Ancient Tamil Encyclopaedia -Part 37; One Thousand Interesting Facts -Part 37 (Post No.15,232)

Written by London Swaminathan

Post No. 15,232

Date uploaded in London –  1 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Part 37

Item 222

Akanānūru 17 composed by poet Kayamanār has interesting information about Tamil girls’ games and a few similes.

The poet’s name itself is interesting. We don’t know his given name. It is only a name given by the compilers of Akananuru anthology. It means Tank or water source. Because he has used this Kayam/water source in one of his poems, they named him Mr Tank or Mr Lake.

***

223

We come across the games played by Tamil girls 2000 years ago. They played ball games and jugglery with bean seeds.

Ball game originated in India. They made balls with flowers or cloth. It is like our ball badminton. But they did not use a net; they simply played throw and catch and jugglery.

With the big seeds from the bean plants, they played jugglery. Depending upon the skill of the player they used more seeds; throwing them up and catching them before they fell on the ground and at the same time more seeds are picked up from the ground. This type of jugglery is seen in Covent Garden in London and other town centres around the world.

***

224

The similes used by the poet is also interesting. The flowers from the silk cotton tree (Ilavam in Tamil) falling on the ground in the gusty wind are compared to the flame in the mud lamp. And the bare tree left with a few flowers is compared to a few stars in the morning sky. It is true that we see bright planets like Venus and Jupiter and bright stars like Sirius, Betelgeuse or Canopus when the sun is rising in the horizon.

Other scenes with salt vendors carts, Ya trees with torn barks are not uncommon. But the poet talks about jewels as well. Anklets in girls’ feet, bangles in her friends’ wrists.

***

225.

Last but not the least poet appreciates the courage of the teenage girl saying that she is too intelligent for her age. The reason for this is earlier she complained pain in her limbs when she played ball game and bean seed game. Now she is ready to run away with a youth along the arid, desert like region what Tamils call Paalai land.

சிறு முதுக்குறைவி too intelligent for her age :  வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும் throwing ball game; இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் juggling with large bean seeds

***

226

Akanānūru 18, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero

Akanānūru 18 composed by the most celebrated Sangam poet Kapilar has not much interesting details. The message of the poem is that the lover should come and meet the lady love in daytime instead of dangerous nighttime. If something happens to him she will die and we, her friends, will be in agony. And the hazards in his way are described graphically: flooded wild river in the mountain, floods dragging rut elephants, but courageous wild boar crossing it in spite of crocodiles lying on the rocks. When he comes to the meeting place, we are shown beautiful flowering trees with honeycombs

Indirectly saying ‘get married soon without taking great risk’. Kapilar is very good in portraying nature.

***

227

Akanānūru 19 composed by Porunthil Ilankeeranār has nothing new except a comparison between the owl and makuli drum. Both emit similar sounds. One more point should be noted. The owls don’t hoot without meaning; they speak with meaning like drums, says the poet. The hero speaking to himself about leaving his wife on a business trip; we come across Makuli drum, a musical instrument.

***

228

Speaking Drums

African tribes use drums to convey messages. Different types of beating convey different messages for their tribe at a distance.  Here also Tamil commentators add such messages in the commentary for this verse. Tamil commentators hear the drums saying குத்திப்புதை, சுட்டுக்குவி meaning stab and bury; burn and pile up (see Manikkanar commentary in Varthamanan Pathippakam publication)

Three Old Articles written by me from Year 2014

தமிழ் முரசுடமாரம் பற்றிய அதிசயச் செய்திகள்

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1386தேதி நவம்பர் 32014.

தமிழில் முரசு, பணை, முழவு, பறை பற்றிய பல சுவையான செய்திகள் இருக்கின்றன. முதலில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியச் செய்திகளைக் காண்போம்.

