மேலும் சில சிவன் கோவில்கள்:108 மஹாராஷ்டிர புனித தலங்கள்-PART 13 (Post.11,993)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,993

Date uploaded in London – –  12 May , 2023                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி 13

50.வேல்னேஸ்வரர் சிவன் கோவில்ரத்ன கிரி

அருமையான மணலுள்ள கடற்கரை, தென்னந்தோப்புகள் புடை சூழ அமைந்த கோவில் வேல்னேஸ்வரர் கோவில் ஆகும். ரத்ன கிரி மாவட்டத்தில் கணபதி புலே என்னும் ஊரிலிருந்து 72 கிலோ மீட்டர் . காட்கில், கோகலே குடும்பத்தினரால் புதுப்பிக்கப்பட்ட பழைய கோவில். பழைய பாணியில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் சிவன் சந்நிதியுடன் விஷ்ணு, கணபதி, காலபைரவன் சந்நிதிகளையம் காணலாம் கர்ப்ப கிரஹ த்தில் வண்ண ஓவியங்களும், சிற்பங்களும் புராணக் காட்சிகளை சித்தரிக்கின்றன . மகா சிவராத்திரி காலத்தில் பக்தர்கள் கூட்டம் பெரிதாகும் . 

XXX

51பாணேச்வரர் சிவன் கோவில் நரசபூர்

புனே நகரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் நரசபூரில் அமைந்த சிவன் கோவில் இது. காடுகளுக்கிடையில் அமைந்த இந்தக் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வெல்லப்பட்ட போர்ச்சுகீசிய மணி கட்டப்பட்டு இருக்கிறது. போர்ச்சிகீசிய கடற்படையை  வென்ற மஹாராஷ்டிர தளபதி , 4 பெரிய மணிகளைக் கொண்டுவந்து 4 கோவில்களில் கட்டினார்  அவருடைய பெயர் சிமாஜி அப்பா . இது நடந்த ஆண்டு 1739..

XXX

52.ஜோதிபா கோவில்வாடி ரத்னகிரி , கோலாப்பூர் மாவட்டம்

ரத்னாசுரன் என்ற அசுரனை சிவன் மாய்த்த குன்றில் அமைந்த  (ज्योतिबा) கோவில் இது. சித்திரை, வைகாசி மாத முழு நிலவு நாட்களில் விழாக்கள் நடைபெறும். சிவன், கால பைரவன் கோலம் கொண்டதாகவும் , அவரது வடிவம் கண்டோபா எனப்படும் என்றும் பக்தர்கள் கூறுவார்கள்  100 படிகள் ஏறினால் கோவிலை அடையலாம். பிரதான சந்நிதியில் கேதாரேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது. இது தவிர ஜோதிபாவின் உருவம் குதிரை மீது காணப்படுகிறது . கோவில் அமைந்த குன்றின் உயரம் 3124 அடி. சாங்கிலி என்னும் ஊரிலிருந்து 55 கி.மீ ., கோலாப்பூர் என்னும் ஊரிலிருந்து 18 கி.மீ. இப்போதுள்ள கட்டடங்களை குவாலியர் சிந்தியா குடும்பத்தினர் கட்டினர் .

XXX

53. மார்லேஸ்வரர் குகைக் கோவில்

சிறிய கோவில்தான். குகைக்குள் இருக்கிறது .ரத்ன கிரி மாவட்டத்தில், தேவ் ருக் என்னும் ஊரிலிருந்து 17 கிலோமீட்டர் . மலை மேல் 500 படிகள் வரை ஏறினால் இறைவனைத் தரிசிக்கலாம்.காடுகளின் வழியே நடந்தும் செல்லலாம். அந்தப் பாதையில் சென்றால் 3 நாட்கள் ஆகும். கோவில் அருகிலுள்ள ‘பார்வை மேடை’யில் ஏறி நின்றால் தாரேஷ்வர் நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம் . இங்கு கோவிலுக்குள் விஷப்பாம்புகள் நெளிந்து செல்லும். பக்தர்களை கடிப்பதில்லை. துணிச்சல்மிக்கவர்கள் அவைகளை கைகளில் எடுத்தும் மகிழ்கிறார்கள் . பாம்பு கடித்து இறந்ததாக செய்திகள் இல்லை. அருகிலுள்ள பாவ் நதியில் புனித நீராடுவதும் பக்தர்கள் விரும்பும் ஒரு சடங்கு . மகா சிவராத்திரி காலத்திலும் பெளர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் குமியும். 200, 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.

XXXX

54.சங்கமேஸ்வரர் சிவன் கோவில் ஹரிபூர்

ஸ்ராவண (ஆவணி) மாதத்திலும், திங்கட் கிழமைகளிலும் (சோமவாரம்) பக்தர்களைக் கவர்ந்து இழுக்கும் சங்கமேஸ்வரர் கோவில் சாங்கிலி வட்டாரத்தில் உளது;  ஹரிப்பூரில் கிருஷ்ணா நதியும் வர்ணா நதியும் சங்கமம் ஆகின்றன மார்க்கண்டேயன் என்ற பெயரில் சிவன் வழிபாடு நடைபெறுகிறது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோவில் இது. 1768-ம் ஆண்டில் கோவிந்த ஹரி பட்டவர்த்தன் என்பவர் இந்த ஊரை பிரா மணர்களுக்குத் தானம் (பிரம்மதேயம்) செய்ததால் அவர் நினைவாக ஹரி புரம் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

Xxx

55. குங்கேஸ்வர் சிவன் கோவில்தேவகாட்

தேவ் காட் என்னும் ஊரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த இடம். வெண் மணல் நிறைந்த அழகான, நீண்ட  கடற்கரை , இந்தக் கோவிலுக்கு அழகு சேர்க்கிறது . தென்னிந்திய பாணியில் கட்டப்பட்ட இந்தக் கோவில், சுமார் 1000 ஆண்டு பழமையானது ;யாதவ அரசர்கள் கட்டிய கோவில். சத்ரபதி சிவாஜி மஹராஜ் அடிக்கடி வந்து வழிபட்ட சிவ ஸ்தலம் . தென் கொங்கணத்தின் காசி நகரம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

ஒரு ஈரானிய வியாபாரி , இந்தக் கடற்கரையை அடையும் தருணத்தில் பிரச்சனை ஏற்படவே கோவில் கட்டுவதாக நேர்ந்தவுடன், பிரச்சனை தீர்ந்து போனதாம். அவர் கட்டிய கோவில் கட்டிடங்களும் இருக்கின்றன.

கோவிலின் கிழக்குப் பக்கத்திலுள்ள குகைகள் பாண்டவர் குகைகள் என்று அழைக்கப்படுகின்றன . அங்கே சுவரில் வீரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவிலில் இருந்து நந்தகான் ரயில் நிலையம் 42 கி.மீ. கங்கவலி ரயில் நிலையம் 60 கிலோமீட்டர்.

xxx

56.ஷிகார் ஷிங்னாபூர் சிவன் மந்திர்

இங்குள்ள சிவன் கோவிலும் சனைச்சர  (சனி) பகவான் கோவிலும் மிகவும் பிரசித்த மானவை . இங்குள்ள சிவன் கோவில் பழமையானது சாதாரா மாவட்டத்தில் இருக்கிறது  கோவிலில் எட்டு சிவலிங்கங்கள், 5 நந்திகள்  இருக்கின்றன  இதை தட்சிண கைலாசம் என்றும் அழைப்பர் .கர்ப்பக்கிரகத்தில் இரண்டு லிங்கங்களைத் தரிசிக்கலாம். வசந்த காலத்தில் விழா நடைபெறும்.பக்தர்கள் காவடிகளில் நீரைக் கொணர்ந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள் சிவன்-பார்வதி கல்யாணம் நடந்த இடம் இது என்பது ஐதீகம்

Xxxx

ஜோதிர்லிங்க ஸ்லோகம்

सौराष्ट्रे सोमनाथं च श्रीशैले मल्लिकार्जुनम्।

उज्जयिन्यां महाकालम्ॐकारममलेश्वरम्॥१॥

परल्यां वैद्यनाथं च डाकिन्यां भीमाशंकरम्।

सेतुबंधे तु रामेशं नागेशं दारुकावने॥२॥

वाराणस्यां तु विश्वेशं त्र्यंबकं गौतमीतटे।

हिमालये तु केदारम् घुश्मेशं च शिवालये॥३॥

एतानि ज्योतिर्लिङ्गानि सायं प्रातः पठेन्नरः।

सप्तजन्मकृतं पापं स्मरणेन विनश्यति॥४॥

To be continued…………………………………………

 tags-  குங்கேஸ்வர் ,சிவன் கோவில்,சங்கமேஸ்வரர், மார்லேஸ்வரர், குகைக் கோவில், பாணேச்வரர், வேல்னேஸ்வரர் 

சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி நீங்கள் எப்படி இருக்க வேண்டும்? (Post No.11,992)

Tibetan Painting of human beings, Wellcome collection, London

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,992

Date uploaded in London –   12 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

சுபாஷித செல்வம்

சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி நீங்கள் எப்படி இருக்க வேண்டும்?

