ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 3 (Post.10,410)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,410

Date uploaded in London – –   5 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 3

ச.நாகராஜன்

5

அங்கே இனிமேல் போக வேணாம்!

பெரும் மகான்களுடனான தனிப்பட்ட சில விஷயங்கள் அந்த நபருக்கு மட்டுமே பெரிய விஷயம். ஏனையோருக்கு, ‘இதில் என்ன இருக்கிறது, எழுதவோ, சொல்லவோ!’ என்று தோன்றும். அதனால் தான் பல விஷயங்களை எழுத நான் இதுவரை முற்பட்டதே இல்லை.

ஒரு சமயம் ஸ்வாமிஜியிடம் நான் பெருமையாக வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்ளச் செல்வதாகக் குறிப்பிட்டேன். ஒரு நிமிட மௌனம்.

“எங்கே போற?”

திண்டுக்கல் ரோடில் ஒரு குறிப்பிட்ட ஜலதரங்க வித்வான் வீட்டிற்குப் போவதாகச் சொன்னேன்.

“அங்கே இனிமேல் போக வேணாம்!”

அத்தோடு முடிந்தது வயலின் டியூஷன்!

ஏன் என்று அப்போது தெரியாவிட்டாலும் பின்னால் அந்த வீடு அவ்வளவு “சுகமான” வீடு இல்லை என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்று வரை சங்கீதத்தில் ஏழு ஸ்வரங்கள் உண்டு என்பது மட்டுமே எனக்குத் தெரியும். ஆலாபனை செய்பவரைக் கண்டால் அண்ணாந்து இன்று வரை வியப்புடன் பார்த்து வருகிறேன்.

ராகங்கள் பட்டியல், இசை மஹிமை பற்றி எழுதினாலும் கூட உண்மையில் சொல்லப் போனால் என்னப் பொருத்த வரை பழைய பாடலை மாற்றிப் பாட வேண்டியது தான்!

“சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்” என்பது அந்தக் காலப் பாட்டு.

எனது பாட்டு:

“சங்கடமான சங்கீதத்தை விட்டு சமைக்கத் தான் போறேன்”

6  

ACHANKOVIL DHARMA SASTHA TEMPLE 

குற்றாலச் சாரலிலே குளித்தது போல…

அருமையான குற்றாலச் சாரல்!

 ஆயக்குடியில் வந்த வேலை – ஸ்வாமிஜியை தரிசனம் செய்து ஆசி பெற்றது – முடிந்து விட்டது. கிளம்ப வேண்டியது தான். என் மனம் சும்மா இருக்கவில்லை.

“ஸ்வாமிஜி, இவ்வளவு தூரம் வந்துட்டோம். குற்றாலம் போய் ஒரு குளியல் குளிச்சுட்டு ஊருக்குப் போறோம்.”

அவ்வளவு தான், ஸ்வாமிஜி வேறொரு பக்கம் திரும்பி விட்டார்.

அதற்கு அர்த்தம் : ‘உன் பேச்சே எனக்குப் பிடிக்கவில்லை’ என்பது தான்.

என்ன செய்வது?

நைஸாக அட்வகேட் ராமாராவிடம் சொல்லிப் பார்த்தேன். அவர் ஸ்வாமிஜியைக் கேட்டுப் பார்த்தார். பதில் சாதகமாக இல்லை.

கடைசி ஆயுதம் ஒன்று இருந்தது. எனது தம்பி ஸ்வாமிநாதனின் பெயர் தான் அது.

“சாமா தான் போகணுங்கறான்!”

ஸ்வாமிஜி இளகினார்.

“ராமாராவ், கூடவே நீங்களும் போய் பசங்களை பத்திரமாக மதுரையில் சேர்த்து விடுங்கள்”

ஓரே ஆனந்தம். எங்கள் கோஷ்டி கைப்பைகளுடன் குற்றாலம் நோக்கிக் கிளம்பியது.

பிரதான சாலைக்கு வந்தோம். மழை, மழை என்றால் இடி புயலுடன் கண்ணை மறைக்கும் மழை. சாலையே தெரியவில்லை. தொப்பலாக நனைந்தாயிற்று, ஒரு பஸ்ஸும் வரும் வழியாகக் காணோம்.

புலம்பிக் கொண்டே தென்காசி நோக்கி நடந்தோம் – பல மைல்கள்.

இரவு மணி ஒன்பது. தென்காசியில் எங்கு தங்குவது? நல்ல வேளை மழை நின்றிருந்தது.

ஒரு தெருக்கோடியில் சாலையின் நடுவே நின்று ராமாராவ் கத்தினார்: “ஓய், ராமகிருஷ்ணையர்!”

தெருவோர வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்தார்.

:அடடா! என்ன இது? மழையில் இப்படி நனையலாமா?”

“ஒண்ணும் வேணாம், இப்ப, இதோ இந்த பிள்ளையார் கோவிலைத் திறந்து விடும். குழந்தைகள் தூங்கணும்.”

அவருடம் உடனே சின்னப் பிள்ளையார் கோவிலைத் திறந்து விட்டார்.

கோவிலின் முன் பிரகாரத்தில் தொப்பென விழுந்து படுத்தோம். அப்போது தான் ஒரு கூச்சல் கேட்டது:

“நக்ஷத்திரம் ஒழுகறது டோய்!”

அலறி அடித்துக் கொண்டு எழுந்தோம்.

மழை போய், இப்போது நக்ஷத்திரம் ஒழுகறதா? ஏதாவது நக்ஷத்திரம் கீழே விழுந்து கொண்டிருக்கிறதா?

அனைவரும் அலற, ராமாராவ் கூறினார் : “பேசாம படுங்கடா! அது அரைப் பைத்தியம்!”

ஓஹோ ஒரு பைத்தியம் தான் இப்படி உளறுகிறதா!

அந்தக் குரல் அவ்வப்பொழுது இரவில் எழுந்து எங்களைத் தூங்க விடாமல் அடிக்க, காலை முதல் பஸ்ஸுக்காக அவசரம் அவசரமாக சாலைக்குச் சென்றோம். ஒரு பஸ் வந்தது.

“சார்”, என்ற கண்டக்டர் எங்கள் தலைகளை எண்ணினார்.

“கரெக்டா போச்சு, இனிமே இடமில்லை. உங்களுக்குத் தான் இடம் இருக்கு! ரைட் போகலாம்” எனக் கூவினார்.

ஒரு வழியாக மதுரைக்கு வந்து சேர்ந்தோம்.

ஸ்வாமிஜிக்கு “பத்திரமாக” வந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.

அந்த நாள் முதல் அவர் சரி என்று சொன்னால் மட்டுமே எந்த வேலையையும் தொடங்க வேண்டும் என்பது மட்டும் புரிந்தது. எங்கள் சாமர்த்தியத்தை அவரிடம் காட்டக் கூடாது என்பதும் கூடவே புரிந்தது!

இல்லாவிட்டால் நக்ஷத்திரம் அல்லவா ஒழுகும்?!

7

பர்மிஷன் வாங்கிட்டேன்!

ஆஸ்பத்திரியில் கட்டிலில் அமர்ந்திருந்த ஸ்வாமிஜி திடீரென்று, “சந்தானம், சாமாவுக்குப் பூணுல் போடணும்” என்றார், என் தந்தையிடம்!

என் தந்தையார், “சரி போடறேன்” என்றார்.

“உடனே போடணும். மதுரையிலேயே!”

