பூவேழு, பிஞ்சேழு, காயேழு- ஞான மொழிகள் – 32 (Post No.10,839)

WRITTEN BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,839

Date uploaded in London – –   13 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com


          WAR !

“War is a place where young people who don’t know each other, and don’t hate each other, kill each other, by the decision of old people who know each other, and hate each other, but don’t kill each other”*
– Erich Hartmann

*

A door is much smaller compared to the house.

A locker is much smaller compared to the door.

A key is after all a small, But can open the entire house !!!

Thus  thoughtful, small solutions can solve

Major problems!!!

*

It is never too late to start over……..

If you weren’t happy with yesterday,

Try something different today.

Dont. Stay struck, do better!

XXX

.Discovery \ invention

எதிர்வீட்டு கோமதிக்கு நீங்கள் ‘லவ்’ லெட்டர் கொடுக்கும்போது


உங்கள் சித்தி உங்களை “கையும் களவுமாக” பிடித்து விட்டால்
அது “டிஸ்கவரி”.

நீங்கள் லவ் லெட்டர் கொடுத்தாக சித்தி கதை கட்டி விட்டால்
அது “இன்வென்ஷன்”.

XXXXX                          *

Behind a SUCCESS MAN, there are a lot of
UNSUCCESSFUL years

XXX

   Smart answer by a female passenger on a flight…

   A guy asked a beautiful lady sitting next to him…

   ‘Nice perfume…..which one is it?… I want to give it to my wife..!!’

   Lady: ‘Don’t give her….some idiot will find an excuse to talk to her..!!’

XXX 

                                                 *

பூவேழு, பிஞ்சேழு, காயேழு.


பூவேழு – மனைவி கர்ப்பம் அடைய குறிப்பிட்ட ஏழு நாட்கள்.

பிஞ்சேழு – மனைவி கர்ப்பம் தரித்தபின் குழந்தைதான் என
உறுதி கொள்ளத் தேவை ஏழு வாரங்கள்.

காயேழு – பிறந்த குழந்தையை கவனத்துடனும் கனிவுடனும்
பாதுகாக்க தேவையானது ஏழு மாதங்கள்.

****

to be continued

tags-  tags-  பூவேழுபிஞ்சேழுகாயேழு

அந்தமானைப் பாருங்கள் அழகு! (Post No.10838)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,838

Date uploaded in London – –     13 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

12-4-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

அந்தமானைப் பாருங்கள் அழகு!

ச.நாகராஜன்

குறைந்த பட்ஜெட்டுக்கு ஒரு இடம்!

பல லக்ஷம் ரூபாய் செலவில்லாமல், விசா போன்ற கெடுபிடிகள் இல்லாமல் இயற்கை கொஞ்சும் இடம் ஒன்றைச் சொல்ல முடியாதா என்று கேட்பவர்களுக்கான பதில், முடியுமே என்பது தான்!

அந்தமானைப் பாருங்கள், அழகு என்பது தான் பதில்!

குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த மகிழ்ச்சி!

ஒரு இரண்டு மணி நேரத்தில் சென்னையிலிருந்து “பறந்து” அந்தமானின் தலைநகரான போர்ட் ப்ளேயரை அடைந்து விடலாம்.

ஹீத்ரூ, ஃப்ராங்பர்ட் போன்ற விமானநிலையங்களைக் கண்டவர்கள், போர்ட் ப்ளேயரில் உள்ள வீரசவர்க்கார் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டைப் பார்த்தால் வியப்படைவார்கள். அவ்வளவு சிறிய விமானநிலையம் இது.

சிறிய தீவு என்பதால் ஆட்டோ ரிக்‌ஷாவிலோ அல்லது டாக்ஸியிலோ குறுகிய நேரத்தில் ஒரு ரவுண்ட் அடித்து விடலாம்.

தங்குவதற்கு ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன.

ஒரு லக்ஷம் மக்கள் ஜனத்தொகை கொண்ட இந்தத் தீவில் பூர்வ குடியினர் சுமார் 500 பேர் மட்டுமே. அவர்களும் இதர மக்களுடன் கலந்து பேச மாட்டார்கள்.

வங்காளம், தமிழ்,ஹிந்தி, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உரையாடி இங்கு போக வேண்டிய இடங்களுக்குப் போகலாம்.

விசாகப்பட்டினம், கொல்கட்டா, சென்னை ஆகிய் இடங்களிலிருந்து கப்பலிலும் கூட அந்தமானுக்குச் செல்லலாம்.

572 அற்புத தீவுகள்

அந்தமான் என்பது மலாய் மொழியிலிருந்து வந்த சொல், அது ஹனுமானைக் குறிக்கிறது. நிகோபார் என்றால் நிர்வாணமாக இருப்பவரின் தேசம் என்று பொருள்.

8349 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இது. நமது நாட்டின் யூனியன் பிரதேசமாக அமைகிறது.  572 அற்புதமான தீவுகள் கொண்ட தொகுதியில் 544 அந்தமானிலும் 28 நிகோபரிலும் உள்ளன. ஆனால் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர்.

ஹாவ்லாக் ஐலேண்ட்

இந்த ஆயிரம் ஆண்டு எனப்படும் மில்லென்னியத்தில் முதல் சூரியோதயத்தைக் கண்ட இடம் அந்தமானே. சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் இதைக் கண்டு களிக்காதோர் இருக்க மாட்டார்கள். இதற்கான இடம் ஹாவ்லாக் ஐலேண்ட் தான்.

அருமையான ராதாநகர் கடற்கரை. எலிஃபண்ட் கடற்கரை இவற்றை பார்க்காமல் விட்டு விட முடியாது. ஸ்கூபா டைவிங், ட்ரெக்கிங் ஆகிய சாகஸ செயல்களில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் இது.

ஜாலி பாய்

ஜாலி பாய் செல்லுங்கள் என்று அனைவரும் கூறவே ஜாலி பாய்க்கு ஜாலியாகப் புறப்பட்டாகி விட்டது. அருமையான படகு சவாரி. அந்த தீவில் இறக்கி விடும் போது ஒரு அறிவிப்பு. இந்தப் படகு மீண்டும் இந்த இடத்திற்கு வரும் போது நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இல்லையேல் படகு நகர்ந்து விடும்.

இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளே போன போது தான் தெரிந்தது, அந்த இடம் யாரும் இல்லாத ஒரு தீவு என்று. பயத்துடன் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்து அருகில் இருந்த மூங்கிலால் அமைக்கப்பட்ட ஒரு டவரின் மீது கஷ்டப்பட்டு ஏறிப் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் கடல் தான்; கப்பலைக் காணோம்.

செதுக்கப்பட்ட பாறைகள் ஒய்யாரமாக இருக்க அதன் அடியில் தலை முட்டும் படி நின்று கடல் அலைகளையும் இயற்கை காட்சிகளையும் சற்று பயத்துடன் காணலாம். (படகு எப்போது வரும் என்பதில் மனம் லயித்திருக்குமே)

தலையை முட்டும் மலைப் பாறையிலிருந்து சுமார் மூன்று அடி தூரத்தில் கடல் அலை ஆர்ப்பரிக்கிறது. எதிரே அற்புதமான காட்சி விரிகிறது.

இவை கை புனைந்தியற்றாக் கவின் பெறு காட்சி!

நல்ல வேளையாக ஒரு அமெரிக்க இளம் தம்பதி கடலில் ‘நீர் விளையாட்டு’ ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் தான் சற்று நிம்மதி வந்தது.

பாம்! பாம்!! அவ்வளவு தான் கப்பலின் சத்தம் கேட்டு அந்த அமெரிக்க தம்பதி அலறி கரைக்கு ஓடி வர நானும் ஓடி ஒருவழியாக கப்பல் வந்து நிற்கும் இடத்திற்குச் சென்றேன். ஆக இங்கு துணையோடு செல்வது நல்லது.

இங்குள்ள பவழப் பாறைகளைப் பார்க்க நிச்சயம் ஒரு முறை போக வேண்டியது தான்.

படகில் கீழே கண்ணாடி அமைப்பு இருக்க அதன் வழியே பவழப் பாறைகளைப் பார்க்கலாம்!

இது சுற்றுப்புறச் சூழலைக் காப்பதற்காக பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட இடம். பிளாஸ்டிக் பைகளே கூடாது!

செல்லுலர் ஜெயில்

இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்து சித்திரவதை செய்த இடம் தான் செல்லுலர் ஜெயில். இங்கு சென்று அவர்களின் தியாகத்திற்கு உள்ளார்ந்த நன்றி சொல்ல வேண்டியது நமது கடமை.

செல்லுலர் ஜெயில் போர்ட் ப்ளேரிலேயே உள்ளது. இதற்கு காலா பானி (கறுப்பு நீர்) என்ற இன்னொரு பெயரும் உண்டு.

1857ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போரின் போதே இந்த தீவு  பிரிட்டிஷாரின் சிறையாகவே இருந்தது.

1906இல் இது அமைக்கப்பட்டு செல்லுலர் ஜெயில் என்ற பெயரைச் சூட்டியது. செல்லுலர் என்றால் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு சிறிய செல்; 13.5 அடி உயரம் 7 அடி அகலம். சொல்லில் அடங்காக் கொடுமைகள் நமது தியாகிகளுக்கு இழைக்கப்பட்டன. வீர சவர்க்கார் 1911இல் சிறைப்படுத்தப்பட்டு இங்கு தான் கொடுமைப் படுத்தப்பட்டார். ஏழு பகுதிகளாக அமைக்கப்பட்டிருந்த இதில் இப்போது உள்ளவை மூன்று பகுதிகளே!

இங்கு மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன.

