Collected from popular dailies and edited for broadcast)
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை ஆறாம் தேதி 2025-ம் ஆண்டு .
முதலில் இந்தியச் செய்திகள்!
சித்த ஆயுர் வேத மருத்துவப் பல்கலைக் கழகம் ! ஜனாதிபதி முர்மு துவக்கிவைத்தார்
குடியரசுத்தலைவர் முர்மு, ஜூலை முதல் தேதியன்று மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார்
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகம் உள்ளது
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த பல்கலைக்கழகம் நாட்டின் வளமான பண்டைய மரபுகளின் நவீன மையமாகும் என்று கூறினார். இந்தப் பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 100 ஆயுஷ் கல்லூரிகளும் இதன் சிறப்பால் பயனடைந்து வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பொது வாழ்வில் மக்களுக்கு சேவை செய்வதில் சுய தேவைகளை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் தலைவர் தனது சொந்த வாழ்க்கை குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.
ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அவரை வரவேற்றார்கள்.
சோன்பர்சாவில் உள்ள மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழக ஆரோக்யதாம் வளாகத்தில் கல்விக் கட்டிடம், அரங்கம், பஞ்சகர்மா பிரிவுகள் உள்ளன பஞ்சகர்மா என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சுத்திகரிப்பு மற்றும் புத்துணர்ச்சி சிகிச்சை முறையாகும்
****
ஜைன துறவி வித்யானந்த் மகாராஜ் நூற்றாண்டு விழாவில்..
பிரதமர் மோடிக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம்
ஜைன துறவி ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு, தர்ம சக்கரவர்த்தி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதை பிரசாதம் போல ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜைன ஆன்மிகத் தலைவர்களில் ஒருவரும், சமூக சீர்திருத்தவாதியுமான ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் 100வது பிறந்தநாளைக் கௌரவிக்கும் ஒரு வருட கால விழா தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அகிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜ் ஏப்ரல் 22, 1925 அன்று கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் கிராமத்தில் பிறந்தார். நவீன காலத்தின் தலைசிறந்த ஜைன அறிஞர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். இவர் 8,000-க்கும் மேற்பட்ட ஜைன ஆகம வசனங்களை மனப்பாடம் செய்தவர்.
‘ஜைன தர்ஷன்’, ‘அனேகாந்த்வாத்’, மற்றும் ‘மோக்ஷமார்க் தர்ஷன்’ உள்ளிட்ட ஜைன தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். இவரது நூற்றாண்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போதுதான் அவருக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டது.
****
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் இருவர் கைது
ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு, அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பைப் குண்டு’ வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், மதுரையில் பால் வியாபாரி சுரேஷ், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பூசாரி முருகன், வேலுாரில் பா.ஜ., மருத்துவ பிரிவு செயலர் அரவிந்த் ரெட்டி, பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
மேலும், மாநிலம் முழுதும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இது, போலீசாரை அதிர்ச்சியடைச் செய்தது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., பிரிவின் எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்தனர்.
இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த அல் – உம்மா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர், ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத கும்பலின் தளபதியாக செயல்பட்டு வந்த, நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்; திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஆகியோர் தப்பிவிட்டனர்.
மொத்த கொலைகளுக்கும் மூளையாக செயல்பட்டது அபுபக்கர் சித்திக் தான். தொடர் விசாரணையில், தெரியவந்தது.
அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் பதுங்கி இருக்கும் தகவல், மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர்கள், அத்தகவலை உறுதி செய்த பின், தமிழக போலீசாருக்கு தகவலை தெரியப்படுத்தினர். ஆந்திராவுக்கு சென்ற தமிழக காவல் துறையின் ஏ.டி.எஸ்., பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
****
ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும் ; ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு
ராமேஸ்வரம்; ”கிராம கோயில் பூஜாரிகள் ஆன்மிக போதனைகள்மூலம் மதமாற்றத்தை தடுக்க வேண்டும்” என தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார்.
ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஜூன் 15ல் தமிழ்நாடு வி.எச்.பி., சார்பில் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு பயிற்சி முகாம் துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது. நேற்று நிறைவு விழாவையொட்டி கோசுவாமி மடத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பூஜாரிகள் பூணுால் அணிந்தனர். பயிற்சிக்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.
மதசார்பற்ற நம்நாட்டில்அதுவும் தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதுதான் நம் பலவீனம். இதனை மீட்க நாம் போராட வேண்டும். அக்காலத்தில் கோயிலுக்கு ஆன்மிக பெரியோர்கள் தானமாக கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இன்று அரசியல்வாதிகள் கபளீகரம் செய்கின்றனர்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம் முதல் தற்போது வரை மதமாற்றம்நடக்கிறது. இது ஹிந்து சமூகத்திற்கு பேரழிவு ஆகும். எனவே கிராமங்களில் ஆன்மிக போதனைகள் மூலம் மக்களிடம் ஹிந்து மதத்தின் புனிதம், கடவுளின் வரலாற்று கதைகளை விளக்கி தெய்வ நம்பிக்கை ஏற்படுத்தி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். மதம் மாறியவர்களை தாய்மதமான இந்து மதத்திற்கு அழைத்து வரவேண்டும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சென்னையில் உள்ள விசுவ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் ஏராளமானோர் தாய்மதம் திரும்புகின்றனர்.
