கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 31 (Post No.12,488)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,488

Date uploaded in London – –  31 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 31

128.பட்டடக்கல் கோவில்கள்

ஐஹோல், பாதாமி, .பட்டடக்கல் ஆகிய மூன்றும் கர்நாடக மாநிலத்தில் அருகருகே இருந்தாலும் அவைகளை நன்றாகப் பார்க்க வேண்டுமானால் அதற்குப் பல நாட்கள் தேவைப்படும் .

பாதாமி (வாதாபி)யிலிருந்து .பட்டடக்கல் 22 கிலோமீட்டர்கள் தொலைவிலும், அய்கொளெயில்  இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவை  கி.பி. 7,8–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரலாற்ற ச் சின்னங்கள் ஆகும்.   வேசர பாணியில் கட்டப்பட்ட  இந்துக் கோவில் களை இங்கே காணலாம் .பட்டடக்கல் நகரமும் சாளுக்கிய வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது இங்கு அவர்கள் முடிசூட்டிக்கொண்டனர்.

ஐஹோல் போலவே பட்டடக்கல்லிலும் முக்கியக் கல்வெட்டுகள் உள்ளன. இவை சாளுக்கிய வம்சத்தினரின் வரலாற்றை அறிய நமக்கு உதவுகின்றன. அங்குள்ள முக்கியக் கன்னட மொழிக் கல்வெட்டுகள் , விருபாட்சர் கோவிலிலும் , சங்கமேசுவரர் கோவிலிலும் உள்ளன இரண்டாம் விக்ரமாதித்தன் ,  விஜயாதித்தன்  ஆகிய சாளுக்கிய அரசர்களை இவைகள் குறிப்பிடுகின்றன.

மலப்ரபா ஆற்றின் கரையில் அமைந்த இந்த நகரின் மற்றும் ஒரு பெயர் ரக்தபுரம். செம்மண் பூமியாதலாதலால் ரக்தபுரம் என்று பெயர் ஏற்பட்டது மலப்பிரபா நதி, கிருஷ்ணா நதியின் உப நதி. இது இந்த ஊருக்கு அருகில் வடக்கு நோக்கி பாய்வதால் கங்கைக்கு சமமாகக் கருதப்படுகிறது . வடக்கிலுள்ள கயிலை மலையும்  கங்கை நதியும் இந்துக்களுக்கு புனிதமானவை. இங்கு முடிசூட்டிக்கொள்ளும் கல்லும் உள்ளது. வினயாதித்யன் முதலிய பல மன்னர்கள் இங்கு முடிசூட்டிக்கொண்டனர். 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடங்கள் சீரும் சிறப்புடனும் திகழ்ந்தன. இன்று விரூ பாட்சர் கோவிலில் வழிபாடு நடக்கிறது

இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் சிவன் கோவில்கள். ஆயினும் விஷ்ணு, சக்தி வழிபாடுகளையும் சிறப்பிக்கும் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன. ராமாயணமஹாபாரத, பாகவத புராணக் காட்சிகள் மட்டுமின்றி பஞ்சதந்திர , கிராதார்ஜுனிய   காட்சிகளையும்  காண முடிகிறது .

விரூபாட்சர் கோவில்

இங்குள்ள கோவில்களில் மிகவும் புகழ் வாய்ந்தது விரூபாட்சர் கோவில்; ஹம்பி நகரிலும் இதே பெயரில் கோவில் உண்டு. இரண்டாம் விக்கிரமாதித்தனின் வெற்றிகளைக் கொண்டாட இந்தக் கோவில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது அவன் மனைவி பெயர் லோகமஹாதேவி. அவன் மூன்று முறை போர்முனைகளில் பல்லவ மன்னர்களை வெற்றி கொண்டான்

இந்தக்கோவிலில் உள்ள சிவலிங்கமும்  நந்தியும் பெரியவை; அழகானவை; இரண்டையும் பார்க்கும்போது நமக்கு பிருஹதீஸ்வரர், லெபாக்ஷி, சாமுண்டீஸ்வரி கோவில் நந்திகளும் லிங்கங்களும் மனக்கண் முன்னர் தோன்றும் .

இந்தக்கோவிலை சிற்பக் களஞ்சியம் என்றால் மிகையாகாது . 18 தூண்கள் முழுதும் புராண இதிஹாஸக் காட்சிகள் தான்.

அதிலும் முக்கியமானது கொற்றவையின் சிற்பம். இதில், மகிஷனின் தலைமீது ஒரு காலை வைத்து, அவன் கழுத்தில் தன் ஒரு கை சூலத்தைப் பாய்ச்சி, மற்றொரு கரத்தில் இருக்கும் வாளை அவன் மார்பில் செலுத்தும் காட்சி பிரமிக்கவைக்கிறது. மேலும், இங்குள்ள சுவர் முழுவதும் ஆண்கள் மற்றும் கன்னியர்களின் சிற்பங்களும் உள்ளன. முஸ்லீம் படையெடுப்புகளால் சிற்பங்கள் சிதைக்கப்பட்டிருந்தாலும், எஞ்சிய சிற்பங்கள் பேரழகுடன் காட்சியளிக்கின்றன.

மல்லிகார்ஜுனர் கோவில்: விருபாட்சர் கோயிலுக்கு முன்பாகக் காணப்படும் இந்த சிவன் கோயில், சாளுக்கியப் பேரரசி திரைலோக்ய மகாதேவி அளித்த மானியத்தின் மூலம் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் இந்தக் கோவில் அரசியின் பெயரில் ‘திரைலோகேஸ்வர மகா சைலம்’ என்று அழைக்கப்படுகிறது.  ஒவ்வொரு தூணும் சிற்பங்களால் நிறைந்திருக்கிறது. கோயில் சுவரில் பாற்கடல் கடையும் காட்சி, மகாபாரதக் காட்சி, பஞ்ச தந்திரக் கதைகள், புராணக் கதைகள் என்று அழகிய பல சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன.

காசிவிஸ்வநாதர் கோவில். : இது ஒரு பழைமையான கோவில்.  . ஏழாம் நூற்றாண்டுக்கோவில் சுவர்களின் பீடத்தில் அனைத்து திசைகளிலும் குதிரை, சிங்கம், மயில் ஆகியவற்றின் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் சுவர்களில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், ராவணன் கயிலாய மலையைத் தூக்குவதற்கு முயற்சி செய்யும் காட்சி, கண்ணனின் சிற்பங்கள் ஆகியவை காணப்படுகின்றன. மண்டபத்தின் கூரையில் எண்திசைக் காவலர்கள் காவலிருக்க, சிவபெருமான் பார்வதி, கார்த்திகேயன், நந்தி ஆகியோருடன் காட்சியளிக்கும் அற்புதக் காட்சியும் சிற்பமாக்கப்பட்டிருக்கிறது.

சங்கமேஸ்வரர்கோவில். : பட்டடக்கல்லில் காணப்படும் மிகப் பெரிய கோவில்.களில் சங்கமேஸ்வரர் கோவிலும் ஒன்று. இதற்கு `விஜயேஸ்வரர் கோவில். என்றும் பெயர் உண்டு. இங்கே காணப்படும் கல்வெட்டுகள் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.  இங்கு, நடராஜர் வடிவத்தில், சக்தியுடன் இருப்பதாக சிவன் அமைக்கப்பட்டுள்ளது.

காளகநாதர் கோவில். 

