My Visit to Thiruppullani Adi Jagannatha Perumal / Vishnu Temple (Post No.11,094)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,094

Date uploaded in London – –    10 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Thiruppullani (Pronunciation – Thiruppullaani) is situated 11 kilometres from Ramanathapuram. It is one of the 108 Vaishnava Divyadesas (108 holy Vishnu temples).

Vishnu devotees consider it to visit all the 108 Divyadesas, located from the Southernmost Kanyakumari district to the Northernmost Himalayan states.

I went to Thiruppullani on 31st of May,2022 on my return journey from Rameswaram to Madurai. One can easily cover at least four shrines in one day- Rameswaram, Dhanuskoti, Thiruppullani and Thiru Uttarakosamangai.

Though it is not my first visit , I found everything there new. What I remember from my previous visit is the huge waves at Sethukkarai , sea coast three kilometres from the temple. In Rameswaram the sea looks like a vast lake with very little waves. In Sethukkarai, one could see huge waves. Devotees who have time take bath here and then visit Adi Jagannatha Perumal Temple (Pronunciation- Aathi Jagannaatha Perumaal Kovil)

(Perumaal – Vishnu; Kovil- Temple).

Significance of the temple in Bullet Points:-

*The place is called Dharbasayanam in Sanskrit.

Dharba= Thiru Pul (Holy grass).

*The place is also known as Aathi Sethu (Old or Original Bridge). Lord Rama is said to have constructed the bridge from here . Or first constructed from here ;later hanged to Dhanushkoti; another possibility is constructing from  different locations and linking them

*Sung and glorified and sanctified by Thiru Mangai Azvar (pronunciation- Aalvaar). Tamil Vaishnavites call this Mangalaa Saasanam.

*Main shrine is Adi Jagannatha Perumal; but there are two more sub shrines Dharba Sayana Rama and Pattabhisheka Rama. All these are associated with Ramayana. In addition there is one Kalyana Krishna shrine. Kalyana krishna is a rare and beautiful metal idol of Dancing Krishna on Snake.

*Among the goddesses, the main shrine is Padamasani. And there is one for Kalyanavalli.

*Like all Vishnu temples, there is a sub shrine for Andal (Aandaal)

*The temple has a huge tank in front of it.

*Rama prayed to Samudra Raja (King of Ocean) from here before constructing the bridge to Sri Lanka.

*King of Ocean answered Rama’s prayer late and apologised. His figure and Lakshmna, Rama’s bother is also sculpted here.

*Dharba is holy grass, Anai is pillow, Sayana is bed. Since Rama slept here for three days praying to Ocean King, the place is called Dharbasayana= Thirup Pul Aani.

Dharbasayana Rama inside the temple is in reclining posture.

*Another legend is Rama gave a bow to one of the Rishis here and the Rishi was Kanvar.

*Historically it is at least 1200 years old. Chozas, Pandyas, Nayak Kings and Sri Lankan kings added several structures to the temple.

Childless couple pray here in the temple for issues  and at near by Devippattinam.also known as Navabhashanam.

–subham-

Tags- Thiruppullani, Sethukkarai, Adi Jagannatha temple, Samudra rajan

நடந்தவை தான் நம்புங்கள் – 25 (Post No.11,093)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,093

Date uploaded in London – –    10 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 25

ச.நாகராஜன்

1

கணவனும் மனைவியும் ஒருவரே!

அமெரிக்காவில், மசாசூசெட்ஸ் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது. மனைவிக்கு வந்த கடிதங்களைப் பிரித்துப் பார்க்க கணவனுக்கு அதிகாரம் உண்டா என்பது பற்றிய வழக்கு அது.

நீதிபதி யோசித்துப் பார்த்தார்.

“மனைவிக்கு வரும் கடிதங்களை கணவன் பிரித்துப் பார்த்து படிக்கலாம். ஏனெனில் கணவனும் மனைவியும் இருவர் அல்ல; ஒருவரே! அந்த ஒருவர் கணவனே” என்றார் அவர்.

அவருக்கு கேம்பிரிட்ஜை சேர்ந்த தியோபிலஸ் பார்ஸன்ஸ் சொன்னது ஞாபகத்திற்கு வந்து விட்டது போல் இருக்கிறது.

(Theophilus Parsons of Cambridge  : he husband and the wife are one, and the husband is that one)

தீர்க்கமாகத் தன் தீர்ப்பை இப்படிச் சொன்னார் அந்த நியாயஸ்தர்!

2

உலகத்தில் வாழ்ந்ததிலேயே மிக உயர்ந்தவர் யார்?

தெற்கு லண்டனில் ஒரு பள்ளி. அதில் வணிகவியல் கற்பிக்கும் ஒரு ஆசிரியை தன் மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

“உலகத்தில் வாழ்ந்ததிலேயே மிக உயர்ந்தவர் யார்?”

சரியான பதிலுக்கு 10 பவுண்ட் பரிசு என்று சொல்லி நோட்டைக் காட்டினாள் ஆசிரியை.

மாத்யூ எழுந்து சொன்னான் : ‘செயிண்ட் தாமஸ்’

“இல்லை உட்கார்”, என்றார் ஆசிரியை.

அடுத்து ஜெனிஃபர் எழுந்தாள் :

‘செயிண்ட் பீட்டர்’, என்றாள்.

“இல்லை, உட்கார்”, என்றாள் ஆசிரியை.

அடுத்து ப்ரகாஷ் எழுந்தான்.

“ஜீஸஸ் க்ரைஸ்ட்” என்றான்.

“அடடா, சரியான விடை” என்று மகிழ்ந்து பாராட்டிய ஆசிரியை,

“இந்தா, இதோ உனக்கு பரிசு 10 பவுண்ட்” என்று  நோட்டை

நீட்டினாள்.

பரிசைக் கொடுக்கும் போது, ஆசிரியை கேட்டாள்: “அது சரி, நீயோ இந்தியாவில் குஜராத்திலிருந்து வந்த பையன். உனக்கு இப்படி இந்த விடை தெரியும்?” என்று கேட்டாள்.

பையன் உடனே பதில் சொன்னான்: “இந்த ஆன்ஸர் பொய் என்று எனக்குத் தெரியும். என் மனதிற்குள்ளாக சரியான விடையான பகவான் கிருஷ்ணர் என்ற விடையே வந்தது. என்றாலும் பிஸினஸ் இஸ் பிஸினஸ்” என்றான் ப்ரகாஷ்!

3

உனக்கு நஷ்டம்!

அமெரிக்க ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் (Calcin Coolidge) அதிகம் பேசாதவர். முத்துப் போலச் சொற்களை உதிர்ப்பவர்.

அவரிடம் ஒரு பெண்மணி வந்தாள். “ஜனாதிபதி அவர்களே! ஒரு நண்பருடன் பந்தயம் வைத்துள்ளேன். இரண்டு வார்த்தைகளுக்கு மேல் உங்களை பேச வைப்பதாக பந்தயம்! தயவுசெய்து ஏதாவது சொல்லுங்களேன்” என்றாள்.

உடனே கூலிட்ஜ் கூறினார் : “You lose” (உனக்கு நஷ்டம்!)

அவர் ஒரு முறை சர்ச்சுக்குச் சென்று திரும்பி வந்தார். அவரது மனைவி,’ சர்ச்சில் பாதிரியார் எதைப் பற்றி சொன்னார்?” என்று கேட்டார்.

அவர் தான் அதிகம் பேசாதவர் ஆயிற்றே.

“பாவம்” (SIN) என்றார்.

இன்னும் விரிவாக அவர் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்த அவர் மனைவி, “சரி, அதைப் பற்றி அவர் என்ன சொன்னார்?” என்று கேட்டார்.

உடனே கூலிட்ஜ் கூறினார்: “அதற்கு அவர் எதிரி” (He was against it)

4

கல்லறையும் நாடும்

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் க்ளிண்டனிடம் ஒரு முறை அமெரிக்காவை நிர்வகிப்பது பற்றிக் கேட்கப்பட்டது. அவர் கேல்ஸ்பர்க்கில் பேசும் போது இப்படி கூறினார்: “ அமெரிக்காவை நிர்வகிப்பது கல்லறைய நிர்வகிப்பது போல அல்ல! கல்லறையிலும் நிறைய பேர் இருப்பார்கள்; அமெரிக்காவிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் நீங்கள் பேசுவதைக் கேட்க மாட்டார்கள்!” (In a speech at Galesburg)

***

5

ஒரு டெமாக்ரட்டும் ஒரு ரிபப்ளிகனும்!

அமெரிக்காவில் நடந்தது இது!

ஒரு பெண்மணி ஹாட்- ஏர் பலூனில் மேலே பறந்து கொண்டிருந்தாள்.

