1915 இலங்கை கலகம்: கொழும்பு செட்டித்தெரு படக்கடை நெயினா முகமது பாடல்

IMG_5075

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by London swaminathan

Date : 9 September  2015

Post No. 2139

Time uploaded in London: – 8-36

Here is the Muslim version of Sri Lankan communal riots in the year 1915.

நேற்று திருச்சினாப்பள்ளி ஷர்பத்து கடை கதிர்வேல் பிள்ளை எழுதிய சிலோன் கலகச் சிந்து வெளியிடப்பட்டது. இன்று அதே பௌத்தர்- முகமதியர் மோதல் குறித்து நெயினாமுகமது பாடியதைப் படியுங்கள்.

ஆண்டு 1915; நூல் இருப்பிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்

IMG_7221

IMG_7222 (2)

IMG_7224 (2)

IMG_7225 (2)

IMG_5085

IMG_5086

IMG_5087

IMG_5088

IMG_5089

IMG_7226 (2)

IMG_7227 (2)

IMG_7228 (2)

1915 ஜூன் 2, கண்டி முதல் கொழும்பு வரை நடந்த, பௌத்தர்- முஸ்லீம் மோதல் பாட்டுப் புத்தகம்!

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by London swaminathan

Date : 8 September  2015

Post No. 2137

Time uploaded in London: – 9-56 am

Buddhist – Muslim Riot in Ceylon ,from Kandy to Colombo on 2nd June 1915.

Tamil Sindhu/Kummi song book on the riot (Source: British Library, London)

தமிழர்கள் தனி ரகம்! அவர்கள் அதிசயப் பிறவிகள்; உலகில் வேறு எவரும் செய்யாத செயல்களைச் செய்து வரலாறு உண்டாக்கிவிட்டனர். 1912 முதல் 1915 வரை பத்திரிக்கைகளில் எது எது தலைப்புச் செய்தியாக வந்ததோ அத்தனையையும் சிந்து, கும்மி பாடல்களாகப் பாடி, அவைகளைப் புத்தகங்களாக அச்சிட்டு, 6 பைசா முதல் 112 பைசா வரை விலை நிர்ணயித்து விற்றும் இருக்கின்றனர்.

இந்த வகையில் எனக்கு பிரிட்டிஷ் லைப்ரரியில் 20 புத்தககங்கள் கிடைத்தன. அததனையும் பழைய பழுப்பு நிற சாணித்தாள். ஆகையால் அவைகளை பிரிட்டிஷ் நூலகப் பாதுகாப்பாளர்கள் ‘’லாமினேட்’’ செய்துவிட்டனர். இது புத்தகத்தைப் பாதுகாத்தாலும் ‘காப்பி’ எடுக்கையில் மிகவும் சன்னமாக இருக்கிறது. வாசகர்கள் இதை ‘’என்லார்ஜ்’’ செய்து படிப்பது நலம்.

1915 ஆம் ஆண்டு கண்டி நகரில் சிங்கள புத்தர்கள் ஆண்டுதோறும் நடத்தும் ஊர்வலத்தை மேளதாளங்களுடன் நடத்தினர். அந்த ஊர்வலம் மசூதிக்கு அருகே வந்தவுடன், இந்தியாவில் முஸ்லீம்கள் செய்ததைப் போலவே, அங்கும் முஸ்லீம்கள் அந்த மேள தாளத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கலகம் வெடித்தது. அதை ஆங்கில ஆட்சி திறம்பட அடக்கியதாக பாடல் சொல்லுகிறது.

((இந்தியாவிலும் இப்படி ஊர்தோறும் கலகம் வெடித்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லீம்களின் வோட்டுக்களைப் பெறுவதற்காக வாளாவிருந்தனர். ஆர். எஸ்.எஸ். இயக்கம் நாடு முழுதும் இந்து உணர்ச்சியைத் தட்டி எழுப்பியவுடன் இந்த கலகங்கள் அடங்கின. நேற்று கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே க்ருஷ்ண ஜயந்தி ஊர்வலம் நடத்தும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்ந்துவிட்டது!))

வேறு எந்த மொழியிலும் இப்படி சூடான பத்திரிக்கைச் செய்திகளைப் பாடலாகப் போட்டு, புத்தகமாக அச்சடித்து, விலைக்கும் விற்றிருப்பாளர்களா என்பது ஐயப்பாடுடையதே.

மைலாப்பூர் தேர்த் திருவிழாவில் சிறுவர்கள் அடிபட்டது முதல், மதுரை அருகே ரயில் மோதிய விபத்து உள்பட கொலை, கொள்ளை, வெள்ளம், கலகம் எல்லாவற்றையும் பற்றிப் பாட்டுப் புத்தகங்கள் உள்ளன. இன்று ஒரு புத்தகத்தைக் காண்போம்:–

IMG_7212 (2)

IMG_7213 (2)

IMG_7214 (2)

IMG_7215 (2)

IMG_7216 (2)

IMG_7217 (2)

IMG_7218 (2)

IMG_7219 (2)

இந்தியாவுக்கு “திராவிடர்கள்” செய்த துரோஹம்!

IMG_4106

Written by London swaminathan

Date : 2 September  2015

Post No. 2117

Time uploaded in London : 14–29

Pro-British, Anti-Brahmin Booklet by “Dravidian” Traitors!

(( from the British Library, London))

ஜஸ்டிஸ் கட்சி என்பது இப்போதுள்ள திராவிடக் கட்சிகளுக்      கெல்லாம் தாய். அது உடைந்து, உடைந்து பல “மு.க.” கட்சிகள் வந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் பிராமணர்கள் மீதுள்ள கோபம், பிரிட்டிஷாருக்கு ஆதரவாக மாறியது. “எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும், பிராமணனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும்” — என்று சிலர் துவக்கிய கட்சி அது. இது எப்படி இருக்கிறது என்றால், குளத்துக்குக் கோபித்துக் கொண்டு ——– கழுவாமல் போனவர் கதையாக இருக்கிறது. சுயநலம் என்பது தேசத் துரோகமாக மாறி பிரிட்டிஷாரே இந்தியாவை நிரந்தரமாக ஆள வேண்டும் என்று காந்தி முதலியோருக்கு எதிராக ஒரு கோஷ்டி கொடி தூக்கியது. பிராமணர் மீதான வெறுப்பும் பிரிட்டிஷாருக்கு தாளம் போடுவதும் எந்த அளவுக்குப் போனது என்பது இந்த நூலைப் படிப்போருக்கு புலப்படும். இதை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து ‘காப்பி’ எடுத்தேன்.

இந்தியாவை என்றுமே பிராமணர்கள் மட்டுமே ஆள்வார்கள் என்ற பிரமையை ஏற்படுத்தி அவர்கள் பிரசாரம் செய்தனர். அந்தப் பிரசாரம் எல்லாம், பாரதி – வ.உ.சி.- வ.வே.சு. ஐய்யர் என்ற மூன்று வீரர்களின் பிரசாரத்தில் வெள்ளத்தில் அடித்துக்கொண்ட வேரற்ற மரங்களாக அடித்துச் செல்லப்பட்டன. இப்போது நாட்டை ஆளும் நரேந்திர மோடி முதல் இதற்கு முன் பல மாநிலங்களை ஆண்ட முதல்வர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்ல என்பதும், சுதந்திர இயக்கத்தை முன்னின்று நடத்திய காந்திஜி பிராமணர் அல்ல என்பதும் இவர்களின் பிரசாரத்தைப் பொய்யாக்கிவிட்டன.

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தலில் போடியிட்டபோது பிராமணர்களாலேயே தோற்கடிக்கப்பட்டனர். இவ்வளவுக்கும் மொத்த ஜனத் தொகையில் பிராமணர் தொகை எப்பொழுதுமே மிகமிகக் குறைவு. ஒரே ஒருமுறை மட்டும் ஜஸ்டிஸ் கட்சி வென்றது. காரணம்? எல்லா கட்சிகளும் தேர்தலை பகிஷகரித்தன. அந்த ஒரு கட்சி மட்டும் வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது. வேறு யாரும் ஓட்டுப்போட வராததால் அவர்களே அவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பிரிட்டிஷாருக்கு ‘ஜே’ போட்டனர். பின்னர் ஜனநாயக முறையில் அழிக்கப்பட்டனர்.

IMG_4107 (2)

IMG_4108 (3)

IMG_4109 (2)

IMG_4110

\IMG_4111

IMG_4112 (2)

IMG_4113

IMG_4114

IMG_4115

IMG_4116

IMG_4117

IMG_4118

IMG_4119

IMG_4120

IMG_4121

IMG_4122

IMG_4123

IMG_4124

IMG_4125

IMG_4126

IMG_4127

IMG_4128 (2)

IMG_4129 (2)

முற்றும்.

இலங்கைச் சரித்திரம்

Article No. 2108

Compiled  by London swaminathan
Date : 30 August  2015
Time uploaded in London :– 7-14 am

IMG_4070

வடமொழியில் காந்தபுராணத்துள்ள, தக்ஷிண கைலாச மான்மிய சங்கிரகம் எனப்படும் இலங்கைச் சரித்திரம்

யாப்பாணத்து வண்ணைநகர் சு.ரத்தினசபாபதி சாஸ்திரிகளால் ஏடுகளிலிருந்து மொழிபெயர்த்துச் சொல்லியபடி, நல்லூர் வ.சின்னத்தம்பி புலவரால் அச்சில் பதிப்பிக்கப்பட்டது.

இந்த நூல் பிரிட்டிஷ் மியூசியத்தில் 1911- ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டதாக கடைசி பக்கத்தில் முத்திரை இருப்பதால் அதற்கு முன்பு பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது லண்டன் பிரிட்டிஷ் லைப்ப்ரரியில் உள்ளது.