இதன் மண்டபத்தின் நுழைவாயிலில் கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. . லிங்கத்துடன் காணப்படும் கருவறையை நோக்கி, வெளியே நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஜம்பு லிங்கேஸ்வரர் கோவில்: பட்டடக்கல்லில் காணப்படும் மிகச் சிறிய கோவில்களில் இதுவும் ஒன்று. 7-ம் அல்லது 8-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இந்த கோயிலின் சிற்பங்கள் சேதமடைந்து தெளிவில்லாமல் இருக்கின்றன.

கடசித்தேஸ்வரா கோவில்: இங்குள்ள கருவறையின் வெளிப்புறச் சுவரின் வடக்கில் அர்த்தநாரீஸ்வரர் (பாதி சிவன், பாதி பார்வதி), மேற்கில் ஹரிஹரன் (பாதி சிவன், பாதி விஷ்ணு) மற்றும் தெற்கே லகுலிஷாவின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறந்த கட்டடக்கலையும், சிற்பக்கலைகளின் கருவூலமாகவும் உள்ள நினைவுச்சின்னங்களை,  யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது

இங்கே பார்க்க வேண்டிய இடங்கள்

காளகநாதர் கோயில்

காடசித்தேசுவரர் கோயில்

சம்புலிங்கேசுவரர் கோயில்

சங்கமேசுவரர் கோயில்

சந்திரசேகரர் கோயில்

விருபாட்சர் கோயில்

மல்லிகார்ச்சுனர் கோயில்

காசி விசுவநாதர் கோயில்

பாபநாதர் கோயில்

சமணர் கோயில்

—SUBHAM—

Tags–கர்நாடக மாநில, 108 ,புகழ்பெற்ற கோவில்கள், part – 31, பட்டடக்கல்

செப்டம்பர் 2023 காலண்டர்- கன்பூசியஸ் பொன்மொழிகள் (Post No.12,487)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,487

Date uploaded in London – –  31 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 பண்டிகை நாட்கள் : 5-ஆசிரியர் தினம், 6-கோகுலாஷ்டமி கிருஷ்ணர் பிறப்பு /ஜயந்தி;  8- சுவாமி சிவானந்தா பிறந்த தினம்; 11- பாரதி நினைவு தினம்;  18- விநாயகர் சதுர்த்தி; 28- கன்பூசியஸ் பிறந்த நாள்; தேசீய சீனாவில் (Taiwan) ஆசிரியர் தினம் ; 30- மகாளய பட்சம் ஆரம்பம்

xxx

ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் -10, 25;அமாவாசை -14;பெளர்ணமி -29

சுபமுகூர்த்த நாட்கள் –3, 11, 13, 17.xxx

செப்டம்பர் 1 வெள்ளிக்கிழமை

நல்லதைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும்! உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.

xxx

செப்டம்பர் 2 சனிக் கிழமை

ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. அறிவாளியாக இருந்தால் குழப்பமே வராது. துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சமே வராது.

xxxx

செப்டம்பர் 3 ஞாயிற்றுக் கிழமை

பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது.

 xxx

செப்டம்பர் 4 திங்கட் கிழமை   

பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபட்டவனே உயர்ந்த மனிதன்.

xxx

செப்டம்பர் 5 செவ்வாய்க் கிழமை  

மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்புவதை வைத்திருப்பதில் இல்லை, ஆனால் நீங்கள் வைத்திருப்பதை விரும்புவதில் உள்ளது.

Xxx

செப்டம்பர் 6 புதன் கிழமை

மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் கவலைப்படாதீர்கள். மாறாக உங்களால் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் கவலைப்படுங்கள்.

xxx

 செப்டம்பர் 7 வியாழக் கிழமை

கேள்வி கேட்கும் மனிதன் ஒரு நிமிடம் முட்டாள், கேள்வி கேட்காத மனிதன் வாழ்க்கை முழுமைக்கும் முட்டாள்.

xxx

செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை

உண்மையான அறிவு என்பது நமக்குத் தெரிந்தததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக்கொள்வதே!

xxx

செப்டம்பர் 9 சனிக் கிழமை

ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாக, அகலமாகவும் படித்தால் மட்டும் போதாது. படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் கடைப்பிடிக்கவும் வேண்டும்.

xxx

செப்டம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை

கோபம் தலை தூக்கும் போது, அதன் பின் விளைவுகளை சிந்தியுங்கள். கோபம் குறையும்!

xxx

செப்டம்பர் 11 திங்கட் கிழமை   

புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைத்தான் இந்த உலகம் விரும்புகிறது.

xxx

செப்டம்பர் 12 செவ்வாய்க் கிழமை  

நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்!

xxx       

செப்டம்பர் 13 புதன் கிழமை

மூன்று விடயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.

xxx

செப்டம்பர் 14  வியாழக் கிழமை

நல்லொழுக்கமுள்ள மனிதன் பொறுப்பால் இயக்கப்படுகிறான், நல்லொழுக்கமற்றவன் இலாபத்தால் இயக்கப்படுகிறான்.

Xxx

செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை

பிரச்சினையை விவரிக்க முடியாதவர், ஒருபோதும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாட்டார்.

Xxx

செப்டம்பர் 16 சனிக் கிழமை

யாரிடம் எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்தவன் வெற்றியாளன் ஆகிறான்.

xxx

செப்டம்பர் 17 ஞாயிற்றுக் கிழமை

லட்சியங்களை அடைய முடியாது என்று தெரியும்போது, நமது செயல்பாட்டு முறையைத்தான் சரி செய்ய வேண்டுமே தவிர லட்சியங்களை சரி செய்யக்கூடாது.

Xxx

செப்டம்பர் 18 திங்கட் கிழமை   

அறிவால் உழைப்பவர்கள் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுகின்றனர்.

Xxx

செப்டம்பர் 19 செவ்வாய்க் கிழமை       

வாழ்க்கை மிகவும் எளிதானது, நாம் தான் சிக்கலாக சிந்தித்து அதை சிக்கலானதாக மாற்றுகிறோம்.

xxx

செப்டம்பர் 20 புதன் கிழமை

துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறீர்களோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்து விட்டீர்கள் என்பது உறுதி.

Xxx

செப்டம்பர் 21 வியாழக் கிழமை

ஒருவரைப் பழி வாங்கத் தொடங்குவதற்கு முன்பு, இரண்டு கல்லறைகளைத் தோண்டிக் கொள்ளுங்கள்!

xxx

 செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை

எதிர்காலத்தை வரையறுக்க கடந்த காலத்தைப் படிக்கவும்!

Xxx

செப்டம்பர் 23 சனிக் கிழமை

எங்கு சென்றாலும், உங்கள் முழு இருதயத்தோடு போங்கள்!

Xxx

செப்டம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை

நீ சுமக்கின்ற உன் நம்பிக்கை; நீ கீழே விழும்போது உன்னைச் சுமக்கும்!

 xxxxx 

செப்டம்பர் 25 திங்கட் கிழமை   

மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்.

xxx

செப்டம்பர் 26 செவ்வாய்க் கிழமை

உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள். நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை வைத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுகிறார்கள்.

xxxx         

செப்டம்பர் 27 புதன் கிழமை

நீங்கள் இரண்டு முயல்களைத் துரத்தினால், நீங்கள் எதையும் பிடிக்கமாட்டீர்கள்.

xxx

செப்டம்பர் 28 வியாழக் கிழமை 

ஒரு புத்திசாலி இசையால் தன் ஆத்மாவை வலுப்படுத்த முயல்கிறான், சிந்தனையற்றவன் தன் அச்சத்தைத் தணிக்க அதைப் பயன்படுத்துகிறான்.

xxx

 செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை

தண்ணீர் அதைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வடிவமைப்பது போல, ஒரு புத்திசாலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறான்.

xxx

செப்டம்பர் 30 சனிக் கிழமை 

உங்களிடமிருந்து அதிகம் எதிர்பாருங்கள், மற்றவர்களிடமிருந்து குறைவாக எதிர்பாருங்கள், நீங்கள் மனக்கசப்புகளைத் தவிர்ப்பீர்கள்.