ச.நாகராஜன் 

தீர்க்கமாக இருக்க வேண்டிய ஐந்து அங்கங்கள்!

சாமுத்ரிகா லக்ஷணம் என்பது ஒரு பெரிய சாஸ்திரம்.

மனிதனின் அங்க அமைப்பு எப்படி இருக்க வேண்டும், ஆணோ பெண்ணோ எப்படிப்பட்ட அங்க அமைப்புகள் இருந்தால் அவர்கள் எப்படிப்பட்ட குணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பன போன்ற உண்மைகளை விளக்கும் சாஸ்திரம் அது.

அதன் படி ஒருவருக்கு தீர்க்கமாக இருக்க வேண்டிய அங்கங்கள் ஐந்து.

1) தோள் – பாஹு 2) இரண்டு கண்கள் – நேத்ர த்வயம் 3) வயிறு – குக்ஷி 4) மூக்கு- நாஸா 5) மார்பு – ஸ்தனயோரந்தரா

இந்த ஐந்தும் தீர்க்கமாக (நீளமாக) இருக்க வேண்டும்.

பாஹு நேத்ர த்வயம் குக்ஷிர்யே நாஸே ச |

ஸ்தனயோரந்தரச்சைவ பஞ்சதீர்க ப்ரசஸ்யதே ||

–    சப்தகல்பத்ருமம் III -8

தானம் செய்யும் போது செய்யக்கூடாதவை

தானமானது தக்கவருக்கே செய்யப்பட வேண்டும். அப்படி தக்கவருக்குச் செய்யப்படும் தானமும் தக்கபடி செய்யப்பட வேண்டும்.

தானத்தைச் செய்யும் போது கீழ்க்கண்ட ஐந்து தவறுகள் (தான தூஷணம்) இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

1) அனாதரா – அவமரியாதையுடன் தரப்படக்கூடாது.

2) விலம்பா – தாமதித்துத் தரக் கூடாது. (தானம் பெறுபவரை அலக்ஷியப்படுத்தும் விதமாகக் காக்க வைத்திருந்து தாமதமாக தானத்தைத் தரக் கூடாது,)

3) வைமுகா – முக்கியத்துவம் இல்லாத வகையில் அவரை அலக்ஷியப்படுத்தும் விதமாகத் தரக் கூடாது.

4) அப்ரியவாச – கடுமையான வார்த்தைகளைச் சொல்லித் தானம் தரக் கூடாது.

5) பஸ்சாத் சந்தாப – கொடுத்தபின் வேதனைப் படக் கூடாது. கொடுத்த பின் ஏன் கொடுத்தோம் என்று துயரப்படக் கூடாது.

அனாதரோ விலம்பஸ்ச வைமுக்யம் சாப்ரியம் வச: |

பஸ்சாத் பவதி சந்தாபோ தானதூஷணபஞ்சகம் ||

நல்ல காரியத்திலும் கெட்ட காரியத்திலும் சம பங்கு கொள்வோர்!

ஒரு காரியத்தைச் செய்யும் போது அதில் சம பங்கு கொள்வோராகத் திகழ்பவர் நால்வர். (சுக்ருத துஷ்க்ருத சம பாகினஹ)

1) கர்த்தா – ஒரு காரியத்தைச் செய்பவர்

2) காரயிதா – அந்த காரியத்திற்குப் பின்னால் இருப்பவர்

3) ப்ரேஷகா – அதைச் செய்ய அனுப்புபவர்

4) அனுமோதகா – அதை ஆமோதித்து அங்கீகரிப்பவர்

கர்தா காரயிதா சைவ ப்ரேஷகோஹ்ரானுமோதக: |

சுக்ருதம் துஷ்க்ருதம் சைவ சத்வார: சமபாகின: ||

சரிசமமான அந்தஸ்து இருந்தாலேயே சோபிக்கும் நான்கு விஷயங்கள்

சரி சமமான அந்தஸ்து இருந்தால் மட்டுமே சோபிக்கும்

விஷயங்கள் நான்கு.

1) வித்யா பாஷ்யா – வித்தையைக் கற்றல் (சரிசமமாக ஒத்த அறிவுள்ளவர்கள், ஒத்த படிப்புள்ளவர்கள் இடையே மட்டுமே நட்பும் மரியாதையும் அழகுபடும்.)

2) விசாரம் (Deliberation) – விசாரம் எனப்படும் ஆழ்ந்த ஆய்வு அல்லது கருத்துரையாடல் என்பதும் சம அந்தஸ்து உள்ளவர்களிடையே சோபிக்கும்.

3) விவாஹம் – திருமணம் என்பது சம அந்தஸ்து உள்ள குடும்பங்களிடையே நடந்தால் மட்டுமே அழகு பெறும்.

4) விவாதம் (Debate) – ஒரு விவாதம் என்பதும் சமமானவர்களிடையே நடந்தால் மட்டுமே சோபிக்கும்.

சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் வரும் சுபாஷிதம் இதை இப்படி விளக்குகிறது:

வித்யாப்யாஸோ விசாரஸ்ச சமயோரேவ ஷோபதே |

விவாஹஸ்ச விவாதஸ்ச சமயோரேவ ஷோபதே ||

–    சுபாஷித ரத்ன பாண்டாகாரம் -155/86

***

More Shiva Temples :108 Famous Shrines in Maharashtra ; Part -12 (Post No.11,991)

Picture of Velneswar Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,991

Date uploaded in London – –  11 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Shree Dwadasha Jyotirlingam Stotram

सौराष्ट्रे सोमनाथं च श्रीशैले मल्लिकार्जुनम्।
उज्जयिन्यां महाकालम्ॐकारममलेश्वरम्॥१

परल्यां वैद्यनाथं च डाकिन्यां भीमाशंकरम्।
सेतुबंधे तु रामेशं नागेशं दारुकावने॥२

वाराणस्यां तु विश्वेशं त्र्यंबकं गौतमीतटे।
हिमालये तु केदारम् घुश्मेशं च शिवालये॥३

एतानि ज्योतिर्लिङ्गानि सायं प्रातः पठेन्नरः।
सप्तजन्मकृतं पापं स्मरणेन विनश्यति॥४

Saurashtre Somanatham Cha Shrishaile Mallikarjunam |
Ujjaiyinyam Mahakaalam Omkarama-Maleshwaram |1||

Paralyam Vaidyanatham Cha Dakinyam Bheemashankaram |
Setubandhe Tu Ramesham Nagesham Darukavane |2||

Varanasyam Tu Vishvesham Tryambakam Gautamitate |
Himalaye Tu Kedaram Gushmesham Cha Shivalaye |3||

Atani Jyotirlingani Sayam Pratah Pathennarah |
Saptajanma Kritam Papam Smaranena Vinashyati |4||

Part 12

50.Velneshwar Shiva Temple of Ratnagiri 

The charming coastal village of Velneshwar is famous for its pristine beaches, coconut plantations and the revered Velneshwar Shiva Temple.

At a distance of 17 km from Guhagar and 72 km from Ganpatipule, Velneshwar Temple and Beach are located at Velneshwar in Ratnagiri district of Maharashtra.; it is  dedicated to Lord Shiva and his consort Goddess Parvati. Earlier, the temple was built by Gadgils and was later renovated by Sri Trimbak Ravaji Gokhale.

Representing an example of ancient Hindu architectural style, the temple houses many small shrines dedicated to Lord Vishnu, Ganesha and Kala Bhairav. The main sanctum of the temple is adorned with paintings and stone carvings representing various episodes of mythology. This temple is visited by a large number of devotees during the festival of Mahashivratri.

Xxx

51. Baneshwar Mahadev Temple in Nasrapur near Pune

Baneshwar Temple of Lord Shiva is situated in Nasrapur village 36 kms from Pune.  It is a pleasant and calm place amidst a jungle. The temple hosts an important bell which was captured by Chimaji Appa after defeating the Portuguese in the battle of Bassein in 1739. It is at least 300 years old.

Xxx

52.Jyotiba temple, near Wadi Ratnagiri, Kolhapur District

Jyotiba Temple (Marathi: ज्योतिबा) is a holy site of Hinduism near Wadi Ratnagiri in Kolhapur district. The deity of the temple is known by the same name. An annual fair takes place on the full moon night of the Hindu months of Chaitra and Vaishakha.

There is a belief that Shiva defeated Demon Ratnasur on the hill. As per some devotees Shiva took the fierce Kalbhairav form to defeat the demon. The deity is also referred to as Khandoba.

