அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!(Post No. 2447)

singapore thimithi with amman face

Picture:–Singapore Mariamman Festival Fire walking

 

Written by S NAGARAJAN

 

Date: 1 January 2016

 

Post No. 2447

 

Time uploaded in London :–  7-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாக்யா ஜனவரி 2016 முதல் தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!

.நாகராஜன்

 

 Agni-pariksha-of-sita

Sita Devi’s Fire Walking

“1871ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று அமெரிக்க நகரான சிகாகோவில் ஏற்பட்ட தீ, 24 மணி நேரம் தொடர்ந்து எரிய, நகரில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இல்லங்களை இழந்தனர். 300 பேர்கள் இந்த மாபெரும் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்” – பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயின் கோர தாண்டவம் பற்றி அமெரிக்க வரலாறு

 

 

சீதா பிராட்டியை ராமன் அக்னியில் பிரவேசிக்கச் செய்ததையும் அக்னி ப்ரவேசம் செய்த சீதை கற்புக்கரசி என அக்னியால் புகழப்பட்டதையும் ராமாயணம் விளக்குகிறது.

 

தமிழகத்தில் ஆங்காங்கு மாரியம்மன் கோவில் திருவிழாக்களில்  பல நூறு ஆண்டுகளாக தீ மிதி வைபவம் நடைபெறுவதை நமது சரித்திரம் கூறுகிறது. இதில் கலந்து கொள்வோர் நெருப்புத் துண்டுகள் உள்ள பாதை வழியே பக்தியுடன் செல்வதையும் அவர்கள் கால் உள்ளிட்ட அங்கங்கள் எந்த வித பாதிப்புமின்றி இருப்பதையும் பார்த்து வியக்க முடிகிறது. இதை பூ மிதி திருவிழா என்றும் கூறுவது வழக்கம். அம்மன் தீயைப் பக்தர்களுக்குப் பூவாக மாற்றுவதாக ஐதீகம்.

 

இப்படி “ஃபயர் ஃப்ரூப்” ஆக இருப்பது சாத்தியம் தானா? பல காலமாக அறிவியல் உலகம் இதை ஆராய்ச்சி செய்து வருகிறது.

ஹிந்து இதிஹாஸங்கள் மட்டுமல்ல, உலகின் இதர மதங்களும் பல மகான்கள் தீ மீது நடந்ததைக் குறிப்பிடுகின்றன.

 

செயிண்ட் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் பாலா (1508ஆம் ஆண்டு) பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைத் தன் கைகளில் ஏந்தியவாறே தன்னை வியந்து பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம்,” தூய மனமுடன் இறைவனை வழிபடுவோரின் கட்டளைக்கு அனைத்து உயிரினமும் கீழ்ப்படியும்” என்றார்.

 

சியனா நகரைச் சேர்ந்த செயிண்ட் காதரீன் கொழுந்து விட்டெரியும் இரும்பு உலையில் கரித் துண்டுகளின் மீது முகம் படிந்திருக்க நெடு நேரம் இருந்தார். அந்தப் புனிதப் பெண்மணி நெருப்பில் இருப்பதைப் பார்த்து திகைத்தவர்கள் அவரை அப்புறப்படுத்திய போது அவருக்கு ஒரு தீக்காயமும் ஏற்பட்டிருக்கவில்லை!

 

இந்தியாவில் குற்றமிழைக்காதவன் என்று தன்னை நிரூபிக்க விரும்புவோர் கொதிக்கும் எண்ணெயில் கையை விடுவது, தீ மீது நடப்பது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை கைகளில் ஏந்துவது என இப்படிப் பலவற்றில் ஒன்றைச் செய்து தீயின் பாதிப்பு இன்றி மீண்டு தம்மை நிரபராதி என்று நிரூபிப்பது வழக்கம். இதே போல இடைக்காலத்தில் மேலை நாடுகளிலும் இந்தப் பழக்கங்கள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன.

charity-fire.jpgeast cheshire

Charity Fire Walking in East Cheshire Hospice (UK)

 

1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் மரிஸ்பர்க் என்ற இடத்தில் தீ மிதி விழா ஒன்று நடைபெற்றது. 15 மீட்டர் (அதாவது சுமார் 49 அடி) நீளமுள்ள குழியில் 12 டன் விறகு போடப்பட்டு அக்னி ஜொலிக்க 8 ஹிந்துக்களும் 4 ஆங்கிலேயரும் அந்த தீக்குழியில் வெற்றிகரமாக நடந்தனர். ஒரே ஒரு ஆங்கிலேயர் மட்டும் இரண்டு அடி மட்டுமே குழியைத் தாண்டுவதற்கு இருக்கும் நிலையில் அப்படியே கீழே விழுந்தார். உடனடியாக சமாளித்து எழுந்து நடந்தவரின் கால்களில் தீப் புண்கள் ஏற்படவே அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குழுமிய பத்திரிகையாளர்களிடம் அவர், “கூட்டத்தின் ஆரவாரம் மிகவும் அதிகமாகவே என்னால் உயர் சக்தியின் மீது மனதை ஒருமுனைப்படுத்த முடியவில்லை. அது தான் நான் விழுந்ததற்குக் காரணம்”, என்று கூறினார்.

 

 

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற மீடியமான டி.டி, ஹோம் -டேனியல் டங்ளஸ் ஹோம் – (Daniel Dunglas Home) செய்து காட்டாத அபூர்வமான அதீத உளவியல் ஆற்றல் நிகழ்வுகளே இல்லை எனலாம். அவரது பல நிகழ்ச்சிகளில் அவர், தான் “ஃபயர் ஃப்ரூபாக” இருப்பதை மட்டும் நிரூபிக்கவில்லை,  அடுத்தவரையும் அப்படி தீ பாதிக்காத தன்மையைக் கொண்டவராக அவர் ஆக்கினார், அது தான் ஆச்சரியம்!

“டையாலக்ட்ரிகல் சொஸைடி” (Diaelectrical Society) என்ற அமைப்பின் சார்பில் ஐவர் குழு ஒன்று அவரை நேரடியாக சோதனை செய்தது. ஹோம் பலரது கைகளிலும் தலைகளிலும் எரியும் கரித்துண்டுகளை வைத்தார். ஆனால் அவர்களோ தீயின் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்!

 

Daniel-Dunglas-Home-levitation

Daniel Dunglas

1869ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 17ஆம் தேதி நடந்த ஒரு அதீத உளவியல் அமர்வு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஒரு பெண்மணியின் வெண்மையான மஸ்லின் ஆடையில் ஹோம் பழுத்து எரியும் ஒரு கரித் துண்டத்தை வைத்தார். ஆடை எரியவே இல்லை. பின்னர் அங்கிருந்த மலர்களின் மீது எரியும் கரித்துண்டை வைக்க அங்கு பொசுங்கிய நாற்றம் வந்ததே தவிர மலர்களுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை. அதே அமர்வில் அங்கிருந்த ஹனிவுட் என்ற பெண்மணி மற்றும் லார்ட் லிண்ட்ஸே ஆகியோரது கையில் நன்கு சூடேறிய கண்ணாடி விளக்கைக் கையில் தர அதை அவர்கள் எந்த வித பாதிப்புமின்றி ஏந்தி நின்றனர். அப்போது தன் வாயில் ஒரு தீக்குச்சியை வைத்துக் கொண்டு அதை கண்ணாடியின் மீது ஹோம் உரச அந்தச் சூட்டினால் உடனே தீக்குச்சி பற்றி எரிய ஆரம்பித்தது.

இதே போல அருகில் யார் இருந்தாலும் அவர்கள் கையில் பழுக்கக் காய்ச்சிய நெருப்புத் துண்டுகளை கொடுப்பது அவரது வழக்கமானது.

 

 

இதனால் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் திகைத்து நின்றனர்.

உலகின் அபூர்வ மனிதரான டேனியல் டங்ளஸ் ஹோம் (பிறப்பு 20-3-1833 இறப்பு 21-6-1886) பற்றிப் பல புத்தகங்கள் எழுதுமளவு சுவையான நிகழ்வுகளை அவர் வாழ்வு கொண்டிருந்தது.

 

SirChristopher

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சர் கிறிஸ்டோபர் ரென் என்பவர் (1632-1723) பிரிட்டனின் பிரசித்தி பெற்ற கணிதமேதை, வானவியல் நிபுணர் மற்றும் சிறந்த கட்டிடக் கலை நிபுணர். விண்ட்சார் டவுன் ஹால் கட்டிட்டத்தின் உட்புறத்தை மிகவும் ஆர்வமுடன் அவர் வடிவமைத்துக் கொண்டிருந்தார். அதன் மேற்கூரையை அழகிய தூண்கள் வலுவாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்வையிட வந்த கட்டிட ஆய்வாளர்கள் போதுமான தூண்கள் இல்லை என்றும் ஆகவே கட்டிடத்தில் வலு போதுமானதாக இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் ரென்னுக்கோ தன் திறமையின் மீது அபார நம்பிக்கை. என்றாலும் கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவிக்கவில்லையே! அவர் உடனே நான்கு தூண்களை அழகுற அமைத்தார். கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவித்தனர். ஆனால் உண்மையில் அந்தத் தூண்கள் மேற்கூரையைத் தொடவே இல்லை. அழகுக்காக தொடாமல் அமைக்கப்பட்டிருந்தன. ரென் சிரித்தார். இன்றும் அந்தத் தூண்கள் அந்தக் கட்டிடத்தில் உள்ளன!

 

England, P-381a 50 Pounds, Inv1766(b)(1000)

இதே போல அமெரிக்காவின் கட்டிடக் கலை நிபுணர் ஃப்ராங்க் லாயிட் ரைட் என்பவர் (1869-1956) விஞ்ஞான முறையில் கட்டிடங்களைக் கட்டி வந்தார். அவரை பிரபல தொழிலதிபரான ஹிப்பர்ட் ஜான்ஸன் தனக்கு ஒரு வீட்டைக் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார். ஒரு நாள் அந்த வீட்டில் ஜான்ஸன் தனக்கு மிகவும் வேண்டியவர்களைக் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. மேற்கூரை வழியாகத் தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது. சரியாக ஜான்ஸன் அமரிந்திருந்த இடத்தின் மேலிருந்து சொட்டு சொட்டாகத் தண்ணீர் விழ, அவரது வழுக்கைத் தலை மீது நீர் சொட்ட ஆரம்பித்தது. விருந்தினர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்க கோபமடைந்த ஜான்ஸன் அரிஜோனாவில் இருந்த கட்டிட  ரைட்டைப் போனில் அழைத்தார். “என்ன கட்டிடம் கட்டினீர்கள். மழையில் மேற்புறம் ஒழுக, என் தலை மீதே நீர் ஒழுகுகிறது” என்று அவர் கோபமாகக் கத்தினார்.