கீழே உள்ள ஒருவரைப் பார்த்துச் சத்தம் போட்டுக் கேட்டாள்:” ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ! ஒரு நண்பரைப் பார்ப்பதாகச் சொல்லி இருக்கிறேன்.

ஆனால் இப்போது எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை!”

உடனே கீழே இருந்தவர் கூறினார் இப்படி: “ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் 31 டிகிரி 14.57 மினட்ஸ் நார்த் லாடிட்யூடிலும் 100 டிகிரி 49.09 மினட்ஸ் மேற்கு லாங்கிடியூடிலும் பொஸிஷன் கொண்டு இருக்கிறீர்கள்!

உடனே அந்தப் பெண்மணி கூறினாள் “” நீங்கள் என்ன ஒரு டெமாக்ட்ரட்டா?”

பேச்சு தொடர்ந்தது இப்படி!

கீழே இருந்தவர் :“ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

பெண்மணி : “ஏனென்றால் நீங்கள் சொன்னது அவ்வளவும் டெக்னிகலாக சரி தான்! ஆனால் அவ்வளவும் யூஸ்லெஸ்! பிரயோஜனமே இல்லாதது! உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் உதவவே இல்லை!”

கீழே இருந்தவர்: “நீங்கள் ஒரு ரிபப்ளிகன், சரி தானே!”

“பெண்மணி : “அட, சரிதான்! அது எப்படி சரியாகச் சொல்கிறீர்கள்?”

கீழே இருந்தவர்: “ஓ! அதுவா, தப்பான வாக்குறுதியைக் கொடுத்து சுடச்சுட ஏறி இப்போதுள்ள இடத்தில் இருக்கிறீர்கள்! உங்கள் பிரச்சினையை நான் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்! நீங்கள் என்னை சந்திக்கும் முன்னர் இருந்த இடத்திலேயே தான் இருக்கிறீர்கள்! என்றாலும் தப்பு என் பேரில் தான் இருக்கிறது என்று கூறுகிறீர்கள்! அதனால் தான் அதைக் கண்டுபிடித்தேன்!

நமக்குப் புரிகிறது டெமாக்ரட் யார்? ரிபப்ளிகன் யார் என்று இப்போது!

***

Tags- நடந்தவை தான் நம்புங்கள் 25, மிக உயர்ந்தவர் யார்?

கடிகாரத்திலும் விண்கலத்திலும் பயன்படும் சீசியம் (Post No.11,092)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,092

Date uploaded in London – –    9 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சீசியம் CESIUM

CAESIUM (CESIUM IN USA)   என்னும் மூலகம் அல்லது தனிமம் கார உலோகம் (ALKALI METAL) வகையைச் சேர்ந்தது. இது நாம் வசிக்கும் அறைகளில் கூட (ROOM TEMPERATURE) திரவ நிலையை அடைந்துவிடும். சோடியம் போலவே , தண்ணீரில் போட்டால் தீப்பிடித்து எரிந்துவிடும் . ஆகையால் இதை பாதுகாப்பான கண்ணாடிக் குப்பிக்குள் வைத்திருப்பர். நம் உடலில் இது மிக மிகக்குறைவாகவே இருக்கும். அதுவும் கூட பொட்டாசியம் முதலிய உப்புக்களுடன் கூடச் செல்லும் குறைவான அளவுதான். உடலுக்கு இது எந்த வகையிலும் பயன் இல்லை. ஆயினும் ஜப்பான் போன்ற நாடுகளில் சீசியம் ஜெல் (CESIUM GEL) என்பதைத் தோல் பளபளக்க, புத்துணர்ச்சி பெறப் (REJUVENATING) பயன்படுத்துகிறார்கள் . மருத்துவத் துறையில் கருவிகளில் பயன்படுகிறது.

சீசியம் என்ற சொல்லுக்கு ஆகாயம் போன்ற நீல நிறம் (SKY BLUE) என்று பொருள். இதனுடைய உப்புக்கள் எரியும்போது இந்த நிற ஜ்வாலை தோன்றுவதால் இப்படிப் பெயரிட்டனர்  இது ஜெர்மனியில் ஹைடல்பர்க் நகரில் நடத்திய சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.. ராபர்ட் புன்சென் (1811-1899), குஸ்தாவ் கிர்சாப் 1824-1887) என்ற இருவர் 30,000 லிட்டர் ரசாயன உப்புக்கரைசலைக் கொதிக்கவைத்து  உலோகம்வாரியாகப் பிரித்தனர். லித்தியம், பொட்டாசியம், கால்சியம் , சோடியம் , மக்னீசியம், ஸ்டரான்சியம் அடங்கிய உப்புக்களை நீக்கிய பின்னர் மீதியுள்ள கரைசலை புன்சென் பர்னர் விளக்கிலிருந்து வரும் சுவாலையின் மீது வீசி ஸ்பெக்ட்ராஸ்கோப் SPECTROSCOPE வழியாகப் பார்த்தனர். அதில் அருகருகே இரண்டு நீலக்கோடுகள் தென்பட்டன. இதுவரை பார்த்திராத அக்காட்சி புதிய மூலகத்தைக் காட்டிக் கொடுத்தன.

எங்கே கிடைக்கிறது?

தற்காலத்தில் கனடா நாட்டின் மானிடோபாவில் பெர்னிக் ஏரியிலிருந்தும் மற்றும் ஆப்பிரிக்காவில் ஜிம்பாப்வே   மற்றும் தென் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் சீசியம் எடுக்கப்படுகிறது.

இதன் உபயோகம் என்ன?

சீசியம் அணுக் கடிகாரம்தான்   நம் எல்லோருக்கும் நேரத்தை மிகத் துல்லியமாகக் கொடுக்கிறது லட்சக் கணக்கான ஆண்டுகளில் ஒரு வினாடிதான் தாமதம் காட்டும். ஆகையால் உலகம் முழுதும் சீசியம் கடிகாரங்களை நிறுவி நமக்கு ஒலி பரப்பிக்கொடு இருக்கின்றனர். இதுதான் கம்பயூட்டர்களிலும்,  மொபைல் போன்களிலும் நேரத்தைக் காட்டப்  பயன்படுகிறது

சீசியம் த்ரஷ்டர்ஸ் – CESIUM THRUSTERS , விண்கலங்கள் பறக்க உதவுகின்றன. சீசியம்  மூலகத்தை ஒரு காலியான குடுவையில் அயனி (ION) மயமாக்குவர் .அவற்றை மின்மயமாக்கி ஒரு குழல் அல்லது பைப் வழியே வெளியே தள்ளுகையில் அது விண்கலத்தை உந்திவிடும். . ஒரு கிலோ கிராம் சீசியம்  மற்ற எந்த ஒரு கிலோ கிராம் எரிபொருளைவிட 140 மடங்கு அதிகம் உந்து சக்தியை அளிக்கிறது !!

எங்கெல்லாம் உலோக ஆக்சைடுகளைப் பயன்படுத்துகிறார்களா அங்கெல்லாம் சீசியம் உப்புக்களை சேர்த்தால் அதன் செயல்பாடு அதிகரிக்கிறது. இதை கிரியா ஊக்கி (Catalyst Promoters) என்பர். தான் ஒரு மாறுதலையும் அடையாமல் மற்றவற்றை வேகப்படுத்துவது கிரியா ஊக்கி (Catalyst) எனப்படும்.

சீசியம் நைட்ரேட் என்னும் உப்பு கண் கண்ணாடித் தொழிலில் பயன்படுகிறது .

சீசியம் அயோடைட் மற்றும் சீசியம் ப்ளுரைடு ஆகியன எக்ஸ் ரே கதிர்களை உறிஞ்சி விடும். இதனால் மருத்துவத் துறையில் கதிரியக்கத்தை அகற்றப் பயன்படுத்துகிறார்கள் .

உயிரியல் ரசாயனத் துறையில் டி என் ஏ யைப் பிரிக்கும் கருவிகளில் பயன்படுகிறது.

ரசாயன விவரங்கள்

ரசாயனக் குறியீடு – Cs சி எஸ்

அணு எண் – 55

உருகு நிலை 28 டிகிரி C

கொதி நிலை 679 டிகிரி C

பொல்லுசைட் (Pollucite)  என்னும் தாதுவாக இயற்கையில் கிடைக்கிறது. பள பளக்கும் தங்க நிறம் உடைய ‘கார உலோகம்’ ALKALI METAL இது . பாதுகாப்பான கண்ணாடி பாட்டிலில் காற்றுப் புகா வண்ணம் அடைத்து வைத்திருப்பர். தண்ணீரில் போட்டால் சீறிப் பாய்ந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிட்டுத் தீப்பற்றி எரியும். சில நேரங்களில் வெடித்துவிடும்.

