சிட்னி கற்பக விநாயகர் ஆலயத்துக்கு விஜயம் (Post No.15,372)

Written by London Swaminathan

Post No. 15,372

Date uploaded in Sydney, Australia –  29 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சிட்னியில் ஹோம்புஷ் வெஸ்ட் பகுதியிலுள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்துக்கு இன்று வியாழக்கிழமை 29 -1-2026  அன்று சென்றோம். பெரிய மண்டபத்தில் முக்கிய சந்நிதியில் கணேசர் வீற்றிருக்கிறார். மாம்பழ விழா  நடைபெற்று கொண்டிருப்பதால் குருக்கள்மார்கள் அதில் மிகவும் ஈடுபாட்டிருந்தார்கள்; த்வஜ ஸ்தம்பத்துக்கு அலங்காரமும் பூஜையும் நடந்து கொண்டிருந்தது.

இந்தக்க கோவில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருப்பதால் நிறைய பேர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள் சுமார் ஐம்பது பேர்களும் வந்து செல்வோரின் எண்ணிக்கை சுமார் 25 பெரும் இருந்தனர் . நாயனம் மேளம் வாசிப்போர் இன்னிசையை முழங்கி மண்டபத்தை அதிர வைத்திருந்தார்கள்.

விநாயகர் சந்நிதிக்கு வலது புறம் சிவலிங்கத்துடன் மீனாட்சி சந்நிதியும் அதையடுத்து முருகன் நடராஜர் சந்நிதிகளும் இருந்தன எதிர்ப்புறத்தில் நவக் கிரக சந்நிதியும் அமைந்திருந்தது.

கோவிலில் நாலைந்து அர்ச்சகர்கள் இருந்தார்கள். கோவிலொடு மாலை நேரத்தில் மட்டும் இயங்கும் ஒரு உணவு விடுதியும் இருக்கிறது. கோவிலில்  நடக்கும்  மாம்பழத்  திருவிழா  பற்றிய  துண்டுப்  பிரசுரமும்  கிடைத்தது . ஜனவரி 23 ம் தேதி துவங்கி பிப்ரவரி மூன்றாம் தேதி வரை விழா நடப்பதையும் அன்றாடம் நடக்கும் பூஜைகளையும் விவரமாக அழகாக அச்சிட்டிருக்கிறார்கள்.

தேர்த் திருவிழா அன்று தெரு வீதிகள் வழியே தேர் வரும் என்பதையும் விளம்பரப்படுத்தி இருந்தார்கள்;  விழா நடக்கும் எல்லா நாட்களிலும் மதிய நேரத்தில் அன்னதானமும் வழங்குகிறார்கள் . இரவு பூஜை முடிந்தவுடன்  பிரசாதம் உண்டு.கோவில் நிகழ்ச்சிநிரலின் படி

23 -1-2026  கொடியேற்றம்

24 -1-2026  தைலாப்பியங்கோற்சவம்

26 -1-2026  பக்தமுத்தி பாவனோற்சவம்

27 -1-2026  வசந்தோற்சவம்

28 -1-2026  மாம்பழத் திருவிழா

29 -1-2026  வேட்டைத் திருவிழா

30 -1-2026  சப்பரத் திருவிழா

31 -1-2026  தேர்த்  திருவிழா

1 -2-2026  தீர்த்தத் திருவிழா

2 -2-2026  பூங்கவனம் / மீனாட்சி திருக்கல்யாணம்

3 -2-2026 வைரவர் மடை.

கோவிலின் முகவரி 

Temple Address

123, The Crescent , Homebush West, New South Wales 2140

Phone 02 9746 9590

http://www.vinayakar.org.au

மாம்பழத் திருவிழா  என்றால் என்ன ?

சிவ பெருமானிடம் நாரதர் கொடுத்த மாம்பழத்தை, கத்தி கொண்டு வெட்டாமல் யாருக்காவது கொடுக்கலாம் என்றவுடன், சிவ பெருமான் சொன்னார் : யார் உலகத்தை முதலில் வலம் வருகிறாரோ அவருக்கே பழம்!

இதைக் கேட்டவுடன் விநாயகர், தாய் தந்தையரே உலகம் என்பதை உணர்ந்து பார்வதியையும் பரமசிவனையும் வலம் வந்து வணங்கினார்.  முருகனோ மயில் மீது புறப்பட்டு உலகைச் சுற்றி தாமதமாக வந்தார். ஆகையால் பிள்ளையாருக்கே மாம்பழம் கிடைத்தது .

இந்த விழாவை இலங்கைத் தமிழர்கள் நடத்தும் கோவில்கள் வெகு விமரிசையாகி கொண்டாடிவருகின்றன. ஒருவருக்கு தாய்-தந்தையரே உலகம் என்பதை வலியுறுத்தும் கருத்துள்ள விழா இது . இந்த விழாவின்போது எல்லா கடவுளரும் வீதி வலம் வருவதோடு  பூஜைகளும் பிற யாக யக்ஞங்களும் நடைபெறும்.

–subham—

Tags – மாம்பழத் திருவிழா, சிட்னி, கற்பக விநாயகர் கோவில், லண்டன் சுவாமிநாதன், விஜயம்  

நக்கீரர் கதை: அருணகிரிநாதர் சொல்லும் அரிய தகவல்கள் (Post.15,371)

Written by London Swaminathan

Post No. 15,371

Date uploaded in Sydney, Australia –  29 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும்பொருள் வளமும்- Part 4

நக்கீரர் குகையில் அடைபட்ட கதை

மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த

செம் கை வடிவேலா … மலைக் குகையில் அடைக்கப்பட்டிருந்த

புலவராகிய நக்கீரரின் சிறந்த பாடலை (திருமுருகாற்றுப்படையைக்)

கேட்டு, அந்தக் குகையின் வாயிலைத் திறந்து விட்ட செவ்விய

கைகளை உடைய வடிவேலனே

***

பாண்டிய மன்னன் தனது சந்தேகத்தைத் தீர்த்துவைப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவித்தார்; தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு , அவருடைய வறுமையை  தீர்ப்பதற்காகக் கவிதையெழுதிக் கொடுத்து புலவரை மன்னரிடம் அனுப்பினார் சிவபெருமான் .

அதில் பிழை இருப்பதாக நக்கீரர்  சொன்னவுடன் சிவனே நேரில்  வந்து வாதிட்டார் ;அப்போதும் அடங்காத நக்கீரரின் கொட்டத்தை அடக்க சிவ பெருமான் நெற்றிக்  கண்ணைத் திறந்தார் ; நக்கீரர் மனம் திருந்தினார். இந்த திரு விளையாடல் புராணக்கதை அப்பர் பாடிய தேவாரத்தில் இருப்பதால் சங்க காலத்தில் நடந்தது உண்மை என்பது தெரிகிறது. இதே போல ஒரு கதை பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படைத் தோன்றியதற்குக் காரணமாக உரைகாரர்களால் சொல்லப்படுகிறது.

அந்தக் கதை பின்வருமாறு

நக்கீரர் சிவனுக்கு அபராதம் செய்ததால் சிவ பூதகணங்கள் அவரைச் சிறையில் அடைத்தது; திருப்பரங்குன்றம் என்னும் தலத்திலுள்ள  அந்த குகை ஒரு பூதத்துக்குச் சொந்தமானது. குகையில் உள்ள மற்ற 999 புலவர்களுடன், தினமும் ஒருவரை உணவாக உட்கொள்ளும் பூதத்திற்காகக் காத்திருந்த நக்கீரர், முருகப்பெருமானை வேண்டித் திருமுருகாற்றுப்படை பாடினார். அவரின் பக்தியை மெச்சிய மகிழ்ந்த முருகன், பூதத்தை அழித்து, குகையைத் திறந்து, அவரைக் காப்பாற்றினார்.

இந்தக் கதையில் மேலும் சில தகவல்கள் உள்ளன

அந்த பூதம் ஆயிரம் பேர் சேர்ந்தவுடன் தினசரி ஒருவரை உண்ணத் திட்டமிட்டிருந்தது.  1000-மாவது ஆளாக  நக்கீரர் வந்து சேர்ந்தார் தன் உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த நக்கீரர், முருகப் பெருமானை சரணடைந்து, திருமுருகாற்றுப்படை பாடினார்.

அந்தப்  பாடலினைக்கேட்டு மகிழ்ந்த முருகன், பூதத்தை அழித்து, குகையைப்  பிளந்து நக்கீரர் உட்பட அனைவரையும் விடுவித்தார்.

சிவ பூசையில் தவறு செய்பவர்களை உண்ணுகின்ற ஒரு பெண்பூதத்தின் பெயர்  கற்கிமுகி. நக்கீரர் ஒரு குளக்கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது என்பது பின்னணிக் கதை.

***

ருத்திர சன்மன் கதை

வாய்ப்புற்றத் தமிழ் மார்க்கத் திட்பொருள் … வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை

வாய்க்குச் சித்திர முருகோனே … உண்மை இதுவே என

(ருத்திரசன்மனாக வந்து)* அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே,

***

திருவிளையாடல் புராணத்தில் சங்கப்புலவர் சண்டை தீர்த்த

உருத்திரசன்மன் கதை

மதுரையில் இருந்த கடைச் சங்க புலவரிடையே போட்டியும் பொறாமையும் வளர்ந்தது ; ஒவ்வொருவரும் தனது கவிதையே சிறந்தது என்று வாதாடினார்கள்; அவர்களில் நல்ல உள்ளம் படைத்தோர் மதுரை ஆலவாய் அண்ணலாகிய சொக்க நாதப்  பெருமானிடம் முறையிட்டனர் . சிவபெருமான் மனித வடிவில் தோன்றி அறிவுரை வழங்கினார் :

“மதுரைநகரில் தனபதி என்ற வணிகன் இருக்கிறான், அவன் மனைவி குணசாலினி என்பவள்; அவர்களுக்குப் பிள்ளை இல்லாமல் தவம் செய்து ஒரு மகனைப் பெற்றிருக்கிறார்கள் உருத்திரசன்மன் என்பது அவன் பெயர்; ஐந்து வயதும் நிரம்பாத சிறுவன்; அவன் பிறவி ஊமை, பேச மாட்டான். அவனை அழைத்துச் செல்லுங்கள் அவன் உம்பாடலைக் கேட்டு முடிவு கூறுலான்” என்று சொல்லி அனுப்பினார்.

