Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1325
1
2
3
4
5
6
7
8
9
10
11
Across
1.Rig Vedic Deity; general meaning Friend
6.one day and one night; Tamil worlds for Day/pahal and night/raathri/iravu came from this.
7. The natural order or connection of words in a sentence, construing grammatical order or relation in Sanskrit
8.Name of a river in Rig Veda
9.Mount of Gods like Elephant, Bull, Peacock, Lion, Yali, Anna/swan etc
Down
2.One of the Five Faces of Shiva; also represents North East Direction
3. xxxxx is the name of an asura king who terrorised the gods (devas), according to the Varāhapurāṇa chapter 96. xxxxx was eventually defeated by Raudrī who struck him and severed his head (muṇḍa) from his trunk (carma).
4.Breath control doe by Brahmins thrice a day
5. For one’s own sake, for the sake of one’s self in Sanskrit
10.Life, spiritual life in the Rig Veda; also life of departed spirits
முன்னொரு யுகத்தில் கண்வர் என்னும் ஒரு மஹரிஷி இருந்தா. அவர் அற்புதமான தவம்செய்யத் தொடங்கினார். அவர் அவ்வாறு கடும் தவம் செய்யும் போது அவர் தலையில் நாளடைவில் புற்று உண்டாயிற்று. புற்று இருந்ததனால் அவர் தலையில் மூங்கில் முளைத்தது. அவற்றையெல்லாம் அவர் தாங்கிக் கொண்டு முன் போலவே தவம் செய்து கொண்டிருந்தார். தவத்தினால் பூஜிக்கப்பட்ட பிரம்மதேவர் அவருக்கு வரங்கொடுக்கப் போனார். அவர் அவருக்கு வரம் அளித்த பிறகு, அந்த மூங்கிலைப் பார்த்து அதனால் உலகிற்கு உபயோகம் செய்வதைக் குறித்து ஆலோசித்தார்.
ஆலோசித்தபிறகு, அந்த மூங்கிலை எடுத்து வில்லாகச் செய்வித்தார்.
உலகங்களைப் படைத்தவராகிய பிரம்மதேவர் அப்போது விஷ்ணுவிடத்திலும் என்னிடமுத்திலும் சாமர்த்தியம் இருப்பதை அறிந்து விஷ்ணுவுக்கும் எனக்குமாக இரண்டு விற்களைத் தந்தார்.
பினாகமென்பது என் வில்.
சார்ங்கமென்பது விஷ்ணுவின் வில்.
மிகுதியுள்ள மூங்கிலினால் காண்டீவம் என்னும் மூன்றாவது வில் உண்டாயிற்று. அதைச் சந்திரனுக்குக் கொடுத்து ப்ரம்மா திரும்பத் தன் உலகம் சென்றார்.
– அநுசாஸன பர்வம் அத் 206
சிவபிரானைத் தொழுவதால் ஏற்படும் பலன்கள்!
யுதிஷ்டிரரிடம் கிருஷ்ணர் தனக்கு உபமன்யு கூறியதை விளக்குகிறார் இப்படி: (அநுசாஸனபரவம்ம் 49வது அத்தியாயம்)
மனத்தினாலாவது சிவனைச் சரணம் அடையும் மனிதர்கள் எல்லாப் பாவங்களையும் நீக்கித் தேவர்களுடன் வசிப்பர். குளம், ஆறு முதலியவற்றின் கரைகளைப் பலமுறை இடித்தும் இவ்வுலகம் அனைத்தையும் தீயில் போட்டும் இருப்பவனும் ஈஸ்வரரைப் பூஜை செய்வானாயின் அவனை அப்பாவம் பற்றாது.
எல்லா நற்குணங்களும் குன்றி எல்லாப் பாவங்களோடும் சேர்ந்திருந்தாலும் சிவனை மனத்தினால் தியானிப்பவன் அந்தப் பாவங்கள் அனைத்தையும் ஓட்டி விடுகிறான். மகாதேவரைச் சரணம் அடைந்த புழு, பக்ஷி, விட்டில், மிருகங்கள் இவற்றிற்கும் கூட எங்கும் பயம் இராது. ஆப்படியே பூமியில் சிவபக்தியுள்ள மனிதர்கள் சம்சாரத்திற்கு உட்படமாட்டார்கள்.”