திட நிலையில் தங்கம் போலவே காணப்படும் சீசியம் தங்கத்தை விட விலை உயர்ந்த மூலகம் ஆகும்.

பொதுவாக இதனால் புறச் சூழல் கெடுவதில்லை. ஆனால் செர்நோபிள் போன்ற இடங்களில் அணு உலை விபத்துக்கள் நடக்கையில் கதிரியக்க சீசியம் வெளிப்படுகிறது. அது விழுந்த இடங்களில் உள்ள புற்களை மேய்ந்த ஆடு மாடுகளைக்கூட எதற்கும் பயன்படுத்தாமல் கொன்று விடுகின்றனர். அப்படி அவைகளைக் காக்க வேண்டுமானால் பிரஷ்யன் ப்ளூ Prussian Blue என்பதை மாத்திரை வடிவமாக்கி கால்நடைகளுக்கு கொடுத்து கதிரியக்க சீசியம்-137 ஐசடோப்பை அகற்றுவர். மனிதர்களுக்கும் சீசியம் -137 கதிரியக்கத்தை நீக்க இது பயன்படுகிறது இதுதவிர சீசியம் -133 ஐசடோப்பும் உண்டு. அதற்குக் கதிரியக்கம் இல்லாததால் ஆபத்து இல்லை..

-சுபம் —

tags-   கடிகாரம், விண்கலம், பயன், சீசியம்,

நடந்தவை தான் நம்புங்கள் – 24 (Post No.11,091)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,091

Date uploaded in London – –    9 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 24

ச.நாகராஜன்

1

விவேகானந்தரை மிரட்டிய இளம் பெண்கள்!

ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே ரயிலில் அவர் அமர்ந்திருந்த பெட்டியிலேயே சில இளம் பெண்களும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ஸ்வாமிஜியின் ஆடையைப் பார்த்த பெண்களுக்கு அவர் ஒரு விநோதமான ஆசாமியாகத் தென்பட்டார்.

அவரை சீண்ட வேண்டுமென்று நினைத்த அவர்கள் ஸ்வாமிஜியை நோக்கி, “ உங்கள் ரிஸ்ட் வாட்சை கழட்டித் தாருங்கள். இல்லையேல் பெண்களான எங்களை நீங்கள் கிண்டல் செய்வதாகப் புகார் செய்வோம்” என்று மிரட்டினர்.

ஸ்வாமிஜி இதைக் கேட்டார். ஆனால் காது கேட்காதவர் போல, சைகையால் அபிநயம் பிடிக்க ஆரம்பித்தார்.

பெண்களிடம் அவர் சைகை மூலம் தனக்கு காது கேட்காது என்றும், அவர்கள் சொல்வதை ஒரு பேப்பரில் எழுதிக் காட்டுமாறும் கூறினார்.

பெண்களும் தாங்கள் சொன்னதை அப்படியே ஒரு பேப்பரில் எழுதிக் காட்டினார்.

அதை கையில் வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்ட ஸ்வாமிஜி, ”இப்போது போலீஸை கூப்பிடுங்கள். நான் புகார் செய்ய வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது” என்றார்.

பெண்கள் மிரண்டு போனார்கள்.

2

முட்டாள்களைப் பார்ப்பது முதல் முறையல்ல!

ராஜஸ்தானில் ஒரு சமயம் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமி விவேகானந்தர்.

அவர் பயணித்த பெட்டியிலேயே இரு ஆங்கிலேயர்களும் பயணித்தனர்.

ஸ்வாமிஜி கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல மௌனமாக அமர்ந்திருந்தார்.

இரு ஆங்கிலேயர்களும் அவரது காவி உடை பற்றியும் அவரைப் பற்றியும் மிகவும் இழிவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு ஸ்வாமிஜிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற எண்ணம்!

நேரம் போய்க் கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து கம்பார்ட்மெண்டில் வந்த ஒரு ரயில்வே அதிகாரியிடம், ‘தண்ணீர் குடிக்க வேண்டுமே! ஒரு கிளாஸ் வாட்டர் எங்கே கிடைக்கும்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

இதைக் கேட்ட இரு ஆங்கிலேயர்களும் திடுக்கிட்டனர்.

இவ்வளவு தெளிவாக ஆங்கிலம் பேசும் அவர், தாங்கள் அவரைத் திட்டி இழிவாகப் பேசிய போது ஒன்றுமே சொல்லவில்லையே என்று திகைத்தனர்.

அவரையே கேட்டும் விட்டனர்.

அதற்கு ஸ்வாமிஜி பொறுமையாக பதில் கூறினார் இப்படி: “முட்டாள்களை நான் பார்ப்பது இது முதல் முறை அல்ல!”

3

நெட்டைப் பயன்படுத்தத் தடை

1994ஆம் ஆண்டு பிரபல பத்திரிகையான PC தனது ஏப்ரல் இதழில் இன்டர்நெட்டை போதையில் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்க காங்கிரஸ் ஒரு சட்டம் இயற்றப் போவதாக ஒரு முக்கிய செய்தியை பிரசுரித்திருந்தது. இதைப் பார்த்த பலரும் அரண்டு போனார்கள்.

இது பற்றி தொடர்பு கொள்ள வேண்டிய பெண்மணியின் பெயராக

Lirpa Sloof என்ற பெயரும் தரப்பட்டிருந்தது.

பலரும் விசாரித்த பின்னர் தான் தெரிய வந்தது அந்த செய்தி ஏப்ரல் முதல் தேதியன்று முட்டாள்கள் தின செய்தியாக பிரசுரிக்கப்பட ஒன்று என்று!

வாசகர்களை முட்டாள்கள் தினத்தன்று முட்டாளாக்க நினைத்த பத்திரிகை அதை தொடர்பு கொள்ள வேண்டிய பெண்மணியின் பெயரில் சூசகமாகத் தெரிவித்திருந்தது.

அந்தப் பெண்மணியின் பெயராகத் தரப்பட்டது Lirpa Sloof.

அதைத் திருப்பிப் போட்டால் வருவது Fools April!

4

கணிதப் பேராசிரியரின் வாக்கியம்!

‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்ற பஞ்ச் டயலாக்கை நாம் அடிக்கடி கேட்கிறோம்.

ஒரு கணித பேராசிரியர் தன் பையனிடம் இதை எப்படி சொன்னார் தெரியுமா?

“நான் n தடவை ஒரு விஷயத்தைச் சொன்னா அதை  n + 1 தடவையா நீ எடுத்துக்கணும்!” (“If I’ve told you n times, I’ve told you n+1 times…”)

****

Tags- நடந்தவை தான் நம்புங்கள் 24, விவேகானந்தர்

MY TRIP TO THIRUK KADAVUR SHIVA TEMPLE (Post.11090)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,090

Date uploaded in London – –    8 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

I went to Thirukkadavur, also known as Thiruk kadaiyur on 28th May, 2022 and stayed there overnight  to attend Shasti Aptha Poorthy of my brother in law,who came all the way from USA. We had darshan of Goddess Abhirami and Amirthakateswar with great difficulty the same day.

Lessons learnt:-

Don’t go to a temple during summer vacation

Don’t go to a temple during week end.

Don’t go to Hindu temples on Muhurtha (auspicious) days

Don’t go to temples during the month of Kartika, because the temples will be ‘infested’ with Ayyappa devotees; many of them are pukka rowdies in Ayyppa garments.

xxx

Hundreds of families, may be thousands of families, were celebrating their birth anniversaries or wedding anniversaries in Thirukkadaiyur. It is enjoyable to see hundreds of couples walking into the temple with big garlands, accompanied by Tamil orchestra (Mela, Taala, Nayana= Drums and Pipes); friends and relatives came with them in traditional pattu veshti and pattu pudavai ( silk dhoti and silk sari). The temple was beautifully illuminated, and the town wore a festive look in the night.

xxx

60th Birth Days

It has become a ‘fashion’ to celebrate 60th Birth Days in that temple. Some people even hire halls outside the temple and celebrate it. They have darshan (viewing) before or after the celebration. Since we were warned well in advance about the next day being Sunday and Muhurtha Day, we squeezed ourselves into the temple crowd and had the darshan of Goddess Abirami( Parvati) and God Amirtha kateswarar (Shiva). (I have written already about the next day ordeal; shrine opening at 7-30 am!!!!)

Xxx

Significance of the Temple

*Sung and Sanctified by the three Great Saivite Saints (Appar, Sambandhar and Sundarar); That means the temple is at least 1400 years old.