 

 

மறுமுனையிலிருந்து அமைதியான குரலில் வந்த பதிலை விருந்தினர்கள் அனைவரும் கேட்டனர்:” அது சரி, உங்கள் நாற்காலியை நீங்கள் ஏன் சற்று நகர்த்திப் போட்டுக் கொள்ளக் கூடாது!”

*******

The Efficacy of Mantras (Post No. 2435)

om flag

Written by S NAGARAJAN

Date: 28 December 2015

 

Post No. 2435

 

Time uploaded in London :– 9-19 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

By S.Nagarajan

 

Vedas are the genesis of the Hindu religion. Vedas are eternal sounds. The source of sound is in the atoms of air and the quality of the sound follows the exit of the air propelled by the attempt of the speaker through particular anatomical parts of the mouth and its precincts.

 

 

Each and every sound has its own meaning and corresponding effect.

The Sanskrit word mantra means potent sounds or words.

Mantras are ‘heard’ or ‘seen’ by the great sages and hence unwritten. Vedic Mantras are innumerable and the correct mantra is to be used as per the correct intonation to achieve a desired result.

 

Indra satru

 

One interesting incident is described in Hindu Scriptures. Where the object of a sacrifice was ‘to generate such a person as is capable of killing Indra (God of devas or Angels), and for that purpose, the invocation should be ‘svahendrasatrurvadhasva’ the chanting of this invocation with a wrong intonation on the first syllable ‘Indra’ produced the contrary result, for a person was generated, but he was killed by Indra. The compound Indra-satru means either ‘destroyer of Indra’ or ‘one that can be destroyed by Indra’ according to the intonation used on the syllables.

 

That is why it is recommended that the mantras are to be initiated properly by a genuine Guru.

 

In the 18th century Ernest Chladni, a German physicist found that when a violin bow was drawn vertically across the rim of a metal plate the sound waves produced created patterns in sand sprinkled on the plate. The vibration produced by the bow throws the sand particles into violent commotion and when these particles settle down beautiful patterns are formed depending upon the nature of the vibration. These are called Chladni Figures.

 

 

Different musical notes would cause the sand particles to move into geometric patterns.

It is interesting to note that the Indian music swaras, seven in number, sa, ri, ga, ma, pa, da, ni produce and maintain basic emotions also.

 sri yantram,ekambareswar

OM and Sri Yantra

 

In the 1960s Hans Jenny, a Swiss Scientist, spent over ten years conducting experiments to discover the effects of sound waves on materials placed on metal plates vibrated with sound. Materials such as glycerin, mercury, gel, powder and iron fillings were used. He photographed the patterns created.

He found that low frequency sounds produced simple geometric shapes in the materials. As the sound frequency was increased, these simple frames would break up and more complex patterns would appear. The sound ‘OH’ would produce a perfect circle.  The sound ‘OM’ produced a pattern that resembles the Shri Yantra; the ancient mandala for ‘OM’ used in India for thousands of years!

 

Alexey  Kulaichev, a Russian Scientist has concluded that Shri Chakra could not be analysed even by the present day computers!

 

 

He says, “I wish to note, however, that the present day level of scientific and technical knowledge is insufficient to analyse the structure of  Sri Yantra .

 

 

“The analysis involves a complex system of algebraic equations and complicated computations which are beyond the capability of the present generations of computers.

 

“How such an object could have appeared in antiquity? How did people there come to know that nine triangles arranged in such a way can intercept each other, their numerous crossing points coinciding? There are many more other questions that I can not answer”

 

 

 

Every Mantra has six aspects: a rishi or Seer, a raga or melody, the Devatha or the presiding Deity, a Bija or seed sound, the Sakthi or power and a kilaka or pillar.

 

 

The Mantras were transmitted from generation to generation from Guru to disciple. The successful use of mantras was and is simply a common part of Indian mentality.

 

 

OM is a powerful, simple mantra that could be recited by anybody. Mantra Sastra or Mantra Scripture says that OM could be chanted in 170 different ways. Madam Blavatsky has quoted some ancient Indian text that it can be chanted in 250 different intonations and that the siddhis or results attained by each method is different and good.

 gayatri

Gayatri Mantra

 

The power of Gayatri Mantra is indescribable and beyond words. The definition of Gayatri itself indicates the tremendous power of this prayer: Gayantam traete iti Gayatri or that which saves on chanting. The mantra protects the chanter of Gayatri. It is glorified as ‘Mantra Rajam’

 

The Gayatri mantra was discovered by the great sage Viswamitra.

The mantra is given below:

 

Om

Bhur Bhuva Svaha

Tat Savitur Varenyam

Bhargo Devasya Dheemahi

Dhiyo yonah Prachodayat

The mantra may be translated as follows:

 

Om. We meditate upon the spiritual effulgence of THAT Adorable supreme Divine Reality the Source of the physical, the Astral and the Heavenly Spheres of Existence.

May THAT supreme Divine Being enlighten which our Intellect.

The mantra consists of 24 syllables.

 

 

24 rishis or sages are associated with each syllable. Similarly each syllable is associated with 24 special powers and 24 flowers.

 

 

Automatically the chanter will get all the benefits and all round success. Each syllable bestows a particular ‘Siddhi’ or power.

 

 

The twenty four powers are: Strength, Energy, Attraction, Suggestion, Motion, Awe, Discrimination, Activity, Courage, Memory, Determination, Desire, Affection, Aversion, Union, Disunion, Analytic capacity, Synthetic capacity, Hearing, Touch, Sight, Taste, Smell and Knowledge.

(c) British Library; Supplied by The Public Catalogue Foundation

(c) British Library; Supplied by The Public Catalogue Foundation

 

Nadir Shah and Guru Charndas

 

Nadir Shah, the King of Iran heard about the golden treasures of India and suddenly he decided to invade India. He attacked Delhi with all his might. Mohemmed Shah, the then ruler of Delhi gave a fitting reply in the battle field. Nadir Shah was defeated. He returned to Iran with disappointment. Mohemmed Shah had written a letter to Nadir Shah stating that he was informed by a sage about Nadir Shah’s invasion and was advised to prepare himself for the fight. Hence he was able to defeat him easily. Nadir shah waswonderstruck. He wanted to see the sage. Mohemmed shah obliged. Nadir shah prostrated before the sage Guru Charandas and asked him how he knew that he would attack Delhi, for he himself did not conceive the very idea six months back. Charandas replied that through Gayatri Mantra everything is possible.

 

 

Even today in the village of Sukradal, Uttarpradesh, India, he is being remembered every year during the festival of ‘Gayatri Jayanthi’ or ‘Birthday festival of Gayatri’.

It is worth mentioning about the Agnihotra  which saved two families in Bhopal.

 

All of us very well know the tragic incident that occurred on the night of December 3, 1984 when the poisonous MIC gas leaked from Union Carbide factory at Bhopal. Hundreds of people died and thousands were hospitalized but there were two families – those of Shri Sohan Lal S Khushwaha and Shri M.L. Rathore, living about one mile away from the plant who came out unscathed. These families were regularly performing agnihotra (havan). In these families nobody died, nobody was even hospitalized despite being present in the area worst affected by the leakage of the toxic gas. This observation implies that agnihotra is a proven antidote to pollution.

 

tansen_acl76

Akbar and Tansen

 

The power of sound can better be explained from the following incident!

 

The great Emperor Akbar heard about the talents of famous musician Tansen (1492-1589 A.D) and invited him to his court. Tansen was given a place of honour among the nine jewels like Birbal, Abdul Fazal,Todarmal and Rahim in Akbar’s court.

 

 

Tansen symbolized the best in Hindusthani Music. Tansen with his enchanting music made ‘ the trees swing and the rocks sway’! Once Akbar wanted Tansen to sing a special music known as ‘Deepak Rag’ which produced lightning effect.

 

Deepak in Sanskrit means ‘Light’. Tansen requested Akbar to erect a special platform near a lake for his performance. Akbar ordered immediately to erect the platform wondering why it should be constructed, near a lake! Tansen started singing the special music ‘Deepak Rag’. Suddenly his body temperature went up! He had to jump into the lake to save himself from being burned and suffering from electric shock. The lightning  effect was caused by the vibrations of the music or sound!

 

 

The scientific studies on the effect of Mantras and Sound reveal that the ancient seers are themselves perfect spiritual scientists. They have shown the perfect way for the betterment of the mankind.

 

 

Let us  recite the mantras as instructed by the great seers for the betterment of the world!

 

Sarve Jana Sukino bhavanthu!

–subham–

 

 

Businessman- born as Cow, Dog and Snake before got liberated! (Post No. 2428)

SEA WAVES

Cycle of Birth and Death is described as Samsara Sagara (ocean of family ties) in Tamil and Sanskrit.

 

Written by London swaminathan

Date: 26 December 2015

 

Post No. 2428

 

Time uploaded in London :– காலை 8-17

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

There is an interesting story in an old Tamil book about a businessman who became cow, dog and snake because of his strong attachment to his family. At last he was liberated from the cycle of birth and death with the grace of a Guru (spiritual teacher).

 

A saint was going through a town where a good man was running a sweetmeat shop. The shopkeeper used to welcome any saint visiting the town and offer him food. This saint also visited his house where he was honoured with a good feast. He was given all types of sweets with a pot of hot milk. The saint was so happy to get food from a good soul, he immediately came forward to give him a ‘mantra’ which would liberate him from the ‘disease of birth and death’. But the businessman hesitated saying that he had some duty to fulfil towards his family. The saint said that he would come back after some time.

 

After a few years the saint passed through the same town where he met the businessman. He welcomed the saint home and told that his wife had died, but yet he has some duty towards his two sons. He wanted them to get married. The saint smiled at his statement and went away.

jersey cow

A few years have passed. Again he came back to the businessman’s house where his two sons prostrated before him with their new wives. He blessed them and looked at the businessman. He understood what the saint meant. But he apologised to the saint saying that the family incurred some debt due to the marriages. So he wanted to clear the debts before getting the liberation mantra. The saint smiled at him and went his way.

 

Several years passed and the saint came back again. Now he was welcomed only by his sons. They told him that they had lost their father. The saint used his third eye to know his whereabouts in his rebirth. The businessman was born as a cow and in the cattle shed of the same house. But his children didn’t know that. The saint went to the cattle shed when the children were inside the house and told the cow who he was in his previous birth. The saint even came forward to give him the mantra. But the cow told him, “Look! Guruji! My sons are in need of money. My milk helps them to earn some money. So I don’t want the liberation mantra now”. The saint smiled and went his way.

