

 

ஆனால் அவர் அடுத்து அதற்கான காரணத்தை விளக்கும் போது சிரிக்கிறோம். இருவரும் தம் மனம் போன போக்கிலேயே அனைத்தையும் செய்யும் தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் தேவர் அனையர் கயவர்!!

வையத்துள் புண்ணியச் செயல்களைச் செய்பவரே வானுறையும் பேறு பெற்றவர்கள். அவர்கள் மனம் போன போக்கில் நல்லதையே செய்வர்.

 

 img_5164-2

ஆனால் பூமியில் மனம் போன போக்கைச் செய்யும் கயவர் தீயவற்றையே செய்வர். உயர்ச்சியும் இழிவுமாகிய காரண வேறுபாட்டால் நகைச்சுவையை ஊட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் வள்ளுவர்.

நகைச்சுவையுடன் கூடிய கருத்தால் மிகவும் ஈர்க்கப்படுகிறோம்.

 

அடுத்து வான் நாட்டை புத்தேள் நாடு என்றும் வானவரை புத்தேளிர் என்றும் வள்ளுவர் கூறி இருக்கும் குறட்பாக்கள் சுவையானவை.

 

 

இப்படி வரும் ஆறு குறள்களைப் பார்ப்போம்.

 

 

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற              – குறள் 213

 

பிறர்க்கு உதவி செய்யும் நல்ல பிரதிபலன் பாராத உதவி செய்யும் தன்மை தேவர் உலகத்திலும் பூவுலகத்திலும் காண்பது அரிதாகும்.

 

ஈவாரும் இல்லை, ஏற்பாரும் இல்லை என்பதால் தேவருலகில் ஒப்புரவு அரிது. யாவருக்கும் ஒப்பது இது போல வேறு ஒன்று இல்லாமையால் பூவுலகில் இது அரிது.

 img_3203

 

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு           – குறள்  234

 

ஒருவன் நிலவுலகில் பொன்றாத புகழைச் செய்வானாயின் வான் உலகம் அவனை வரவேற்குமேயல்லால் தன்னை எய்தி இருக்கும் ஞானிகளைப் போற்றாது.         

 

                      

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்                     

தள்ளாது புத்தே ளுலகு                   குறள் 290

 

களவினைச் செய்வார்க்கு உடம்பில் உள்ள உயிர் தவறும். அந்தக் களவினைச் செய்யாதவர்க்கு வானுலகம் வாய்த்தல் தவறாது.

 

 

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று           

இகழ்வார் பின் சென்று நிலை              குறள் 966

 

மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பவர்கள் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை அவனுக்கு இவ்வுலகப் புகழைத் தராது. தேவர் உலகத்திலும் கொண்டு சேர்க்காது. இப்படி அவமதிப்பார் பின் செல்வதால் அவனுக்குப் பின் என்ன தான் பயன்?

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு                              

நீர் இயைந்து அன்னார் அகத்து             குறள் 1323

 

 

நிலத்தில் நீர் கலந்தாற் போல ஒன்று ப்ட்ட நெஞ்சம் உடைய காதலரிடத்தில் ஊடலில் காணப்படுவது போன்ற இன்பம் தேவருலகில் உண்டா?

 

 img_3425

பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்                புத்தேளிர் வாழும் உலகு                   குறள் 58

 

பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுவாராயின் தேவருலகில் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.

 

அடுத்து வரும் மூன்று குறள்களில் அமரர் என்ற வார்த்தையையும், வானவர் என்ற வார்த்தையையும் தேவர் பயன்படுத்துகிறார்.

 

 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை                 

ஆரிருள் உய்த்து விடும்                  குறள் 121

 

ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவர் உலகத்து உய்க்கும். அடங்காமையோ ஆர் இருள் கொண்ட நரகத்தில் செலுத்தும்.

 

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்                         

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு     (குறள் 18)

 

 

வானம் வறண்டு மழை இல்லாது போனால் இவ்வுலகில் வானவர்க்குச் செய்யும் பூஜை, திருவிழா எதுவும் நடைபெறாது.

 

 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து  வானத்தவர்க்கு        (குறள் 86)

 

தேவர்கள் விரும்பி வரவேற்கும் விருந்தினர் யார் தெரியுமா? பூவுலகில் வந்திருந்த விருந்தினரை நன்கு  உபசரித்து அனுப்பி விட்டு அடுத்து வரும் விருந்தினருக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றானே அந்த உத்தமன், அவனைத் தம் விருந்தினராக ஆவலோடு வரவேற்பார்களாம் தேவர்கள்!

 

 brahadeeswar-2

இன்னும் ஒரு குறளில் வானோர்க்கும் மேலான உலகத்தைப் பற்றிப் பேசுகிறார்.

 

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு               

உயர்ந்த உலகம் புகும்           (குறள் 346)

 

 

யான் எனது என்ற மயக்கத்தை அறுப்பார்க்கு வானோரும் எய்தற்கு அரிதான வீட்டுலகம் கிடைக்கும்.

 

தேவர் உலகத்தைச் சேர்ந்தோர் இமைக்க மாட்டார்கள் என்பதை ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லான்              

அமையார்தோள் அஞ்சு பவர்   (குறள்  906)                             

மனைவியின் அழகிய தோளுக்கு அஞ்சி நடக்கின்றவர் தேவரைப் போல இந்த உலகில் வாழ்ந்தாலும் கூட ஆண்மை இல்லாதவரே ஆவர்.

 

 

ஹிந்துக்களின் வேதம், உபநிடதம், புராணம் ஆகியவை கூறும் பெரும்பாலான செய்திகளை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.

