Rare Darshan of Golden Annapurani in Kasi Temple

Maa Annapurna idol adorned in gold at Kashi Vishwanath Temple complex

Story by HT Correspondent, VARANASI

 • 6h • 

The Silver coated idol of Goddess Maa Annapurna, housed in a temple located in Ishana Kona (the north-east corner ) of the Shri Kashi Vishwanath Temple premises, has been coated with gold, the temple administration said in a statement on Saturday.

A new chapter in the splendour and grandeur of the ancient idol began in 2025, when silver plated stone idol and the temple it resides in were adorned with gold from top to base, according to the Shri Kashi Vishwanath Temple administration.

The distribution of a symbolic “treasure trove” (Kazana)  to devotees from the treasury of the Maa Annapurna Temple began on Dhanteras (October 18) and will continue until October 22, the day of Annakut. The prasad, given as part of this tradition, consists of a coin and puffed rice, and holds special significance for devotees who visit the temple and seek the blessings of the Goddess.

The original idol of Goddess Maa Annanpurna was reinstalled in the Ishan Kon of the Kashi Vishwanath Temple in 2021, following traditional rituals. The chief minister of Uttar Pradesh, Yogi Adityanath, presided over the reinstallation ceremony. Alongside the original golden idol of Maa Annapurna, a silver-plated stone idol was also installed in the temple. This Silver plated idol of Maa Annapurna has now been coated with gold.

The original idol was stolen during the colonial period by idol smugglers and remained preserved in a museum in Canada for approximately 108 years. Its identity was confirmed through the joint efforts of Indian and Canadian universities. Following diplomatic and cultural efforts spearheaded by Prime Minister Narendra Modi, the idol was repatriated to India in November 2021 and reinstated in the temple.

–subham—

Tags- Kasi, Varanasi, Golden , Annapurani, Diwali Darshan,Annakut, Kazana

Bhagavad Gita Quote and Egyptian God in Akananuru! (Post No.15,103)- Part 25

Ancient Tamil Encyclopaedia- Part 25; One Thousand Interesting Facts! -Part 25

Written by London Swaminathan

Post No. 15,103

Date uploaded in London –  19 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Akananuru wonders continue………………….

In Akanaauuru verse 101 Maamuular (MM) gives four interesting details.

1.Bhagavad Gita Quotation from BG 6-40

2.Egyptian God Ra’s Boat Journey

3.Tahr of Nilgris

4. Anthill soil as medicine

***

148

“for never does anyone who does good tread the path of woe”

The lady of the poem quotes an old Tamil proverb:

These words are said by the lady of the house, and she wonders whether this old proverb will go wrong.

That proverb is in Bhagavad Gita. So MM must have studied thoroughly.

நன்றுசெய் மருங்கில் தீதுஇல் என்னும்

தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-

श्रीभगवानुवाच |
पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते |
 हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति || 6-40||

O Partha, there is certainly no ruin for him here or hereafter. For no one engaged in good meets with a deplorable end, my friend!

Another translation

The Supreme Lord said: O Partha, one who engages on the spiritual path does not meet with destruction either in this world or the world to come. My dear friend, for never does anyone who does good tread the path of woe. 6-40

***

149

Egyptian Barque

No Sangam Tamil poet except MM described Sun as a boat in the Sky. This is an Egyptian description. The supreme God in Egypt was Ra, the Sun God. He travels on a boat in the sky!

SUN BOAT IN THE SKY

வானத்தில் படகில் சூரியன்

அகநானூறு பாடல்: 101

அம்ம வாழி, தோழி! இம்மை

நன்றுசெய் மருங்கில் தீதுஇல் என்னும்

தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-

தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த

சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர்

வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்

தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,

நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,

அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,

கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,

இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்

புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர்,

தண்கார் ஆலியின், தாவன உதிரும்,

பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,

முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே!

****

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

Sun that us travelling in the sky like a boat iscorching ,says MM

150

The Tamil roobers in the desrt are called Mazavars. MM says that their hair locj is like the horn of a sheep. And they stuff their mouth with sail from the ant hill. In places like Sankarankoil in Tamil Nadu the soil from the anthill is sued as medicine. Anthills are called Snakehills in Tamil.

MM in most of his verses  sing about Mazavars staling cows from enemies and sharing them with their companions. Recovering cows is found in many hymns of the Rig Veda as well. It is used a s a symbol to convey many messages.

Rig Veda calls Sun as a boat or ship in the sky.

Moreover Egyptian name Ra is like Sanskrit rayi. English (sun) RAY is also derived from Sanskrit

xxxx

RV.1-46-7:- Hymns are sea; Come and lead and  take us like a ship. This addressed to Asvini Devas.

Here is description of Sun God Ra in the Book of Death in Egypt; Hindus say that Raku/Ketu devour sun like snakes (Eclipses)

Ra’s Daily Journey Across the Sky: Battles and Blessings

As Ra rises, he shines brightly across the sky, accompanied by the Ennead (group of nine gods). When he emerges from the sacred place, the eastern horizon trembles at the sound of Nut’s voice, sanctifying Ra’s paths. He moves in his sacred boat, enjoying the north wind while continuing his daily cycle. The great deities tremble at his voice as he commands the cosmos.

***

Nilgris TAHR

Thakar in the above verse is sheep. In Nilgris the mountain goats are called Tahr.  During Sangam days all sheep and goats must have been called Tahr.

-to b continued…………………….

Tags- Tahr, Ra, Sun God, Egypt, Bhagavad Gita Quote , Egyptian God Ra, in Akananuru, Ancient Tamil Encyclopaedia- Part 25; One Thousand Interesting Facts! -Part 25

நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகு தான் துறவி’:

‘நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகு தான் துறவி’: தேசபக்தியை முன்னிறுத்திய அபிநவ வித்யாதீர்த்தர்

 நமது சிறப்பு நிருபர் DINAMALAR 

: அக் 19, 2025 01:08 AM

நம் தாய் திருநாட்டில், எண்ணற்ற துறவியரும் மனதால் உயர்ந்த மகான்களும் வாழ்ந்து, வழிவழியாக நாம் தர்மத்தை கடைப்பிடிக்க காரணமாக இருந்தனர். அப்படிப்பட்ட துறவியரில் மிகவும் முக்கியமானவர் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர். என்றென்றும் மக்களுக்கு வழிகாட்டுவதற்காக அவர் நான்கு பீடங்களை உருவாக்கினார். அவற்றில், தென் பாரத மக்களுக்காக, சிருங்கேரி சாரதா பீடத்தை தோற்றுவித்தார். சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக, 1954 முதல் 1989 வரை அருள்பாலித்தவர், ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள். தீபாவளி திருநாளன்று பிறந்த அவருடைய 108வது ஜெயந்தி விழா, நாளை சிருங்கேரியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பொன்னான தருணத்தில், தேசபக்தியின் உன்னதமான உதாரணமான அவரைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜீவன் முக்தி கடந்த 1917ல் பெங்களூரில், வெங்கடலக்ஷ்மி அம்மாள் – -ராமா ஷாஸ்திரி தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ரீநிவாசன். அவருக்கு, சிருங்கேரியில் உப நயனம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கேயே தங்கி படிக்க விருப்பம் தெரிவித்த ஸ்ரீநிவாசனின் கோரிக்கையை, அப்போது பீடாதிபதியாக அருள்பாலித்த ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாசுவாமிகள் ஏற்றுக்கொண்டார்.