IMG_4071 - Copy

IMG_4072 (2) - Copy

IMG_4073 (2)

IMG_4074 (2)

IMG_4075 (2)

IMG_4080 (2)

IMG_4083 (2)

IMG_4084 (2)

IMG_4085 (2)

IMG_4086 (2)

IMG_4087 (2)

IMG_4088 (2)

IMG_4089 (2)

IMG_4090 (2)

IMG_4091 (2)

IMG_4092 (2) IMG_4094 (2)

IMG_4093 (2)

IMG_4095 (2) IMG_4096 (2)

IMG_4098 (2)

IMG_4099 (2)

IMG_4100 (2)

IMG_4101 (2)

IMG_4102 (2)

IMG_4103 (2)

IMG_4105 (2)

பாரதியாரின் சரித்திர அலசல்

IMG_3419

Article No. 2061

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 11 August  2015

Time uploaded in London :– 6-01

 

மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த எதிரிகள்! – 1

By .நாகராஜன்

 

 

பாரதியாரின் சரித்திர அலசல்

ஹிந்து தேச சரித்திரத்தை மஹாகவி பாரதியாரிடமிருந்தே தெரிந்து கொள்ள வேண்டும். அதி அற்புதமாக பகுப்பாய்வு செய்யும் திறமை கொண்ட மேதை அவர்.

இந்தியர்களில் ஜாதீய ஐக்கியம் எங்ஙனம் உண்டாகும்?’ என்ற அற்புதமான நீண்ட கட்டுரையை ஒரு சிறு நூலாக புதுவையிலிருந்து அவர் வெளியிட்டுள்ளார். இதன் விலை பை 3 (3 பைசாக்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதுவை சூரியோதயத்தினின்று பெயர்த்தெழுதப்பட்டது என்ற குறிப்புடன் இது பிரசுரிக்கப்பட்டுள்ளதுஇது அனைத்து ஹிந்துக்களாலும் படிக்கப்பட வேண்டிய ஒரு கட்டுரை.

 

 

அனைவரும் இந்தியரே

கட்டுரையில் உள்ள மிக முக்கியமான சில பாராக்களை மட்டும் இங்கு பார்ப்போம்:-

 

கிரேக்கர்கள் முதலியவர்கள் இந்தியாவின் மேல் படையெடுத்து வந்த காலத்திலும் இந்தியாவாஸிகளுக்கு இந்தியர்களென்னும் நாமங்கொடுத்து வியவஹரித்து வந்தவர்களேயொழிய வேறில்லை.

 

பின்னும் சில மொகலாயர்கள் படையெடுத்து வந்த காலத்திலும் இந்தியாவின் புத்திரர்களுக்கு இந்தியரென்னும் பொது நாமம் சூட்டியே வியவஹரித்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான வேதாந்த மதம் பரவியிருந்திருக்க வேண்டும், அல்லது ஒருகால் வேறு வித மதங்களிருப்பினும் ஒரு ஜாதியின் பெயரை அவர்களது ஜன்ம தேசத்தைக் கொண்டு கூப்பிடும்பொழுது வழக்கத்தையனுசரித்து இந்தியர்களென்னும் ஒரே நாமம் சூட்டியிருக்க வேண்டும். மதங்கள் பலவகையுள்ள இதர தேசங்களின் சுதேசிகளைப் பல ஜாதியினராகப் பிரிவினை செய்து கூப்பிடவில்லை. இங்கிலாண்டு, சீனா, ஜப்பான், அமெரிக்கா முதலிய இடங்களின் சுதேசிகளாகிய இங்கிலீஷ்காரர்களிலும், ஜப்பானியர்களிலும், சீனாக்காரர்களிலும், அமெரிக்கர்களிலும் சிலர் கிறிஸ்து மதத்தையும், சிலர் மகம்மதீய மதத்தையும், இன்னும் பலவித மதங்களையும் அவலம்பித்தபோதிலும், ஹிந்து மதத்தையவலம்பித்த ஆங்கிலேயன் தன்னை ஹிந்து ஜாதியென்று சொல்லிக் கொள்ளவில்லை, மஹம்மதீய மதத்தையவலம்பித்த ஓர் அமெரிக்கன் தன்னை மஹம்மதீய ஜாதிக்குச் சேர்ந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வத் தேசங்களிலுள்ள ஜாதீயாரெல்லாரும் தத்தம் அபிப்ராயத்துக்குத் தக்கன மனத்தையும் இஷ்ட தேவதையையும் வைத்துக் கொண்டார்களேயொழியத் தங்கள் ஜாதியை விட்டு நீங்கவில்லை

 

இப்படி ஆணித்தரமாக தன் வாதத்தை மஹாகவி முன் வைக்கிறார். இதற்கான காரணம் என்ன? இந்த தேசத்தவர்களை ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவனையும் ஒவ்வொரு ஜாதியாக ஆங்கிலேயன் பிரிக்க நினைத்ததே காரணம். அதில் அவன் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டான் என்று இன்றைய (2015ஆம் ஆண்டு) நிலையை வைத்து வெட்கத்துடன் துக்கப்பட வேண்டியிருக்கிறது.

 

 IMG_3326

பிரித்தாளும் சூழ்ச்சி

இந்த பிரிவினை வாதத்தை ஆங்கிலேயன் விதைத்த போதே அதைக் கண்டனம் செய்கிறார் மஹாகவி பாரதியார்.

தொடர்ந்து அடுத்த பாராவைப் பார்ப்போம்:_

 

 

ஆனால் இந்தியாவில் மஹம்மதீயம், கிறிஸ்தவம் முதலிய நூதன மதங்களை நுழைத்த பரதேச மதப்பிரவசன கர்த்தர்களும், அவர்களுக்குச் சகாயமாக இருந்து வேலை செய்த பிற்காலத்திய அயல்நாட்டிலிருந்து வந்து இந்தியாவின் மேல் படையெடுத்த சத்துருக்களும், நூதன மதத்திற் சேர்ந்த இந்தியர்களுக்கு அப்பெயரைக் கொண்ட ஜாதியரென்று பெயர் கொடுத்து மறுபடியும் இவர்கள் தங்கள் தாய்நாட்டாருடன் கூடிக் கொள்வனை கொடுப்பனை செய்தும், உண்டு, உடுத்தி, உலாவியுமிருக்கவொட்டாமல் பிரித்து வைத்துக் காலக்கிரமத்தில் இவர்களது ஸஹோதர இந்தியர்கள் மீது பலத்த துவேஷத்தையும் விருத்தி செய்து விட்டார்கள். சுயநலத்தை நாடியே இப்பிரதேச பாதிரிகளும், மற்றுமுள்ள மதகுருமார்களும் இத்தகைய பேதத்தை உண்டு பண்ணி விட்டார்கள். இந்தப் பேதத்தை அவ்வக்காலத்திய அன்னிய ஜாதி இராஜாங்கங்களும் விருத்தி செய்து தங்கள் நிலைமையை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தன.”

இன்றைய ஹிந்துமுஸ்லீம் பிரச்சினைக்கு, மைனாரிட்டி மதத்தவர்கள் என்ற பிரச்சினைக்கு காரணம் தேசீய உணர்வு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஆங்கிலேயனின் சூழ்ச்சியே காரணம் என்பதை மஹாகவி இப்படி மிகத் தெளிவாகக் கூறுகிறார் .

 

 

அத்தோடு மட்டுமல்ல, பாபர் முதல் ஆங்கிலேயர் வரையுள்ள அனைவரும் இந்தியருக்குள் வேற்றுமை உணர்ச்சியை வித்திட்டு வளர்த்தனர் என்பதையும் அவர் தனது கட்டுரையில் விரிவாக எடுத்துரைக்கிறார்.

 

ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை அவர் அப்படியே சுட்டிக் காட்டுகிறார். அவரது கூற்றை அப்படியே பார்ப்போம்:“’பிரித்தாளுவதுஎன்பது இக்காலத்திய ஆங்கிலேய இராஜதந்திரத்தில் மிக்க கௌரவமான முறையாகக் கையாளப்பட்டு வருகிறது

 

 அவரது கட்டுரையின் முக்கியமான பகுதியைத் தொடர்ந்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

                                                   –தொடரும்

டாக்டர்களும் வழக்கறிஞர்களும் — சில சுவையான சம்பவங்கள்!

intl_court_stamp

Article No.1993

Compiled by London swaminathan

Date 14th July 2015

Time uploaded in London:  காலை 9–36

டாக்டர்களையும் நீதித்துறை நிபுணர்களையும் மனுவும் வள்ளுவனும் கண்ட முறையை நாளைக்குச் சொல்லுகிறேன். இன்று மேலை நாட்டினர் அவர்களை எப்படி நோக்கினார்கள் என்பதைக் காண்போம்.

அன்புடையீர்,

ஆங்கிலக் கட்டுரையில் 15 சம்பவங்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அத்தனையும் கொடுத்தால் இடம் போதா, நேரம் போதா! ஆக ஒரு சில மட்டும் இங்கே:–

டயோஜெனிஸ் (Diogenes)  எனவர் 2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ மேதை. ஒரு டாக்டரும் வழக்கறிஞரும் அவரிடம் சென்று எங்களிடையே ஒரு வாக்குவாதம், சர்ச்சை! யாருக்கு முதல் மரியாதை? வரிசையில் யார் முதலில் செல்ல வேண்டும்?

தத்துவ வித்தகர் சொன்னார்:

திருடன் (Thief) முதலில் போகட்டும்; அவன் பின்னால் மரணதண்டனையை நிறை வேற்றுபவன் (executioner) செல்லட்டும்!

உடனே வக்கீல் சந்தோஷத்துடன் முதலில் சென்றார். அவரைப் பின் தொடர்ந்தார் டாக்டர்!

Xxxx

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் ஒரு ஏழை வழக்கறிஞர் இறந்து போனார்.

எல்லா சட்டத்தரணிகளும் சேர்ந்து ஆளுக்கு ஒரு ஷில்லிங் வசூல் செய்து சவ அடக்கம் செய்ய முன் வந்தனர்.

வழக்கறிஞர் குழு ஒன்று, அந்த ஊரின் தலைமை நீதிபதியிடம் போய், “ஐயன்மீர்! நீவீர் ஒரு ஷில்லிங் கொடுத்தால் நன்றிக் கடற்பாட்டுடையராய் இருப்போம்” என்று நவின்றனர்

அதற்கு அவர் மறுமொழி கொடுத்தார்:

ஒரு ஷில்லிங்! ஒரே ஷில்லிங் தானா? ஒரு வழக்கறிஞரைப் புதைக்க ஒரே ஷில்லிங் என்றால் இந்தாருங்கள் ஒரு ‘கினி’ தருகிறேன். இன்னும் 20 வழக்கறிஞர்களை அடக்கம் செய்யுங்கள்.”