 

 

பாரதம் முழுவதற்குமான ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவரே வள்ளுவர் என்பதும் அதைத் தன் குறள் நெடுகிலும் சுட்டிக் காட்டுகிறார் என்பதற்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்.

 

கடைசியாக் ஒன்று. இமையவர் கோமானான இந்திரனையும் அவர் விட்டு விடவில்லை.

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்               

இந்திரனே சாலுங் கரி   (குறள் 25)

 

ஐந்து புலன்களின் ஆசையை ஒழித்தவர்க்குச் சான்று கூற விசும்புளார் கோமானான இந்திரனே வருவான்

 andal-krishnan

ஆஹா, பதிமூன்று குறள்களில் பண்பாட்டைத் தெள்ளென விளக்கும அனைத்தையும் வள்ளுவர் தரும் பாங்கிற்கு ஈடு இணை உண்டோ!

 

 

ஏராளமான செய்திகளைப் பெறுகிறோம்.

 

வானவர் உலகம் உண்டு.

 

அதற்கும்  மேலான உலகமும் உண்டு.

 

வானவர்க்கு பூவுலகினர் பூஜையும் திருவிழாவும் எடுப்பர். மழை இல்லையேல் அவை நடைபெறா. (இந்திரவிழா உள்ளிட்ட பழைய செய்திகளையும், மழை தரும் பொறுப்பு இந்திரனுக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.)

 

 

அடக்கம் தேவ லோகத்தையும் அடங்காமை நரகத்தையும் தரும். மனைவி கணவனைப் போற்றல் வேண்டும். அது அரிய வானுலக வரத்தைத் தரும்.

 

தாம்பத்ய இன்ப உறவில் ஏற்படும் இன்பம் தேவலோகத்திலும் கிடைக்காது.

 

புகழுடைச் செயல்களைப் புரிபவன் பொன்னுலகம் போவான்.

களவுத் தொழில் செய்தலும், தன்னை அவமதிப்போரின் பின்னால் செல்லுதலும் தேவர் உலகை அடைய முடியாமல் தடுக்கும் தீமைகளாகும்

 

.

இன்னும் தேவாமிர்தத்தைச் சொல்லாமல் வள்ளுவரால் சும்மா இருக்க முடியுமா?

 

நான்கு குறள்களில் சாவா மருந்தான தேவாமிர்தத்தையும் குறிப்பிட்டு விடுகிறார்.

 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று     – (குறள் 11)

 

 ambaji-temple-gujarat

மழையை உலகம் அமிழ்தம் எனப் போற்றுவதை இங்கு வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்            (குறள் 64)

 

தன் குழந்தையின் சிறுகை அளாவிய கூழை விட தேவாமிர்தம் சிறந்ததா, என்ன? இல்லை என்று ஓங்கிச் சொல்வோம் நாம். உலகியல்பு இது!

 

 

நம் முகத்தைச் சுளிக்க வைக்கும் ஒரு உவமையையும் அவர் தந்து விடுகிறார்.ஏனெனில் அப்படிச் சொன்னால் தான் அவர் சொல்ல வரும் பொருளுக்கு வலிமை சேரும்! அதனால் தான்!

நல்ல கற்றறிந்தோர் கூடிப் பேசும் அவையில் ஒன்றுமே படிக்காத ஒரு  முட்டாள் உளற ஆரம்பித்தால், ஐயகோ, அது தூய்மை இல்லாத முற்றத்தில் படைக்கப்பட்ட நல்ல அமிர்ததிற்கு ஒப்பாகும். (‘அசுத்தம்’ உள்ள இலையில் அமிழ்தம் வைக்கப்பட்டால்….?!)

 

அங்கணத்துள் உக்க அமிழ்தத்தால் தங்கணத்தார்          அல்லார் முன் கோட்டி கொளல்        (குறள் 720)

 

இன்னும் ஒரு குறள்- தலைவியின் தோள் அமிர்தத்தினால் ஆனது!

 

 

உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு          

அமிழ்தின் இயன்றன தோள்           (குறள் 1106) 

 

தலைவியின் தோளைத் தீண்டும் போதெல்லாம் (போக இருக்கும்) உயிர் தளிர்ப்பதால் இவள் தோள் அமிர்தத்தினால் செய்யப்பட்

டிருக்க வேண்டும்!

 

எப்படி இருக்கிறது நான்கு குறள்கள்.

 

1330 குறள்களில் சுமார் 17 குறள்களில் தேவலோகத்தைக் காட்டுகிறார் தேவர்! அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் மேலாக!

 

இதுவே அவர் தன் கருத்துக்களுக்கு வானுலகைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

 ganga-shiva

என்ன இருந்தாலும் அவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துள் சேர்ந்தவர் தானே

‘தனது இனத்தை’ விட்டுக் கொடுப்பாரா என்ன?

 

கருத்துக்களைப் பெற்று மகிழ்கிறோம். அமிழ்தம் உண்டது போல இருக்கிறது!

**********

 

 

 

ஒரே துறையில் மானும் புலியும்: கம்பன் தரும் அதிசயத் தகவல் (Post No.3180)

animal-water-2

Written by London swaminathan

Date: 23 September 2016

Time uploaded in London: 8-43 AM

Post No.3180

Pictures are taken from various sources; thanks.

 

நல்ல மன்னர்கள் ஆட்சி செய்தால் அங்கு இயற்கையாகவே பகைமை கொண்ட கீரியும் பாம்பும், பூனையும் எலியும், புலியும் மானும் கூடப் பகைமையை விட்டு நட்பு பராட்டுமாம்.

