மனிதர்களில் இந்திரன் , பிரம்மா, விஷ்ணு, சிவன் யார்? (Post No.7584)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7584

Date uploaded in London – 17 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மனிதர்களிலும் இந்திரன் , பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இருக்கிறார்களாம். இதை 200 ஆண்டுகளுக்கு முன்னர் அறப்பளீஸ்வர சதகம் எழுதிய அம்பலவாண கவிராயர் கண்டுபிடித்துள்ளார். அவர் பாடலில் பகர்வதாவது,

பிறர் கைகளை எதிர் பாராது தன்னை மட்டும் காத்துக்கொள்பவன் சாமர்த்தியன் ஆவான்.

10 பேரை   காப்பாற்றுபவன் உலகம் புகழும் தேவன்  ஆவான்;

100 பேருக்கு தங்கக் காசுகள் கொடுத்து போற்றுபவன் ஒப்பற்ற இந்திரன் ஆவான் ;

1000 பேரை, இந்தப் பூவுலகில் காப்பாற்றும் புண்யவான் பிரம்மன் ஆவான்;

10,000 பேரை, அதாவது நன்மை செய்கின்ற பத்தாயிரம் பேரைக் காத்து ரக்ஷிப்பவன் செங்கண் மாலாகிய விஷ்ணு ஆவான்;

100000000 +++++  இவர்கள் போக மிச்சமுள்ள  எல்லா நல்லவர்களையும் காப்பாற்றும் மனிதன் இருக்கிறானே, அவன் சிவபெருமானுக்கே சமம் ஆவான்.தேன் ஒழுகும், இருள் போன்ற கூந்தலை உடைய தேவியை ஒரு பாகத்தில் வைத்திருக்கும், மன்மதனை மிஞ்சும் அழகுடைய சிவ பெருமானே ! அறப்பளிச்சுரனே ! (உன்னை வணங்குகிறேன்

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். நீதிகள் அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com

அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.

—subham —-