இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 30
ஜூன் 19ம் தேதி விழா துவங்கும் முன் அம்மன் வீதியில் 3 பாம்புகள் வந்ததைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்
61.நயினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவில்
உலகில் பாம்பை வழிபடாத பழைய கலாசாரம் ஏதுமில்லை. வேதத்தில் பாம்பு வழிபாட்டைக் காண்கிறோம். அதற்குப் பின்னர் சிந்து சமவெளியில் பாம்பு வழிபாட்டைக் காண்கிறோம். . கிரேக்க நாட்டில் மைசீனிய மினோவன் (Mycenean, Minoan Civilizations) நாகரீகத்தில் காண்கிறோம். எகிப்து நாட்டிலோ மன்னர்களே சிவ பெருமான் தலையில் நாகம் இருப்பதுபோல மகுடம் வைத்திருப்பதையும் பார்க்கலாம். ஆயினும் இந்தியாவில் உள்ளது போல பாம்பு வழிபாட்டை, நாகர் வழிப்பாட்டினை வேறு எங்கும் காணமுடியாது. இன்றும் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிரத்தில் நாக பஞ்சமி விழாக்களில் உயிருள்ள பாம்புகளையே பெண்கள் பூஜிப்பதைக் காணலாம். இந்தியாவில் நாகர்கோவில் முதல் இமயமலை வரை நாகர் பெயரில் தலங்களும் கோவில்களும் இருப்பிடத்தை எல்லோரும் அறிவார்கள்.
SNAKE, SERPENT
ஆங்கிலத்தில் பாம்புக்கு உள்ள இரண்டு பெயர்களும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்பதை மொழி இயல் வல்லுநர்கள் அறிவார்கள் . ஸ்னேக் SNAKE என்பது நாகத்திலிருந்து வந்த சொல் ஸ் +நாக = ஸ் நேக ; மற்றும் ஒரு சொல் SERPENT சர்பென்ட்; இது ஸர்ப்ப என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே .
SNAKES NEAR THE TEMPLE
இலங்கைக்கு தனிச் சிறப்பு என்னெவென்றால் நாட்டின் பெயரே நாகத் தீவு;நாக நாடு. ஆதி குடிகள் நாகர்கள் என்று மஹாவம்சமும் மணி மேகலை என்னும் தமிழ் மொழிக் காப்பியமும் காட்டுகின்றன ; அதிலும் சிறப்புடைய இடம் நயினாத்தீவு என்னும் தீவாகும். இதுவே மணிமேகலை குறிப்பிடும் நாகத்தீவு, நாக நாடு, மணி பல்லவம் என்பது அறிஞர்களின் ஒருமித்த கருத்து.
சங்கத் தமிழ் நூல்களிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் 20 புலவர்களின் பெயர்கள் நாக என்று முடிவடைகிறது இவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் மருதன் இளநாகன் . இது போன்ற பெயர்கள் மகா வம்சத்திலும் உள்ளது. குப்தர் கால கல்வெட்டுகளும் நாகர் பெயர்களைக் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் தினசரி சந்தியா வந்தனத்திலும் பாம்பினை வழிபடுகிறார்கள் (நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில்)..
இந்து தெய்வங்களில் பாம்பினைப் பயன்படுத்தாத தெய்வங்களே இல்லை. இதைப் பார்த்து பெளத்தர்களும் சமணர்களும் கூட தங்கள் தலைவர்களுக்கு பாம்பினைச் சூட்டியுள்ளனர். இந்துக்கள் பாம்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை மேலை நாட்டு வெள்ளைக்காரர்கள் புஸ்தகத்தில் எழுதிய பின்னர் தான் நம்மவர்களுக்கே தெரிந்தது. நாக பஞ்சமி விழாக்களை படம் எடுத்தது வெளிநாட்டில் காட்டியோர் இதைச் சொல்லி எல்லோரும் பாம்புகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். பாம்புதான் நம்முடைய வயல்வெளிகளின் காவலர்கள். பாம்பின் எண்ணிக்கை குறைந்தால் அறுவடை குறைந்து விடும்; வயல் வெளிகளில் தானியங்களை அழி க்கும் எலிகளின், பூச்சிகளின் எண்ணிக்கை பல கோடி ஆகும்; எலிகளின் முதல் எதிரி பாம்பு; மனிதனின் முதல் நண்பன் பாம்பு. இதனால், பெண்கள் பாம்பு இருக்கும் புற்றுகளை வணங்கி பால் வார்க்கிறார்கள் ( (மதுரையில் பேச்சி அம்மன் கோவிலில் புற்றுக்குப் பால் விடுவதை நான் பள்ளிக்கூட நாட்களில் வேடிக்கை பார்ப்பேன்)
சில அரைவேக்காட்டுப் பேர்வழிகள் நாகர்கள் வழிபாடு தமிழ் நாட்டில் மட்டும் இருப்பதாகக் கதைப்பார்கள். அதுகளுக்கு மஹாபாரதத்தில் ரிக்வேதத்திலும் குப்தர் கல்வெட்டிலும் நாகர்கள் பெயர்கள் வருவது தெரியாது. பரமபத சோபான படத்தில் நவ நாகர்களின் பெயர்கள் இருப்பதைக் காணலாம். இந்துக்கள் கண்டுபிடித்த இந்த BOARD GAME போர்ட் கேம் ஐ இன்று உலகம் முழுதும் SNAKES AND LADDER ஸ்னேக்ஸ் அண்ட் லேடர் என்று விளையாடுகிறார்கள். தென் அமெரிக்க முழுதும் பரவிய மாயா நாகரீகமே Mayan Civilization அர்ஜுனன் காலத்தில் அங்கு சென்ற நாகர்களின் நாகரீகமே! இமய மலையில் நிறைய நாகர் தலங்கள் உள்ளன ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஷிர்க்கான் நாகா கோவில் உள்ளது (Temple of Shirgan Naaga., Himachal Pradesh ). காஷ்மீரில் அனந்த நாக , வெரி நாக (Anant nag, Veri nag) தலங்கள் இருப்பதும் இந்த அசடுகளுக்குத் தெரியாது
எவ்வளவுதான் சொன்னாலும் சிவனுக்கும் அம்பாளுக்கும் மிக நெருக்கமானது பாம்பு. இதை நாகநாதன், நாகேஸ்வரன்,நாகாம்பாள், நாகேஸ்வரி ,நாக பூஷணி என்ற பெயர்களிலிருந்து அறியலாம்.
