Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
(பகுதி 2)
ச.நாகராஜன்
மகாத்மாவிற்கு ஆசி!
1921க்கு முன்னமேயே அவர் நாட்டுத் தலைவர்கள் பலரையும் நன்கு இனம் கண்டு வாழ்த்திப் போற்றினார்.
இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட மஹாத்மா காந்தி அடிகள் சென்னைக்கு 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் வந்தார். அவரைச் சந்தித்த மஹாகவி அவரை அன்று மாலை நடக்கும் தனது கூட்டத்திற்கு தலைமை வகிக்க அழைத்தார். ஆனால் மஹாத்மா அன்று மாலை தனக்கு உள்ள வேறு நிகழ்ச்சியைக் கருதி, ‘நாளை உங்கள் கூட்டத்தை வைத்துக் கொள்ள முடியுமா?’ என்று கேட்டார்.
தன்னால் கூட்டத்தை ஒத்திப் போட முடியாது என்று பதில் கூறிய மகாகவி அவரது தொண்டுக்குத் தனது ஆசியை நல்கினார்.
வாழ்க நீ எம்மான்! என்ற தனது பாடலில் “தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!” என்று பாடி மஹாத்மாவை உரிய படி முதலிலேயே இனம் கண்டு போற்றி விட்டார் அவர்!
அரவிந்தரின் நட்பு!
புதுவை வாழ்க்கை பகுதி பாரதியாரின் கவிதா சக்தி உச்ச நிலை அடைந்த காலம். 1908ஆம் ஆண்டு புதுவை வந்த பாரதியார் 1918 நவம்பர் 20ஆம் தேதி வரை வரை புதுவை வாசத்தை மேற்கொண்டார்.
அரவிந்த மகரிஷி 1910ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி புதுவைக்கு வந்தார். அவரை வரவேற்றார் பாரதியார். அரவிந்தருடனான பாரதியாரின் நட்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
அரவிந்தருக்கு தமிழைக் கற்றுத் தந்து திருக்குறளை (கடவுள் வாழ்த்து) மொழிபெயர்க்க வழி வகை செய்தார் அவர். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மூழ்கி தமிழின் அருமையை அரவிந்தர் வெகுவாகப் போற்றினார்.
புதுவை வாசத்தில் வங்க மொழியைக் கற்றுக் கொண்டார் பாரதியார். வேத உபநிடத ஆராய்ச்சியில் ஈடுபட்டு அரவிந்தரிடமிருந்து அவர் கற்றதும் பெற்றதும் அதிகம்! கடைசியாக புதுவையிலிருந்து கிளம்பும் போது அரவிந்தரிடம் விடை பெற அவரது மாளிகைக்குச் சென்ற மகாகவி அவரைத் தனி அறையில் சந்தித்து விடை பெற்றார். பாரதியார் அங்கிருந்து கிளம்பும் போது எப்போதுமே உணர்ச்சி வசப்படாத மஹா யோகி அரவிந்தரின் கண்களில் நீர் அரும்பியது.
பாரதியாரின் பாடும் வல்லமை!
பாரதியார் பாடல்களை அவரே பாடக் கேட்டவர்கள் பிரமித்து பெரும் உந்து சக்தியைப் பெற்றுள்ளனர். அவரது புதுவை வாழ்க்கையில் அவரை நன்கு அறிந்த அமுதன் புதுவை வானொலி நிலையத்தின் வாயிலாக உரையாற்றும் போது, “பாரதியார் வாக்கில், அவர் சொல்லில் ஓர் அமாநுஷ்யம் தைவதம் மிளிர்ந்தது – அது தெய்வ சம்பந்தமில்லையா?” என்று கூறுகிறார்.
பாரதியார் ஓர் இசை வல்லுநர். தனது பாடல்களை எந்த ராகத்தில் எந்த தாள கதியில் பாட வேண்டுமென்று அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
தெய்வீக சக்தி!
காளியின் அருள் பெற்ற வரகவியாகவே விளங்கினார் பாரதியார். அவருடைய வாழ்வில் ஏராளமான சம்பவங்கள் இதை விளக்கும் வகையில் அமைந்தன.
மனநிலை சரியில்லாத ஒரு இளைஞனைத் தன்னுடன் தன் வீட்டில் தங்க வைத்த கவிஞர் அவனுடன் பேசுவார்; அவனை அடிக்கடி தொடுவார். இதன் விளைவாக அவன் மனநிலை இயல்பு நிலைக்குத் திரும்பியது. அவனது தந்தையார் மனம் மிக மகிழ்ந்தார்.
பாரதியாரின் நண்பராகிய பொன்னு முருகேசம் பிள்ளை தன் மகன் திரும்பி வரும் கப்பல் உடைந்தது என்று செய்தி கேட்டவுடன் மனம் உடைந்தார். பாரதியார் அவரைத் தேற்றினார். மகன் வருவான் என்று கூறினார். அப்படியே நடந்தது. ராஜாபாதர் என்ற அந்த இளைஞர் உடைந்த கப்பலில் இருந்த ஒரு கட்டையைப் பிடித்தவாறே மிதந்து வந்து காப்பாற்றப்பட்டு உயிருடன் வந்தார்.
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார் கவிஞர். 2023, ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரனில் தென் துருவத்தில் நமது சந்த்ராயன் 3 விண்கலம் இறங்கி உலக சாதனை படைத்தது!
இப்படி விரிவாக பாரதியாரின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த பாரதி நினைவு தினத்தில் கண்ணதாசனின் பொருத்தமான பாட்டு நினைவு கூரத்தக்கது.
சநாதனம் என்பதே இந்துமதம்; இந்து மதம் என்பதே சநாதனம் என்பது பாரதியாரின் முடிவான கருத்து. பாரதியார் பாடலைப் படிப்போர் இதை தெளிவாக உணரலாம்.; சனாதனம் பற்றி உளறும் , வசைபாடும் வாட்டிகன் பக்தர்களுக்கு VATICAN DEVOTEES பாரதியார் செமை அடி கொடுக்கிறார். நாத்திக வாதிகளை பேய்ப்பயல்கள் GHOSTS என்று வள்ளுவரும் மாணிக்க வாசகரும் திட்டுவதைப் போலவே பாரதியாரும் வசைபாடுகினார்.