செல்லுலர் ஜெயிலில் காண்பிக்கப்படும் ஒலி-ஒளி காட்சியைப் பார்க்காமல் வர முடியாது. ஆர்ட் காலரி, நேதாஜி காலரி என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

இங்கு பஸ், டாக்ஸி, ஆட்டொ எதில் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் போய்ப் பார்க்க வேண்டியது அவசியம்!

நேதாஜி கொடி ஏற்றிய இடம்

ஜப்பான் சிறிது காலம் அந்தமான நிகோபாரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் தீவை ஒப்படைத்தது. முதன் முதலாக சுதந்திரம் பெற்ற இந்தப் பகுதியில் கொடி ஏற்றுவதாகக் குறிப்பிட்டு நேதாஜி இங்கு இந்தியக் கொடியை ஏற்றினார்.

இப்படி பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட இடம் அந்தமான் நிகோபார்.

லிட்டில் அந்தமான் ஐலேண்ட்

பச்சைப் பசேலென உள்ள காட்சி. நீர் வீழ்ச்சி, அருமையான கடற்கரை. எலிபண்ட் சபாரியும் செய்ய முடியும். நான்காவது பெரிய தீவு இது.

இன்னும் பாரடாங் ஐலேண்ட் உள்ளிட்ட இடங்கள் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே நம்மைக் கொண்டு சென்று விடும்.

சத்தம் சா மில்

போர்ட் ப்ளேயர் பஸ் நிலையத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சத்தம் சா மில் என்ற இடம். ஒரு பாலத்தைக் கடந்து இங்கு செல்ல வேண்டும். இது ஆசியாவிலேயே மிகப் பழமையான மரம் அறுக்கும் ஆலையாகும். இங்கு உள்ள ஃபாரஸ்ட் ம்யூஸியமும் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும் இடமாக அமைகிறது.

ஃபாரஸ்ட் ம்யூஸியம்

போர்ட் ப்ளேயரில் உள்ள ஃபாரஸ்ட் மியூஸியத்தில் அரிய அந்தமானின் வன வளத்தைப் பற்றிய அனைத்தையும் அறியலாம். இயற்கை ஆர்வலர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இடம் இது.

ரோஸ் ஐலேண்ட்

பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் இது. பிரிட்டிஷார் அரசாண்ட காலத்தில் இது காலனியாக இருந்தது. இப்போது சிதிலமடைந்த வரலாற்றுச் சின்னம் மட்டுமே. சிறிய குன்று. தைரியமாக ஒரு புறம் ஆரம்பித்து குன்றின் உச்சி சென்று மறு புறம் இறங்கலாம். அற்புதமான கடற்கரை (மிகச் சிறிய அளவே கடற்கரை பகுதி)யில் சிறிது நேரம் இருந்து விட்டு ரசித்துத் திரும்பலாம். (நான் அப்படியே ஒரு தீவை வலம் வருவது போல வந்து புறப்பட்ட இடம் வந்து சேர்ந்தேன்) குன்றின் மீது ஏறுவதில் பயமே இல்லை.

இந்த ரோஸ் ஐலேண்ட் தான் சுனாமியின் போது பெரும் சேதத்தை இப்பகுதியில் ஏற்படுத்தவிடாமல் தடுத்தது.

அருகி வரும் கடல் பசு இனம்!

உலகின் மிக அரிதான வகை ஆமை இங்கு ஆயிரக்கணக்கில் வருகின்றன. வணிகத்திற்காக மீன் பிடிப்பது தடைப்படுத்தப்பட்டுள்ளது. மீன்கள் தங்கள் முழுவாழ்வையும் வாழும் இடம் இது தான்!

அந்தமானின் அதிகாரபூர்வமான மாநில விலங்கு கடல் பசு ஆகும். அருகி வரும் இந்த இனத்தின் மொத்த தொகை உலகிலேயே சுமார் 250 தான். இதில் அறுபதுக்கும் மேற்பட்ட கடல் பசுக்கள் அந்தமான் கடல் பகுதியில் உள்ளன.

அதிர்ஷ்டமுள்ளவர்கள் இதை இங்குள்ள சில தீவுகளின் அருகே உள்ள கடலில் பார்க்க முடியும். இவற்றைப் பாதுகாக்க அரசு ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஏராளமான பட்டாம்பூச்சிகள் இங்கு பறந்து கொண்டே இருப்பதால் இதை வண்ணத்துப்பூச்சி தீவு என்றே கூறலாம்.

உள்ளங்கையில் அந்தமான்!

அந்தமானை உங்கள் உள்ளங்கையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்றால்  ஆச்சரியப்படுவீர்கள். ஆமாம் நமது இருபது ரூபாய் நோட் டிஸைன் ஒன்றில் காந்திஜி புன்முறுவல் பூத்து ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் இருப்பது அந்தமான் நிகோபாரின் அழகிய காட்சி தான்! அதை உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள்; அழகை ரசியுங்கள்!

இங்கு செல்வதற்கான அருமையான காலம் அக்டோபர் முதல் மே முடிய உள்ள காலம்!

ஹெலிகாப்டரில் சென்று கடல் தீவுக் காட்சிகளைப் பார்க்க வேண்டுமா? கடல் மீது நடந்து பார்க்க வேண்டுமா? பாரா செய்லிங் செய்ய வேண்டுமா? இயற்கை தோப்புகளுக்கு இடையே படகில் சவாரி செய்ய வேண்டுமா? ட்ரெக்கிங் செய்ய ஆசையா? பலவிதமான அருங்காட்சியகங்களைப் பார்க்க வேண்டுமா? சவர்கார், நேதாஜி போன்ற பெரும் தலைவர்களுடன் தொடர்பு கொண்ட இடங்களைப் பார்க்க வேண்டுமா? டால்பின்களையும் கடல் பசுக்களையும் இயற்கைச் சூழலில் பார்க்க வேண்டுமா? படகின் கீழே கண்ணாடி பொருத்தப்பட்டிருக்க அதன் வழியே பவழப்பாறைகள் உள்ளிட்ட கடலுக்கு அடியில் உள்ள காட்சிகளை ரசித்துப் பார்க்க வேண்டுமா?

இன்ன பிற கேள்விகளுக்கு ஒரே பதில் அந்தமானுக்குச் செல்லுங்கள் என்பதே தான்!

அங்கு செல்லும் அனுபவஸ்தர்கள் கூறுவது:

அந்தமானைப் பாருங்கள் அழகு!                       அங்கு அடிக்கடி பயணப்பட பழகு!

***

tags- அந்தமான்

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA-2 (Post No.10,837)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,837

Date uploaded in London – –    12 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

First part of ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA-2, was posted yesterday.

88 Asura words in the Rig Veda

Asura with its variants ‘asurya ‘and ‘aasura’ occurs 88 times in the Rigveda.

71 times as singular number

4 times in the dual

10 times in the plural

3 times as the first part of a compound

Asuryaa , feminine form, occurring three times is included in the above list .

Asurya, masculine form, occurring 19 times, is also included.

Asuratva occurs 22 times

Xxx

Colebrooke, Roth, Max Muller, Wilson, Oldenberg, Grassmaan, Ludwig, Geldner, Whitney, Macdonell and Keith translated and interpreted the words in the wrong way because of their pet theories. They all believed Christianity is far superior and the karma, rebirth theories are false, and the Aryans came into India from Central Asia. So from the very beginning, they interpreted Asura as native people and Hindus as invaders. They also ridiculed Karma theory, Rebirth, reincarnation and Avatars.

But Tamils of the Sangam age and foreigners like Alexander praised Vedic principles. In the beginning Asura meant only strong and mighty. Only in the Puranas they were depicted as demons.

Here is the supporting statistics:-

Barring eight of the latest hymns, the word Asura, is always used as an adjective meaning powerful or mighty.

Another interesting thing is, the word for gods such as Deva, divine, Theo, deo, dieu etc are found in European languages, but no cognate word for Asura!

xxx

Lord Rama was an Asura

Some people link it with Asu in Sanskrit which means life, spirit.

So ‘spirited or courageous’ was the original meaning.

The word was not only used for Gods but for anyone who is powerful. Even two kings were described Asura.

Lord Rama was an Asura in the Rigveda

Among the deities Indra tops the list of Asuras.

Indra was praised as an Asura or possessing asurya or asuratva 16 times.

Agni followed Indra who is described Asura 12 times.

Varuna comes next with 10 times.

The above three deities are the mightiest in the Rigveda.

Mitra 8 times, Rudra 6 times, Dyaus 6 times, Savitr 4 times, Surya 3 times, Parjanya 3 times.

Vayu, Pusan, Tvastr, Brhadpati, Apam Napat, Marut,Sarasvati, Rodasi, Usas, Adityas, each one time.

Among the kings Svanaya Bhavya and Rama have the honour of being called mighty or Asura.

Some scholars identified this Rama as the hero of Ramayana.

Demon = Asura

Among the hostile beings Svarbhanu twice,Namuci once, Vrkadvaras,Varcin and Pipru once.

According to PL Bhargava, author of the ‘Vedic Religion and Culture’, the above list shows the word Asura with its variants was used in the sense of mightiness.

Towards the end of the Rigvedic period it not only became a noun from adjective, but also meant demon. It has acquired a new meaning.

In eight of the latest hymns occurring in books 6,7,8,10 Asura has been used in its new sense. The authorship, contents and the language show they were the latest hymns.

What led to the change in the meaning can only be guessed. We know that the Zoroastrian scripture Avesta treated Asura with respect and Deva with disrespect. Deva meant a demon and Indra was a bad guy in their scriptures.

Xxx

My comments

In the above list we see more gods with Asura epithets than the Puranic Asuras.

So the positive meaning prevailed over negative sense during Vedic period.