ஊமை எப்படி பாடலைக் கேட்பான், பதில் சொல்லுவான் என்ற ஐயங்கள் எழுந்தன, எனினும் இறைவன் சொன்னபடியே ஊமைப்பியை பிள்ளையை சங்கத்துக்கு அழைத்துச் சென்று அவரவர் தம் கவிதைகளைப் படித்தனர்.

உப்புச் சப்பு அற்றக் கவிதைகளைக் கேட்கும் போது அவன் எந்த வித உணர்ச்சியையும்  காட்டவில்லை; சொற் சுவை , பொருட் சுவை  அணி நயம், இசை உடைய கவிதைகளைக் கிடக்கும்போது மட்டும் புளகித்துக் கண்களில் நீர் அரும்ப முகமலர்ந்து அவற்றைப் பாராட்டினான். அவன் முன் பாடிய புலவர்களுள் கபிலர், பரணர், நக்கீரர், தலை சிறந்தவர். இம் மூவரே தலைமைக்கு உரியவர் ஆயினர்.

***

யோக முறைகளைக் கூறும் திருச்செந்தூர் திருப்புகழ்

அண்டர் தேடஅரிதாய … தேவர்களும் தேடித் தெரிந்துகொள்வதற்கு

அரிய பொருளாகிய,

ஞேயங்களாய்நின்ற … மெய்யுணர்வினால் ஆராய்ந்து

அறியப்படுகின்றவையாக விளங்கும்

மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற அது உளதாகி …

முதன்மையான அனுபவ யோகத்திலே முனைந்து நின்று,

அதனிடத்திலேயே அசைவற்று இருப்பதாகி,

நாளும் அதி வேக கால்கொண்டு … நாள்தோறும் வெகு வேகமாக

எழும் பிராணவாயுவைக் கொண்டு,

தீமண்ட வாசியன லூடு போயொன்றி … மூலக்கனல்* மண்டி

எழுந்திருக்க, பிராணவாயுவானது அந்த அக்கினியில் சென்று பொருந்த,

வானின்கண் நாமமதி மீதி லூறுங்கலாஇன்ப அமுதூறல்

நாடி … ஆகாயத்தில் புகழ்பெற்ற சந்திரனிலிருந்து பொழியும்

அமிர்தகலை என்னும் இனிய அமுதப் பொழிவை நாடி,

அதன் மீது போய் நின்ற ஆநந்த மேலைவெளி யேறி …

அச்சந்திர மண்டலத்தில் சென்று, நிலைத்த ஆநந்தப் பெருவெளியில்

மீது ஏறி அமர்ந்து,

நீயின்றி நானின்றி நாடி … நீ நான் என்ற பிரிவற்ற அத்வைத

முக்தியை உணர்ந்து,

இனும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே … இன்னும்

பிற பொருள்களும் தோன்றாத மனம் நீங்கிய சுக வாழ்வில்

வாழ்கின்ற ஒருநாள் எனக்கு உண்டாகுமோ?

***

அவ்வையார் பாடிய விநாயகர் அகவலிலும் இது உள்ளது :-

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறா தாரத் தங்குச நிலையும்!

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே,

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்,

கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி,

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்,

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்து மூண்டெழு கனலைக்

காலால் எழுப்புங் கருத்தறி வித்தே…………

***

தமிழ்= முருகன்

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி … செம்மை பொருந்திய சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக்கொண்டு

செந்திற் பதிநகருறைவோனே … திருச்செந்தூர் நகரில்

வீற்றிருப்பவனே,

***

நம்முடைய துயரங்களை அகற்றுபவன் முருகன்

அறிவால் அறிந்து … அறிவு கொண்டு உன்னை அறிந்து,

உன்னிருதாள் இறைஞ்சும் … உனது இரு தாள்களையும் வணங்கும்

அடியார் இடைஞ்சல் களைவோனே … அடியார்களின் துயரைக் களைபவனே,

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து … அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து

அலைவா யுகந்த பெருமாளே. … திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்பெருமாளே.

Thanks to கெளமாரம்.காம்

TO BE CONTINUED……………………..

–SUBHAM—

TAGS- திருப்புகழ், நக்கீரர் கதை , அருணகிரிநாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 4, அரிய தகவல்கள்

விண்வெளியில் புத்தருக்கு ஒரு விஹாரம்! (Post No.15,370)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,370

Date uploaded in London – 28 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

26-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

விண்வெளியில் புத்தருக்கு ஒரு விஹாரம்!

ச. நாகராஜன்

விண்வெளியை மனிதன் ராக்கெட் மூலம் அளக்க ஆரம்பித்ததன் விளைவாக புதுப்புது விசித்திரங்கள் உருவாக ஆரம்பித்தன. 

பல்வேறு பொருள்கள் விண்ணில் அனுப்பப்பட ஆரம்பித்தன. 

இவை பற்றிய பல செய்திகள் நம்மை பிரமிக்க வைக்கிறது. 

2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பானில் பல புத்தமத குருமார்கள் ஒன்று கூடினர்.

விண்வெளியில் ஒரு புத்த விஹாரத்தை ஏற்படுத்துவது என்பது தான் அவர்கள் எடுத்த முடிவு.

கைரோஸ் என்ற ராக்கெட்டை அவர்கள் விண்ணில் ஏவினர். பூமிக்கு மேலே விண்வெளியில்  110 கிலோமீட்டர் தூரத்தில் டாய்நிசி நையோராய் (பிரபஞ்சத்தில் புத்தர் என்று அர்த்தம்) நிர்மாணிக்கப்பட முயற்சி எடுக்கப்பட்டது. புத்த மண்டலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது வெற்றி பெறவில்லை.

இந்த புத்தருக்கான கோவில் அமேஸானில் வீட்டு டெலிவரிக்கு உபயோகப்படும் சிறிய பெட்டி அளவே தான் இருந்தது. அந்தப் பெட்டி தங்க முலாம் பூசப்பட்ட தகடினால் மூடப்பட்டிருந்தது. 

ஜப்பானியர்களில் ஏராளமானோர் ஜப்பானுக்கு வெளியே இப்போது வசிக்கின்றனர். அவர்கள் இறந்து வானில் போகும் போது அவர்கள் புத்தரைப் பார்க்கும் படி இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. 

பல்வேறு நாடுகளில் வசிக்கும் மனிதர்கள் எதையேனும் விண்வெளியில் அனுப்ப வேண்டும், அப்படி அனுப்புவதில் முதலாவதாகத் தாங்கள் திகழ வேண்டும் என்று நினைக்கின்றனர். 

மனிதர்கள், செல்லப் பிராணிகள் ஆகியோரின் அஸ்திகள், ஏன் டைனோசரின் அஸ்தி கூட அனுப்பப்பட்டு விட்டது. சின்னச் சின்ன துண்டுகள் தாம் இவை.

இண்டிகா நூடில் ஃபாபியானோ என்ற ஒரு நாயின் அஸ்தி ஜனவரி 2024ல் விண்ணுக்கு அனுப்பப்பட முயற்சி எடுக்கப்பட்டு தோல்வி அடைந்தது.

பீயின் ஏஐ என்ற ஒரு நிறுவனம் எமி ஜிடோ என்ற ஒரு புத்த குருவின் டிஜிடல் போட்டோவை ஒரு டிஸ்க்கில் வைத்து டிசம்பர் மாதம் (2025ல்) அனுப்பத் தீர்மானித்துள்ளது.

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில்  ரஷியருக்கு உரிய பகுதியில் பல மத சம்பந்தமான படிமவியல் பொருள்கள் உள்ளன.

சரி, யாருமே படிக்க முடியாத இடத்தில் இப்படி மத சம்பந்தமான ஆவணங்கள் ஏன் அனுப்பப்படுகின்றன?

இந்தச் செய்திகள் தொலைதூரத்தில் உள்ள இன்னொரு பிறவியிலாவது படிக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கை தான்!

பல்வேறு சின்னச் சின்னப் பொருள்களின் விவரத்தைச் சொன்னால் மலைப்புத் தான் வரும்; கூடவே சிரிப்பும் வரும்.

இலான் மஸ்க் தனது செர்ரி-சிவப்பு டெஸ்லா ரோட்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காரை 2018ல் விண்வெளியில் அனுப்பினார். அது இப்போது 2480 லட்சம் கிலோமீட்டர்கள் பயணப்பட்டு விட்டது. 

மனிதனுக்கே உரித்தான பழைய நினைவுகள், மத நம்பிக்கைகள், படைப்பாற்றல் ஆர்வம் உள்ளிட்ட பல காரணங்களே இந்த முயற்சிக்கான அடிப்படை என்று விண்வெளி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

என்றேனும் ஒரு நாள் யாரேனும் ஒருவர் இதைப் பார்க்காமலா இருக்கப் போகிறார்கள்?

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-30; இந்துமத கலைச்சொல் அகராதி-30 (Post No.15,369)

Written by London Swaminathan

Post No. 15,369

Date uploaded in Sydney, Australia –  28 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில எழுத்து ஜி- யில் துவங்கும் சொற்கள்

Words beginning with the English letter ‘G’

கணங்கள்

சிவனுடைய படைகளை, சேவகர்களை பூத கணங்கள் என்பர்; அவர்களுக்கு கணபதி தலைவர்; கணம் என்றால் எண், நம்பர் என்ற பொருளும் உண்டு .