ஒரு கினி = 21 ஷில்லிங்

ஷில்லிங், கினி என்பதெல்லாம் பழைய பிரிட்டிஷ் நாணயங்கள். நம்மூர் அணா, தம்பிடி போன்றவை

Xxxx

ஒரு வழக்கறிஞர் தன்னுடைய படத்தை வரையச் சொல்லி பணம் கொடுத்தார். அவர் தனது ஒரு கையை ‘பேண்ட் பாக்கெட்’டுக்குள் வைத்துக் கொண்டு நிற்பது போல ‘போஸ்’ கொடுத்தார். படம் தத்ரூபமாக வந்தது. அதைப் பார்த்த aவரது நண்பர்கள் புகழ்ந்தனர்:

ஐயா, படத்தைப் பார்த்தால் உங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. அதே ‘ஸ்டைல்”! அதே தோற்றம்! என்று புகழ்ந்து தள்ளினர்.

பக்கத்தில் ஒரு வயதான விவசாயி நின்று கொண்டிருந்தார்.அவர் சொன்னார்;

“எல்லாம் தத்ரூபமாக, அச்சடித்த மாதிரி அப்படியே இருக்கிறது. ஆனால் அந்த வழக்கறிஞரின் கை, மற்றொருவர் பாக்கெட்டில் இருப்பது போல வரைந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்குமே!”

Xxxxxx

அமெரிக்காவில், ஒரு நகரத்தில், ஊரிலேயே மிகவும் பிரபலமான ஒரு செல்வந்தர் ஒரு படுகொலை செய்துவிட்டார். சாட்சியங்கள் எல்லாம் அவருக்கு எதிராகவே இருந்தன. கட்டாயம் மின்சார நாற்காலியிலிருந்து (மரண தண்டணை) தப்பிக்கமுடியாது என்று தெரிந்துவிட்டது. அவரே தான் கொலைகாரன் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் அவருக்கோ ஏராளமான நண்பர்கள். அவரை எப்படியும் காப்பாற்றுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டனர்.

மேலை நாடுகளில் இதுபோன்ற வழக்குகளில் ஜூரர் எனப்படும் நடுவர் பன்னிருவர் இருப்பர். அவர்களே ஒருவர், குற்றம் இழைத்தாரா அல்லது இல்லையா என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்வர். பின்னர் நீதிபதி தண்டனை என்ன என்பதை அறிவிப்பார்.

விவாதம் முடிந்து ஜூரிகளின் அறிவிப்பு வெளியாகும் நாள் வந்தது. அவர்கள் ஒருமித்த முடிவு எடுத்து குழுத்தலைவர் மூலம் அறிவித்தனர்:

“அவர் குற்றவாளி அல்ல!”

நீதிபதிக்கு வியப்பு ஒரு புறம்; ஆத்திரம் மறுபுறம்!

அட! பாவிப்பயல்களா! குற்றவாளியே தான் கொலைகாரன் என்று ஒப்புக் கொண்டுவிட்டானே! எப்படியப்பா, இப்படிப்பட்ட முடிவை எடுத்தீர்கள்? என்று கேட்டார்.

“கனம் நீதிபதி அவர்களே! இந்தக் குற்றவாளி இருக்கிறானே, அவன் மஹா பொய்யன். அவன் உண்மை பேசியதே இல்லை. அவன் கொலைகாரன் என்று சொல்வதை நாங்கள் நம்பமுடியாது!”

நீதிபதியும் வாய் பேசாது அந்த செல்வந்தரை விடுதலை செய்து, வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

Xxxx

Dumas1970FR

இதோ டாக்டர்கள் பற்றி………………

ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்வதற்குத் தயாராக ஒரு நோயாளி காத்திருந்தார். அவர் படுக்கை வண்டி அருகே மற்றொரு அழகிய இளம் பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை நோக்கி நோயாளி:

“எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. உடம்பெல்லாம் நடுங்குகிறது. ஏனெனில் என் வாழ்க்கையில் இதுதான் முதல் ஆபரேஷன்@.

அந்த இளம் பெண் சொன்னாள்:

“எனக்கும் மிகவும் பயமாக இருக்கிறது. உடம்பெல்லாம் நடுங்குகிறது. என் கணவர்தான் இன்று ஆபரேஷன் செய்யும் டாக்டர். அவருக்கும் இதுதான் முதல் ஆபரேஷன் கேஸ்!”

Xxxx

அலெக்ஸாண்டர் டுமா (Alexander Dumas) என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். அவருடைய ஊரான (Marseilles) மார்செய்க்கு பிரபல டாக்டர் (Dr.Gistal) ஒருவர் வந்து குடியேறினார். ஒருநாள் நாவலாசிரியரை விருந்துக்கு அழைத்தார். விருந்தும் முடிந்தது. அந்த டாக்டர் பெருமையாக தனது புகைப்படத் தொகுப்பை எடுத்து மேஜையில் வைத்தார். டுமாவும் அதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

டாக்டர் சொன்னார்

அன்பரே! உங்கள் எழுத்துகளும் படைப்புகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச் சுவையாக எழுதுவதில் கைதேர்ந்தவர் நீவீர்! எங்கே என் புகைப்படத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்ப்போம்?

நாவலாசிரியர் பேனாவைக் கையில் எடுத்தார்; எழுதினார்:–

“டாக்டர் கிஸ்டார் ஊருக்கு வந்தார்

நோய்களை எல்லாம் தீர்க்க ஆசை!

மருத்துவ மனைக்கு தேவையே இல்லை!

தரைமட்டம் ஆக்கிவிட்டோம்”

இபடி ஒரு கவிதையை அவர் எழுதியவுடன் டாக்டருக்கு மிகவும் மகிழ்ச்சி!

“எழுத்தாளர்களுக்கு மற்றவர்களைப் புகழ்வது ஒன்றே தொழில்” என்று டாக்டர் பாராட்டி முடிவதற்குள் டுமா, இன்னும் ஒருவரியைச் சேர்த்தார்:

ஆனால் இடுகாடு (cemetery) எல்லாம் பெரிதாப்போச்சு!

ஆக, டயோஜெனிஸ் காலம் முதல் டாக்டர்கள் என்றால் யம தர்மன்கள், வக்கீல்கள் என்றால் கொள்ளைக்காரன்கள் என்ற கருத்து மேலை நாடுகளில் இருந்து வருகிறது. நாளைக்கு நமது பண்பாட்டில் எப்படி? என்பதைப் பகிர்வோம்.

“பிரிட்டனில் 4500 ஆண்டு பழமையான இந்து கோவில்!”

IMG_1596

ஆராய்ச்சிக் கட்டுரை எண் : 1981

தேதி : ஜூலை 8, ஆண்டு 2015

லண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்: காலை10-00

1990 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள சவுத் இந்தியன் சொஸைட்டி ஏற்பாடு செய்த கோச் டூரில் போர்ன்மவுத், ப்ளிமவுத் கடற்கரைக்குச் செல்லுகையில் ஸ்டோன்ஹெஞ்ச் சென்றோம். 25 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற திங்கட்கிழமை மீண்டும் சென்றேன். சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை எழுந்தது.முன்னை விடக் கூட்டம் கூடியிருக்கிறது. குறிப்பாக ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர்.

ஸ்டோன்ஹெஞ்ச் என்றால் என்ன?

15 பவுண்ட் நுழைவுக் கட்டணம் செலுத்துவோருக்கு ஒரு துண்டுப் பிரதி கொடுப்பார்கள். அதில் எழுதப்பட்ட விஷயம்:” ஸ்டோன்ஹெஞ்ச் என்பது ஒரு பழங்கால கோவில்; சூரியனுடைய சஞ்சாரத்தின் அடிப்படையில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் நவீன விஷயங்களை அறிந்தோரால் எழுபப்பட்டது”.

இது லண்டனிலிருந்து 100 மைல் தொலைவில் ஏமிஸ்பரியில் இருக்கிறது. (பிரிட்டனில் பல ஊர்களின் பெயர்கள் “பரி” என்று முடியும். இதுசம்ஸ்கிருதச் சொல்= புரி. அதுவே தமிழில் ஊர் ஆனது. மேலும் பல ஊர்கள் “ஹாம்” என்று முடியும். இது கிராமம் எனும் சம்ஸ்கிருதச் சொல்லின் மரூஉ. பர்மிங்ஹாம், ஈஸ்ட் ஹாம், லூயிஸ் ஹாம் என்பர்.)

துண்டுப் பிரதிலுள்ள இரண்டு சொற்களைக் கவனியுங்கள்: கோவில், சூரியனுடைய செலவு/சஞ்சாரம்.

இதனாலும், இந்த இடத்தை “ட்ரூய்ட்ஸ்” என்னும் இனத்தாருடன் தொடர்பு படுத்துவதாலும் இதை இந்துக்களின் சின்னம் என்று நான் எண்ணுகிறேன். முதலில் “ஸ்டோன்ஹெஞ்ச்” பற்றிப் பார்ப்போம். படத்தைப் பாருங்கள். பிரம்மாண்டமான கற்கள் மீது அதே அளவுள்ள கற்களை ஏற்றி வைத்துள்ளனர். இது வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது சில கற்கள் (பாறைகள்) அங்கு இல்லை.

இதில் மர்மம் என்ன வென்றால், எங்கிருந்து இந்த பிரம்மாண்டமான பாறைகள் வந்தன? எப்படி அதைக் கொண்டு வந்தனர்? எதற்காக அதை சிரமப்பட்டு ஏற்றி வைத்தனர்? அதை ஏன் வட்ட வடிவில் அமைத்தனர்? யார் இதைச் செய்தனர்? எப்போது இப்படிச் செய்தனர்? அருகில் மலைகளே இல்லையே!

இதே கேள்விகளை நாம் ராஜ ராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் விஷயத்திலும் எழுப்பினோம். விடைகளைக் கண்டோம். அது போல ஸ்டோன்ஹெஞ்ச் விஷயத்திலும் தடைகள் எழுப்பி விடையும் கண்டுவிட்டனர். எனது கட்டுரை ஸ்டோன்ஹெஞ்சின் பெருமையைப் பேச எழுந்த கட்டுரை இல்லை. இந்துக்களுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று ஆராயும் கட்டுரை.நிற்க.

