பாரதியார் பாடலில், அதர்வண வேதத்தில் சிரியஸ் நட்சத்திரம்-2 (Post No.10,435)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,435
Date uploaded in London – – 12 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாரதியார் பாடலில், அதர்வண வேதத்தில் சிரியஸ் நட்சத்திரம்- Part 2
கட்டுரையின் முதல் பகுதியில் சிரியஸ் SIRIUS நட்சத்திரம் பற்றி பாரதியார் பாடிய ‘திசை’ என்ற பாடலையும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் நேற்று தந்தேன் . அதர்வண மந்திரத்தில் குறிப்பிடும் ‘நாய்’ DOG என்பது நாய்/ CANIS MAJOR & CANIS MINOR (SUNA, SVANA IN SANSKRIT BECOMES S/CANIS IN LATIN) நட்சத்திரமான சிரியஸ்தான் என்பதை வெள்ளைக்காரர்களும் ஒப்புக்கொண்டு மந்திரத்தின் கீழ் அடிக்குறிப்பு எழுதி இருப்பதை யும் வெளியிட்டேன். ஆனால் அந்த மந்திரத்தில் வரும் மூன்று கால காஞ்சர்கள் என்ன என்பது தெரியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். அவை பிளாக் ஹோல் BLACK HOLE எனப்படும் கருந்துளைகள் என்று எனது கண்டுபிடிப்பையும் வெளியிட்டேன். சிரியஸ் என்பது இரட்டை நட்சத்திரக் BINARY STAR கூட்டம் என்ற தற்கால வானியல் தகவலை உறுதி செய்யும் அதர்வண வேத கவிதையை இன்று காண்போம் .

‘பகவத் கீதையில் கருந்துளைகள்’ BLACKHOLES IN BHAGAVD GITA என்ற எனது பழைய கட்டுரையில் கருந்துளைகள் பற்றி விளக்கியுள்ளேன். அவை பிரம்மாண்ட ஈர்ப்பு விசை கொண்ட, நட்சத்திரங்களை விழுங்கி ஏப்பம் விடும், மர்ம கருப்பு மையங்கள். காலம் கூட அதிலிருந்து தப்பிக்க முடியாது; இதை பகவத் கீதை விஸ்வரூப தரிசன அத்தியாயத்தில் காண்கிறோம். அதர்வண வேத துதியில் காணப்படும் கால காஞ்சர்கள் என்ற சொற்களும் இதை எடுத்துக் காட்டுகின்றன.

இந்துக்கள் சொல்லும் காலம் TIME IS CYCLICAL சைக்ளிக்கல் (வட்டப்பாதை); மேலை நாட்டோர் சொல்லும் காலம் லீனியர் (நெடுங்கோட்டுப் பாதை) TIME IS LINEAR ; இந்துக்கள் சொல்லுவதே சரி என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை .
XXX


ATHARVANA VEDA MANTRA IN FULL; BOOK 6, HYMN 253
6ம் காண்டம், துதி 253, காலகாஞ்சர்கள்
1.கீழேயுள்ள எல்லாப் பொருட்களையும் பார்த்துக்கொண்டே அவன் மேலே பறக்கிறான் ; வானத்தில் உள்ள நாய் ஆகிய உன்னை நாங்கள் வணங்கி படைக்கிறோம்.

2.கடவுள் போல வானத்தில் தோன்றும் மூன்று கால காஞ்சர்களை உதவிக்கு அழைக்கிறேன் . இந்த மனிதனை துயரிலிருந்து விடுவிக்கவும்.

3.நீரில் நீ உதித்தாய்; வானமே உனது இருப்பிடம்; பூமியிலும் கடலிலும் உனது மகிமை பிரதிபலிக்கிறது.தெய்வீக நாய் DIVINE DOG வடிவில் உள்ள உன்னை நாங்கள் வணங்குகிறோம்

ஒரு வேளை எகிப்தியர்கள் போல சீரியஸ் நட்சத்திர உதயத்தைக் கொண்டாடும் சடங்காக இது இருக்கலாம். EGYPTIANS CELEBRATED RISING OF SIRIUS THAT COINCIDED WITH THE FLOODING OF NILE RIVER.