*Became more famous because of Abhiraami Bhattar Miracle ( I have written about Goddess changing New moon Day into Full moon day by throwing her nose ring into the sky). Abhirami Andhaati and Pathikam hymns are very popular among Saivite Hindus (Shiva worshippers).

*The Story of Markandeya is known to all Hindus. It is believed that it had happened in this place. Lord Shiva made the 16 year old boy , who was destined to die at that age, to live for ever. Always Sweet Sixteen Years!

*Since Lord Shiva kicked out Yama (Kala= Time=Yama) to protect his boy devotee Maarkandeyaa , he is known as Kaala Samhaara Murthy; Lord Shiva is Anti Einstein; he does not obey E= MC2 or his other theories of relativity; he is beyond Time= Kaala Thrayaadeetah).

*The temple is situated 20 kilometres from (Mayilaaduthurai alias Maayuuram) and 18 kilometres from Siirkaazi.

*Another famous temple just 2 kilometres away inside Thirukkadavur is Thiru Mey Gnanam (corrupted as Mayanam=crematorium!). Sung and sanctified by the Saivite Saints (We did not go there this time). Water from a well in the temple is taken to Abhirami Temple every day for Abhisheka= Bathing the God)

 A sudden flash of thought! Is it the reason for late opening of shrines in Thirukkdavur? I complained in another post that the shrines at Thirukkadavur open at 7-30 am and 7-45 am.

*Two Saivite devotees Kungiliya Kalaya Nayanar and Kaari Nayanar lived here a long time ago and reached the feet of Shiva.

*There are two Shiva Shrines here- One for Amrita Kateswarar and another for Kaala Samhaara Moorthy (meaning one who destroys Time; in other words Lord Shiva is a Blackhole in the Universe; not even Time can escape!)

*The Ganesh statue here known as Kalla Vaarana Pillayaar and three Shiva Lingaas here are popular.

*Plants of the Shrine- Pinjilam=Mullai=Jasmine and Bilva/Vilva tree

*Many saints like Agastya and Pulastya are associated with the temple. They may not be the original Agastya or Pulastya. They are clan names; any one born in that Gotra is called with the originator’s name)

*There are a few holy tanks. In the olden days people used to take bath in it. In my country Britain, there are several mineral water sources and the water bottled with that spring name get more price. In the olden days Hindu saints also found out several mineral water sources and built temples there. Those mineral water with medicinal properties are called Holy Teerthas. But they are not maintained with the same purity now.

*This is one of the Ashta Veerattana Sthalas (one of the Eight Great Adventure (of  Shiva) Shrines; since Shiva is given the task of destruction among the Trinity, his Eight Destructions gain significance. One must remember that they are symbolic stories. The Eight Heroic Act shrines are known as Ashta Verattaana Sthalas.

*The Sthala Purana (Local Temple History book) gives several stories linking Brahma, Durga, Ganesh and other Gods. I am not going into the details.

*Kaala Samhaara Moorthy shrine inside the temple has  good sculptures depicting the scene of Shiva kicking Yama. The Temple entrance also has got paintings on the ceiling (see my pictures)

Choose a weekday and visit the temple.

*I watched another argument in the lodge /hotel where I stayed. In most of the places in Tamil Nadu, they follow 24 hour checking in time. If you check in at 10 am today, you are allowed to stay until 10 am next day. But here they follow European Hotels. You can check in only around 2 pm. One customer was arguing against such practice. So make sure you get the correct information when you book a hotel/lodge in Tamil Nadu.

–subham–

Tags- Abhirami, Thirukkadavur, Thirukkadaiyur, Markandeya, Ashta Veeratta sthala, Kala samhara murthy, amirthakateswar

நடந்தவை தான் நம்புங்கள்! – 23 (Post No.11,089)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,089

Date uploaded in London – –    8 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! – 23

ச.நாகராஜன்

1

கல்லறை கால்கள்!

இடுகாடு வேலையில் நிபுணரான ஆல்மன் ப்ரௌன் ஸ்ட்ரோவ்கர் கான்ஸாஸில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். அவர் பிணங்களுக்கான இறுதிச் சடங்கைச் செய்வதில் வல்லவர். ஆனால் தனது பிஸினஸ் நாளுக்கு நாள் குறைந்து வருவதைக் கண்ட அவர் அதிர்ந்து போனார். அவருக்கு வரும் பிஸினஸ் அவருக்குப் போட்டியாக ஆரம்பித்த இன்னொருவருக்குத் தவறாமல் போய்க் கொண்டிருந்தது. இது என்ன விசித்திரமாக இருக்கிறதே என்று ஆராய்ச்சியில் இறங்கினார். அப்போது தான் தெரிய வந்தது உள்ளூர் டெலிபோன் ஆபரேடர் போட்டி கம்பெனியை வைத்திருந்தவரின் மனைவி என்று! அவருக்கு வரும் கால்கள் அனைத்தையும் அந்த ஆபரேடர் தனது கணவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொருவருக்குச் செய்யப்படும் தொலைபேசி அழைப்பு ஒரு ஆபரேட்டருக்குச் செல்லும். அவர் தான் இணைப்பை உரிய நம்பருக்கு வழங்குவார். ஆக இடுகாட்டு இறுதிச் சடங்கிற்காக ஆல்மன் ஸ்ட்ரோவ்கர் நம்பரைக் கேட்டவர்களுக்கு எல்லாம் அவர் தனது கணவரின் நம்பரோடு இணைப்பைத் தந்து கொண்டிருந்தார்.

உடனே ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிய ஆல்மன் ஸ்ட்ரோவ்கர் ஒரு எக்ஸ்சேஞ்ஜ் ஸ்விட்சைக் கண்டுபிடித்தார். அது கேட்ட நம்பருக்கு ஆபரேடர் உதவியின்றி, தானே இணைப்பைத் தந்து விடும்!

1892இல் லா போர்ட், இண்டியானாவில் முதல் ஆடோமேடிக் ஸ்விட்ச் நிறுவப்பட்டது.

பின்னர் தான் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஸ்ட்ரோவ்கர் உட்பட!

ராங் கனெக்‌ஷன் இல்லாமல் நினைத்த நம்பருடன் அப்போது முதல் தான் பேச முடிந்தது! இது உலகெங்கும் பின்னர் பரவியது!

2

வீதியில் கூட்டம்! வெலவெலத்துப் போன அதிகாரிகள்!

1810ஆம் ஆண்டு ஒரு நாள் லண்டனில் உள்ள பெர்னர் வீதியில்

கூட்டம் வந்து கொண்டே இருந்தது. வந்தவர்கள் அனைவரும் 54 என்று இலக்கமிட்ட ஒரு குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்று கொண்டே இருந்தனர்.

அவர்கள், பாடகர்கள், பாதிரியார்கள், கல்லறையில் இறுதிச் சடங்கு செய்வோர், வக்கீல்கள் என அனைத்துத் துறைகளையும் சேர்ந்தவர்கள்.

அவர்கள் கொண்டு வந்த சாமான்களும் வெவ்வேறு விதமானவை.

லண்டனின் பாதிப் போக்குவரத்து அந்த வீதியில் இருந்ததால் லண்டன் வாழ்க்கையே கிட்டத்தட்ட ஸ்தம்பித்து விட்டது.

அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கு வந்து அனைவரையும் ஒழுங்குபடுத்துவதில் களைத்துப் போனார்கள் அந்த அதிகாரிகள்!

குறிப்பிட்ட வீட்டின் சொந்தக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த வீட்டின் வேலைக்காரியும் வந்த ஒவ்வொருவரையும் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தாள்.

கடைசியில் தான் விஷயம் என்னவென்று தெரியவந்தது.

தியோடர் ஹூக் என்பவர் ஒரு எழுத்தாளர், இசை அமைப்பாளர். (Theodre Hook) . அவர் தனது நண்பரான சாமுவேல் பீஸ்லியிடம்(  Samuel Beazley) ஒரு பந்தயம் வைத்தார். எந்த ஒருவரையும் தன்னால் பிரபலப்படுத்த முடியும் என்று. சாமுவேல் அதை நம்பவில்லை.

விளைவு தியோடர் மும்முரமானார். ஆயிரக் கணக்கான கடிதங்களை லண்டனில் உள்ள ஏராளமானோருக்கு அனுப்பி, குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு வேண்டிக் கொண்டார்.

அனைவரும் ஏதோ ஒரு பெரிய வேலை தமக்குக் கிடைத்த சந்தோஷத்தில் சாரிசாரியாக வந்து கொண்டிருந்தனர்.

ஹூக்கும் பீஸ்லியும் ஒரு இடத்தில் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பீஸ்லி திகைத்துப் போனார். பந்தயத்தில் தோற்றும் போனார்.