 Jyotiba sits on a horse, and therefore it is possible that he may symbolically represent the sun god. The image faces south, towards Mahalakshmi temple, in Kolhapur as a protective gesture towards her. 

To reach the sanctum of the temple, tourists will have to cross over 100 stairs. The current structure of the temple was built by the Scindia family of Gwalior. Main deity of the temple is the form of ‘Shivlinga,’ also known as Kedareshwar. Besides, there is an idol of Yamai and Chopadai. Jyotiba temple is situated at a height of 3124 feet above sea level . The temple is 18 km north-west of Kolhapur and around 55  km from Sangli.

Xxx 

53.Marleswar cave Shiva Temple

It is located at 17 km from Devrukh and 44 km from Sangameshwar Road railway station. Marleshwar is a small Shiva temple in Sangameshwar subdivision of Ratnagiri district . It takes about one and a half hours to reach by road; visitors then climb 300–400 steps.

The temple is in a cave and has a small viewing platform from which the magnificent Dhareshwar Waterfalls can be admired. Every year thousands of devotees visit and perform ablutions in the nearby Bav River.A trek through Chiplun to reach Marleshwar Temple takes about three days, from Helwak through Chandoli Forest.

The devotees in the Marleshwar temple interact with venomous snakes present all over the temple. The shocking fact is that not a single death has occurred so far by the bite of any venomous snake inside the temple. In fact, the venomous snakes and cobras are very friendly with the devotees.

Makara sankranti is the most popular festival in this place. On Makarsankranti, Marleshwar and Girijadevi’s marriage takes place. It is celebrated with a lot of enthusiasm. There are many fares organized on Mahashivarati and Poornima.

The Shiva linga was brought to this temple way back in the 18th century.

xxx

54. Sangameshwar Shiva Temple, Haripur

The Sangmeshwar Temple of Sangli is one of the popular temples in the region. The temple is dedicated to Lord Shiva and its most busy time is the Shravana month of the Hindu calendar, during which, it sees a large number of devotees, especially on Mondays.

The confluence of Krishna and Warna rivers is at Haripur . Gurucharitra was written 700 years ago which has mentioned the old Sangameshwar Temple in Haripur. The worship of Sangameshwar is done under the name of Markandeya. In the month of Shravan 1000s of devotees visit this sacred place for offering prayers. At the same time a big festival is also held. In the year 1768 Govind Hari Patwardhan made houses for the Brahmins, which is why the town is known as Haripur as a tribute to Hari Patwardhan.

xxxx

55. Kunkeshwar Shiva temple, Devgad

Kunkeshwar Temple is an ancient Shiva Temple situated in the Kunkeshwar village, which is 14 Kms from Devgad town. It is surrounded by a pristine beach with a long stretch of seashore and white sand, adding to its beauty. This temple has charming architecture reminiscent of the South Indian style of temple architecture, which the Yadav Kings built in 1100 A.D. Chhatrapati Shivaji Maharaj rejuvenated this temple many times and was a frequent visitor. It is also known as the Kashi of South Konkan and is visited by devotees during the Mahashivratri festival.

Kunkeshwar has an exciting story when an Iranian sailor travelled far in the sea for trade. As soon as the sailor came close to the Kunkeshwar beach, sudden problem cropped up. The sailor was a Muslim who then promised to build a temple if the problem was solved. He kept his promise but, sadly, committed suicide, fearing that people from his religion won’t accept him.

On the eastern side of the temple, there are caves from the Pandav times with beautifully carved male and female warriors in black rock. The temple also has a Ganesh idol and a Shiv-linga and Nandi .

The nearest railway station is in Nandgaon which is approximately 42 kilometers away from Kunkeshwar, while Kankavli railway station is 60 kilometers away.

xxxx

56. Shikhar Shingnapur temple

Shambhu Mahadev mandir in Shingnapur. It is famous for its Shani Graha (Planet Saturn)  temple as well.

Shikhar Shingnapur Shiva temple is located in Shingnapur hills, near Satara district . its an old temple devoted to lord Shiva.

1. there are many shivlingas (around 8) in the temple. Thats why this temple is also known as dakshin kailash.

2. in the inner sanctum, there are two shivlingams. One can  see 2 shivlingas and 5 nandi statues here.

3. In the month of march-april, great fair or “jatra” is held here. During this time, many devotees and kawadi visit the temple via mungi ghaat. shivling with the water is brought by devotees in their kavadis. During mahashivratri festival large number of  devotees visit this temple.

4. As per legend, lord Shiva and Parvati ma got married here.

To be continued…………………………………………

Tags- Velneswar, Baneswar, Kunkeswar, Shingnapur Mahadev, Sangameswar, Marleswar, Jyotibha, Shiva, Temples, beach

தெரு நாய்களைக் கொல்லலாம்: மஹாத்மா காந்தி (Post No.11,990)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,990

Date uploaded in London – –  11 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தெருக்களில் அலைந்து திரியும் நாய்களைக் கொல்வது ஹிம்சை அல்ல, அஹிம்சையே என்று மஹாத்மா காந்தி அவரது பத்திரிகைகளில் எழுதிய விஷயங்களின் சுருக்கம் பின்வருமாறு :

நாய் ஒரு  நன்றியுள்ள நண்பன். நாய்களின், குதிரைகளின் நன்றியைக் காட்டும் பல சம்பவங்கள் இருக்கின்றன அதை அறிந்த நாம் நம்முடைய நண்பர்களை எப்படி மரியாதையுடன் நடத்துகிறோமோ அப்படி நடத்த வேண்டும் . தெருக்களில் அலைந்து திரிய விடக்கூடாது தெரு நாய்களின் தொல்லையை அதிகப்படுத்துவது , நாம் கடமையிலிருந்து தவறுவதையே காட்டும். தெருக்களில் நாய்களை திரிய விடுவது நமக்கு அவமானம் ; ஆகையால் அவைகளுக்கு உணவு தரமாட்டேன் என்று நாம் கருத்துவோமானால் அது நாய்களுக்கு செய்யும் பெரிய சேவை மட்டுமல்ல. அவைகளை சந்தோஷப்படுத்துவதும் ஆகும்.

அப்படியானால்  மனிதாபிமானமுள்ள ஒரு மனிதன் தெரு நாய்களுக்கு என்ன செய்ய வேண்டும்?  தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, அதை நாய்களைப் பராமரிக்கும் சங்கத்துக்கு அனுப்பலாம் (சங்கம் இருந்தால்);  அப்படி இல்லை என்றால் தாமே ஒரு நாயையோ அல்லது சில நாய்களையோ வளர்க்கலாம். ஒரு சங்கம் இருப்பது சாத்தியம் என்பதை விட அதை பராமரிப்பது கடினமே.அப்படி நாய்களை  வளர்க்க முடியாவிட்டால் அதைப் பற்றி கவலைப்படாமல் வேறு பிராணிகளுக்கு சேவை செய்யலாம்.

ஆனால் நீங்கள் அவைகளைக் கொல்லுங்கள் என்றல்லவா சொல்கிறீர்கள்? என்று சிலர் கோபத்துடனும், சிலர் அன்புடனும் என்னைக் கேட்கிறார்கள்  நாய்களை ஒழித்துக்கட்டுவது நம்முடைய தலையாய கடமை என்று நான் சொல்லவில்லை சில நாய்களைக் கொல்வது சில சூழ்நிலைகளில் , தொல்லை ஏற்படும்போது  கொல்லுவது, நமது பணி ஆகிறது. அரசாங்கம்  நாய்களைப் பற்றிக் கவலைப்படாதபோது  , பொதுமக்கள் தாமாகவே அவைகளைப் பாதுகாக்க முன்வராதபோது அவைகள் நம் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதும்போது, அவைகளைக் கொல்ல வேண்டும். இது அவைகள் கஷ்டப்பட்டு சாவதைத் தவிர்க்கும்;  இது ஒரு கசப்பான மருந்து என்று நானும் ஒப்புக்கொள்கிறேன் . ஆனால் அப்படி அவைகளின் உயிரை வாங்குவது உண்மையாக இரக்கம் காட்டுவது , கருணை செய்வது என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை .

உயிர்க்கொலை கூட நம்முடைய ஒரு பணிதான் . அதை இப்போது காண்போம் .

நம் உடலைப் பராமரிக்க எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கு நாம் உயிர்வதை செய்கிறோம். நம் உணவுக்காக மற்ற உயிர்களைக் கொல்கிறோம்  அவை காய்கறி அல்லது பிற வகை ஜீவன்கள். . நம்முடைய உடலுக்குத் தொல்லை தரும் கொசு முதலிய ஜீவன்களை ரசாயனக் கொல்லி மூலம் தீர்த்துக் கட்டுகிறோம். இதை குற்றம் என்றோ மத விரோதமான செயல் என்றோ நாம் கருதுவதில்லை. இது நமக்காக நாம் செய்துகொள்வது; மற்றவர்களுக்கு நன்மை செய்யும்பொருட்டும் நாம் கொடிய பிராணிகளை வதைக்கிறோம் . புலிகளும் சிங்கங்களும் கிராமங்களுக்குள் புகுந்து தொல்லை தருகையில் அவைகளைக் கொல்லுவது அல்லது மற்றவர்களைக் கொண்டு கொல்ல வைப்பது கடமை என்றே கிராம மக்கள் கருதுகிறார்கள் .