xxx
இப்பொழுது இலங்கையின் வடபகுதியில் நயினாத் தீவில் இடம்பெற்றுள்ள நாகபூஷணி அம்பாள் கோவிலின் சிறப்புகளைக் காணலாம் .
நாக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பாம்பு என்று பொருள்; பூஷண BHUSHANA என்ற ஸம்ஸ்ருதச் சொல்லுக்கு ஆபரணம், அலங்காரம் என்று பொருள் ஐந்து நாகத்தை குடையாக அணிந்தவள் நாகபூஷணி Bhūṣaṇa (भूषण) refers to “ornament (for the body)” BHUSHANI
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறுகிறது நயினா தீவு.
சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, கோவலனின் பெற்றோர்களான மாநாய்க்கன் , மாசாத்தன் பெயர்களை இந்தக் கோவிலின் வரலாற்றில் காணலாம். அவர்கள் கண்ட ஒரு அற்புதக் காட்சியே கோவில் உருவாகக் காரணம் ஆனது . ஒரு பாம்பு, பூவினை வாயில் ஏந்தி இந்தத் தீவினை நோக்கி நீந்தி வந்தது. அதைத் துரத்திக் கொண்டு ஒரு கருடன் வந்தது. உடனே நாகம், கடல் நடுவில் இருக்கும் இரண்டு கம்பம் போன்ற பாறைகளுக்கு இடையே தஞ்சம் புகுந்தது . அப்போது மாநாயக்கன் என்னும் வணிகன் அதை விரட்டவே பாம்பு தனது பயணத்தைக் தொடர்ந்து நாகபூஷணிக்கு பூவை சமர்ப்பித்தது. இதைக் கண்ட வணிகர் இங்கு கோவிலை எழுப்பினார்.
இந்திரன் சாபம் தீரவும் அர்ஜுனன் சாபம் தீரவும் இங்கு வந்து அம்பாளை வழிபட்டதாகவும் கர்ணன் பரம்பரைக் கதைகள் சொல்லப்படுகின்றன.
இந்தியா முழுதும் சக்தி பீடங்கள் இருப்பதையும் அவை எல்லாம் தக்ஷ யாகத்தினை சிவன் அழித்த பின்னர், இறந்த பார்வதியின் உடலை சிவன் கொண்டுவந்தபோது ஒவ்வொரு உறுப்பும் விழுந்த இடமெல்லாம் அருள் மழை பொழியும் தலங்களாக ,மாறின என்றும் அறிவோம். அவ்வாறு சக்தி தேவியின் உடல் உறுப்புகளில் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்றும் பிற்கால சம்ஸ்க்ருத நூல்கள் பகரும்.
எது எப்படியாகிலும் நாக பூஷணியின் அருளுக்காக இங்கு பக்தி சிரத்தையோடு வரும் இந்துக்கள், சிங்கள பெளத்தர்கள் எண்ணிக்கைக்கு குறைவில்லை..
பிற்காலத்தில் வீராசாமி செட்டியார் என்பவர் ஏழு பிரகாரங்கள் சூழ அம்பாளை நிறுத்தி கோவில் கட்டினார் என்று தல வரலாறு செப்புகிறது; செட்டியார் கட்டிய கோவிலை 1620-ம் ஆண்டில் போர்ச்சுகீசியர்கள் உடைத்தபோதும் அம்பாள் விக்கிரகத்தை மறைத்து வைத்திருந்தனர் 1882-ம் ஆண்டில் அம்பாள் விக்ரகம் நாகபூஷணி என்ற பெயரில் பிரதிஷ்டை ஆனது. ஒவ்வொரு கட்டிடமும், சந்நிதிதியும் உருவாக பல பக்தர்கள் பொருளுதவி செய்தனர் .
1935 ஆம் ஆண்டில் ராஜ கோபுரம் உயர்ந்தது . 1949ம் ஆண்டில் கோவில் நிர்வாகம், தர்மகர்த்தா போர்டின்/ சபையின் கீழ் வந்தது.
