பொலன்னறுவையில் 16 கோவில்கள் : இலங்கைத் தீவின் 108….. Part 32 (Post.12,606)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,606

Date uploaded in London – –  –  19 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 32

64.பொலன்னறுவையில் 10 சிவன் கோவில்கள் , 5 விஷ்ணு  கோவில்கள்

பொலன்னறுவை என்ற நகரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் நிலவிய சோழ சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக விளங்கியது  அங்கு பலமுறை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 10  சிவன் கோவில்களும்  5 விஷ்ணு  கோவில்களும் , ஒரு காளி கோவிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன ; இவைகளில் பெரும்பாலானவை முழுதும் இடிந்து, அழிந்து போய், அஸ்திவாரம் அல்லது தூண்கள் மட்டுமே உள்ளன. இவைகளில் மிகவும் பழைய கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் கட்டியது . அவர்க்குப் பின்னர் பாண்டிய வம்ச மன்னர்கள் சில கோவில்களைக் கட்டினார்கள் . சில ஆலயங்கள் கலிங்க மாகன் என்ற மன்னர் காலத்தவை .

இவைகளில் முழு அளவுக்கு உயர்ந்து நிற்கும் சிவாலயத்துக்கு இரண்டு 2 என்று தொல்லியல் ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இதில் கல்வெட்டும் இருப்பதால் வரலாற்று முக்கியத்துவமும் இதற்கு உண்டு. இங்கு தோண்டும் பணிகளை 1901ம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் துவக்கினார்கள் . பல சிவலிங்கங்களும் , சதுர அல்லது செவ்வக  வடிவ ஆவுடையார் பகுதிகளும் கிடைத்தன. இந்த வடிவங்கள் சோழர் காலத்தவை என்பதைக் காட்டுகின்றன.

சிவன் கோவிலுக்கு அருகருகே விஷ்ணு கோவிலும், சிவன் கோவில்களில் செங்கல் கட்டிடத்தில் விநாயகர் சந்நிதியும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது . சில கோவில்களில் சுப்ரமண்யர், பைரவர் சந்நிதிகள் இருந்த தடயங்களும் காணப்படுகின்றன.

சிவாலயம் எண்  1

பொலன்னறுவை நகருக்கு மிக அருகில் இருக்கிறது; சிறிய கர்ப்பக்கிரகம்; 60 அடிக்கு 40 அடி அளவில் மஹா மண்டபம். கருங்கல் கட்டிடம். நல்ல சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. இடிபட்ட சுவரில் அம்பாள் உருவம்;

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சிவகாமி அம்மன் விக்ரகம், பொலன்னறுவை மியூசியத்தில் பாதுகாக்கப்படுகிறது . விநாயகர் , சுப்ரமணியர் , பைரவர் சந்நிதிகள் செங்கற்களால்  ஆனவை . சிவலிங்கம் சிறியது . இங்கு புதைந்து போயிருந்த 3 அடி உயர நடராஜர், சோமாஸ்கந்த மூர்த்தி, 2 அம்பாள் விக்கிரகங்கள் , அப்பர் சிலை ஆகியன கொழும்பு மியூஸியத்தில் பாதுகாக்கப்பட்டன. இவைகள் சென்னை மியூசியத்திலுள்ள சோழர்கால ஐம்பொன் விக்கிரக அழகிற்கு வரவில்லை. தரம் குறைந்தே காணப்படுவதால் இங்கேயே செய்யப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியல் அறிஞர்களின் துணிபு

சிவாலயம் எண் 2

இதுதான்  முழுமையாக உள்ள கோவில்

தொல்பொருட் துறை அனுமதியுடன் ஆனி உத்திரம், சிவராத்திரி உற்சவம் முதலிய வழிபாடுகள் மட்டும் நடைபெறும் இடம் இது . இங்கு சுவர்களில் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன ; கருங்கல் , சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது  மூன்றடுக்கு விமானம். ஏனைய சந்நிதிகள் செங்கல் கட்டிடங்கள் . மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையாரில் சிவலிங்கம்.

சிறிய கல்வெட்டு வானவன்  மாதேவி ஈஸ்வரமுடையார் கோவிலில் உள்ள பள்ளி கொண்டார், அழகிய மணவாளர் பற்றிக் குறிப்பிட்டு ராஜேந்திர சோழனின் புகழ் பாடுவதால் காலத்தை அறிய உதவுகிறது.

 இராஜேந்திரனின் தாயின் பெயர் வானவன் மாதேவி 

இரண்டாவது கல்வெட்டு விளக்கு எரிக்க செய்த தானம்  பற்றியது. சோழ மன்னன் அதி ராஜேந்திர தேவன் பெயர் காணப்படுகிறது .

