உங்கள் வீட்டு ஐன்ஸ்டீன்கள்! (Post No.13,601)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.601

Date uploaded in London – 29 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

உங்கள் வீட்டு ஐன்ஸ்டீன்கள்! 

ச. நாகராஜன் 

‘உங்கள் வீட்டில் ஐன்ஸ்டீனா’ என்று கண்களை அகல விரிக்கும் இளம் கர்ப்பிணியாகவோ அல்லது கல்யாணமாக இருக்கும் அழகிய யுவதியாகவோ நீங்கள் இருந்தாலும் சரி, தங்க விக்ரஹம் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்த இளம் தாயாக இருந்தாலும் சரி, நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்!

நவீன அறிவியல் தனது ஆராய்ச்சிகள் மூலம் தரும் ஒரு அபூர்வமான தகவல் :-

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுமே ஒரு பிறவி மேதை தான்! ஆனால் அதை நாம் வளர்க்கும் விதம் தான் சோகமயமானது! “எல்லாக் குழந்தைகளுமே பிறவி மேதைகள் தான்! அவர்களுடைய முதல் ஆறு வருட வாழ்க்கைக்குள்ளாகவே அந்த மேதைத் தன்மையை நாம் நீக்குகிறோம்” என்கிறார் ஒரு உளவியல் மேதை!

கல்யாணமானவுடனேயே ஐன்ஸ்டீன் ஜீனியஸை எதிர்கொள்ள நீங்கள் தயாராக வேண்டியது தான் என்று நவீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆரோக்கியமான வாலிபனும் யுவதியும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மணம் புரிந்ததோடு நின்று விடாது ஆரோக்கியமான விஷயங்களை நினைப்பவர்களாக ஆரம்பத்திலிருந்தே இருக்க வேண்டும் என்பது அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்பு!

அழுமைமயமான சீரியல்களைப் பார்க்கும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் அழுகைமயமாகவே தான் இருக்கும்.

கர்ப்ப காலத்தில் வயிற்றில் உள்ள குழந்தையுடன் நல்ல விஷயங்களை அடிக்கடி பேசுங்கள். உன்னதமான இசையைக் கேட்க விடுங்கள். நல்ல தோத்திரங்கள், ஶ்ரீ ஸூக்தம், மேதா ஸூக்தம் போன்ற மேதைத் தன்மையைத் தூண்டும் உணர்வு மற்றும் அறிவு நலங்களைத் தருபவனவற்றைக் கேட்கப் பழக்கப்படுத்துங்கள்!

ஒரு அபூர்வ குழந்தையின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அந்தக் குழந்தை மூன்று வயது வரை பேசவில்லை. பேச முயன்றபோது வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க மிகவும் சிரமப்பட்டது. அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்படும் அந்தக் குழந்தையின் கோபம் சற்று கடுமையானதாகக் கூட இருந்தது. பள்ளியிலோ பரிதாபமாக விழித்தது. பள்ளி ஆசிரியர்களும், ‘இது உருப்படாது’ என்று ‘தண்ணீர் தெளித்து’ விட்டு விட்டார்கள்.

ஆனால் சீட்டுக்கட்டுகளை வைத்து கட்டிடங்களை அமைக்கச் சொன்ன போது அந்தக் குழந்தைக்கு உற்சாகம் பிடிபடவில்லை. ஜிக்- ஸா புதிர்கள், புதிய கட்டிடங்கள் அமைப்பது இவற்றில் அந்தக் குழந்தைக்கு ஆர்வம் அதிகமானது. பார்ப்பது,  பார்த்த விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பது, அதை அப்படியே மனதில் உருவகப்படுத்துவது என்று இருந்த குழந்தை சீட்டுக்கட்டில் பதினான்கு மாடிக் கட்டிடம் கட்டி மற்றவர்களை அதிசயிக்க வைத்தது. அந்தக் குழந்தை வேறு யாருமில்லை, ஐன்ஸ்டீன் தான்!

உலகின் சிந்தனைப் போக்கையே தனது ஒப்புமை -ரிலேடிவிட் தத்துவத்தால் மாற்றிய பிரபல மேதையின் இளமைப் பருவம் பற்றித்தான் முந்திய பாராவில் நீங்கள் படித்தது.

மேலை நாடுகளில் ஒன்று, இரண்டு, ஏ, பி,சி, இவற்றையெல்லாம் கார்டுகளில் அடித்து அவற்றை வகுப்புகளில் ஃப்ளாஷ் செய்கிறார்கள். இவற்றிக்கு ‘ஃப்ளாஷ் கார்டுகள்’ என்று பெயர்.

இப்படிப்பட்ட ‘ஃப்ளாஷ் கார்டுகள்’ எதுவும் ஐன்ஸ்டீன்கள் உருவாகத் தேவை இல்லை. குழந்தை தன்னைச் சுற்றிப் பார்த்து ஒவ்வொன்றையும் ஆவலுடன் அறியத் துடிக்கும் அந்தத் தருணம் தான் மேதை அரும்பும் தருணம்! அதை அடக்குவதன் மூலமாகவோ அல்லது அலட்சியப்படுத்துவதன் மூலமாகவோ முளையிலேயே மேதைத்தன்மையைக் கிள்ளி எறிந்து விடலாம். இதைத்தான் பெரும்பாலான தாய்மார்கள் செய்கின்றனர். (குழந்தை சற்று நேரம் இருக்கட்டும்; சீரியல் போனால் வருமா?)

மாறாக குழந்தை கற்க விரும்புவதை சுதந்திரமாக கற்க விடுவதோடு அதற்கு உற்ற துணையாக தாய் இருக்க வேண்டும். குழந்தையோடு தாயும் பாடம் படித்து விளக்குவதை குழந்தைகள் பெரிதும் விரும்புகின்றன. அறிவியல் பெரிதும் இதை ஆமோதிக்கிறது!

‘ரிச் சென்ஸரி எக்ஸ்பீரியன்ஸஸ்” எனப்படும் பார்ப்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, சுவைப்பது என்ற புலன் வழி அனுபவங்களை இளம் தாய் தான் தன் குழந்தைக்குத் தர முடியும்!

உத்வேகமூட்டும் சுற்றுப்புறங்களை – கடல், ஆறு, மலை, குட்டை, ஏரி இவற்றில் அடங்கியுள்ள விஞ்ஞான விஷயங்களை விவரித்தல், டைனோஸர், சிங்கம், புலி, யானை ஆகியவற்றோடு பறவைகளைப் பற்றி விளக்குதல், அழகிய மலரிலிருந்து காணக்கூடிய இயற்கைக் காட்சிகளைப் பார்த்து அனுபவிக்க விடுதல் இவை ஒரு ‘ஐன்ஸ்டீனின் தாய்’ செய்ய வேண்டியவை!

ஒரு குழந்தை விளையாடுவதன் மூலமாகவே உடல்ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் வளர்கிறது. ஆகவே பொம்மையிலிருந்து வெளி உலகம் வரை குழந்தைக்கு விளையாட்டு தேவை! “குழந்தை தனது முதல் மூன்று வருடங்கள் பொம்மைகளை சுருட்டி தேய்த்து, முகர்ந்து பார்த்து, வாயில் வைத்துப் பார்த்து கற்க முயல்கிறது” என்கிறார் மற்றொரு உளவியல் அறிஞர். முதல் மூன்று மாதங்களில் பார்வையின் முழுப் பரிமாணமும் குழந்தைகளுக்கு வந்து விடாது. ரிச்சர்ட் எம். ரெஸ்டோக் தனது ‘தி இன்ஃபண்ட் மைண்ட்’ என்ற நூலில், “ஹார்ட்வேரும் சாஃப்ட் வேரும் ஒருங்கே இணையாத வரை குழந்தைகள் பார்ப்பதில்லை” என்கிறார். ஆனால் முதல் மற்றும் இரண்டாம் மாதங்களில் அது பார்க்க ஆரம்பிக்கிறது. இந்த மாதங்களில் நல்ல இசையை ஒலிக்கச் செய்யுங்கள்” என்பது அவரது அறிவுரை!

“சூப்பர் ஸ்டார்ட்” என்று பார்ப்பதை எல்லாம், குழந்தைகளிடம் திணிக்க முயலாமல் “உங்கள் ஐன்ஸ்டீன்களிடம்” உள்ள திறமையைக் கண்டுபிடிக்க முயலுங்கள்!

“முறையாக ஊக்கி விட்டால் எல்லா மொழிகளையும், இசை, நடனம் ஆகிய எல்லாவற்றையும் குழந்தைகள் கற்று விடும் என்று இந்த வெறி பிடித்த பெற்றோர்கள் நினைக்கின்றனர். பேபிகளை ப்ரஷர் கொடுத்து மேதைகளாக்க முடியாது” என்கிறார் டாக்டர் டயமண்ட்.

‘ப்ரஷர் செய்யாதீர்கள், புஷ் செய்யாதீர்கள், ஆனால் பே அட்டென்ஷன், வாட்ச், ட்யூன் இன் – கவனியுங்கள், கருத்தூன்றிப் பாருங்கள், லயத்துடன் சேர்த்து விடுங்கள்” – இதுவே மேதைத் தன்மையை ஊக்கி வெளிக் கொணர்ந்து விடும்!

உங்கள் வீட்டு ஐன்ஸ்டீன்கள் உருவாக வேண்டுமென்று சொல்ல வேண்டாம்; அதற்கும் மேலான ஒருவரும் உருவாகக் கூடும்! கூடவே இருந்து பாருங்கள், பழகுங்கள், திறமைகளை ஊக்கி விடுங்கள்! உங்கள் குழந்தை யார் என்பது புரிந்து விடும்!

**

சினேகிதி மாத இதழில் 2006, ஜனவரி மாதம் வெளியான கட்டுரை.

