H for Haridwar –Know Your India (Post No.12,422)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,422

Date uploaded in London – –  15 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.This town in Maharashtra is is considered as a pilgrimage spot owing to its revered temples and religious institutions; The best places to visit include Mallinath Digambar Temple, Aundha Nagnath, Tulajadevi Sansthan, Sant Namdev Sansthan.

2. Important Jain pilgrimage centre in Bihar; Known for its agro-based industries; it  is renowned for its litchi and banana production. An iconic attraction is the Mahatma Gandhi Setu, a bridge built over the river Ganga.

3. This Dam is built across the Mahanadi River, about 15 kilometres (9 mi) from Sambalpur in the state of Odisha in India. It is the longest earthen dam .

4. It is an ancient city and important Hindu pilgrimage site in Uttarakhand state, where the River Ganges exits the Himalayan foothills. Famous for its Ganga Arti.

5. The city is noted for its monuments which includes the masterpiece of Charminar and the fort of Golconda. There are a multitude of masjids, temples, churches and bazaars in the city.

6. This city in Madhya Pradesh  where the Narmada River flows and consists nabhi kund(centre of river Narmada ). There are also many temples dedicated to lord Shiva, out of which the famous temple built by Pandavas is also situated here. According to beliefs it was built during the Mahabharat era in a single night .

7. It is an ancient village in Karnataka. It’s dotted with numerous ruined temple complexes from the Vijayanagara Empire. On the south bank of the River Tungabhadra is the 7th-century Hindu Virupaksha Temple. A carved stone chariot stands in front of the huge Vittala Temple site.

8. This town in Uttar Pradesh is  known for its many temples and religious spaces. It is believed that Naimisharayan here is where the puranas were written. Sarvan Devi temple is located here.

Answers :–

1.HINGOLI; 2.HAJIPUR; 3.HIRAKUD; 4.HARIDWAR; 5.HYDERABAD; 6.HARDA; 7.HAMPI;

8.HARDOI

–subham—-

tags- Haridwar, Hampi, Hyderabad

கிருஷ்ணர் கையும் கிறிஸ்து கையும் குணப்படுத்தியது எப்படி?- Part 2 (Post No.12,241)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,421

Date uploaded in London – –  15 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கிருஷ்ணர் கையும் கிறிஸ்து கையும் குணப்படுத்தியது எப்படி?- Part 2

முதல் பகுதி நேற்று பிரசுரமாகியது

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு என்னும் நாட்டின் ஆயுர்வேத நிபுணர் ரூபன் டெவோடோ பேரால்டா  (RUBEN DEVOTO PERA.TA பல்வேறு கிகிச்சை முறைகளை விளக்குகிறார் .

ஆன்மீக சிகிச்சை SPIRITUAL HEALING

இது மந்திரத்தாலும் ஹோமம் முதலியவற்றாலும் கிடைக்கிறது ; கடவுளுடன் தொடர்புகொள்ளும் போது நமது உடலும் மனமும் சம நிலையை அடைகிறது. இதை பிரார்த்தனை மூலமும் அடையலாம்.

மன நல சிகிச்சை MENTAL AND EMOTIONAL HEALING

நம்முடைய உண்மை நிலையை உணரும்போது கிடைக்கிறது. வாழ்க்கை என்பது என்ன, எது நடக்கவிருக்கிறது அதுதான் நடக்கிறது என்ற உணர்வு அதன் பின்னுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்கையில் முதலில் சஞ்சலங்கள் நிறைந்த மனது சம நிலையை / அமைதியை அடைகிறது; அதன் பயனாக உடலும் அமைதி அடைகிறது .

உடல் சக்தி BODY ENERGY HEALING

வாத , பித்த, கப தோஷங்கள் சமநிலை தவறி நம் உடல் நலத்தைக் கெடுப்பதற்கு முன்னதாகவே, வாசனைப் பொருட்கள், இசை, மந்திர முழக்கம், தியானம், ஹிப்னாஸிஸ் HYPNOSIS என்னும் மனோதத்துவம் மூலம் குணப்படுத்துவது உடல் சக்தி குணப்படுத்தும் சிகிச்சை BODY ENERGY HEALING எனப்படும்.

BODY MATERIAL HEALING

மூலிகைகள், காந்த சக்தி, பத்தியம், ரத்தினக் கற்கள், நீர் சிகிச்சை , HYDROTHERAPY,  மருந்துகள் முதலியவற்றை உபயோகித்து குணப்படுத்தல் பாடி மெடீரியல் ஹீலிங் BODY MATERIAL HEALING எனப்படும்.

DIVINE THERAPY

தெய்வீக சிகிச்சை என்பதில் மந்திரம், பிரார்த்தனை, ஹோமம் ஆகியவற்றைச் செய்து நோயைக் குணப்படுத்தலாம்.

வானுலக சிகிச்சை CELESTIAL THERAPY

வானுலக சிகிச்சை என்பது மகான்களும் அவதார புருஷர்களும் கொடுக்கும் சிகிச்சை . இதற்கு,  சிகிச்சையைப் பெறுவோருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.

சிகிச்சை தரும் டாக்டர் தன்னைச் சுற்றி மங்களமான பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு புத்தமத்தினர் வைத்துக்கொள்ளும் பொருட்களை சொல்லலாம். எண்வகை மங்கள பொருட்கள் அஷ்ட மங்கலம்  எனப்படும்; அவை சங்கு விசிறி, தண்ணீருள்ள கும்பம், தீ, நெய் , யானை உருவம், சுவஸ்திகா , தெய்வ அல்லது தேவர் உருவங்கள் . இது சில கலாசாரங்களில் கொஞ்சம்  வேறுபடும்.

மகான்கள் , சாது சந்யாசிகள் பல அற்புதங்களைச் செய்து நோயை விரட்டுவது இவ்வகை.

(அனந்தராம தீட்சிதர் முதலியோர் பிரார்த்தனை மூலம் நோய்களைக் குணப்படுத்தியதை அறிவுவோம்.