அவர்கள் நைல் நதியின் வெள்ளப் பெருக்கு சிரியஸ் நட்சத்திர உதயத்தன்று ஏற்பட்டதால் அதற்கு தனி மரியாதை செலுத்தினர்
XXX
THIRD STAR IN SIRIUS/ CANIS CONSTELLATION? OR BLACK HOLE?
மூன்று காலகாஞ்சர்களை நான் கட்டுரையின் முதல் பகுதியில் பிளாக் ஹோல் என்னும் மர்மம் மிக்க கருந்துளைங்களோடு ஒப்பிட்டேன். இன்னொரு விளக்கமும் மனதில் உதிக்கிறது. அண்மைக்கால வானியல் சஞ்சிகைகள் சிரியஸ் நட்சத்திரக் கூட்டத்தில் மூன்றாவது நட்சத்திரமும் இருப்பதாகவும் பேசுகினறன. ஆகவே எதிர்கால அமெரிக்க ரஷிய கண்டு பிடிப்புகள் இந்துக்கள் சொன்னதை மெய்ப்பிக்கும் .
ரிக் வேதம் உலகிலேயே பழமையான புஸ்தகம். அதிலுள்ள மந்திரங்களைக் கொஞ்சம் கொஞ்சம் மாற்றியும் கூட்டியும் குறைத்தும் அதர்வண வேதம் நெடுகிலும் உள்ளன. ரிக் வேதத்தில் யமன் பற்றிய பாடல்களில் யமனிடம் இரண்டு நாய்கள் உள்ளதாகவும் அவைகளை நான்கு கண் நாய்கள் (2+2 கண்) என்று வருணிப்பதையும் காண்கிறோம். இவைகளை பிற்கால கிரேக்கர்களும் கடன் வாங்க்கி சரமா SARAMA = HERMES என்ற நாயை ஹெர்மஸ் என்று எழுதிவைத்துள்ளனர். அவர்கள் மொழியில் எஸ் S இல்லாததால் சிந்துவையும் ஹிந்து என்று மாற்றி எழுதி நமக்கு எல்லாம் புது நாம கரணம் செய்தவர்களும் அவர்கள் தான்.
அதர்வண வேத துதியில் வரும் இரட்டை நாய்கள் பற்றி வெள்ளைக்காரர்கள் விளக்கம் சொல்லவில்லை ;அவை கேனிஸ் மேஜர் கேனிஸ் மைனர் என்னும் சிரியஸ் நாய் நட்சத்திரக் கூட்டமே என்பது எனது வியாக்கியானம் .
சிரியஸ் SIRIUS= SCORCHING என்ற சொல் கிரேக்க மொழியில் எரியும் SCORCHING/ BURNING BRIGHT என்று பொருள்படும். ஜொலிக்கும் என்ற பொருள். தமிழில் உள்ள எரியும் என்பதோடு ஒரு எஸ் S ஒலி சேர்ந்துள்ளது போலும்!!!
XXX


இதோ அதர்வண வேத 7ஆம் காண்ட 320 ஆவது துதி

1.தேவர்கள் வேள்வியால் வேள்வியைப் போற்றினார்கள் ; அதுவே பூர்வீக தருமம்; அதன் மூலம் சாத்யர்கள் உயர்ந்த உலகத்தை அடைந்தார்கள்

2.வேள்வி தோன்றியது; அது தோற்றுவிக்கப்பட்டது ; அது மறுபடியும் வளர் ந்தது; அது தேவர்களின் அதிபதியாயிற்று. அது எங்களுக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்