கெட்ட மனிதர்களையும் கொல்லுங்கள்

மனிதர்களைக் கொல்லுவதும் கூட சில நேரங்களில் அவசியம்தான். ஒரு மனிதன் கத்தியுடன் ஓடிச்சென்று, வழியில் கண்டவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்துகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் , அவனை யாரும் உயிருடன் பிடித்துக்கொண்டு வருவதற்கு  தைரியம் இல்லை என்று  வைத்துக்கொள்ளுங்கள், அந்தப் பைத்தியக்கார மனிதனை யார் கொ ல்கிறேனோ அவனுக்கு சமுதாயம் நன்றி செலுத்தும்; அவனை உபகாரி என்றே பாராட்டுவர்.

(My comment : அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வேறு ஒரு நாட்டில், சட்டவிரயத்தமாகச் சென்று பயங்கரவாதி ஒசாமா பின் லாடனை தீர்த்துக்கட்டவழி செய்தார் ; உலகம் அதைக் கண்டிக்கவில்லை; உத்தரப் பிரதேச முதல்வர் யோகிஜி இதை இன்று மிக அழகாகச் செய்துவருகிறார்.)

அஹிம்சை என்ற கண்ணோட்டத்தில் பார்க்கையில் அப்பேற்பட்ட கொடியவனைக் கொல்லுவது ஒவ்வொருவரின் கடமை ஆகும் . ஒருவேளை ஒரு விதிவிலக்கு இருக்கலாம். ஒரு யோகியானவர் அந்த மனிதனின் வெறியைத் தவிர்த்து அவனை உயிர்வாழ விடலாம். ஆனால் நாமோ பரிபூரணத்துவம் வாய்ந்த மனிதர்களைப் பற்றி பேசவில்லை  தவறிழைக்கும் சாதாரண மனிதர்களைப் பற்றியே கதைக்கிறோம்.

கொல்லாமை என்பது மட்டும் அஹிம்சை அல்ல . ஹிம்சை என்பது என்ன?  கோபத்தினாலோ, சுய நலத்தினாலோ மற்றவர்களுக்கு தீங்கிழைப்பதும், உயிர்களைப்போக்குவதும் ஹிம்சை; அதைத் தவிர்ப்பதே அஹிம்சை .

யங் இந்தியா Young India,  4-11-1926 

–subham—

Tags -அஹிம்சை, தெரு நாய்கள், தொல்லை, பைத்தியக்காரன், கொலை

புலவரின் தாயார் முதுகில் ஏறிய புலவர்! (Post No.11,989)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,989

Date uploaded in London –   11 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

கொங்குமண்டல சதகம் பாடல் 51

புலவரின் தாயார் முதுகில் ஏறிய புலவர்! கொங்கு நாட்டின் மீது தொண்டை நாடு செய்த சோதனை!

ச.நாகராஜன்

ஆணூர் என்ற ஊர் கொங்குமண்டலத்தில் பிரசித்தி பெற்ற ஒரு ஊர். இது நொய்யல் நதிக்கரையை அடுத்து இருக்கும் ஊர். இதனையொட்டி நத்தக் காரையூர், பழையகோட்டை என்னும் ஊர்கள் உள்ளன.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியை ஆண்டவர்கள் தமிழுக்கெனில் தம் உயிரையும் கொடுப்பர்.

இந்த நொய்யல் நதி வளப்பத்தில் சிறந்த காங்கேய நாட்டு ஆணூரில் சர்க்கரையாரது சமஸ்தானத்தில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார்.

அவர் ஒரு சமயம் தக்க சன்மானம் பெரும் பொருட்டு தொண்டை நாடு சென்று எல்லப்பன் என்பவரை நாடித் தன் திறமையைக் காட்டவே அவர் மிகவும் மகிழ்ந்து தகுந்த வரிசையை அளிக்க முன் வந்தார்.

ஆனால் அந்தக் கொடையைப் பெற வலது கையை நீட்டாமல் தனது இடது கையை நீட்டினார் புலவர்.

எல்லப்பன் புலவரை நோக்கி, “ என்ன புலவர் நீர்? சன்மானம் பெறும் முறை கூட உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.

அதற்குப் புலவர், “சீமானே! அதை நன்றாக நான் அறிவேன். ஆனால், அமர்ந்த பொறையும், தமிழ் அறிவும், ஈகைக் குணமும் ஒருங்கே நிறைந்துள்ள சர்க்கரையாரின் சமூகத்தில் வாங்கிப் பழக்கப்பட்ட இந்த வலது கை பிறரிடத்து ஒரு போதும் நீட்டுவதில்லை என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. ஆகவே தான் இங்கு இடக்கையை நீட்டினேன். ஆகவே கோபம் கொள்ள வேண்டாம்” என்று பணிவுடன் கூறினார்.

இதைக் கேட்ட எல்லப்பன் எல்லையற்ற வியப்பை அடைந்தார்.

“அப்படியா? இதை அறிந்து நான் மிகவும் மகிழ்கிறேன். அப்படிப்பட்ட உதாரகுணம் கொண்ட சர்க்கரையாரை நாமே சோதிக்க ஆவல் கொண்டுள்ளோம். அந்தச் சோதனை முடியும் வரை நீர் எனது விருந்தாளியாக இங்கேயே தங்கி இரும்” என்றார் எல்லப்பர்.

தனது சமஸ்தானத்துப் புலவர்கள் சிலரை அழைத்த எல்லப்பர், “நேராக சர்க்கரையரிடம் செல்க; அவரது குணநலன்களை அறிந்து வருக” என்று கட்டளையிட்டார்.

புலவர்கள் சிலரும் கொங்கு நாட்டை அடைந்து சர்க்கரையாரின் சமஸ்தானத்திற்கு வந்தனர்.

அங்கே சர்க்கரையார் வளர்த்திருந்த அருமையான பூந்தோட்டத்திற்குள் நுழைந்தனர். அழகுற வளர்ந்திருந்த மலர்ச் செடிகளையும், கொடிகளையும் தாறுமாறாக வெட்டினர்.

இதைக் கண்ட தோட்டக் காவலாளர் ஓடோடிச் சென்று சர்க்கரையாரிடம் நடப்பதைக் கூறினார்.

இதைக் கேள்வியுற்ற சர்க்கரை மன்றாடியார், “அவர்கள் புலவர்கள் என்றால் அவர்களைத் துன்பப் படுத்தாது இன்சொல் கூறி வரவேற்று என்னிடம் அழைத்து வா” என்று காவலாளியிடம் சொன்னார்.

அவரும் அப்படியே இன்சொல் கூறிப் புலவர்களை அழைத்து வந்தார்.

புலவர்களை வரவெற்ற சர்க்கரையார், “ பெருந்தமிழ்ப் புலவீர்! பூஞ்செடிகள் ஓவ்வாதனவாயின் அவற்றை ஏவலாளரை விட்டு வெட்டுவிக்கலாமே! கற்கள் பதிக்கப்பட்ட கணையாழிகளையும், கனக தோடாக்களையும் அணிந்து கொண்டு புராண இதிஹாஸங்களைத் தொடும் தொழிலை மட்டும் கொண்டிருக்கும் தங்களின் திருக்கரங்கள் இப்படி கடினமான கோடாரி, அரிவாள் ஆகிய ஆயுதங்களைத் தொட்டு வருந்தலாமோ, கைகள் வலிக்குமே” என்று கூறி அவர்களின்  கைகளைத் தடவி விட்டு அதில் தைலம் பூசி வெந்நீர் ஆட்டுவித்தார்.

புலவர்கள் அத்தோடு நில்லாமல் மேலும் அவரைச் சோதிக்கக் கருதினர்.

ஒரு புலவர் அருமையாக விருந்து படைக்கப்பட்ட சமயத்தில் சர்க்கரையாரின் அன்னையார் அதைப்  பரிமாற வந்தபோது அவர் முதுகின் மீது திடீரென்று ஏறினார்.

திடுக்கிட்ட அன்னையார் தன்  மகனை நோக்கினார்.

சர்க்கரையார் தன் அன்னையாரைப் பார்த்து, “அன்னையே! அந்தி பகல் சிரமம் கருதாது தொந்தி சரிய என்னைப் பத்து மாதம் சுமந்தவர் தானே தாங்கள்! இப்புலவரைச் சிறிது நேரம் சுமக்கலாகாதா?” என்று வினவினார்.