என் தந்தையார் தயங்கினார். மென்று முழுங்கினார்.

“இல்லை, திருப்பதியில் வந்து போடறென் – னு வெங்கடஜலாபதிக்கு வேண்டிண்டிருக்கேன்…”

எனக்கும் என் அண்ணனுக்கும் திருப்பதியில் தான் பூணூல் போடப்பட்டது. எனது தம்பிக்கும் அப்படி ஒரு வேண்டுதல்!

ஸ்வாமிஜி மௌனமாக கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

சில நிமிடங்கள் கழிந்தன.

என் தந்தையாரைப் பார்த்தார் அவர்.

“உம், இங்கேயே போடலாம். பர்மிஷன் வாங்கிட்டேன்”

வேங்கடாஜலபதி பர்மிஷன் கொடுக்க மஹா கணபதி அதை ஆமோதிக்க என் தம்பி ஸ்வாமிநாதனின் பூணூல் மதுரையிலேயே போடப்பட்டது.

ஒரு மூட்டை அரிசி உள்ளிட்ட பொருள்கள் ஸ்வாமிஜியால் அனுப்பப்பட்டது எனக்குத் தெரியும்.

இப்படி இறைவனுடன் நேருக்கு நேர் பேசும் பெரும் மகான் அவர்.

நல்ல மழை. சுபயோக சுபதினம். பூணூல் போடப்பட்டது.

ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்திலும் அவரது அருள் பார்வை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்ததால் ஒரு வித துன்பமும் எங்களுக்குத் தெரியவில்லை.

சொல்லப் போனால் திரௌபதி, “கிருஷ்ணா, எனக்குக் கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டே, இரு. அப்போது தான் உன்னைப் பற்றி நினைப்பு இருந்து கொண்டே இருக்கும்” என்று பிரார்த்தித்தாள் அல்லவா! அந்த நிலையும் உணர்வும் உண்மையாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.

ஒவ்வொரு சிறு பிரச்சினை வந்தாலும் அங்கு இடர் தீர்க்க அவர் இருந்தார்.

அது ஒரு பொற்காலம். பூர்வ ஜென்ம புண்யத்தை அனுபவித்த காலம் அல்லவா அது!

ஸ்வாமிஜி நினைவை நாளும் போற்றுகிறோம். அவரை வணங்கிக் கொண்டே இருக்கிறோம்!

***

TAGS- ஸ்வாமிஜி கிருஷ்ணா-3

PLEASE JOIN US TODAY SUNDAY 5-12-2021

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

PROGRAMME FOR 5TH DECEMBER 2021

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer – 

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   GURU SHRINE IN ALANGUDI- APAD SAHAYESWARAR TEMPLE — 12 MTS

THIIRUPPUGAZ BY MRS JAYANTHI SUNDAR’S GROUP  — 12 MINUETS

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MISS APARNA KRISHNAN

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–20 MINUTES

SONGS.

TALK ON ALVAR CHARITHRAM BY THIRUKKUDAL MUKUNTHA RAJAN – 15 MTS.

XXXX

APPR. 65 MINUTES

TAGS- PUBLICITY5122021

Environmental Concerns in Atharvana Veda (Post No.10,409)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,409

Date uploaded in London – –   4 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The Hymn to Earth (AV XII-1) with 63 stanzas/Mantras is the most famous ‘Verse on Earth and it beauty’. Most of the nature lovers knew about it. But there are more smaller poems on cleanliness and environment in Atharvana Veda.

Here are a few which needs the attention of environmentalists: –

HYMN CXX; Book Six; AV

A prayer for pardon of sins and felicity hereafter

1.If we have injured Air, or Earth, or Heaven, if we have wronged
   our Mother or our Father,

  May Agni Gārhapatya here absolve us, and bear us up into the
   world of virtue.


2.Earth is our Mother, Aditi our birth-place: our brother Air save
   us from imprecation!
  Dyaus, Father, save us, from the world of Fathers! My world
   not lost, may I approach my kindred.


3.There where our virtuous friends, who left behind them their
   bodily infirmities, are happy,
  Free from distortion of the limbs and lameness, may we behold,
   in heaven, our sons and parents.

XXX

PARDON ME EARTH, PARDON ME WIND

This was sung by our forefathers thousands of years ago. In other parts of the world people were not that civilized or matured. Their thoughts have not been elevated to this level. If anyone looks at this along with the Bhumi Sukta/ Hymn to Earth, one will be amazed to see the high level of thinking. Now the newspapers high light these concerns. World leaders meet to discuss the environmental problems and each country accuses the other countries saying ‘You are the Culprits’.  Expecting this our seers sung this before other cultures got civilized.

One may think that if they have sung about it, the problem should have existed even then. There are two answers

Yes the problem did exist, but in very minor scale. How do we know that?  Hindus say a mantra even before they place their feet on the ground from the bed in the morning. Hindus worship the land even before they start the cultivation. This is repeated every day or every year. That means they knew they do some damage to Mother Earth for their own selfish interests. But one can’t avoid it they know.

Even today whenever a new proposal for constructing a dam is announced by the respective government, whenever an oil drilling is announced by the government, immediately an environmental group opposes it in the name of saving environment. Then the government reasons out saying there are more benefits to humanity than the damage it causes or it may cause. So, this is an eternal conflict and never ending argument.

Even when Arjuna and Krishna proposed to burn the forest Khandava Vana, there was opposition from Naga tribals. But both of them went ahead and there was a big fight between the Pandavas and the tribal Nagas. But that did something good. Mayan Danavan led one section to South America to establish Mayan Civilization.

Now let us see the merits in the above verse.

Mantra 1

If we have done anything against heavenly Mother and Father (Earth and Sky/atmosphere), if we have done anything wrong to earthly Mother and Father (parents) we seek your pardon.

Garhapatya Fire is the eternal fire in a family. That fire is never extinguished for generations. One father passes it to his son when he gets married. That lighted pot will be there till his death. In the meantime, his sons would have already got them from him, when they got married. They did daily fire ritual at family level.

An earthen pot with paddy husk and cow dung will have this fire burning for ever in a corner of the house. There were three types of fire in every Brahmins house. Even 2000 year old Tamil Sangam verses praised Brahmins as 1, 2 3, 4 men (1.Always running after One Brahman, 2. One who has Two births/Dvija; one before sacred thread, one after wearing sacred thread; 3. One who keeps Three types of fire at home- Gaarhapatya, Aahvaneeya and Daakshinaagniya; 4 one who practises Four Vedas; it goes on like this)

Mantra 2

Earth and sky are described as close relatives. And with their support, I would survive. I would have all good things in life.

Mantra 3

Praying for healthy life without damage to any limbs or organs.

Hindu scriptures say that people residing in Swarga/heaven are always happy. That is wished here on earth and up above.

Hindu belief is the reason for this hymn. They believed that if you do any harm to anything that will affect you. That is why they did worship animate and inanimate things

xxx

PERSONAL CLEANLINESS AND COUNTRY’S CLEANLINESS

19. For ceremonial purification. AV BOOK SIX; HYMN 19 (SUKTA192)

1. Let the god-folk purify me; let men (mánu) purify me with prayer (dhī́); let all beings purify me; let the purifying one purify me.