Ganas– Number; group of demi gods; attendants of Siva; devonic helpers under Ganesa’s leadership

***

கந்தர்வர்கள் – வானுலகப் பாடகர்கள்;  இவர்கள் ஆகாயவாசிகள்.சங்கீதக் கலையை கந்தர்வ சாஸ்திரம் என்பார்கள் அபூர்வ குரல் உள்ள பாடகர்களை கந்தர்வர்களுக்கு ஒப்பிடுவார்கள் ; காதல் திருமணத்தை கந்தர்வ விவாஹம் என்றும் சொல்லுவார்கள் தொல்காப்பியமும், மனு ஸ்ம்ருதியும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்களில் ஒன்று.

Gandharva

Celestial musician; one of a class of demi gods. The art of science of music is called Gandharva Veda. Gandharva Vivaha is one of the eight types of marriages stated in Manu Smriti and Tamil book Tolkappiam.

***

கணேசர் கணபதி, (தமிழில் பிள்ளையார் ) – விநாயகர்

இந்துமதத்தில் முதல் வணக்கத்தைப் பெறும் கடவுள்; யானை முகத்தோன்; முருகப்பெருமானின் அண்ணன்; சிவன்- பார்வதியின் புதல்வர்; எல்லா வழிபாடுகளும் கணபதி பூஜையுடன் துவங்கும்.

ஆதிசங்கரர் வகைப்படுத்திய ஆறுசமயங்களில் முதலானது காணாபத்யம்; இதில் கணபதி மூர்த்திகளின் வடிவங்கள் , துதிகள், வழிபாட்டு முறைகள் முதலியன பற்றிய விளக்கங்கள் உள்ளன ; வேத வியாசர் வாய்மொழியாகச் சொன்ன மகாபாரதத்தை எழுத்தில் வடித்தவர் ; இவரை வணங்கினால் சித்தியும் புத்தியும் கிடைக்கும் என்பதை அவருடைய மனைவிகளாக வருணிப்பார்கள் மகாராஷ்டிரத்தில் உள்ள அஷ்ட கணபதி கோவில்கள் , மும்பை சித்தி விநாயகர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள பிள்ளையார் பட்டி, திருச்செங்காட்டங்குடி கோவில்கள் குறிப்பிடத்தக்கவை ; மோதகம் என்னும் கொழுக்கட்டையை விரும்புபவர் ; பூஜைக்குரியன- அருகம் புல்லும் எருக்கம் மாலையும் ஆகும். நாடு முழுதும் கணேஷ் சதுர்த்தி உற்சவம் கொண்டாடப்படுகிறது

Ganesa/ Ganapati (Tamil- Pillaiyar), Vinayaka

Son of Lord Siva; elephant faced; Foremost God in Hinduism and he gets first salute; Brother of Skanda/ Muruga. He wrote Mahabharata when Veda Vyasa dictated it. Modaka is his favourite food; Devotees attain Siddhi and Buddhi (success and Wisdom) and so they are described as his wives. Ashta Vinayakar temples and Mumbai Siddhi Vinyakar temples are famous in Maharashtra; Pillaiyarpatti and Thiruchchenkattan kudi are popular temples in Tamil Nadu. Ganesh Chturthy is celebrated on a grand scale in Maharashtra .

Ganapatyam– gaanaapatyam- worship of Ganapati ,Types of Ganesh murtis, method of worship and Mantras and hymns praising Ganesh come under Ganapatyam. Adi Sankara divided the Hindu worship into Six Parts (Shanmatha) and Ganapatyam is the first one.

***

கர்ப்பாதானம்

விவாஹம் நடந்தவுடன் நடக்கும் ஸம்ஸ்காரங்களில் ஒன்று; கருவுறச் செய்தல் என்பது இதன் பொருள்; முன்காலத்தில் சிறு வயதில் விவாகம் என்னும் திருமணம் நடந்தது ;அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் புணர்ச்சியும் நடந்ததால் இது ஒரு கிரியையாக எழுதப்பட்டுள்ளது.

Garbhadhana – garbhadhaana- or niseka- samskara in which marriage is consummated, impregnation. In the olden days Marriage was celebrated several years before First Night. So Garbhadhanam was mentioned as a special ceremony/ rite.

***

காயத்ரீ மந்திரம்


வேதமாதா என்று வருணிக்கப்படும் தேவி; நான்கு வேதங்களிலும் உள்ள மிக முக்கியமான மந்திரம் ; 24  எழுத்துக்கள் உடைய யாப்பு அணிக்கும் காயத்ரீ என்று பெயர் ; தற்காலத்தில் பிராமணர்கள் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் முக்கியப்பகுதி இது ; உபநயனம் என்னும் பூணுல் கல்யாணத்தின் போது தந்தை தனது மகனுக்கு உபதேசிப்பார்; முன் காலத்தில் முதல் மூன்று வருணத்தினரும் பூணுல் அணிந்து இந்த மந்திரத்தை ஜபித்தனர்.

ஓம் பூர்புவ: ஸ்வ: தத்ஸவிதுர்வரேண்யம்

பர்க்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் “– காயத்ரீ மந்திரம்

எவர் நம்முடைய புத்தியை தூண்டுகிறாரோ அப்படிப்பட்ட

ஒளிமிக்கவராய் , உலகைப் படைத்த, மிகவும் உயர்ந்ததான

சக்தியை தியானிக்கிறோம். அவள் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்த வேண்டும்

பாரதியாரின் மொழிபெயர்ப்பு :

“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்

அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”

Gayatri – gaayatrii- mantra held in great esteem and regarded as the essence of the Vedas. It is imparted to the Brahmacharin during his investiture with the sacred thread (Upanayana/Punul). Also, a Vedic metre of 24 syllables.  Nowadays Brahmins recite it thrice a day in their Sandhyavandana. In the olden days people of three castes had Punul and recited Gayatri thrice a day.

Om Bhur Bhuvaḥ Suvaha

Tat-savitur Vareñyaṃ

Bhargo Devasya Dheemahi

Dhiyo Yonaḥ Prachodayāt

We meditate on that most adored Supreme Lord, whose effulgence (divine light) illumines all realms (physical, mental and spiritual). May this divine light illumine our intellect.

***

கண பாடம் /கனபாடிகள்

வேதத்தைக் கணம் முறைப்படி பாராயணம் செய்தவர்கள் கனபாடிகள் எனப்படுவர். கணம் முறையில் வேதத்தைச் சொல்வதால் அதில் இடைச் செருகல் செய்ய வாய்ப்பில்லை.

Ghanapathin- Ganapaathin- one who can chant the Vedas according to the Ghana method. Ghanapati is the person who has mastered Vedas in the Ghana method.

***

கோத்ரம்

மூன்று வர்ணத்தினர் தாங்கள் எந்த ரிஷியிடமிருந்து தோன்றியவர்கள் என்பதைச் சொல்லுவது கோத்ரம் ஆகும் ; ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் சகோதர, சகோதரி என்று கருதப்படுவதால் திருமணம் செய்ய மாட்டார்கள் . சங்க இலக்கியத்திலும் புலவர்களின் கோத்திரப் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன

Gotra- Family, Lineage, clan, descendants of a great sage. Literally cow pen or a herd of cows. Same Gotra marriage is not allowed because the boys and girls of the same Gotra are considered brothers and sisters. Even in Tamil Sangam literature we come across many Gotra names of the poets.

***

கிரந்தம்

கிரந்தம் என்றால் புஸ்தகம்/ நூல் என்று பொருள்; இன்னும் ஒரு பொருள் லிபி, எழுத்து என்பதாகும். சம்ஸ்க்ருத உச்சரிப்புகளை தமிழில் எழுதுவதற்கு உருவாக்கிய எழுத்துக்களுக்கும் இதே பெயர்தான்

Grantha- a literary work or treatise. Grantha script consists of a Tamil and Sanskrit script. It came into use in Tamil Nadu to write the  exact pronunciation of Sanskrit sounds.

***

கிரகங்கள்

வானில் உலவும் சூரியன், சந்திரன் செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி , சனி, ராகு கேது என்பனவற்றை நவக் கிரகங்கள் என்போம். இவைகளில் சூரியன், சந்திரன், ராகு, கேது கிரகங்கள் அல்ல ; விண்ணில் உலவும் பொருட்கள் என்பது பொதுப் பெயர் .

Graha – a celestial body; they are nine in number – Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, Rahu, Ketu; they are called Nava Grahas.

***

குணங்கள்

மனிதனுடைய குணங்களை இந்துக்கள் சத்வம், ரஜோ, தமஸ் என்று மூன்றாகப் பிரித்துள்ளனர் இவைகளில் சத்வ குணமே உயர்ந்தது சாந்தமான, தெய்வீக குணம் அது. ரஜோ  குணம் என்பது கோபம், வன்முறை ஆசைகள் நிறைந்தது;  தமோ குணம் என்பது செயலற்ற , ஊக்கமற்ற சோம்பலைக் குறிக்கும் குணம்

Gunas. Qualities or constituents. There are three Gunas in the phenomenal world: Satva guna, Rajo guna and Tamo guna. Satva guna is purity, virtue, goodness, clarity (it is the highest stage); Rajo guna is impurity, passion, action, violence and Tamo guna denotes darkness, inertia, sloth.

***

கிரஹஸ்தன்

இல்லறத்தான்; திருமணம் ஆகி குடும்பத்தை நடத்துபவன் ; வாழ்க்கையின் நான்கு வித நிலைகளில் பிரம்மச்சாரி என்னும் மாணவப் பருவத்துக்கு அடுத்த நிலை; அதற்கு அடுத்தபடியாக வானப்பிரஸ்தம் என்னும் கானக வாழ்வு (ஓய்வுக்கால வாழ்வு), சன்யாசம் என்னும் துறவறம் வருகின்றன

Grahastha – householder. Grahasthasrama is the second stage in a man’s life. Four stages are Brahmacharin (student life), Grahasthasrama- Married life, Vanaprastha (vanaprastha)- Forest /retired life and Sanyasa (sanyaasa) detached or ascetic life.

