QUIZ திருச்சிப் பத்து QUIZ (Post No.12,312)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,312

Date uploaded in London – –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ No.48

1.திருச்சியில் மிக உயரமான இடத்தில் இருக்கும் கடவுள் யார் ?

XXXXX

2.திருச்சியின் ஒரு பகுதியான ஸ்ரீரங்கத்தில் பெருமாள்  கோபுர உயரம் என்ன?

XXXXX

3.பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று திருச்சியில் இருக்கிறது . அது எது?

XXXXX

4.திருச்சி வட்டாரத்தில் பழங்கால சோழர் தலை நகரம் இருக்கிறது. அதன் பெயர் என்ன?

XXXXX

5.மலை மீது ஏறி உச்சிபிள்ளையாரைக் காண்பதற்கு முன்னர் வேறு இரண்டு கோவில்கள் வழியாகச் செல்லவேண்டும். அவை யாவை ?

XXXXX

6. திருச்சியில் மூன்று பெரிய மத்திய அரசு ஆலைகள் உள்ளன. அவை யாவை ?

XXXX

7.திருச்சி என்ற பெயர் எப்படி என்று ஏற்பட்டது?

XXXXXX

8.திருச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன ?

XXXXX

9.திருச்சி மலைக்கோட்டையில் உள்ள குகை யாருடையது ?

XXXXX

10.திருச்சி பகுதியில் காளியம்மன் பக்கதர்களுக்கு  இரண்டு முக்கியக்கோவில்கள் உள . அவை யாவை ?

XXXXXXX

விடைகள்

1.உச்சிப்  பிள்ளையார் கோவில்.

மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.

மலையிலிருந்து காவிரி ஆற்றையும் கோவில்களையும் காணலாம்

XXXX

2.ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின்  ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது ; மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கின்றன .

XXXXX

3.திருவானைக்கா என்னும் ஜம்புகேஸ்வரம் திருக்கோவில். அங்கு சிவ பெருமான் அப்பு என்ற நீர் வடிவத்தில் இருக்கிறார் ; ஆப : என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம் அப்பு.. அம்மன் பெயர் அகிலாண்டேஸ்வரி

XXXXX

4.கரிகால் சோழன் ஆண்ட உறையூர்

XXXXX

5.மாணிக்க விநாயகர் மலை அடிவாரத்தில் உள்ளார். அவரை தரிசித்து மேலே சென்றால் தாயுயுமானவர் சிவன் கோவில் இருக்கிறது. இரண்டு தரிசனத்துக்குப்  பின்னர் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையாரை தரிசிக்கலாம்.

XXXXX

6.பாரத் கனரக மின்சாதன தொழிற்சாலை (BHEL- BHARAT HEAVY ELECTRICALS LIMITED)

துப்பாக்கித் தொழிற்சாலை (Ordnance Factory Tiruchirappalli (OFT)

பொன்மலையில் உள்ள ரயில்வண்டி பணிமனை The Golden Rock Railway Workshop,  Ponmalai,.)

XXXXX

7.திருச்சி என்ற பெயர் ஏற்பட மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன

1.திரி சிரன் என்ற மூன்று தன்மையுள்ள அரக்கன் வழிபட்ட தலம்

2.சிரா என்ற சமண முனிவர் தவம் செய்த குகை உள்ள இடம்

3. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: “புனித-பாறை-ஊர்)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

XXXXX

8.பாரதிதாசன் பல்கலைக்கழகம் Bharathidasan University

XXXXX

9.திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு போகும் வழியில் இடது புறமாக குகை உள்ளது மலையை குடைந்து உண்டாக்கிய இந்த குகை கோயில்.

பல்லவர், பாண்டியர், சோழர் என முப்பெரும் அரச மரபுகளின் கல்வெட்டுக்களையும் குடைவரை அமைப்புக்கு உள்ளேயே பெற்றிருக்கும் ஒரே தமிழ்நாட்டுக்கு குடைவரை கோயில் இது. பல்லவர் கால கிரந்த எழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன ; இது மகேந்திர பல்லவன் காலத்தில் குடையப்பட்டது

XXXXX

10.வெக்காளி அம்மன் கோவில் ,உறையூர் (5. கி.மீ  தொலைவு)

சமயபுரம் மாரி  அம்மன் கோவில் (15. கி.மீ  தொலைவு)

—SUBHAM—-

TAGS- திருச்சி, மலைக்கோட்டை, பிள்ளையார், தாயுமானவர், ஸ்ரீ ரங்கம் , திருவானைக்கா

நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்!-1(Post No.12,311)



 
WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,311

Date uploaded in London –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஜுலை 20ஆம் நாள் உலக சந்திர தினம்! இதையொட்டி 20-3-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை (இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது)

நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்!

(முதல் பகுதி)

ச.நாகராஜன்

உலக சந்திர தினம்!

உலகெங்கும் ஜூலை மாதம் இருபதாம் நாள் உலக சந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐக்கியநாடுகளின் பொதுச்சபை இந்த நாளை உலக சந்திர தினமாகக் கொண்டாடுவதற்கான தீர்மானத்தை 2021இல் நிறைவேற்றியது.

சந்திரனால் ஈர்க்கப்படாத மனிதரே இல்லை. காலம் காலமாகக் குழந்தைகளுக்குச் சந்திரனைச் சுட்டிக் காட்டி அம்புலிமாமா வா வா என்று அழைத்து வந்திருக்கிறோம். காதலன் காதலியைப் பார்த்து, ‘வதனமே சந்திர பிம்பமோ’ என்று சந்திரன் போன்ற முகம் என்று வர்ணித்து மகிழ்கிறான்.

காலம் காலமாக இருந்து வரும் இந்தக் கவர்ச்சியினால் விண்வெளி யுகத்தில் மனிதன் சந்திரனில் காலடி பதிக்கத் திட்டமிட்டான்; வெற்றியும் பெற்றான். இனி மிகப் பெரும் வெற்றிகளையும் பெறப் போகிறான். ஆகவே தான் இந்தக் கொண்டாட்டம்.

சந்திர மனிதன்!

உலக சந்திர தினமாக ஜூலை 20 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது?

இந்த நாளில் தான் 1969ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மனித குலத்தின் பிரதிநிதியாக முதன் முதலில் சந்திரனில் தன் காலடித் தடத்தைப் பதித்தார்.