பின்னால் தான் நடந்தது என்ன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பத்திரிகைகள் அதை வெளியிட்டன!

3

ஜோதிடருக்கே ஜோஸ்யம்!

பிரபல எழுத்தாளரான ஜொனாதன் ஸ்விப்டை (Jonathan Swift) அறியாதவர் இருக்க முடியாது. உலகப் புகழ் பெற்ற கலிவர்ஸ் டிராவல்ஸ் (Gulliver’s Travels)  என்ற நாவலை எழுதியவர் அவர் தான். இன்னும் பல புகழ்பெற்ற படைப்புகளையும் அவர் படைத்தவர்.

ஆசாமி குறும்புக்கார ஆசாமி.

வாழ்நாள் முழுவதும் ஏதாவது குறும்புகள் செய்து கொண்டே இருப்பது அவர் வழக்கம்.

அந்தக் காலத்தில் ஜான் பார்ட்ரிட்ஜ் என்று ஜோதிடம் சொல்வதில் வல்லவராக இருந்த பிரபல ஜோதிடர் ஒருவர் இருந்தார்.

அவருக்கே ஜொனாதன் ஸ்விப்ட் ஒரு ஜோதிடம் கூறினார்!

அவர் 1708ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி இறந்து விடுவார் என்பது தான் அவர் ‘கணித்த’ ஜோதிடக் குறிப்பு!

மார்ச் 30 வந்தது. ஜோதிடர் இறக்கவில்லை.

ஆனால் ஸ்விப்டோ ஜோதிடர் இறந்ததாக அறிவித்து விட்டார்.

பார்ட்ரிட்ஜ் தான் இறக்கவே இல்லை என்றும் உயிரோடு தான் இருப்பதாகவும் எவ்வளவோ கூறினாலும் மக்கள் ஜோனாதனைத்

தான் நம்பினர்!

4

ஒரு உண்மையான ஜோதிடக் குறிப்பு

ஜோதிடர் ஒருவர் தனது அன்றைய மாதக் குறிப்பு நிச்சயம் பொய்யாகப் போகாத கணிப்பு என்று கூறி அதை மாதத்தின் முதல் நாளில் வெளியிட்டிருந்தார்.

குறிப்பு இது தான்:

இந்த மாதம் உங்கள் மனைவியிடமிருந்து திட்டு வாங்குவது வழக்கத்தை விட நிச்சயமாகக் குறைச்சலாகவே இருக்கும்!

அது பிப்ரவரி மாதம்! அதற்கு 28 நாட்கள் தானே!

***

tags-  நடந்தவை தான் நம்புங்கள்! – 23

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-64 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,088)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,088

Date uploaded in London – –    7  JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 64 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

வேத வாதரதாஹா  2-42  வேதத்தின் அர்த்தவாதத்தில் பற்றுடையவராய்

வேதவித்  15-1 வேத விற்பன்னர்கள்

வேதவிதஹ  8-11 வேதம் அறிந்த அறிஞர்கள்

வேதானாம் 10-22 வேதங்களில்

வேதாந்தக்ருத் 15-15  வேதாந்தத்தை ஆக்கியவனும்

வேதாஹா  2-45 வேதங்கள்

வேதிதவ்யம் 11-18   அறிதற்குரிய பரம்பொருள்

வேதிதும் 18-1 அறிந்து கொள்ள

வேதேஷு 2-46 வேதங்களில்

வேதே 15-18  வேதத்தில்  10

வேதைஹி 11-53 வேதங்கள் மூலம், வாயிலாக

வேத்யம் 9-17 கற்றுணரத்  தக்கவனும்

வேத்யஹ  15-15 அறிய வேண்டிய பொருள்

வேபதுஹு  1-29 நடுக்கம்

வேபமானஹ  11-35 நடுங்குகின்ற

வைனதேயஹ – 10-30 கருடன் , வினதாவின் புதல்வன்

வைராக்யேண  6-35  வைராக்யம், திட உறுதி

வைரிணம் 3-37  சத்ருவாக

வைஸ்ய கர்ம 18-44 வைஸ்யர்களின் கடமை

வைஸ்யாஹா 9-32 வைசியர்கள்         20

வைச்வாநரஹ  15-14 ஜீரணத்துக்கு உதவும் வயிற்றில் உள்ள தீ

வ்யக்த மத்யானி  2-28  தோற்றம் இடையிலும்

வ்யக்தயஹ 8-18  தோற்றங்கள்

வ்யக்திம்  7-24  தோற்றத்தை

வ்யதி தரிஷ்யதி  2-52  கடந்து செல்லுமோ

வ்யதீதானி  4-5 சென்றுவிட்டன

வ்யதயந்தி 2-15 கலக்குதல்

வ்யதா 11-49      பயம்

வ்யதிஷ்டாஹா 11-34  பயந்து வருந்துதல்

வ்யதாரயத்  1-19 பிளந்தது        30 words

வ்ய பாஸ்ரித்ய 9-32  சரணடைந்து

வ்யவசாயஹ  10-36 விடாமுயற்சி

வ்யவசா யாத்மிகா  2-41 நிச்சய வடிவமான

வ்யவசிதஹ 9-30  நிச்சயித்தவன்

வ்யவஸ்திதாஹா 1-45 துணிந்தவர்கள் ஆயினோம்

வ்யவஸ்திதான் 1-20  எதிர்நின்ற

வ்யவஸ்திதெள 3-34 உட்புகுந்து  நிற்கின்றன

வ்யாத் தானனம்  11-24  திறந்த வாய்களுடைய

வ்யாப்தம் 11-20  நிறைந்துள்ளது

வ்யாமிஸ்ரேண 3-2 குழப்புவது போன்ற        40

வ்யாப்ய  10-16  வியாபித்து, பரந்து

வ்யாயஸ ப்ரஸாதாத்  18-75 வியாசரின் அருளினால்

வ்யாஹரன்  8-13  உச்சரித்துக்கொண்டு

வ்யுதஸ்ய  18-51 விடுத்து

வ்யூடம் 1-2 படை அணிவகுப்பில்

வ்யூடாம் 1-3 அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ள

வ்ரஜ  18-66 புகு , அடை

வ்ரஜேத்  2-54 நடப்பான்

XXXX

शक्नोती

ச – சொற்கள்

சக்னோதி 5-23  வலிமை பெற்றவனோ

சக்னோமி 1-30 சக்தி உள்ளவன் ஆக இருக்கிறேன்    50

சக்னோஷி 12-9  சக்தியுடைய

சக்யஸே 11-8  இயலும் , கூடும்

சக்யம் 11-4 கூடும், முடியும்

சக்யஹ  6-36 முடியும்

சங் கம் – 1-12 சங்கினை

சங் காஹ  1-13 சங்குகள்

சங் கெள  1-14  சங்குகளை 

சடஹ  18-28 வஞ்சகனும்

சதச ஹ  11-5 நூற்றுக் கணக்கில் / காக

சத்ரு த்வே  6-6 பகைமை நிலையில்    60

சத்ரு வத் 6-6 பகைவர் போன்ற

சத்ரும் 3-43 பகையை எதிரி, பகைவர்

சத்ரு ஹு  16-14  எதிரி

சத்ரு ன்  11-33 எதிரிகள், பகைவர்கள்

சத்ரவ்  12-18  சத்ரெள -பகைவனிடத்து

சநைஹி  6-25 மெல்ல, மெதுவாக

சப்த  ப்ரஹ்மா 6-44  சப்த பிரம்மம் ஆகிய வேதம்

சப்தஹ  1-13 சப்தம் , ஆரவாரம்

சப்தாதீ ன் 4-26  சப்தம் முதலிய        

69 words are added from this part 64

Tags – Tamil Gita, Word index 64

இலங்கை உடுவில் முத்துக்குமார கவிராயர், சேனாதி ராயர் கவிதைகள் (Post.11087)

WRITTEN BY B. KANNAN

Post No. 11,087

Date uploaded in London – –    7 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நேற்று இதன் முதல் பகுதி “ஈழத்துப் பாவலர்கள் இயற்றிய ஊர்-இடப்பெயர் கவிதைகள் ” என்ற தலைப்பில் இங்கு வெளியிடப்பட்டது

Part 2

19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உடுவில் முத்துக்குமார கவிராயரும், இருபாலை சேனாதிராய முதலியாரும் ஈழத்து இலக்கியத்தின் இரு கண்களாக விளங்கினார்கள். இருவரும் உற்ற நண்பர்களும் கூட.

ஒரு சமயம் கவிராயரின் குலதெய்வக் கோயிலான மாவை எனும் மாவிட்டபுர ஆலயத்தின் வேட்டைத் திருவிழாவில் முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் ஊர்வலம் வருகையில், சேனாதிராயரும் உடனிருந்தார்.