***

கங்கா தேவி

இந்துக்களின் மிகப்புனித நதி கங்கை ஆகும்;  நதிகளைத் தேவி களாக வழிபடுவது இந்துக்களின் பண்பாடு; இமய மலையில் உற்பத்தியாகி சுமார் 1500  மைல்கள் ஓடி வங்காள விரிகுடாவில்  கலக்கும் நதி. அதன் இரு கரைகளிலும் ஏரளமான புனிதத் தலங்கள் உள்ளன . கங்கா ஜலத்தைக் கலசத்தில் ஏந்திச் சென்று நாடு முழுதும் புனிதச் சடங்குகளிலும் கோவில் அபிஷேகங்களிலும் பயன்படுத்துவது வழக்கம்; விஞ்ஞான ரீதியில் பாக்டீரியாக்களையும் கிருமிகளையும் அழிக்கும் அபூர்வ குணம் கங்கை ஜலத்துக்கு மட்டும் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது

Ganga devi

River Ganga (ganges in English) is worshipped by the Hindus ;it is the holiest river. It originates in the Himalayas and pours into the Bay of Bengal after running 1500 miles. Most of the holy shrines are on the banks of River Ganga. The water is carried all over India in special metal pots and used in Abhishek of Temple idols or statues. Scientifically it has amazing qualities of killing germs and bacteria.

—subham—

Tags HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-30;  Gana, Guna, Ganga, Gandharva, இந்துமத கலைச்சொல் அகராதி-30  , கங்கை, குணங்கள், கனபாடிகள்

திருமாலுக்கு சிவன் கொடுத்த சக்ராயுதம்! அருணகிரி சொல்லும் அதிசயச் செய்திகள் ! (Post.15,368)

Written by London Swaminathan

Post No. 15,368

Date uploaded in Sydney, Australia –  28 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 3

***

திருப்புகழில் மதுரைத் திருவிளையாடல் புராணம்

செம் சொல் மா திசை வட திசை குட திசை … தமிழ் மொழி

விளங்கும் சிறந்த தெற்கு திசை, வடதிசை, மேற்கு திசை,

விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து … மேலான கிழக்கு

திசை முதலிய திக்குகள் எல்லாவற்றிலும் போர் செய்து,

திங்கள் வேணியர் பல தளி தொழுது … நிலவை அணிந்த சடை

முடியராகிய சிவபெருமானுடைய பல கோயில்களையும் தொழுது,

உயர் மக மேரு செண்டு மோதினர் அரசருள் அதிபதி …

உயர்ந்த பெரிய மேரு மலையின் மீது செண்டை எறிந்த க்கரவர்த்தியே**,

தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு … தொண்டர்

முதலானோர் வழிவழி அடிமையாக இருந்து முத்தி பெற அருளிய

செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே. …

திருச்செந்தூரில் இனிது வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.

* முருகன் பாண்டியச் சக்கரவர்த்தி உக்கிர குமாரனாய் அரசாண்டபோது பொன் பெற வேண்டி மேருமலையைச் செண்டாலடித்த திருவிளையாடலைக் குறிக்கும்.

***

திருப்புகழில் திருக்குறள் பற்றி அருணகிரிநாதர்

படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்

     வியனினுரை பானு வாய்வி யந்துரை

          பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி …… சங்கபாடல்

பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை

     திருவளுவ தேவர் வாய்மை யென்கிற

          பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் …… சந்தமாலை

மடல்பரணி கோவை யார்க லம்பக

     முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்

          வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி …… சண்டவாயு

மதுரகவி ராஜ னானென் வெண்குடை

     விருதுகொடி தாள மேள தண்டிகை

          வரிசையொடு லாவு மால கந்தைத …… விர்ந்திடாதோ

அடல்பொருது பூச லேவி ளைந்திட

     எதிர்பொரவொ ணாம லேக சங்கர

          அரஹர சிவாம ஹாதெ வென்றுனி …… அன்றுசேவித்

தவனிவெகு கால மாய்வ ணங்கியு

     ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம

          அதிபெல கடோர மாச லந்தர …… னொந்துவீழ

உடல்தடியு மாழி தாவெ னம்புய

     மலர்கள்தச நூறு தாளி டும்பக

          லொருமலரி லாது கோவ ணிந்திடு …… செங்கண்மாலுக்

குதவியம கேசர் பால இந்திரன்

     மகளைமண மேவி வீறு செந்திலி

          லுரியஅடி யேனை யாள வந்தருள் …… தம்பிரானே.

……… சொல் விளக்கம் ………

படர் புவியின் மீது மீறி வஞ்சர்கள் … பரந்துள்ள இப்பூமியில்

அளவுக்கு மிஞ்சி வஞ்சனை உள்ள லோபியர்களிடம்

வியனில் உரை பானுவாய் வியந்து உரை … (பொருள் பெறுதற்கு

அவர்களைச்) சிறப்பாக சூரியனே என்று பாராட்டிக் கூறியும்,

பழுது இல் பெரு சீல நூல்களும் … குற்றம் இல்லாத பெரிய

ஒழுக்க நூல்களையும்,

தெரி சங்க பாடல் … தெரியவேண்டிய சங்க நூல் பாடல்களையும்,

பனுவல் கதை காவ்யமாம் எண் எண் கலை … வரலாற்று

நூல்களையும், கதைகளையும், காப்பியங்களையும், அறுபத்து நான்கு

கலை நூல்களையும்,

திருவ(ள்)ளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை ஓதியே உணர்ந்து … திருவள்ளுவ தேவர் அருளிய பொய்யாமொழி ஆகிய திருக்குறள் முதலிய பழமொழி நூல்களை ஓதியும் உணர்ந்தும்,

பல் சந்த மாலை மடல் பரணி கோவையார் … பலவகையான

சந்த மாலைச் செய்யுட்கள், மடல், பரணி, கோவையார்,

கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்

வகைவகையில் … கலம்பகம் முதலான கோடிக்கணக்கான

பிரபந்தங்களை வகைவகையாய்ப் பாடி,

ஆசுசேர் பெரும் கவி சண்டவாயு மதுரகவி ராஜன் நான்

என்(று) … பெருமைமிக்க ஆசுகவி, சண்டமாருதன், மதுரகவிராஜன்

நான் என்று (புலவர்கள் தம்மைத் தாமே கூறிக்கொண்டு),

வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை … வெண்

குடை, வெற்றிக் கொடி, தாளம், மேளம், பல்லக்கு முதலான

வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ …

சிறப்புச் சின்னங்களோடு உலவி வரும் மயக்க அறிவும், அகங்காரமும் அவர்களை விட்டு நீங்காவோ?

***

திருமாலுக்கு சக்கர ஆயுதம் கொடுத்த சிவபெருமான்

அடல் பொருது பூசலே விளைந்திட … (ஜலந்தராசுரனுடன்)

வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக

எதிர் பொர ஒணாமல் ஏக … அவனுடன் எதிர் நின்று போர் செய்ய முடியாமல் புறந்தந்து (திருமால்) சென்று,

சங்கர அரஹர சிவா மஹா தேவ என்று உ(ன்)னி அன்று

சேவித்து … சங்கரா, அரகர சிவா மகா தேவா என்று தியானித்து அன்று ஆராதனை புரிந்து,

அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி … மண்ணுலகில்

வெகு காலமாகத் தொழுது, மனம் உருகி,

வெகு பாச கோச சம்ப்ரம அதி பெல கடோர மா சலந்தரன்

நொந்து வீழ … கொடிய பாசக் கயிறு, கவசம் முதலிய சிறப்பான

ஆயுதங்களும், மிக்க வலிமையும் கொடுமையும் உள்ள பெரும்

ஜலந்தரன் வருந்தி விழுமாறு

உடல் தடியும் ஆழி தா என … அவனுடைய உடலைப்

பிளக்கவல்ல சக்கரத்தைத் தந்தருள்வீர் என்று வேண்டி,

அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் … தாமரை

மலர்கள் ஆயிரம் கொண்டு (சிவனுடைய) திருப்பாதங்களில்

பூஜித்து வந்த அந்த நாட்களில் (ஒரு நாள்),

ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு …

ஒரு மலர் இல்லாது குறைந்துபோக, (அதற்கு ஈடாகத் தன்)

கண்ணையே எடுத்து அர்ச்சித்த சிவந்த கண்ணுடைய திருமாலுக்கு

உதவிய மகேசர் பால … அந்தச் சக்ராயுதத்தையே உதவி அருளிய*

மகா தேவருடைய குழந்தையே,

இந்திரன் மகளை மணம் மேவி … இந்திரன் பெண்ணாகிய

தேவயானையை திருமணம் செய்து கொண்டு,

வீறு செந்திலில் உரிய அடியேனை ஆள வந்து அருள்

தம்பிரானே. … பெருமை நிறைந்த திருச்செந்தூரில் (உன்னிடம்)

உரிமை பூண்ட அடியேனாகிய என்னை ஆட்கொள்ளும் பொருட்டு

வந்தருளிய பெரும் தலைவனே.

திருமால் ஆகிய தேவர்களை வென்ற பின், வலிமை வாய்ந்த ஜலந்திரன் என்னும் அசுரன் சிவ பெருமானையும் வெல்ல கயிலைக்குச் சென்றான். சிவன் ஒரு மறையவனாகத் தோன்றி, ஒரு சக்கரத்தை அமைத்து, நீ அந்த சக்கரத்தைத்தாண்டி வந்தால் கயிலைக்குப் போகலாம் என்றார். அவன் அதை எடுக்கப்போனபோது கழுத்து அறுபட்டு மாண்டான். அந்தச் சக்கரத்தை அடைய திருமால் சிவனை தினமும் ஆயிரம் மலர்களால் அர்ச்சித்துப் பூஜித்தார். ஒரு நாள் ஒரு பூ  குறையவே தன் கண்ணையே மலராக இட்டுப் பூஜித்தார். பின்னர் சுதர்ஸன சக்கரத்தையும் சிவனிடமிருந்து பெற்றார்.