Let us compare it with the Second World War

Japan and Italy joined hands with Hitler of Germany and acquired bad name in the world war . They were described as demons by the western countries. Now they are friends of  the west. Two of them are NATO members now. Once they were demons and now Devas.

America and Britain lied to the world about modern destructive weapons of Iraq and Libya and killed their rulers, just for getting petroleum . Now the British government itself found out then prime minister Tony Blair lied to the parliament . Both America and Britain lost their own soldiers in the fight in addition to thousands of Muslims. All these are nothing but political or economical issues. Like Second World War there might have been a fight between two Vedic groups and one acquired a bad name. Hindus thought that Parsis were Asura worshippers and they called Indra worshippers as demon worshippers. Even now Christian and Muslim scriptures call others as devil worshippers, Pagans and Kafirs. But the so called scholars of the western countries used this Deva Demon issue for their own political motives. They wanted to divide India and rule it for ever. But the awakening among Hindus created by its great leaders destroyed their evil intentions.

Here are some references

Lord Rama in the Rig Veda 10-93-14

King Svanaya Bhaavya RV.1-126-2

Those who need all the 88 references can see them in Bhargava’s book under the title- The Word Asra in the Rgveda in his book- Vedic Religion and Culture’,D K PrintworldLtd, Delhi, 1994

We will look at Aryan Statistics tomorrow

To be continued….

tags- Asura, Arya, Statistics, Rigveda, Rama, 

பூச்சாண்டி தமிழ் சொல் இல்லை! (Post No.10,836)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,836

Date uploaded in London – –    12 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

‘நீ ரொம்ப சுட்டித் தனம் பண்ணினா, பூச்சாண்டி வந்து பிடிச்சிடுவான்’. ‘நீ அழுதேன்னா, பூச்சாண்டியைக் கூப்பிடுவேன்’ ; ‘பூச்சாண்டி வந்து உன்னை முழுங்கிடுவான்’ — என்று குழந்தை களையும், சிறுவர் சிறுமியரையும் எச்சரிக்கும் வழக்கம் உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் உள்ளது. மேலை நாடுகளில் நகர்ப்புற வாழ்க்கையில் இது குறைந்துவிட்டது. அங்கு இதற்குப் பதிலாக பேய், பிசாசு, பயங்கள் மட்டும் இருக்கின்றன. இதற்கு வருடம் தோறும் நடக்கும் ஹாலோவீன் டே (HALOWEEN DAY EVENTS) சடங்குகள் மற்றும் பயங்கரத் திரைப்படங்கள், நாவல்கள் காரணம் (HORROR MOVIES AND NOVELS).

பூச்சாண்டி (POOCHAANDI) என்ற சொல்லை மட்டும் ஆராய்வோம்; நம்பிக்கையை (BELIEFS) ஒதுக்கி வைப்போம் .

பூச்சாண்டி தமிழ் சொல்லா? இல்லையா என்பதே கேள்வி

பூதம் BHUTA என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே மருவி பூச்சாண்டி ஆனது; பூதம் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆனால் பூச்சியோ  ஆண்டியோ கிடையாது .

சுடுகாட்டு பூதம் பற்றி பரணர் பாடிய செய்யுள் புறநானூற்றில் உள்ளது (பாடல் 369)

த = ச  T= S என்பது தமிழ், ஸம்ஸ்க்ருதம் , கிரேக்க மொழிகள்  எல்லாவற்றிலும் உண்டு. வில்லியம் ஜோன்ஸ்களும் கால்டுவெல்களும்  உளறிவிட்டுப்போனதை நான் சரி செய்கிறேன்

ஓதை = ஓசை ODHAI= OSAI

தானை = சேனை THAANAI = SENAI

த்யூத்த = சூது DYUTA= SOOTHU/GAMBLING (Sangam literature from Rig Veda)

த்யவ்ஸ் – Z சூஸ் RIG VEDIC DYAUS= GREEK GOD ZEUS (Greek literature from Rig Veda)

TION= SION ( hundreds of words in English)

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சொற்கள் பற்றி ஆங்கிலத்தில் நிறைய ஆராய்ச்சிக் குறிப்புகளை சென்னை பல்கலைக் கழக தமிழ் அறிஞர் டாக்டர் ஆர். பி. சேதுப்பிள்ளை DR R P SETHU PILLAI FF MADRAS UNIVERSITY  எழுதினார். பின்னர் அது ஆங்கிலப் புஸ்தகமாக இரு முறை வெளிவந்தது ( WORDS AND THEIR SIGNIFICANCE,1953, 1974). அதில் அவர் பூச்க்காண்டி பற்றி ஆராய்ந்து இது பூச்சு+ ஆண்டி POOCHU+ ANDI  என்ற தமிழ்ச் சொல் போலும் என்கிறார் .

அவர் சொன்னதாவது:-

ஆள் AAL என்ற வினைச் சொல்லிலிருந்து ஆண்டான், ஆள்கிறான்  என்ற சொற்கள் வருகின்றன.பழனியை ஆளும் முருகனை பழனியாண்டி என்கிறோம். செந்தில் கடற்கரையில் குடி கொண்டு அருள் ஆட்சி செய்பவனை கடற்கரை ஆண்டி என்கிறோம். பழனி முருகனை ஆண்டிப் பண்டாரம் என்று பாடும் பாடல்களும் உள்ளன.. தற்காலத்தில் சைவ மத த்தைச் சேர்ந்தோரை மட்டுமே ஆண்டி AANDI= MENDICANT என்கிறோம். ஒருவேளை உடல் முழுதும் விபூதியையோ, சந்தனக் குழம்பையோ பூசிக் கொண்டு , விகாரமாக, வழக்கத்துக்கு மாறாக காட்சி தருவோரை பூச்சு ஆண்டி = பூச்சாண்டி என்று சொல்லி இருக்கலாம்  என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அடிக்குறிப்பில் தமிழ் அகராதியில் பூச்சி ஆண்டி என்று பிரித்து குழந்தைகளை பயமுறுத்தி இருக்கிறார்கள் என்றும் குறித்துள்ளார்.

பூசு, ஆள் என்ற வினைச் சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆனால் ஒரு லட்சத்துக்கும் மேலான சொற்களை உடைய சங்க இலக்கியத்தில் பூச்சியும் இல்லை; ஆண்டியும் இல்லை! பூச்சாண்டியும் இல்லை.

XXXX

1935ம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியில்

பூச்சாண்டி = வெருளி , என்றும்,

பூச்சி யாண்டி = பூச்சாண்டி, என்றும் மட்டுமே உளது

வெருளி – வெருட்சி என்றே உளது

ஆக முன்காலத்தில் அதிகம் புழங்காத சொல் என்று தெரிகிறது.

XXXX

என்னுடைய ஆராய்ச்சி :–

பூச்சாண்டி என்ற தமிழ்த் திரைப்பட விமர்சனத்திலும் ஏறத் தாழ இதே கருத்து உள்ளது. திரு நீறு பூசியவர்களே  இப்படிப் பெயர் பெற்றார்கள் என்பதற்கு யாரும் இதுவரை எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. மேலும் இது சங்க இலக்கியத்தின் 18 மேல் கணக்கு நூல்களிலும் அதற்குப்பின் 500 ஆண்டுகளில் வந்த பதினெண் 18 கீழ்க்கணக்கு   நூல்களிலும் இல்லை.

ஐரோப்பிய மொழிகளிலும் ‘பூச’ PUCA , இதே பொருளில் உள்ளது.

அயர்லாந்தில் பேசப்பட்ட  ஐரிஷ் மொழியில் பூக்க , பூச்ச PUKA, PUCA என்றால் பேய், பிசாசு என்று பொருள். இதுதான் பல மொழிகளில் பரவியது என்பதற்கு எட்டாம் நூற்றாண்டிலிருந்து சான்று உள்ளது என்று விக்கிபீடியா கூறும்.

ஆங்கிலத்தில் பேய் , பிசாசு விஷயங்களை ஸ்பூக்கி SPOOKY  என்பர். ஸ்பெக்டர் SPECTRE என்றாலும் இதே பொருள். அதற்கு மூலம் ‘ஸ்பூகே’ என்னும் ஜெர்மன் சொல்லாகும்.

ஆக ஐரிஷ் மொழி மட்டுமல்ல. ஜெர்மன் மொழயிலும் இது உளது. ஜெர்மன் மொழியில் உள்ள எல்லா பழைய சொற்களும் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து பிறந்தவை என்பதை மொழி இயற் அறிஞர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

XXX

ஆங்கிலத்தில் பூச்சாண்டியை bogeyman போகி மேன் என்பர். அதிலும் பூக  இருக்கிறது. இவை எல்லாம் சம்ஸ்க்ருத பூதம் என்ற சொல்லில் இருந்து வந்தது. பூதம், பேய், பிசாசு என்பன இந்தியாவில் எல்லா மொழிகளிலும் உள்ளது.

சங்க இலக்கியத்தில் சுடுகாட்டு பூதம் பற்றி பரணர் பாடிய செய்யுள் புறநானூற்றில் உள்ளது (பாடல் 369);  சிலப்பதிகாரம் போன்ற சங்கம் மருவிய நூல்களில் பேய், பிசாசு என்ற பொருளில் வரும்; தேவார, பெரிய புராணக்  கதைகளில் சிவனுடைய பூத கணங்கள் செய்த அற்புதங்கள் கிடைக்கின்றன. பூதம் என்பது பூக , பூச , போகிமேன் என்று மாறுவதில் வியப்பு ஒன்றுமில்லை. சங்க காலத்தில் பூனை/ CAT என்றால் யாருக்கும் தெரியாது. பூசை/CAT என்றே உளது.இப்படி மாறுவது காலத்தின் கோளாறு.