உலகில் இன்றுவரை சூரியனை வழிபடும் இனம் இந்து இனமே. போன ஆண்டு இராக் நாட்டு யஸீதி என்னும் பழங்குடிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதில் அவர்களும் இந்துக்களைப் போலவே மயில், அக்னி, சூரியன் ஆகியவற்றை வழிபடுவதைக் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் எல்லோரும் ரிக்வேதத்தில் குறிப்பிடப் படும் ஐந்துவகை மக்களின் (பஞ்ச ஜனாஹா) ஒரு குழுவான த்ருஹ்யூ குழுவாகும். ரிக் வேதத்தில் வரும் பத்து ராஜா யுத்தத்துக்குப் பின்னர் அவர்கள் எல்லோரும்  — அதாவது தோற்றுப்போன ராஜாக்களின் மக்கள், ஐரோப்பாவில் குடியேறினர். யது (யாதவ) என்னும் குலத்தை சேர்ந்த சிலர் அங்கு சென்று யூதர் ஆயினர். த்ருஹ்யூ குலத்தினர் ட்ரூய்ட்ஸ் ஆயினர்.

IMG_4788 IMG_4792

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்

சூரிய வழிபாடு

உலகில் சூரியனுக்குப் பல இடங்களில் கோவில்கள் உண்டு ஆனால் ஒரிஸ்ஸாவில் கொனாரக், காஷ்மீரில் மார்த்தாண்ட், குஜராத்தில் மதெரா முதலிய 13 சூரியன் கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன. இவைகளில் பல முஸ்லீம்களின் தாக்குதலால் அழிந்தன; பூஜைகள் நின்றன. ஆயினும் இந்துக்களின் சூரிய வழிபாடு நிற்கவில்லை.

1.பிராமணர்கள் நாள்தோறும் மூன்று முறை வேத மந்திரங்களைச் சொல்லி சூரியனை வழிபடுகின்றனர். அதற்கு த்ரி கால சந்தியா வந்தனம் என்று பெயர்.

2.சூரியனார் கோவில் முதலிய கோவில்களில் இன்றும் வழிபாடு நடக்கிறது. எல்லா தென்னிந்திய கோவில்களிலும் சூரிய, சந்திரர், நவக் கிரஹ சந்நிதிகள் உண்டு.

3.சூரிய சஞ்சாரம்: இது எல்லா ஜாதியினருக்கும் முக்கியமானது. சூரியனின் வடதிசைப் பயணத்தை (உத்தராயண புண்ய காலம்/மகர சங்கராந்தி/ பொங்கல்)  எல்லோரும் கொண்டாடுகிறோம். சூரியனின் தென் திசைப் பயணத்தையும் (தட்சிணாயன புண்ய காலம்) எல்லோரும் கொண்டாடுகிறோம். இந்த இரண்டு நேரங்களில் தை, ஆடி அமாவசைகளில் எல்லா ஜாதியினரும் புனித நதி, கடற்கரைகளில் நீத்தாரை நினைந்து நீர்க்கடன் செலுத்துவர். தமிழர்கள் இன்று வரை இதைச் செய்துவருகின்றனர்.

இதே தான் ஸ்டோன்ஹெஞ்ச்சிலும் நடை பெற்றது. பிரிட்டன் என்பது குளிர் நாடாகையால் தட்சிணாயன புண்ய காலத்தை (தென் திசைப் பயணம்) பெரிதாகக் கொண்டாடினர். இப்பொழுதும் மிக நீண்ட பகல் பொழுதுடைய ஜூன் 21–ஆம் தேதி த்ரூய்ட்ஸ் என்ற பெயரில் வெள்ளாடை தரித்த ஒரு குழு விநோதச் சடங்குகளைச் செய்கின்றது.

IMG_4767 IMG_4773

இதுபற்றி கி.மு நாலாம் நூற்றாண்டில் ஒரு குறிப்பும் கிடைத்திருக்கிறது. பிரிட்டனில் ஓரிடத்தில் வட்ட வடிவக் கற்கோயில் இருப்பதாகவும் அது அப்பலோ கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் எழுதியுள்ளனர். அப்பலோ என்பது விஷ்ணுவைக் குறிக்க, கிரேக்கர்கள், வேறு சில இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். ஸ்டோன்ஹெஞ்ச் போல ஏவ்ஸ்பரியிலும் வட்டவடிவப் பாறைகள் உள.

ஆகவே, சூரியனுடைய போக்கின் அடிப்படையில், சூரியன் கோவில் கட்டப்பட்டிருப்பதாலும், அங்கே சூரிய வழிபாடு நடைபெற்றதாலும் இது இந்துக்களுடன் –- வேத கால த்ருஹ்யூக்களுடன் — தொடர்புடையது என்பது எனது துணிபு.

நாம் எல்லோரும் சூரிய நமஸ்காரம் என்று மந்திரத்துடன் பயிற்சியும் செய்கிறோம். அழிந்து போன இந்தப் பண்பாட்டை, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நன்கு பரப்பியமையால் இப்பொழுது புத்துயிர் பெற்றுள்ளது.

இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தைப் படித்து விட்டு லண்டன் வாழ் திருச்சி கல்யாண குருக்கள் தொலைபேசியில் சில விஷயங்களைச் சொன்னார்:

இந்துக் கோவில்கள் பெரும்பாலும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையாஇ நோக்கியே இருக்கும்.

நவக்கிரஹ சந்நிதிகள் வரும் முன்னரே சூரியன், சந்திரன் சந்நிதிகள் நம் கோவில்களில் உள.

மேலும், ஒரு கோவில் தட்சிணாயணத்திலோ, உத்தராயணத்திலோ கட்டப்பட்டால் அதற்குத் தக முகப்பு, சந்நிதிகளை அமைக்கும் வழக்கமும் உண்டு.

யாக சாலை பூஜைகளில் காலையில் துவங்கும் போது சூரிய பூஜை முதலில் செய்ய்ப்படும்.

இவை அனைத்தும் இன்று வரை நாம் செய்யும் சூரியவழிபாட்டுக்கு சான்று பகரும்.

IMG_1542 IMG_1540

நூற்றுக் கணக்கான எடையுடைய கற்கள்; பழங்காலக் குடிசைகளின் மாதிரி.

ட்ரூயிட்ஸ் – இந்து தொடர்பு

சில அறிஞர்கள் ஸ்டோன்ஹெஞ்ச் வட்டக் கற்பாறை அமைப்பையும் ட்ரூயிட்ஸ் இனத்தாரையும் தொடர்பு படுத்துவது கால வழூஉ ஆகும் என்பர். ஏனெனில் ஸ்டோன்ஹெஞ்சின் எல்லா அம்சங்களும் கி.மு. 1200 க்கு முந்தியவை. ட்ரூயிட்ஸ் இனக் குழுவோ கி.மு 4 அல்லது 5ஆம் நூற்றாண்டு முதலே அறியப்பட மக்கள் என்பது அவர்களுடைய வாதம். ஆனால் இதற்கு மறுப்புச் சொல்ல பல வாதங்கள் உள. மோசஸ் என்பவருக்கு இதுவரை வரலாற்று,  தொல்பொருட் சான்றுகள் உலகில் கிடைக்கவில்லை. ஆயினும் அவரை அஸ்திவாரமாக வைத்து யூத மதம் என்ற மதமே இருக்கிறது!!! ஆகையால் தொல்பொருட் துறைச் சான்றுகள் இல்லை என்ற பெயரில் ட்ரூயிட்ஸ்களை ஓரம் கட்டுவதில் எந்த நியாயமும் இல்லை. நிற்க.

IMG_4772 IMG_4777

ட்ரூயிட்ஸ்கள் யார்?

அயர்லாந்து மற்றும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நிலப்பரப்புகள் ஒரு காலத்தில் கெல்டிக் (செல்டிக் என்றும் சொல்லுவர்) இனத்தின் கீழ் இருந்தது. இதில் பிராமணர்களைப் போல புரோஹிதர்களாக இருந்தவர்களே ட்ரூயிட்ஸ்கள். இவர்களைப் பற்றி ரோமானியர்களும், கிரேக்கர்களும் நிறைய எழுதிவைத்துள்ளனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.முதல் நூற்றாண்டு வரையிருந்த அலெக்ஸாண்டர் பாலிஹிஸ்டர், தியோதரஸ் சிகுலஸ், ஜூலியஸ் சீசர், மூத்த பிளினி ஆகியோர் எழுதிய குறிப்புகளில் இருந்து நாம் அறிவது யாதெனின்:

1.இவர்கள் மறு பிறப்பில் நம்பிக்கை உடையோர்.

2.ஆத்மா நிரந்தரமானது; அழிக்கவொணாதது என்பர்

3.கடவுளருக்கு உயிர்ப் பலி, மனித பலி கொடுப்பர்

4.ஓக் மரங்களையும் மிசல்டோ மூலிகையயும் புனிதமாகக் கருதுவர்.

மேற்கூறிய அனைத்தும் வேதங்களில் உள்ளன. புருஷமேத யக்ஞம் என்னும் நரபலி சிந்து சமவெளி முத்திரையில் இருப்பது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னரே தனிக் கட்டுரை வரைந்துள்ளேன். ஆயினும் நாம் மாயன் நாகரீகம் போலவோ மத்தியக் கிழக்கு போலவோ இதை பெருமளவு நடத்தியமைக்கு ஆதாரம் இல்லை .பஹ்ரைன் முதலிய மத்தியக் கிழக்கு நாடுகளில் பீனீஷியர்கள் முதலியோர் லட்சக்கணக்கில் குழந்தைகளைப் பலிகொடுத்ததையும், பல்லாயிரக் கணக்கில் குழந்தைகள் கல்லறைகள் கண்டு பிடிக்கப்படுவருவது குறித்தும் வேறு ஒரு கட்டுரையில் தந்து விட்டேன்.

ஆக மேற்கூறிய சில அம்சங்களில் ட்ரூயிட்ஸ் இனம் இந்துக்களுடன் தொடர்புடைத்தே.