அப்போது அவர் கவிராயரைப் பார்த்து, உமது சுவாமியின் பவனியை வர்ணித்துப் பாடும்” என்றார். உடனே கவிராயரும் பின்வரும் நாமாந்தரிதையைப் பாடினார்…….

  முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி

     முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்

  தடைய வோர்பெண்கொ டிகாமத் தாளசைத்

    தானைக் கோட்டைவெ ளிகட் டுடைவிட்டாள்

  உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக

    உருத்த னன்கடம் புற்றமல் லாகத்தில் 

  தடைவி டாதணை யென்றுப லாலிகண்

    சார வந்தனள் ஓரிள வாலையே

பதவுரை: முடிவிலாதுறை………..வழி=ஆதியும் அந்தமுமில்லாத வெள்ளிமலையாகிய கைலாயத்தில் உறைகின்ற ஈசனின் பிள்ளை (வழி) யாகிய கந்தசுவாமி,

முந்தித் தாவு……..வந்தடைய=முந்தித் தாவுகின்ற கால்களையுடைய குதிரை (கொக்கு) வாகனத்தில் பவனி வர,

ஓர் பெண்கொடி காமத்தாள்=காதல் கொண்ட ஒரு பெண், அசைத்து ஆனைக் கோட்டை….உடைவிட்டாள்=தன் நிலை மறந்து மார்பகத்தை மறைத்திருக்கும் மேலாடையையும் நெகிழவிட்டாள்,

உடுவிலான் வர=அப்போது நட்சத்திரத்தை மனைவியாகக் கொண்ட ( உடு =நட்சத் திரம், இல்=மனைவி) சந்திரன் உதித்தான்,

பன்னாலையான் மிக உருத்தனன்= கரும்பு வில்லையுடைய (ஆலை=கரும்பு) மன்மதன் கோபம் கொண்டான், ஓர் இளவாலை= முருகனைக் காதலித்த அந்த ஒப்பற்ற இளம் பெண்,

கடம்பு உற்ற மல் ஆகத்தில்=கடம்பணிந்த மல்யுத்தம் செய்கின்ற மார்போடு, தடை விடாது அணையென்று= குறிக்கீடு ஏதுமின்றி அணைத்துக் கொள்ள வேண்டுமென்று,

பல ஆலி=நிறைய நீர்த்துளி, கண்சார வந்தனள்= கண்களிலிருந்து சொரிய, கந்த சுவாமிக்கு எதிரே அவனது திருவடிகளே சரணமென்று வீதியில் ஊர்வலத்தை எதிர்கொண்டாள்.

இங்கு சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை ஆகிய ஊர்ப்பெயர்கள் வேறு பொருளில் கையாளப் பட்டுள்ளன.

கவிராயரின் தோழர் சேனாதிராயரின் குலதெய்வக் கோயில் நல்லூர் கந்தசுவாமி ஆலயமாகும். அந்நாட்களில் மாசி மாதத்தில் நல்லூர் கோயிலின் கொடியேற்றத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

ராயரின் வேண்டுகோளுக்கிணங்க முத்துக்குமாரர் திருவிழாவில் கலந்து கொண்டார். இப்போது கவிராயர் கேட்டு முதலியார் அவர்கள் பாடல் இயற்றுவதுதானே முறை! அப்படியேதான் நடந்தது.

சேனாதிராயர் பின்வரும் பிரேளிகையைக் கவிராயர் மனங்குளிரப் பாடினார்…..

  திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்          

  இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை

  இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்

  தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை

  தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை

நல்லூர் செவ்வேள் மீது இயற்றப்பட்டக் குறவஞ்சிப் பாடல் இது. இதில் புலவர் தான் வசிக்கும் இடம் இருபாலை மற்றும் நல்லூர் நகரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மற்றவை அப்பொருட்களைக் குறிக்கின்றன.

பதவுரை: திருவாரும்……..பெருமானார்=திருவருள் நல்கும் நல்லூர் உறை கந்தசுவாமி, இருபாலை=இரண்டு இளம் கொங்கைகளை உடைய, குயத்தியரோடு=பெண்களுடன் ( வள்ளி, தெய்வானை), (குயத்தி=மண்பாண்டம் தயாரிக்கும் பெண்) இன்பமுற்றார் அம்மானை= உல்லாசமாய் இருந்தார் அல்லவோ,மகளீரே, இருபாலைக்…………முற்றார் ஆமாயின்= அப்படி அவர்களுடன் மகிழ்வுடன் இருந்தார் என்றால், தருவாரோ சட்டி……அம்மானை= பழச் சாறு/ரசம் சேகரித்து வைக்க மண் சட்டி /குடம் தருவாரோ, பெண்ணே, தருவார் காண்…………அம்மானை= கிருபாநிதியாகிய முருகவேள் நிச்சயம் தந்து அருளுவார், பெண்ணே!

குயவ சம்பந்தம் வைத்துள்ளவர், சாறு வைக்கச் சட்டி, குடம் கேட்டால் தரத்தானே, வேண்டும்? இது வெளிப்படைக் கருத்து. உட்கருத்தோ வேறு விதம். சட்டி=சஷ்டி திதி, குடம்=கும்ப மாசி மாதம், சாறு= திருவிழா என்று ஒரு பொருள். அதாவது கும்ப மாதம் சஷ்டி திதியில் ஆண்டு உற்சவம் தொடங்க (கொடியேற்றம் செய்ய) கார்த்திகேயன் அநுக்கிரகிப்பார் என்பதாகும்.

முடிவாக உடுவில் முத்துக்குமார கவிராயர் இயற்றிய மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு செய்யுளுடன் இப்பதிவை நிறைவு செய்வோம். இது அனைத்துப் பண்டிதர் களாலும் போற்றிப் புகழப்பட்ட ஒரு பாடலாகும்

கவிராயரின் குலதெய்வமான “கோதை குறமாது குணதேவ மடமாது இருபாலும் உற வீறிவரு குமரேசன்” மாவிட்டபுரக் கந்தன் ஊரைப் பவனி வருகையில் நாமாந் தரிதையில் ஒரு பாடலை அவன் மீது பாடினார். அதில் இச்சா சக்தியான வள்ளி சூடியிருக்கும் ஓர் அணிகலனின் சிறப்பையும் புகழ்ந்திருக்கிறார். மேலும், மல்லாகம், மாதகல், சுன்னாகம், ஈவினை, துன்னாலை, சில்லாலை, கொடிகாமம் எனும் ஊர்ப் பெயர்கள் ஏழும் கருதியப் பொருளை மறைத்திருக்கும் பெயர்களாகும். இதோ அந்தப் பாடல்……

 மல்லாக மாதகலான் மருகன்சுன் னாகத்தான்

      மகன்பா வாணர்

 சொல்லாச்சீ ரீவினையான் துன்னாலை யானத்தான்

      சுரும்ப ரோதிச்

 சில்லாலை யிருள்வென்ற குறக்கொடி கா மத்தானைச்

      சிகண்டி மாவூர்

 வல்லானை மாவிட்ட புரநகரத் திடைப்பவனி 

      வரக்கண் டேனே

பதவுரை: மல்லாக மாதகலான் மருகன்=வலிமையான மார்பில் அனவரதமும் லக்ஷ்மி தேவியை அகலாமல் இருத்தி வைத்திருக்கும் மகாவிஷ்ணுவின் மருகன்,

சுன்னாகத்தான் மகன்=கயிலைமலை அரசராகிய ஈசனின் மகன், பாவாணர் சொல்= பாக்கள் இயற்றும் திறன் மிக்கவர்களுக்கு, சீர் ஈவினையான்= செல்வம் வழங்கும் குணமுடையவன்,

சுரும்பு ரோதி= கரு வண்டுகள் ரீங்காரமிட்டு மொய்க்கும் நாண் கொண்ட,துன்னாலையானத்தான்=  வளைந்த கரும்பு வில்லையுடைய மன்மதனின் மைத்துனன் (ஈசனின் மகள் ரதியின் சகோதரன் முருகன் ஆவான்), சில்லால் ஐ இருள்வென்ற= வியக்க வைக்கும் தகட்டணியால் (வள்ளியின் ஜடைபில்லை) இருளை விரட்டியடித்த, குறக்கொடி காமத்தான்=வள்ளி நாயகியின் மேல்

ஆசைக் கொண்டவன், சிகண்டி= சேவல் கொடி, மயில் வாகனம் உடைய, மாவூர் வல்லானை==மாவூரில் உறையும் பெருமானை, மாவிட்ட…………டேனே= மாவை நகர வீதிகளில் ஊர்வலம் வரக் காணும் பேறு பெற்றேனே!.