இதைக் கேட்ட புலவர் சட்டென கீழிறங்கினார்.

சர்க்கரையாரையும் அவரது அன்னையாரையும் நன்கு பலவாறு புகழ்ந்து வணங்கினார்.

“தங்களின் அன்பையும் பெருகிய ஆதரவையும் புலவர் மக்களுக்கு அளித்து வந்தமைக்காகவே அதன் உண்மைத் தன்மையை அறியக் கருதி இந்தத் தகாத சோதனையைச் செய்தோம். எங்கள் குற்றத்தைப் பொறுத்தருள்க. நாங்கள் தொண்டை நாட்டுப் பெரும் வள்ளலாகிய குன்றை எல்லப்பன் என்பாரது சமஸ்தானப் புலவர்கள்” என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த சர்க்கரையார், “தொண்டை நாட்டாரின் சோதனைகளுக்குக் கொங்கு நாட்டார் ஆற்றவல்லரோ” என்று பதிலை அளித்தார்.

அவர்களுக்குத் தக்க சன்மானம் அளித்துக் கௌரவித்தார்.

நேரடியாக எல்லப்பரிடம் சென்ற புலவர்கள்,

“செங்குன்றை யெல்லாநின் செங்கைக் கொடையதனுக்

கெங்கெங்குந் தேடி யிணை காணேங் – கொங்கதனிற்

சர்க்கரையைப் பாடலாந் தண்டமிழ்க் கொன் றீயாத

எக்கரையாம் பாடோ மினி”

என்ற அழகிய வெண்பாவைக் கூறினர்.

சர்க்கரையாரிடம் சென்றது முதல் அங்கு நடந்தது அனைத்தையும் புலவர் பெருமக்கள் எல்லப்பருக்கு விளக்க அவர் வியந்து மகிழ்ந்தார்.

தனது விருந்தினராக உள்ள கொங்கு நாட்டுப் புலவரை எல்லப்பர் அழைத்து, “நீர் சர்க்கரையாரைப் பற்றிக் கூறியதனைத்தும் உண்மையே” என்று கூறி அவருக்கு வேண்டிய பொருள் அளித்து விடை கொடுத்தார்.

நல்லதம்பி சர்க்கரை காதல் என்னும் நூல்,

“அன்னை வெரிந் மேற்கொளச்சே யானனத்தை நோக்குதலும்

என்னை யீரைந்து திங்க லின்பாய்ச் சுமந்தீரே

இவரை யொருநிமிட மே சுமப்பீர் என்றுரைத்த”

என்று இவ்வாறு சர்க்கரையாரின் தாயார் புலவரைச் சுமந்த வரலாற்றை எடுத்துரைக்கிறது.

எல்லப்பரைப் பற்றிய பாடல்கள் பல உண்டு.

புறவோ டுடற்றிசை போக்கிய வேந்தன் புரிந்ததினு

மறவோ கொடிது கொடிது கண் டீரற னன்று மற்றுப்

பிறவோ மறுத்துரை செய்யான் மிகச்சிரம் பேர்த்துவைத்த

மறவோனைத் தாங்கிய வையமன் றோதொண்டை மண்டலமே

தலையிந் தாவெனு மைந்தா தாலோ தாலேலோ

தண் குன்றைப்பதியெல்லா தாலோ தாலேலோ

ஆலெங்கே யங்கே யரும்பறவை யாற்றுயிலு

மாலெங்கே யங்கே மலர்மடந்தை – சோலை தோறுஞ்

செங்கே தகைமணக்குஞ் செங்குன்றை யெல்லனெங்கே

யங்கே யிரவலரெல் லாம்

எல்லப்பன் எங்கே, அங்கே அனைத்து இரவலரும் கூடி இருப்பர் என்று இப்படிப் புகழ் பெற்றவர் எல்லப்பர்.

இப்படிப்பட்ட அருமையான சர்க்கரையாரையும் அவர் தாயாரையும் கொண்டது கொங்கு மண்டலமே என கொங்குமண்டல சதகம் பாடல் 51இல் கூறிப் பெருமைப் படுகிறது.

பாடல் இதோ:

திருத்து புகழ்பெறு மாணூரிற் சர்க்கரை செந்தமிழோன்

விருத்தமுட னன்னை மேலேறத் தாய் வெகு ளாமலெனைப்

பொருத்த முடன்பத்து மாதஞ் சுமந்து பொறையுயிர்த்தாய்

வருத்த மிதிலென்ன வென்றா னவன்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள்

பெருகிய புகழ் பெற்ற ஆணூர்ச் சர்க்கரை என்பானின் தாயார் அன்னம் பரிமாற, உணவருந்தும் புலவோர்களில் ஒருவர் அவ்வன்னையின் முதுகில் ஏறினார். இக்கொடிய செய்கைக்கு ஆற்றாத தாய் தன் பிள்ளையின் முகத்தை நோக்க, அந்தப் பிள்ளை, “அம்மா! என்னை பத்து மாதம் சுமந்திருந்த தாங்கள், இப்புலவரைச் சிறிது நேரம் சுமக்கலாகாதா? எனக் கூறினார். அப்படிப்பட்ட சர்க்கரை என்பானும் கொங்குமண்டலமே தான்.

அருமையான இந்த வரலாறு தமிழ்ப் புலவர்கள் மீது வள்ளல்கள் எவ்வளவு மதிப்புக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குகிறது அல்லவா?!

***

Kill the Street Dogs and Lunatic Men-  Mahatma Gandhi (Post No.11,988)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,988

Date uploaded in London – –  10, May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Mahatma Gandhi wanted stray dogs and farm raiding monkeys to be killed. He even earned the wrath of animal lovers for killing the sick calf in his Ashram. He argued that is not Himsa.

Here is one article from his magazine:

The dog is a faithful companion. There are numerous instances of the faithfulness of dogs and horses. But that means we should keep them and treat them with respect as we do our companions and not allow them to roam about. By aggravating the evil of stray dogs we shall not be acquitting ourselves of our duty to them. But if we regard the existence of stray dogs as a shame to us, and therefore refuse to feed them, we shall be doing the dogs as a class real service and make them happy.

What then a humane man do for stray dogs? He should set apart a portion of his income and send it on to a society for the protection of those animals if there be one.  If such a society is impossible- and I know it is very difficult even if it is not impossible- he should try to own one or more dogs. If he cannot do so, he should give up worrying about the question of dogs and direct his humanity towards the service of other animals.

“But you are asking us to destroy them?” is the question angrily or lovingly asked by others. Now, I have not suggested the extirpation of dogs as an absolute duty. I have suggested the killing of some dogs as a ‘duty in distress’ and under certain circumstances. When the State does not care for stray dogs, nor does the Mahajan (general public) and one is not prepared to take care of them oneself, then, and if one regards them as a danger to society, he should kill them and relieve them from lingering death. This is bitter dose, I agree. But it is my innermost conviction that true love and compassion consist in taking it.

Terrorist Osama Bin Laden was killed  illegally by President Obama in another country

Taking life may be a duty. Let us consider this position.

We do destroy life as much as we think it is necessary for sustaining the body. Thus for food we take life, vegetable and other, and for health we destroy mosquitoes and the like by the use of disinfectants etc. and we do not think we are guilty of irreligion in doing so.

This is as regards one’s own self. But for the sake of others, i.e. for the benefit of the species we kill carnivorous beasts. When lions and tigers pester their villages, the villagers regard it a duty to kill them or have them killed.

Kill bad men also!

Even manslaughter  may be necessary in certain cases. Suppose a man runs amuck and goes furiously about sword in hand and killing anyone that comes his way, and no one dares to capture him alive. Anyone who despatches this lunatic will earn the gratitude of the community and be regarded as a benevolent man.

From the point of view of Ahimsa (non-violence)  it is the plain duty of everyone to kill such a man. There is indeed one exception if it can be so called. The yogi who can subdue the fury of this dangerous man my not kill him. But we are not here dealing with beings who have almost reached perfection; we are considering the duty of a society of ordinary erring human beings.

The fact that Ahimsa does not simply mean non-killing. Himsa means causing pain to or killing any life out of anger, or from a selfish purpose, or with intention of injuring  it. Refraining from so doing is Ahimsa.

Young India 4-11-1926

–subham—

Tags – Ahimsa, Stray dogs, killing lunatics

இந்து மதத்தில் தாழம்பூ, வெட்டிவேர் கதை (Post No.11,987)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,987

Date uploaded in London – –  10, May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

தாழம்பூவை ஏன் பயன்படுத்தக் கூடாது? என்ற கதை பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான்.

