Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

 Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

Contents

1.Brahma in Burma

2.Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-1

3.Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-2

4.Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-3

5.Sanskrit in Burma /Myanmar -Part 1

6.Sanskrit in Burma /Myanmar -Part 2

7.Sanskrit in Burma /Myanmar -Part 3

8.Shiva and Ganesh in Burma

9.Vishnu and Surya in Burma/Myanmar 

10.Tamil Chettiars in Burma

11.Interesting Anecdotes from Burma/Myanmar

12.Sanskrit in Thailand -1

13.Sanskrit in Thailand -2

14.Sanskrit in Thailand -3

Part Two

Nagarjuna Magic

15.Man can become Invisible’ says Magician Nagarjuna!

16.Sterile Women can get Children; People can See Previous Births! Nagarjuna Shows the Way!

17.Nagarjuna Magic to attract Fish and Coch shells

18.How to Fly in the Sky : Nagarjuna’s Instructions to  beat Albert Einstein!

19.Magic Books and Medical Books by Nagarjuna

20.Magic of Walking on Water and Walking on Fire!

21. Cure for Snake Poison!

22.Cure for Scorpion Bites!

23.Magic Sex Tips by Nagarjuna!

24. What is Your Birth Star? I will tell You Who You are! Says

Varahamihira- Part 1

25. What is Your Birth Star? I will tell You Who You are!

Says Varahamihira- Part 2

*****

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

4 Australian Museum Titbits- Part 4 (Post No.14,372)

Written by London Swaminathan

Post No. 14,372

Date uploaded in London –  10 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Fluorescent Minerals 

Fluorescent minerals are naturally occurring minerals that emit visible light when exposed to ultraviolet (UV) radiation. This phenomenon is called fluorescence, and it’s a result of the mineral absorbing UV light and then re-emitting it as visible light of a different wavelength. While not all minerals fluoresce, many do, and the color and intensity of their glow can vary greatly depending on the specific mineral, the type of UV light, and the presence of impurities (activators) within the mineral structure. 

if you go near them, hey will emit light

Metal Quiz

During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025),  I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.

Here are the pictures

 entrance to australian museum , sydney

london swaminathan above; quartz  below

slave trade route

fossil map of australia

continental drift; dinosaur skeletons

fossils below

Geology Quiz

earh’s crust quiz

boomerangs

totem symbols

indigenous groups; aborigines of australia

–Subham—

Tags- Australian ,Titbits, Part 4, Museum, indigemous, totems, dinosaur skeletons, earth crust, boomerangs, fluorescent minerals

Pictures of 2500 Indian Stamps!- Part 4 (Post No.14,371)

Written by London Swaminathan

Post No. 14,371

Date uploaded in London –  10 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 part four

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

–Subham—

Tags– Pictures ,2500 Indian Stamps, Part 4, map of india stamps

சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்- 2 (Post.14,370)

Written by London Swaminathan

Post No. 14,370

Date uploaded in London –  10 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART TWO (LAST PART)

காளிதாசன் செய்த அற்புதம் 

சங்ககாலத்துக்கு முன்னர் வாழ்ந்த புலவன் காளிதாசன் என்று ஜி யு போப், டில்லி பல்கலைக்கழக சந்திரா ராஜன் முதலியோர் கூறியுள்ளனர் ; சங்கத் தமிழ் உவமைகளை எடுத்துக்காட்டி அவை காளிதாசனின் மொழிபெயர்ப்பு என்பதை நானும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் காட்டியுள்ளேன்.

அந்தக் காளிதாசன் எழுதிய ஏழு நூல்களை படிக்காதோர் தங்களை இந்தியன் என்று சொல்லிக்கொள்ள முடியாது; இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆயிரத்து ஐநூறு உவமைகளை அள்ளித் தெளித்துள்ளான். அவனது சாகுந்தல நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவுடன் ஷேக்ஸ்பியருக்கும் தாத்தா ஒருவர் உள்ளார் என்பதை உலகம் அறிந்தது. சகுந்தலா என்றால் பறவைப்பெண்; இதைப் பார்த்துதான் ஷேக்ஸ்பியரே டெம்ப்ஸ்ட் நாடகத்தில் (Miranda in The Tempest) மிராண்டாவைப் படைத்தாரோ என்று எண்ணத் தோன்றும்; காளிதாசனின் ஏனைய மாளவிகா அக்நிமித்ரம், விக்ரம ஊர்வசீயம் , உள்பட சம்ஸ்க்ருதத்தில் 600-க்கும் மேல் நாடகங்கள் உள்ளன காளிதாஸருக்கும் முந்திய பாஷா எழுதிய ஸ்வப்னவாசவதத்தமும் சிறப்பானது .