கிராம கோவில் பூஜாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்; ரூ.4 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை, ரூ.5 ஆயிரமாக்க வேண்டும். இப்போது ஊக்கத்தொகையாக ரூ.1,500 கொடுப்பதாக அறிவித்துள்ளதை அதை செயல்படுத்தவேண்டும். இவ்வாறு ஆர்ஆர். கோபால்ஜி பேசினார்.
பயிற்சி முகாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் பூஜை, கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி நடக்க வேண்டும். அதை மீறி மொழி அரசியல் கூடாது. மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்.
குழந்தை பிறப்பில் நாட்டின் சராசரி 1.9ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அது, 1.4ஆக குறைந்திருப்பது அபாய எச்சரிக்கை. இதனால், குடும்ப அமைப்பு சீரழியும்.
இந்து பெண்கள் குறைந்தது 3 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வேண்டும்.
கோவில்களில் கட்டண தரிசன முறையை கைவிட வேண்டும். பென்ஷன் பெறும் கிராமக் கோவில் பூஜாரிகள் மறைவுக்கு பிறகு, அவர் மனைவிக்கு வழங்க வேண்டும்.
எல்லா கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இந்து கோவில் சொத்துக்களில் மாற்று மதத்தவருக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்ய வேண்டும். கோவில் தொடர்புடைய பணிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். மாற்று மதத்தினரை பணியமர்த்தக்கூடாது.
****
சுருக்கமான செய்திகள்
நாளை ஜூலை ஏழாம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜூலை 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்படும் .முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடு தான் திருச்செந்தூர். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் பிஆர்டிசி சார்பில் 600 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
*****
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 20 லட்சம் ரூபாய், ஆயிரத்து 30 கிராம் தங்கம் மற்றும் 15 கிலோ 405 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வசந்த மண்டபத்தில் சுமார் 8 மணிநேரம் நடைபெற்றது.
****
ஜெர்மனியில் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு “புளூ டங்” விருது
ஜெர்மனியில் நடைபெற்ற Greator ‘கிரேட்டர் விழா 2025’ நிகழ்ச்சியில் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற ‘கிரேட்டர் விழா 2025’ எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக கிரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ஜெர்மனியில் செயல்பட்டு “கிரேட்டர் (Greator)” எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
****
இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சை கருத்து… வைகோவின் முன்னாள் உதவியாளர் கைது
சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசார கருத்துகளைப் பதிவிட்டுவந்த சமூக ஆர்வலரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் முதன்மை உதவியாளருமான அருணகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அருணகிரி 60. இவரது தந்தை பழனிச்சாமி சங்கரன்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர்.. சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசாரத்தை தீவிரமாக செய்து வந்தார். இதனால், சங்கரன்கோவில் போலீசில் ராஜா என்பவர், இந்து கடவுள்களை அருணகிரி அவதூறு செய்து பதிவிட்டு வருவதாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் அருணகிரியிடம் ஏற்கனவே, போலீசார் விசாரணை நடத்தினர். அருணகிரியை ஜூலை 1-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.. அவர் மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..
****************
அமெரிக்காவில் கோவில் மீது தாக்குதல்
அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவில் மீது துப்பாக்கி சூடு – இந்தியா கண்டனம்
அமெரிக்காவின் உட்டா UTAH மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடுசூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்கான் கோவிலின் உள்ளே பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் இருக்கும்போது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. 20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள்மீது பாய்ந்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவத்துக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஜூலை மாதம் 13 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags- Gnanamayam, World Hindu News, Tamil, 6th July 2025, Broadcast, Latha, Vaishnavi.
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
– சுந்தரர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள கொங்கு நாட்டுத் தலமான கொடுமுடி திருத்தலமாகும். இந்தத் தலம் காவேரி நதிக் கரையில் திருச்சி- ஈரோடு சாலையில் ஈரோடிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இறைவர் : கொடுமுடி நாதர், மருக்கொழுந்தீசர்
இறைவியார் : சௌந்தராம்பிகை, பண்மொழிநாயகி
தீர்த்தம் : காவிரி
ஸ்தல விருட்சம் : வன்னி மரம். இந்த மரத்தின் வயதைக் கணக்கிட முடியவில்லை. இதில் பூ பூக்கும், காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். இன்னொரு பக்கம் இருக்காது. பல அதிசயங்கள் கொண்ட மரம் இது.
லிங்கம் ஸ்வயம்பு லிங்கம்
இந்தத் தலம் வரையில் தெற்கு முகமாக வந்த காவேரி ஆறு இங்கு கிழக்கு முகமாகத் திரும்புகிறது.
இந்தத் தலத்திற்கு கரையூர் என்றும் பாண்டிக் கொடுமுடி என்றும் வேறு பெயர்கள் உண்டு.
