C U ALL ON 25TH DECEMBER ,2023
C U ALL ON 25TH DECEMBER ,2023
C U ALL ON 25TH DECEMBER ,2023
C U ALL ON 25TH DECEMBER ,2023
C U ALL ON 25TH DECEMBER ,2023
C U ALL ON 25TH DECEMBER ,2023
Posted by Tamil and Vedas on December 17, 2023
https://tamilandvedas.com/2023/12/17/see-you-all-on-25-12-2023/

Post No. 12,845
Date uploaded in London – – 17 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

QUIZ SERIAL NUMBER—89
1.குரு நானக் எங்கே எப்போது பிறந்தார்?
xxxx
2.அவருடைய தாய் தந்தையர் யாவர்?
Xxxxx
3.குரு நானக்கின் சீடர்கள் யார்? அவருக்குப் பின்னர் சீக்கிய மதத்தில் எத்தனை குருமார்கள் வந்தனர் ?
Xxxx
4.அவர் எப்போது, எங்கே இறந்தார்?
Xxxx
5.குரு நானக் ஏன் சீக்கிய மதத்தை தோற்றுவித்தார் ?
Xxxxx
6.அவருடைய உபதேசங்கள் என்ன ? அவைகளை எங்கே படிக்கலாம்?
Xxxxx
7. குரு நானக் அற்புதங்களைச் செய்தாரா ?
Xxxx
8.அவர் எங்கெங்கு பயணம் செய்தார் ?
xxxxx
9.குரு நானக் திருமணம் ஆனவரா ? குழந்தைகள் உண்டா ?
xxxx
10. அவர் மாமிசம் சாப்பிவிட்டாரா ?
xxxx
விடைகள்

1.குரு நானக், 15 ஏப்ரல் 1469ல் பிறந்தார். சீக்கிய மதத்தை நிறுவிய அவர் , கபீரின் சீடர் . ராய் பொய்டி தால்வாண்டி கிராமத்தில் ஒரு இந்து மதக் குடும்பத்தில் பிறந்தார்; இப்போது அது பாகிஸ்தான் எல்லைக்குள் லாகூர் அருகில் இருக்கிறது நன்கானா சாஹிப் என அழைக்கப்படுகிறது. அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. Rai Bhoi di Talvandi [now Nankana Sahib, Pakistan], near Lahore in Pakistan.
xxxxxx
2.தந்தை பெயர் மேத்தா கல்யாண் தாஸ் பேடி (களு மேத்தா) , நானக்கின் தாயார் பெயர் திரிப்பா தேவி . சகோதரியின் பெயர் பீபி நானகி .அவரும் ஒரு ஆன்மீகவாதி. .
xxxxx

3.அவருக்குப் பின்னர் சீக்கிய மதத்தில் ஒன்பது குருமார்கள் வந்தனர் ; கடைசியாக வந்த குருகோவிந்த சிம்மன் இனி குரு ஸ்தானத்தில் யாரும் வேண்டாம் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.
xxxxx
4.குரு நானக் 22 செப்டம்பர் 1539ல் இறந்தார். அவர் இறந்த இடமும் பாகிஸ்தானுக்குள்தான் இருக்கிறது ; அவர் இறந்த நரோவால் கர்தார்பூர் என்னும் இடத்தில் தர்பாரசாஹிப் குருத்வாரா கட்டப்பட்டுள்ளது
Gurdwara Darbar Sahib Kartar Pur in Narowal, Pakistan.
xxxx
5.கடவுள் ஒருவரே; அவர் எல்லா மதத்திற்கும் பொதுவானவர்; உருவமற்றவர் என்று சொல்லவும் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் பொதுவான மத்திய பாதையைக் காட்டவும் ; அர்த்தம் புரியாமல் செய்யப்படும் சடங்குகள் தேவை இல்லை என்று காட்டவும் புதிய மதத்தை உருவாக்கினார். ஜாதிப்பிரிவினைகளையும் அவர் எதிர்த்தார்.
சீக்கியர்களும் மறுபிறப்பு, கர்ம வினைகொள்கைகளில் நம்பிகை உடையவர்கள். மேலும் இந்துக்கடவுளரின் பெயர்கள், ஓம் ஆகியன சீக்கிய வேதப்புஸ்தகத்தில் இருக்கின்றன ; சீக்கியர்கள் ஆதிக்கிரந்தம் என்னும் புஸ்தகத்தை வழிபடுகின்றனர் ; சுருக்கமாகச் சொன்னால் இந்துமதத்துக்கு மிகவும் நெருக்கமானது .
XXXX
6. குருநானக்கின் 3 போதனைகள்
வந்த் சக்கோ: தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்தல், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.
கிரட் கரோ: சுரண்டல் அல்லது மோசடி இல்லாமல், நேர்மையாக ஒரு வழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுதல்.
நாம் ஜப்னா: பரிசுத்த நாமத்தை ஜபித்தல், இதனால் எல்லா நேரங்களிலும் கடவுளை (இறைவன் -ஓயாத பக்தி) நினைவில் கொள்ளுதல்.
குரு கிரந்த சாஹிப் என்னும் சீக்கிய மத வேதப் புஸ்தகத்தில் அவருடைய மற்றும் அவருக்குப்பின் வந்த குருமார்களின் போதனைகளைக் காணலாம்
XXXX
7.குரு நானக் பல அற்புதங்களைச் செய்ததாக பக்தர்கள் நம்புகின்றனர்; நதிகளின் போக்கையும் சூரிய சந்திரர்களின் போக்கையும் மாற்றினார்; நோய்களைத் தீர்த்தார்; அக்ஷய பாத்திரம் போல உணவு படைத்தார் என்பன சில .
XXXX
8.குரு நானக் நிறைய மாநிலங்களுக்கும்,பல நாடுகளுக்கும் சென்றார். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்தவர் , வங்காளம், அசாம், தமிழ்நாடு, காஷ்மீர், லடாக், திபெத், இலங்கை ,அரேபிய தீபகற்பத்தில் உள்ள பாக்தாத், மெக்கா மற்றும் மதினா ;அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். இவர் லாசா (திபெத்) செல்லும்போது, தவாங் வழியாக பூடானைக் கடந்து சம்துராங் சு வழியாக திபெத்துள் நுழைந்தார். . இன்னும் சில பயணங்கள் பற்றி உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
xxxxx
9.குரு நானக்,16 வயதில் சுலக்கினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு சிரீசந்த், இலட்சுமிசந்த் இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
XXXX
10.சீக்கிய குருத்வாரா நடத்தும் லங்கார் என்னும் 24 மணி நேர உணவுக் கூடங்களில் மாமிசம் சமைப்பதோ பரிமாறுவதோ இல்லை; குரு நானக்கும் மாமிசம் சாப்பிட்டதில்லை என்பதே பெரும்பாலோர் கருத்து. ஆனால் சீக்கியர்கள் மாமிசம் சாப்பிடுவார்கள் . சில பிரிவினர் மாமிசமோ , முட்டையோ சாப்பிடுவதில்லை.