  இவைதவிர சூத்ரகரின் மிருச்ச கடிகம், சாணக்கியர் பற்றிய நாடகங்கள் சுவையானவை .

காளிதாசனின் மேகாதூதம் உலகத்தின் முதல் பயண நூல்; அதுமட்டுமல்ல பருவக்காற்றின் போக்கினைக் காட்டும் பூகோள நூல். குமார சம்பவத்தில் முதல் பத்துப்பாடல்களில் உள்ள இமயமலை வருணனையை சங்கப்புலவர்க்ள அப்படியே பாடியுள்ளனர் . கபிலரின் குறிஞ்சிப்பாட்டு காளிதாசனின் தழுவல் என்கிறார் ஜி யு போப்.

ரகுவம்சம், ருது சம்ஹாரம் ஆகிய ஒவ்வொன்றும் நவரத்தின மாலைக்குச் சமம் .

நாட்டியம்

இந்தியாவிலுள்ள நாடகங்களுக்கு மூலம் ரிக்வேதத்திலுள்ள இருபது டயலாக் கவிதைகள் (Dialogue Poems in the Rig Veda)  ஆகும் ஆனால் அவற்றில் முழு வசனமும் இல்லை. பரத முனி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய இரண்டாயிரம் ஆண்டுப்பழமையான பரதம்தான் நாடக நாட்டிய இலக்கணத்தைக் கூறும் உலகின் முதல் நூல்.

நாடகம் எழுதுவதில் ஸம்ஸ்க்ருதத்தை மிஞ்சிய கிரேக்கர்களும் கூட நாடக இலக்கணத்தை அறிவியல் முறையில் எழுதவில்லை.

என்சைக்கிளோபீடியா

வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் சம்ஸ்க்ருதத்தில் தோன்றிய அருமையான ஜோதிட நூல். பிருஹத் சம்ஹிதா அருமையான என்சைக்ளோபீடியா. நவரத்ன  மகிமை முதல் காக்கா ஜோதிடம் வரை பல அபூர்வ விஷயங்கள் உள.

மருத்துவ அதிசயங்கள்

சரகரும் சுஸ்ருதரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய மருத்துவ நூல்களுக்கு  நிகரான நூல்கள் உலகில் வேறு எந்த பழைய மொழியிலும் இல்லை

தமிழ் மொழிக்கும் முன்னதாக இலக்கியம் படைத்த மொழிகள் கிரேக்கம், பாரசீகம், லத்தீன், எபிரேயம் சீனம் ஆகிய ஐந்துதான் ; இவை எல்லாம் தமிழ் மொழிக்கும் முன்னதாக நிறைய நூல்களை நமக்கு அளித்துள்ளன.ஆயினும் இவைகளுக்கு எல்லாம் மூத்த மொழியான ஸம்ஸ்க்ருதத்துக்குப் பக்கத்தில் கூட இந்த ஐந்து மொழிகளும் வர முடியாது !

கணிதம்- வான சாத்திரம்

ஆரிய பட்டர், பாஸ்கரர் போன்றா அறிஞர்களும் சமணமத அறிஞர்களும் எழுதிய நூல்கள் அல்ஜீப்ரா, டிரிக்னோமேற்றி போன்றவை இந்துக்களின் கண்டுபிடிப்பு என்பதைக் காட்டுகின்றனன. வேதகாலத்திலேயே யாக குண்டங்களை நிர்மாணிக்க அற்புதக் கணக்குகள் உள்ளன.