சுரும்பு=வண்டு, சிகண்டி= கோழி, மயில். இங்கு பாவலர் வள்ளி அணிந்திருக்கும் ஒரு நகையின் குணாதிசயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதன் பிரகாசம் இருளை விரட்டக் கூடியது என்கிறார்.

 சில்=தகட்டணி. இது கூந்தலின் உச்சியிலிடப்படும் ரத்தினங்கள் இழைத்த ஒரு வகை ஆபரணம். இக்காலத்தில் ஜடைபில்லை என  வழங்கப்படுகிறது. இதிலுள்ள ரத்தினங்களிலிருந்து எழும் பிரகாசமான ஒளி இருளை விலக்கக் கூடியது எனக் கூறுகிறார் கவிராயர்.

இதைப் பற்றிய வர்ணனையைக் கவி கம்பர், தமிழறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோர் தங்கள் பிரபந்தங்களில் விவரித்துள்ளனர். மேலும், தமிழ் இலக்கியத்தில் பெயர் பெற்றக் காவியமான மேருமந்திரப் புராணம் எழுதிய சமணசமய தத்துவ ஞானி வாமனாச்சாரியா (விஜயநகர மன்னர் ஹரிஹரர்-2 ஆட்சிகாலம்) தனதுநூலில் 50-வது பாடலில் இதைப் பற்றி விவரிக்கிறார்,

50. சஞ்ச யந்த னெனும்பெய ரானவ

    னஞ்சு தாயர்தங் கைவழி யந்திவாய்

    மஞ்சி லாமதி போல வளர்ந்தபி

    னஞ்சி லோதியர்க் கின்னமிர் தாயினான்.

அஞ்சிலோதி” என்பதை “அம் – சில் – ஓதி”  எனப்பிரித்து   ‘அழகிய  தகட்டணியை  அணிந்த கூந்தல்”  எனப் பொருள் கொண்டனர் பண்டைய உரையாசிரியர்கள் பெரும் பாலார்..

அஞ்சிலோதியர்க்கு – ஐந்துவகைப்  பாகுபாட்டில் அமைந்த (முடி, கொண்டை,சுருள், குழல், பனிச்சை)  கூந்தலையுடைய  ஸ்த்ரீமார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

கவிபாடும் வன்மையில் மிகச் சிறந்தவரான நாமாந்தரிதை பிரேளிகைப் புகழ் முத்துக்குமாரரின் கவிதைகளைக் கேட்டுணர்ந்த அறிஞர்கள் பலரும் இவரைக் கவிராசர் என அழைத்ததில் எந்த அதிசயமும் இல்லை எனலாம்!

— subham—-

Tags- ஊர்-இடப்பெயர்,  நாமாந்திரிதை பிரேளிகை—3, சேனாதிராயர், நல்லூர் கந்தசுவாமி, மாவிட்டபுரம்

யார் ஹிந்து ? ஞான மொழிகள்-91 (Post No.11,086)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,086

Date uploaded in London – 7 JULY 2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்-91

உள்ளே புகுந்து நெய் குடிக்க முடியாமல் இருந்த போதிலும் அந்த நெய்

இருந்த பாத்திரத்தை எறும்புகள் சுற்றி நிற்கும். மறந்தாகிலும் அரைக்காசு கொடுக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை நூறு பேர் சுற்றிக்

கொண்டிருப்பார்கள்.

நாலடியார்

xxx

பேனுக்கு பயந்து யாரும் தலையை வெட்டி எறிவதில்லை.

பிச்சைகாரர்களுக்கு பயந்து யாரும் சமைக்காமல் இருப்பதில்லை,

மாடுகளோ, பறவைகளோ,பயிரை மேய்ந்து விடுகின்றன என்பதற்காக

குடியானவர்கள் பயிர்த்தொழிலை விட்டு விடுவதில்லை.

அது போல பழிக்கு பயந்து யாரும் நல்ல பணிகளை செய்வதை கை

விட்டு விடக் கூடாது.

பதஞ்சலி

Xxxx

தாய் , தந்தையர்க்கு பணிவிடை செய்பவர்கள்,பசித்தவர்க்கு உணவு

தருபவர்கள்,தோப்பு, கிணறு தண்ணீர் பந்தல் நிறுபவர்கள் ஆகியவர்கள்

சொர்க்கம் செல்கிறார்கள்.

பீஷ்மர்

Xxx

எது அழகு ???

பயிர்களை சுமந்து நிற்கும்போது நிலம் அழகு பெறுகிறது.

தாமரையை சுமந்து நிற்கும்போது குளம் அழகு பெறுகிறது.

நாணத்தை சுமந்து நிற்கும்போது பெண் அழகு பெறுகிறாள்.

அறத்தை சுமந்து நிற்கும்போது் ஆண் அழகு பெறுகிறான்.

நான் மணிக் கடிகை

Xxx

தமோ குணம் உடையவர்கள் யார்???

புத்தியை சரியாக உபயோகிக்காதவன்,கஞ்சத்தன்மை உடையவன்,

பிறரை கோபிக்கிறவன், உடைய ஒருவன் தமோகுணமுடையவன்.

மைத்ரீ உபநிஷதம்

Xxxx

பல நிறங்களை உடைய பசுக்களின் பால் ஒரே வெண்மையுடையதாக

இருக்கிறது.

அதுபோல

ஞானிகள் பலவகைப் பட்ட சரீரங்களை உடைய ஜீவர்களை ஒரே

அறிவு மயமானவர்களாக காண்கிறார்கள்.

பிரம்மபிந்து உபநிஷதம்

Xxxx

தேசம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் கோவில்கள் சிறப்படைய

வேண்டும்

கோவில்கள் சிறப்படைய வேண்டுமென்றால் வழிபாடுகள் சிறப்படைய

வேண்டும்

இந்து மதம்

Xxx

மூங்கில் மரத்தில் அழகிய இலைகள் அதிகமாக இல்லாமற் போனால்

அது வசந்த காலத்தின் குற்றமா?

ஆந்தைக்கு பகலில் கண்தெரியாமல் போனால் அது சூரியனின்

குற்றமா?

சாதகப்பறவையின் வாயில் நீர் விழாவிட்டால் அது மேகத்தின்

குற்றமா?

ஏற்கனவே விதி தலையில் எழுதியிருப்பதை அழித்துவிட யாரால் முடியும்?

பர்த்ரு ஹரியின் நீதி சதகம்

Xxxx

ஒரு பெரிய குளத்தில் நீராடுவதற்கு பல துறைகள் இருக்கின்றன.

நீராடுவதற்கோ, தண்ணீர் எடுப்பதற்கோ யாராக இருந்தாலும் எந்த

துறை வழியாக இறங்கின போதிலும் தண்ணீர்இருக்கும் இடத்திற்கு

செல்ல முடியும்.ஒருவனுடைய நீராடும் துறை நல்லது, மற்றவனுடைய நீராடும் துறை கெட்டது என்று சண்டை போடுவது வீண்.

அது போல நித்யானந்தமாகிய குளத்திற்கு செல்லும் துறைகளும் பல

உள்ளன. உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட துறைகளில்

ஒவ்வொன்றாகும். இந்த துறைகளில் ஏதாவதொன்றின் வழியாக நேராக,

உறுதியான, பக்தியுடன் சென்றால், நீ நித்யானந்த தண்ணீரை அடைவது

நிச்சயம்.ஆனால் உன்னுடைய மதம் உயர்ந்தது மற்றவை தாழ்ந்தவை

என்று மட்டும் சொல்லாதே!

ஶ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்ஸர்38

Xxx

யார் ஹிந்து ???

எவர் பாவம் செய்யும் மன் நிலையை அடக்கி அதை புண்ணிய காரியங்களை

செயவதில் ஈடுபடுத்தி வாழ்கின்றாரோ, தீயசக்திகளை ஆத்ம சக்தியால்

ஒடுக்கி சிறிதும் அச்சமின்றி வாழ்கின்றாரோ அவரே ஹிந்து ஆவார்.

கலிகா புராணம்

Xxxx

யார ஓங்காரத்தை தனது முக்கியமான மந்திரமாக கொண்டிருக்கிறாரோ,

மறு பிறவி என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எவருக்கு இருக்கிறதோ,

எவர் பசுவை தெய்வமாக மதிக்கின்றாரோ, நமத புண்ணிய பாரத பூமியின்

நன்மைக்கு தன்னை அர்ப்பணிக்கிறாரோ அவரே ஹிந்து ஆவார்.

