
Picture of Ardhanareeswara (Shiva and Parvati 50+50)
சம்ஸ்கிருதச் செல்வம்-1 by S Nagarajan
- 1. சிவனுக்கு இணை இல்லை!
சிறந்த சிவ பக்தர் ஒருவர். அவர் நல்ல கவிஞரும் கூட. சிவனை நினைத்தவுடன் வார்த்தைகள் பிரவாகமாகப் பொங்கி வருகின்றன. பாடுகிறார் இப்படி:
கிரீடே நிஷேஷோ லலாடே ஹுதாஷோ
புஜே போகிராஜோ கலே காலிமா ச I
தனௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம்
ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே II
கிரீடே நிஷேஷோ – அவனுடைய தலையிலே சந்திரன்!
லலாடே ஹுதாஷோ – நெற்றியில் தீ !
புஜே போகிராஜோ –புஜங்களைச் சுற்றி பாம்புகளின் ராஜா
கலே காலிமா – கழுத்தில் கறுப்பு வண்ணம்!
தனௌ காமினி யஸ்ய தத்துல்யதேவம் – அவனுடைய மனைவி அவனுடைய தேஹத்திலேயே!
இப்படிப்பட்டவனுக்கு நிகரான ஒரு தெய்வத்தை நான் அறிந்ததே இல்லை! (ந ஜானே)

Picture of Ardhanareeswara (Shiva and Parvati 50+50)
இவ்வளவு ஆச்சரியகரமான ஒரு அற்புத தெய்வத்தைக் கண்ட பரவசத்தில் அவர் இது போல ஒரு தெய்வத்தை நான் அறிந்த்தே இல்லை (கண்டதே இல்லை) என்று நான்கு முறை கூறி வியக்கிறார்.
நாமும் ‘ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே’ என்று கூறி அவரைப் போல வியந்து சிவபிரானைத் தொழ வேண்டியது தான்!
கவிஞர் சிவபிரானைக் கண்ட வடிவம் அர்த்தநாரீஸ்வர வடிவம் என்பதால் ஆணுக்குப் பெண் சமம் என்ற அற்புத உண்மையையும் மனதில் கொள்கிறோம். சிவபிரானைத் தொழும் அதே சமயத்தில் தேவியையும் தொழுது வணங்குகிறோம்!
கவிஞரின் பக்திப் பரவசம் நம்மையும் தொற்றி விடுகிறது அவரது கவிதை மூலம்!
இது அமைந்துள்ள சந்தம் : புஜங்கப்ரயாதா என்ற சந்தம்!
***************