ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்‌ஷா! (Post No.12,526)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,526

Date uploaded in London –  26 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்‌ஷா! 

ச.நாகராஜன் 

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (பிறப்பு 15-10-1931 மறைவு 27-7-2015) வெல்லிங்டனுக்கு வந்தது பற்றி நியூஸ் பாரதி தனது 4-4-2022 தேதியிட்ட இதழில் தெரிவித்த சுவையான செய்தி இது:

தலைநகர் (டில்லியிலிருந்து) வெல்லிங்டன் வந்த  ஜனாதிபதி டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் (ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் 2002-2007) நேராக தான் மிகவும் பிரமித்துப் போற்றும் ஃபீல்ட் மார்ஷல் மானெக்‌ஷாவைப் பார்க்கச் சென்றார்.

ஆம், அப்படி ஒரு ஈர்ப்பு மானெக்‌ஷாவின் மீது அப்துல்கலாமிற்கு இருந்தது.

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மானெக்‌ஷா நீலகிரியையே தன்………………

Please continue in swamiindology.blogspot.com

Find the SNAKE TOWNS in the puzzle Square! (Post No.12,525)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,525

Date uploaded in London – –  25 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 All the geographical names have Snake in their names! Find them.

1.This town in Maharashtra is the Head quarters of RSS

Down

1.This town in Tamil Nadu is very near Kanyakumari; 2.This town is in Kashmir; 3.This town in Kodagu district of Karnataka has a tiger reserve(two places up or down); 4.The lake with snake name is in Kashmir; associated with Lord Shiva; 5.This snake island name is in Tamil Kavya Manimeghalai, now  identified with a part of Sri Lanka .

Answers

Across

1.Nagpur

Down

1.Nagerkoil ; 2.Anantnag ; 3.Nagerhol (two places up or down);

4.Seshnag; 5.Nagadwip

—subham—

Quiz நட்சத்திரப் பத்து quiz (Post No.12,524)



GREAT BEAR= URSA MAJOR= SAPTA RISHI CONSTELLATION 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,524

Date uploaded in London – –  25 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz serial No. 75

1.ராமன் பிறந்த நட்சத்திரம் எது கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரம் எது ?

XXX

2. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் நட்சத்திரங்கள் யாவை ?

XXX

3.சிவனுடன்விஷ்ணுவுடன் தொடர்புடைய  நட்சத்திரங்கள் எவை?

XXX

4.தென் பகுதியில் வானத்தை அலங்கரிக்கும் ரிஷி/ நட்சத்திரம் எது?

XXX

5.வடக்கு வானத்தில் கற்புக்கரசியாக ஒளிவீசும் நட்சத்திரம் எது?

XXX

6.ஸப்தரிஷி நட்சத்திர மண்டலக் கூட்டத்தின் சிறப்பு என்ன?

XXX

7.தென் வானத்தில் அந்தரத்தில் தொங்கும் மன்னன் / நட்சத்திரம் எது?

XXX

8.வானத்தில் ஒளி வீசும் சின்னப்பையன் யார்?

XXX

9. ரேவதி நட்சத்திரம் யாருடைய மகள் யாரை மணந்தாள் ?

XXX

10.சந்திரனுக்குப் பிரியமான ஸ்டார் எதுசங்க இலக்கியத்தில் தமிழர்கள் செய்த கல்யாணம்  எந்த நட்சத்திர த்தில் நடந்தது?அந்த STAR ஸ்டாருக்கு என்ன பெயர்?

XXX

விடைகள் PLEASE GO TO

swamiindology.blogspot.com

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் -Part 8 (Post No.12,523)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,523

Date uploaded in London – –  25 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  –நல்லூர் கோவில்  Part 8

19.நல்லூர் கந்தசாமி கோவில்

யாழ்ப்பாணம் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நல்லூர் கந்தசாமி கோவிலாகும். இது மிகப் பழங்காலக் கோவில் இல்லை. சுமார் 600 ஆண்டுகள் வரலாறு கொண்டதே. போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்களாலும், ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டச்சுக்கார கிறிஸ்தவ படைகளாலும் பழைய கோவில் தரை மட்டமாக்கப்பட்டது . இப்போதுள்ள கோவில் ஒரு மடாலயத்திலிருந்து கோவிலாக உருவானது!  