Learn Tirumanthiram through Pictures- 2 (Post No.13,600)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,600

Date uploaded in London – 28 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

 Learn Tirumanthiram through Pictures- 2 (Post No.13,600)

What is Tirumantiram ? Who is Tirumular?

Tirumuar is one of the traditional eighteen Siddhas. He came to Tamil Nadu from the Himalaya region. When he saw the dead body of a cowherd named Mulan (muulan) and the grieving cows around him, he used his magical power and entered the body of the cowherd. The cows were happy now. He sat in meditation and composed 3000 poems and it is known as Tirumanthiram. Saivites who follow the Agamas, never recognised the Siddhas, who were iconoclasts. But Tirumathiram was given a place in the Saivite literature that is made up of 12 sections. And Tirumanthiram forms the Tenth Section.

Periya puranam gives the stories of 63 Saivite saints called Nayanmars (naayanmaars) including the story of Tirumular (muular).

Here are some pictures which illustrate his teachings or his similes:

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை

அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்

பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்

கருத்தறி யாதவர் காலற்ற வாறே. 2

 Seek Not the Sour Tamarind: Sweet Mango is at Hand
The sweet, ripe mango, tended with loving care,
They bury deep, deeming it unripe still;
And up the gnarled tamarind they climb for the sour fruit,
Only to break their limbs–they whom the senses beguile.

XXXX

4. அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே. 20

Her Glance Purified My Heart

She is the Lady, compassion embodied

She is Bliss–Beauty (Ananda Sundari)

Unto tamarind fruit encased in cover hard

Is my wavering heart;

Into it She poured Her benignant glance

And made it pure;

She showed me the way to Siva-state

She made me radiant in Jnana

And redeemed me.

XXXX

புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்

களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்

துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்

ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 57

 Rapturous Experience Flowing From Witnessing Holy Dance

At the sight of tamarind

Water in mouth wells up;

As unto it,

Are all those who witness the Holy Dance;

They shed tears of joy;

They melt in love of Lord;

In their hearts,

Ambrosial bliss of Divine Light wells up.

XXXX

RAMAKRISHNA PARAMAHAMSA ON TAMARIND

“You cannot distinguish a devotee from a worldly person. That isn’t your fault. During the first burst of a storm, it is not possible to distinguish a tamarind tree from a mango tree.

“Before God-realization one cannot suddenly give up performance of rituals. How long, then, does one have to perform sandhya and such ritualistic worship? As long as tears do not flow and the hair does not stand on end at the sound of God’s name. If tears fill the eyes even once when saying  ‘Om Rama,’ know for certain that your karmas are over. You will not have to perform sandhya and other rituals any more.

“The blossom falls off as soon as the fruit appears. Karma is the blossom, and love for God is the fruit. The daughter-in-law of the house can’t work much when she’s pregnant; her mother-in-law gradually frees her from work. During the last month she barely lets her work at all. When the infant is born, the mother only attends to it and not to any other work. The sandhya merges into Gayatri and then Gayatri into Om. Om then becomes merged in samadhi – as the sound of a bell ‘t-o-m.’ Following the trail of the sound ‘Om,’ the yogi becomes lost in the Supreme Brahman.[13] Sandhya and such karmas disappear in samadhi. In this way the duties of the jnani fall off.”

xxxx

Pilgrimage and Sri Ramakrishna – three classes of religious teachers

The pundit: “Sir, how far did you go on your pilgrimage?”

Sri Ramakrishna (smiling): “I saw a few places. Hazra went farther and higher; he went to Hrishikesh. (All laugh.) I didn’t go that far, or that high. Kites and vultures soar very high, but their eyes remain fixed on the charnel pits where carcasses of dead animals are thrown. (All laugh.) Do you know what I mean by charnel pits? ‘Lust and greed.’

“If you can cultivate love and devotion for God sitting here, what is the need to go on pilgrimage? When I went to Kashi, I saw that the trees were the same, the tamarind leaves were also the same.

“If you do not develop love for God at places of pilgrimage, your visit to those places has been of no use. Love for God alone is the essential thing, the only thing needed. Do you know what I mean by kites and vultures? Many people come here and they talk big and say, ‘We have performed many of the rites and duties enjoined by the holy books.’ But their minds remain attached to the world. They are busy with money, name and honour, comfort, and so on.’’

The pundit: “Yes, sir. Going on pilgrimage is like searching for diamonds and jewels while throwing away Vishnu’s own gem.”[20]

Sri Ramakrishna: “And you must also know that, though you may preach a thousand things, they will be of no use unless it is the right time. When going to bed, a child says to his mother, ‘Mother, please wake me up when I have to go to the bathroom.’ The mother replies, ‘Child, its pressure itself will wake you up. You don’t have to worry about that.’ (Laughter.)

xxxXX

MASTER (to the devotees): “How strange’. It is like saying that a man has an acid stomach because he passed, in his coach, under a tamarind tree.” (All laugh.)

DOCTOR (with a smile): Let me tell you another. The captain of a ship had a bad headache. After consultation, the doctors on board had a blister applied to the side of the boat.” (All laugh.)

xxxx

“I used to tell Keshab now and then: ‘He whom you address as Brahma is none other than She whom I call Sakti, the Primal Energy. It is called Brahman in the Vedas when It transcends speech and thought and is without attributes and action. I call It Sakti, Adyasakti, and so forth, when I find It creating, preserving, and destroying the universe.’

“I said to Keshab: ‘It is extremely difficult to realize God while leading a worldly life. How can a typhoid patient be cured if he is kept in a room where tamarind, pickle, and jars of water are kept? Therefore one should go into solitude now and then to practise spiritual discipline. When the trunk of a tree becomes thick and strong, an elephant can be tied to it; but a young sapling is eaten by cattle.’ That is why Keshab would say in his lectures, “Live in the world after being strengthened in spiritual life.’

(To the devotees) “You see, Keshab was a great scholar. He lectured in English. Many people honoured him. Queen Victoria herself talked to him. But when Keshab came here he would be bare-bodied and bring some fruit, as one should when visiting a holy man. He was totally free from egotism.

XXXX

MY OLD ARTICLES ON TAMARIND TREES

New Stories about Tamarind Tree (Post No.11905)

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2023/04/15 › new-stories-a…

15 Apr 2023 — Sirala in Maharashtra is the site of a gigantic tamarind tree, the trunk of which is scored with lines and cracks. By the side of the tree , a …


Tamarind Tree

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › tamarind-tree

26 Mar 2016 — 1.There is a tamarind tree in Gwalior at the tomb of Tansen, the great singer of Moghul period. People believe that whoever chew the leaves of …


MORE ABOUT TREE WORSHIP IN ANCIENT INDIA (Post …

Blogger.com

http://swamiindology.blogspot.com › 2017/11 › more-a…

12 Nov 2017 — 2. 25 Nov 2012 – Buddha attained wisdom under the Bodhi Tree. Vaishnavite saint Nammalvar attained wisdom under a Tamarind tree. Sanatkumaras …


Kuruhur – Tamil and Vedas

Pinterest · sreedevib

10 years ago

Posts about Kuruhur written by Tamil and Vedas. … Tamarind Tree · Great Philosophers · The Temple · The Boy · Present Day.

SACRED TREES IN JAINISM – JAINS’ LOVE AFFAIR WITH …

Blogger.com

http://swamiindology.blogspot.com › 2020/01 › sacred-…

16 Jan 2020 — Tamarind Tree | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/tamarindtree/. Posts about Tamarind Tree written by Tamil and Vedas. Magic of …

–subham—

Tags- tamarind, Puli in Tamil, Tirumular, Tamarind, Ramakrishna, Paramahamsa, Learn Tirumanthiram, Pictures, part 2,

Ramayana Sculptures from Indonesia- Batch 6 (Post No.13,599)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,599

Date uploaded in London – 28 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

More Ramayana pictures from 100 year old German book.

They are from Java, Indonesian Island. This is the third batch of pictures of Ramayana Sculptures in

 Borobudur and other places.

to be continued…………………………………………………………….

—subham—

Tags- Ramayana sculptures, 100 year old German book, Java, Indonesia. Part 6

அனுமன் செய்த அற்புதம்- எட்டு நட்சத்திர தொகுதிகளைக் கடந்து பறந்தார் -10 (Post No.13,598)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,598

Date uploaded in London – 28 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 10


;முதலில் ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம்; வால்மீகி எழுதிய சம்ஸ்க்ருத சுந்தர காண்டத்தில், அனுமன் இலங்கைக்குப்  பறந்து சென்றபோது, எட்டு நட்சத்திரக்  கூட்டங்களைக் (EIGHT CONSTELLATIONS)  கண்டதாக எழுதுகிறார்; வானவியல் கணக்கின்படி ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட இடத்தில்  நின்று கொண்டு ஆறு  நட்சத்திர தொகுதிகளுக்கு மேல் காண முடியாது. ஆகையால் அனுமன் நீண்ட தொலைவு பறந்து சென்றதால்தான்  இவைகளைக் காண முடிந்தது என்று எண்ணலாம். அவர் 4 மணி நேரம் பறந்ததாகக் கொண்டால் இது சாத்திய மாகும்.

மேலும் வினோத நகர்வுகள் உள்ள சுவாதி நட்சத்திரத்தை (STAR ARCTURUS) அனுமனுடன் சம்பந்தப்படுத்துகிறார் வால்மீகி ; ராமாயண காலத்தில் இந்துக்கள் எந்த அளவுக்கு வானியலில் முன்னேற்றம் கண்டனர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு .

சுவாதி என்றால் சோதி நாள் எனப் பொருள் சொல்கிறது தமிழ் அகராதி. அனுமன் விஸ்வரூப வடிவம் எடுத்து சோதி போலப் பிரகாசித்து இலங்கைக்குப் பயணம் செய்தான்; துளசிதாஸ் இதை தேஜஸ் என்றார் ; வால்மீகி ராமாயணத்திலும் இது உள்ளது

xxxx

சுவாதி நட்சத்திரத்தை (STAR ARCTURUS) நட்சத்திரம்- அனுமன் தொடர்பு

கீழ் கண்ட  இணைப்பைக் காண்க ; இதே பிளாக்கில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரையில் உள்ளது

சுவாதி நட்சத்திரம் | Tamil and …

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

31 Aug 2012 — அதிசய நட்சத்திரம் ஸ்வாதி! ராம பக்தனான ஹனுமானை ஸ்வாதி நட்சத்திரத்துடன் ஒப்பிடுகிறார் மாமுனிவர் வால்மீகி. அதிசயமான…..

xxxxx

ஹனுமான் சாலீஸாவின் மேலும் கண்ணிகளைக் காண்போம்:

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை

சோ இ  அமித ஜீவன் பல பாவை

29. சாரோம்  யுக பரதாப தும்ஹாரா

ஹை பரஸித்த ஜகத உஜியாரா

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே

அஸுர நிகந்தன ராம துலாரே

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா

அஸ  வர தீன ஜானகீ மாதா

32. ராம் ரஸாயன தும்ஹரே பாஸா

ஸதா ரஹோ  ரகுபதி கே தாஸா

பொருள்:

28.உங்களை வழிபட்டால் அவர்களுடைய வேண்டுதல்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விடுகிறீர்கள்; மதிப்பிட முடியாத பலன்களும் பக்தர்களுக்குக் கிடைக்கின்றன.

29.நான்கு யுகங்களிலும் உங்கள் புகழ் பரவிக்கிடக்கிறது . புகழானது எல்லா இடங்களிலும் ஒளி வீசுகிறது.

30.ராமபிரானின் பேரன்புக்கு இலக்கான அனுமனே! தங்கள் சாது சன்யாசிகளைக் காப்பாற்றுகிறீர்கள் ; அசுரர் குணமுள்ளோரை அழிக்கிறீர்கள் .

31.அஷ்டமா சித்திகளும், நவ நிதிகளும் எல்லோருக்கும் கிடைக்க நீங்கள் உதவுகிறீர்கள் ; இந்த சக்தி உங்களுக்கு சீதா பிராட்டியார் மூலம் கிடைத்தது

32. தங்களுடைய இருதயத்தில் ராம ரசாயனம் என்னும் அந்தக் கடல் அலை வீசிக் கொண்டிருக்கிறது ; ராமனுடைய பாத கமலங்களை சிரமேற் கொண்டு ராம தாசனாக இருக்கிறீர்கள் .

xxxx

இந்தக் கண் னிகளில் பல புதிய பலன்கள் வருகின்றன; அனுமனை உள்ளன்போடு வழிபடுவோனுக்கு எட்டு வகையான அபூர்வ சக்திகளும் ஒன்பது வகையான செல்வங்களும் கிடைக்கும் ; மேலும் பக்தர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவான் அனுமன். அது மட்டுமல்ல ,நல்லோரைக்க காப்பாற்றி அசுர சக்திகளை அனுமன் அழித்துவிடுவான் .

இவை எல்லா சக்திகளும் ராமன், சீதை மூலம் கிடைத்தன !

அஷ்டமாசித்தி

திருமூலர் திருமந்திரத்தில் இவைகளை ஒரே பாட்டில் காணலாம்

தானே அணுவும் சகத்துத் தன் நொய்ம்மையும்

மானாக் கனமும் பரகாயத் தேகமும்

தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும்

ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே    

தன்னை அணுவாகச் சுருக்கிக் கொள்ளும் அணிமாவும், தன்னை உலகத்து மலை போலப் பெருக்கிக் கொள்ளும் மகிமாவும், அளவிடமுடியாத கனமுடையதாகச் செய்யும் கரிமாவும், ஆகாயம் போல நொய்தாகச் செய்யும் இலகிமாவும், எங்கும் விரிந்து எல்லா வற்றையும் தன்பால் தருவிக்கும் பிராப்தியும், தான் விரும்பிய பொருள்களைப் படைத்து விரும்பிய வடிவிற் சேர்ந்து நுகரும் பிராகாமியமும், தத்துவங்களே நீங்காது நின்று விரும்பியபடி நடத்தும் உண்மை நிலையாகிய ஈசத்துவமும், தத்துவங்களில் கலந்து எங்கும் வியாபித்து எல்லாவற்றையும் தன் பால் ஈர்க்கும் வசித்துவமும் எனச் சித்திகள் எட்டாகும் .

நவ நிதிகள்

சங்க நிதி, பதும நிதி, கச்சப நிதி, கற்பநிதி, நந்த நிதி, நீல நிதி, மகா நிதி, மகா பத்ம நிதி, முகுந்த நிதி,

இன்னும் ஒரு விளக்கம்

வண்டோகை , மனோகை , பிங்கலிகை, பதுமை, சங்கை, வேசங்கை , காளை  மகா காளை , சர்வதம்

4 யுகத்தில் எப்படி அனுமார் இருப்பார் ?

கிருத யுகத்தில் ரிக்வேதத்தில் காணப்படும் வருஷா காபி; த்ரே தாயுகத்தில் அனுமன் , துவாபர யுகத்தில் அர்ஜுனன் கொடியில் அனுமன் , கலியுகத்தில் ராமன் புகழ்பாடும் இடமெல்லாம் அனுமன்

XXXX

இனி சில கிருதிகளைக் காண்போம்

எனது சகோதரர் இயற்றிய இரண்டு பாடல்கள்

மதுரை பேராசிரியர் சந்தானம் சூரிய நாராயணன் இயற்றிய இரண்டு கிருதிகள்

ராகம் சுத்த தன்யாசிதாளம் ஆதி


பல்லவி

நீயே பாக்கியவான்- மாருதி

ராமசேவை செய்ய என்ன புண்ணியம்

செய்தாய்

அனுபல்லவி

வாயுகுமாரனே,வானர ராஜனே

தாயாம் சீதை தண்ணருள் பெற்றிட்ட(நீயே)

சரணம்

ராமநாமம் ஒன்றே தாரகமந்த்ரம்

ராம ஜெபம் செய்தால் இன்பங்கள் சேரும்

ஐம்புலன் அடக்கிய ஆஞ்சநேயா

மதுர சூர்யன் “தொழும் மங்கள நாயகா

(நீயே)

*************

சஹானா ராகம்; ஆதி தாளம்

சஹா நான் என்று துணை புரிவாய்

சதா நின் பதம் நினைந்துருகும்

(சஹா)

தகாத செயல் செய்த தசகண்ட ராவணனின்

மகா கர்வம் அழித்த மதிமிகு மாருதியே

(சஹா)

அசோகவனம் சென்று அன்னை துயர் துடைத்தாய்

அசுரர் குலம் ஒழித்து அதர்மம் அழியச் செய்தாய்

மகா பராக்ரம கோதண்ட ராமனுடன்

மனதில் தினம் தொழும் “மதுர சூர்யன்”

(சஹா)

*************

தீட்சிதர் கிருதிகள்

பல்லவி

பவன-ஆத்மஜ-ஆக3ச்ச2 பரி-பூர்ண ஸ்வச்ச2

பரம-ஆத்ம புச்ச2 பாஹி மாம் ஜய ஜய

அனுபல்லவி

நவ வ்யாகரண நிபுண நவ வித4-அந்த:கரண

ஸி1வ ராம ஹரி க்ரு2ஷ்ண ஸ்ரீ கு3ரு கு3ஹ ஸ்மரண

சரணம்

கபட வானர வேஷ காவ்ய நாடக தோஷ

கபி யூத2 பரிபோஷ கமனீய பா4ஷ

அபக3த-அகி2ல தோ3ஷ ஹத ராக்ஷஸ-அஸே1ஷ

உபனிஷத்3-பத3 கோ4ஷ உதி3த மித்ர த்3வேஷ

அபி4-ரூப மணி பூ4ஷ ரிபு ஜய ப3ல விஸே1ஷ

ஜப ஸமாதி4-அபி4லாஷ அபரிமித ஸந்தோஷ

XXXX

XXXXXX

பல்லவி

பவன-ஆத்மஜம் ப4ஜ ரே சித்த

பரம ஸா1ந்தம் ஸுர கு3ரு கு3ஹ மஹிதம்

ஸமஷ்டி சரணம்

பு4வன த்ரய வ்யாபகம் அதி-லலிதம்

பூ4-ஸுர-ஆதி3 ஸேவித ராம தூ3தம்

ஸ்1ரவண ராம நாம ப்ரபா4வம்

ஸா1ஸ்1வத ஸஞ்ஜீவினி-ஔஷத4 கரம்

XXXXX

DIKSHITAR THREE

பல்லவி

ராம சந்த்3ர ப4க்தம் ப4ஜ மானஸ

ராக்ஷஸ-அந்தகம் ஹனுமந்தம் ஸ்ரீ

ஸமஷ்டி சரணம்

ஆமிஷீ க்ரு2த தி3வாகரம்

கே3ய ஹெஜ்ஜஜ்ஜி ராக3 ப்ரீதி-கரம்

ஸாம தா3ன பே4த3 த3ண்ட3 சதுரம்

ஸத்3கு3ரு கு3ஹ ஸம்மோதி3தம் வரம்

XXXX

DIKSHITAR FOUR

பல்லவி

வீர ஹனுமதே நமோ நமோ

மாருத தனய நமோ நமோ

அனுபல்லவி

ஸரஸீ-ருஹ வத3ன ஸ்ரீ ராம சந்த்3ர சரண

சரணம்

க்ரூர ராக்ஷஸ-ஆதி3 ஹரண

ஸர்வ வித்3யா தா3ன நிபுண

பர மந்த்ர வினாஸ1-கரண

கபி வினுத கு3ரு கு3ஹ ஸ்மரண

XXXX

VALMIKI ON HANUMAN TEJAS அனுமனின் தேக ஒளி – தேஜஸ் பற்றி வால்மீகி

तस्य संस्तूयमानस्य सर्वैर्वानरपुङ्गवैः।

तेजसापूर्यमाणस्य रूपमासीदनुत्तमम्।।4.67.5।।


सर्वैः by all, वानरपुङ्गवैः by monkey leaders, संस्तूयमानस्य of him being praised, तेजसा with lustre, पूर्यमाणस्य who was filled, तस्य his, रूपम् body, अनुत्तमम् excellent, आसीत् became.