இது மும்மூர்த்தித் தலம் ஆகும். பரமசிவன் ‘முகுடேஸ்வரர் என்றும், விஷ்ணு ரங்கசாமி என்றும் பிரம்மா ஒரு மாயாரூபியாகவும் இங்கு விளங்குகிறார்கள்.
காவேரிக்கு மத்தியில் ஒரு பாறையின் மேல் அகத்திய முனிவர் காவேரியை ஒரு குடத்தில் வைத்திருந்ததை ஒரு காகம் கவிழ்த்து விட்டதாக ஒரு கற்சித்திரம் இங்கு காணப்படுகிறது. அதனால் தான் காவேரி இங்கு கிழக்கு முகமாகத் திரும்புகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.
பழனி திருமஞ்சன தீர்த்தம் இங்கிருந்து கொண்டு போவதுண்டு.
மலயத்வஜ பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டான். ஏனெனில் பிறவியிலேயே அவனது மகனுக்கு விரல்கள் சரியாக வளராமலிருந்தன. கொடுமுடி இறைவனை வேண்டியவுடன் இந்தக் குறை தீர்ந்தது . ஆகவே அடிக்கடி இந்த ஆலயத்தைப் புதுப்பித்து வந்தான். ஆகவே இந்த ஊர் பாண்டிக் கொடுமுடி என்ற பெயரைப் பெற்றது.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் மேருமலையைக் கட்டிப் பாதுகாக்க வேண்டும் என்றும் வாயு தேவன் தன் பலத்தினால் மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் இந்திரனால் போட்டி நிர்ணயிக்கப்பட்டது.
ஆதிசேஷன் மேரு மலையை இறுகக் கட்டி அணைக்க வாயு பலமாக வீச, மேருவிலிருந்து ஐந்து சிகரங்கள் தென் திசையில் பறந்து வந்து விழுந்தன. அவைகள் ஐந்தும் ஐந்து மணிகளாக மாறின. சிவப்பு மணி விழுந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் விழுந்த இடம் திருவாட்போக்கி என்று இப்போது அறியப்படும் ரத்தினகிரியாகவும், மரகத மணி விழுந்த இடம் ஈங்கோய்மலையாகவும், நீலமணி விழுந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் விழுந்த இடம் கொடுமுடியாகவும் மாறி, பெரும் தலங்களாக ஆயின.
மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் இவர் மகுடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
கிழக்குப் பார்த்து அமைந்துள்ள கோவில் 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டுள்ளது.
கர்பக்ருஹத்தின் இரு புறமும் சூரிய சந்திரர்கள் இருப்பதானது இறைவன் அவர்களைத் தனது இரு கண்களாகக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்றும் சிவபிரானின் நெற்றியிலுள்ள அக்னி சிவலிங்கமாகவே நடுவில் திகழ்கிறது என்றும் ஐதீகம் கூறுகிறது.
இங்கு வந்து இறைவனைத் தொழுத அகத்திய ரிஷி லிங்கத்தைக் கட்டிப் பிடித்துத் தொழவே அவரது விரல் ரேகைகள் இன்றும் லிங்கத்தின் மீது காணப்படுகிறது.
விநாயகர், உமா மகேஸ்வரர், அகத்தியரால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கம், வள்ளி தெய்வசேனாவுடன் சுப்ரமண்யர், 63 நாயன்மார்கள், ஆகியோரது சிற்பங்கள் வெளி பிரகாரத்தில் உள்ளன.
உள் பிரகாரத்தில் நடராஜர் சிவகாமியுடன் காட்சி தருகிறார்.
அம்பிகையின் சந்நிதி தெற்கில் உள்ளது.
கோவிலின் பின்பக்கத்தில் அம்பிகைக்கும் சிவபிரானுக்கும் இடையில் ஆதிசேஷனின் மீது காட்சி அளிக்கும் வீரநாராயணரின் ஆலயம் உள்ளது. அருகில் ஹனுமான், விபீஷணர், பர வாசுதேவர், நாரதர், ஶ்ரீதேவி, பூதேவி, கருடர் ஆகியோர் காட்சி தருகின்றனர். வலதுபக்கத்தில் திருமங்கை நாச்சியார் இடம் கொண்டு அருள்கிறார்.
வலப்புறத்தில் ஸ்தல விருட்சமான வன்னி மரம் உள்ளது.
சமீப காலத்தில் ஆலயத்தின் புனர்நிர்மாணத்தின் போது பல வெங்கலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் திரிபுராந்தகர், திருஞானசம்பந்தர், திருசாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்டோரின் சிலைகள் இருந்தன.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதமும் பங்குனி மாதமும் சிவபிரான் மற்றும் அம்பிகையின் மீது நான்கு நாட்கள் காலை நேரத்தில் சூரிய கிரகணங்கள் விழுகின்றன. இது சூரிய பூஜை என
அறியப்படுவதாகும்.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடல்களைப் பாடி அருளியுள்ளனர். இங்கு சுந்தரர் நமச்சிவாயப் பதிகத்தைப் பாடி அருளியுள்ளார். அருணகிரிநாதர் இங்கு திருப்புகழ் பாடல் பாடி அருளியுள்ளார்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பண்மொழி நாயகியும் கொடுமுடி நாதரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-7-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!