சநாதனத்தை, இந்துமதத்தை எதிர்ப்போர் தமிழ் விரோதிகள் ; பாரதியாருக்கு எதிரானவர்கள் ; இதோ பாரதி பாட்டு :
பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,
நாமமுயர் சீனத்துத் ‘தாவு”மர்க்கம்,
நல்ல ”கண் பூசி”மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.
xxx
Sanātana (सनातन) is a Sanskrit word referring to eternal, having no beginning or end.
பாரதியார் பல மதங்களைக் குறிப்பிட்டபோதும் இந்துமதத்துக்கு மட்டும் சநாதனமாம் இந்துமதம் என்கிறார் .
சநாதனம் என்ற சொல்லுக்கு முடிவும் துவக்கமும் இல்லாத என்று பொருள். ஆதி அந்தம் இல்லாத என்று பொருள்; அதாவது இறைவன் எப்படியோ அப்படி. ஏனைய மதங்களுக்கு துவக்கமும் உண்டு; அழிவும் உண்டு என்பதால் பாரதியார் இந்து மதத்தை மட்டுமே இந்த அடை மொழியால் பாராட்டுகிறார்.
மேலும் சநாதன என்பதற்கு 19 பொருள்களை சம்ஸ்க்ருத நூல்கள் காட்டுகின்றன என்று விஸ்டம் லைப்ரரி வெப்சைட் WISDOM LIBRARY காட்டுகிறது .
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கும் ஒரு முனிவருக்கும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது ; மேலும் ‘என்றும் உளது ; அழிவே இல்லாதது ‘என்பதும் இதில் அடக்கம்
Xxxxx
Definition of Sanatan (from wisdom library website)
Source: DDSA: The practical Sanskrit-English dictionary
(-naḥ) 1. Vishnu. 2. Siva. 3. Brahma. 4. A guest of the Manes, or one who is to be fed whenever he chooses to attend the obsequial ceremonies or Shraddhas. f. (-nī) 1. The goddess Lakshmi. 2. A name of Durga. 3. Saraswati. E. sanā always, and dyu or dyut aff.; or sadā ṭhyul tuṭ ca ni0 dasya naḥ .
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Benfey Sanskrit-English Dictionary
Sanātana (सनातन).—[sanā + tana], I. adj., f. nī. 1. Perpetual, eternal, [Mānavadharmaśāstra] 1. 7; [Pañcatantra] ii. [distich] 112. 2. Firm, permanent. 3. Primeval, [Mānavadharmaśāstra] 1, 22 (ordained from the beginning); 3, 284. Ii. m. Viṣṇu, [Bhaṭṭikāvya, (ed. Calc.)] 1, 1; Śiva, Brahman. Iii. f. nī, Lakṣmī, Durgā, Sarasvatī.
— Cf. [Gothic.] sinteins, sinteino.
Xxxx
நாத்திகம் பேசுவோர் பேமானிப்பயல்கள் GHOSTS
பாரதி சுயசரிதை -யில் நாத்திகரின் இலக்கணத்தை வரையறுக்கிறார் :
விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்.
வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,
சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்,
சாதகங்கள் புரட்டுவர் பொய்மைசேர்
மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்,
மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்.
கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண்
xxxxx
பேமானி = கேடு கெட்டவர்கள், நேர்மையற்றவர்கள், நாணயம் இல்லாதவர்கள் .
வள்ளுவரோ, நாத்திகவாதிகளை பேய்ப்பயல்கள் என்று திட்டுகிறார்
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் (குறள் 850)
உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்.
அலகை என்பது பேய். இதை அராபியரும் தோன்றி மறையும்algol என்ற நட்சத்திரத்துக்குப் பயன்படுத்துகின்றனர்
பேமானி என்பதன் சரியான பொருள் பேய்ப்பயல்கள் . அது உருது மொழிச் சொல் அல்ல.; அது நாத்திகரைக் (Ghost; Ghoul) குறிக்கும் சொல் .
அல்கால் = அலகை = ALGOL = a binary star in the constellation Perseus whose larger member orbits and eclipses the smaller, brighter star causing periodic variation in brightness.
Arabic got it from Tamil KOOLI
கூளி = Ghoul
கூளி(பெ). ஆண் பேய். அருத்தியிற் பிழைநினைத்த கூளியை யறுத்தவன் (கலிங்க.) கூட்டம் · குடும்பம் · உறவு · படைத்தலைவன் · சாத்தான் …
xxxxxxx
வள்ளலார் தாக்கு
அருட்பிரகாச வள்ளலார் நாத்திகர்களைப்ப போடா பிண்ணாக்கு என்று வசைபாடுகிறார்
நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.
நாத்திகம் பேசுவோரின் பேச்சு, முடை நாற்றம் வீசும் என்று தாக்குகிறார். அவர்கள் ருசிப்பது பிண்ணாக்கு என்றும் சாடுகிறார் இதற்கு நேர் மாறானது தெய்வீகப் பெரியோரின் திருவாக்கு என்றும் பாடுகிறார்.
நாத்திகம் பேசுவோர் நாக்கில் தழும்பு ஏற்படும்வரை அதை பேசிக்கொண்டே இருப்பர்; அதனால்தான் திருவாசகத்தில் நாத்திகம் பேசி நாத்தழும் பேறியவர் என்று திட்டுகிறார் .
வள்ளுவரையும் வள்ளலாரையும் பாரதியாரையும் மாணிக்கவாசகரையும் நம்புவோர் சனாதன எதிரிகளை வேரறுக்க வேண்டும். அவர்களை அழி க்காவிடில் அவர்கள் இந்துக்களை அழித்துவிடுவார்கள் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
செப்டம்பர் 11 மகாகவி பாரதியார் நினைவு தினம். இதையொட்டி மாலைமலர் நாளிதழ் 10-9-2023 அன்று வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை இது. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
பாரதியின் பன்முகத் திறன்!
