சம்ஸ்கிருத மொழியின் பெருமை!- 1 (Post No.12,674)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,674

Date uploaded in London –  –  5 November , 2023               

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சம்ஸ்கிருத மொழியின் பெருமை! – 1

ச.நாகராஜன்

பாரதீய பண்பாட்டிற்கான தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதில் இல்லாதது எதிலும் இல்லை.

கோடிக் கணக்கான நூல்களைக் கொண்ட ஞானப் பொக்கிஷம் சம்ஸ்கிருதம்.

உலகில் உள்ள மொழிகளில் மிக மிக அதிகமான சொற்களைக் கொண்ட ஒரே மொழி சம்ஸ்கிருதமே.

102078 கோடியே 50 லட்சம் வார்த்தைகள் சம்ஸ்கிருத மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை கணினிப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த ஆரம்பித்தால் இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு இவற்றைப் பயன்படுத்த முடியும்.

மற்ற மொழிகளை விட குறைந்த வார்த்தைகளை வைத்து ஒரு வாக்கியத்தை அமைத்து, சொல்ல வந்த கருத்தை இந்த மொழியில் மட்டுமே சொல்ல முடியும்.

அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகமே சம்ஸ்கிருதத்திற்காக உள்ளது.

ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் படி (Forbes July 1987) சம்ஸ்கிருதமே கணினிப் பயன்பாட்டிற்கு உகந்த மொழியாகும்.

திருத்தப்பட்ட செம்மொழி சம்ஸ்கிருதம். நாஸா சம்ஸ்கிருதத்தைப் பற்றிக் கூறுகையில், “Only unambigouous spoken language on the planet” – நேரடியாகப் பொருள் விளக்கம் தரும்படி பூமியில் பேசப்படும் ஒரே மொழி சம்ஸ்கிருதமே – என்று கூறுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் சம்ஸ்கிருதமே அதிகாரபூர்வமான அங்கீகரிக்கப்பட்ட மொழியாகத் திகழ்கிறது.

சம்ஸ்கிருத மொழியின் அடிப்படையில் ஆறாவது மற்றும் ஏழாவது தலைமுறை சூப்பர் கணினிகள் அமெரிக்காவில் உருவாக்கப்படுவதாக நாஸா அறிவித்துள்ளது.

ஆறாவது தலைமுறை கணினி உருவாக்கத்திற்கான இலக்கு 2025ஆம் ஆண்டு என்றும், ஏழாவது தலைமுறை கணினி உருவாக்கத்திற்கான இலக்கு 2034 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு இலக்கையும் எட்டிய நிலையில் உலகெங்கும் சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெருமளவில் உருவாகும்.

மிக மேம்பட்ட விஞ்ஞான நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இவை வேதங்கள், உபநிடதங்கள், ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள், மஹாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட நூல்களாகும். நாஸா 60000 சுவடிகளைக் கொண்டுள்ளது. (Reference : Russian State University, NASA etc. NASA posseses 60,000 palm leaf manuscripts, which they are studying).

சம்ஸ்கிருதம் கற்பதால் மூளைத் திறன் கூடுகிறது. இதைக் கற்கும் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர்.

லண்டனில் உள்ள ஜேம்ஸ் ஜூனியர் ஸ்கூல், சம்ஸ்கிருதம் கற்பதை கட்டாயமாக ஆக்கியுள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் முதல் இடத்தை ஆண்டுதோறும் பிடிக்கின்றனர்.

இதைப் பின்பற்றி அயர்லாந்திலும் இப்போது சம்ஸ்கிருதம் பயில்விக்கப்பட்டு வருகிறது.

சம்ஸ்கிருதத்தைப் பேசும் போதும் படிக்கும் போதும் உடலில் உள்ள ஆற்றல் புள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது.  இதனால் மன அழுத்தம் குறைகிறது. வியாதிகள் வருவது தடுக்கப்படுகிறது. ஆற்றல் கூடுகிறது. மனம் சாந்த நிலையை அடைகிறது.

நாக்கில் உள்ள அனைத்து நரம்புகளையும் பயன்படுத்த வைப்பது சம்ஸ்கிருத மொழி ஒன்றே தான். அதைப் பேசும் போது ஆற்றல் புள்ளிகள் ஊக்குவிக்கப்படவே இரத்த ஓட்டம் சீர்படுகிறது.

இரத்த அழுத்தம், டயபடீஸ், கொலஸ்ட்ரால் மிகுதி உள்ளிட்டவை கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன, (ஆதாரம் அமெரிக்கன் ஹிந்து யுனிவர்ஸ்டியின் தொடர் ஆராய்ச்சி முடிவுகள்)

இது வெறும் மொழி மட்டுமல்ல. மனித சிந்தனைக்கும் ஆன்மாவுக்கும் பாலமாக செயல் படும் ஒன்று. பௌதிகத்திற்கும் உளவியலுக்கும்; பரு உடலுக்கும் நுண்ணுடலுக்கும்; கலைக்கும் பண்பாட்டிற்கும்; இயற்கைக்கும் அதைப் படைத்தவனுக்கும்;  படைக்கப்பட்ட அனைத்திற்கும் அதைப் படைத்தவனுக்கும் இடையிலான ஒரு மொழியாகத் திகழ்கிறது. 

உலகின் தலையான மதங்களான ஹிந்து மதம், புத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றிற்கான அறிவு சால் மொழியாக சம்ஸ்கிருதம் விளங்குகிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

(புத்த மதத்தில் பாலி மொழியுடன் கூட; ஜைன மதத்தில் ப்ராக்ருத மொழியுடன் கூட)

உலகின் நாட்காட்டியில் (காலண்டரில்) சிறந்து விளங்குவது

(சம்ஸ்கிருதத்தில் அமைக்கப்பட்டுள்ள) ஹிந்து நாட்காட்டியே. ஏனெனில் இது நிலவியலின் படி சூரிய மண்டல இயக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. (ஆதாரம் ஜெர்மன் ஸ்டேட் யுனிவர்ஸிடி).

 ஹிந்து ஶ்ரீ சக்ர அமைப்பை ஒட்டி பாதுகாப்பு அமைப்பு ஒன்றை இங்கிலாந்து இப்போது ஆராய்ச்சி செய்து வருகிறது.

 சான்ஸ்கிரிட் எஃபெக்ட் – SANSKRIT EFFECT –  இந்த வார்த்தை நியூரோ விஞ்ஞானியான ஜேம்ஸ் ஹார்ட்ஸெல் என்பவரால் (NEURO-SCIENTIST JAMES HARTZELL) உருவாக்கப்பட்டது. வேத மந்திரங்களை ஓதி மனனம் செய்வதன் மூலம் மூளையில், மூளைச் செயல்பாட்டில் நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவுத்திறனுக்கான பகுதிகள் பெரிதாக ஆகின்றன. இதுவே சான்ஸ்கிரிட் எஃபெக்ட்.

 இன்னும் இது போன்ற ஏராளமாம சிறப்புகள் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன.

அதை அடுத்துப் பார்ப்போம்.

                                      ***********************************

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 9 (Post No.12,673)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,673

Date uploaded in London – –  –  4 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

SLOKA 25

क्षुत्क्षामो‌உपि जराकृशो‌உपि शिथिलप्राणो‌உपि कष्टां दशाम्
आपन्नो‌உपि विपन्नदीधितिरिति प्राणेषु नश्यत्स्वपि ।
मत्तेभेन्द्रविभिन्नकुम्भपिशितग्रासैकबद्धस्पृहः
किं जीर्णं तृणम् अत्ति मानमहताम् अग्रेसरः केसरी ॥ 1.25 ॥

சிங்கம் புல்லைத் தின்னுமா?