சட்டப் புஸ்தகம்

ஸ்ம்ருதி என்பன சட்டப் புஸ்தகங்கள்; மனுவின் பெயரில் பிருகு முனிவர் எழுதிய மனு தர்மசாஸ்திரம் ஹமுராபிக்கும் முந்திய நூல். ஏனெனில் இது சரஸ்வதி நதி பற்றிப் பேசுகிறது இதில் மனு பிராஸ்தாபித்த விஷயங்களின் வீச்சைக் கண்டு உலக அறிஞர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்[ லண்டனில் செயின்ட் பால் கதீட்ரலில் இந்த நூலைக் கையில் தாங்கிய வில்லியம் ஜோன்ஸ் சிலை உள்ளது அங்குதான் சார்ஸ்-டயானா கல்யாணம் நடந்தது இதுபோல இருபது ஸ்ம்ருதி நூல்கள் உள்ளன

பூகோளமும் வரலாறும்

18 புராணங்களிலும் இரண்டு இதிகாசங்களிலும் பூகோளமும் வரலாறும் உள்ளன. வெள்ளைக்கார்கள் அவற்றை  ஒதுக்கிவிட்டு அலெக்ஸ்சாண்டர் காலம் முதல் நம் வரலாறு துவங்குவதாக எழுதிவிட்டனர்[  சிந்து சரஸ்வதி நதி தீர கரீகம் காண்டுபிடிக்கப்பட்ட வுடன் இந்தியர்களுக்கு இடைப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளில் வரலாறே இல்லை என்றும் வாதிக்கினறனர் உண்மையில் புராணங்கள் கூறும் அரசர்கள் சிந்துவெளி காலத்திலிருந்து வரும் தொடர்ச்சியைக் காட்டுகினறன . இந்தக் கோணத்தில் ஆராய வேண்டும்.

துருக்கியில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட தசரதன் பெயர், எகிப்தில் தசரதன் கடிதங்கள் இருப்பதால் வெள்ளைக்கார்கள் பேசா மடந்தை ஆகிவிட்டனர் இந்த தசரதன் ராமாயண தசரதன் இல்லை

கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணிதான் முதல் சரித்திர நூல் என்று சொன்ன வெள்ளைக்காரர்கள் அதில் முதல் நாலு அத்தியாயங்களில் கண்டது சரித்திரம் அல்ல என்கின்றனர் அதில் இராவணன் பெயர்கூட உள்ளது.

இறுதியாக நமக்கு கிடைத்த சம்ஸ்க்ருதம் நூல்களை விட அழிந்த சம்ஸ்க்ருத நூல்களே அதிகம். நாலந்தவைத் தீ  வைத்தழித்த முஸ்லீம்கள் அழித்த நூல்களின் கணக்கை எவரும் அறியார்  சீனாவில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் பல்லாயிரமென்று நீலகண்ட சாஸ்திரி போன்ற மாபெரும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்

சம்ஸ்க்ருதத்தில் உள்ள இருபதாயிரம் சுபாஷித ஸ்லோகங்களும் பல்லாயிரம் கல்வெட்டுகளும் தொகுதி தொகுதிகளாக நூலகங்களை அலங்கரிக்கினறன.

இவைகளில் உள்ள உண்மைகளை அறியவாவது நாம் சம்ஸ்க்ருதம் கற்கவேண்டும்; வேதங்களில் உள்ள உண்மைகளை விளக்க மீண்டும் ஒரு ஆதி சங்காரரையும் வியாஸரையும் நாம் உருவாக்க வேண்டும். ஆதி சங்கரர் போல உரைகளை எழுதியோர் உலகில் எப்பகுதியிலும் இல்லை. அவர் எழுதிய பாஷ்யங்களை- உரைகளை தொகுத்தாலேயே நூற்றுக்கணக்கான தொகுதிகள் வரும்; வேதாந்த தேசிகர் போன்றோர் எழுதிய ஸ்லோகங்கள் பல்லாயிரம் உள்ளன!

இது ஒரு குட்டி சர்வேதான்!

–SUBAHAM—

TAGS- சம்ஸ்க்ருத மொழி, உலகிற்கு அளித்த, நன்கொடை, ஒரு சின்ன ‘சர்வே’, PART 2

கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள் (Post No.14,369)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,369

Date uploaded in London – –10 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நூல் அறிமுகம்

கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள்

ச. நாகராஜன்

கந்தபுராண  ஞானசபையின் பல வெளியீடுகளில் ஒன்றாக மலர்ந்துள்ளது ‘கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள்’ என்ற நூல்.

இந்த நூலின் ஆசிரியர் சிவஶ்ரீ தில்லை S. கார்த்திகேயசிவம் அவர்கள்.