அம்பாளுக்காக அழகிய தேர் 1957ல் கட்டப்பட்டது
கிழக்கு நோக்கிய இந்தக்கோவில், ஆர்ப்பரிக்கும் அலை கடலினை நோக்கி அமைத்திருக்கிறது இதனால் படகிலோ, கப்பலிலோ வரும்பக்தர்கள் தொலைலிருந்தே இரு கரங்களையும் உயர்த்தி வணங்குகிறார்கள் .
கோபுர தரிசனம் கோடி புண்யம்; ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது தமிழ்ச் சான்றோர் செப்பிய நன் மொழிகள் அல்லவா!!
கோவிலின் கருவறையில் 5 தலை நாகத்தின் கீழ் அம்பாள் அமர்ந்திருக்கிறாள். பிரகாத்தில் நமக்கு அருள்புரிய சப்த மாதர்களும் துர்கா தேவியும் காத்திருக்கின்றனர்.
உள் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சூரிய சந்திரர், நவ கிரக சந்நிதிகள் இருக்கின்றன.
தினசரி பூஜைகளோடு ஆண்டுதோறும் நடக்கும் விழாவுக்கும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். விழாக்களுக்கு வருவோர் தங்குவதற்கு வசதிகளையும் அன்னதானத்தையும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
நைனாத் தீவின் பெயரைச் சொன்னவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது நைனாத் தீவு சாமியார் ஆவார் . முத்துக் குமார சாமி என்ற பெயரில் பிறந்த அவர், பெரிய ஞானியாகி, 1949 ஆம் ஆண்டில் சமாதி ஆனார். தீவுக்கு வருவோர் அந்த சமாதியையும் கும்பிட்டுச் செல்லுவது வழக்கம் .
xxx
இந்த அம்மன் மீது பல புலவர்கள் பாமாலை சூடியுள்ளனர் .
கோவில் பற்றிய நூல்கள்
நயினை நாகேஸ்வரி , குல சபாநாதன், 1962
நயினை நாகபூசணி , என்.கே. சண்முக நாத பிள்ளை, 1981
To be continued………………………………………………
Tags- நயினை , நாகபூசணி , அம்பாள், நைனா தீவு, நாகத் தீவு, நாக நாடு, நாகர்கள் , மணி மேகலை
Namaskāram sir, please start a series on verbal roots in Tamizh and the upasarga and pratyaya that exist in Tamizh. Also explaining the words in Tamizh formed by those verbal roots. Please do it sir. Unfortunately very few books exist which deal with those topics and all of them are in Tamizh which makes it very difficult for people who cannot read the Tamizh script but are interested in learning them. We very much miss your sessions you took in October 2020. The first thing I checked in the mornings of 2020 was your page dealing with Tamizh words. Please start this.
🙏🙏🙏🙏🙏
xxxxx
In the last session we saw over 40 lessons. Now I have ben receiving requests to start the lessons again. The reason being no one teaches in four ways. They treat everyone as a Tamil speaking family member and leave many things without explaining.
If some one teaches “I am going home” and translates it as
Naan நான் (I) Veettukku வீட்டுக்கு (House to) Poykkondu போய்க்கொண்டு Irukkiren இருக்கிறேன் (going) then they have to explain it.
1.Sentence construction is different from English sentence
2. Home is translated as “to home”; strictly speaking “Home to” is there in Tamil. The case suffix “To” comes after house or home.
3. Am is missing in Tamil, because the present tense end part shows it is First Person Present Tense “Kiren” in Tamil
4. They miss one more point; As a teacher I will explain Going is a compound verb with Kondu= ing.
All these things should be explained to a foreign student.
Reading = Padiththuk Kondu படித்துக் கொண்டு
Writing= Ezuthik Kondu எழுதிக் கொண்டு
Coming= Vanthu Kondu வந்து கொண்டு
Eating = Sappittuk Kondu சாப்பிட்டுக் கொண்டு
So “ING= KONDU”. கொண்டு PRESENTCONTINUOUS
Xxx
Now let us study case suffix
Tamils and Sanskrit speakers have 8 same case suffixes in the same order. That shows both languages came from the same source. (Usage may be slightly different; but let us not discuss Sanskrit usage here)
First case is same (nominal)
Fourth case is called Dative case
If you want to say To Rama in Tamil you have to say Rama To
Tags– இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 29
59.தெஹிவளை விஷ்ணு ஆலயம், கொழும்பு
கொழும்பு தெஹிவளை பகுதியில் உள்ள முக்கிய இந்து சமயக் கோவில் ஸ்ரீ வேங்கடேஸ்வரா மஹாவிஷ்ணு மூர்த்தி கோவில் ஆகும். இந்தக் கோவிலின் பின்னணியில் சுவையான வரலாறு ஒன்று உள்ளது.
டச்சுக்கார (HOLLAND)ஆட்சியின்போது கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வைணவ பக்தருக்கு கனவு ஒன்று வந்தது அவர் அப்பணியில் சூப்பர்வைசர் ஆக இருந்தவர். விஷ்ணுவைக் கும்பிடும் இடத்தைத் தேடும்படி அவர்க்கு கனவில் கட்டளை பிறந்தது. அவரும் அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் ஏதேனும் வைணவ சின்னங்கள் இருக்குமோ என்று தேடிப்பார்த்தார் . மொத்தத்தில் ஏமாற்றமே மிஞ்சியது; மீண்டும் கனவு வந்தது . அதே உத்தரவு. சரி, இந்த முறை வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் விக்ரமாதித்த மன்னன் போல முயற்சியைத் தொடர்ந்தார். நல்லவேளை இந்த முறை வேதாளம் முருங்கை மரத்தில் ஏறவில்லை. ஒரு அற்புதக் காட்சியைக் கண்டார். ஒரு பசு மாடு அவர்க்கு முன்னர் நடந்து சென்று வழிகாட்டியது திடீரென்று அது ஒரு பாம்புப் புற்றின் மீது நின்று பாலைச் சொரிந்தது . அதிசயித்துப்போன அவர் அந்த இடத்தில் தேடியபோது ஒரு விஷ்ணு கோவிலின் இடிபாடுகளைக் கண்டார்..