க்ஷுத்க்ஷாமோஅபி ஜராக்ருசோபி சிதிலப்ராணோபி கஷ்டாம் தசா

மாபன்னோபி விபன்னதீதிரபிப்ராணேஷு நஸ்யஸ்வபி

மத்தேபேந்த்ர விபின்னகும்பபிசிதக்ராஸைகபத்தஸ்ப்ருஹஹ

கிம் ஜீர்ணம் த்ருணமத்தி மானமஹதாமக்ரேஸரஹ கேஸரீ 1-25

சிங்கத்துக்கு பசியால் வாட்டம்ஆனால் கிழடுஉடலில் பலம் குன்றிவிட்டதுஉடல் ஊனம்பலஹீனம்மனத் தளர்ச்சிகாம்பீர்யம் போய் மரணப் படுக்கையில் இருந்தாலும் மதம்பிடித்த யானையின் மீது பாய்ந்து அதை உண்ணவே எண்ணும். அப்பேற்பட்டவர்களே மஹத்தான சாதனையாளர். சிங்கம் என்றாவது புல்லைத் தின்னுமா?  

சிங்கம் பசித்தாலும் தீரவிளைத் தோய்ந்தாலும்

மங்கியுடல் வாடி மடிந்தாலும் — பொங்குமத  யானையையே

கொல்லவெண்ணும்  அன்றி யுலர் வைக்கோலைத்

தீனியென தின்னுமோ சென்று – 25

25. Even when weak with hunger, thin due to old age, largely unsteady and in a pitiable condition, with his lustre and vitality lost, will the lion, foremost among the proud and great, eat dry grass? His desire is fixed on devouring mouthfuls from the crown of a rutting elephant split open (by himself.)–25

Xxx

SLOKA 26

स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसम् अप्यस्थि गोः
श्वा लब्ध्वा परितोषम् एति न तु तत्तस्य क्षुधाशान्तये ।
सिंहो जम्बुकम् अङ्कम् आगतम् अपि त्यक्त्वा निहन्ति द्विपं
सर्वः कृच्छ्रगतो‌உपि वाञ्छन्ति जनः सत्त्वानुरूपं फलम् ॥ 26

 ஸ்வல்பஸ்னாயுவஸாவ சேஷமலினம் நிர்மாம்ஸமப்யஸ்திகோஹோ

ஸ்வா லப்த்வா பரிதோஷமேதி ந ச தத்தஸ்ய  க்ஷுதாசாந்தயே

ஸிம்ஹோ ஜம்புகமங்கமாகதமபி  த்யக்த்வா நிஹந்தி த்விபம்

ஸர்வஹ க்ருச்ரகதோபி வாஞ்சந்தி ஜனஹ ஸத்வானுரூபம் பலம் 1-26

சதைப்பற்று இல்லாத எலும்பைக் கண்டாலும் நாய் சந்தோஷப்படும்ஆயினும் அது அதன் பசியைத் தீர்க்காது. சிங்கமோ தன் பிடியில் ஒரு முயலே சிக்கினாலும் அதை விட்டுவிட்டு பலம் பொருந்திய யானையயே கொல்ல விழையும். பெரியவர்கள் தங்கள் பெருமைக்கேற்ற செயலைச் செய்தே குறிக்கோளை அடைவர்.

 சாரமிலா வெள்ளெலும்பைத் தான் கண்டு சந்தோஷம்

கூரு நாய் கொண்டதனால் பசிதீராது

சேர நரி வாழ்ந்தாலும் சிங்கம் அதைவிட்டுத்

தூரவன  மதனில்  தூங்கும் மதயானைதனைக் 

கோர நகத்தால் கொல்லும்  அது போல ,

பார வறுமைபல பாய்ந்தாலும் மாந்தர் தந்

தார தம்மியப் படி தக்க பலன் வேட்பதன்றி

ஆற வேறொன்றை எண்ணார் –26

A dog gets satisfaction with a small bone, with a little fat and muscle on it, even if it is fleshless and not enough to satiate its hunger. A lion rejects a jackal available at hand, and kills an elephant. Everyone desires a goal matching his strength, even if he has to go through difficulty.–26

கோப்பெருஞ்சோழன் செப்புவது 1-26

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்…………….

–புறம் 214, கோப்பெருஞ்சோழன்

யானை வேட்டைக்குப் போனவன் யானையை பெறலாம். ஆனால் குறும்பூழ் பறவையைப் பிடிக்கப் போனவன் வெறும் கையுடனும் வரக்கூடும்; ஆகையால் உயர்ந்த குறிக்கோளுடன் செல்க.

Xxxxx

SLOKA 27

लाङ्गूलचालनम् अधश्चरणावपातं
भूमौ निपत्य वदनोदरदर्शनं च ।
श्वा पिण्डदस्य कुरुते गजपुङ्गवस्तु
धीरं विलोकयति चाटुशतैश्च भुङ्क्ते ॥ 27॥

லாங்கூலசாலநமதஸ்சரணாவபாதம்

பூமௌ நிபத்ய வதனோதரதர்சனம் ச

ஸ்வாபிண்டதஸ்ய  குருதே கஜபுங்கவஸ்து

தீரம் விலோகயதி சாடுசதைஸ்ச புங்தே- 27

நாய் வாலை ஆட்டும்எவன் ரொட்டித் துண்டுபோட்டாலும் அவன் காலடியில் விழும். அது கீழே புரண்டு வயிற்றையும் வாயையும் காட்டி மேலும் உணவு பெற முயலும். ஆனால் பெரிய பலம் மிக்க யானையோ இனிமையான வார்த்தைகள் சொல்லி அழைத்தாலும்கூட உணவைப் பற்றி கவலைப்படுவதுமில்லைஅதை ஏற்பதுமில்லை.–27

கவள மிடுகின்றவனைக்  காணு நாய்  வாலைத்

துவள மிக வாட்டுந் துள்ளுந் தவள நிறப்

பல்லைவயிற்றைக்காட்டும் – பார்மேல் விழுமெழும்

எல்லையிலா ஏழ்மை இயற்றுமே – சொல்லரிய

யானை மதங்கொண்டதனால் யாரையு ம் பாராமலே

மான முடன் வீரமுடன் மாவோட்டி தானளிக்கும்

பெருங்கவலளந் தின்று பெருமையாய் வாழும்

இரும் புவியின் தன்மை இது  — 27

27. A dog wags his tail, falls at his feet and rolls on the ground displaying its maw, to its feeder. A majestic elephant looks calmly (at the feeder) and eats only after many persuasive words.–27

xxxx

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

வள்ளவனும் கண்ணனும் புகல்வது யாதெனின்

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

xxxxx   subham   xxx

tags—Bhartruhari, 4 languages, part 9

விபீஷணன் கோவில்-இலங்கைத் தீவின் 108 ஆலயங்கள்- Part 48 (Post No.12,672)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,672

Date uploaded in London – –  –  4 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 48

இலங்கையிலுள்ள 52 ராமாயண ஸ்தலங்களில் மேலும் சில முக்கியமானவற்றைக் காண்போம் .

111.விபீஷணன் கோவில் VIBHISHANA DEVALAYA, Kelaniya

உலகிலேயே முதல் முதலில் வெளிநாட்டு அரசாங்கத்தை (FIRST EXILE GOVERNMENT IN THE WORLD) அறிவித்தது இந்துக்கள்தான். ராவணன் தம்பி விபீஷணனை  ராமபிரான், இலங்கை மன்னனாக அறிவித்து இந்தியாவில் முடி சூட்டினார் . இதை ஆங்கிலத்தில் exile government எக்ஸைல் கவர்மெண்ட் என்பார்கள். விபீஷணனுக்கு ராமேஸ்வரத்திலும்  இலங்கையிலும் கோவில்கள் உள்ளன. ராவண வதத்துக்கு முன்னதாகவே இலங்கை மன்னனனாக விபீஷணனுக்கு ராமர் முடிசூட்டினார்.)

