எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638)

Written by London swaminathan

 

Date: 15 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 8-50 am

 

Post No. 3638

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்துக்கு மிஸ்ர தேசம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். பாரதியாரும் தனது கவிதையில் எகிப்து தேசத்தை இவ்வாறு குறிப்பிடுவார்.

 

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்

தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை

ஞானம் படைத் தொழில் வாணிபமும் மிக

நன்று வளர்த்த தமிழ்நாடுபாரதியார் பாடல்

 

மிச்ரம் என்றால் கலப்பு என்று பொருள்; அங்கு பலதேச மக்களும் பலமொழி பேசும் மக்களும் குடியேறியதால் இப்படிப் பெயர். சம்ஸ்கிருத நூல்களில் இப்படிப் பெயர் வைத்தது எவ்வளவு பொருத்தம் என்பதை பிரபல எகிப்திய அறிஞர் கூறுவதைப் படித்தால் வியப்படைவோம்:-

 

எழுபது ஆண்டுக்காலம் எகிப்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட சர் ப்ளிண்டர்ஸ் பெற்றி (Sir Flinders Petrie) சொன்னார்:

 

“எகிப்து என்னும் நாடு எந்தப் புதிய நாகரீகத்தையும் தோற்றுவிக்கவில்லை. ஆனால் மற்ற நாட்டவர்களின் எண்ணங்களுக்கு விளை நிலமாக இது விளங்கியது. பல நாட்டவரும் இங்கே அவரவர் யோஜனைகளை விதைத்தனர். பாரதியார் பாடலின்படி பார்த்தால் தமிழ்நாட்டவர்களின் பங்களிப்பும் அங்கே இருந்துள்ளது!

 

 

மிஸ்ர என்பதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு

மிஸ்ர, மிஸ்ரா என்பது பிராமணர்களின் ஒரு பிரிவு. இந்தப் பிரிவு பிராமணர்கள், வடநாட்டில், குறிப்பாக பீஹார், உத்தரப் பிரதேசம், நேபாளத்தில் அதிகம். ஆனால் எகிப்தின் பெயருக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

எகிப்தியர்களுடன் மிகவும் தொடர்புடைய பண்ட் PUNT என்னும் தேசம் பாண்டிய நாடாக இருக்கலாம் அவர்களுடன் தொடர்புடைய ஓபிர் OPHIR என்னும் பிரதேசம் சோபிரSOPHORA என்னும் மேலைக் கடற்கரை நகருடனோ அல்லது புராணங்கள் குறிப்பிடும் ஆபீர ABHIRA தேசமாகவோ இருக்கலாம் என்று பல ஆராய்ச்சியளர்கள் குறிப்பிட்டு, எப்படியும் இவர்கள் கீழ் திசை நாட்டிலிருந்து (Eastern Origin) வந்தவர்களே என்று எழுதியுள்ளனர்.

 

எகிப்திய வரலாறு 5000 ஆண்டு வரலாறு ஆகும். வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு கடவுளர்களும், கலைகளும் தோன்றின. (Mixed= Misra) ஆயினும்  அதிகமாக மெசப்பொடோமிய செல்வாக்கு உடைய நாகரீகம் இது என்று பெற்றி கருதினார். அந்த நாகரீகத்தின் ஆதிகர்த்தாக்கள ஆப்பிரிக்க நாட்டவர் இல்லை என்றும் கருதினார். அவருடைய கருத்துப் படி எழுத்து, விவசாயம் ஆகியன ஓரிடத்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவி இருக்க வேண்டும் என்பதாகும்.

அண்மைக் கால ஆராய்ச்சிகள், எகிப்திய நாகரீகம் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வளர்ச்சி அடைந்ததைக் காட்டுகின்றது. ஆகையால் ஆரம்ப கால எகிப்தியர்கள் நைல் நதிக்கரையில் மேய்ச்சலில் ஈடுபட்டவர்களே என்பது அவர்களுடைய கருத்து.

 

எழுத்து என்னும் தலைப்பை எடுத்துக்கொண்டாலும் மெசபொடோமியாவுக்கும் எகிப்துக்கும் நேரடி தொடர்பு இல்லை. எகிப்தின் சித்திர எழுத்துக்கள் (Hieroglyphs) முற்றிலும் வேறுபட்டவை.

 

 

 

இன்னொரு புதிர்: எகிப்தின் ஆதி அரசர்கள் யார்?

முதல் அரசர் பெயர் நர்மேர் Narmer ( நர+ மேரு) என்று இதுவரை கருதப்பட்டது. ஆனாம் அபிதோஸ் (Abydos) கல்லறையில் , அவருக்கும் முந்தைய அரசர் பெயர்கள் இருக்கக்கூடும். மெனெஸ் (மனு) Menes என்பவர் முதல் மன்னர் என்று அபிதோஸ் கல்வெட்டுகள் சொல்கின்றன. இன்னும் சிலர் நர்மேர், மனஸ் என்பன ஒரே ஆள்தான் என்றும் கருதுவர்.

 

மனிதர்கள் பலி- நர பலி

 

பூர்வீகக் கல்லறைகளில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அரண்மனையின் உயர் அதிகாரிகள் மன்னனுடன் புதைக்கபட்டனர்

 

இன்னும் ஒரு புதிர் படகுப் புதையல்.

 

மன்னர்களுடன் பெரிய படகுகளும் புதைக்கப்பட்டன. ஏன் என்பது புதிராகவே இருக்கிறது. மேல் திசைப் பாலைவனப் பகுதியில் மன்னர் கல்லறைகளுக்கு அருகில் படகுகள் புதைக்கப்பட்டன.

 

 

இந்தியர்கள் தொடர்பு:

மிஸ்ர (கலப்பினம்) என்ற பெயரை நமது நூல்கள் மிகப் பழங்காலத்திலேயே சொல்லி இருப்பதால் வேறு எவரையும் விட நாமே எகிப்தை நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம்.

 

மேலும் நர மேரு, மனு(ஸ்) என்பன இந்திய சம்ஸ்கிருத பெயர்களாக உள்ளன.

 

எகிப்திய வரலாறு

 

எகிப்திய வரலாற்றுக் காலத்தைப் பொதுவாக ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கலாம்:-

 

ஆரம்ப கால ராஜ வம்சம் Early Dynastic (முதல் இரண்டு வம்சங்கள்)

கி.மு.3000 (BCE)

 

…………….

 

பழைய ராஜ வம்சம் Old Kingdom (மூன்று முதல் எட்டு வரையான ராஜ வம்சம்)

கி.மு.2600

 

 

முதல் இடைக்காலம் First Intermediate Period ( 9 முதல் 11 வரையான ராஜக்கள்)

 

……………………

 

மத்திய கால ராஜ வம்சங்கள் Middle Kingdom

கி.மு.2400

 

இரண்டாவது இடைக்காலம் Second Intermediate Period (15 முதம் 17 வரையான ராஜ வம்சம்)

 

……………………..

 

புதிய ராஜ வம்சம் New Kingdom

கி.மு.1550

 

மூன்றாவது இடைக்கால ராஜாக்கள் Third Intermediate Period (21 முதல் 24 வரை வம்சங்கள்)

 

…………………………..

 

பிற்கால ராஜ வம்சங்கள் Late Period

கி.மு.715

 

கிரேக்க- ரோமானிய அரசுகள் Greco-Roman Period

 

முடிவு கி.பி.395 (CE)

 

……………………

 

மேலும் பல அதிசயங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

–சுபம்–

இந்திய அதிசயம்: இந்தியாவின் நீண்ட நெடுஞ்சுவர் (Post No.3552)

 

Amid MP’s forests, mountains, fields and villages stands Raisen’s wall, a structure that evokes more questions than answers. (Pratik Chorge/HT Photo)

Written by London swaminathan

 

Date: 17 January 2017

 

Time uploaded in London:- 9-09 am

 

Post No.3552

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Look closely, the two snakes are not knotted up but artfully entwined, indicating that the artist took care over the design. The icon stands at one end of the wall, near Gorakhpur. (Pratik Chorge/HT PHOTO)

 

உலக அதிசயங்களில் ஒன்று சீன நெடுஞ்சுவர். விண்வெளியிலிருந்தும் காணக்கூடியது. 5500 மைல் நீளம் உடையது. இடையிடையே சுவர் இல்லாத அல்லது மறைந்து போன பகுதிகளும் உண்டு. இதற்கு அடுத்த நீண்ட சுவர் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது. இதன் நீளம் ஐம்பது மைல்கள்தான். ஆயினும் இது ஒரு வரலாற்றுப் புதிராகவே இருந்து வருகிறது. இதை யார் கட்டினார்கள்? ஏன் கட்டினார்கள்?   என்று தெரியவில்லை.

 

இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபாலுக்கும் ஜபல்பூருக்கும் இடையே உள்ளது. இது கோரக்பூர் தேவ்ரி என்ற கிராமத்திலிருந்து —  சோக்கிகர் வரை செல்கிறது. விந்திய மலைப் பள்ளத்தாக்குகள், தேக்குமரக் காடுகள், லாங்கூர் இனக் குரங்குகள் வசிக்குமிடங்கள், கிராமங்கள், கோதுமை வயல்கள் ( ராய்சென் மாவட்டம்) வழியாக இந்த 80 கிலோமீட்டர் சுவர் கட்டப்பட்டுள்ளது. ஓரிடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரு அணையும் இதைத் தடுக்கிறது.