பாடங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற ஸ்ரீநிவாசன், தன் 13 வயதிலேயே, சிருங்கேரி புண்ய தலத்தில், துறவறம் ஏற்றார்.

துறவறம் பெற்ற உடனேயே, யோகம் பயில ஆரம்பித்த அவர், அஷ்டாங்க யோகத்தின்படி நிலைகளை வேகமாக கடந்து, அதன் உச்ச நிலையான நிர்விகல்ப ஸமாதியில் நிலைத்து, தமது 18 வயதுக்கு முன்னரே ஜீவன் முக்தரானார்.

பின்னர், தமது குருவின் வழிக்காட்டுதல்படி மீமாம்சம், தர்க்கம், வேதாந்தம் உள்ளிட்ட சாஸ்திரங்களை கற்று பாண்டித்தியம் அடைந்தார்.

தர்ம பிரசாரம் சுதந்திர போராட்டம் வலுப்பெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியில் நம் நாட்டின் கலாசாரத்தை அடியோடு அழிப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பொருட்டு, கல்வித் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர். குறிப்பாக, ஸமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும், அம்மொழியை மக்கள் கைவிடுவதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதன் விளைவாக, தர்ம ரீதியாகவும் பெறும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆங்கிலேயரால் சுரண்டி துாக்கியெறிந்த வெற்று பாத்திரமாக நம் தாய் நாடு மாறியிருந்தது. சுதந்திரத்திற்கு பின், 1954ல் சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் பொறுப்பேற்றார்.

அப்போது, கலாசார ரீதியாகவும் தர்ம ரீதியாகவும் சுரண்டப்பட்டு இருந்த தாய் நாட்டில் மீண்டும் தர்மத்தை நிலைநிறுத்த ஸங்கல்பம் செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

ஆதிசங்கரர் போலவே பாரதம் முழுதும் மூன்று முறை யாத்திரை மேற்கொண்டு, மக்களிடையே தர்ம பிரசாரம் செய்தார். தமது முதல் விஜய யாத்திரையை, தென் மாநிலங்களில், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மேற்கொண்டார்.

அயராது, தன் நலம் கருதாது கிராமம் கிராமமாக சென்று தர்ம பிரசாரம் செய்த தோடு, நலிந்த வேத பாடசாலைகளை மீட்டெடுத்து, புதிய பாடசாலைகளையும் உருவாக்கினார்.

அவரது காலத்தில், சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், சிருங்கேரியை அணுகுவது மிகவும் கடினமாக இருந்தது. பாரதம் முழுதும் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் சில கிளை மடங்கள் மட்டுமே இருந்தன. அதனால், பாரதமெங்கும் மக்கள் பயன்பெறும் வகையில், பல புதிய கிளை மடங்களை உருவாக்கினார்.

குறிப்பாக, சென்னையில் மட்டுமே நான்கு கிளை மடங்களும்; கோயம்புத்துார், மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆலயத் தோடு கூடிய கிளை மடங்களும் ஏற்படுத்தினார். இவை, தர்மம் மற்றும் பாரதத்தின் பண்பாட்டை நிலைநிறுத்த இன்றும் பணியாற்றி வருகின்றன.

தமது முதல் விஜய யாத்திரை முடிந்த இரண்டு ஆண்டுகளிலேயே, இரண்டாவது விஜய யாத்திரையை மேற்கொண்டார். வட மாநிலம், தென் மாநிலம் என, முழு பாரதத்திலும் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து தர்ம பிரசாரம் செய்தார்.

அந்த யாத்திரையின் போது, 1967ல், அண்டை நாடான நேபாள மன்னரின் அழைப்பின் பேரில் அந்நாட்டில் தங்கி தர்ம பிரசாரம் செய்தார்.

ஜகத்குரு ஆதிசங்கரருக்கு பின், நேபாளத்தில் தர்ம பிரசாரம் செய்த முதல் ஆம்னாய பீடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸமஸ்கிருத மொழியை மீண்டும் செழிக்கச் செய்ய, ‘சுரசரஸ்வதி சபா’ என்ற அமைப்பை நிறுவினார். அதில், அனைவரும் படிக்க ஏதுவாக, அஞ்சல் வழியில் சமஸ்கிருத கல்வி திட்டம் அறிமுகமானது. இன்றைய அஞ்சல்வழி கல்விக்கு அது முன்னோடி!

தர்ம கல்விக்காக, ‘சங்கர கிருபா’ என்ற மாத இதழை ஆரம்பித்தார். இந்த இதழ், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவருகிறது. பின்னர், ‘தத்வாலோகா’ என்ற ஆங்கில இதழையும் துவக்கினார்.

தர்ம பிரசாரத்திற்கு இவ்வாறு பாடுபட்ட ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், ஆதிசங்கரர் நிறுவிய பீடங்களை வலுப்படுத்தவும் பணியாற்றினார்.

ஆதிசங்கரருக்கு பின், அவர் உருவாக்கிய நான்கு பீடங்களின் பீடாதிபதிகள், முதல் முறையாக சந்திக்கும், ‘சதுராம்னாய சம்மேளனம்’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

தேசிய ஒருமைப்பாடு, பண்பாடு மற்றும் நம் கலாசாரத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த வைபவம் சிங்கேரியில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி புண்ணிய தினத்தில், 1979 மே மாதம், முதல் நாளில் நடைபெற்றது.

இந்த மாநாட்டை காண பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், முக்கிய பிரமுகர்களும் கூடியிருந்தனர்.

தேசபக்தர் தேசப்பணியே தெய்வீக பணி என கருதி, வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள். ‘யாராவது உன்னிடம், நீ யார் என்று கேட்டால், முதலில் நான் ஒரு இந்தியன் என்ற நினைவுதான் வர வேண்டும், பின்னரே மற்ற விஷயங்கள் நினைவிற்கு வர வேண்டும்’ என்று எப்போதும் அறிவுறுத்துவார்.