—subham—

Tags- செப்டம்பர் 2023, காலண்டர், கன்பூசியஸ் பொன்மொழிகள்

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! ஹிட்லரின் மண்டை ஓடு! (Post No.12,486)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,486

Date uploaded in London –  31 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!

அத்தியாயம் 16

ஹிட்லரின் மண்டை ஓடு! 

.நாகராஜன்

பகுதி 20

1945, ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி. திங்கள்கிழமை.

இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது, தோற்பது உறுதி, பிடிபடுவதும் உறுதி என்ற முடிவுக்கு வந்த ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்.

தனது நீண்ட கால காதலியாக உடன் இருந்த தோழி இவா ப்ரானைத் திருமணம் செய்து கொண்டார்.

அவரையும் தற்கொலை செய்யச் சொல்லித் தானும் தற்கொலை செய்து  கொண்டார்.

ஒரு பங்கரில் நடந்தது இது.

அவர் தனது முடிவைத் தேடிக் கொண்ட பின் அவர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தபடி அவரது உடல் அகற்றப்பட்டது.

மிக வேகமாக வந்த ரஷியப் படை ஏமாந்து போனது – ஹிட்லரை உயிருடன் பிடிக்க முடியவில்லையே என்று!

ஹிட்லரின் மண்டை ஓடு என்று ஒரு படத்தை ரஷியா வெளியிட அதைத் தொடர்ந்து ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.

ஹிட்லர் சயனைடு விஷத்தைச் சாப்பிட்டு பின்னர் துப்பாக்கியால் தனது வாயில் சுட்டுக் கொண்டார் என்பது ஊர்ஜிதமான செய்தி.

அவர் மண்டை ஓட்டில் தலையில் ஒரு ஓட்டை இருந்தது.

தலையில் எப்படி துப்பாக்குக் குண்டு ஓட்டை இருக்க முடியும், ஆகவே அவர் வாயில் சுட்டிக் கொண்டு இறக்கவில்லை என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல ஆராய்ச்சியாளர்கள் களத்தில் இறங்கி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

முதலில் ஹிட்லரின் வரலாற்றை நன்கு ஆராய்ந்து எழுதிய அமெரிக்க எழுத்தாளரான  வில்லியம் ஷ்ரிடர் (William L. Shrirer) ஹிட்லர் வாயில் சுட்டுக் கொண்டு இறந்தார் என்று தனது புத்தகமான ‘தி ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தேர்ட் ரெய்ச்’ (The Rise and Fall of Third Reich)-இல் உறுதிப் படுத்தியுள்ளார்.

வாய் வழியே சுட்டாலும் தலை வழியே துப்பாக்கிக் குண்டு வெளியேறுவது இயல்பே என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

அத்தோடு ஹிட்லரின் எலும்புகளைச் சேகரித்த ரஷியக் குழு அந்தத் துண்டுகளைப் பலகாலம் பத்திரமாக வைத்திருந்தனர்.

மாஸ்கோவில் ரஷிய அரசு காப்பகத்தில் (The Russian State Archive in Moscow) அவை பாதுகாப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டில் அவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.

ஹிஸ்டரி சேனல் ஒன்று கனெக்டிகட் புதைபொருள் ஆராய்ச்சியாளரான நிக் பெல்லண்டோனி (Nick Bellantoni) என்பவரை மண்டை ஓட்டையும் ஹிட்லர் அறையில் இருந்த சோபாவில் சிந்தி இருந்த ரத்தத்துளிகளையும் ஆராயுமாறு கேட்டுக் கொண்டது.

அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த அவர் அது ஹிட்லரின் உடலியல் ரீதியிலான ஆய்வுடன் ஒத்துப் போகவில்லை என்றார்.

அது ஒரு பெண்ணின் மண்டை ஓடாக இருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

லிண்டா ஸ்ட்ராஸ்பா (Linda Strausbaugh) என்ற ஒரு பெண்மணி மாலிகுலர் அண்ட் செல் பயாலஜி துறையில் பேராசிரியை. அவர் தனது டிஎன்ஏ ஆய்வு மூலம் அது 20 முதல் 40 வயது வரையிலான ஒரு பெண்மணியுடையது என்று உறுதிப்படுத்தினார்.

இவா பிரானுடையதாக அது இருக்க முடியாது. ஏனெனில் அவர் சயனைடு அருந்தியே தற்கொலை செய்து கொண்டார்.

ரஷிய அதிகாரிகள் ஹிட்லரை சோவியத் ராணுவம் தனது பரேட் கிரவுண்டில் கிழக்கு ஜெர்மனியில் மாக்டெபர்க் நகரில் (Magdeburg) புதைத்தது என்றனர். 1970ஆம் ஆண்டு அந்த எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு, சாம்பலானது நகரின் சாக்கடையில் கொட்டப்பட்டது என்றனர்.

ஆக இப்படி தலையில் எப்படி புல்லட் ஓட்டை என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது; ரஷிய அதிகாரிகள் சொல்வது உண்மை இல்லை என்பதும், அவர்கள் காட்டும் மண்டை ஓடு ஹிட்லருடையது அல்ல என்பதும் உலகிற்குத் தெரிய வந்தது.

ஹிட்லர் வாழும் போது இருந்த மர்மம் அவர் இறந்த பிறகும் கூட அவருடன் கூடவே இப்படித் தொடர்ந்தது!

***

tags- hitler

Y for Yamunotri –Know India Puzzle (Post No.12,485)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,485

Date uploaded in London – –  30 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Find out eight famous places beginning with the letter Y.

(Like we have skipped Q, we have to skip X and Z)

1. – City  in Maharashtra, known as Cotton City. Famous for its Navaratri celebrations.

2.– City belongs to Union territory of Pondicherry; but 879 Kms away from it in Andhra Pradesh. Once ruled by the French.

3. -City in Karnataka. The area is also renowned for its vast stretch of fertile black soil which is the main reason for bumper harvests especially of red gram, hence the district is also referred to as the “Daal Bowl” of the state. It also has a cluster of cement industries and a distinct stone popularly known as “Malakheda Stone”.

4. Hill station in Tamil Nadu. It is known for its production of spices, coffee, silk and other textiles. Loop Road, Lake and Kiliyur Waterfalls are other attractions.

5.– Town in Uttarakhand. The sacred shrine is the  source of the river Yamuna. The chief attraction is the temple devoted to the Goddess Yamuna and the holy thermal springs at Janki Chatti which is 7 km away.  

6.– Town in Karnataka famous for arecanut cultivation and beautiful waterfalls nearby. It is in the Western Ghats.

7.– Town in Haryana ; This town is known for the cluster of plywood units and paper factories;  attractions include Panchmukhi Hanuman Mandir, Kalesar Wildlife Sanctuary and Gurudwaras.

8. – Village in Karnataka It is famous for two massive rock outcrops known as the Bhairaveshwara Shikhara and the Mohini Shikhara (“Shikhara” means “mountain peak”). It is the cleanest village in South India.