As Hanuman was being praised by the monkey leaders, his body filled with lustre. It looked excellent.

यथा विजृम्भते सिंहो विवृद्धो गिरिगह्वरे।

मारुतस्यौरसः पुत्रस्तथा सम्प्रति जृम्भते।।4.67.6।।


विवृद्धः grown, गिरिगह्वरे in a mountain cave, सिंहः lion, यथा as, विजृम्भते he stretches himself, मारुतस्य Windgod’s, औरसः पुत्रः lawful son, सम्प्रति at that time, तथा like that, जृम्भते grew.


Just as a lion grown in a mountain cave stretches its body, the Windgod’s son stretched (his limbs) at that time.

अशोभत मुखं तस्य जृम्भमाणस्य धीमतः।

अम्बरीषमिवाऽदीप्तं विधूम इव पावकः।।4.67.7।।


जृम्भमाणस्य on expansion, धीमतः of the wise person, तस्य his, मुखम् face, आदीप्तम् glowing, अम्बरीषमिव like a burning oven, विधूमः smokeless, पावकः इव firelike, अशोभत was shining.


On expansion, wise Hanuman’s face was bright, glowing like a burning oven and shining like smokeless fire.

XXXX

SWATI STAR அற்புத சுவாதி நட்சத்திரம் பற்றி வால்மீகி

भविष्यति हि मे पन्थास्स्वातेः पन्था इवाम्बरे।

चरन्तं घोरमाकाशमुत्पतिष्यन्तमेव वा।।4.67.20।।

द्रक्ष्यन्ति निपतिष्यन्तं च सर्वभूतानि वानराः।


वानराः monkeys अम्बरे in the sky, मे I, पन्थाः path, स्वातेः of the constellation of Swati, पन्थाः इव like the path, भविष्यति will be, घोरम् terrific, आकाशम् sky, उत्पतिष्यन्तमेव च as I am flying upward, चरन्तम् while I am moving, निपतिष्यन्तम् while I am descending, सर्वभूतानि all creatures, द्रक्ष्यन्ति will see me.


‘O monkey when I fly upward in the dreadful sky or descend down, all creatures will see me, for my path will be the path of the constellation of Swati (a group of stars).

XXXX

CONSTELLATIONS அனுமன் கண்ட  நட்சத்திரங்கள்  பற்றி வால்மீகி

Following is the excerpt from Chapter 57 of Sundara Kanda:

sacandra kumudam ramyam saarka kaaraNDavam shubham |
tiShya shravaNa kadambam abhra shaivala shaadvalam || 5-57-1
punarvasu mahaamiinam lohita anga mahaagraham |
airaavata mahaadviipam svaatii hamsa viloDitam || 5-57-2
vaata samghaata jaata uurmim candra amshu shishira ambumat |
bhujamga yakSha gandharva prabuddha kamala utpalam || 5-57-3
hanumaan maarutagatirmahaanauriva saagaram |
apaaramaparishraantaH pupluve gaganaarNavam || 5-57-4


स चन्द्रकुमुदं रम्यं सार्ककारण्डवं शुभम्।

तिष्यश्रवणकादम्बमभ्रशैवालशाद्वलम्।।5.57.1।।

पुनर्वसुमहामीनं लोहिताङ्गमहाग्रहम्।

ऐरावतमहाद्वीपं स्वातिहंसविलोलितम्।।5.57.2।।

वातसङ्घातजातोर्मि चन्द्रांशुशिशिराम्बुमत्।

भुजङ्गयक्षगन्धर्वप्रबुद्धकमलोत्पलम्।।5.57.3।।

हनुमान्मारुतगतिर्महानौरिव सागरम्।

अपारमपरिश्रान्तः पुप्लुवे गगनार्णवम् ।।5.57.4।।


मारुतगतिः like the Windgod, हनुमान् Hanuman, अपरिश्रान्तः nwearied, सचन्द्रकुमुदम् Moon for a white lotus, सार्ककारण्डवम् Sun for a waterfowl, शुभम् auspicious, तिष्यश्रवणकादम्बम् Tishya and Shravana for sweetvoiced swans, अभ्रशैवालशाद्वलम् clouds for duckweeds and grassy spots on the shores, पुनर्वसुमहामीनम् Punarvasu constellation for large fish, लोहिताङ्गमहाग्रहम् the planet Mars for a crocodile, ऐरावतमहाद्वीपम् Airavata for a large island, स्वातिहंसविलोलितम् Swati for swan in water, वातसङ्घातजातोर्मि waves produced by wind for its billows, चन्द्रांशुश्शिराम्बुमत् cool Moonbeams for cold waters, भुजङ्गयक्षगन्धर्वप्रबुद्धकमलोत्पलम् nagas, yakshas, gandharvas together as fully blossomed lotuses, अपारम् गगनार्णवम् another ocean like, महानौ: huge boat, सागरम् इव like the ocean, पुप्लुवे flew across.


Hanuman leaped ike the Windgod, unwearied across the sky, as a huge boat crosses an ocean. The ocean was graced with a swan, the sky with constellation of Swati with fullblown lotuses and water lilies, like the nagas, yakshas, and gandharvas gathered together. The Moon in the sky was like a white lotus, the Sun like a waterfowl, the
auspicious Tishya and Shravana like the sweetvoiced swans, and the clouds like duckweeds and green grassy spots on the shore. The Punarvasu star was like a large fish and the planet Mars was like a crocodile. Airavata was like the great island. The waves produced by the wind were like cool moonlight in the cold water.

“ Like a winged mountain Hanuman sailed over the airy sea; Yakshas looked like the lotus flowers, Gandharvas moon, the sun its water fowl, Tishya and Sravana Nakshatras its swans and the clouds its reeds and moss. Punarvasu was the whale and Lohitanga (Mars) the crocodile, Airavata the spacious island, Swati, its decoration in the form of a swan; the breezes were its billows and the rays of the moon its cool and peaceful waves”.

The above passage is a metaphor and refers to the stars Shravana (Capricorn), Tishya (Gemini), Punarvasu (Gemini/ Cancer), Lohitanga ( Mars or red star Jyeshta)(Scorpio) and Swati (Libra). Lohitanga in Sanskrit means planet Mars. But he might have meant red star Jyeshta (Kettai in Tamil). Airavata is Indra’s heavenly elephant Vahana/vehicle. But here it means a star.’

TO BE CONTINUED……………………………………

—SUBHAM—-

TAGS- ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 10, ஸ்வாதி, நட்சத்திரம், அனுமன் செய்த அற்புதம், எட்டு நட்சத்திர தொகுதி, பறந்தார் -10 ,தீட்சிதர் கிருதிகள், மதுரை சூரிய நாராயணன் கிருதிகள் ,அஷ்டமா சித்திகள், நவ நிதிகள் , திருமந்திரம்

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்;   விஞ்ஞானிகள் அறியாத மனம்-2 (Post.13,597)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,597

Date uploaded in London – 28 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம் –2

அற்புதங்களுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை

கட்டுரையின் இரண்டாவது பகுதி

சுவாமி விவேகானந்தர் தொடர்ந்து பேசினார் ………

“ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் , புராதன இந்தியாவில் , அற்புதங்கள், இப்போது இருப்பதைவிட அதிகமாகவே நடந்தன ஒரு நாடு நெருக்கமான ஜனத்தொகை அடையும்போது மனோசக்திகள் குறையும் என்று நான் நினைக்கிறேன். பெரிய நாடாக இருந்து குறைவான ஜனத்தொகை இருந்தால், மனத்தின் அபூர்வ சக்திகளை அதிகம் காணலாம். .எதையும் பகுத்தறிவுடன் நோக்கும் இந்துக்கள் இது பற்றியும் சிந்தித்தனர். இவை எல்லாம் அபூர்வமே அல்ல; இயற்கையான, சாதாரண விஷயம் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்  உடல் சார்ந்த பல விதிகளை போலவே இவையும் சில விதிகளுக்குட்பட்டே நடக்கின்றன. இயற்கையில் ஏதோ ஒரு அதிசயம் என்பதல்ல.

அபூர்வமான சக்திகளுடன் சிலர் மட்டும் பிறக்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்; இதை யாரும் பெறமுடியும்; ஆனால் முறையாகப் பயின்று, பயிற்சி செய்து இவைகளை பெறலாம்  இந்த விஞ்ஞானத்துக்கு ராஜ யோகம் என்று பெயர்.ஆயிரக்கணக்கானோர் இதை பயின்றுவருகிறார்கள் இந்தியாவில் இது ஒரு தினசரி வழிபாடு.

அவர்கள் முடிவாகக் கண்டது என்ன? எல்லா சக்திகளும் நம்முடைய மனதில் தான் உள்ளன.

நம்முடைய மனம் பிரபஞ்சம்  முழுதும் வியாபித்துள்ள மனதின் ஒரு பகுதிதான் . ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனமும் , எங்கிருந்தாலும் அதனுடன் தொடர்பு கொள்கிறது.