 

 

After a long time, the saint came again. This time he saw a dog in the businessman’s house whose story he heard from the businessman’s sons. After the cow’s death, this dog came on its own to his house and so they raised it as their pet dog. As soon as the saint heard this he knew that it was the cow reborn as a dog now. The saint went to the dog and told him, “Look! You were born as a cow and now a dog. I offered the mantra even when you were in human form. Are you ready to accept my mantra now which will liberate you from this low life of a dog”.

dog3

The dog said to the Guru, “Please don’t give me the mantra now. My sons have been very irresponsible. If I were not there, this house would have been burgled several times. So I wanted to guard the house for some time. The saint was surprised to hear his reply. His attachment to the family was so strong that not even a saint could help him. So he smiled at the dog and went his way.

 

After a few years the saint who became very old now, struggled to walk to the house of the businessman. His sons were not ready to welcome him. They were angry to see him and was about to chase him. But the saint told them that he wanted to reveal them a secret. They told the saint that the dog had died and now there was no one to guard the house.

 

The saint told them it didn’t matter much because there was a treasure buried in his house. He told them that it was under a thick bush in the wooded area of their garden. The sons ran there with a spade and axe. But to their surprise a cobra rose its hood and tried to bite them. They came back to the Guru accusing him of conspiracy to kill them. He told them that the cobra is protecting the treasure. The saint knew that it was their father who became cow, then dog and now a snake to guard the family property. When the sons heard abbot the treasure, they called the villagers to kill the cobra. When it died they took the treasure from the ground.

snake

The saint who watched the whole drama caught the spirit of the cobra and liberated it. Guru also disappeared from the scene. Then the businessman’s sons realised that it was not an ordinary saint who visited them. Guru also was very happy that it was able to save one soul.

 

“Attach yourself to the one who has no attachment (God) to sever all other attachments” (Tirukkural 350)

-subham-

 

உயிருடன் புதையுண்டு மீண்டும் வந்த யோகிகள்! (Post No.2424)

1306_Maharshi_Dadhichi

Written by S NAGARAJAN

Post No.2424

Date : 25th December 2015

Time uploaded in London: 6-45 AM

 

25-12-2015 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்த கட்டுரை

 

உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழுந்த யோகிகள்!

.நாகராஜன்

 

“நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றையும் தர்க்கத்தாலோ அல்லது விஞ்ஞானத்தாலோ விளக்க முடியாது” – லிண்டா வெஸ்ட்பால்

 

‘LIVING BURIAL’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழும் ச சாமானியர்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கும் கூட ஒரு சுவாரசியமான விஷயம் தான்!

 

 

இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய மேலை நாடுகளில் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சி மும்முரமாக நடந்த கால கட்டத்தில் அதையும் மிஞ்சும் விஷயமாக இது நேரடியாகப் பலமுறை செய்து காட்டப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் இதில் ஆர்வம் கொண்டனர்; இதை ஆராய முன் வந்தனர்.

 

இதில் முதலிடம் பெற்றவர்கள் இந்திய யோகிகள். இது அவர்களுக்கு சர்வ சாதாரண விஷயமாக இருந்தது.

1870ஆம் ஆண்டு அல்ஜீரியாவிலிருந்து லண்டனுக்கு வந்த யோகிகள் குழு செய்த செய்கைகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் உடலில் ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் காண்பித்தனர். அந்தக் காயங்களால் அவர்கள் வ்லியில் துடிக்கவில்லை. இதே போன்ற காட்சிகளை பாரிஸில் நடந்த ஒரு கண்காட்சியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மகமதியர்கள் சிலர் செய்து காட்டினர். இதை நேரில் இருந்து பார்த்து ஆய்வு நடத்திய டாக்டர்கள் நாகல், சாபௌட், பாரட் ஆகியோர் (UEBERSINNLICHE WELT என்ற) ஜெர்மானிய பத்திரிகையில் தாங்கள் பார்த்தவற்றைப் போட்டோக்களுடன் வெளியிட்டனர்.

 

651-Saint-Arunagirinathar

உடல் மீது தங்களுக்கு முழு ஆதிக்கம் உண்டு என்று இப்படிச் செய்து காட்டியவர்களுள் முக்கியமானவர்கள் தாரா பே, ரஹ்மான் பே மற்றும் ஹமித் பே ஆகியோராவர். ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் கொண்ட இவர்கள் அத்துடன் நிற்கவில்லை, தங்களை உயிருடன் புதைக்கச் செய்து மீண்டும் உயிருடன் வெளியே வந்து காண்பித்தனர். வெட்டுக் காயங்கள் ஏற்படும் போது சாதாரணமாக குபுகுபுவெனப் பொங்கும் இரத்தத்தை இவர்கள் கட்டுப்ப்டுத்தி இரத்தம் வெளிப்படாமல் இருக்கச் செய்தனர். நாடித்துடிப்பைக் குறைத்துக் கொண்டே வருவது, இடது கையில் ஒரு நாடித் துடிப்பு வலது கையில் இன்னொரு நாடித் துடிப்பு என்று இப்படி இவர்கள் செய்து காட்டிய செயல்கள் அனைவரையும் திகைக்க வைத்தது.

 

 

சவம் போல மாறி தங்களை உயிருடன் புதைக்குமாறு செய்து கொண்ட அவர்கள், சவப்பெட்டியில்லாமல் வெறும் மண்ணிலேயே புதையுண்டனர். அனைத்து பத்திரிகையாளர்களும் டாக்டர்களும் இதை நேரில் பார்க்க அழைக்கப்பட்டனர். ஒரு குழுவாக தங்களை அமைத்துக் கொண்ட ஆய்வாளர்கள் புதைபடும் இடத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்தனர்.

 

புதையுண்டவர்களின் நாடித்துடிப்பு படிப்படியாக குறைந்து நின்றே போனது. இதயத்துடிப்பு இல்லை! சுவாசமும் இல்லை. மூக்கிலும் காதிலும் பஞ்சு வைக்கப்பட்டது.

ஐந்து நிமிடங்கள் கழித்து அவர்கள் உயிருடன் மீண்டனர். அவர்கள் தங்கள் இதயத்துடிப்பை தாமாகவே நிறுத்திக் கொண்டதுடன் தலையிலும் கழுத்திலும் சில ந்ரம்பு மண்டல புள்ளிகளில் அழுத்தம் கொடுத்துக் கொண்டனர்.

 

 

“இறக்கும் நிலையில்” அவர்கள் இருக்கும் நேரத்தை அவர்கள் ஆழ்மனம் அபாரமாகக் கையாண்டது. சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் உயிருடன் எழுந்தனர்.

 

ரஹமான் பே செய்வது போலத் தன்னாலும் செய்து காண்பிக்க முடியும் என்று சவால் விட்ட பிரபல மாஜிக் நிபுணர் ஹௌடினி ஒரு உலோகத்திலான பெட்டியில் தன்னை அடைத்துக் கொண்டு அந்தப் பெட்டியை நீரில் ஆழ்த்தி சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்து காண்பித்தார். நீரில் இருந்த பெட்டியிலிருந்து கொண்டு டெலிபோன் மூலம் தன் உதவியாளருடன் பேசிக் கொண்டே இருந்த ஹௌடினி தான் மூச்சை மெதுவாக விட்டு இந்தச் சாதனையைச் செய்வதாகக் கூறினார்.

 

இந்திய யோகிகள் இப்படி சர்வ சாதாரண்மாக உயிருடன் புதையுண்டு இருந்த செய்திகளைத் தொகுத்து தான் நேரில் பார்த்தவற்றையும் சேர்த்து ஜேம்ஸ் ப்ரெய்ட் (JAMES BRAID) என்பவர், அப்ஸர்வேஷன் ஆன் ட்ரான்ஸ்: (OBSERVATION ON TRANCE OR HUMAN HYBERNATION) என்ற ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார்.

 

2494-Maharshi-Patanjali-India-Stamp-Block-of-4

அதில் அவர் குறிப்பிட்ட விஷயம் சுவாரசியமானது! இந்திய யோகிகள் இரு கண்களையும் புருவ மத்தியை நோக்கி வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு ஒரு மனித உருவம் தெரிகிறது. எப்போது அந்த உருவத்தின் தலையை அவர்களால் காண முடியவில்லையோ அப்போது தங்களின் ஆயுள் முடியும் நிலைக்கு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்கின்றனர். உடனே உயிருடன் தங்களைப் புதைத்துக் கொள்கின்றனர் என்று இவ்வாறு தனது கண்டுபிடிப்பை அவர் எழுதி வைத்தார்.

 

இப்படிப் புதையுண்ட யோகிகளைத் தோண்டி எடுத்து அவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

இந்திய மஹாராஜாக்கள் தங்கள் சபைகளில் யோகிகளை வரவழைத்து அவர்கள் காட்டும் உடல் மீதான் ஆதிக்கத்தைக் கண்டு களித்து அவர்களைப் போற்றி வணங்குவது வழக்கம்.

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது பல மஹாராஜாக்கள் இங்கிலாந்திலிருந்து விஞ்ஞானிகளை தங்கள் சபைக்கு வரவழைத்து அவர்கள் முன்னர் யோகிகளை இப்படிப்பட்ட அபூர்வ செயல்களைச் செய்து காண்பிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 

 

இதில் கலந்து கொண்ட மேலை நாட்டினர் தங்கள் ஊர்களுக்குச் சென்று இந்த விந்தையைச் சொல்லி மகிழ்ந்ததோடு புத்தகத்திலும் எழுதி வைத்துள்ளன்ர்.

அறிவியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்த யோகிகளின் உயிருடன் புதைக்கும் நிகழ்வு உதவியாக இருந்து வருவது உண்மையே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜெர்மானிய-பிரிட்டிஷ்  உயிரியல் விஞ்ஞானியான வில்ஹெம் ஃபெல்ட்பெர்க் (Wilhelm Feldberg : பிறப்பு 19-11-1900 இறப்பு 23-10-1993) உயிரியல் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். ஆனால் அவர் தனது சோதனைகளுக்காக மிருகங்களை, குறிப்பாக முயல்களைக் கொடுமைப் படுத்துகிறார் என்று அவப்பெயர் பெற்றார்.

 

ஒரு நாள் மிருகங்களை நேசிக்கும் தன்னார்வத் தொண்டர்கள் இருவர் அவரது சோதனைச்சாலைக்குச் சென்றனர். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புவதாக அவர்கள் கூறி அந்த சோதனைச்சாலையில் நடப்பதை ஒரு படமாகவும் பிடித்தனர். அங்கு சோதனைக்குள்ளாக்கப்படும் முயல்கள் மயக்கமருந்து இல்லாமலேயே அறுக்கப்படுவதாகவும் கொடுமைப்படுத்தப் படுவதாகவும் அப்படியே புதைக்கப்படுவதாகவும் அவர்கள் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்து தாகங்ள் எடுத்த படத்தைத் திரையிட்டும் காட்டினர். ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.