2. Let the purifying one purify me, in order to activity, dexterity, life, likewise unharmedness.


3. With both, O divine impeller (savitár), with purifier and with impulse, do thou purify us in order to seeing.

This verse is found in all the texts that have vs. i. RV. (ix. 67. 25) VS. (xix. 43)

Purity exists in two levels- physical and mental. We know that one contributes to another. Since Hindus originated in India, their life depends fully on water. Vedic rituals and the hundreds of references to rivers show this. The took a bath before sun rise and started their prayers very early in the morning. All mythological stories also confirm this. This personal mental and physical purity should have led them to national cleanliness. Though it is not in this verse it is understood.

In Tamil there is a proverb: ‘One tree doesn’t make a grove’ equivalent to ‘A single swallow cannot make a summer’. So clean individuals make a cleaner country/ cleaner society.

–subham—

Tags — Purity, environment, concern, cleanliness, in Vedas.

அழுக்காறு என ஒரு  பாவி – அதர்வண வேதமும் வள்ளுவனும் (Post 10,408)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,408

Date uploaded in London – –   4 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பொறாமை பற்றி ஒரு அதிசய விஷயம் தொல்காப்பியர் ‘நிம்பிரி’ என்னும் சொல்லை பயன்படுத்துகிறார். இது ஸம்ஸ்க்ருதத்திலும் இல்லை; தமிழிலும் வேறு எங்கும் இல்லை!

வள்ளுவன் ஒருவன்தான் பொறாமை பற்றி பத்துக் குறள்கள் பாடி முதலிடம் பிடித்தான் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கும் முன்னதாக, அதர்வண வேதப் புலவன் பாடிவிட்டான்

அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் மேலும் இரண்டு சுவையான விஷயங்களைச் சொன்ன பிறகு அதர்வண  வேதத்துக்குள் நுழைவோம்.

வள்ளுவன் அதி மேதாவி; சம்ஸ்க்ருத மொழியைக் கரைத்துக்குடித்தவன். அதி தீவிர ஹிந்து. ஆகையால் இங்கே ‘பாவி’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் (செய்யவள்/லக்ஷ்மி அக்காள்) மூதேவியையும் குறிப்பிடுகிறான்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168

பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.

இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.

 பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

‘’அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும் – குறள் எண் 167

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.

இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

XXXX

அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191

தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்

1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று  எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்

2.பொறாமை மனம் படைத்தவனின் மது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .

3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்

மூன்றாவது மந்திரத்தில் உள்ள உவமை பொறாமைக்குப் பொருத்தமான உவமை. சம்ஸ்க்ருதத்தில் பொறாமையை இருதயக் கனல் (HEART BURN) என்று வருணித்தார் புலவர். தமிழில் இருதயம் என்ற உறுப்புக்கு சொல்லே கிடையாது; என் நண்பன் HEART OPERATION  ஹார்ட் ஆபரேஷன் செய்து கொண்டான் என்பதை தமிழில் சொல்லவே முடியாது; ஆகையால் வயிற்று எரிச்சல் STOMACH BURN என்போம். அதற்கேற்ற உவமை கொல்லன் துருத்தி (த்ருதி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தது ) அதிலிருந்து எப்பாடி சூடான காற்று வெளியேறுமோ அப்படி உன் பொறாமைத் தீயை வெளியேற்று(வேன் ) என்கிறது மந்திரம்.

அதர்வண வேதம் தொடாத SUBJECT சப்ஜெக்ட்டே  இல்லை.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்து மத அறிஞர்கள்  மகாநாடு கூட்டி மந்திரங்களை தலைப்பு/ விஷயம்/ சப்ஜெக்ட்/ டாபிக் வாரியாக பகுத்து ஆராய்ந்தால் மிக நல்ல விஷயங்கள் கிடைக்கும்.

TWO STORIES ON JEALOUSY

வள்ளுவன் கதை: அழுக்காறு என ஒரு பாவி (Post No …

https://tamilandvedas.com › வள்…

15 Feb 2018 — அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்துவிடும் – குறள் 168.

எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும் – Tamil …

https://tamilandvedas.com › எனக்…

5 Sept 2015 — ஒரு வேண்டுகோள்: எனது கட்டுரைகளை உடனே “ரீபிளாக்: – செய்யாதீர்கள்.

–SUBHAM—

TAGS-  அதர்வண வேதம் , நிம்பிரி, பொறாமை, அழுக்காறு, அவ்வியம் , பாவி, மூ தேவி

ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 2 (Post.10,407)

picture of  my father V Santanam and Swamiji Krishna (His assistant Subbamani standing next to him;, his disciple with beard Saitji  also in the picture.)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,407

Date uploaded in London – –   4 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 2

ச.நாகராஜன்

3

எந்த சைக்கிளிலே போறே?

பெரும் மகான்களால் விதியை மாற்ற முடியுமா? நிச்சயம் முடியும், ஆனால் பெரும்பாலும் செய்வதில்லை. அப்படி மகான்கள் மாற்ற முயன்றிருந்தால்…….

பரமஹம்ஸர் தொண்டைப் புற்று நோயால் அவஸ்தைப் பட்டிருக்க வேண்டாம். ரமணருக்கு கையில் கட்டி வந்து அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டாம். விவேகானந்தர் இன்னும் கொஞ்சம் கூட காலம் இருந்திருக்கலாம். நான் நாற்பது வயதைப் பார்க்க மாட்டேன் என்று சொல்லி இருக்க வேண்டாம்.

இப்படி பல சம்பவங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

ஸ்வாமிஜி கிருஷ்ணாவும் நிச்சயம் இந்த பெரும் மகான்களின் வரிசையில் சேர்ந்தவர் தான். ஏனெனில் தனக்கு வந்த வியாதியைப் போக்கிக் கொள்ளாமல் மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உடல் நோவைத் தாங்கிக் கொண்டாரே!

இருந்தாலும் கூட பக்தர்களுக்கு வரும் இடர்களை அவர் நன்கு அறிவார். பேரிடர் என்றால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று செய்து விடுவார்.

எங்கள் வீட்டில் ஸ்வாமிஜியின் ஒரு வருகை சுபமாக முடிந்து அவர் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த சமயம்.

அந்தக் காலத்தில் எல்லாம் சைக்கிள் மயம் தான்! ஸ்கூட்டர் கூட அரிது தான்!

எனது வீட்டில் கூடத்திற்கு அடுத்தாற் போல ஒரு குறுகலான ரேழி. அதைத் தாண்டி வாசலின் முன்புறம். பழைய கால திண்ணை டைப். ஆனால் அதன் ஓரமாக மாடிக்குச் செல்லும் படிகள் இருக்கும்.

அந்த ரேழியில் இரு சைக்கிள்கள். ஒன்று மலேயா ராலே சைக்கிள். அந்தக் காலத்தில் மலேயா ராலே சைக்கிள் கிடைப்பது மிகவும் அபூர்வம். எனது தந்தையாரின் பியூன் பெயர் பஞ்சநதம். அவருக்கு ஒரு அண்ணன். அவர் சைக்கிள் கடை ஓனர். அவர் பார்த்து ஒரு மலேயா ராலே சைக்கிளைப் பிடித்து வாங்கித் தந்தார்.

அடுத்து நான் பாலிடெக்னிக்கில் சேர்ந்ததால் இன்னொரு சைக்கிள் அவசியம் தேவையாக இருந்தது. ஆகவே புத்தம் புதிதாக ஒரு சைக்கிள் வாங்கப்பட்டது.

இந்த இரண்டு சைக்கிள்களும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக ரேழியில் நிறுத்தப்பட்டிருக்கும். ஏற்கனவே மூன்றடி அகலம் தான் ரேழி. அதில் சைக்கிள் வேறு. ஒரு ஆள் மட்டும் போகலாம்.