எந்த திசையில் யாருக்கு பலி போட வேண்டும்?
பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு வாசுதேவருக்கும் பூமி தேவிக்கும் நடந்த ஒரு உரையாடலைத் தெரிவிக்கிறார்.
பூமிதேவி மாதவரிடம் கூறுகிறாள் “மாதவரே! தெற்கில் யமனுக்கும் மேற்கில் வருணனுக்கும் வடக்கில் சந்திரனுக்கும் நடுவீட்டில் பிரம்மதேவருக்கும் வடகிழக்கில் தன்வந்தரிக்கும் கிழக்கில் இந்திரனுக்கும் வீட்டின் வாயிலில் மனிதர்களுக்கும் என்று சொல்லிப் பலி போடச் சொல்லுகின்றனர். மருத்துக்களுக்கும் தேவர்களுக்கும் பலியை வீட்டின் உட்புறத்தில் போட வேண்டும். விசுவதேவர்களுக்கு பலியை ஆகாயத்தில் போட வேண்டும். இரவில் சஞ்சரிக்கும் பேய், பிசாசுகளுக்கு பலியை இரவில் போட வேண்டும். இவ்வாறு பலியை நன்றாகப் போட்ட பிறகு பிராம்மணனுக்கு பிக்ஷையிட வேண்டும். பிராம்மணன் கிடைக்காத போது முதல் அன்னத்தை எடுத்து அக்னியில் போட வேண்டும்.
Date uploaded in Sydney, Australia – 28 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
I went to the Royal Botanic Gardens in Sydney and spent two hours there. It has got beautiful flowering plants and huge trees. Birds are also seen everywhere. Australia has thousands of unique plants. it has rose garden, palm grove, herbarium, fernery etc. it is better to go in the guided tour which takes one and half hour. If you go on your own, you may miss some important plants or trees.
The huge garden has eight entrances. One can walk from Martin Place Metro station and enter the garden opposite to New South Wales state library. One has plenty of opportunities to take photos. In London one must pay a lot to enter the Kew Botanical Gardens. In Sydney it is FREE.
Most of the plants are named ; it will be very useful to Botany students and amateur botanists. There are many statues decorating the gardens.
If one has not got much time, one must see the Must See Plants Section. Fernery has got lot of different types of ferns that can’t be seen in any other part of the world. The Succulent Garden has all the desert cacti plants.
The garden is well maintained and signposted at every junction. One can cover it in two hours.
Apart from the viewing, one can attend talks and special events. Information is available from their website
****
mini red bananas
one child can sleep on this huge leaf.
in Tamil Nadu we have small white (Umaththai) flowers; in Sydney huge pink flowers are on the plant.
Facts about Sydney Botanical Gardens
Royal Botanic Garden Sydney
Australia’s oldest botanic garden, established in 1816.
Home to over 27,000 plants from around the world.
Includes 15 themed gardens, including an Australian Rainforest Garden and a Tropical Garden
Free to visit, open every day of the year
Located on Sydney Harbour, next to the Sydney Opera House
Features a National Herbarium with about one million reference specimens
Has a rich Aboriginal heritage
Australia is home to approximately 24,000 species of plants, 87 per cent of which can’t be found anywhere else on the planet. It’s estimated that 2,000 species in our ecosystem are still to be discovered and documented. Amid climate change, habitat loss and the extinction crisis, we are fighting to conserve plant species and protect all life that depends on them.
At one end of the garden is the famous Sydney Opera House and Harbour Bridge. Those who go to see the opera house, may enter the garden by the nearby entrance.