அந்த இடத்தில் விஷ்ணுவுக்குப் பிரியமான துளசிச் செடிகளும் செழித்து வளர்ந்தன ; அவர் கோவில் கட்ட முயன்றபோது பலரும் கைகொடுத்து உதவினார்கள் அங்கு எழுந்ததுதான் தெஹிவளை நெடுமால் விஷ்ணு ஆலயம். அங்கே விஷ்ணுவை வழிபடத்துவங்கினர். பிள்ளை வரம் வேண்டிப் பலரும் வலம் வந்தனர்
அந்தக் காலத்தில் ஆறுமுகம் என்பவருக்கு ஒரு மகன் பிறந்தான். நீண்டகாலம் இறைவனை வேண்டிப் பெற்ற மகனை இறைவன் பணியில் ஈடுபடுத்த ஆசை கொண்டார். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல ஒரு குருவும் வந்து சேர்ந்தார். ஆறுமுகம் மகனுக்கு அவர் தீரன் என்று நாமகரணம் செய்தார்.. அவனும் காலப்போக்கில் கடவுள் நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவுடன் தீரன் சுவாமி என்று அழைக்கப்பட்டார். தென் இந்தியாவுக்குச் சென்று பல இடங்களில் யாத்திரை செய்யும்போது ஒரு வேல் கிடைத்தது. அதை தெஹிவலைக்குக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார். வேலை வணங்குவதே நமக்கு வேலை என்று மகா கவி பாரதியார் பாடியது போல வேலை வணங்கினார்.
அந்த வேலை இன்றும் காணலாம். அதை ரத்தத்தில் ஏற்றி கொழும்பு நகர் வரை பவனியும் வந் தார். .
இதற்குப்பின்னர் 1971ம் ஆண்டில் புத்துணர்ச்சி பிறந்தது நிறைய சந்நிதிகள் எழுந்தன. 1975ம் ஆண்டில் கண்ணன் பிறந்த கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது மோ கன் என்ற வணிகர் ஒருவர் கோவில் நிர்வாகிகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அறிமுகப் படுத்தினார். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருப்பதி- திருமலை தேவஸ்தானமும் விக்ரகங்களை அனுப்பி உதவினர் 1983 ஐனவரி முதல் தேதியில் வேங்கடேச பெருமாள் -பத்மாவதி தாயார் கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ தேவி , பூ தேவி சகிதம் நின்று காட்சி தருகிறார் .
தென்னந்தோப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தை ஈழத்துத் திருப்பதி என்று பக்தர்கள் போற்றினார்கள். ருக்மிணி சத்யபாமா உடனுறை கிருஷ்ணர் , விஷ்ணு பாதம், பள்ளி கொண்ட பெருமாள், , சனைச்சரன் , நாக தம்பிரான் , பிள்ளையார், வேல் சந்நிதிகள் பக்தர் கூட்டத்தைக் கவர்ந்து இழுக்கிறது .
மேல் விவரம் வேண்டுவோர் 1979ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் பெறலாம் .
Xxxx
60. இலங்கையில் அழிந்துபோன விஷ்ணு கோவில்கள்
சோழர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் (1017-1070) இந்துக்களுக்காக பல சிவன் கோவில்களையும், விஷ்ணு கோவில்களையும் கட்டினார்கள். அவர்கள் பொலன்னறுவையில், புலஸ்திபுரம் என்ற இடத்திலிருந்து ஆட்சி புரிந்தனர். அந்த ஊருக்கு ஜனநாத மங்கலம் என்ற புதுப்பெயரையும் சூட்டினார்கள். அங்கே தோண்டி எடுக்கப்பட்ட விஷ்ணு சிலை தொல்பொருட் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது .
1901ம் ஆண்டிலிருந்து தொல்பொருட் துறை கமிஷனர் வெளியிட்டு வரும் ஆண்டு அறிக்கைகளில் பல அரிய விஷயங்கள் கிடைக்கின்றன. ஆறு விஷ்ணு ஆலயங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்திருக்கின்றன.
வடக்கு நுழைவாயிலில் இருந்த கோவில்
ஜனநாதபுரத்தின் வடக்கு வாசலில் இடிந்த சிவன் கோவில், விநாயகர் கோவில்கள் உள்ளன . 1886-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விஷ்ணு சிலை இடிந்த கோவிலில் பீடத்தில் நிற்கிறது. அர்த்த மண்டபம், மஹா மண்டபம் முதியன கருங்கற்களால் கட்டப்பட்டிருந்ததும் தெரிகிறது 1907ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணுவின் சிலை மூன்றேகால் அடி உயரம் உடையது.