அப்யங்க சிகிச்சை ABHYANGA THERAPY

எண்ணெய் ஸ்னானம் செய்வதும் பசு நெய்யை உட்கொள்வதும் இந்த அப்யங்க சிகிச்சையில் வருகிறது.

எந்த வகை எண்ணையும் தோலின் வறட்சியை அகற்றும்.உடலில் வெப்பத்தைக் கொடுக்கும்.இன்று உலகம் முழுதும் ஸ்பா  SPA என்னும் நீராவிக் குளியல் அறைகளுக்கும், மசாஜ் செய்யும் இடங்களுக்கும் பல லட்சம் பேர் செல்வதைக் காண்கிறோம் . நம்முடைய சம்பிரதாய எண்ணெய் ஸ்நானம் புதிய வடிவம் எடுத்துவிட்டது

நெய் என்பதை உடலிலும் பூசிக் கொள்ளலாம். இது, புத்தி கூர்மை, ஞாபக சக்தி, , விவேகத்தை அளிக்கும் என்று மருத்துவ நூல்கள்  கூறுகின்றன..

–SUBHAM—

TAGS- அப்யங்க , ஆன்மீக,  சிகிச்சை, கிருஷ்ணர் கை, ,கிறிஸ்து கை, பெரு , ஆயுர்வேத நிபுணர்,  ரூபன் டெவோடோ பேரால்டா 

ஓம் வடிவ கடற்கரை: கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 22 (Post No.12,420)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,420

Date uploaded in London – –  15 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 22

103.கோகர்ணம் மஹாபலேஷ்வர் கோவில் ; ஓம் பீச் Om Beach, Gokarna Mahabaleshvar Temple

மஹாபலேஷ்வர் என்ற பெயரில் பல இடங்களில் சிவன் கோவில்கள் இருந்தாலும் உத்தர கன்னட மாவட்டத்தில் கோகர்ணம் இருக்கும் மஹாபலேஷ்வர் கோவில் தான் மிகவும் பிரசித்தமானது. இங்குள்ள மற்றும் ஒரு சிறப்பு கடற்கரையே  பிரணவ மந்திரமான ஓம் என்னும் எழுத்து வடிவில் அமைந்து இருப்பதாகும். ஒரு காலத்தில் தூய கடற்கரையாக இருந்த இடம் இப்போது பக்தர்களைவிடப் பொழுதுபோக்கவரும் கும்பல்களால் அசுத்தமடைந்து வருகிறது ; கோ கர்ணம் என்றால் பசுவின் காது என்று தமிழில் பொருள். பூமியையே பசு என்று கொண்டு அதன் ஆழத்திலிருந்து ஆத்மலிங்கம் வந்ததால் கோகர்ணம் என்று இந்த ஊர் பெயர் பெற்றது இங்கு கங்காவதி அகநாசினி என்ற இரண்டு நதிகள் சங்கமம்  ஆகின்றன . இது இராவணன் பெற்ற ஆத்மலிங்கம் என்றும் கதைகள் உள்ளன. பாகவத புராணத்தில் கோகர்ண க்ஷேத்ரம் குறிப்பிடப்படுகிறது

மங்களூரிலிருந்து 238 km கிமீ. ;கார்வாரிலிருந்து  59 km கி.மீ .

xxxx

104 உலாவி சென்ன பசவேஸ்வர கோவில் Ulavi Channabasavanna, Temple , Samadhi

கார்வாரிலிருந்து 75 கி.மீ (from Karwar) தொலைவில் காடுகளும் குகைகளும் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உலாவி கிராமம் உள்ளது . இது லிங்காயத் பிரிவு சைவர்களின் புனிதத் தலம் . 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சன்ன பசவன்னா என்ற மகானின் சமாதி இங்கு இருப்பது சிறப்பு. சாளுக்கிய வம்ச அரசர்களின் கோவிலுக்கு புது வண்ணம் தீட்டப்பட்டுள்ளது அருகில் நாகலாம்பிகே குகை இருக்கிறது. அவர் சன்ன பசவன்னாவின் தாய்; பசவண்ணாவின் சகோதரி . அல்லம பிரபுபசவ , அக்கமாதேவி மற்றும் சென்ன பசவேஸ்வரர் இந்த மாநிலத்தில் லிங்காயத் வழிபாட்டு சம்பிரதாயத்தைப் பரப்பினர்

105.இடகுஞ்சி கணபதி கோவில்  Shri Idagunji Maha Ganapati Temple

ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்தர்கள் இந்தப் பிள்ளையாரை தரிசிக்க வருகிறார்கள் என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தாலே இவரது பெருமை விளங்கும். புகழ்பெற்ற முருதீஸ் வர் சிவன் கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் இவர் காட்சி தருகிறார் .

இந்த வட்டார கடற்கரையில் ஆறு கணபதி கோவில்கள் இருப்பதால் கடற்கரையின் பெயரே கணபதி கடற்கரை என்று ஆகிவிட்டது .

மேலைக் கடற்கரையில் காசர்கோடு, மங்களூர், ஆனகுட்டே , குந்தபுர , இடகுஞ்சி, கோகர்ண கணபதி ஆகிய ஆறு பேரும் கடற்கரை அருகில் கோவில் கொண்டிருப்பது தனி விசேஷம் இந்தக் கோவில் 1500 ஆண்டு பழமையானது கோகர்ண கணபதி கோவில் போலவே த்வி புஜ கணபதி உருவம் இது; வலது கையில் தாமரை மொட்டு; இடது கையில் மோதகம் எனும் கொழுக்கட்டை . கணபதியின் பூணூல் மாலை வடிவத்தில் இருக்கிறது

வெட்டிவேர் என்னும் வாசனை மிக்க வேரால் செய்யப்பட கவசங்கள் இங்கே விற்கப்படுகின்றன

106. இந்திராகாந்தி விஜயம் செய்த காரி கண்ணம்மா கோவில் Shri Karikaana Parameshwari Tempe

ஹொன்னவர் Honnavar என்னும் இடத்திலிருந்து 12 கி.மீ தூரம்;