(பகுதி 1)
ச.நாகராஜன்
உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவி முரசு
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன் புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்!
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
மகாகவி பாரதியார் (தோற்றம் டிசம்பர் 11, 1882 மறைவு செப்டம்பர் 11, 1921) பன்முகப் பரிமாணங்கள் கொண்ட உலக மகாகவி. காலம் செல்லச் செல்ல அவரது புகழ் மென்மேலும் ஓங்கி வளர்ந்து கொண்டே போகிறது. அவரது கவிதைத் திறனைக் கண்டு வியந்து கொண்டாடுவோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.
கவிதைத் திறம்
மகாகவி பாரதியாரின் கவிதைத் திறத்தைக் கண்டு நம் நாடு மட்டும் வியக்கவில்லை. அயல் நாட்டினரும் வியந்து போற்றினர்.
பிரம்மஞானசபை இயக்கத்தைச் சேர்ந்த அன்னிபெஸண்ட் அம்மையார் பாரதியாரின் கவித்திறமையின் பால் அளவிலா ஈடுபாடு கொண்டார். அதை நேருக்கு நேர் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற விருப்பம் அம்மையாருக்கு எழுந்தது. ஆகவே சில கவிதைளை அயர்லாந்து கவிஞரான ஜேம்ஸ் ஹெச். கஸின்ஸ் என்ற கவிஞரைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் செய்து படித்து மெச்சினார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் கவிதைகள் பிரெஞ்சு மொழியிலும் ஆங்கில மொழியிலும், தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டன.
“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற் புதிது, சோதி மிக்க
நவ கவிதை, எந்நாளும் அழியாத
மகாகவிதை என்று நன்கு
பிரான்ஸென்னும் சிறந்த புகழ்நாட்டிலுயர்
புலவோரும் பிறரு மாங்கே
விராவு புகழ் ஆங்கிலத்தில் கவியரசர்
தாமும் வியந்து கூறிப்
பராவி என்றன் தமிழ்க் கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்”
என்று அவர் தனது கவிதை உலகெங்கும் போற்றப்படுவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
மரபு சார்ந்த அணிகளையும் உவமைகளையும் பயன்படுத்தியதோடு நாட்டு விடுதலை, பாரதத்தின் பெருமை, நல்லோர் பண்பு, பெண் விடுதலை, தமிழின் மாண்பு, இதிகாசப் பெருமை உள்ளிட்ட பல்வெறு பொருள்களில் புதிய உவமைகளையும் காலத்திற்கேற்றவாறு மாற்றி அவர் புதுமை புகுத்தியதையும் பார்த்தால் பெரும் வியப்பையும் பிரமிப்பையும் அடைகிறோம்.
சுமார் 850 உவமைகளை அவர் இப்படித் தன் கவிதைகளில் காட்டுகிறார். அணிகளில் சிறந்தது உவமை அணியே என்ற யாப்பிலக்கண நூலாரின் கருத்தை எடுத்துக் கொண்டால், பாரதியார் உலகின் தலை சிறந்த கவிஞர்களுள் முதலிடத்தைப் பெறுவதை உறுதிப் படுத்தலாம்.
தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த
வையம் முழுதும் இல்லை தோழி
ஆசை முகம் மறந்து போச்சே என்ற பாடலுக்கு ஈடு இணை இன்னொரு பாடல் உண்டா என்ன?
பொங்கி வரும் பெரு நிலவு, புன்னகையின் புது நிலவு, துங்கமணி மின் என்று இப்படி நூற்றுக்கணக்கான சுவை தரும் சொற்சேர்க்கைகளைத் தந்த புதுமைப் பாவலனாக அவர் மிளிர்கிறார்.
கற்பார்க்கு வாழ் நாள் முழுவதும் வேண்டிய சுவையைத் தரும் ‘கற்பகத் தரு கவிஞனாக’ அவரைக் காண முடிகிறது.
விநாயகர் நான்மணி மாலை, புதிய ஆத்திசூடி, பாரதி அறுபத்தாறு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் உள்ளிட்டவற்றைப் பாடி பிரபந்த வகைகளையும் காவியப் படைப்புகளையும் சற்று புதிய முறையில் காட்டி மகிழ்ந்தார்; தமிழரை மகிழ்வித்தார்!
தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவதெங்கும் காணோம்” என்று உரக்கக் கூவிய அவர் தமிழை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றார்.
ஆங்கிலத்தில் வல்லவர் அவர். ஆங்கிலம் மற்றும் வங்க மொழிக் கவிதைகள் ஒன்பதை அவர் மொழி பெயர்த்திருக்கிறார். காசியில் வடமொழியைப் பயின்று தேர்ந்தார். ஹிந்தியில் வல்லவர். புதுவையில் பிரெஞ்சு மொழியைக் கற்றார். பிரெஞ்சு தேசிய கீதத்தை அவர் தமிழ்ப்படுத்தியுள்ளார். தெலுங்கு அவருக்கு அத்துபடி. அரபி மொழியைக் கற்ற அவர் குர் ஆனை அப்படியே உரிய உச்சரிப்புடன் கூறுவதை புதுவை வாழ் இஸ்லாமியர் பாராட்டியதுண்டு.
நிவேதிதா தேவியின் ஆசி!
1905ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இந்திய மக்களின் விருப்பத்திற்கு எதிராக வங்கம் பிரிக்கப்பட்டது. மக்கள் சீறி எழுந்தனர். சுதந்திர எழுச்சி நாடெங்கும் பரவியது. 1906ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு கல்கத்தாவில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பிறகு பாரதியார் கல்கத்தாவின் வட பகுதியில் இருந்த பாக்பஜாருக்குச் சென்று அங்கு போஸ்பரா தெருவில் வசித்து வந்த சகோதரி நிவேதிதா தேவியைச் சந்தித்தார். (தோற்றம் 28-10-1867 மறைவு 13-10-1911) அப்போது நிவேதிதா தேவிக்கு வயது 39. பாரதிக்கோ வயது 24 தான்.