தத்தாத்ரேய த்ரிபுர ரஹஸ்யத்தில் உள்ள கதை :–

பிரம்மாவுக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்தன. அப்போது பிரம்மா விஷ்ணு இருவரிடையேயும் யார் பெரியவர் என்ற போட்டி இருந்தது . அந்த நேரத்தில் சிவபெருமான் பெரும் ஜோதியாகத் தோன்றினார். பிரம்மாவும் விஷ்ணுவும் இது என்ன ஜோதி என்று வியந்தனர். சரி இதன் அடி, முடி இரண்டையும் கண்டுபிடிப்போம். யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ அவரே பெரியவர் என்று முடிவு செய்தனர்.. உடனே விஷ்ணு ஒரு பன்றியின் வடிவம் எடுத்து பூமியைத் தோண்டிச் சென்றார். அந்த ஜோதியின் முடிவைக் காண்பது அவரது நோக்கம். அதே நேரத்தில் பிரம்மா, ஒரு அன்னத்தின் வடிவம் எடுத்து மேல் நோக்கிப் பறந்தார். விஷ்ணுவால் ஜோதியின் முடிவைக் கண்டு பிடிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். பிரம்மாவாலும் ஜோதியின் மேல்பாகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு தாழம்பூ (screw pine flower or Pandanus )  வானத்திலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.

எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மா கேட்டார்.எனக்குத் தெரியாது என்றது . சிவனின் தலையிலிருந்து வருவதாக  பொய் சாட்சியம் சொல்லு என்று அழைத்துச் சென்றார் பிரம்மா . இருவரும் சிவனிடம் சென்றனர். சிவனின் ஜோதி வடிவின் முடியைக் கண்டுவிட்டதாக பிரம்மா சொல்லி, அதற்கு சாட்சியம் தாழம்பூ என்று சொல்ல, சிவனுக்கு மஹா கோபம் எற்பட்டது  பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார் . தாழம்பூவை எவரும் பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் போட்டார் . பிரம்மாவுக்குக் கோவில் எழுப்பக் கூடாது என்று தடையும் போட்டார் .

இப்போதும் இந்துக்கள் பூஜையில் இதைப் பயன்படுத்துவதில்லை. அதேபோல பிரம்மாவுக்கும் அதிக கோவில்கள் இல்லை .

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், சின்னப் பெண்களுக்குப் பின்னல் பின்னி தாழம்பூவை கட்டி , அதைக் கண்டு மகிழ்கிறார்கள்.

Xxxx

வெட்டிவேரின் கதை (குச என்னும் புல்)

வங்காளத்தில் கஸ் சஷ்டி என்னும் விழா பெளஸ மாத சுக்ல பக்ஷ ஆறாம் நாள் (சஷ்டி) கொண்டாடப்படுகிறது .

அப்போது கஸ் என்று வங்காளிகள் சொல்லும் குச புல்  வழிபடப்படுகிறது. சஷ்டி என்னும் தேவதையை அந்தப் புல்லின் அம்சமாகக் கருதுகின்றனர். தமிழில் அதை வெட்டிவேர் என்று சொல்கிறோம் (Khas or Khus அல்லது Andropogon muricatus)  . சஷ்டி தேவதை குழந்தைகளுக்கு பாதுகாப்பு தருபவள்.

இந்த கஸ் சஷ்டி பற்றி வங்காளத்தில் வழங்கும் கதை பின் வருமாறு:-

ஒரு மாமியாருக்கு அடங்காத ஒரு நாட்டுப்பெண் (மருமகள்) வந்து வாய்த்தாள். கடவுளுக்குப் படைப்பதற்காக செய்யப்பட பிரசாதங்களைக்கூட , நைவேத்த்யம் செய்யும் முன்பாகவே உண்டு விடுவாள். . அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் இறந்துபோயின. இதற்குக் காரணம், மருமகளின் தெய்வ நிந்தனையே என்று மாமியார் கருதினார்.. எப்படியாவது அவளை சஷ்டி விரதம் அனுஷ்டிக்க வைக்கவேண்டும் என்று மாமியார் கருதினாள் .

நிறைய அழுக்குத் துணிகளை மூட்டை கட்டி, ஆற்றங்கரைக்குச் சென்று துவைத்துக் கொண்டுவா என்று அனுப்பினாள் . மருமகளும் துணி மூட்டையை சுமந்து கொண்டு நதிக்கரைக்குச் சென்று நாள் முழுதும் துவைத்தாள் ; சாப்பிடக்கூட நேரமில்லை. அவ்வளவு துணிகள்.

அவள் மாலையில் வீடு திரும்புவதற்குள்  சஷ்டி தேவதை பூஜைக்கான  ஏற்பாடுகளை மாமியார் செய்து முடித்தாள் . மண்ணை எடுத்து, குளம் போல நடுவில் குழி தோண்டி கரைப்பகுதியில் வெட்டிவேரின் புல்லை நட்டு நாள் முழுதும் விரதம் இருப்பது வழக்கம். மாமியாரும் அவ்வாறே செய்து , பிராமண புரோகிதரையும் அழைத்து, மேள தாளம் கொட்ட ஏற்பாடு செய்தார்  மருமகளுக்குப் பிடித்த தின்பண்டங்களை நைவேத்யத்த்துக்கு தயாரித்தாள் .

மாலையில் வீடு திரும்பிய மரு மகளுக்கு அதிசயம் கார்த்திருந்தது . அவள், நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்தது விரதம் போல ஆயிற்று. மாமியாரின் திட்டமும் வெற்றி பெற்றது. அவளுக்கும் தெய்வ பக்தி ஏற்படவே, பின்னால் பிறந்த குழந்தைகள் எல்லாம், நீண்ட ஆயுளுடன் வாழ் ந்தார்கள் . அதிலிருந்து இந்த குச புல் (வெட்டிவேர்) விரதம் பரவியது .

-subham—

Tags- குச, கஸ் , சஷ்டி, தேவதை, வெட்டிவேர், தாழம்பூ , பிரம்மா, விஷ்ணு, சிவன்

சரணாகதி அடைந்த விபீஷணரிடம் ஶ்ரீ ராமர் செய்த ப்ரதிக்ஞை! (Post No.11,986)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,986

Date uploaded in London –   May 10, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி!

சரணாகதி அடைந்த விபீஷணரிடம் ஶ்ரீ ராமர் செய்த ப்ரதிக்ஞை!

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் 7 பிரதிக்ஞைகள் இடம் பெறுகின்றன.

அவற்றில் ஆறு ப்ரதிக்ஞைகளை இது வரை பார்த்தோம்.

கடைசியில் ஏழாவது ப்ரதிக்ஞையை இங்கு பார்க்கலாம்.

யுத்த காண்டத்தில் 19வது ஸர்க்கத்தில் இடம் பெறுவது இது.

விபீஷணர் ராமரிடம் சரணாகதி அடைகிறார்.

உடனே ஶ்ரீ ராமர் கூறுவது இது:

அஹம் ஹத்வா தசக்ரீவம் சப்ரஹஸ்தம் சபாந்த்வம் |

ராஜானம் த்வாம் கரிஷ்யாமி சத்யமேதத்ப்ரவீமி தே ||

                                          ஸ்லோகம் 21

அஹம் – நான்

தசக்ரீவம் – தசக்ரீவனை

சப்ரஹஸ்தம் – பிரஹஸ்தனுடனும்

சபாந்த்வம் – பந்துக்களுடனும்

ஹத்வா – கொன்று

த்வாம் – உன்னை

ராஜானம் – மன்னனாக

கரிஷ்யாமி – ஆக்கப் போகிறேன்

ஏதத் – இதை

தே – உனக்கு

சத்யம் – சத்தியமாக

ப்ரவீமி – சொல்லுகிறேன்

ரஸாதலம் வா ப்ரவிஷேத்பாதாளம் வாபி ராவண: |

பிதாமஹசகாஷம் வா ந மே ஜீவன்விமோக்ஷ்யதே ||

                                ஸ்லோகம் 22

ராவண: – ராவணன்

ரஸாதலம் வா – ரஸாதலத்திற்குத் தானாகட்டும்

பாதாளம் வா – பாதாளத்திற்குத் தானாகட்டும்

பிதமஹ சகாஷம் வா – பிரம்மதேவரின் சந்நிதிக்குத் தானாகட்டும்

ப்ரவிஷேத் அபி – (எங்கு) சென்றாலும்

ஜீவன் – உயிருடன்

மே – எனக்கு

விமோக்ஷயதே ந – தப்ப மாட்டான்

அஹத்வா ராவணம் சங்க்யே சபுத்ரபலபாந்த்வம் |

அயோத்யாம் ந ப்ரவேக்ஷயாமி த்ரிபிஸ்தைர்ப்ராத்ருபி: ஷபே ||

                                           ஸ்லோகம் 23

சங்க்யே – போரில்

ராவணம் – ராவணனை

சபுத்ரபல பாந்த்வம் – புத்திரர்களுடனும், சேனைகளுடனும், பந்துக்களுடனும்

அஹத்வா – கொல்லாது

அயோத்யாம் – அயோத்தி மாநகருக்குள்

ப்ரவேக்ஷ்யாமி ந – புகப் போவதில்லை

தை:- அந்த

த்ரிபி – மூன்று

ப்ராத்ருபி: – தம்பிமார்களின் மீது

ஷபே – ஆணையிட்டுச் சொல்கிறேன்

ஶ்ரீ ராமர் வீண் சொல்லை ஒரு போதும் சொல்பவர் அல்லர். தன்னை சரணாகதி அடைந்த விபீஷணரிடம் இப்படி பிரதிக்ஞையை ராமர் செய்கிறார்.