எண்ணங்கள் பரிமாற்றம் என்னும் விஷயத்தை நீங்கள் எப்போதாவது கவனித்தது உண்டா? ஒரு மனிதன் சிந்திக்கும் விஷயம் ஏதோ ஒரு வகையில் உருவம் எடுக்கிறது தொலைவிலுள்ள ஒருவனுக்கு ஒரு மனிதன் செய்தி அனுப்ப எண்ணுகிறான். அதை அறிந்து , அந்த எண்ண அலைகளை ஏற்க அந்த மனிதனும் தயாராகிறான்.; அப்படியே அதை ஏற்கவும் செய்கிறான்.தொலைவு ப ற் றி கவலையே இல்லை. நான் ஒரு கருத்தைச் சொன்னால் அது உங்கள் மூளைக்குள் போகிறது; அதை நீங்கள் உங்களுடைய எண்ணத்துடன் கலந்து நீங்களே ஒரு புதிய வடிவம் கொடுக்கிறீர்கள் ஆனால் டெலிபதி TELEPATHY என்னும் தொலையுணர்வு அப்படிப்பட்டதல்ல . அது நேரடித் தொடர்பு

XXXXX

(என் கருத்து :- புற நானூற்றிலும் இந்த அதிசயம் உள்ளது. இந்துக்கள் வடக்கிருந்து உண்ணாவிரதம் இருப்பது ஒரு சடங்கு. இது வால்மீகி ராமாயணத்திலும் உளது பிராயோபவேசம் என்பர் ; கோப்பெருஞ்சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தான். அவன் புனிதமான வடக்குதிசை நோக்கி அமர்ந்தவுடன் புனிதப் புலவர் பிசிராந்தையார் வரப்போகிறார் என்றான். நீங்களும் அவரும் எக்காலத்திலும் சந்தித்ததும் இல்லை ; ஒருவரை  ஒருவர் பார்த்ததும் இல்லையே என்றனர் சகாக்கள்; ஆனால் என்ன அதிசயம் ! பிசிராந்தையாரும் வந்து வடக்கிருந்து உயிர்நீத்தார். ராமபிரான் வாழ்நாள் முடிந்தவுடன் சரயு நதியில் ஜல சமாதி அடையப் போகிறார் என்ற வுடன் பல்லாயிரம்மக்கள் அவருடன் சென்று சரயூ நதியில் மூழ்கி சொர்க்கம் சென்றனர்.  பட்டினத்தார், ஆதிசங்கர ர்  ஆகியோரின் தாயார்  இறக்கும் போது , முன்னர் கொடுத்த உறுதி மொழிப்படி , அவர்கள் தாய் முன் தோன்றி சட லத்துக்கு  தீ மூட்டினர் ; பூசலார் நாயனார் மன க் கோயில் கட்டி கும்பாபிஷேக தேதி நிர்ணயித்ததை இறைவனே சோழ மன்னனுக்கு அறிவித்தான் என்கிறது பெரிய புராணம் ; இந்தக் கலை அமெரிக்க, ரஷிய விஞ்ஞானிகளுக்கு இன்று வரை தெரியாது )

XXXX

மனது தனிப்பட்டதல்ல தொடர்ச்சியானது- இணைந்தது என்பதை யோகிகள் கண்டுபிடித்தனர் மனது என்பது பிரபஞ்சம் தழுவியது ; உங்கள் மனது, என் மனது, இன்னும் உள்ள சின்னச் சின்ன மனதுக்கள் எல்லாம் பிரபஞ்ச மனதின் துண்டுகள்தான் ; பெரிய கடலில் பார்க்கும் அலைகள் போல. (ஆனால் கடல் ஒன்றுதான்). நம்முடைய எண்ணத்தை நேரடியாகவே அனுப்பலாம்.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறீர்கள்; நாம் பெரும்பாலும் நம்முடைய சக்தியை சொந்த உடம்பினைப் பாதுகாத்துக்கொள்ள செலவிடுகிறோம் எஞ்சிய சக்தியை பிறர் மீது செலுத்துகிறோம். நம்முடைய எண்ணங்கள் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது போல அவர்கள் எண்ணங்களும் நம் மீது ஆதிக்கம் செய்கின்றன நம்முடைய செயல்கள், குணங்கள் முதலியவை மாறுவதைப்போல பிறர் இடத்திலும் நடக்கிறது ; ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன். கற்றறிந்த, சொல்லில் வல்லவரான ஒருவர் ஒரு மணிநேரம் உங்களுடன் பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் உங்கள்  மனதில் மாற்றமே இல்லை ; இன்னும் ஒருவர் வருகிறார் ; நன்றாகப் பேசத்தெரியாது; இலக்கணப் பிழைகளுடன் கொச்சை மொழியில் பேசுகிறார். ஆனால் அவர் பேச்சு உங்களுடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன்  பொருள் என்ன ? சொற்கள் மட்டும் மாற்றத்தைக் கொணராது ; பேசுபவரின் காந்த சக்தியும் தேவைப்படுகிறது பேச்சு மூன்றில் ஒரு பகுதி தாக்கத்தை உண்டாக்கினால், பேசுவரின் பெர்சனல் மாக்னெட்டிசம் PERSONAL MAGNETISM  மூன்றில் இரண்டு பங்கு தாக்கத்தை உண்டாக்குகிறது

 குடும்பத்தில் சிலர் வெற்றி பெறுகிறார்கள்; சிலர் வெற்றி பெறுவதில்லை; குடும்பம் பாழானதுக்கு அந்த ஆள்தான் கா ரணம் என்று குற்றம் சாட்டிவிடுகிறோம்; நமது தோல்விகளை கணக்கில் எடுத்துக்கொவதில்லை. தேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; பெரிய தலைவர்கள் வந்தனர்; புத்தகங்களை எழுதினர்; அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் எல்லாம் மகத்தானவர்கள்.  இன்றும் நாம் அவர்கள் எழுதிய புஸ்தகங்களைப் படிக்கிறோம் ஏன் ? நான் முன்னர் சொன்னது போல அவர்களின் PERSONALITY பெர்சனாலிட்டிதான். தனித்தனமைதான்.. அது,  மூன்றில் இரண்டு பங்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

XXXX

(என் கருத்து – மஹாத்மா காந்தி, நடிகர் எம்.ஜி. ஆர் பேசிய கூட்டங்களுக்கு பல லட்சக் கணக்கானோர் வந்து நீண்ட நேரம் காத்திருந்து பேச்சைக்கேட்டனர் ; இதையே செய்த ஏனையோருக்கு அப்படிக் கிடைக்கவில்லை; பெர்சனசாலிட்டி , பெர்சனல்  மாக்னட்டிசத்துக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்; புத்தர், ஆதிசங்கரர் , சுவாமி விவேகானந்தர் போன்றோருக்கும் இவை இருந்தன ). விவேகானந்தரின் குருவான ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சரும் தான்  கண்ட அற்புதங்களை, சம்பவம் சம்பவமாக எடுத்துச் சொல்லி அவைகள் மூலம் இறைவனை அடைய முடியாது; இறைவனை அடைய முடியாதபடி தடுக்கும் படு குழிகள் அவை என்பதை விளக்கியுள்ளார்; சத்யா சாய்பாபாவும் அற்புதங்கள் பற்றிக் கேட்டபோதெல்லாம், இவை தனது விசிட்டிங் கார்ட் என்று சொல்லி மழுப்பியுள்ளார்; அதாவது இறைவனுக்கும் அற்புதங்களும் தொடர்பு இல்லை; நல்லோர், அவைகளைப்ப பயன்படுத்தி மக்களை நல்வழிப் படுத்துவர்; தீயோர் அவைகளைப் பயன்படுத்தி பெண் மீதும் பொன்  மீதும் கை வைத்து சிறைக்குச் செல்லுவார்கள் ராஜ யோகம், ஹட யோகம் மூலம் அபூர்வ சக்திகளைப் பெறலாம் . திரு மந்திரத்தில் திருமூலர் அட்டமா சித்தி பற்றி ஒரு அத்தியாயமே பாடியுள்ளார் )

XXX

கட்டுரையின் மூன்றாவது பகுதியில் ராஜ யோகம் பற்றிச் சொல்கிறார் .

தொடரும்

–SUBHAM—

TAGS– மனதின் சக்தி, பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன், ராமன், சரயூ நதி, ஜல சமாதி,, எம் ஜி ஆர், காந்தி , கூட்டங்கள் ,  பிரபஞ்ச்ச மனது,  பாபா செய்த அற்புதங்கள் , விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம், பகுதி – 2. power of mind

நீங்கள் முன்னேற ஏ.கே. 47 மிரட்டல் தான் வேண்டுமா? (Post No.13,596)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.596

Date uploaded in London – 28 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xx

நீங்கள் முன்னேற ஏ.கே. 47 மிரட்டல் தான் வேண்டுமா? 

ச. நாகராஜன் 

பி.பி.சி. அண்மையில் ஒலிபரப்பிய ஒரு உண்மைக் கதை சுவையான ஒன்று. முன்னேறத் துடிப்பவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதும் கூட!

டாம் என்பவர் ஒரு விவசாய ஆராய்ச்சியாளர்; ஆர்க்கிட் பூக்களைச் சேர்ப்பது அவரது தொழில். அவரை கொலம்பியா கொரில்லாக்கள் திடீரெனக் கடத்திச் சென்று விட்டனர். தென்  அமெரிக்காவில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுவில் ஒன்பது மாதம் அவர் சிறை வைக்கப்பட்டார். அவர் தனது நண்பருடன் அபூர்வ தாவர வகைகளைச் சேகரிக்கச் சென்ற போது தான் இருவரும் கடத்தப்பட்டனர். பயங்கரமான ஒன்பது மாத கடத்தல் வாசத்தில் அங்கு இருவரையும் தினசரி தலையை வெட்டப் போவதாகத் தீவிரவாதிகள் மிரட்டிக் கொண்டே இருந்தனர்.