அப்படியே நடந்தும் கொள்வார் என்பதற்கு, ஜாகீர் ஒழிப்பு சட்டம் ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

சிருங்கேரி அமைந்துள்ள கர் நாடகா மாநிலத்தில், இங்கிருந்த ஜமீன்தார் முறையை போல் ஜாகீர் முறை இருந்து வந்தது. அதை ஒழிப்பதற்காக, கர்நாடகா நில சீர்திருத்த சட்டம் 1961ல் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, மடங்கள் மற்றும் கோவில்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாகீர் நிலங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்கு, மாநிலம் எங்கும் எதிர்ப்பு நிலவியது. பலர், நிலங்களை அரசிடம் ஒப்படைக்க மறுத்தனர்.

ஜகத்குருவிடம் இது சம்பந்தமாக பேசி, மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைய வருவாய் துறை அமைச்சர் கடிலால் மஞ்சப்பா, சிருங்கேரிக்கு வந்தார்.

ஜகத்குருவிடம் தயங்கி தயங்கி பேச்சை ஆரம்பித்தார். அப்போது, ஜகத்குரு, ‘நாம் அனைவரும் அரசிற்கு கட்டுப்பட்டவர்கள். நான் முதலில் பாரத நாட்டின் பிரஜை, அதற்கு பிறகுதான் துறவி மற்றும் பீடாதிபதி என்று எடுத்துரைத்து, நிலத்தை வைத்துக்கொண்டு நான் நாலு பேருக்கு நல்லது செய்வேன். அரசும் அதையேதான் செய்யப் போகிறது.

‘நல்லதை யார் செய்தால் என்ன? அதனால் நிலத்தை தர நான் தயாராக இருக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தார்.

கடும் எதிர்ப்பை எதிர்பார்த்த அமைச்சர் மஞ்சப்பாவிற்கு, ஜகத்குருவின் பதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னாளில், கர்நாடக முதல்வராக மஞ்சப்பா சிலகாலம் பொறுப்பில் இருந்தார்.

ஒருமுறை ஜகத்குருவை தரிசித்த அனுபவத்தால் ஈர்க்கப்பட்ட மஞ்சப்பா, பதவியில் இருக்கும் போதும், அதற்கு பிறகும் ஜகத்குருவை நாடி வருவார்.

இதைப்போல பல ஜனாதிபதிகள், பிரதமர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் ஜகத்குருவின் வழிகாட்டுதலை பெற்று பயனடைந்தனர்.

மைசூரு ராஜ்யத்தின் மன்னராக இருந்த ஜெய சாமராஜ உடையார், பின்னாளில் தமிழகத்தின் கவர்னராகவும் இருந்தார். அவர், ஜகத்குருவிற்கு கடிதங்கள் வாயிலாக தமிழகத்தின் அரசியல் சூழல் பற்றி தெரிவித்து, வழிகாட்டுதல் கோரினார்.

இன்றும் அந்த கடிதங்கள், சிருங்கேரியில் ஆவணப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேப்போல் பல தேச தலைவர்களும், ஜகத்குருவின் வழிகாட்டுதலைப் பெற்று வந்தனர்.

இப்படி தன் தவத்தாலும், ஞானத்தாலும், பாண்டித்தியத்தாலும் சிறந்து அருள்பாலித்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை, நாளை அவருடைய ஜெயந்தி நாளன்று நினைவுகூர்ந்து, அவர் வாழ்வில் இருந்து பயன்பெற, அவரைப் பற்றி மேலும் படித்து அறிந்து கொள்வோம்.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளை பற்றிய புத்தகங்களை, சென்னை ஸ்ரீ வித்யாதீர்த்தா பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது.

– இரா.கிருஷ்ணன் –

—subham—

Tags- Dinamalar, Sringeri  Acharya, Sri Abinava Teertha Bharati Swamigal

Sri Lankan woman’s Tirukkural Calendar in Year 1915

Sri Lankan woman’s Tirukkural Calendar in Year 1915

-subham-

tags-  Sri Lankan woman’s, Tirukkural Calendar , Year 1915

காசியில் தங்க அன்னபூரணியின் அற்புத தரிசனம்! (Post No.15,102)

Written by London Swaminathan

Post No. 15,102

Date uploaded in London –  19 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காசியில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தங்கத்தினால் ஆன அன்னபூரணி  விக்கிரகத்தை தரிசனம் செய்யலாம். ஐந்து நாட்களுக்கு மட்டுமே இந்த தரிசனம் கிடைக்கும். ஏனைய நாட்களில் கிட்டத்தட்ட ஆண்டு முழுதும் பாதுகாப்பு கருதி அன்னபூரணி கோவில் பூட்டிவைக்கப்படுகிறது .

தங்கத்தினாலான அன்ப்பூரணிக்கு அருகில் பூமிதேவி, லட்சுமி தங்க விக்கிரகங்களும் வெள்ளியினால் ஆன சிவன் விக்கிரகமும் உள்ளன

அதிகாலை ஐந்து மணிக்குத் திறக்கப்படும் இந்தக் கோவில் ஐந்து நாட்களுக்கு இரவு பத்து மணி வரை திறந்திருக்கும் அன்னபூரணி  என்பவள் மக்கள் எல்லோருக்கும் உணவினை வாரி வழங்குபவள்.  சிவனே ஒரு முறை அன்னபூரணியிடம் உணவுக்காக பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது காசியில் வரும் எவரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்பது அன்னபூரணியின் பிரதிக்ஞை இப்போதும் தினமும் அன்னதான ட்ரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்ககப்படுகிறது.

தீபாவளியின் முதல் நாள் அன்று கோவிலில் உள்ள மஹந்த் என்னும் அர்ச்சககர் எல்லோருக்கும் கோவிலில் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட காசுகளை வழங்குகிறார் இது கஜானா எனப்படும் காசுடன் பொரியும் கொடுக்கப்படுகிறது.

ஐந்தாவது நாளில் அன்னக்கூட வைபவமும் நடக்கிறது அன்று உணவுக்குவியலை உண்டாக்குவார்கள் .இனிப்புகளும் தின்பண்டங்களும் மலை  போல குவிந்து  இருக்கும்

மிகவும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் பின்னால் இந்தக் கோவில் அமைந்துள்ளது. முதல் மாடியில் உள்ள அன்னபூரணி விக்ரகத்தைக் காண தற்காலிக படிகள் அமைக்கப்பட்டுள்ளன .