கம்பனும் காளிதாசனும் தரும் தகவல் இது:-

 

இதோ கம்பன் பாடல்:

கருங்கடல் தொட்டனர் கங்கை தந்தனர்

பெரும்புலி மானொடு  புனலும் ஊட்டினர்

பெருந்தகை என் குலத்து அரசர் பின் ஒரு

திருந்திழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்

–கலன் காண் படலம், கிஷ்ககிந்தா காண்டம்

 

பொருள்:-

பெருமையுடைய எனது முன்னோர்கள் கடலைத் தோண்டினர் (சகரர் கதை); மேலுலகதில் இருந்த கங்கையை பூவுலகுக்கு கொண்டு வந்தனர் (Civil Engineer பொறியியல் வல்லுனன் பகீரதன் கங்கையைத் திருப்பிவிட்ட புராணக் கதை); போர் செய்யும் இயல்புடைய புலியையும் யானையையும் ஒரே துறையில் நீர் அருந்துமாறு செய்தனர் (தர்ம ஆட்சி). அவர்கள் குலத்தில் உதித்த நானோ மனைவியின் துயரைத் தீர்க்கும் தவத்தைச் செய்யாதவனாக உள்ளேன் (சீதை பற்றி ராமன் புலம்பல்)

–கிட்கிந்தா காண்டம்

 

animals-water-1

வேறொரு இடத்தில்

புலிப்போத்தும் புல் வாயும் ஒரு துறையில் நீருண்ண

உலகாண்டோன் ஒருவன் — என்று பாடியுள்ளான்

 

வள்ளுவனோ இதற்கும் ஒரு படி மேல் சென்று

தர்ம ஆட்சி நடத்தும் மன்னன் நாட்டில் பருவமழை கொட்டும்; விளைச்சல் பெருகும் என்பான் (குறள் 545); கொடுங்கோலன் நாட்டில் மழையும் பெய்யாது; பசு மாடும் பால் தராது; பார்ப்பனர்களுக்கு வேதங்கள் மறந்து போகும் என்பான் (குறள் 559, 560)

 

 

காளிதாசனும் இதே கருத்தை முன்வைக்கிறான், ரகு வம்சத்தின் ஆறாவது சர்கத்தில் 46 ஆம் பாடலில் ஒரு உவமை வருகிறது.முனிவர்களின் ஆஸ்ரமத்தில்  இயற்கையிலேயே பகைமை உடைய மிருகங்களும் எப்படி பகைமை பாராட்டாது நட்புறவு கொள்ளுமோ அதுபோல……………………………..

முனிவரின் ஆஸ்ரமத்தில் புலியும் மானும் யானையும் சிங்கமும் போன்றை ஒன்று தாக்காமல் அமைதியாக வரும் என்பது இதன் பொருள். அது போல நீப மன்னனின் ஆட்சியும் குண நலன்களும் இருந்தன என்பான் காளிதாசன்.

 

மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் சிவபெருமானின் கருணை பற்றிப் பேசுகையில் “புலி முலை புல்வாய்க்கு அருளினை போற்றி” என்று விதந்தோதுவார்.

 

animals-3

இளங்கோ தரும் அதிசயத் தகவல்

 

நெஞ்சையள்ளும் சிலப்பதிகார காவியத்தில் பாண்டிய நாட்டில் நீதியும் அமைதியும் நிலவுவதால் இடி, மின்னல் கூட மக்கள் மீது விழாது; புலியும் மானும் சண்டை போடாது; முதலைகள் தாக்காது; துர் தேவதைகள் ம னிதனைப் பிடிக்காது; பாம்பும் கடிக்காது; கரடி கூட புற்றுமண்ணைத் தோண்டி கறையான் எறும்புகளைச் சாப்பிடா து. ஏனெனில் அங்கே தர்ம ஆட்சி நடக்கிறது. பகல் நேரத்திலு ம் பெண்ணும் ஆணும் போவது போல இரவில் பவுர்ணமி வெளிச்சத்திலும் போகலாம்; ஒரு பயமும் இல்லை– என்று இளங்கோ அடிகள் இயம்புவார்.

கோள்வல் உளிஒயமும் கொடும்புற்று அகழா;

வாள்வரி வேங்கையும் மன் கணம் மறலா;

அரவும், சூரும், இரைதேர் முதலையும்,

உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா —

செங்கோல் தென்னவர் காக்கும் நாடு

 

—புறஞ்சேரி இறுத்த காதை, சிலப்பதிகாரம்

 

புறநானூற்றில் புலியும் மானும்

புறநானூற்றில் ஒரு அரிய செய்தி வருகிறது. ஒரு பெண் மானை ஒரு புலி கொன்றுவிட்டது. அதனுடன் ஒரு குட்டியும் இருந்தது. அந்தக் குட்டியை கொன்று சாப்பிடவில்லை. அதற்குக் காட்டிலுள்ள ஒரு முதிய காட்டுப்பசு பால் கொடுத்ததாம். தாயன்பு என்பது இந்த மிருகம், அந்த மிருகம் என்ற வரையரைக்கு எல்லாம் அப்பாற்பட்டது:-

புலிப்பாற்பட்ட ஆமான் குழவிக்குச்

சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்

—புறநானூறு 323

 

–subham–

 

 

 

 

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ: கம்பன் (Post No.3137)

sugreeva

Written by London Swaminathan

 

Date: 9 September 2016

 

Time uploaded in London: 9-04 AM

 

 