இந்தக் கோவிலின் சிறப்பு கர்ப்பக்கிரகத்தில் வேல் இருப்பதாகும். கருவறைக்கு  வெளியே பிற இந்துக் கடவுளரின் விக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. கோவிலின் சிறப்புக்குக் காரணம் ,  நேரம் தவறாது நடக்கும் நித்திய பூஜைகள் ஆகும். கோவிலின் வருடாந்திர உற்சவம் ஆடி மாதம் துவங்கி ஆவணி வரை 25 நாட்கள் நடைபெறும். விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான……………………….

Please continue in

swaiindology.blogspot.com

பிச்சைக்காரர் மீது கோபம் கொள்ளாதே! (Post No.12,522)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,522

Date uploaded in London –  25 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மகான்களின் வாழ்வில்.. 

பிச்சைக்காரர் மீது கோபம் கொள்ளாதே!

                                                                         ச.நாகராஜன்

பிச்சைக்காரர் மீது கோபம் கொள்ளாதே!

ஷீர்டி சாயிபாபாவின் அணுக்க பக்தராகத் திகழ்ந்தவர் நானா சாஹிப் சந்தோர்கர்.

அவருக்கு பாபா கற்றுத் தந்த வாழ்வியல் ரகசியங்கள் ஏராளம்.

அவற்றில் ஒன்று இது.

ஒரு சமயம் நானாவைக் கூப்பிட்ட பாபா அவரிடம் பேசலானார்.

பாபா: நானா! யாராவது ஒருவர் உன்னிடம் வந்து பிச்சை கேட்டால் அவருக்கு உன்னால் முடிந்ததைக் கொடு. இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கேட்டால் அவர் மீது கோபப்படாதே. திட்டாதே. உன்னுடைய அதிகார தோரணையைக் காட்டாதே.

நானா அதன்படியே நடப்பதாக உறுதி கூறி விட்டுச் சென்றார்.

ஆறு மாதங்கள் கழிந்தன.

ஒரு நாள் நானா சாஹிப் கல்யாணில் தனது சொந்த  வீட்டில் மாடியில் உட்கார்ந்திருந்தார்.

ஒரு பிச்சைக்காரி அவர் வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்டாள்.

நானா சாஹிப்பின் மனைவி வறுத்த பருப்பை அவளுக்கு கொடுத்தார்.  அந்த பிச்சைக்காரி இன்னும் கொஞ்சம் போடுங்கள் என்றாள்.

அதன் படியே நானா சாஹிப்பின் மனைவி இன்னும் கொஞ்சம் போட்டார்.

பிச்சைக்காரியோ விடவில்லை. முழு பருப்பையும் கேட்டாள். முழு பருப்பும் வரும் வரையில் அவள் அங்கிருந்து நகர்வதாயில்லை. பொறுமையிழந்த திருமதி நானா அவரிடம் சென்று நடப்பதைச் சொன்னார்.

நானா சாஹிப்பிற்கு மிகவும் கோபம் வந்து விட்டது. ஒரு பியூனைக்…………………………………………..

Please continue…………………..

swamiindology.blogspot.com

Quiz பெயர் மாறிய நாடுகள் பத்து quiz (Post No.12,521)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,521

Date uploaded in London – –  24 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Quiz serial No. 74

1.உலகில் இன்றுவரை தபால் தலைகளில் தமிழில் நாட்டின் பெயரைப் பொறிக்கும் நாடு எது?

xxxxxx

2.சிங்கத்தின் பெயர் கொண்ட நாடு எது ?

Xxxxxx

3.இலங்கையின் வேறு பெயர்கள் என்ன?

xxx

4.சயாம் என்ற நாட்டின் தற்போதைய பெயர் என்ன?