—subham—
Tags- Botanic Gardens, Sydney, my visit, rare plants, statues
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
23-2-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
சுயமுன்னேற்றம்
எவரையும் கவர 6 அற்புத விதிகள்! கொஞ்சம் கேளுங்களேன்!!
ச. நாகராஜன்
உங்களுடன் பேசுவதையே ஒரு பாக்கியமாக மற்றவர் நினைக்க வேண்டுமா?
அனைவரும் மிக்க நட்புடன் முதல் சாய்ஸாக உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?
இதோ இருக்கிறது தங்க விதிகள் ஆறு.
இதைக் கடைப்பிடியுங்கள். அப்புறம் பாருங்கள், நீங்கள் எப்படி மதிக்கப்படுகிறீர்கள் என்று!
1) இடையில் குறுக்கிட்டுப் பேசுவதை நிறுத்துங்கள்.
நண்பர்களோ அல்லது அலுவலக அதிகாரிகளோ உங்களுடன் பேசும் போது இடையிட்டுக் குறுக்கே பேசுவதை நிறுத்துங்கள். அது மட்டுமல்ல, உங்கள் மனதிற்குள் பேசுவதையும் நிறுத்துங்கள். பேசுபவர் பேசி முடிக்கட்டும்.
மற்றவர்களுக்காக அவர்களது வார்த்தைகளை நாமே உருவாக்கீப் பேசி முடிக்க நாம் எப்போதுமே ரெடி தான். அவர்கள் என்ன பேசப் போகிறார்கள், என்ன வார்த்தைகளை பயன்படுத்தப் போகிறார்கள் என்று அறியும் மகாத்மாக்ககள் நாம் தான்! – இது தான் எல்லோருடைய பொதுவான அணுகுமுறை. இதை விட்டொழியுங்கள்!
அவர்கள் பேசுவதைப் பேசி முடிக்கட்டும் – அவர்கள் பாணியில், அவர்கள் சொற்களாலேயே!
2) ஓய்வுடன் இருங்கள். மனச்சோர்வு, கவலை, டென்ஷன் ஆகியவை உங்கள் கேட்கும் திறனைப் பெருமளவு இழக்கச் செய்கிறது.
3) எதிரில் பேசுபவரை ஆவலுடன் பேசும்படி செய்யுங்கள். நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள், விருப்பத்துடன் செவி மடுக்கிறீர்கள் என்பதை அவர் நன்கு உணர வேண்டும். அவர் முகத்தைப் பார்க்காமல் அவர் தோளையோ அல்லது எங்கேயோ ஒரு மூலையையோ பார்க்காமல் அவரையே கவனியுங்கள். ஒருவேளை அவர் சொல்வதில் குறிப்புகள் எடுக்க வேண்டுமெனில் அது எவ்வளவு முக்கியமானது என்றும் உங்கள் நினைவாற்றல் திறன் சற்று குறைவு தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள். இது அவருக்குப் பெருமையைத் தான் தரும்.
4) நீங்கள் எதிரில் இருப்பவரின் பேச்சைக் கேட்பது அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிவதற்காகத் தான். அவர் சொல்வதை எப்படி அவருக்கு எதிராக விவாதத்தில் பயன்படுத்தலாம் என்பதற்காக அல்ல – இதை நினைவில் கொள்ளுங்கள்.
5) உங்களுக்கென்று ஒவ்வொரு விஷயத்திலும் அபிப்ராயம் உண்டு தான்! அது எதிரிலிருப்பவர் சொல்வதற்கு மாறாகவும் இருக்கக் கூடும். ஆகவே உங்கள் அபிப்ராயங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ளார்ந்த முனைப்புடன் அவர் சொல்வதை முழுவதுமாகக் கவனியுங்கள்.