கொழும்பு நகரிலிருந்து 5 மைல் தொலைவில் களனிய என்ற இடம் இருக்கிறது ; இங்கு களனி கங்கை நதி ஓடுகிறது. இதன் கரையில்  விபீஷணனுக்குக்  கோவில்  கட்டப்பட்டுள்ள்ளது. இலங்கை முழுவதும் நதிகளை கங்கை என்ற பெயருடன் அழைப்பதைக் கவனிக்க வேண்டும். இந்து இலங்கை பின்னர் புத்த மத இலங்கையாக மாறியதற்கு இவை எல்லாம் சான்று.

(ராமேஸ்வரம் – தனுஷ்கோடி செல்லும் சாலையில் ராமேஸ்வரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் கோதண்டராமர் கோவில் இருக்கிறது ; அங்கு ராமபிரானை விபீஷணன் வணங்கும் கோலத்தில் இருப்பதைக் காணலாம்) .

களனியா என்னும் இடத்தில் இப்பொழுது புத்த விஹாரமும் இருக்கிறது. இதன் பழைய பெயர் கல்யாணி. பழைய கல்யாணி 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரலைத் தாக்குதலில் கடலுக்குள் சென்றுவிட்டது பின்னர் களனிய  தலை நகர் ஆனது. 

ராவண வதததுக்குப் பின்னர் இங்கு விபீஷணன் முறையாகப் பட்டம் சூட்டிக்கொண்டு ஆட்சி செய்ததால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆண்ட மன்னன், இன்று விபீஷணனுக்கு கோவிலை எழுப்பினான்

களனி விஹாரையில் முன்வாசல் தோரணத்தைக் கடந்ததும் வலது பக்கம் ஓர் சிறிய கட்டிடம் காணப்படுகிறது. இதுவே  விபீஷணன் கோயிலாகும். இங்கு கப்புறாளைகள் பூஜைகளை செய்து வருகின்றனர். பெளத்தர்களும் வணங்கிச் செல்கிறார்கள் .

விபீஷணன் கோவிலை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர்  போச்சுகீசிய மத வெறியர்கள்  இடித்துத்  தரைமட்டமாகினார்கள் .விக்கிரகங்களை  ஆற்றில் வீசினார்கள். 1767 இல் கண்டியை ஆட்சி செய்த கீர்த்தி ஶ்ரீ ராஜசிங்க மன்னன்,   களனி விபீஷணன் கோவிலையும் , பெளத்த  விஹாரையையும் மீண்டும் கட்டினார்  .

12–ம் நூற்றாண்டு முதல் கோவில் பற்றிய செய்திகள், நூல்கள் மூலம் கிடைக்கின்றன. அண்மைக் காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. கோவில் தூண்கள் , சுவரிலுள்ள சிற்பங்கள் முதலியவற்றில் இந்து மத செல்வாக்கைக்   காணலாம்

ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் இலங்கையில் ராவணனுக்கு கோவில் கிடையாது. ஆனால் பல இடங்களில் விபீஷணன் கோவில்கள் இருக்கின்றன. மேலும் இளநகையைக் காக்கும் 4  காவல் தெய்வங்களில் விபீஷணன் பெயர்தான் உள்ளது. ராமாயண தர்மத்தை புராதன இலங்கை நூலிழை பிசகாமல் கடைப்பிடித்தது . விபீஷணன் ஒரு நியாய வாதி என்பதால், பல குடும்ப , சமூக பிணக்குகளைத் தீர்ப்பதற்காக சிங்கள மக்கள் விபீஷண பகவானுக்கு நேர்த்திக் கடனும் வேண்டிக்கொள்கின்றனர்

ராம பிரான், , 14 ஆண்டு முடியும் தருவாயில் , பரதனைக் காப்பாற்றுவதற்காக நந்திக்கிராமத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக விரைந்து சென்றார் என்றும் அதனால் விபீஷண னுக்கு  பட்டாபிஷேகம் செய்யும் பொறுப்பு லட்சுமணனிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் கதை போகிறது. ஆகையால் இங்கு அதைக்காட்டும் சிலைகளும் பெரிய ஓவியங்களும் உள்ளன .

அருகில் குருகுலாவ என்ற இடமும் இருக்கிறது. இது, ராமர் அனுப்பிய குரு , புரோகிதர், பிராமணர்கள் தங்கி குருகுலம் நடத்திய இடம் ஆகும்  .

Xxxx

112. சஞ்சீவி மலையின் ஐந்து துண்டுகள்

ராமாயண ஸ்தலங்கள் 52–ல் மூலிகை மலையான சஞ்சீவி  மலையின் ஐந்து துண்டுகள் விழுந்த 5 இடங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்துடன் வில்லூண்டி தீர்த்தம்கன்னியா வெந்நீர் ஊற்றுகள் ஆகியவற்றையும் சேர்த்தால்  7 இடங்களுக்கு  கணக்கு  கிடைத்து விடும் . அவைகளையும் சுருக்கமாகக் காண்போம்..

ராமனும் ராவணனும் கடும் போரிட்டனர் . அதில் லெட்சுமணன் மூர்ச்சை அடைந்தவுடன் அவனுக்கு மரணம்  சம்பவிக்காமல் இருக்க சஞ்சீவினி என்ற மூலிகை தேவைப்பட்டது.ஆயுர்வேத சிகிச்சையை நன்கு அறிந்த அனுமன், அந்த மூலிகைகக்காக இமய மலைக்குச் சென்றான். குறிப்பிட்ட மூலிகையைக் கண்டு பிடிக்க அவகாசம் இல்லை; இது URGENT MATTER அர்ஜென்ட் மேட்டர்; பெரிய எமர்ஜென்சி EMERGENCY என்பதால் மலையையே தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ் AMBULANCE வேகத்தில் பறந்து வந்தான். அப்பொழுது ஐந்து இடங்களில் அதன் துண்டுகள் விழுந்தன. அவையாவன :– தொளு கண்ட (குருநாகல ), ரீதிகல , ருமசால (ராம சைலம் )மலை , கச்சத் தீவு, தள்ளாடி (மன்னார் )

There are 5 Sanjeevani Mountains in Sri Lanka namely, Dolukanda (Kurunegala) / Ritigala Nature Reserve (Habarana) / Rumassala Mountain (Galle) / Kachchativu island (Jaffna) / Thalladi (Mannar)

Xxxx

113. இரண்டு ஊற்றுகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள வில்லூண்டி தீர்த்தம் இராமாயண ஸ்தலங்களில் ஒன்றாகும்  ராமேஸ்வரம்- தங்கச்சி மடம் அருகில் கடலுக்கு நடுவில் உள்ள தூய நீர் வில்லூன்றித் தீர்த்தம் போலவே இதுவும் ஒரு அதிசய ஊற்று. யாழ்ப்பாண நகரின் மத்தியில் உள்ளது .. ராமர் படையின் தாகத் தைத் தீர்ப்பதற்காக ராமர் தனது வில்லினால் எய்த அம்பில் பொங்கிய ஊற்று இது.  இப்போது 100 x 100 அடி குளமாக இருக்கிறது. பூமியிலுள்ள ஊற்றுகளில் இருந்து நீர் சுரக்கிறது

கன்னியா நீர் ஊற்றுகள்

நான் செப்டம்பர் மாதம் (2023) இலங்கை சென்றபோது 100 ரூபாய் கொடுத்து ஆர்வத்தோடு டிக்கெட் வாங்கினேன். அதில் உண்மையை மறைத்து , ராமர் பெயரை அடியோடு மறைத்து இது அனுராதபுர காலத்திலிருந்து இருந்துவரும் புத்த மத தலம்  என்று அடித்த டிக்கெட்டைக் கொடுத்தனர். இது தொல்லியல் துறையின் சார்பில் அச்சிடப் பட்டுள்ளது.