3.எங்கு தேவர்கள் அவியால் தேவர்களை பூஜித்தார்களோ, இறவா நிலை எய்தியோரை அதே உற்சாகத்துடன் பூஜித்தார்களோ, நாங்களும் அந்த உயர்ந்த நிலையத்தில் இன்பமுடன் இருப்பதற்கு அருளுக
4.தேவர்கள் யக்ஞத்தை புருஷன் என்னும் அவியால் வேள்வியாக்கினார்கள்; முன்னர் சொன்னதைவிட இதுவே பெரிய வேள்வி
5.வியப்புற்ற தேவர்கள் நாயாலும் பசுக்களின் அங்கங்களாலும் வேள்வியில் பூஜித்தார்கள் / போற்றினார்கள்; இந்த வேள்வியை மனத்தால் அறிபவனை நீ எங்களுக்கு அறிவி ; நீ இங்கு பேசுவாயோ !

இந்த துதிக்கு முழு விளக்கம் கிடைக்காமல் வெள்ளைக்காரர்கள் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்

கருத்து – வேள்வியைப் புகழ்ந்து பாடுதல்.

வெள்ளைக்காரன் கொடுக்கும் அடிக்குறிப்புகளை முதலில் காண்போம் —

மந்திரம் 1- சாத்யர்கள் = பூஜிக்கத்தக்கவர்கள்; வானத்தில் வசிக்கும் தேவதைகள் என்பது யாஸ்கரின் கருத்து. சிறிய தேவதைகள் என்பது மிகவும் பிற்காலத்தில் தோன்றிய அமரகோஷம் சொல்லும் கருத்து
வெள்ளைக்காரன் கணக்கில் யாஸ்கர் – கி.மு.800; அமரசிம்மன் – கிபி. 400; இருவருக்கும் இடைவேளை 1200 ஆண்டுகள்! இந்த மந்திரம் ரிக்வேதத்திலும் உளது 1-1164-50; 10-90-16

மந்திரம் 4
புருஷேன ஹவிஷா; இது பிராமணர்கள் தினமும் வீட்டிலும் கோவில்களிலும் சொல்லும் ரிக் வேத ‘புருஷ சூக்த’ மந்திர வரிகள் 10-90
எல்லா வெள்ளைக்காரர்களும் வியப்புடன் உரை எழுதும் மந்திரம் ; பிரபஞ்சத்தையே கடவுளாக உருவகித்து மனிதனே தன்னை வேள்வியால் பலி கொடுக்கும் தத்துவம் இது.

மந்திரம் 5
சுனா = நாய் என்ற சொல்லும், முக்தா = வியப்பு என்ற சொல்லும் இதில் உள்ளன. நாய் வேள்வி பற்றி எங்குமே இல்லையே என்று சொல்லி வெள்ளைக்காரர்கள் பேந்தப் பேந்த முழிக்கின்றனர். மாக்ஸ்முல்லர்- மார்க்ஸீய கும்பலில் மொத்தம் 30 பேர் உண்டு. இந்த கும்பலைச் சேர்ந்த எம்.விக்டர் ஹென்றி M. VICTOR HENRY நிறைய அதர்வண வேத விஷயங்களுக்கு மனம் போன போக்கில் உரை எழுதுகிறார். அவர் சொல்லையே “மூர்த்தா” என்று புரட்டிப்போட்டு வேறொரு குதிரைத் தலைக் கதையை முடிச்சுப் போடுகிறார். அது தத்யங் என்ற முனிவர் கதை; ரிக்வேத 1-116-12 விளக்கத்தில் வருவது.
XXX