கடைசியாக ட்ரூயிட்ஸ் என்ற சொல்லின் பொருளும் இதை இந்துக்களுடன் தொடர்பு படுத்துகிறது. சிலர் இந்தச் சொல்லை ரிஷிகள் (மந்த்ர த்ருஷ்டா= ட்ரூயிட்ஸ்) என்பர். இன்னும் சிலர் தருவை (மரத்தை) வழிபட்டவர்கள் (தரு=ட்ரீ=டரு=ட்ரூயிட்ஸ்=மரம்) என்பர். ஆக த்ருஷ்ட (பார்வை), தரு (மரம்) என்பன எல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள். இன்னும் சிலர் இது ‘ரென்’ இனப் பறவை, அல்லது மந்திரவாதி என்பர்.

druids_stonehenge

ஆகவே ட்ரூயிட்ஸுக்கும் ஸ்டோன்ஹெஞ்சுக்கும் தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்துக்களுடன் அவர்களுக்குள்ள தொடர்பு அவர்தம் புனர் ஜன்மம், ஆத்மாவின் அழியாத் தன்மை ஆகிய கொள்கையாலும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஜூலியஸ் சீசர் முதலியோர் இவர்களை ‘பிதகோரியன்’ என்பர். அதாவது கிரேக்க நாட்டு தத்துவவித்தகண் பிதகோரஸின் கொள்கைகலைப் பின்பற்றுபவர்கள் என்பது பொருள். பிதகோரஸ், இந்திய உபநிஷதக் கொள்கைகளைக் கற்று கிரேக்க நாட்டில் பரப்பியதால் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில் , அலெக்ஸாண்டர் ஆகியோர் இந்து மதத்தில் பேரார்வம் செலுத்தியதை முன்னர் வேறொரு கட்டுரையில் கண்டதால் விரிவஞ்சி விடுக்கிறேன்.

படங்கள் திங்கட்கிழமை என்னால் எடுக்கப்பட்டவை; வெள்ளாடைதரித்தோர் படம் என்னுடையதன்று.

மர்ம எண் 8-ம், உலகிலேயே பழைய பெண்கள் பெயர்களும்!

saraswati

Written  by London Swaminathan

Research Article No. 1965

Dated 1 July 2015.

Uploaded at London time : 5-45 am

ரிக் வேதம் உலகிலேயே பழைய நூல் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இரா. மாக்ஸ்முல்லர் இதை யாரும் கி.மு.1200-க்குக் கீழே கொண்டு வரமுடியாது. உலகில் எந்த சக்தியும் இதன் காலத்தைக் கணிப்பது அரிது என்று கடைசியாகச் சொல்லிவிட்டு இறந்து போனார். ஏ.சி.தாஸ் என்பவர் வேத காலம் கி.மு.25,000 என்றும் எஸ்.வி.வெங்கடேஸ்வரா கி.மு.11,000 என்றும் பாலகங்காதர திலகர், ஜெர்மன் ஆராய்ச்சியாளர் ஹெர்மன் ஜாகோபி ஆகியோர் கி.மு 4500-க்கும் முன் என்றும், வீபர் கி.மு 2780 என்றும், ஹாக் கி.மு.2400 என்றும், விண்டர்நீட்ஸ் கி.மு.2000 என்றும், பர்ஜிட்டர் கி.மு.2050 என்றும்,மக்டொனெல், கீத் கி.மு.1400 என்றும், மைகேல் விட்சல் கி.மு.1700 என்றும், ஸ்ரீகாந்த் தலகரி கி.மு.2000க்கு முன் என்றும் செப்புவர்.

ரிக் வேதத்தில் மிகப் பழைய விஷயங்கள் ரகசிய சங்கேத மொழிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு சிறிய ரகசிய விஷயத்தைப் பார்ப்போம். ஆப்ரி சூக்தம் என்று ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு துதி உண்டு. இது அக்னி தேவனை நோக்கிப் பாடப்பட்டாலும்  பல தெய்வங்களின் பெயர்களும் அடிபடுகின்றன. யாக, யக்ஞத்தில் பயன்படுத்தும் புனிதப் பொருட்களைப் போற்றும் துதியெனவும் அறிஞர் பெருமக்கள் மொழிவர். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தத் துதியில் சரியாக எட்டாவது பத்தியில் மூன்று பெண் தெய்வங்களின் பெயர்கள் வருகின்றன. ஏன் எட்டாவது பத்தியில் இப்படிப் பாடுகிறார்கள்? எட்டு எண்ணுக்கும் இந்தப் பெண் தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்கும் நியுமெராலஜி NEUMEROLOGY (எண் ஜோதிடம்) தெரியுமா? அல்லது பாணினிக்கும் முன்னால் சம்ஸ்கிருத இலக்கணம் எழுதியோர் ஏதேனும் விதி இயற்றி இப்படிப் பாடச் சொன்னாரா? என்பதெல்லாம் மர்மமாக உள்ளது.

சம்பந்தர் பாடிய தேவார பதிகத்தில் ராவணன் கர்வத்தை ஒடுக்கியது ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு குறிப்பிட்ட எண் பத்தியில் வரும், பதிகத்தின் பலன் கடைசியாக வரும் என்று நமக்குத் தெரியும். ஆனால் ரிக் வேதம் என்பது 450-க்கும் மேலான கவிஞர்கள் வாய்மொழியாக வந்தது. அவ்வளவு பேரும் ஒரே காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் அல்ல. 500 ஆண்டுக் கால எல்லைக்குள் வாழ்ந்தவர்கள். அவ்வளவு நீண்ட காலத்தில் பாடிய ஒவ்வொரு குடும்பத் தலைமை ரிஷியும் (புலவர்) எப்படி எட்டாவது பத்தியில் இதைச் சொன்னார்கள்? ஏன்? என்ற மர்மம் நீடிக்கிறது. இப்படி ஒரு பாணி (ஸ்டைல்) வகுக்கப் படவேண்டுமானால் அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னேயே பாடத் துவங்கினாலன்றோ இப்படி ஒரு நெறிமுறை உருவாகும்!

“இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை” என்பது—ஆன்றோர் வாக்கு ஆயிற்றே!! ஆகையால் வேதங்களுக்குப் பின்னால்தான் இலக்கணம் வரமுடியும்.

(ரிக் வேதம் என்பது பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன. 10 மண்டலங் களில் ஆறு மண்டலங்கள் ஒரே ரிஷியின் வம்சத்தில் வந்தோர் பாடிய பாடல்களாக வியாசர் தொகுத்து தந்திருக்கிறார். இவற்றை குடும்ப (மண்டலம் 2–7) மண்டலங்கள் எனலாம்.

sarasvati-map-crop

இன்னும் ஒரு அதிசயம்!

யார் அந்த மூன்று பெண் தெய்வங்கள்?

சரஸ்வதி, பாரதி, ஈலா; ஒரே ஒரு இடத்தில் பாரதிக்குப் பதிலாக மாஹி (SARASVATI, BHARATI, ILA).

இதில் என்ன அதிசயங்கள் இருக்கின்றன என்று கண்போம். நமது வேதங்களைப் படித்த வெளிநாட்டுகாரகள் உள் நோகத்துடன் எழுதியதால் பல விஷயங்கள் அவர்களுக்குப் புரியவில்லை. வேத கால மக்கள், ஆண் தெய்வங்களை வணங்கினர், நாகரீகமற்ற பழங்குடி மக்கள் பெண் தெய்வங்களை வணங்கினர் என்று உளறிவிட்டுப் போய்விட்டனர். அவர்கள் உளரியதெல்லாம் ஆங்கிலத்தில் இருந்தவுடன் நம்மவர்கள் அதைப் பார்த்து, அட! அம்மாடியோவ்! இது ஆங்கில மொழியாயிற்றே, ஆகவே அவன் அறிஞன்தான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். உண்மையில் இன்று வரை தொடர்ந்து பெண் தெய்வங்களை வணங்குவது உலகில் இந்துக்கள் மட்டுமே. அருள் சுரக்கும் பூமி, நதிகள் ஆகிய அத்தனைக்கும் பெண்கள் பெயரையே சூட்டினர். எல்லா நல்ல குணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் பெண்மை வடிவத்தில் கண்டனர் (கருணா, பிரேமா, சத்யா, சுகுணா, சுகந்தா).

சரஸ்வதி என்னும் நதி வேத காலத்தில் ஓடிய பிரம்மாண்டமான நதி. அது வறட்சியினாலோ, நில அதிர்ச்சியினாலோ மண்ணில் புதைந்து மறைந்த பின்னரே கங்கை, சிந்து ஆகியன பிரபலமாயின. சரஸ்வதி நதியின் நீர் உயிர் கொடுப்பது போல, சரஸ்வதி என்னும் தெய்வம் உள்ளத்துக்கு உரமூட்டியது. தெய்வமாகவும், தாயாகவும், மொழியாகவும் வணங்கப்பட்டவள் சரஸ்வதி. உலகிலுள்ள பழைய நாகரீக பெண் தெய்வங்கள் எல்லாம் மியூசியங்களில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டுப் போயின. சரஸ்வதியோ இந்து கலாசாரம் பரவிய நாடுகளில் எல்லாம் மக்களின் உள்ளத்தில் உறைகிறாள் இன்றும்!

இதைவிட உலக அதிசயம்! இமயம் முதல், இலங்கையின் தென் கோடி கண்டி/கதிர்காமம் வரை இன்றும் சரஸ்வதி பாரதி, ஈலா பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஈலா என்பது, குஜராத்தி இந்துக்கள் அதிகம் வைக்கும் பெயர். நாம் சரஸ்வதி என்போம். சிருங்கேரி சங்கராச்சார்யார் பெயர்கள் எல்லாம் பாரதி என்றும் காஞ்சி சங்கராசார்யார்கள் பெயர்கள் எல்லாம் சரஸ்வதி என்றும் முடியும்.

gold-number-8

இதைவிட பெரிய அதிசயம்!

யதுகுல (யாதவர்) மக்கள் ஆடுமாடு மேய்த்துக் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று யூதர் ஆயினர். யது = யூத (Yadu = Yuda= Juda). நாம் ‘ய’ (Y) என்றால் மற்றவர்கள் மொழியில் ‘ஜ’ (J) ஆகும். அவர்கள் யேசு என்றால், உலகம் அதை ஜீஸஸ் என்று சொல்லும். ஆகையால் ஜூடாயிஸம் (யூத மதம்) என்றனர். அவர்களில் மூத்தவர் ஆப்ரஹ்ம (ஆபிரகாம்) அவருடைய மனைவி பெயர் சரஸ்வதி (சாரா). ஆக அவர்களும் கூட, பிரம்மாவின் பெயரையும் அவர் மனைவி சரஸ்வதி பெயரையும் வைத்துக் கொண்டனர். நாம் சரஸ்வதியை செல்லமாக சச்சு அல்லது சரசு என்போம். அவர்கள் ஸாரா என்பர்.