1202-Dayanand-Arya-Vidyalaya-Centenary-India-Stamp-1989

 

இதனால் 1990ஆம் ஆண்டு அவரது விஞ்ஞான சோதனைகள் ஒரு முடிவுக்கு வந்தன. படம் பிடித்த இருவரில் ஒருவரான பெண்மணி மெலடி மக்டொனால்ட் ஒரு நூலையே எழுதி வெளியிட்டார். காட் இன் தி ஆக்ட்: தி ஃபெல்ட்பெர்க் இன்வெஸ்டிகேஷன் (Caught in the act: the Feldberg investigation)  என்ற அந்த நூல் பெரும் பரபரப்பை ஊட்டியது.

 

பெரிய விஞ்ஞானி தான் என்றாலும் கூட, மிருகங்களைக் கொடுமைப்படுத்தியதால் அவப் பெயர் பெற்றதோடு தனது 90ஆம் வயதில் சோதனைகள் செய்வதிலிருந்து ஃபெல்ட்பெர்க் ஓய்வும் பெற்றார்.

 

 

Ramakrishna_India_SriLanka_Stamp

******

 

 

 

மறு பிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி! (Post No. 2410)

book reincarnation

Written by S NAGARAJAN

Date: 21 December 2015

 

Post No. 2410

 

Time uploaded in London :– காலை 5-56

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடரில் 11,டிசம்பர்,2015 தேதியிட்ட பாக்யா இதழில் வெளியான கட்டுரை

மறு பிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி!

.நாகராஜன்

 

அவர் (டாக்டர் ஸ்டீவன்ஸன்) ஒன்று மாபெரும் தவறை இழைத்திருக்க வேண்டும். அல்லது இருபதாம் நூற்றாண்டின் கலிலியோ என்ற (மாபெரும் புகழுடன்) அறியப்பட வேண்டும்”    

                                                            –   டாக்டர் ஹரால்ட்

 

லியஃப் (டாக்டர்ஸ்டீவன்ஸனின் மறுபிறப்பு ஆராய்ச்சி பற்றி ஜர்னல் ஆஃப் நெர்வஸ் அண்ட் மென்டல் டிஸீஸ் பத்திரிகையில் எழுதியது)

 

Capa livro Reencarnação

    உலகிலுள்ள மறுபிறப்பைப் பற்றி அறிவியல் ரீதியாக அணுவளவும் பிசகாது ஆய்வு நடத்தி உலகைப் பிரமிக்க வைத்தவர் டாக்டர் ஐயான் ஸ்டீவன்ஸன். கனடா நாட்டைச் சேர்ந்த இவர் 3000 குழந்தைகளைப் பற்றி ஆராய்ந்தார். பெரும்பாலும் குழந்தைகளுக்கே முன்பிறப்பு பற்றிய பல தகவல்கள் துல்லியமாகத் தெரிகின்றன என்று இவர் கண்டு பிடித்தார். மிகச் சிறு வயதில் அப்போது பிறந்திருக்கும் குடும்பத்தினரின் பழக்க வழக்கங்கள், நடத்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு நடக்கும் குழந்தைகள் இவரது கவனத்தை கவர்ந்தன. உலகமெங்கும் சுற்றினார். அப்படி முன்பிறவி பற்றிக் கூறும் தகவல்களை நுணுக்கமாக ஆராய்ந்தார்.

 

 

 தனது ஆய்வில் இவர் சேர்த்த இன்னொரு முக்கிய அம்சம் உடல் அடையாளங்கள் குறித்தது. இப்பிறவியில் உடலில் காணப்படும் வடுக்கள், தழும்புகள் முற்பிறவி வாழ்க்கையுடன் ஒத்திருப்பது இவரைப் பெரிதும் கவர்ந்தது. இந்த அங்க அடையாளங்கள் முற்பிறவியின்கதைகளைத்தெரிவிக்கும் ஒரு அம்சம் என்பதையும் இவர் கண்டுபிடித்தார்.

ஹிப்நாஸிஸ் அல்லாத அறிவியல் ரீதியிலான ஒரு அணுகுமுறையை இவர் மேற்கொண்டதால் இவரை யாரும் ஏளனம் செய்யவோ அல்லது மறுத்துப் பேசவோ முடியவில்லை.

 

 

தனது அறை ஒன்றில் விசேஷ பேழை ஒன்றை இவர் பூட்டி வைத்துள்ளார். அதை எப்படித் திறப்பது என்ற இரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும். தனது மறுபிறப்பில் அல்லது இன்னும் ஏதாவது ஒரு வகையில் அந்தப் பேழையை நிச்சயம் தன்னால் திறக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை. இப்போது இறந்து விட்ட அவர் எப்படி அந்தப் பேழையை எப்போது திறக்கப் போகிறார் என்பதை உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த நாள் என்று வருமோ!

 

 

20 Cases suggestive of reincarnation என்ற அவரது புத்தகம் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு புத்தகம்.

அவர் தரும் சில சுவையான முற்பிறவி சம்பவங்களில் முக்கியமான ஒன்றானஸ்வீட் ஸ்வர்ணலதாகேஸைப் பார்ப்போம்:-

 

 ian-stevenson-md1

ஸ்வர்ணலதாவிற்கு மூன்று வயது ஆகும் போது அவள் தனது முன்பிறவி பற்றிய 50 நுணுக்கமான தகவல்களைத் தந்தாள். அத்தனையையும் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்தார்.

ஸ்வர்ணலதா மிஸ்ரா 1948இல் இந்தியாவில், மத்யப்ரதேசத்தில் பிறந்த குழந்தை. ஒரு நாள் தந்தையுடன் கத்னி என்ற இடத்தின் அருகில் பயணப்பட்ட குழந்தை திடீரென்று டிரைவரை ஒரு சாலையைக் காட்டித் திரும்பச் சொல்லிதனது வீட்டிற்குப்போக வேண்டும் என்றாள். அங்கு நல்ல டீ கிடைக்கும் என்றாள் அவள்!

 

பின்னர் தன்னைப் பற்றிய முழு விவரத்தையும் அவள் கூறலானாள். அவள் முந்தைய ஜென்மத்திலும் பெண்ணாகப் பிறந்தவள் தான். பெயர் பியா பாதக். பாதக்கிற்கு இரண்டு மகன்கள்.

 

ஜுர்குடியா என்ற இடத்தில் இருந்த தனது வீடு பற்றிய சிறு சிறு விவரங்களையும் கூட விடாமல் அவள் சொன்னாள். வீட்டின் முன்னால் ஒரு ரயில் லைன். பின்னால் பெண்கள் பள்ளி உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் அவள் குறிப்பிட்டாள். தனது காரைப் பற்றிய விவரத்தையும் கூட அவள் குறிப்பிட்டாள். (ஐம்பதுகளில் கார் என்பதே அரிது)

 

தொண்டையில் வலி வந்ததால் ஜபல்பூரில் டாக்டர் எஸ்.சி. பாப்ரட்டிடம் சிகிச்சை பெற்றும் பலனின்றி (1939ஆம் ஆண்டு) இறந்ததாக அவள் சொன்னாள்.

 

1959ஆம் ஆண்டு பியாவின் கணவன், இரு மகன்கள், சகோதரர் ஆகியோர் முன்னறிவிப்பின்றி ஸ்வர்ணலதாவைப் பார்க்க வந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் சகோதரனை அன்புடன்பாபுஎன்று பெயர் சொல்லி அழைத்தாள் ஸ்வர்ணா! தனது கணவனான சிந்தாமனி பாண்டே அருகில் வந்த போது, ஸ்வர்ணலதா வெட்கத்துடன் அவரைப் பார்த்தாள்! தனது மகன்களையும் அவள் அடையாளம் கூறினாள். அவர்கள், தாங்கள் அவளுடைய மகன்கள் இல்லை என்று கூறிய போதிலும் கூட, அவள் அதனால் ஏமாறவில்லை. உள்ளது உள்ளபடி அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்தாள்!

 

பின்னர் 1200 ரூபாயை மறைத்து வைத்திருந்ததைத் தன்கணவரிடம்சொல்ல, பாண்டே அது தனக்கும் தன் மனைவிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் என்று பிரமிப்புடன் ஒப்புக் கொண்டார்.

 

பின்னர் பியாவை அவளது முன் ஜென்ம வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தான் இறந்த பிறகு செய்யப்பட்ட அனைத்து மாறுதல்களையும் சொன்னதோடு அக்கம்பக்கத்தார், உறவினர் அனைவரையும் அடையாளம் கண்டு சொன்னாள்.

 children reincarnation

சரி, வளர வளர இந்த முன் ஜென்ம ஞாபகங்கள் ஸ்வர்ணலதாவைப் பாதித்ததா?

தாவரப் படிப்பில் ((Botany) மேற்படிப்பை முடித்த ஸ்வர்ணா தனது வாழ்க்கை இயல்பாக இருக்கிறது என்றாலும் பழைய கத்னியை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன, அந்த பணக்கார வாழ்க்கை போல வருமா, என்ன என்றாள். ஆனாலும் கூட இப்போதைய மிஸ்ரா குடும்பத்தினரிடம் அவள் அன்பு குறையவில்லை! அழகிய இளம் பெண்ணாக வளர்ந்த ஸ்வர்ணலதா இந்த ஜென்மத்தில் தகுந்த மணவாழ்க்கையை மேற்கொண்டாள்!

 

அகதா கிறிஸ்டியின் மர்ம நாவல்களில் வரும் திருப்பங்கள், ஹிட்ச்காக் படங்களின் சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் விஞ்சிய உண்மைச் சம்பவங்களை ஐயான் ஸ்டீவன்ஸன் எடுத்துரைக்கும் போது மெய் சிலிர்க்கும்.

ஸ்டீவன்ஸனின் ஆய்வுகள் முன் பிறவி பற்றி நமக்கு நம்பிக்கையை நிச்சயம் ஏற்படுத்தும்; ஏற்கனவே இருந்தால் அது வலுப்படும்!

ஸ்டீவன்ஸன் காட்டிய வழியில் இன்றும் பல விஞ்ஞானிகள் இந்த மறுபிறவி மாயத்தை ஆராய்ந்து வருகின்றனர்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரிட்டனின் புகழ் பெற்ற ராஜதந்திரி, (முதல் உலக) போர்க்கால பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ். ((Lloyd George 1863-1945) அவரை புது இடங்களை ஆராயும் சாகஸக்காரரான ராபர்ட் ஃபால்ஸன் ஸ்காட் (Robert Falson Scott) என்பவர் சந்தித்து தனது துருவ ஆராய்ச்சிப் பயணம் பற்றி சொல்லி அந்தப் பயணத்திற்கு ஏராளமாக செலவாகும், அதற்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். உடனே லாயிட் ஜார்ஜ் பிரபலமான ஒரு பணக்காரரிடம் தன் பெயரைச் சொல்லி உதவி பெறுமாறு சொன்னார். அந்த நபர் அரசியலில் செல்வாக்கு உள்ளவரும் கூட.