காரைக்கால் அம்மையார்
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே, சிறப்பு விருந்தினர் திரு ரமேஷ் அவர்களே, வணக்கம். நமஸ்காரம்.
முற்காலத்தில் சோழமண்டலத்தில் இருந்த காரைவனம் என்று வழங்கப்பட்ட மாநகர் இப்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது.
இதில் வாழ்ந்து வந்த தனதத்தன் என்னும் வணிகருக்குப் புனிதவதி என்ற ஒரு மகள் பிறந்தாள். அவர் பரமதத்தன் என்ற வணிகரை மணந்து இனிதே இல்லறம் நடத்தி வந்தாள்.
ஒரு நாள் பரமதத்தனுக்கு அவனைக் காண வந்த இரு வணிகர்கள் இரு மாங்கனிகளைத் தந்தனர். அவற்றை அவன் அவற்றைத் தனது இல்லத்திற்கு அனுப்பினான்.
அதை வாங்கிக் கொண்ட புனிதவதி அப்போது அங்கு வந்த சிவனடியார் ஒருவருக்கு இரு மாங்கனிகளுள் ஒன்றை அளித்து உபசரித்தாள்
இல்லத்திற்கு வந்த பரமதத்தன் உணவருந்தும் போது எஞ்சியிருந்த ஒரு மாங்கனியை அவள் பரமதத்தனுக்கு அளித்தாள். அதன் சுவை அபாரமாக இருக்கவே இன்னொரு கனி எங்கே என்று அவன் கேட்டான்.
புனிதவதி திகைத்தாள். பின்னர் தான் வழிபடும் சிவபிரானை வேண்டினாள். அவளுக்கு ஒரு கனி கிடைத்தது. மகிழ்ச்சியுடன் அதைத் தன் கணவனுக்கு ஈந்தாள்.
அதனுடைய ருசி முந்தைய கனியை விட அதிகமாக இருக்கவே, “இது நான் அனுப்பிய பழம் போல இல்லையே. இது ஏது” என்று வினவினான்.
இறைவன் கொடுத்தார் என்றால் இன்னொரு கனியையும் கேள் என்றான்.
புனிதவதி திகைத்தாள். இறைவனை மீண்டும் வேண்டினாள்.
மனம் இரங்கிய சிவபிரான் இன்னொரு கனியையும் ஈந்து அருளினார்.
அதை புனிதவதி பரமதத்தனிடம் கொடுத்தாள். அதைக் கையில் வாங்கிய பரமதத்தன் வியப்படைந்தான். உடனே அந்தக் கனி மறைந்தது.
புனிதவதி ஒரு தெய்வப்பிறவி என்று அறிந்த பரமதத்தன் அவளுடன் வாழ அஞ்சி வாணிகம் செய்யச் செல்வதாகச் சொல்லி பாண்டிய நாடு சென்று மதுரை நகரை அடைந்தான். அங்கு இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு வாழத் தொடங்கினான். அங்கு அவனுக்கு ஒரு மகள் பிறக்கவே அதற்குப் புனிதவதி என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கினான்.
புனிதவதியாரின் சுற்றத்தார் பரமதத்தன் மதுரையில் வாழ்வதை அறிந்து, உடனடியாக புனிதவதியை அங்கு அழைத்துச் சென்றனர்.
நகருக்கு வெளியே புனிதவதி தங்கி இருந்தாள். புனிதவதி வந்ததை அறிந்த பரமதத்தன் தன் குடும்பத்துடன் சென்று அவரை வணங்கினான்.
மனைவியை நீ வணங்குவது ஏன் என்று அனைவரும் கேட்க பரமதத்தன், “இவர் சாதாரண மானுடர் அல்ல. இவர் ஒரு தெய்வப் பிறவி அனைவரும் வணங்குங்கள்” என்று கூறினான்.
இந்தச் சொற்களைக் கேட்ட புனிதவதி கணவனுக்காக தான் கொண்டிருந்த மானுட உடலை நீத்து ஒரு பேய் உருவத்தைப் பெற்றார்.
சிவபிரானின் மீது பல பிரபந்தங்கள் பாடியவாறே திருத்தலங்கள் பல சென்ற புனிதவதியார் நேராக கயிலை மலைக்குச் சென்றார். ஆனால் காலால் நடக்காமல் தலையால் நடந்து சென்றார்.
அவர் வருவதைக் கண்ட சிவபிரான், “அம்மையே, வருக!” என்று அன்புடன் அழைத்தார்.
சிவபிரானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய புனிதவதியார், “அப்பனே. பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாமை வேண்டும். நீ ஆடுகின்ற போது உன் திருவடிக்கீழ் மகிழ்ந்து பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்” என்று வேண்டினார். “அப்படியே ஆகுக” என்று கூறி அருளிய சிவபிரான் அவரைத் திருவாலங்காடு செல்லப் பணித்தார். அங்கு சிவபிரானின் திருநடனம் கண்டு பின்னர் அவர் முக்தியை அடைந்தார்.