அதன் வழியே சென்ற ஸ்வாமிஜி திடீரென்று சைக்கிளின் அருகே நின்றார்.

என்னிடம் “எந்த சைக்கிளிலே போறே?” என்று கேட்டார்.

நான் புது சைக்கிளில் பயணம் தொடங்கி இருந்தாலும் கூட, பழைய மலேயா ராலே சைக்கிளை- அதிலேயே சென்று வந்ததால் –  சுட்டிக் காண்பித்தேன்.

அந்த சைக்கிளின் ஹாண்டில் பாரை ஒரு நிமிடம் தொட்டு விட்டு அவர் சென்றார்.

இது ஒரு பெரிய விஷயமாக அப்போது யாருக்கும் தெரியவில்லை.

மறுநாள் காலை புதிய சைக்கிளில் ஏறிச் சென்றேன். மாலை சைக்கிளைக் காணோம்! எவனோ பூட்டி இருந்த சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து திருடிக் கொண்டு போய் விட்டான். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் கிடைக்கவில்லை.

அப்போது தான் ஸ்வாமிஜி, “எந்த சைக்கிளிலே போறே?” என்று கேட்டதன் ஆழ்ந்த அர்த்தம் புரிந்தது.

அவர் ஹாண்டில் பாரைத் தொட்டு ஒரு நிமிடம் நின்றாரே, அந்த மலேயா ராலே சைக்கிள் வெகு காலம் வரை நன்றாக உழைத்தது.

இதிலிருந்து ஆழ்ந்த பாடம் ஒன்றை நான் கற்றுக் கொண்டேன். வருவதை யாராலும் தடுக்க முடியாது.

மகான்களின் கருணை மழை நம் மீது பொழிந்து கொண்டே இருக்கும் போது அவர் நம்முடன் இருக்கிறார் என்ற உணர்வே நமக்கு தெம்பையும் தைரியத்தையும் கொடுக்கும்.

புதிய சைக்கிள் திருடு போனது அவர் ‘எந்த சைக்கிளிலே போறே’ என்று கேட்ட ஒரு கேள்வியால் அல்பமாகி விட்டது. அவருக்குத் தான் தெரிந்திருக்கிறதே, சைக்கிள் போகப் போகிறதென்று.

மலேயா ராலேக்கு நல்ல அதிர்ஷ்டம் போலும்!

மகான்களின் ஒவ்வொரு சிறிய செய்கையிலும் பெரிய அர்த்தம் இருக்கும்!

4

இதோ, கடல் இங்க வந்துடும்!

ஸ்வாமிஜியின் வீட்டில் கூடத்தில் சாவகாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அற்புதமான தினம்.

என் தந்தையார் அவர் முன் அமர்ந்திருக்க, காலம் ரொம்ப மோசமாக இருப்பதைப் பற்றி பேச்சு வந்தது.

திடிரேன்று ஸ்வாமிஜி எனது தந்தையாரிடம், “இன்னும் மோசமாகப் போகப் போகிறது?” என்றார்.

எங்களில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

எனது தந்தையார் “மோசம்’னா? எப்படி மோசம்?” என்றார்,

உடனே ஸ்வாமிஜி தனது கையை வலது பக்கம் காட்டி, “இதோ கடல் இங்க வந்துடும்” என்றார்.

இதன் அர்த்தம் புரிய எங்களுக்கு ஒரு நிமிடம் ஆனது. அரண்டுபோய் விட்டோம்!

கடலா! இங்கேயா? ஐயோ!

ஸ்வாமிஜி உடனே ஆறுதலாக, “பயப்பட வேண்டாம். நீங்கள் எல்லோரும் பயப்பட வேண்டாம்” என்றார்.

ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

வீடு திரும்பியவுடன் இது பற்றித் தான் பேச்சு.

கடல் எப்படி இங்க வரும்? புரியவில்லை.

வந்தது பாருங்கள், ஒரு பெரும் புயல். ராமேஸ்வரம் அல்லாடிப் போனது. தனுஷ்கோடி மூழ்கியது.

விவரம் அறிந்தவுடன் ஒரு காரில் எனது தந்தையார் ராமேஸ்வரம் நோக்கிச் செல்லலானார். காரில் நானும் ஒட்டிக் கொண்டேன். மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பாதையில் எங்கள் கார் செல்ல ஆரம்பிக்க, ஏராளமான அரசாங்க ஜீப்புகள் முன்னே சென்று கொண்டிருந்தன. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சர் ராமையா  அதில் ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார், நிலைமையை நேரில் ஆராய!

எல்லாம் ஜீப், நாங்கள் மட்டும் காரில்.

மானாமதுரைக்கு முன்னால் சாலையே தெரியவில்லை. கடல் வெள்ளம் இரு புறமும் சூழ, சாலை அமுங்கிப் போனது. வளைவான சாலை. டிரைவருக்கு தெரிவதெல்லாம் கடல் தான். நேராகப் போனால் வயலில் மூழ்கி அனைவரும் இறக்க வேண்டியது தான்.

ஜீப்புகள் நிறுத்தப்பட்டன. அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

டிரைவரைத் தவிர அனைவரும் இறங்கி காலால் தடவியவாறே சாலையின் இரு புற ஒரங்களிலும் ஒவ்வொரு 30 அடி தூரத்திலும் நின்று சாலையின் நடுவில் கார் மற்றும் ஜீப் செல்லுமாறு செய்தனர்.

இப்படியாக ஒரு வழியாக மானாமதுரையை அடைந்தோம். அதற்கு மேல் போகக் கூடாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. சிலர் மட்டும் படகில் ராமேஸ்வரம் செல்ல அரசு முடிவெடுத்தது.

நாங்கள் பார்த்த சேதத்தையெல்லாம் கண்டு மலைத்து பயந்து போய் வீடு திரும்பினோம்.

தினமணியின் ராமநாதபுர நிருபரின் பெயர் ஆதிநாராயணன். அருமையான மனிதர். காஞ்சி மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர். ஒல்லியானவர். உயரமானவர். மிருதுவாகப் பேசக் கூடியவர்.

அவர் ஒருவர் தான், தன் உயிரையும் பொருட்படுத்தாது ஒரு படகில் ராமேஸ்வரம் சென்று நடந்ததை எல்லாம் நேரடியாக அறிந்து திரும்பி ராமநாதபுரம் வந்து போன் மூலமாக கோரமான நிலைமையைப் பற்றிச் சொன்னார். வெளி உலகிற்கு முதல் தகவல் அவரிடமிருந்தே வந்தது. அதை தினமணி பிரசுரித்தது.

ராமேஸ்வரத்தில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

இரவு ஓடிக் கொண்டிருந்த ரோட்டரி பேப்பர் மெஷினை நிறுத்தி

எனது தந்தையார் நேரில் பார்த்ததையும் ராமநாதபுரம் ஆதிநாராயணன் கூறியதையும் எழுதித் தர அது அச்சாகியது. தினமணி மூலம் மக்களுக்கு  மறு நாள் காலை தனுஷ்கோடி நிலவரம் தெரிய வந்தது.

திருப்பித் திருப்பி எங்கள் வீட்டிலும் ஸ்வாமிஜியின் பக்தர்களும் கூறிய ஒரே வரி : “இதோ, கடல் இங்க வந்துடும்!”