 

இந்தச் சுவர் வழியாக நடந்து சென்றால் போகப்போக பல அதிசயப் புதிர்கள் வந்து கொண்டே இருக்கும்! பாழடைந்த கோவில்கள், யாரும் வசிக்காத வீடுகள், உடைந்த சிலைகள், படிக்கட்டுகள் உடைய படிக் கிணறுகள், கரை எழுப்பப்பட்ட குளங்கள், விநோதமான நாகர் (பாம்பு) சின்னங்கள் என்று யாரும் விளக்கமுடியாத தடயங்களைக் காணலாம். இதைக் காணும் வரலாற்று ஆர்வலர்கள் நாம் இப்போது மேல்பரப்பை மட்டும் கண்டு ‘நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறோம்’. இன்னும் தோண்டத்தோண்ட ‘தொட்டனைத்து ஊறும் மணற்கேணி போல’ பல அதிசயங்கள் வரும் என்கின்றனர்.

 

இதுபற்றி ராய்சென் நகர மருந்துக்கடை வணிகர் ராஜீவ் சோபே (57) கூறியதாவது: “1980 ஆம் ஆண்டுகளில் இதைப் பார்த்தது முதல் நான் மோட்டார் சைக்கிளில் பலருடன் சென்று ஆராய்ந்து கொண்டே இருக்கிறேன். ஒருநாள் சுகதேவ் மஹராஜ் என்ற துறவி என் கடைக்கு வந்தார். தனது குடில் வரை இந்தச் சுவர் வருவதாகச் சொல்லி தனக்கும் இது பற்றி அறிய ஆர்வம் உண்டு என்றார். அது முதல் நானும் அவரும் பலரையும் காலில் செருப்பு இல்லாமல் அழைத்துச் சென்று, கோவில் பகுதிகளை ஆராய்ந்து வருகிறோம்”.

தொல்பொருட் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நாராயண வியாஸ் சொன்னார்: ” இந்த சுவர் இந்த ப்பகுதியில் கிடைக்கும் கற்களால் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அதன் மீது நடந்து செல்லும் அளவுக்கு அகலம் உள்ளது. ஆயுதங்களும் ஆட்களும் மறைந்து இருக்க மாடங்கள் உள்ளன. இதைப் பார்க்கையில் இது ஒரு ராணுவப் பாதுகாப்புச் சுவர் போல உள்ளது.”

 

ஆனால் கோரக்பூர் ஜோதிடர் ராகவேந்திர கார்வே, “நடுக்காட்டில் எதற்கப்பா பாதுகாப்புச் சுவர்?” என்று இடை மறிக்கிறார். இவரும் நாராயண வியாசும் சுவரை பெரிய சர்வே செய்துள்ளனர்.

இது பத்து அல்லது பதினோராம் நூற்றாண்டுச் சுவர் என்றும் பார்மர் வம்ச மன்னர் ஆட்சிக் காலத்தில் தோன்றியது என்றும் அவர்கள் கருதுகின்றனர். ஆயினும் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.

 

காலசூரி வம்சத்தினர் போரில் ஆர்வமுடையோர். அவர்களைத் தடுத்து நிறுத்த பார்மர் வம்ச மன்னர்கள் இதைக் கட்டியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். பார்மர் வம்ச கோவில்கள் கட்டிடங்களிலுள்ள உத்திகள் இங்கே காணப்படுகின்றன என்பது அவர்களுடைய வாதம்.

 

இந்த இடத்தைச் சுற்றி வசிப்பவர்கள், முன்னர் அங்கிருந்த சிம்மவாஹினி அம்மன், கால பைரவர் சிலைகள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டன. இப்போது உடைந்த சிலைகள் மட்டுமே உள்ளன. பலரும் இந்தச் சுவரின் கற்களை எடுத்துச் சென்று வீடு கட்டுகின்றனர். இதை முறையாகப் பாதுக்காக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

The wall zig-zags across the Vindhya mountains just north of the Bhopal Jabalpur Road in Raisen district, and alongside, a man-made pond has been discovered. (Pratik Chorge, Ashwin Patil/HT Photo)

 

In most Indian temples, elephant icons have been used at the base, their strength metaphorically holding up the stones. Could that have been the case with the temples inside Raisen’s wall too? (Pratik Chorge/HT PHOTO)

 

 

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் சுருக்கம் இது; நன்றி.

 

–Subham–

 

அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் (Post No. 3515)

Written by S NAGARAJAN

 

Date: 5 January 2017

 

Time uploaded in London:-  6-27 AM

 

 

Post No.3515

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

by ச.நாகராஜன்

 

இந்திய வரலாறு – பி. என். ஓக்கின் புதிய கண்ணோட்டம்

 

இந்திய வரலாற்றை அதிசயக்கத்தக்க முறையில் ஆய்வு செய்து ஏராளமான புத்தகங்களை எழுதிய அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் ஹிந்து தர்மத்தின் புகழையும் பெருமையையும் உலகறியச் செய்தவர்களில் ஒருவர்.

 

 

1917ஆம் ஆண்டு  மார்ச் மாதம் இரண்டாம் தேதி பிறந்து 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி மறைந்தார்.

 

90 வயது நிறைவாழ்வு வாழ்ந்த புருஷோத்தம நாகேஷ் ஓக்கை பி.என், ஓக் என்றே உலகம் அறிந்தது.

 

ஹிந்து வரலாறு சின்னாபின்னாபடுத்தப்பட்டு திரித்து, மாற்றி, சிதைத்து எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மனிதர் கொதித்தெழுந்தார். முறையாக வரலாற்றை ஆய்வு செய்யத் தொடங்கினார். இன்ஸ்டிடியூட் ஃபார் ரீ ரைட்டிங் இண்டியன் ஹிஸ்டரி என்ற ஒரு அமைப்பை நிறுவித் தன் ஆய்வு முடிவுகளை உலகினருக்கு அறிவித்தார். இதிஹாஸ் பத்ரிகா என்ற வரலாற்று இதழ் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். மதத்திற்கெல்லாம் தாய் மதமாக ஹிந்து மதம் இலங்கியது என்பதே இவர் வரலாற்று ஆய்வின் உயிரோட்டமான தத்துவமாக இருந்தது.

 

வேத நாகரிகத்தின் வரலாறு

 

ஏசு கிறிஸ்து, வாடிகன் சிடி, காபா,வெஸ்ட் மினிஸ்டர் அப்பே, தாஜ்மஹால் பற்றிய இவரது ஆய்வு முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ப்லரை கோபம் கொள்ள வைத்தன.

 

வோர்ல்ட் வேதிக் ஹெரிடேஜ்  – எ ஹிஸ்டரி ஆஃப் ஹிஸ்டரிஸ் (World Vedic Heritage – A History of Histories) என்ற இவரது புத்தகம் மிக அருமையான புத்தகம். 92 அத்தியாயங்களில் 1312 பக்கங்களில் பல்வேறு அதிசயமான தகவல்களைத் தொகுத்து இதில் அவர் தந்திருக்கிறார்.

 

இதில் இவர் கூறும் முக்கிய செய்திகளில் இரண்டை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

 

 

ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை

 

ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை

Did Jesus Ever Lived  என்ற (76ஆம்) அத்தியாயத்தில் ஏசு பற்றிய பல்வேறு தகவல்களை முறையாக இவர் ஆய்வு செய்கிறார்.

பின்னர் அவர் முத்தாய்ப்பாகக் கூறுவது இது தான்:

 

“Thus from beginning to end the Jesus story is one big fiction which developed as a mushroom growth gathering heterogeneous elements in its meandering course over centuries after it had acquired a head-start with the grouse of an ambitious, short- tempered, angry man called Saus alias Paul expelled from the management of the Christ cult.

 

 

It is hoped that the above details would help people who believe in logic to realize how the whole foundation of Christianity is entirely fictious despite its colossal spread and size.” (Page 1003)

 

 

தாஜ்மஹல் ஒரு ஹிந்து ஆலயமே

 

தாஜ்மஹல் ஒரு ஹிந்து ஆலயமே

தாஜ்மஹல் உண்மையில் தேஜோ மஹாலயம் என்ற ஹிந்து ஆலயம் என்று கூறும் இவர் அதற்கான் ஆதாரங்களை அள்ளித் தருகிறார்.

 

பிரம்மாண்டமான தாஜ்மஹாலில் பார்வையாளர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே இன்று பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். உண்மையில் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க அனுமதித்தால் இந்த உண்மையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்பது இவரது வாதம்

இவரது கூற்று:

 

“The marble Taj Mahal in Agra (India) is surrounded by numerous such palatial, red stone pavilions which escapes visitor’s attention, being misled by the concoted Shahjahan-Mumtaz legend. The Taj Mahal is Tejo-Mahalaya a Hindu temple-palace complex built several centuries before the 5th generation. Mogul ruler Shahjahan, (Reference, our research book titiled – THE TAJ MAHAL IS A TEMPLE PALACE). Shajahan requisioned the edifice, robbed it of its costly fixtures and furniture (such as silver doors, gold-railings, gems stuffed in the  marble grill, strings of pearl hanging on the Shivling amd the  legemdary  peacock throne) and misused it recklessly as a Muslim cemetery. Thus history has been turned so topsy turvy as to credit the very person who robbed, ravaged and descrated the Taj Mahal with having built it. Such is the appalling state of history all the world over,” (Page  1246)

 

இப்படிப்பட்ட ஏராளமான செய்திகள் பக்கத்திற்குப் பக்கம் தரப்படுகின்றன; நம்மை பிரமிக்க வைக்கின்றன.