—SUBHAM—
TAGS- குரு நானக் பத்து, கேள்வி பதில், குருத்வாரா , மாமிச உணவு
Posted by Tamil and Vedas on December 17, 2023
https://tamilandvedas.com/2023/12/17/quiz-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-quiz-post-no-12845/

Post No. 12,844
Date uploaded in London – – 17 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 36
கோவில் எண்கள் –37, 38
37.பரவூர் மூகாம்பிகை கோவில்

கர்நாடகத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவில் புகழ் ஆதி சங்கரரால் பரப்பப்பட்டது ; ஸ்ரீ சக்கரத்துடன் சரஸ்வதி தேவி அங்கே கொலு வீற்றிருக்கிறாள் ; அவளது புகழை எம். ஜி. ஆரி.ன் வைர வாளும் ஜெயலலிதாவின் தங்க நகைகளும் தமிழர்களிடையே பரப்பியதை முன்னரே ஒரு கர்நாடக கோவில் கட்டுரையில் தந்துள்ளேன் .
எங்கே இருக்கிறது ?
எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கிறது வடக்கு பரவூர். இதை தட்சிண மூகாம்பிகை கோவில் என்று சொல்லுவார்கள். இதுவும் சரஸ்வதி கோவில்தான் .
கோவில் வரலாறு
முன்னர் பரவூர், கொச்சி சமஸ்தானத்தில் இருந்தது; பரவூரில் இருந்த சிற்றரசர் பரவூர் தம்புரான் கர்நாடகத்திலுள்ள மூகாம்பிகையை வணங்க அடிக்கடி செல்லுவார். அவருக்கு வயது ஆக ஆக, கர்நாடகம் வரை செல்லுவது இயலாது போயிற்று . ஒரு நாள் மிகவும் வருத்தம் அடைந்து கண்ணீர் விட்டபோது அன்று இரவு அவருக்கு மூகாம்பிகையே கனவில் தோன்றினாள் . இறைவி இவ்வளவு அருகில் வந்ததை எண்ணி மகிழ்ந்து பரவூரில் தாமரைக் குளத்துக்கு நடுவில் கோவில் கட்டி மூகாம்பிகையை அமர்த்தினார்.
கொச்சி மன்னர் , இந்தக்கோவிலை திருவாங்கூர் தேவஸ்வம்போர்டுக்கு மாற்றினார்
துர்கா லட்சுமி சரஸ்வதியைக் கொண்டாடும் 9 நாள் நவராத்ரி உற்சவம் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது ; மலையாளிகள் இந்துக்களின் 40 ஸம்ஸ்காரங்களில் ஒன்றான வித்யாரம்பத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்; விஜய தசமியன்று நெல்லில் அல்லது தானியத்தில் ஹரியின் பெயரை எழுதி குழந்தையின் கல்வியைத் துவக்குவது வித்யாரம்பம்.
சரஸ்வதி என்பதால், அறிவு நாட்டம் உடைய சிறுவர்களும் பெரியோரும் எப்போதுமே மூகாம்பிகையை வணங்குவர் . இந்தக் கோவிலில் கணபதி,கார்த்திகேயன் மஹாவிஷ்ணு, ஹனுமான், யக்ஷி, வீரபத்ர மூர்த்திகளும் வழிபாட்டில் இருக்கின்றன.
கோவில் கேரள கட்டிடக் கலை பாணியில் இருக்கிறது.
xxxx
38.எர்ணாகுளம் சிவன் கோவில்

எர்ணாகுளம் நகருக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது என்பது பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது ;ரிஷி நாகர்குளம் என்பதே பேச்சு வழக்கில் எர்ணாகுளம் ஆக மருவிவிட்டது . இதோ அந்தக் கதை :-
தேவல என்ற சீடன் இமய மலையில் தன் குருவுக்குப் பணிவிடைகள் செய்துவந்தான் ; ஒரு நாள் யாக யக்ஞங்களுக்கு மரங்களையும் சுள்ளிகளையும் (சமித்து) சேகரிக்கையில், ஒரு பாம்பினைக் கண்டு பயந்துபோய் அதைக் கொன்றுவிட்டான்.இதை அறிந்த ரிஷி, கோபத்தில் அவனை நீயும் பாம்பாகிப் போ என்று சபித்தார்; அவன் முகம் பாம்புபோல மாறியது ; மன்னிப்புக் கேட்டு கெஞ்சியவுடன் பல்லாண்டுகளுக்கு சிவாய நம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து வா; உன் முகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்றார் . அவனை எல்லோரும் நாக ரிஷி என்று அழைத்தார்கள் அவனும் பல சிவன் கோவில்களுக்கு யாத்திரை மேற்கொண்டு வருகையில் ஒரு நாள் பஹுலாரண்யம் என்னும் இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் காண்பாய் என்று கனவில் செய்தி வந்தது . அது அர்ஜுனன் செய்த லிங்கம்.
அதைக் கண்டுபிடித்து எடுத்த்துக்கொண்டு சென்றபோது எல்லோரும் பாம்பு முக ரிஷியைக் கண்டு கற்களை வீசித் துன்புறுத்தினர்; லிங்கத்தை எடுத்துக்கொண்டு போக முயற்சித்தபோது சிவலிங்கம் பூமியில் ஒட்டிக்கொண்டது . உடனே அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றார் . ஆனால் குளத்திலிருந்து வெளியே வரவில்லை ; இதனால் மக்கள் அந்தக்குளத்தைத் ரிஷி நாகர் குளம் என்றழைக்க அது எர்ணாகுளம் என மருவியது .
சிவலிங்கம் இருந்த இடத்தில் துச்சத்து கைமல் என்பவர் கோவில் கட்டினார் . மகர சங்கராந்தி காலத்தில் எட்டு நாள் உற்சவம் நடைபெறுகிறது மக்கள் எர்ணாகுளத்தப்பன் என்று பக்தியோடு வழிபடுவர் .தர்பார் ஹால் மைதானத்திற்குள் கோவில் அமைந்துள்ளது. இது கொச்சி மகாராஜாக்களின் 7 அரச கோவில்களில் ஒன்றாகும். கடைசியாக 1846 ஆம் ஆண்டில் திவான் ஸ்ரீ எடக்குன்னி சங்கர வாரியாரின் உதவியுடன் திருப்பணிகள் செய்யப்பட்டன.
—subham—
Tags- பரவூர், மூகாம்பிகை கோவில், எர்ணாகுளம், சிவன் கோவில் , வித்யாரம்பம்
Posted by Tamil and Vedas on December 17, 2023
https://tamilandvedas.com/2023/12/17/%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/