Xxxx

5.பிரம்மதேசம் என்று  அறியப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன?

xxxx

6.மலேசியாவில் நெல்லிக்காய் பெயருடைய பிரதேசம் எது?

xxxx

7.இந்திய தபால்தலையில் வேறு என்ன பெயர் இருக்கும் ?

xxxx

8.அ ஆ தமிழ் எழுத்துக்களுடன் அஞ்சல் தலை வெளியிட்ட நாடு எது?

xxxx

9.தகூபா கல்வெட்டு தக்கோலம் என தமிழ் ஊர்ப்பெயரை நினைவுபடுத்தும் கல்வெட்டு எங்கே கிடைத்தது?

xxxx

10. துரகம் என்ற குதிரையின் பெயர் கொண்ட நாடு எது?

xxxxx

விடைகள்


1.இலங்கை .

xxxx

PLEASE CONTINUE IN

SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

மாங்காடு காமாட்சியை தரிசித்தேன் (Post No.12,520)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,520

Date uploaded in London – –  24 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

எப்பொழுது இந்தியாவுக்குப் போனாலும் குறைந்தது 30 புதிய கோவில்களுக்காவது செல்வேன். இந்த முறை செப்டம்பரில்  (2023) இலங்கைப் பயணம் சேர்ந்துவிட்டதால் ஒரே ஒரு தமிழக கோவிலைத்தான் தரிசிக்க முடிந்தது. அந்த மாங்காடு காமாட்சி  அம்மன் கோவில்,  சென்னையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து 15 கிலோமீட்டர்தான். காலை 7 மணிக்கே சென்றதால் கூட்டமே இல்லை; நல்ல தரிசனம். கொஞ்சம் தள்ளிப் போனால் திருவேற்காடு அம்மனையும் தரிசிக்கலாம். ஆனால் சென்னை traffic டிராஃபிக்கை கண்டு அஞ்சி  விரைவில் திரும்பிவிட்டோம்.

முதல் நாள் ஆட்டோ டிரைவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சார் வாங்க ஸார் , நான் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றார் ; இல்லையப்பா, கார் வருகிறது. வேறு சில வேலைகளுக்கு உன்னை அழைக்கிறேன் என்றேன். அவன் கோவில் பற்றி  சொன்ன விஷயத்துக்காக இதை இழுக்கிறேன். முன்னர் எல்லாம் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான “மாங்காடு சவாரி” வருமாம். 300 ரூபாய்க்குள் போய்விட்டு வருவார்களாம். இப்பொழுது மாங்காட்டுக்கு யாருமே போவதில்லையாம். இவ்வாறு அவன் அலுத்துக் கொண்டவுடன் நான் சொன்னேன். இல்லை; இப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் கார் வசதி வந்து விட்டது; மேலும் கணவனும் மனைவியும் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றனர். ஆகையால் அவர்களே போய்விட்டு வந்துவிடுகிறர்கள் போலும் என்று.

xxxx

மாங்காடு காமாட்சியை (10-9-22023) தரிசித்தேன் !

இனி இந்த உரையாடலை நிறுத்திவிட்டு அம்மனைத் தரிசிப்போம்.

சென்னையிலிருந்து போரூரைத்த தாண்டிச் செல்ல வேண்டும்.

மாங்காடு காமாட்சி கோவில் அமைப்பு

உள்ளே நுழைந்தவுடன் விநாயகர் நமக்குத் தரிசனம் அளிக்கிறார். பின்னர் கோவில் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழையலாம். மிகப்பெரிய மேரு சக்கரம் இருக்கிறது. அதற்குப் பின்னால் சிறிய , அழகிய விக்ரமாக நின்று நமக்கு காமாட்சி  அருள்பாலிக்கிறாள்.. ஒரு தம்பதியர் புடவை வாங்கி வந்திருந்தார்கள்.

அம்மனுக்கு சார்த்தி விடலாமா ? அல்லது அம்மனிடம் வைத்து………………………………………………

PLEASE CONTINUE IN SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

தகுதி உள்ளவர்களுக்கே தரிசனம் கிடைக்கும்! (Post No.12,519)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,519

Date uploaded in London –  24 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மகான்களின் வாழ்வில்..

தகுதி உள்ளவர்களுக்கே தரிசனம் கிடைக்கும்!

ச.நாகராஜன்

தகுதி உள்ளவர்களுக்கே தரிசனம்

ஷீர்டி சாயிபாபா வாழ்க்கையில் அன்றாடம் நடந்த அற்புதங்கள் ஏராளம். (தோற்றம் 28-9-1835 என்று கருதப்படுகிறது சமாதி : 15-10-1918 விஜயதசமி தினத்தன்று.)