தமிழில் இறந்த காலம் என்போம். ஸம்ஸ்க்ருதத்தில் பூத BHUTA காலம் என்பர்; இறந்த ஆட்கள், இருண்ட  பிரதேசங்கள் எல்லாம் பூதம் BHUTAM என்ற பொருள் சம்ஸ்க்ருத இலக்கியத்தில் நிறைய உளது.

பஞ்ச பூதங்கள் என்ற பொருளிலும் பூதம்  வரும்.

XXXX

XXXXXX

More supporting information from different web sites:–

BHUTA FROM WISDOM LIBRARY WEBSITE

3) A spirit, ghost, an imp, a devil (m. also in these senses); ततो रक्षां महातेजः कुरु भूतविनाशिनीम् (tato rakā mahāteja kuru bhūtavināśinīm) Rām.7.66.3.

Sanskrit dictionary

Bhūta (भूत).—p. p. [bhū-kta]

1) Become, being, existing.

2) Produced, formed.

3) Actually being, really happened, true; भूताश्चार्था विरुद्ध्यन्ति देशकालविरोधिताः (bhūtāścārthā viruddhyanti deśakālavirodhitā) Rām.5.3.37.

4) Right, proper, fit; अभूतेनापवादेन कीर्तीं निपतितामिव (abhūtenāpavādena kīrtī nipatitāmiva) Rām. 5.15.34; भूतार्थव्याहृतिः सा हि न स्तुतिः परमेष्ठिनः (bhūtārthavyāhti sā hi na stuti parameṣṭhina) R.1.33.

5) Past, gone.

6) Obtained.

7) Mixed or joined with.

8) Being like, similar, (see bhū); मग्नां द्विषच्छद्मनि पङ्कभूते (magnā dviacchadmani pakabhūte) Ki.3.39.

-taḥ 1 A son, child.

2) An epithet of Śiva.

3) The fourteenth day of the dark half of a lunar month (also bhūtā).

4) A great devotee.

5) Name of a priest of the gods.

6) The dark fortnight of a month (kṛṣṇapaka).

7) see भूतगण (bhūtagaa).

-tam 1 Any being (human, divine or even inanimate); इत्थं रतेः किमपि भूतमदृश्यरूपं मन्दीचकार मरणव्यवसायबुद्धिम् (ittha rate kimapi bhūtamadśyarūpa mandīcakāra maraavyavasāyabuddhim) Ku.4.45; Pt.2. 87.

2) A living being, an animal, a creature; क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते (kara sarvāi bhūtāni kūastho’kara ucyate) Bg.15.16; भूतेषु किं च करुणां बहुली- करोति (bhūteu ki ca karuā bahulī– karoti) Bv.1.122; U.4.6.

3) A spirit, ghost, an imp, a devil (m. also in these senses); ततो रक्षां महातेजः कुरु भूतविनाशिनीम् (tato rakā mahāteja kuru bhūtavināśinīm) Rām.7.66.3.

4) An element; (they are five, i. e. pthvī, ap, tejas, vāyu, and ākāśa); तं वेधा विदधे नूनं महाभूतसमाधिना (ta vedhā vidadhe nūna mahābhūtasamādhinā) R.1.29.

5) An actual occurrence, a fact, a matter of fact.

6) The past, past time.

7) The world.

8) Well-being, welfare.

9) A symbolical expression for the number ‘five’.

1) Fitness, propriety.

XXXX

bogeyman

/ˈbəʊɡɪman/

noun

  1. an imaginary evil spirit or being, used to frighten children.

o a person or thing that is widely regarded as an object of fear.

XXXX

Wikipedia. Púca. The púca (Irish for spirit/ghost; plural púcaí), pooka, phouka is primarily a creature of Celtic folklore. Considered to be bringers both of good and bad fortune, they could help or hinder rural and marine communities.

The name comes from the Old Irish púca and is one of a very small number of Irish words to be borrowed into Old English where it appears to have been in use as early as the 8th century, based on place name evidence.[5] Since it is a ‘cultural’ rather than a practical word that might be used in trading, it is thought to reflect greater cultural contact between English and Irish in the early medieval period than had been thought.[5]

The word seems to have passed from there into the Scandinavian languages including, according to the OED, “Old Icelandic púki mischievous demon, the Devil, Faroese púkiNorwegian (originally and chiefly regional) puke devil, evil spirit, mischievous person, Old Swedish puke devil, evil spirit, Swedish (now chiefly regional) puke evil spirit, devil, goblin), Old Danish puge evil spirit”.

XXXXX

SPOOKY

1801, “spectre, apparition, ghost,” from Dutch spook, from Middle Dutch spooc “spook, ghost,” from a common Germanic source (German Spuk “ghost, apparition,” Middle Low German spok “spook,” Swedish spok “scarecrow,” Norwegian spjok “ghost, specter,” Danish spøg “joke”), of unknown origin. According to Klein’s sources, possible outside connections include Lettish spigana “dragon, witch,” spiganis “will o’ the wisp,” Lithuanian spingu, spingėti “to shine,” Old Prussian spanksti “spark.”

Meaning “undercover agent” is attested from 1942. The derogatory racial sense of “black person” is attested from 1940s, perhaps from notion of dark skin being difficult to see at night. Black pilots trained at Tuskegee Institute during World War II called themselves the Spookwaffe.

XXX

·         India – In India, the entity is known by different names. Urdu speaking population refer to the bogeyman-like creature by names such as Shaitan/ShaytaanBhootJin Baba, which mean satan, ghost, Djinn respectively. Hindi speaking population refer to the bogeyman-like creature as Baba and BhootBihar – Parents use the demon name Bhakolwa for this purpose. The terms Petona and Kaatu are also used.[44] In Rajasthan, parents use the demon name Haboo to terrify their children. South India – In Karnataka, the demon “Goggayya” (roughly meaning ‘terrible man’) can be treated as counterpart of the bogeyman. In the state of Tamil Nadu, children are often mock-threatened with the Rettai Kannan (the two-eyed one) or Poochaandi (பூச்சாண்டி), a monster or fearsome man with whom children are sometimes threatened if they are not obedient or refuse to eat. In the state of Andhra Pradesh, the equivalent of the bogeyman is Boochodu. In central Kerala, the bogeyman is referred to as “Kokkachi”, who will “take away” children for disobeying their parents or misbehaving in any manner; and in South Kerala, the bogeyman is called “Oochandi”. Among Konkani-speaking people of the Western Coast of India, “Gongo” is the Bogeyman equivalent. Among Marathi language speaking people (predominantly of Maharashtra), parents threaten the misbehaving children with a male ghost called “Bāgul Buā” (बागुल बुवा). In general, the “Buā” is supposed to kidnap children when they misbehave or do not sleep.[44] In the eastern state of Odisha the bogeyman is referred to as “Baaya”(ବାୟା). Its usage is usually done to scare kids into following instructions of the elders. The term “Baaya” also designates a ghost.

–SUBHAM—

tags-  பூச்சாண்டி, தமிழ் சொல், பூதம்,  கிடையாது ,

மனைவியும் திருக்குறளே! ஞான மொழிகள் – 32 (Post No.10,835)

COMPILED BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,835

Date uploaded in London – –   12 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

COMPILED BY கத்து குட்டி, CHENNAI


மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால், அது “யோகா”.
மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா விட்டால், அது “தியானம்”. 

யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே…!

*

‘தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !
இனி இவனை அடிக்க முடியாதுன்னு”

பெத்தவங்க, மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றது தான் திருமணம்!

*

மாப்பிள்ளை வீட்டில், “மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு” என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.

ஆனால்
பெண் வீட்டில் “பெண்ணுக்கு, ஒரு தங்கை உண்டு” என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.

                              *

இது தான் அர்த்தம்!

அடிக்கடி டீயோ, காபியோ கேட்கிறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.
.
மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
.
உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.
.
இரவில் குறட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?
.
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.
.
உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தரவில்லையா?
.
உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
.
நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.

                                                          *

மனைவியும் திருக்குறளே!

மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!!

1. நிறைய “அதிகாரம்” இருப்பதால்.

2. நிறைய இடங்களில் “புரிந்தும், புரியாமலும்” இருப்பதால்.

3. இரண்டு “அடி”யில், எல்லாவற்றையும் உணர வைப்பதால்…..வாழ்க வளமுடன்!

 சும்மா நகைச்சுவைக்காக போடப்பட்டது இந்த பதிவு! 

XXX

ஆண்கள் பெண்களைப்பற்றி பேசுவதைவிட பெண்கள் ஆண்களைப்பற்றி மூன்று மடங்கு அதிகமாக பேசுகிறார்கள்!!!

பூமியில் வாழும் 85% உயிரினங்கள் என்ன தெரியுமா???

“பூச்சிகள்”

TAGS – மனைவி, திருக்குறளே, ஞான மொழிகள் – 32 , அதிகாரம், 

ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள்! (Post No.10,834)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,834

Date uploaded in London – –     12 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள் (நவ பங்கி)

ச.நாகராஜன்

ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள் வருமாறு அமைப்பது கவித்திறனின் உச்ச கட்ட நிகழ்வாகும்.

இப்படி ஒன்பது பாடல்கள் ஒரே பாடலில் அமைவது நவ பங்கி என்று அழைக்கப்படுகிறது.

இதைச் சாதித்துக் காட்டியவர் இராமச்சந்த்ர கவிராயர்.

இவர் மயிலாசல முருகன் மீது பாடிய ஒரு பாடல் அபூர்வமான பாடலாகும்.