 

 

சரியான ஹிந்து நாகரிக வரலாற்றுக்காக உழைத்தவர்

 

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் சர் ஆர்தர் கானன் டாயிலின் நாவலில் வரும் லாஜிக், அகதா கிறிஸ்டியின் நாவலில் வரும் மர்மம், இர்விங் வாலஸ் நாவல்களில் வரும் எதிர்பாரா திடுக்கிடும் திருப்பங்கள் போன்றவற்றை இந்திய வரலாற்றில் காண முடியும் என்பதை ஓக் நிரூபிக்கிறார்.

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உதவியாளராக சில காலமும், பத்திரிகையாளராக சில காலமும், இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரியாக நீண்ட காலமும் பணியாற்றிய இந்திய வரலாறு எப்படி திரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து, அதன் உண்மையான வரலாறு என்ன என்பதை ஆய்வு செய்து தருவதிலேயே ஓக் தனது வாழ்நாள் முழுவதையும் செல்வழித்து அர்ப்பணித்தார்.

 

போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் இலக்கான மகத்தான வாழ்வு வாழ்ந்த அவர் வேத நாகரிகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வந்த பெரும் மேதை என்றே சொல்லலாம்!

 

********

 

5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு (Post No. 3487)

Written by S NAGARAJAN

 

Date: 27  December 2016

 

Time uploaded in London:-  5-31 AM

 

Post No.3487

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை

 5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு!

 

 

ச.நாகராஜன்

 

“எகிப்தில் உள்ள பிரமிடுகளைத் தவிர அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாலும் செதுக்கப்பட்ட கற்களாலும் சிற்பங்களாலும் முப்பரிமாண சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன” – எகிப்திய அகழ்வாராய்ச்சித் தகவல்

 

  உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று எகிப்திய நாகரிகம் என்றும் எகிப்தில் உள்ள பிரமிடுகள் அபூர்வ சக்தி வாய்ந்தவை என்பதையும் பறைசாற்றி பல நூறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

 

பெரும் நிபுணர்களும் ஆய்வாளர்களும், சரித்திர ஆசிரியர்களும் பிரமிடின் சக்தியைப் புகழ்ந்து அதிசயிக்கின்றனர். நெபோலியன் உள்ளிட்ட மாவீரர்கள் பிரமிடின் அமானுஷ்ய சக்தியை நேரில் சென்று அனுபவித்து வியந்திருக்கின்றனர்.

 

 

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எகிப்தில் 118 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து எகிப்தில் அகழ்வாராய்ச்சிப் பணி நடந்து கொண்டே இருக்கிறது.

 

இதன் தொடர்ச்சியாக, இப்போது எகிப்திய வரலாற்றில் புதிய ஒரு சுவையான செய்தி சேர்ந்துள்ளது.

 

5000 வருடங்களுக்கு முந்தைய எகிபதிய நகரம் ஒன்றின் சிதிலமடைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை உலகத்தின் அறிவியல் பத்திரிகைகள் நவம்பர் 2016 இறுதி வாரத்தில் அறிவித்துள்ளன!

 

 

பண்டைக்காலத்தில் இருந்த ஒருங்கிணைந்த பிரம்மாண்டமான எகிப்தில் அபிடாஸ் (Abydos) என்ற பகுதியில் உள்ள இந்த நகரம் பாரோக்களின் ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று மஹம்மதி அஃபிபி என்ற எகிப்திய அரசின் தலைமை அகழ்வாராய்ச்சியாளர் தெரிவித்திருக்கிறார். இவரது அறிக்கை அராபிய மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

இந்த நகரின் கட்டிடங்கள்  களிமண்ணாலான செங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன.

 

கட்டிடங்களின் அருகே ஒரு கல்லறையும் இருக்கிறது. இங்கு ஒரு மனிதனின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 

 

 

இந்தக் கல்லறையில் பாரோக்கள் புதைக்கப்படவில்லை என்றும் அபிடாஸை ஆண்ட முந்தைய கால  மன்னர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அபிடாஸை ஆண்ட ஆஹா என்ற மன்னர் ஒரு பிரம்மாண்டமான வளாகத்தைக் கட்டியுள்ளார். இங்கு அவர் வேலையாட்களுக்கான தனி கல்லறை ஒன்றையும் அமைத்துள்ளார்.

 

 

அத்துடன் அந்தக் காலத்தில் பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் களியாட்ட நிகழ்ச்சிகளில் களிப்பூட்டி உற்சாகப்படுத்த குள்ளர்கள் பங்கேற்பர். அவர்களுக்கும் தனி இருப்பிடங்களை ஆஹா அமைத்துத் தந்துள்ளார்.

சிங்கங்களுக்கும் நாய் உள்ளிட்ட இதர மிருகங்களுக்கும் தனி இருப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 

 

ஆஹா மன்னரின் கல்லறை கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்லறையில் காணப்படும் ஏராளமான மிருகங்களின் உடல்கள் அவர் இறந்த பிறகு அவருடன் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

இதில் முக்கியமான அம்சம் இந்த நகரின் பழமை குறித்தது தான். சில நிபுணர்கள் இந்த நகரம் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் என்று கூறுகின்றனர்.

 

    ஆனால் அராபிய மொழியில் இருந்த அறிக்கையை மொழிபெயர்ப்பு செய்யும் போது தவறுதலாக இது 7000 ஆண்டு பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று  கருதும் சில நிபுணர்கள் எகிப்திய அரசு ஆங்கிலத்தில் அறிக்கையை வெளியிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  அத்துடன் இந்த நகரம் எவ்வளவு பெரியது, அதன் பரப்பளவு என்ன போன்ற தகவலை எல்லாம் கூட எகிப்திய அரசு வெளியிடவில்லை என்றும் உலக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறி அதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சிப் பிரிவிற்குக் கடுமையான பணத்தட்டுப்பாடு இருப்பதால் அது ஊடகங்களுக்கு சரியான முறையில் அறிக்கையைத் தர முடியவில்லை என்பதும் ஒரு முக்கியமான விஷயம்.

 

உலகின் மிகப் பழமையான நகரம் அபிடாஸ் தானா என்பதை ஆராய விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். அப்படி இந்த நகரம் மிக மிகப் பழமையானது என்று நிரூபிக்கப்பட்டு விட்டால் அது உலக சரித்திரத்தில் ஒரு முக்கியமான திருப்பம் தரும் செய்தியாக அமையும்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

ஃபாஸில்ஸ் (FOSSILS) எனப்படும் படிமப்பாறைகள், பழைய கால மிருகங்களின் உடல்களே என விஞ்ஞான உலகம் 18ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது.

 

இந்தத் துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் இதை ஆராய்ந்தவர் விஞ்ஞானி ஜோஹன் பெரிஞ்சர் (Johann Beringer).  அவர் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில்   (University of Wurzburg) பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

 

ஃபாஸில்ஸ் அனைத்துமே கடவுளால் படைக்கப்பட்டு தெய்வீக காரணங்களுக்காக பூவுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் திடமாக நம்பினார்.

 

அவருடைய படிமப்பாறை பைத்தியத்தைப் பற்றி நன்கு உணர்ந்த அவரது மாணவர்கள் ஆங்காங்கு தாங்களே உருவாக்கிய ஃபாஸில்ஸை புதைத்து வைக்க ஆரம்பித்தனர்.இதில் வேடிக்கை என்னவென்றால் சிரிய, பாபிலோனிய, ஹிப்ரூ எழுத்துக்களுடனெல்லாம் இவை கிடைக்க ஆரம்பித்தன.

 

பெரிஞ்சருக்கோ ஒரே உற்சாகம்.

 

அனைத்து ஃபாஸில்ஸையும் அட்டவணைப்படுத்தி ஒரு பெரிய புத்தகத்தை 1726ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார்.

ஒரு நாள் அவர் பெயர் கொண்ட ஒரு ஃபாஸில்ஸே கிடைத்தது.

 

அப்போது தான் அவருக்கு சந்தேகம் வந்தது.

அவர் எழுதிய புத்தகத்தைப் பலரும் கிண்டல் செய்ய ஆரம்பிக்கவே அனைத்துப் புத்தகங்களையும் தானே திருப்பிப் பெற்றுக் கொண்டார். இந்தப் புத்தகத்தின் பிரதி அரிதாகிப் போய் விடவே இதை அரிய பொருள்கள் சேகரிப்போர் தேடிக் கண்டுபிடித்து அதிக விலைக்கு வாங்கினர்.

 

மனம் நொந்து போன பெரிஞ்சர் தன்னை கேலி செய்பவர்கள் மீது பெரிய வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.

அவர் இறந்த பிறகு அவரது உறவினர் ஒருவர் அந்தப் புத்தகத்தை மீண்டும் அச்சடித்து வெளியிட்டு பெரிய லாபத்தை ஈட்டினர்.

1963ஆம் ஆண்டு பெரிஞ்சரைப் பற்றி ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர் மெல்வின் ஈ. ஜான் என்பவர் உண்மையில் அவரது மாணவர்கள் இந்த தகாத வேலையில் ஈடுபடவில்லை என்றும் பெரிஞ்சரின் புகழைப் பொறுக்க மாட்டாத அவர்கள் சகாக்களே இந்த வேலையில் பலரை ஈடுபடுத்தியதாகவும் கண்டு பிடித்துள்ளார்.