அதற்கு முன்னர் 1887ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்சசியில் விநாயகர், சுப்பிரமணியர், ஈஸ்வரன் முதலிய மூர்த்திகள் கிடைத்தன.
1902- ஆம் ஆண்டில் நத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சிவ தேவாலய எண் -4 க்கு எதிரே கண்டுபிடிக்கப்பட்ட 3 அடி 9 அங்குல உயர விஷ்ணு சிலை பற்றிய தகவல் கிடைக்கிறது. அங்கும் அர்த்த மண்டபம், மகாமண்டபம் இருந்தன.
மிகப்பெரிய விஷ்ணு ஆலயத்தின் தகவல்கள் 1913-ம் ஆண்டு அறிக்கையில் கிடைக்கின்றன. இந்த ஆய்வு 1908ம் ஆண்டில் நடந்தது இதுதான் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம்.. மண்டபங்களின் அஸ்திவாரத்தை அளவு எடுத்தபொழுது இது தெரிய வந்தது.
சிவ தேவாலய- 6 என்று Report ரிப்போர்ட் கூறும் இடத்தில் விஷ்ணுவுக்கும் கோவில் இருந்தது. இங்கு கிடத்த விஷ்ணு ஸ்ரீ தேவி , பூதேவி ஆகியோருடன் நிற்கிறார். ஏனைய இடங்களில் கிடைத்த விக்ரகங்களில் அவர் மட்டும் சங்கு சக்கரத்துடன் நிற்கிறார் .
Picture from Dehivala Vishnu Temple
இலங்கையில் சிவன் கோவில்கள் பற்றி நிறைய புஸ்தகங்கள் பேசுகின்றன. ஆனால் பெருமாள் கோவில்கள் பற்றி அதிக விவரம் கிடைப்பதில்லை.
தொடரும்……………………………
Tags- தெஹிவளை, நெடுமால் , விஷ்ணு ஆலயம், கொழும்பு, இலங்கை, 108 , Part 29 , வேங்கடேசப் பெருமாள்
ஒருவன் தனது சொந்த இடத்தில், சொந்த நாட்டில் இருப்பதே அவனுக்கு பலம். இல்லை என்றால் என்ன ஆகும்?
இதோ ஸ்லோகத்தைப் பார்ப்போம்:
அதேஷஸ்யோ ஹி ரிபுணா ஸ்வல்பகேநாபி ஹன்யதே |
ப்ராஹோல்ப்யானபி ஜலே கஜேந்த்ரமபி கர்ஷதி ||
ஒருவன் தனது சொந்த இடத்தில் இல்லையெனில் சிறிய எதிரியால் கூட வீழ்த்தப்படுவான். முதலை ஒன்று மிகச் சிறியதாக இருந்தாலும் கூட ஜலத்தில் இருக்கும் போது யானைகளின் அரசனான கஜேந்திரனைக் கூட இழுத்துச் சென்று விடும்.
அஞ்ஞானமே வாழ்க்கையில் வியாதி
அஞ்ஞானமிஹ நிதானம் ப்ராப்யூபம் ஜனனமேவ பவரோகே |
பரிபாக: சம்சரணம் பைஷஜ்யம் நைஷ்டிகீ சாந்தி : ||
உலக வாழ்க்கையின் வியாதிக்கான முதல் காரணம் அஞ்ஞானமே.
அதனுடைய முதல் அறிகுறி இந்த உலகில் பிறப்பது – ஜனனம் தான்!
உலகியல் வாழ்க்கை அதன் அபிவிருத்தியாகும்.
இதற்கான பரிகாரம் அல்லது தீர்வு நிரந்தரமான சாந்தி தான்!
I am posting some pictures from 1908 year od book about Sri Lanka
Title of the book- The Book of Ceylon
Author – Henry W Cave
Year 1908
Hundreds of black and white pictures are in the book; but most of them are about gardens and plants. I am producing pictures of men and buildings only.
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 28
57.வல்லிபுர ஆழ்வார் கோவில்
இலங்கையின் வடபகுதியில் பருத்தித்துறையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் வல்லிபுரம் கிராமம் இருக்கிறது . இங்கு புகழ்மிகு வல்லிபுர ஆழ்வார் கோவில், எழில்மிகு கோபுரத்துடன் காட்சி தருகிறது .
முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் BULLET POINTS
இலங்கை இந்துக்களிடையே உள்ள வினோத விஷயம் மூர்த்திக்குப் பதிலாக அவரது ஆயுதத்தை வைத்து வழிபடுவதாகும் . யாழ்ப்பாண நல்லூர் கந்த சாமி கோவிலில் முருகனுக்குப் பாதிலாக அவரது ஆயுதமான வேல், மூலஸ்தானத்தில் வழிபடப்படுகிறது . அதே போல வல்லிபுரத்தில் திருமாலின் சுதர்சன சக்கரமே மூலஸ்தானத்தில் வழிபட ப்படுகிறது.
இரண்டாவது விநோதம், பிள்ளையாருக்குப் பூஜை செய்த பின்னரே வல்லிபுர ஆழ்வாருக்கு பூஜை நடைபெறும். விநாயகர் வழிபாட்டை பெளத்த மதத்திலும் கூடக் காணலாம். ஆயினும் தமிழ்நாட்டில் தற்கால வைணவக் கோவில்களில் பிள்ளையார் வழிபாடு அரிது. வல்லிபுரத்திலோ, குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் தான் பெருமாளுக்குப் பூஜை.