மாதவ திக் விஜயம்

xxxx

ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதன் எந்த நாட்டை சேர்ந்தவனாலும்

அவன் எந்த மொழி பேசினாலும் அந்தக கணமே அவன் உங்களுக்கு

நெருங்கியவனாயும், இனுயவனாயும் ஆகி விட வேண்டும்.

ஹிந்து என்று பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம் உங்கள்

உள்ளத்தை வந்து தாக்கி உங்கள் மகனே துன்பப்படுவது போன்ற

உணர்ச்சியை உங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான்,

அப்போது மட்டும்தான் – நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.

ஸ்வாமி விவேகானந்தர்52

Xxxx

பிறப்பற்றவர், மாறுதலற்றவர், உருவமற்றவர், ஆனந்ததைக்கடந்தவர்,

எப்போதும் ஆனந்தமயமாக இருப்பவர், ஒன்றேயானவர், நிறைந்தவர்,

எல்லாவற்றிற்கும் மேலானவர்,குணங்களை கடந்தவர்,வித்தியாசமற்றவர்,

ஆசைகளைக்கடந்தவர்,பரம்பொருள் ஆகிய கணேசரை நாம்

வணங்குவோம்.

கணேச ஸ்தோஸ்திரம்

Xxx

உடல் அழிவதைப்போல ஆத்மா அழிவதில்லை.! அது மட்குடம்

உடையும்போது குடத்திலிருக்கும் காற்றும் ஆகாயமும் உடையாமல்

இருப்பது போன்றது.

வடலூர் வள்ளலார்

xxxx

செல்வம் என்பது வண்டிச்சக்கரம் போன்றது.மேலாகவும், கீழாகவும்

மாறி மாறி வரும்.அது நடுவில் நிலை பொருந்தி எவரிடமும் நிற்கவே

நிற்காது!

நாலடியார்

Xxx

தேடிவைத்த பொருளை தாங்களும் அனுபவிக்காமல்,பிறருக்கும்

கொடுக்காதவர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் வரப்போகும் ஏழேழு

ஜன்மங்களிலும் கண்ணால காணும் பாக்கியத்தை பெறாமல் வருந்தி

நாசமடைவார்கள்.

யோகி வேமன்னா

Xxx

நாம் தீய வழியில் ஈட்டும் பொருள் இந்த உலகில் ஆனந்தத்தை

கொடுக்கிறது.ஆனால் அதே பொருள் நம் மரணத்திற்குப் பிறகு

நாம் கொடும் துன்பங்களை அனுபவிப்பதற்கு காரணமாக

அமைகிறது.ஆகவே நிரந்தர ஆனந்தத்தை பெற விரும்புவர்கள் 68

தீய வழியில் பொருளை ஈட்டவே கூடாது.

மகரிஷி அத்ரி

Xxxx

பணம் இல்லாதவர்கள் பணம் சம்பாதிக்கப் பார்த்தால் அது முடியாத

ஒரு காரியமாகிறது.ஆனால் பணக்காரர் விஷயத்திலோ, எப்படி

காட்டில் ஒருயானையை பின்பற்றி பல யானைகள் போகின்றனவோ

அது போல பணத்தோடு பணம் சேர்கிறது.

மகா பாரதம்

To be continued……………………….

Tags – ஞான மொழிகள்-91

நடந்தவை தான் நம்புங்கள் – 22 (Post No.11085)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,085

Date uploaded in London – –    7 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 22

ச.நாகராஜன்

1

ஜான் ட்ரைடனின்  மனைவி

ஜான் ட்ரைடன் (John Dryden – 1631-1700) தனது மனைவியான லேடி எலிஸபத்துடன் அவ்வளவாக இணக்கமாக இல்லை. எலிஸபத்தின் சகோதரர்களின் வற்புறுத்தலினாலேயே அவரை அவர் மணம் செய்ய நேரிட்டது.

எப்போதும் புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் அவர் நேரத்தைச் செலவழித்து தன்னை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை என்ற வருத்தம் எலிஸபத்திற்கு இருந்தது.

ஒரு நாள் அவர் ட்ரைடனிடம், “ட்ரைடன், எப்போது பார்த்தாலும் மக்கிப் போன அந்த பழைய புத்தகங்களையே எப்படி உங்களால் படித்துக் கொண்டிருக்க முடிகிறது. அந்த புத்தகங்களில் ஒன்றாக நான் இருந்தால் உங்களுடன் அதிக நேரம் இருப்பேனோ, என்னவோ” என்று கூறி அங்கலாய்த்தார்.

உடனே ட்ரைடன், மை டியர், நீ ஒரு புத்தகமாக ஆக வேண்டுமென்றால் பஞ்சாங்கமாக ஆகி விடு. அபோது தான் ஒவ்வொரு வருடமும் உன்னை மாற்றிக் கொண்டே இருக்க முடியும்” என்று பதில் கூறினார்.

    Source and Thanks :-Tpoic 51 Oxford Book for Literary  anecdotes by James Sutherland

2

உணவு பற்றாக்குறை பற்றிய மாநாடு

சமீபத்தில் உலகளாவிய ஒரு சர்வே எடுக்கப்பட்டது. ஒரே ஒரு கேள்வி தான் சர்வேயில் கேட்கப்பட்டது.

அது இது தான்:

தயவுசெய்து நீங்கள் உல்கில் மீதி இருக்கும் நாடுகளில் நிலவும் உணவு பற்றாக்குறைக்கான தீர்வு பற்றிய உங்களது நேர்மையான கருத்தைத் தர முடியுமா?

இந்த சர்வே உலகில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பப்பட்டது.

ஆனால் அது படு தோல்வி அடைந்து விட்டது.

ஏனெனில்,

ஆப்பிரிக்காவில் அவர்களுக்கு “உணவு” என்றால் என்ன என்று தெரியாது.

கிழக்கு ஐரோப்பாவில்,அவர்களுக்கு “நேர்மை” என்றால் என்ன என்று தெரியாது.

மேற்கு ஐரோப்பாவில், அவர்களுக்கு “பற்றாக்குறை” என்றால் என்ன என்று தெரியாது.

சீனாவில் அவர்களுக்கு “கருத்து” என்றால் என்ன என்று தெரியாது.

மத்திய கிழக்கில், அவர்களுக்கு “தீர்வு” என்றால் என்ன என்று தெரியாது.

தென்னமெரிக்காவில்அவர்களுக்கு “தயவுசெய்து” என்றால் என்ன என்று தெரியாது.

அமெரிக்காவிலோ, அவர்களுக்கு “உலகில் மீதி இருக்கும் நாடுகள்” என்றால் என்ன என்று தெரியாது.

சர்வே என்றால் ஜாக்கிரதையாக பதில் சொல்ல வேண்டுமல்லவா?

தங்களுக்குப் புரியாத வார்த்தை கேள்வியில் இருந்ததால் யாரும் பதில் தரவில்லை.

சர்வே தோல்வியில் முடிவடைந்தது!

**

பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்!

உளவியலாளர் ஒருவர் தன் நண்பரிடம், ‘ஏன் இன்னும் நீ திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என்று கேட்டார்.

“அதுவா, அழகு, சாமர்த்தியம், படிப்பு எல்லாவற்றிலும் சிறந்த இளமையான பெர்ஃபெக்ட் பெண்ணை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது தான்…” என்று இழுத்தார்.

“சும்மா கதை விடாதே, ஏராளமான இளம் அழகிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய்? ஒருவரைக் கூடவா உனக்குப் பிடிக்கவில்லை” என்றார் உளவியலாளர்.

“ஒரு அழகியைப் பார்த்தேன். அவள் ஒருத்தி தான் நான் பார்த்ததிலேயே பெர்ஃபெக்ட். எனக்கு சரியான ஜோடி என்றால் அது அவளாகத் தான் இருக்க முடியும்” என்றார் நண்பர்.

“பின் என்ன, அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே” என்றார் உளவியலாளர்.

“ஆனால் அவள் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் அல்லவா வேண்டும் என்கிறாள்!” என்றார் நண்பர்!

***

4

மனைவியுடனா

இண்டர்நெட்டைப் பயன்படுத்தும் ஒரு அனுபவஸ்தர் கூறுவது இது:

உங்கள் மனைவியுடன்  வாதாடுவது என்பது இண்டர்நெட்டைப் பயன்படுத்த முயலும் போது ‘TERMS OF USE’ஐப் படிப்பது போலத் தான்.

 (பேந்த பேந்த விழித்து விட்டு) கடைசி கடைசியாக “I AGREE” என்று சொல்லி விட வேண்டியது தான்!

***

tags- உணவு பற்றாக்குறை, ஜான் ட்ரைடன்