 ANSWERS:1.Yavatmal; 2.Yanam; 3.Yadgir; 4.Yercaud;5.Yamunotri;6. Yellapur; 7.Yamunanagar; 8.Yana

–subham–

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 30 (Post No.12,484)

Picture of Durga Temple , Aihole

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,484

Date uploaded in London – –  30 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PICTURES ARE FROM WIKIPEDIA; THANKS

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 30

127.ஐஹோல் Aihole Monuments

அய்கொள என்பது சரியான கன்னட உச்சரிப்பு. ஆர்யபுர என்ற பெயரும் உண்டு  பட்டடக்கல் ,பாதாமி குகைக்கோயில் இது அருகில் அமைந்துள்ளது. பாகல்கோட் ஜில்லாவில் மலப்பிரபா ஆற்றின் அருகில் இருக்கிறது இதுவும் சாளுக்கியர் கால கலைகளை உடைய கோவில்.

முதலில் இதுதான் சாளுக்கியர் தலைநகராக இருந்தது. இங்குள்ள கல்வெட்டுகள் தென்னிந்தியாவின் முக்கிய வரலாற்றை இயம்புகின்றன.

பெலகாமிலிருந்து 190 கி.மீ; பாதாமியிலிருந்து 23 கி.மீ ; பட்டக்கல்லி லருந்து பத்து கி.மீ

6-ஆம் முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை பல வம்சங்ககளின் புத்த , சமண, இந்து சமய சிற்பங்களை உடைத்து.

ஐஹோலி ல் 16 தனித்தனி கோவில்களும் 4 குடைவரை சிற்பங்களும் உள்ளன. 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலுள்ள எல்லா கோவில்களையும் சேர்த்தால் 150 கோவில்களை நெருங்கிவிடும்; இந்துக் கோவில்களின் எண்ணிக்கை 100. ஏனையவை சமண, புத்த மத வழிப்பா ட்டு இடங்கள் இந்துக்  கோவில்களில் சிவன், விஷ்ணு, துர்க்கை, சூரியன் ஆகியோரைக் காணலாம். சமண சிற்பங்களில் மஹாவீரர், பார்ஸ்வநாதர், நேமிநாதர் ஆகியோர் அடக்கம் . ஆழமான படிக்கட்டு கிணறுகள், அழகான குளங்கள் முதலியனவும் கண்டு ரசிக்க வேண்டியவை.

கிபி 450களில் உருவாக்கப்பட்ட அய்கொளெ, சாளுக்கிய அரசர்களின் முதல் தலைநகரமாக இருந்தது. 

Historical Inscriptions

மகா பாரதம், காளிதாசர் , கலியுகம் பற்றிய வரலாறு சொல்லும் கற்கள் !!!

 Copy of Famous Aihole Inscription

இரண்டாம் புலிகேசியின் புகழை எடுத்துரைக்கும் கல்வெட்டு ஒன்று மெகுடி சமணர் கோவிலில் இருக்கிறது.. இக்கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அரசரவைப் புலவர் ரவிகீர்த்தியினதாகும். கிபி 634 காலத்தைச் சேர்ந்த இக் கல்வெட்டு ஸம்ஸ்க்ருத  மொழியில் பழைய கன்னட எழுத்துக்களைக்கொண்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு அய்கொளெAIHOLE INSCRIPTION  கல்வெட்டு என அழைக்கப்படுகிறது. இதில் ஹர்சவர்த்தனரை எதிர்த்து அடைந்த வெற்றி, பல்லவர்களை வென்றது, தலைநகரை அய்கொளெயிலிருந்து பாதாமிக்கு மாற்றியது போன்ற இரண்டாம் புலிகேசியின் சாதனைகள் பற்றிய குறிப்புகளும், காளிதாசர் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றன.

மகாபாரதப் போர் மற்றும் கலி யுகம் பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க விஷயங்கள் இதில் கிடைக்கின்றன.

Durga Temple

துர்க்கா கோவிலின் வடிவம் எல்லோரையும் கவரக்கூடியது. ‘துர்க’ என்றால் கோட்டை என்று பொருள். இது கோட்டை வடிவில் அமைந்திருப்பதோடு உள்ளே கண்ணைக் கவரும் சிற்பங்களைக் கொண்டுள்ளது.

 புத்தமத சைத்திய அமைப்பில் உள்ள இக்கோயிலின் கருவறை மீது சிறு கோபுரமும், கருவறையைச் சுற்றி தூண்கள் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயில் முழுவதும் அழகான சிற்பங்கள் நிறைந்துள்ளன

சிவன் கோவிலுக்கு முஸ்லீம் பெயர் !!

லாட்கான் கோவில் (LADKHAN) அய்கொளெயில் உள்ள சிவன் கோவிலாகும் பீஜப்புர் சுல்தானின் படைத்தளபதி லாட்கான், அங்கே குறுகிய காலத்துக்கு வசித்ததால் சிவன் கோவிலை முஸ்லீம் பெயரால் அழைத்தனர்  ; ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். லாட் கான் கோயில் ஒரு கருவறையையும் அதன் முன்பமைந்த இரு மண்டபங்களையும் கொண்டுள்ளது. கருவறைக்குள் லிங்கத் திருவுருவம் காணப்படுகிறது. கருவறையின் முன்புள்ள முகப்பு மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடமைந்த 12 தூண்கள் உள்ளன. முகப்பு மண்டபத்துக்கு முன்புள்ள அவை மண்டபத்தின் தூண்கள், . கூரைகளில் பூ வேலைப்பாடுகள் செதுக்கப் பட்டு ள்ளன

Xxx

சூரியநாராயணர் கோவில்

சூர்யநாராயணா கோவிலில் 2 அடி உயரமுள்ள சூர்யநாராயணர் சிலையும் உஷா தேவி சந்த்யா தேவி புடை சூழ நிற்கின்றனர் இது எட்டாம் நூற்றாண்டுக்கோவில் .

XXXX

இங்குள்ள மியூசியமும் காணவேண்டிய முக்கிய இட ங்களில் ஒன்றாகும்

XXXX

பார்க்க வேண்டிய ஏனைய இடங்களின் பட்டியல்

இராவண பாடி குகை,


ராவணபாடி எனும் குகைக்கோயில் இருப்பதில் பழமையான குடைவரைக் கோவில் ஆகும்

XXXX

காளகநாதர் கோவில்
காளகநாத கோயில்கள்  தொகுப்பானது மலப்பிரபா நதிக்கரையில் உள்ள 38 கோயில்களை உள்ளடக்கியதாகும். இந்த தொகுப்பின் பிரதான கோயில் காளகநாத கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது 8-ம் நூற்றாண்டைச்சேர்ந்தது  சிவன்  கோவில்.
R

ஜோதிர்லிங்க கோவில்குச்சப்பய்ய குடி (கருவறை) யேனியர் கோவில் கள் இராமலிங்கம் கோவில் கள் சக்ரா குடி குச்சிமல்லி கோவில்

படிகெர குடி (Badigera gudi)

அம்பிகெர குடி (Ambigera Gudi)

சிக்கி குடி (Chikkigudi Group)

கௌடர் குடி (Gaudara gudi)

ராச்சி குடி (Rachi gudi)

குச்சப்பய்ய மடம் (Huchappayya Matha)

காளபசப்பன்ன குடி (Halabasappana Gudi)

கொண்டி குடி (Kontigudi group of temples),

திரியம்பகேசுவரர் கோவில் (Triyambakeshvara Group)

 XXX SUBHAM XXXXX

TAGS- ஐஹோல், சாளுக்கியர், முக்கிய கல்வெட்டு, துர்கா கோவில், மெகுடி சமணர் கோவில் , கர்நாடக , புகழ்பெற்ற கோவில்கள் ,part- 30 

மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி-2 (Post No.12,483)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,483

Date uploaded in London –  30 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

16-8-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி

 (இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

அன்னபூரணி தேவி

தேவியானவள் காசி ஈஸ்வரருக்கு உணவு அளித்த இடம் இது. ஆகவே காசியின் அரசியே அன்னபூரணி தான்!