இன்னும் ஒரு அரிதான விஷயம், தீபாவளி தினத்தன்று நரகாசுர வதம் விழாவாக அனுஷ்டிக்கப்படுவது ஆகும். தீபாவளிக்கு சமண மதம் வரை பல காரணங்கள் சொல்லப்பட்டு கொண்டாடுகின்றனர். ஆயினும் கிருஷ்ணன் செய்த நரகாசுர வதத்தை தீபாவளியுடன் தொடர்பு படுத்துவது தமிழ்நாட்டில்தான் பரவலாக இருக்கிறது .
வல்லிபுரம் புகழ் அடைய மற்றோர் காரணம் அங்கே கிடைத்த சிறிய தங்கத் தகட்டில் உள்ள கல்வெட்டு ஆகும். இதில் பிராமி லிபியில் சில வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன . 1936–ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத் தகடு .
பல கோவில்களைப்ப போல இதுவும் இந்தியாவுடன் தொடர்புடைய கோவில்.
ஐந்தாவது அதிசயம் இங்கு விபூதியும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் வைவணக் கோவில்களில் இதைக் காண முடியாது
Xxxx
கொஞ்சம் கிசு, கிசு ; சொந்த புராணம்
(லண்டனுக்கு வந்த ஒரு வைணவ உபன்யாசகரை லண்டன் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். காரணம் அங்குள்ள ஹாலில் நடந்த நிகழ்ச்சி. அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஒரு கவரில் பணமும் அன்பளிப்பாகக் கொடுக்க ஏற்பாடாகியிருந்தது. உபன்யாசம்/ சொற்பொழிவு முடிந்த பின்னர் முருகன் சந்நிதிக்கு அழைத்துச் சென்றேன்.; அவரும் மறுக்காமல் என்னுடன் வந்தார்.
முருகன் சந்நிதியில் தக்க மரியாதைகளைத் செய்த குருக்கள் , அவர் கையிலும் விபூதியைக் கொடுத்தார். அதை அவர் தமிழ் நாட்டின் திராவிட முரடர்கள், முட்டாள்கள் செய்வதைப்போல கீழே உதறிவிட்டார். குருக்கள்மார்களின் முகங்கள் சிவந்தன . ஆயினும் வைதாரையும் வாழவைப்பவன் முருகன். அவனைத் தமிழிலில் திட்டினால் கூட அவன் மகிழ்வான் என்று அருணகிரி பாடியதை நெஞ்சில் குடிகொண்ட குருக்கள்கள் ஒன்றும் சபிக்கவில்லை. ஆயினும் அவருக்காக எல்லா குருக்கள்களும் ஒரு கவரில் போட்டுவைத்த பணத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள் மனம் ஒப்பவில்லை. நானும் வந்த உபன்யாசகரை காரில் ஏற்றிவிட்டுத் திரும்பினேன்; கார் சிட்டாகப் பறந்தது.
திரும்பிப் பார்த்தேன்; தலைமைக் குருக்கள் கையில் (ENVELOPE ) பண உறையுடன் ஓடிவந்தார்; அவரிடம் சொன்னேன் — கவலைப் படாதீர்கள்; நீங்கள் ஏன் பண முடி ப்பைக் கொடுக்கத் தயங்கினீர்கள் என்பதை நானும் கவனித்தேன். நீங்கள் செய்த காரியம் முற்றிலும் சரியானதே; எனக்கும் உங்களைப் போலவே வருத்தம் ஏற்பட்டது என்றேன்..
உலகம் முழுதும் ஹரே கிருஷ்ண (ISKCON) இயக்கத்தைப் பரப்பி, வெள்ளைக்காரர்களையும் குடுமி வைத்துக்கொள்ள வைத்து, உலக நகரங்களில் வெள்ளைக்கார பெண்களை டான்ஸ் ஆட வைத்த பெரியவர் பக்தி வேதாந்த பிரபுபாத ( FOUNDER OF ISKCON) ஆவார் . அவரும் பகவத் கீதை பேருரையில் ஸ்லோகத்துக்கு ஸ்லோகம் சிவபெருமானை வம்புக்கு இழுத்து அவரை டெமி காட் DEMI GOD – குட்டி தேவதை – என்று திட்டுகிறார். ஆக உலகில் இப்படிப் பல அசடுகள் உண்டு.
மதுரையில் ஒரு ஜீயர் உபன்யாசம் செய்தார்; மதுரையிலுள்ள பிரபல தொழில் நிறுவனம் வைணவர்களால் நடத்தப்படுவதால் அவருக்கு ராஜ உபசாரம் செய்தனர். அவர் ஒருநாள் உபன்யாசத்தில் சிவபெருமானை வம்புக்கு இழுத்து. சிவன் ஜடை நாற்றம் பிடித்தது. அதிலிருந்து புனித கங்கை எப்படிவரும் ? என்று அங்கலாய்த்தார். நுணலும் தன வாயால் கெ டுமென்பது பழமொழி; அவர் உபன்யாசத்தைக் கேட்கப்போன சைவர்கள் அன்றோடு அவர் இருக்கும் பக்கத்துக்கே செல்லவில்லை . இப்போதும் தமிழ் நாட்டு வைணவக கோவில்களில் அந்தந்த வகை நாமம் போட்டோருக்கு அந்தந்த கோவில்கள் (வடகலையா, தென் கலையா , U யூ நாமமா, ஒய் Y நாமமா) சிறப்பு மரியாதை செய்வதையும் என்னைப்போல விபூதி பூசியோருக்கு வேறுவித, மாற்றாந்தாய் மனப்பான்மையைக் காட்டுவதையும் பார்க்கலாம் ).