அமெரிக்காவின் பெருமுயற்சியின் காரணமாக சந்திரனுக்கு விண்கலத்தில் பயணித்து அங்கு இறங்கி தன் காலடியைப் பதித்த அவர், “மனிதனுக்கு அது ஒரு சிறிய தடம். மனிதகுலத்திற்கு பிரம்மாண்டமான தாவல்” என்று குறிப்பிட்டார். மொத்த உலகமும் அவரது இந்தக் கூற்றை ஆமோதித்தது.

ஓஹையோவில் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பிறந்த ஆர்ம்ஸ்ட்ராங் வானில் பறப்பதில் தீரா ஆசை கொண்டார். தன் வீட்டிலேயே ஒரு சிறிய விண்ட் டனலை அமைத்து விமானங்களில் சிறிய மாதிரிகளைச் செய்து பார்ப்பது அவரது பொழுது போக்கு. படிப்பை முடித்த பின்னர் விமான நிறுவனத்தில் சேர்ந்த அவர் இரண்டு லட்சத்தி ஏழாயிரத்து ஐநூறு அடி உயரம் பறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 1962இல் விண்வெளி வீரர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட அவர் 1969ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி சந்திரனை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். உலக சாதனையை நிகழ்த்தினார்.

எதற்காக சந்திரனுக்குப் பயணம்?

எதற்காகப் பெரும் பொருட்செலவில் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்?

மனித குலம் நசித்து விடாமல் நீடித்து இருக்க வேண்டும் என்ற அக்கறையினால் தான்!

நாளுக்கு நாள் பெருகி வரும் ஜனத்தொகை, பூமியின் ஆதார வளங்களான நிலம், நீர், காற்று ஆகியவற்றை அசுத்தப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தல், ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் ஏற்படும் போரினால் மனித குல நாசம் ஆகியவை போன்ற  காரணங்களினால் மனிதன் இன்னொரு கிரகத்தில் சென்று வாழ்வதற்கான முயற்சி தேவை என்று ஆகப் பெரும் விஞ்ஞானிகள் கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

பிரபல திரைக்கதை வசனகர்த்தாவான சார்லஸ் ப்ரோஸர், அடுத்த நூற்றாண்டு முடிவதற்குள் மனித குலம் இருக்குமா என்று கவலைப்பட்டு ‘கையாசெலின் – சந்திரனுக்குச் சென்று குடியேறி பூமியைக் காப்போம்’ என்ற படத்தை எடுத்தார். உலகெங்கும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் விண்வெளிக்குச் சென்று குடியேறினாலொழிய இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கூட மனித குலம் தாக்குப் பிடிக்காது என்றார். ஆனால் இதை மறுத்த சார்லஸ் ப்ரோஸர் ஆயிரம் ஆண்டுகள் என்பது மிக மிக அதிகப்படியான காலம். உடனடியாக நாம் விண்வெளியில் குடியேற வேண்டும்” என்றார்.

விண்வெளியிலும் சென்று ஆதிக்க மனப்பான்மையைக் கொள்ளக் கூடாது என்று விண்வெளி உடன்பாடு ஒன்று சர்வதேச அளவில் ஒப்பந்தமாகி உள்ளது. இதை ஏராளமான நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

இதன் படி ஏராளமான பாதுகாப்பு விதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நான்கு நாடுகளில் ஒன்று இந்தியா!

சந்திரன் மீது கண்ணைப் பதித்து ஆக்கபூர்வமான வெற்றிகளைப் பெற்றுவரும் நாடுகள் நான்கு. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியவையே அந்த நாடுகள்.

முதலில் விண்வெளிப் பயணம் ஒன்றை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ரஷியா. அதைத் தொடர்ந்து மிகப் பெரும் அளவில் விண்வெளி ஆய்வையும் பயணத்தையும் மேற்கொண்டு வெற்றி கண்டது அமெரிக்கா. சீனா தனது உள்ளார்ந்த ஆசையால் விண்கலங்களைத் தனியே அனுப்பி வெற்றிகளைப் பெற்றது.

இந்த விண்வெளிக் களத்தில் இறங்கிய இந்தியா சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய இரு கலங்களை சந்திரனை ஆராய அனுப்பியது.

2008 அக்டோபர் 22ஆம் தேதி செலுத்தப்பட்ட சந்திரயான் 1 மற்ற நாடுகள் கண்டுபிடிக்காத ஒரு மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தது. சந்திரனில் நீர் அணுத்துகள்கள் உள்ளன என்பதை முதன் முதலாக இந்திய விஞ்ஞானிகளே கண்டுபிடித்து உறுதிப்படுத்தினர்.

சந்திரயான் 2 துரதிர்ஷ்டவசமாக எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இப்போது 2023இல் சந்திரயான்- 3 ஜூலை 14ஆம் நாள் வெற்றிகரமாக இஸ்ரோ தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

40 நாட்கள் பயணப்பட்டு சந்திரனில் மெதுவாகத் தரை இறங்கும் சந்திரயான் -3 அரிய பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சொல்லும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வெற்றியே பெறுவோம்.

*** தொடரும்

Shiva and Ganesh in Burma (Post No.12,310)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,310

Date uploaded in London – –  22 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Picture Title

Shwesandaw Pagoda – Bagan ; Mahaganapati Temple= Maha pienne Temple

The corners of the pagoda’s five terraces once were adorned with statues of Ganesh, the Hindu God with the elephant head, since several Hindu deities were worshipped in Bagan before the arrival of Buddhism.

xxxx

In the past two weeks , I dealt with Sanskrit inscriptions in Burma and Brahma in Burma now called Myanmar. Though Hinduism entered the country about 1800 years ago, it went out of practise in course of time. Unlike Buddhism , Islam and Christianity, Hinduism is a non-preaching religion. They don’t preach and convert people of other religions, because they believe that other religions also lead to god . But the influence of Hinduism is seen in all walks of life in South Asian countries. Even astrologers are seen today on the road pavements giving predictions for the believers.

Xxxx

Ganesa = Maha pienne

Statues of Ganesh are found in colonies of businessmen who migrated from India.

The Rangoon Museum has two images of Ganesh. They have the usual elephant head, human body with a bulging belly.  He is represented as if dancing on his two slim legs. He has six hands holding , noose and Chakra  , trident, fruit etc.