***

தகராகாசம் என்றால் என்ன ?

தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றி … தகராகாசமாக இருந்து* அழகிய

வேதசிரோமுடியாம் பேரிடத்தைப் பொருந்தி,

தடநற் கஞ்சத் துறைவோனே … அகன்ற நல்லிடமான இதயக்

கமலத்தில் வீற்றிருப்பவனே,

ஆன்மாக்களின் இதய தாமரைக்கு நடுவே ஞானமயமாக விளங்கும் ஆகாயம் தகராகாசம்‘ எனப்படும்.

***

தமிழ்ப்புலவன் என்ற பட்டம் வேண்டும் !

புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து எனக்குத் தொண்டு உறப்

பற்றும் புலத்துக் கண் செழிக்கச் செந்தமிழ் பாடும் புலப்

பட்டம் கொடுத்தற்கும் … என்னைக் காப்பதற்காக உனது

திருவடியைத் தந்து நான் தொண்டு செய்து உன்னைப் பற்றும்படியான ஞானக் கண் (அறிவு நிலை) செழித்தோங்கவும், செந்தமிழ் பாடும் புலவன் என்னும் பட்டத்தை (உலகோர்) கொடுப்பதற்கும்,

கருத்தில் கண் படக் கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம்

புரிவாயே … ஞானக் கண் பெறக் கிட்டும்படியான புகழைப்

பெறுவதற்கும் அருள் மனம் கொண்டு உதவுவாயாக

***

பிள்ளையார் பாரதம் எழுதிய கதை

பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும்

கதை பார மேருவில் அன்று வரைந்தவன் இளையோனே …

மிகுந்து பாய்கின்ற மதம் கொண்ட யானையின் முகத்தைக் கொண்ட

முதல்வரும், பாரதம் என்ற பெரிய கதையை பாரமான மேரு மலையில் அந்நாள் (தன் ஒடிந்த தந்தத்தால்) எழுதியவருமான கணபதிக்கு தம்பியே,

***

முருகனின் மாலை தமிழ்ப் பாமாலை !

செந்தமிழ் சொல் பாவின் … செந்தமிழ்ச் சொற்களான பாடல்களை

மாலைக் கார … மாலைகளாக அணிந்துகொள்பவனே,

அண்டர் உபகார … தேவர்களுக்கெல்லாம் உபகாரியே,

சேவற் கார … சேவலைக் கொடியாக உடையவனே,

(திருச்செந்தூர் திருப்புகழ் பாடல்கள் – நன்றி கெளமாரம். காம்)

To be continued……………..

—Subham—

Tags-  திருமாலுக்கு சிவபெருமான் , சக்ராயுதம்! அருணகிரிநாதர் , அதிசயச் செய்திகள்! திருப்புகழில் , சொல் அழகும் பொருள் வளமும்- Part 3

உள்ளங்கை சொல்லும் உங்கள் வாழ்க்கைப் பயணம்! (Post.15,367)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,367

Date uploaded in London – 27 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

29-11-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

உள்ளங்கை சொல்லும் உங்கள் வாழ்க்கைப் பயணம்! 

ச. நாகராஜன்

பாரத சாஸ்திரங்களுள் மிக முக்கியமான ஒன்று சாரீரக சாஸ்திரம். 

அது என்ன சாரீரக சாஸ்திரம் என்று கேட்பவர்களுக்கு நமது புராணம் விடை கூறுகிறது.

ஒரு முறை மஹாவிஷ்ணு தனது யோக நித்திரையில் இருந்தார். அவரது தேவியான மஹாலக்ஷ்மியும் அருகில் இருந்தாள்.

அப்போது கடலுக்கு அரசனான சமுத்ரராஜன்  அவர்களிடம் இருந்த ரேகைகளைப் பார்த்து வியந்தான். மனித குலத்தின் நன்மைக்காக அதை அப்படியே மனிதர்களுக்குத் தந்தான். இதுவே சாரீரக சாஸ்திரம்!

இந்த விஞ்ஞானம் பின்னால் நாரதர், லக்ஷகர்,, வராஹர், மாண்டவ்யர், கார்த்திகேயன் உள்ளிட்டோரால் விவரிக்கப்பட்டது.

இதைப் படித்துப் புரிந்து கொள்வது என்பது எல்லோராலும் முடியவில்லை.

ஆகவே இதை போஜராஜன், சுமந்தர் ஆகியோர் எளிமைப் படுத்தித் தந்தனர்.

சமுத்ரா என்பவர் இதை இன்னும் சுருக்கித் தெளிவாகத் தந்தார்.

சாமுத்ரிக சாஸ்திரம் என்று கூறப்படும் இதை அறிந்த நிபுணர்களை மஹாராஜாக்கள் தங்கள் அரசவையில் முக்கியமான இடத்தைத் தந்து ஆதரித்தனர்.

ஒவ்வொருவரையும் பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது சரீர அங்கங்களை வைத்துக் கூறுபவர்கள் இவர்கள்.

இந்தக் கலையில் கார்த்திகேயன் சித்தாந்தம் என்பது பிரபலமானது.

இதைக் கற்று நிபுணராகி மனிதர்களுக்குச் சொல்வது என்பது எல்லோராலும் முடியாது.

இதைக் கற்க வருபவர் யோக சாஸ்திரத்தில் நிபுணராக இருக்க வேண்டும்.

மூச்சுக் கலையை முதலில் அவர் அறிந்திருக்க வேண்டும். அவர் மனித அங்கங்களை நன்கு புரிந்து கொள்பவராகவும், சகுன சாஸ்திரத்தில் வல்லவராகவும், இதிஹாஸம், புராணம் ஆகியவற்றில் வல்லவராகவும் இருத்தல் வேண்டும்.

திருப்தியான மனம் கொண்டவராகவும், சிவபிரானை வழிபடுபவராகவும் நல்ல ஜோதிடக் கலை வல்லுநராகவும் இருத்தல் வேண்டும்.

குருவிடம் முறையாக இந்தக் கலையைக் கற்று அவரது ஆசிகளை நன்கு பெற்ற பின்னரே அனைவருக்கும் இதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

புழு பூச்சிகள், பூனை, நாய், கழுதை, நாத்திகன் ஆகியோரைப் பார்த்தல் அபசகுனம் என்று சொல்லப்பட்டது.

கேட்பவருக்கும் சொல்பவருக்கும் இடையே குறுக்கே யாராவது சென்றால் அதுவும் சரியானதில்லை என்று கூறப்பட்டது.

குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம் சேர்ப்பதற்காகப் புறப்பட இருக்கும் பயணங்கள் உள்ளிட்டவை பற்றி அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது மக்களின் வழக்கமாக இருந்தது.

ஒரு விஷ்யத்தைப் பற்றிக் கேட்பவர் எப்போது வந்து கேட்கிறார், அவர் எந்த திசையைப் பார்த்து அமர்கிறார் என்பதெல்லாம் கூட முக்கியமானதாகும்.

நூற்றுக் கணக்கான குறிப்புகளைத் தரும் ரேகைகள் உள்ளங்கையில் உள்ளன. ஆயுள் ரேகை, இதய ரேகை உள்ளிட்ட பல ரேகைகளுடன் சந்திர மேடு, புத மேடு, சுக்கிர மேடு, சனி மேடு சூரிய மேடு உள்ளிட்ட உள்ளங்கை மேடுகளும் ஒருவரை அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் காட்டி விடும்.

எடுத்துக் காட்டிற்காக ஒரு சில ரேகைகளை இங்கு பார்ப்போம்;

ரோஹிணி ரேகை: உள்ளங்கை ஆரம்பத்தை முன் கை சந்திக்கும் இடம் சந்தி எனப்படும். இந்த சந்தியைச் சுற்றி இருப்பது மணிபந்த ரேகை ஆகும். இதிலிருந்து ஆரம்பித்து சுட்டுவிரல் வரை செல்லும் ரேகை ரோஹிணி ரேகை ஆகும். இது சிவப்பு வண்ணத்தில் ஜொலிக்கும். ஒரு வித தடங்கலுமில்லாமல் இந்த ரேகை இருப்பின் தீர்க்க ஆயுளைக் குறிக்கும்.

ரதிப்ரதா: சுண்டுவிரலுக்குக் கீழே செங்குத்தாக உள்ள ரேகை ரதிப்ரதா என அழைக்கப்படுகிறது. இரவும் பகலும் இது தங்கம் போல மின்னினால் அதைக் கொண்டிருக்கும் பெண் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பாள். பெயரில் இருக்கும் ரதியைப் போல மணவாழ்க்கையில் எல்லையற்ற இன்பத்தை அனுபவிப்பாள்.

மஹாமதி: சுண்டுவிரலுக்கும் மோதிர விரலுக்கும் அடியில் இருக்கும் தெளிவான ரேகை மஹாமதி எனப்படும். இதைக் கொண்டிருக்கும் பெண்மணி கூரிய அறிவைக் கொண்டிருப்பாள்.

இப்படி ஏராளமான குறிப்புகளைத் தருவது சாரீரக சாஸ்திரம்.

சம்ஸ்கிருத மூலத்துடன் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

உள்ளங்கை காட்டும் உலகத்தை அறிய விரும்புவோர் நாட வேண்டிய நூல் இதுவே

**

Purananuru Wonders 7- Ancient Tamil Encyclopaedia Part 47 (Post No.15,366)

Written by London Swaminathan

Post No. 15,366

Date uploaded in Sydney, Australia –  27 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

310

Yaga, Yajnas and Sanskrit in Sangam Age!