1.அரசனுக்குப் பத்து அடையாளச் சின்னங்கள் உண்டு. அதில் ஒன்று முரசு. சங்கத் தமிழ் நூல்களில் முரசுடை மூவேந்தர் என்று சேர சோழ பாண்டியர் பாராட்டப்படுவர். மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானை அரசனாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் பாரதியார், பாரத மாதாவை ராணியாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் முரசு பற்றிய பாடல்களைக் காணலாம் (தச + அங்கம் = தசாங்கம்)

இன்பான் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்

முன்பான் முழங்கு முரசு இயம்பாய் — அன்பாற்

பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும்

பருமிக்க நாதப் பறை (திருத் தசாங்கம், திருவாசகம்)

2.கோட்டை வாயில் கொத்தளங்களில் முரசுகள் வைக்கப்படிருந்தன. கம்ப ராமாயண பால காண்ட, திரு அவதாரப்படலத்தில் கம்பனும் அயோத்தி மாநகர கோட்டையின் மேல் முரசுகள் முழங்கியதைப் பாடினன்.

3.முரசுகள் மூவகைப்படும்: கொடை முரசு, படை முரசு, மண முரசு என்னும் மூவகை முரங்களும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கு மாகலின் முரசு முழங்கு நெடுநகர் எனப்பட்டது என்று பதிற்றுப்பத்து பாடலுக்கு (2-7) உரை எழுதிய மி.பொன். இராமநாதன் செட்டியார் கூறுவர்.

4.போரில் முழக்கப்படும் வெற்றி முரசினைத் தெய்வமாகவே கருதி வீரர்கள் வழிபட்டதை சங்க இலக்கிய நூல்களில் பரக்கக் காணலாம். வீரர்கள் தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே சென்று முரசை வழிபாட்டனர் என்று பதிற்றுப்பத்து (2-17-5/10) கூறும்

5.முரசில் உறையும் தெய்வத்துக்கு மாமிசம், ரத்தம், சோறு கலந்த பிண்டம் பலியாகத் தரப்பட்டது. இது பற்றி பதிற்றுப்பத்து (3- வரி30/39) உரையில் செட்டியார் அவர்கள் கூறுவதாவது:- தன் படை வீரர்கட்கு கடிய சினம் தோன்றுமாறு பேரொலியுடன் உச்சரிக்கப்படும் மந்திரத்தால் அரிய வெற்றியினைத் தரும் மரபுடைய முரசுறைக் கடவுளை வணங்கும் பொருட்டு, அக்கடவுளை வழிபடுவோன் பெறுதற்கரிய பிண்டத்தினைத் தன்கையில் ஏந்தி நின்றான். அப்பிண்டத்தைக் கண்டு கொடிய கண்களையுடைய பேய்ப் பெண் கைபுடைத்து நடுங்கினாள். அப் பிண்டம் போன்றே இரத்தம் கலந்த, நிறைந்த கள்ளினையுடைய பெரிய பலியினை எறும்பும் மொய்க்காது. பருந்தும் காக்கையும் மட்டுமே உண்ணும்.

6.முரசு வைக்கப்படும் கட்டில் புனிதமானது. மோசிகீரனார் என்ற சங்கப் புலவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பாடி பரிசில் பெற வந்தார். வந்த களைப்பில் முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிடார். இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆயினும் புலவரின் நிலைமை கண்ட மன்னன் அவருக்கு கவரி வீசி மேலும் நன்றாகத் தூங்க உதவினான். வறுமை கண்டு மனம் இறங்கி அவருக்குப் பரிசு கொடுத்தான் என்று சங்க இலக்கியம் (புறம்.50) மூலம் அறிகிறோம்.

7. முரசுக்குப் போர்த்தும் தோல் வீரம் மிகுந்த காளை மாட்டின் தோலாக இருக்க வேண்டும் என்பது தமிழர் கொள்கை புலியைக் கொன்ற காளை மாட்டின் தோலை வைத்து முரசு தயாரிப்பர். புனை மருபு அழுந்தக் குத்திப் புலியொடு பொழுது வென்ற கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை (காளை) உரிவை (தோல்) போர்த்த துனை குரன் முரசத் தானை (படை) – என்று சிந்தாமணிச் செய்யுள் கூறும்.