சிவாலயம் எண் 5

இங்குதான்  அதிக எண்ணிக்கையிலான ஐம்பொன் விக்கிரகங்கள் கிடைத்தன உடைந்த நிலையில் காணப்பட்ட லிங்கத்தை இப்போது ஒட்டிவைத்துள்ளனர் . 1908ம் ஆண்டில் இவை கண்டுபிடிக்கப்பட்டன பிற்காலத்தில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த ஐம்பொன் விக்கிரகங்கள் –

ஆறு அடி உயர நடராஜர், , சிவகாமி அம்மன், காரைக்கால் அம்மையார், விநாயகர், மஹா விஷ்ணு,

மற்ற என்னுள்ள சிவாலயங்கள் அளவில் சிறியவை.

ராஜராஜ சோழனும், அவருடைய மகன் ராஜேந்திர சோழனும் இலங்கையின் பெரும்பகுதியை வென்று 1070, ஆண்டுவரை ஆண்டனர். ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்ட பின்னரும் அங்குள்ள ஆலயங்கள் அவர்களுடைய புகழ் பாடிய வண்ணமுள்ளன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளில் சில விநோதங்கள் உண்டு.

பொலன்னறுவையில் 1908ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சோமாஸ்கந்த மூர்த்தியில்  ஸ்கந்தன் இல்லை!

சோம +உமா+ஸ்கந்தன் = சோமாஸ்கந்தன் என்பதை நாம் அறிவோம்.

1960ம் ஆண்டில் பொலன்னறுவையில் கண்டுபிடிக்கப்பட்ட நடராஜர் மிகவும் வினோதமானது. நடராஜரின் பறக்கும் ஜடாமுடி இல்லை. திருவாச்சி வட்ட வடிவில் இல்லை ; காதணிகளும் இல்லை. இடது கரத்தின் கக்கத்தில் பைபோல தொங்குகிறது. உள்ளூர் கலைஞர்கள் முயற்சி போலும்! படங்கள் அனைத்தையும் 1964ம் ஆண் டில் சி.எஸ். நவரத்தினம் எழுதிய ஆங்கில புஸ்தகத்தில் A SHORT HISTORY OF HINDUISM IN CEYLON , C S  NAVARATNAM, 1964 காணலாம்.

Xxxx

65.செல்வச்சந்நிதி முருகன் கோவில் , தொண்டைமானாறு

பல வினோதமான வழக்கங்களைக் கொண்ட கோவில் இது !

யாழ்ப்பாண நல்லூர் போலவே வேல்தான் மூலஸ்தானத்தில் வழிபடப்படுகிறது.

ஆனால் பூஜை முறையோ கதிர்காமம் போன்றது. வாயில் துணியைக்கட்டிக்கொண்டு மந்திரம் ஏதுமில்லாமல் வழிபாடு.

அது மட்டுமல்ல 65 ஆலம் இலைகளில் பிரசாதமாக அமுது படை க்கும் புது வழக்கம்!

ஆரம்பித்தவர் பெயரும் கதிர்காமர்; ஊரின் பெயரும் சின்னக் கதிர்காமம். ஒவ்வொரு வழக்கத்துக்கும் பின்னால்  ஒரு நீண்ட கதை சொல்லப்படுகிறது..

சுருக்கமாகக்  காண்போம்

கோவில் இருக்கும் இடம் — யாழ்ப்பாணத்திலிருந்து 20 மைல் தொலைவில் தொண்டைமான் ஆற்ற்றின் கரையில் உள்ளது.

கோவிலின் மற்ற பெயர்கள் — ஆற்றங்கரையான், சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை

ஆறு ஓடுவதால் தீர்த்தம், தலம் , மூர்த்தி என்ற முச்சிறப்புகளும் உண்டு .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கருணாகரத் தொண்டைமானை உப்பு வாங்கி வர சோழ மன்னன் அனுப்பின்னான். உப்பு ஏற்றிய படகுகள் கடல் வரை செல்ல அவர் வெட்டிய கால்வாய் தொண்டைமானாறு ஆனது

எல்லா யாழ்ப்பாணக் கோவில்களையும் தரை மட்டம் ஆக்கிய ஹாலந்து நாட்டு, போர்ச்சுகல் நாட்டு மதவெறியர்கள் பழைய   கோவிலை இடித்து நொறுக்கினர். மனம் நொந்து போன கதிர்காமர் என்ற பக்தர் கதிர்காமத்துக்கு யாத்திரை சென்றார். அங்கு அவருக்கு ஒரு வேல் கிடைத்தது. அதைப் பூவரசு மரத்தின் கீழே ஸ்தாபித்து வழிபட்டு வந்தார் . பக்தர் தொகை பெருகவே கோவில் கட்டிடங்கள் எழுந்தன . பக்தர்கள், வேண்டுதல் காணிக்கையாக அன்னதானம் செய்வதால் பக்தர்களுக்கு பிரசாதம் கிடைக்கிறது.. இதனால் வேல் முருகனின் பெயரே அன்னதான முருகன் என்றும் மாறியது .