Poems composed by Nettimaiyar on Mudukudmi Peruvazuthi, one of the oldest Pandya kings, show that Sangam Age was full of Vedic rituals. Not only Mudukudumi, but also another Choza king did Rajasuyam, which was done by Yuthisthira in the Mahabharata Period. We have confirmation of Sangam Tamil Age as Vedic Age from Kalidasa as well. Kalidasa referred to only a Pandya king. He was introduced as a person doing lot of Yagas in Raghuvamsam. That Pandya king was associated with Agastya as well. Kalidasa lived before Sangam age or a contemporary of Sangam age kings.

***

311

Purananuru verse 13 has two interesting details.

Like Lord Siva, Choza king also wore an armour made up of Tiger skin. He was compared to Yama (for his enemies).

***

312

Second interesting thing is the similes. The king’s march on an elephant was like a ship in the ocean and moon amidst stars in the night sky. Swords of warriors are compared to the sharks in the sea.

புறநானூறு 13, பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன்: சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி

புலி நிறக் கவசம் (Tiger Armour)

களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும், (Similes)

பன் மீன் நாப்பண் திங்கள் போலவும்,

சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப

***

313

Puranānūru 13, Poet Uraiyur Ēnichēri Mudamōsiyār sang for Chozhan Mudithalai Kōperunarkilli

riding an elephant, appearing like Kootruvan (Yama, God of Death),

wearing on his handsome chest an armor made with

tiger skin ……

moving like a boat plying on the ocean and like the moon

amidst many stars, swarmed by shark-like swordsmen.

****

314

One more point to be noted is the use of Navy in Tamil as Naavaay.

Tamil and Sanskrit have same root and so we find thousands of Tamil words in English.

***

315

Meat Dishes

Puram verse 14 composed by Kapilar has some information about non vegetarian food. Tamils of Sangam age were predominantly non vegetarians. There are more references to roasted meat, barbeque etc. in Sangam poems. Kapilar, thouh a brahmin, never hesitated to sing about the meat dishes

புறநானூறு 14, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன், திணை: பாடாண், துறை: இயன் மொழி

***

316

Shamudrika Lakshana

வலிய ஆகும் நின் தாள் தோய் தடக்கை

The kings hands were  long . In Sanskrit it is called Aaajaanu Baahu, arms touching the  knee. Lord Raa was praised as Aajaanubaahum aravinda lochanam (lotus like eyes)

புலவு நாற்றத்த பைந்தடி

பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை

கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது, (Meat Dishes)

Puranānūru 14, Poet Kapilar sang to Cheraman Selva Kadunkō Vāzhiyāthan, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi

With your long hands that reach to your legs,

***

317

King is like Lord Skanda (Murugan )

In battles, your strength is like that of the vast earth.

You are like Murukan in battles.

***

318

Puram Verse 15 composed by Nettimaiyar praised the Pandya king Mudukudumi Peruvazuthi

புறநானூறு 15, பாடியவர்: நெட்டிமையார், பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, திணை: பாடாண், துறை: இயன் மொழி

***

319

Donkeys

Ploughing the land of enemies using Donkeys. This is in Karavela inscription as well. The victorious kings destroyed the palaces of their enemies and ploughed them with ploughs pulled by donkeys.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

வெள்வாய்க் கழுதைப் புல் இனப் பூட்டிப்

பாழ் செய்தனை,

***

320

Four Vedas

Half baked people argue on the words Tri Veda and Chatur Veda. Those fools argued three Vedas mean earlier period and four Vedas mean later period. Since those people are not practising Vedic Brahmins they bluffed and bluffed. The word Tri Veda is used in the context of Vedic rituals where only three Vedas Rik, Yajus and Sama are used. The fourth Veda—Atharvana has Rig Vedic hymns in addition to secular matter. Here the poet mentioned Four Vedas.

Pure Tamil word for Yaga /Yajna is Velvi. But at the same time poet used also Yupam (Vedic post made up of wood)- a Sanskrit.

Sanskrit words

Veda, Yupam are Sanskrit words.

புரையில்

நற்பனுவல் நால் வேதத்து,

அருஞ் சீர்த்திப் பெரும் கண்ணுறை

நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன் மாண்

வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,  20

யூபம் நட்ட வியன் களம் பல கொல்?

***

321

Puranānūru 15, Poet Nettimaiyār sang to Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi

On the streets of your enemy countries dug up by your

fast chariots, you yoked dull coloured donkeys with

white mouths, and plowed their protected vast spaces.

***

to fight against your army with shining weapons, or

the number of huge fields where you have planted columns

after performing faultless rituals prescribed by the four good

Vedas, with precious sacrificial elements and abundant ghee?

***

322

Rajasuya Yajna performed by Choza King Perunarkilli

புறநானூறு 16, பாடியவர்: பாண்டரங்கண்ணனார், பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி,

செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்,

Puranānūru 16, Poet Pāndarankannanār sang to Chozhan Rāsasooyam Vētta Perunarkilli

***

323

In Sanskrit literature Lod Skanda is portrayed as the Chief of the Army – Senapati

Tamils also compared kings to Lord Murukan

is donned with dried sandal paste, O Lord who is as fierce as Murukan!

***

324

Tamil armies set fire to the enemy towns and plundered the towns unlike Ramayana and Mahabharata wars.

You lit bright flames in their protected lands, devastating

huge, lovely fields that knew nothing of forest but sugarcane,

tangled vallai vines, white waterlilies, cool pakandrai and

fruiting bittermelon vines.  O Lord!  Your elephants unite

and fight as one, in fierce, fine battles!

***

325

Puram Verse 17 explodes the myths of English educated idiots. Those who studied history books written by the British thought that British united India.  In fact, there were more wars and killings in Europe than in ancient India. In spite of the local wars, people considered the whole country as one holy land. People were travelling from Himalayas to Kanyakumari without Visa. Tamils have sung Himalayas and Kumari in the same poem many times. This shows the one nation concept that existed 2000  years ago. In Sanskrit also the Bharata Kanda concept is recited every day by priests and Brahmis in their daily rituals. The wonder of wonders is that they repeat every day (in Sankalpa) the historical period and geographical location where they perform their ritusls.

—subham—

Tags- Purananuru Wonders 7, Ancient Tamil Encyclopaedia Part 47 ,Yaga, Yajnas and Sanskrit in Sangam Age!, Shamudrika Lakshana

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 2

Written by London Swaminathan

Post No. 15,365

Date uploaded in Sydney, Australia –  27 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்

(திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்ப் பாடல்கள்)

நான்கு வகைக் கவி பாடிய ஞான சம்பந்தர் = முருகப் பெருமான்

மிகு பாவின் செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார … மிகுந்த

பாடல் வகைகளில் செந்தமிழைக் கொண்டு (சம்பந்தராக வந்துதேவாரமாகப் புனைந்த) நாற்* கவியாளனே,

தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு – எதுகை மோனையுடன் கூடியது,

மதுரம் – இனிமை வாய்ந்தது,

சித்திரம் – கற்பனையும் அழகும் மிக்கது,

வித்தாரம் – வர்ணனை மிக்கது.

***

மக்கள் பற்றி அருணகிரிநாதருக்கு வியப்பு!

காம க்ரோத உலோபப் பூதவிகாரத்தே … காமத்தாலும்,

கோபத்தாலும், ஈதற் குணமே இல்லாததாலும், ஐம்பூதங்களின்

சேஷ்டைகளாலும்

அழிகின்ற மாயா காயத்தே … அழிகின்ற மாயையான இந்த

உடல் மீதும்,

பசு பாசத்தே … இந்த ஜீவாத்மா இச்சைப் படுகின்ற உலகப்

பற்றுக்களின் மீதும்

சிலர் காமுற்றேயும் அதென்கொலோதான் … சிலர் ஆசைகொண்டு

இருக்கின்ற அந்த நிலை ஏன்தானோ? தெரியவில்லை!!

***

ஹோமம் செய்தால் சிவலோகம் கிட்டும் !

ஓமத்தீ வழுவார்கட்கு ஊர்சிவ லோகத்தே … வேள்வித்தீயை

தவறாமல் வளர்ப்பவர்களுக்கு இருப்பிடத்தை சிவலோகத்திலே

தரு மங்கைபாலா … தருகின்ற உமாதேவியின் குமாரனே,

யோகத்து ஆறு உபதேசத் தேசிக … யோகவழிகளை உபதேசிக்கும்

குருமூர்த்தியே,

ஊமைத் தேவர்கள் தம்பிரானே. … உன் முன்னே வாயில்லா

ஊமைகளாகிவிடும் தேவர்களின் தனிப் பெரும் தலைவனே.

***

மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது உண்மையே !

புகல் அரியதாம் த்ரி சங்கத் தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்

புவி அதனில் வாழ்ந்து … சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ்

நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில்

வாழ்ந்தும்,

வஞ்சித்து உழல் மூடர் புநிதம் இலி மாந்தர் தங்கள் புகழ்

பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு

வந்தித்திடுவேனோ … பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும்,

பரிசுத்தம் இல்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்)

புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது அழகிய இன்பம் தரும் திருவடி

மலர்களை மனத்தில் கொண்டு துதிக்க மாட்டேனோ?

***

கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. … அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.

***

மனிதர்களைப்பாடும் புலவர்கள் மீது கண்டனம்

சிறு தமிழ்த்தென்றலினுடனே … மெல்லிய இனியதமிழ்த் தென்றல் காற்றினுடன் வந்து

நின்றெரிக்கும்பிறை யெனப்புண்படும் … சந்திரன் நின்று

கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன்,

எனப்புன்கவி சிலபாடி … என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி

இருக்குஞ்சிலர் … சில புலவர்கள் வீணே இருக்கின்றனர்.

திருச்செந்திலை உரைத்துய்ந்திட அறியாரே … திருச்செந்தூரில்

எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ?

