
Written by London swaminathan
Date: 26 December 2015
Post No. 2429
Time uploaded in London :– 12-17
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
ஒருநாள் கும்பபுரம் குப்பாசாஸ்திரிகள், ஏகாதசி அன்று வெற்றிலை பாக்குப் புகையிலை போட்டுக்கொண்டு மிதுனபுரம் சுப்பாதீக்ஷிதர் வீட்டுக்கு வர, அவர் குப்பா சாஸ்திரிகளைப் பார்த்து, “ஏனையா ஏகாதசியன்று வெற்றிலைபாக்கு போட்டு வந்தீர்?” என்றார்.
குப்பா:- ஐயா! நன்றாய்ச் சொன்னீர். பிரம்மபத்ரமாகிய புகயிலை போட்டுக் கொண்டதால் வெற்றிலை போடுவதில் தோஷமில்லை.
சுப்பா:- பிராமணன் புகையிலை போடலாமா?
குப்பா: பழையது சாப்பிட்ட எனக்கு புகையிலையின்றி சரியாய் வராது.
சுப்பா:- அடடா! ஏகாதசியன்று பழையது சாப்பிடலாமா?
குப்பா:- பழையது சப்பிடாவிட்டால் ஏர் பிடித்து உழ முடியாதே!
சுப்பா:- சரி, சரி; பிராமணன் ஏர் பிடித்து உழுவது எந்தவூர் வழக்கம்?
குப்பா: என்னையன்றி வில்வக்கட்டை கலப்பையைக் கொண்டு உழ வேறொருவராலும் சாத்தியமாகாது.
சுப்பா:- இதென்ன அநியாயம்! வில்வ மரத்தை வெட்டக் கூடாதே. அதனால் செய்த கலப்பையைப் பிடித்து பிராமணன் உழலாமா?
குப்பா:- ஓய்! அதன் மகிமை உமக்குத் தெரியாது. வில்வக் கட்டையைக் கலப்பைக்குப் போடாவிடில் காராம்பசு ஏருக்கு வராது.
சுப்பா: கிருஷ்ண, கிருஷ்ண; மகா பாவம். காராம்பசுவைக் கொண்டு உழலாமாங்காணும்?
குப்பா:- நல்ல நீதி சொல்ல வந்தீர். அப்படிச் செய்யாவிடில் துளசி வனம் அழியாதுங்காணும்.
சுப்பா:- ராம, ராம; அட சண்டாளா! மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்க எல்லாரும் துளசி வனம் வைக்கிறார்கள் நீரதை அழிக்க வேணும் என்கிறீர்.

குப்பா:- போங்காணும் போம்; துளசி வனம் அழியாவிட்டால் கஞ்சாப் பயிராவது எப்படி?
சுப்பா:- ஹரி, ஹரி! ஏன் ஓய் என்ன இது! பிராமணனுக்குக் கஞ்சாப் பயிர் எதற்க்குங்காணும்?
குப்பா:- கஞ்சாப் பயிர் செய்யாவிடில் நான் சாப்பிடுவதற்குக் கடையில் வாங்கிக் கட்டுபடியாகாது இல்லியோ?
சுப்பா:- ஓய், இது என்ன அநியாயம்? பிராமணன் கஞ்சா சாப்பிடலாமாங்காணும்?
குப்பா:- ஓய் கூச்சல் போடாதேயும். வம்ச பரம்பரையாய் நடந்து வருகிற வழக்கத்தை விடக்கூடாதுகாணும். மேலும் அது சாப்பிடாவிட்டால் நான் சாப்பிடுகிற மாம்சம் எப்படி ஜீரணமாகும்?
சுப்பா:- சரி, சரி, உம்மோடு பேசுவதுகூட மகபாவம்! நீர் பிராமணனே இல்லை! (என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டார்)
குப்பா:- ஏன்? நீர் பிராமணன் அல்ல என்றால் ஆகாதோ? (என்று சொல்லி நடையைக் கட்டினார்).
–சுபம்—
You must be logged in to post a comment.