Shwesandaw pagoda in Pagan also has got fragments of images of Ganesh; but a most interesting Ganesh was discovered in the ruins of a temple in Pagan . He is seated in Padmasana posture. Of the four hands, three are holding Sankha/conch, trisula/trident, aksha mala/rosary and the fourth hand is placed under the belly with a vilva or matulinga fruit. Merchants from India sailed and came to Burma and so aquatic animals are carved in the pedestal.

From Pagan we have two more Ganesh figures on votive tablets. Ganesa slowly carved out for himself a  place and still worshipped by Burmese community with a new name Maha pienne , probably the corrupted form of Maha Vinayak or Maha  Ganapati .

Xxxx

Lord Shiva

We see more South Indian influence in ancient Burma than North Indian. The script is similar to Pallava script of Kanchipuram. The Talaing kings are Telengana people. We already know that Tri Linga Kshetra became Telengana and they migrated to North India and called themselves Dhillons.; in Burma they called themselves Talaings (Telugu People).

Hindus migrated to Campa/ Vietnam first  and took their favourite god Shiva. We see lord Shiva in two group of temples in Myson and Ponagara. Shiva is mentioned in inscriptions as Mahesvara ,Mahadeva and many other names  . He was worshipped by the Khmers in Linga form as well .

Xxxx

In Burma

Temples dedicated to shiva existed in Thaton and Pagan. Now there are no ancient temples but images and coins with shiva are found. In Arakan area,  a  Saivite dynasty ruled for long. This is the border area between India and Myanmar; coins with the symbols of bull/nandi, trident/ trisula and shiva are found. The kings had surname Candra . those names are found in Nagari inscriptions at the Shittaung pagoda, Mrohaung . they belong to ninth or tenth century CE. Coins are dated between 4th and 10th century CE.

Coins with Saivite symbols have kings’ names such as Vamma candra, Priti candra, Vira candra. This is the proof for the Saivite rule from 4th century in Arkan area of Burma.

Burmese text Mahayaazavin mentioned that six gods helped Vishnu in founding the city Hmawza or old Prome . They are Parameswara, Candi/Durga, Gavampati, Indra, Naga and Garuda.

Xxx

Shiva Idols

Government Museum in Rangoon keeps some stone slabs brought from Shwezayan Pagoda of Thaton. Since they are out of place in the existing Pagoda, scholars believe that there existed a Hindu temple in Thaton. The figures on the slabs show Shiva, Parvati, Bull, Mahisasuramardhani , hanging snake etc. This looks similar to Shiva- Parvati image in Ellora caves in India.

Xxxxx

Ananda Museum at Pagan has another image of Shiva. It is about four feet high. It was removed from Nat hlaung Kyaung. From the same place another slab was taken to Germany and placed in Berlin Museum.

The statue stands on a lotus pedestal. The standing figure has four hands with trident, Vajra, sword and mace/gada. But sword and mace are rarely associated with Shiva. Jatamukuta points out to Shiva.

Recently discovered Saivite image is also housed in Ananda Museum at Pagan. It is a large piece of stone sculpture representing a god  seated in raja lila attitude on a double lotus pedestal. Badly corroded statue has four hands with Trisula etc. Under the foot a male figure is seen. It is considered as apasmara purusa  seen only in South Indian images.

To summarise the discoveries, no Linga is found in Burma, no Shiva temple is discovered, and no Shiva worship is practised in Myanmar.

( I have not included the temples erected by the labourers brought by the British a century or two ago. I am dealing only with ancient Burma. Above details are summarised from the book CULTURAL HERITAGE OF BURMA by Dr.Krishna Murari, year 1985)

—subham—

Tags- Shiva, Burma, Myanmar, Arkan, Shiva coins, Candra kings, Ganesh, Maha pienne, Shwesandaw Pagoda

Hinduism Crossword 22 7 2023 (Post no.12,309)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,309

Date uploaded in London – –  22 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find out 17  words that occurs in Hindu scriptures or literature; colour coding will help you to some extent.

ACROSS

1. an emperor, universal monarch, sovereign of the world, a ruler whose dominions extend as far as the ocean in Sanskrit

6. a Sanskrit poetician contemporary of Daṇḍin. He is noted for writing a work called Kavyalankara .

7.vehicles of Gods like Garuda, Mayura, Rishabha;

8. refers to that particular sign of the zodiac which is cut by the eastern horizon at the time of one’s birth; also auspicious moment ;

9.at least seven kings of Kampuchea/ Cambodia had this name;

10.water Lilly in Sanskrit; also common feminine name ;

11.Hunter who killed Lord Krishna ;

12.New Year for Telugus, Kannadigas;

13.an appendix; addition; even Rig Veda has this ;

15.Biggest Buddhist stupa in Java, Indonesia;

16.Half Shiva, half Parvati form

xxxxxx

DOWN

2. “gesture of fearlessness” is a gesture of reassurance and safety shown with hand or palm, which dispels fear and accords divine protection and bliss in Hinduism, Buddhism and other Indian religions ;

3.Indian gooseberry tree; Malacca got this name from this tree;

4.a drama written by Harsha about Udayana and this princess ;

5. a 7th century Chinese Buddhist pilgrim who has left behind an account of his travels to India. ; he came after  fa-hien and hiuen-tsang, 

7. name for winged horse in the Vedas; not Asva;

14.Snake demon killed by Indra in the Vedas.

1 2  3  4 5
  6        
7          
     8     
9          
           
10      11   
  12        
      13   14
15          
  16        

ANSWERS 

ACROSS

1.Chakravarti; 6.Bhamaha; 7.Vahana; 8.Lagna ; 9.Jayavarman; 10.Kumuda ;11.Jara ;12.Ugadhi ;13.Khila ;15.Borobudhur; 16.Ardhanari

xxxxxx

DOWN

2.Abhayamudra ; 3.Amalaka; 4.Ratnavali ; 5.Itsing

7.Vaji; 14.Ahi

C1HA2KRA3VAR4TI 5
  B6HAMAHA T
V7AHANA UT S
A A  L8AGNAI
J9AYAVARMANN
I A  K  V G
K10UMUDA J11ARA
  U12GADHIL  
  D   K13HILA14
B15OROBUDHURH
  A16RDHANARI

—subham—

Tags- Hinduism , crossword, 2272023

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 10 (Post No.12,308)

Somanathapura Temple, Karnataka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,308

Date uploaded in London – –  22 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

51.ஆண்டாள் கண் ஒளிரும் எடத்தலை கோவில் Hedathale Lakshmikantha Swami temple

நஞ்சன்  கூடு  தாலுகாவில் உள்ள லெட்சுமிகாந்த கோவிலில் இரண்டு அதிசயங்கள் உள்ளன . இடது தலை என்பது ஊரின்  சரியான பெயர்.. இங்கு  லெட்சுமிகாந்த சுவாமி கோவில் உளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹொய்சாளர் கால கோவில். இது  த்ரிகூட கூட கோவில்; அதாவது 3 சந்நிதிகள் இருக்கும்;  அவைகளை இணைக்கும் பொது மண்டபமும் இருக்கும் . இந்தக் கோவிலில் லெட்சுமிகாந்த சுவாமிக்கு அருகில் லெட்சுமிநரசிம்ம  சுவாமி, வேணுகோபால சுவாமிகளும் இரண்டு கர்ப்பக் கிரகங்களில் இருக்கின்றனர்.