அரிமரு காகரு ணாலய னேதிட வாரணனே போதன்

     அரியிமை யோர்சூழ் புனிதா புலவட ரயிலவர் பொற்கரனே

கரிமுக னேயசகோ தரனே படிகா ரணனே நாதங்

     கதியுற வேவா னவனே நலமிகு கயிலை யனற்குருவே

குரவலர் நீபமணிப் புயனே வடிகூ ரமுதே யோதுங்

            குருமணி சேர்மார் பினனே யுலகருள் குயிலுக வுத்தமனே

மரகத மாமயில் வாகனனே கொடி வாரணனே கோதின்

     மதியக மேவாழ் குமரா குலவிய மயிலம லைக்குகனே

பாடலைப் பிரித்துப் பார்ப்போம்:

அரிமருகா கருணாலயனே – திட ஆரணனே

போதன்னரியிமையோர் சூழ் புனிதா – புலவடர் – அயிலமர் -பொற்கரனே

கரிமுகனேய சகோதரனே படி -காரணனே

நாதங்கதியுறவே வானவனே- நலமிகு -கயிலை யனற்குருவே

குரவலர் நீபமணிப்புயனே- வடிகூர் அமுதே

ஓதுங் குருமணி சேர் – மார்பினனே – உலகருள் – குயிலுதவுத்தமனே

மரகத மாமயில்வாகனனே – கொடி – வாரணனே

கோதின் மதியகமே வாழ் குமரா – குலவி – மயிலமலைக் குகனே

நவபங்கி எனப்படும் ஒன்பது பாடல்களின் பிரிவை இப்போது பார்ப்போம்.

அதாவது ஒரே பாடல் எப்படி ஒன்பது பாடல்களாக விரிகிறது என்பதைப் பார்ப்போம்.

1 சிந்தடி வஞ்சி விருத்தம்

அருமருகா கருணாலயனே, கரிமுகனே யசகோதரனே,

குரவலர் நீப மணிப்புயனே, மரகதமாமயில் வாகனனே

2. சிந்தடி வஞ்சி விருத்தம்

புலவடரயிலமர் பொறகரனே, நலமிகு கயிலைய னற்குருவே,

உலகருள் குயிலுத வுத்தமனே, குலவியமயில மலைக்குகனே.

3. கட்டளைக் கலித்துறை

அரிமரு காகரு ணாலய னேதிட வாரணனே

கரிமுக னேய சகோதர னேபடி காரணனே

குரவலர் நீப மணிப்புய னே வடி கூரமுதே

மரகத மாமயில் வாகன னேகொடி வாரணனே

4.கொச்சகம்

ஆரணனே போத னரியிமையோர் சூழ்புனிதா

காரணனே நாதங் கதியுறவே வானவனே

கூரமுதே யாதுங் குருமணிசேர் மார்பினனே

வாரணனே கோதின் மதியகமே வாழ் குமரா

5. சந்த விருத்தம்

போதன்ன ரியிமையோர் சூழ்புனிதா புலவட ரயிலமர் பொற்கரனே

நாதங் கதியுறவே வானவனே நலமிகு கயிலைய னற்குருவே

ஓதுங் குருமணி சேர்மாபினனே யுலகருள் குயிலுத வுத்தமனே

கோதின் மதியகமே வாழ்குமரா குலவியமயில மலைக்குகனே

6. கலி விருத்தம்

போதன் னரியிமை யோர் சூழ் புனிதா

நாதங் கதியுற வேவா னவனே

ஓதுங் குருமணி சேர்மார் பினனே

கோதின்  மதியக மேவாழ் குமரா

7. குறளடி வஞ்சி விருத்தம்

அபிலமர் பொற்கரனே, கயிலைய னற்குருவே

குயிலுத வுத்தமனே, மயில மலைக்குகனே

8. இதுவுமது (குறளடி வஞ்சி விருத்தம்)

திட வாரணனே, படி காரணனே,

வடி கூரமுதே, கொடிவா ரணனே

9. வெண்பா

ஆரணனே போதன் னரியிமையோர் சூழ்புனிதா

கூரமுதே யோதுங் குருமணிசேர் – மார்பினனே

வாரணனே கோதில் மதியகமே வாழ்குமரா

காரணனே நாதங் கதி

இப்போது பாடலின் பொருளைப் பார்ப்போம்:

அரிமருகா – திருமாலுக்கு மருமகனே

கருணாலயனே – கருணைக்கு இருப்பிடமானவனே

திட ஆரணனே – எல்லோருக்கும் த்ருதரப்ரமாணமாகிய வேதப்ரதிபாதயனே

போதன் – பிரமனும்

அரி – திருமாலும்

இமையோர் – மற்ற தேவர்களும்

சூழ் – சூழ்ந்து வணங்குகின்ற

புனிதா – பரிசுத்தமானவனே

புலவு அடர் அயில் – மாமிசம் பொருந்திய வேலாயுதம்

அமர் -பொருந்திய

பொன்கரனே – பொன்போன்ற அழகிய கரத்தை உடையவனே

கரிமுகன் – யானை முகத்தோனாகிய விநாயகனுக்கு

நேய சகோதரனே – அன்புள்ள சகோதரனே

படி காரணனே – உலக காரணனே

நாதம் கதி உறவே – நாத வீடாகிய சுற்றமே

வானவனே – தேவனே

நலம் மிகு – நன்மை மிக்க

கயிலையன் – கைலாயபதியாகிய  சிவபிரானுக்கு

நல் குருவே – சிறந்த குருவே

குரவு அலர் – குரா மலர் மாலையையும்

நீபம் – கடப்ப மலை மாலையையும் அணிந்த

மணி புயனே – அழகிய தோள்களை உடையவனே

வடி கூர் அமுதே – தெளிவு மிகுந்த அமுதமே

ஓதும் குருமணி சேர் – சொல்லப்பட்ட நிறமுள்ள மணி மாலைகள் பொருந்திய

மார்பினனே – திருமார்பை உடையவனே

உலகு அருள் – உலகங்களை எல்லாம் ஈன்ற

குயில் – குயில் போல்பவளாகிய உமாதேவி

உதவு – பெற்ற

உத்தமனே – நல்லவனே

மரகதம் – மரகத மணி போன்ற

மா – பெரிய

மயில்வாகனனே – மயிலை வாகனமாக உடையவனே

கொடி வாரணனே – கோழிக் கொடியை உடையவனே

கோது இல் – குற்றமில்லாத

மதி அகம் – (அன்பர்களது)  அறிவில்

வாழ் – வாழ்கின்ற

குமரா – குமரனே

குலவிய – விளங்கிய

மயிலமலை – மயிலாசலத்திலுள்ள

குகனே – குகனே

எவ்வளவு பொருள் பொதிந்த பாடல்!

எத்தனை சந்த வகைகள்!

இனிய சொற்கள்!

ரசித்துப் படிக்க வேண்டும் ஒரு பாடலை – இல்லை இல்லை ஒன்பது பாடல்களை!

***

 tags —  ஒன்பது பாடல்கள் ,ஒரே பாடலில்,   நவ பங்கி , இராமச்சந்த்ர கவிராயர்.

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA Post No.10,833)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,833

Date uploaded in London – –    11 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

In the old part of the Rig Veda,  ASURA was used in good sense. The chief gods such as

Indra (RV.1-54-3)

Varuna 1-24-14

Agni ( 4-2-5; 7-2-3)

Savitri (1-35-7)

Soma (1-108-6)

Asura of heaven (5-41-3)

Heaven as Asura (1-131-1; 5-83-6)

Agni (3-29-14)

have Asura as epithets in good sense.

Xxxx

In bad sense

RV.2-32-4

RV.7-99-5

In the Atharvana veda

AV.4-23-5; AV.6-7-2

Xxx

In the Brahmanas , we find devas fighting with Asuras.

In the puranas devas fight with ‘suras’ but not with Asuras.

The suras is mere a fiction of later timesand not found in the vedas. A false etymology has called this new class of gods into existence

Xxx

In the Aitareya brahmana , the  Devas and Asuras waged war and the Asuras made their worlds fortified places  (pur/polis) and made them impregnable  as possible. They made the earth of iron, the air of silver and the sky of gold. Thus they transformed these worlds into fortified places/ castles.

The Devas said: These Asuras have made these into fortified places Let us build other worlds in opposition to these (now occupied solely by them ). Then they made out of her (earth)a seat, out of the air a fire hearth, and out of the sky, two repositories for sacrificial food (these are called Havirdhana).

The Devas said: Let us bring the Upasads;  by means of a siege (Upasada)one can conquer a large town. When they performed the first Upasad, then they drove them (Asuras) out of this world (earth); when they performed the second Upasad, then they drove them (Asuras) out from the air; and when they performed the third, then they drove them (Asuras) out from the sky. Thus they drove them (Asuras) out from these worlds.

The Asuras thus driven out these worlds then repaired to the Rtus (seasons). The Devas said: Let us perform Upasad. The Upsads being three , they performed each twice. Then they drove them (Asuras) out from the Rtus. The Asuras now repaired to the months. The devas made twelve upasads and drove them (Asuras) out from the months.

After being defeated here also, they repaired to the half months. The devas performed 24  upasads and drove them (Asuras) out from the half months.

After being defeated again, they repaired to the day and night. The devas performed upasads and drove them (Asuras) out . therefore the first upasad ceremony  is to be performed in the first part of the day and the other in the second part of the day.

The sacrifice thus only leaves so much space to the enemy  as exists between the conjunction of day and night. That is the time of twilight in the morning and the evening.

What is an Upasad ceremony?

This is a particular ceremony which is to take place immediately after the great Prvaryya ceremony, during which the priests produce for the sacrifice/ Yajamana, a golden celestial body, with which alone he is permitted by the gods to enter heaven. When in this way the sacrifice is born anew, he is to receive the nourishment appropriate for an infant’s body, and this is milk.

The chief part of the upasad ceremony is that one of the priests/ Adhvaryu presents milk to him in a large wooden spoon, which he must drink. Formerly it has to be drunk from the cow which has to be milked by the Adhvaryu, but this custom has now fallen into disuse.