“தெய்வ விரதங்களால் மன ஒருமைப்பாடும், வைராக்யமும், ஆற்றலும் கிடைக்கின்றது; விரதத்தின் பொழுது ஐம்பொறி அடக்கமும், உணவு கட்டுப்பாடும் தேவையானது”” என்ற பெரும் உண்மையைத் தெரிவிக்கும் நூலாசிரியர் இந்த நூலில் மூன்று விரதங்களைப் பற்றி எடுத்துக் கூறுகிறார்.

சுக்கிரவார விரதம், கிருத்திகை விரதம், கந்த சஷ்டி விரதம் ஆகிய மூன்று விரதங்கள் கந்தபுராணத்தில் உள்ளவையாகும்.

நவ வித பக்தியை விளக்கும் முதல் அத்தியாயம் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களையும்  கௌரி அம்பிகைக்குரிய மூன்று விரதங்களையும்  விநாயகருக்குரிய மூன்று விரதங்களையும் முருகப்பெருமானுக்குரிய மூன்று விரதங்களையும் பைரவருக்குரிய மூன்று விரதங்களையும் வீரபத்திரருக்குரிய ஒரு விரதத்தையும் சுட்டிக் காட்டுகிறது.

அடுத்து  அடுத்த மூன்று அத்தியாயங்கள் விரதங்களை நன்கு விளக்குகிறது.

சுக்கிரவார விரதம்  மூன்று நாட்கள் நியமம் கொண்டதாகும். இதை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து செய்தால், இழந்த பதவி, பொருள், ஆட்சி, அதிகாரம் எதுவாக இருந்தாலும் அது மீண்டும் கிடைக்கும்.

அடுத்து கிருத்திகை விரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பது விரிவாக விளக்கப்படுகிறது.

இதைக் கடைப்பிடிப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவோர் மூவுலகிலும் வேண்டிய பலனை அடைவார்கள்.

அடுத்து கந்த சஷ்டி விரதத்தை முறையாக எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.

இதை மேற்கொள்வோர் அவரவர் இழந்த பொருள், அதிகாரம், பதவி, தலைமை ஆகியவற்றை மீண்டும் அடைவது உறுதி,

முசுகுந்த மன்னன் முருகப் பெருமானின் விரதங்களை மேற்கொண்டு அடைந்த பலன்களை அடுத்த அத்தியாயத்தில் காண்கிறோம்.

இந்த மூன்று விரதங்களைப் பற்றி சாதாரணமாக நமக்குத் தோன்றும் கேள்விகள் பல.

அவற்றை அடுத்த அத்தியாயம் வினா விடை வடிவில் தருகிறது.

ஸ்கந்த புராணத்தில் சிவரஹஸ்ய காண்டத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டத்தில் உள்ள முருகப்பெருமானின் விரத மஹிமையை நூலின் இறுதி அத்தியாயம் கூறுகிறது.

76 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ 100/

நூல் கிடைக்குமிடம்: கந்தபுராண ஞானஸபை

கள்ளக்குறிச்சி 606213 தொலைபேசி: 9751848933

கந்தபுராணத்தில் உள்ள முருகப்பெருமானின் மூன்று விரதங்களை அழகுறத் தொகுத்து விளக்கியுள்ள சிவஶ்ரீ தில்லை S. கார்த்திகேயசிவம் அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் என்பதில் ஐயமில்லை.

***

Australian Titbits- Part 3 (Post No.14,368)


Count the steps, Nelson Bay, Australia (from sea shore to the house)

Written by London Swaminathan

Post No. 14,368

Date uploaded in London –  9 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025),  I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.

Here are the pictures

Fishing,

Blue bottle jelly fish

Highest steps,

Thank God, there is another road up above this highest staircase

Anzac Bridge, one of the forty bridges in Sydney

Mighty Pacific Ocean, Austrlia’s East Coast

Blue bottle jelly fish that invades Australian east coast during summer

london swaminathan’s foot steps on Sands of Time, Australia , February 2025

Our boating Expedition that did not work

Picking sea  shells

Dolphin Watching Ferry Trip

Sea shells  we picked and the Sea Shells we found in Guest House we hired

Building Sand castles

Big sea weeds air bulbs; god given gift for them to travel long distance and occupy newer lands (like whitemen)