இங்கு 7 ஊற்றுக்கள் இருக்கின்றன . இதுவும் ராமபிரானால் உண்டாக்கப்பட்டது என்பது ஐதீகம். அருகிலுள்ள இந்துக் கோவிலை சர்ச்சை- வழக்கு காரணமாக மூடி வைத்துள்ளனர்

இந்த வெந்நீர் ஊற்றுகளில் வெவ்வேறு வெப்ப நிலையில் நீர் வருவது ஒரு அதிசயம்தான் .

இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை இப்படி அதிசய ஊற்றுகள் இருக்கின்றன. அத்தனையும் இறைவன் சம்பந்தப்பட்டதே.  ஆகையால் கன்னியா வெந்நீர் ஊற்றுகளும்  ராம பகவானுடன் தொடர்புடையன என்று சொல்லுவதில் பொருள் உண்டு 107 டிகிரி முதல் 86 டிகிரி வரை வெப்பம் இருப்பதும் அந்த நீரில் நோய் தீர்க்கும் ரசாயன உப்புக்கள் இருப்பதும் ஆராய்சசியில் தெரிய வந்துள்ளது. நான் சென்ற போது ஆண்களும் பெண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். வெளியே வரும் வழி நெடுகிலும் கடைகள். அங்கு பல மூலிகைகளும் விற்கப்பட்டன.

Xxxxx

யாழ்ப்பாணம் முதல் கண்டி /கதிர்காமம் வரை ராமர் பெயர் கொடி கட்டிப் பறக்கிறது . மன்னார் அருகில் ராமர் அமைத்த  ராமர் சேது பாலமும் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது  அதுவும் 52 புனித இடங்களில் ஒன்று .

114. ராம சேது (சிங்களத் தீவினுக்கோர் பாலம்)

இதுவும் 52 புனித ஸ்தலங்களில் ஒன்று.

ராமர் கட்டிய பாலத்தை நாஸா NASA விண்வெளி புகைப்படங்களும்  உறுதி செய்கின்றன . இதை மக்கள் பயன்படுத்தும், இந்தியா- இலங்கை கடல் பாலமாக மாற்றவேண்டும் INDIA- SRI LANKA SEA BRIDGE  . பாரதியார் சொன்ன ஆரூடங்களில் இன்னும் இரண்டு பலிதமாகவில்லை.

சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் என்று பாடினார் பாரதி. ஆகையால் பங்களா தேஷ், பாகிஸ்தான் என்ற எல்லைகள் மறைந்து அகண்ட பாரதம் உருவாவது சத்தியமான உண்மை.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

என்று பாடியதால் பாலம் அமைந்ததே தீரும் என்று  11 September  2015 கட்டுரையில் இதே பிளாக் BLOG கில் எழுதியுள்ளேன்

இந்தியா- இலங்கை ரயில்வே மற்றும் சாலைப் பாலம் அமைந்தே தீரும் .

மேலும் பல ராமாயண ஸ்தலங்களை அடுத்ததாகக் காண்போம்

தொடரும்…………………………………

Tags – இலங்கை, ராமாயண , தலங்கள் , 52, பகுதி 48, புனித ஆலயங்கள் , விபீஷணன், கோவில் சிங்களத் தீவினுக்கோர் பாலம்

சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர்- 3 (Post No.12,671)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,671

Date uploaded in London –  –  4 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – பாகம் 3 

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை: 

1. ஆறு செல் படலம்

2. கங்கை காண் படலம்

3. திருவடி சூட்டு படலம்

பிற்சேர்க்கை

இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் நான்காவது நூலாக அமைகிறது.

தூத்துக்குடியில் பாரம்பரிய மிக்க பெரும் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் இவர். வயது 73. யூனியன் வங்கியில் பெரும் பொறுப்பை முப்பது வருடங்களுக்கும் மேலாக வகித்தவர் இவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய பல மொழிகளில் வல்லுநர். இராமாயண, மஹாபாரத இதிகாசங்களையும் புராணங்களையும் ஆழ்ந்து படித்ததோடு அவற்றின் மீது கொண்ட தீவிரப் பற்றால் அவற்றை நன்கு ஆராய்ந்து அதில் உள்ள நுட்பங்களையும் ரகசியங்களையும் தொகுத்து வருபவர். அதை தம் புத்தகங்கள் வாயிலாக உலகிற்குத் தந்து வருகிறார். இராமாயணம் பற்றிய சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்த நூலில் என்னுரையாக இவர் கூறுவது :-

“கம்பர் ஒரு மகா சமுத்திரம். அதன் கரையில் கூழாங்கற்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் நான். அந்த சமுத்திரத்தில் இறங்கி எளிதாக முத்தெடுக்க முடியாது. அதற்கு அனுபவம் நிறைந்தோர் உதவி தேவை. அந்த வரிசையில் நாமக்கல் கவிஞர், ஐயா கம்பவாரிதி ஜெயராஜ், பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன், அ.ச. ஞானசம்பந்தன், சுந்தர சண்முகனார், கணபதிப் பிள்ளை போன்ற சான்றோர்களின் உதவியோடும் நலுங்கு மெட்டு இராமாயணம், வீரபத்திர இராமாயணக் கும்மி, இராமாயண அம்மானை, அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனைகள் போன்ற நூல்களின் துணையோடும் கம்பன் என்னும் கடலில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்துள்ளேன்.”

இராமாயண வெண்பாவிலிருந்து அழகிய பாடல்களை அந்தந்த இடத்திற்குத் தக்கபடி நூலில் தரப்பட்டதைக் காண்கிறோம்.

எடுத்துக்காட்டு:
பரதனுடன் சென்ற சேனையின் வர்ணனை:

கார் உற்ற வண்ணக் கடல்போல் வரும்சேனை

பேர் உற்றி டுங்கால் பெரும் குணத்தோன் -சீரை உடை

சுற்றினான் தம்பியொடும் தோன்றினான் பொன் தேர் மன்

முற்றினான் சேனை முகம்.

கூனியும் கூடப் போகிறாள். அவளை சத்ருக்னன் காண்கிறான்.

“செல்லும் கால் மந்தரையாம் தீயவளைக் கண்(டு) இவளைக்

கொல்வன் எனச் சென்றான் கொதித்து.”

குகன் பரதனை நீ வந்த காரணம் யாது? எனக் கேட்க பரதன் பதில் நவில்கிறான் இப்படி:

அண்ணனை நாடாள வாக்கி அவனடிக் கீழ்

நண்ணிப் பணிபுரிய நாடுகின்றேன் – புண்ணியனே!

நின்னையர சாக்கினேன் நீயாள்வாய் என்றெனக்கே

அன்னைதரு கீழ்மை யற

–    (கவிஞர் ஆதிமூலப் பெருமாளின் குஹவெண்பா)

பரதன் அயோத்தி திரும்பி அரசப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இராமன் பரதனிடம் அன்புக் கட்டளை இடுகிறான்.

அதை அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனையில் உரைக்கிறார் இப்படி:

“இன்னஞ் சிறு பிள்ளை போலே என்னை அழைக்கிறாய் உன்னை

என்ன சொல்வேன் பரதா என் கண்ணின் மணியே!

முன்னதாக நான் கொண்டு பின்னாக அரசுனக்கு

முறையாலே தந்தேன் என் உரை பெய்யாமல்

உன்னாலும் எந்நாளும் சொன்னபடி நடக்கும் என்று

உசரப்போன தசரதற்கு வசை வையாமல்….