Post No. 12,843
Date uploaded in London – – 17 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பலரது பார்வையில் அரை கிளாஸ் நீர்!
ச.நாகராஜன்
நல்ல நம்பிக்கை உடையவரை ஆங்கிலத்தில் ஆப்டிமிஸ்ட் (OPTIMIST) என்கிறோம்.
தோல்வி மனப்பான்மை உடையவரை ஆங்கிலத்தில் பெஸ்ஸிமிஸ்ட் (PESSIMIST) என்கிறோம்.
உடன்மறை சிந்தனை பாஸிடிவ் திங்கிங். (POSITIVE THINKING)
எதிர்மறை சிந்தனை நெகடிவ் திங்கிங். (NEGATIVE THINKING)
இது மட்டுமின்றி ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமானதாகவே இருக்கக் கூடும்.
இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போமா?
ஒருவர் ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு நீரை நிரப்பி ஆப்டிமிஸ்டிடம் காண்பிக்கிறார்.
ஆப்டிமிஸ்ட் கூறுகிறார் : கிளாஸ் பாதி அளவு நிரம்பி இருக்கிறது.
பெஸ்ஸிமிஸ்ட் கூறுகிறார் : கிளாஸ் பாதி காலியாக இருக்கிறது.
இதையே ஒரு எஞ்சினியரிடம் காட்டிய போது அவர் கூறுகிறார்:
“இந்த கிளாஸ் டம்ளர் அதற்கான நீரை விட ஓவர் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது!”
இதையே ஒரு கம்யூனிஸ்டிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்”
“இந்த கிளாஸில் நிறைய நீர் இருக்கிறது அதை மற்ற கிளாஸ்களுக்கு சரி சமமாக விநியோகிக்க வேண்டும்.”
இதையே ஒரு உளவியலாளரிடம் (சைக்காலஜிஸ்ட்) காட்டியபோது அவர் கூறுகிறார் :
“இந்த கிளாஸில் உள்ள நீர் உங்களை எப்படி உணரவைக்கிறது?”
இதையே ஒரு க்வாண்டம் இயற்பியலாளரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:
இந்த நீரானது கிளாஸுக்கு உள்ளேயும் இருக்கலாம் அல்லது வெளியேயும் இருக்கலாம் அல்லது இரு இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இது நிஜமான நீராகவும் இருக்கலாம் அல்லது வெறும் வெட் வெக்டாராகவும் (WET VECTOR) இருக்கலாம்.
இதையே இடர் ஏற்புத்துணிவு முதலீட்டார்களிடம் (VENTURE CAPITALIST) காண்பித்தபோது அவர் கூறுகிறார்:
“இந்த கிளாஸானது சீர்குலைக்கும் பான விநியோக அமைப்பில் 50 சதவிகித பயனருக்கான அளவிலிருக்கிறது.”
இதை ப்ராஜக்ட் மானேஜர் ஒருவரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:
“இந்த கிளாஸானது எவ்வளவு தேவையோ அதற்கு மேல் இரு மடங்காக இருக்கிறது.
ஒரு மார்கெட் நிபுணரிடம் காட்டிய போது அவர் கூறுகிறார்:
“உங்களது கிளாஸை ரீ-சைஸிங் (அளவை மாற்றல்) செய்ய வேண்டும்.”
ஒரு ஹெல்த் கோச்சிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:
“இப்போதென்ன போச்சு, இந்த கிளாஸை காலியாக்கி மீண்டும் நீர் நிரப்ப வேண்டியது தானே!”
ஒரு ஜங்கியனிடம் (ஜங் என்னும் பிரபல உளவியலாளர் கொள்கைப் பிடிப்புடையோர்) காட்டியபோது அவர் கூறுகிறார்:
“ஆ! இந்த கிளாஸ்!! இது முழுமையின் அடையாளம். ஆக்க சக்தி கொண்டது. நமது உள்ளடங்கிய பிரக்ஞையை பிரதிபலிக்கிறது. பாதி நிரம்பி இருந்தால் என்ன, பாதி காலியாக இருந்தால் என்ன, இது உங்களின் உள்ளார்ந்த ஆத்மாவை அல்லவோ தெளிவான உருவெடுத்தலாகக் காண்பிக்கிறது.”
இதை ஒரு பண்பாட்டு ஆலோசகரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:
“கிளாஸில் எது தான் இருக்கட்டுமே, அது அனைத்து மக்களையும் ஒருங்கிணக்கும் திறனுடன் இருக்க வேண்டும், அது தான் முக்கியம்!”
எதையும் முன்னெடுத்துச் செல்லும் ஒருவரிடம் (ப்ரோஆக்டிவ் பர்ஸனிடம்) காட்டியபோது அவர் கூறுகிறார்:
“நிஜம் என்னவென்றால் அது முழுமையாக இருந்தது. நான் தான் மறுபடியும் இப்படி நிரப்பினேன்.
எதையும் ஆராயும் ஒரு பிரச்சனைக்காரர் கூறுகிறார்:
“கிளாஸில் நிஜமாக உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஆராய வேண்டும்….”
எப்போதும் எதற்கெடுத்தாலும் கவலைப்படும் ஒருவர் கூறுகிறார்:
“ஐயோ! மீதி இருக்கும் அரை கிளாஸ் தண்ணீரும் காலைக்குள் ஆவி ஆகி விடுமே!”
ஒரு இயற்பியலாளரிடம் அரை கிளாஸ் நீரைக் காட்டியபோது அவர் கூறுகிறார்:
“நிஜமாகப் பார்த்தால் கிளாஸில் பாதியளவு நீர் இருக்கிறது. மீதி பாதியளவு காற்று இருக்கிறது. ஆகவே கிளாஸ் முழுமையாக நிரப்பப்பட்டு இருக்கிறது.”
ஒரு கருத்தரங்கத் தொகுப்பாளரிடம் இதைக் காட்டியபோது அவர் கூறுகிறார்:
“கிளாஸ் பாதி நிரம்பி இருக்கிறதா, பாதி காலியாக இருக்கிறதா என்பது ஒரு பிரச்சனை அல்ல; விவாதத்தைத் தொடங்கி வைக்க பத்து நிமிடங்கள் வேண்டும். ஏன் இந்த பவர்பாயிண்ட் ப்ரஸண்டேஷன் வேலை செய்யவில்லை என்பது தான் விளங்கவில்லை.”
ஒரு செயற்கை நுண்ணறிவு மாடல் அழகி (AI MODEL) கூறுகிறார்:
“பாதி கிளாஸ் நிரம்பி இருக்கிறதா அல்லது பாதி கிளாஸ் காலியாக இருக்கிறதா என்பதா முக்கியம், எனது கோடிங் (CODING) இருப்பதைக் கூடக் குடிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறதே!”
பால் ஹோகனிடம் (PAUL HOGAN) இதைக் காட்டியபோது அவர் கூறுகிறார்: “ இது கிளாஸே இல்லை!”
ஒரு சந்தர்ப்பவாதியிடன் இதைக் காட்டியபோது அவர் கருத்து ஏதும் கூறவில்லை. கிளாஸை டபக்கென்று பிடுங்கி இருக்கும் நீரைக் குடித்து விட்டார்.
இதை ஒரு பத்திரிகையாளரிடம்/ டி.வி.சேனல் ஒளிபரப்பாளரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்: “நாம் எல்லோரும் கிளாஸைப் பார்த்தவாறே எப்படி புன்னகை புரியப் போகிறோம்?”
ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது?
பார்ப்பவர் பார்வை பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்.
யத் பாவம் தத் பவதி!
உள்ளத்தின் உணர்விற்கேற்ப உண்மை அமைகிறது; அவ்வளவு தான்!
பலரது பார்வையைப் பார்த்து விட்டீர்கள், உங்கள் பார்வை என்ன? விமரிசனம் என்ன, ஒரு வரி எழுதிப் போடுங்கள்!
***
(இணையதளத்தில் படித்த ஆங்கில விமரிசனங்களின் தொகுப்பு)
Posted by Tamil and Vedas on December 17, 2023
https://tamilandvedas.com/2023/12/17/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3/
Post No. 12,842
Date uploaded in London – – 16 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
This is part 2 from the book.
There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
In part two different types of Hindu lamps and Yaga Spoons, ladles, Bells and goddess pictures are there.
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN

Yaga Spoons and Utensils
Hindu Lamps and Bells

–subham—
Tags-German book, year 1928, rare pictures, part 2, lamps, Goddess pictures,, bells
Posted by Tamil and Vedas on December 16, 2023
https://tamilandvedas.com/2023/12/16/part-2-of-rare-pictures-from-1928-german-book-on-hinduism-post-no-12842/

Post No. 12,841
Date uploaded in London – – 16 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 35
கோவில் எண்கள் –34, 35, 36
34.குளத்துப் புழை சாஸ்தா / ஐயப்பன் கோவில்
கேரளத்தில் குளத்துப் புழை , ஆரியங்காவு , அச்சன் கோவில் ஆகிய மூன்று ஐயப்பன் கோவில்களும் புகழ்மிக்கவை. நிறைய பக்தர்கள் சபரி மலைக்குச் செல்வதோடு அங்கும் சென்று சுவாமியை தரிசிக்கிறார்கள் ; ஐந்தாவது ஐயப்பன் கோவில், காந்த மலை என்ற இடத்தில் இருப்பதாகவும் அதை மனிதர்கள் அணுக முடியாதென்பதும் ஐதீகம் .
குளத்துப் புழை எங்கே இருக்கிறது?
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் குளத்துப் புழை உளது; தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டையிலிருந்து 50 கிமீ. கொல்லத்திலிருந்து 64 கி.மீ
சிறப்பு அம்சங்கள்
குளத்துப் புழையில் ஐயப்பன் குழந்தை வடிவில் இருப்பதால் பால சாஸ்தா என்று சொல்லுவார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலின் நுழைவாயில் மிகச் சிறியதாக இருக்கும். கேரள பாணியில் கட்டப்பட்ட இக்கோவில் மரத்தினால் கட்டப்பட்டது .
அங்குள்ள சந்நிதிகள்- யட்சியம்மன், நாகர், கணபதி, மாம்பழத்துறையம்மன், பூதத்தார் .
இந்தக் கோவிலின் ஒரு சிறப்பு அம்சம் குழந்தை வரம் கிடைப்பதாகும் ; குழந்தை வேண்டுவோர் இங்கு தொட்டில் கட்டி சுவாமியை வேண்டுகிறார்கள் .
எட்டு கற்களின் கதை
இந்த ஊரில் ஓடும் நதியின் பெயர் கல்லடை ஆறு . இந்த வட்டார அரசன் தனது சேவகர்களுடன் வந்து உணவு சமைக்க அடுப்பு அமைத்தான். மூன்று கற்களை வைத்து அடுப்பு அமைக்கும்போது ஒரு கல் சற்று பெரிதாக இருந்ததால் சேவகர்கள் அதை உடைத்தார்கள்; அது 8 துண்டுகளாக உடைந்தது ;அப்பொழுது ரத்தம் வெளிப்படவே மலையாள ஜோதிடமான பிரஸ்னம் போட்டுப் பார்த்தார்கள்; அது பரசுராமர் ஸ்தாபித்த ஐயப்பன் கோவில் இடம் என்று அதில் தெரியவந்தது ; உடனே குழந்தை வடிவத்தில் ஐயப்பனை மன்னர் நிறுவினார் ; உடைபட்ட எட்டுக் கற்களும் கர்ப்பக்கிரகத்தில் உள்ளன
மச்ச கன்னி கதை
இங்குள்ள கல்லடை ஆற்றில் ஏராளமான மீன்கள் வளர்கின்றன ; அவைகளுக்கு பக்தர்கள் பொரி வாங்கிப் போடுகிறார்கள் ; இதன் பின்னுள்ள சுவையான கதை:–ஒரு மச்சகன்னி ஐயப்பன் மீது காதல் கொண்டு அவரை மணக்க விரும்பினாள் . அவர் மறுக்கவே இங்கு மீனாக இருக்கவாவது அருள்புரிய வேண்டும் என்றாள் ; அவ்வாறே மீனாக வளர்ந்தாள் . அதன் நினைவாக மீன்கள் போற்றப்படுகின்றன .
இவை எல்லாம் கட்டுக்கதை அல்ல; பக்தர்கள் இப்படி வேண்டி அதை அனுபவித்தது உண்டு என்பதை ஆழ்வார் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன
திருவேங்கட மலை சுனையில் மீனாக இருக்க குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார் ; அவர் சேரநாட்டு மன்னர் ; ஆயினும் திருப்பதி மலையில் நாரை, மீன், மலர் என்று பல பிறவிகளை வேண்டி பாடுகிறார். ஆகையால் மச்ச கன்னி கதையில் பசை உள்ளது
பெருமாள் திருமொழி
ஆனாத செல்வத்து* அரம்பையர்கள் தற் சூழ*
வான் ஆளும் செல்வமும்* மண்-அரசும் யான் வேண்டேன்*
தேன் ஆர் பூஞ்சோலைத்* திருவேங்கடச் சுனையில்*
மீனாய்ப் பிறக்கும்* விதி உடையேன் ஆவேனே— குலசேகர ஆழ்வார்
XXXX