Post No.3137

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உலகம் முழுதும் அகதிகள் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. ஆயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்று அடைக்கலம் கோருகின்றனர். அவர்களுக்குப் பல நாடுகள் அடைக்கலம் தருகின்றன. இவையெல்லாம் சரணாகதி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கோட்பாடு. யாராவது ஒருவர் உன்னைச் சரண் அடைகிறேன் என்று மற்றவர் காலில் விழுந்துவிட்டால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்து தர்மக் கோட்பாடு. ராமாயணத்தில் மிகப் பெரிய அளவுக்குப் பேசப்படுவது சரணாகதி தத்துவம் ஆகும். இது ராமாயணத்தின் பிற்பகுதியில் விபிஷணன் சரண் அடையும்போது பெருமளவில் விவாதிக்கப்படுகிறது; விவரிக்கப் படுகிறது. அதற்கெல்லாம் பீடிகை போடும்படியாக கிஷ்கிந்தா காண்டத்திலேயே கம்பன் சில பொன்மொழிகளை உதிர்க்கிறான். இதோ இரண்டு பொன் மொழிகள்:–

 

ஒடுங்கல் இல்  உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி

தொடங்கின மற்றும் முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ

 

பொருள்:-

பரந்த இந்த உலகத்தில் உயிர்கள் எல்லாம் விரும்பியவற்றை உதவி, வேள்வி, தவம் முதலியவற்றை நிறைவேற்றும்படி மேலோர் செய்வர் அல்லவா? அததகைய அறங்களுள், எமன் போன்ற எதிரிக்குப் பயந்து நம்மிடம் சரண் அடைந்தவர்க்கு அஞ்சாதே என்று அருள் காட்டுவதை விடப் பெரிய அறம்/தர்மம் வேறு ஏதாவது உளதோ?

 

இது யார் சொன்னது? எங்கே சொன்னது?

 

ராம லெட்சுமணர்களைச் சந்தித்த அனுமன் சுக்ரீவனுக்கு, வாலியினால் ஏற்பட்ட துனபங்களை விவரித்துவிட்டு சரண் அடைந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது (இந்து) தர்மம் அல்லவா? என்கிறான்.

28_24_kishkinta_vali-fight-ground

சுக்ரீவன் இதைத் தன் வாயாலேயே சொல்லி காலில் விழும்  ஒரு பாடலும் வருகிறது:–

 

முரணுடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வந்தேனை

இருள்நிலைப் புறத்தின் காறும் உலகு எங்கும் தொடர இக்குன்று

அரண் அடைத்து ஆகி உய்ந்தேன்  ஆர் உயிர் துறக்கலாற்றேன்

சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்

பொருள்:-

என் அண்ணனான வாலி, தம்பியாகிய என்னை அடிப்பதற்காக ஓங்கிய கைகளுடன் இவ்வுலகத்துக்கு அப்பாலும் எல்லா உலகங்களிலும் என்னைத் துரத்தி வந்தான். இம்மலையே பாதுகாப்பான இடம் என்பதால் இங்கே வந்தேன்; உயிரை விடவும் மனம் இல்லை; உன்னை அடைக்கலம் அடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குக் கடமையாகும் – என்று சொன்னான் சுக்ரீவன்

 

என்னைத் தாங்குதல் தருமம் என்றான் என்ற வாக்கியத்தில்தான் இந்து தர்மக் கோட்பாடு பளிச்சிடுகிறது.

 

இன்று உலகம் முழுதும் அகதிகள் வாழ வழிவகுத்தது இந்து மதம். சுக்ரீவன், வாலி என்பவர்கள் ஓரிரு தனி நபர்கள். ஆயினும் போரில் சரண் அடைந்தவர்களையும் காப்பாற்றுவது நமது இதிஹாச புராணங்களில் உள்ளது. சரியான ஆயுதம் இல்லாதவர்ளையும், ஆயுதமே வைத்திராதவர்களையும் தாக்கக்கூடாது என்பதும் தெளிவாககக்  கூறப்பட்டுள்ளது.

 

புருஷோத்தமன் (போரஸ்) என்ற மன்னனை அலெக்ஸாண்டர் வென்று விட்டான். உனக்கு என்ன வேண்டும்? உயிர்ப்பிச்சை வேண்டுமா? இவ்வளவு சிறிய மன்னனாலும் என்னையே திணறடித்துவீடாய்! — என்றான். அவனோ சிறிதும் அஞ்சாமல் என்னை மன்னன் போலவே நடத்த வேண்டும் என்றான். அதன்படியே செய்தான் அலெக்ஸாண்டர். இது தர்மம் என்பதால் அப்படிக்கேட்டான் புருஷோத்தமன (போரஸ்). இந்துமதத்தின் பெருமையையும் பாரதத்தின் பெருமையையும் அறிந்து யோகிகளைச் சந்திக்கவே இந்தியாவுக்கு வந்தவன் அலெக்ஸாண்டர் என்பதால் உடனே அவனை மன்னன் போலக் கருதி அவன் ராஜ்யத்தை அவனிடமே ஒப்படைத்தான் என்பதை நாம் அறிவோம்.

 

வாழ்க சரணாகதி தத்துவம்!! வாழ்க அகதிகள்!!

 

 

 

ஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல் (Post No.3114)

talking 3

Written by London Swaminathan

 

Date: 2 September 2016

 

Time uploaded in London: 13-33

 

Post No.3114

 

Pictures are taken from various sources; thanks.

 

 

நாவடக்கம் பற்றி இந்தியப் புலவர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழ்ப் புலவர்கள், சொன்ன அளவுக்கு வேறு யாரும் சொல்லி இருப்பார்களா என்பது சந்தேகமே. தமிழர்கள் அதிகம் பேசக்கூடியர்கள், அளவில்லாமல் — அளவு தெரியாமல் —பேசக்கூடியவர்கள் என்பது வள்ளுவனுக்கும் அவ் வையாருக்கும் தெரிந்திருக்கிறது. ஆகையால் அவர்களும் எப்படிப் பேச வேண்டும்? எப்படிப் பேசக்கூடாது? என்பதை பல வகைகளில் சொல்லிவிட்டனர்.