6) தர்க்கரீதியாக மட்டும் கேட்பது போதாது; உணர்ச்சியுடனும் கேட்க வேண்டும். அவர் மூளையிலும் இதயத்திலும் நீங்கள் இடம் பெற வேண்டும். பேசும் போது அவர் சொல்லாமல் விட்டதையும் நீங்கள் சற்று கவனிக்க வேண்டும். ஒருவர் சொல்லாமல் விடுவது சொல்வதை விட சில சமயம் முக்கியமானதாக இருக்கக் கூடும். கேட்பது ஒரு உயிருள்ள இயக்கம், அதுவும் ஒருவரை முதல் முறையாக நீங்கள் பார்த்துப் பேசுகிறீர்கள் என்றால் இது மிக மிக முக்கியம். இந்தச் சமயத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதற்கு அதிக நேரம் கொடுங்கள். நீங்கள் சொல்ல வேண்டியதைச் சுருக்கிக் கொள்ளுங்கள்!
இனி பாருங்கள், நட்பு வட்டம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் உங்களின் மதிப்பு எப்படி கூடுகிறதென்று!
திருவள்ளுவர் கூறுவது எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமானது:-
Date uploaded in Sydney, Australia – 27 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
When I read that Museum of Sydney deals with aborigine culture, I decided to go to the museum. I went there on 26th February 2025; but I was disappointed because there were only documentary shows in three different dark rooms. I watched part of each documentary. One showed the etchings on rocks done by the aborigines. Though the documentaries are informative, nothing came from original aboriginal objects or paintings.
One documentary showed how the English occupied Australia, New Zealand and other islands. Beautiful flowers and plants discovered by the English were shown on huge screens. As a botany student I watched it keenly.
But my disappointment was partly gone when I got a printed card with aborigine words. As an amateur linguist, I went through it and found nothing was related to Tamil or Sanskrit.
But one should not jump to any conclusion based on one card matter. We know that 250 languages are/were spoken by the tribes in the vast Australian continent. 250 groups of people came to the continent from different places in different times. A few may be from Tamil or Sanskrit speaking areas of India. (My old articles on this site show their relationship with India).
Here are the words found on the card, freely available from the Museum of Sydney. They are from EORA tribe who lived in Sydney region before the English occupation.
The Eora are an Aboriginal Australian people who were the original inhabitants of the Sydney region. The term “Eora” is an Aboriginal word that means “the people” or “from this place”
Bamal – earth, clay, the ground
Nangamay- dream
Waruvi- girl
Bangala- basket
Guwing- sun
Murungal-thunder
Dyinuragang-old woman
Ganing-cave
Ngaramang-dance
Gayanayung-oldman
Buruwa-cloud
Nuwi-boat (only word close to Sanskrit Nauka; English word Navy came from it)
Wungarra-boy
Bara-fish hook made from shell, wood or bone
Gunang-spear
Garrigarrang-sea
Warrawal-milky way
Mungi-lightning
Duruga-meteor, falling star
Dganaba-laughter
Garadyigan-doctor ,clever man
Buruwang-island
****
My Analysis :
Aboriginal words have RR in many place names:
Example- Canberra, Parramatta
They end with NG sound like Chinese and North East Indianlanguages:
Example- Beijing, Da Nang, Shillong, Kurung
Most of the words have long AA sound.
—Subham—
Tags—Museum of Sydney, Aboriginal words, languages, My visit, Eora tribe, word list, relationship, Tamil, Sanskrit
Date uploaded in Sydney, Australia – 27 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எல்லோருக்கும் முன்னுதாரணமான மனிதன் என்றும் கடவுள் என்றும் பல புலவர்கள் ராமனை வருணித்தனர் . கம்பன் சொன்னதை நாம் எல்லோரும் அறிவோம் .
ராமபிரான் பற்றி கம்பன்
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்–
வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்
****
இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
****
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.
இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.
****
பிராமணர்கள் செய்யும் தர்ப்பண மந்திரத்தில் ராமன் என்ற நாமத்தைச் சொன்னால் எல்லா பபாவங்களும் அகன்றுவிடும் ; சந்தேகமே இல்லை என்று சொல்லி ஸங்கல்பம் செய்கின்றனர்
பொருள்:— அசுத்தமாகவாயினும், சுத்தமாகவாயினும் எந்த நிலையில் இருந்தாலும் எவன் ஒருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தமானவனே.