சுவர்ண  அன்னபூரணி தாமரையில் அமர்ந்து இருக்கிறாள் ; சிவன் பிச்சைப்பாத்திரத்துடன் வெள்ளி விக்கிரகமாக நிற்கிறார் அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவி (லெட்சுமி), பூதேவியும் நிற்கின்றனர்.

காசியில் திவோதாசன் என்ற மன்னன் ஆண்ட காலத்தில் பஞ்சம் ஏற்பட்டதாகவும் அப்போது தனஞ்செயன் என்பவன் செய்த தவத்துக்கு மெச்சி அன்னை தங்க வடிவில் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது. அவரங்க சீப் இடித்த கோவிலை சுமார் 200  ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் கட்டியபோது கூட அன்னபூரணி கோவில் அப்படியே இருந்தது.

4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் காசி விஸ்வநாதர் கோவிலின் ஈசான மூலையில் — வடகிழக்கில் — மூல விக்ரகம் மீண்டும் நிறுவப்பட்டது. உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதற்கு ஏற்பாடு செய்தார். மூல விக்ரகம் திருடப்பட்டு கனடாவில் ஒரு மியூஸியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 108 ஆண்டுகளுக்கு கனடாவில் இருந்த தங்க விக்கிரகத்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவந்தது 2021- ஆம் ஆண்டில் தான்.

மூல தங்க விக்கிரகத்துக்குப் பக்கத்தில் கல்லில் வெள்ளி முலாம் பூசப்பட்ட அன்னபூரணியும் இருக்கிறாள் அதன் மீதும் பின்னர் தங்க முலாம் பூசப்பட்டது.

கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் காவலுடன் சி சி டி  வி காமெராக்களும் நிறுவப்பட்டுள்ளன

தந்தேரா என்னும் தீபாவளி முதல் நாள் தன்வந்திரி  வழிபாட்டுக்கும் தன லெட்சுமி வழிபாட்டுக்கும் உரியது

ஆயிரக் கணக்கான மக்கள் தங்க விக்கிரககங்களைத் தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர் . பல அமைப்புகள்  இலவசமாக உணவினையும் வழங்கி வருகின்றனர் .

வருடம் முழுதும் இந்த தங்க விக்கிரகங்கள் ரிசர்வ் பாங்கு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படுகின்றன இவற்றின் எடை, விலை மதிப்பு ஆகியன ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது . 

–subham—

Tags காசி, தங்க அன்னபூரணி, தரிசனம் ,

கஷ்டமான தருணங்களைக் கடக்க வைக்கும் ஜப்பானியப் பண்பாடு கமான்! (GAMAN) Post .15,101

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,101

Date uploaded in London –   19 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 28-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

MOTIVATION 

கஷ்டமான தருணங்களைக் கடக்க வைக்கும் ஜப்பானியப் பண்பாடு கமான்!(GAMAN)

ச. நாகராஜன்

அன்றாட வாழ்க்கையே உலகமெங்கும் வேகமான வாழ்க்கையாக மாறி வருகிறது. போட்டி மிகுந்த வாழ்க்கையில் டென்ஷன், டென்ஷன் டென்ஷன் தான்!

, நிதானத்தை இழக்க வைக்கும் தருணங்கள் எத்தனை, எத்தனை!

இதைப் போக்க உதவும் ஒரு ஜப்பானியப் பண்பாடு தான் கமான் ! (GAMAN)

 இதை ஜப்பானில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் குழந்தை முதலே அனைவருக்கும் கற்பிக்கின்றனர்.

கமான் என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பது சற்று கஷ்டம் தான்! இதற்கு பொறுமை, விடாமுயற்சி, நிதானத்தை இழக்காமல் கட்டுப்பாடுடன் இருத்தல் ஆகிய அனைத்தையும் அர்த்தமாகச் சொல்லலாம்.

 கஷ்டமான தருணங்களில் யார் மீதாவது பழியைப் போடாதே. புகார் செய்யாதே என்பது ஜப்பானியர் ஒவ்வொருவரின் அடித்தளமான பண்பாடாக ஆகி இருப்பதன் காரணம் – கமான் தான்!

 உள்ளார்ந்த வலிமை,  ஏமாற்றம், மனச்சோர்வு ஆகியவற்றை உதறித் தள்ள வைக்கும் குணமே கமான்!

 சவாலான சந்தர்ப்பங்களில் தன் நிலையை இழக்காமல் புன்னகையோடு அதை எதிர் கொள்வது தான் கமான்!

 எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம்.

ஜப்பானிய தலை நகரமான டோக்கியோவில் இரண்டு கோடி பேர்கள் அன்றாடம் அங்குமிங்கும் செல்ல வேண்டி இருக்கிறது. இவர்கள் தங்கள் போக்குவரத்திற்கு நம்புவது புகைவண்டிகளைத் தான்!

ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நெருக்கமாக இருந்து புகைவண்டி வந்தவுடன் இறங்குபவர்களுக்கு வழிவிட்டு கதவு மூடுவதற்குள் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளாமல் உள்ளே ஏற வேண்டும். உள்ளே கம்பார்ட்மெண்டில் நகர்வது கூட முடியாது. அப்படி ஒரு கூட்டம் இருக்கும்.ஆனால் ஒரு சண்டையைக் கூட இங்கு பார்க்க முடியாது.

 இது புகைவண்டிகளில் மட்டுமல்ல; எங்கெல்லாம் பிரம்மாண்டமான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் கமான் தான் அனைவருக்கும் உதவும்.

 ஃபுகுஷிமாவில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. தொடர்ந்து வந்தது சுனாமி.

2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி டோஹோகு என்ற நகர்ப் பகுதியில் ஏற்பட்ட இந்த கோரமான பூகம்பத்தை ஜப்பான் கமான் என்ற குணத்தைக் காண்பித்து சமாளித்தது.

 டோக்கியோ சோபியா பல்கலைக்கழகத்தில் மாந்தர் பண்பாட்டியல் பேராசிரியராக இருக்கும் டேவி ஸ்லேடர் (David Slater, professor of anthropology and director of the Institute of Comparative Culture at Tokyo’s Sophia University) கமானைப் பற்றிக் கூறுகையில் ‘நம்முடைய கட்டுப்பாட்டையும் மீறி நடக்கும் செயல்களை எதிர்கொள்ளும் உத்தியே கமான்’ என்கிறார்.

 ஒவ்வொருவரும் தனக்குள்ளேயே வளர்த்துக் கொள்ளும் இந்தப் பண்பாடு எந்த மோசமான சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல், அடுத்தவர் மீது புகார் சொல்லாமல், நிதானத்துடன் அதை எதிர் கொள்ள வைக்கும்.

இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டு பொருளாதாரத்தின் அடிநிலையை எட்டிய ஜப்பானை மேலே வரவைத்தது அனைத்து ஜப்பானியரும் தங்கள் கமானைக் காண்பித்தது தான்!