 

ஆனாலும் என்ன, இறக்கும் வரையில் அவர் கேலிக்குத் தான் ஆளாக வேண்டியிருந்தது.

*******

 

 

மாமன்னன் அசோகனை அசத்திய விலை மாது! (Post No 3433)

Written by London swaminathan

 

Date: 9 December 2016

 

Time uploaded in London: 10-45 am

 

Post No.3433

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

(Posted in English as well)

நம் ஒவ்வொருவரிடையேயும் மகத்தான சக்தி இருக்கிறது. அதைத் தேவை ஏற்படும் போது பிரயோகித்து அதிசயம் நிகழ்த்தலாம். இதோ பேராசிரியர் உஷர்புத் சொன்ன கதை. அவர் முதலில் அமெரிக்காவில் மின்னசோட்டா பலகலைக் கழக சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக இருந்து பின்ன வேதபாரதி என்ர பெயரில் சாமியார் ஆனார்.

 

மாமன்னன் அசோகன் அவன் தலைநகரான பாடலிபுத்ரம் (பாட்னா) அருகில் கங்கை நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அமைச்சர்கள், பரிவாரம் புடைசூழ நின்றிருந்தான் அசோகன். திடீரென்று ஒரு கேள்வி கேட்டான். யாராவது இந்த கங்கை நதியைப் பின்னோக்கி ஓடச் செய்ய முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் எல்லோரும் திகைத்து நின்றனர்.

 

மாமன்னன் ஆயிற்றே! ஆகவே ஒரு மந்திரி பயந்துகொண்டே சொன்னார்:

“மன்னர் மன்னவா! உலகில் எவ்வளவோ காரியங்களை நடத்த முடியாது என்று நினைப்பர்; ஆனால் உங்களைப் போன்ற மாவீரர்கள் நடத்திக் காட்டிவிடுவீர்கள்; ஆயினும் ஒரு நதி பின்னோக்கிச் சென்றதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. என் பதிலில் குறையிருந்தால் மன்னிக்கவும்” – என்று சொல்லி முடித்தார்.

 

அந்தப் பக்கமாக நடந்து சென்ற ஒரு விலை மாது இதைக் கேட்டுக்கொண்டே இருந்துவிட்டு அருகில் வந்தாள். “நான் செய்வது இழி தொழில் ஆகையால் இங்கு பேசலாமா என்று தெரியாது. மன்னர் அனுமதித்தால் நான் பேசுகிறேன்”.

 

மாமன்னன் அசோகன் “அதற்கென்ன? பெண்ணே, பேசு” என்றான்.

அந்தப் பெண் சொன்னாள். “இதோ பாருங்கள். இப்பொழுது நதியைப் பின்னோக்கி ஓடச் செய்கிறேன். அது தோன்றிய மலையை நோக்கி ஓட வைக்கிறேன்” என்றாள்.

 

எல்லா அமைச்சர்களும் வியப்புடன், “செய்து காட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவள் சொன்னவுடன் நதி மேல் நோக்கி மலையை நோக்கி ஓடத்துவங்கியது. இதனால் வரக்கூடிய இயற்கை விபத்துகளை உணர்ந்த அசோகன் “போதும் போதும் நிறுத்திவிடு; முன்னோக்கியே ஓடச் செய்துவிடு” – என்றான் அவளும் அப்படியே செய்தாள்.

 

மன்னன் கேட்பதற்கு முன்னால் அனைத்து அமைச்சர்களும், “அம்மணி! எப்படி இந்த அதிசயத்தைச் செய்தீர்கள்? என்று வினவினர்.

அவள் சொன்னாள்,

 

“வாழ்நாள் முழுதும் ஒருவர் ஏதேனும் ஒரு உறுதிமொழி அல்லது விரதத்தைக் கடைப் பிடித்து அதை யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்தால் மகத்தான சக்தி வரும். அந்த சக்தியை ஒரே ஒரு முறை மட்டும் இப்படி செலவிடலாம்

“நான் சொல்லுவது உண்மையானால்”, “நான் செய்தது உண்மையானால்” என்று சொல்லிவிட்டு இப்படிக் கட்டளையிடால அது நிறைவேறும் என்றாள்.

 

அம்மணி நீங்கள் என்ன உண்மையை , உறுதி மொழியை ரகசியமாகக் கடைப்பிடித்தீர்கள்? என்று கேட்டார்கள்.

நான் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த விலை மாதர் தொழிலில் இறங்கினேன். அப்பொழுது இந்தத் தொழிலிலும் ஏதேனும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியுமா என்று வியந்தேன். அன்று என் மனதில் தோன்றியது. “மாமன்னன் வந்தாலும் சரி குஷ்ட ரோகி வந்தாலும் சரி; அவர்களுக்கு மனத்தளவிலும் உடல் அளவிலும் சமமான இன்பம் கொடுப்பேன்” என்ற திட விரதம் பூண்டேன். அந்த விரதத்தை இன்றுதான் முதல் தடவையாக உங்களிடம் சொல்லுகிறேன். ஒரு விரதத்தை ஏற்று அதை வாழ்நாள் முழுதும் கடைப் பிடித்தால் அப்பொழுது மகத்தான சக்தி சேரும். அதை ஒரே ஒரு முறை பயன்படுத்தலாம்! என்று சொல்லிவிட்டு அவள் வந்த வழியே திரும்பிச் சென்றாள்.

 

என் கருத்துகள்:-

 

இதுபோல மனத்தின் மகத்தான சக்தியைக் காட்டும் சில கதைகள் நினைவுக்கு வருகின்றன. இவைகளை முன்னரே எழுதிவிட்டதால் தலைப்பை மட்டும் தருகிறேன்:-

1.நோயுற்ற ஹுமாயுனைக் காப்பாற்ற, அவனது தந்தை (Babar) மூன்றுமுறை வலம் வந்து “அல்லாவே! என் உயிரை எடுத்துக் கொண்டு என் மகனைக் காப்பாற்று” என்ற சம்பவம்

2.துரியோதணனைக் காப்பாற்ற “நிர்வாணமாக நில்; என் பார்வை படுமிடம் எல்லாம் பலம் பெறுவாய்; உன்னை யாரும் கொல்லமுடியாது” என்று சொல்லியும் அவன் தனது மர்ம ஸ்தானங்களை மறைத்த சம்பவம்

 

3.திரிசங்கு மன்னனை விஸ்வாமித்திரன் சொர்க்கத்துக்கு அனுப்பிய சம்பவம் — இப்படி எவ்வளவோ சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

 

–Subham–

 

 

 

பாம்புகள் காத்த பைரவர் ஆலயம்!(Post No.3425)

Picture: Anand Bhairav Temple, Haridwar

Written by S NAGARAJAN

 

Date: 7 December 2016

 

Time uploaded in London: 5-31 am

 

Post No.3425

 

 

Pictures are taken from various sources; thanks

 

contact; swami_48@yahoo.com

 

 

ஹரித்வார் பற்றிய உண்மை நிகழ்ச்சி

பாம்புகள் காத்த பைரவர் ஆலயம்!

 

ச.நாகராஜன்

 

இந்திய வரலாற்றின் பழைய ஏடுகள் அதிசயிக்கத்தக்க செய்திகளைத் தரும் ஒன்றாகும். இவற்றை முறையாகத் தொகுப்பார் இல்லாததால் அனைவரும் இந்த அதிசயச் செய்திகளை அறிய முடியாமல் போகிறது. வரலாற்று ஏடுகளிலிருந்து ஹரித்வாரைப் பற்றிய ஒரு உண்மை சம்பவம் :

பிரிட்டிஷார் நம்மை ஆண்டு வந்த காலத்தில் சர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இந்திய தொல்லியல் பிரிவின் டைரக்டர் ஜெனரலாக இருந்தார். 1870-71ஆம் ஆண்டுகளில் தன்னால் இயன்றவரை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைச் சேகரித்தார். அவரது அறிக்கையில் ஹரித்வார் ஸ்தலம் பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்தது என்றும் அப்போது அங்கு கோவில் கட்டப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 

 

பின்னால் வந்த தொல்லியல் நிபுணர்களும் அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் இந்த தலம் மிகப் பழமையானது என்றும் சுமார் 3750 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

 

 

கி.பி,1206ஆம் ஆண்டில் குத்புதீன் ஐபக் அடிமை வம்சத்தை இந்தியாவில் நிறுவினான்.1320இல் கயாசுதின் துக்ளக் தனது துக்ளக் வம்சத்தை நிறுவினான். இதில் வந்த அமிர் ஜாஃபர் தைமூர் 1398இல் ஒரு பயணத்தை மேற்கொண்டான்.

 

 

யமுனை நதிக் கரையோரம் படைகளுடன் சென்ற அவன் வழியில் இருந்த கோவில்களை இடித்தான்.டெல்லி, பீஜானூர் வழியே கங்கைக் கரையோரமாக முன்னேறிய அவன் ஹரித்வார் நகரை அடைந்தான்.

அங்கிருந்த யாத்ரீகர்களை அடித்து விரட்டிய அவன் நேராக மாயாதேவி கோவிலுக்கு அருகில் இருந்த பைரவர் ஆலயத்தை நோக்கிச் சென்றான்.