எனது கருத்துக்கள் MY COMMENTS
முதலில் கடைசி மந்திரத்தைப் பார்ப்போம் ; மந்திரத்தில் குதிரையும் இல்லை. தலையும் இல்லை. நாயுடன் ‘வியப்பான’ , ‘புதிரான’ PERPLEXED வேள்வி என்பது சிரியஸ் என்னும் நாய் நட்சத்திரத் தொடர்புடையதே. ஆறாவது காண்ட துதியில் இது வருவதையும் கண்டோம். எகிப்தியர் போல சிரியஸ் உதயத்தன்று சிறப்பான கொண்டாட்டம் இருந்திருக்கக் கூடும் ; அல்லது அந்த தினத்தில் நடந்த வேள்வியாக இருக்கலாம். இதே போல இரண்டு நட்சத்திரக் குறிப்புகள் மேலும் 3,4 துதிகளில் வருகிறது. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் போது நடந்த வேள்விகள் என்பது என் கருத்து
மந்திரம் 4 – புருஷ சூக்த விளக்கத்தில் உள்ளது (ரிக்.10-90)

மந்திரம் 1- இந்த சாத்யர்கள் யார் என்பது பற்றி எங்கும் முழு விளக்கம் இல்லை. யாஸ்கர் என்பவரே 600 வேத சொற்களுக்கு அர்த்தம் தெரியாமல் முழிப்பதாக அரவிந்த மகரிஷி வேதிக் க்ளோசரி VEDIC GLOSSARY BY AUROBINDO புஸ்தக முன்னுரையில் விளம்புகிறார். யாஸ்கருக்கும் ரிக்வேதத்துக்கும் இடைவெளி சில ஆயிரம் ஆண்டுகள் ; யாஸ்கருக்கும் சாயனருக்கும் உள்ள இடைவெளி, தள்ளிப்போன வெள்ளைக்கார பயல் கணக்கில் 2100 ஆண்டுகள் .

மதுரை நகர பாரத்வாஜ கோத்திரப் பார்ப்பான் நச்சினார்க்கினியர் உரை இல்லாவிடில் 2000 ஆண்டு சங்கத் தமிழ் நூல்களே நமக்கு விளங்காது; அப்படி இருக்கையில் பல்லாயிரம் ஆண்டுப் பழமையான வேதத்தை அறிய காஞ்சி மஹான் போன்ற பெரியோரை நாம் நாட வேண்டுமேயன்றி மாடு தின்னும் புலையனை நம்பக்கூடாது . நேற்று வந்த தள்ளிப்போன வெள்ளைக்காரன் உரை எழுதும் போது நான் எனது கருத்தை வெளியிட்டேன். அதையே ஏற்போருக்கு யான் இளைச்சவன் இல்லை .

வாழ்க வேதம்; 6000 ஆண்டுப் பழமையை வாய் மொழி மூலமாக காத்து நமக்கு அளிக்கும் பார்ப்பான் வாழ்க ;
அவன் பிரம்மத்தை மட்டுமே பார்ப்பான் !
XXX SUBHAM XXX

tags- சாத்யர்கள், சிரியஸ், சுனா = நாய் , அதர்வண மந்திரம்

கிரேக்க மொழிச் சொல்லில் தமிழ், சம்ஸ்க்ருதம்- Sirius/Sothis (Post No.8918)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8918

Date uploaded in London – –11 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதத்தில் சுவையான வான சாஸ்திரக் குறிப்புகள் உள்ளன. இவற்றைப் பார்க்கையில் எல்லோருக்கும் வான சாஸ்திரம் நன்கு தெரிந்து இருந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.

முதலாவது சுவையான விஷயம் வானியலுக்கு ‘ஜோதிஷம்’  என்று பெயர்! வேதத்தைப் பயில்வோருக்கு இது ஒரு கட்டாய பாடம் ஆகும்

‘ஜோதி’ JYOTI என்றால் ஒளிப் பிழம்பு . ஜோதிஷம் என்றால் ஒளி உமிழும் விண்வெளி (Light Emitting Matters in the Sky) விஷயங்களை  ஆராய்வது ஆகும்.