 

 

 

முதலில் ஒரு சம்ஸ்கிருதப் புலவர் சொன்னதைப் பார்ப்போம். அதை அவ்வை, வள்ளுவன் சொன்னதோடு ஒப்பிட்டு மகிழ்வோம்:

 

ஜிஹ்வாக்ரே வர்ததே லக்ஷ்மீர் ஜிஹ்வாக்ரே மித்ர பாந்தவா:

ஜிஹ்வாக்ரே பந்தனப் ப்ராப்தி: ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம்

 

 

பொருள்:

நாக்கின் நுனியில்தான் லட்சுமி வசிக்கிறாள்;  (செல்வம் என்பது நீங்கள் பேசும் விதத்தில்தான் இருக்கிறது.)

நாக்கின் நுனியில்தான் நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள்; (அதாவது நீங்கள் இனிய சொல் சொல்லாமல், கடுஞ்சொற்களைப் பேசினால், அதோடு நண்பர்கள், சொந்தக்காரர்களின் கூடாரம் காலியாகிவிடும்).

 

நாக்கின் நுனியில்தான் சிறைச் சாலையும் இருக்கிறது. (எத்தனை பேர் அவதூறு வழக்குகளினாலும், பொய் சொன்னதாலும், சிறைச் சாலைக்குப் போனார்கள் என்பதை பத்திரிக்கைகளில் படிக்கிறாம்; நுணலும் தன் வாயால் கெடும் என்பது தமிழ்ப் பழமொழி; அதாவது தவளைகள் சப்தம் போட்டு, தான் இருக்கும் இடத்தைக் காட்டுவதால் பாம்புக்கு இரையாகின்றன).

நாவின் நுனியில்தான் மரணம் நிற்கிறது என்பது ஸ்லோகத்தின் கடைசி வரி. மேற்கூறிய மூன்றில் எதுவும் மரணத்தையும் சம்பவிக்கலாம்.

talking 4

இதனால்தான்

ஞயம்பட உரை,

வெட்டெனப் பேசேல்,

 பழிப்பன பகரேல்,

பிழைபடச் சொல்லேல்,

மிகைபடச் சொல்லேல்

வஞ்சகம் பேசேல்

கடிவதுமற

சுளிக்கச் சொல்லேல்

நொய்யவுரையேல்

மொழிவதறமொழி

 

என்றெலாம் அவ்வையார் கதறுகிறார்.

 

வள்ளுவனோ “யாகாவாராயினும் நா காக்க” (127) என்கிறான். இனிய சொல் இருக்கும்போது சுடு சொற்களைப் பயிலுவது, பழம் இருக்கையில் காயை  சாப்பிட்டதற்கு சமம் என்கிறான்

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (100)

 

வள்ளுவன்,

இனியவை கூறல்

புறங்கூறாமை

பயனில சொல்லாமை

சொல்வன்மை

என்று 4 அதிகாரங்களில் 40 திருக்குறள்களில் இதை வலியுறுத்திவிட்டான்.

 

 

Yelling

இறுதியாக மனு சொன்னதையும் பார்ப்போம்:-

 

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம்

 

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாதேஷ தர்ம சநாதன: — மனுஸ்ம்ருதி 4-138

 

 

 

உண்மையே பேசு,

இனிமையே பேசு,

இனிமையற்றதை, உண்மையே ஆனாலும், சொல்லாதே.

அதற்காக இனியது என்று கருதி பொய் பேசாதே.

 

இதுவே எக்காலத்துக்கும் பொருந்தும் சநாதன தர்மம் (இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு) – மனுஸ்மிருதி 4-138

 

–subham–

பேடி/அலி: வள்ளுவனும் காளிதாசனும் சொல்லும் உவமை (Post No.3112)

valluvar-4

Written by London Swaminathan

 

Date: 2 September 2016

 

Time uploaded in London: 6-33 AM

 

Post No.3112

 

 

இந்தியாவின் இரு பெரும் புலவர்கள் ஒரே உவமையைப் பயன் படுத்துவதை ஒப்பிட்டுப் பார்க்கையில் இலக்கிய இன்பம் பொங்கும். நாம் கற்றதை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும்.

 

ஆண்மை இல்லாதவனை அலி அல்லது பேடி என்பர்; உடலில் குறை இருந்தாலும் சரி, மனதில் வீரமினமை இருந்தாலும் பேடி -தான்.

 

பேடித்தனத்தை அடையாதே (க்லைப்யம் மாஸ்மகம:– பகவத் கீதை 2-3) என்று அர்ஜுனனை கிருஷ்ணன் கண்டிப்பதையும் நாம் அறிவோம்.

 

பெண்ணாகவும் ஆணாகவும் விளங்கிய சிகண்டியுடன் சண்டை போட மறுத்து, உயிர் துறந்த மாபாரதப் பிதாமஹர் பீஷ்மரை நாம் அறிவோம்.

 

வள்ளுவனுக்கும், அவனுக்கு முன் வாழ்ந்த காளிதாசனுக்கும் மஹாபாரதக் கதை நினைவுக்கு வந்தது போலும்!

 

இதோ காளிதாசன் கவிதை:–

 

கதஸ்ரியம் வைரி வராபிபூதாம்

தசாம் சுதீனாமபிதோ ததானாம்

நாரீமவீராமிவ தாமவேக்ஷ்ய ச

வாடமந்த: கருணாபரோபூத்

–குமார சம்பவம் 13-36

 

இந்திரனின் தலைநகரான அமராவதிக்குள் குமாரன் (முருகன்) புகுந்தபோது அது பேடியை மணந்த அழகி போலப் பொலிவிழந்து காணப்பட்டது. உடனே முருகப்பெருமானுக்கு கருணை பிறந்தது.