ஸ்வாமிஜிக்கு நடக்கப்போவது அனைத்தும் துல்லியமாகத் தெரியும். ஆனால் மஹாசக்தியின் செயல்களில் மகான்கள் அனாவசியமாகத் தலையிடவே மாட்டார்கள்!

முக்காலமும் உணர்ந்த பெரிய மகான் அவர் என்பதை உணர்த்திய பல சம்பவங்களுள் இதுவும் ஒன்று.

அடுத்து இன்னும் சில சம்பவங்களைப் பார்ப்போம்!

***

tags – ஸ்வாமிஜி கிருஷ்ணா-2

Oh Ye Intelligence! Come to Me: Vedic Hymn (Post No.10,406)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,406

Date uploaded in London – –   3 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There are very interesting verses in the fourth Veda, that is, Atharva Veda. There is one on Wisdom or intelligence.

AV BOOK 6, HYMN CVIII, SUKTA 281 

A prayer for wisdom

1.Intelligence, come first to us with store of horses and of kine!
Thou with the rays of Sūrya art our worshipful and holy one.

2.The first, devout Intelligence, lauded by sages, sped by prayer,
Drunk by Brahmachāris, for the favour of the Gods I call.

3.That excellent Intelligence which Ribhus know, and Asuras,
Intelligence which sages know, we cause to enter into me.

4.Do thou, O Agni, make me wise this day with that Intelligence.
Which the creative Rishis, which the men endowed with wisdom
knew.

5.Intelligence at evening, at morning, Intelligence at noon of day,
With the Sun’s beams, and by our speech we plant in us
Intelligence.

It is similar to Gayatri mantra; prayer for obtaining wisdom.

xxxx

Here are some interesting points

Asuras in mantra 3 are interpreted as divine beings. This epithet Asura is used for Varuna, Agni and other gods with positive connotation elsewhere. But in the very next sutra 282 , Asuras are interpreted as fiends. We know that the Zend Avesta used Asura for good beings only. So we have to take asura as an adjective meaning strong or powerful; no ethnicity is attached  to it.

Another interesting word is ‘Bhutakritah’ for Rishis. They are described as creative. It is found in AV 3-28-1 and 4-35-2. Foreign tranlators; interpretation

The footnotes say

Rishis are regarded as creators of beings. They are also called ‘world creators’. It is repeated in suktam 306 also. Nowhere the interpreters or translators explained the meaning. Are the seers talking about any miraculous powers ? We don’t know. Even in the Ashtama Siddhis / Eight supernatural powers ,this is not included. We must do more research on the word.

We come across mythological reference of Viswamitra creating a new world or new heaven, probably meaning Trisangu Swarga. Even that Southern Star identified as Trisangu is visible only from Southern Hemisphere! Agastya Star and Trisangu / Southern Cross are identified with stars in the southern sky!

The above Atharva Veda mantra is similar to Samithadhana mantra of  Brahmacharis (Bachelors morning worship)

–subham—

tags- wisdom, intelligence, mantra 

ராதே உனக்கு கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!(Post No.10,405)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,405

Date uploaded in London – –   3 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோபத்துக்கு எதிராக வேதம் சொல்லும் கருத்து, பாரதி மற்றும் பாபநாசம் சிவன் பாடல்கள் வரை எப்படியெல்லாம் பரவியது என்பதைக் காண்போம்.

“ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்ற பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் எம்.கே தியாகராஜ பாகவதர் (MKT) மூலமாக அறிமுகமாகியது. பின்னர் பலரும் அதை மாற்றி, மாற்றி, பல பிற்காலத் திரைப் படங்களில் பயன்படுத்தினர். காலத்தால் அழியாத இந்தக் கவிதை, ‘கோபம் கூடாது’ என்பதை மனதில் நன்கு படிய வைக்கிறது.

வள்ளுவனோ சினம்/வெகுளாமை  என்ற தலைப்பில் பத்து குறள்களைத் தந்தான். ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்று சினத்தை சம்ஸ்க்ருத மொழியில் இருந்து (குறள் 305- ஆஸ்ரயாஸஹ ) மொழிபெயர்த்தும் தருகிறார். ஒருவனுக்கு கோபம் இல்லாவிடில் அற்புதங்களைச் செய்யலாம் என்கிறான் வள்ளுவன் ; ‘உள்ளியதெல்லாம் உடனெய்தும்’ (குறள் 309)  என்பான். இதை இந்து சாது, சன்யாசிகளின் வாழ்வில் நாம் காண்கிறோம்.

பாரதியும் ‘கோபத்தைக் கொன்றுவிடு’ என்று பாடுகிறான். ஆனால் ‘ரெளத்திரம் பழகு’, என்றும் ‘சீறுவோர்ச் சீறு’ என்றும் ஆத்திச் சூடியில் எச்சரிக்கிறான். யாரேனும் தரும விரோதக் செயல்களைச் செய்தால் கோபம் கொள்ளுவதில் தவறில்லை என்பான்.

“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”

என்பது பாரதியின் அருள்வாக்கு

……

“சினங்கொள்வார் தம்மைத்தாமே தீயார் சுட்டுச்

 செத்திடுவாரொப்பார் ; சினங்கொள்வார் தாம்

மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய

வாள்கொண்டு கிழித்திடுவார் “

சினம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற வள்ளுவன் கருத்தை பாரதி சொன்னதோடு, கோபம் என்பது வலியப் போய் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்றும் செப்புகிறான்.

அதே பாடலில் பாரதி,

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;

               கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்

               ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;

               அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;

               தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;

               கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

               கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்

               கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே

. என்பான்.

கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இந்த வெகுளாமை என்னும் lesson பாடம் அவைகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதர்வண வேதத்தில் இருந்து வந்தது என்பது பலருக்கும் தெரியாது ; வேதத்தில் இல்லாத விஷயம் வெளியில் இல்லை!

XXXX

அதர்வண வேதப் பாடல்

காண்டம் 6; துதி 42 (சூக்தம் 215)

1.வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல உன்னுடைய இதயத்திலிருந்து கோபத்தை விரட்டுகிறேன்; நாம் இருவரும் ஒருமித்த மனதுடன் நண்பர்களாக உலா வருவோம்.

2.நாம் நண்பர்களாக நடந்து செல்லுவோம் ; நான் உனது கோபத்தை நீக்குகிறேன் ; நான்  உன்னு டைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறேன்

3. நான் உனது கோபத்தை என் கால்களுக்கு அடியில் போட்டு நசுக்குகிறேன் நீ அடங்கி நட ; இனியும் எதிர்த்துப் பேசாதே

இதற்குப் பழைய விளக்கம்:

இரண்டு நண்பர்கள் இடையே இருந்த கோப தாபத்தை நீக்கும் பாடல் என்பதாகும்; இதைப் படித்துவிட்டு பாபநாசம் சிவனின் ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலைப் படித்தால், பொருள் இன்னும் நன்றாக விளங்கும்.

xxx

எனது வியாக்கியானம்

இதில் ‘உன்னுடைய’ என்பது எதிரில் உள்ள நண்பனிடம்  சொல்லுவது அன்று ; நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் AUTO SUGGESTION ஆட்டோ சஜ்ஜஷன் கட்டளை இது.