பாரதிக்கு மணமாகி ஒரு பெண் குழந்தையும் இருப்பதை அறிந்த நிவேதிதா மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்க பாரதியார், “பெண்களை வெளியில் அழைத்துச் செல்வது எங்கள் வழக்கம் இல்லை. காங்கிரஸ் பற்றி என் மனைவிக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.
இதைக் கேட்டு கோபம் கொண்ட அவர் பாரதியாருக்கு பெண்மையைப் போற்ற வேண்டிய அவசியத்தை வெகுவாக எடுத்துரைத்தார். பாரதியார் அவரை குருவாக வரித்தார். பாரதியார் விடை பெறும் போது இமயமலைப் பயணத்தில் தனக்குக் கிடைத்த சருகு ஒன்றை நிவேதிதா பாரதியாருக்கு அளிக்க அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். நெடுங்காலம் அந்த சருகைப் போற்றிப் பாதுகாத்தார் அவர். தனது கவிதைப் படைப்பை நிவேதிதா தேவிக்கு சமர்ப்பணம் செய்தார். ‘அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய்” என்று தொடங்கும் பாடலையும் பாடி ஞானகுருவிற்கு அர்ப்பணித்தார்.
31.‘Become a Doctor, Bury Your Pictures’- Advice to a Poor Painter!
32.Producers Anecdotes
33.Drama was A Success, But Audience was A Failure! -Oscar Wilde
34.Tolstoy’s’ Story about Painter Bunov
35.You can’t even say a Boo to a Goose! Authors Anecdotes
36.Greeks Sacrificed 100 Oxen for a Discovery!
37. Two Inventions that Changed the World!
38.Snake or Goose or Fool in the Crowd?
39.A B C D Poem Review –1 2 3 4 !
40.Porters and Automobiles Anecdotes!
41Swindling Anecdotes
42.Sickness in the guise of a Lady!
43.Doctors Anecdotes
44.Train went back for an Old Lady!
45.Hollywood Anecdotes; I submitted 4 Stories, they sent me back 9!
46.‘Thanks for Warning’! FIirst Time Actor Received Only One Reply!
47.Humbug – New Insect Discovered!
48.Missing College Board
49.Men of Wit are not Fit for Jobs
50.University and College Anecdotes
51.Power of Whisper!
52.I Love You, Love You, Love You Passionately!
53.Women, Gossip, Courtship Anecdotes
54.True Story- Woman from the Heaven
55.Dullness Anecdotes
56.Sleeping and Snoring in Church Services!
57.Rousseau, Thomas Gray, Francis Thompson: More Eccentricity Anecdotes!
58.Salaries Anecdotes
59. Miscellaneous Anecdotes
*******
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title- Third Book of Anecdotes for Students and Speakers
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- English
Published – June 2023
Subject – Entertainment
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 8000 articles and 105 Tamil and English Books
Visited Countries
India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece
Xxxxxxx
Foreword
This is the third part of my collection of anecdotes from an old book of anecdotes. I have not written anything. I have only compiled them. It will be very useful for party goers. The beauty of the book is that the anecdotes are arranged topic wise. Students may use this book for essay writing.
Anecdotes regarding doctors, salesmen, sportsmen, politicians, authors, producers and other people from various walks of life are covered in this part. There are nearly sixty topics. If you look at the contents page you may see the amazing variety of topics covered in the book.
The old book had thousands of anecdotes; but I have selected what is relevant for our times. Some anecdotes lose their punch by the passage of time. I have omitted them.
All these anecdotes have already been posted in my blogs in the past ten years. I have given the dates of their first posting in every topic. Enjoy reading them and use them where you wanted to show your knowledge in various subjects. Most of these are humorous and harmless.
London Swaminathan swami_48@yahoo.com
June 2023
36 ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
(1).Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14).Miracles of Hindu, Parsi, Jain &
Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17.Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18. Hindu Wonders in Muslim Countries
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21. Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24.Rewrite Indian History
25.Beautiful Hindu Women and
Wonderful Weddings
26. Woman is an Adjective, Man is a Noun
27. Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29. History is a Mystery in India
30. Thousand More Hindu Quotations for Speakers and Students
31. Controversial and interesting Laws in Manu Smriti
(First Part)
32. Controversial and interesting Laws in Manu Smriti
(Second Part)
33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned
34. Interesting Anecdotes for Partygoers and Essay Writers
35.More Interesting Anecdotes for Partygoers
36.Third Book of Anecdotes for Students and Speakers
Xxxxx
மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்? (title)
பொருளடக்கம்
1.காந்திஜி வாழ்க்கையில் ராமர் செய்த அற்புதம் !
2.ஆவிகளுடன் பேசுவது நல்லதா? காந்திஜி பதில்;
லண்டன் சுவாமிநாதனின் சொந்த அனுபவம்
3.கிறிஸ்தவ பாதிரியுடன் காந்திஜி வாக்குவாதம்
4.கோட்ஸே சுட்டதற்கு முன்னால் காந்திஜி எழுதியது
5.மாமிச உணவு சாப்பிடலாமா? காந்திஜி, விவேகானந்தர் பதில்
20.மதம் மாறிய காந்திஜி மகனுக்கு மௌல்வி பட்டம்! அன்னை கஸ்தூரிபாய் கதறல்
21.வாளும் குண்டூசியும்; காந்தியும் நாதர்ஷாவும்
22.Gandhi Quotes on Hinduism:
23.More Interesting Quotations from Mahatma Gandhi
**************************
முன்னுரை
மஹத்மா காந்தி உலகம் முழுதும் அறியப்பட்ட ஹிந்து என்பது மட்டுமல்ல; போற்றப்பட்ட ஒரு ஹிந்துவும் ஆவார். உலகில் உள்ள கம்யூனிஸ்ட் நாடுகள், முஸ்லீம் நாடுகள் கூட அவரது நூற்றாண்டு தினம் 1969ல் கொண்டாடப்பட்ட போது அஞ்சல் தலைகளை வெளியிட்ட திலிருந்தும், காந்திஜியின் சிலைகளை நிறுவியதிலிருந்தும் இது தெரிகிறது. இந்து மதம் பற்றிய அவரது கருத்துக்கள் ஆணித்தரமானவை . எவ்வளவோ கிறிஸ்தவர்கள் அவரை மதம் மாற்றம் செய்ய முயன்றபோதும் அவர் அசைந்து கொடுக்கவில்லை . ஏனையோரும் இந்து மதத்திற்கு வரவேண்டியதில்லை; அவரவர் மதத்தை ஒழுங்காகப் பின்பற்றினால் போதும் என்றே அவர் அறிவுறுத்தி வந்தார்.