35.ஆரியங்காவு ஐயப்பன் கோவில்
ஆரியங்காவு எங்கே இருக்கிறது?
கொல்லம் மாவட்ட த்தில் , தமிழ் நாட்டின் எல்லையில் உள்ளது; தென்காசியிலிருந்து 21 கி.மீ; புனலூரிலிருந்து 33 கி.மீ தொலைவில் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் இருக்கிறது ; ஆர்யன் என்பது ஐயப்பனையும் காவு என்பது அதமைந்த தோப்பையும் குறிக்கும்
சிறப்பு அம்சங்கள்
கேரள பாணி கோவில் ஆனாலும் தமிழ்நாட்டுப் பாணியில் பூஜைகள் நடைபெறுகின்றன .மதுரை செளராஷ்டிர சமூகத்தினருடன் தொடர்புடைய கோவில்!
ஐயப்பன் புஷ்கலை என்ற பெண்ணை மணந்த தோற்றத்தில் தரிசனம் தருகிறார். யானை மீதமர்ந்து காட்சி தரும் ஐயப்பன் அருகில் புஷ்கலா தேவி நிற்கிறாள். ஆரியங்காவு ஐயனே என்று பக்தர்கள் கோஷம் எழுப்புவர்
கோவிலில் உள்ள மூர்த்திகள் — பார்வதி, லிங்க வடிவில் சிவன், நடுவில் ஐயப்பன் ; பரசுராமர் ஸ்தாபித்ததாக ஐதீகம்.
இங்கு கருப்பா நதி ஓடுகிறது ; வலிய கேட்டுத்தன், கருப்பசாமி , கருப்பை அம்மா ஆகியோரும் கோவிலில் வழிபடப்படுகின்றனர்
சபரிமலை போலவே 18 படிகள் இருக்கின்றன .
கோவில் நிலமட்டத்திற்கும் கீழே அமைந்துக்ள்ளது; நல்ல ஓவியங்கள் உள்ளன
xxxx
கோவில் பற்றிய கதை
திருவிதாங்க்க்கூர் அரச வம்சத்தினருக்கு ஆடை நெய்து தரும் பொறுப்பு மதுரை செளராஷ்டிர பட்டுநூல்காரர்களிடம் இருந்தது. பெரிய வணிகர், தன் மகள் புஷ்கலையை அழைத்துக்கொண்டு துணிமணிகளுடன் புறப்பட்டார். ஆரியங்காவு வந்தபோது யானை, புலி உலவும் காட்டு வழியாகச் செல்ல மகள் அஞ்சியதால் அர்ச்சகர் வீட்டில் தங்கவைத்துவிட்டுச் சென்றார்; திரும்பி வருகையில் அவரை யானை துரத்தவே ஓடினார் ; ஒரு வேடன் வந்து அவரைக் காப்பாற்றினான். அவனுக்கு தான் அணிந்த பட்டு வஸ்திரத்தை அளித்தார். அவன் அதை அணிந்தபோது பேஷ், பேஷ்; மாப்பிள்ளை போல இருக்கிறாயே என்று வியந்தார்; அப்படியானால் உங்களுக்கு பெண் இருந்தால் எனக்கு கல்யாணம் கட்டுங்களேன் என்றவுடன் புஷ்கலையிடம் அழைத்துச் சென்றார்; அவள் ஏற்கனவே கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு சேவை செய்ததால் , அவரைப்போலவே இருக்கவே அவரை மணந்தாள் ; உண்மையில் வேடனாக வந்தது ஐயப்பன்தான் என்பது ஐதீகம் ; இப்பொழுதும் மார்கழி மாதத்தில் திருமண விழா மதுரை செளராஷ்டிர சமூக சீர்செட்டுகளுடன் நடத்தப்படுகிறது .
திருமண வைபவங்கள் கோவிலுக்கு வெளியேயுள்ள மண்டபத்தில் செளராஷ்டிர சமூக முறைப்படி நடக்கும் .
xxxx


36 அச்சன் கோவில் ஐயப்பன் கோவில்
ஆரியங்காவில் ஐயனாக இருந்த ஐயப்பன் அச்சன் கோவிலில் அரசனாக வீற்றிருப்பதால் பக்தர்கள் அச்சன் கோவில் அரசனே என்று கோஷம் எழுப்பி வழிபடுகிறார்கள் .
எங்கே இருக்கிறது ?
தமிழ்நாட்டின், செங்கோட்டையிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ; புனலூரிலிருந்து 50 கிமீ. ஆரியங்காவுக்கு அருகில் இருக்கும் கோவில் இது . 14 கி.மீ.
அச்சன்கோவில் ஆற்றின் கரையில் அமைந்த இந்தக்கோவிலையும் பரசுராமரே நிறுவினார்
சிறப்பு அம்சங்கள்
இங்கு பூர்ணா, புஷ்கலா ஆகிய இரண்டு மனைவியருடன் ஐயப்பன் கல்யாண கோலத்தில் கிரஹஸ்தனாக காட்சி தருகிறார்..
பகவதி, மாளிகைபுரத்தம்மா , துர்கா, நாக யக்ஷி , நாகராஜா, கணேசர், கார்த்திகேயன், கருப்பசாமி, கறுப்பி அம்மா, சப்பாணி மாடன் முதலிய தெய்வங்களும் கோவிலில் இருக்கின்றன ; கோவிலின் பின்புறத்தில் சர்ப்ப காவு இருக்கிறது; அங்கு நாகர் வழிபாடு நடக்கும்.
பாம்புக்கடி வைத்தியம்
பாம்புக்கடி வைத்தியத்துக்கு பெயர் பெற்ற இடம் அச்சன்கோவில் ; இரவு நேரத்திலும் திறந்திருக்கும் கோவில் இது; இறைவன் மீது சார்த்தப்பட்ட சந்தனமும் தீர்த்தமும் பாம்புக்கடி விஷத்தை இறக்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ; எந்த நேரமானாலும் கோவில் மணியை அடித்தால் அர்ச்சகர் வந்து பிரசாதம் வழங்குவார்.
தனுர் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மண்டலபூஜை நடைபெறும். மகர மாதத்தில் ரேவதிபூஜையும் நிகழும். மண்டலபூஜையில் தேரோட்டமும் ரேவதிபூஜையில் புஷ்பாபிஷேகவும் முதன்மையான சடங்குகள்.