இங்குள்ள அதிசயம் என்னவென்றால் ஹதினாறு முக சாவடி ஆகும். ஹதினாறு என்றால் தமிழில் 16  என்று பொருள். இந்த மண்டபம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுளது . இரண்டாம் வீர வல்லாளன் 1187ல் கட்டிய கோவில். அவர் காலத்தில் பீம தண்ட நாயக ஒரு பாளையக்காரர் .

அவருக்கு  (பாளையக்காரருக்கு) 16 பெண்களாம்.. மாமியார்கள் , மாப்பிள்ளைகளை நேரடியாகப்  பார்க்கக்கூடாது என்பதால் 16 முக மண்டபத்தைக் கட்டினார் . 16 ஜோடிகள் அமரும்போது   பாளையக்காரரின் மனைவி– அதாவது மாமியார் , 16 பெண்-மாப்பிள்ளைகளைக் காண முடியாது. இதற்காக அற்புதமாக டிசைன் செய்யப்பட்டது இந்த ஹதினாரூ/ பதினாறு முக சாவடி/ மண்டபம் !!

இந்தக் கோவிலில் இன்னும் ஒரு அதிசயமும் உண்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கும் இங்கே கர்ப்பக்கிரகம் உள்ளது. அர்ச்சகர் தீவாராதனை காட்டும்போது ஆண்டாளின் கண்கள் பளபளக்கும் . அப் போது பக்தரை  ஆண்டாள் பார்ப்பது போலத்  தோன்றும் !

எடத்தலை , மைசூரு நகரிலிருந்து 40 கி.மீ .

XXXX

52. சோம்நாத்பூர் கோவில் Chennakeshava Temple, Somanathapura

மைசூரு நகரிலிருந்து 33 கி.மீ .தொலைவில் கட்டிடக் கலை சிறப்புமிக்க சோம்நாத்பூர் கோவில் அமைந்துள்ளது.

மூன்றாம் நரசிம்மனின் தண்ட நாயக்க சோமநாதனால் 1258 ஆம் ஆண்டு கட்டப்பட்டது  இக்கோவில் .

சுவர்கள் முழுக்க ராமாயண , மஹாபாரத , பாகவதக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன . கேசவர், ஜனார்த்தனர் , வேணு கோபாலர் சந்நிதிகள் சபா மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன ; நிறைய கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது . கோவிலின் கூ ரைகளில் கூட பல வித மலர் வடிவங்களைக் காணலாம்

இங்கு சிவனும் இருப்பதால் சோமநாத என்ற பெயர் ஏற்பட்டது

ஹொய்சாளர்கள் கட்டிடக்கலை மன்னர்கள்; 1500 சமணர் கோவில் , இந்துக் கோவில்களைக் கட்டினார்கள் . அலாவுதீன் கில்ஜியின் படைத்ததலைவன் மாலிக்காபூர். தென் இந்தியா  முழுதுமுள்ள கோவில்களைத் தாக்கி தங்கத்தை டன் கணக்கில் கொள்ளையடித்துச் சென்றான் இந்தக் கோவிலையும் தாக்கிச்  சேதப்படுத்தினான். அவன் அசுரர்களின் மறு  அவதாரம். ;பின்னர் துலுக்க ஆட்சிக்கு சாவு மணி அடித்த விஜய நகரப் பேரரசர்கள் பல திருப்பணிகளைச் செய்து இந்து மதத்தைக் காப்பாற்றினர் .கோவிலில் உள்ள புராணக் காட்சிகளின் பட்டியல் மிக நீண்டது. ஒவ்வொரு காட்சியையும் வருணிக்க ஒரு புராணக் கதையைச் சொல்லவேண்டிவரும் .

XXXX

53.தலக்காடு பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் Talakkad Temples

மைசூரு நகரிலிருந்து 28 மைல் தொலைவில் இருக்கும் தலக்காடில் முப்பது கோவில்கள் இருக்கின்றன . அவைகளில் பஞ்ச லிங்கேஸ்வரர் கோவில்கள் முக்கியமானவை; .ஸ்ரீ வைத்யனாதேஸ்வரர் , மருளேஸ்வர் பாதாளேஸ்வர் , அர்கேஸ்வர், மல்லிகார்ஜுன கோவில்கள்  ஆகியன இவற்றில் அடக்கம்

வைத்யநாதேஸ்வரர் கோவிலில் நிறைய சிற்பங்களை க் காணலாம்

தலக் காடு சாபங்கள்

ஸ்ரீங்கப்பட்டிணத்தில் இருந்த விஜயநகர பிரதிநிதியின் பெயர்  திருமலை ராஜா;   அவர் ஒரு நோய் காரணமாக இங்கே வைத்யநாதரை வழிபடவந்தபோது, இறுதிக்கா லத்தில் அவர் மனைவி அலமேலு அம்மாள் இங்கு வந்தார். . அவர் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க மைசூரு மஹாராஜா அவரை விரட்டிச் சென்றதாகவும் ஆனால்  அந்தப்  பெண்மணி தனது நகைகளை காவிரி நதியில் வீசி எறிந்துவிட்டு எதிரில் இருந்த மாலங்கியில் விழுந்து இறந்ததாகவும் சொல்லப்படுகிறது அப்போது அவர் 3 சாபங்களை இட்டார்.

தலக்காடு, பாலைவனம் ஆகட்டும் ;

மாலங்கி சுழல் நிறைந்ததாகட்டும் ;

மைசூரு மஹாராஜா வம்சம் வாரிசு இல்லாமல் போகட்டும்.