அதை இடித்துத் தள்ள ஆணையிட்டான். ஆனால் உடனே அவன் கண்ட காட்சி அவனை நடுநடுங்க வைத்தது.

 

 

ஏராளமான பாம்புகளும் தேள்களும் அங்கு தோன்றின. அவனது படைகளுக்கு சரி நிகர் சமானமாக பாம்புப் படைகளைக் கண்ட அவனது படைவீரர்கள் அலறிப் பின் வாங்கி ஓடினர்.

 

நடுநடுங்கிய தைமூர் சமர்கண்ட் நோக்கிச் சென்று விட்டான். ஹரித்வாரும் பிழைத்தது. பைரவர் ஆலயமும் பாம்புப் படையினால் காப்பாற்றப்பட்டது!

தைமூருடன் சென்ற வரலாற்றாசிரியன் ஷர்ஃபுடீன் ஹரித்வாரைப் பற்றியும் அங்கு நடந்த நிகழ்ச்சிகளையும் தன் நினைவுக் குறிப்புகளில்  பதிந்து வைத்துள்ளதால் நடந்த நிகழ்ச்சிகளை நம்மால் அறிய முடிகிறது!

 

Haridwar Temples

*******

 

மீண்டும் திறக்கப்பட்ட ஏசு கிறிஸ்துவின் கல்லறை! (Post No3345)

புனித கல்லறை, ஜெருசலம்

 

WRITTEN by S NAGARAJAN

 

Date: 12 November 2016

 

Time uploaded in London: 4-59 AM

 

Post No.3345

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

 

பல  நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட ஏசு

 

கிறிஸ்துவின் கல்லறை!

 

ச.நாகராஜன்

 

புனிதர் ஏசு கிறிஸ்துவின் கல்லறை கி.பி.1555ஆம் ஆண்டுக்கு முன்னரே அதன் மூடப்பட்ட ஒரிஜினல் கல்லின் மீது புதிதாகச்  சலவைக் கற்கள் வைக்கப்பட்டு மூடப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி.

 

ஏசு கல்லறை,ஜெருசலம்

 

இந்தப் புனிதமான கல்லறையைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரீஸ் நாட்டில் ஏதன்ஸ் நகரில் உள்ள நேஷனல் டெக்னிகல் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்கள் இந்தப் புனித ஸ்தலத்தின் உட்பகுதிகளை அணுக வேண்டியது அவசியம் எனத் தீர்மானித்தனர். நேஷனல் ஜியாகிராபிக் சொஸைடியைச் சேர்ந்த ஃப்ரெடெரிக்  ஹைபெர்ட், “எங்களுக்குத் தெரிந்த வரையில் நாங்களே முதன்முறையாக இதைத் திறந்து பார்க்கப் போகிறோம்” என்று அறிவித்தார்.

 

 

பழைய புராணங்களை ஆய்கின்ற வரலாற்று ஆய்வாளர்கள், ஏசு உண்மையில் வாழ்ந்த ஒரு புனிதரே என்று சொல்வதோடு அவர் கி.பி. முதல் ஆண்டில் இப்போது பாலஸ்தீனம என்று அழைக்கப்படும் பெத்லஹேமில் பிறந்தார் என்றும் இஸ்ரேலில் உள்ள நாசரேத்திற்குப் பின்னர் சென்றதாகவும் கி.பி, 29ஆம் ஆண்டு வாக்கில் அவர் மறைந்ததாகவும் உறுதி படக் கூறுகின்றனர்.

ஹிப்ரூ பைபிளின் படி ஏசு ஒரு குகையில் கல் மேடை ஒன்றில் வைக்கப்பட்டு கற்களினால் மூடப்பட்டார்.

 

கான்ஸ்டண்டைன் என்ற முதல் கிறிஸ்தவ சக்கரவர்த்தி கி.பி, 326இல் தனது தாயான ஹெலினாவை தனது பிரதிநிதியாக ஜெருசலத்திற்கு அனுப்பினார். அங்குள்ளோர் ஒரு குகையைக் காண்பித்து இங்கு தான் ஏசுவின் கல்லறை உள்ளது என்று அவரிடம் குறிப்பிட்டனர். உடனே அந்தக் குகையில் ஒரு புனித

ஸ்தலத்தை கான்ஸ்டண்டைன் நிர்மாணித்தார். குகையின் மேல் மூடி அகற்றப்பட்டது. அங்கு வருகை புரிவோர் குனிந்து கீழே பார்க்கும் வண்ணம் அந்த புனித ஸ்தலம் அமைக்கப்பட்டது. அது ஹோலி எடிக்யூல் (Holy Edicule) என்று அழைக்கப்படலாயிற்று.

ஆயிரத்தி எண்ணூறுகளில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தால் அதை  மீண்டும் புனருத்தாரணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதை மூன்று சர்ச்சுகளின் அமைப்புகள் கூட்டாக இப்போது நிர்வகித்து வருகின்றன..

 

Picture of Holy Edicule in Jerusalem

1958இல் இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரு மனதாக இதை உரிய முறையில் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்று தீர்மானித்தன. என்றபோதும் ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னரே இதை எப்படிச் செய்வது என்றும் இதற்கு எப்படி நிதி திரட்டுவது என்றும் தீர்மானித்தன. இதற்கு ஆகும் செலவு சுமார் 40 லட்சம் டாலர்கள் ஆகும்.

 

 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் இரும்புக் கம்பிகளால் ஒரு தடுப்பு இங்கு அமைக்கப்பட்டது.

 

இதை உரிய முறையில் சீரமைக்கத் தீர்மானித்த புனரமைப்புக் குழுவினர் முதலில் 19ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சலவைக் கற்களை அகற்றினர். பின்னர் 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சலவைக்கற்களையும் அகற்றினர். அப்போது அவர்கள் கண்டது 12ஆம் நூற்றாண்டில் மூடப்பட்ட சலவைக் கற்களை. அவற்றையும் அகற்றிய பின்னர் முதன் முதலில் நிறுவப்பட்டிருந்த கல்லைக் கண்டனர்.

 

 

“இங்கு உள்ளே இருப்பதை ஆய்வு செய்வது எங்கள் நோக்கமல்ல. ஒரு டி என் ஏ (DNA) சோதனையும் நடைபெறாது வேறு எந்த ஒரு ஆய்வும் செய்யப்பட மாட்டாது” என்று உறுதிபடக் கூறிய குழுவினர் இது ஆய்வுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்றனர்.

 

‘கடந்த பல நூற்றாண்டுகளாகப் புனிதமாகக் கருதப்பட்ட இந்த ஸ்தலத்தில் எந்த ஒரு ஆய்வும் எந்த  ஒரு புதிய விஷயத்தையும் தரப் போவதில்லை. இந்தத் திட்டதின் மூலமாக நீங்கள் குனிந்து பார்த்து, இது வரை பார்க்க முடியாம்ல இருந்த, முன்னர் அமைக்கப்பட்டிருந்த பழைய இடத்தை இப்போது நன்கு பார்க்க முடியும்’ என்கின்றனர் இதைப் பராமரிக்க இருக்கும் குழுவினர்.

 

ஏசுபிரானின் ஒரிஜினல் கல்லறை திறக்கப்பட்டதையொட்டி

உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த புனித ஸ்தலம் பற்றிய செய்தியே இப்போது பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய செய்தி!                  ஆதாரம் : லைவ் ஸயின்ஸ்

***********

கோண்ட் பழங்குடி இன நட்புறவு ஒப்பந்தம் (Post No.3222)

pic-gaund

Written by London Swaminathan

 

Date: 6 October 2016

 

Time uploaded in London:5-45 AM

 

Post No.3222

 

Pictures are taken from various sources; thanks.

 

 

Contact swami_48@yahoo.com

 

 

 

கோண்ட் இன மக்களை திராவிடப் பழங்குடி என்றும் அவர்களுடைய “கோண்டி” மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் அவர்களை ஆதரிக்கும் திராவிடங்களும் மார்கஸீயங்களும் கதைக்கும்.

 

நேற்று,  முதல் பகுதியில் அவர்களுடைய விநோத வழக்கங்களைப் பட்டியலிட்டேன். சில வழக்கங்கள் பிராமணர்கள் வழக்கங்களை ஒத்திருக்கும். மற்ற பல காட்டுமிராண்டித் தனமான வழக்கங்களாக இருக்கும்.

 

கோண்ட் இன மக்களுக்கு மாய மந்திரங்களில் நம்பிக்கை உண்டு. விசாகப் பட்டிணம் பகுதியில் கோண்ட் இன மக்களிடையே நடந்த ஒரு படுகொலை சென்னை போலீஸ் ரிகார்டுகளில் இருக்கிறது.

 

மூன்று சகோதரர் உள்ள குடும்பத்தில் இளைய சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவரது சடலத்தை எரித்தபோது சடலத்தின் மேல்பகுதி எரியவில்லை. இது எதிரிகள் செய்த பில்லி சூனிய வேலை என்று 2 சகோதரர்கள் கருதினர். யார் மீது சந்தேகம் எழுந்ததோ அந்த கோண்ட் இன ஆளைக் கொன்று அவரது சடலத்தை வெட்டி மேல்பகுதியை, இளைய சகோதரர் சடலத்தின் மேல்பகுதி எரிய மறுத்த இடத்தில் வீசினர்.