***

செல்வந்தர்களைப் புகழ வேண்டாம்

நூல் அநந்த கோடி தேடி மால்மிகுந்து … பல கோடி நூல்களைத் தேடிப் படித்து மயக்கத்தை அடைந்து,

பாருளோரை நூறு செஞ்சொல் கூறி … உலகில் உள்ள

செல்வந்தரை நூறு செவ்வையான சொற்களால் பாடி,

மாறி விளைதீமை … புத்தி மாறி, அதனால் தீமை விளைந்து,

நோய்கலந்த வாழ்வுறாமல் … பலவிதமான பிணிகளுடன் கலந்த துன்ப வாழ்வை அடையாமல்,

நீகலந்து … நீ எனது அறிவில் கலந்து

உள் ஆகு ஞான நூல் அ டங்க … உள்ளத்தில் பொருந்தும் ஞான சாஸ்திரங்கள் முழுவதும்

ஓத வாழ்வு தருவாயே … ஓதி உணரக் கூடிய வாழ்வைத்

தந்தருள்வாயாக.

***

கண்டவர்களைப் பார்த்து  நீயே இந்திரன், நீ தான் குபேரன் என்று பாடும் நிலை வேண்டாம்

நிதிக்குப் பிங்கலன் … செல்வத்துக்கு குபேரன் என்றும்,

பதத்துக்கு இந்திரன் … நற்பதவிக்கு தேவேந்திரன் என்றும்,

நிறத்திற் கந்தனென்று … பொன் போன்ற நிறத்துக்கு

கந்தப்பெருமான் என்றும்

இனைவொரை … கொடுப்பதற்கு வருந்தும் செல்வந்தரிடம் சென்று,

நிலத்திற் றன்பெரும் பசிக்கு … இந்த உலகத்தில் தன் பெரும் பசியைப் போக்குதற்கு

தஞ்சமென்றரற்றி … நீயே புகலிடம் என்று கூறி முறையிட்டு,

துன்பநெஞ்சினில் … துயரம் மிகுந்த மனதில்

நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்து … தினமும் புதுப்புதுச் சொற்களின் கூட்டத்தால் ஒரு கவிதை பாடி,

சங்கடம் புகட்டிக் கொண்டு உடம்பழிமாயும் … சங்கடத்தில் சிக்கி உடம்பு அழிந்து மாய்கின்ற

புலத்திற் சஞ்சலங் குலைத்திட்டு … புலன்களால் வரும்

துன்பங்களைத் தொலைத்து,

உன்பதம் புணர்க்கைக்கு … உன் திருவடியைச் சேர்வதற்கு உரிய

அன்புதந்தருள்வாயே … அன்பினை வழங்கி அருள்வாயாக.

***

அனுமார் , நாரதர் பற்றி

பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்று அமராடி …

முன்பு, அந்தப் பெரிய அநுமானின் தோளிலே வீற்றிருந்து போர் செய்து,

பாவியி ராவணனார்தலை சிந்தி … பாவியாம் ராவணனுடைய

தலைகள் சிதறவும்,

சீரிய வீடணர் வாழ்வுற … உத்தமனாம் விபீஷணன் வாழ்வுறவும்

செய்து,

மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கு

இனியோனே … மணந்த பாவையாம் சீதையின் தோளைத் தழுவிய

மாமனாம் (ராமனின்) திருமாலின் சிந்தைக்கு இனியவனே,

சீலமு லாவிய நாரதர் வந்துற்று … நல்ல குணங்கள் நிறைந்த

நாரத முநிவர் உன்னிடம் வந்து,

ஈதவள் வாழ்புன மாமென முந்தி … இதுதான் அவ்வள்ளி வாழும்

தினைப்புனமாகும் என்று குறிப்பிட்டுக் காட்ட, உடனே நீ முடுகிச் சென்று,

***

ஆறே எழுத்து போதும் (சரவணபவ)

உலப்பு இல் ஆறு எ(ன்)னு(ம்) அக்கரமும் கமழ் கடப்பம்

தாரும் முக ப்ரபையும் தினம் உளத்தின் பார்வை இடத்தில்

நினைந்திட அருள்வாயே … அழிவில்லாத (சரவணபவ என்னும்)

ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும்,

திருமுகங்களின் ஒளியையும் நாள்தோறும் நான் என் மனக்

கண்ணில் நினைக்கும்படி அருள் புரிவாயாக.

***

சிவ பெருமானுக்கும் துளசி உண்டு !

திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம்

சடா பஞ்சரத்து உறு தோகை சிந்தையே … நிலவு, ஆத்தி,

கொன்றை, ஊமத்தம் மலர், துளசி (இவைகள்) நெருங்கிய, அழகிய, சிவந்த (சிவ பெருமானின்) சடையாகிய கூட்டிலிருக்கும் கங்கையாகிய நங்கையின் சிந்தைக்கு உகந்தவனே,

–subham—

Tags- அருணகிரி நாதர் சொல் அழகு, பொருள் வளம், Part 2, அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள், துளசி, நாரதர், புலவர்கள் மீது கண்டனம் , நான்கு வகை கவிதைகள், அனுமார்

இல்லறத்தான் சிறப்பு! (Post No.15,364)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,364

Date uploaded in London – 26 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்

இல்லறத்தான் சிறப்பு!

ச. நாகராஜன் 

வீடு என்பதன் இலக்கணம்! 

யத்ர நாஸ்தி ததிமந்தநகோஷோ யத்ர நோ லகுலகூனி சிசூனி |

யத்ர நாஸ்தி குருகௌரவபூஜா தானி கிம் பத் க்ருஹாணி

வனானி ||

எங்கே தயிரை மத்தால் கடையும் ஓசை எழவில்லையோ,

எங்கே சின்னக் குழந்தைகள் இல்லையோ,

எங்கே குருவைக் கௌரவித்து பூஜை நடைபெறவில்லையோ,

அது வீடா அல்லது காடா?! 

வளம் ஓங்கும் குடும்பம் எது?

சந்துஷ்டோ பார்யயா: பர்த்தா பர்த்ரா பார்யா ததைவ ச |

யஸ்மின்னேவ குலே நித்யம் கல்யாணாம் தத்ர வை த்ருவம் ||

எங்கே மனைவியால் கணவன் சந்தோஷமடைகிறானோ, கணவனால் மனைவி சந்தோஷமடைகிறாளோ, அப்படிப்பட்ட குடும்பத்தில் நிச்சயமாக வளமே ஓங்கும். 

இல்லறத்தான் சிறப்பு! 

யஸ்மாத்ரயோப்யாஸ்ரமிணோ தானேநான்னேன சாந்வஹம் |

க்ருஹஸ்தேனைவ தார்யந்தே தஸ்மாஜ்யேஷ்டாஸ்ரமீ க்ருஹி ||

(பிரமசர்யம், வானப்ரஸ்தம், சந்யாசம் ஆகிய) மூன்று நிலைகளில் உள்ளவர்கள் தானங்களாலும், உணவினாலும், மற்றவற்றினாலும் வழக்கமாக இல்லறத்தில் இருப்பவர்களால் ஆதரிக்கப்படுவதால் மற்றவர்களை விட அவர்களே உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

 சீலமுடைய மனைவி!

சீலபாரவதீ காந்தா புஷ்பபாரவதீ லதா |

அர்தபாரவதீ வாணீ பஜதே காமபி ஸ்ரியம் ||

அன்பிற்குரியவள் (மனைவியானவள்) ஒழுக்கமுடையவளாகவும் புஷ்பம் நிரம்பிய அழகிய கொடி போலவும், பேசுகின்ற வார்த்தைகள் அர்த்தம் நிரம்பியதாகவும் இருப்பின் அவை, வளம் பெற வழி வகுப்பவையாகும்.

 ஒழுக்கமான வாழ்க்கையே உயர்வைத் தரும்! 

சீலம் ரக்ஷது மேதாவீ ப்ராப்துமிச்சு: சுகத்ரயம் |

ப்ரஷம்ஸா வித்தலாபம் ச ப்ரேத்ய வர்கே ச மோதனம் ||

சுகத்தைத் தரும் மூன்று ஆதாரங்களான புகழ்செல்வம்இறப்பிற்குப் பின் சொர்க்க வாசம் ஆகிய மூன்றையும் விரும்பும் மேதாவியான ஒருவன் சீலமான வாழ்க்கையை நடத்துவான். 

சுத்தமான மூன்று! 

சுசி: பூமிகதம் தோயம் சுசிர்நாரீ பதிவ்ரதா |

சுசி: க்ஷேமகரோ ராஜா சந்துஷ்டோ ப்ராஹ்மண: சுசி: ||

பூமியிலிருந்து எடுக்கப்பட்ட நீர், பதிவ்ரதையான பெண்மணி, க்ஷேமத்தை நல்கும் அரசாட்சி செய்யும் ராஜா, திருப்தியுள்ள ஒரு பிராம்மணன் ஆகியோர் மிகவும் சுத்தமானவர்கள். 

தொடர்பினால் ஏற்படும் உயர்வும் தாழ்வும்! 

சந்தப்தாயஸி சம்ஸ்திதஸ்ய பயஸோ நாமாபி ந ஜாயதே

முக்தாகாரதயா ததேவ நலிநீபத்ரஸ்திதம் ராஜதே |

ஸ்வாத்யாம் சாகரஷுக்திமத்யபதிதம் தஜ்ஜாயதே மௌக்திகம்

ப்ராயேணாத்யமமத்யமோத்தமகுண: சம்சர்கதோ ஜாயதே ||

சம்சர்கம் (தொடர்பு) 

சூடுபடுத்தப்பட்ட ஒரு இரும்பின் மீது விழுந்த நீர் காணப்படுவதே இல்லை. ஆனால் ஒரு தாமரை மலரின் மீது விழும் நீர் பிரகாசிக்கிறது. அதே நீர்த்துளி ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று கடலின் அடியில் உள்ள நத்தைக்குள் விழுந்தால் அது  முத்தாக மாறுகிறது.

இது தான் அதமர்கள், மத்யமர்கள், உயர்ந்தோர் ஆகியோருடனான தொடர்பில் விளையும் விளைவுகளாகும்.