அம்மையே என்று சிவபிரான் அழைத்ததால் அவர் அம்மையார் என்று அழைக்கப்பட்டார். காரைக்காலைச் சேர்ந்தவர் என்பதால் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படலானார்.\
இவர் செந்தமிழில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அந்தாதி என்று ஒரு புது வகையை இவரே தொடங்கி வைத்தார். அற்புதத் திருவந்தாதி என்ற இவரது நூல் 101 செய்யுள்களைக் கொண்டுள்ளது.
காலனை வென்றதாக இவர் பாடும் பாடல் குறிப்பிடத் தகுந்த ஒன்று.
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் – கோல
அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து
என்று காலனை வென்றதை இவர் கூறினார்.
பதிகம் என்ற பாடல் அமைப்பை முதலில் வகுத்து இவர் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். அதுவே முதலாவதாக அமைந்ததால் அது மூத்த திருப்பதிகம் என்று வழங்கப்படலாயிற்று.
திரு இரட்டைமணி மாலை என்ற நூலில் இருபது பாடல்களை இவர் பாடி அருளியுள்ளார்.
காரைக்காலில் சிவன் கோவிலில் இவருக்கென தனி சந்நிதி உள்ளது.
இக்கோவிலை மக்கள் காரைக்கால் அம்மையார் கோவில் என்றே அழைக்கின்றனர். அங்கு புனிதவதியார் இளமைத் தோற்றத்துடன் உள்ளார். சுற்றி உள்ள பிரகாரத்தில் இவரது வாழ்க்கை வரலாறு ஓவியங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
வருடந்தோறும் ஆனி மாதம் பௌர்ணமி அன்று மாங்கனித் திருவிழா இங்கு நடைபெறுகிறது.
மற்ற நாயன்மார்கள் உருவங்கள் எழுந்து நின்ற நிலையில் இருக்கும் போது, இவரது உருவச்சிலை மட்டும் அமர்ந்த நிலையில் காணப்படும்.
காரைக்காலில் பெருமை மிக்க இந்த அம்மையார் தங்கி இருந்ததால் அங்கு கால் பதிக்க திருஞானசம்பந்தர் தயங்கினார்.
63 நாயன்மார்களில் மூன்று பேர்கள் பெண்கள். அவரில் இவரே முத்தவர்.
சைவ நெறிப்படி வாழ்ந்து சைவத்திற்குப் பெருமை சேர்த்த நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் திருவடி போற்றி வணங்குவோம்! என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
Read all about the ancient origins of the Amarnath yatra and the mythological significance of the holy shrine
A fake, recent story related to the discovery of the cave by a Muslim shepherd from Batakot, named Buta Malik, became quite popular over time.
There are two routes to the Amarnath Cave, one is the traditional 48-km-long Nunwan-Pahalgam route in Anantnag district, and the other is the 14-km shorter but steeper Baltal route in Ganderbal district.
This year’s Amarnath yatra is expected to attract around 8 lakh pilgrims. Last year’s number was 5 lakh, the highest in the last 12 years. The holy journey to the shrine of Lord Shiva in the Amarnath cave holds immense religious significance in Hinduism.
Ancient origins of the Amarnath Cave
The Amarnath Cave is located in the Lidder valley of the Pahalgam tehsil of the Anantnag district, J&K. It is one of the most popular pilgrimage sites of the Sanatan Dharma. Since it is located at a high altitude, the shrine is covered in thick snow for most of the year, except for a brief period during the months of July-August. This period coincides with the holy month of Shravan as per the Hindu calendar. This is when devotees from across the country flock to visit the holy shrine for darshan of Baba Amarnath.
Inside the cave is a Swayambhu (formed on its own) Shiva Lingam. It is a stalagmite formation is formed when water drops fall from the cave’s roof onto the floor and freeze, resulting in an upward vertical development of the Lingam. The pilgrimage to the Amarnath caves is an ancient custom mentioned in Kalhana’s Rajtaringini, Nilamata Purana, Francois Bernier’s memoirs, and many others. Different stories have been associated with the pilgrimage
Mention of the Amarnath yatra in ancient scriptures
As per Hindu scriptures, the Amarnath cave was first discovered by Rishi Bhrigu. It is said that for centuries, the Kashmir valley was immersed in water, and Rishi Kashyap drained it by creating rivers and tributaries. As the water receded, Rishi Bhrigu, who was on his way to the Himalayas, discovered the Amarnath cave. The Amarnath Cave also finds mention in texts like the Bhringish Samhita and the Amarnath Mahatmy. These describe the topographical details of the cave.
Folklore related to the Amarnath Yatra
According to folklore, Lord Shiva narrated the secret of immortality to his consort Devi Parvati in the Amarnath cave. When Devi Parvati requested Lord Shiva to reveal the secret of immortality, he agreed to her request but said that he would narrate the secrets at an isolated place where no living being is able to hear the secrets. And, so Lord Shiva, along with Devi Parvati, left for the Amarnath Cave. On their way to the cave, Lord Shiva left his Nandi at Pahalgam. He left the moon on his head at Chandanwari, the snake (Sheshnag) around his neck at Lake Sheshnag, his son Ganesha at Mahaguna Parvat, and the Five Elements (Earth, Water, Air, Fire and Sky) at Panjtarni. He performed the Tandav dance as he kept leaving his belongings behind.