ஒவ்வொரு சம்பவமும் ஒரு பெரிய அரிய உண்மையை விளக்கும்.

அவரை தரிசிக்க வந்த பக்தர்களுள் ஒருவர் அவரிடம் கேட்டார்:” பாபா? கடவுள் எப்படி இருப்பார். கொஞ்சம் சொல்லுங்களேன்.

கேள்வி கேட்டவருக்கு பாபா பதில் சொல்லவில்லை.

அருகிலிருந்த ஒருவரைப் பார்த்து, “நீ போய் பாக்சந்த் மார்வாடியைப் பார்த்து பாபாவிற்கு நூறு ரூபாய் வேண்டும் என்று சொல்லி வாங்கி வா” என்றார்.

அவர் வெளியில் சென்று உடனே திரும்பி வந்தார்.

“மார்வாடி தன்னிடம் பணம் இல்லை என்று சொல்கிறார். தன்னுடைய நமஸ்காரங்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொல்கிறார்” என்றார்.

“சரி நீ போய் இன்னொரு லேவாதேவிக்காரரைப் பார்த்து நான் கடனாகக் கேட்டதாகச் செல்லி நூறு ரூபாய் வாங்கி வா” என்றார் பாபா.

அவருடம் உடனே வெளியே சென்றார். போன வேகத்தில் திரும்பி வந்த அவர், “அவர் என்னிடம் பணம் இல்லை என்று சொல்கிறார்.”

“சரி, நீ போய் நானா சந்தோர்கரை என்னிடம் அழைத்து வா” என்றார் பாபா.

நானா சந்தோர்கர் அழைக்கப்பட்டார். அவர் உடனே பாபாவிடம் வந்தார்.

பாபா: நானா! எனக்கு ஒரு நூறு ரூபாய் வேண்டும்.

உடனே நானா ஒரு துண்டுச் சீட்டில் நூறு ரூபாய் வேண்டும் என்று பாக்சந்த் மார்வாடிக்கு எழுதி அனுப்பினார்.

உடனடியாக பாக்சந்த் மார்வாடியிடமிருந்து நானாவிற்கு நூறு ரூபாய் வந்து சேர்ந்தது.

பாபா கூறினார் உடனே: “உலகில் எல்லாமே இப்படித்தான் நடக்கிறது” என்று.

பாபாவிடம் வந்து கடவுள் எப்படி இருப்பார் என்ற கேட்ட அன்பர் தாஸ்………………

PLEASE CONTINUE ON FACEBOOK (SANTANAM SWAAMINATHAN)

OR

swamiindology.blogspot.com

அனுராதபுரம் தூபியில் தங்கத் தகடுகளில் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள்! (Post No.12,518)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,518

Date uploaded in London – –  23 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – திருகோண மலை Part 7

18.அனுராதபுரம் ஜேத வனராமாய Anuradhapura

Display board in Colombo Museum

அனுராதபுரம் Anuradhapura,  இலங்கையின் புனித நகரம் Sacred City  என்று அழைக்கப்படுகிறது . பழங்கால இலங்கையின் தலைநகரமாக விளங்கியது ; அங்குள்ள பிரம்மாண்டமான புத்த தூபிகளையும் உலகின் மிகப்பழைய அரச மரங்களில் ஒன்றையும் காணும்போது இந்தப் பெயர் பொருத்தமே என்று தோன்றுகிறது ; பல தூபிகளும் பல தொல் பொருட்  சின்னங்களும் இருந்தாலும் ஜெதவன ராமய தூபியும் (Jetavanaramaya) பழைய அரச மரமும்தான் (போதி மரம்) குறிப்பிடத்தக்கவை . மற்றும் ஒரு  சிறப்பு, அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தங்கத் தகடுகள் ஆகும். இவற்றில் சம்ஸ்க்ருத மொழியும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் முன்னால் நாம் நிற்கும்போது பூவுலகில் மனிதன் என்பவன் கொசுவுக்குச் சமானம்; இறைவனோ அளப்பதற்கரியவன் என்ற உணர்வு நம்முள்ளே எழுகிறது.