இங்குள்ள அன்னபூரணி கோவிலை மராட்டிய மன்னர்கள் பயபக்தியுடன் வடிவமைத்துள்ளனர். கோயிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் உள்ளது. அதை பன்னிரெண்டு கல் தூண்கள் தாங்குகின்றன.

பலவித ரத்தினங்கள், மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடத்துடன் அழகிய  ரூபத்தில் காட்சி தரும் அன்னபூரணிக்கு கீழே ஸ்ரீ சக்ர மேரு யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. மண்டபத்தில் நின்று பலகணியின் வழியாகத் தான் தேவியைத் தரிசிக்க வேண்டும். தேவியின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.

இடது கரத்தில் தங்கக் கிண்ணம், வலது கரத்தில் தங்கக் கரண்டி இவற்றுடன் பிட்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் லோகமாதா.

அம்பாளின் அருகே இரு புறமும் தங்கத்தினால் ஆன ஸ்ரீ தேவியும் பூதேவியும் கொலுவிருந்து கையைத் தூக்கி ஆசீர்வதித்து அருள்கிறார்கள்.

கருவறையில் மூலையில் சிறு பள்ளம் ஒன்றில் விசுவநாதர் கொலுவிருந்து அருளாட்சி செய்கிறார்.  விசுவநாதர் ஏன் ஓரத்தில் இருக்கிறார் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.

ராணி அகல்யாபாய் சிதிலமடைந்திருந்த கோவிலை மீண்டும் கட்ட முனைகையில், முன் போலவே ஐந்து மண்டபங்கள் கொண்டதாக கோவில் இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் விசுவநாதரின் திருவிளையாடல் அப்போது அரங்கேறியது.

“நான்கு புறமும் வாசல்கள் உள்ள ஒரு மண்டபம் கட்டிக் கர்ப்பூரத்தைப் போடுங்கள். எங்கே அது தானாகவே பற்றி எரிகிறதோ அங்கே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யுங்கள் என்று ஒரு அசரீரி எழுந்ததாம்.

ஆகவே தான் விசுவநாதர் கர்ப்பூரம் தானாகவே பற்றி எரிந்த இடமான ஓர இடத்தில் இருக்கிறார்.

விசுவேசுவரர் லிங்கம் சிவசக்தி சொரூபமாக இருக்கிறது. லிங்கத்தின் மேல் பாகம் குமிழ் போல இருக்கிறது. அது சிவ வடிவம் என்றும் கீழ்ப்பாகம் சக்தி வடிவம் என்றும் சொல்லப்படுகிறது.

விசாலாட்சி ஆலயம்

அன்னபூரணி ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் சிறு சந்து ஒன்றில்  விசாலாட்சி ஆலயம் அமைந்துள்ளது. குத்துவிளக்கு எரிய கர்பக்ருஹத்தில் தேவியை தரிசித்து குங்கும அர்ச்சனையையும் செய்யலாம். பௌர்ணமி அன்று அம்மனுக்கு அபிஷேகம் உண்டு. விஜயதசமி அன்று தங்க விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வலம் வருகிறாள். கோவிலுக்குள் அம்பு விடும் உற்சவமும் நடைபெறுகிறது.

கால பைரவர் ஆலயம்

காசிக்குச் சென்று திரும்பும் யாத்ரீகர்கள் திரும்பும் போது கால பைரவரைத் தரிசித்து விட்டுத் திரும்புவது மரபு. கால பைரவர் ஆலயம் விசுவேசுவரர் ஆலயத்திற்கு வடக்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது. கால பைரவரே காசி தலத்தின் காவல் தெய்வம். இவருக்கு வாகனம் நாய். கலமும் உடுக்கையும் மழுவும் பாசக்கயிறும் ஏந்திய ஈசனின் திரு உருவமாகவே காலபைரவரைக் கருதுகின்றனர். அவர் உள்ள இடத்தில் யமபயம் இல்லை என்பது ஐதீகம். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் அவர் போக்கி விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தில் இதற்காக நம்மை மயில் இறகால் தட்டி ஆசீர்வதிப்பதோடு கையில் காசிக் கயிறு கட்டி விடுகிறார்கள். இந்தக் கயிறு விசேஷமானது. பல ஆண்டுகளுக்கு அறுந்து போகாமல் இருப்பது இது. இது நம்மைக் காக்கும் ஒரு காப்பு என்று கருதப்படுகிறது.

மகான்கள் தவம் புரியும் இடம்

துளஸிதாஸர், கபீர் தாஸர், ஜெயதேவர், ஆதிசங்கரர், குமரகுருபரர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் வந்து தங்கி இருந்து தவம் புரிந்த இடம் காசி. இன்றும் ஏராளமான மகான்களும் சித்தர்களும் தவம் புரியும் இடமும் இதுவே.

கங்கைக் கரையில் ஈசன் தேவியுடன் திரு நடனம் ஆடிய இடம் காசி என்று அறநூல்கள் கூறுகின்றன. 

காசியின் முக்கியமான மூர்த்திகளைச் சொல்லும் ஒரு வடமொழி ஸ்லோகம் உண்டு.

“விஸ்வேஸம், மாதவம், துண்டிம், தண்டபாணிஞ்ச, பைரவம் – வந்தே

காசிம், குஹாம், கங்காம், பவானிம், மணிகர்ணிகாம்”

என்பதே அது. 

கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தொழுதால், பாவம் தொலையும், புண்ணியம் சேரும், முக்தி கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு பஞ்சமில்லை, எப்போதும் எதிலும் வெற்றியே கிடைக்கும். இது ஐதீகம் 

காசி யாத்திரை மேற்கொள்வோம். அம்பிகை மற்றும் ஈசன் அருளைப் பெறுவோம்!.

***

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 29 (Post No.12,482)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,482

Date uploaded in London – –  29 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 29

கர்நாடகம் என்று சொன்னவுடன் திக்கெட்டும் தோன்றும் நூற்றுக் கணக்கான ஹொய்சாளர் கோவில்களும் பேலூர், ஹளபீடு சிற்பங்களும் சிரவணபெலகொலா போன்ற சமண சிற்பங்களும் இன்னும் ஒரு புறத்தில் கொல்லூர் மூகாம்பிகை, மைசூர் சாமுண்டீஸ்வரி, குக்கே சுப்ரமணியன் , உடுப்பி கிருஷ்ணனும். நம் கண் முன்னே தோன்றுவார்கள்.; இதற்கிணையாக இன்னும் ஒரு புறத்தில் ஹம்பி, பாதாமி, ஐஹோல், பட்ட டக்கல் இடிபாடுகளும் குகைகளும் , சிற்பங்களும் தோன்றும். எல்லா மொழிகளிலும்  மேற்குறித்த ஸ்தலங்களின் கட்டுரைகள் உள்ளன .

பாதாமி, ஐஹோல், பட்டக்கல் பற்றி தமிழிலும் கட்டுரைகளை பலரும் எழுதியிருப்பதால் புல்லட்Bullet Points  பாயிண்டுகளில் அவைகளைக் காண்போம் முதலில் பாதாமி :-

126.பாதாமி குகைகள்

ப= வ இடமாற்றம் பற்றிப்பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன் பங்களாதேஷ் = வங்க தேசம்  என்பது எல்லோருக்கும் தெரியும். இதுபோல வாதாபி என்பதே பாதாமி ஆகியது. 1500 ஆண்டுப்பழமையான கடவுள் சிற்பங்கள் உள்ள குகைகள். Badami Cave Temples

வாதாபி கணபதி பற்றியெல்லாம் முந்தைய கட்டுரைகளில் இதே பிளாக்கில் கண்டுவிட்டோம்.