(ஜ, ய என்னும் எழுத்துக்கள், ர, ல என்னும் எழுத்துக்கள் உரு மாறுவது பற்றி காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவையும் படித்துப் பயன் பெறுக. அவர் மிகப்பெரிய மொழியியல் அறிஞர். அவர் மட்டும் சங்கராசார்யார் ஆகாமல் மொழியியல் அறிஞர் ஆகியிருந்தால் மேல்நாட்டு மொழியியல் கொள்கைகள் எல்லாம் இவ்வளவு நேரம் குப்பைத் தொட்டிக்குள் போயிருக்கும். யூத மதத்தில் வேத மந்திரம் இருப்பதை எடுத்துக் காட்டி “ரப்பைகளையே” வியக்கவைத்தவர். ரப்பை= யூத மத சாஸ்திரிகள்).

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு: ரிக் வேத துதிகளில் எட்டாம் பத்தியில் வரும் ஈலா என்பது மத்தியக் கிழக்கில் ILA இலா, IDA இடா என்ற தெய்வங்களின் பெயராக உரு மாறியது.

ஆப்ரி APRI SUKTA சூக்தம் வரும் இடங்கள்:

ரிக் வேதம்: RV 3-4-8; 7-2-8; 2-3-8, 1-13-8/9; 1-188-8; 5-5-8; 9-5-8; 10-70-8;10-110-8. (எட்டு என்பதைக் கவனிக்க)

மூன்று தேவியர் வரும் யஜூர் வேதப் பாடல்கள்:

Yajur Veda 28-18; 27-17; 20-43 and several other places.

R veda

ஆப்ரி சூக்தம் பற்றி ஒரு சர்ச்சை!

இலக்கிய விஷயங்களில் எல்லாவற்றிலும் முதன்மை வகிப்பது சம்ஸ்கிருதமே! உலகின் முதல் GRAMMAR இலக்கண நூல், முதல் காம EROTICS சாஸ்திரம், முதல் DICTIONARY அகராதி, நிகண்டு, மொழியியல் LINGUISTICS  ஆராய்ச்சி, மொழியியல் ஆய்வு, சொற்பிறப்பியல் ETYMOLOGY ஆய்வு, நூல் யாத்தல், பெண் கவிஞர்களின் பங்கு பணி, பெண்களுக்கான முதல் SYLLABUS சிலபஸ் (64 கலைகள்), முதல் நாட்டிய சாத்திர நூல், சங்கீத சாத்திர நூல், முதல் THESARUS நிகண்டு — முதலிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதமே உலகில் முதன்மை வகிக்கிறது. இதே போல புத்தகங்களுக்கு இண்டெக்ஸ் INDEX போடுவதிலும் சம்ஸ்கிருதமே FIRST! அதாவது முதல்! அணுக்ரமணி என்ற வேத இண்டெக்ஸில் எல்லா புலவர் பெயர்களும் உள்ளன.

இந்த இண்டெக்ஸில் ஆப்ரி சூக்தங்களை இயற்றிய வெவ்வேறு பெயர்களைப் பார்த்த ப்ளூம்ஸ்பீல்டு என்பார், “ பாருங்கள் இரண்டு மண்டலங்களில் ஒரே மாதிரி ஆப்ரி சூக்தங்கள் உள்ளன. ஆனால் வசிட்டர், விஸ்வாமித்திரர் என்று இரண்டு பெயர்களை அணுக்ரமணி கூறுகிறது. ஆகாயால் அணுக்ரமணி பிழையுடைத்து என்று நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். ஆனல் பிற்காலத்தில் வந்தவர்கள் அது ஒரு அரைவேக்காட்டுத் HALF BAKED தனமான வாதம் என்பதை ஆதாரங்களுடன் காட்டினர்.

கிரேக்க கவிதைகளில் ஒரே வரி பல முறை வருகிறது. பாதி வரி பல முறை வருகிறது. ஒரே உவமை பலமுறை வருகிறது; சில சொற்றொடர்களை எல்லோரும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று கிலபர்ட் மர்ரே GILBERT MURRAY  என்பவர் எடுத்துக் காட்டினார். இதை தனது புத்தகத்தில் மேற்கோள் காட்டிய இந்திய வேத அறிஞர் ஸ்ரீகாந்த் தலகரி SHRIKANT G.TALAGERI  என்பார், இந்த் ஆப்ரி சூக்தங்களைப் பயன்படுத்தி ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களைக் கால வரிசைப் படுத்தியிருக்கிறார்.

book05

தமிழில் மீண்டும் மீண்டும் வரும் வரிகள்

இந்திய வரலாற்றை அல்லது பண்பாட்டை எழுதப் புகுவோருக்கு பாரத மாதாவின் இரு கண்காளான தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியாவிடில் தப்பும் தவறுமாக பிதற்றத் துவங்கி விடுவார்கள். தமிழில் ஏராளமான வரிகள் திரும்பத் திரும்ப வரும்

ஐங்குறு நூறு என்னும் 500 பாடல் தொகுப்பில் நூற்றுக்கும் மேலான வரிகளை எல்லா புலவர்களும் பயன்படுத்துவர்.

புற நானூற்றில் பல் சான்றீரே! என்ற வரிகள் இரண்டு பாடல்களில் வரும். சேண் விளங்கு முதலிய சொற்றொடர்களைப் பலரும் பயன்படுத்துவர். இது வாய்மொழி இலக்கியம் துவங்கிய காலத்தில் எல்லா மொழிகளிலும் உண்டு.

ஆனால் தொல்காப்பியர் போல எவரும் இலக்கண நூலில் இப்ப்டிச் செய்ததில்லை. தொல்காப்பியத்தில் ஒரே பத்தியில் தேவையில்லாமல் ஒரு வரியை ஆறு முறை (பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) கூறியிருக்கிறார் ஒல்காப்புகழ் தொல்காப்பியர்.ஏதோ நர்சரி ரைம் Nursery Rhyme போலப் பாடிவிட்டார். “என்ப”, “மொழிப” போன்ற சொற்களை 287 முறை சொல்கிறார். ஒரே சூத்திரத்தில் (சூத்திரம் 1568) ‘என்றலும்’ என்பதை ஆறு முறை சொல்லுவார்’ இன்னும் ஒரு இடத்தில் ஒரே சூத்திரத்தில் ‘அறிவதுவே’ என்பதை ஏழு முறை சொல்லுவார் (சூத்திரம் 1526). அதாவது சொற்செட்டு என்பது அவருக்கில்லை. பாணினிக்கும் இவருக்கும் இடைவெளி 1000 மைல் என்றால் மிகையில்லை!!

உயிர், மெய் எழுத்துக்களைக் கண்டுபிடித்தவன் தமிழனா?

tamil-barakhari

Research paper No 1959

Written by London swaminathan

Date: 28 June 2015

Uploaded in London at காலை 9-48

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 (12×18=216), ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 என்று நாம் படித்திருக்கிறோம். இதை நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் பாடம் கற்பிக்கும் போது சொல்வேன்; உடனே எல்லா மாணவர்களும் ஆ! என்று ஒரு வியப்புக் குரல் கொடுப்பார்கள். கவலைப் படாதீர்கள்! முப்பது (12+18) எழுத்துக்களைப் படித்துவிட்டு சில குறியீடுகளையும் (diacritical marks டயக்கிரிட்டிகல் மார்க்ஸ்) அதற்குப் பின்னுள்ள சப்தங்களையும் புரிந்து கொண்டால் போதும்! ——- என்றவுடன் நிம்மதிப் பெருமூச்சுவிடுவர்.

அதற்குப் பின்னால் எழுத்து அமைப்பு விஷயத்தில், தமிழர்களின் அறிவியல் பூர்வ அணுகு முறையை விளக்கும்போது, உயிர் என்பது நம்முடைய மூச்சுக் காற்று, மெய் என்பது நமது உடல், இரண்டும் சேரும்போது வருவது உயிருள்ள மனிதன் என்பது போல இந்த உயிர் மெய் எழுத்துக்கள் என்று அதன் தத்துவப் பின்னணிகளை விளக்குவேன். பிற்காலத்தில் இது சைவ சித்தாந்த விளக்கத்திலும் இடம் பெற்றது. பல புத்தகங்களில் இது தமிழனின் அரிய கண்டுபிடிப்பு என்று எழுதி இருப்பார்கள். அது உண்மை அல்ல. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேத கால இலக்கியத்தில் இது இருக்கிறது. அப்படியானால் தமிழன் அதைக் “காப்பி” (copy) அடித்தானா? அதுவும் இல்லை!

தமிழ் மொழியையும் சம்ஸ்கிருத மொழியையும் படைத்தவன் சிவ பெருமான். தமிழுக்கு இலக்கணம் வகுக்கும் பொறுப்பை வடக்கிலிருந்து வந்த அகத்தியன் செய்து கொடுத்தான். இதை நான் சொன்னால் ஒதுக்கிவிடுவீர்கள். திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவரும், நமது காலத்தில் வாழ்ந்த உலக மகா கவிஞன் சுப்பிரமணிய பாரதியும் சொல்லியிருக்கிறான் (ஆதிசிவன் பெற்றுவிட்டான்……..) இரண்டு பாடல்களையும் முன்னொரு கட்டுரையில் தந்துவிட்டேன்.

தமிழுக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை சிவபெருமான் அனுப்பியதில் இரண்டு உண்மைகள் புலப்படும்:

1.அகத்தியர் வருவதற்கு முன்னரே தென்னாட்டில் தமிழ் என்று ஒரு மொழி இருந்தது. அது வட நாட்டிலோ, சிந்து சமவெளியிலோ வழங்கப்படவில்லை. தென்னாட்டில் மட்டுமே இருந்தது. இதைத் தொல்காப்பியரும், பனம்பாரனாரும் கூட சொல்கிறார்கள்.

2.இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்ததால்தான், இரண்டு மக்களும் ஒரே இனம் என்பதால்தான், அகத்தியர் அந்தப் பணியை ஏற்றார்; திறம்பட செய்தும் முடித்தார்.