காந்திஜி எல்லா அறிவுரைகளையும் இந்துக்களுக்கு மட்டுமே சொல்லிவந்தார் . ஏனையோர் அவர் சொன்னாலும் கேட்பதாக இல்லை. இது இந்துக்களை ஆத்திரப்பட வைத்தது. அரசியலிலும் அவரது கொள்கைகள் எடுபடவில்லை. தன நிலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தார் ; ஆயினும் இந்த நூல் அவரது இந்துமதம் பற்றிய தொகுப்பு மட்டுமே. அஹிம்சை , ராம நாம மஹிமை, பிரம்மச்சர்ய விரதம், உண்ணாவிரதம், சைவ உணவு பற்றிய அவருடைய கொள்கைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன.
ஆஸ்ரமத்தில் நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டியைக் கொல்ல உத்தரவிட்டது,வயல்களை மேயும் குரங்குகளையும் , தெரு நாய்களையும், தீராத நோயுடைய நோயாளிகளையும் கொல்வது சரியே என்று அவர் சொன்னது நீண்ட கால சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பெரும்பாலோர் அவரைப் பின்பற்றினாலும் அவர், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவராக இருக்கவில்லை. அரசியலிலும் நேதாஜிக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கியது ஜனநாயக விரோதமான செயல் என்று ஏசப்பட்டது .
அவர் இந்துமதத்தைப்போற்றி அதைக் கடைப்பிடித்தார் என்பதிலோ சொந்த வாழ்வில் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தார் என்பதிலோ எந்த ஐயப்பாடும் இல்லை. அவரது மகன் மதம் மாறி ஒழுக்கம் கெட்டுப்போனது அவரையும் அவர் மனைவி கஸ்தூரிபா காந்தியையும் மிகவும் பாதிக்கச் செய்தது .
காந்திஜியின் பெயரில் நவஜீவன் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து இந்தக்கட்டுரைகள் எடுக்கப்பட்டு என்னால் தமிழாக்கம் செய்யப்பட்டு என்னுடைய ‘பிளாக்’குகளில் அண்மையில் வெளியிடப்பட்டன . அவைகளைத் தொகுத்து இங்கே வழங்குகிறேன்.
இந்த நூலைப் படிக்கும்போது அவரது பெயரை வைத்துக்கொண்டு திரிவோரும், அவரது படத்தை அலுவலங்களில் மாட்டி வைத்திருப்போரும் அவரை நையாண்டி செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது .
இறுதியில் காந்தியின் பொன் மொழிகளை ஆங்கிலத்திலும் கொடுத்துள்ளேன்; படித்துப் பயன் பெறுவீர்களாகுக.
அன்புடன்
ச. சுவாமிநாதன்
ஜூன் 2023, லண்டன்
Xxxxxx
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title- மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்?
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – June 2023
Subject – Religion
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 8000 articles and 105 Tamil and English Books
Visited Countries
India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece
Festival Days: 5-Teachers Day, 6-Janmashtami; Krishna’s Birthday, 11- Bharati Memorial Day ; 8- Swami Sivananda Birth Day; 18- Ganesh Chaturthi; 28- Confucius Birth Day (Teachers Day in Taiwan) ; 30- Pitru Paksha/ Ancestors Fortnight /Mahalaya Paksha begins.
Ekadasi Fasting Days -10, 25; Amavasai/ New moon day -14; Purnima/ Full moon day -29; Auspicious days –3, 1113
September 1 Friday
A journey of a thousand miles begins with a single step.
xxx
September 2 Saturday
An oppressive government is more to be feared than a tiger.
xxx
September 3 Sunday
Forget injuries, never forget kindness.
xxxx
September 4 Monday
Respect yourself and others will respect you.
xxx
September 5 Tuesday
He who learns but does not think is lost.
xxx
September 6 Wednesday
He who thinks but does not learn is in great danger.
xxx
September 7 Thursday
It does not matter how slowly you go so long as you do not stop.
xxx
September 8 Friday .
What the superior man seeks is in himself; what the small man seeks is in others.
xxx
September 9 Saturday
The gentleman is calm and peaceful; the small man is always emotional.
xxx
September 10 Sunday
In his attitude to the world the gentleman has no antagonisms and no favouritisms. What is right he sides with.
xxx
September 11 Monday
If one acts with a view to profit, there will be much resentment.
xxx
September 12 Tuesday
”Exemplary persons make demands on themselves, while petty persons make demands on others.”
xxx
September 13 Wednesday
One who can bring about the practice of five things everywhere under Heaven has achieved humanity… courtesy, tolerance, good faith, diligence, and kindness.
xxx
September 14 Thursday
Life is really simple, but we insist on making it complicated.
xxx
September 15 Friday
Everything has beauty, but not everyone sees it.
xxx
September 16 Saturday
Our greatest glory is not in never falling, but in rising every time we fall.
xxx
September 17 Sunday
“They must often change who would be constant in happiness or wisdom.”
xxx
September 18 Monday
“What the superior man seeks is in himself; what the small man seeks is in others.”
xxx
September 19 Tuesday
“Fine words and an insinuating appearance are seldom associated with true virtue.”
xxx
September 20 Wednesday
“Before you embark on a journey of revenge, dig two graves.