அந்த ஜோதி = ஒளிப்பிழம்பு  என்ற சொல், வானத்தில் மிகப்பிரகாசமான நட்சத்திரத்துக்கு சூட்டப்பட்ட கதையைக் காண்போம் . மிகவும் பிரகாசமான கிரகம் வெள்ளி Venus . மிகவும் பிரகாசமான நட்சத்திரம் – Sirius சிரியஸ்

நட்சத்திரம் ஜொலிக்கும்/ கண் Twinkle சிமிட்டும் .

கிரகம் கண் சிமிட்டாது No Twinkling ஒளிரும்

இரவு நேரத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமானது சிரியஸ் என்னும் நட்சத்திரம் ஆகும். இதை கிரேக்கர்கள் சோதிஸ் SOTHIS என்று அழைப்பர். “ஜ|” J என்னும் எழுத்து உலகில் சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த பழைய மொழியிலும் கிடையாது. அதை ச அல்லது யா என்ற உச்சரிப்புடன் பயில்வர். எடுத்துக் காட்டாக தமிழில் ஜெ கிடையாது. உலகிலேயே மிகவும் குறைகளை உடைய பழைய மொழி தமிழ்தான் .ஏன் எனில் அரேபிய, எபிரேய மொழிகளில் உள்ள ‘ஹ’ வும் இராது. ‘ஸ் ஷ்’ ‘ஜ’ போன்ற உச்சரிப்பும் இராது. இதனால் செமிட்டிக் மொழி உச்சரிப்போ, ஐரோப்பிய மொழி உச்சரிப்போ தமிழில் தர இயலாது. அவைகளை தமிழ் வழி ப்படுத்த (Tamilize) வேண்டும் அப்படிச் செய்கையில் பல அனர்த்தங்கள் விளையலாம். இக்குறைகளை  உணர்ந்தோர் பிற்காலத்தில் ஜ , ஷ, ச, ஹ , க்ஷ  முதலிய கிரந்த எழுத்துக்களையும் (Grantha Lipi)  உச்சரிப்புகளை அறிமுகப்படுத்தினர்

xxxx

சிவப்பு வர்ணத்தில் திருவாதிரை; மூன்று நட்சத்திரம்- மிருக ஸீர்ஷம் 

நான் கண்டுபிடித்த புதிய கொள்கை-

இந்திய -ஐரோப்பிய மொழிக் கொள்கை , திராவிட மொழிக் கொள்கை தவறு. (Classification of Indian Languages is wrong)

இரண்டும் வேவ்வேறு குடும்பம் அல்ல .

உலகிலேயே மிகப்பழைய மொழி/கள் சம்ஸ்கிருதமும் தமிழுமே .

எந்த ஒரு பழைய மொழிச் சொல்லையும் நம்முடைய மொழிகளில் காட்டிவிடலாம் .(Oldest Two Languages are Tamil and Sanskrit; any old word of any any ancient language can be traced back to these two Indian Languages)

அதாவது இந்திய மொழியின் வேர்ச் சொல் (root) இரண்டு வகையில் பிரியலாம் ; ஒன்று சம்ஸ்கிருத வழி ; மற்றோன்று தமிழ் வழி ; ஆங்கிலத்தில் வழங்கும் எண் 1, 8 (One, Ettu) ஆகியன தூய தமிழ் உச்சரிப்பிலும் ஏனையன சம்ஸ்கிருத உச்சரிப்பிலும் இருப்பதைக் காணலாம் .

இப்பொழுது வான சாஸ்திரத்தில் ஒரு உதாரணம் காட்டப் போகிறேன்.

ஜோதி என்றால் எரியும் பிழம்பு ; எடுத்துக்காட்டு – தீப ஜோதி, தீப ஜ்வாலை

தமிழில் ஜோதி = எரியும்

இந்த இரண்டும் வானத்திலேயே பிரகாசமான சிரியஸ் (Siriu) நட்சத்திரத்தில் இருப்பதைக் காணுங்கள்

ஸ் /எரி -ய = கிரேக்க மொழி =”Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). = எரியும் S/Eri/os

இதையே கிரேக்கர்கள் SOTHIS சோதி (ஜ்யோதி) என்றும் அழைத்தனர் =after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).

