Article No.1969
Date: 3 July 2015
Written by London swaminathan
Uploaded from London at 8-01 காலை
ஒரு பிராமணனுக்கு இரண்டு மகன்கள். தகுந்த வயது வந்தவுடன் இருவருக்கும் பூணுல் போட்டு, வேத அத்தியயனம் செய்ய குருவிடம் அனுப்பினான். நெடுநாள் கழித்து இருவரும் வேதக் கல்வியை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினர். தந்தை, அவ்விருவரையும் நோக்கி வேதாந்தம் கற்றிருக்கிறீர்களா? என்று கேட்டார்.
(வேத+ அந்தம்= வேதத்தின் இறுதிப் பகுதி =உபநிஷத்து = பிரம்மத்தை அறிதல்; பிரம்மம்=கடவுள்)
இருவரும் படித்திருக்கிறோம் என்றார்கள். அப்படியானால் பிரம்மம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லுங்கள் என்றார் தந்தை.
மூத்த மகன், தான் படித்த வேதங்கள், உபநிஷத்துக்கள் எல்லாவற்றிலிருந்தும் ஏராளமான மேற்கோள்களைக் காட்டி தனது மேதாவிலாசத்தை வெளிப்படுத்தினான். அப்பா! இது மனதுக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்டது. அதெல்லாம் எனக்குத் தெரியும் என்று சொல்லி முடித்தான். மகனே! நீ பிரம்மத்தை நன்றாகத் தெரிந்து கொண்டவன் போலத்தான் இருக்கிறாய். நீ போய் உன் காரியங்களைக் கவனி என்றார்.
இரண்டாவது மகனை நோக்கி அதே கேள்வியைக் கேட்டார். அவன் ஒன்றும் பேசவில்லை. பதில் சொல்ல முயற்சிக்கவுமில்லை.உடனே அவன் தந்தை, “மகனே! நீதான் உண்மையில் அறிந்தவன். கடவுளின் பெருமை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. அப்படி யாராவது வருணிக்க முயன்றால் சம்பந்தா சம்ப்ந்தமில்லாத விஷயங்களை உவமை காட்டி முடிச்சுப் போட வேண்டியிருக்கும். அளவற்ற ஒன்றை, நித்யமான ஒன்றை – அளவுடைய பொருள்களுடனும், அநித்தியமான பொருள்களுடனும் ஒப்பிட வேண்டி வரும். உனது மௌனம் அநேக ஆயிரம் ஆதாரங்களை காட்டிவிட்டது என்றார்.
ஆதாரம்: ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மொழிகள்.
தமிழர்கள் இதை ஒரே வரியில் சொல்லிவிட்டார்கள்: கண்டவர் விண்டிலை; விண்டவர் கண்டிலை.
யார் ஒருவன் கடவுளைக் கண்டுவிட்டதாகச் சொல்கிறானோ அவன் இன்னும் முழு சொரூபத்தைக் காணவில்லை. கண்டுவிட்டால் பேசா அனுபூதி பிறந்து விடும். பின்னர் அருணகிரிநாதர் போல “சும்மா இரு! சொல் அற!” — என்று பேசாமல் இருந்து விடுவார்கள்.
இப்படித் திடீரென்று பிரம்ம ஞானம் தோன்றியவுடன் ஆதி சங்கரர், விவேகாநந்தர், பாரதியார் போல 40 வயதுக்குள் உடலைத் துறந்துவிடுவர்.
“உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்” – எனும் யஜுர் வேத ருத்ர மந்திரமும் இதையே செப்பும். வெள்ளரிப் பழத்தின் காம்பு, அது பழுத்தவுடன், எப்படித் தானாக விலகிவிடுகிறதோ, அப்படி எனக்கும் மரணத்திலிருந்து விடுதலை தருவாயாக – என்பதே இதன் பொருள்.
முழு மந்திரம்: “ஓம் த்ரயம்பகம் யஜாமஹே, சுகந்திம் புஷ்டிவர்தனம். உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்”—அனைவரும் அனுதினமும் சொல்லலாம்.அநாயாச மரணம் கிட்டும். அதாவது நாமும் கஷ்டப்படாமல், மற்றவர்களையும் கஷ்டப்படுத்தாமல் இறைவனடி எய்துவோம்.
இதே பிளாக்கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய கீழ்கண்ட திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படியுங்கள்:–
சலாம் முருகா! சலாம் முருகா! அருணகிரிநாதரின் தனி வழி!! —வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014
அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி – வெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012
சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்— வெளியிட்ட தேதி ஜனவரி 17, 2013
டாக்டர் முருகனும் ‘பேஷண்ட்’ அருணகிரிநாதரும் – வெளியிட்ட தேதி ஜனவரி 15, 2013
தனிமையில் இனிமை –அருணகிரிநாதர் — வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013
திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – வெளியிட்ட தேதி ஜனவரி 22, 2013
நரகத்துக்குப் போவோர் பட்டியல் – வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013
தமிழில் திட்டத் தெரியுமா? வசைபாடுவது எப்படி? —வெளியிட்ட தேதிஜனவரி 21, 2013


You must be logged in to post a comment.