Every week a new restaurant

–Subham—

Tags- Australian ,Titbits, Part 3, Fishing, Blue bottle jelly fish, Highest steps,

Pictures of 2500 Indian Stamps!- Part 3 (Post.14,367)

Written by London Swaminathan

Post No. 14,367

Date uploaded in London –  9 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 part three

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

–Subham—

Tags– Pictures ,2500 Indian Stamps, Part 3

சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்!-1 (Post.14,366)

Written by London Swaminathan

Post No. 14,366

Date uploaded in London –  9 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 உலக மக்களின் அறிவுக்கு ஸம்ஸ்க்ருத மொழி அளித்த விஷயங்கள் அனைத்தையும் யாரும் அளவிட முடியாது ; ஆயினும் தொட்டுக்காட்ட முடியும் ; இவை அனைத்தையும் படித்தவர்களும் எவருமிலர் .

நான் சங்க இலக்கியத்தின் பதினெட்டு நூல்களையும் திருக்குறளையும் சிலப்பதிகாரம் மணிமேகலை , கம்பராமாயணம் முழுவதையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும் நாற்பது ஆண்டுகளில் படித்து முடித்தேன் ஆகையால் ஓரளவுக்கு தமிழ்  இலக்கியத்தைப் படித்ததாகச் சொல்ல முடியும் .

சம்ஸ்க்ருத இலக்கியத்தில் எல்லா சப்ஜெக்டுகளும் உள்ளன. ஆகையால் எல்லோரும் படித்திருக்க முடியாது ; சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் .

****

வேதங்கள்

நான்கு வேதங்களையும் படித்தவர்களை சதுர்வேதி  என்பார்கள்; இப்போது இந்தப் பெயரை மட்டுமே காணலாம். ஆனால் அவர்கள் அனைவரும் அப்படி நான்கு வேதங்களையும் படித்தவர்கள் அல்ல. நான் ரிக்வேத தமிழ் மொழிபெயர்ப்பை மட்டுமே படித்தேன்; ஒரிஜினலைப் படிக்கும் அளவுக்கு சம்ஸ்க்ருத ஞானம் இல்லை . இவைகளில் என்ன இருக்கிறது ? என்று பலரும் கேட்கலாம். இவற்றின் பொருளை வீட மந்திர ஒலிக்கே மஹிமை என்பது பெரியோர்களின் வாதம் ; ஆகையால்தான் பாரதியாரும் சொன்னார் – நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு – என்று.

****

உபநிஷத்துக்கள்

இதை வேதத்தின் அந்தம் = வேதாந்தம் என்பார்கள்; அதாவது நான்கு வேதங்களின் துணிபு, முடிவு; சாரம் என்று பொருள்; உலகத்தின் மிகப்பெரிய தத்துவங்கள் இதில்தான் உள்ளன. உலகத்திலுள்ள எந்தத் தத்துவ ஞானியின் வசனங்களையும் இதில் காணலாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் முன்னால் தோன்றியவை உபநிஷத்துக்கள் ; அதனால்தான் பாரதியும் சொன்னார்

பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

பார்மிசை யேதொரு நூல் இது போலே”– என்று

முக்கிய உபநிடதங்கள் எட்டுதான்; அவைகளையும் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புக்களில்தான் படிக்க முடிகிறது; ஏனெனில் நிறைய சம்ஸ்க்ருத மொழி ஞானம் அவசியம் 

****

புராண இதிகாசங்கள்

இதையடுத்து வருவது புராண இதிகாசங்கள்.

புராண இதிகாசங்கள். முழுவதையும் படித்தவர்களை நான் கண்டதே இல்லை. இவைகளில் ஏதெனும் ஒண்றினைப் படித்தவர்களைக் கண்டுள்ளேன்.

இரண்டு இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்திலுள்ள எல்லா   ஸ்லோகங்களையும் படித்த அனந்த ராம தீட்சிதர் மதுரை மீனாட்சி கோவிலில் நடத்திய உபன்யாசங்களை ஓரு நாள் விடாமல் கேட்டேன்; ஆயினும் என்னால் ஆங்கிலத்தில்தான் ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்பினை படிக்க முடிந்தது .