ஆக தமிழ் ‘எரியும்’ சம்ஸ்க்ருத ஜோதி ஆகிய இரண்டையு ம் சிரியஸ் நட்சத்திரத்தில் காணலாம்

xxxx

நைல் = நீல மாதா 

எகிப்திய மொழியில் சம்ஸ்க்ருதம்

எரியும்(S-eri-os) என்று கிரேக்க மொழியில் தமிழைப் பயன்படுத்திய கிரேக்கர்கள் திடீரென்று சோதி / ஜோதி Sothis என்று ஸம்ஸ்க்ருதத்தையும் பயன்படுத்தியது ஏன் ?

ஏனெனில் எகிப்திய மொழியில் அதை ‘சோதி உதயம்’ Sopdet என்று அழைத்தனர்.

எகிப்தியர் வாழ்வில் சிரியஸ் மிக முக்கியமானதாகும். சிரியஸ்  அடிவானத்தில் தோன்றிவிட்டால் உலகிலேயே மிகப்பெரிய நதியான நைல் NILE வெள்ளப் பெருக்கெடுத்து எகிப்திய தேசத்தை வளப்படுத்தும் இதனால் சிரியஸ் நட்சத்திரத்தோடு உதயம்/ உத்பத்தி என்ற சொல்லையும் சேர்த்து சோதத் பத் Sopdet  என்றனர்.

அந்த நதிக்கே நீல – நைல் (BLUE NILE) என்றும் ஸம்ஸ்க்ருதப் பெயர் சூட்டினர் .

நதியை கங்கா மாதா போல,  பெண் (RIVER GODDESS)  உருவாக்கினர் .

thuban= druvan

அதுமட்டுமல்ல சிவன் தலையில் கங்கை இருப்பது போல ஆசிரிஸ் OSIRIS தேவன் தலையில் நதியை வரைந்தனர்.சிவனின் உருவமான நந்தியை ஆசிரிசுக்கு வரைந்தனர்

சிரியஸ் தோன்றினால் எகிப்தில் வெள்ளம்; கிரேக்க நாட்டிலோ அக்கினி நட்சத்திர ஆரம்பம். ஆகையால் அதை அவர்கள் ஸ் / எரி /யும் – சிரியஸ் என்று பெயர் சூ ட்டியதில் வியப்பில்லை

நந்தி/சிவன் ; தலையில் சந்திரன் /கங்கை

Source material :–

((Sirius is the brightest star in the night sky. With a visual apparent magnitude of -1.46, it is almost twice as bright as Canopus, the next brightest star.

The name “Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). The star has the Bayer designation Alpha Canis Majoris. What the naked eye perceives as a single star is actually a binary star system, consisting of a white main sequence star of spectral type A1V, termed Sirius A, and a faint white dwarf companion of spectral type DA2, termed Sirius B. The distance separating Sirius A from its companion varies between 8.1 and 31.5 AU.

The exact pronunciation of ancient Egyptian is uncertain, as vowels were not recorded until a very late period. In modern transcription, her name usually appears as Sopdet (Spdt,[3] lit. ‘Triangle’ or ‘Sharp One’), after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).))

tags — சிரியஸ் , சோதி, ஜோதி, கிரேக்க மொழி , எரியும்

Xxx subham xxx

பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)

Written by London swaminathan

 

Date: 25 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 17-36

 

Post No. 3670

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

கட்டுரை-9ல் முப்பது வம்சங்களின் தோற்றத்தையும் முதல் வம்சாவளியையும் கண்டோம்.