பிராமண குருக்கள்கள் செய்யும் பூஜை முறைகள் இங்கு இல்லை ஆயினும் நித்திய பூஜைகளும் வருடாந்திர விழாவும் உண்டு.

உயர்ந்த மணிக்கூண்டு கோபுரமும் , கோவில் தேரும் கோவிலின் பெருமையை மேலும் அதிகரிக்கிறது.

FROM COLOMBO MUSEUM BOOK

—Subham—

Tags– செல்வச்சந்நிதி, முருகன் கோவில் , தொண்டைமானாறு,  சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம்,, பொலன்னறுவை, கோவில்கள், சிவாலய 2, Ploannaruvai

திருமூலர் கண்ட தச நாதங்கள்! (Post No.12,605)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,605

Date uploaded in London –  19 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

திருமூலர் கண்ட தச நாதங்கள்!

ச.நாகராஜன்

மிக நுட்பமான ஒலி அல்லது ஓசை பற்றி இந்து மதம் தரும் செய்திகள் அபூர்வமானவை.

இவை இன்றைய விஞ்ஞானத்தால் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இனியும் கண்டுபிடிக்கப்பட முடியுமா என்பதும் சந்தேகமே. ஏனெனில் இவை லாபரட்டரி சோதனைகளால் கண்டுபிடிக்கப்பட முடியாது.

ஓம் என்ற ஒலியே ஆதி ஒலி அல்லது ஓசை என்றும் அது அண்டம் முழுவதும் பரவி உள்ள தெய்வீக ஒலி என்பதையும் இந்து மதமே கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது.

இந்த ஓசைகளை எப்படி இந்து மத ரிஷிகளும் மகான்களும் உணர்ந்தார்கள், இன்றும் அனைவரும் உணர முடியும் என்பதற்கும் அவர்கள் விடைகளை அளித்துள்ளார்கள்.

உள்முக தியானத்தால் மட்டுமே இந்த தெய்வீக ஓசையை அறிய முடியும்.

ஆன்மீக நுட்பங்களை விளக்கும் அற்புத யோகி திருமூலர்.

3000 பாக்களை அருளியுள்ள அவர் அவற்றில் இயற்கை இரகசியங்களையும் தெய்வீக இரகசியங்களையும் நுட்பமாக விளக்கி அருளியுள்ளார்.

திருமந்திரத்தில் 606,607 பாடல்களில் இவற்றைக் காணலாம்.

மணிகடல் யானை வார்குழல் மேகம்

அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்

தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்

பணிந்தவர்க் கல்லது பார்க்க ஒண்ணாதே  (பாடல் 606)

இதன் பொருள்:

தியானத்தில் அமர்ந்து நாம் உள்முகமாகச் செல்லும் போது சுழிமுனை நாடியின் அடி வாசலைத் திறக்கக் கூடிய அற்புத இடத்தை அடைவோம்.

அப்போது இன்னும் மேலே செல்லும் போது அதாவது வாசி மேலே செல்லும் போது பத்து வித ஓசைகள் அல்லது ஒலிகள் அல்லது நாதங்கள் கேட்கும்.

இவை தச நாதங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடிக்கு நாத நாடி என்று பெயர்.

இதில் லயம் செய்த யோகி அல்லது சாதகன் அதை வெளியில் செல்லாமல் கட்டி விட்டால் சுழிமுனையின் உச்சி வாயிலுக்குச் சென்று விடுவான்.

சரி தச நாதங்கள் எவை?

 (1) மணியோசை

(2) கடல் அலையோசை

(3) யானை பிளிறும் ஓசை

(4) புல்லாங்குழலோசை

(5) இடியோசை

(6) வண்டின் ரீங்கார ஓசை

(7) தும்பியின் முரலோசை

(8) சங்கொலி

(9) பேரிகை ஓசை

(10) யாழிசை

நன்கு தியானம் செய்து உள்முகமாகச் செல்பவர்களே இந்த ஓசை இன்பத்தைக் கேட்டு உணர முடியும்.

“நன்மணிநாதம் முழங்கியென் உள்ளுறு நண்ணுவதாகாதே”

“ஓசையில் இன்பம் மிகுத்திடுமாகாதே”

“சங்கு திரண்டு முரன்றேழும் ஓசை தழைப்பனவாகாதே”

என்ற திருவாசகத் தொடர்கள் மாணிக்கவாசகரின் தியான அனுபவங்களை விளக்கும் சொற்றொடர்களாகும்.

