சாமுத்ரிகா லட்சணம்: கம்பன் தரும் தகவல் (Post No.3142)

sangu-chakra-reka

Written by London Swaminathan

 

Date: 11 September 2016

 

Time uploaded in London: 7-03 AM

 

 

Post No.3142

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உடலில் ஒவ்வொரு அங்கமும் எப்படி இருந்தால் அதனால் என்ன பலன் என்று கூறும் சாத்திரம் சாமுத்ரிகா லக்ஷண சாத்திரம் ஆகும். இது குறித்து வராஹ மிஹிரர் சொன்ன விஷயங்களை ஏற்கனவே எழுதினேன்.

 

கம்பனும் ராமாயணத்தில் இது பற்றி பல குறிப்புகளைக் கொடுக்கிறான். சம்ஸ்கிருதத்தில் ஆஜானு பாஹு என்பர். அதை அவன் நீண்ட நெடுந்தோள், தாள்தோய் தடக்கை என்றெல்லாம் வருணிப்பான்.

woman

இதோ ஒரு பாடல்:

 

சங்கு சக்கரக்குறி உள தடக்கையில் தாளில்

எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை

செங்கண் விற்கரத்து இராமன் அத் திரு நெடுமாலே

இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

-நட்பு கோட் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்:–

சுக்ரீவனிடம் அனுமன் சொல்லுகிறான்

 

இராமனுக்கு பெரிய கைகளிலும் கால்களிலும் சங்கு, சக்கர அடையாளங்கள் உள்ளன. இததகைய உயர்ந்த இலக்கணங்கள் எந்த உலகத்திலும் எவர்க்கும் இல்லை. ஆகையால் சிவ ந்த கண்களையும் வில்லை ஏந்திய கைகளையும் உடைய இராமன் இப்போது அறத்தை நிலை நிறுத்துவதற்கா க உலகில் அவதரிக்கும் திருமாலே ஆவான். மேலும்……………..

 

கைகளில் மட்டும் சங்கு ச்க்கர ரேகை இருப்பதே ஆபூர்வம்; இவனுக்கோ கைகளிலும் கால்களிலும் இப்படி சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன.

 

(எனக்கு ஒரு சிந்தனை: இப்படிக் கை, கால்களில் சாமுத்ரிகா லட்சண ரேகைகள் இருந்ததைத் தான் பிற்காலத்தில் உண்மையிலேயே கைகளில் சக்கரமும் சங்கும் இருப்பது போல உருவம் செய்துவிட்டார்களோ? ஆராய்ச்சிக்குரிய விஷயம்!)

 

ஐந்து உறுப்புகள் நீண்டதாக இருப்பது நல்லது என்று சம்ஸ்கிருத நூல்களும் மொழியும்:

 

பாஹூ நேத்ரத்வயம் குக்க்ஷிர்த்த்வே து நாசே ததைவ ச

ஸ்தனயோரந்தரம் சைவ பஞ்ச தீர்கம் ப்ரசக்ஷதே

 

பொருள்:-

நீண்ட கைகள், நீண்ட கண்கள், மூக்கு, வயிறு, முலைகள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படும்.

 

My earlier post:

Scientific proof for Samudrika Lakshanam

Posted by Santhanam Swaminathan on 18 Mar 2013

 

 

–Subahm–