Martin Haugh who translated Aitareya Brahmana  in 1863 collected lot of information from the priests and added those things as footnotes.

xxx

My views

The above Upasad ceremony slowly increases from 3 to 24. (One year has 24 Pakshas/fortnights). Aitareya Brahmana is attached to the oldest book Rigveda. So it must be one of the oldest Brahmanas. And in those days you did not have anything in writing, you need some stories to remember them. That must be the reason for the story behind Devas doing the Upasads in increasing order. Even in nursery schools , just to teach the children the seven days of the week, we sing a nursery rhyme:-

Solomon Grundy,

Born on a Monday,

Christened on Tuesday,

Married on Wednesday,

Took ill on Thursday,

Grew worse on Friday,

Died on Saturday,

Buried on Sunday.

That was the end,

Of Solomon Grundy.

JUST TO REMEMBER THE NUMBER OF DAYS IN ALL THE MONTHS, WE HAVE ANOTHER RHYME:-

Thirty days has September,

April, June, and November,

All the rest have thirty-one,

But February’s twenty-eight,

The leap year, which comes once in four,

Gives February one day more.

In the same way the Upasad from 3 to 24 would have been made into a story of driving the Asuras out. The fact is that you do more rituals to drive the evil forces out.

As children we used to hear from our grandmas and mothers that you should not go out during Sandhya Kalam (twilight time) because the Asuras will be out roaming in the earth. This means you should stay home and do the Sandhya Vandana prayer. All the people from three castes are supposed to do Sandhya Vandana (sun worship) at three twilight times including noon.

Xxx

ASURA IN PARSI’S ZEND AVESTA

Asura is in the form of Ahura , the Asura first part of Ahura Mazda / Hormazd , the name of god among Parsis; and the Zoroastrian religion is distinctly called the Ahura religion. See Yasna 12-9 in strict opposition to Hindu religion.

Among the metres used in Yajur Veda, we find metres which are marked by the epithet aasuri  such as

Gayatri aasuri

Ushnih aasuri

Pankti aasuri

These aasuri metres are not found in the Rigveda , but they are found in the Gatha literature of the Zend Avesta . in these metres the syllables are reduced.

TO BE CONTINUED…………

Tags-  Asura, Aasuri metre, Zend Avesta, Ahura, Asura Gods, Rigveda

புறநானூற்றில் Drone ட்ரோன் ; ரிக் வேதத்தில் மோட்டார் Car கார்! (Post No.10,832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,832

Date uploaded in London – –    11 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் டாக்டர் அஸ்வின் தேவர்கள்

புறநானூற்றில் Drone ட்ரோன் ; ரிக் வேதத்தில் மோட்டார் Car கார்!

ரிக் வேதத்தில் இன்று வரை புதிராக இருக்கும் கடவுளர் அஸ்வினி தேவர்கள் (ASVINS) எனப்படும் இரட்டையர் (TWINS) ஆவர். அவர்கள்தான் உலகின் முதல் இரட்டையர்கள் (TWINS) .. அவர்களை பற்றி 2850 ஆண்டுகளுக்கு முன்னரே யாஸ்கர் ஒரு புதிர் போட்டு விடையும் காண முடியாமல் தவித்தார். இன்றுவரை அந்தப் புதிர் நீடிக்கிறது.

முதலில் அவர்களுடைய மருத்துவ அற்புதங்களை காண்போம்:–

அவர்களுக்கு ஒரு மருத்துவர் போல நோய் தீர்க்கும் ஆற்றல் உண்டு என்பதை 1-34-6 உறுதி செய்கிறது.

துதி 8-18-08-லும் மேற்கூறிய மந்திரங்களிலும் அவர்களுடைய ஆற்றலை காணலாம். அவர்கள் இந்த சிகிச்சை ஆற்றலை தண்ணீர், மரங்கள், மூலிகைகளில் வைத்திருந்தனாராம் . (அவர்கள் இயற்கை வைத்தியம் செய்தனர் போலும்).

மண்/பூமி வைத்தியம் பற்றி 1-34-6ல் காண்கிறோம். ‘தொலைவிலுள்ள மருந்தோடு அல்லது பக்கத்தில் கிடைக்கும் மருந்தோடு விரைந்து (8-9-15) வருக’. என்று மற்றொரு புலவர் பாடுகிறார்-

யார் யார் நோயுற்றனரோ அவர்கள் எல்லோருக்கும் உதவுக என்று எல்லோருக்கும் சேர்த்து வேண்டுகிறார் ஒரு புலவர் (8-22-10).

நீங்கள்தான் கண்பார்வையற்றோருக்கும், பலவீனமானவர்களுக்கும் டாக்டர் என்கிறார் இன்னும் ஒரு புலவர் ( 10-39-3 )

விஸ்பலா என்ற பெண்மணிக்கு செயற்கை கால் பொருத்திய செய்தியும் தத்யங் என்பவருக்கு குதிரைத் தலை  பொருத்திய செய்தியும் SURGEONS சர்ஜன்கள் என்ற விஷயத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

ஒரு பெண்ணுக்கு சுகப் பிரசாவம் நடப்பதற்கான மந்திரத்தில் அஸ்வினி தேவர்களின் உதவி பற்றிய 5 மந்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன (5-78-5/10). இதற்கு “கர்ப்ப ஸ்ராவினி உபநிஷத்” என்ற பெயரும் உளது.

விஷ்வக் என்பவரின் மகனைக் கொல்வதற்காக  விஷத்தைப் பயன்படுத்திய செய்தியும் 1-117-16ல் பாடப்பட்டுள்ளது . இது போன்ற  POISONOUS MISSILE விஷக்  கணை தன்னைத் தாக்கக்கூடாது என்றும் ஒரு புலவர் பாடியுள்ளார் (காண்க 6-62-10).

xxx

யாஸ்கர் என்பவர் உலகின் முதல் சொற்பிறப்பியல் அகராதி உருவாக்கியவர். அவர் நிருக்தம் எழுதினார்;  அஸ்வினி  தேவர்கள் என்போர் முன்காலத்தில் வாழ்ந்த இரண்டு நல்ல அரசர்களா ? அல்லது அதிதி என்னும் உலக மாதாவின் புதல்வர்களா ?

XXXX

யாஸ்கர், கடவுளர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்.

1.தியுஸ்தநீய /வானுறையும் கடவுள்கள்

2.அந்தரிக்ஷீய / காற்று மண்டல கடவுள்கள்

3.பிருத்வீ / பூ மண்டல கடவுள்கள்

அஸ்வினி தேவர்கள் பற்றிப் பேசும்போது இதிஹாஸ / வரலாற்று (History) கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

வானுறையும் தெய்வ வரிசையில் அஸ்வினி தேவர்களை வைத்துவிட்டு சில கேள்விகளை எழுப்புகிறார்.

யார் இந்த அஸ்வினி தேவர்கள் ?

1.அவர்கள் பூமியையும் வானத்தையும் குறிப்பதாக சிலர் சொல்லுகின்றனர்.

2.பகலையும் இரவையும் குறிப்பதாக சிலர் சொல்லுகின்றனர்.

3.அவர்கள் புகழ்மிகு இரண்டு அரசர்கள் என்று இதிஹாஸ / வரலாற்று அறிஞர்கள் சொல்லுகின்றனர்.

யாஸ்கருக்கும் முன்னதாக 30 சொற் பிறப்பியல் ஆராய்ச்சி அறிஞர்கள் வாழ்ந்ததால் அவருக்குப் பலருடைய கருத்துக்களும் கிடைத்திருக்கின்றன.

பூமியில் தர்ம ஆட்சி செய்ததால் அவர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப் பட்டார்கள்.

ரிக் வேதத்தில் உள்ள அற்புதங்களில் அதிகமான அற்புதங்கள் அஸ்வினி தேவர்கள் பெயர்களில்தான் உள்ளன .

ரிக்வேதப் புலவர்கள் பலரும் தேவ என்று  குறிப்பிடுவதால்  அஸ்வினி தேவர்களை தெய்வமாகவே அவர்கள்,கருதியுள்ளனர். தேவ லோகத்தின் மருத்துவர்கள் / டாக்டர்கள் என்று  அவர்கள் அறியப்பட்டுள்ளனர் .அவர்கள் சாவா நிலை எய்தியோர் என்றும், தெய்வீக சக்தியுடையோர் என்றும், புராண (பழமையான) புருஷர்கள் என்றும் ரிஷிகள் பாடியுள்ளனர் . பெரும்பாலும் விஸ்வே தேவர்கள் துதிகளில்தான் அவர்கள் பெயர்கள் வருகின்றன. தனியாகவும் அவர்கள் பெயர்களில் கவிதைகள் இருக்கின்றன. இந்திர , வருண , அக்னீ ,ரிபு, மித்ர, மருத், விஷ்ணு  முதலிய  தேவர்களுடன் (கடவுளருடன்) பேசப்பட்டாலும் சில அடைமொழிகள் குறிப்பிடத் தக்கன .’இந்திரன் போன்றவர்’, ‘மருத் போன்றவர்’ என்ற பாராட்டுதலும் காணப்படுகின்றன.

மலட்டுப் பசுவை பால்கறக்கும் மாடுகளாக மாற்றிய செய்தி ரிக் 1-112, 1-180 துதிகளில் வருகிறது.

தேவாரத்திலும் காய்க்காத பனை மரத்தை திருஞான சம்பந்தர் காய்க்கவைத்த செய்தி வருவதால் இதை உண்மையென்றே நம்பவேண்டும்.

வலன் என்னும் அரக்கனின் குகையிலிருந்து பசுக்களை விடுவித்த செய்தியும் 1-112 துதியில் கிடைக்கிறது.