சிறிது நாள் கழித்து ஜார்ஜை சந்தித்த ஸ்காட் நன்றி தெரிவித்தார். ‘எப்படி அவரிடம் பணம் வாங்கினாய்?’ என்று கேட்டார் ஜார்ஜ்.

 

உங்கள் பெயரைச் சொன்னவுடன் ஆயிரம் பவுண்டுகளை உடனே தந்தார். உங்களையும் நான் துருவத்திற்கு அழைத்துச் சென்றால் இருபதினாயிரம் பவுண்டுகள் தருவதாக வாக்களித்தார். அத்தோடு உங்களை துருவத்திலேயே விட்டு விட்டு நான் மட்டும் திரும்பி வந்தால் நிச்சயம் பத்து லட்சம் பவுண்டுகள் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்!” என்றார் ஸ்காட்!

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா!!!

***********

 

 

ஆவி உலக எழுத்தாளர்கள்! ஆவி உலக அதிசயங்கள்! Post No. 2398

 

Drood_300x300

WRITTEN BY S NAGARAJAN

Date: 17 December 2015

 

Post No. 2398

 

Time uploaded in London :– 6-08 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

அறிவியல் துளிகள் தொடரில் 18, டிசம்பர் 2015 தேதியிட்ட பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை

 

இறந்த பிறகும் எழுதிய அதிசய எழுத்தாளர்!

.நாகராஜன்

இறந்த பிறகு உலகம் உங்களை மறக்காமல் இருக்க ஒரு வழி இருக்கிறது, ஒன்று மற்றவர்கள் படிக்க உகந்த எதையேனும் எழுதுங்கள், அல்லது மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுத உகந்த செயல்களைச் செய்யுங்கள் – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

 

 

உலக பிரசித்தி பெற்ற நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸின் (பிறப்பு 7-2-1812; மறைவு 8-7-1870) நாவல்களைப் படிக்காதவர்களே இருக்க முடியாது. அவரது கதாபாத்திரங்கள் அனைத்துமே உயிர் சித்திரங்கள். ஷேக்ஸ்பியருக்கு அடுத்தாற் போல மகோன்னதமான படைப்புகளைப் படைத்தவர் என்று உலகம் டிக்கன்ஸைக் கொண்டாடுகிறது.

 

220px-Drood_serial_cover

அதீத உளவியலில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். அற்புதமான பேய்க் கதைகள் பலவற்றை அவர் எழுதியிருக்கிறார். To be taken with a Grain of Salt மற்றும் The Signalman ஆகிய அவரது இரு பேய்க் கதைகள் பிரபலமானவை.

The Mystery of Edwin Drood என்ற மர்ம நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்த போது இறந்து விட்டார். இதற்குச் சில காலம் கழித்து டி.பி.ஜேம்ஸ் என்ற ஒரு அமெரிக்கருக்கு சார்லஸ் டிக்கன்ஸ் மூலம் ‘ஆவி உலகச் செய்தி’ வந்தது.

 

ஜேம்ஸ் படிக்காத ஒரு மெக்கானிக். வெர்மாண்ட் என்ற இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு ‘ஆட்டோமேடிக் ரைடிங்’ என்ற ‘ஆவி ஒருவரின் மேல் ஆவிர்பித்து எழுதுகின்ற முறை’ மூலம், நாவல் டிக்கன்ஸ் மறைந்த போது விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தது.

 

1872ஆம் ஆண்டு கிறிஸ்துமஸிலிருந்து தொடங்கி 1873ஆம் ஆண்டு ஜுலை முடிய தவறாமல் நாவலின் அத்தியாயங்கள் ஜேம்ஸுக்கு ‘ஆட்டோமேடிக் ரைடிங்’ முறை மூலம் வந்தது.

 

இறந்த பிறகு சார்லஸ் டிக்கன்ஸ் இப்படி எழுதிய அத்தியாயங்கள் அவர் உயிருடன் இருந்த போது எழுதியதை விட அதிகமானவை. அந்த அத்தியாயங்கள் அற்புதமான முறையில் தொடர்ச்சி, அவரது நடை, சிந்தனா முறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

 

இறப்பதற்கு முன்னர் மற்றும் இறப்பதற்குப் பின்னர் எழுதிய இரண்டு பகுதிகளும் இணைந்து ‘தி மிஸ்ட்ரி ஆஃப் எட்வின் ட்ரூட்’ என்ற தலைப்பில் நாவலாக வெளி வந்தது. எழுதியவர் – சார்லஸ் டிக்கன்ஸ் என்று வேறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.

 

இதைப் படித்த சார்லஸ் டிக்கன்ஸின் உலகெங்கிமுள்ள ரசிகர்கள் மற்றும் ஆவி உலக அபிமானிகள் அனைவரும் இதைப் பாராட்டினர். ஆவி உலகம் இருப்பதற்கு இந்த நாவல் ஒன்றே அத்தாட்சி என்று அவர்கள் உரக்கக் கூறினர்.

OUIJA

ஆனால் இதை கடுமையாக விமரிசனம் செய்த ஒருவரும் இருந்தார். அவர் பெயர் தியோடர் ஃப்லோராய். உளவியலாளரான அவர் இதற்கும் சார்லஸ் டிக்கன்ஸுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் ஜேம்ஸ் தனது ஆழ்மனதில் உதித்த கற்பனை மூலமாகவே இதை எழுதினார் என்றும் கூறினார்.

 

இரு பெண்மணிகள் சந்திக்கும் ஒரு சீன் மிக அற்புதமாக சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியது போலவே இருக்கிறது என்று விமரிசித்த ஜெனிவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மேடம் கே. ஃபேர்பேங்க்ஸ் என்ற பெண்மணி இதர பல பகுதிகள் அவரது வழக்கமான நடை போல இல்லை என்றார்.

 

இதற்கிடையில் சார்லஸ் டிக்கன்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜான் ஃபோர்ஸ்டர் என்பவர் டிக்கன்ஸின் நோட்புத்தகங்கள், பேப்பர்களிலிருந்து இந்த நாவலில் பின்னால் வரப் போவதை அவர் முன் கூட்டியே ஒரு அத்தியாயமாக எழுதி வைத்திருந்ததைக் கண்டுபிடித்துக் கூறினார். அத்தோடு மட்டுமின்றி ஆவி உலகத்திலிருந்து டிக்கன்ஸ் எழுதிய பகுதியில் மூன்றே மூன்று கதாபாத்திரங்களே சேர்க்கப்பட்டிருப்பதையும், இதை எழுதிய ஜேம்ஸ், தான் டிக்கன்ஸ் எழுதிய நாவலின் முற்பகுதியைப் படித்திருப்பதை ஒத்துக் கொண்டதையும், டிக்கன்ஸ் இறந்த பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்தே இதை எழுதியிருப்பதையும் ஃபோர்ஸ்டர் சுட்டிக் காட்டினார்.

 

ஆனால் எது எப்படி இருந்த போதிலும் இறந்த பின்னரும் சார்லஸ் டிக்கன்ஸ் ‘எழுதிய’ நாவல் நன்றாகத் தான் இருந்தது!

டிக்கன்ஸ் மெஸ்மரிஸத்தை நன்கு பயின்றவர். அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு.

இதே போல ஏராளமான மீடியம்கள் ஆவி உலகத் தொடர்பினால் பல புத்தக்கங்களை எழுதி உள்ளனர்.

 

 

ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டு தொடங்கிய போது செயிண்ட் லூயிஸ் என்ற இடத்தில் இல்லத்தரசியாகத் திகழ்ந்த பேர்ல் குரண் என்பவர் தன்னிடம் பேஷன்ஸ் ஒர்த் என்பவரின் ஆவி தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறினார். ஆவி உலகத் தொடர்பினால் வரும் செய்திகளை அறிந்து கொள்ளப் பயன்படும் ஊஜா போர்டை அவர் பயன்படுத்தினார். இதன் மூலம் 5000 கவிதைகள், ஒரு நாடகம், பல நாவல்களை அவர் எழுதினார். நாளடைவில் ஊஜா போர்டைத் தூக்கிப் போட்டு விட்டு சாதாரண நிலையிலேயே அவர் ஆவியின் மூலம் எழுத ஆரம்பித்தார்.

 

ouija_board

இப்படி ஆவி மூலம் எழுதிய இன்னொரு பிரபல பெண்மணி ஹெலன் ஸ்மித் என்பவர். காதரீன் எலிஸ் முல்லர் என்ற புனைபெயரில் அவர் எழுதலானார். இந்த புனைப் பெயருக்கு உரியவர் 1863இல் ஜெனிவாவில் பிறந்த ஒரு   மீடியம். அவர் தனது முந்தைய ஜென்மத்தில் ஹிந்து குருக்களாக இருந்ததாகக் கூறினார். அராபிய மொழியில் அவர் எழுத ஆரம்பித்தது அனைவரையும் வியக்க வைத்தது. தனது மொழியானது செவ்வாய் மற்றும் யுரேனஸ் கிரகத்தின் மொழி என்றார் அவர்.

 

 

இதை ஆராய வந்த ஜெனிவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் தியோடர் ஃப்ளர்நாய் என்பவர் ஹெலன் ஸ்மித்தின் ஆழ்மனமே இவற்றைப் படைத்தது என்றார். கற்பனை வளம் வாய்ந்த ஒரு பெண்மணியின் மொழியே செவ்வாய் கிரக மொழி என்றார் அவர். ஆனால் ஹெலன் மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தார்.

 

 

பிரேஜில் நாட்டைச் சேர்ந்த மீடியமான பிரான்ஸிஸ்கோ சேவியர் 1910ஆம் ஆண்டில் பிறந்தவர். வரலாறிலேயே ஆட்டோமேடிக் ரைடிங்கிற்காக அதிகப் புகழ் பெற்றவர் இவர். ஒரு லட்சம் பக்கங்களை ஆவியின் மூலமாக இவர் எழுதித் தள்ளி விட்டார். அவர் பள்ளியில் படித்ததே இல்லை என்பது தான் பெரிய அதிசயம்! விஞ்ஞானம், இலக்கியம் என பல்துறை புத்தகங்களை அவர் எழுதியது அனைவரையும் வியக்க வைத்தது! ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அவர் உலகெங்கும் நடத்திய டாக்-ஷோக்கள் மிகவும் பிரபலமாயின. தன் புத்தகங்களிலிருந்து வந்த வருமானத்தை அறக்கட்டளை நிறுவி தர்ம காரியங்களுக்காக அவர் செலவழித்தார்.