.இந்தப் பண்பாட்டைத் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள். குறிப்பாகப் பெண்களுக்கு இன்னும் அதிகமாகச் சொல்லித் தருகிறார்கள்! எமோஷனல் ரெகுலேஷன் எனப்படும் இந்த உணர்ச்சிக் கட்டுப்பாடு நீண்ட கால மனக்கட்டுப்பாட்டைத் தருகிறது. வாழ்க்கையில் வெற்றியைத் தருகிறது.

கமான் சுரு – இது ஜப்பானியரின் வேத மொழி. ‘நான் பொறுத்துக் கொள்வேன்’ என்பது தான் இதன் அர்த்தம்.

பிபிசி இதைப் பற்றி பெரிய நிகழ்ச்சியையே நடத்தி விட்டது.

ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டுக்காரர்கள் வியப்பதெல்லாம் இந்த கமான் பண்பாட்டைப் பற்றித் தான்!

உலகப் போரில் அடிபட்ட ஜப்பான் தொழில் முன்னேற்றத்தில் உலகின் வழிகாட்டியாக ஆனது அதன் சிறப்பான இந்தப் பண்பாட்டினால் தான்.

 ஆக, உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவரும் உடனடியாகப் பழகி அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டிய ஒரு பண்பாடு – கமான்!

 கமான் சுரு!

***

Ancient Tamil Encyclopaedia- Part 24; One Thousand Interesting Facts! -Part 24 (Post No.15,100)

Written by London Swaminathan

Post No. 15,100

Date uploaded in London –  18 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Tamil Identity, Tamil Ritual Suicide, Tamil Front

Part Twenty Four; Akananuru Wonders continued………..

142 தமிழ்கெழு மூவர்

In Akam verse 15, Maamoolanaar (MM) says that peacocks eat bitter gourd and bears eat Iluppai tree flowers and pods.

He says Paazi  town of Chieftain Nannan is well guarded. Though my house had such a security, she ran away with that man.

Kosars of Tulu country had the virtue of hospitality; let my daughter’s place also should have that hospitality.

So, we got two historical points about Tulu country and Nannan’s Paazi.

***

143

In Akam verse 31, MM gives more Tamil History. He gives an epithet to Chera Choza, Pandya kings as Tamil Kezu Moovar. All the three great kings of Tamil Nadu were brought within one Tamil bracket. It shows that though they fought among themselves frequently, Tamil culture united them. TAMIL IS THEIR IDENTITY.

Tamils are united on the basis of Three Things only:

1.When Hindu rituals are done; we saw that RAJASUYA YAJNAM UNITED THREE TAMIL KINGS

2. Second occasion is when others invade Tamil Lands. Kaaravelan of Odisah clearly say that he broke the Dramila/Tamil Sanghtan/Front. Asoka also mentioned the three kingdoms, the earliest historical reference.

3.Anything to do with Tamil language also united the Three Great Kings- Chera Choza, Pandyan Kings. For instance, we see Tamil Kezu Muuvar in this verse; elsewhere we come across TAMIZAKAM, that is the land of Tamils.

***

144

Two more interesting points are in this verse. One is about land where many languages are spoken. It clearly shows that beyond Vekatam Hills (Tirupati- Tirumalai Temple Mountain) Tamil was not spoken; Kannadam, Telugu, Prakrit and Sanskrit were spoken. The lover had gone beyond Tamil speaking areas.

***

145

Another interesting thing is a reference to EARTH QUAKES. Tamil land is not prone to earthquake; Tamils have experienced three or four Tsunamis. Two Tsunamis devoured Two Madurais. But Tamils knew about earthquakes that destroyed many monuments in Northern India. MM definitely knew this and he used ;the scorching sun has devastated the land as if earth quake has struck it.(நிலம்புடை பெயர்வது அன்றுகொல்இன்று?” என)

மொழிபெயர் தேஎத்த Countries where Many Languages Spoken

நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம்

புலங்கடை மடங்க தெறுதலின், ஞொள்கி,

நிலம்புடை பெயர்வது அன்றுகொல்இன்று?” என

மன்உயிர் மடிந்த மழைமாறு அமையத்து,

இலைஇல ஓங்கிய நிலைஉயர் யாஅத்து 5

மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்குக்

கல்லுடைக் குறும்பின் வயவர் வில்இட,

நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,

கணவிர மாலை அடூஉக் கழிந்தன்ன

புண்உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் 10

கண்உமிழ் கழுகின் கானம் நீந்திச்,

‘சென்றார்’ என்பு இலர் -தோழி!- வென்றியொடு

வில்இலைத்து உண்ணும் வல்ஆண் வாழ்க்கைத்

தமிழ்கெழு மூவர் காக்கும்

மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே

***

146.

Last but not the least, MM also referred to the birds of the arid land. Vulture, eagle, falcons, birds of prey, pick the eyes of the dead animals and feed its little ones.

The main theme of the PAALAI (desert land or arid land) is separation; temporary separation of the lover and the lady love. Here also that is the main message is separation. But when a poets deals with it he gives us so much information about flora and fauna, geography and history, language and culture.

****

147

Fast unto Death பிராயபாவேசம், வடக்கிருத்தல் வெண்ணிப் பறந்தலை, சேரலாதன், கரிகாலன்

பாடல்: 55 (காய்ந்துசெலற்)

காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்,

ஈந்துகுருகு உருகும் என்றூழ் நீள்இடை,

உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்,

விளிமுறை அறியா வேய்கரி கானம்,

வயக்களிற்று அன்ன காளையொடு என்மகள் 5

கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே! ஒழிந்துயாம்

ஊதுஉலைக் குருகின் உள்உயிர்த்து, அசைஇ,

வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு

கண்படை பெறேன், கனவ – ஒண்படைக்

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் 10

பொருதுபுண் நாணிய சேர லாதன்

அழிகள மருங்கின் வான்வடக் கிருந்தென,

இன்னா இன்உரை கேட்ட சான்றோர்

அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,

பெரும்பிறிது ஆகி யாங்குப்பிரிந்து இவண் 15

காதல் வேண்டிஎற் றுறந்து

போதல் செல்லாஎன் உயிரொடு புலந்தே! 17

In the earlier part we saw PRAAYOPAVESAM, that is facing Holy North and starve to death. When great king Cheralaathan was defeated by the great Choza emperor Karikaalan, Chera king died by facing north. He did this because he had injury on his back; that is not tolerated by Hindus. If they get injuries on the front of the body that is heroism; if they get injuries on back that is cowardice. In the great war at Venni, Chera king got injuries on his back.