‘திருச்சிலம்போசை ஒலி வழியே சென்று

நிருத்தனைக் கும்பிடென்று உந்தீ பற

நேர்பட அங்கே நின்று உந்தீ பற (பாடல் 17)

என்று திருவுந்தியார் மாபெரும் ரகசியத்தை விளக்குகிறது

திருச்சிலம்பாகிய திருவருள் ஓசை ஒலியாகிய பிரகாசமான ஒலி வழியே செல்வாயாக;  அங்கு ஐந்தொழில் திருக்கூத்தியற்றும் இறைவனைக் காண்பாயாக என்பது பாடலின் விளக்கமாகும்


கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே. (பாடல் 607)

என்ற பாடலும் இதை நன்கு விளக்குகிறது.

வன்மையான ஓசையில் ஆரம்பித்து மென்மையான ஓசையான வீணை ஒலியில் பாடல் முடிகிறது.

வீணா நாதத்தில் இறைவனைக் காணலாம் என சங்கீத வித்வான்களும் மகான்களும் கூறுவதில் நுட்பமான இரகசியம் உள்ளது; அதை இந்தப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

நுட்பமாக நமது பயணம் உள்நோக்கிச் செல்லச் செல்ல நுணுகிய ஓசையைக் கேட்டு ஓம் என்ற மந்திரத்தில் லயமடைவோம்.

இந்த ஒலிகளை விஞ்ஞானம் ஆராய ஆரம்பித்தால் பௌதிக உண்மைகளையே விளக்க முடியும்.

மனித மனத்தின் ஆழத்திற்குள் சென்று மனித இயற்கையின் அடித்தளம் சென்று நாம் பெறுகின்ற ஆன்மீக அனுபவங்களை அதனால் விளக்க முடியாது.

ஆனால் யோகிகளும், மகான்களும், ரிஷிகளும் தமது உள்ளுணர்வால் ஓசையின் வகைகளையும், திறன்களையும் அதன் பலன்களையும் உணர்ந்து நமக்கு வெளிப்படுத்தும் திறன் ஒரு மாபெரும் அதிசயமல்லவா?

இதைத் தருவது ஹிந்து மதம் ஒன்றேயல்லவா?

உணர்வோம்; செயல்படுவோம்; ஓசை மஹிமையை உணர்ந்து அதில் லயப்படுவோம்.

***

More Treasures from Colombo Museum (Post No.12,604)- 3 c

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,604

Date uploaded in London – –  –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

This part 3 c

Yesterday I posted all Hindu objects, Hindu Flags, Gods etc in the Colombo Museum. I visited the National Museum on 8th September 2023. All those interested in Hindu and Buddhist history of Sri Lanka must visit the museum .No one should miss the shop at the exit of the museum where you can buy good books and colourful post cards for a very reasonable price. I bought colour post card each for Rs. 6 (Indian money and Rs 20 in Sri Lankan money).

I bought the book Tamil Inscriptions in the Colombo National Museum.

Here are some more pictures:

Dancing Maks, swords, Budda statues

3 a – Buddha statues

3 b- Swords, Shields, Fans

3 C- Dance Masks

 Once you go and stand in front of the folk dance scene in the room, a live show comes with lights.

You can watch this in sound and light show in the room.

The pictures are split into 3 a and 3 b and 3 c for uploading convenience.

Guns outside the museum

–subham—

 Tags – Colombo Museum, Buddha, swords, dances, masks

More Treasures from Colombo Museum (Post No.12,604)- 3 b

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,604

Date uploaded in London – –  –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This part 3 b

Yesterday I posted all Hindu objects, Hindu Flags, Gods etc in the Colombo Museum. I visited the National Museum on 8th September 2023. All those interested in Hindu and Buddhist history of Sri Lanka must visit the museum .No one should miss the shop at the exit of the museum where you can buy good books and colourful post cards for a very reasonable price. I bought colour post card each for Rs. 6 (Indian money and Rs 20 in Sri Lankan money).

I bought the book Tamil Inscriptions in the Colombo National Museum.

Here are some more pictures:

Dancing Maks, swords, Budda statues

The pictures are split into 3 a and 3 b for convenience. 

–subham—

 Tags – Colombo Museum, Buddha, swords, dances, masks

More Treasures from Colombo Museum (Post No.12,604)-3

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,604

Date uploaded in London – –  –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Part 3

Yesterday I posted all Hindu objects, Hindu Flags, Gods etc in the Colombo Museum. I visited the National Museum on 8th September 2023. All those interested in Hindu and Buddhist history of Sri Lanka must visit the museum .No one should miss the shop at the exit of the museum where you can buy good books and colourful post cards for a very reasonable price. I bought colour post card each for Rs. 6 (Indian money and Rs 20 in Sri Lankan money).