கெளதம ரிஷியின் ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு,  குடிப்பதற்குத் தண்ணீர் கிடைப்பதற்காக கிணறு உண்டாக்கிய செய்தியும் 1-116 துதியில் பேசப்படுகிறது.

பூமியின் ஆழத்தில் இருந்த தண்ணீரை மேலுக்குக் கொண்டுவந்து கெளதமருக்கு உதவிய செய்தி அதே துதியில் காணப்படுகிறது .

தண்ணீரிலிருந்து செல்வம் கொண்டுவந்த சுவையான  செய்தி 1-181ல் பாடப்படுகிறது. தண்ணீர் என்பதை கடல் வாணிபத்தில் இருந்து என்று பொருள் கொள்ள வேண்டும் .

குதிரையின் குளம்பிலிருந்து 100 பானை சுரா பானம் அல்லது இனிப்பான பானம் எடுத்த செய்தி 1-116 மற்றும் 1-117ல் கிடைக்கின்றன.

ரஸா (Rasa) என்ற பெயரில் ஒரு மர்மமான நதி வேதம் முழுதும் குறிப்பிடப்ப்டுகிறதது ; இது எங்கு இருக்கிறது என்று யாராலும் கண்டு பிடிக்கமுடியவில்லை. அஸ்வினி தேவர்களைப்போலவே இதுவும் புதிர் போடுகிறது. இந்த நதியை வெள்ளப்பெருக்கெடுத்து ஓடச் செய்ததாகவும். இனிய நீர்ப்பெருக்கு  உடையதாகச் செய்ததாவும் 1-112ல் படிக்கிறோம். அதே துதியில் குதிரைகள் இல்லாத ரதத்தை ஒட்டி தேர் பந்தயத்தில் வெற்றி பெற்ற செய்தியும் வருகிறது.

XXX

எனது கருத்துக்கள்

புறநானூற்றில் (பாடல் 27) ட்ரோன் Drone ; ரிக் வேதத்தில் Mechanical Car மோட்டார் கார்

‘குதிரையின் குளம்பிலிருந்து சுரா பானம்’ , ‘நீரிலிருந்து செல்வம்’ என்பதெல்லாம் மறைமுகமான மொழி (enigmatic language). சந்திர சூரியர்களை பாம்புகள் விழுங்குகின்றன என்று கிரஹணத்தை சொல்லுவது போல இது ஒருவகை MYSTERIOUS  மொழி. இது சங்க இலக்கிய காலப் பாடல்களிலுமிருக்கின்றன. ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் கிரஹணங்களைக் கணக்கிட்ட செய்தி ரிக் வேதத்தில் அத்ரி மகரிஷி அற்புத துதிகளிலும், மஹாபாரதம் ஜயத்ரதன் மண்டை தூள்தூளான கதையிலும் வந்துவிட்டன. இதே போல அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் என்பது, முதல் முதலில் அவர் கடல் வழியாக தென்கிழக்காசியாவுக்கு பாண்டியர் படைகளைக் கொண்டு சென்று வியட்நாம் என்னும் சம்பா பிரதேசத்தை ஆளச் செய்தார் என்பது இப்போது புரிகிறது. விந்திய மலையை அவர் மட்டம்தட்டி ‘கர்வ பங்கம்’ செய்தார் என்பது அகத்தியர்தான் ராம , லெட்சுமண சீதைக்காக முதல் முதலில் ரோடு (road Route via Vindhya forests) போட்டுக்கொடுத்தார் என்பதும் இப்போது தெரிகிறது. இந்த மர்ம மொழிப் பேச்சு (MYSTERIOUS, ENIGMATIC) ரிக் வேத காலத்திலேயே வந்துவிட்டது. இதை அஸ்வினி தேவர் என்னும் இரட்டையர் அதிசயங்களில் அதிகம் காண்கிறோம்.

‘குதிரை பூட்டாத ரதம்’ என்பது மோட்டார் கார் (Mechanical Motor Car/t) போல அந்தக்காலத்திலேயே ‘மெக்கானிக்கல் வண்டி’ இருந்ததைக் காட்டுகிறது . புறநானூற்றில் (Pilotless Plane) வலவன் ஏவா வானவூர்தி ((பாடல் 27)  என்பது DRONE ட்ரோன் என்பது (OR STEALTH PLANE) நமக்கு இப்போதுதான் தெரிகிறது.

Xxx

Safety Match Box

வேத காலத்திலும் சங்க காலத்திலும் இரண்டு கட்டைகளை வைத்து தீ உண்டாக்கினார்கள். இதற்கு அரணிக்கட்டை  என்று பெயர். அஸ்வினி தேவர்கள் இவை இல்லாமலேயே தீயை உண்டாக்கினர் என்று ஒரு புலவர் ( 10-184-3) பாடுகிறார். தங்க குச்சிகளால் தீயை உண்டாக்கினாராம். இப் போது நாம் தீக்குச்சிகளை வைத்தும் சிக்கிமுக்கிக் கல் உடைய Gas Lighter கேஸ் லைட்டர் மூலமும்  தீயை உண்டாக்குகிறோம். அஸ்வினி தேவர்களும் கோயமுத்தூர்  ஜி.டி நாயுடு G D Naidu, அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison போல நூற்றுக் கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்தனர் போலும்.

அஸ்வினி தேவர்கள் பற்றிய முக்கியமான கதை ‘மது வித்தை’ எனப்படும் ரகசிய வித்தையை சொல்லிக்கொடுத்த ததீசி முனிவருக்கு குதிரைத் தலை பொருத்தியாதாகும் அவர்கள் வேதகாலத்தில் இருந்த மிகப்பெரிய சர்ஜன்கள் / அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் என்பதை  இது காட்டுகிறது இந்த விஷயம் மந்திரம் 1-116ல் உள்ளது.

கதை என்னவென்றால் ,

தத்யங் அதர்வண (Dadhyan Adharvana) என்ற மகரிஷிக்கு இறந்தோரை உயிர் ப்பிக்கும் அபூர்வ ‘மது வித்யை’ தெரியும். “இதை வேறு யாருக்கும் சொன்னால் உம் தலையை இழக்க நேரிடும்”– என்று இந்திரன் எச்சரித்திருந்தான். அஸ்வினி தேவர்கள் வந்து,, வித்தையைச் சொல்லிக்கொடுக்க வேண்டிய போது இந்திரனின் எச்சரிக்கையை  நினைவுபடுத்தினார். “அதற்கு என்ன? நாங்கள், குதிரைத் தலையைப் பொருத்திவிட்டு மந்திர உபதேசத்துக்குப் பின்னர் ஒரிஜினல் Original தலையைப் பொருத்திவிடுகிறோம்” என்றனர். அதன்படியே நடந்தது . அஸ்வ என்றால் குதிரை. இதனாலும் அஸ்வினி தேவருக்கு குதிரை பெயர் வந்திருக்கலாம்.

அஸ்வினி தேவர்களையும் மூலிகைகளையும் தொடர்புபடுத்தும் ரிக் வேத மந்திரங்கள் அவர்களை தேவ லோக டாக்டர்கள் என்பதைக் காட்டும். (காண்க:– ரிக்வேத மந்திரம் 1-34-6; 1-116-16; 1-157-6;8-18-8; 8-86-1;8-9-5; 10-39-5).

-subham–

TAGS-  அஸ்வினி தேவர்கள், மருத்துவர்கள், அற்புதங்கள்,  டாக்டர்கள், ட்ரோன் மோட்டார் கார்

ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும் (Post No.10,831)

WRITTEN BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,831

Date uploaded in London – –   11 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஞான மொழிகள் 31-  Part 1

கத்துக் குட்டி

(படித்ததில் ரசித்தது)

1. கொக்கு வேட்டைக்கு செல்பவன் கொக்கை தேடிச் செல்ல வேண்டியதில்லை.

மீன் உள்ள குளத்திற்குப் போனாலே போதும்………

2. நீர் தீர்த்தமாவதும் சாக்கடையாவதும் சேரும் இடத்தை பொருத்தே அமையும்.

3. ஆற்று நீர் வாதம் போக்கும்

 அருவி நீர் பித்தம் போக்கும்

 பழைய சோற்று நீர் இவ்விரண்டையும் போக்கும்!!!

XXXX

4. Smart answer by a female passenger on a flight…

   A guy asked a beautiful lady sitting next to him…

   ‘Nice perfume…..which one is it?… I want to give it to my wife..!!’

   Lady: ‘Don’t give her….some idiot will find an excuse to talk to her..!!’

XXXX

5. மாணவனின் தந்தை ஆசிரியரிடம் : என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க.

இதோ அந்த பரீட்சை பேப்பர் .

XXXX

ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க.

இங்கே சிறுநீர் கழிக்காதீர்

Don’t substract small water here.

ஆறுமுகம் வீட்டைப் பெருக்கினான்

Six face multiplied the house

பாரத நாடு பழம்பெரும் நாடு

Bharath country fruit getting country

நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும்

Tomorrow Kabaddi game will walk here

XXX

தமிழில் மொழி மாற்றம் செய்க.

Please bear with me

தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது.

Watchman Checked my bag

கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார்.

XXX

எதிர்மறை வாக்கியமாக மாற்றுக.

குட்டையில் நீர் நிரம்பி உள்ளது.

Ans: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது

ஏரிப் பாசனம் நன்று

Ans: இறங்கிப் பாசனம் நன்று…!!!

XXXX

6. ஆசிரியர்: வாழைப் பழம் சொல்லு.

பையன்: வாயைப் பயம்.

ஆசிரியர்: : தப்பு. வாழைப் பழம்.

பையன்: வாயைப் பயம்.

ஆசிரியர்: ஊஹூம். உங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டி வா.