 

இந்தக் குற்றத்துக்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது போலிஸ் குறிப்பேடுகளில் இருப்பதாக ஆர்தர் மைல்ஸ் என்பவர் எழுதிய புத்தகத்தில் உள்ளது.

 

ஒரு கிராமத்தில் காலரா நோய் பரவிவிட்டால் அவர்கள் பன்றிக் கொழுப்பை மேலே தடவிக்கொண்டு வளைய வருவர். காலரா நோய் ஒழியும் வரை இது நீடிக்கும். பன்றிக் கொழுப்பானது காலராவை உண்டாக்கும் தேவதையை விரட்டிவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

 

அந்த தேவதை கிராமத்துக்குள் நுழையாமல் இருக்க வழிகளில் பள்ளங்களைத் தோண்டி அதில் முட்களை நிரப்பி நாற்றம் வீசும் எண்ணையையும் ஊற்றி வைப்பர்.

 

கோண்ட் இன மக்கள் ஒரு நட்புறவு பிரமாணம் (உறுதி மொழி) எடுப்பர். புரி நகர ஜகந்நாதர் ஆலயத்து அட்சதை (புனித அரிசி) மீது சத்தியம் செய்வர். இந்துக்களின் ஏழு புனிதத் நகரங்களில் ஒன்றான புரி (ஒரிஸ்ஸா) ஆலயத்துக்குச் செல்லுவோர் இந்த அட்சதையை வாங்கி யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விநியோகிப்பர். அந்த புனித அட்சதை ஒருவர் கையில் இருக்கும்போது அவர்கள் பொய் சொல்லக்கூடாது. கிராமங்களில் உள்ள ஏழைக் குடியானவர்களுக்கும் நகர மாந்தர்களுக்கும் இடையே இப்படி நட்புறவு ஒப்பந்தம் செய்வதுண்டு. இப்படி ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால் திருவிழாக் காலங்களில் அவர்கள் பரிசுகளை ஒருவருக்கொருவர் கொடுப்பர். ஒருவர் வீட்டு விழாவுக்கு மற்றொருவரை அழைப்பர்.

 

நட்புறவு சத்தியப் பிரமாணம் செய்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவர். இதற்கு “சொங்காதோ” என்று பெயர் (சங்காத்தம்) பழங்குடி மக்களிடையே பல தலைமுறையினருக்கு இடையேகூட இப்படிப்பட்ட நட்புறவு நீடிக்கும்.

 

மற்றொரு பழங்குடி இனம் சிறுத்தைப் புலியின் தோல் மீது நின்றோ அல்லது மயில் இறகைக் கையில் வைத்துக்கொண்டோ சத்தியப் பிரமாணம் செய்வர்.

pic-gond

வாக்குறுதியின் பெயரில் இப்படிப்பட்ட நட்புறவு, பல தலை முறைகளுக்கு நீடிப்பது சத்தியத்தின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. எவ்வளவுதான் வன்முறை, மூட நம்பிக்கை இருந்தாலும் சங்க இலக்கியம் குறிப்பிடும் “வாய்மொழிக் கோசர்” (Truthful Kosas of Sangam Tamil Literature)  போல கோண்ட் இன மக்களும் ‘சத்திய கோண்ட்’ இனத்தினரே.

 

கோண்ட் இனம் உருவானது பற்றி ஒரு நரபலிக் கதையும் இருக்கிறது. பூமியில் முதலில் இரண்டே பெண்கள்தான் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பூமிக்கடியிலிருந்து புதல்வர் இருவர் கிடைத்தனர். ஒரு பெண்மணி செடிகொடிகளை வெட்டும் போது கை விரலில் கத்தி படவே ரத்தம் வழிந்தோடி தரையில் விழுந்தது. அந்த இடம் காய்ந்து அதிலிருந்து மரம் செடி கொடிகள் உருவாயின. அதைச் சமைத்தபோது சுவையாக  இருந்தது. அவளுடைய மகன் காரணம் கேட்டான். உடனே அவள் தன் மகனை அழைத்து என்னைத் தாயென்று எண்ணித் தயங்காதே. என் முதுகை வெட்டிப் புதை என்றாள். அவனும் அப்படியே செய்தான். உலகில் ஜீவ ராசிகள் உண்டாயின. அதிருந்து அவர்கள் ஆண்டுக்கு ஒரு சிறுவனை நரபலி கொடுக்கத் தீர்மானித்தனர். போரா பெண்ணு என்ற கடவுளுக்கு இப்படி நரபலி கொடுக்கப்படும்.

 

இப்போது நரபலிக்குப் பதிலாக எருமை பலி தரப்படுகிறது. ஆனால் கோண்ட் இன பூசாரி சொல்லும் உச்சாடனம் நரபலி உச்சாடனமே: “ஆண் அடிமையே வா, பெண் அடிமையே வா; நீ என்ன சொல்லுகிறாய்? ஹட்டியினால் நீ சிறைப் பிடிக்கப்பட்டய். டொம்பாவினாவால் நீ சிறைப் பிடிக்கப்பட்டாய். நீ எனது குழந்தையாகவே இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்?  ஒரு பானைச் சோற்றுக்கு நீ விற்கப்பட்டுவிட்டாய்”.

 

தமிழ்க் கடவுள்களா?

 

கோண்ட் இன நரபலியில் தொடர்புடைய இரண்டு கடவுளரும் தமிழ்ப் பெயர்கள் உடைய கடவுளர். போரா பெண்ணு,  தரைப் பெண்ணு; இந்தச் சடங்கிற்கு மறியா (மறித்தல்=இறத்தல்) என்று பெயர். மரியா என்பது “ம்ருத்” என்ற சம்ஸ்கிருத வேர்ச் சொல்லில் இருந்து வந்தது. தீவிரமாக ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் மூலமான வேர்ச் சொல் கிடைக்கும். பெண் என்பதும் அந்த மூலச் சொல்லில் இருந்தே வந்தது என்பது புரியும். தரை என்பது “தரணி” என்ற சம்ச்கிருத சொல்லில் இருந்து வந்தது. மற்ற மொழிகளில் இது டெர்ரா TERRA என மருவி வரும்.

 

 

சிந்து சமவெளியிலும் நரபலி காட்சி இருக்கிறது. சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே என்று வாதிடுவோர் இந்த நரபலிக் காட்சியை கோண்ட் இன திராவிடக் குடிகளுடன் ஒப்பிடுவர். உலகில் நரபலி இல்லாத நாகரீகமே கிடையாது. வேதத்திலும் “புருஷ மேத யக்ஞம்” இருக்கிறது. ஆனால் இது நடந்ததற்கான சான்று வேதத்தில் கிடையாது. கம்பத்தில் நரபலிக்காகக் கட்டப்பட்டிருந்த ஒரு சிறுவனையும் புரட்சிக் கவிஞன் விஸ்வாமித்திரன் விடுதலை செய்ததாகவே இருக்கிறது. ஆதி சங்கரரை நரபலி கொடுக்க காபாலிகர் முயன்றபோது அவரது சீடர்களில் ஒருவரே நரசிம்மாவதாரம் எடுத்து அந்தக் காபாலிகனை துவம்சம் செய்ததாகவே இருக்கிறது.

 

 

-subham–

 

 

 

 

 

 

அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 1 (POST NO.3162)

kumara-4842-1bv-344-31

Written by London swaminathan


Date: 17 September 2016

Time uploaded in London: 14-30

Post No.3162

Pictures are taken from various sources; thanks.

 

அஸ்வமேத யக்ஞம் என்றால் என்ன?

இது அரசர்கள் மட்டும் செய்யக்கூடியது. தங்கள் ஆட்சியை விஸ்தரிக்க – விரிவாக்க — அதிகாரத்தை நிலைநாட்டச் – செய்யும் வேள்வி. யாகக் குதிரையை இறுதியில் பலி கொடுக்கும் வேள்வி இது.

 

இது எப்போது துவங்கியது?

ரிக் வேத காலத்திலேயே இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. 18 ஆம் நூற்றாண்டு வரை இது நடந்தது. ராமாயணம், மஹாபாரதம், புராணங்களிலும், கல்வெட்டுகளிலும் இது பற்றிய தகவல்கள் உள. இதை நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவை.

 

அதிசயம் 1

இந்த வேள்வியில் 4, 400  முதலிய நான்கின் மடங்கிலுள்ள எண்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சங்கத் தமிழர் வாழ்விலும் இதே போக்கைக் காணலாம். 18 மேல் கணக்கு நூல்களிலும் , 18  கீழ்க்கணக்கு நூல்களிலும் இதே போல 4, 40, 400  எண்களிலேயே பல நூல்கள் தொகுக்கப்பட்டன. இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் பார்க்கவும்.

 

 

அதிசயம் 2

யாகத்தில் விடப்பட்ட குதிரைக்கு 1000 முத்துக்களாலும், தங்கத்தாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த முத்துக்கள் எங்கிருந்து வந்தன? “பாண்டிய கவாடம்” என்னும் முத்து பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன் குறிப்பிடுகிறான். தமிழ் நாட்டிலிருந்து முத்து  போயிருந்தாலும், குஜராத்திலிருந்து போயிருந்தாலும், இது வரை வெள்ளைக்காரர்கள் எழுதிய தவறான கருத்துகளுக்கு இது வேட்டு வைக்கும்.