 

 

இப்படி சார்லஸ் டிக்கன்ஸ் போல இறந்தும் எழுதியோர் அநேகர் உண்டு. ஆவிகளாக எழுதினாலும் கூட அவர்களின் நூல்கள் சுவையாகத் தான் உள்ளன!

 

Baron-Alexander-Von-Humboldt-to-the-Americ

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

ஜெர்மானிய விஞ்ஞானியான பரோன் அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Baron Alexander Von Humboldt) ஒரு முறை அமெரிக்கா வந்த போது அமெரிக்க ஜனாதிபதி ஜெஃபர்ஸனை (Jefferson) அவரது அலுவலக அறையில் சந்தித்தார். அங்கு மேஜை மீது ஜனாதிபதி ஜெஃபர்ஸனைத் திட்டிக் கேவலமாகவும் ஆபாசமாகவும் எழுதி இருந்த பத்திரிகை ஒன்றைக் கண்டு திடுக்கிட்டார்.

“இந்த பத்திரிகையை இன்னும் ஏன் தடை செய்யவில்லை?” என்று ஆச்சரியத்துடன் கேட்ட அவர், “இதன் ஆசிரியரை சிறையில் அடைத்தாயிற்றா? இவருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது?” என்று கேட்டார்.

 

BARON CURRENCY

ஜெஃபர்ஸன் புன்முறுவல் பூத்தார்.

‘அதை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள், பரோன்” என்ற ஜெஃபர்ஸன்,

“உங்களிடம் யாரேனும் அமெரிக்காவில் சுதந்திரம் இருக்கிறதா என்று சந்தேகப்பட்டுக் கேட்டாலோ அல்லது அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா என்று கேட்டாலோ, இந்தப் பத்திரிகையைக் காண்பியுங்கள். இதை எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள் என்பதையும் சொல்லுங்கள்” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி என்றால் அமெரிக்க ஜனாதிபதி தான்!

************

 

 

மூன்று சூரியன்கள் தோன்றிய அதிசயம்!!

Compiled by London swaminathan

Article No.1857; Dated 11 May 2015.

Uploaded in London at 9-35

சமீபத்தில் மங்கோலியாவில் மூன்று சூரியன்கள் தோன்றியது சென்னை முதல் லண்டன் வரை எல்லா பத்திரிக்கைகளிலும் ஜனவரி (2015) மாதத்தில் வந்தன. இது ஒரு அதிசய நிகழ்வே. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் காரைக்காலில் இப்படி மூன்று சூரியன்கள் தோன்றியது தினமணியில் செய்தியாக வந்தது. இதைவிட வியப்பான விஷயம் வராஹமிகிரர் என்பவர் சம்ஸ்கிருத கலைக் களஞ்சியமான பிருஹத் சம்ஹிதாவில் 1500 ஆண்டுகளுக்கு முன் இது பற்றி எழுதி வைத்ததாகும்!! அதற்கு முன் அரிஸ்டாடில் போன்ற கிரேக்க அறிஞர்கள் இது பற்றிப் பேசியிருந்தாலும் வராஹ மிகிரரே முதலில் இதைச் சொல்லி இருக்க வேண்டும். ஏனெனில் அவர், தனக்கு முந்திய 20-க்கும் மேலான அறிஞர்கள் பெயர்களைச் சொல்லி அவர்கள் சொன்ன விஷயங்களைச் “சுருக்கமாகச்” சொல்வதாக எழுதியுள்ளார்.

மூன்று சூரியன்கள் தோன்றுவது எப்படி என்பதைக் காண்பதற்கு முன்னால், இது பற்றி வராஹமிகிரர் சம்ஸிருதத்தில் எழுதியது என்ன என்பதைக் காண்போம்

பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 37 (ப்ரதி சூர்ய லக்ஷணம்)

1).போலி சூரியன்கள் தோன்றுவது நல்ல சகுனமே! அந்தந்த பருவத்துக்கு ஏற்ற வண்ணத்தில் தோன்றினால் நல்லது. மேலும் தூய வெண்மை அலது வைடூர்ய ரத்ன வர்ணத்தில் இருந்தால் நல்லது.

ப்ரதிசூர்யக: ப்ரசஸ்தோ திவசக்ருத்ருதுவர்ணசப்ரப: ஸ்நிக்த:

வைடூர்ய நிப: ஸ்வச்ச: சுக்லஸ்ச க்ஷேமசௌர்பிக்ஷ:

2).போலி சூரியன்கள் மஞ்சள் வர்ணத்தில் இருந்தால் வியாதிகள் மலியும்; சிவப்பு வர்ணத்தில் இருந்தால் ஆயுதப் போராட்டம் நிகழும். பல சூரியன்கள் வரிசையாகத் தோன்றுமானால் வியாதிகள், அரசர் படுகொலை, கொள்ளைக்காரர் தொல்லைகள் நிகழும்

பீதோ வ்யாதீம் ஜனயத்யசோகரூபஸ்ச சஸ்த்ரகோபாய

ப்ரதிசூர்யாணாம் மாலா தச்யுபயாதங்கன்ருப ஹந்த்ரீ

3).உண்மைச் சூரியனுக்கு வடக்கில் போலி சூரியன் தோன்றினால் மழையும் தெற்கில் இருந்தால் கடுங் காற்றும் தோன்றும். மேலே தோன்றினால் மன்னனுக்கு கேடு, கீழே தோன்றினால் மக்களுக்குக் கேடு. இரு பக்கங்களிலும் தோன்றினாலோ நீர் நிலைகளால் (ஆற்று வெள்ளம், கடல் சுனாமி அலை) கேடு வரும்.

திவஸக்ருத: ப்ரதிசூர்யோ ஜலக்ருதுதக்தக்ஷிணோ ஸ்திதோ அனிலக்ருத்

உபயஸ்த: சலிலபயம் ன்ருபமுபரி நிஹன்யத்யதோ ஜனஹா

இதற்கு மேல் அவர் காஸ்யபர், பராசரர் முதலியோர் இது பற்றி என்ன சொன்னார்கள் என்ற ஸ்லோகங்களையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

ஹிந்துக்கள் வான மண்டலத்தைக் கூர்ந்து கவனித்ததோடு நில்லாமல் அதை எழுதியும் வைத்தது அவர்களது விஞ்ஞான கண்ணோட்டத்துக்கு சான்றாகத் திகழ்கிறது.அவர் எழுதியது இன்றைய அறிவியல் அளவுக்கு இல்லாவிட்டாலும் அன்றே நாம் இதைக் கண்டு பிடித்து எழுதினோம் என்பது பெருமைக்குரியது. வானவியல் உண்மைகள் மாறிக்கொண்டே வருகின்றன. 25 ஆண்டுக்கு முந்தைய வானவியல் புத்தகங்கள் இங்கு லண்டனில் பழைய புத்தகக் கடைகளில்தான் பார்க்கலாம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்துக்கள் இதை சம்ஸ்கிருதத்தில் எழுதியதற்கு அவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும். மேலும் வராஹமிகிரர் பூகம்பம் பற்றியும் ஒரு தனி அத்தியாயம் எழுதுயுள்ளார். இவ்வாறு இன்றைய உலகை உலுக்கும் விஷயங்கள் பற்றி அன்றே தனித்தனி அத்தியாயங்கள் எழுதியது அதிசயமன்றோ!!! சம்ஸ்கிருதத்தைக் கற்றால் இது போன்ற பல்லாயிரக் கணக்கான உண்மைகளை உணரலாம்.

32496-sun-dogs02

மூன்று சூரியன்களுக்கு விஞ்ஞான விளக்கம்

இது மிக உயரத்தில் உள்ள மேகங்களில் இருக்கும் அறுகோண வடிவ பனிக்கட்டி ஸ்படிகங்களால் (ஹெக்சகனல் கிறிஸ்டல்ஸ்) தோன்றுகின்றன. பிரிஸம் எனப்படும் முக்கோண வடிவ கண்ணாடியின் வழியே ஒளி செல்லும் போது அது வானவில் நிறத்தில் ஏழாகப் பிரிகிறது. அது போலவே அறுகோண வடிவ ஸ்படிகம் வழியே செல்லுகையில் அது சரியாக 22 டிகிரி கோணதில் பிரிகிறது. இதை ஒலி விலகல் என்பர். இந்த அறுகோண ஐஸ் ஸ்படிகங்கள் மேகத்தில் பல இடங்களில் பரவலாகக் காணப்பட்டால் சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் தோன்றும். இதைத் தமிழில் சூரியனைச் சுற்றி கோட்டை கட்டி இருக்கிறது என்பர்.

இதற்கு மாறாக அந்த ஐஸ் ஸ்படிகங்கள் கீழே போய் செங்குத்துக் (வெர்டிகல்) கோடுகளாக நிற்குமானால், விலகும் ஒலியானது படுக்கை (ஹரிஸாண்டல்) வடிவத்தில் இருக்கும் அவை போலி சூரியன்களைத் தோற்றுவிக்கும்.

போலி சூரியன்கள் பல வண்ணங்களில் – ஆரஞ்சு, மஞ்சள், நீலம்—இருக்க முடியும். சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் சிவப்பாகவும், தள்ளிப் போக போக மஞ்சள், ஆரஞ்சு, நீலம் என்று மாறிக்கொண்டேயும் வரும்.

கிரேக்க அறிஞர் அரிஸ்டாடில் கி.மு.384, மீண்டும் கி.மு.322ல் தோன்றிய போலி சூரியன்களைக் குறித்துவைத்தார். அவருக்குபின் வந்தோர் இது பற்றி எழுதிவிட்டு இதனால் வரும் கேடுகள் என்ன என்ற நம்பிக்கைகளையும் எழுதினர்.

சம்ஸ்கிருத நூல்களில் மேலும் பல இடங்களிலும் போலி சூரியன்கள் பற்றிய குறிப்புகள் உள.

இரண்டு நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்தியவர்!

krishnamac1

Written by S Nagarajan
Article No.1510; Dated 23 December 2014.

“ யோகம் என்பது மனதின் இயக்கங்களை நிறுத்துவது தான்!”
– பதஞ்சலி முனிவர் யோகசூத்திரத்தில் கூறுவது

மனிதனின் பூரண ஆயுள் என்று கூறப்படும் நூறு வயதை எட்டியதோடு ஆயுள் முழுவதும் திடகாத்திரமாக வாழ்ந்து காட்டி அறிவியலை வியக்க வைத்த இந்திய யோகி திருமலை கிருஷ்ணமாசார்யா (தோற்றம் 18-11-1888 மறைவு 28-2-1989). இள வயதிலேயே யோகத்தை முறைப்படி கற்ற கிருஷ்ணமாசார்யா யோகத்திற்கு ஒரு புதிய பொலிவையும் மதிப்பையும் உலக அரங்கில் ஏற்படுத்தித் தந்தார்.

