Written by London swaminathan
Post No.2272
Date: 25 October 2015
Time uploaded in London: 6-37 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
சரக சம்ஹிதையில், திருக்குறளில் வாக்கிங் ஸ்டிக்/ கைத்தடி!!
வாக்கிங் ஸ்டிக் பற்றி வள்ளுவர் சொன்னார்:
கற்றிலனாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றன் துணை –குறள் 414
பொருள்:– ஒருவன் தானே கற்றுத் தெரிந்துகொள்ளவில்லை என்றாலும், கற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவனுக்கு கஷ்டம் (ஒற்கம்) வரும்போது, அது ஊன்றுகோல் (கைத்தடி, வாக்கிங் ஸ்டிக்) போல உதவும்.
ஸ்கலத: சம்ப்ரதிஷ்டானம் சத்ரூணாம் ச நிசூதனம்
அவஷ்டம்பனமாயுஷ்யம் பயக்னம் தண்டதாரணம்
–சரக சம்ஹிதா 5-102
கைத்தடியின் ஐந்து உபயோகங்கள்
ஸ்கலத: சம்ப்ரதிஷ்டானம் = கீழே விழுவதிலிருந்து தடுக்கும்
சத்ரூணாம் நிசூதனம் = எதிரிகளைத் தாக்க உதவும்
அவஷ்டம்பனம் = ஊன்றுகோலாக உதவும்
ஆயுஷ்யம் = நீண்ட ஆயுள் கிடைக்கும்
பயக்னம் = பயத்தைத் தடுக்கும்
அந்தக் காலத்தில் முதியோர் நலனில் எந்த அளவுக்கு அக்கறை இருந்தது என்பதை மேற்கூறிய இரண்டு பாடல்களும் காட்டும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே முதியோர் விஷயங்களை எழுதியும் வைத்தனர்.
இதோ மேலும் ஒரு எடுத்துக்காட்டு:
ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா ந தே வ்ருத்தா யே ந வதந்தி யே ந வதந்தி தர்மம் – நீதி சதகம் 3-58
எங்கு முதியோர் இல்லையோ அது சபை இல்லை;
தர்மத்தை உபதேசிக்காத முதியோர், முதியோரே அல்ல.
என்று நீதி சதகம் கூறும்.
–சுபம்–


You must be logged in to post a comment.