 

வேத கால இந்துக்களுக்கு கடல் என்பதே தெரியாது என்றும், அவர்கள் கங்கை நதிக்ரையில் கூட குடி புகவில்லை என்றும், அவர்கள் நாடோடிகள் என்றும் பல அரை வேக்காடுகள் எழுதிவைத்துள்ளன. ஆனால் உலகின் பழைய நூலான ரிக் வேதமோ அஸ்வமேதம் பற்றி குறைந்தது மூன்று மண்டலங்களில் பேசுகிறது. தங்கம் முத்து என்பவை நாகரீக வளர்ச்சியையும், செல்வ வளத்தையும் பூகோள வீச்சையும் காட்டுகிறது.

 

அதிசயம் 3

அஸ்வ மேத யாகத்தில் பயன்படுத்தப்பட்ட குதிரைக்கு 34 விலா எலும்புகள் இருப்பதாக வேதம் குறிப்பிடுகிறது. இது இந்திய வகைக் குதிரையாகும். ஆரியர்கள், மத்திய ஆசியாவிலிருந்து வந்தனர் என்று பல அரை வேக்காடுகள் எழுதியுள்ளன. ஆனால் வேதமோ இந்திய குதிரைகள் பற்றிப் பேசுகின்றன!

அதுமட்டுமல்ல. இந்த 34 என்ற எண் 27 நட்சத்திரங்களையும் 5 கிரகங்களையும் சூரியனையும் சந்திரனையும் குறிக்கும் என்றும் வியாக்கியானம் உள்ளது. இது உண்மையாகில் வேத காலத்திலேயே நமக்கு இந்த வானவியல் தெரியும் என்று விளங்குகிறது .பல அரைவேக்காடுகள்,  நாம் இவற்றை கிரேக்கரிடமிருந்து கற்றதாக எழுதிவைத்துள்ளன.

 

அஸ்வமேத யாகத்தில் வரும் குதிரை சூரியனைக் குறிக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன.

gupta-empire-samudragupta-i-c-330-70-av-dinar-7-70g

அதிசயம் 4

இந்திய அரசர்கள் அஸ்வமேத யாகம் முடிந்தவுடன் தங்கக் காசுகளை வெளியிட்டனர். குதிரை பொறித்த குப்தர் கால தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதே போல பெருவழுதி என்ற பெயருடன் குதிரை பொறித்த நாணயம் கிடைத்துள்ளது. இது புற நானூறு குறிப்பிடும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாக இருக்கலாம். ராஜசூய வேள்வி செய்த குறிப்புகளுடன் இதையும் வைத்துப் பார்க்கையில் பெருவழுதியும் அஸ்வமேதம் செய்திருக்கலாம். இதை காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் குறிப்பால் உணர்த்துவதை ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆக, தமிழர்கள் வேறு கலாசாரம் உடையவர்கள் என்ற வெளிநாட்டுக்கா ரன் வாதத்துக்கு இது பயங்கர வேட்டு வைக்கிறது.

 

புறத்துறை நூல்களில் பத்து வரிக்கு ஒரு முறை இந்துமத குறிப்புகளைக் காணலாம்.

 

அதிசயம் 5

சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதி நாகரீகம் என்றும் அழைக்கப்படும் நாகரீகத்தில் காளைமாடு முத்திரைகள் உண்டு ஆனால் பசு மாடுகள் படம் இல்லவே இல்லை. அது போல குதிரை எலும்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் குதிரை படம் இல்லை. ஒரு வேளை  பசுவும், குதிரையும் புனிதம் என்பதால் முத்திரையில் போடாமல் இருந்திருக்கலாம்.

 

ரிக்வேதத்தில் அஸ்வமேத என்ற பெயரில் ஒரு அரசன் இருந்ததாகப் பாடியுள்ளனர் (RV 5-27-4/6; 8-68-15)

 

அதிசயம் 6

குஷ்டரோகிகள், அஸ்வமேத யாகத்தில் இடம்பெறுகிறார்கள். ஏன் என்றே தெரியவில்லை. வெள்ளைக் குதிரை, மற்றும் வெள்ளைக் குதிரையில் கருப்புக் காதுடைய குதிரைகள் புகழப்படுகின்றன. சிந்து வெளி, சரஸ்வதி நதிப் பகுதி குதிரைகள் புகழப்படுகின்றன.

 

அதிசயம் 7

தாவர, பிராணிகள் உலகத்தில் புழுப்பூச்சிகள் முதல் பெரிய காட்டு மிருகங்கள் வரை 609 மிருகங்கள் அஸ்வமேதத்தில் பங்குபெற்றன. இவைகள் அனைத்தும் கொல்லப்படவில்லை, விடுதலை செய்யப்பட்டன என்றே பலரும் கருதுகின்றனர். காட்டு மிருகங்களைக் கொல்லாமல் விட்டது பற்றிய தெளிவான குறிப்புளது. அந்த அளவுக்கு வனவிலங்குகலைப் பாதுகாக்கும் நாகரீக முதிர்ச்சி பெற்று இருந்தனர்.

 

அகநானூறில் வேள்விக்குண்ட ஆமை உவமை ஒரு புதிராக இருந்தது. அதுவும் அசுவமேத யாக குண்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆமையாக இருக்கலாம் (இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் படிக்கவும்)

 

அதிசயம் 8

ஆரியர்கள் அங்கிருந்து வந்தனர் , இங்கிருந்து வந்தனர் என்று பிதற்றும் பேர்வழிகளுக்கு ஒரு யாகமோ யக்ஞமோ, ஒரு சுயம்வரமோ அப்பகுதியில் நடந்ததாக இன்று வரை காட்ட முடியவில்லை;  மிகவும் கஷ்டப்பட்டு சில பிராணிகள் படுகொலையை ஒப்பிட முயற்சி செய்கின்றனர். ஒன்று கூட பொருந்துவ தில்லை.அத்தகைய ஆராய்ச்சிகளைப் பார்கையில் நமக்குச் சிரிப்பும் பரிதாபமும்தான் வரும். இந்துக்கள் உலகம் முழுதும் சென்றதால் அவர்கள் மொழியின் தாக்கம் அவர்கள் மீது அதிகமாகவும் மற்ற விஷயங்கள் குறைவாகவும் இருக்கிறது என்றே கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் ஈரான் (பாரசீகம்) வரை நமது ஆட்சி இருந்ததால் அங்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அவர்கள் இங்கிருந்து குடியேறிய ஒரு பிரிவினர் ஆவார்கள்.

 

ஆனால் இரண்டயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இமயம் முதல் குமரி வரை இந்தப் பண்பாடு ஒரே மாதிரியாக இருந்ததற்குச் சான்றுகள் உள. இந்த அளவுக்கு வேறு எங்கும் சான்றுகள் இல்லை.

 

malayalam-coin

அதிசயம் 9

 

அஸ்வமேதத்தின்போது ஏராளமான தட்சிணை கொடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பசுமாடுகள், நூற்றுக் கணக்கான குதிரைகள் கொடுக்கப்பட்டன. மேலும் அந்த நேரத்தில் பிராமணர்கள் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும் . அரசாட்சியையே கேட்டாலும் கொடுக்க வேண்டும் ஆனால் அக்கால பிராமன்ணர்கள் அப்படி எக்குத் தப்பாக எதுவும் கேட்கவில்லை. துரோணர் மட்டும் பரசுராமர் செய்த அஸ்வமேதத்தில் பங்கு பெறாமல் வேடிக்கை பார்க்கும் பிராமணர்களில் ஒருவராக நின்றபோதும் எனக்குத் தனுர்வேதம் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார். பரசுராமனும் அவ்வாறே செய்தார்.

 

 

அதிசயம் 10

வேள்வி என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. அக்கினியில் ஆகுதி செய்வது என்பது மட்டும் பொருள் அல்ல. யஜூர்வேதத்திலேயே யாகக் குதிரையின் கண்களை சூரியனாகவும், தலையைக் காலைப் பொழுதாகவும், வாயு தேவனை மூச்சாகவும், சந்திரனைக் காதுகளாகவும் ஒப்பிடும் பகுதிகள் உள்ளன. வேத இலக்கியத்தை அப்படியே பொருள் கொள்ளாமல் அதிலுள்ள தத்துவங்களை உணரவேண்டும்.

 

 

 

அதிசயம் 11

யாரேனும் ஓருவர் நூறு அஸ்வமேதம் யாகம் செய்தால் அவருக்கு இந்திரனின் பதவி கிடைத்துவிடும். இதனால் யாரையும் 100 யாகம் செய் யாதவாறு மண், பெண், பொன் பதவி ஆசைகளைக் காட்டி அவர்களை இந்திரன் விழுத்தாட்டி விடுவானாம். பரசுராமர், ஆண்டுக்கு ஒன்று வீதம்    100 அஸ்வமேதம் செய்தவர். இந்திரன் பிருஹஸ்பதியின் கீழ் 100 அஸ்வமேதம் செய்தவன் அவன் பெயர் சதக்ரது (நூறு செய்தவன் = சதக்ரது).