இந்திய வைசிராயாக இருந்த லார்ட் இர்வின் கிருஷ்ணமாசார்யாவிடம் பெரு மதிப்பு கொண்டவர். அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. சிம்லாவில் தங்கி ஆறு மாத காலம் அவருக்கு யோகப் பயிற்சிகளை கிருஷ்ணமாசார்யா கற்றுத் தர அவர் பெரிதும் குணமடைந்தார். 1919ஆம் ஆண்டு கிருஷ்ணமாசார்யாவை திபெத்திற்கு அனுப்பி அதற்கான செலவு முழுவதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

1935ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த இதய நோய் நிபுணர் தெரெஸி ப்ராஸே (Therese Brosse) என்பவர் கலிபோர்னியா விஞ்ஞானி ஒருவருடன் இந்தியா வந்து கிருஷ்ணமாசார்யா மீது சோதனைகளை மேற்கொண்டார். அவர்களிடம் யோகா மூலமாக இதயத் துடிப்பை நிறுத்த முடியும், இதய ஓட்டத்தின் மின் அதிர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவும் முற்றிலுமாக நிறுத்தவும் முடியும் என்று கிருஷ்ணமாசார்யா கூறினார். அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. ஆனால் சுமார் இரு நிமிடங்கள் இதயத்தை நிறுத்திக் காண்பித்தார் அவர்கள் அயர்ந்து வியந்தனர். ஈசிஜியில் பூஜ்யம் என்ற அளவை பல வினாடிகளுக்குத் தான் பார்த்ததாக தெரெஸி ப்ராஸே தன் குறிப்பில் எழுதி வைத்தார்.

Tirumalai_Krishnamacharya

இன்னொரு ஜெர்மானிய டாக்டர் இதைப் பார்த்து விட்டு, “இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவரை இறந்து விட்டதாகவே சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

மைசூரில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் அவர் யோகா மூலமாக என்னென்ன செய்யமுடியும் என்பதை நிரூபிப்பதற்காக தனது நாடியை நிறுத்திக் காண்பித்தார். ஓடுகின்ற காரை நிறுத்திக் காண்பித்தார். பற்களால் மிகவும் கனமான பொருள்களைத் தூக்கிக் காண்பித்தார். அத்தோடு பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ள கடினமான ஆசனங்களை பொது மக்கள் மத்தியில் செய்து காண்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த மைசூர் அரசர் இவரை வெகுவாக மதித்து ஆதரித்தார்.

அறுபது வயதுக்குப் பின்னர் சென்னைக்கு வந்த கிருஷ்ணமாசார்யா இறுதி வரை சென்னையிலேயே வசித்தார். பழுத்த 96ஆம் வயதில் அவர் இடுப்பு எலும்பு முறியவே, அறுவைச் சிகிச்சையை ஏற்க மறுத்து தன் யோகம் மூலமாகவே சிகிச்சை செய்து கொண்டார். நூறு வயது தாண்டியும் இறுதி வரை உணர்வுடன் இருந்தது அவரது யோகப் பயிற்சியின் வலிமைக்கு ஒரு சான்றாக அமைந்தது.

அவரது சிகிச்சை முறையே அலாதியாக அமைந்தது. நோயாளியின் நாடித் துடிப்பும் அவரது தோலின் நிறம், அவரது மூச்சின் தரம் ஆகியவற்றை வைத்தே அவருக்கு இன்ன வியாதி என்று கூறி அதற்கான சிகிச்சையையும் தர ஆரம்பிப்பது அவரது விசேஷமான யோக வழியிலான சிகிச்சை முறையாக அமைந்தது.

பெரும் யோக நூல்கள் பலவும் அவருக்கு மனப்பாடம். பதஞ்சலியின் யோக சூத்திரம் உலகிற்குக் கிடைத்த அரும் கொடை என்று அவர் அடிக்கடி கூறுவார்.சூரியனின் மீது அபார பக்தி கொண்டவர் அவர். எந்த ஒரு மருந்தையும் தரும் முன்னர் சூரியனை வேண்டிய பின்னரே தருவார். சூரியனை வணங்குமாறு இடையறாது அனைவருக்கும் அவர் அறிவுரை சொல்லி வந்தார்.
Krishnamacharya_scorpion

ஆரோக்கியத்துடன் அறிவியல் வியக்கும் வகையில் ஒரு சூப்பர் மேனாக யோகா மூலம் வாழ முடியும் என்று உணர்த்திய அபூர்வ யோகியாக அவர் அமைந்தது இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

மனித ஆற்றலின் எல்லையற்ற சக்தியை கடந்த முன்னூறு ஆண்டுகளாக தொடர்ந்து அறிவியல் ஆய்ந்து வருகிறது. அதிசய மனிதர்களில் சிலரைப் பற்றி இது வரை பார்த்தோம். ஆங்காங்கே இப்படிப்பட்ட சூப்பர்மேன்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

விஞ்ஞானிகளுள் அபூர்வமான ஒரு மனிதர் இரத்த வகைகளைக் கண்டுபிடித்த லாண்ட்ஸ்டெய்னர். எதற்கும் அலட்டிக்கொள்ளாத சுபாவம் கொண்டவர் அவர். 1930ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலை நேரத்தில் அவர் வீட்டிற்கு பரபரப்புடன் அவரது நண்பர் பிலிப் லெவைன் வந்தார். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் வழக்கம் போல படிப்பதும் பேசுவதுமாக இருந்தனர்.”உங்களுக்கு விஷயமே தெரியாதா?” என்று அவர் பரபரப்புடன் கேட்டார், “என்ன விஷயம்?” என்று லாண்ட்ஸ்டெய்னரின் மனைவியும் மகனும் கேட்டனர். லாண்ட்ஸ்டெய்னர் நோபல் பரிசை வென்றிருக்கிறார் என்று பரபரப்புடன் கூறினார் நண்பர். லாண்ட்ஸ்டெய்னருக்கு நோபல் பரிசு கிடைத்த விஷயத்தை அவர்கள் அதுவரை அறிந்திருக்கவே இல்லை. அன்று காலையே லாண்ட்ஸ்டெய்னருக்கு இது தெரிந்திருந்த போதிலும் அவர் இதை யாரிடமும் சொல்லவில்லை. அப்படி ஒரு அடக்கமான சுபாவம் மனிதருக்கு.

about_krishnamacharya

போலியோ ஆராய்ச்சி, நோய் தடுப்பு அமைப்பு வேலை செய்யும் முறை, மனிதனின் இரத்த வகைகள் ஆகியவற்றில் அவர் நடத்திய ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சுமார் 14 பேர்கள் நாமினேஷன் தந்து வலியுறுத்தி வந்தனர். விஞ்ஞானிகள் வட்டாரமும் அவரது நோபல் அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தது. இறுதியாக 29 நீண்ட வருடங்கள் கழிந்த பிறகு, அவரது இரத்த வகைகளின் கண்டுபிடிப்பிற்கு நோபல் பரிசு கிடைத்தது.

இவரது வாழ்க்கை முழுவதும் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு. அயராத கடும் உழைப்பாளியான அவர் லாபரட்டரியிலேயே தான் வாசம் செய்வார். அவரது கீழ் வேலை பார்த்த இளம் விஞ்ஞானிகள் மிகுந்த அவசரம் அவசரமாக பல முடிவுகளைத் தெரிவிப்பர். அவர்களை நோக்கி அவர்,” இது வேடிக்கையாக இல்லையா! முதுமை வயதை அடைந்த எனக்கு இன்னும் சிறிது காலமே மீதம் இருக்கும் போது நான் உங்களுக்கு பொறுமையைப் பற்றி போதிக்க வேண்டியிருக்கிறதே! உங்களுக்கு இன்னும் நீண்ட நெடிய வாழ்க்கை உள்ளதே! அவசரப்படாதீர்கள்” என்பார்.

அவரது வளர்ப்பு நாயான வால்டியை தன் டெஸ்கின் கீழே அமர வைப்பார். அசராமல் நெடு நேரம் அப்படியே உட்காரும் அது, சாப்பாடு நேரம் வந்தவுடன் குலைக்க ஆரம்பிக்கும். அதைப் பார்த்து லாண்ட்ஸ்டெய்னர், “என்ன வால்டி, விஞ்ஞானத்தை நீ மதிக்கவே மாட்டேன் என்கிறாய்” என்று செல்லமாகக் கடிந்து கொள்வார்!

Contact swami_48@yahoo.com
*****************

Tamil Talent beyond Belief!

Indian-Rope-Trick

Research paper written by London Swaminathan
Research article No.1508; Dated 22 December 2014.

The Wonder that is Tamil – Part 1

Tamil literature is vast. It is vast like an ocean. Pearls and corals are at the bottom lying undiscovered. Tamils wasted their 50% time by criticizing Sanskrit and another 50% by shouting slogans “Long Live Tamil” from political stages. Because they mingled politics with Tamil language lot of gems are still lying unknown and undiscovered. They are beyond the reach of general public. Gems form Sanskrit literature was translated in to European languages 300 years ago. Tamils have slowly woken up and started translating them in to other languages. Even the existing translations don’t highlight the juicy bits. One has to dig deeper to find those gems. Let us look at one of the gems now:

Tondai Manadala Satakam consists of 100 verses. It belongs to modern period. The poem glorifies the people, philanthropists, chieftains and kings of Tondai Nadu. Tondai Nadu is the northern most area of Tamil Nadu. It covers the old Pallava kingdom including Kancheepuram, Chennai, Tiruvannamalai and Pondicherry. One of the philanthropists who supported the bards and their wives was Sadayanthan. He was the patron of many talented singers and dancers.

Like the famous Rope Trick of North India, Tamils were practising and demonstrating certain talents which were beyond one’s belief. They could dance with several water pots on their heads and pick up a needle from the floor without dropping a single water pot. Even today we have such talented folk dancers.

king2

Hundreds of years ago there was a dancer who could climb a pole like an acrobat and slip her nose ring from the top and swing lie a king fisher to catch the falling nose ring. Several types of birds can do this extraordinary feat of catching their falling prey or fruits or nuts in the mid air. This talented dancing girl did this like a bird called Vichuli. It is like king fisher bird that can catch its prey from anywhere.

Her name and fame spread far and wide. The Pandya king wanted to see her acrobatic talent in person. When he sent a word to the singers and dancers this lady came forward to demonstrate her talent. But Pandya’s wife was very jealous about this village beauty and so she was planning to distract her husband, the king, from watching such a brilliant performance. She succeeded in distracting the king at the nick of the moment and so the king missed the important bit. He could not watch the girl catching the falling nose ring by flying like a bird in mid air. The queen made him to turn his face away under some false pretense.
kingfisher

The disappointed king asked the lady to demonstrate it one more time. But the woman insisted it requires lot of Yoga practice and breathing exercises such as Jala sthambana and Vayu sthambana to do it perfectly without endangering her life. When he insisted her to do it and promised all precautions to save her in any eventuality, she knew that she would die half way through such a feat. She did it to satisfy the king and died when she caught the falling nose ring. But she was so grateful to the philanthropist Sadayanathan who supported her, composed a poem and recited to a bird, requesting the bird to convey it to her patron. The song and story were part of Tondai Mandala Satakam. Just because it was preserved in the poem, we come to know about the extraordinary talent of a Tamil woman.