 

வள்ளுவன் சொல்லுவான்:–

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று — திருக்குறள் 402

 

அதாவது, படிக்காத ஒருவன் அறிஞர் சபையில் பேச முற்படுவது, இயல்பாகவே தனங்கள் இரண்டும் இல்லாத பெண் ஒருத்தி காம சுகம் அனுபவிக்க விரும்பியது போல் ஆகும்.

 

இதை விட பேடி என்ற சொல் லையே வேறு இரண்டு சொற்களிலும் காணலாம்:–

 

பகையகத்து பேடி கை வாள் ஒள்வாள் அவையகத்து

அஞ்சும் அவன் கற்ற நூல்– திருக்குறள் 727

 

சபையில் பேச அஞ்சும் ஒருவன், போர்க்களத்தில் பேடியின் கையில் கிடைத்த வாள் போன்றதே.

 

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை

வாளாண்மை போலக் கெடும்– திருக்குறள் 614

 

முயற்சி இல்லாத ஒருவன் பிறருக்கு உதவ முன் வருவது பேடியின் கையில் கிடைத்த வாள் போன்றதே (பயனற்றது).

 

நல்ல உவமை! வள்ளுவன் வாய்மொழி வளர்க! காளி புகழ் ஓங்குக!!

 

-Subam-

 

கெட்ட நண்பர்கள் இருக்கையில் பாம்புகள் எதற்கு? (Post No.3109)

¿Quién? ¿Cuándo? ¿Por que? ¿Que? ¿Como? ¿Donde?

Translated by London Swaminathan

 

Date: 1st September 2016

 

Time uploaded in London:5-20 AM

 

Post No.3109

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

(Posted in English yesterday)

சம்ஸ்கிருதத்தில் இரண்டே வரிகளில் , திருக்குறள் போல,  அருமையான கருத்துகளைச் சொல்லி விடுவர். அது போன்ற 4 வட மொழி ஸ்லோகங்கள் “ஏன்? ஏன்?”  என்று முடியும். ஆகையால் ஸ்லோகத்தில் எதுகை மோனையும் இருக்கும்.

 

இதோ முதலில் கருத்து; பின்னர் ஸ்லோகம்!!

 

பொறுமை உள்ளவனுக்கு கவசம் ஏன்?

கோபம் உள்ளவனுக்கு எதிரி ஏன்?

உறவினர் உள்ளவனுக்கு நெருப்பு ஏன்?

நண்பன் இருந்தால் மருந்து ஏன்?

 

கெட்டவர் சேர்க்கை இருக்கும்போது பாம்பு ஏன்?

படிப்பாளிக்கு பணம் ஏன்?

பணிவு உடையோருக்கு ஆபரணம் ஏன்?

நல்ல விவேகம் உள்ளவனுக்கு ராஜ்யம் ஏன்?

 

 

பேராசை இருந்தால் வேறு கெட்ட குணம் அவசியமா?

கோட் சொல்லும் ஆளுக்கு வேறு பாவம் அவசியமா?

 

உண்மை இருக்குமிடத்தில் வேறு தவம் அவசியமா?

சுத்த மனம் இருந்தால் தீர்த்த யாத்திரை அவசியமா?

 

ஒற்றுமை உள்ள இடத்தில் வேறு பலம் அவசியமா?

புகழ் இருக்குமிடத்தில் வேறு அலங்காரம் அவசியமா?

நல்ல கல்வி இருந்தால், செல்வம் அவசியமா?

கெட்ட புகார் இருந்தால், மரணமும் அவசியமா?

 

Many People Thinking of Questions

சாந்திஸ்சேத் கவசேன கிம், கிம் அரிபி: க்ரோதோ அஸ்தி, சேத் தேஹினாம்

ஞாதிஸ்சேத் அனலேன கிம், யதிசுஹ்ருத் திவ்ய ஔஷதை: கிம் பலம்

 

 

கிம் சர்பைர் யதி துர்ஜனா: கிம் தனை வித்யா  அனவத்யா யதி

வ்ரீடா சேத்கிமு பூஷணை:, சுகவிதா யத்யஸ்தி  ராஜ்யேன கிம்

 

லோபஸ்சேத் குணேன கிம், பிசுனதா யத்யஸ்தி கிம் பாதகை:

சத்யம் சாத் தபஸா ச கிம் சுசிமனோ யத்யஸ்தி தீர்தேன  கிம்

 

சௌஜன்யம் யதி கிம் பலேன மஹிமா யத்யஸ்தி கிம் மண்டனை:

சத்வித்யா யதி கிம் தனைர் பயசோ யத்யஸ்தி கிம் ம்ருத்யுனா

 

–SUBHAM–

ஆசை பற்றி 30 பழமொழிகள்; செப்டம்பர் 2016 காலண்டர் (Post No.3101)

ganapathy on baby

Compiled by London Swaminathan

 

Date: 29 August 2016

 

Time uploaded in London: 5-10 AM

 

Post No.3101

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

செப்டம்பர் மாத (துன்முகி ஆவணி– புரட்டாசி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– செப்டம்பர் 4-சாமவேத உபாகர்மா, 5- விநாயக சதுர்த்தி, 13- ஓணம், பக்ரீத், 17– மாளய பட்சம் ஆரம்பம், 30- மாளய அமாவாசை;

 

அமாவாசை – 1, 30

பௌர்ணமி – 16

ஏகாதசி – 12/13, 26/27

முகூர்த்த நாட்கள் – 4,5,8, 14, 15

chacolate ganapathy

செப்டம்பர் 1 வியாழக்கிழமை

 