அத்துடன் மட்டுமல்ல, விபீஷணர் அரக்கர்களின் அழிவு விஷயத்தில் தம்மால் இயன்றதைச் செய்வதாக உடனே உறுதி அளித்ததால் பெரிதும் மகிழ்ந்த ராமர், லக்ஷ்மணரிடம் , “சமுத்திரத்திலிருந்து தீர்த்தத்தைக் கொண்டு வருவாயாக! அதைக் கொண்டே அரக்கர்களின் மன்னனாக விபீஷணனை இப்போதே அபிஷேகம் செய்து வைப்பாயாக” என்று கூறுகிறார்.

அந்த ஆணையை சிரமேற்கொண்ட லக்ஷ்மணர் அப்படியே  வானரர்களுக்கு மத்தியில் விபீஷணருக்கு மன்னராக அபிஷேகம் செய்து வைக்கிறார்.

ஒரு நொடியில் ராமரது அனுக்ரஹத்தைப் பார்த்த வானரர்கள் வியப்பு மேலிட ‘நன்று நன்று’ என்று கோஷமிடுகின்றனர்.

இறைவனின் அனுக்ரஹம் ஒரு கணத்தில் கிடைக்கும் என்பதை இந்த விபீஷணருக்கு கிடைத்த அனுக்ரஹம் புலப்படுத்துகிறது.

இது வரை இராமாயணத்தில் வந்த 7 பிரதிக்ஞைகளைப் பார்த்தோம்:

1) ஶ்ரீ ராமர் லக்ஷ்மணரிடம் செய்த பிரதிக்ஞை

(சீதையை குகையில் பத்திரமாகக் கூட்டிக் கொண்டு செல் என்று சொல்வது)

2) சீதை அக்னியில் ப்ரவேசிக்கும் போது செய்யும் பிரதிக்ஞை

3) ஶ்ரீ ராமர் விபீஷணர் சரணாகதி அடையும் போது செய்யும் பிரதிக்ஞை

4) இந்திரஜித்தை வதம் செய்யும் போது லக்ஷ்மணர் செய்யும் பிரதிக்ஞை

5) ஶ்ரீ ராமர் சீதையின் பதிவிரதைத் தன்மையின் மீது பூரண நம்பிக்கை வைத்து செய்யும் பிரதிக்ஞை

6) சீதையின் பதிவிரதா தர்மம் பற்றி வால்மீகி முனிவர் செய்யும் பிரதிக்ஞை

7) சீதை தனது சுத்த பதிவிரதா தர்மத்தைப் பற்றிச் செய்யும் பிரதிக்ஞை

இதைச் செய்தவுடன் பூமி பிளக்கிறது. ஒரு சிம்மாசனம் வெளிப்பட்டு அவளை ஏந்திச் செல்கிறது.

ஆக உலகில் எந்தக் காவியத்திலும் இல்லாதபடி அபூர்வமான பிரதிக்ஞைகள் இப்படி வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி மஹரிஷியால் சித்தரிக்கப்படுகிறது.

இராமாயணம் படிப்போம்; உயர்வோம்!

ஜெய் ஶ்ரீ ராம்!  சீதா மாதா கீ ஜெய்!

***

Story of Screw pine (தாழம்பூ) flower and Bena Grass (வெட்டிவேர்) (Post No.11,985)

Story of Screw pine (தாழம்பூ) flower and Bena Grass (வெட்டிவேர்) (Post No.11,985)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,985

Date uploaded in London – –  May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Story of Screw pine (தாழம்பூ) flower and Bena Grass (வெட்டிவேர்)

“Brahma originally had five heads. He and Vishnu were once contesting each other’s superiority. Just then a huge column of light appeared in front of them and they wondered what it was. They agreed that he who found either end of the column earlier would be the greater of the two. Vishnu became a boar and sought the bottom; Brahma became a swan and flew up towards the top. Vishnu returned disappointed. Brahma at the point of despair came across a falling screw pine flower (Pandanus , தாழம்பூ) . He stopped its descent and asked from where it was coming. All that it knew was that it was falling from space and nothing more. Brahma persuaded it to bear false witness and claimed superiority over his rival. Siva was enraged, snipped off that head which spoke the lie, and declared himself as the column of light.”

Then the flower was also banned from the prayer rooms and temples. Nowadays Hindus don’t use it for Pujas.
― Sri Dattatreya, Tripura Rahasya

South Indians, particularly , Tamils use this flower , for decorating the hair of girls. It is a very fragrant flower.

xxx

The story of Bena Plant in Bengal

Khas or Khus (Andropogon muricatus வெட்டிவேர்).

is a grass known as Bena (வெட்டிவேர்)  in Bengal.

Khas Shasti is celebrated on the sixth day (Shasti) of the bright half of Pausa month. It corresponds to December-January in English calendar. The goddess presiding over the day is also called Shasthi.

The story present in Bengal where the vrata/ fast is observed runs that a certain Brahmana’s daughter in law was a naughty girl.  She did not work well and ate things prepared for the worship of gods. Her children therefore died young. With the object of improving her conduct under the influence of goddess Shasti, her mother in law found out a way so that she would fast for the whole day. She gave her a large number of clothes  to wash and sent her away to the river for the purpose. The woman took nearly the whole day to finish her job. She did not even time to have food and she fasted unknowingly.

During her absence, her mother in law cooked different dishes for the goddess and made arrangement for the worship of bena plant/khus grass (வெட்டிவேர்). It was the symbol of goddess Shasthi. She dug up a small ditch to represent a tank, planted the sacred grass on its bank, and arranged the materials for the puja in front of it. The family priest and the musicians were kept in readiness. When the woman heard the music, and saw on her return that so much trouble was taken for her by her kind mother in law, she repented, and devoutly worshipped the goddess. The result was that her children henceforth lived long, and her sin was expiated. She and her neighbours therefore adopted the puja.

–subham—

Tags- Vettiver, Khas, Khus,Bena, Khas Shasthi, Pandanus, Screw pine flower, Brahma, Vishnu, Shiva

–subham—

Tags- Vettiver, Khas, Khus,Bena, Khas Shasthi, Pandanus, Screw pine flower, Brahma, Vishnu, Shiva

ஜோதிர் லிங்க ஸ்தலம் வைத்யநாதம்;  108 மஹாராஷ்டிர புனித தலங்கள் – PART 12 (11,984)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,984

Date uploaded in London – –  May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் பற்றிய ஸ்லோகம்

சௌராஷ்ட்ரே ஸோமனாதம் ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம்;

உஜ்ஜயின்யாம் மஹாகாளம்  ஒங்காரமமலேச்வரம்;

பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீம சங்கரம் 

ஸேது பந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே ;

வாரணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே ;

ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே .

ஏதாநி ஜ்யோதிர்லிங்காநி ஸாயம் ப்ராத: படேந் நர:

ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி .  

ஸோமநாதமும், ஸ்ரீ சைலமும், உஜ்ஜைனி மஹாகாளமும்,ஒங்காரேச்வரமும்,பரலி வைத்யநாதமும், பீமசங்கரமும், ராமேச்வரமும்,, நாகேசமும்,காசி விச்வேசமும், த்ரயம்பகமும், கேதாரமும்,குஸ்மேசமும் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று குறிக்கப்படுகின்றன.   இந்த 12 தலங்களை காலையிலும் மாலையிலும் நினைத்தாலே  ஏழு ஜென்மங்களில் செய்த பாபங்களும்       விலகிவிடும்; அழிந்துபோகும் என்று புராதன ஸ்லோகம் சொல்லுகிறது.

12 ஜோதிர் லிங்க தலங்களில் ஐந்து, மகாராஷ்டிரத்தில் இடம்பெற்றுள்ளன. இன்று பரலி என்னும் இடத்திலுள்ள வஜ்ஜிநாத் என்னும் வைத்யநாதரை தரிசிப்போம் .    

     45. பரலி வைத்தியநாதர் கோவில்  ज्योतिर्लिंग परळी वैद्यनाथ         

மஹாராஷ்டிர மாநிலத்தில் பீட் BEED என்னும் நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பெங்களூர், ஹைதராபாத் மும்பை ஆகிய நகரங்களிலிருந்து ரயிலிலும் செல்லலாம்.