8.இனி ஆ.சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப்படும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் (கலைக்களஞ்சியம்) சொல்லும் சுவையான செய்திகளைக் காண்போம்: வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு என்று முரசு, மூன்று வகைப்படும். இதனை ‘’இமிழ் குரல் முரசு மூன்றுடனாளும் தமிழ் கெழு கூடல்’’ என்பதால் அறிக. இதனுள் வீர முரசினை நீராட்டிக் கடலேற்றி ஒலி நெடும் பீலியும், ஒண் பொறி மணித்தாரும் (மயில் தோகை + மாலை ), பொலங் குழை உழிஞையும் பொலியச் சூட்டி ( உழிஞைப் பூ) குருதிப் பலியீந்து (ரத்தம் கலந்த சோறு) பூசித்தல் பண்டைய வழக்கு (புறநானூறு பாடல் 50).

9. புறப் பொருள் வெண்பா மாலையில் முரசவாகை என்னும் துறை — பலியைப் பெறும் முரசு பற்றிக் கூறும் துறை என்றும் —பொன்னால் செய்த உழிஞை அணிந்து ஆடு வெட்டி பலி கொடுக்கும் முரசின் தன்மையைக் கூறும் துறை முரச உழிஞை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

.

வள்ளுவர் யார்:–

10.வள்ளுவர் யார்:– திருக்குறளை யாத்து உலகப் புகழ்பெற்ற — தமிழுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்த — வள்ளுவர், பறை அறிவிக்கும் ஜாதியைச் சேர்ந்தவர் என்று பழைய நூல்கள் பகரும். இது பற்றி சிங்கார வேலு முதலியார் (அபிதான சிந்தாமணி) கூறுவதாவது: பழங்குடியினரில் பாணரை அடுத்து திராவிடரால் மதிக்கப்படவர் இவ்வகுப்பினர். இவர் அரசர் பால் கருமத் தலைவராயும், யானை மேலிருந்து முரசு அறைந்து அரசாணை சாற்றுவோராயும் (அதாவது அரசரின் உத்தரவுகளை யானை மீது ஏறிச் சென்று அறிவிப்போர்) விளங்கினர். இக்குடியினர் இன்றும் உளர்.

இவர் பறையில் சற்று உயர்ந்தவர். இவர்கள் பறையர்களுக்குப் புரோகிதர்கள்— இவர்கள் பிராமணர்கள் புரோகிதர் ஆகாமுன் பல்லவ அரசர்களுக்குப் புரோகிதம் செய்திருந்தவர்கள். இவர்களில் சிலர் புரோகிதம் செய்தும் சோசியம் சொல்லியும் வாழ்கிறார்கள். இவர்களிர் சிலர் தாசிரியராகவும் பூணூல் தரிப்பவராகவும் இருப்பர். இவர்களில் லிங்கதாரிகளும் உண்டு. இவர்களில் இரண்டு பிரிவுகள்: -அறுபது கக்ஷி, நாற்பது கக்ஷி. முதல் கூறியவன் நந்திக்குருக்களின் சந்ததியான்; மற்றவன் சிதம்பர சாயுச்சிய ஐயங்கார் வகையினன்; திருப்பணாழ்வார் குலம் என்பர். இவர்கள் திருவள்ளுவரைத் தங்களினத்தவர் என்பர் (தர்ஸ்டன்)

(அதாவது தர்ஸ்டன் என்பவர் ஜாதிகள் பற்றிச் சேகரித்து ஆங்கிலத்தில் ஏராளமான தொகுதிகளாக வெளியீட்டதில் இருந்து முதலியார் மொழி பெயர்த்தது)

11.தோல் இசைக் கருவிகள் என்ற தலைப்பில் தமிழ்ச் சொற்றொடர் அகராதி (வீ ஜெ செல்வராசு) தரும் தகவல்:–

முழவு:- குளிர், குடமுழா, முழவம், முழா

முழவு:– பேரிகை, படகம், இடக்கை, மத்தளம், தேசி, சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பரை, தமருகம், தண்ணுமை, தவில், தடாரி, அந்தரி, முழவொடு, சந்திர வளையம்,மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், ஆசில், தகுணிச்சம், விரலேறு, பாகம், தொக்க உபாங்கி, துடி, பெரும்பறை,

முழவுக்கான மரங்கள்:- கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, கஞ்சம், குரவம், மண்; முழவுக்கான தோல்: இளம் பசுவின் வயிற்றுத் தோல்.