மலை மீது தற்காலத்தில் கட்டப்பட்ட தேவி கோவில் இருக்கிறது ; பிரதம  மந்திரியாக இருந்தபோது  இந்திராகாந்தி விஜயம் செய்ததால் மலை உச்சிவரை நல்ல சாலை அமைக்கப்பட்டது. கோவில் மேலும் பிரசித்தம் அடைந்தது

பரமேஸ்வரி , பார்வதி, துர்கா, சரஸ்வதி என்ற பல பெயர்களில் இந்த சக்தி வணங்கப்படுகிறாள் . மலை மெது ஏறி நின்றால் அரபிக்கடலில் அற்புதக் காட்சியும், ஏழுமலைச்  சிகரங்களின் அற்புதக் காட்சியும் நம்மை சொர்கலோகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்

மராட்டியர்களும் கன்னடியர்களும் போற்றும் ஸ்ரீதர சுவாமி இக்கோவிலை உருவாக்கினார். கர்ப்பக்கிரகம் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது காடுகள் சூழ்ந்த இடம் ஆதலால் இருட்டுவதற்குள் மலையிலிருந்து இறங்கிவிட வேண்டும்

—subham—-

To be continued………………………………………………………

Tags- ஓம் வடிவ கடற்கரை, கர்நாடக மாநிலம், 108 புகழ்பெற்ற, கோவில்கள், ,– Part 22, கோகர்ணம்

இதழியலில் ஆன்மீகம் ஏற்றிய இனியவர், இனிய கீதங்கள் புனைந்தவர் (Post No.12,419)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,419

Date uploaded in London –  15 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

அஞ்சலிக் கட்டுரை

இதழியலில் ஆன்மீகம் ஏற்றிய இனியவர், இனிய கீதங்கள் புனைந்தவர் : திரு வெ.சந்தானம்!

ச.நாகராஜன்

பன்முகப் பரிமாணம் கொண்ட மாமனிதர்!

ஆகஸ்ட் 15. சுதந்திர தினம்.

அத்துடன் அந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தர அயராது உழைத்ததோடு பல்வேறு தியாகங்களைச் செய்த உத்தமர் மறைந்த நாளும் கூட அது தான். இதழியலில் ஆன்மீகம் ஏற்றிய இனியவரும் மாபெரும் புகழைக் கொண்டவருமான திரு வெ.சந்தானம் அவர்கள் மறைந்த நாளில் அவர் பற்றி நினைவு கூர்கிறோம்.

சுதந்திரப் போரில் சிறைவாசம் கண்டது ஒரு பக்கம்;

இதழியலில் நுழைந்து புதுமைகள் புகுத்தியது ஒரு பக்கம்.

ஆன்மீகவாதியாகத் திகழ்ந்து சாதனைகள் புரிந்தது ஒரு பக்கம்.

நல்ல மனிதராக இருந்து பலரை உயர ஏற்றியது ஒரு பக்கம்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் பன்முக பரிமாணங்களைக் கொண்ட திரு வெ.சந்தானம் அவர்களைப் பற்றி.

ஹிந்து சிந்தனையோடு வேத உபநிடத புராண இதிஹாஸ சாஸ்திரங்கள் அனைத்தும் இரத்தமாக உடலில் ஓடும் பாங்கினால் அபூர்வமான ஒரு ஆளுமையை அவர் கொண்டிருந்தார்.

காஞ்சி பெரியவாள்!

காஞ்சி காமகோடி பெரியவாளின் பரம பக்தர் அவர்.

இளையாத்தங்குடி நிகழ்ச்சிகளையும் இன்னும் அவர் செல்லுமிடமெல்லாம் ஆற்றுகின்ற அற்புத உரைகளையும் கருத்துப் பிறழாமல் பெரிய பெரிய தலைப்புகள் கொடுத்து முழுதுமாக தினமணியில் பிரசுரித்து ஆன்மீக மறுமலர்ச்சியை அவர் ஏற்படுத்தினார் – அதுவும் நாத்திகர்கள் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து தடைகள் பல செய்து வந்த காலத்தில்!

திருப்பாவை-திருவெம்பாவை மாநாடுகளின் எழுச்சிக்கு அவரது தினமணி இதழியல் பணி பெரிதும் கைகொடுத்ததை ஆன்மீகவாதிகள் அனைவரும் அறிவர்.

சிருங்கேரி ஆசார்யாள்!

சிருங்கேரி ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்தரின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானவர் அவர். ஸ்வாமிகள் திரு வெ.சந்தானம் இல்லத்திற்கே எழுந்தருளி அனைவரையும் ஆசீர்வதித்தார்.

அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணா

அச்சன்கோவிலை ஸ்தாபித்து அங்கு பரசுராமர் நிறுவிய ஐயப்பனின்

விக்ரஹத்தை மீண்டும் நிறுவிய அச்சன்கோவில் ஸ்வாமிஜி ஆயக்குடி ஶ்ரீ கிருஷ்ணாஜியே திரு சந்தானம் அவர்களின் குரு.

தினமும் அவரால் உபதேசிக்கப்பட்ட கணபதிஹோமத்தை காலையில் செய்வது அவர் வழக்கம்.

ஸ்வாமிஜி கிருஷ்ணா அவரது இல்லத்தில் கணபதி ஹோமம் நடத்தினார்; அவர் உணவை விரும்பி ஏற்கும் வீடுகளில் மதுரையில் முக்கியமானது திரு வெ.சந்தானம் அவர்களின் வீடு தான்.

ஸ்வாமி சாந்தானந்தா!

புதுக்கோட்டை ஸ்வாமிஜி ஶ்ரீ சாந்தானந்தா அவர்கள் இயற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு – குறிப்பாக சஹஸ்ரசண்டி யாகத்திற்கு அவரது பங்கு குறிப்பிடத்தகுந்தது.

ஶ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் அவரது இல்லத்தில் பிக்ஷை ஏற்பது உண்டு. மூன்று கவளங்கள்- அனைத்தும் கலந்த கலவையாக அவர் திருமதி ராஜலக்ஷ்மி சந்தானத்திடமிருந்து பெறுவது பிரமிப்பையும் பக்தியையும் ஊட்டும்.