இபோது குகைகளைக் காண்போம் :

இருப்பிடம்- கர்நாடக மாநிலத்தின் வட மத்தியப்புகுதியில் பாதாமி என்னும் நகரில் உள்ளன

பெலகாவியிலிருந்து 88 மைல்கள் ;

ஹம்பியிலிருந்து  87 மைல்கள் ;

பட்டக்கல்லிலிருந்து 14 மைல்கள்

ஐஹொலிலிருந்து 22 மைல்கள்.

பாதாமியில் 4 குகைகள் இருக்கின்றன.

ஆறாவது நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை அகத்தியர் எரிக்கும் மலப்பிரபா ஆற்றுக்கும் அருகில் உள்ளன

சாளுக்கியரின் தலைநகராக விளங்கிய ஊர் இது

மங்களேசனால் கிபி 578/579 இல் மூன்றாவது கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது

நான்கு குகைக் கோவில்களில் முதலாவது சிவனுக்காகவும், இரண்டாவதும் மூன்றாவதும் திருமாலுக்காகவும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமணக் கோவில் ஆகும்.

முதல் குகையில் உள்ள பெரிய அளவு சிவ தாண்டவ சிற்பமும், துவார பாலகர்கள் சிற்பங்களும் குறிப்பித்ததக்கவை .

நடராசர் சிலைக்கடுத்துள்ள சுவற்றில் மகிசாசூரனை வதைக்கும் துர்க்கையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது

கூரையில் ஆதி சேஷன்உருவம் தெரிகிறது

Xxxx

இரண்டாம் குகை விஷ்ணுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது பாற்கடல் கடைதல், கஜலட்சுமி, பிரம்மா, ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டுள்ள திருமால், கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சிகள், கிருஷ்ணரின் இள வயது லீலைகள் கோபியருடனும் பசுக்களுடனும் காணப்படும் கிருஷ்ணர் போன்ற சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூரையில் 16 மீன் ஆரைகள் கொண்ட சக்கரவடிவமைப்பு, சுவஸ்திகா, பறக்கும் இரட்டையர்  சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருடன் மேல் வீற்றிருக்கும் திருமால் சிற்பமும் பறக்கும் ஆண், பெண் இரட்டையர் சிற்பமும்  காணப்படுகின்றன. ஒருகாலத்தில் வண்ண ஓவியங்கள் இருந்த தடயங்களையும் காண முடிகிறது

xxx

மூன்றாவது குகையில் நல்ல சிற்பங்கள் காணப்படுகின்றன.

இது அளவில் பெரியது. விஷ்ணுவின்  திரிவிக்கிரம, அனந்தசயன, வாசுதேவ, வராஹ, ஹரிஹர மற்றும் நரசிம்மர் அவதாரங்களை இங்கே சிற்ப வடிவில் காணலாம்.

பல சிற்பங்களில் ஆணும் பெண்ணும் பல ‘போஸ்’களில் அருகருகே நிற்கின்றனர் .

விஷ்ணுவின் யோகாசன சிற்பம் வேறு எங்கும் காணப்படாதது.

பல்லாங்குழி விளையாட்டும் செதுக்கப்பட்டுள்ளதால் அது இந்தியாவிலிருந்து ஆப்ரிக்காவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் சென்றதும் தெரிகிறது

கீர்த்திவர்மனின் பழைய கல்வெட்டுகள் 1500 ஆண்டுகளுக்கு முந்தியவை .

Xxxx

நாலாவது குகையில் சமண சிற்பங்கள் இருக்கின்றன கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் சிலை அந்த குகையையே அலங்கரிக்கிறது . மற்ற தீர்த்தங்கரர்கள், பத்மாவதி உருவங்களும் இருக்கின்றன.

இதன் பிறகு பாதாமி கோட்டை அங்கு திப்பு சுல்தான் விட்டுச் சென்ற பீரங்கி ஆகியன உள்ளன.

Xxx

இந்து சமய ஓவியங்கள்

(ஓவியங்களைப் புதுக்கிய பின்னர் அவை பளிச்சென்று தெரிந்தன )

அஜந்தா போனற இடங்களில் புத்தமத ஓவியங்களையே காண்கிறோம். சித்தன்ன வாசலில் சமண ஓவியங்களையே காண்கிறோம் .பாதாமியின் சிறப்பு மிகப்பழைய இந்து சமய ஓவியங்கள் இருப்பதாகும் ; பெரும்பாலான ஓவியங்கள் அழிந்துபோய்விட்டன. ஆனால் கால வெள்ளத்தையும் பருவ தாக்குதல்களையும் தங்கி நிற ஓவியங்கள் அற்புதமாக உள்ளன புலிகேசியின் மகன் மங்களேஸ்வரன் இவைகளை வரைய வைத்துள்ளான்  King Mangalishwara, son of Puleksin I.

சிவன் பார்வதி ஓவியங்களும் புராணக் காட்சி ஓவியங்களும் அழியாமல் இருக்கின்றன .

To be continued……………………………………

Tags- பாதாமி குகைக் கோவில்கள், ஓவியங்கள், சிவ தாண்டவம் , விஷ்ணு அவதாரங்கள்

W for Wayanad Know India Puzzle (Post No.12481)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,481

Date uploaded in London – –  29 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find 8 famous places in India beginning with letter W. Here are the clues:

1.        This town in Telangana is known for its Fort,Thousand Pillar Temple, Ramappa Temple, Ghanpur Group of Temple, and Khush Mahal . They used to build monuments out of single rock hence the city was previously known as Orugallu meaning “carved out of single rock”.

2.        This city in Mharashtra is famous for the many social reformers who have called it home. Mahatma Gandhi built his last ashram here. Other renowned social activists that lived and worked include Vinoba Bhave, Baba Amte, and Jamnalal Bajaj.

3. This city in Tamil Nadu is famous for Silk Weaving and has a nick name as ” The Silk City”. It is situated in the belt of the Ranipet SIPCOT Industrial Complex as a public limited company . Bamboo furniture are also made here.

4. This town in Nagaland is on the main route from Kohima to Mokokchung and was one of the earliest locations of the Assam Rifles. The Government of Nagaland constructed a tourist lodge in the Town. It also hosts the oldest cricket tournament in North East India, The Winter Cricket Challenge.

5. This area in Kerala is famous for its large amount of camping and trekking trails, breathtaking waterfalls, caves, bird watching sites, flora, fauna and an overall plethora of magnificent sights. This area has been a tourist favourite over the years.

6. The holy uphill shrine “Sundara Mahalingam (Lord Shiva) temple” (also known as Sathuragiri Malai) is here. Aadi amavasai (New Moon Day in the month of Aadi) is when devotees throng here.

7. This city in Gujarat used to be a princely state that was ruled by Jhala Rajputs and thus is also called Jhalawar. It is famous for its two palace guest houses, the Royal Residency and the Royal Oasis, which have been converted into heritage hotels.

8. This town is in Maharshtra In ancient times, it was the capital of King Wakatak, also known as Vatsagulm. Hemadpanthi temples and numerous ponds have made the area famous.

Answers

1.WARANGAL-

2.WARDHA-

3.WALAJA.

4.WOKHA – Nagaland.,

5.WAYANAD – Kerala. …

6.WATRAP

7.WANKANER…

8.WASHIM

–subham—

tag-wayanad

QUIZ திரு ஓணம் பத்து QUIZ (Post No.12,480)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,480

Date uploaded in London – –  29 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ No.72

திரு ஓணம் பத்து

1.ஓணம் ஓணம் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது ?