தமிழ்க் கள்ளர் தாக்குதல்கள்

12. ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது போன்ற செய்தி, இரண்டு சங்கப் பாடல்களிலும் வருகிறது. பாலைவனம் வழியாக அல்லது காடு வழியாக வணிகர்கள் செல்வர். கொள்ளையர் தாக்குவர் என்பதாலும், ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதாலும் வண்டிகளில் தொடர்ச்சியாகச் செல்லுவர். இவர்களை மரம் அல்லது குன்று உச்சியில் இருந்து உளவு பார்க்கும் கள்ளர்கள் தண்ணுமை என்னும் பறையை முழக்கிக்கொண்டு வந்து தாக்குவர். இது பற்றி குறுந்தொகை (390) அகநானூறு (63) ஆகிய பாடல்களில் கருவூர்க் கண்ணம்புல்லனாரும், உறையூர் முதுகொற்றனும் சில செய்திகளைத் தருவர்:–

காதலனும் காதலியும் பாலைவனம் வழியே போவதைக் கண்ட பெரியோர், “சூரியன் மறைந்து விட்டான், பொழுது சாய்ந்துவிட்டது, ஆறலைக் கள்வரின் தண்ணுமை ஒலி கேட்கத் துவங்கும். போகாதீர்கள்”.

ஒரு தாய் தன் மகளிடம் கூறுகிறாள்:

காதலனுடன் அவள் போய்விட்டாள் என்பதற்கு நான் வருந்தவில்லை. களவுத் தொழிலை உடைய எயின மறவர் இசைக்கும் தண்ணுமை ஒலி கேட்டு இவள் பயப்படுவாளே என்றுதான் வருந்துகிறேன்.

இது பழைய தமிழகத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டும். இரவுநேரத்தில் வறண்ட பாலை வழியாகச் செல்வோரை கள்ளர்கள் பறை ஒலி எழுப்பிக் கொண்டு வந்து தாக்குவர். அவர்கள் ஒலி கொடுப்பது மற்றவர்களை நடுங்கச் செய்யவும், தனது கூட்டத்தினருக்கு செய்தி கொடுக்கவும் என்று சொல்லலாம்.

பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1387; தேதி நவம்பர் 3, 2014.

உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் முல்லர் கி.மு. 1200-க்குக் கீழ் இதை யாரும் கொண்டு வரவே முடியாது என்று எழுதிவிட்டுச் சென்றார். இப்போது வேத கால சரஸ்வதி நதி நீர் பாலை வனத்துக்கு அடியில் செல்வதும், அதை ரேடியோ ஐசடோப் முறையில் ஆராய்ந்து அதன் பழமையைக் கண்டதும் வேதத்தை மெதுவாக கி.மு. 1700-க்குக் கொண்டு சென்றுள்ளது. இந்துக்களைச் சீண்டுவவதையே பொழுது போக்காக – தொழிலாகக் கொண்ட அமெரிக்க ‘அறிஞர்களும்’ ரிக் வேதத்தின் பழைய பகுதி கி.மு 1700 என்று எழுதத் துவங்கிவிட்டனர்.

ஆனால் ஸ்ரீகாந்த் தலகாரி போன்றோர் ரிக்வேத மன்னர் வம்சாவளிகளை வரிசைப்படுத்தி இது இன்னும் பழமையுடையது என்று நிரூபித்து வருகின்றனர். இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் உலகில் முரசு, டமாரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததும் நாமே என்று சொல்லத் தோன்றுகிறது. ஆயினும் எகிப்து போலவோ, பாபிலோனியா போலவோ நம்மால் “படம் காட்ட” முடியவில்லை!! ( நம்மிடையே படங்கள் இல்லை!!)

எது எப்படியாகிலும் இலக்கியச் செய்திகளில் நம்மை விஞ்ச எவரும் இல்லை இத்துறையில் — சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள அதிசய தமிழ் முரசுச் செய்திகளைத் தனியே தந்துவிட்டேன்.

பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். அதாவது பூமியில் பெரிய குழி வெட்டி அதன் மீது மிருகத்தின் தோலைப் போர்த்தி அதை வாசிப்பது பூமி துந்துபி என கீத், மக்டொனல் தயாரித்த வேதிக் இண்டெக்ஸ் கூறும். இது மஹாவ்ரத யாகம் செய்யும்போது வாசிக்கப்படும் – துஷ்ட சக்திகளை விரட்ட இதன் இசை ஒலி உதவும் — சூரியன் தென் திசை செல்லுகையில் வட கோளார்த்தத்தில் இருளும் குளிரும் சூழும். அப்போது இது நிகழும்.

மஹா வ்ரத யாகம் பற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார் என்னும் பேரறிஞர் எழுதிய விஷயம் இந்து நாளேட்டில் வெளியாகி இருக்கிறது. அப்போது வேத கால இன்னிசைக் குழு (ஆர்க்கெஸ்ட்ரா) வாசித்தது. ஏராளமான வாத்தியங்களின் பெயர்களை வேத கால இலக்கியங்களும் அதற்குப் பின் எழுந்த அமர கோஷம் போன்ற நிகண்டுகளும் அள்ளித் தருகின்றன. இதோ மஹவ்ரத யாக இன்னிசை நிகழ்ச்சி:

‘ வேத யாகங்களில் உத்காதா, ஹோதா, அத்வர்யூ என்று பல பொறுப்புகளில் புரோகிதர்கள் இருப்பர். இவர்களில் உத்காதா நாற்காலியில் அமர்ந்து இருக்க, ஹோதா ஊஞ்சலில் ஆடுவார்; அத்வர்யூ பலகையில் அமர்வார். அப்போது சுமார் 100 கம்பி கொண்ட வானா என்ற இசைக்கருவி உள்பட சுமார் 20 வகை இசைக்கருவிகள் இசைக்க, பெண்கள் வட்ட வடிவில் நின்று கால்களால் தாளமிட்டு நகர்வர். அவர்கள் தலைகளில் நீர்க்குடங்கள் இருக்கும் அதாவது கரக ஆட்டம் ஆடுவர். இதுதான் கரக ஆட்டத்தின் தோற்றம்!!

வாண என்ற இசைகருவியே தமிழில் — பண், பாண, யாழ் பாண — என்ற சொற்களை கொடுத்ததா என்று ஆராய்தல் நலம். வேதத்தில் உள்ள யசஸ் – தமிழில் இசை என்று மாறியது. இரண்டுக்கும் புகழ், புகழ் பாடுதல் என்ற பொருள்கள் உண்டு. இது போன்ற நூற்றுக் கணக்கான சொற்களைப் பார்க்கும் எனக்கு, இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து உதித்தன என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. நிற்க.

(வேதத்தில் எந்தெந்த இடங்களில் இந்தக் குறிப்புகள் உளது என்று அறிய விரும்புவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க)

ஆடம்பரம் – தோன்றிய வரலாறு

வேதத்தில் ‘’ஆடம்பர’’ என்னும் டமாரம் பற்றியும் வேறு பல முரசுகள் பற்றியும் செய்திகள் உள. தமிழில் “அவர் ஆடம்பரமாக கல்யாணம் செய்தார், ஆடம்பரமாக வாழ்கிறார்” — என்று சொல்லுவோம். உண்மையில் இந்த ஆடம்பரம் என்னும் கொட்டு கொட்டிக் கொண்டு நிகச்சிகள் செய்ததையே அப்படி சொல்கிறோம் என்றே தோன்றுகிறது. ஆக ஆடம்பரம் என்ற சொல் அத்தகைய நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் வாத்யமாகும்.

துந்துபி= தும் தும் பி = என்ற சொல்லில் இருந்து டமாரம், ட்ரம் என்ற சொற்கள் உருவானதையும் காணலாம். அமளி துமளி என்பதில் துமுல என்பது வடமொழிச் சொல். அதாவது “அமர/சமர துமுல” என்பது போர்க்கள ஒலியாகும். இவை எல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயத்தில் உள. இதில் இருந்தே “டமல்சுவஸ்” என்ற ஆங்கிலச் சொல்லும் உருவானது.