மனதாலோ, வாக்காலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீ ராமனை நினைத்த மாத்திரத்திலேயே கழிந்து போகும். இதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீ ராம ராம ராம.
****
தியாகராஜர், பத்ராசலம் ராமதாசர் ஆகியோர் ராம நாமத்தை உயிர் மூச்சாகக் கொண்டனர் .
மஹாத்மா காந்தி தனக்கு கஷ்டம் நேரிட்டபோதெல்லாம் ராம நாமமே தன்னைக் காப்பாற்றியது என்று சொன்னார் .
ராம நாமம் பற்றி மஹாத்மா காந்தி பொன்மொழிகள்
இறைவனை அறிய பிரம்மச்சர்யம்
மின்சாரம் சக்தி வாய்ந்தது ; எல்லோரும் அதனால் பயனடைய முடியாது. சில விதிகளைப் பின்பற்றினால்தான் அதை உற்பத்தி செய்ய முடியும் . அதற்கு உயிர் கிடையாது; மனிதன் கஷ்டப்பட்டுதான் அதைப்பற்றிய முழு அறிவையும் அடைகிறான் ; அதே போலவே நாம் கடவுள் என்று அழைக்கும் சக்தியும் , அவன் பற்றிய விதிகளை அறிந்தால் நம்முள் இருப்பதை அறியலாம்.கடவுளின் விதிகளை அறிவது மெத்த கடினம் என்பதை நாம் அறிவோம், கடவுளை அடைய, ஒரு விதி பிரம்மச்சர்யம் ஆகும். இதை நான் அனுபவத்தில் கண்டேன். துளசிதாஸ் போன்ற பத்தர்கள் இந்த செம்மையான வழியைக் காட்டுகின்றனர். எனக்கு ராம நாமத்தின் சக்தி நான் உருளி காஞ்சன் கிராமத்தில் இருந்தபோது தெரிந்தது.
என்னுடைய சொந்த அனுபவத்துக்கு முக்கியம் தரவேண்டாம்.எனக்கு அந்த கிராமத்த்தில் தான் ராமநாமத்தின் சக்தி தெரிந்தது எல்லா பிரச்சனைகளுக்கும் ராமா நாமம் தீர்வு தரும்;யார் ஒருவன் இந்த நாமத்தைப் பயன்படுத்துகிறானோ அவன் சிறிது முயற்சி செய்தாலும் பெரும்பலனை அடைகிறான்.
இதே பாதையில் செல்லும் நான் ஒன்று சொல்லுவேன்; பிரம்மசர்யத்துக்குத் தேவையான மற்ற கட்டுப்பாடுகள் இந்த ராம நாமத்தின் முன்னர் கொசுறு போன்றதே.. இந்த ஈடு இணையற்ற கருவியை அறியும் முயற்சியில் நாடும் வழிமுறை யாது, நாடித் தேடும் பொருள் யாது என்பதுகூட மறைந்து போகிறது .ராம நாமத்தை இருதயத்தில் நிறுத்தினால் அதன் அபூர்வ சக்தியை அறியலாம் இவ்வழியில் இறைவனை அடைய 11 விதிகள் இருப்பதைக் கண்டோம். சத்தியம் என்னும் வழியாக ராமன் என்னும் பொருளைத் தேடினோம்.ராம நாமமும் சத்தியமும் ஒன்றே அல்லவா ?
மீண்டும் பழைய விஷயத்துக்கு வருகிறேன் ;பிரம்மச்சர்யம் என்பதன் சரியான பொருள் ஜனன உறுப்பின் மீது முழுக்கட்டுப்பாடு பெறுவதாகும். அதற்கான தங்கச் சாவி ராமநாமம் ஆகும்.
–ஹரிஜன் இதழ் 22-6-1947
****
ராம நாமத்தை முஸ்லீம்கள் எதிர்க்கக்கூடாது!