ஶ்ரீ சத்ய சாயிபாபா!

ஶ்ரீ சத்ய சாயிபாபா புட்டபர்த்தியில் நடந்த முதல் சந்திப்பிலேயே திரு சந்தானத்தைத் தன்னவராகக் கண்டு கொண்டது ஒரு அபூர்வ நிகழ்ச்சி.

சென்னையில் ஆபட்ஸ்பரியில் நடந்த பெரும் மாநாட்டில் உரையாற்ற வருமாறு பாபா அவரை அழைத்தார். அவரும் சென்று உரையாற்றினார்.

மதுரையில் அவர் வரும்போதெல்லாம் அவரது ‘பங்காருவாக’ அமைந்தார் திரு சந்தானம்.

ஸாயி கீதங்கள்!

ஶ்ரீ சத்ய சாயி பற்றித் திடீர் திடீரென அல்லும் பகலும் அவர் மனதில் தாமாகவே உதித்த கீதங்கள் பல.

அவற்றை மேடைகளில் பிரபல வித்வான்களும் உரிய ராக தாளத்தில் பாடி அனைவரையும் பரவசப்படுத்தினர்.

அவற்றில் 108 கீதங்கள் 1966ஆம் ஆண்டு ஸாயி கீதங்கள் என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. (விலை 60 பைசா!)

பாதகத் துயர் போக்கி சாதக வாழ்வருள் மகா கணபதே என்று முதல் கீதம் தொடங்குகிறது – ஹம்ஸத்வனி ராகத்தில் ஆதி தாளத்தில்!

சாயி கொடி!

அடுத்து வித்யா வர ஸரஸ்வதி தேவியிடம் ‘வரம் தா வீணாபாணி நான்முகன் மனோரமணி’ என்று வரம் கேட்கும் அவர்

சாயி கொடியை ஏற்றுகிறார்.

சாயி அருள்கொடி பறக்குது பாரீர்

சாந்தக் கொடியது தர்ம பிரேமக் கொடி

நீதி ஞான அன்புப் படையது சங்கநாதமது

சாந்தி சாம்ராஜ்யம் நிலைக்கப் பறக்குது

என்று சாயி கொடி பற்றி அவர் விவரிக்கிறார்.

சாயி அமரும் இடம்!

எங்கே சாயி வந்து அமருவார்?

இந்தக் கேள்விக்கு அவரது கீதம் பதில் தருகிறது:

தெய்வ நாமம் பாடுமிடம்

   சாயி வந்து அமரும் இடம்

சந்தேகம் தரும் நாசமே

    சாயி கீதை இதுவே

நமனுக்கு நமன்!

கலியுக வரதனாக சாயியை தரிசிக்கும் போது அவர் இசைக்கிறார்:

ஆறுமலையழகன் நேயர் மனஜோதி

ஆறுதலை கூறும் அருள் நேமி சிவஜோதி

நலந்தரும் தொண்டன் நாமமோதுவோர்க்கு

நால்வேத சரணன் நமனுக்கு நமன் வேலன்!

எத்துணை அற்புதமான சொற்கள்!

சாயி கிருபை!

என்றைக்கும் சாயி கிருபை எவருக்கும் உண்டு

அடையாதிருந்தால் அது கேளாத குற்றமே

என்ற வரிகளில் மாபெரும் இறை தத்துவத்தை அவர் குறிப்பிடுகிறார்.

ஓயாத கருணை மழை எப்போதும் பெய்து கொண்டே இருக்கிறது.

அதை ஏந்தும் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்தால் பயன் இருக்காதே!

பாத்திரத்தை நிமிர்த்தி வைத்து கருணை மழை கொட்டும் போது வேண்டும் வரைக்கும் வேண்டும் நேரமளவு பிடித்துக் கொள்!

பாத்திரத்தின் அளவும் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டதே!

நல்ல பெரிய பாத்திரமாகக் கொண்டு வந்து  கிருபையை கேட்டுப் பெற்றுக் கொள் என்பதே அதிசயத் தத்துவம்!

சாயி யார்?

ஞான கடைக்காரர் ஆத்ம ஞான பணக்காரர்

சாயி மொழி அமுதம் நிதமும் கேளும் ஆத்ம ஹிதம்

என்பது அவர் சாயியைப் பற்றி விவரிக்கும் ஒரு கீதம்.

இப்படி 108 கீதங்கள் அமுத மழையாகப் பொழியப்பட்டுள்ளது அவரால்!

இந்த ஆகஸ்ட் 15 சுதந்திர நன்னாளில் அன்னரை நினைந்து சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்!

Sri Santanam with Rajaji

–subham—

கும், கும், குத்து வெட்டு குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,418)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,418

Date uploaded in London – –  14 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 23 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

ர்ண்கு
துடிள்வீசுண்
ப்குடு
பாத்தைட்
க்திரிவேமிடி
கிள்வால்ம்தி
சுடும்புமோ
குத்துகுப்
வெகொதிஸ்ல்
ட்ல்ம்கைவா
டுண்டைகுள்

விடைகள்

குத்து, வெட்டு, கொல் , அடி, உதை , மிதி, துப்பாக்கி, சுடு , குண்டு , வீசு, கத்தி, அரிவாள், வாள் , உதை , வேல்கம்பு, ஈட்டி , தடி , குண்டர்கள், குஸ்தி, சண்டை, கைகலப்பு, மோதல், கும் கும் 23 words

G for Gokarna –Know India Puzzle (Post.12,417)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,417

Date uploaded in London – –  14 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.   The city is famous for the ancient temple of Kamakhya Devi and its mystic experiences.

2.   Located on the east coast of the Bay of Bengal, the beach is a luxurious beach located in Odisha. It is popular for being one of the few sites in India where Olive Ridley Turtles nest.

3.   it is a city in the Indian state of Punjab, between the rivers Beas and Ravi;  city was named after Mahant Guriya das ji.

4.   The  train burning occurred on the morning of 27 February 2002 in this city ;59 Hindu pilgrims and karsevaks returning from Ayodhya were killed in the arson attack.