**

Hinduism through 500 Pictures in Tamil and English-38; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-38 (Post.15,363)

Written by London Swaminathan

Post No. 15,363

Date uploaded in Sydney, Australia –  26 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(Last Post-Hinduism through 500 Pictures in Tamil and English-37; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-37 (Post.15,324);  Date uploaded in London –  30 December 2025)

சாமரமும் சடாரியும் Cataari / Feet of Vishnu and Caamaram/ Fly whisk

(English matter follows Tamil write up)

சாமரமும் சடாரியும்

பெருமாள் கோவில்களுக்குச் சென்றால் இரண்டு விஷயங்களைக் காணலாம் . ஒன்று சடாரி, இரண்டு சாமரம் ; இவைகளில் சாமரம் என்பது பொதுவானது. அரசர்களுக்கும் தெய்வங்களுக்கும் இருபுறமும் சேவகர்கள் நின்று சாமரத்தை வீசுவார்கள் . சடாரி என்பது பெருமாள் கோவில்களில் பெருமாளைச் சேவித்த பின்னர் பக்தர்களின் தலையில் அர்ச்சகர்கள் வைப்பார்கள் .

ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவனை வேண்டும்போது இறைவனின் திருப்பாதம் தங்கள் தலையின் மேல் பட வேண்டும் அல்லது பக்கதர்களின் காலிலிருந்து வரும் தூசி பாட வேண்டும் என்று வேண்டுகிறார்கள்; பக்தர்கள் காலில் உள்ள தூசி பாத தூளி எனப்படும்.

அருணகிரிநாதர் திருப்புகழில் வேண்டுகிறார் :

(அடியார்கள் தொழும் உன் பாதம் என் மீது பட வேண்டும்)

வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம்

கொளும் அன்பர் வந்து அன்பொடு வாழ நிதம் புனையும்

பதம் தந்து உனது அருள் தாராய்

***

ஆழ்வார்களில் நம்முடையவர் என்று நாம் உரிமை கொண்டாடும் ஆழ்வார் நம்மாழ்வார் ஆவார். அவருடைய  உண்மைப் பெயர் சட கோபன் என்பதாகும்; இவரைத் தொடர்பு படுத்திச் சடாரிக்கு விளக்கம் தருகிறார்கள் ஆன்றோர்கள்.

சடாரி என்னும் உலோகத்தினால் ஆன கிரீடத்தில் பெருமாளின்/ விஷ்ணுவின் திருப்பாதங்கள் இருக்கின்றன . கோவிலில் பெருமாளின் தரிசனம் முடிந்து துளசியையும் தீர்த்தத்தையும் நாம் பெற்ற பின்னர், இந்த சடாரி என்னும் திருப் பாதத்தைத் நம் தலை மீது பட்டர்கள் வைக்கும்போது நாம் பய பக்தியுடன் நம் வாயையும் மூக்கினையும் கையால் மறைத்து தலையைக் குனிந்து காட்டவேண்டும். நம்முடைய வாயிலிருந்தும் மூக்கிலிருலிருந்தும் வரும் காற்றும் எச்சிலும் சடாரி என்னும் கிரீடத்தின் மீது படாமலிருக்க இப்படிச் செய்கிறோம். சங்கராசார்யார்கள், ஜீயர் போன்றோரை வணங்கும் போதும் இப்படிச் செய்யவேண்டும்.

இறைவனின் பாதங்களுக்கு தனி மதிப்பு உண்டு; உலகம் முழுதும் இந்துக்கள் வணங்கும் இடங்களில் பாத சுவடுகள் பதித்திருப்பதைக் காண்கிறோம். அவைகளை சிவன் பாதம் அல்லது விஷ்ணு பாதம் என்கிறோம். சில இடங்களில் ஆஞ்சனேயர் பாதம் இருப்பதாகவும் சொல்கிறோம். இமயம் முதல் இலங்கை வரை இதைக் காணலாம் இத்தகைய பாதங்களை ராமனிடம் பெற்ற பரதன் அவைகளைத் தலைமேல் சுமந்து சென்று 14 ஆண்டுகள் பூஜித்ததை நாம் ஓவியங்களிலும் பாடல்களிலும் சிற்பங்களிலும் காண்கிறோம். . இவ்வளவு மகிமை வாய்ந்தது இறைவனின் திருப்பாதங்கள்

இந்தப் பாதங்கள் உடைய கிரீடத்துக்குப் பெருமாள் கோவில்களில் சடாரி என்று சொல்வதற்கு ஒரு விளக்கம் தரப்படுகிறது; சடம் என்றால் நமது பிறப்பு , உயிர்வாழ்தல் என்று பொருள்; கருப்பையில் இருக்கும்போதும் அதை ஜடம் என்கிறோம் . இதை பஜ கோவிந்தம் முதலிய துதிகளில் காணலாம்.

புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீ ஜடரே சயனம்

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே

க்ருபயா பாரே பாஹி முராரே .21

—பஜ கோவிந்தம் துதி

ஜடமாகப் பிறந்த நம்மாழ்வார் அந்த ஜடத்துக்குப் — பிறப்புக்கு எதிரியாக — அரி– ஆக ஆனார் . அரி என்றால் எதிரி, விரோதி என்று பொருள் . அவரை நினைவு படுத்தும் வகையில் சடாரி வைக்கப்படுகிறது என்பது ஒரு விளக்கம்.

ஆயினும் தமிழ் அல்லது சம்ஸ்க்ருத இலக்கணப்படி இது சரியாகத் தோன்றவில்லை ; எது எப்படியாகிலும் பெருமாளின் பாதங்கள் நம் தலை மீது படுவதற்கு நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் . இது நம் தலையின் மீது படும்போது நாம் நினைக்கும் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை

நம் நாட்டின் வடக்கில் விஷ்ணு கோவில்களில் இந்த வழக்கம் இல்லை . இது தமிழ் நாட்டு வைணவர்களின் கண்டுபிடிப்பு! அதுவும் நம்மாழ்வாரைத் தொடர்பு படுத்துவதால் சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத்தான் வழக்கில் இருந்திருக்க வேண்டும் . இறைவனின் பாதங்கள் பற்றிப் பல பாடல்கள் இருந்தாலும் சடாரி பற்றிய பாடல்களோ கல்வெட்டுக் குறிப்புகளோ இருக்கிறதா என்பதை ஆராய்வது நமது கடமை.

***

சாமரம்

சாமரம் என்பது கவரிமான் அல்லது இமயமலை மாடுகளின் முடியிலிருந்தது தயாரிக்கப்படுகிறது. அரசர்கள் அல்லது தெய்வங்களுக்கு இரு புறமும் நின்று இதை வீசுவார்கள், அத்தோடு விசிறியையும் வீசுவார்கள் . மன்னர்களுக்கு வியர்க்காமல் இருக்கவும் கொசு அல்லது ஈ மொய்க்காமல் இருக்கவும் இந்த வழக்கம் தோன்றியிருக்க வேண்டும் . இப்போதும் அமெரிக்காவில் கால்பந்து முதலிய போட்டிகளில் சியர் லீடர்ஸ் Cheer Leaders இது போல சாமரம் வீசுவதைக் காணலாம்.

கவரிமான் என்பதை சாமரி என்றும் சொல்வார்கள். திருவள்ளுவரும் இந்த மானைக் குறிப்பிடுகிறார்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.   ( 969)

***

Cataari and Caamaram (chaamaram)

Cataari / Feet of Vishnu and Caamaram/ Fly whisk

Catari is shaped like a metal crown with two feet figures on it. The two feet figures represent Lord Vishnu’s feet. Vaishnavite temples have this and bless the devotees with it. After worshipping God in the Garbhagriha Mandapa, the Bhattacharyas or priests serve Tulsi and Theertham (holy water) and then bless the devotees by placing it on the head of the devotees.

 This custom has been in vogue from the days of Nammalvar , a famous Tamil Vaishnavite saint. Scholars say he was the enemy (ARI) of Jatam (catam in Tamil) and hence it is called Catari . Though Tamil or Sanskrit grammar do not support it, this explanation is accepted by the devotees.

The meaning of Jatam/ catam is as follows:

According to Vedanta, Jatam is a term that signifies the material world or physical existence. We come across Jata in Bhaja Govindam too.

पुनरपि जननं पुनरपि मरणं

पुनरपि जननी जठरे शयनम् |

इह संसारे बहु दुस्तारे

कृपयाऽपारे पाहि मुरारे ‖ 22 ‖

punarapi jananaṃ punarapi maraṇaṃ

punarapi jananī jaṭhare śayanam |

iha saṃsāre bahu dustāre

kṛpayā’pāre pāhi murāre ‖ 22 ‖

Birth again, death again, again resting in the mother’s womb! It is indeed hard to cross this boundless ocean of saṁsāra (cycle of repeated birth and death). O Murāri! by your causeless mercy please protect me (from this transmigratory process).

***

CAMARAM

Caamaram is fly whisk. It is used in the royal assemblies and temples. It is made up of the hair from a special type of deer or Tibetan Yak. Even Tiru Valluvar used it in his Tirukkural Couplet.

The yak, sheared of its hair, does not survive. The noble, stripped of their honour, prefer death – Tirukkural 969

or

Hair lost, the yak lives not. Honour lost, noble men leave their life-

Kural 969

On either side of a King on the throne or the god in the temple servants or devotees shake or show the fly whisks. Maybe it is to drive away the flies and mosquitoes. Even in America, we see cheer leaders showing something like fly whisks in sports matches.

In Hindu temples pair of Caamarams or fly whisks are used particularly during festival time. When the gods ae taken in procession, the devotees honour the god with the fly whisks.

–subham—

Tags -38Hinduism through 500 Pictures in Tamil and English-38; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-38, சாமரம், நம்மாழ்வார், சடாரி, Catari, Caamaram, Fly whisk, Nammalvar,