என்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் நான் சொல்லும் ராமநாம ராமன் வரலாற்று புருஷனல்ல.அயோத்தி மன்னன் தசரதனின் மகனும் அல்ல. அவன் சனாதன புருஷன். அவனுக்கு சமமான இரண்டாமவன் எவனுமிலன் ; அத்தகைய ராமனையே நான் வணங்குகிறேன் ; அவன் உதவியையே நாடுகிறேன்; எல்லோருக்கும் உரியவன். முஸ்லீம்கள் அல்லது வேறு எவரும் அவன் பெயரை ஏற்க மறுக்கக் கூடாது. கடவுளை ராமநாமம் என்று கடவுளையே கட்டுப்படுத்த தேவை இல்லை அவர்கள் வேண்டுமானால் தனக்குள்ளே அல்லா என்று சொல்லிக்கொள்ளலாம் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷித செல்வம்
விதியின் வலிமை!
ச. நாகராஜன்
சுபாஷித ஸ்லோகங்கள் வாழ்க்கைக்கு உதவும் பலவித விஷயங்களை சுவாரசியமாகத் தருபவை.
சிலவற்றை இங்குக் காண்போம்.
விதியும் முயற்சியும்
க்ருத: புருஷகார: சன் சோபி தைவேன சித்யதி | ததாஸ்ய கர்மண: கர்துர: அபிநிர்வர்ததே பலம் ||
மனிதனின் இடைவிடா முயற்சி விதியினால் வெற்றி அடைகிறது.
விதியினாலேயே ஒருவன் ஒருவன் இடைவிடாமல் உழைத்து வெற்றியை அடைகிறான்.
விதி தனித்து பலன் தராது!
க்ருத: புருஷகாரஸ் து தைவ மேவானுவர்ததே |
ந தைவமக்ருதே கிஞ்சித் கஸ்யவித் தாதுமர்ஹதி ||
மனிதனின் சக்தியானது இடைவிடா முயற்சியினால் விதியையே பின்பற்றுகிறது; ஆனால் முயற்சி வேண்டி இருக்கும் போது விதி தனித்து எந்த வித பலனையும் தராது.
கர்மங்களின் விளைவுகளை எப்போது அனுபவிக்கவேண்டி வரும்?
க்ருதகர்மக்ஷயோ நாஸ்தி கல்பகோடி ஷதைரபி |
அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் ||
ஒரு மனிதன் செய்த கர்மங்களின் விளைவுகள் கோடி கல்பங்கள் சென்றாலும் அழியாது. ஒருவனது கர்மங்களின் விளைவுகளை அவை நல்லவையோ கெட்டவையோ அவன் அனுபவித்தே ஆக வேண்டும்.
கடமையைச் செய்த வேலைக்காரனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தனது கடமையைச் செய்த ஒரு வேலைக்காரனின் உழைப்பை நிச்சயமாகத் துன்பப்படும்படி விடக்கூடாது அவனது பணியை இதயபூர்வமாகவும் சொல்லினாலும் பார்வையினாலும் பாராட்டி அவனை மகிழ வைக்கவேண்டும்.
நூறு வருஷம் வாழ்வதை ஒரு நாள் எதைச் செய்வது மேலானது?
க்ருதகங்கோதகஸ்நானம் ச் ருதபாரதசத்கதம் |
அசிந்தாச்யுதபாதாப்ஜம் தினம் கல்பசதாத் வரம் ||
ஒரு நாள்
கங்கையில் ஸ்நானம் செய்வது,
மஹாபாரதக் கதையைக் கேட்பது
விஷ்ணுவின் பாதங்களை நமஸ்கரிப்பது ஆகியவை நூறு நூறு வருஷங்கள் வாழ்வதை விட மேலானது.