போர்க்களத்தில் பீஷ்மர் சங்கு ஊதி போரைத் துவக்கினார். அப்போது யார் யார் என்ன சங்கு ஊதினர், பணவ கோமுக வாத்தியங்கள் திருதராஷ்ட் ரர்களின் நெஞ்சையும் விண்ணையும் மண்ணையும் எப்படி அதிரச் செய்தன என்றெல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயம் எடுத்த எடுப்பிலேயே வருணிக்கிறது. இதில் துமுல, பணவ (சங்க இலக்கியத்தில் பணை= முழவு= முரசு) என்ற சொற்களைக் காண்க. போர்க்களத்தில் முரசு கொட்டும் வழக்கம் வேத கால வழக்கம் என்பது ரிக்வேதத்தில் ஐயம் திரிபற உறுதியாகிறது.

ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களை நாம் அன்றாடம் தமிழ் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். பூமி என்றும் அதையே தமிழ்ப்படுத்தி புவி என்றும் சொல்லுகிறோம்

வேதம் கூறும் லம்பர, வனஸ்பதி, ஆடம்பர ஆகிய டமாரங்கள் தவிர சிவனின் டமருகம் தான் சம்ஸ்கிருத மொழியின் மூல எழுத்துக்களான 14 மாஹேஸ்வர சூத்ரங்களைக் கொடுத்தது என்பர் ஆன்றோர். அதையே தமிழுக்கும் மறைமுகமாகச் சொல்வர் பரஞ்ஜோதி முனிவர். வடமொழியைப் பாணிணிக்கும் அதற்கு இணையான தமிழ் மொழியை குட முனிக்கும் (அகஸ்தியர்) கொடுத்தவனே என்று சிவனைப் புகழ்வார் பரஞ்சோதி. ஆக தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் வந்தவை என்பது இப்பாட்டில் இருந்து தெள்ளிதின் விளங்கும். இதனாலன்றோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் இவ்விரு மொழிகளைக் கண் எனப் போற்றினர்.‘’டாம்டாம்’’ என்ற ஆங்கிலச் சொல்லும் (தமுக்கு அடித்தல்) இந்தியர் உருவாக்கிய சொல்லே. இதை ஆங்கில அகராதியில் காணலாம். நான் சிறு வயதாக இருக்கையில் மதுரையில் தொற்று நோய்கள் (அம்மை, காலரா) பரவும்போதும் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் இப்படி தமுக்கு அடித்துச் சொன்னதை கேட்டிருக்கிறேன். வள்ளுவர் யானை மீது இருந்து பறை அறிவித்து அரசு ஆணைகளை வெளியிட்டவர் என்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.

நாமும் தமுக்கு அடிப்போம்: தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று!!

நாமும் பறை கொட்டுவோம்: தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண் என்று!

தமிழ்‌ டமாரம்‌ பற்றிய அதிசயச்‌ செய்தி

Date: 10 AUGUST 2019  

Post No. 6756

ஆப்பிரிக்கப்‌ பழங்குடி மக்கள்‌ முரசு அடித்து செய்திகளைப்‌

பரிமாறிக்‌ கொள்வது எல்லோரும்‌ அறிந்த செய்தி.

தெருவுக்குத்‌ தெரு தமுக்கு (Tom Tom) அடித்து முக்கிய

அறிவிப்புகளை வெளியிடுவது இந்திய நகரங்களில்‌

வழக்கமாக இருந்தது. இப்போது குறைந்து வருகிறது.

திருவள்ளுவர்‌ யானை மீது இருந்து பறை அடித்து அரசு

ஆணைகளை அறிவித்தவர்‌ என்பதும்‌ ஒரு செய்தி.

காடுகள்‌ வழியாகச்‌ செல்லும்‌ வணிகப்‌ பெருமக்களை

மறவர்கள்‌ தாக்கி வழிப்பறி செய்வதை சங்கத்‌ தமிழ்‌

நூல்கள்‌ இயம்புகின்றன. அப்படிச்‌ செய்கையில்‌ அவர்கள்‌

டமாரம்‌ அடித்து அச்சத்தை உருவாக்குவர்‌. இது தமிழ்‌

நாட்டில்‌ மட்டுமின்றி நாடு முழுதும்‌ இருந்ததை

சம்ஸ்க்ருத நாடகங்களும்‌ காட்டுகின்றன.