5.   Om beach in this Karnataka city is named so because it is shaped like the auspicious ॐ Om symbol. The Mahabaleshwar Temple is visited byHindus.

6.   This Andhra city is famous for chilli, tobacco and cotton export.

7.   The town has own international reputation for its cottage industries and handicrafts.it is a coastal town in Odisha, famous temples and hot water spring are nearby..

8.   This Kashmiri city is famous for highest cable car, Himalayan scenery, skiing etc.

ANSWERS:-1.Guwahati, 2.Gopalpur, 3.Gurdaspur, 4.Godhra, 5.Gokarna , 6.Guntur, 7.Ganjam, 8.Gulmarg

 —subham—

கிருஷ்ணர் கையும், கிறிஸ்துவின் கையும் குணப்படுத்தியது எப்படி? -1 (Post No.12,416)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,416

Date uploaded in London – –  14 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 கிருஷ்ணர் கையும், கிறிஸ்துவின் கையும் குணப்படுத்தியது எப்படி? -1 (Post No.12,416)

ஆயுர்வேதசிகிச்சை முறைகள் பற்றி தென் அமெரிக்க நிபுணர் !

தென் அமெரிக்காவில் மிக நீண்ட கடற்கரை உடைய நாடு PERU பெரு . சுமார் 2000 மைல் நீளத்துக்கு பசிபிக் மஹாசமுத்திரத்தைக் காணலாம். அ ந்த நாட்டின் மாற்று மருத்துவ முறைகளின் நிபுணர் ரூபன் தேவோட்டோ பேரால்டா RUBEN DEVOTO PERALTA இரண்டு முறை இந்தியாவில் நடந்த மாற்றுச் சிகிச்சை முறைகள் மகாநாட்டில் INTERNATIONAL CONGRESS OF ALTERNATIVE MEDICINE  கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்துள்ளார்  அவர் நிறைய சுவையான விஷ்யங்களைச் சொல்கிறார் ; ஒன்றிரண்டு அதிசய சம்பவங்களை முதலில் காண்போம்.

((ஒரு முறை ஆர் எஸ் எஸ் R S S பிராந்திய பிரசாரக் இராம கோபாலனுடன் (GOPALJI) பேசிக்கொண்டிருந்தோம். மாநிலத் தலைமை பிரசாரக்காக நீண்ட காலம் தமிழ் நாட்டில் பணியாற்றிய இவர் பிற்காலத்தில் இந்து முன்னணி யைத் துவக்கியவர் அவரிடம் ஸ்ரீபுரம் நாராயணி அம்மா என்பவரைப் பற்றிக் கேள்வி கேட்டோம். அவர் உண்மையான சாமியார்  ஒரு கான்ஸர் நோயாளி போனார்; அவர் புற்று நோயுள்ள இடத்தில் கையை  வைத்து கான்ஸர் கேன்சல்ட் CANCER CANCELLED என்று சொன்னார்; பின்னர் எக்ஸ்ரே எடுத்ததில் அந்த நோய் அறவே இல்லை என்று தெரிந்தது என்று சொன்னார். இது போல பலர் சத்ய சாய் பாபா முதலியோர் செய்த மருத்துவ அதிசயங்களையும் படித்துள்ளேன் . இது கை மருத்துவம் . இது போல கிருஷ்ணரும் கிறிஸ்துவும் செய்த இரண்டு நிகழ்ச்சிகளை பெரு நாட்டின் நிபுணர் சுட்டிக்காட்டுகிறார். (HEALING HANDS)

((அவரவர் கரும வினையில் சிலவற்றை அழிக்க முடியும். சில வகை பிராரப்த கர்மாக்களை அனுபவித்துதான் அழிக்க முடியும்; இது ரமணர்ராம கிருஷ்ண பரம ஹம்சர் போன்ற மஹான்களுக்குத் தெரியும். அவ்விரு மகான்களும், சன்யாசி போன்ற தூய வாழ்க்கை நடத்திய மாதவ சதாசிவ கோல்வால்கரும் (குருஜி) புற்று நோயால் மரணம் அடைந்ததை நாம் அறிவோம். அவர்கள் அதுபற்றி அணு அளவுக்கும் கவலைப்பட்டதில்லை அழுக்குச் சட்டையை நாம் எப்படிக் கவலைப் படாமல் தூக்கி எறிந்தோமோ அப்படி அவர்கள் உடலையும் விட்டனர்.

நாம் ஒரு சக்தியுள்ள மஹானை அணுகும்போது நம்மைச் சுற்றியுள்ள ஒளி வட்டமே AURA நம்முடைய பாவ புண்ணியங்களைக் காட்டிவிடும். நமக்கு புண்ணியம் அதிகம் இருந்தால் அவர்களே நம் நோயை, அவர்களுடைய சக்தியைப் பயன்படுத்தி அழித்துவிடுவார்கள் .

உண்மையில் நாமும் இதுபோல செய்கிறோம். ஒருவர் நம்மிடம் கடன் கேட்டு வந்தால், ஒரு நிமிடம் யோசிக்கிறோம். நம்மிடம் அப்போது அதிக பணம் இருந்தால் (தவ வலிமைக்கு சமம்), போனால் போகட்டும் என்று அவருக்குப் பணம் கொடுக்கிறோம். அந்த ஏழை திருப்பித் தர மாட்டான் என்று தெரிந்தே “அருள் மழை” பொழிகிறோம். சிலர் விஷயத்தில் வரும் ஆளின் பின்னணி  (பாவ சக்திக்கு சமம்) தெரிவதால் அவனை நிராகரித்து விடுகிறோம் .))