இதுவரை முந்தைய கட்டுரைகளில் நான் சொன்ன கருத்துக்கள்:

1.இந்திய மொழிகளை திராவிட (Dravidian) மொழிகள் என்றும் இந்திய-ஐரோப்பிய (Indo-Eoropean)  மொழிக் குடும்பம் என்றும் பிரித்தது தவறு (சான்று: பரஞ்சோதி முனிவர், பாரதியார், தமிழ்-சம்ஸ்கிருத மொழிகளின் அமைப்பு).

2.இந்திய வரலாற்றையோ, பண்பாட்டையோ பற்றி எழுதுபவனுக்கு தமிழ், சம்ஸ்கிருத இலக்கிய, இலக்கண அறிவு இல்லாவிடில் கால்டுவெல் (Bishop Caldwell) போல அரை வேக்காட்டுக் கொள்கைகளை மொழிவர் (நல்ல வேளையாக, கால்டுவெல் கூறிய கொள்கைகளை எல்லா தமிழறிஞர்களும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். தமிழன் துருக்கி (Mediterranean) பகுதியிலிருந்து வந்தவன், அவன் மொழிக்கும், சிதிய (Scthyan) மொழிக் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு என்றெல்லாம் அவர் உளறி வைத்தார். பகுத்தறிவுத் திராவிடங்கள் கூட அதை ஏற்கவில்லை).

  1. உலகில் சம்ஸ்கிருதத்துக்கு மிக நெருங்கிய மொழி தமிழ், தமிழுக்கு மிக நெருங்கிய மொழி சம்ஸ்கிருதம்; ஏனெனில் இரண்டு மொழிகளின் அகர வரிசை (Alphabetical order) , வேற்றுமை (Case suffixes) உருபுகள், சந்தி ( joining Rules) இலக்கணம் முதலியவற்றை வேறு எங்கும் காணமுடியாது. அப்படிக் கண்டால், அந்த மொழிகள் இவைகளிலிருந்த வந்த மொழிகளே!

4.தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் ஒரே கொள்கைகளை, வாழ்க்கை மூல்யங்களைப் (Values in life) பாராட்டுவதோடு (எ.கா.அறம், பொருள் இன்பம், இம்மை/மறுமை, வாய்மை), சில சொற்களை ஆதிகாலம் முதல் பகிர்ந்து (எ.கா. இருதயம், மனம், காமம்) கொள்கின்றனர். ஒரே மண்ணில், ஒரே சிந்தனையுடைய வர்கள் என்பதால்தான் இது சாத்தியமாயிற்று. இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறைய உதாரணங்களைக் கொடுத்துவிட்டதால் மீண்டும் சொல்ல விரும்பவில்லை.

5.கடைசியாக மற்றொரு விஷயத்தையும் சொன்னேன்: ஆரியர்களும்- திராவிடர்களும் சந்திதபோது ஒலி மாற்றங்கள் (Sound changes) ஏற்பட்டதென்ற அரை வேக்காட்டு வாதங்களுக்கு பொருளே இல்லை. ஏனெனில் இவை தமிழ் மொழிக்குள்ளேயே எழுத்துக்கள் புணரும்போது (internal canges) இப்படி மாற்றம் அடைவதை இலக்கணப் புத்தகங்கள் காட்டுகின்றன; அதுமட்டுமல்ல, உலகில் பல இடங்களில் இப்படி மாற்றங்கள் நடந்து இருக்கின்றன (Odysseus= Ulysses; Ramadan= Ramalan= Ramzan ) என்பதையும் காட்டி, உலகிலுள்ள எல்லா பெரிய, முக்கிய மொழிகளும் தமிழ்-சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் இருந்தே வந்தன என்றும் சொன்னேன். இதனால்தான் தொல்காப்பியத்துக்கு நான்கு வேதங்களையும் கரைத்துக்குடித்த/ கரை கண்ட அதங்கோட்டு பிராமணன் “சர்ட்டிபிகேட்” கொடுத்தார் என்று பனம்பாரனார் எழுதிவைத்தார்.

sanskrit_alphabet_small_poster

தமிழன் காப்பி அடிக்கவில்லை

ஆகையால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பல ஒற்றுமைகளைக் காணும்போது யார் யாரிடருந்து “காப்பி” அடித்தனர் என்று கணக்குப்போடாமல், அவை எல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிறந்த சகோதரர்களின் ஒருமித்த சிந்தனைக்குச் சான்று பகரும் அற்புதக் குறிப்புகள் எனக் கொண்டால் ஐயங்கள் எழா!

தமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தை, தொல் பொருட் துறை, வரலாற்று, மொழியியல் அடிப்படையில் கி.மு முதல் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின் என்பர் அறிஞர் பெருமக்கள். இதே போல எகிப்திலுள்ள அமர்ணா லெட்டர்ஸ்/ கடிதங்கள் (Amarna Letters in Egypt), துருக்கிநாட்டு பொகஸ்கோய் (Bogazkoy) கல்வெட்டு, சிரியா நாட்டில் கிக்குலி (Kikkuli’s Horse Manual) எழுதிய குதிரை சாஸ்திரம், துருக்கி-சிரியாவை ஆண்ட தசரதன் – பிரதர்தனன்(Tusserata, paratartana) ஆகிய தொல்பொருட் துறைச் சான்றுகளால் சம்ஸ்கிருத மொழியை கி.மு.1400 க்கு முன் என்று வைப்பர். இவை அசைக்க முடியாத தொல்பொருட் துறைச் சான்றுகள் (archaeological evidence) என்பதால் யாரும் மறுப்பதில்லை!

சுருக்கமாகச் சொன்னால் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடைவெளி குறைந்தது 1400 ஆண்டுகள். ஆகையால் இரண்டு மொழிகளும் கிளைவிட்டுப் பிரிந்து இரண்டு ஆல மரங்களாக வளர்ந்ததில் – இரண்டு வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்ததில்— வியப்பொன்றுமில்லை.

உயிரெழுத்தும், மெய்யெழுத்தும்

வேதத்தில் பாடல்கள் உள்ள பகுதியை சம்ஹிதை என்பர்; அதைத் தொடர்ந்து வந்தது- பிராமணங்கள்; அதற்குப் பின் எழுந்தது ஆரண்யகங்கள்; கடைசியாக வந்தது உபநிஷத்துக்கள்.

தைத்ரீய ஆரண்யகம் என்ன சொல்கிறது என்று காண்போம் (2-3-4-1; 3-2-5-2):

உயிரெழுத்து என்பது நாள்; மெய் எழுத்து என்பது இரவு;

உயிரெழுத்து என்பது உள்ளுணர்வு; மெய் எழுத்து என்பது உடல்;

உயிரெழுத்து என்பது ஆகாசம்; மெய் எழுத்து என்பது பூமி.

உயிரெழுத்து என்பது எலும்பு மஜ்ஜை; மெய் எழுத்து என்பது எலும்பு.

என்று இரண்டுக்கும் உள்ள உறவை அழகாகப் பாடுகின்றனர். இதைத் தமிழர்கள், அகத்திய மகரிஷி தலைமையில் மேலும் அழகுபடுத்தி உயிர், மெய்/உடல், உயிர்மெய் என்று எழுதினர்.

letter

சம்ஸ்கிருதத்தில் சிறப்பான ஊஸ்ம (Sibilants) சப்தங்கள் உண்டு. அவை ச, ஸ, ஷ என்பன.

இவைகளையும் தைத்ரீய ஆரண்யக மந்திரம் சேர்த்துக் கொண்டு, அவைகளை உயிர் மூச்சு, காற்று மண்டலம் என்றெல்லாம் வருணிக்கும். ஆகவே இந்தக் கொள்கையின், “மூலம்” வேத இலக்கியங்களில் இருந்து வந்தது.

சாந்தோக்ய உபநிஷதத்தில் (2-22-5) உயிர் எழுத்தை இந்திரன் என்றும் ச,ஸ,ஷ எழுத்துக்களை பிரஜாபதி என்றும், மெய் எழுத்துக்களை யமன் என்றும் வருணிக்கும். இதன் பின்னுள்ள தத்துவ விளக்கங்களுக்குப் போகாமல் மேம்போக்காகப் பார்த்தாலும் மொழியியலை ஏன் இவ்வளவு பயன்படுத்தினார்கள் என்று வியப்போம். இன்னொரு இடத்தில் மூவகை எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லி இலக்கண பாடம் நடத்தும்!!

இதில் மிக வியப்பான விஷயம்: சமய விஷயங்களில் கூட இலக்கணத்தையும், மொழியியலையும் புகுத்தியதாகும். உலகில் மிக முன்னேறிய நாகரீகம் வேத கால நாகரீகம். இதனால்தான் இலக்கண, இலக்கிய உவமைகளை மத விஷயத்தில் புகுத்தியுள்ளனர். மோஸஸ் என்பவர் பத்து கட்டளைகளைப் (Ten Commandments) பெறுவதற்கும் முன்னரே, கிரேக்க மஹா கவி ஹோமர் இலியட், ஆடிஸி (Homer’s Iliad and Odyssey)  ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதும் முன்னரே வேத கால இந்துக்கள் மொழியியல் (Linguistics) பற்றிப் பேசத்துவங்கிவிட்டனர் — உவமைகளாகப் பயன்படுத்தினர் — என்றால் அவர்களுடைய பேரறிவு எத்தகையது என்பதை நீங்களே எடைபோடலாம்.

வேத காலத்துக்கு நீண்ட நெடுங்காலத்துக்குப் பின் வந்த, உலகமே வியந்து போற்றும், மஹா கவி காளிதாசன் தனது ரகு வம்ச மஹா காவியத்தின் முதல் பாடலிலேயே பயன்படுத்தும் உவமை, இந்திய மக்களின் எழுத்தறிவினை உலகிற்கே பறை சாற்றும்:

வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் பிரதிபத்தயே

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதிபரமேஸ்வரௌ

பொருள்: சொல்லும் பொருளும் சேர்திருப்பவர் போல உலகத்திற்குத் தாய் தந்தையாக விளங்கும் பார்வதியையும் பரமேஸ்வரனையும் சொல், பொருள் இவைகளை அறியும் பொருட்டு வணங்குகிறேன்

இந்தியர்களின் மொழி அறிவு கண்டு – பாணினியின் இலக்கண நூல் கண்டு — உலகமே வியப்பது இதனால்தான்!!