எவ்வளவு கொடுமையான பீதியை அவர்கள் அனுபவித்திருப்பார்கள்! நம் வீரப்பன் – ‘ராஜ்குமார்’ நாட்களை நினைத்துப் பாருங்கள்.

இந்த பயங்கர அனுபவம் தந்த மனத்துன்பத்திலிருந்து விடுபட,

டாம் தனது டயரியில் தான் கனவு கண்டு அமைக்க விரும்பும் அபூர்வ வகை தாவரங்கள் அடங்கிய ஒரு தோட்டத்தின் வரைபடத்தை அமைக்க முயன்றார். இந்தச் சம்பவத்தை அவர் பி.பி.சி. நிகழ்ச்சியின் போது விவரித்தார்…

“என்னைக் கடத்தியவர்கள் 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி என்னை அடித்து உதைத்தனர். அன்றைய தினம் எனது சகோதரியின் பிறந்த தினம்.”

“உனக்கு இன்னும் ஐந்து மணி நேரம் தான் இருக்கிறது” என்று தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கொல்லப்படுவதற்கு முன் இருந்த ஐந்து மணி நேரத்தை ‘நர்க வேதனை’யோடு எப்படிக் கழிப்பது? எனவே, அதை மறப்பதற்காகத் தனது டயரியை எடுத்தார்; தனது கனவுத் தோட்டத்தை முழு விவரங்களுட\ன் வரைய ஆரம்பித்தார்.

ஏ.கே. 47 அவரது தலையை நோக்கிக் குறி பார்த்துக் கொண்டிருக்க, அவரது மனம், கனவு ப்ராஜெக்டில் ‘ஃபோகஸ்’ ஆனது! அவர் தன் கனவில் ஆழ்ந்து போனதில் நேரம் போனதே தெரியவில்லை. அந்த வரைபடம் ஆரம்பமாகி முன்னேறிக் கொண்டே இருந்தது. ஐந்து மணி நேரம் கழிந்தது. வழக்கம்போல உணவு வந்தது; ஆனால் குண்டு எதுவும் பாயவில்லை!

ஒன்பது மாதங்கள் கழித்து அதிர்ஷ்டவசமாக அந்த இருவரும் விடுவிக்கப்பட்டனர். தனது சொந்த ஊரான  ‘கெண்ட்’க்கு வந்த டாம் பராமரிக்கப்படாமல் கிடந்த தனது பூர்வீக சொத்தான இரண்டு ஏக்கர் நிலத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இன்று ஒரு மாயாஜாலத் தோட்டம் நிஜமாகவே லிவிங்ஸ்டன் கேஸில் கிரவுண்டில் உருவாகி இருக்கிறது.

‘தாவரங்களின் உலகத் தோட்டம்’ என்ற அந்த பிரம்மாண்டமான தோட்டம், பார்க்க வருவோரை மகிழ்விக்கிறது!

எவ்வளவோ விஷயங்களைக் கனவு கண்டு, அதை நிறைவேற்ற செயல்படாமல் இருக்கும் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டில் தலைக்கு நேரே ஒரு ஏ.கே.47 மிரட்டல் தேவையாக இருக்கிறதா – திட்டத்தை ‘ஃபோகஸ்’ செய்து தயாரிக்க?

டாமின் அனுபவம் ஒன்றே போதாதா?

நமது வீட்டின் முன்னறையில் அமைதியாக அமர்ந்து ஒரு ஐந்து மணி நேரத்தில் நமது கனவுத் திட்டத்தின் வரைபடத்தை முழு விவரங்களுடன் உருவாக்க முடியாதா, என்ன? குறிக்கோளை முடிவு செய்து, வெவ்வேறு கலர்களில் நமது திட்டத்தை அதற்குரிய முக்கியத்துவம், கால எல்லை இவற்றை நிர்ணயித்து எதிர்கால நனவுப் பலகையாக ஒன்றை உருவாக்க முடியாதா என்ன?

ஐந்து மணி நேரம் தீவிரவாதிகள் உங்களைக் கடத்தி ஏ.கே. 47 -யுடன் மிரட்ட வேண்டுமா, என்ன? நீங்களே இனிய சுகானுபவமாக உங்களை ஒரு ஐந்து மணி நேரம் கடத்திக் கொண்டு கனவிலிருந்து நனவுக்கு இட்டுச் செல்லும் வரைபடத்தை உருவாக்கி எதிர்காலத்தை எதிர் கொள்ளலாமல்லவா? 

**

சினேகிதி மாத இதழில் 2007, பிப்ரவரி மாதம் வெளியான கட்டுரை.

Ramayana Sculptures from Indonesia- Batch 5 (Post No.13,595)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,595

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

xxxx  

More Ramayana pictures from 100 year old German book.

They are from Java, Indonesian Island. This is the third batch of pictures of Ramayana Sculptures in

 Borobudur and other places.

—subham—

Tags- Ramayana sculptures, 100 year old German book, Java, Indonesia. Part 5

Janmashtami Celebrations in London Hospital (Post No.13,594)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,594

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

 Janmashtami Celebrations in London Hospital (Post No.13,594)

We celebrated Janmashtami, Lord Krishna’s Birth Day, in the Northwick Hospital in Greater London area last week. It was celebrated six days before Janmashtami, because devotees will be very busy near the actual day.

It was part of our weekly prayers in the chapel in the hospital. About 100 devotees from the hospital, both patients and staff, took part in it. Volunteers from Swaminarayan temple and Harekrishna temple came and sang the songs glorifying Lord Krishna.

We did singing with dance in the last 15 minutes . Volunteers from the ISKCON, Hare Krishna Temple led the group. All the devotees joined them enthusiastically. Prasad was distributed at the end. The function went on for two hours.

Wednesday is allocated for Hindu Prayers. And we do celebrate major festivals including Diwali.Hospital  Hindu Chaplain V V Swaminathan leads the prayer every week.

Please see my pictures taken on the day.


Picture of Hospital Hindu Chaplain V V Swaminathan with the Swaminarayan Temple Bhajan Group.

–subham–

tags-  Janmashtami Celebrations in London Hospital , Northwick Park Hospital 

அனுமன் பறந்த வேகம்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 9 (Post No.13,593)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,593

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

அனுமன் பறந்த வேகம் ;ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 9

முதலில் அனுமன் இலங்கைக்குச் சென்ற வேகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய சுவையான விஷயத்தைக் காண்போம்:

விமானம் போல பறந்தான் – கம்பன் வருணனை

கொட்புறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும்,

கண்புலன் கதுவல் ஆகா வேகத்தான், கடலும் மண்ணும்

உட்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப்

புட்பக விமானம்தான் அவ் இலங்கைமேல் போவது ஒத்தான். 24-

சுழன்றுசுழன்று செல்கின்ற குதிரைமேல் உள்ள;

தெய்வத் தன்மை பெற்ற கூரிய நுனியையுடைய;

வச்சிராயுதத்தை ஏந்திய இந்திரனுக்கும்;

கண்ணின் பார்வை பின்பற்ற முடியாத வேகமுடைய

கடலும் கடலாற் சூழ்ந்த உலகமும்;

தன்னுள் ஒடுங்கும்படி (பேருருக் கொண்டவனாய்);

அண்டத்தின் உச்சியானது மோதும்படி; செல்கின்ற

பயணத்தால்ஒப்பற்ற புட்பக விமானம்;

இலங்கை மாநகருக்குப் போவதை

ஒத்திருந்தான். (FLIGHT TO SRI LANKA)

xxxxx

Speed of Hanuman- 660 kilometers per hour

மனோ ஜவம் மாருத துல்ய வேகம் என்ற ஸ்லோகத்தில் அனுமனின் வேகம் மருத் என்னும் காற்றின் வேகம் என்றும் மனத்தின் வேகம் என்றும் முதல் வரி சொல்கிறது. இதில்தான் ஐன்ஸ்டைன் இந்துக்களிடம் தோற்றுப்போனார்; ஒளியின் வேகத்தில் யாரும் பயணம் செய்ய முடியாது அப்படிப்போனாலும் அருகிலுள்ள ஆல்பா செண்ட்டாரை  நட்சத்திரத்துக்குப் போகவே நாலரை ஆண்டுகள் பிடிக்கும் என்பது ஐன்ஸ்டைன் கூற்று.  ஆனால் இந்துக்கள் சொர்க்கத்துக்குப் போகவே ஒரே நாள் தான் செலவி ட்டனர் என்று பாகவதமும் நம்மாழ்வாவர் பாசுரமும் சொல்கிறது; தேவர்கள் ஒளி ரூபத்தில் வாழ்வதால் தான் அவர்களுக்கு தேவர் என்றே பெயர்! அவர்கள் மனத்தின் வேகத்தில் சென்றனர். நான் அண்டார்டிகாவில் இருப்பதாக நினைக்க ஒரே நொடிப்பொழுது போதுமே? தேவர்கள் இப்படித்தான் செய்தனர். ஒளி ரூபத்தில் செல்லவும் செய்தனர்.

இலங்கையிலிருந்து அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் வருவதற்கு ராமன் ஒரே நாள்தான் செலவிட்டான் ; அதுவும்  நடுவில் தங்கித் தங்கி வந்தான். அதனால் அனுமன் பறந்து போய் பரதன் தீக்குளிப்பதைத் தடுத்தான் இப்பொழுது கம்பனும் அனுமன் புஷ்பக விமானம் போல பறந்தான் என்கிறார்.

Another wonder is about the speed of Anjnaeya. True to his name Maruti, he flew like wind. Hanuman flew at the speed of 660 kilometres per hour according to R.P.Goldman, Professor of Sanskrit, University of California at Berkley. “ How fast do monkeys fly? It was a matter of scholarly reasoning for the commentators!”, said Prof. Goldman. Some of them worked it down to a speed of roughly 660 km an hour considering Hanuman first brought mountain to Lanka and then flew back all the way to put it back in its place. Prof. Goldman gave a lecture in Delhi in 2004.