கிருஷ்ணர் செய்த அதிசயம்

கிருஷ்ணரின் கதை சொல்லும் பாகவத புராணத்தில் கிருஷ்ண பரமாத்மா செய்த ஏராளமான அற்புதங்களைப் படிக்கிறோம் அதில் ஒன்று அவர் குள்ளமான , கூன் முதுகுப் பெண்ணை நின்ற சீர் நெடுமாறியாக மாற் றினார் என்று அறிகிறோம்.. கிருஷ்ணருக்கு வாசனைப் பொருட்கள், சென்ட், பெர்ப்Fயும் PERFUME முதலியவற்றைக் கொண்டுவரும் குள்ளி (குள்ளனின் பெண்பால்) அவள். கிருஷ்ணரின் அருட்பார்வை அவள் மீது விழுகிறது  அவள் காலை ஒரு  அமுக்கு அமுக்கிக் கைகளால் மேலே இழுக்கிறார். அவளு டைய கூன்முதுகு மறைந்து பேரழகி ஆகிவிடுகிறாள் .இது அவர் கைகள் மூலம் அந்தப் பெண்ணின் உடலில் பாய்ந்த சக்தி ஆகும்.

( நின்ற சீர் நெடுமாறன் கதையில் திருஞான சம்பந்தரும் இப்படிச் செய்ததை பெரிய புராணத்தில் படிக்கிறோம். கூன் பாண்டியன் மீது விபூதியைத் தடவி தேவாரம் பாடுகிறார். அவன் நின்ற சீர் நெடுமாறன் ஆனதோடு, அவன் வயிற்றில் எரிந்த வெப்பு  நோயும் குணமாகிறது; இது அவரது கை மஹிமை ; ராமன் கால் பட்டவுடன்  சித்தப் பிரமை பிடித்த அஹல்யாவும் கல் நிலையிலிருந்து சாதாரண உடல் நிலைக்குத் திரும்பினாள் என்கிறது ராமாயணம்  )

கிறிஸ்து செய்த அதிசயம்

நோயாலும் வறுமையினாலும் அல்லலுற்ற ஒரு பெண்மணி, கிறிஸ்துவின் ஆடைகளைத் தொட்டவுடன் அவள் குணமடைந்த கதை பைபிளில் வருகிறது. அவள் கிறிஸ்துவைத் துதி பாடிய போது உன் நம்பிக்கைதான் உன்னைக் குணப்படுத்தியது YOUR FAITH HAS HEALED YOU என்கிறார்

இதில் ஒரு முக்கிய உண்மையை நாம் அறிகிறோம். டாக்டர்கள் எவ்வளவு மருந்து கொடுத்தாலும் அதில் நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்

(நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு என்று பாரதியார் சொல்வதில் நம்பிக்கையின் சக்தியையும் சதுர் வேத மந்திரங்களின் சக்தியையும் நாம் அறிகிறோம்).

தென் அமெரிக்க அதிசயம் HUACO

பெரு நாட்டில் சடலங்களைப் புதைத்த இடங்களில் வினோத உருவம் கொண்ட குவாகோ HUACO என்ற பீங்கான் அல்லது மண் பொம்மைகள் கிடைக்கின்றன. இவைகளில் சில மூக்குடைய கெட்டில் அல்லது பானைகள் . இவைகளில் தண்ணீர் நிரப்பி அசைத்தால் விசில் WHISTLE  அடிக்கும். இவைகளை ஆராய்ந்தவர்கள்  இது ஊதல் பானைகள் WHITLING POTS . அல்ல. இவற்றை  அவர்கள் நன்மை தரும் மந்திர சக்தியுள்ள பொருட்களாகக் கருதியே புதை குழிகளில் வைத்தனர் இவை நோய்களைக் குணப்படுத்தும் என்று கண்டுபிடித்துள்ளனர் இவைகள் 800 ஆண்டுகளாக செய்யப்பட்டு 1200 வரை நீடித்தது . ஸ்பானிய கொள்ளைக்காரர்கள் தென் அமெரிக்காவில் நுழைந்து எல்லாவற்றையும் அழிக்கும் வரை இந்தக் கலை இருந்தது   இவைகளைப் பற்றியும் இதன் சக்தியைப் பற்றியும் தென் அமெரிக்க நிபுணர் குறிப்பிடுகிறார் .

இவற்றின் உண்மையான உச்சரிப்பு வாரி , வாகோ WARI, WACO ; ஸ்பானியர்கள் இதை குவாகோ ,ஹுவாகோ GUACO, HUACO என்று திரித்துவிட்டனர்.

Huaco or Guaco is the generic name given in Peru mostly to earthen vessels and other finely made pottery artworks by the Indigenous peoples of the Americas found in pre-Columbian sites such as burial locations, sanctuaries, temples and other ancient ruins. Huacos are not mere earthenware but notable pottery specimens linked to ceremonial, religious, artistic or aesthetic uses in central Andean, pre-Columbian civilizations. The Incas, who absorbed all the cultures in the time of its expansion, also produced huacos.

Regardless of what a person hears from the whistling pots , the resulting experiences are always transformative, moving people deeply into or toward something that they seek. And, by entering into the process with a clear intention, people usually find themselves progressing quickly in the areas of healing, transformation and manifestation.

தொடரும்

TO BE CONTINUED…………………………

Tags- பெரு, ஹுவாகோ பானைகள், கை மஹிமை, கிறிஸ்து, கிருஷ்ணா, குள்ள பெண், கூன் முதுகு, நின்ற சீர் நெடுமாறன், கால் மஹிமை, அகல்யை , கோபால்ஜி, Huaco, Guaco, Wari

இதிஹாஸப் பெண்மணிகள்!  (மூன்றாம் பகுதி)- Post No.12,415


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,415

Date uploaded in London –  14 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

 குமுதம் பக்தி ஸ்பெஷல் 17-8-2023 SUPPLEMENTஆக

வெளியாகியுள்ள கட்டுரை

மூன்று பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 

இதிஹாஸப் பெண்மணிகள்!  (மூன்றாம் பகுதி)

ச.நாகராஜன் 

காந்தாரி

காந்தாரத்தை ஆளும் சுபலன் என்பவனின் மகள் காந்தாரி. அவள் பரமேஸ்வரனை வழிபட்டு நூறு பிள்ளைகள் பெறும் வரம் பெற்றவள் என்று கேள்விப்பட்ட பீஷ்மர் கண்பார்வையற்ற திருதாஷ்டிரனுக்கு அவள் ஏற்றவள் என்று கருதி காந்தார தேச மன்னனுக்குத் தூது அனுப்பினார். காந்தார மன்னன், கண்பார்வையற்றவன் திருதராஷ்டிரன் என்பதால் அவனை மருமகனாக ஏற்கத் தயங்க, காந்தாரி தன் பெற்றோரிடம் சம்மதம் தெரிவித்தாள்.