பையன்: சரி, டீச்சர்.

(பையனின் அம்மா வருகிறார்)

ஆசிரியர்: நீங்கதான் இவனோடே அம்மாவா?வாழைப் பழம்னு சொல்லச் சொன்னா வாயைப் பயம்னு சொல்லுறான் உங்க பையன். திருத்தக்கூடாதா?

பையனின்  அம்மா: நல்லாத் தானே சொல்லுறான் வாயைப் பயம்னு.

ஆசிரியர்: இல்லேம்மா. அது தப்பு. வாழைப் பழம். அதுதான் சரி.

பை. அம்மா: அப்படிச் சொல்லி எங்களுக்குப் பயக்கமில்லீங்க.

ஆசிரியர்: சரி. உங்க புருஷனை வரச்சொல்லுங்க.

பை. அம்மா: சரிங்க.

(பையனின் அப்பா வருகிறார்)

ஆசிரியர்: நீங்க தான் இந்தக் குழந்தையோட அப்பாவா?

பை. அப்பா: ஆமாங்க. நான்தான் இந்தக் கொயந்தேயோட அப்பன்.

ஆசிரியர்: என்னங்க? உங்க வீட்டிலே யாருக்குமே ழ வராதா?

பை. அப்பா: எங்க வீட்டுக் கெயவிக்கு வரும்.

ஆசிரியர்: சரி. அவங்களை என்னைப் பாக்க வரச் சொல்லுங்க.

(பையனின் பாட்டி வருகிறார்)

ஆசிரியர்: என்னம்மா, நீங்கதான் இந்தக் குழந்தையோட பாட்டியா? இந்தக் குழந்தைக்கு ழ வே வரமாட்டேங்குதே.

கிழவி: அழுக்குத்தான் ழூப்பிட்டீகளா? ழான் எழ்ணமோ ஏழோன்னு பழந்துட்டேழ்.

ஆசிரியர்: வெத்தலையை துப்பிட்டுப் பேசுங்க.

கிழவி: வெழ்த்தழைய அழ்ப்பவே வெழியே துழ்ப்பிழ்டுத்தான் நான் உழ்ழேயே

வழ்ழ்ந்தேழ்ன்………..

XXX

7. Ambani : ” If I start driving my car at sunrise, I will not be able to cover half of my estate properties even by sunset “

Sardarji : ” Even I had such a useless car but I sold it.. “

XXXX

8. மன்னார்குடி காவல் உதவியாளர் திரு சிவ செந்தில் குமார்

உங்கள் வீட்டு வாசலில் இந்தக் குறிகள் திருடர்களால்,இடப்

படுகிறது………ஜாக்கிரதை!!!

tags-  ஆற்று நீர்,  வாதம் ,  அருவி நீர்,  பித்தம் , போக்கும், ஞானமொழிகள் 31

ஒரு பாடலில் ஏழு பாடல்கள்! (சப்தபங்கி) (Post No.10830)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,830

Date uploaded in London – –     11 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

ஒரு பாடலில் ஏழு பாடல்கள்! (சப்தபங்கி)

ச.நாகராஜன்

ஒரு பாடலில் ஏழு பாடல்கள் வருமாறு ஒரு பாடலை இயற்றுவது எவ்வளவு கடினமான காரியம்!

இதைச் சாதித்துக் காட்டியவர் இராமச்சந்த்ர கவிராயர்!

இந்த வகைப் பாடலுக்கு சப்தபங்கி என்று பெயர்

திமிர மறாத புலாதிகளே தரு தேடரிதாய் மாருஞ்

  செனனமகாமால் வசமேமதமுறு சிறுமையின் மதியாலே

குமரசிகாமணி யேகனிவாயருள் கூடெனவே கூறும்

  குருபர கோலா கலனேவிதியொடு குறுகிய மிடிதீராய்

நமதுவிநாயக தேவச கோதர நாடொறுமே தேறும்

  நவிமகள்சேர்வே டுவனேபுதுமண நறுமலர் புனைமார்பா

அமரர்பிரானருள் குஞ்சரிகோள்புண ராடவனே மீறும்

  அரகரவேலா யுதனேமுதுமறை யறுமுக முருகோனே

திமிர மறாத புலாதிகளே தரு                   தேடரிதாய் மாருஞசெனன மகாமால் வசமே- மதமுறு- சிறுமையின்  

                                              மதியாலே

குமரசிகாமணி யேகனிவாயருள்             கூடெனவே

கூறும் குருபர கோலா கலனே விதியொடு குறுகிய மிடிதீராய்

நமதுவிநாயக தேவச கோதர                நாடொறுமே

தேறும் நவிமகள்சேர்வே டுவனே-புதுமண நறுமலர் புனை மார்பா

அமரர்பிரானருள் குஞ்சரிகோள்புணர்          ஆடவனே

மீறும் அரகரவேலா யுதனேமுதுமறை      யறுமுக முருகோனே

சப்தபங்கியின் புரிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

கட்டளைக் கலித்துறை

  1. திமிர மறாத புலாதிக ளேதரு தேடரிதாய்

குமர சிகாமணி யேகனி வாயருள் கூடெனவே

நமது விநாயக தேவச கோதர நாடொறுமே

அமரர் பிரானருள் குஞ்சரி தோள்புண ராடவனே.

    கொச்சகம்

  • தேடரிதாய் மாறுஞ் செனனமகா மால்வசமே

கூடெனவே கூறுங் குருபரகோ லாகலனே

     நாடொறுமே தேறும் நவிமகள்சேர் வேடுவனே

     ஆடவனே மீறும் மரகரவே லாயுதனே

கலி விருத்தம்

  • மாறுஞ் செனன மகாமால் வசமே,

கூறுங் குருபர கோலா கலனே

தேறும் நவிம்கள் சேர்வே டுவனே,

மீறும் மரகர வேலா யுதனே

சிந்தடி வஞ்சி விருத்தம்

  • மகமுறு சிறுமையின் மதியாலே,

விதியொடு குறுகிய மிடிதீராய்,

புதுமண நறுமலர் புனைமார்பா,

முதுமறை யறுமுக முருகோனே

குறளடி வஞ்சி விருத்தம்

  • சிறுமையின் மதியாலே

குறுகிய மிடிதீராய்,

நறுமலர் புனைமார்பா,

அறுமுக முருகோனே

வெண்பா

  • தேடரிய தாய்மாறுஞ் சென்னமகா மால்வசமே

நாடொறுமே தேறு நவிமகள் சேர் – வேடுவனே

ஆடவனே மீறு மரகரவே லாயுதனே

கூடெனவே கூறுங் குரு

இப்படி ஒரு பாடலே ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டு ஏழு பாடலாய் அமைவதால் இது சப்தபங்கி (சத்தபங்கி) எனப் படுகிறது.

பாடலின் பொருளைப் பார்ப்போம்:

குமர – குமரக் கடவுளே

சிகாமணியே – யாவருக்கும் சிரோ ரத்தினமே

கனிவாய் – பரிவு கொண்டு

அருள் கூடு என கூறும் – திருவருளைப் பெறக் கடவாயாக என்று சொல்லுகின்ற

குருபர – குரு சிரேஷ்டனே

கோலாகலனே- சம்பிரமமுடையவனே

நமது விநாயக தேவ சகோதர – நமது விநாயகருக்குத் தம்பியே

நாள் தோறும் தேறும் – தினந்தோறும் சராசரங்களைத் தேர்ந்தறிந்த

நவ்விமகள் – மான் மகளாகிய வள்ளிநாயகியை

சேர் – புணர்ந்த

வேடுவனே – வேடனே

புதுமணம் – புதிய வாசனையுள்ள

நறுமலர் – நறுவிய புஷ்பமாலைகளை அணிந்த

மார்பா – திருமார்பை உடையவனே

அமரர் பிரான் அருள் – தேவேந்திரன் பெற்ற

குஞ்சரி – தெய்வயானையின்

     தோள் புணர் – தோள்களைத் தழுவிய

     ஆடவனே – மஹா புருஷனே

     மீறும் அர அர – உயர்ந்த அரனுக்கு அரனே

     வேலாயுதனே – வேற்படையை உடையவனே

     முதுமறை – பழைமையாகிய வேதப்ரதிபாத்தியனாகியுள்ள

    அறுமுக – ஆறுமுகனே

    முருகோனே – முருகக் கடவுளே

    திமிரமறாத – அஞ்ஞான இருள் நீங்காத’

    புலாதிகள் – ஐம்புலன் முதலியவைகள்

    தரு – தந்த

    தேடு அரிது ஆய் – தேடிக் கண்டு கொள்ள அருமையாகிய

    மாறும் – மாறி மாறி வருகின்ற

    செனனம் – பிறவிகளில் உண்டாகிய

    மகா மால் வசம் – பெரிய மயக்கத்தின் வசப்பட்டு

    மதம் உறு – மதம் மிகுந்த

    சிறுமையின் மதியாலே – சிற்றறிவால் உளதாகிய

    விதியொடு – ஊழினால்

    குறுகிய – நேர்ந்த

    மிடி – வறுமையை

    தீராய் – நீக்கி அருள்வாயாக!

இதே பொருள் ஏழு பாடலுக்கும் பொருந்தும் அருமையைக் கண்டு மகிழலாம்.

இப்படி ஒரு பாடலில் ஏழு பாடல்கள் ஏழு வித யாப்பு வகைகளில் அமையப் பெறுவது எவ்வளவு கடினம்?!

அதைப் பொருளொடு அமைக்கும் வகையில் உள்ள தமிழின் இனிய தன்மையைத் தான் எப்படிப் புகழ்வது!

***

tags- ஒரு பாடல், ஏழு பாடல்கள், சப்தபங்கி,  இராமச்சந்த்ர கவிராயர்!