Thereafter, Lord Shiva entered the Amarnath cave with Devi Parvati and sat in Samadhi. Before that, he created Kalagni and ordered him to spread fire around the holy cave to ensure that no living being was able to hear him narrate the secrets of immortality. However, a pair of pigeons overheard the secrets of immortality. It is said that pilgrims often see pigeons around the Amarnath cave, surviving in such high altitudes and low temperatures, which affirms their belief in the folklore.
The Amarnath Cave has existed since time immemorial, but a fake, recent story related to the discovery of the cave by a Muslim shepherd from Batakot, named Buta Malik, became quite popular over time. According to the story, Malik took shelter in the cave after his flock strayed in the mountains, where a Sufi saint gave him a Kangri, a small pot filled with burning coal that is held close to the body to keep it warm. When he went home, he saw that the pot of coal had turned into a pot of gold. Overjoyed, he went back to the cave to thank the saint. But instead, he found only the cave and the Shiva Linga.
BECAUSE THIS INFORMATION IS VALID FOR ALL TIMES AND IF YOU LOOK FOR THE SAME INFORMATION VIA GOOGLE ETC, THEY WILL ASK YOU TO ACCEPT COOKIES; THEY WILL POST YOU ADVT.S .
MY BLOG IS FREE FROM SUCH NONSENSE.
1. Baga Beach – Known for its nightlife and water sports.
2. Calangute Beach – Popular for its vibrant ambiance and beach shacks.
3. Candolim Beach – Ideal for a more relaxed atmosphere.
4. Anjuna Beach – Famous for its flea market and trance parties.
5. Vagator Beach – Offers picturesque views and great for sunsets.
6. Arambol Beach – A peaceful spot, popular among foreigners.
7. Mandrem Beach – Perfect for a quiet and romantic escape.
8. Morjim Beach – Known for Olive Ridley turtle nesting.
9. Chapora Beach – Close to Chapora Fort, offering stunning views.
10. Palolem Beach – Famous for its crescent shape and silent discos.
11. Agonda Beach – A serene beach ideal for solitude seekers.
12. Butterfly Beach – Accessible by boat or trek, known for its beauty.
13. Colva Beach – A bustling beach with shacks and water sports.
14 Cavelossim Beach – Known for its clean sand and calm waters.
15. Mobor Beach – Great for water sports and luxury stays.
16. Betul Beach – A quaint and romantic beach at the Sal River mouth.
17. Majorda Beach – Known for its peaceful environment and food shacks.
18. SinQ Beach (Candolim) – Features vibrant nightlife.
19. Cansaulim Beach – A clean and quiet stretch, good for family outings.
20. Dona Paula Beach – Offers water sports and scenic views
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) நிறைய உவமைகளைக் கையாளுகிறார் மேலும் அவர் உருவகப் பிரியர் என்று தெரிகிறது தலங்களை விவரிக்கும்போது பாரத நாட்டினை அல்லது பாண்டிய நாட்டினை மனிதனாக உருவகப்படுத்திப் பாடுகிறார். அதை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.
மதுரைத் திருநகரம் கண்ட படலத்தில் வரும் உருவகம் – நமச் சிவாயக் கப்பல் !!
தெய்வத் தன்மையான திருநீறே பாய் மரமாகவும்,ஐந்தெழுத்தே கப்பலாகவும் கொண்டு வெப்பத்துடைய அழுக்கான இருவினை உடைய தேகத்தை எடுத்து உழலுகின்ற பிறவிக்கடல் ஏழையும் கடந்து பரமேச்வரனுடைய பாத கமலங்களாகிய கரையைச் சேருகின்ற சைவ மாந்தர்கள் இருக்கும் மடங்களுடைய ஒப்பில்லாத வீதி வளத்தை இனிச் சொல்லக்கடவோம்
****.
PICTURE- கூன் பாண்டியனும் மனைவி மங்கையற்கரசியும் மந்திரி குலச்சிறையாரும் .
அவருடைய இலக்கியப் புதுமைகளை அறிய இதோ சில எடுத்துக் காட்டுகள் :-
ஆறாம் எண்ணை வைத்துச் சொல் விளையாட்டு
அறுகாற் பீடத்துயர் மாவழி கடைந்தமுதையரங்கேற்றுமா போல்
அறுகாற்பேடிஸை பாடும் கூடன்மான்மியத்தை யருந்தமிழாற் பாடி
அரிதாகிய தமிழினாற் பாடி அறுகினால் பெருமையோங்கிய திருமு டியுடைய சொக்கநாத சுவாமி சந்நிதியில் தேவர்கள் சூழ்ந்திருக்கும் அறுகாற்பீடத்தில் இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கேற்றினார் .
(ஆறு = சிவனின் தலையில் உள்ள அறுகு; வண்டின் கால்கள் ஆறு ; அரங்கேற்றிய இடம் மீனாட்சி கோவிலில் உள்ள ஆறு கால் மணடபம்)
இது பாயிரப்பகுதியில் உள்ளது; முதற் சில பாடல்களில் தான் கந்த புராணத்திலுள்ள சங்கர சங்கிதையிலுருந்து பெரியோர்கள் சொன்னதால் தமிழில் மொழிபெயர்த்ததாகவும் கூறிவிட்டு அன்னப்பட்சியானது நீரை விட்டுப் பாலை மட்டும் அருந்துவது போல குற்றம் குறைகளை நீக்கிவிட்டு நூலை ஏற்கவேண்டும் என்கிறார்.