XXXX

2.ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது ?

ஓணம் பண்டிகை பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொன்னார்

XXXX

4.சங்க இலக்கியத்தில் ஓணம் பற்றிய குறிப்பு இருக்கிறதா ?

XXXX

5.இந்தப் பண்டிகையில் மலையாளிகள் என்ன செய்வார்கள் ?

XXXX

6.கோவில்களில் என்ன நடக்கும் ?

XXXX

7.இந்தப் பண்டிகைக்கான ஸ்பெஷல் வெஜிட்டேரியன் உணவு என்ன ?

XXX

8.ஓணம் பற்றிய பழமொழி என்ன சொல்கிறது ?

XXXX

9.ஓணம் பற்றி திருஞான சம்பந்தர், பெரியாழ்வார் என்ன சொன்னார்கள்?

XXXX

10.மலையாளிகள் சிங்கம் மாதம் என்று அழைப்பது ஏன்?  அதன் சிறப்பு என்ன?

XXXX

விடைகள்

1.கொல்ல வர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களுக்கு  இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். அதுதான் முக்கிய விடுமுறை நாள் .

XXXXX

2.மகாபலி என்ற மன்னர் கேரளத்தை ஆண்டு  வந்தார். அவர்  பிரகலாதனின் பேரன் . மகாபலி அசுர குலத்தில் பிறந்து இருந்தாலும் கொடை அளிப்பதில் சிறந்து விளங்கியவர். ஆனால்  கர்வமும் சற்று அதிகம் இருந்தது. அதாவது இந்திரன் வகிக்கும் பதவிவேண்டி ஒரு யாகம் செய்ய விரும்பினார்.யாகம் முடியும் நேரத்தில், தேவர்களின் வேண்டுகோளின்படி விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். யாகத்தில் பிராமணர்களுக்குத் தானம் கொடுப்பது வழக்கம் ; சிறிய பிராமண பையனாக வாமனர் வந்து மூன்றே அடி அளவு தானம் போதும் என்றார் . மன்னன் அகந்தையால் சிரித்தான் 

மகாபலி சக்கரவர்த்தி ‘மூன்றடி நிலத்தை’ தாரை வார்த்து, கொடுத்தேன் என்று சொன்னார். உடனே வாமனனாக வந்த ஸ்திருமால் ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து முடித்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே? என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் கேட்டார்.  மகாபலி தன்னுடைய தலையில் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளுமாறு சொன்னார். மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பி வைத்தார். மக்களின் அன்பின் காரணமாக ஆண்டுக்கு ஒருமுறை அவர் கேரளத்துக்கு வருவதற்கு அனுமதி தந்தார். அந்த நன்னாள்தான் ஓணம் ; அன்று மகாபலி வருவதால் மலையாளி இந்துக்கள் அதைக் கொண்டாடி வருகிறார்கள்.

XXXXX

3.தமிழில் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே சிறப்பு அடைமொழியான திரு போடப்படுகிறது. சிவனுக்கு உரிமையான ஆருத்ராவை திரு ஆதிரை என்கிறோம்; விஷ்ணுவுக்கு உரிய ஓணத்தை திரு ஓணம் என்கிறோம்- காஞ்சி சங்கராச்சாரியார் (1894-1994)

XXXXX

4.இதை விஷ்ணுவின் பண்டிகை என்பதை சங்க கால நூலான மதுரைக் காஞ்சி அழகாகச் சொல்கிறது:

மதுரைக் காஞ்சி அடிகள்  590-599

கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நன்னாட்

கோணந் தின்ற வடுவாழ் முகத்த

சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை

மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்

மாறா துற்ற வடுப்படு நெற்றிச்

சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்

கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட

நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்

கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதரக் . . . .[590 – 599]

XXXXX

5.அத்தப்பூக்கோலம்

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் “அத்தப்பூ” என்ற பூக்கோலம் ஆகும். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர்.

பெண்களின் ஆடை (கசவு)

கோடி என்றால் புது ஆடை; ஓணக் கோடி என்று அன்றைய தினம் எல்லோரும் புத்தாடை அணிவர். குறிப்பாக பெண்கள் வெண்பட்டு போல பளபளக்கும் ஆடையில் பல வண்ண பார்டர் களுடன் அணிவார்கள்

கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள்.

10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப்போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.

XXXX

6.மலையாளிகள் இன்று புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவர் ; திருக்காக்கரை வாமன மூர்த்தி கோவிலில் கூட்டம் அலைமோதும் ஷோரனூரில் கதகளி நடனம் நடைபெறும். மக்கள் வீடுதோறும் ஓணம் பாட்டுக்கள் பாடுவார்கள்

த்ரிசூரில் (திருச்சூர்) முகபடாம் அணிந்த அலங்கார யானைகள் அணிவகுப்பு நிகழும் திரிபு னித் தராவிலும் அலங்கார ஊர்வலங்கள் நிகழும் திருவனந்தபுரத்தில் வாண வேடிக்கைகள் நிகழும் .

ஆரண்முழா, குட்டநாடு ஆலப்புழையில் படகுப்போட்டிகள் நடைபெறும்.

திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி ஸ்ரீ மகா கணபதி கோவிலுக்கு பொதுமக்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொச்சியில் உள்ள திருக்காக்கரை வாமன மூர்த்தி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் ஒரு சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

XXXX

7.ஓணம் பண்டிகையை,  அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான “ஓண சாத்யா” என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும்.

XXXX

8.”கானம் விற்றாவது ஓணம் உண்”  என்பது மலையாள தேசத்தில் வழங்கும் பழமொழி ; நிலத்தை விற்றாவது ஓணத்தைக் கொண்டாடி உண்டு களிக்க வேண்டும் ; குடும்பத்தினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது முக்கியம் என்பது இதன் தாத்பர்யம் கானம் என்பது தோப்பு, நந்தவனம் ஆகியவற்றைக் குறிக்கும். கேரளத்தில் இது இல்லாத வீடு கிடையாது. தோப்பு, துறவு ஆகியவற்றில் விளையும் பொருட்களை விற்றாவது ஓணத்தை கொண்டடியே ஆகவேண்டும் . ஏனெனில் அன்று மகாபலியை யும் , விஷ்ணுவையும், தானத்தின் சிறப்பையும் கொண்டாடுகிறோம்

XXXX

9.மைப்பயந்த ஒண்கண்  மடநல்லார் மாமயிலைக்

கைப்பயந்த நீற்றான்  கபாலீச் சரம்அமர்ந்தான்

ஐப்பசி ஓண  விழாவும் அருந்தவர்கள்

துய்ப்பனவுங் காணாதே  போதியோ பூம்பாவாய்.   2

தேவாரம்- இரண்டாம் திருமுறை; பூம்பாவை திருப்பதிகம்; மயிலாப்பூர்

******

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார்  பாடிய பாசுரத்தில்  அவர்கள் பரம்பரையாக திருமாலுக்கு தொண்டு செய்வதையும், ஆவணி மாதம் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்ததாகவும் பாடியுள்ளார் .

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்*  ஏழ்படிகால் தொடங்கி*

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்*  திரு வோணத் திருவிழவில்

அந்தியம் போதில் அரியுரு ஆகி*  அரியை அழித்தவனைப்*

பந்தனை தீரப் பல்லாண்டு*  பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே -பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாசுரம்

XXXX

10.சந்திரனும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமும் கூடிய பெளர்ணமி நாளை வைத்து இந்துக்கள் , மாதத்தைக் கணித்தார்கள் ; இது சந்திரனை அடிப்படை யாக வைத்து கணக்கிடும் முறை . சித்திரா பெளர்ணமி வரும் மாதம் சித்திரை.