எவன் ஒருவன் நன்றி உள்ளவனாக இருக்கிறானோ, தார்மிகமாக இருக்கிறானோ, சத்யவாதியாக இருக்கிறானோ, பெரிய மனதுடன் இருக்கிறானோ, பக்தியுள்ளவனாக இருக்கிறானோ, தன் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ, தனது மரியாதை,மதிப்பைக் காத்து வைத்திருக்கிறானோ, ஒருபொழுதும் நண்பனைக் கைவிடாமல் இருக்கிறானோ அவனையே நண்பனாகக் கொள்ள வேண்டும்.
எப்போது ஒருவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது?
க்ருதஞஸ்வாமிஸம்சர்கம் உத்தமஸ்த்ரீ பரிக்ரஹம் |
குர்தன் மித்ரலோபம் ச நரோ நைவாதசோந்ததி ||
ஒரு பெரும் மகானின் தொடர்பு, ஒரு கற்புள்ள மனைவியைத் திருமணம் செய்து கொள்வது, பேராசை இல்லாத ஒருவனை நண்பனாகக் கொள்வது ஆகிய இவற்றை எவன் ஒருவன் கொண்டிருக்கிறானோ அவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது!
Date uploaded in Sydney, Australia – 26 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 29
சிட்னியில் இலவசமாகப் பார்க்கக்கூடிய கடைசி மியூசியத்தையும் பார்த்துவிட இன்று பிப்ரவரி 26-ஆம் தேதி (2025) சென்றேன் ஆனால் ஓவியங்கள் படங்கள் இல்லை. ஆதிவாசிகள் மற்றும் ஆஸ்திரேலிய வரலாற்றைக் கூறும் டாக்குமெண்டரி படங்கள் மட்டும் மூன்று அறைகளில் ஓடிக்கொண்டிருந்தன. யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து பார்க்கலாம். அவைகளில் ஆதிவாசிகளின் வாழ்க்கை பற்றிய பாறை வரைபடங்கள், கிறுக்கல்கள் மூலம் விளக்கினார்கள் ; ஆஸ்திரேலியக் குடியேற்றத்தின்போது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த தாவரங்களை படங்களுடன் விளக்கும் டாக்குமெண்டரி படமுமிருந்தது.
அந்தக்கால கப்பல்களின் மாடல் வடிவங்களும் காட்சியில் இருந்தன.
நான் கண்ட சுவையான விஷயம் ஆதிவாசிகளின் மொழி பற்றி அவர்கள் கொடுத்த அட்டைப்படம் ஆகும். மியூசியம் இடம்பெற்ற இடத்தில் வாழ்ந்த பழங்குடி இன. மக்கள் பேசிய சொற்கள் அந்த அட்டையில் உள. அவைகளைக் கீழே கொடுக்கிறேன். மொழியியல் அறிவு படைத்தோர் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் அந்த சொற்களுடன் எந்த தொடர்புமில்லை என்பதை அறிவார்கள்
The Eora are an Aboriginal Australian people who were the original inhabitants of the Sydney region. The term “Eora” is an Aboriginal word that means “the people” or “from this place”
ஆஸ்திரேலியாவில் 250 ஆதிவாசி இனங்கள் இருப்பதை நாம் அறிவோம்; சிட்னி நகர் இப்போதுள்ள இடத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்த இனம் இயோரா எனப்படும். இயோரா என்றால் மக்கள் அல்லது இந்த இடத்திலிருந்து என்று பொருள்.
Date uploaded in Sydney, Australia – 26 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
26225
1
2
3
4
5
6
7
8
Across
1.name for all the ten incarnations of Lord Vishnu
5.Mewar king who foght against Akbar.
8. Story or speech sweet as nectar.
Down
1.Krishna’s city in Gujarat under the sea.
2.One of the Jyotirlinga shrines in Gujarat
3. xxxxx refers to “(1) Stage of life, either student (brahmacārī), householder (gṛhastha), retired (vānaprastha) or renounced (sannyāsa)[; also hermitage
4. A goddess to whom one may offer an oblation when desiring a son; even Tamil villagers have this Goddess name.
6.To break, to tear in Sanskrit
7.love, affection in Hindi and many North Indian languages.