Most interesting thing is that  on such occasions, other scholars join him and starve themselves to death.

When Rama decided to end his life by jumping in to River Sarayu in Ayodhya, thousands and thousands joined him and died. If you do it, you get a Visa Free Direct flight to Heaven. It is in Hindu scriptures. MM in verse 55 too say this.

A mother whose daughter eloped with a man, says I ma not worrying about my run away daughter. But I am unable to die like the great Chera King and the scholars who died along with him. This is great Hindu virtue that we, hear from Ramayana days. When the Monkey army searched for Sita Devi in vain, some of them thought of committing suicide by Facing North.

To be continued………….

Tags: 24  Ancient Tamil Encyclopaedia- Part 24; One Thousand Interesting Facts! -Part 24, Fast unto Death பிராயபாவேசம், வடக்கிருத்தல் வெண்ணிப் பறந்தலை, சேரலாதன், கரிகாலன், மாமூலனார், தமிழ்கெழு மூவர்

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்—Part 17 (Post No.15,099)

Written by London Swaminathan

Post No. 15,099

Date uploaded in London –  18 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part Seventeen

Detailed description of Sudharsana Chakram in English was posted here yesterday; now it is given in Tamil.

சுதர்சன சக்ரம்

சுதர்சன சக்ரம் என்பது விஷ்ணுவின் கையிலும் அவருடைய அவதாரமான கிருஷ்ணனின் கையிலும் உள்ள சக்தி வாய்ந்த வட்ட வடிவ ஆயுதம் ஆகும் . இதை வைஷ்ணவர்கள் தனியாகவே கோவிலில் சன்னிதி வைத்து வணங்குகிறார்கள். இது எதிரிகளையும் கஷ்டங்களையும் நீக்கும் ஒரு மூர்த்தி ஆகும். சத்ருக்னனின் அவதாரம் என்று கேரள மக்கள் சுதர்சன சக்ரத்தை வழிபடுகிறார்கள்.

சுதர்சன ஹோமம் என்று ஒரு ஹோமமும் அதற்கான தனியான பிரயோக மந்திரங்களும் இருக்கின்றன. இதுவும் தென்னிந்தியாவில் பிரயோகத்தில் உள்ளது  சுதர்சன சக்கரத்துக்கு என்றே தனியான கோவில்களும் இருக்கின்றன.

அஹிர்புத்ன்ய சம்ஹிதா என்ற நூலில்தான் சுதர்சன சக்ரம் பற்றிய மந்திரங்கள், வழிபடும் முறைகள், ஹோமம் செய்யும் விதிகள் உள்ளன.

சுதர்சன சக்ரம் ஆஸ்திரேலிய பழங்குடிகளின் பூமராங் ஆயுதம் போன்றது; அது காரியத்தை முடித்த பின்னர் விஷ்ணு அல்லது கிருஷ்ணர் கைக்கே  திரும்பிவரும்.

மஹாபாரதம், ராமாயணம் ,புராணங்கள் ஆகியவற்றில் இதை பற்றிய பல செய்திகள் உள்ளன; விஸ்வ கர்மா செய்த மூன்று ஆயுதங்களில் இதுவும் ஒன்று; ஏனையன திரிசூலம், புஷ்பக விமானம் ஆகும். அவைகளும் எதிரிகளை அழித்த சம்பவங்களை புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.

வைஷ்ணவர்கள் சக்கரத்தாழ்வார் என்றும் சக்ரபாணி என்றும் பெயரிட்டு வழி படுகிறார்கள் . கும்பகோணத்தில் உள்ள சக்ரபாணி கோவில் மிகவும் புகழ்பெற்றது.

சில்பசாரம் என்னும் நூல் பதினாறு கைகளைக்கொண்ட சுதர்சன சக்ரத்தை விவரிக்கிறது ; அவை சங்கு, சக்ரம், வில், அம்பு, கத்தி, திரிசூலம் ,கோடாரி, பாசம் , அங்குசம், தாமரை, வஜ்ராயுதம்/இடி, உழுகலன், உலக்கை, கதை, ஈட்டி/வேல் ஆகும் . தெற்றிப் பற்களும் தீ போன்ற மகுடமும் மூன்று கண்களும் அந்த மூர்த்திக்கு உண்டு .

பொதுவாக சக்ரத்தின் பின்பக்கத்தில் அறுகோணம் இருக்கும்; ஆனால் திருப்பதியில் பதினாறு கைகளுடன் உள்ள சுதர்சன மூர்த்திக்குப் பின்னால் சமபக்க முக்கோணத்தின் நடுவில் நரசிம்ம மூர்த்தி யோகாசன நிலையில் அமர்ந்து இருக்கிறார். அவருடைய முடி, அக்கினி போல இருக்கும் இந்த நரசிம்மரை ஜ்வாலா நரசிம்மர் என்று அழைப்பார்கள்.

4, 8 ஆகிய குறைந்த கரங்களுடனும் பல இடங்களில் சுதர்சன மூர்த்தி வடிக்கப்பட்டுள்ளார்

நான்கு கைகளுடன் உள்ள விஷ்ணுவின் வலது கையில் சுதர்சன சக்ரத்தைக் காணலாம் .

***

சுதர்ஸன சக்ரத்தை விஸ்வ கர்மா செய்ததாகவும் அதைக்கொண்டு சக்ரவனத்தில் ஹயக்ரீவன் என்ற அசுரனைக்கொன்று அவன் கையில் இருந்த ஆயுதத்தை விஷ்ணு பறித்ததாகவும் ராமாயணத்தில்  கூறப்பட்டுள்ளது.

மஹாபாரதத்தில் குறைந்தது இரண்டு இடங்களில் சுதர்சன சக்ரத்தைக் காண்கிறோம். ராஜசூய யாகத்தில் சிசுபாலனின் தலையைச் சீவுவதற்கு கிருஷ்ணன் இதை ஏவினார். மஹாபாரத யுத்தத்தில்  சூரியனை மறைக்க இதை கிருஷ்ணர் ஏவியவுடன் யுத்தம் முடிந்துவிட்டது என்று எண்ணி வெளியே வந்த ஜயத்ரதனை வீழ்த்த சகசக்ராயுதம் பயன்பட்டது.

புராணங்களில் கஜேந்திர மோட்சம் கதை விரிவாக உள்ளது ஆதிமூலமே என்று கதறிய யானையின் குரலைக்கேட்டு விரைந்து வந்த விஷ்ணு, சுதர்சன சக்ரத்தை ஏவி முதலையைக் கொன்றார் இது  சிற்ப  வடிவில் குப்தர் காலம் முதலே உள்ளது .