xxx
September 21 Thursday
“Real knowledge is to know the extent of one’s ignorance.”
xxxx
September 22 Friday
“Success depends upon previous preparation, and without such preparation, there is sure to be failure.”
xxx
September 23 Saturday
“Do not impose on others what you yourself do not desire.”
xxx
September 24 Sunday
“Men’s natures are alike, it is their habits that carry them far apart.”
xxx
September 25 Monday
“I hear and I forget. I see and I remember. I do and I understand.”
xxx
September 26 Tuesday
“Silence is a true friend who never betrays.”
xxx
September 27 Wednesday
“Respect yourself and others will respect you.”
xxx
September 28 Thursday
“Our greatest glory is not in never falling, but in rising every time we fall.”
xxx
September 29 Friday
“Better a diamond with a flaw than a pebble without.”
xxx
September 30 Saturday
“Hold faithfulness and sincerity as first principles.”
–subham—
Tags- Calendar, September 2023, Confucius, sayings, proverbs, saying
ஐஹோல், பாதாமி, .பட்டடக்கல் ஆகிய மூன்றும் கர்நாடக மாநிலத்தில் அருகருகே இருந்தாலும் அவைகளை நன்றாகப் பார்க்க வேண்டுமானால் அதற்குப் பல நாட்கள் தேவைப்படும் .
பாதாமி (வாதாபி)யிலிருந்து .பட்டடக்கல் 22 கிலோமீட்டர்கள் தொலைவிலும், அய்கொளெயில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவை கி.பி. 7,8–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரலாற்ற ச் சின்னங்கள் ஆகும். வேசர பாணியில் கட்டப்பட்ட இந்துக் கோவில் களை இங்கே காணலாம் .பட்டடக்கல் நகரமும் சாளுக்கிய வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது இங்கு அவர்கள் முடிசூட்டிக்கொண்டனர்.
ஐஹோல் போலவே பட்டடக்கல்லிலும் முக்கியக் கல்வெட்டுகள் உள்ளன. இவை சாளுக்கிய வம்சத்தினரின் வரலாற்றை அறிய நமக்கு உதவுகின்றன. அங்குள்ள முக்கியக் கன்னட மொழிக் கல்வெட்டுகள் , விருபாட்சர் கோவிலிலும் , சங்கமேசுவரர் கோவிலிலும் உள்ளன இரண்டாம் விக்ரமாதித்தன் , விஜயாதித்தன் ஆகிய சாளுக்கிய அரசர்களை இவைகள் குறிப்பிடுகின்றன.
மலப்ரபா ஆற்றின் கரையில் அமைந்த இந்த நகரின் மற்றும் ஒரு பெயர் ரக்தபுரம். செம்மண் பூமியாதலாதலால் ரக்தபுரம் என்று பெயர் ஏற்பட்டது மலப்பிரபா நதி, கிருஷ்ணா நதியின் உப நதி. இது இந்த ஊருக்கு அருகில் வடக்கு நோக்கி பாய்வதால் கங்கைக்கு சமமாகக் கருதப்படுகிறது . வடக்கிலுள்ள கயிலை மலையும் கங்கை நதியும் இந்துக்களுக்கு புனிதமானவை. இங்கு முடிசூட்டிக்கொள்ளும் கல்லும் உள்ளது. வினயாதித்யன் முதலிய பல மன்னர்கள் இங்கு முடிசூட்டிக்கொண்டனர். 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடங்கள் சீரும் சிறப்புடனும் திகழ்ந்தன. இன்று விரூ பாட்சர் கோவிலில் வழிபாடு நடக்கிறது
இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் சிவன் கோவில்கள். ஆயினும் விஷ்ணு, சக்தி வழிபாடுகளையும் சிறப்பிக்கும் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன. ராமாயண, மஹாபாரத, பாகவத புராணக் காட்சிகள் மட்டுமின்றி பஞ்சதந்திர , கிராதார்ஜுனிய காட்சிகளையும் காண முடிகிறது .
விரூபாட்சர் கோவில்
இங்குள்ள கோவில்களில் மிகவும் புகழ் வாய்ந்தது விரூபாட்சர் கோவில்; ஹம்பி நகரிலும் இதே பெயரில் கோவில் உண்டு. இரண்டாம் விக்கிரமாதித்தனின் வெற்றிகளைக் கொண்டாட இந்தக் கோவில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது அவன் மனைவி பெயர் லோகமஹாதேவி. அவன் மூன்று முறை போர்முனைகளில் பல்லவ மன்னர்களை வெற்றி கொண்டான்
இந்தக்கோவிலில் உள்ள சிவலிங்கமும் நந்தியும் பெரியவை; அழகானவை; இரண்டையும் பார்க்கும்போது நமக்கு பிருஹதீஸ்வரர், லெபாக்ஷி, சாமுண்டீஸ்வரி கோவில் நந்திகளும் லிங்கங்களும் மனக்கண் முன்னர் தோன்றும் .
இந்தக்கோவிலை சிற்பக் களஞ்சியம் என்றால் மிகையாகாது . 18 தூண்கள் முழுதும் புராண இதிஹாஸக் காட்சிகள் தான்.
அதிலும் முக்கியமானது கொற்றவையின் சிற்பம். இதில், மகிஷனின் தலைமீது ஒரு காலை வைத்து, அவன் கழுத்தில் தன் ஒரு கை சூலத்தைப் பாய்ச்சி, மற்றொரு கரத்தில் இருக்கும் வாளை அவன் மார்பில் செலுத்தும் காட்சி பிரமிக்கவைக்கிறது. மேலும், இங்குள்ள சுவர் முழுவதும் ஆண்கள் மற்றும் கன்னியர்களின் சிற்பங்களும் உள்ளன. முஸ்லீம் படையெடுப்புகளால் சிற்பங்கள் சிதைக்கப்பட்டிருந்தாலும், எஞ்சிய சிற்பங்கள் பேரழகுடன் காட்சியளிக்கின்றன.