Talkādu Maralaāgi,

Mālingi maduvaāgi,

Mysuru dhorege makkalagade hōgali!

(ತಲಕಾಡು ಮರಳಾಗಿ; ಮಾಲಿಂಗಿ ಮಡುವಾಗಿ, ಮೈಸೂರು ದೊರೆಗೆ ಮಕ್ಕಳಾಗದೆ ಹೋಗಲಿ

இது ஓரளவுக்கு உண்மையே; மணலில் புதைந்திருந்த இரண்டு கோவில்களை மணலை அகற்றி வெளியே எடுக்க வேண்டியதாயிற்று. இவை எல்லாம் 1650 ஆம் அண்டை ஒட்டி நடந்த நிகழ்ச்சிகள்.

Xxxxx

54.நஞ்சுண்டேஸ்வரர் கோவில் Nanjundeshwara Temple (also called Srikanteshwara Temple)

Sri Nanjundeswarar Temple

காவிரியில் கலக்கும் கபில நதியின் கரையில் , நஞ்சன்கூடில் அமைந்த இக்கோவிலை தட்சிணப் பிரயாகை என்று அழைப்பர்

120 அடி உயரமுள்ள ஒன்பது நிலைக் கோபுரத்தை மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரின் மனைவி தேவராஜ அம்மணி கட்டினார்.. பாற்கடலை கடை ந்தபோது  தோன்றிய விஷத்தை சிவன் அருந்தியதால் சிவனுக்கு நஞ்சுண்ட சுண்டன் , நீல கண்டன், ஸ்ரீகண்டன் என்ற பெயர்கள் உண்டு. அருகில் பரசுராமர் கோவிலும் இருக்கிறது ; பரசுராமர் இங்கு வந்து சிவனை வழிபட்டதாக ஐதீகம் .

திப்புசுல்தான் நன்கொடை

திப்பு சுல்தானின் யானை குருடனாவுடன் , அவனது அமைச்சர் பூர்ணய்யாவின் ஆலோசனைப்படி யானையை  நஞ்சன்கூடு  கோவிலுக்கு அனுப்பி 48 நாட்களுக்கு சில பூஜைகளைச் செய்தவுடன், யானைக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்தது. இதற்கு நன்றி செலுத்தும் முகத்தான், கோவிலுக்கு திப்பு சுல்தான் மரகத லிங்கம் ஒன்றை காணிக்கையாக அளித்தான் . சிவ பெருமானை ஹகீம் (வைத்தியர் )நஞ்சுண்டன் என்று அழைத்தான்.

To be continued………………………………………….

tags  – ஆண்டாள் கண், நஞ்சுண்டேஸ்வரர் , நஞ்சன்கூடு  , திப்பு சுல்தான், தலகாடு சாபங்கள், சோமநாதபுரம் , 16 முக மண்டபம், ஹதினாறு 

நீதி த்விசஷ்டிகா (Post No.12,307)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,307

Date uploaded in London –  22 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நீதி த்விசஷ்டிகா

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 3

ச.நாகராஜன்

‘நீதி த்விசஷ்டிகா’ சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள அழகிய நீதி நூல்.

இதை இயற்றியவர் சுந்தரபாண்டியர்.

சுந்தரபாண்டியன் என்ற பெயர் பாண்டிய மன்னர்களுக்கு வழக்கமாக சூட்டப்பட்ட ஒரு பெயர். ஆகவே இந்த நூலை இயற்றிய சுந்தரபாண்டியரது காலத்தை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

என்றாலும் கூட கி.பி.600 இல் ஜனாஸ்ரயா என்ற நூலில் இதிலிருந்து மேற்கோள்கள் காண்பிக்கப்பட்டிருப்பதால் இது ஆயிரத்திநானூறு வருடங்களுக்கு முற்பட்ட நூல் என்று உறுதிபடச் சொல்லலாம்.

கி.பி.750 ஆம் ஆண்டைச் சேர்ந்த சின்னமனூர் செப்பேடு ஒன்று சுந்தரபாண்டியன் சகல சாஸ்திர விற்பன்னன் என்று கூறுகிறது. அரிகேசரி வர்மனுக்கு மூத்தவர் இவர் என்பதால் இவர் நிச்சயமாக கி.பி, 600 அல்லது கி.பி.650 இல் வாழ்ந்தவர் என்று சொல்லலாம்.

ஆதிசங்கரரும் தனது பிரம்மசூத்ரத்தில் சமன்வயாதிகரணத்தில் சுந்தர பாண்டியரது மூன்று செய்யுள்களை மேற்கோளாகக் காட்டுகிறார்.

இப்படி இன்னும் ஏராளமான நூல்களில் சுந்தரபாண்டியரது அழகிய நீதி ஸ்லோகங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

இப்போது நமக்குக் கிடைத்துள்ள ஓலைச் சுவடிகளில் இது 120 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது.

என்றாலும் கூட மூல நூலில் 100 ஸ்லோகங்கள் மட்டுமே இருந்திருக்கக்கூடும் என்றும் 20 அதிகப்படி ஸ்லோகங்கள் காலப்போக்கில் ஏற்பட்ட இடைச்செருகல்களாக இருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் ஆர்யா சந்தத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகும்.

மனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கும் பல்வேறு நிலைகளுக்கும் சுந்தரபாண்டியர் வாழ்வாங்கு வாழும் அற நெறிகளைக் கூறுகிறார்.

பேச்சில் அடக்கம், நளினம், சத்யம், இனிமை இருக்க வேண்டும் என்பது அவரது அறிவுரை.

நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது என்றும் நல்ல நட்பை யாராலும் சரியாக விவரிக்க முடியாது என்றும் கூறும் இவர் நட்பைப் பற்றி மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.

வாழ்க்கைக்கு ஒரு பெரும் இடையூறு ஏழ்மை என்று கூறும் இவர் செல்வத்தின் பண்பைப் பற்றியும் அழகுறக் கூறுகிறார். ஆனால் செல்வத்தை விட ஞானம் மிகச் சிறந்தது என்று விளக்குகிறார் சுந்தரபாண்டியர்.

தானம் செய், பலனை எதிர்பார்க்காதே என்ற அறவுரையை நம் முன் வைக்கும் இவர் பல்வேறு பொருள்களைப் பற்றி மனிதனுக்குப் பயன்படும் விதத்தில் எடுத்துக் கூறுகிறார்.