***

வரலாற்றில்

கிருஷ்ணர், பலராமன் உள்ள பழங்கால நாணயத்திலும் விருஷ்ணி குலத்தினர் வெளியிட்ட நாணயங்களிலும் சக்ரம் உள்ளது. ஆகவே இதற்கு குறைந்தது  2200  ஆண்டுகள் வரலாறு இருக்கிறது.

புராணத்தில் ஒரு கதை வருகிறது; விஸ்வகர்மாவின் மகள் சமக்ஞா சூரியனை திருமணம் செய்துகொண்டதாகவும் அவனுடைய ஒளி தாங்க முடியாமல் அப்பாவிடம் புகார் செய்யவே அவர் சுதர்சன சக்ரத்தை உருவாக்கி சூரியனை மங்கச் செய்ததாகவும் கதை போகிறது; கங்கண  சூரிய கிரகணத்தை விவரிக்கும் நிகழ்ச்சி இது என்று சொல்லலாம்.

ஸ்ரீ சுதர்சன அஷ்டகம்

ஆனிச் சித்திரையில் சுதர்சன ஜயந்தி கொண்டாடப்படுகிறது. திருவாழி ஆழ்வான், திகிரி, ஹேதிராஜன், சக்கரத்தண்ணல் நேமிதரங்கம் என்ற பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.

சுதர்சன உபாசியாக விளங்கிய ஸ்வாமிதேசிகர் ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் என்ற பாமாலையினை சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.

சுதர்சன சக்ரம் உள்ள  கோவில்கள்

கேரளத்தில் நிறைய சுதர்சன சக்ர கோவில்கள் உள்ளன . ஆந்திரத்தில் சிம்மச்சலம் கோவில் சக்ரபாணி சந்நிதி, 

வீரராகவ  ஸ்வாமி  கோவில் , திருஎவ்வுள் ; ரங்கநாதஸ்வாமி  கோவில், ஸ்ரீரங்கப்பட்டன ; திருமோகூர்  காளமேகப் பெருமாள்  கோவில், மதுரை ; வரதராஜ  பெருமாள்  கோவில்,காஞ்சிபுரம் முதலியன குறிப்பிடத்தக்கவை.

·         Sri Sudarshana Bhagavan Temple, Nagamangala.

·          

·         Jagannath Temple, Puri, As Sudharsana Moorthy

·         Alathiyur Pavelikkara Narayanathu Kavu Sudarshana Temple, Triprangode, Malappuram.

·         Thuravoor Sree Narasimha Moorthy Temple, Alappuzha

·         Sreevallabha Temple, Thiruvalla, Pathanamthitta –

·         Thrichakrapuram Temple, Puthanchira- The main deity is Sudharsana Moorthy.

·         ****
As Shatrughna avatar

·         Payammal Sree Shatrughna Swami Temple, Thrissur

·         Methiri Sree Sathrughnaswamy Temple, Kottayam

·         Nedungaattu Sree Shatrugna Swami Temple(Mammalassery), Ernakulam

·         Naranathu Shatrughna Swami Temple, Malappuram

·         Payam Sri Mahavishu (Shatrughna) Temple, Kannur

·         Sree Shatrughna Swami Temple, Kalkulam, Kuthannur, Palakkad

—subham—

Tags- சுதர்சன சக்ரம், Hinduism through 500 Pictures in Tamil and English, படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்,Part 17

ஹாலிவுட்டில் ஹிந்து வாழ்க்கைமுறை! (Post.15,098)

  மைக்கேல் (இடது புறம் உள்ளவர்) ரிஷிகேசத்தில் சிரார்த்தம் செய்கிறார்.

Written by S Nagarajan

Post No. 15,098

Date uploaded in London –   18 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

5-10-25 தினமணி கதிர் இதழில் வெளியான கட்டுரை! 

ஹாலிவுட்டில் ஹிந்து வாழ்க்கைமுறை! 

ச. நாகராஜன் 

இந்தியாவிற்கு வருகை புரிந்த பிரபல ஆங்கில எழுத்தாளரான சாமர்செட் மாம் தனது பாயின்ட்ஸ் ஆஃப் வியூ என்ற புத்தகத்தில், “ஹிந்து மதம் ஒரு மதம் மட்டும் அல்ல, அது ஒரு தத்துவமும் கூட, மதம் மற்றும் தத்துவம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை” என்று எழுதி வியந்தார்.

இந்த வாழ்க்கைமுறையை வியந்து போற்றியவர்களுள் மேலை நாட்டு பிரபலங்கள் நூற்றுக் கணக்கானவர்கள் உள்ளனர். விஞ்ஞானிகள், ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள், இசை மேதைகள், அரசியல் மேதைகள், அறிஞர்கள் என்று அனைத்து பிரபலங்களும் இதில் அடக்கம்.

ஹிந்து வாழ்க்கை முறையில் ஈர்க்கப்பட்ட இரு ஹாலிவுட் பிரபலங்களைப் பார்ப்போமா? 

ஜூலியா ராபர்ட்ஸ் 

ஜூலியா ராபர்ட்ஸ் பிரபலமான அமெரிக்க நடிகை. இவரது தாய் ஒரு ரோமன் கத்தோலிக்கர், (பிறப்பு 28-10-1967)  இளம் வயதிலிருந்தே ஜூலியாவிற்கு இந்து மதத்தின் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது, அசைவ உணவை விட்டு விட்டு சுத்த சைவ உணவை மட்டுமே உட்கொள்ள ஆரம்பித்தார், யோகாவில் மனம் ஈடுபட அதில் ஈடுபட்டார். தியானத்தை மேற்கொண்டார். இயற்கையை நேசித்து அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற இந்து மத உணர்வு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் பெயர் என்ன தெரியுமா? ரெட் ஓம் பிலிம்ஸ் (‘Red OM Films’) 

ஆஸ்கார் அவார்ட் பெற்ற இவர் நடித்த ஈட் ப்ரே லவ் (Eat Prey Love) என்ற படம் உலகினரின் கவனத்தை ஈர்த்த ஒரு படம்.  எல்லாமே பெற்று விட்டதாக நினைக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு அதைப் பிடிக்க ஏங்கும் அவல நிலையை இந்தப் படம் சித்தரிக்கிறது.