இந்தக் கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இதுபற்றி பல   கதைகள் இருக்கின்றன. சத்தியவான் – சாவித்திரி கதையை அறியாத இந்துக்கள் இல்லை. எமனிடமிருந்து சத்தியவானின் உயிரை வாதாடி      வாங்கி வந்த சாவித்ரியின் தந்தை அஸ்வபதி ஆண்ட மாத்ரா Madra Desa தேசம் இது. ஆகையால் இங்கேதான் அந்த சம்பவம் நடந்ததாக ஐதீகம் (செவிவழி வரலாறு).     

 இன்னொரு கதையும் உண்டு. சிவபெருமானை அதிகம் துதிபாடிய ராவணனுக்கு சிவனே ஒரு லிங்கத்தைக் கொடுத்து , இலங்கையில் கொண்டுபோய் கோவில் கட்டு; ஆனால் வழியில் எங்கேயாவது வைத்தால் அது அங்கேயே ஸ்தாபிக்கப்பட்டுவிடும் என்று சொன்னார் . ராவணன் அதை வாங்கிக்கொண்டு வருகையில் கை,  கால் கழுவுவதற்காக         ஒரு பையனிடம் கொடுத்துவிட்டுச் செல்ல, அதன் எடை கூடிக்கொண்டே வந்ததாம். கனத்தைத் தாங்க முடியாதபடி அந்தப் பையன் அந்த லிங்கத்தை கீழே வைக்க அது பரலி க்ஷேத்திரமாகப் பரிணமித்தது.

கடைசி கதை என்னவென்றால், இங்குள்ள விஷ்ணுதான் தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க உதவினார் ஆகையால் இதை வஜ்ஜி நாத (அமிர்த) என்று மராத்தியில் அழைக்கின்றனர் என்பதாகும் .

இந்தக் கோவில் மிகவும் சிறியது. அரை மணி நேரத்துக்குள் கோவிலிருந்து வெளியே வந்துவிடலாம். சிறப்பு என்னவென்றால் ஒரு பெரிய தேக்கு மர மண்டபம் தூண்கள் இல்லாமலே கட்டப்பட்டிருப்பதாகும்.

நந்திக்கு மேலே பெரிய Chandelier தொங்கும் விளக்கு இருக்கிறது. ஜரோகா ஜன்னல்களும் இருக்கின்றன. கல்லிலான இந்த வகை ஜன்னல்கள், நின்று பார்க்கக்கூடிய பால்கனி போன்ற இடம் உடையது. மன்னர்கள் அந்தக் காலத்தில், இத்தைகைய ஜன்னல்களில் நின்று மக்களுக்கு காட்சி அளிப்பர் .

Xxxx

எலிபெண்டா குகைக் கோவில் திரிமூர்த்தி

முந்தைய பகுதிகளில் விவரங்களைக் கொடுத்துவிட்டேன.

Xxx

46. கோண்டேஸ்வர் மஹாதேவ் மந்திர் , சின்னார் , நாசிக் மாவட்டம்

நாசிக் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது; ஷீரடி சாய்பாபா கோவிலுக்குச் செல்லும் வழி . 12ம் நூற்றாண்டில் யாதவ குல சேனா வம்ச மன்னர் கட்டியது . இதை கலை உலக அற்புதம் என்று சொல்லும் அளவுக்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன . சுவரிலும் தூண்களிலும் இவற்றைக் காணலாம். ஒரு மேடையின் மேல் கோவில் அமைந்திருக்கிறது நடுவில் சிவ லிங்க சந்நிதி. நாற்புரமும்  விஷ்ணு, பார்வதி, கனேஷ் , சூரியன் ஆகியோருக்கான சந்நிதிகள். சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் கோவிலின் மீது படும் ஒளிக் கிரணங்கள் அற்புத ஜாலங்களைச் செய்யும் ..

Xxx

47. பாபுல்நாத் சிவன் கோவில் மும்பை बाबुलनाथ

மும்பை நகரில் உள்ள பழமையான சிவன் கோவில் இது.

சிவராத்திரி விழாவின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் குவியும் கோவில்..

செளபாத்தி வட்டாரத்தில் இருக்கிறது மரைன் லைன்ஸ் ரயில் நிலையாத்திலிருந்து 15 நிமிடம்தான் ஆகும். ஒரு குன்றின் மேல் அமைந்த இந்தக்கோவில் குறைந்தது 200  ஆண்டுப் பழமை உடைத்து.அந்தக் கால மும்பையைக் குறிக்க இந்தக் கோவில் படம்தான் இருக்கும்.. படிகளில் ஏறி ச் செல்லலாம் அல்லது எலிவேட்டரில் செல்லமாம். கருவேல (பாபுல் மரம்) மரக்கா ட்டில் கண்டுபிடிக்கப்பட்ட லிங்கம் என்றும் பாபுல் என்னும் இடையன் கண்டுபிடித்த லிங்கம் என்றும் பொருள்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்று விளங்கிய இந்தக் கோவில் காலப்போக்கில் மண்ணில் புதையுண்டு கருவேலமரக் காடாகியது . பின்னர் 4 விக்ரகங்களுடன் கண்டுபிடிக்கப்பது. ஐந்தாவது சிலை கடலில் தூக்கி எறியப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது . துவக்க காலத்தில் பார்சி மதக் கோவிலாக இருந்ததாகவும் சொல்லுவார்கள் .

Xxxx

பூலேஸ்வர் சிவன் கோவில்

முந்தைய பகுதிகளில் விவரம் உளது

xxx

48.வாகேஸ்வர் – பாண கங்கா கோவில்

மும்மை நகரில் மலபார் குன்ற ப் பகுதியில் அமைந்த கோவில் . இதன் அருகிலேயே பாண கங்கா குளம் உள்ளது சிலஹார வம்சத்தினர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாகேஸ்வரர் கோவிலைக் கட்டினர் . அதற்கு முன்னர், ராமபிரான் மண்ணினால் செய்து வழிபட்ட லிங்கம் இது என்பது ஐதீகம் . கடந்த காலத்தில் இருமுறை பெரிய திருப்பணிகள் நடந்தன.தற்காலத்தில் இந்துஸ்தானி இசை விழாக்கள் இங்கே நடத்தப்படுகின்றன.

Xxx

49. அம்ருதேஸ்வர் சிவன் கோவில், அஹமதுநகர் மாவட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் ரத்தன்வாடி கிராமத்தில் ப்ரவரா நதிக்கரையில் அம்ருதேஸ்வர் கோவில் அமைந்துள்ளது  இது மிகவும் பழங்காலக்  கோவில். இதனால் தொல்பொருட் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பண்டார் தரா பல்வேறு பொழுதுபோக்குகளுக்கு பயன்படும் இடம். அருகில் ரத்தன்காட் கோட்டையும் இருக்கிறது பண்டார் தரா என்னும் இடம் அஹமது நகரிலிருந்து 96 மைல் . பண்டார் தராவிலிருந்து இந்தக் கோவில் சுமார் 10 மைல். சுமார் 1200 ஆண்டு பழமையான இந்தக்கோவிலை சிலஹார வம்சத்தினர் கட்டினார்கள் . ஜாஞ்ஜா என்னும் மன்னர் கட்டிய 12 கோவில்களில் இதுவும் ஒன்று நல்ல சிற்பங்கள் அமைந்த இந்தக் கோவில் கட்டுவதற்கு  சிவப்பு, கருப்பு நிற பஸால்ட்  பாறைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.. சுவர்களிலும் கூரைகளிலும் வண்ண ஓவியங்களையும் காணலாம். பூக்கள் வடிவங்கள் வரையப்பட்ட 12 தூண்கள் உடைய மண்டமும் காண வேண்டிய காட்சி ஆகும்.

கோவிலின் சிகரம் அப்படியே உள்ளது . கலை வேலைப்பாடு மிக்கது;  கூ ரையில் சில கற்களைக் காணவில்லை கோவிலுக்கு அருகில் படிக்கட்டுகள் நிறைந்த குளம் கட்டப்பட்டுள்ளது.

சாலையில் செல்லுவதை விட படகில் செல்வது எளிது. மலைப்பாதை கரடுமுரடானது பண்டாரதராவையும் ரத்தன் வாடியையும் பிரிக்கும் ஆர்தர் ஏரியில் ஆறு கிலோமீட்டர் படகு  சவாரி செய்தால் பின்னர் 4 கி.மீ. நடந்து ரத்தன் வாடியை அடையலாம்.

ரத்தன்வாடி கிராமம்தான் கோட்டைக்கு செல்லும் வழி

To be continued…………………………………..

Tags- அம்ருதேஸ்வர் கோவில், வாகேஸ்வர், பாண கங்கா,  கோவில் , பன்னிரு, ஜோதிர்லிங்க, தலங்கள், ,ஸ்லோகம், பரலி வைத்தியநாதர் கோவில்