மல்லிகார்ஜுனர் கோவில்: விருபாட்சர் கோயிலுக்கு முன்பாகக் காணப்படும் இந்த சிவன் கோயில், சாளுக்கியப் பேரரசி திரைலோக்ய மகாதேவி அளித்த மானியத்தின் மூலம் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் இந்தக் கோவில் அரசியின் பெயரில் ‘திரைலோகேஸ்வர மகா சைலம்’ என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு தூணும் சிற்பங்களால் நிறைந்திருக்கிறது. கோயில் சுவரில் பாற்கடல் கடையும் காட்சி, மகாபாரதக் காட்சி, பஞ்ச தந்திரக் கதைகள், புராணக் கதைகள் என்று அழகிய பல சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன.
காசிவிஸ்வநாதர் கோவில். : இது ஒரு பழைமையான கோவில். . ஏழாம் நூற்றாண்டுக்கோவில் சுவர்களின் பீடத்தில் அனைத்து திசைகளிலும் குதிரை, சிங்கம், மயில் ஆகியவற்றின் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் சுவர்களில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், ராவணன் கயிலாய மலையைத் தூக்குவதற்கு முயற்சி செய்யும் காட்சி, கண்ணனின் சிற்பங்கள் ஆகியவை காணப்படுகின்றன. மண்டபத்தின் கூரையில் எண்திசைக் காவலர்கள் காவலிருக்க, சிவபெருமான் பார்வதி, கார்த்திகேயன், நந்தி ஆகியோருடன் காட்சியளிக்கும் அற்புதக் காட்சியும் சிற்பமாக்கப்பட்டிருக்கிறது.
சங்கமேஸ்வரர்கோவில். : பட்டடக்கல்லில் காணப்படும் மிகப் பெரிய கோவில்.களில் சங்கமேஸ்வரர் கோவிலும் ஒன்று. இதற்கு `விஜயேஸ்வரர் கோவில். என்றும் பெயர் உண்டு. இங்கே காணப்படும் கல்வெட்டுகள் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்கு, நடராஜர் வடிவத்தில், சக்தியுடன் இருப்பதாக சிவன் அமைக்கப்பட்டுள்ளது.
காளகநாதர் கோவில்.
இதன் மண்டபத்தின் நுழைவாயிலில் கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. . லிங்கத்துடன் காணப்படும் கருவறையை நோக்கி, வெளியே நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்பு லிங்கேஸ்வரர் கோவில்: பட்டடக்கல்லில் காணப்படும் மிகச் சிறிய கோவில்களில் இதுவும் ஒன்று. 7-ம் அல்லது 8-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இந்த கோயிலின் சிற்பங்கள் சேதமடைந்து தெளிவில்லாமல் இருக்கின்றன.
கடசித்தேஸ்வரா கோவில்: இங்குள்ள கருவறையின் வெளிப்புறச் சுவரின் வடக்கில் அர்த்தநாரீஸ்வரர் (பாதி சிவன், பாதி பார்வதி), மேற்கில் ஹரிஹரன் (பாதி சிவன், பாதி விஷ்ணு) மற்றும் தெற்கே லகுலிஷாவின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறந்த கட்டடக்கலையும், சிற்பக்கலைகளின் கருவூலமாகவும் உள்ள நினைவுச்சின்னங்களை, யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது
இங்கே பார்க்க வேண்டிய இடங்கள்
காளகநாதர் கோயில்
காடசித்தேசுவரர் கோயில்
சம்புலிங்கேசுவரர் கோயில்
சங்கமேசுவரர் கோயில்
சந்திரசேகரர் கோயில்
விருபாட்சர் கோயில்
மல்லிகார்ச்சுனர் கோயில்
காசி விசுவநாதர் கோயில்
பாபநாதர் கோயில்
சமணர் கோயில்
—SUBHAM—
Tags–கர்நாடக மாநில, 108 ,புகழ்பெற்ற கோவில்கள், part – 31, பட்டடக்கல்
பண்டிகை நாட்கள் : 5-ஆசிரியர் தினம், 6-கோகுலாஷ்டமி கிருஷ்ணர் பிறப்பு /ஜயந்தி; 8- சுவாமி சிவானந்தா பிறந்த தினம்; 11- பாரதி நினைவு தினம்; 18- விநாயகர் சதுர்த்தி; 28- கன்பூசியஸ் பிறந்த நாள்; தேசீய சீனாவில் (Taiwan) ஆசிரியர் தினம் ; 30- மகாளய பட்சம் ஆரம்பம்
xxx
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் -10, 25;அமாவாசை -14;பெளர்ணமி -29
வாழ்க்கை மிகவும் எளிதானது, நாம் தான் சிக்கலாக சிந்தித்து அதை சிக்கலானதாக மாற்றுகிறோம்.
xxx
செப்டம்பர் 20 புதன் கிழமை
துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறீர்களோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்து விட்டீர்கள் என்பது உறுதி.
Xxx
செப்டம்பர் 21 வியாழக் கிழமை
ஒருவரைப் பழி வாங்கத் தொடங்குவதற்கு முன்பு, இரண்டு கல்லறைகளைத் தோண்டிக் கொள்ளுங்கள்!
xxx
செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை
எதிர்காலத்தை வரையறுக்க கடந்த காலத்தைப் படிக்கவும்!
Xxx
செப்டம்பர் 23 சனிக் கிழமை
எங்கு சென்றாலும், உங்கள் முழு இருதயத்தோடு போங்கள்!