இரண்டாவது வம்சாவளி (2800 BCE)

இரண்டாவது வம்சாவளி பற்றி அதிக விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை. ஆயினும் எகிப்து ஒரே நாடாக (Unification) உருப்பெற்றது. இந்த சாதனையை உருவாக்கியவர் காசிகெம்வி (Khasehemvy). அவர் மிகவும் பெரிய உருவம் படைத்தவர். அவர் விட்டுச்சென்ற நினைவலைகள் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. அவருக்கு மகன் கிடையாது. எகிப்திய வழக்கப்படி அவர் தன் மகளையே திருமணம் செய்துகொண்டார் என்று ஊகிக்கப் படுகிறது.. அவர் பெயர் (Nemmathap) நெம்மாதாப்.

 

துவக்க காலத்தில் பெண்களே ஆட்சிக்கு வந்தனர். அதாவது மன்னனின் மூத்த மகள் அல்லது மஹாராணி,  (Isis) ஐஸிஸ் என்னும் தேவதையின் அம்சமாகக் கருதப்பட்டாள். மன்னன், ஹோரஸ் (Horus) என்னும் கடவுளின் அவதாரமாகக் கருதப்பட்டார். சிம்மாசனத்துக்கான சித்திர எழுத்து மூலம்  ஐஸிஸ் குறிக்கப்பட்டாள். அந்த சிம்மாசனத்தில் உடகார்ந்ததால் மன்னர் கடவுள் அம்சம் பெறுகிறார்.

 

இந்து அரசர்களும் அரச பதவியை ராஜ்யலெட்சுமி என்று அழைத்தது ஒப்பிடத் தக்கது.

 

மூன்றாவது வம்சம் (2600 BCE)

நெம்மாதாப் (NemmaathapP மூலம் மூன்றாவது வம்சம் தோன்றியது. அவளுக்கு இரண்டு மகன்கள். முதல் புதல்வனின் பெயர் சனக்தே (Sanakhte) அல்லது Nebka நேப்கா. இரண்டாவது புதல்வன் தஜொசர் நெட்ஜெரிகேட் (Djoser Netjerykhet).

 

முதல் பிரமிட் (First Pyramid)

 

நெட்ஜெரிகேட் (கேது) என்ற மன்னந்தான் முதல் முதல் பிரமிட் கட்டியவர். இது படிக்கட்டுகள் போல அமைந்த (Step Pyramid)  பிரமிட். இது சக்கரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பிரமிடு கட்டிய பெருமை அவருடைய அமைச்சரும், கட்டிடக் கலைஞருமான இமோதேப் (Imhotep)  அவர்களையே சேரும் ஒரு  மில்லியன் டன் (பத்து லட்சம்) கற்களை நன்கு செதுக்கி உருவாக்கப்பட்ட ஒப்பற்ற கட்டிடம் இது. இதற்கு ஈடு இணையாக அக்காலத்தில் ஒரு கட்டிடமும் கிடையாது.

 

பல பெயர்கள் கேட் என்று முடியும். இது மஹாபாரதத்தில் பல அரசர்களின் பெயர்கள் ‘கேது’ என்பதன் திரிபாக இருக்கலாம். இதே போல அமைச்சரின் பெயர் ‘தேப்’ என்பது ‘தேவ’ என்பதன் திரிபாக இருக்கலாம். எகிப்தில் பல தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதை முன்னரே ஒரு  கட்டுரையில் தந்துள்ளேன்.

 

படிக்கட்டு வடிவில் அமைந்த முதல் பிரமிடுதான் பிற்கால மன்னர்களைப் பெரிய பிரமிடுகளைக் கட்ட ஊக்குவித்தது. எகி ப்துக்கு வரலாற்றில் அ ழி யாத இடத்தையும் புகழையும் ஈட்டித் தந்தது.