கணவன் கண்பார்வையற்று இருப்பதால் அவனை ஒருநாளும் இகழக் கூடாது என்று விரதம் பூண்டு ஒரு துணியால் தன் கண்களை மூடிக் கொண்டாள்.

துரியோதனன் மகாபாரதப் போருக்குப் போகும் முன்னர் தன் தாயான காந்தாரியிடம் ஆசி வாங்க வந்த போது, ஆசி தந்த அவள், “எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே வெற்றி கிடைக்கும்” என்றும் கூறினாள்.

யுத்தம் முடிந்தது. துரியோதனாதியர் கொல்லப்பட அவர்களின் பிணங்களின் அருகே மனைவிமார்கள் அழ வியாஸர் மூலமாக ஞானக் கண்ணைப் பெற்ற காந்தாரி அந்த அவலக் காட்சிகளைக் காண்கிறாள். அழுகைக் குரல் வானைப் பிளக்கிறது. கிருஷ்ணனை அடைந்த அவள், தனது குடும்பம் நாசமாவதற்குக் காரணமான அவனது குலம் 36 ஆண்டுகளில் அழியும் என சாபமும் இட்டாள்.

அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டான் மகாபாரத இயக்குநரான கிருஷ்ணன். கதை வசனம் எழுதும் போது தன் முடிவையும் தனக்குத் தானே அவனே தானே எழுதினான்! அப்படித் தான் நடக்கும் என்று காந்தாரியிடமும் அவன் கூறுகிறான்!

 தர்மத்தை விடாமல், குடும்ப பாசத்தையும் விடாமல் ஒரு உயர்ந்த தாயாக, அரசியாக, சிறந்த மனைவியாக, தர்மம் காப்பவளாக முழு சமச்சீர்தன்மையுடன் – பாலன்ஸுடன் – வாழ்ந்தவள் அதிசயப் பெண்மணி – Wonder Woman – காந்தாரி.

தமயந்தி

வேதத்திலேயே கூறப்படும் சரித்திரம் நள-தமயந்தி சரித்திரம். எல்லையற்ற நுண்ணறிவு கொண்டவள் தமயந்தி. (Super IQ) கணவனுடன் இணைந்து எதிர்ப்பட்ட இன்னைலை எல்லாம் எதிர்கொண்டு வென்றவள். பேரழகி.

அவளது நுண்ணறிவுக்கு ஒரு உதாரணம் – அவள் மேல் காதல் கொண்ட தேவர்கள் நால்வர் ஸ்வயம்வரத்தில் நளன் உருவத்தில் வந்து இருக்க ,அதிர்ந்து போன தமயந்தி தனது காதலன் நளனைக் கண்டுபிடித்தது நுண்ணறிவால் தான்.

“கண் இமைத்தலால், அடிகள் காசினியில் தோய்தலால்

வண்ண மலர் மாலை வாடுதலால்” – அவள் நளனைக் கண்டு பிடித்தாள்.

                (நள வெண்பா சுயம்வர காண்டம் பாடல் 135)

(தேவர்களுக்கு கண் இமைக்காது, மனிதனான நளனுக்கு கண் இமைக்கிறது; தேவர்களின் பாதங்கள் பூமியைத் தொடாது; ,மனிதனான நளனின் கால்களோ பூமியில் பதிந்துள்ளது; தேவர்களின் மாலை வாடவே வாடாது; மனிதனான நளனின் மாலையோ சற்று வாடி இருக்கிறது) ஆக இந்த லேடரல் திங்கிங்கால் (Lateral Thinking – மாற்று யோசிக்கும் நுண்ணறிவால் தனது நளனைக் கண்டாள் தமயந்தி. அவனுக்கே மாலையிட்டாள்.

Love Birds என்ற வார்த்தைக்கு நள தமயந்தி பொருத்தம் தானே!

மகாபாரதத்தில் வனபர்வத்தில் 49 முதல் 76 அத்தியாயம் முடிய நள-தமயந்தி சரித்திரத்தை விரிவாகப் படிக்கலாம்.

சாவித்திரி

உலகில் எந்த நூலிலும் காண முடியாத ஒரு அற்புதமான பெண்மணியாக மஹாபாரதத்தில் நம் முன் சித்தரிக்கப்படுபவள் சாவித்திரி; குணக்கடல் என்பதால் இவளைப் பார்க்க யமனே நேரில் வருகிறான்.

மத்ர நாட்டு மன்னனின் புதல்வியான சாவித்திரி சத்தியவானைப் பார்த்துக் காதல் கொள்கிறாள். அவன் தன் தாய் தந்தையரை அழகுறப் பாதுகாத்த விதம் அவளைக் கவர்ந்தது. அவனையே மணந்து கொள்கிறாள். ஆனால் நாரத முனிவர் அவனது ஆயுள் இன்னும் ஒரு வருடமே உள்ளது என்கிறார். குறித்த நாளில் சத்தியவான் உயிரை எமன் கவர்ந்து கொள்ள, தன் கற்பின் சக்தியால் யமனைப் பின் தொடர்கிறாள் சாவித்திரி. கணவன் உயிரைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேள் என்று எமதர்மன் கூற சாவித்திரி தனக்கு நூறு புத்திரர்கள் வேண்டும் என்று வரம் கேட்கிறாள். யமனும் அருள்கிறான். ஆனால் பதிவிரதையான அவளுக்குக் கணவன் இல்லாமல் எப்படி நூறு மகன்கள் பிறக்க முடியும்? எமன் சத்தியவானின் உயிரைத் திருப்பித் தருகிறான்.

இந்த சாவித்திரி பாத்திரம் பாரத தேசப் பெண்மணிகளின் நம்பிக்கை நட்சத்திரம். காரடையான் நோன்பு, வடபூர்ணிமா விரதம் என்பன போன்ற விரதங்களை அனுஷ்டித்து, பெண்மணிகள் ‘சாவித்திரி போல ஆவாயாக’ என்று வாழ்த்துவது இன்றும் உள்ள மரபாகும்.