Xxx
செப்டம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை
நீ சுமக்கின்ற உன் நம்பிக்கை; நீ கீழே விழும்போது உன்னைச் சுமக்கும்!
xxxxx
செப்டம்பர் 25 திங்கட் கிழமை
மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்.
xxx
செப்டம்பர் 26 செவ்வாய்க் கிழமை
உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள். நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை வைத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுகிறார்கள்.
xxxx
செப்டம்பர் 27 புதன் கிழமை
நீங்கள் இரண்டு முயல்களைத் துரத்தினால், நீங்கள் எதையும் பிடிக்கமாட்டீர்கள்.
xxx
செப்டம்பர் 28 வியாழக் கிழமை
ஒரு புத்திசாலி இசையால் தன் ஆத்மாவை வலுப்படுத்த முயல்கிறான், சிந்தனையற்றவன் தன் அச்சத்தைத் தணிக்க அதைப் பயன்படுத்துகிறான்.
xxx
செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை
தண்ணீர் அதைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வடிவமைப்பது போல, ஒரு புத்திசாலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறான்.
xxx
செப்டம்பர் 30 சனிக் கிழமை
உங்களிடமிருந்து அதிகம் எதிர்பாருங்கள், மற்றவர்களிடமிருந்து குறைவாக எதிர்பாருங்கள், நீங்கள் மனக்கசப்புகளைத் தவிர்ப்பீர்கள்.
—subham—
Tags- செப்டம்பர் 2023, காலண்டர், கன்பூசியஸ் பொன்மொழிகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
அத்தியாயம் 16
ஹிட்லரின் மண்டை ஓடு!
ச.நாகராஜன்
பகுதி 20
1945, ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி. திங்கள்கிழமை.
இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது, தோற்பது உறுதி, பிடிபடுவதும் உறுதி என்ற முடிவுக்கு வந்த ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்.
தனது நீண்ட கால காதலியாக உடன் இருந்த தோழி இவா ப்ரானைத் திருமணம் செய்து கொண்டார்.
அவரையும் தற்கொலை செய்யச் சொல்லித் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு பங்கரில் நடந்தது இது.
அவர் தனது முடிவைத் தேடிக் கொண்ட பின் அவர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தபடி அவரது உடல் அகற்றப்பட்டது.
மிக வேகமாக வந்த ரஷியப் படை ஏமாந்து போனது – ஹிட்லரை உயிருடன் பிடிக்க முடியவில்லையே என்று!
ஹிட்லரின் மண்டை ஓடு என்று ஒரு படத்தை ரஷியா வெளியிட அதைத் தொடர்ந்து ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.
ஹிட்லர் சயனைடு விஷத்தைச் சாப்பிட்டு பின்னர் துப்பாக்கியால் தனது வாயில் சுட்டுக் கொண்டார் என்பது ஊர்ஜிதமான செய்தி.
அவர் மண்டை ஓட்டில் தலையில் ஒரு ஓட்டை இருந்தது.
தலையில் எப்படி துப்பாக்குக் குண்டு ஓட்டை இருக்க முடியும், ஆகவே அவர் வாயில் சுட்டிக் கொண்டு இறக்கவில்லை என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல ஆராய்ச்சியாளர்கள் களத்தில் இறங்கி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
முதலில் ஹிட்லரின் வரலாற்றை நன்கு ஆராய்ந்து எழுதிய அமெரிக்க எழுத்தாளரான வில்லியம் ஷ்ரிடர் (William L. Shrirer) ஹிட்லர் வாயில் சுட்டுக் கொண்டு இறந்தார் என்று தனது புத்தகமான ‘தி ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தேர்ட் ரெய்ச்’ (The Rise and Fall of Third Reich)-இல் உறுதிப் படுத்தியுள்ளார்.
வாய் வழியே சுட்டாலும் தலை வழியே துப்பாக்கிக் குண்டு வெளியேறுவது இயல்பே என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
அத்தோடு ஹிட்லரின் எலும்புகளைச் சேகரித்த ரஷியக் குழு அந்தத் துண்டுகளைப் பலகாலம் பத்திரமாக வைத்திருந்தனர்.
மாஸ்கோவில் ரஷிய அரசு காப்பகத்தில் (The Russian State Archive in Moscow) அவை பாதுகாப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டில் அவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.
ஹிஸ்டரி சேனல் ஒன்று கனெக்டிகட் புதைபொருள் ஆராய்ச்சியாளரான நிக் பெல்லண்டோனி (Nick Bellantoni) என்பவரை மண்டை ஓட்டையும் ஹிட்லர் அறையில் இருந்த சோபாவில் சிந்தி இருந்த ரத்தத்துளிகளையும் ஆராயுமாறு கேட்டுக் கொண்டது.
அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த அவர் அது ஹிட்லரின் உடலியல் ரீதியிலான ஆய்வுடன் ஒத்துப் போகவில்லை என்றார்.
அது ஒரு பெண்ணின் மண்டை ஓடாக இருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
லிண்டா ஸ்ட்ராஸ்பா (Linda Strausbaugh) என்ற ஒரு பெண்மணி மாலிகுலர் அண்ட் செல் பயாலஜி துறையில் பேராசிரியை. அவர் தனது டிஎன்ஏ ஆய்வு மூலம் அது 20 முதல் 40 வயது வரையிலான ஒரு பெண்மணியுடையது என்று உறுதிப்படுத்தினார்.
இவா பிரானுடையதாக அது இருக்க முடியாது. ஏனெனில் அவர் சயனைடு அருந்தியே தற்கொலை செய்து கொண்டார்.
ரஷிய அதிகாரிகள் ஹிட்லரை சோவியத் ராணுவம் தனது பரேட் கிரவுண்டில் கிழக்கு ஜெர்மனியில் மாக்டெபர்க் நகரில் (Magdeburg) புதைத்தது என்றனர். 1970ஆம் ஆண்டு அந்த எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு, சாம்பலானது நகரின் சாக்கடையில் கொட்டப்பட்டது என்றனர்.
ஆக இப்படி தலையில் எப்படி புல்லட் ஓட்டை என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது; ரஷிய அதிகாரிகள் சொல்வது உண்மை இல்லை என்பதும், அவர்கள் காட்டும் மண்டை ஓடு ஹிட்லருடையது அல்ல என்பதும் உலகிற்குத் தெரிய வந்தது.
ஹிட்லர் வாழும் போது இருந்த மர்மம் அவர் இறந்த பிறகும் கூட அவருடன் கூடவே இப்படித் தொடர்ந்தது!