இதை அமெரிக்க பேராசிரியர் கோல்டுமேன் R.P.Goldman, Professor of Sanskrit, University of California at Berkley கணக்குப்போட்டு அனுமன் மணிக்கு 660 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததாக டில்லியில் ஒரு சொற்பொழிவில் சொன்னார்.

Maruti Miracle: 660 Kms per hour!

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2013/06/11 › maruti-mirac…

11 Jun 2013 — True to his name Maruti, he flew like wind. Hanuman flew at the speed of 660 kilometres per hour according to R.P.Goldman, Professor of …

xxxx

ராம நாடக கீர்த்தனைகள் – அருணாசல கவிராயர்

சுந்தர காண்டம்

அனுமர் கடல் தாண்டப் பாய்தல்

விருத்தம்-1

பாய்ந்திடு சிறுபிள்ளை ஆம்பொழு தொருதினம் மாங்கனி ஆமெனவே

காய்ந்திடு கதிரெதிர் பாய்ந்தவன் நெடுகிய கடல்களும் நிலைபிசகித்

தோய்ந்திட வடவரை சாய்ந்திட விசுவசொரூபம் எடுத்தனுமான்

நாம்துதி பேசும்ம யேந்திரம்ஏறியண் ணாந்தெதிர் பாய்ந்தனனே.

நாதநாமக்கிரியை ராகம்                         ஆதிதாளம்

பல்லவி

பாய்ந்தானே அனுமான் – மயேந்திரம் ஏறிப்

பாய்ந்தானே அனுமான்.                        (பாய்ந்)

அநுபல்லவி

பாய்ந்தொரு மூவுல    கேந்தியராவணன்

மாய்ந்திடமேவுகு      லாந்தகன் எனவே              (பாய்)

சரணங்கள்

1. கேசவ ராகவ       பூசித னேஎனும்

  வாசக மானது      நேசம் விடாமல்

  மோச நிசாசரர்     நாசம் தாய்விட

  வீசியவால் எம     பாசம தாகப்              (பாய்)

2. வட்ட நெடுங்கடல்  முட்ட உரங்கிழி

  பட்டு மறைந்திடு    திட்டுகள் தெரிய

  நெட்டை நெடுங்கிரி எட்டுமறும் பொடி

  பட்டுதி ரும்பிடி     நட்டணை ஆகப்          (பாய்)

298

3. எடுத்தொரு ராகவன்     கொடுத்தகை மோதிரம்

  இடுக்கிய காதிலே        மடற்குளே யடக்கி

  மிடுக்குள ராட்சதர்       நடுத்தலை மேல் விழும்

  இடிக்கிணை யாகவே      திடுக்கென ஓடிப்           (பாய்)

4. அண்டர்கள் முனிவர்கள்  கண்டதிசயமொடு

  மண்டிய மருமலர்        கொண்டனர் பொழிய

  வீண்டல ரவி சசி        மண்டலம் இருசிறு

  குண்டலம் எனமுக       மண்டலம் அசைய          (பாய்)

5. சுமந்திடு தாயுரை        சுமந்தவன் ஈரடி

  சுமந்து விசுவரூபம்       சமைந்ததி னாலே

  அமிழ்ந்திய கடல்படு     திமிங்கில மொடுதிமி

  திமிங்கிலம் விவையினில்  மிதந்திட மேலே           (பாய்)

6. அந்தமலையில் உள      தந்தி கரடிபுலி

  நொந்து திசைதிசைபி     ரிந்த அவை வெருள

  முந்து கொடி முடிபி      ளந்து பளபளென

  உந்து இணையடிகள்உ    தைந்து கிளம்பி            (பாய்)

xxxxx

ஹனுமான் சாலீசாவின் அடுத்த ஐந்து கண்ணிகளை எடுத்துக் கொள்வோம் :

ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை ।
தீனோம் லோக ஹாங்க தே காம்பை ॥ 23 

பூத பிஶாச நிகட நஹி ஆவை ।
மஹவீர ஜப³ நாம ஸுனாவை ॥ 24 

நாஸை ரோக³ ஹரை ஸப³ பீரா ।
ஜபத நிரன்தர ஹனுமத வீரா ॥ 25 

ஸங்கட ஸே ஹனுமான சு²டா³வை ।
மன க்ரம வசன த்
யான ஜோ லாவை ॥ 26 

ஸப³ பர ராம தபஸ்வீ ராஜா ।
தினகே காஜ ஸகல தும ஸாஜா ॥ 27 

23.உங்களிடமுள்ள தேஜஸ் / ஒளி மகத்தானது.அதைத் தங்களைத் தவிர வேறு யாராலும் தாங்க முடியாது  .உங்களுடைய ஹூம் கார கர்ஜனை மூன்று உலகங்களையும் நடுங்கச் செய்கிறது

24.மஹாவீரனே ! உனது  பெயரைச் சொன்ன மாத்திரத்தில் பூதம், பேய் , பிசாசுகள் நடுங்கி ஓடுகின்றன ; உன் பெயர் சொல்லும் எவனையும் அவை நெருங்காது

25.வீர அனுமனே ! உன் பெயரை  இடைவிடாது ஜபம் செய்வோருக்கு இன்பமே எந்நாளும் துன்பமில்லை.

26.உண்மை, வாய் மை , மெய்மை என்னும் மனோ வாக் காய — திரிகரண சுத்தியுடன் , உங்களிடம்  ஈடுபட்டவர்களின்  எல்லாத் துன்பங்களையும் அகற்றி விடுவிக்கிறீர்கள்

27.பரம் பொருளான, தவசீலர்களில்  சிறந்தவரான ராமபிரானின் பணிகள் அனைத்தையும் நீங்களே நிறைவேற்றினீர்கள்.

இந்தக் கண்ணிகளில் உள்ள கருத்தின் சுருக்கம் -உடம்பிலும் புகழிலும் ஒளி வீசுபவர், பூதப் பிசாசுகளை விரட்டுபவர் ; அனு மனை நம்பினோர்க்கு துன்பமே இல்லை;; யார் தூய்மையுடன் பக்தி செலுத்துகிறாரோ அவர்களுக்கு மட்டுமே அருளுபவர்; .இதற்கெல்லாம் காரணம் நீர் ராம பிரானுக்கு ஆற்றிய சேவைதான் .

ராமனைப் புகழும் எல்லோரும் அனு மனைச் சேர்க்காமல் இருப்பதில்லை; அநுமானைப் புகழும்   எல்லோரும் ராமனைச் சேர்க்காமல் இருப்பதில்லை . இது போன்ற பிணைப்பை வேறு எங்கும் காண முடியாது.

ராமனின் புகழை முழு அளவில் யாரும் எழுத்தால் வருணிக்கவில்லை; ஏனெனில் 3000 இடங்களிலிருந்து எடுக்க வேண்டும். இன்னும் அன்னமாச்சார்யா, தியாகராஜர் கிருதிகளில் உள்ள ராமன் புகழை மட்டும் கூட யாரும் ஒப்பிட்டு ஆராயவில்லை; எந்தக் காலத்தில் ஏனைய 3000 ராமாயணங்களில்  உள்ளதை ஒப்பிட முடியும்?

–SUBHAM—

TAGS- அனுமன் பறந்த வேகம், ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள் – Part 9, ராம நாடக கீர்த்தனைகள் – அருணாசல கவிராயர் ,சுந்தர காண்டம், அனுமர் கடல் தாண்டப் பாய்தல்

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம் – 1 (Post.13,592)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,592

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

சுவாமி விவேகானந்தர்  1902–ம் ஆண்டில் (1863-1902) சமாதி ஆகிவிட்டார் ; அதற்கு கால் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் சத்ய சாய் பாபா (1926-2011) தோன்றினார் . ஆயினும் பாபா செய்யப்போகும் அற்புதங்களுக்கு சுவாமி விவேகானந்தர் , அதற்கு முன்னரே விளக்கம் கொடுத்துவிட்டார் எதைக் கண்டு பிடித்தாலும் இந்துக்கள் முன்னரே கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறீர்களே! மொபைல் போன், ஐ பேட் , இன்டர்நெட் , கம்ப்பூட்டர் , யூ ட்யூப் இவை எல்லாம் இந்து மதத்தில் உள்ளதா ? என்ற கேள்விகள் நியாயமானவைதான் . இவைகளுக்கு விளக்கம் தரும் பேசசு இதோ!

நான் முன்னர் எழுதியதுபோல நவக்கிரக ஸ்தோத்திரத்திலுள்ள விஷயங்களை நாஸா  NASA  கண்டுபிடிக்கவில்லை; நாடி ஜோதிட விஷயங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; பாபா போன்றோர் செய்யும் அற்புதங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; அஷ்டமா சித்திகளை நாஸா கண்டுபிடிக்கவில்லை; இந்து மதம் சொல்லும் வெளி உலகங்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை; கனவுகள் பற்றி இந்துக்கள் சொல்லும் செய்திகளை யாரும் கண்டுபிடிக்கவில்லை; ஒளி ரூபத்தில் நமக்கு மேலே சஞ்சரிக்கும் ககன சித்தர்களை நாஸா கண்டுபிடிக்கவில்லை (குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூட ராசப்ப கவிராயருக்குத் தெரிந்தது கூட அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகளுக்குத் தெரியாது ; கம்பன் கூட ஆகாயவாசிகள் பற்றிக் கவிதை பாடினான் . நிற்க

XXXX

THE POWERS OF THE MIND

(Delivered at Los Angeles, California, January 8, 1900)

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ்  நகரில் 1900-ஆம் ஆண்டில் மனத்தின் சக்திகள் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு.