Those were the days the whole world was looking for such miracles from India. Even Emperor Jahangir recorded witnessing a rope trick in person. All the foreign travellers who visited India for 2300 years from the days of Megasthenes wrote hundreds of pages about India and its wonders. We must thank those people who made us feel proud.
ndian-rope-trick-set-1127-p

(I have translated this into English from my brother S Nagaraja’s Tamil article: swami48@yahoo.com )

தமிழகத்தின் விச்சுளி வித்தை!

rope1
Famous Indian Rope Trick

கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1505; தேதி 22 டிசம்பர், 2014.

“ ஒரு கயிறு செங்குத்தாக நிற்க அதில் ஒரு பையன் ஏறிக் காட்டும் இந்தியக் கயிறு வித்தையை என் கண்களால் நானே பார்த்தேன்” – முகலாய சக்கரவர்த்தி ஜிஹாங்கீர்

அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானது இந்தியாவில் தோன்றிய யோகா. இந்தியாவிலும் தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள் ஆற்றிய, ஆற்றி வரும் அற்புதங்கள் ஏராளம். அத்தோடு தமிழகத்தில் பழைய நாட்களில் பெரும் கலைஞர்கள் ஜல ஸ்தம்பனம், வாயு ஸ்தம்பனம் ஆகியவற்றுள் தேர்ச்சி பெற்று அவற்றின் அடிப்படையிலான வித்தைகளைச் செய்து காட்டி உலகோரை வியக்க வைத்தனர்.

நல்ல வேளையாக இப்படிப்பட்ட வித்தைகளில் சிலவற்றைத் தமிழ் இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. அவற்றில் ஒன்று வியக்க வைக்கும் விச்சுளி வித்தை.

rope4

விச்சுளி வித்தை என்றால் என்ன? கூத்தாடுகின்றவள் கழை மீது ஏறி அதிலிருந்தபடியே பல வித்தைகளைச் செய்து காட்டுவாள். திடீரென தன் மூக்கில் இருந்த ரத்தின மூக்குத்தியைக் கழற்றி நழுவ விடுவாள். அது கீழே சற்று தூரம் இறங்கு முன், “விச்சுளி” என்னும் பறவை போலக் கழை மேலிருந்து கீழே பாய்ந்து, அதனைக் கையினால் தொடாமலேயே, பாய்ச்சலிலேயே மூக்கில் கோர்த்துக் கொண்டு கீழே குதிக்காமல், அந்தரத்தில் இருந்தபடியே பின்னும் மேலே பாய்ந்து கழை மேல் ஏறிக் கொள்வாள்.

நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் இந்த விச்சுளி வித்தையைச் செய்து காட்டுபவர்கள் பலர் தமிழகத்தில் இருந்தார்கள் என்றால் பிரமிப்பாயில்லை?!

இதைப் பற்றிய வரலாறு ஒன்றை தொண்டை மண்டலத்துச் சதகம் கூறுகிறது.

தொண்டைமண்டலத்தில் இருந்த 24 கோட்டங்களில் ஒன்றான புழற் கோட்டத்தின் அருகில், “அயன்றை” என்னும் சிற்றூரில் பெரும் பிரபுவும், சிறந்த தியாகியும், வேளாண்குடியில் பிறந்தவருமான சடையநாத வள்ளல் என்பவர் விறலியர் வகுப்பினரை ஆதரித்து வந்தார். அந்த வகுப்பைச் சேர்ந்த பாணக்கூத்தி ஒருத்தி பாண்டிய மன்னனின் அரண்மனையில் கழைக்கூத்து வகையில், “விச்சுளி வித்தையைச்” செய்து காட்டினாள்.

ndian-rope-trick-set-1127-p

அந்தக் கூத்தியின் அழகையும் வித்தையின் நேர்த்தியையும் பார்த்த பாண்டியனின் மனைவி , தனது சூழ்ச்சியால் அந்த வித்தையைப் பாண்டிய மன்னன், பார்க்காதவாறு செய்து விட்டாள். ஆனால் எல்லோரும் புகழ்வதைக் கேட்ட பாண்டியன், அந்த வித்தையைத் தனக்காக மீண்டும் ஒருமுறை செய்து காட்டுமாறு கூத்தியை வேண்டினான். ஆனால் கூத்தியோ,” ஆறு மாத கால அளவு, சுவாச பந்தனம் என்னும் மூச்சை அடக்கிப் பழகும் பயிற்சியைச் செய்து தேகத்தைப் பலப்படுத்திய பின்னரே இந்த வித்தையை மீண்டும் செய்ய முடியும். அதை மீறி உடனடியாகச் செய்தால் நான் இறந்து படுவது உறுதி” என்று பதில் கூறினாள். ஆனால் அரசனோ விளைவைச் சரியாக ஆராயாமல் உடனடியாகச் செய்து காட்டுமாறு கூத்தியைப் பணித்தான்.

அரசன் ஆணையினால் சாகத் துணிந்த அந்தக் கூத்தியரின் தலைவி கழையேறி, “விச்சுளி” பாயும் போது, ஆகாயத்தில் பறந்து போகும் பறவைகளைப் பார்த்து, “பறவைகளே பாண்டியனின் மனைவி, என் மேல் பொறாமை கொண்டு பாண்டியனைத் தன் பக்கம் திருப்பி, எனது அரிய வித்தையைப் பாராமல் இருக்கச் செய்து விட்டான். அதனால் நான் மீண்டும் அந்த வித்தையை இப்போது செய்து காட்டிச் சாகப் போகிறேன். நீங்கள் தொண்டை மண்டலத்தின் புழல் கோட்டத்திற்குப் போவீர்களானால், அயன்றை நகரில் வாழ்பவனும், எத்தகைய பொருள் கேட்டாலும் இல்லை என்னாது கொடுப்பவனுமாகிய சடையநாதப் பிரபுவைக் கண்டு இங்கு நடந்த இந்தச் செய்தியைச் சொல்லுங்கள்” என்ற கருத்தை அடங்கிய கீழ்க்கண்ட செய்யுளைச் சொன்னாள்”

INDIAN ROPE TRICK

“மாகுன்றவாய பொற்றோளான் வழுதிமன் வான்கரும்பின் பாகொன்று சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன் பையப் பையப் போகின்ற புள்ளினங்காள்! புழற்கோட்டம் புகுவதுண்டேல் சாகின்றனளென்று சொல்வீர் அயன்றைச் சடையனுக்கே”

இப்படிப் பாடி விட்டு வித்தையைச் செய்து காட்டி விட்டு அவள் இறந்து போனாள்.

ஆக வாயு ஸ்தமபனத்தில் வல்லவர்கள் தமிழகத்தில் இருந்து பெரும் புகழ் பெற்றிருந்தனர் என்பதை வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

இந்தச் செய்தியை தொண்டை மண்டலச் சதகம் கீழ்க்கண்ட பாடல் மூலம் தெரிவிக்கிறது:-

“பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
யாலன்று பாண்டியன்முன்

நோகின்ற சிற்றிடை வேழம்

கூத்தி கொடிவரையில்

சாகின்றபோது தமிழ் சேர்

அயன்றைச் சடையன்றன்மேல்

மாகுன்றெனச் சொன்ன பாமாலை
யுந் தொண்டை மண்டலமே”

தொண்டை மண்டலத்தின் பெருமைகளைக் கூறும் நூறு பாடல்களில் முக்கியமான விச்சுளி வித்தையை விளக்கும் பாடல் 33வது பாடலாக அமைகிறது.

இந்த வித்தையை மனக்கண்ணால் ஒரு முறை கற்பனை செய்து பார்த்தால் எவ்வளவு பெரிய அரிய செயலைத் தமிழ்ப் பெண் ஒருத்தி செய்து காண்பித்திருக்கிறாள் என்பதை உணரலாம்.

மனித சக்தி எவ்வளவு எல்லையற்ற ஆற்றல் உடையது என்பதைக் காண்பிக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக விச்சுளி வித்தை அமையும் போது அதைச் செய்து காண்பித்த தமிழ்ப் பெண்மணியை சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசயப் பெண் என்று கூறுவதில் தவறில்லையே!

Indian-Rope-Trick

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
மிகுந்த கூச்ச சுபாவம் உடைய பால் டிராக் (Paul Dirac) பற்றி ஏராளமான சுவையான சம்பவங்கள் உள்ளன. இவரது நண்பர் வெர்னர் ஹெய்ஸன்பர்க்கும் ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தான். 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு மகாநாட்டில் கலந்து கொள்ள இருவரும் ஒரு கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இருவருமே மிகவும் இளவயதினர். மணமாகாதவர்கள். ஹெய்ஸன்பர்க்கோ எப்போதும் இளம்பெண்களுடன் நடனம், அரட்டை என நேரத்தைப் போக்குபவர். பால் டிராக்கோ தனியே மௌனமாக இருப்பவர். “ஏன் இப்படி நடனம் ஆடுகிறீர்கள்?” என்று ஹெய்ஸன்பர்க்கிடம் பால் டிராக் கேட்டார். “அவர்கள் நைஸ் கேர்ள்ஸ் (nice girls). அவர்களுடன் நடனம் ஆடுவதே ஒரு ஆனந்தம்” என்று பதில் சொன்னார் ஹெய்ஸன்பர்க்.

“நடனம் ஆடுவதற்கு முன்பேயே அவர்கள் நைஸ் கேர்ள்ஸ் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டார் பால் டிராக்!

kingfisher

விக்னர் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் சகோதரியான மார்ஜிட் என்பவரை பால் டிராக் மணந்தார். மார்ஜிட் விவாகரத்து ஆனவர். ஒரு முறை ஒரு நண்பர் டிராக்கின் வீட்டிற்கு வந்த போது மார்ஜிட்டைக் கண்டு திகைத்தார். ஒரு பெண்மணி டிராக்குடன் இருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை. ஒரு அழகிய பெண்மணி தன்னுடன் இருப்பதைப் பார்த்து வியக்கும் நண்பரைப் பார்த்த பால் டிராக்,”இவர் விக்னரின் சகோதரி. இப்போது என்னுடைய மனைவி” என்று கூச்சத்துடன் கூறினார்.மார்ஜிட்டுடனான டிராக்கின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகள் இன்னும் ஏராளம் உண்டு!

Contact swami_48@yahoo.com

king2

Vichuli=King Fisher Bird
*******************