I bought the book Tamil Inscriptions in the Colombo National Museum.

Here are some more pictures:

New Tamil Lessons- 3; Fifth case suffix ஐந்தாம் வேற்றுமை Ablative (Post No.12,603)

Picture explained below

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,603

Date uploaded in London – –  –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Picture of Mahatma Gandhi:

Tamil is a defective language when it comes to pronunciation; foreign or other language words cant be pronounced in Tamil without grantha/ Sanskrit letters.

A foreigner  who does not know India much will read the above picture as Makaatmaa Kaanthi, because Ha and Ga re not in ancient Tamil.

இதுவரை நான்காம் (4th case) வேற்றுமையைப் Dative Case படித்தோம் To, To Rama, To James, To Mary

ஆறாம் (Sixth case) வேற்றுமையைப் Genitive or Possessive படித்தோம் Of Rama, Of Krishna, Of July

xxxx

இன்று ஐந்தாம் (5h case suffix)  வேற்றுமையைப் Ablative  படிப்போம் From David, From Frankfurt, From Rama, From Latha

From (London/Paris/Madras/Colombo) ராமனிடமிருந்து

ராமன்+ இடமிருந்து  (ன் +இ =னி )= ராமனிடமிருந்து

Raman + Idamirunthu (N+I=NI)= Raamanidamirunthu

Tamil construction is = Raman From

From = Idamirunthu இடமிருந்து

Xxx

One important Point

The above is applicable human beings and gods; but also used in animal stories.

If it is a place like London, New York, Delhi, Madurai you have to use

ILIRUNTHU

இல்+ இலிருந்து

லண்டன்+ இல்+ இருந்து = லண்டனிலிருந்து

London +il+ ilirunthu = LONDONILIRUNTHU

டில்லி +இல் +  இருந்து =டில்லியிலிருந்து

Dilli +il+ ilirunthu = LDILLIYIILIRUNTHU

DILLI is the tamilized form of Delhi

Analysis  ன்+இ = னி ; ல் +இ =லி (N+I= NI; L+I=LI)

xxxx

சுவாமிநாதனிடமிருந்து புத்தகம் வாங்கினேன்

Swaminaathanidamirunthu Puththakam Vaanginen

Swaminathan From Book bought/ got, obtained

xxxx

லண்டனிலிருந்து இன்று வந்தேன்

Londonilirunthu Indru Vanthen

I London from Today Came

(Naan= I,  is not in the sentence; but VanTHEN  indicates first person singular past)

xxxxx

நாளை மதுரைக்கு போவேன்

Naalai Madhuraikku Poven

Tomorrow Madhuraito  will go

(Naan= I,  is not in the sentence; but poVEN indicates first person singular future)

xxxx

இது என்னுடைய பெட்டி

Ithu Ennudaiya Petti

This My Box/suitcase

(Verb IS not in the sentence and yet it is grammatical); in English you must say this IS my suitcase)

xxxx

என்னுடைய பெயர் லண்டன் சுவாமிநாதன்

Ennudaiya Peyar London Swaminathan

My Name (IS ) London Swaminathan

Xxx

உங்களுடைய பெயர் என்ன ?

Ungaludaiya Peyar Enna?

Your name what?

(Again IS not used in Tamil; short sentences are formed without verbs)

Indian languages are SOV languages; Subject, Object, Verb languages. Verb comes at the end unlike English.

To be continued,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Tags- New Tamil, Lesson 3, ablative case

சீரணி நாகபூஷணி கோவில்: இலங்கைத் தீவின் 108 இந்து ஆலயங்கள்- Part 31 (Post.12,602)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,602

Date uploaded in London – –  –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 31

62.சீரணி நாகபூஷணி கோவில், சண்டிலிப்பாய்

இலங்கையின் வடபகுதி மாகாணமான யாழ்ப்பாணத்தில் , யாழ்ப்பாண நகரிலிருந்து எட்டு மைல் தொலைவில் சண்டிலிப்பாய் கிராமம் இருக்கிறது. நயினாத் தீவு நாகபூஷணி கோவிலுக்கு அடுத்தபடியாகப் பிரபலம் வாய்ந்தது  இந்த சீரணி நாகபூஷணி கோவில். ஏப்ரல் மாத பெளர்ணமித் தேர்த் திருவிழாவுக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

சுமார்  125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஷண்முகநாதர் முருகேசப் பிள்ளை என்பவர் தமிழ்நாட்டிலுள்ள காரைக்காலிலிருந்து வந்து குடியேறிய குல நாயக , புனிதவல்ல முதலியார் வழி வந்தவர் ஆவார்.

(முதலியார் என்பது பட்டம் ; ஜாதி அல்ல.)