அச்சன்கோவில் புஷ்பாஞ்சலி
தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியன நடைபெறும் . மதியம் களபாபிஷேகம் . மாலையில் யானை மீது டன் கணக்கில் பூக்கள் ஊர்வலம் நடக்கும் ; அச்சன்கோவில் புஷ்பாஞ்சலிக்கு முன்னர் மதுரை முதலிய பூ மார் க்கெட்டுகள் காலியாகிவிடும். பக்தர்கள் டன் கணக்கில் பூக்களை வாங்கி கோவிலுக்கு அனுப்புவார்கள்.
—subham—-
Tags- அச்சன்கோவில் ,புஷ்பாஞ்சலி ,பாம்புக்கடி வைத்தியம் ,பூர்ணா, புஷ்கலா ,ஆரியங்காவு ,ஐயப்பன் கோவில், குளத்துப் புழை ,சாஸ்தா,எட்டு கற்கள், மச்ச கன்னி, கதை
Posted by Tamil and Vedas on December 16, 2023
https://tamilandvedas.com/2023/12/16/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%90%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/

Post No. 12,840
Date uploaded in London – – 16 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா!
ச.நாகராஜன்
ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா,
உற்சாகத்திற்கு ஒரு புலவன் பாரதி அடா
தேசபக்தி ஊட்ட ஒரு புலவன் பாரதி அடா
தெய்வபக்தி ஊட்ட ஒரு புலவன் பாரதி அடா
பெண்மையைப் பேச ஒரு புலவன் பாரதி அடா
அதைப் போற்றத் தூண்டும் ஒரு புலவன் பாரதி அடா
மாயை பற்றிச் சொல்ல ஒரு புலவன் பாரதி அடா
அதில் மயங்காதே என்று சொல்ல ஒரு புலவன் பாரதி அடா
விஞ்ஞான மேன்மை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா
அதை வரவேற்றுப் பாட ஒரு புலவன் பாரதி அடா
இந்து மத மேன்மை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா
அதைப் போற்றிப் பாடல் தர ஒரு புலவன் பாரதி அடா
பாரதப் பெருமை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா
அதைப் போற்றத் தூண்டும் ஒரு புலவன் பாரதி அடா
இமயமலை எங்கள் மலை என்று சொன்னான் பாரதி அடா
அதன் உயரமளவு ஏறி விட்டான் பாரதி அடா
தமிழின் பெருமை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா
தமிழர் விழித்தெழச் செய்ய வந்த புலவன் பாரதி அடா
கவிக் கம்பன் பெருமை சொன்னான் பாரதி அடா
வள்ளுவரை ஏற்றி வைத்தான் பாரதி அடா
அனைத்தும் பாடிய ஒரு கவிஞன் பாரதி அடா
அதை முழுதும் சொல்ல ஒருவரும் இல்லை பாரதி அடா
உலகம் கண்ட பெருங்கவிஞன் பாரதி அடா
உண்மை சொன்னேன் நம் தமிழ்க் கவிஞன் பாரதி அடா
***
Posted by Tamil and Vedas on December 16, 2023
https://tamilandvedas.com/2023/12/16/%e0%ae%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4/
Post No. 12,839
Date uploaded in London – – 15 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
–subham—
Tags-German book, year 1928, rare pictures, part 1, masks, Lakshmi
Posted by Tamil and Vedas on December 15, 2023
https://tamilandvedas.com/2023/12/15/rare-pictures-from-1928-german-book-on-hinduism-1-post-no-12839/

Mahavir, who controlled his five senses, 24th Tirthankara of Jain Religion
Post No. 12,838
Date uploaded in London – – 15 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
QUIZ SERIAL NUMBER—88

Jain Symbol- Swastika
1.மஹாவீ ரர் எங்கு, எப்பொழுது பிறந்தார் ?
xxxx
2. அவர் சமண மதத்தை ஸ்தாபித்தாரா ?
xxxx
3. மஹாவீரரின் தாய், தந்தையர் யாவர் ?
xxxx
4. மஹாவீரருக்கு தாய், தந்தை இட்ட பெயர் என்ன ? அவர் ஏன் வர்த்தமான மஹாவீரர் என்று அழைக்கப்பட்டடார் ?
xxxx
5. மஹாவீரர் இறந்தது எங்கே?
xxxx
6. தீர்த்தங்கரரில் இவருக்கு ஏன் அதிகப் புகழ்?
xxxx
7. புத்தர் கடவுள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை; மஹாவீரர் கடவுள் பற்றி என்ன சொன்னார் ?
xxxx
8. சமணர்களின் கொள்கை என்ன ?சமணர்கள் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் சாப்பிட மாட்டார்கள்; பல் தேய்க்கமாட்டார்கள் என்பதெல்லாம் சரியா?
xxxxx
9.சமணர்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
xxxx
10.சமணர்களின் புனிதத் தலங்கள் எவை ? புனித நூல் எது?
Xxxx

Gomateswara Monolith Statue in Sravana belagola, Karnataka; saint who controled sex desires.
விடைகள்
1. மஹாவீரர் பிறந்த இடம் குண்டல்பூர் அல்லது குண்டலகிராமம் எனப்படும். வைசாலி அல்லது ஜமுயி குன்றுகள் என்றும் சிலர் சொல்வர். மூன்று இடங்களும் பீஹார் மாநிலத்தில்தான் உள்ளன.
இவர் சரியாக 2600 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார்; புத்தருக்கு முன்னர் பிறந்தவர்.
xxxx
2.அவர் சமண மதத்தை ஸ்தாபிக்கவில்லை.; தீர்த்தங்கரரர்கள் என்னும் 24 வழிகாட்டிகளில் அவர் கடைசியாக வந்தவர்.
xxxx
3.தாயின் பெயர் த்ரிசலா தேவி ; தந்தையின் பெயர் தந்தையின் பெயர் சித்தார்த்தன் ; அவர் ஒரு சிற்றரசர்
Xxxx
4.அவருடைய பெயர் வர்த்தமானர் ; வளங் கொழிக்கச் செய்ப்பவர் என்று பொருள்; அவர் தாயின் கருவில் இருந்தபோதே வளர்ச்சி ஏற்பட்டது ; ஏராளமான மலர்கள் பூத்துக்குலுங்கின’ இவர் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடித்ததால் மகாவீர் எனப்பட்டார்; புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் என்பது அவ்வையார் வாக்கு; புலனை வென்ற வர்த்தமானரும் , ஆஞ்சநேயரும் மட்டுமே இந்தியாவில் மாவீரர் பட்டம் பெற்றவர்கள் .
xxxx
5.பீஹார் மாநிலத்தில் உள்ள பாவாபுரி என்னும் இடத்தில் அவர் முக்தி அடைந்தார்; அப்போது அவருக்கு வயது 72..அவர் தகனம் செய்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது
xxxx
6.மஹாவீரருக்கு முன்னர் 23 தீர்த்தங்கரர்கள் இருந்தாலும் இவரைத்தான் கடைசி தீர்த்தங்கரர் என்பார்கள்; அதனாலும் அவரது போதனைகளே நமக்குக் கிடைத்திருப்பதாலும், வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதாலும் இவரே புகழ் பெற்றவர்; மேலும் புத்தர் போல மக்களிடையே உரையாற்றி தனது போதனைகளைப் பரப்பினார் ; புத்தரை க்ஷத்ரிய மன்னர்கள் ஆதரித்தது போல இவரை வைஸ்யர் எனப்படும் வணிகர்கள் ஆதரித்தனர் .xxxxxx
7. சமணர்கள் அல்லது மஹாவீரர் கடவுள் என்று படைப்போன் ஒருவன் உளான் என்று நம்புவதில்லை தாய்ப்பசுவை ஒவ்வொரு கன்றும் எப்படி அடையாளம் காண்கிறதோ, அவ்வாறே அவரவர் வினைகள் அவரவரை அடையாளம் கண்டு ஒட்டிக்கொள்ளும்; அதற்கேற்ப பலனும் கிட்டும். என்பது அவர் கொள்கை; ஆகையால் இதை நாஸ்தீக மதம் என்றே சொல்லவேண்டும் .எங்கும் நிறைந்த தூய ஆன்மாக்களே வழிகாட்டிகள்; அவர்கள் நிலையை எல்லோரும் எய்தலாம்.ஜனன- மரண வட்டத்திலிருந்து மீள்வதே வாழ்க்கையின் குறிக்கோள்; இந்துக்களைப் போலவே கர்மவினை, மறுபிறப்பு, மோட்சம் ஆகியவற்றில் நம்பிக்கை உண்டு .ஆனால் அவைகளை நிர்வகிக்கும் ஒருவன் இல்லை; கடவுள் இல்லை.
xxxx
8.நல்ல பேச்சு, நல்ல செய்கை, நல்ல சிந்தனை இருந்தால் பிறப்பு- இறப்புச் சுழலிலிருந்து விடுபடலாம் (இந்துக்கள் இதையே த்ரி கரண சுத்தி என்பர் ; தமிழ் இந்துக்கள் இதையே வாய்மை, உண்மை, மெய்மை என்பர்); இவை தவிர அஹிம்சை, திருடாமை , பற்றின்மை, உண்மை பேசுதல், புலன் இன்பம் தவிர்த்தல் ஆகிய குணங்களையும் சமணர்கள் வலியுறுத்துவார்கள்.
இரவு நேரத்தில் சாப்பிட்டால் புழுப் பூச்சிகள் உணவில் இருந்தாலும் திரியாது என்பதால் இருட்டில் சாப்பிட மாட்டார்கள்; பல் தேய்த்தால் புழுப் பூச்சிக இறக்க நேரிடும் என்பதால் தேய்க்கமாட்டார்கள் ; ஆயினும் இக்காலத்தில் சமணத்துறவிகள் மட்டுமே இதைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் குளிப்பதும் இல்லை.
Xxxxx
9.இரண்டு பிரிவுகள் – திகம்பரர் (உடைகளை அணியமாட்டார்கள்); ஸ்வேதாம்பரர் (வெள்ளை உடை தரிப்போர்).
xxxxxx