நீ ஒரு முக்கியமான ஆளை சந்திக்கப் போகிறாய். அவன் உன்னைக் கோபப்படுத்தி மடக்குவதற்காக உன்னை ஏசுவான்; ஏமாந்துவிடாதே ; ஜாக்கிரதை; கோபப்பட்டு ஏதேனும் கத்திவிடாதே ; அத்தனையையும் ரிக்கார்ட் செய்து உனக்கு எதிராகப் பிரசாரம் செய்வான்- என்பது ஒரு விளக்கம்

இதோ பார்; நீ ஆன்மீக தாகம் கொண்டுள்ளாய்; விசுவாமித்திரன் கோபத்திலும், காமத்திலும், அஹங் காரத்திலும் தபோ பலத்தை வீணாக்கி, ஒவ்வொரு முறையும், வசிட்டரிடம் தோற்றான். ஆகையால் ஏமாறாமல் கோபத்தை ஒழித்துவிட்டால் நீ முன்னேறுவாய்.. இதுதான் சரியான பொருள்.

இப்போது பாரதி பாடலைப் படியுங்கள்; அதர்வண வேதம் மனதுக்கு இடும் ஆட்டோசஜ்ஜெ ஷன் கட்டளைதான் அந்த துதி

இதையே வள்ளுவனும் சொல்கிறான் .

.தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும்  சினம்’ – குறள் 305

சினம் பற்றிய பத்து குறள்களையும் துறவறவியலில் வள்ளுவன் செப்பியது குறிப்பிடத் தக்கது. அதாவது வெகுளாமை வந்த பின்னரே வசிட்டர் வாயால் விசுவாமித்திரனுக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது. முதல் மோதலே வசிட்டனின் காமதேனுவைப் பறித்தவுடன் அதை வசிட்டன் தடுக்க, கோபக்கனல் பொங்க படைகளை ஏவினான் விசுவாமித்திரன் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்

கி.மு. 3150 வாக்கில், அதாவது இற்றைக்கு 5150 ஆண்டுகளுக்கு முன்னர் வேதத்தை நான்காகப் பிரித்து 4 சீடர்களிடம் கொடுத்து இதை எழுதக் கூடாது வாய் மொழியாகப் பரப்புங்கள் என்றார் வியாசர்.

அந்தக் கட்டளையை சிரமேற்கொண்டு இன்றுவரை நமக்கு அதர்வண வேத மந்திரத்தை அளித்த பார்ப்பானுக்கு பல கோடி நமஸ்காரங்கள் உரித்தாகுக

பார்ப்பான் வாழ்க ; வேதம் வாழ்க ; சம்ஸ்க்ருத மறையை தமிழ் மறையாக நமக்கு அளித்த வள்ளுவன் வாழ்க

வெகுளாமை என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள பத்துக் குறட்களையும் பத்து  முறை படியுங்கள்

xxxxx

பாபநாசம் சிவன் பாடல்

ராதே உனக்கு……………………………….

FROM WWW.LAKSHMANSRUTHI.COM (THANKS TO LAKSHMAN SRUTHI)

படம். சிந்தாமணி

வருடம். 1937

பாடல். பாபநாசம் சிவன்

பல்லவி.

ராதே உனக்கு கோபம் ஆகாதடி………..

ரா……….தே உனக்கு கோபம் ஆகாதடி………..

ரா…………தே உனக்கு கோபம் ஆகாதடி……….

மாதரசே, பிழையே……….து செய்தேன் சுகுண

ராதே உனக்கு கோபம் ஆகாதடி………

மா……….தரசே………, பிழையே……..து செய்தேன் சுகுண…….

ராதே உனக்கு கோ……….பம் ஆகாதடி…………

மா………..தரசே………..பிழையே…………..து செய்தேன் சுகுண

ரா………தே உனக்கு கோபம் ஆ………..காதடி…………

எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ………….

4

எனைக் கணம் பிரி…………ய மன…………..ம் வந்ததோ……….

நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ

ஓடா………தே ராதே உனக்கு கோபம் ஆகாதடி…………

நீ…………எங்கு………..சென்றா……….லும் நான் உன்னை……..விடுவேனோ

ஓ….டாதே ராதே உனக்கு கோபம், ஆ…………..கா………….த……..டி……….

ரா………தே உனக்கு கோபம், ஆகா………..தடி…………..ஈ……………….ஈ…………..

8

கண்ணை இழந்தவன் நீயோ நானோ……………..

கண்ணை இழந்………..தவன் நீயோ………..நா………..னோ………..

கண்ணை இழந்தவன் நீ………யோ நா…………னோ……………

கண்………ணை இழந்தவன் நீயோ………….நானோ………….

கண்ணா…………..நீ வேறு நான் வேறோ…………எவன் சொன்ன…………வன்

கண்ணை யிழ………ந்தவன் நீ…………யோ நா…………னோ…………..

கண்ணை யிழ……….ந்தவன் நீயோ நானோ…………………

விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே………….

4

விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணணே…………….

விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோதி பொருளே இன்று………….

கண்ணை இழந்…………தவன் நீயோ நானோ……………

விருப்பு வெறுப்பில் பரஞ்ஜோ…………..தி பொருளே இன்று

கண்………..ணை இழ………..ந்தவன், நீயோ நானோ………ஓ……….ஓ……….

—SUBHAM—

tags -கோபம், பாரதி, பாபநாசம் சிவன், அதர்வண வேதம், சினம், ராதே உனக்கு

ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 1 (Post No.10,404)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,404

Date uploaded in London – –   3 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமிஜி கிருஷ்ணா கார்த்திகை மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி அன்று மஹாகணபதியுடன் இரண்டறக் கலந்தார். அவரது நினைவு தினத்தை ஒட்டி இந்தக் கட்டுரை மூலம் ஒரு சிறு அஞ்சலி!

ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 1

ச.நாகராஜன்

1

மகானுடனான அறிமுகம்!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் பிற்பகுதி, ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் ஆரம்ப காலம்! எங்களது அதிர்ஷ்டம் ஆரம்பமானது!

ஸ்வாமிஜி கிருஷ்ணா பெரும் மகான். அவருடைய ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணிய பயனே!

மதுரையில் பெரும் வக்கீலாகத் திகழ்ந்த ராமாராவ் ஸ்வாமிஜியின் நெடுநாளைய பக்தர்.

ஸ்வாமிஜி தினமும் காலையில் கணபதி ஹோமம் செய்வது வழக்கம். அவரது இளம் பருவத்திலிருந்தே இது ஆரம்பமானது. மஹா கணபதியின் பரிபூரண அனுக்ரஹம் பெற்றதால் அவரை அனைவரும் மஹா கணபதியாகவே பாவித்தோம்.

எனது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் தினமணி நாளிதழில் ஆன்மீகச் செய்திகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து பத்திரிகைத் துறையில் ஒரு புதிய வழியைக் காண்பித்தார்.

ஸ்வாமிஜியின் கணபதி ஹோமம் பற்றிய செய்திகளும் அச்சன்கோவில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் தினமணியில் தவறாமல் இடம் பெறவே அட்வகேட் ராமாராவ் அவரது இல்லத்தில் நடக்கும் கணபதி ஹோமத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஸ்வாமிஜியின் அருளாசி கிடைக்க ஆரம்பித்தது.ஏராளமான அற்புதங்கள் நிகழலாயின. சில சொல்லக் கூடியவை; சில தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க விஷயங்கள்!

ஸ்வாமிஜி வசித்து வந்த ஊர் தென்காசியை அடுத்துள்ள ஆயக்குடி.

லக்ஷக்கணக்கான பக்தர்கள் அச்சன்கோவில் அரசே, சரணம் ஐயப்பா என்று கோஷம் போடுகிறார்களே இன்று, அந்த அச்சன் கோவிலை ஸ்தாபித்தவரே அவர் தான்.