xxxxx
நிற்க; ஊர் வம்பு, கிசு கிசுக்களை ஒதுக்கிவிட்டு வல்லிபுரம் ஆழ்வாரை தரிசிப்போம். இங்கும் ஒரு அதிசயக் கதை சொல்லப்படுகிறது . நேற்று பொன்னாலை வரதப்பெருமாள் கோவிலில் விஷ்ணு, கூர்ம அவதாரம் எடுத்த கதையைக் கண்டோம். வல்லிபுரத்தில் மச்சாவதாரம் எடுத்த கதையைக் காண்போம்.
வல்லி நாச்சியார் என்ற மீனவப் பெண்ணுக்கு நீண்ட காலத்துக்குக் குழந்தையே பிறக்கவில்லை.அவர் வல்லிபுரம் அருகில் கடலில் பயணித்தபோது ஒரு அதிசய மீன் ,பெரிய மீன், துள்ளிக் குதித்தது ; அது அவருடைய மடியில் வந்து விழுந்தது. அதை அவர் அன்போடு அர வணைக்கவே அது குழந்தையாகிப் பின்னர் திருமாலின் ஸுதர்சனமாக மாறியது. அந்த சுதர்சன சக்கரத்தை மேளதாள முழக்கத்துடன் ஏற்றிவந்தனர். பல்லக்குத் தூக்கிகள் ஓய்வெடுப்பதற்காக சற்று நேரம் பல்லக்கினை இறக்கிவைத்தனர் ; மீண்டும் வந்து தூக்க முயன்றபோது அதைத் தூக்க முடியவில்லை. அந்த ஊரின் மகிமையை உணர்ந்த அவர்கள் அங்கேயே சுதர்சன சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்தனர் . இன்றுவரை உயர்ந்த கோபுரம் கட்டி , முறையான பூஜைகள் விழாக்களுடன் அவரை ஆராதித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெறுகின்றன .
புரட்டாஸி மாதம் பெளர்ணமியில் தீர்த்த உற்சவத்துடன் 15 நாள் திரு விழா பூர்த்தியாகும் 16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும். இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகளும் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு விசேஷ நாளாகும். இவ்வாறு பலவிதமான சிறப்புகள் உடைத்து .
இந்த வல்லிபுரம், யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதியில் இருக்கிறது; இங்கு தொண்டை நாட்டின் மறவர்கள் குடியேறியதால் இந்தப் பெயர் என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர் .
இயற்கை எழிலும், நல்ல கடல் மணலும் நிரம்பிய இந்த ஊர், ஒருகாலத்தில் சிங்கை நகர் என்னும் தலை நகராக விளங்கியது மேற்கண்ட பல விஷயங்களுக்கு ஆதாரம் வல்லிபுர வைபவம் என்ற தலைப்பில் தட்சிண கைலாச மான்மியம் , தட்சிண கைலாச புராணம் என்ற இரண்டு நூல்களில் இருக்கிறது.
ஆழ்வான் என்பது வைணவத் தொண்டரையும், நம்மை எல்லாம் ஆளும் பெருமாளையும் குறிக்கும்
இந்தக் கோவிலில் விஷ்ணு, விநாயகர், நாகர், நாச்சியார், ஹனுமார், நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன . 71 அடி உயர ராஜ கோபுரம் கிருஷ்ண லீலைகளை சித்தரிக்கிறது .
கோவில் பற்றி தற்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகள் ,
வல்லிபுரம் பதிகம், புலவர் பீதாம்பரம், 1819
வல்லிபுரம் பதிகம், சிவசம்பூ புலவர், 1852-1910
கும்பாபிஷேக மலர், 1977
Xxx
58. மட்டக்களப்பு விஷ்ணு கோவில்கள்
மட்டக்களப்பு வட்டாரத்தில் விஷ்ணு, கிருஷ்ணன் கோவில்கள் அதிகம் இருக்கின்றன . முல்லை நிலம் மலிந்துள்ளதாலும் பாலுக்கும் நெய்யுக்கும் பஞ்சமில்லாத மேய்ச்சல் நிலங்களில் கறவைப் பசுக்கள் நிறைந்திருப்பதாலும் கிருஷ்ணனுக்குக் குறைவின்றி பாலும் வெண்ணெயும் கிடைக்கின்ற்ன கலிங்க மகா மன்னன்/ மாகோன் 1215-1255 இந்தியாவிலிருந்து வ து ஆண்டதாலும் அவன் ராமர், கிருஷ்ணர் மீது பக்தி கொண்டவன் என்பதாலும் இங்கே பெருமாள் கோவில்கள் பெருகின.. சில கோவில்கள் ஆண்டுதோறும் கல்யாண உற்ச வத்துக்கு மட்டுமே திறக்கின்றன அப்போது 9 நாட்களுக்கு கண்ணனின் வீரதீரச் செயல்களை வருணிக்கும் கஞ்சன் அம்மானை பாராயணம் நடைபெறும். . ருக்மிணி– கிருஷ்ணர் கல்யாண வைபவத்துடன் விழாக்கள் நிறைவுபெறும்.