ஐந்து மக்கள் – பஞ்ச ஜனாஹா யார்? ரிக் வேதத்தில் மர்மம் நீடிக்கிறது

number-5

Research paper No 1957

Written by London swaminathan

Date: 27 June 2015

Uploaded in London at 14-24

ரிக் வேதம் உலகின் மிகப் பழைய நூல்; இப்போது அமெரிக்கவிலுள்ள இந்து மத எதிரிகளும் இதன் நான்கு மண்டலங்களுக்கு கி.மு 1700 என்று தேதி குறித்துள்ளனர். ரிக் வேதத்தில் மொத்தம் பத்து மண்டலங்கள். இன்னும் சிறிது காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும் ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சொன்னது போல ரிக்வேதம் 6000 ஆண்டுப் பழமையானது (கி.மு4000) என்று உலகம் ஒப்புக்கொள்ளும். அதாவது சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் முந்தையது! ஏனெனில் இதுவரை யாரும் மறுக்கவொணாத வானியல் குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளன. நிற்க.

ரிக்வேதத்தில் ஏராளமான மர்மங்கள் உள்ளன. எட்டாவது மண்டலம் முழுதும் ஈரான் நாட்டு (பாரசீகம்) அரசர் பற்றிய அதிசயக் குறிப்புகள், ஒட்டகங்களைப் பரிசு கொடுத்தது முதலிய விஷயங்கள் இருக்கின்றன. இதே போல ரிக் வேதத்திலும் பிற்கால வேத இலக்கியங்களான பிராமணங்கள், உபநிஷத்துக்களிலும் அடிக்கடி வரும் பஞ்ச ஜனாஹா — “ஐந்து மக்கள் குழு” யார் என்று இன்னும் முடிவகத் தெரியவில்லை.

ரிக்வேதத்துக்குக் குறைந்தது 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சங்க தமிழ் இலக்கியத்துக்கே நச்சினார்க்கினியர் போன்ற உரையில்லாவிடில் பொருள் புரியாது. அதற்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த திருக்குறளுக்கும் பரிமேலழகர் உரையின்றி பொருள் புரிவதில்லை.

இதே போல வடக்கில் வியாசர் என்ற ஒரு மகரிஷி நமக்கு வேதங்களைத் தொகுத்து, நான்காக வகுத்து, நான்கு சீடர்களை அழைத்து, பெரிய “அட்மினிஸ்ட்ரேட்டர்” போல செயல்பட்டிராவிடில் நமக்கு வேதங்கள் கிடைத்திரா!

வெளிநாட்டு அறிஞர்களுக்கு வேதங்கள் பற்றிப் புரிவதில்லை. ஏனெனில் அவர்கள் இந்த கலாசாரத்தில் ஊன்றியவர்களும் இல்லை. இதைப் போற்றும் நோக்கத்தோடு அதைப் படிக்கவுமில்லை தனி நபர் ஒழுக்கமும் அவர்களிட மில்லை. சுருக்கமாகச் சொன்னால்,இப்போது தமிழ்நாட்டில் ஒழுக்கங்கெட்ட பகுத்தறிவுத் திராவிடங்களும், ஜாதிக் கட்சித் தலைவர்களும் திருவள்ளுவர் குரல்(குறள்)வளையை தினமும் நெரித்து அவரை சித்திரவதை செய்வதைப் போன்றதுதான் இது.

LET-5R

பஞ்ச ஜனா: யார்?

யாஸ்கர் என்பவர் கி.மு 850-ல், அதாவது கிரேக்கர்கள் எழுதத் துவங்கியதற்கு முன், வாழ்ந்தவர். உலகில் முதல் சொல் ஆராய்ச்சி செய்து “லிங்குஸ்டிக்ஸ்” – என்னும் மொழியியல் ஆராய்ச்சியைத் துவக்கிவைத்தவர். அவர் சொல்கிறார்:– தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள் (உயிர்நீத்தார்), அசுரர்கள், ராக்ஷசர்கள் என்று.

நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயணர் என்பவர், துணிச்சலாக வேதத்துக்குப் பொருள் எழுதினார். ஆனால் இதற்குள் வேதம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்துமத தலைவர்களே சாயணரின் உரையை அவ்வளவு பாராட்டுவதில்லை. மேலும் உலகில் முதல் முதல் மொழியியல் புத்தகத்தை எழுதிய யாஸ்கரே தனக்கு 600 சொற்களுக்கு பொருள் விளங்கவில்லை என்று 2850 ஆண்டுகளுக்கு முன்னரே திணறியிருக்கிறார் (காண்க அரவிந்தரின் வேதச் சொல்லடைவு).

அந்த சாயணர் சொல்கிறார்:

இது, நால் வருணத்தினரையும் புறம்பாக இருந்த நிஷாதர்களையும் குறிக்கும் என்று.

வேதத்தின் துதிப்பாடல்களைத் தொடர்ந்து எழுந்தது பிராமணங்கள் என்னும் நூல். அதற்குப் பின்னர் ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் வந்தன. ஐதரேய பிராமணம் என்னும் நூல், பஞ்ச ஜனா: என்பது தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள்/அப்சரஸ்கள், நாகர்கள், பித்ருக்கள் (நீத்தார்) என்று மொழிகிறது. ( விசர்கம் : வந்தால் அதற்கு முன்னுள்ள ஒலியை நீட்டிச் சொல்ல வேண்டும்; ஜனா: = ஜனாஹா)

(கந்தர்வர்களை சிந்து சம்வெளி மக்களுடன் தொடர்புபடுத்தி இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன்)

வழக்கம்போல, வெள்ளைக்காரர்கள் நவக்கிரகங்கள் போல, பல திசைகளைப் பார்த்து நின்றுகொண்டு, பல்வேறு கருத்துக்களைப் பகர்வர். எங்கெங்கெல் லாம் முடியுமோ அங்கெங்கெல்லாம் ஆரிய-திராவிட இனவெறி விஷ விதைகளை ஊன்றுவர். இந்த தொனியில், கெல்ட்னர், ராத் ஆகிய இருவரும் சொல்வது யாதெனின் “இது உலகின் நான்கு மூலையில் வசிக்கும் மக்களையும், அதற்கு நடு நாயகமாக விளங்கும் ஆரியரையும் குறிப்பதாகும்.”

இதற்கு மறுப்பு விடுக்கும் ஸிம்மர் என்பார், ஆரியர்கள்- தாசர்கள் என்று பிரித்துப் பேசும் மக்கள்; அவர்கள் இப்படி உலகையே வளைத்துச் சொல்லியிருக்க முடியாது. இது அனு, புரு, த்ருஹ்யு, துர்வாசு, யது என்ற ஐந்து குலங்களையே குறிக்கும் என்பார். இதற்கு ஆதரவாக ரிக்வேதத்தில் இந்த ஐந்து இன மக்களையும் சேர்த்துக் குறிப்பிடும் இரண்டு துதிப்பாடல்களை எடுத்துக் காட்டுவார்.

அவருக்கு மறுப்பு விடுக்கும் ஹாப்கின்ஸ் என்பார், துர்வாசு என்று ஒரு இனமே இல்லையே! அது யது குல அரசனின் பெயரன்றோ! என்று வியப்பார்.

எனது கருத்து: காலத்தினால் முந்திய யாஸ்கரின் கருத்தை அடியொற்றிச் செல்லுவதே சரி. பிற்காலத்திலும் இந்துக்கள் தினமும் செய்யும் பஞ்ச மஹா யக்ஞத்தில் – ஐவேள்வியில் — பிரம்ம யக்ஞம்/வேதம் ஓதுதல், தேவ யக்ஞம்/தெய்வங்க ளுக்குப் பூஜை செய்தல், மனுஷ யக்ஞம்/ விருந்தினருக்கு சோறிடுதல், பூத யஞம்/பிராணிக ளுக்கு உணவு படைத்தல், பித்ரு யக்ஞம்/நீத்தாரு க்கு நீர்க்கடன் செலுத்தல் என்று பிரித்துள்ளது இதற்கு நெருக்கமாக வருகிறது.

five

இதே போல, தமிழிலும் நான்கு பழைய ஜாதிகளைப் பற்றி மாங்குடிக் கிழார் பாடியுள்ளார் (புறம் 335). இவர்களை யார் என்று இனம் காணமுடியவில்லை.

“துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான்கு அல்லது குடியும் இல்லை”

தற்கால ஆராய்ச்சிகள்

பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் எழுதிய “தமிழ் வரலாற்றில்”, பஞ்ச ஜனா: என்பது ஆரியர் வருகைக்கு முந்திய பூர்வகுடிகளைக் குறிக்கும் என்பார்.

ஸ்ரீகாந்த் தலகரி எழுதிய “ரிக் வேதம் – ஒரு வரலாற்று ஆய்வு” என்ற ஆங்கில நூலில் பஞ்ச ஜனா: பற்றிக் குறிப்பிடாமல், சந்திர வம்சத்தில் யது, புரு, துர்வாசு, அனு, த்ருஹ்யூ என ஐந்து பிரிவுகள் இருப்பதைக் காட்டுவார்.

“ஆரிய தரங்கிணி” எழுதிய ஏ. கல்யாணராமன், பரத வம்சத்தோடு, புரு, த்ருஹ்யூ, அனு, யது/துர்வாசு என்பன ஐந்து மக்கள் என்பார்.

கல்ஹணர் எழுதிய ராஜதரங்கிணியில் (3-353) ஒரு செய்யுளுக்குப் பொருள் எழுதிய விமர்சகர், “இது மிகவும் சிக்கலான பொருளுடைத்து; நாம் இப்போது சொல்லும் பஞ்சாயத்து என்னும் பொருள் இருக்கலாம்; அல்லது நால் வருணத்தினரும் அதில் சேராத நாகரீகமற்ற கும்பலும் என்று பொருள் இருக்கலாம்; அல்லது தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், பித்ருக்கள் (உயிர் நீத்த முன்னோர்கள்) என்று இருக்கலாம் என்பார்.

எனது கருத்து:

இது யாராக இருந்தாலும் ஐந்து குழுக்களை ஒன்று சேர்த்து ஒரு மரபுச் சொல்லை உண்டாக்க வேண்டுமானால் அந்த ஐந்து இனமும் அங்கு நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது இப்படி ஒரு சொற்றொடர் வர இயலாது. ஆகப் பாரதக் குடி—“பதியெழு அறியாப் பழங்குடி” என்பது தெளிவு.

5 hands