இந்த இடத்தில், எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் புத்தக முன்னுரையிலேயே சொன்ன விஷயத்தை நினைவுபடுத்துகிறேன் உலகில் எந்த ஒரு நூலின் மொழிபெயரப்பும் அந்த ஒரிஜினலை– மூலத்தைக் கொண்டுவரவே முடியாது; கருத்துக் செறிவினை அளிக்கலாம். ஆனால் ஒரிஜினலில் உள்ள இலக்கிய நயத்தை, சொற் பிரயோகத்தை, எதுகை மோனையை அளிக்கவே முடியாது .

எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொல்வேன். என்னிடம் பாரதியார் பாடல்கள் தமிழிலும் ஆங்கில மொழி பெயர்ப்பில்லும் உள்ளன. தமிழறிந்த தமிழனுக்கு அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உப்பு இல்லாப் பண்டம் ஆகும்  பஜ்ஜி- வடை- போண்டா- வெண்பொங்கலை உப்புப் போடாமல் உங்கள் இலையில் பரிமாறினால் எப்படி முகம் சுழிப்பீர்கள்?  நினைத்துப்  பாருங்கள்  நான் படித்தது எல்லாம் ஆங்கில ராமாயணமே !

அடுத்த இதிகாசமான மஹாபாரதத்தில்  ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் ஒரிஜினலில் படித்தார்களைக் கண்டதில்லை. மதுரை மீனாட்சி கோவில் ஆடி வீதியில் புலவர் கீரன் நிகழ்த்திய சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன் ஆயினும் சம்ஸ்க்ருத ஸ்லோககங்களை அவர் சொன்னதாக நினைவில்லை.

க்ரிட்டிக்கல் எடிஷன் என்று ஒரிஜினலை நூலாக வெளியிட்ட வடக்கத்தி ஆட்களும், ஆங்கிலேயர்களும் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் பார்த்திருக்கலாம் ஆனால் அவர்கள் எல்லாம் எடிட்டர்– ப்ரூப் ரீடர்களே!!

18 புராணங்களையும் படித்தவர்களைப் பார்க்கவே முடியாது; ஏனெனில் அவைகளில் எட்டு லட்சம் ஸ்லோகங்கள் உள்ளன; அவற்றிலுள்ள ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை  நாம் ஒரிஜினலில் பார்த்திருக்கலாம்; அவற்றிலுள்ள நூற்றுக் கணக்கான கதைகளைப் படித்திருக்கலாம். ஆயினும் ஒரிஜினல் எட்டு லட்சம் ஸ்லோகங்களைப் படித்தவர்கள் இக்காலத்தில் இல்லை; ஆதி சங்கரர் போல சிலர் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம். நமது காலத்தில் காஞ்சிப் பெரியவர் (1894-1994)  போல சிலர் படித்திருக்கலாம்; உறுதியாகச் சொல்வதற்கில்லை .

ஆக புராண இதிகாசங்கள் உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும்; குறிப்பாக மஹாபாரதத்தில் வரும் பகவத் கீதை, யக்ஷப் பிரச்னம் என்னும் பேயின் கேள்வி பதில்கள், உபாக்கியானங்கள், விதுர நீதி முதலியவை மிகவும் பிரசித்தம் ஆகும் .

பகவத் கீதை என்ற நூல் மேலை உலகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் செல்வாக்கினையும் சொல்லி மாளாது ; உலகத்திலுள்ள முக்கிய மொழிகள் அனைத்திலும் அது வந்துவிட்டது .

நான் பாரதீய வித்யா பவன் நடத்திய பகவத் கீதையில் பதினெட்டு அத்யாயயங்களையும் முடித்து சர்ட்டிபிகேட் வாங்கினேன்; எழுநூறு ஸ்லோகங்களையும் சம்ஸ்க்ருதத்தில் படித்தேன்

யாரும் செய்யாத ஒரு பணியையும் செய்தேன்; தமிழில் பகவத் கீதை சொற்களை (TAMIL WORD INDEX FOR BHAGAVAD GITA)  மொழி பெயர்ப்புடன் இதே பிளாக்கில் அறுபது கட்டுரைகளில் வெளியிட்டேன்; பெரிய பணியைச் செய்துவிட்டதாக மகிழ்ந்தேன் ; இது மஹாபாரதத்தில் ஒரு சிறிய பகுதியே; ஆனாலும் இந்து மதத்தின் ஜூஸ் இது .