சின்னாபின்னங்களாய்ப் பட்டணமும் பரிசனமும்

சேற்றில் நட்ட கம்பம் போலே தொய்யாமல்

என் ஆனாய் தம்பி உன் நாட்டை ஆளடா

எப்படி நான் சொன்னாலும் அப்படி நீ செய்யாமல்

இன்னஞ் சிறுபிள்ளை போலே என்னை அழைக்கிறாய்….

இப்படி நூல் முழுவதும் பல நூல்களிலிருந்து எடுத்தாளப்படும் பகுதிகளைப் படித்து மகிழலாம்.

காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

அவர்தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம். படிக்கடிஜிடல் வடிவத்தில் நூலைப் பெறஅச்சுப் பதிப்பாகப் பெற என இப்படி மூன்று விதங்களில் இந்த நூலைப் பெறலாம்.

***

PHOTO STORY- Indian Finance Minister Nirmala Sitaraman  in Sri Lanka

Posted by swami_48@yahoo.com on 3-11-2320

Nirmala ji visited famous Hindu temples of Lord Shiva (sung by Saints Sambandar and Appar 1400 years ago) in Thirukona malai,  Nallur Kandaswamy Temple in Jaffna. She visited tooth relic of Buddha at Kandy and paide respects to Buddhist saints. She attended other secular events. All news papers in Sri Lanka gave huge publicity for her.

Please see the photos taken from Newspapers:

According to 1000 year old Gita Govindam of Poet Saint Jayadeva,  Gautama Buddha was Vishnu’s Ninth Avatar.

Nirmalaji visited Buddha’s tooth relic at Kandy and paid respect to Buddhist saints.

Buddham Saranam Gachcaami. Sangam Saranam Gachcaami. Dhammam Saranam Gachcaami. 

–subham—

Tags- Nirmala sitaraman, Trincomalee, Kandy, Nallur, Jaffna

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 8 (Post No.12,670)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,670

Date uploaded in London – –  –  3 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 8

SLOKA 22

दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं सदा दुर्जने

प्रीतिः साधुजने नयो नृपजने विद्वज्जने चार्जवम् ।

शौर्यं शत्रुजने क्षमा गुरुजने कान्ताजने धृष्टता

ये चैवं पुरुषाः कलासु कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥ 1.22 ॥

தாக்ஷிண்யம் ஸ்வஜனே தயா பரிஜனே சாட்யம் ஸதா துர்ஜனே

ப்ரீதிஹி ஸாது ஜனே நயோ ந்ருப ஜனே வித்வத் ஜனே ச ஆர்ஜவம்

சௌர்யம் சத்ரு ஜனே க்ஷமா குரு ஜனே காந்தா ஜனே த்ருஷ்டதா

யேசைவம் புருஷாஹா கலாஸு குசலாஸ்தேஷ்வேவ லோகஸ்திதிஹி  -1-22

பாடல் 22-ன் பொருள்

ஒருவன் உறவினர்களிடத்தில் மரியாதை காட்ட வேண்டும்;

வேலைக்காரர்களிடம் அன்பாக இருக்க வேண்டும்;

புனிதர்களின் உறவுக்கு ஏங்க வேண்டும்;

ஆட்சியாளரின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;

கற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும்;

எதிரிகளிடத்தில் வீரத்தைக் காட்ட வேண்டும்;

முதியோரிடம் சகிப்புத் தன்மை இருக்க வேண்டும்;

மனைவியிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்;

மனிதர்களின் திறமை, விவேகம், தந்திரம் மூலம்தான்

நல்ல சமுதாயம் வேரூன்றி நிற்கிறது

Xxx

உறவோர்க்குக் கண்ணோட்டம் ஊழியற்கிரக்கம்

மறவோர்க்கு வன்மை வழங்கல் –அறவோர்க்கு

மெய்யன்பு பாராளும் வேந்தர்கனுசரணை

கைவல்ய மாகுங் கணக்கு – 22

படித்தோர்க்கு ஒழுங்கு பகைவர்க்கு வீரம்

முடித்தோர்க் கடக்கம் முறையாம் — துடித்தவிடைப்

பெண்களுக்குத் திட்டம் பெரிதுங்கையாடுவார்

கண்களுக்கு மேல் பெற்றார் கண் -22

22. The stability of the world depends on those men alone, who are skilled in the arts and who display kindness to kinsfolk, compassion to others, deceit towards evildoers, friendship to good people, diplomacy to kings, honesty to the learned, bravery to foes, patience with elders and tact with women.

எல்லோரிடமும் அன்பு காட்டுதல்—

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு- 80

அன்பு இருக்கும் உடல் உயிருள்ள உடல்; அது இல்லாவிட்டால் அது பிணம் ( தோல் போற்றிய எலும்புக்கூடு)

xxx

பெரியார் துணைக்கு ஏங்கு—

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்-442

இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக


xxxx

SLOKA 23

जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं

मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।

चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं

सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மானோன்னதிம் திஸதி பாபம் அபாகரோதி

சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்

ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23

பாடல் 23-ன் பொருள்

புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்;

மந்த புத்தியை  விலக்கும்; சுயமரியாதையை  அதிகரிக்கும்; பாபங்களைப் போக்கும்; மனத்தில் மகிழ்ச்சியை எழுப்பும்; உற்சாகத்தை உயர்த்தும்; சமுதாயத்தில் புகழை  ஈட்டித் தரும்; புனிதர்களின் கூட்டுறவால் கிடைக்காதது ஏதேனும் உண்டோ? செப்புக.

23. Association with good people removes dullness of the intellect, infuses one’s speech with truth, confers dignity, removes sin, gives clarity and joy to the heart and brings fame in all directions. Tell me, what does it not do for men?

உண்மையுரைப்பிக்கும் உயர்மதியை யுண்டாக்கும்

ஒண்மைதிகழ் மானத்தை ஓங்குவிக்கும் — எண்மை

மறத்தையழிக்கும்  மனத்தைக் கொழிக்கும்

புறத் தெங்குங் கீர்த்தி பொலிவிக்கும்  திறத்த பல

சொல்லியென்  மேலோர் தொடர்பு போல் நன்மை செய

வல்ல தொன்றெங்கு மிலை மற்று –-23

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்

நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

xxxxx

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

xxxxxx

SLOKA 24

जयन्ति ते सुकृतिनो
रससिद्धाः कवीश्वराः ।
नास्ति येषां यशःकाये
जरामरणजं भयम् ॥ 1.24 ॥

ஜயந்தி தே ஸுக்ருதினோ ரஸஸித்தாஹா கவீஸ்வராஹா

நாஸ்தி யேஷாம் யச: காயே ஜராமரணஜம் பயம்-1-24

ஆழ்ந்த கல்விகற்றநவ ரசங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் புலவர்களின் புகழ் என்றும் குன்றாது. அப்பேற்பட்ட புலவர்கள் என்றும் வெல்வர். அவர்களுடைய புகழ் அழியும் என்ற பயமே இல்லை.

‘கவி’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் புலவர் என்ற பொருளும் , நெடுநோக்குடைய அறிஞர் என்றும் பொருளும்  உண்டு. உண்மையில் வேத காலக் கவிஞர்கள் அப்படித்தான் இருந்தனர்.

Poets are Great men!

May There be glory to wise men who are learned and accomplished poets.. there is no fear that their fame shall wither or perish- 24

24.  Victorious are the fortunate great poets, who have mastered the Rasas. Their body of fame knows no fear of old age and death.