ஆசை காரணமாக எதுவும் செய்யக்கூடாதுதான்; ஆனால் உலகில் ஆசை இல்லாத செயல் எதுவுமில்லை; வேதம்  கற்பதும், சடங்குகளைச் செய்வதும்    ஆசையினாலன்றோ! -மனு 2-2

செப்டம்பர் 2 வெள்ளிக்கிழமை

ஆசை இல்லமல் ஒரு மனிதனும் ஒரு செயலையும் செய்வதில்லை; ஒரு ஆசையின் தூண்டுதலினால், ஆசை நிறைவேறவே அவன் எதையும் செய்கிறான்-மனு 2-4

 

செப்டம்பர் 3 சனிக்கிழமை

யோகத்தை அடைந்தவன் சாந்தியை அடைகிறான்; யோகம் கைகூடாதவன், ஆசையின் தூண்டுதலினால், பயனில் பற்றுக்கொண்டு, கட்டப்பட்டுவிடுகிறான் – பகவத் கீதை 5-12

 

செப்டம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை

நிலத்தில் விளையும் களை, பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள், மனிதனின் குணநலன்களைப் பாதிக்கின்றன.- தம்மபதம் 359

 

செப்டம்பர் 5 திங்கட்கிழமை

நான் எல்லாவற்றையும் வென்றுவிட்டேன்; எனக்கு எல்லாம் தெரியும்; என் வாழ்க்கை தூய்மையானது; நான் அனைத்தையும் துறந்தவன்; நான் ஆசையிலிருந்து விடுபட்டவன்; யாரை குரு என்று நான் அழைப்பேன்? யாருக்கு நான் உபதேசம் செய்வேன்? –தம்மபதம் 353; புத்தர் சொன்னது.

 

ganesh manal

செப்டம்பர் 6 செவ்வாய்க் கிழமை

ஆசைக்கு அடிமையானோர், ஆசை வெள்ளத்தில் சிக்குகின்றனர்; சிலந்தி தான் பின்னிய வலையிலேயே கட்டுப்பட்டிருப்பதைப்போல –தம்மபதம் 347

 

செப்டம்பர் 7 புதன் கிழமை

ஒரு மரத்தை வெட்டினாலும் அதன் வேர்கள் சேதமாகாவிட்டால் அது தழைத்தோங்கும்; அதுபோல ஆசை வேர்கள் அறுபடாதவரை, துன்பம் தழைத்தோங்கும்- தம்மபதம் 338

 

செப்டம்பர் 8 வியாழக்கிழமை

ஒருவனை ஆசைகள் சூழுமானால், அவன் “பிரானா” கொடி வளருவதைப்போல, துன்பங்களால் சூழப்படுவாந்- தம்மபதம் 335

செப்டம்பர் 9 வெள்ளிக்கிழமை

உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337

செப்டம்பர் 10 சனிக்கிழமை

ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ! (4)

பொருள்:– பெரிய புனிதமான திருப் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிப்பது போல, குற்றமற்ற, வீரம் மிக்க ராமன் கதையை சொல்லவேண்டும் என்ற ஆசையால் நான் சொல்கிறேன்.

 

ganesh yellow gem

செப்டம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை

ஆசை அறுபது நாட்கள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி– தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 12 திங்கட்கிழமை

ஆசை அவள் மேலே, ஆதரவு பாய் மேலே –தமிழ் பழமொழி

செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை

ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அமிசை (அதிருஷ்டம்) இருக்கிறது கழுதை மேய்க்க –தமிழ் பழமொழி

செப்டம்பர் 14 புதன் கிழமை

மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை – தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 15 வியாழக்கிழமை

ஆசை காட்டி மோசம் செய்கிறதா? –தமிழ் பழமொழி

 

ganesh rose

செப்டம்பர் 16 வெள்ளிக்கிழமை

ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணும் –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 17 சனிக்கிழமை

ஆசை பெரிதோ, மலை பெரிதோ? –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை

ஆசைப்பட்டு மோசம் போகாதே — தமிழ் பழமொழி

செப்டம்பர் 19 திங்கட்கிழமை

ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று –தமிழ் பழமொழி

செப்டம்பர் 20 செவ்வாய்க் கிழமை

ஆசையாய் மச்சான் என்றாளாம்; “அடி சிறுக்கி” என்று அறைந்தானாம் –தமிழ் பழமொழி

 

ganesh procession

செப்டம்பர் 21 புதன் கிழமை

ஆசை வெட்கம் அறியாது — தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 22 வியாழக்கிழமை

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றல்லார்

அவம்செய்வார் ஆசை உட்பட்டு – குறள் 266

 

செப்டம்பர் 24 சனிக்கிழமை

“ஆசா லோகஸ்ய ஜீவனம்”- ஆசையே உலகிலுள்ள ஜீவன்கள் வாழ மூல காரணம் — சம்ஸ்கிருத பழமொழி

செப்டம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை

“ஆசாவதிம் கோ கத:?” ஆசைக்கடலின் கரையைக் கண்டவன் எவன்?

 

chennai ganesh motorcycle

செப்டம்பர் 26 திங்கட்கிழமை

“ஆசா துக்கஸ்ய காரணம்” – ஆசையே துன்பத்துக்கு காரணம்

செப்டம்பர் 27 செவ்வாய்க் கிழமை

“ஆசாபரே ந தைர்யம்” — ஆசை வந்துவிட்டால்; பொறுமை பறந்தோடிப் போகும்.