 

 

அதிசயம் 12

அஸ்வமேத யக்ஞத்தின்போது புதிர்கள் போடுவதுண்டு. அவர்கள் மந்திரங்கள் புதிர்கள் நிறைந்ததாகவும் சில ஆபாச வசனங்களைக் கொண்டதாகவும் இருக்கும். இவைகள் ஏன் இப்படி உள்ளன? உண்மைப் பொருள் என்ன என்பது எவரும் அறியார். வேத கால சமூகம் இலக்கியம் தெரிந்தவர்கள்’ நாகரீகத்தின் உச்சியைத் தொட்டவர்கள் என்பது இதனால் விளங்கும். வெளிநாட்டு, உள்நாட்டு அரை வேக்காடுகள் எழுதியது போல அவர்கள் மாடு மேய்த்த நாடோடிகளும் அல்ல, காலனி பிடிக்க வந்த வெள்ளைக்க ரர் போன்ற பரதேசிகளும் அல்ல!

 

இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் பல விஷயங்களைக் காண்போம்.

தொடரும்……………………………..

 

–SUBAM–

 

விக்ரம ஆண்டு பற்றிய விநோத தகவல்கள் (Post No.3151)

vikrama-1

Translated by London swaminathan

Date: 13 September 2016

Time uploaded in London: 20-20

Post No.3151

Pictures are taken from various sources; thanks.

இந்தியாவில் பல வகையான ஆண்டுகள்/ காலண்டர்கள் பின்பற்றப்படுகின்றன. கலியுகம் (துவக்க ஆண்டு கி.மு.3101) பற்றி எல்லோருக்கும் தெரியும். இதே ஆண்டை மாயா நாகரீகம் , எகிப்திய நாகரீகம் எல்லாம் பெயர் சொல்லாமல் பின்பற்றி வருவது பற்றி முன்னரே எழுதினேன். கலியு கத்தை நாள் கணக்கில் குறிப்பிடம் கோ கருநந்தடக்கனின் பழங்கால தமிழ் கல்வெட்டு பற்றியும் எழுதிவிட்டேன். இந்தியாவின் தேசிய “சக” வருடம் தினமும் வானொலியில் அறிவிக்கப்படுவதால் அனைவரும் அறிந்ததே. பஞ் சாங்கத்தின் முதல் பக்கத்தில் கலியுகம் முதல்  நாமாக உண்டாக்கிய திருவள்ளுவர் ஆண்டு வரை இருப்பதையும் பெரும்பாலோர் அறிவர்.

 

சில  நாட்களுக்கு முன்னர் டாக்டர் எஸ்.என்.சர்மா எழுதிய ஒரு புத்தகம் படித்தேன். அதில் விக்ரம ஆண்டு பற்றிய பல தெரியாத தகவல்கள் உள்ளன. வரலாறு படிப்போருக்குப் பயனுள்ள தகவல்கள்.

விக்ரம ஆண்டு என்பது விக்ரமாதித்யன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. இது கி.மு.57-ல் துவங்கியது. சக இன வெளிநாட்டுப் படை எடுப்பாளர்களை நாட்டைவிட்டு விரட்டியதைக் கொண்டாட இந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.

vikrama-2

இது குறித்த விசித்திர விஷயங்கள் என்ன?

1.முதலில் இதை கிருத வர்ஷம் என்றும் பின்னர், மாளவ வருஷம் என்றும் பின்னர் விக்ரம வருஷம் என்றும் அழைத்தனர். ஏன் இப்படிப் பல பெயர்கள்? அவற்றின் உண்மைப் பொருள் என்ன? பெரிய புதிர்!

 

  1. இதை விக்ரம ஆண்டு என்று அழைத்தது அது தோன்றி சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின்னரே!

 

  1. இவர்கள் குறிப்பிடும் கி.மு.57-ல் விக்ரமாதித்யன் என்ற ஒரு மன்னன் இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை! யார் இந்த விக்ரமாதித்யன்?

 

4.இந்தியாவில் பல மன்னர்கள் விக்ரமாதித்தன் என்ற பெயருடன் ஆண்டனர். வேதாளக் கதைகளில் புகழ்மிகு  விக்ரமாதித்தன் வருகிறான். கதா சரித் சாகரத்தில் அவன் பற்றிக் குறிப்பு வருகிறது.

மஹேந்திர ஆதித்தன் என்ற மன்னனுக்கு சிவபெருமான் அருளால் விக்ரமாதித்தன் என்ற மகன் தோன்றியதாகவும் அவன் சகரர்களை விரட்டியடித்து பல மன்னர்களை வென்றதாகவும் கதா சரித் சாகரம் என்னும் (கதைக்கடல்) நூல் கூறுகிறது. ஆனால் அது கூறும் மன்னர்களில் ஒருவர் கூட வரலாற்றுப்  புத்தகத்தில் இல்லை.

 

கௌட (வங்க) தேச சக்திகுமாரன்

லாட தேச விஜயவர்மன்

சிந்து தேச கோபாலன்

கர்நாடக தேச ஜயத்வஜன்

காச்மீர் தேச சுநந்தனன்

பாரசீக தேச நிர்முகன்

 

ஆகியோரை விக்ரமாதித்தன் வென்றதாக அந்த நூல் செப்புகிறது.

 

5.வரலாற்றில் எல்லோரும் அறிந்த விக்ரமாதித்தன் இரண்டாவது சந்திரகுப்தன். இது அவனது பட்டங்களில் ஒன்று.

 

5.உலகப் புகழ்பெற்ற காளிதாசனை– விக்ரமாதித்தன் அவைப் புலவர்களில் ஒருவர் என்று கூறும் சம்பிரதாயமும் உளது. அவன் உஜ்ஜைனி நகரத்திலிருந்து ஆண்டவன்.

 

6.சமண மத நூல்கள் மேலும் பல புதிய கதைகளை மொழிகின்றன. ஆனால் இவை அனைத்தும் 12-ஆம் நூற்றாண்டில்  எழுத்துரு பெற்றவை. மஹாவீரருக்குப் பின்னர் காலகன் என்பான் 60 ஆண்டுகள் ஆண்டதாக அவை கூறும். கர்தபில்லா என்பவனை சகர்கள் தோற்கடித்ததாகவும் அவநது மகன் விக்ரமாதித்தன் –சகர்களை விரட்டி பழி வாங்கினான் என்றும் தபாகச்ச பட்டாவளி (சமண நூல்) சொல்லும்.

 

7.நூற்றுக்கு மேற்பட்ட மன்னர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட புராணங்கள் விக்ரமாதித்தன் பெயரைச் சொல்லவில்லை!!

 

நாளந்தா கல்வெட்டில் (கி.பி.226) மாளவ வருடம் குறிப்பிடப்படுகிறது.

மாண்டசூர் கல்வெட்டும் (கி.பி.493) மாளவ கண  பற்றி பேசுகிறது. மாளவ கண என்ற சொல்லை 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினியும் இலக்கணப் புத்தகத்தில் எடுத்துக் காட்டுகிறார்.

 

 

தோல்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட சௌஹான் கல்வெட்டில்தான் முதல் முதலில் விக்ரம சம்வட் (ஆண்டு) வருகிறது. அது கி.பி..842 ஆம் ஆண்டுக் கல்வெட்டு!

 

நேபாள த்தில் விக்ரம சம்வட் (வருஷம்) பயன்படுத்தப்படுகிறது. சமணர் புத்தககங்களில் பல கதைகள் உள்ளன. ஆனால் வரலாற்று ஆதாரங்கள் இல்லை.

 

vikrama-3

என் கருத்து:–

 

1.வெள்ளைக்காரர்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு நாமாக மகாநாடு கூட்டி ஆராய வேண்டும். வெளிநாட்டினர். அங்கிருந்து ஒன்று,  இங்கிருந்து ஒன்று என்று பிச்சுப் பிடுங்கி ஒரேயடியாகக் குழப்பிவிட்டுள்ளனர். எங்கெங்கெல்லாம் முரண்பட்ட தகவல்கள் உள்ளனவோ அவைகளில் தனக்கு ஆதரவாக உள்ள விஷயங்களை எடுத்துக் கொண்டு மற்றவைகளை ஒதுக்கிவிட்டனர். சமணர் நூல்கள், கதா சரித் சாகரம் முதலியன பொய் சொல்லத் தேவையே இல்லை.

 

2.விக்ரமாதித்தன் என்பது ஒரு பட்டமே தவிர மன்னன் பெயர் இல்லை. ஆகையால் மன்னன் பெயர் என்பதை மற ந்துவிட்டு அக்கால மன்னர்களில் இது யாருக்குப் பொருந்தும் என்று பார்க்க வேண்டும். காளிதாசன் போன்றோர் இப்படி ஒரு மன்னன் பெயரைச் சொல்லவில்லை.

 

 

3.கடைசியாக இரண்டாவது சந்திரகுப்தன் விக்ரமாதித்தன் என்ற பட்டத்தைக் கொண்டதால் அவனை கி.மு57-ல் ஆண்ட மன்ன என்று கொண்டால் இந்திய வரலாறு தலை கீழாக மாறும் அதாவது எல் லா மன்னர்களின் காலமும் 400 ஆண்டுகளுக்கு முன்போடப்படும். இந்தியாவின் பழமை இன்னும் வலிவு பெறும். இந்தக் கோண த்திலும் ஆராய வேண்டும். இந்தப் புதிர் இன்றுவரை தீர்க்கப்படா மல் இருப்பதால் இது பற்றி விவாதிக்க ஆராய்ச்சி மகாநாடு கூட்ட வேண்டும். இது தமிழ் வரலாற்றை மாற்றி எழுதவும் — காலத்தை முன் போடவும் — உதவும்.

kalidasa

–Subaham–