உள்ளதொன்றுரைகின்ற ஒண் கவியாற் பாவாணர்

எள்ளும் மரணபவ மின்றியே – வில்லரிய

சத்தியமா  ஞானியர்  போல்  தாவாத கீர்த்தியொடு

நித்தியமா வாழ்வார் நிசம் –24 

—- subham —-

 Tags-  Nitisataka part 8, bhartruhari part 8, 4 languages, respect, poets

சீதாதேவி கோவில்; அனுமார் மலை; ராமாயண தலங்கள்- இலங்கை…..Part 47 (Post.12,669)

Sita Devi Temple in Sri Lanka 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,669

Date uploaded in London – –  –  3 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 47

108.மருதநர் மடம் ஆஞ்சநேயர் கோவில்

Maruthanamadam Anjaneyar Kovil – Jaffna

மேலும் ஒரு ஆஞ்சனேயர் கோவில் பற்றிக் காண்போம்.. யாழ்ப்பாணத்திலுள்ள மருதன மடம் அனுமார் கோவில் அதன் கோபுரத்தாலும்  72 அடி உயர அனுமனின் கம்பீரமான சிலையாலும் புகழ் பெற்று விளங்குகிறது.. யாழ்ப்பணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

காங்கேசன் துறை நோக்கிப் பயணம் செய்யும் எவரும் கோபுரத்தையும் அனுமார் சிலையையும் பார்க்காமல் இருக்க முடியாது..மருதனமடம் ஆஞ்சநேயர் கோவிலின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, , பிரமிக்க வைக்கும் 72 அடி உயர அனுமன் சிலை ஆகும்.  கலங்கரை விளக்கம் போல  இந்த கோபுர அமைப்பை தொலைவிலிருந்து பார்க்க முடியும்..

மருதனமடம் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி பூஜைகள் தவிர, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த நாட்கள் அனுமாருக்குப் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன,

கோவிலின் மண்டபம் மிகப்பெரியது ; வண்ண, வண்ண சிலைகளும் ஓவியங்களும் அலங்கரிப்பதோடு மிகவும் சுத்தமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இது ராமாயண காலத்துடன் நேரடி தொடர்புடையது அல்ல;  ஆயினும் ராமாயணத்தில் அனுமன் கதாபாத்திரம் இல்லையேல் கதையே இல்லை என்பது நமக்குத் தெரியும். கண்ணகி மதுரையை  எரித்து அதர்மத்தை அழித்தாற்போல , இலங்கையில் அதர்மத்தை அழிக்க உதவியவன் அவன். ஆகவே இலங்கைத் தமிழர்கள் என்று மறவாத மா வரன் ஆஞ்சனேயன் ; இந்து மதத்தில் ஒரே மஹாவீரன் பட்டம் பெற்றவன் அனுமன்தான். சமண மதத்தில் 24ஆவது தீர்த்தங்கரராக வந்த மஹாவீரர் என்ற  மற்றொரு மாவீரனையும் உலகமே போற்றும்.

XXXXX

109. சீதா தேவி கோவில் , நுவரெலியா

இலங்கையிலுள்ள ராமாயண  திருத்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்றது நுவரெலியா சீதை அம்மன் கோவில் ஆகும்  இலங்கைத் தீவின் நடுநாயகமாகத் திகழ்வது மலையகம். இங்கு சீதா எலிய  என்னும் இடத்தில் சீதை அம்மன் கோவில் அமைந்துள்ளது.. நுவரெலியா நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கோவில் இருக்கிறது இங்கேதான் இராவணன் சீதா தேவியை சிறை வைத்திருந்த அசோக வனம் இருந்தது  எலிய என்றால்  சமவெளி என்று அர்த்தம் . அருகில் சீதா கொண்ட என்ற ஓடை இருக்கிறது அங்குள்ள பள்ளங்களை ராவ ணனின்  யானைகள் நின்ற கால் சுவடுகள் என்பர். இன்னும் சிலர் அனுமனின் கால் சுவடுகள் என்பார்கள். ஹக்கலா தாவரவியல் பூங்காவிலிருந்து 1 கிமீ தொலைவில் கோவில் உள்ளது. கோவில் அருகிலுள்ள கருப்பு நிற மண், இலங்கை நகருக்கு அனுமன் எரியூட்டியதால் ஏற்பட்டது என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஓடையில் மூன்று சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.. காலை பூஜை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை பூஜை பிற்பகல் 2 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடக்கிறது.

கோவில் சுவர்களில் ராமாயணக் காட்சிகளை ஓவியமாக வைத்துள்ளார்கள். அமைதியான சூழ்நிலையிலுள்ள சிறிய கோவில்தான் இந்த கோவிலில் ராமர், சீதா தேவி, லக்ஷ்மணன்,  அனுமன் , கிருஷ்ணர், கணேசர் ஆகியோரைத்  தரிசிக்கலாம் .

சிவமயம் சங்கர சுவாமி இந்தக் கோவிலை ஸ்தாபித்தார். 5000 அடி உயர த்தில்  அமைந்த இந்த மலைப் பிராந்தியத்தில் காட்டு மலர்கள் அதிகம் பூக்கின்றன. அவகைகளை பூஜைக்குச் சீதா தேவி பயன்படுத்தியதால் மலர்களுக்குக் கூட  சீதா தேவியின் பெயர்கள்தான் !

இலங்கை அரசாங்கம் 2023ல் சீதா தேவி கோவில் தபால் தலையையும் வெளியிட்டு ராமாயணத்தைச் சிறப்பித்துள்ளது.

Xxxx

110.ருமசெல்ல / ராமா சைல அனுமார் மலை Rumasalla Mountain / Raama Saila= Herb Mountain

இலங்கையின் தென் கோடியில் இந்து மஹா சமுத்திரத்தின் கடலோரமாக காலி GALLE  நகரம் இருக்கிறது. அங்கே அனுமார் சிலையும் அனுமன் மலையும் இருக்கிறது . ராம சைல = என்பது இப்போது ரூம செல என்று மருவிவிட்டது . சைலம் என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு மலை என்று பொருள் . இது ராமாயண சுற்றுலாவில் முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

கடற்கரைப் பக்கத்தில் அடர்ந்த மலை, காடு , பீச்/ BEACH கடற் கரை அனைத்தும் கொண்டது ராம சைலம்.

லட்சுமணன் மூர்ச்சை  அடைந்த போது அவனை உய்ப்பிக்க அனுமன் இம்மலைக்குச் சென்று சஞ்சீவி பர்வதத்தை/ மலையைக் கொணர்ந்தான் என்பது ராமாயணம் அறிந்தோருக்கு நன்கு தெரியும். உலகில் ரிக் வேதத்துக்கு அடுத்தபடியாக மூலிகை வைத்தியம் வருவது ராமாயணத்தில்தான் . . அனுமன் கொண்டு வந்த இமயமலைத்  துண்டுகள் ஐந்து இடங்களில் விழுந்ததாகவும் அதில் ஒரு மருந்து மலை இங்கே விழுந்ததால் இது ராம சைல = RAMA SAILA =  RUMA SALLA  என்று பெயர் பெற்றதாகவும் பக்கதர்கள் பகர்கிறார்கள் .

இப்போது அங்கு இரண்டு  அனுமன் சிலைகள்  உள்ளன . ஜப்பானியர் கட்டிய சமாதான/ அமைதி பகோடாவில் PEACE PAGODA இந்துக் கடவுளருடன்  ஆஞ்சனேயர் சிலையும் இருக்கிறது . விஷ்ணு , முருகன் சிலைகளும் ஜப்பானியர் கட்டிய புத்த விஹாரத்தில் இருக்கின்றன. இங்கு 150 வகையான மூலிகைகள் வளருவதை தாவரவியல் அறிஞர்கள் பட்டியலிட்டுள்ளதால் ராமாயண மருந்து மலை / சஞ்சீவி மலையின் பகுதி இதுவே என்பதும் உறுதியாகிறது

To be continued…………………………………

—SUBHAM—–

TAGS — இராமாயண தலங்கள், இலங்கை, ரூமசெல்ல , ராம சைல , ஆஞ்சனேயர் , சஞ்சீவி பர்வதம், மலை, மூலிகை, மருந்து மலை ,Part 47,

ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – 2 (Post No.12,668)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,668

Date uploaded in London –  –  3 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – பாகம் 2

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:

1.தைலமாட்டுப் படலம்

2. கங்கைப் படலம்

3. குகப் படலம்

4. வனம் புகு படலம்

5. சித்திரகூடப் படலம்

6. பள்ளிபடைப் படலம்

பிற்சேர்க்கை

இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் மூன்றாவது நூலாக அமைகிறது.