வேறு சில இந்துக்கள் சூரியன், 12 ராசிக்களில் நுழையும் ஒவ்வொரு ராசியையும்  அடிப்படையாக வைத்து மாதத்தைக் கணக்கிட்டார்கள் இது  சூரியனை அடிப்படையாக வைத்து கணக்கிடும் முறை . சிங்கமாதம் என்றால் சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கிறான் என்று பொருள்.

xxxx subham xxxxxx

tags QUIZ, திரு ஓணம் , அத்தப்பூக்கோலம் , ஓணம் சாத்யா , கோடி , கானம் , மஹாபலி, வாமனன் 

மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி-1 (Post.12,479)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,479

Date uploaded in London –  29 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

16-8-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி

(முதல் பகுதி)

ச.நாகராஜன்

ஏழு முக்தி தலங்களில் ஒன்று காசி!

அயோத்யா, மதுரா, மாயா(ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), த்வாரகா ஆகிய ஏழு மோக்ஷபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வது காசி தலமாகும்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் காலம் காலமாக பக்தர்களால் மிகவும் விரும்பி யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு தலமாகும்.

காசி ரயில்நிலையத்திற்கு தினமும் முப்பதுக்கும் மேற்பட்ட ரயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விமானம், கார், பஸ் என பல்வேறு விதமான போக்குவரத்து வசதிகளின் மூலமாக வருவோர் இன்னும் பல ஆயிரம்.

இது சென்னையிலிருந்து சுமார் 1156 மைல் தொலைவிலும் லக்னௌவிலிருந்து சுமார் 194 மைல் தொலைவிலும் உள்ள தலமாகும்.

1800 கோவில்கள் கொண்ட திரு நகரம்!

இதன் புனிதத்தன்மையையும்  மஹிமையையும் யாராலும் முழுவதுமாக விளக்க முடியாது. 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான் என்று சரித்திர ஆசிரியர்கள் வியந்து கூறுகின்றனர்.

அன்னபூரணி, விசாலாட்சி, துண்டி கணபதி, துர்க்கா, சங்கட விமோசன ஹனுமான், கால பைரவர், பசுபதிநாதர், பிந்து மாதவர் என மஹிமை வாய்ந்த ஆலயங்கள் பல இங்கு உள்ளன. ஆகவே இரவும் பகலுமாக பக்தர்கள் கூட்டத்தை ஆங்காங்கே கண்டு கொண்டே இருக்கலாம்.

அத்துடன் மிக அதிகமான புண்ணிய ஸ்நான கட்டங்கள் கங்கைக் கரை ஓரம் அமைந்திருக்கும் இடமும் காசி தான்.

காசி ரகசியம்!

கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும், திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும், துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலி யுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி க்ஷேத்திரம் இருப்பதாக காசி ரகஸ்யம் கூறுகிறது.

காசி என்றால் ஒளி தரும் இடம் என்று பொருள்.

காசிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமும் பெருமையும் ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய ரகசியம் ஒன்று உண்டு.

பிரளய காலம் என்று ஒன்று உண்டு. அப்போது மூலப் பொருள் தம் படைப்பு முழுவதையும் சுருக்கி ஒரு குடுக்கையில் அமுதம் கலந்து அடைத்து விடுகிறது. இதுவே மகாகவி கம்பன் ராமாயணத்தில் கடவுள் வாழ்த்தாகக் கூறும் ‘உலகம் யாவையும் தாம் உளவாக்கல்” என்பதாகும்.

பிறகு தக்க தருணம் வரும் போது அது வெளி விடுகிறது.

அந்தக் குடுக்கையைப் பத்திரப்படுத்தும் இடம் தான் காசி திருத்தலம்!

ஆக பேரண்டப் படைப்பில், காசி தான் உற்பத்தி கேந்திரமாகவும் லய கேந்திரமாகவும் ஆகிறது.

இப்படிப்பட்ட பெருமை வேறு எந்தத் தலத்திற்கும் கிடையாது.

இன்னொரு காரணமும் இந்தத் தலத்தின் சிறப்புக்குக் காரணமாக அமைகிறது. இதர தலங்களில் நல்வினை செய்தோருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். ஆனால் இந்தத் தலத்திலோ நல்வினை, தீவினை என்றில்லாமல் அனைவருக்கும் முக்தி கிட்டுமாம். இப்படி சனத்குமார சம்ஹிதை கூறுகிறது.

வாரணாசி

காசிக்கு இன்னொரு பெயர் வாரணாசி. அஸி நதியையும் வருணை நதியையும் தெற்கு வடக்கு எல்லையாகக் கொண்ட கங்கைக் கரை நகரம் என்பதால் வாரணாசி என்ற பெயர் வந்தது.

காசி என்றவுடன் கங்கை நதி நம் மனதிலே எழுந்தருளுவாள்.

அரிய தவம் செய்து பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அனைத்துப் பாவங்களையும் போக்கும் புனித நதி கங்கை.

64 கட்டங்கள்

கங்கைக் கரை ஓரமாகச் சென்றால் காசியின் நீளம் சுமார் நான்கு மைல்கள். இந்தப் பகுதியில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ஐந்து.

அஸி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. இங்கு தான் அஸி நதி கங்கையுடன் கலக்கிறது. தச அசுவமேத கட்டம் என்பது பத்து அசுவமேத யாகங்களைச் செய்வதால் கிடைக்கும் பலனைத் தரும் கட்டம். வருணாகட்டம் என்பது வருணா நதி சங்கமம் ஆகும் இடம் ஆகும். அடுத்து பஞ்ச கங்கார கட்டம் என்பது ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ள கட்டமாகும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கட்டம் மணிகர்ணிகா கட்டம். இதுவே பிரதான ஸ்நான கட்டமாகும்.

இந்த ஐந்து கட்டங்களில் நீராடியவர்கள் பித்ரு காரியங்களைச் செய்வது மரபு.

மணிகர்ணிகா கட்டத்தில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ளது அரிச்சந்திரா காட்! இங்கு தான் சந்திரமதி தன் மகன் லோகிதாசனை எரிக்க வரும் போது அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து பார்த்த இடம்.

இந்த ஸ்நானத்தை முடித்தவுடன் மணிகர்ணிகா கட்டத்திற்கு அருகில் உள்ள தாரகேஸ்வரர் ஆலயம் சென்று ஸ்வாமியைத் தொட்டு பூஜிக்கலாம். கங்கை நீரை எடுத்துக் கொண்டு வந்து அபிஷேகமும் செய்யலாம்.  மேலே துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த தரிசனத்தை முடித்த பின்னரே காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும் என்பது பாரம்பரிய பழக்கமாகும்.

காசி விசுவநாதர் ஆலயம்

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று விஸ்வநாதர்.

     காசி விசுவநாதர் ஆலய பிரகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் அமைந்துள்ள பிரகாரமாகும். மையத்தில் விஸ்வநாதரின் கர்பக்ருஹம் உள்ளது. கங்கை நீர், பால் ஆகியவற்றால் பக்தர்கள் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.

இந்த ஆலயத்தை 1767 முதல் 1795 முடிய இந்தூரை ஆண்ட மஹாராணி ராணி அகல்யாபாய் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அவர் கோவிலுக்குச் செய்த நற்பணிகள் பற்பல.

கோவிலில் இருபத்தி இரண்டு மணங்கு தங்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆகவே இதை தங்க ஆலயம் என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

·                     தொடரும்