
Written by London Swaminathan
Date: 7 JANUARY 2018
Time uploaded in London-11-24 am
Post No. 4591
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
சாணக்கியன் மாபெரும் அறிவாளி; பெரிய அரசியல்வாதி; ராஜ தந்திரி; பொருளாதார நிபுணர்; நூல்லாசியரும் கூட!
ஆயினும் அவர் சொல்லும் சில விஷயங்கள் வியப்பை ஏற்படுத்தும்; ஒருவேளை 2300 ஆண்டுகளுக்கு முன்னால் — அவர் காலத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் பொருள் விளங்கி இருக்கும்! இதோ அவரது ஸ்லோகங்கள்:–
மதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம்
யஸ்மின் தேசே ந ஸம்மானோ ந வ்ருத்திர்ந ச பாந்தவாஹா
ந ச வித்யாகமஹ கஸ்சித்தம் தேசம் பரிவர்ஜயேத்
பொருள்:-
மரியாதையோ வாழ்க்கைக்கான ஊதியமோ, சொந்த பந்தங்களோ, அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புக்களோ எந்த நாட்டில் இல்லையோ அந்த நாட்டில் வசிக்காதே.
சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 8
xxxxxx

டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம்
தனிகஹ ஸ்ரோத்ரியோ ராஜா நதீ வைத்யஸ்து பஞ்சமஹ
பஞ்ச யத்ர ந வித்யந்தே ந தத்ர திவஸம் வஸேத்
பொருள்
கீழ்கண்ட ஐந்து இல்லாத இடங்களில் ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது:
பணக்காரர், வேத பண்டிதர், அரசன், நதீ, டாக்டர்
சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 9

xxxxxx
அச்சம், அடக்கம் இல்லாவிடில்….
லோகயாத்ரா பயம் லஜ்ஜா தாக்ஷிண்யம் த்யாகசீலதா
பஞ்ச யத்ர ந வித்யந்தே குர்யாத் தத்ர ஸம்ஸ்திதிம்
சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 10
பொருள்
கீழ்கண்ட ஐந்து இல்லாத இடங்களில் வசிக்கக் கூடாது:- வாழ்வதற்கான வழி/ வேலை, சட்டத்தைக் கண்டு அச்சம், அடக்கம், நாகரீகம், தர்ம சிந்தனை
xxxxx

நண்பனிடம் எல்லாவற்றையும் சொல்லாதே
ந விஸ்வஸேத் குமித்ரே ச மித்ரே சாதி ந விஸ்வஸேத்
கதாசித் குபிதம் மித்ரம் ஸர்வம் குஹ்யாம் ப்ரகாசயேத்
சாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 6
பொருள்
கெட்ட நண்பனை நம்பாதே; நல்ல நண்பனையும் அதிகம் நம்பாதே; ஏனெனில் ஒரு நாள் கோபம் வந்தால் உன்னுடைய ரஹசியங்களை எல்லாம் பட்டவர்த்தனம் ஆக்கிவிடுவான்.
— சுபம், சுபம் —