முனிவர் வேதங்களிலும் வல்லவர் என்பது பல இடங்களில் வருகிறது. இது இல்லை, இது இல்லை – நேதி, நேதி— என்ற உபநிஷத வாக்கியத்தை ,
அல்லைஈதல்லை ஈதென்ன மறைகளுமன்மைச் சொல்லினாற் துதித்து இளைக்கும் — என்ற வரிகளாற் காட்டுகிறார்.
****
PICTURE- அருச்சனைப் படலம்
திருமுகம் / லெட்டர் கொடுத்த படலத்தில் பாணபத்திரன் கனவில் சித்தர் வடிவில் சிவன் சொல்கிறார் :-
அப்பா, பத்திரா! உனக்காக யாம் பாண்டியன் பொன்னறைக்குள்ளிருந்த பொருள்களை பெறுநுளம்பு உண்ட கனிபோல் கொடுத்தோம். இனிமேல் அப்படிச் செய்தால் பாண்டியன் காவலாளிகளைத் தண்டிப்பான் . ஆதலால் உன்போலவே என்னிடத்தில் அன்புள்ளவனான சேராமானுக்கு லெட்டர்/ திருமுகம் தருகிறோம் .
இதை யானை உண்ட விளங்கனி என்ற பழமொழியுடன் ஒப்பிடலாம்.
வரகுண பாண்டியனின் குதிரையின் காலடிபட்டு ஒரு பிராமணன் இறந்து விடுகிறான்[ அவனை பிரம்மஹத்திப் பாவம் தொற்றிக்கொள்கிறது .அதைத்தீர்க்க திருவிடை மருதூர் செல்ல சிவபிரான் சொல்கிறார்
பிரம்மஹத்தி என்பது பிராமணர்களைக் கொல்வதால் வரும் பாபம்; இது தொற்றியவுடன் வரகுணன் (இவன் மாணிக்கவாசகருக்கு முந்திய வரகுணன்) அழுக்கடைந்த மாணிக்கம் போலவும் , பாம்பு விழுங்கின சந்திரன் போலவும் ஒளி மழுங்கி, யானை உண்ட விளங்கனி போல உள்ளறிவு இன்றித் துன்புற்றான்.
****
மாணிக்கவாசக கால மன்னன் அரிமர்த்தனன் . அவனுக்கு முந்திய பாண்டியமன்னன் காலத்தில் இடைக்காட்டுச் சித்தர்
பிணக்கு தீர்த்தப் படலம் வருகிறது. அதில் இடைக்காட்டுச் சித்தருக்கு பாண்டிய மன்னர் செய்த உபசாரம் வருகிறது ; அது பினவருமாறு:
பின்பு பாண்டியன் விதிப்படி வாழை- கமுகு- சாமரம் -மேற்கட்டி- விளக்கு- பூமாலை – நிறைகுடம் (பூர்ணகும்பம்), துகிற்கொடி ஆகிய இவைகளால் அலங்காரமாக ரத்தினகஜிதமான சங்க மண்டப செம்பொன் ஆசனத்தின் மீது மாப்பிள்ளை கோலமாக இடைக்காட்டுசித்தரை அலஙகரித்து, புலவர்கள் சூழ இருக்கச் செய்து , தானும் சிங்காசனத்தில் மேலிருந்து மல்லிகை ,முல்லை முதலிய வெள்ளை மலர்களால் செய்த மாலையும் வெள்ளை வஸ்திரமும் , வெண்முத்துமாலையும் அணிந்து கொண்டு, மங்கள வாத்தியங்கள் முழங்கவும், வேத பிராமணர்கள் ஆசீர்வதிக்கவும், மாங்கிலியப் பெண்கள் பல்லாண்டு சொல்லவும் , தமிழ்ப் பாடலைக்கேட்டு இடைக்காட்டுச் சித்தருக்கும் சங்கப்புலவர்களுக்கும் வரிசைப்படி, வஸ்திர பூஷணாபரணங்கள் பணிப்பெண்கள், மிகுந்த திரவியங்கள், யானை, குதிரை ,விளைநிலங்கள் முதலியவற்றை நிரம்பக் கொடுத்து ஏழடி தூரம் பின்னே காலாலேகடந்து சென்று , சங்கத் புலவர்களே நான் இந்த இடைக்காட்டுச் சித்தருக்கு செய்த குற்றங்களை பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று பாண்டிய மன்னன் சொன்னான்.இதில் ஏழடி நடந்து என்ற வழக்கத்தையும், மன்னரே புலவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கும் பெருந்தன்மையையும் , இடைக்காடருக்கு மாப்பிள்ளை போல உபசாரம் நடந்ததையும் கவனித்து ரசிக்க வேண்டும். அக்காலத்தில் எல்லோருக்கும் பணிப்பெண்களை பரிசாகக் கொடுத்தது பல நூல்களில் காணக்கிடக்கிறது; வரிசை அறிதல் என்பது புற நானூற்றிலும் வருகிறது; அதாவது தகுதிவாரியாகப் பரிசில்களைக்கொடுக்க வேண்டும்.