முருகேசப்பிள்ளை தேவி பக்தர். நாள்தோறும் இறைவன் மீது துதிபாடி நாட்களைக் கழித்து வந்தார். அவர்க்கு ஒரு தேவி யந்திரம் கிடைத்தது. அதாவது மந்திரங்களும் சக்கரங்களும் பொறிக்கப்பட்ட தகடு. ஆயினும் கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு  பண பலம் இல்லை. 1896ம் ஆண்டு சித்திரா பெளர்ணமி அன்று அவருக்கு ஒரு கனவு வந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி அந்த இடத்தைத் தோண்டும்படி கனவில் கட்டளை பிறந்தது. அப்படித் தோண்டிப்பார்த்தபோது அதிசயம் நிகழ்ந்தது. ஒரு ஐம்பொன் அம்பாள் விக்ரகம் கிடைத்தது. பேரானந்தம் அடைந்த அவர் கோவில் கட்டும் பணியில் இறங்கினார் . பக்தர்கள் பண மழை  பொழிந்தனர்..

நம்பினார் கெடுவதில்லை

இது நான்கு மறைத் தீர்ப்பு

அம்பிகையைச் சரண் புகுந்தால்

அதிக வரம் பெறலாம் — என்று மகா கவி பாரதியார் பாடியது உண்மையானது. ஜூலை மாத ஆடி அமாவாசையில்,  முதல் பூஜை துவங்கியது. அது இன்று வரை நீடிக்கிறது..

1962 ஆம் ஆண்டு பக்தர்கள் ஒன்று கூடி, திருப்பணி சபையை அமைத்தனர் பக்தர்கள் உறுப்பினர்களாகச் சேர்வதில் ஆர்வம் காட்டவே திருப்பணிகள் துவங்கின. மஹா மண்டபம், வசந்த மண்டபம்,, துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிக்கம்பம் ஆகியன புதுப் பொலிவு பெற்றன அம்பாளின் திருவிளையாடல்களைச் சித்தரிக்கும் உருவங்கள்  புதுப்பிக்கப்பட்டு. பிரகார மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். மிகவும் அழகான தேர் ஒன்றை கே. தம்பையா குடும்பத்தினர்  நன்கொடையாகக் கொடுத்தனர்.

இப்போது கோவிலுக்குச் செல்லும் தொண்டர்கள், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். தேர்த் திருவிழா போலவே இங்கு நடைபெறும் நவராத்திரி உற்சவமும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

முருகேச பிள்ளைக்கு பூமிக்கடியிலிருந்து கிடைத்த அம்பாள் விக்ரகம் இருந்த இடத்தில் முன்னொரு காலத்தில்  கோவில் இருந்திருக்க வேண்டும்.  கண்ணகி, இலங்கைக்கு வந்து, வற்றாப்பளை வரைக்கும்,  பல இடங்களுக்குச் சென்றாள் என்றும் அவள் நடந்த வழி எல்லாம் அம்மன் வழிபாடு ஏற்பட்டது என்றும் ஆன்றோர் பகர்வர்..

கோவில் பற்றி மேல் விவரம் வேண்டுவோர் 1963ம் ஆண்டு வெளியான திருப்பணி சபை மலரில் படித்து அறியலாம்.

இலங்கை முழுதும் நாக பூஷணி வழிபாடு

கண்ணகி வழி நடந்த இடம் எல்லாம் அம்பாள் வழிபாடு ஏற்பட்டது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நாகபூஷணி , காளி , துர்கா  கோவில்கள் இலங்கை முழுதும் காணப்படுகின்றன.

நாகபூஷணி கோவில்கள் அராலி தெற்கு , கொண்டாவில் , நவாலி, முல்லைத்த தீவு, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் இருக்கின்றன

லண்டனிலும் கூட நாகபூஷணி அம்மனுக்கு இலங்கைத் தமிழ்ர்கள் கோவில் கட்டியுள்ளனர் அதன் கும்பாபிஷேக சிறப்பு மலர்க கமிட்டி கூட்டத்தில் நானும் அழைப்பாளராகக் கலந்து கொண்டு மலருக்கு கட்டுரைகளையும் எழுதிக் கொடுத்தேன்.