 

செப்டம்பர் 28 புதன் கிழமை

“கால: க்ரீடதி, கச்சத் ஆயு:, தத் அபி ந முஞ்சத் ஆசாவாயு:” — மோஹமுத்கரம் ( காலம் நம்முடன் விளையாடுகிறது; ஆயுளோ தேய்கிறது; ஆனால் ஆசையின் பிடிப்பு மட்டும் தளர மறுக்கிறது

 

செப்டம்பர் 29 வியாழக்கிழமை

ஆசை அணுவானாலும் ஆளை விடாது- தமிழ் பழமொழி –

செப்டம்பர் 30 வெள்ளிக்கிழமை

ஆசை அண்டாதானால் அழுகையும் அண்டாது –தமிழ் பழமொழி

ganesh indonesia

 

–Subham–

 

புத்தி கூர்மை: பலே! பலே! ரபலே!!! (Post No.3090)

gargantua-252683

Written by London Swaminathan

 

Date: 25  August 2016

 

Time uploaded in London: 8-06 AM

 

Post No.3090

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் பிரான்ஸ்வா ரபலே. அவர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் மறுமலர்ச்சி காலத்தில் வாழ்ந்தார். கிறிஸ்தவ மத போதகராகவும், அங்கத எழுத்தாளராகவும், நகைச்சுவை எழுத்தாளராகவும், கிரேக்க மொழி அறிஞராகவும் திகழ்ந்தவர். அவர் எழுதிய ‘கார்காங்டுவா’ என்ற நூல் பிரெஞ்சு அரசியலையும் வாழ்க்கை முறையையும் கிண்டல், கேலி செய்யும் புகழ்மிகு புத்தகம் ஆகும்.

 

ஒரு முறை அவர் தெற்கு பிரான்ஸில் ஓரிடத்தில் பணமே இல்லாமல் மாட்டிக்கொண்டார். தலைநகரான பாரீசுக்குத் திரும்பிவருவதற்கு அவர் கையில் தம்பிடிக் காசு (பைசா கூட) இல்லை.

 

அந்தக் கிராமத்திலுள்ள ஒரு சத்திரத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார். அதை நடத்தும் பெண்மணியிடம் தான் முக்கிய விஷயங்களை எழுதவிருப்பதால் தனக்கு ஒரு எழுத்தர் தேவை என்றார்.

அப்பெண்ணும், அதற்கென்ன? என் மகன் கெட்டிக்காரன்; 12 வயது என்றாலும் அச்சுப்பொறித்தாற் போல எழுதிக் கொடுப்பான். அவனை சம்பளத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவைத்தார்.

 

பையனும் வந்தான். ரபலே பேசினார்: டே! பையா! மிக முக்கியமான ஒரு காரியத்தைச் செய்யப்போகி றேன். ஆகையால் கவனமாகக் கேட்டு எழுது என்று சொல்லி துவங்கினார்; முதலில் எழுது:

 

ராஜாவுக்கான விஷம்

இதையும் எழுது

மஹாராணிக்கான விஷம்

ஆர்லியன்ஸ் நகர பிரபுவுக்கான விஷம்

 

இதையெல்லாம் கொட்டை எழுத்தில் எழுது. ஏனென்றா ல் இவை எல்லாம் டப்பா மீது ஒட்டும் அடையாள வில்லை என்றார்.

Gargantua_GF

பையனுக்கு பயம்! இருந்தாலும் அச்சுப்பொறித்தாற் போல, மாக்கோலம் போல எழுதினான்.

 

இதற்கிடையில் ரபலேயோ ஒரு பெட்டியிலிருந்த சாம்பலைச் சுரண்டினார். அதைத் தன் மூக்குப்பொடி டப்பிக்குள் போட்டுக் குலுக்கினார். முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு காகிதத்தில் போட்டார்.

 

இதைப் பார்த்த எழுத்தருக்கு — 12 வயது பாலகனுக்கு — மேல் மூச்சூ கீழ் மூச்சு வாங்கியது. அலறி புடைத்துக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி அம்மா, அம்மா! இவன் ஒரு கொலைகாரன்,  ராஜா ராணியை விஷம் வைத்துக் கொள்ள விஷம் தயாரித்துக் கொண்டிருக்கிறான் என்று எல்லாவற்றை யும் சொல்லி முடித்தான்.

 

உடனே அப்  பெண் போலீசுக்கு ஆள் அனுப்பினாள்; அவர்களும் விரைந்தோடி வந்து ஆளை க் கையும் களவுமாகப் பிடித்து,

யாரடா நீ, அயோக்கியா? என்றனர்.

 

பிரபல ரபலேயை அவர்களுக்குத் தெரியவில்லை. அவரும் பதில் சொல்லாமல் பேந்தப் பேந்த முழித்தார். ஆளை அலாக்காகத் தூக்கி ஒரே கட்டாக கட்டி வண்டியில் பாரீசுக்குக் கொண்டு சென்றனர். போலீசுக்கு மிகவும் பெருமிதம். பிரான்ஸு நாட்டின் ராஜத்  துரோகியைக் கண்டுபிடித்து  விட்டோ ம்; நமக்குப் பரிசு கிடைக்கும்; இவனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கணக்குப் போட்டனர்.

rabelais 1

பாரீஸ் நகரத்துக்கு வந்து சேர்ந்தவுடன் அவசரமாக மன்னர் தலைமையில் நீதிமன்றம் கூடியது. மன்னருக்கோ ரபலேயைப் பார்த்தவுடன் அதிர்ச்சி! திகைப்பு! ரபலே நடந்தவற்றை அப்படியே விவரித்தார். மன் னரும் புன்சிரிப்புடன் ரபலேயை விடுவித்தார்.

 

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ! கத்தியை விட பேனா வலிமை வாய்ந்தது அல்லவா!