மகாபாரதத்தில் வன பர்வத்தில் மார்க்கண்டேயர் இதை மிக விவரமாக தர்மபுத்திரருக்குச் சித்தரிக்கிறார் (பதிவிரதா மாஹாத்ம்ய பர்வத்தில்)

போன உயிர் மீளாது என்பது நிரந்தர உண்மை.

ஆனால் அதையும் பொய்யாக்கி அதீத புலனாற்றல் சக்தி என்பதையும் மீறி இறப்பையே பொய்யாக்கிய பெண்மணி சாவித்திரி என்பதை நினைத்துப் பெருமை கொள்ளலாம்.

பெண்ணின் பெருமையே பெருமை

பெண்மையின் சிகரம் சீதை என்று பெருமையுடன் கூறினார் ஸ்வாமி விவேகானந்தர்.

சாதுர்யம் பூஷணம் நார்யா – சாதுர்யமே பெண்களுக்கு பூஷணம் என்று கூறினார் ஒரு கவிஞர்.

இப்படி பெண்ணின் பெருமையைக் கூறும் ஆயிரக்கணக்கான செய்யுள்கள் ராமாயண, மஹாபாரத, புராணங்களிலும் மற்றும் காவியங்களிலும் உள்ளன.

ஒரு பெண் ஐந்து குணங்களைப் பெற்றிருந்தாள் என்றால் அவளை மனைவியாகக் கொள்பவன் அதிர்ஷ்டசாலியே என்று ஒரு கவிஞர் பட்டியலிடுகிறார் :

1) அநுகூலம் – காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கை கொடுப்பவள்

2) விமலாங்கி – குற்றம் இல்லாதவள்

3) குலஜா – நல்ல குடியில் பிறந்தவள்

4) குஷலா – திறமை வாய்ந்தவள்

5) சுசீலா – நல்ல ஒழுக்கம் வாய்ந்தவள்

இப்படிப்பட்டவள் பெய் என்றால் மழையும் பெய்யும் அல்லவா?

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இணையே தான்!

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் விண்வெளி கலத்தில் செல்லும் வீராங்கனை, விமானம் ஓட்டும் பைலட், ராணுவ பெண் அதிகாரி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என எங்கும் பெண்களை நாம் இன்று பார்க்க முடிகிறது.

சமுதாயத்தின் நடைமுறைப் போக்கில் ஆண் ஆதிக்கத்தை விட்டு விட்டு ஆண் பெண் இருவரும் சமம் என்பதை இன்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!

இதை அன்றே ஏராளமான இதிஹாஸப் பெண்மணிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள், இல்லையா?!

***

யம் , யம் , யம்மி யம்மி குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,414)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,414

Date uploaded in London – –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

யம் ,என்று முடியும் 8 எழுத்துக்களைக் கண்டுபிடியுங்கள்

1.பொதுவாக நோயாளிகள் உண்ணவேண்டிய அல்லது உண்ணக்கூடாத உணவுகளை குறிப்பிடப்படுவதாகும்.

2.நடு நிலையில் நின்று தீர்ப்பு சொல்லுவதுபிணக்குகளைத் தீர்ப்பது.

3.நன்றாக வாசிக்கலாம்

4.செய்யுள் நடை பத்ய ரூபம்உரைநடை …….

5.உண்மை என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

6.இது நார்ச்சத்தையும்சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது.

7.காசு இருந்தால் குதிரை மீது கட்டலாம். சண்டையிடும் சேவல் மீதுகிடா மீது கட்டலாம்.

8.குணத்திலும் இது தேவைபர்ஸிலும் இது தேவை.

விடைகள்

1.பத்தியம் 2.மத்தியம் 3.வாத்தியம் 4.கத்தியம் 5.சத்தியம் 6.வெந்தயம், 7.பந்தயம் 8.நாணயம்

–subham—-

F for Faridkot –Know India Puzzle (Post No.12,413)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,413

Date uploaded in London – –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

You have solved A to E Know India Puzzles; here comes the difficult F for Faridkot puzzle. Many of the F towns are in Punjab and Rajasthan; try it please!

1..Situated in Punjab, this city is known to house some beautiful, pious gurudwaras and temples. A few notable ones worth visiting are the Saragarhi Memorial Gurudwara and the Jain Swetambar Temple, which is over 1,200 years old.

2.This Punjab town is also known as Bangla,  known for a style of jhumar dance promulgated by Baba Pokhar Singh (1916–2002).

3. Located on the banks of the sacred rivers Ganges and Yamuna, this Uttar Pradesh town is mentioned in the puranic literature. The ghats of Bhitaura and Asani were described as sacred in the puranas.

4. This town is a beautiful tourist destination of West Bengal. It is famous for NTPC, a Barrage Dam, Milan Mandir, Gandi ghat and many more.

5.The town in Punjab was founded during the 13th century as Mokalhar by Raja Mokalsi, ; main tourist attractions range from magnificent forts to wonderful gurudwaras,

6. This town in Haryana is famous for henna production from the agricultural sector, while tractors, motorcycles, switch gears, refrigerators, shoes, tyres and garments constitute its primary industrial products.

7. The Gurudwara here is dedicated to the great martyrdom of younger sons of Guru Gobind Singh ; ancient Chakreswari temple is believed to be 1000 years old and largest banyan tree is in this area.

8.This well constructed fort town in Haryana bears connection to the Harappan era .The district was a part of Nanda empire, according to Puranas. This district also was a part of Mauryan empire, which was discovered from the Ashokan pillars here.

ANSWERS

D8       1        
 A      R      2 
  B     U     A  
   A    P    K   
    H   S   L    
     E  O  I     
      T R Z      
       AEA       
H7RAGHETAFATEHPUR3
       AAA       
      R R R      
     I  I  A     
    D   D   K    
   A    K    K   
  B     O     A  
 A      T      4 
D6       5        

—SUBHAM—