Xxxx

63.தெல்லிப்பளை துர்கா கோவில்

யாழ்ப்பாண நகரிலிருந்து காங்கேசந்துறை நோக்கி எட்டு மைல் தொலைவு  பயணம் செய்தால் தெல்லிப்பளை துர்கை அம்மனைத் தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள்  இந்த திசையில் கோவிலை நோக்கிச் செல்கின்றனர். தற்காலத்தில் இந்தக் கோவில் பிரபலம் அடைந்தாலும் இந்தக் கோவிலுக்கு பழைய வரலாறும் உண்டு

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், கதிர்காமர் என்ற பக்தர் இந்தியாவுக்குச் சென்று பல தலங்களில் வழிபட்டார். மதுரை, காசி, ராமேஸ்வரம் என்று பல இடங்களுக்கும் சென்று வந்தார்; திரும்பிவருகையில் காசியிலிருந்து தேவியின்  சக்கரம் பொறித்த தகட்டையும் ( சக்தி யந்திரம்) கொண்டுவந்தார். காங்கேசன் துறையில் வந்து இறங்கிய அவர் நடந்து செல்லுகையில் களைப்பு ஏற்பட்டு ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார். அவர் மனதில் தோன்றியபடி அங்குள்ள இலுப்பை மரத்தின் அடியிலேயே தேவி சக்கரத்தை வைத்து வழிபாட்டினைத் துவக்கினார். பக்தர்கள் தொகை பெருகவே கோவில் எழுப்பப்பட்டது 1829-ம் ஆண்டில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது ; காஞ்சிபுரத்திலிருந்து வந்த குருக்கள் முறையான பூஜைகளை நடத்தினார். அப்போதுமுதல், உடையார் கதிரேச பிள்ளை வழிவந்தோர் கோவில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றனர். காலப்போக்கில் மண்டபங்கள் கட்டப்பட்டு அன்னதானம் அளிக்கும் வரைக்கும் வளர்ந்துவிட்டது பிரகாரத்தில் முருகன், பிள்ளையார், பைரவர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன.

சமய நூல்களைக் கற்றுத்தேர்ந்த தங்கம்மா அப்புக்குட்டி என்பவர் இடையறாது செய்த சேவையால் கோவிலின் புகழ் பரவியது

1968-ம் ஆண்டு முதல் வருடாந்திர உற்சவங்கள் ஆரம்பமாயின. 1978-ல் தேர் ஒன்றும்  சேர்ந்தது . ஆகஸ்ட் மாதத்தில்  வருட  விழாக்கள் நடக்கின்றன ராஜ கோபுரம் கட்டப்பட்டு 1981-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

1981ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் முழுவிவரங்களையும் படித்தறியலாம் .

—subham —- 

Tags சீரணி நாகபூஷணி, கோவில், இலங்கை, 108 புகழ் பெற்ற, இந்து ஆலயங்கள், Part 30, தெல்லிப்பளை,  துர்கா கோவில்,

அயல் தேச சொத்து! (Post No.12,601)

Bank of Switzeland 
 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,601

Date uploaded in London –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

அயல் தேச சொத்து!

ச.நாகராஜன்

அயல் தேச சொத்தால் என்ன லாபம்?!

அயல் நாட்டில் சொத்து இருக்கிறது – நிறைய! அதனால் என்ன பிரயோஜனம் என்கிறார் கவிஞர்!

கிம் தயா சுமஹத்யாபி ஷ்ரியா தேசாந்ந்தரஸ்தயா |

ரிபவோ யாம் ந பஷ்யந்தி சுஹ்ருபித்ர்யா ந பூஜ்யதே ||

எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, அயல் நாட்டில் அந்த சொத்து இருக்கிறது என்றால் அதைப் பார்க்கவும் முடியாது ஒருவரின் உறவினராலோ. அல்லது அவரது நண்பர்களாலோ அனுபவிக்க முடியாது.

ஆகவே அயல்நாட்டில் சொத்து சேர்ப்பது பயனில்லை.

மனைவியைப் பிரிந்த போது இளமையால் என்ன பயன்?

தேவைப்படுபவருக்குக் கொடுக்காமல் தர்மம் செய்தாயா நீ?

மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் செய்யும் சேவையால் என்ன பிரயோஜனம்?

தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொண்ட தம்பதிக்கு ஒரு மகன் பிறக்காவிடில் அதனால் என்ன பயன்?

ஒருவர் தன் மனைவியை விட்டு இளம் வயதில் பிரிந்து வாழ்ந்தால் அந்த இளமையால் என்ன தான பிரயோஜனம்?

கிம் தே க்ருதம் விதரணம் யதி நாதிர்தாய

    கிம் சேவயா யதி பரோபக்ருதௌ ந யத்ன: |

கிம் சங்கமேன தனயோ யதி நேக்ஷணீய:

    கிம் யௌவனே ந விரஹோ யதி வல்லபாயா: ||

சரியான நான்கு கேள்விகளைக் கேட்கிறார் கவிஞர்.

நமக்குத் தெரிந்த, புரியக் கூடியவை தான் பதில்கள்!

மார்பகத்தைக் கையால் மூடிய காரணம் என்ன?

ஒரு பெண் கைகளால் மார்பகங்களையும் உதடுகளையும் மூடிக் கொள்கிறாள்!