திருகோணமலையிலிருந்து ஒரே நாளில் அனுராதபுரத்தையும் பார்த்துவிட்டு கொழும்பு நகருக்குத் திரும்பி வருவது சற்று கடினமான வேலைதான். ஆயினும் அனுராதபுர பெரிய தூபியை எப்படியும் தரிசித்தே ஆக வேண்டும் என்ற அவா உந்தியதால் காரை (Taxi) அந்தப் பாதையில் திருப்பி விடும்படி கேட்டுக்கொண்டேன். இதனால் காலை 6-30 மணிக்கு கொழும்பு நகரைவிட்டுப் புறப்பட நாங்கள் இரவு பத்து மணிக்குத் தான் கொழும்புக்கு வந்து சேர்ந்தோம். முதலில் புதிய நகருக்குள் நுழைந்துவிட்டோம். நாங்கள் புத்த ஸ்தூபி என்று கேட்டால் ஊர்மக்களுக்குப் புரியவில்லை. கூகுள் Google  செய்து படத்தைக் காட்டி கேட்டபோது ஓ,ஓ ஜேதவனாராமையா என்று முனகிக்கொண்டே வழியைச் சொன்னார்கள். வழியில் உள்ள மற்ற இடங்களைக் காரில் இருந்தவாறே பார்த்துக்கொண்டு ஒரு வழியாக முக்கிய இடத்துக்குச் சென்றோம்.. அதிக ஆள் நடமாட்டம் இல்லை; சூரியன் மட்டுமே முழுவேகத்தில் எங்கள் தேகத்தை வதைத்தான் . ஒரே ஆர்வத்தில் காரிலிருந்து குதித்து, தூபியைப் பார்த்து மலைத்து நின்றேன். 2300 ஆண்டுகளாக நிற்கும் பிரமாண்டமான செங்கல் கட்டிடம்.. மனித பொறியியல் திறமைக்கு பெரும் எடுத்துக்காட்டு ; இந்தியாவில் உள்ள சாஞ்சி ஸ்தூபி போலவே காட்சி தருகிறது.

ஆர்வத்தின் காரணமாக பாத அணிகளைக் கழற்ற மறந்து போய்  அருகில் சென்று புகைப்படம் எடுத்தேன். படிக்கட்டுகளிலில்   இறங்கி வருகையில் ஒரு பஸ்ஸில் வெள்ளை உடை தரித்த சிங்கள (பெளத்த) பெண்கள் வரிசையாக வந்து காலணிகளைக் கழற்றிவிட்டு சுடும் வெய்யிலில் மேலே சென்றபோதுதான் நான் செய்த பிழை புரிந்தது. ஒரு ஆண் மகன், அந்த பிரம்மாண்ட தூபியை வலம் வரச் சென்றார். ஆங்காங்கே நின்று கைகூப்பி வணங்கிச் சென்றார்.

இதன் முன்னர் நிற்கும்போது நம்மை அறியாமலேயே அதை வணங்கி நிற்போம்.

அசோக சக்ரவர்த்தியின் மகள் சங்க மித்திரை கொண்டுவந்த போதி……………………………………………………………..

Please continue in Facebook (Santanam Swaminathan)

or

swamiindology.blogspot.com

கலெக்டரை விரட்டிய நாகப் பாம்பு! (Post No.12,517

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,517

Date uploaded in London –  23 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மகான்கள் வாழ்வில் ..

கலெக்டரை விரட்டிய நாகப் பாம்பு! 

ச.நாகராஜன் 

கலெக்டரை விரட்டிய நாகப் பாம்பு! 

ஶ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்களில் இன்னும் இரண்டைப் பார்ப்போம்.

ஸ்வாமிகள் மதுரையில் சொக்கப்ப நாயக்கன் தெருவில் சில காலம் வசித்து வந்தார்.

அந்தத் தெருவிற்கு மிக அருகில் உள்ளது பிரபல நகைக்கடை வீதியான தெற்காவணி மூல வீதி.

அந்த வீதியில் ஒரு சேட் வைரம், தங்கம் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி குணத்திலும் அழகிலும் சிறந்தவர்.

மிகுந்த தெய்வ பக்தி கொண்டவர்.