இவரது நீதிகளைப் படிக்கும் போது தமிழில் உள்ள திருக்குறள் ஞாபகத்திற்கு வரும். தமிழ் நூலான மூதுரையில் உள்ள பல நீதிகளை இவர் சொல்கிறார்.

அதே போல கவிஞர்களான காளிதாஸர், பர்த்ருஹரி ஆகியோரின் பல செய்யுள்களையும் இவரது ஸ்லோகங்களுடன் ஒப்பு நோக்கி மகிழ முடியும்.

ஆரோக்கியம், வித்வதா, நல்ல நண்பர்களின் சேர்க்கை, நல்ல குலத்தில் பிறப்பு, யாரையும் நம்பி வாழாமல் ஸ்வாதீன வாழ்க்கை ஆகியவையே ஒரு மனிதனுக்கான உண்மையான செல்வம். அவனிடத்தில் லோகாயத ரீதியிலான செல்வம் இல்லாவிட்டாலும் இவையே உண்மையான செல்வங்கள் என்று உறுதிபட இவர் அறிவிக்கிறார். (‘ஆரோக்யம், வித்வத்தா சஜ்ஜனமைத்ரீ மஹாகுலே ஜன்ம’ என்று தொடங்கும் ஸ்லோகம் காண்க)

யாரெல்லாம் மற்றவர்களைப் பற்றி தீங்கு பேசாமல் ஊமையாக இருக்கிறார்களோ,

யாரெல்லாம் மற்றவர்களுடைய மனைவிமாரைப் பார்ப்பதில் குருடர்களாக இருக்கிறார்களோ,

யாரெல்லாம் மற்றவர்களுடைய இரகசியங்களைக் கேட்பதில் செவிடர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தெய்வங்களுக்குச் சமமானவர்கள் என்கிறார் இவர். (பரபரிவாதே மூகா: பரதாரநிரீக்ஷணேஷு ஜாத்யந்தா:’ என்று தொடங்கும் ஸ்லோகம் காண்க)

இப்படி 120 ஸ்லோகங்கள் கூறும் அறிவுரைகள் அறவுரைகளே.

டாக்டர் S.ஜெயஶ்ரீ இந்த நூலைத் திறம்பட ஆராய்ந்து நீதி த்விஷ்டிகா என்ற நூலை ஆங்கிலத்தில் படைத்துள்ளார். 1984ஆம் ஆண்டு அடையார் லைப்ரரி ரிஸர்ச் சென்டர் இதை வெளியிட்டுள்ளது.

சுந்தரபாண்டியரின் நீதி த்விஷ்டிகா காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த காமகோடி ப்ரதீபம் மாத இதழிலும் தொடராக தமிழில் அர்த்தத்துடன் வெளியிடப்பட்டது.

இதை அன்பர்கள் அனைவரும் ஒரு முறையேனும் படித்தால் அது வாழ்க்கையை வளம் படச் செய்யும் சிறந்த வழியை மேற்கொண்டதாக ஆகும்!

***

Brahma in Burma (Post No.12,306)

Brahma in  Nanapaya Temple, Burma

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,306

Date uploaded in London – –  21 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

The name Burma is the corrupted form of Brahmadesa; scholars agree that Burma is changed in Burmese language to Myanmar. M=B or B=M change is universal; Hindus know that Mumbai was changed into Bombay by the British. In Tamil also we see M=B changes in Bandar= Mandi; Panini himself has given Madra= Badra desa example 2700 years ago.

People used to say that Brahma lied to Shiva and so Shiva cursed that there wont be any temple for him. But we see Brahma temples in many places including Pushkar in Rajasthan. In Tiruppatur near Trichy is Brahmapureeswarar, where a huge Brahma statue is worshipped by thousands of Hindus. More crowd is seen in Brahma’s shrine than  main deity Shiva. Almost all Shiva temples in Tamil Nadu have a shrine or statue for Brahma.

In the Guru sloka/hymn also first comes Gurur Brahma; this is to show that he is not relegated to back position. But his temples are very few.

Xxxx

Brahma in Prambhanan, Indonesia

Six Brahmas in Burma

Brahma is shown with Shiva and Vishnu in the Ananta Sayana relief in Thaton and Hmawza.

Two Brahma statues are in Rangoon (now Yangoon) museum and Pagan (now Bagan) museum.

Another Brahma figure can be seen in the pillars of Manuha Temple in Pagan.

Broken images of Brahma were found in two more places.

The Rangoon Museum Brahma is carved in greyish soapstone. He is in Padmasana with three heads and folded hands (Fourth head is behind). He is with matted lock of hair beautifully dressed in the Jata mukuta style crowned over with a floral ornament.

Though Pagan museum Brahma is similar to this, there is a gap of two centuries between them. This one is a product of Indian artist similar to late Gupta period, not later than 10th century CE.

Xxxx

Nanpaya Temple in Pagan


Brahma in Cleveland Museum, U S A

At Burma’s Nan-hpaya Temple in Pagan, among the finest carvings in the entire temple are a set of four bas-relief panels of Lord Brahma. They appear on the inner sanctum walls, facing the presiding deity there. Carved from single stone blocks rather than a slab, the blocks are interlocked to form the panel, reminiscent of Java or Cambodian sculptures

This temple was the residential house of the defeated king Manuha. He is a Talaing. IT IS THE CORRUPTED FORM OF TELUGU’S TELENGANA.

Kanchi Paramacharya (1894-1994) has already shown that Dhillon in North India is a corruption of ‘Tri Linga’ Desa. Tri Linga Desa is changed to Telengana.

They were originally from Telengna area of Andhra Pradesh. King Anawrahta (corrupted form of Anirudhdha) defeated him and imprisoned him in Pagan.

Brahma is seated on lotus flower in Lilaasana posture; he is holding two lotus flowers; hair is arranged in Jatamukuta fashion and one can see his carefully intertwined plaits. Sacred thread is hanging from his left shoulder. Four images are similar. Brahma holding lotus flowers in both hands is very rare.

MY OLD ARTICLES

29 Names of Brahma!

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2014/11/20 › 29-names-o…

20 Nov 2014 — 1.Brahma = Big, Supreme, creator; To breathe is also another meaning. · 2.Atmabhu = self existent · 3.Surajyeshta = elder of the Devas/Deities 

xxxx

Tamil Hindu Encyclopaedia 31–Brahma / பிரம்மா (Post No.11,489)

Post No. 11,489

Date uploaded in London – 30 November 2022          

xxxxx

Why did Hindu Gods lose their Heads? (Post No.4420)

Date: 21 NOVEMBER 2017

xxxxx

பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1422; தேதி 20 நவம்பர், 2014.

xxxxx

பிரம்மாவின் 29 பெயர்கள்!