ஏன்? காரணத்தைக் கண்டுபிடித்த கவிஞர் சொல்கிறார்:

கிம் த்வம் நிகூகஸே தூதி ஸ்தனௌ வக்த்ரம் ச பாணினா |

சவ்ரணா ஏவ ஷோபந்தே சூராதரபயோதரா: ||

ஓ! எனது தோழியே! ஏன் உனது மார்பகங்களையும் முகத்தையும் (அதாவது உதடுகளையும்) உனது கைகளால் மூடி மறைக்கிறாய்? போர்வீரர்கள், உதடுகள், மார்பகங்கள் எல்லாம் அவர்களின்/அவற்றின் காயத்தினால் பிரகாசமாக இருப்பர்/இருக்கும் (என்பதாலோ!)

மழை மலையைக் கரைக்கிறது!

அத்வா ஜரா தேஹவதாம் பர்வதானாம் ஜலம் ஜரா |

அசம்போகோ ஜரா ஸ்த்ரீணாம்  வாக்‌ஷல்யம் மனஸோ ஜரா ||

பயணம் உடலைத் தளர்த்துகிறது.

மழை மலையைக் கரைக்கிறது.

தாம்பத்ய (பாலியல்) சுகம் இல்லையெனில் பெண்கள் தளர்கிறார்கள்.

வசவு வார்த்தைகள் மனதைத் தளர வைக்கிறது.

புகழில்லாத வாழ்க்கை வீணே!

அந்த: ச ஏவ ச்ருதவர்ஜிதோ ய:

    ஷட: ச ஏவார்திநிரர்தகோ ய: |

பூத: ச ஏவாஸ்தி யஷோ ந யஸ்ய

    தர்மே ந தீர்யஸ்ய ச ஏவ அ ஷோச்ய: ||

ஆன்மீக கல்வி இல்லாதவனே குருடன்.

கெஞ்சிக் கேட்டால் தான் வேலை செய்வேன் என்பவன் கபடன்.

புகழில்லாத வாழ்க்கையோடு இருப்பவன் இறந்தவன்.

தர்மத்தில் மனதைச் செலுத்தாதவன் இரக்கப்படவேண்டியவன்.

எந்த சாஸ்திரங்கள் வீணானவைஏன்?

அன்யானி சாஸ்த்ராணி விநோதமாத்ரம்

    ப்ராப்தேஷு காலேஷு ந தைஸ்ச கிஞ்சித் |

சிகித்ஸிதஜ்யோதிஷமந்த்ரவாதா:

    பதே பதே ப்ரத்யயமாவஹந்தி ||

மற்ற சாஸ்திரங்கள் எல்லாம் பொழுதுபொக்குக்கு மட்டும் உகந்தவையே. மிக முக்கியமான தேவை உள்ள சமயங்களில் அவை உதவாது.

ஆனால் சிகித்ஸை அதாவது மருத்துவம், ஜோதிடம், மந்திர சாஸ்திரம் ஆகியவை மட்டுமே வாழ்க்கையில் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் நம்பிக்கையைத் தருபவை.

**

Part 2 – Hindu Gods, Flags, Lamps and Instruments in Colombo Museum (Post No.12600)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,600

Date uploaded in London – –  –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Part 2

–Subham—

Colombo Museum, Hindi Idols, Hindu Flags

Hindu Gods ,Flags, Lamps and Instruments in Colombo Museum (Post No.12599)-1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,599

Date uploaded in London – –  –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I visited Colombo Museum on 8th September, 2023 and spent there three hours. I took lot of pictures. It is good that they allow photography. My purpose of visit was to see Hindu artefacts and study the history of Hinduism in Sri Lanka . I think they have not displayed all the Gods’ statues and other Hindu symbols. But the beautiful Durga and Surya statues of Choza era welcome us. I saw all the lamps, musical instruments, bells, fans etc. But what surprised me was the flags displayed there with Hanuman, Peacock, Swan and Lion or Narasimha.

Though a brief history of Hinduism was displayed there I wish there is a full section for Ramayana Lanka and other Gods. Over 100 important Hindu temples are there in Sri Lanka. Government publication itself shows nearly 4000 Hindu temples ancient and modern.

Another interesting thing, I found in the Museum was impressions or replica of important inscriptions which are over 2000 years old.

There is  good scope for comparative studies in coins of India and Sri Lanka as well as the Brahmi inscriptions of India and Sri Lanka. The amazing thing is Brahmi script has travelled from Asoka’s Mauryan empire to Sri Lanka covering lakhs of square miles of Indian sub-continent. Later we found them all over Southeast Asia. A chronological study of such things will throw more light on History of India. I have already covered the similarities between Mahavamsa and Tamil literature in my research articles posted here.

I have given below some interesting pictures taken by me:-

–Subham–

Tags- Colombo Museum, Hindu Gods, Statues, Flags, Part 1