****
அருச்சனைப் படலம்
கடைசி படலம் அருச்சனைப் படலம். இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய் ,தக்கோலம் என்னும் ஐந்து வகை வாசங் கலந்தபாக்கு வெற்றிலை நிவேதித்து — என்ற வரிகள் அக்காலத்தில் கடவுளுக்கு பீடா நைவேத்தியம் செய்ததைக் காட்டுகிறது
தக்கோலம் என்பது வெற்றிலை, பாக்குக்குப் பொதுப்பெயராக வந்த போதும் இது ஒரு வாசனைப்பொருள் என்றே நம்பவேண்டியிருக்கிறது ஏனெனில் தமிழ் அகராதிகள் சொல்லும் சிறுநாவல் பூ, வால் மிளகு , நாவல், திப்பலி என்ற பொருள்கள் பொருந்துவதாயில்லை ; மேலும் வெற்றிலை பாக்கிலிருந்து ஐந்து பொருட்களைத் தனியாக பரஞ்சோதி குறிப்பிடுகிறார்
தக்கோலந் தின்று(நாலடி, 43)– என்று நாலடியாரில் வருகிறது. தமிழர்களுக்கு இப்போது தக்கோலம் என்றால் தக்கோலத்தில் நடந்த போர்தான் நினைவுக்கு வரும்.
TO BE CONTINUED………………………
–SUBHAM—
TAGS- தி.வி.பு. , உவமைகள், உருவகங்கள் ,பரஞ்சோதி முனிவர் ,திருவிளையாடல் புராணம், தக்கோலம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 66
Stamps posted today include YEAR 2005, 2006, STAMPS,
Pictures of 2500 Indian Stamps,
FOUR ENDANGERED BIRDS, FOUR HIMALAYAN LAKES, PHD CHAMBER OF COMMERCE, INS UDAYAGIRI, JHADAVPUR UNIVERSITY, INTEGRAL COACH FACTORY, CALCUTTA POLICE COMMISSIONER OFFICE, BHARAT RATNA MS SUBBULAKSHMI, ANNAMACHARYA, CHILDREN BOOK SOCIETY, YEAR OF PHYSICS, EINSTEIN,16 SQUADRON AIRFORCE, NEWBORN HEALTH, STOP CHILD LABOUR FOUR STAMPS, WORLD AIDS DAY, BISWANATH ROY, PANNALAL BARULAL, FIELD POST OFFICE FOUR STAMPS, ANCIENT ART- HORSE
–subham—
Tags– Stamps posted today include YEAR 2005, 2006, STAMPS,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Let us continue with Proverbs on Proverb….
Nothing tells us more of the spirit of a people than its proverbs.
Patch grief with proverbs (Much ado about nothing- Shakespeare)
Short sentences into which as in rules, the ancients have compressed life (Johann agricola, 1558)
Proverbs were anterior to books, and formed the wisdom of the vulgar, and in the earliest ags were the unwritten laws of morality-Isaac Disraeli
Grounding their fat faiths upon old country proverbs- Beaumont and Fletcher, 1639
I said that I loved the wise proverb
Brief, simple and deep;
For it I would exchange the great poem
That sends us to sleep.
I would part with the talk of a neighbour
That wearies the brain,
Like the rondo that reaches the end,
And beginneth again- Byran Waller Proctor
The genius, wit, and spirit of a nation are discovered in its proverbs- Francis Bacon
The Peope’s voice and Voice of God we call; and what are proverbs but the people’s voice? Coined first and current made by common choice. Then sure they must have weight and truth withal (Preface to collection of Proverbs, Howell)
The Proverb is something musty (Hamlet, Shakespeare)
The Proverbs of a nation are the great book which it is easy to read its character-Paxton Hood
The wit of one man; the wisdom of many- Lord John Russel.
There is often more true spiritual force in a Proverb than in a philosophical system- Thomas Calyle.
Hang’ em
They said they were an hungry signed forth Proverbs;
That, hung er broke stone walls;
That, dogs must eat;
That, meat was made for mouths;
That, the gods sent not corn for the rich man only;- with theses shreds they vented their complainings (Coriolanus, Shakespeare)
But then their saving pennies proverb becomes-Porter, 1599.
The guiding oracles which man has found out for himself in that great business of ours, of learning how to be, to do, to do without, and to depart (Mr Morley’s Definition of Proverbs)
It is wise and sooth fast saw
Half roasted never will be raw,
No dough is baked again to meal
No crock re-shapen at the wheel;
And having tasted stolen honey
You cant but innocence for money -Sir Arthur Pinero.
The wise make proverbs and the fools repeat them- Issac Disraeli.
A man of fashion never has recourse to proverbs and vulgar aphorisms- Lord Chesterfield
English language quotes finished; next Irish
To be continued…………..
Tags- Forty Thousand, Proverb Treasure, of Hindus!, Part 2