Research paper written by London Swaminathan
Research article No.1424; Dated 21 November 2014.

—– subham—-

Tags- Brahma in Burma, Myanmar, Nanpaya temple, Telangana, Talaing

ஒன்பது தேச தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2172023(Post No.12,305)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,305

Date uploaded in London – –  21 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒன்பது தேசங்கள்,  பழைய பெயர்களுடன்,  இக்கட்டத்தில் உள்ளன. அவைகளைக் கண்டுபிடியுங்கள். இதில் தீட்டப்பட்ட வண்ணங்கள் ஓரளவுக்கு உதவும்.

.

ம1தேம்கா 2
லாபி3மா4லாத்வீம்
க்ஷ் 5யாபோ
காம்ல6ய 7ம்
ம்ம8ஹாலிங்ம்

விடைகள்

மலேயா, பர்மா, தாய்லாந்து, ஜாவா, பிலிப்பைன்ஸ், மாலத் தீவுகள் லாவோஸ்,கம்போடியா , ஆமலகங்கள் அவற்றின் வேறு பெயர்கள் :–

1.மலய தேசம் Malaysia , 3.பிரம்ம தேசம் Burma= Myanmar , 2.காம்போஜம் Cambodia , 6. லவ Laos ,5. ஷ்யாம Siam= Thailand ,4. மாலா த்வீப Maldives= Mala Dwipa, 7.யவ Java/Indonesia, 8.மஹாலிங்கம் Philipines ,1. மலாக்கா Malacca= Amalakka= Indian Gooseberry Tree country தமிழில் நெல்லிக்காய் மரம் = ஆ/மலக

 —subham—

tags– tamil, CW, 2172023

QUIZ  ரிஷிகள் பத்து QUIZ (Post No.12,304)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,304

Date uploaded in London – –  21 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ No.47

1.எந்த ரிஷியிடம் நிறைய நகைகள் கொண்டு வந்தால்தான் பக்கத்தில் வரலாம் என்று லோபாமுத்ரா உத்தரவு போட்டாள் ?

xxxx

2.எந்த ரிஷிக்கு  கால்களில் கண்கள் இருந்தன ?

xxxx

குந்தி தேவிக்கு தேவர்களையும் அழைக்கவல்ல மந்திரத்தைக் கொடுத்த ரிஷி யார் ?

xxxx

4.கழுவில் ஏற்றப்பட்ட ரிஷி யார் ?

Xxxx

5.ரிஷி என்றால் என்ன பொருள் ?

Xxxx

6.ரிஷிகளின் 7 லட்சணங்கள் என்ன ?

Xxxx

7.பாணினி நூலில் உள்ள சப்த ரிஷிக்கள் , அதே வரிசையில் பிராமணர்களின் தினசரி சந்தியா வந்தனத்தில் வருகிறது? அவர்கள் யார் ?

Xxxxx

8.சங்க இலக்கியம் 2000 ஆண்டுகள் பழமையானது ; அங்கு சப்தரிஷிகள் பற்றிய பாடல் எங்கே வருகிறது ?

xxx

9.எந்த முனிவரின் மனைவியை சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் பல இடங்களில் குறிப்பிடுகின்றன ?

xxxx

10.க்ஷத்ரியனாகப் பிறந்து பிராமணன் ஆகத் தவம் புரிந்து கடைசியில் மூன்றாவது முறை வெற்றி பெற்ற ரிஷி யார்? அவருக்கு பட்டம் கொடுத்தவர் யார்?

10.விசுவாமித்திரர் மூன்றாவது முறை வெற்றி கண்டார். அவருக்கு வசிஷ்டர், பிரம்மரிஷி என்ற பட்டத்தைக் கொடுத்தார் .

Xxxx

விடைகள்

1.அகஸ்திய மகரிஷி ரிஷியிடம் லோபாமுத்ரா உத்தரவு போட்டாள்.

xxx

1.பிருகு முனிவருக்கு காலில் கண் இருந்தது. பின்னர் விஷ்ணுவை உதைத்தபோது அது மறைந்தது .

xxxx

3.துர்வாச மகரிஷி

xxxx

4.ஆணி மாண்டவ்யர் ; சிறு வயதில் அவர் வண்டுகளை பிடித்து முள்ளால் குத்தினார் ; அதனால் பின்னொரு காலத்தில் கழுவில் ஏற்றப்பட்டார் ;  பூர்வ கதை :- அவர் கண்களை மூடி தவம் செய்து கொண்டிருந்தபோது , அரண்மனையிலிருந்து  திருடிய முத்து மாலை , இரத்தின மாலைகளை எல்லாம் அவர் கழுத்தில் போட்டுவிட்டு திருடர்கள் பதுங்கி இருந்தனர். அரச சேவகர்கள் அவரைப் பிடித்து, மன்னருக்கு முன்னால்  நிறுத்தியபோது  அவர் சரியானபதிலைச் சொல்ல முடியவில்லை.. அரசன் அவரைக் கழுவில் ஏற்ற உத்தவிட்டான் .

Xxxx

5.ஆங்கிலத்தில் உள்ள seer என்பது சம்ஸ்க்ருத ரிஷி என்ற சொல்லின் திரிபு (mirror image in Linguistics).

உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.

சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி என்கிறார்;  ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’  SEE என்பது இதன் மூலம் (root ). அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு SEER  நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.

Xxxx

Answer to 6th question 6.

1.நீண்ட ஆயுள்
2.மந்திரங்களை காணும் சக்தி
3.ஈசுவரத்தன்மை
4.தெய்வீகப்பார்வை
5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

Xxx

7.பாணினி சூத்திரம் 2-4-65-ல் அவர் சில இலக்கண விதிகளை விளக்குகிறார்.

‘அத்ரி ப்ருகு குத்ஸ வசிஷ்ட  கோ த்தமாரங்கிரேப் ய ஸ் ச’–என்கிறார்.

இதே வரிசையில் தான் பிராமணர்கள் தினசரி மூன்று முறை 7 ரிஷிகளின் பெயர்களைச் சொல்கிறார்கள் —

அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்ட, கெளதம, காஸ்யப, ஆங்கிரஸ என்பன அந்த 7 ரிஷிக்கள்.