படத்தின் கதாநாயகி எலிஸபத் ஜில்பர்ட் (ஜூலியா ராபர்ட்ஸ்) இந்தியாவில் பிரார்த்தனை புரிகிறாள், இந்தோனேஷியாவில் பாலித் தீவில் அன்பின் பெருமையை உணர்கிறாள். படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

ஜூலியா ராபர்ட்ஸ் இந்து வாழ்க்கை முறையை நுணுகி ஆராய்ந்தவர். ஹிந்து மதத்தை அவர் தழுவினார். நீம் கரோலி பாபா என்பவரை இவர் தனது குரு என்று கூறினார். அனுமனின் உபாசனைக் கொண்டவர் இந்த குரு.  ஹனுமான் படத்தைப் பார்த்தவுடன் அவருக்கு மனமாற்றம் வந்ததாம்.  தீபாவளியை உலக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற அவரது கருத்து உலகெங்கும் பரவலாகப் பேசப்பட்டது. பிரபல நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியின் படி அவர் ஸ்வாமி தரம் தேவ் என்பவரை அவர் சந்தித்த போது அவர் ஜூலியா ராபர்ட்ஸின் குழந்தைகளுக்கு ஹிந்துப் பெயர்களைச் சூட்டினார். ஹேஸல் மற்றும் பின்னயஸ் என்ற இருவருக்கும் லக்ஷ்மி மற்றும் கணேஷ் என்று பெயர் சூட்டப்பட்டது. ஹென்றிக்கு கிருஷ்ண பலராம் என்று பெயரிடப்பட்டது.

சில்வஸ்டர் ஸ்டல்லோன் (SYLVESTER STALLONE)

சில்வஸ்டர் ஸ்டல்லோன் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் இத்தாலியப் பின்னணியைக் கொண்டவர். அவரது தாயார் யூத வம்ச பாரம்பரியத்தைக் கொண்டவர். தந்தை ஒரு கத்தோலிக்கர்.

2012ம் ஆண்டு முப்பத்தாறே வயதான அவரது அருமை மகன் சேஜ் திடீரென்று மரணமடையவே அவர் சொல்லொணாத் துக்கம் கொண்டார். சேஜ் போதைப் பொருளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டதால் இந்த துயரமான முடிவு நேர்ந்தது. இறந்த மகனை அடிக்கடி பார்ப்பதாக ஸ்டல்லோன் கூறினார். ஹிந்து தர்மத்தைப் பற்றியும் புனர் ஜென்மத்தைப் பற்றியும் அறிய அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ரிஷிகேசத்தில் உள்ள வேத பண்டிதருடன் அவர் தொடர்பு கொண்டார்.

2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹரித்வாரில் அவர் தனது மகனுக்கு கங்கா நதி தீரத்தில் உரிய முறைப்படி சிரார்த்தம் செய்ய முடிவு செய்தார். பத்திரிகையாளர் கூட்டத்திற்கு பயந்த ஸ்டல்லோன் இந்த சிரார்த்த காரியத்தை ரகசியமாகவே செய்தார்.

இதற்காக  தனது சகோதரரான மைக்கேல் அவரது மனைவி மற்றும் இரண்டு பேர்களை அவர் ஹரித்வாருக்கு அனுப்பினார். விபத்தினால் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு உரிய சாந்தியை அவர்கள் செய்தனர். இதைச் செய்த பிறகு ஸ்டல்லோன் மனதில் பெரும் நிம்மதி ஏற்பட்டது.

இதற்கு அவருக்கு உதவி செய்தவர் மிஸ்ராபுரி என்ற ஒரு ஜோதிடர்.

இந்த சிரார்த்தம் முடிந்த பிறகு மைக்கேல் 2012ல் இறந்த 48 வயதான தனது சகோதரி ரோனி ஆன் -க்கும் சிரார்த்தம் செய்தார்.

இப்படி இன்னும் பல பிரபலமான ஹாலிவுட் நடிகர்களும் நடிகையரும் இந்து மத வாழ்க்கை முறை மீது அளவிலா நம்பிக்கை கொண்டு அதைப் பின்பற்றி வருகின்றனர்.

இன்னும் சிலரைப் பற்றி அறிய அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

***

–subham–

GNANAMAYAM 19th October 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -MRS JAYANTHI SUNDAR TEAM

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND from London presents World Hindu News in Tamil

****

MRS Brhannayaki Sathyanarayanan  from Bengaluru speaks on

DEVA PRAYAG TEMPLE

****

Talk by Prof S Suryanarayanan

Topic- Some Interesting Facts

***

SPECIAL EVENT-

Talk on Keezadi Excavations

Keezadi and South India

By

N Ganesh Raaja, Amateur Historian and Author

Ganesh Raaja. N hails from Tamil Nadu. He completed his engineering in 2003 and has more than twenty years of experience in the software industry.

He was attracted towards ‘History of India’ after noticing a defaming article in an Indian magazine. He has spent more than eight years researching on this subject. He has read vast number of books related to ancient Sanskrit literature, ancient Tamil literature, scientific evolution etc. written by eminent Indian and foreign scholars.

Each book he referred to catered to a specific aspect of Indian life. After understanding them, a natural interest arose in him to reconcile and chronologically arrange them in a ‘holistic’ and ‘interesting’ way. This is a first attempt at narrating India’s story ‘as-it-happened’.

The result is the book, titled, “The Jambū Island”. This book chronologically organizes the Rishiskingsliterary evolutionpeople’s lives, and scientific progress based on Sanskrit and Tamil literature. It aims to eliminate myths, interpolations, and exaggerations. It strives to present the story in a logical and captivating narrative, with many pictures.

This book covers the period from roughly 6000 BCE to 3138 BCE, narrating significant events including the rendering of the Vedic mantras by the Rishis, the Aryan clan split towards Iran resulting in the formation of the Zōrōastrians, the atrocities and defeat of the Haihaya clan, fusion of Nāgās and other native tribes into the Vedic religion, Āryan colonization of South India, and the Bharata battle at Kurukshetra.

Post launching his book, Ganesh has started an Youtube channel in Tamil to share his learnings. The goal of this channel to spread awareness about the greatness of our country and Hindu religion, to create a counter-narrative to the popular Dravidian ideology of Tamil Nadu.

Youtube channel: https://www.youtube.com/@ArivomInaivom    

Amazon book: https://tinyurl.com/rsdsr5y5   

Contact details: 

•      email id: ganesh_n82@yahoo.com                            

•      Location: Bangalore.

•      LinkedIn: https://www.linkedin.com/in/ganesh-raaja-natarajan-90458b5/

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 19 October 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் — திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்

வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்

சொற்பொழிவு– தலைப்பு  தேவப்பிரயாகை தலம்

****

சொற்பொழிவு:

பேராசிரியர் எஸ் சூர்யநாராயணன்

சுவையான செய்திகள்  

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

வரலாற்றுச் சொற்பொழிவு:

கீழடியும் தென் இந்தியாவும்

திரு என். கணேஷ் ராஜா

வரலாற்று ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்

—subham—

Tags-Gnanamayam Broadcast, 19-10- 2025, programme,