பரசுராமர் ஸ்தாபித்து அச்சன்கோவில் மலைப் பகுதியில் ஆழப் புதைந்து கிடந்த ஐயப்பனை எடுத்து அதை ஸ்தாபித்து கோவிலை அமைத்து புஷ்பாஞ்சலி வழிபாட்டையும் அவரே தொடங்கி வைத்தார்.

ஐயப்பன் அவரைக் கனவில் வந்து தன்னை பிரதிஷ்டை செய்யுமாறு அவருக்கு அருள் பாலிக்க அவரும் பலருடன் தான் கனவில் கண்ட இடத்திற்குச் சென்று அங்கு ஓரிடத்தைக் காட்டித் தோண்டச் சொல்ல அங்கே கிடைத்தார் பரசுராமர் ஸ்தாபித்த விக்ரஹமான ஐயப்பன்.

2

நீ லக்ஷம் பேருக்குப் பேசுவடா!

தென்காசி பாஸஞ்சரில் ஏறி நயினாரகரத்தில் இறங்குவது எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குப் பழக்கமானது; வாடிக்கையானது.

அங்கு நயினாரகரம் ஸ்டேஷனில் குதிரை வண்டி தயாராக இருக்கும். வண்டியில் ஏறி ஸ்வாமிஜி வீடு என்று சொன்னால் போதும் உற்சாகமாக குதிரை வண்டியை ஓட்டுபவர் எங்களை ஸ்வாமிஜியின் இல்லத்திற்குக் கொண்டு சேர்த்து விடுவார்.

ஸ்வாமிஜி மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்- சிகிச்சைக்காக.

ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு இரு வீடுகளிலிருந்து மட்டுமே அவருக்குக் கொண்டு செல்ல அவர் அருளாசி தந்தார். ஒன்று எங்கள் அம்மா தயாரித்தது. இன்னொன்று சம்பந்தமூர்த்தி தெருவில் (கல்லறை சந்து என்று சொன்னால் தான் அனைவருக்கும் புரியும்) இருந்த ஒரு மத்தியதர பிராமண குடும்பம் தங்கள் இல்லத்தில் தயாரித்த உணவு.

ஒரு நாள் ஆஸ்பத்திரியில் என்னைப் பார்த்த ஸ்வாமிஜி திடீரென்று “நீ லக்ஷம் பேருக்குப் பேசுவடா!” என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தெற்காடி வீதியில் உள்ள தெய்வநெறிக்கழகத்தில் வாராவாரம் நடக்கும் ஸ்டடி சர்க்கிளுக்கு அதிக பட்சம் வருவது 50 முதல் 100 பேர்தான்.

அங்கு ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றிப் பேசுவேன்.

அடுத்துப் பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவிலும் ஷாங்கிக்கிலும் பேசலானேன். இன்னும் கொஞ்சம் கூட்டம்!

அடுத்து சத்ய சாயி சேவாதள்ளில் நகருக்கான கன்வீனரானேன். அங்கு கூட்டங்களில் பேசும் போது இன்னும் கொஞ்சம் கூட்டம்.

இப்போது கூட்டத்தினரை எண்ணுவது எனக்கு வழக்கமானது. ஒரு தோராய மதிப்பீடு தான்.  விழுப்புரத்தில் ஒரு சத்யசாயி சேவாதள் மகாநாடு. அங்கு நான் பேசினேன். நல்ல கூட்டம். தோராயமாக மதிப்பிட்டால் இரண்டாயிரம் பேர் பங்கு கொண்டனர்.

ஆனால் ஸ்வாமிஜி சொன்னது என்ன? “ நீ லக்ஷம் பேருக்கு பேசுவடா”

காலம் உருண்டோடியது. சுமார் நாற்பது வருடங்கள் கடந்து விட்டன.

ஜெயா டிவி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஆரம்பித்தேன். பேட்டி, பேச்சு என்று ஏக கோலாகலம். திருப்பாவையை அறிவியல் ரீதியாக 30 நாளும் சொன்னேன்.

ஒரு நாள் என்னை காலை மலர் நிகழ்ச்சியில் பேட்டி கொடுக்க அழைப்பு வந்தது. நான் பேட்டி எடுத்து, பேசுவது போய் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னைப் பேட்டி எடுக்கப் போகிறார்களா, அதுவும் காலை மலர் நிகழ்ச்சியிலா!

ஸ்டுயோவிற்குச் சென்றேன். பிரம்மாண்டமான ஸ்டேஜ். எதிரில் நான்கு கேமராக்கள். தொழில் நுட்ப நிபுணர்கள், டைரக்ட் செய்பவர், என்னைப் பேட்டி எடுக்க ஒரு அற்புதமான பேட்டியாளர், அவருக்கு உதவியாக ஒரு இளம் மங்கை.

பேட்டி துவங்க இருக்கும் தருணம்.

விளக்குகள் அணைக்கப்பட்டன. எங்களை நோக்கி லைட் ஆன் செய்யப்பட்டது.

“சார் நிகழ்ச்சி துவங்கப் போகிறது. உங்களை 96 லக்ஷம் பேர் பார்க்கிறார்கள். 96 லக்ஷம் பேருக்கு நீங்கள் பேசப் போகிறீர்கள். ஆன் லைன் எடிட்டிங் சார்.

தயாரா, ஆன் என்று சொன்னவுடன் ஆரம்பிக்கலாம்”

இந்த வார்த்தைகளை எதிரில் சூழ்ந்திருந்த இருட்டிலிருந்து வந்த அசரீரி போலக் கேட்ட நான் சிரித்தேன்.

“என்ன சார், சிரிக்கிறீர்கள்?”

“ஒன்றுமில்லை, நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம்”

நிகழ்ச்சி படு அருமையாகச் சென்றது. ஏராளம் பேர் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டுத் தெரிவித்தனர்.

நான் ஏன் சிரித்தேன்?

மூவாயிரம் பேர் வரை எண்ணிய நான் அப்புறம் எண்ணுவதையே விட்டு விட்டேன். இன்றோ , 96 லக்ஷம் பேருக்குப் பேசப் போகிறீர்கள் என்ற குரல்.

“நீ லக்ஷம் பேருக்குப் பேசுவடா” –  ஸ்வாமிஜி கூறியது நினைவுக்கு வந்தது!

டி.வி. என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில் அவர் சொன்னது அது!!

இந்தியாவிற்குப் பரவலாக டிவி நிகழ்ச்சிகள் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளின் பிற்பகுதியில் தான் வந்தது.

ஆனால் வெகு காலம் முன்பே திவ்ய திருஷ்டி மூலம் என்னைக் கண்டு ஆசீர்வதித்தாரே, ஸ்வாமிஜி, அவர் காலம் கடந்த மகான் தானே!

‘எட்டும் இரண்டும் அறியாத இந்தக் குட்டிப் பயலை பட்டி மன்றம் ஏற்றி வைத்தது’ யார்? ஸ்வாமிஜியே தான்! அவரை நினைத்து வணங்காத நாளே இல்லை!

இப்படிப் பல நிகழ்ச்சிகள் … தொடர்வோமா?