10.புனிதத் தலங்கள்
வைசாலி, மகாவீரர் பிறந்த இடம், பீஹார்
பாவாபுரி, மகாவீரர் மறைந்த இடம்,பீஹார்
தேவ்கர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்
சிகார்ஜி சமணக் கோயில்கள், ஜார்க்கண்டு
சத்ருஞ்ஜெய மலை. குஜராத்
பாலிதானா கோயில்கள், குஜராத்
கிர்நார் சமணக் கோயில்கள், (நேமிநாதர் முக்தி அடைந்த இடம்), குஜராத்
தில்வாரா கோயில், இராஜஸ்தான்
கோமடேஸ்வரர், சிரவண பெலகோலா , கர்நாடகம்
ஜைன காஞ்சி, தமிழ்நாடு
மஹாவீரர் போதனைகளை பலர் தொகுத்து அளித்துள்ளனர்; இவை ஒரே புஸ்தகத்தில் இல்லை; இவைகளை ஆகம சூத்திரங்கள் என்பர்
—subham —-
TAGS- மஹாவீரர், சமண மதம், கடவுள் இல்லை, கர்மா வினை , பீஹார், போதனைகள், தாய், தந்தை, வர்த்தமான
Posted by Tamil and Vedas on December 15, 2023
https://tamilandvedas.com/2023/12/15/quiz-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-quiz-post-no-12838/

Post No. 12,837
Date uploaded in London – – 15 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 34
கோவில் எண்–33
33.சபரிமலை சாஸ்தா / ஐயப்பன் கோவில்
சபரிமலை எங்கே இருக்கிறது?
கேரளத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது; செங்கன்னூர் ரயில் நிலயத்தில் இறங்கி பக்தர்கள் செல்வர். எருமேலியிலிருந்து காட்டு வழியாகச் சென்றால் 61 கி.மீ ; வண்டிப்பெரியாரிலிருந்து சென்றால் 13 கிமீ. சாலக்காயத்திலிருந்து 8 கி.மீ; தற்போது பம்பா நதி வரை சாலை வசதிகள் இருப்பதால் பலரும் அதுவரை சென்று பின்னர் மலையில் ஏறி ஐயப்பனை தரிசிக்கின்றார்கள் .
சிறப்பு அம்சங்கள்
கேரளத்தில் அதிகம் பேர் விஜயம் செய்யும் கோவில் இது ; ஆண்டுக்கு 2 கோடி பக்தர்கள் வருவதால் உலகிலேயே அதிகம் பக்தர்கள் வரும் பட்டியலில் இருக்கிறது.
ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் வரலாம்; ஆனால் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்ல முடியாது .
41 நாள் விரதம் அனுஷ்டித்து மாலை அணிந்து இரு முடி தாங்கி பக்தர்கள் செல்கிறார்கள்.