அனைவரும் சித்பவானந்தர்  அல்லது  ராமகிருஷ்ணா மடம்   அண்ணா  எழுதிய  கீதை  புஸ்தகங்களைப்  படிக்கவேண்டுகிறேன்

.****

மொழியியல் அற்புதங்கள்

மொழியியலில் (LINGUISTICS)  அற்புதங்களைப் புரிந்தவர்கள் இந்துக்களே !

எடிமாலஜி (ETYMOLOGY)  எனப்படும் சொற்பிறப்பியலை யாஸ்கர் என்பவர் 2800 ஆண்டுகளுக்கு முன்னரே நிருக்தம் என்ற நூலாக நமக்குத் தந்தார் ; அப்போதே மொழி ஆராய்ச்சியில் இந்துக்கள் ஈடுபட்டிருந்தால், அவர்கள் எவ்வளவு நாகரீக முன்னேற்றம் உடையவர்கள் என்பது தெரியும்

அதற்கு அடுத்தபடியாக பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னதாக உலகின் முதல் இலக்கண நூலை அஷ்டாத்யாயீ என்னும் நூலினை நமக்கு அளித்தார்; உலகம் வியக்கும் வண்ணம் சுருக்க மொழியில் நாலாயிரம் இலக்கண சூத்திரங்களை அளித்தார்; சுமார் மூவாயிரம் ஆண்டுளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழி அடைந்த முன்னேற்றத்தை நாம் காண முடிகிறது.

கடவுள் புண்ணியத்தில் டாக்டர் கே மீனாட்சி எழுதிய மூன்று  தொகுதி மொழிபெயர்ப்பு கிடைத்தது அதைப் பலமுறை படித்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினேன்.

பாணினியின் இலக்கணத்துக்கு பதஞ்சலி எழுதிய .மஹா பாஷ் யத்தை– மிகப்பெரிய நூல்- தொட்டுக்கூடப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை இதன் காலமொன்றுதான் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது 2200 ஆண்டுகளுக்கு முந்தையது இந்த நூல்.

உலகில் அகராதியை மனப்பாடம் செய்யும் வழக்கமும் இந்துக்களிடையே உண்டு; சம்ஸ்க்ருத வேற்றுமைகளை மனப்பாடம் செய்யும் வழக்கமும் இந்துக்களிடையே உண்டு உலகின் முதல் நிகண்டு நூல் அமரகோஷம். இதை நாங்கள் மாலை நேர இலவச வகுப்புகளில் வாத்தியார் சொல்லச் சொல்ல திரும்பச் சொல்வோம். முதல் இரு நூறு வரிகள் எனக்கும் என் தம்பிக்கும் மனப்பாடம்; வாத்தியாரின் உடல்நலக்குறைவால் சம்ஸ்க்ருத வகுப்பு மூடப்பட்டது; இருந்தபோதும் அதையும் வேற்றுமை விகுதிகளைக் கூறும் சப்த மஞ்சரியையும் அடிக்கடி நினைவு படுத்திக்கொள்வோம்.

மொழி இயலில் மூவாயிரம் ஆண்டுகளில் இந்துக்கள் கண்ட புதுமைகளை கிரேக்க, பாரசீக, சீன, தமிழ், லத்தீன் மொழிகளில் காண முடியாது !

****

உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம்

அட , சம்ஸ்க்ருதம் செக்ஸ் என்னும் பாலியலைக் கூட விடவில்லை ; உலகின் முதல் செக்ஸ் புஸ்தகத்தை எழுதியவர் வாத்ஸ்யாயனர் அவரது காம சூத்திர நூல் மேலை உலகத்தில்  விற்பனையில் இளைஞர்களிடையே சக்கைப்போடு போடுகிறது ; நானும் லண்டனில் வாங்கினேன்; ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்புதான். இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கஜுரோஹா கோவிலில் இதை ஆயிரக்கணக்கான  சிறபங்களாக வடித்தனர்; அதிலும் நாம்தான் முதல்!

****

காளிதாசன் செய்த அற்புதம்  …………………………….