***

tags- ஸ்வாமிஜி கிருஷ்ணா-1

VEDIC MANTRAS AGAINST ANGER AND JEALOUSY (Post No.10,403)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,403

Date uploaded in London – –   2 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Hindu Vedas are unique. The seers/ rishis believed in auto suggestion. By repeating the Dos and Don’ts every day, they set a good path for them. For instance, a Brahmin repeats ‘Kamo Karsheet Manyura Karsheet’ mantra ten times each in prayer, three times a day. This 30 times (3X10) repeated Mantra says, God  forgive me; it is the desire and anger (Kama and Manyur) that cause  problems to me. I salute you. English words amorous and anger are derived from Sanskrit words Kama and Manyur!

By remembering these two evils, they get better guidance from their conscience or God. This is called autosuggestion.

You instruct to your mind: Don’t do it; Stop it.

If you repeat good things, you will get them. But there are more straight forward mantras through out the Atharvana Veda. It is fascinating to see mantras about all subjects such as Dream, Sleep, Mind, Enemies (inside and outside), herbs, Sun, germs, 100 year life, healthy life, friendship and magical talismans and amulets.

Whenever I go to prisons in England to see Hindu prisoners, prisoners from other religions also say ‘Namaste’ to me. Hindus are very few compared to  Christians and disproportionately high number of Muslims. When I hear the stories and the reason for their imprisonment, I used to wonder how Lord Krishna knew this thousands of years ago! He says THREE GATEWAYS TO HELL ARE LUST,ANGER AND GREED (Bhagavad Gita 16-21 Kama, Krodha, Lobha). You will be amazed to see all the punishments in courts come under these 3 categories only. Take the news papers of past ten days and mark all the crime news or court news and categorise them; all will fall under these categories.

If you remember every morning what you should not do in family or office or friends circle, then you will be a better person.

Here are two mantras against Anger and Jealousy, followed by my comments:-

18. Against jealousy; AV Book 6


1. The first blast of jealousy, and the one after the first, the fire, the heat of the heart—this we extinguish for thee.


2. As the earth [is] dead-minded, more dead-minded than a dead man, and as [is] the mind of one who has died, so of the jealous man the mind [be] dead.

3. That fluttering mind (manaská) that has found place in (çritá) thy heart—from it I set free thy jealousy, like the hot vapor from a bag of skin.

(hot vapour from leather bag- it is a common scene in small foundries where the blacksmiths use leather bag to pump air to make fire brighter and hotter)

XXXX

HYMN XLII; AV Book 6

A charm to reconcile estranged friends

1I loose the anger from thy heart as ’twere the bowstring from a
   bow,
  That we, one-minded now, may walk together as familiar
   friends.


2Together let us walk as friends: thy wrathful feeling I remove.
  Beneath a heavy stone we cast thy wrath away and bury it.


3I trample on thine anger thus, I tread it down with heel and toe:
  So dost thou yield thee to my will, to speak no more rebelliously.

XXXX

My Comments:

Even in subjects like anger and jealousy, the poets use relevant and beautiful similes.

The second thing, Brahmins have passed the Vedas by world of mouth for thousands of years. We have to thank them and support them to keep it going.

The third point is even Bharatiyar and Tiru Valluvar have composed Anti Anger and Anti Jealousy verses, though very much later than the Vedas.

We will bury the hatchet is an American expression; though encyclopaedias say it is derived from native Americans of Eastern United States. But Hindus have been saying it from time immemorial.

 I will give the Tamil equivalents in my Tamil article.

—subham—

Tags – Vedic verses, on anger, on jealousy, Atharvana Veda, Book 6,

பகவத்கீதை சொற்கள் INDEX-25; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -25 (Post 10,402)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,402

Date uploaded in London – –   2 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-25; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -25

கர்ம சோதனா  18-18 கருமத்திற்கு பிர விருத்தி காரணம்

கர்மஜம் 2-51 கருமத்துதித்த

கர்மஜா 4-12  கருமத்தின்

கர்மஜான் 4-32  கருமத்தில் உள்ளவை

கர்மண ஹ 3-20  கருமத்தால்

கர்மணாம் 3-4  கருமங்களை

கர்மணி 2-47 கருமத்தில்

கர்மபலத்யாகஹ  12-12 கரும பலனைத் துறத்தல்

கர்மபலத்யாகீ 18-11 கரும பலனை விட்டவன்

கர்மபலப் ரேப்ஸுஹு  18-27 கருமபலனை விரும்புபவன்

கர்மபல ஸம்யோகம்  5-14  கருமத்தின்  பயன் கூடுதல்

கர்மபல ஹேதுஹு 2-47 பயனைக் கருதி கருமம் செய்பவன்

கர்மபலம் 5-12  கருமத்தின்  பயனை

கர்மபலாஸங்கம்  4-20  கரும பலனில் பற்றை

கர்மபலே 4-14  கரும பலனில்

கர்ம பந்தம் 2-39  கருமத்  தளையை

கர்ம பந்தனஹ  3-9   கருமக்  கட்டுடைத்து

கர்ம பந்தனைஹி  9-28 கருமக் கட்டுகளினின்றும்

கர்ம பிஹி 3-31  கருமக் கட்டிநின்று

கர்ம யோகம் 3-7  கரும யோகத்தை

கர்ம யோகேன 3-3  கரும யோகத்தால்

கர்ம சங்கினாம் 3-26 கருமத்தில் பற்றுள்ள

கர்ம சங்கிஸு 14-15  கருமப் பற்றுடையோரிடையே

கர்ம சங்கேன 14-7  கருமப் பற்றால்

கர்ம ஸமுத்பவஹ 3-14  கருமத்தினின்று உண்டாகின்றது

கர்ம ஸங்க்ரஹஹ 18-18 கர்மத்துக்கு இருப்பிடம்

 கர்ம ஸம்ஞ் நிதஹ  8-3 கருமம் எனப்படும்

கர்ம சன்யாசம் 5-2 கருமத்தை விடுதல்

கர்மசு 2-50 கருமத்தில்

கர்மாணி  2-48 கருமங்களை

கர்மானுபந்தீனி 15-2  கருமத்தைப் பின்னர்  விளைவிப்பனவாய்

கர்மிப்யஹ  6-46  கருமம் செய்வோரையும் விட

கர்மேந்த்ரியாணி 3-6 கர்மேந்திரியங்களை

கர்மந்த்ரியைஹி  3-7 கர்ம இந்திரியங்களால்

கர்சயன்தஹ 17-6  வருத்தி

கர்ஷதி 15-7  இழுக்கிறது

கலயதாம் 10-30 கணக்கிடுபவர்களில்

கலேபரம் 8-5   சரீரத்தை

கல் பக்ஷயே  9-7  கல்பத்தின் முடிவில்

கல்பதே 2-15   உரியவன் ஆகிறான்

கல்பாதெள 9-7 கல்பத்தின் ஆரம்பத்தில்

கல்யாணக்ருத்  6-40  நல்லதைச் செய்பவன்

கவயஹ 4-16  சிறந்த அறிவாளிகள்

கவிம் 8-9 எல்லாம் அறி ந்தவனும்

கவீநாம் 10-37  கவிகளுக்குள், கூரிய புத்தியுள்ளவர்களில்

கஸ்சன  3-18   எந்தப் பயனும்

கஸ்சித் 2-17 எவனும்

கஸ்மலம் 2-2 அழுக்கு , மனக்குழப்பம்

கஸ்மாத்  11-37  ஏன்

கம் 2-21 எவனை

கந்தர்பஹ  10-28  காம தேவன், மன்மதன்

கஹ 8-2  யார்

To be continued……………………….

52 words are added in this part 25

tags –Tamil gita index 25