ஐயப்பன் யார் ?
பெரிய தத்துவத்தை பாமர மக்களுக்குப் புரிய வைக்க வேடிக்கையாக கதை சொல்லுவார்கள்; விஷ்ணு மோகினி வடிவம் எடுத்துக்கொண்ட காலத்தில் சிவ பெருமான் அவளைக் காதலித்து பெற்ற பிள்ளை என்பது பாமர மக்கள் சொல்லும் கதை; ஆனால் காஞ்சி மஹா சுவாமிகள் போன்றோர் உண்மைப் பொருளை விளக்கியுள்ளனர் ; நாராயணனின் வசீகர கருணா சக்தியும் சிவனின் ஞான சக்தியும் இணைந்து ஏற்பட்ட தேஜோ மய ஒளியில் தோன்றியது ஹரி ஹர புத்ரன் ; அதாவது இரண்டு சக்திகளின் இணைப்பு .
மணிகண்டன் கதை
இன்னும் ஒரு கதையும் உண்டு ; பந்தள மகாராஜா பம்பா நதிக்கரைக்குச் சென்றபோது கழுத்தில் மணி கட்டப்பட்ட (மணிகண்டன் ) குழந்தையைக் கண்டு அரண்மனைக்குக் கொண்டுவந்தார் ; அதற்குப் பின்னர் மகாராணிக்கு ஒரு குழந்தை பிறந்தது; இருவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர்.யாருக்கு அடுத்த பட்டம் சூட்டுவது என்ற பிரச்சனை வந்தபோது ராணி ஒரு தந்திரம் செய்தாள் ; தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் புலிப்பால் கொண்டு வந்தால் அதைச் சாப்பிட்டு நோயைத் தீர்க்க முடியும் என்றும் சொன்னாள் ; முதல் பிள்ளையான மணிகண்டன், கானகம் ஏகினார்; புலிப்பாலை எடுத்துக்கொண்டு புலி மீது சவாரி செய்து பந்தளத்தில் நுழைந்தார்; அவர் தெய்வீக சக்தியை அறிந்த மக்களும் மன்னரும் என்றும் அருள் பாலிக்க வேண்டியதால் நீலி மலையில் அமர்ந்து தவம் செய்தார்.
அந்தக் காலத்தில் உதயணன் என்ற மலைக்கள்ளன் ஒவ்வொரு ஊரையும் கொள்ளையடித்து மக்களை அச்சுறுத்தவே எல்லோரும் ஊர்தோறும் ஐயப்பனை — ஐயனாரை — ஆர்யனை — காவல் தெய்வமாக நிறுவினார்கள் . தர்ம சாஸ்தா என்பவர் தருமத்தை நிலைநாட்டி ,உதயணனை கொன்றுவிட்டு சபரிமலையில் சென்று மறைந்தார்;அந்த இடத்தில் தான் தற்போதைய கோவில் இருக்கிறது .
ஐயப்பன் என்னும் தர்ம சாஸ்தா புலி மீது வந்தபோது இருமுடி தாங்கி வந்தார்; அதை நினைவுபடுத்தும் வகையில் இன்றும் தோளில் அல்லது தலையில் இரு முடி தாங்கிச் செல்கிறார்கள் ; ஒரு பக்கம் அய்யப்பன் மீது அபிஷேகம் செய்வதற்கு தேங்காயில் நெய்யும் மறு பக்க முடிச்சில் வழிநடைக்குத் தேவையான உணவுப் பண்டங்களும் இருக்கும் .

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
அந்தக் காலத்தில் காட்டு வழியாக நடந்த வந்த பக்தர்கள் கோவிலுக்குச் செல்லுகையில் காலணி அணிய மாட்டார்கள்; ஆகையால் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்ததை ; சாமி சரணம், ஐயப்ப சரணம், சாமியே ஐயப்பா என்று ஆடியும் பாடியும் செல்லுவார்கள்.
18 படிகள்
தங்கத்தால் மூடப்பட்ட சாஸ்தா கோவிலை நெருங்கியவுடன் 41 நாள் விரதம் இருந்தோர் மட்டும் 18 படிகளில் ஏறி சந்நிதியை அடைவார்கள் . இந்த 18 படிகளுக்கும் தத்துவ விளக்கங்கள் உண்டு.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இறைவனை அடைய ஆத்மா செய்யும் பயணத்தை விளக்க வந்தது சபரிமலை யாத்திரை; அப்படி இறைவனை அடைய 41 நாள் விரத காலத்தில் எப்படி தூயவர்களாக இருந்தார்களோ அப்படி தினமும் இருக்க வேண்டும் ; இரு முடிகளில் ஒன்று பிராரப்த கர்மா ; அதாவது நாம் செய்த வினை; அதை அழித்தால் முன் முடியிலுள்ள தேங்காயை கழற்றி எறிவது போல உடலையும் நீக்கிவிடலாம்..
XXXXX
பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய சொற்களின் பொருள்
ஆர்ய = பண்பாடு மிக்கவன்; அஜ்ஜ = பிராகிருத திரிபு= ஐயர் / ஐயன் = தமிழ் வடிவம் ;
அவனே எனது அப்பன்/ குரு = ஐயப்பன்
XXXX
ஐயப்பனின் உருவம்
அமர்ந்த நிலையில் ஐயப்பன் காட்சி தருகிறார் அவரது முழங் கால்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும் ; இரவில் சந்நிதியை மூடுகையில் ஹரிவராசனம் என்னும் தாலாட்டுப் பாடலைப் பாடுவார்கள் . இது சம்ஸ்க்ருத மொழியில் உள்ளது
xxxxx
5 முக்கிய ஐயப்பன் கோவில்கள்
குளத்துப்புழையில் பாலன் வடிவம்
ஆரியங்காவில் பிரம்மசாரி வடிவம்
அச்சன்கோவிலில் கிரஹஸ்த வடிவம் ; பூர்ணா, புஷ்கலா தேவியருடன்
சபரிமலையில் வானப் பிரஸ்த வடிவம்
பொன்னம்பல மேடு என்னும் காந்த மலையில் யோகி வடிவம்
XXXX
மகர ஜோதி
கார்த்திகை மாதம் விரதத்தை துவங்குவோர் மகர சங்கராந்தி அன்று மகர ஜோதியைத் தரிசித்துவிட்டு விரதத்தை முடிப்பர்; இப்போது கோடிக்கணக்கானோர் வருவதால், 41 நாள் முழுதும் தர்சனம் நடைபெறுகிறது.
மகர ஜோதி ஒரு காலத்தில் இயற்கையாக சூரியன் மறையும் போது ஏற்பட்டது; தற்போது பழங்குடி மக்கள் தீ மூட்டி ஜோதியை உண்டாக்கி பழைய வழக்கத்தைக் காப்பாற்றி வருகின்றனர் .
Xxxx

மாளிகைபுரத்து அம்மன்
சபரிமலை ஐயப்பனின் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் மாளிகைபுரத்தம்மன் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் வணங்குவார்கள். 100 மீட்டர் தூரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மஞ்சள் மாதா என்பது இன்னும் ஒரு பெயர்..பந்தளம் அரச குடும்பத்தின் குல தெய்வம் ஆவார்.
கன்னி அய்யப்பன், குருசாமி
முதல் தடவை விரதம் இருந்து செல்லும் ஐயப்ப பக்தரை கன்னி ஐயாப்பன் என்பர் ; அதிக காலம் சபரிமலைக்குச் சென்றுவரும் முதிர்ந்த பக்தரை குரு வாக ஈற்றுஞ் அவர் கையில் மாலை, ஆடைகளை வாங்கி அணிவர். குரு சாமி தனது அனுபவத்தாலும், பக்தி முதிர்ச்சியினாலும் கன்னி ஐயப்பனை வழிநடத்துவார் ; பொதுவாக அவர் ஒழுக்கம் உடையவராக இருப்பார் .
–SUBHAM—
TAGS- கன்னி அய்யப்பன், குருசாமி ,மாளிகைபுரத்து அம்மன் ,மகர ஜோதி ,
5 முக்கிய ஐயப்பன் கோவில்கள் ,18 படிகள் மணிகண்டன், ஐயப்பன் கதை , சபரிமலை, சாஸ்தா
Posted by Tamil and Vedas on December 15, 2023
https://tamilandvedas.com/2023/12/15/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87/