தொடரும்

—subham—

Tags – சம்ஸ்க்ருத மொழி, உலகிற்கு அளித்த, நன்கொடை, சின்ன ‘சர்வே’, Part 1

ராம நாம மஹிமை! – 2 (Post No.14,365)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,365

Date uploaded in London – –9 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராம நாம மஹிமை! – 2

6-4-2025 ஶ்ரீ ராமநவமி தினத்தன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

ராம நாம மஹிமை! – 2

ச. நாகராஜன்

நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள்

பன்னிரெண்டு ஆழ்வார்கள் அருளிய பாடல்களில் ராமரைத் துதித்துப் போற்றும் பாடல்கள் ஏராளம் உள்ளன.

நாலாயிர திவ்ய ப்ரபந்தத்திலிருந்து சில பாடல்கள்:

ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த பெருமாள் திருமொழியில் வரும் பாடல்:

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணி வயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்து வித்தாய்

செம்பொன்சேர் கன்னி நன் மாமதிள் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!

என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ.

                           பாடல் எண் 719, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

ஶ்ரீ திருமழிசைப்பிரான் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம்

ஊனில் மேய ஆவி நீ உறக்கமொடு உணர்ச்சி நீ

ஆனில்மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ

வானினோடு மண்ணும் நீ வளங் கடற் பயனும் நீ

யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே!

                           பாடல் எண் 845,  நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

ஶ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்

இரவும் நன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை

குரவமே கமழும் குளிர்பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால்

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத திருவல்லிக்கேணி கண்டேனே

                           பாடல் எண் 1077, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி

நீள்கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்

தாள்கள் தலையில் வணங்கி நாள்கடலைக் கழிமினே

                           பாடல் எண் 2736, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?

புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்றின்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசம் முற்றவும்

நற்பாலுக்கு உத்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!

                           பாடல் எண் 3381, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

Aurobindo

 It was not at all Rama’s business to establish the spiritual stage of that evolution—so he did not at all concern himself with that. His business was to destroy Ravana and to establish the Ramarajya—in other words, to fix for the future the possibility of an order proper to the sattwic civilised human being who governs his life by the reason, the finer emotions, morality or at least moral ideals, such as truth, obedience, cooperation and harmony, the sense of humour, the sense of domestic and public order, to establish this in a world still occupied by anarchic forces, the Animal Mind and the powers of the vital Ego making its own satisfaction the rule of life, in other words, the Vanara and the Rakshasa. This is the meaning of Rama and his life-work and it is according as he fulfilled it or not that he must be judged as Avatar or no Avatar.

……Finally it was Rama’s business to make the world safe for the ideal of the sattwic human being by destroying the sovereignty of Ravana, the Rakshasa menace. All this he did with such a divine afflatus in his personality and action that his figure has been stamped for more than two millenniums on the mind of Indian culture and what he stood for has dominated the reason and idealising mind of man in all countries — and in spite of the constant revolt of the human vital is likely to continue to do so until a greater Ideal arises

MAHATMA GANDHIJI

GANDHIJI  stated, “I have accepted all the names and forms attributed to God as symbols denoting one formless omnipresent Ram. To me, therefore, Ram described as the Lord of Sita, son of Dasharatha is the all powerful essence whose name, inscribed in the heart, removes all suffering, mental, moral and physical.”

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் சிவபிரான் கூறுவது:

ஆயிரம் திரு நாமங்களுக்கு ராம நாமம் சமம்!

ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வரானனே

ஶ்ரீ ராமரின் உறுதி மொழி

இறுதியாக ஶ்ரீ ராமர் அளிக்கும் உறுதி மொழியைப் பார்ப்போம்.

ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம்ʼ ஸர்வபூதேப்யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||

       (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் 18.34)

 “நான் உன்னைச் சேர்ந்தவன்” என்று ஒருமுறை கூறி விட்டால் என்னிடம் வந்து அடைக்கலம் புகுவோர் யாராயினும், அவர்களுக்கு உலகத்தின் அனைத்து உயிர்களிடமிருந்தும் அபயம் அளிப்பேன். இதுவே எனது விரதம்”.

ஜெய் ஶ்ரீ ராம்.

நன்றி வணக்கம்.

***

2 Pictures of 2500 Indian Stamps!- Part 2 (Post.14,364)

Written by London Swaminathan

Post No. 14,364

Date uploaded in London –  8 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

part two

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

–Subham—

Tags– Pictures ,2500 Indian Stamps, Part 2