நூலுக்கு வழங்கிய முன்னுரையில், “இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எளிதாக்கி மக்களிடையே கொண்டு செல்ல பல உபந்யாசகர்கள், சான்றோர்கள், சொற்பொழிவாளர்கள் அயராது பாடுபடுகின்றனர். இந்த வரிசையில் என்னுடைய சிறு முயற்சியாக பாலகாண்டத்தையும் அயோத்யா காண்டத்தையும் தொகுத்து வழங்கியுள்ளேன். கம்பரின் அயோத்தியா காண்டத்தைத் தொகுத்து இப்போது வழங்கியுள்ளதில் இந்த இரண்டாம் பாகம் மலர்கிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆங்காங்கே கம்பரின் இனிய கவிதைகளோடு இராமாயண வெண்பா,  அருணாசலக் கவிராயரின் இராமநாடக கீர்த்தனை உள்ளிட்ட நூல்களிலிருந்து பாடல்களைத் தந்து ஒப்பிட்டு அவர் ஒவ்வொரு காட்சியையும் விவரிப்பது பல நூல்களின் சாரத்தை ஒருங்கே சேர்ந்து அருந்திய மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த நூலுக்கு திரு ச.நாகராஜன் அணிந்துரை வழங்கியுள்ளார்.

அதில் ஒரு பகுதி இது:

“மொழிவளம் மொழிகுவேனோ மொழிகதைத் தருண முன்னிப்

பொழிவளம்  புகலு கேனோ! பொருள் வளம் புடைத்து விம்மிக்

கழிவளங் கழறு கேனோ! காவியக் கழனி யோங்கிச்

செழிவளஞ் சிரித்து முத்தந் தெரித்தொளி சிதறும் பாவை”

என்று ‘கம்பராமாயண கௌஸ்துப மணி மாலையில்’ கம்ப பக்தர் பேராசிரியர் கே.என். சிவராஜ பிள்ளை கம்பனை வியந்து பாராட்டுகிறார்.

ஆனால் இந்த வேக யுகத்தில் கம்பனை இனம் காட்ட ஒருவர் வேண்டுமே! இந்த வகையில் தான் இராமாயணக் கடலில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டு ஆராய்ந்து அதில் உள்ள பல நல் முத்துக்களைக் கண்டு அவற்றை உலகினருக்கும் தரவல்ல ஒருவராகத் திகழ்கிறார் திரு ஆர். சேஷாத்ரிநாதன்.

அவரது இராமாயண ஈடுபாடும் ஆய்வும் பாராட்டுக்கு உரியது.”

*

பிற்சேர்க்கையில் அவர் இந்த நூலை எழுத உதவிய நூல்களின் பட்டியலைத் தருகிறார்.

1) வால்மீகி ராமாயணம் 2) கம்ப ராமாயணம் 3) துளஸி ராமாயணம் 4) இராமாயண வெண்பா 5) நலுங்கு மெட்டு ராமாயணம் 6) இராமநாடகக் கீர்த்தனை 7) வீரபத்திர ராமாயணக் கும்மி 8) ராமாயண அம்மானை 9) ராமாயணக் கப்பல் உள்ளிட்ட நூல்கள்.

வியக்கிறோம். 

காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம். படிக்கடிஜிடல் வடிவத்தில் நூலைப் பெறஅச்சுப் பதிப்பாகப் பெற என இப்படி மூன்று விதங்களில் இந்த நூலைப் பெறலாம்.

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 7 (Post No.12,667)

Picture- Bhartruhari meeting his wife after becoming an ascetic

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,667

Date uploaded in London – –  –  2 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

SLOKA 19

केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला

न स्नानं न विलेपनं न कुसुमं नालङ्कृता मूर्धजाः ।

वाण्येका समलङ्करोति पुरुषं या संस्कृता धार्यते

क्षीयन्ते खलु भूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥ 1.19 ॥

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் ஹாரா ந சந்த்ரோஜ்வலா

ந் ஸ்நானம்ந விலேபனம் நகுஸுமம் நாளங்ருதா மூர்த்தஜாஹா

வாண்யேகா சமலங் கரோதி புருஷம் யா ஸம்ஸ்க்ருதா தார்யதே

க்ஷீயந்தே கலு பூஷணானி ஸததம் வாக் பூஷணம் பூஷணம்

மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;

19. Armlets and necklaces shining like the moon, do not adorn a person. Nor do baths, perfumes, flowers and decked hair. Refined speech alone adorns the person bearing it. All ornaments fade away; the ornament of speech is the only lasting one.

நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.

நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ

ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.

ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.

நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

குஞ்சியகுங் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சளழகும் அழகல்ல- நெஞ்சத்து

நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்

கல்வியழகே அழகு- நாலடியார்

சிகை அலங்காரமோ, கரை போட்ட ஆடை அலங்காரமோ, மஞ்சள் முதலிய அலங்காரப் பூச்சுகளோ அழகல்ல. கல்வி கற்று நடு நிலையில் நிற்பதே அழகு.

இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு விளக்கமுடியாதவர்கள்

மலர்ந்தும் மணம் வீசாத மலர்களைப் போன்றவர்கள்.

சொல் அழகு

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்றமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

ஆரமும் தோளணியும் ஆண்பிள்ளை  பூண்பதேன் ?

சார சந்தனத்தை த் தடவுவதேன் ?– வாரி

குடுமியிற் பூச்சூடுவதேன் கோலமவையல்ல

நாட்டுசபையில் வாக்கழகே  நன்று – 19


XXXX

SLOKA 20

विद्या नाम नरस्य रूपम् अधिकं प्रच्छन्नगुप्तं धनं

विद्या भोगकरी यशःसुखकरी विद्या गुरूणां गुरुः ।

विद्या बन्धुजनो विदेशगमने विद्या परा देवता

विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीनः पशुः ॥ 1.20 ॥

வித்யா நாம நரஸ்ய ரூபமதிகம் ப்ரச்சன்னகுப்தம் தனம்

வித்யா போககரீ ய்ஸ்ஹ ஸுககரீவித்யா குரூணாம் க்ருஹு

வித்யாம் ப்ந்துஜனோ விதேச கமனே வித்யா பராதேவதா

வித்யா ராஜஸு பூஜ்யதேந து தனம் வித்யா விஹீனஹ பசுஹு -20

20. Learning is enhanced beauty. It is a hidden, guarded treasure. It gives enjoyment, fame and happiness. It is the greatest of great things. When travelling to foreign lands, it is a friend. It is the supreme deity. It is learning, not wealth that is venerated by kings. A person who is bereft of learning is indeed a beast.

கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;

அவனுடைய ரஹஸிய செல்வம் அது;

வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது.

‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;

வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்; கல்வியே உயர்ந்த கடவுள்.

மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்– குறள் 410

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

கல்வியே பூணாகும் கல்வியே வைப்பாகும்

கல்வியே பேரின்பம் கற்பிக்கும் –கல்வியே

மன்னன் மதிப்பாம் மகாதேவனாங் குருவாம்

துன்னு சுற்றமாகுந் தொடர்ந்து – 20

XXXXX

SLOKA 21

क्षान्तिश्चेत्कवचेन किं किम् अरिभिः क्रोधो‌स्ति चेद्देहिनां

ज्ञातिश्चेदनलेन किं यदि सुहृद्दिव्यौषधं किं फलम् ।

किं सर्पैर्यदि दुर्जनाः किम् उ धनैर्विद्या‌नवद्या यदि

व्रीडा चेत्किम् उ भूषणैः सुकविता यद्यस्ति राज्येन किम् ॥ 1.21 ॥

க்ஷாந்திஸ் சேத் கவசேன கிம் கிம் அரிபிஹி அஸ்தி சேத தேஹினாம்

ஞாதிஸ்சேத் அநலேன கிம் யதி சுஹ்ருத்திவ்யௌஷதம் கிம் பலம்

கிம் ஸர்ப்பையதி  துர்ஜனாஹா கிம் உதனைர்வித்யா அனவத்யா யதி

வ்ரீடா சேத் கிமு பூஷணைஹி ஸுகவிதா யத்யஸ்தி ராஜ்ய்ரேன கிம் 1-21

பர்த்ருஹரியின் நீதி சதகம் பர்த்ருஹரி பாடல் 21

பாடல் 21-ன் பொருள்

மன்னிக்கும் குணம் உள்ளவனுக்கு கவசம் எதற்கு?

கோபம் உள்ளவனுக்கு எதிரிகள் எதற்கு?

ஒருவனுக்கு அறிவு இருந்தால் தீயதை எரிக்க தீ எதற்கு?

உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?

தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?

நல்ல விவேகம் இருந்தால் பணம் எதற்கு?

நல்ல குணங்கள் இருந்தால் ஆபரணங்கள் எதற்கு?

கவிதையை ரசிக்கத் தெரிந்துவிட்டால் அவனுக்கு ராஜ்யம், அரசாட்சி எதற்கு?

21.  When one has forgiveness, what need is served by an armour? When there is anger, why do people need (other) enemies? What use is there for fire when kinsfolk exist (to cause destruction)? What purpose can medicines serve when there is a friend (to help healing)? If there are evil people, serpents are not necessary and neither is wealth, when there is defect-free learning. What is the use of ornaments when one has modesty, and if one has beautiful poetry, even kingship has no value.

மன்னிக்கும் குணம்–

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல்- 314

உனக்கு துன்பம் விளைவித்தவர்க்கு நன்மைகள் பல செய்து அவர்கள் வெட்கப்படும்படி செய்க; அவர் செய்த கெடுதிகளையும் மறக்க.

தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என் குற்றமாகும் இறைக்கு- குறள் 436

தன்னுடைய குற்றத்தை ஆராய்ந்துவிட்டு, மற்றவர் குற்றத்தை

ஆராய்க; இதில் என்ன கஷ்டம்?

பொறுமையே சட்டை பொறாமை பகைவர்

வெறுமை மனத்தாயத்தார் வெந்தீ மறுவிலா நேசர்

மருந்து நிலவுலகிற் பொல்லாத

நீசரரவம்  நிசம் –

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடனுறைந்தற்று- 890

ஒரே கருத்து இல்லாதவருடன் வாழ்தல், குடிசையில் பாம்புடன் வசிப்பது போலாகும்.

கோபம் பற்றி வள்ளுவன்

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்

ஏமப் புணையைச் சுடும்- 306

(சேர்ந்தாரைக் கொல்லி= ஆஸ்ரயாசஹ)

கோபப்பட்டவனை கோபம் என்னும் நெருப்பே அழித்துவிடும்; அவனுக்குத் துணையாக நின்றாரையும் அழித்துவிடும் (நெருப்பு போல)

—–subham——-

Tags- Bhartruhari, Part 7, 4 languages, Slokas 19,20, 21

Rajasthan’s Tripura Sundari Temple is everyone’s favourite around election season!


Posted by swami_48@yahoo.com on 2-11-2023

PTI Story is published in The New Indian Express and The Week

 Vasundhara Raje had reportedly stayed inside the temple for the entire duration of the counting of votes of the 2013 assembly polls – which she won – and stayed there till the results were declared.

Published: 02nd November 2023 07:58 PM  |   Last Updated: 02nd November 2023 07:59 PM

By PTI

BANSWARA: Around election time, a temple in Rajasthan’s Banswara district becomes a favourite of politicians seeking some divine intervention.

Former chief minister Vasundhara Raje is said to be a firm believer of the temple deity, Maa Tripura Sundari, who the devout say helps people seeking power or an “empire” (samrajya).

And politicians across party lines, from village heads to ministers, are regular visitors to the Tripura Sundari temple in Umrai village

“Maa Tripura Sundari blesses devotees who seek ‘samrajya’, which is visits by those wishing to contest the assembly polls has increased,” Nikunj Mohan Pandya, a priest at the temple, told PTI.

Polling in all 200 assembly constituencies in Rajasthan will take place on November 25 and counting will be held on December 3.

“Those wishing for ‘samrajya’ and success in politics visit the temple and pray to Maa Bhagwati (Tripura Sundari). Leaders from different political parties visit the temple. Some have immense faith, and regularly visit and offer prayers. Sadhna is performed at the temple,” he said.

Pandya said that erstwhile kings and rulers would offer prayers before every important battle.

Raje, who often visits the temple, had reportedly stayed inside the temple for the entire duration of the counting of votes of the 2013 assembly polls – which she won – and stayed there till the results were declared.

Chief Minister Ashok Gehlot and several state ministers have also visited the temple this year.

Temple manager Jagesh Panchal said that Prime Minister Narendra Modi has also visited the temple when he was the Gujarat chief minister.

Apart from him, former president Pratibha Patil, many union ministers, CMs of other states have also come for darshan.

On Thursday, Union Minister of Tribal Affairs Arjun Munda offered prayers at the temple.

Pandya said that renovation of the temple has been done from time to time by Panchal samaj, who manage the temple.

Major development works outside the temple were also done during Raje’s tenure as CM.

Deputy leader of opposition Satish Poonia, who also frequents the temple, told PTI, “The place of Tripura Sundari is full of energy. People visit and pray to the goddess so that they can work with more enthusiasm in service of the people in society.”

He said the idol of Tripura Sundari inspires people and that he has strong faith in the deity.

Apart from politicians, a large number of regular devotees also offer prayers at the temple.

Located at a distance of 14 km from Banswara district headquarters, the Tripura Sundari temple is said to be centuries-old but the exact date of its establishment is unclear.

It is said that earlier there used to be three forts named Shaktipuri, Shivpuri and Vishnupuri around the temple and since it was situated in the middle of the forts, Goddess Bhagwati was named Tripura Sundari.

In the sanctum sanctorum, there is a black-coloured grand and attractive idol of the deity with eighteen arms, carrying different weapons in each.

Other small idols, called Das Mahavidya, are also present.

Shri Yantra is engraved at the bottom of the idol, which has its own special tantric significance.

“For centuries, the temple has been a famous worship centre for ‘Shakti’ seekers. People from far and wide come and bow their heads at this Shaktipeeth. During Navratri festival, special programmes take place every day in the temple’s courtyard,” he said.

Priest Ganesh Sharma said, “Due to Jagat Janani Tripura Sundari Shaktipeeth, this place is alive, energetic and powerful.”

President of the temple trust Kanti Lal and general secretary Natwar Lal said that a lot of development work has been done over the years.

They said that people from all over Rajasthan and other states, including Madhya Pradesh, Gujarat, Maharashtra, visit the temple.

During Navratri, special programmes are organised and lakhs of devotees visit the temple, they added.

Ashok Panchal, former president of the trust said, “Whatever wish is asked in this temple, it is definitely fulfilled by Maa Tripura. Due to its importance, many big leaders of the country have come to the temple to bow their heads before the goddess,” he said.

—-subham—-

Tags- Tripura Sundari, Rajasthan, Banswara, Election Time