Xxxxxx

8.சங்க இலக்கியத்தில் நற்றிணைப் பாடல் 231 புலவர் இளநாகனார் பாடியது; அதில் சப்த ரிஷிக்களை தமிழர்கள் கைகூப்பி வணங்குவதை , கைதொழு மரபின் எழுமீன் போல ” என்றார் வரிகளில் குறிப்பிடுகிறார்.

Xxxxx

9.சங்க இலக்கியத்தில், வசிஷ்ட மஹரிஷியின் மனைவி அருந்ததியை பல புலவர்கள் பாடியுள்ளனர் . அவள் கற்பின் இலக்கணம். அருந்ததி காட்டல்  என்னும் சப்த ரிஷி தரிசனம் திருமணத்தின் முதலிரவுக்கு முன்னர் நடைபெறும்.

Xxxxx

10.விசுவாமித்திரர் மூன்றாவது முறை வெற்றி கண்டார். அவருக்கு வசிஷ்டர், பிரம்மரிஷி என்ற பட்டத்தைக் கொடுத்தார் .

—- subham —–

Tags- சப்த ரிஷி, மக ரிஷி , அருந்ததி, வசிஷ்டர், பிரம்மரிஷி, துர்வாசர், பொருள், லட்சணம், ஆணி மாண்டவ்யர்

திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்! Part 2 (Post No.12,303)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,303

Date uploaded in London –  21 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆடி மாதத்தையொட்டி மாலைமலர் அம்மன் தலங்களைப் பற்றி தினமும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அதில் கன்யாகுமாரி பற்றிய கட்டுரை 18-7-2023 இதழில் வெளியாகியுள்ளது. இரு பகுதிகளாக இந்தக் கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.

திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!

(இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன் 

தேவியின் மூக்குத்தி

தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அம்மன் அணிந்திருக்கும் மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

தேவியின் மூக்குத்தி பற்றி லலிதா சஹஸ்ரநாமத்தில் 20வது நாமமாக வருவது – ஓம் தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா என்பதாகும்.

இதன் பொருள் : சுக்ர நட்சத்திரத்தின் ஒளியைத் தோற்கடிக்கக்கூடிய பிரகாசமான மூக்குத்தியுடன் விளங்குபவள் என்று பொருள்.

அவள் சூரியனையும் சந்திரனையும் தனது இரு காதுகளில் தாடங்கங்களாய் (ஓலைகளாய்) தரித்துக் கொண்டிருப்பவள்.

கதம்பத்தின் துளிர்களை தன் காதுகளில் கர்ணப்பூப்போல தரித்திருந்து

தெய்வீகப் பேரழகுடன் மனதை மயக்கும் உருவத்தை உடையவள். ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களைக் கொண்டவள். இப்படிப்பட்ட தெய்வீக திருவுருவத்திற்கு மூக்குத்தி அதிக சோபையைத் தருவதில் ஆச்சரியமில்லை.

கோவில் அமைப்பு

இப்படிப்பட்ட ஒளி பொருந்திய மூக்குத்தியின் ஒளியால்

தூரத்தில் வரும் கப்பல்கள் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.

கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள். கோவிலின் உள்பிரகாரத்து தென் மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களுடன் அமைந்திருக்க அதன் முன்னே சபா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

திருமணம் கைகூடும் தலம்

திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்தத் தலத்தில் வந்து அம்மனை வழிபட்டால் வெகு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடக்கும் என்பது காலம் காலமாக பெரியோர்கள் கண்ட அனுபவம்.

இங்கு மூன்று கடல்களும் சங்கமிக்கும் புனித நீரில் நீராடுவோர் காசி சென்று கங்கையில் சென்று நீராட அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பிகையைப் பற்றி அறநூல்கள் குறிப்பிடும்போது வெவ்வேறு ரூபங்களை உடையவள் அவள் என்று குறிப்பிடுகின்றன. அத்தோடு அவரவர் வேண்டுதலுக்குத் தக பலன்களை அளிக்கும் அவளுக்கு வெவ்வேறு வர்ணங்களும் உண்டு என்பதோடு எண்ணிக்கையற்ற திருப்பெயர்களால் அவள் குறிப்பிடப்படுகிறாள் என்றும் கூறுகின்றன.

இந்த வகையில் மூன்று கடல்களும் சங்கமிக்கும் சங்கமத்தில்

 கன்யாகுமரி என்ற நாமத்தோடு சக்தி வாய்ந்த சக்தி பீடத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன் பக்தர்களின் வழிபாட்டை உகந்து ஏற்று அவர்களின் வேண்டுதலுக்குத் தக பலன்களை அளிப்பாள் என்பது இறுதியான உறுதி ஆகிறது.

விவேகானந்தர் தவம் புரிந்த இடம்

கன்யாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 1972இல் இது திறக்கப்பட்டது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.

ஶ்ரீபாதப் பாறை

இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப் பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;

மருந்துவாழ் மலை

கன்யாகுமரியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருந்துவாழ்மலை பற்றிய ஆன்மீக வரலாறு ஒன்று உண்டு,

ஹனுமார் அரிய உயிர்காக்கும் சஞ்சீவனி மூலிகையை மலையுடன் பெயர்த்துக் கொண்டு வந்த போது மலையின் ஒரு பகுதி இங்கு விழ அது அரிய மூலிகைகளைக் கொண்ட மருந்து வாழ் மலை என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மலை 2500 அடி உயரம் உள்ளது.

அரிய வகை மூலிகைகளை இது கொண்டுள்ளது. அகத்தியர் இங்கிருந்து தவம் புரிந்து இந்த இடத்திற்கு சக்தி ஊட்டியுள்ளார்.

கன்யாகுமரியில் 131 அடி உயரமுள்ள கம்பீரமான திருவள்ளுவர் சிலையும் உள்ளது.

குமரியில் கடல் கூடும் சங்கம இடத்தில் இருந்து சூர்யோதயமும் சூர்யாஸ்தனமும் பார்ப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும். அம்மனின் தரிசனத்தோடு அம்மனின் படைப்பு அற்புதத்தையும் இங்கு பார்த்து வியக்கலாம்.

ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!

ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!!

***

கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள 132 நூல்கள் பற்றிய விவரங்களை

இணையதளத்தில் காணலாம்.