திமிலை தீவு , வந்தாறு மூலை , தம்பிளை வில்லு விஷ்ணு கோவில்கள் , மட்டக்களப்பு திருப்பழுகாமம் – அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு திருக்கோயில், குருக்கள் மடம் , குருகல்மாதம் ,களுதாவளை கோவில்கள் குறிப்பிடத்தக்கன. திமிலை தீவு , வந்தாறு மூலை கோவில்களில் நாடகங்கள் வாயிலாக புராண, இதிஹாஸக் கதைகளை நடிப்பது குறிப்பிடத்தக்கது .
EVERYONE MUST WATCH THE BEAUTIFUL SCENES , DRAMAS IN FACEBOOK
இதோ திமிலைத் தீவுக் காட்சிகள் (பேஸ்புக், Facebook, You Tube யூ ட்யூபில் பொம்மலாட்ட நாடகக் காட்சிகளைக் காணலாம்)
FOLLOWING IS FROM FACEBOOK
“ஈழமணித் திருநாட்டின் கீழ்க்கரையின் பாடும் மீன் பண்ணிசைக்கும் கதிர் நாடாம் மட்டுமாநகரின் செந்தமிழும் சைவமும் சேர்ந்து மணம் பரப்பும் #திமிலைதீவு# எனும் பதிதனிலே விஷ்ணு ஆலயம் எனப் பெயர்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த உற்சவம் தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் .திருவிழா நிகழ்வுகள் யாவும் நாடகபாணியில் இடம்பெற்று 10ம் நாள் ( ருக்மிணி )கல்யாண அமுதுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறும்
திருவிழா காலங்களின் எம் பெருமாள் வெளி ஊர்வலம் வரும் வேளையில் இவ் பொம்மை ஆட்டங்கள் மிகவும் அழகான முறையில் ஆடப்படும். இப் பொம்மைகளை எமது ஆலயத்தினை சார்ந்த இளைஞர்கள் சிறுவர்கள் தாமாகவே வடிவமைத்து திறன்பட நிகழ்த்துவார்கள் இக் கலையானது பல வருடங்களாக திருவிழாக் காலங்களில் எமது ஆலயத்தில் செய்யப்பட்டு வருகின்றது .
முதலாம் நாள் திருவிழா: மாங்கனி பறித்தல் வேட்டைக்கு செல்லும் கம்சன் தனது சகோதரிக்காக மாங்கனி பறித்து சாபம் பெறுதல்.
இரண்டாம் நாள் திருவிழா : பூதகி வதம்- நச்சுப்பால் கொடுத்து கண்ணனைக் கொல்வதற்காக கம்சனால் அனுப்பப்பட்ட பூதகியை வதம் செய்தல்..
மூன்றாம் நாள் திருவிழா: மருதுகால் சாய்தல் — கம்சனின் ஏவலால் கண்ணைக் கொல்ல வந்து மருத மரங்களாய் நின்ற அசுரர்களை ஊர்ந்து அழித்தல். ஶ்ரீ கிருஷ்னரின் லீலைகள் யாவும் திருவிழாக் காலங்களில் நாடக பாணியில் நடைபெறுவது எமது ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும்.
·
நான்காம் நாள் திருவிழா: கன்று கொன்று கனிக்கெறிதல் – கண்ணணைக் கொல்ல வந்து கன்றுகளாவும் விளாமரமாகவும் நின்ற அசுரர்களை வதம் செய்தல் . ·
5ம் நாள் திருவிழா: கூத்தரைக் கொல்லுதல். கண்ணனை அழிக்கக் கூத்தாடிகளாய் வந்த அசுரர்களை கூத்தாடியே வதம் செய்தல்
·ஆறாம் நாள் திருவிழா: வாணன் யுத்தம் – கண்ணன் தன் எதிரியான வாணனைக் யுத்தம் செய்து மாய்த்தல்
·
ஏழாம் நாள் திருவிழா- நரகாசூரன் வதை – அனைத்து உலக உயிர்களையும் தன் கொடுமையால் துன்புறுத்திய நரகாசூரனைப் திருமால் வதம் செய்து அருள்பாலித்தல் –
எட்டாம் நாள் திருவிழா- கம்சன் சம்ஹாரம் – தன்னைக் கொல்வதற்காக சதா சூழ்ச்சிகள் புரிந்த தன் தாய்மாமன் கம்சனைக் கிருஷ்ணர் சம்ஹாரம் செய்தல்
RUKMINI KALYANAM
ஒன்பதாம் நாள் திருவிழா – திருக்கல்யாணச் சடங்கு – ஶ்ரீ கிருஷ்ணர் தன்னைக் காதலித்த மங்கை உருப்பினி (RuminiIயைச் சிறையெடுத்துச் சென்று திருமாங்கல்யதாரணம் செய்தல்.
To be continued……………………………..
Tags- திமிலைத் தீவு, பொம்மலாட்டம், கஞ்சன்(Kamsan) அம்மானை , வந்தாறு மூலை , தம்பிளை வில்லு, விஷ்ணு கோவில்கள், Rukmini Kalyanam, மட்டக்களப்பு