“உலகம் முழுதும், வரலாற்றுக்காலம் முழுதும், மனதிற்கு அப்பாற்பட்ட அரிய சக்திகள் பற்றிய  நம்பிக்கை இருந்து வருகிறது வழக்கத்திற்கு மாறான அபூர்வ சம்பவங்கள் பற்றிக் கேள்விப்படுகிறோம்; நம்மில் பலருக்கு நேரிலும் அத்தகைய அனுபவங்கள் கிடைத்தன. என்னுடைய சொந்த அனுபவத்தில் பார்த்த சில விஷயங்களைச்  சொல்லி  இந்த தலைப்பு பற்றிப் பேசுகிறேன்

மனதில் எதை நினைத்துக்கொண்டு போனாலும் உடனே அதைக் கண்டுபிடித்து விடைதரும் ஆள் பற்றி ஒருமுறை கேள்விப்பட்டேன். .எனக்கும் ஆர்வம் மேலிடவே சில நண்பர்களை அழைத்துக்கொண்டு போனேன் எங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விஷயங்கள் பற்றிக் கேட்கத் தோன்றியது; ஆயினும் தவறுகள் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அதை எழுதி அவரவர் சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டோம் ; எங்களைப் பார்த்தமாத்திரத்தில் அந்த ஆசாமி எங்கள் கேள்விகள் என்னவென்று கூறி அதற்குப் பதிலும் தந்தார் .

பின்னர் அவர் ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ எழுதி, அதை மடித்து , இதை பிரித்துப் பார்க்காமல் உன் பைக்குள் வைத்துக் கொள் ; நான் கேட்கும்போது அதைக்கொடு என்றார்; பின்னர் எந்த மொழியானாலும் சரி; ஒரு வாக்கியத்தை நினைத்துக்கொள் என்றார் ;  நாங்கள் பார்க்கப்போன நபருக்கு சம்ஸ்க்ருத வாசனையே கிடையாது என்பது எனக்குத் தெரியும்; ஆகையால் ஸம்ஸ்க்ருத்த்தில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்துக் கொண்டேன்.

இப்பொழுது நான் முன்னர் கொடுத்த தாளை பைக்குள்ளிலிருந்து எடுத்துக் படி என்றார் ; நான் நினைத்த சம்ஸ்க்ருத வாக்கியம் அதில் இருந்தது !அது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எழுதப்பட்டது; என்னுடன் வந்த வேறு ஒருவர் அராபிய  மொழியில் குரான் வாசகத்தை எழுதி வைத்திருந்தார் ; அதையும் அவர் முன் கூட்டியே எழுதிக்கொடுத்து இருந்தார்

எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் டாக்டர்; அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவ விஷயத்தைநினைத்து இருந்தார் ; அதையும் அந்த ஆள் கண்டுபிடித்து முன்கூட்டியே எழுதி இருந்தார்

எனக்கு மனதில் திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது; இந்த ஆள் நம்மை மயக்கி ஏமாற்றி இருப்பாரோ என்று நினைத்து, பல நாட்களுக்குப் பின்னர்,  இன்னும் ஒரு முறை அவரைப் பார்க்கப்போனேன் இந்த தடவை வேறு சில நண்பர்களை அழைத்துச் சென்றேன்; முன்னர் போலவே அவர் அற்புதங்களை செய்தார். அற்புதம்! ஒரு பிழையும் இல்லை..

ஹைதராபாத்தில் ஒரு சம்பவம்

இந்தியாவில் ஹைதராபாத்தில் நான் இருந்தபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது .ஒரு பிராமணன், யாரும் அறியாத இடத்திலிருந்து மாயமாகப் பொருள்களைக் கொண்டுவருவார் என்பதைக் கேட்டு அங்கே போனேன். அவர் வியாபாரம் செய்துவரும் வணிகர்; சமுதாயத்தில் மதிக்கப்பட்டவர் ; உங்கள் அற்புதங்களைக் காண வந்தேன் என்று சொன்னவுடன் தனக்கு உடம்பு சரியில்லை; காய்ச்சல் ; நீங்கள் என் தலையில் கையை வையுங்கள்; என் ஜுரம் அகன்றுவிடும்  என்றார் 

(நோயாளிகளை சாது சந்யாசிகள் தொட்டு ஆசிர்வதித்தால் நோய் போய்விடும் என்ற நம்பிக்கை இந்திய முழுதும் உண்டு; 1400 ஆண்டுகளுக்கு முன்னர், கூன் பாண்டியனுக்கு விபூதி கொடுத்த சம்பந்தர் அவனது வயிற்று நோயைப் போக்கியதோடு அவனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கினார்; அப்பருக்கு , அவருடைய சகோதரி திலகவதி, விபூதி கொடுத்து சூலை நோயை  நீக்கினார் )

நான் தொட்டவுடன் அவருக்கு உடம்பு குணமாகிவிட்டது ; நீங்கள் ப்ராமிஸ் செய்தபடி உங்கள் அற்புதத்தை இப்பொழுது காட்டுங்கள் என்றேன். அவர் வெறும் துண்டு மட்டுமே அணிந்து இருந்தார்; எல்லா உடைகளையும் தள்ளி வைத்தார்; மிகவும் குளிராக இருந் ததால்  நானே அவர் மீது ஒரு கம்பளத்தைக் போர்த்தினேன் நாங்கள் 25 பேர் அங்கே இருந்தோம்; நீங்கள் உங்களுக்கு வேண்டிய எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் என்று அவர் சொன்னவுடன் நாங்கள் அங்கு விளையாத திராட்சை, ஆரஞ்சு பழவகைககளை எழுதினோம்; அவர் ஒரு மூலையில் உடகார்ந்து இருந்தார்.அந்தக் காகித துண்டுகளை அவரிடம் கொடுத்தோம்; அவர் போர்வையை விலக்கினார் ; நாங்கள் எழுதிய பழங்கள் அங்கே இருந்தன!

 அவரே மாயமாக பெரிய ரோஜா மலர் பூங்கொத்துக்காளைக் கொண்டுவந்தார் ; அவை அப்பொழுதுதான் பறித்தவை; கசங்க வில்லை; பனித்துளிகளும் இருந்தன இதை எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது எல்லாம் கை அசைவில் வரும் என்று பதில் கொடுத்தார்.

கை அசைவில் அவ்வளவு பொருட்களைக் கொண்டுவரமுடியாது; பின்னர் அவை எங்கிருந்து வந்தன?  இது மட்டுமல்ல; இது போல பல விஷயங்களை நான் பார்த்து இருக்கிறேன் இதுபோல எல்லா நாடுகளிலும் ஆட்கள் உள்ளனர். இந்த நாட்டிலும் (அமெரிக்கா) நீங்கள் நிறைய பார்க்கிறீர்கள் ஆனால் நிறைய மோசடிப் பேர்வழிகளும் இருக்கிறார்கள்; அவர்கள் உண்மைச் சம்பவத்தை காப்பி அடிக்கிறார்கள்.ஆனால் அப்படி மோசடி செய்ய அவர்களுக்கும் உண்மையான சம்பவம் தேவை; அப்போதுதான் அதைக் காப்பி அடிக்கலாம்; நடவாத ஒன்றிலிருந்து எதையும் செய்ய முடியாது; ஆதாரம் இருந்தால் அதைவைத்து இமிடேஷன் செய்யலாம்.”

xxxx

MY COMMENTS

( நான் பார்த்த அதிசயம் : சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் எங்கள் குடும்பத்துடன், பத்து கார்களில் ஆட்கள் புடை சூழ மதுரையிலிருந்து புட்டப்பார்த்திக்குச் சென்று பிரசாந்தி நிலைய பஜனைகளில் கலந்து கொண்டோம்; அப்போதெல்லாம் பெரும் கூட்டம் கிடையாது; பெண்கள் மட்டும் தங்குவதற்கு ஷெட்டுகள் இருந்தன. நாங்கள் எல்லோரும் கார்களிலும் அதற்கு அருகிலும் படுத்துக்கொண்டோம் ; மதுரையிலிருந்து எங்களுடன் வந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே பாபாவின் பக்தர்கள் ; நாங்களோ புது முகங்கள்; ஆயினும் மறுநாள் பாபா வலம் வருகையில் முதல் முதலில்  என தாய் தந்தையரை அழைத்து பல விஷயங்களை சொன்னார்; கையை அசைத்து விபூதி வரவழைத்து எங்கள் எல்லோருக்கும் கொடுத்தார்; ஒரு (பாபா) போட்டோவையும் உண்டாக்கி அதை என் தந்தையிடம் ( V.SANTANAM, NEWS EDITOR, DINAMANI, MADURAI) கொடுத்தார்; அது அவரது பர்ஸில் 1998-ல் அவர் இறக்கும் வரை இருந்தது; நான் 198-7ல் லண்டனுக்கு வந்துவிட்டதால் போட்டோ என்ன ஆனது என்பது தெரியாது; ஒரு வேளை என் தாயாரிடம் சென்றிருக்கலாம்; அது மறைந்து போகவில்லை என்பதற்காக இவ்வளவு விஸ்தாரமாக எழுதினேன் ; என் கன்னத்தில் ஒரு தட்டு தட்டி பரீட்சையில் பாஸ் என்றார்; பள்ளி மாணவனுக்கு அதை வீட வேறு என்ன வேண்டும்; அதற்குப் பின்னர் 4,5 முறை புட்டபர்த்திக்குச் சென்றபொழுது நிறைய பேருக்கு கை அசைவில் விபூதியை வரவழைத்துக் கொடுத்ததையும் பார்த்து இருக்கிறேன் )

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் இதற்கான விளக்கத்தையும் சுவாமி விவேகானந்தர் கொடுக்கிறார் ; அதையும் காண்போம் .

தொடரும் ……………………………….

TAGS- பாபா செய்த, அற்புதங்கள் , மனத்தின் சக்தி, விவேகானந்தர் விளக்கம், விஞ்ஞானிகள் அறியாத மனம் ,