ஸ்வாமிகள் மீது சேட்டும் அவர் மனைவியும் அளவற்ற பக்தி கொண்டவர்கள்.

தினமும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகும் போது ஸ்வாமிகளை தரிசிப்பது சேட்டின் மனைவியின் வழக்கம்.

ஒரு நாள் ரேஸ்கோர்ஸுக்குச் சென்று அமைதியாக சற்று நேரம் உலாவி விட்டு ஒஈர்டத்தில் அமர்ந்தார் அந்தப் பெண்மணி.

அப்போது மதுரையில் கலெக்டராக இருந்தவன் ஒரு காமவெறி பிடித்தவன்.

அழகிய பெண்ணைக் கண்ட அவன் அவளிடத்தில் முறை தவறி நடக்க முயன்றான்.

சேட்டின் மனைவி திடுக்கிட்டு பயந்தார். அன்று காலை ஸ்வாமிகள் அவரிடம், “இன்று கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு” என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அவர் ஸ்வாமிகளையும் மீனாட்சியையும் பிரார்த்தித்தார்.

அப்போது திடீரென ஒரு பெரிய நாகப்பாம்பு கலெக்டரின் மீது சீறிப் பாய்ந்து வந்தது.

அதைக் கண்ட கலெக்டர் அலறி ஓடினார்.

ஸ்வாமிகள் அத்துடன் விடவில்லை. அவர் கனவிலும் தோன்றி அவனைத் திருத்தினார்.

சேட்டும் அவர் மனைவியும் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை போற்றி வணங்கினர்.

ஸ்வாமிகளின் அத்யந்த சிஷ்யர் பெயர் ராமலிங்க ஐயர்.

ஸ்வாமிகள் அவரிடம் தாமே சொன்ன நிகழ்ச்சி தான் இது.

(மதுரையில் ஶ்ரீ ராமலிங்க ஐயர் வாழ்ந்து வந்தார். அவர் தானப்ப முதலித் தெருவில் வாழ்ந்து வந்த இந்தியன் பேங்க் ஏஜண்ட் ஶ்ரீ சங்கர ஐயர் வீட்டுக்கு வருவது வழக்கம்.

அப்போது நான் (இந்தக் கட்டுரை ஆசிரியர்) அவரைப் பார்த்தது உண்டு)

உபநயனத்திற்குப் பணம்!

ஸ்வாமிகள் மதுரையில் தானப்பமுதலித் தெருவில் இருந்தபோது நடந்த சம்பவம் இது.

ஒரு செட்டியார் ஸ்வாமிகளுக்கு பாத பூஜை செய்து 1100 ரூபாய் பணத்தை காணிக்கையாக அர்ப்பணித்தார்.

அந்தப் பணத்தை ஏற்றுக் கொண்ட ஸ்வாமிகள் பக்கத்திலிருந்த ஒருவரை அழைத்தார்.

“வாசலில் ஒரு வயோதிக பிராமணர் ஒரு பையனை அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். அவரை என்னிடம் அழைத்து வா” என்றார்.

அப்படியே அவர் அழைத்து வரப்பட்டார்.

தனது பையனுக்கு உபநயனம் செய்விப்பதற்காக வீடு வீடாகச் சென்று அவர் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஸ்வாமிகள் அவரை ஆசீர்வதித்து துணியை விரி என்றார்.

அவரது வஸ்திரமோ கந்தலாய் இருந்தது. தனது மகன் இடுப்பில் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்த்து அவர் விரித்தார்.

உடனே ஸ்வாமிகள் தனக்கு பாதபூஜை பணமாக வந்த ஆயிரத்தி நூறு ரூபாயையும் அதில் கொட்டினார்.

தனக்கு பாதபூஜைக்காக அளிக்கப்பட்ட பட்டாடையும் அவரிடம் கொடுத்து, “குழந்தைக்கு உபநயனம் செய்து சௌக்கியமாயிரு” என்று ஆசீர்வதித்தார்.

அந்த பிராமணர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அந்தப் பையனோ பின்னால் பெரியவனாகி ஒரு சிறந்த பிரபுவாக விளங்கினான்.

ஸ்வாமிகளின் ஆசீர்வாத மகிமை அப்படிப்பட்டது.

***