 

மன்னர் என்பவர் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டதால் மன்னரின் மதிப்பு உயர்ந்தது. ஹீலியோபோலிஸ் (Heliopolis) எனப்படும் சூர்யபுரி நகரம் பெரும் சிறப்புடன் திகழ்ந்தது. இங்கிருந்து நட்சத்திரங்களைக் கவனித்தனர். நட்சத்திரங்களை வழிபடவும் செய்தனர்.

 

நட்சத்திர வழிபாடு; அதிசய சிரியஸ் (SIRIUS) நட்சத்திரம்

 

இது இந்துமத்துக்கு மிக நெருக்கமான விஷயம். இன்றுவரை 27 நட்சத்திரங்கள் அதற்கான அதி தேவதைகள் வணங்கப்படுகின்றன. மேலும் வேதங்களிலேயே நடசத்திரங்களின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த இடத்தில் சிரியஸ் (Sirius) நட்சத்திரம் பற்றிய சில வியப்பான தகவல்களைக் காண்போம்; எகிப்தியர் வாழ்வில் சிரியஸ் நடசத்திரம் முக்கியப் பங்கு ஆற்றியது.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 19 ஆம் தேதி இது எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவின் வானத்தில் தோன்றும்போது நைல் நதி வெள்ளப் பெருக்கெடுக்கும். ஆகையால் இதை எகிப்தியர்கள் ஆதிகாலத்திலிருந்தே கவனித்து அது தோன்றும் தேதியைப் பதிவு செய்யத் துவங்கினர். இதை எகிப்தியர்கள் சோதி (Sothi) என்று அழைத்தனர் நாமதை ஜோதி (ஒளி) என்று அர்த்தம் செய்தாலும் பொருந்தும். ஏனெனில்  இதுதான் வானத்திலேயே மிகவும் பிரகசமான நட்சத்திரம். எல்லா பண்பாடுகளும் இதை நாய், ஓநாய் அல்லது அது போன்ற மிருகங்களுடன் சம்பந்தப்படுத்தினர். சம்ஸ்கிருதத்தில் இதை ம்ருக வ்யாத என்று அழைத்தனர். மான் வேட்டை என்று பொருள். எகிப்தில் இது தோன்றும்போது வெள்ளம் வந்தது போலவே கிரேக்க நாட்டில் கோடைக் காலம்  துவங்கும். ஆகவே அவர்களைப் பொருத்தமட்டில கோடை நட்சத்திரம். பாலிநேசியன் எனப்படும் பசிபிக் மஹாசமுத்திர பழங்குடியின ருக்கு இது கப்பல் விட உதவும் நட்சத்திரம்.

 

இந்த நட்சத்திரம் முதலில் இருந்த நிலைக்குத் திரும்பிவர 1460 ஆண்டுகள் ஆகும்.

 

எகிப்திய காலண்டர் சிரியஸ் நட்சத்திரம் தோன்றும் நாளன்று துவங்கும். இதை எகிப்தியர் சோப்டு (Sopdu) என்று அழைத்தனர். கிரேக்க நாட்டினர் சோதிக் காலண்டர் (Sothic Calendar) என்று அழைத்தனர். இந்துக்களின் சாந்திர மாதம் போலவே இதுவும் 360 நாட்களைக் கொண்டது. பின்னர் ஐந்து நாட்களைக் கூட்டி 365 நாள் என்று மாற்றினர். அப்படியும் ஒவ்வொரு ஆண்டும் 6 மணி  நேரம் துண்டு விழும். ஆங்கிலக் காலண்டரில் லீப் வருடம் என்று உண்டாக்கி இதை ஈடு செய்தனர். எகிப்தியரும் வேறு சில காலண்டர் முறைகளைப் புகுத்தி குறைகளைப் போக்கினர்.

 

புதிய ராஜ்யம் (New Kingdom) , நடு (Middle Kingdom) ராஜ்யம் ஆகியவற்றில் சிரியஸ் நட்சத்திர உதயம் பற்றி மூன்று முறை கல்வெட்டுகளில் பதித்துள்ளனர்.

 

தொடரும்………………..