ஆனால்‌ டமாரம்‌ “பேசும்‌ அதிசயச்‌ செய்தி அகநானூற்றில்‌

வருகிறது.

நன்றாக வாத்தியம்‌ வாசிப்போர்‌ வயலினையோ

ஹார்மோனியத்தையோ வாசிக்கும்போது பாடலின்‌

சொற்களை அப்படியே வாசித்துக்‌ காண்பிப்பர்‌.

சொற்களையே காதில்‌ கேட்கலாம்‌. இது போல

டமாரத்திலும்‌ தமிழர்கள்‌ செய்தனர்‌.

உருமி மேளம்‌, பூம்‌ பூம்‌ மாடு கொண்டு வரும்‌ ஆட்கள்‌

வாசிக்கும்‌ மேளங்களைப்‌ பலரும்‌ பார்த்திருப்போம்‌;

கேட்டிருப்போம்‌. கொட்டும்‌ கொட்டுக்கு எல்லாம்‌ மாடு

தலை அசைக்கும்படி பழக்கி வைத்திருப்பர்‌. அது அவன்‌

கேட்கும்‌ கேள்விக்கு எல்லாம்‌ தலை. அசைத்து பதில்‌

சொல்லும்‌. இது போல வெளிநாட்டில்‌ குதிரைகளைப்‌

பழக்கி அதை நடனமும்‌ ஆட வைத்தனர்‌.

(நான்‌ 40 ஆண்டுகளுக்கு முன்னர்‌ மதுரையில்‌ வசித்தபோது

வாரந்தோறும்‌ சனிக்கிழமை இரவுகளில்‌ தானப்ப முதலித்‌

தெருவிலுள்ள சேதுராம்‌ பஜனை மண்டலிக்கு

பெற்றோருடன்‌ செல்வதுண்டு. அங்கே குண்டுராவ்‌

என்பவர்‌ ஹார்மோனியத்துடன்‌ பஜனைப்‌ பாடல்‌ பாடுவார்‌.

அவர்‌ ஹார்மோனியத்தில்‌ “விளையாடுவார்‌! என்றுதான்‌

சொல்ல வேண்டும்‌. மராத்தி மொழி பாடல்களைப்‌

பாடிவிட்டு ஓவ்வொரு சொல்லையும்‌ ஹார்மோனியத்தில்‌

இசைப்பார்‌. மராத்தி மொழியே தெரியத நான்‌ கூட அடுத்த

முறை அவர்‌ வாசிக்கும்போது அந்தச்‌ சொற்களைத்‌

திரும்பச்‌ சொல்ல முடியும்‌  எதிர்த்தாற்போலுள்ள

ஹோட்டல்‌ வாசலில்‌ ரிக்ஷாக்காரர்கள்‌ சினிமாவின்‌

இரண்டாம்‌ காட்சி (Second Show) முடிந்துவரும்‌

வாடிக்கையாளரைப்‌ பிடிக்கக்‌ காத்திருப்பர்‌. அவர்கள்‌ கூட

குண்டு ராவின்‌ இசைக்கு மயங்கி உள்ளே வந்து சுண்டல்‌

பிரசாதம்‌, அவல்‌ பிரசாதம்‌ வாங்கிச்‌ செல்வர்‌. பஜனை

முடிந்தவுடன்‌ இரவு ஒரு மணி வாக்கில்‌ சிறிது

உரையாடுகையில்‌ ஹார்மோனியத்தில்‌ குண்டுராவ்‌

மேலும்‌ சில மாஜிக்‌ செய்து காண்பிப்பார்‌. அக

நானூற்றின்‌ வரிகளைப்‌ படித்தவுடன்‌ அது நினைவுக்கு

வருகிறது)

அகநானூற்றில்‌ வரும்‌ செய்தி இதோ:

குத்திப்‌ புதைசுட்டுக்குவி

பொருந்தில்‌ இளங்கீரனார்‌ என்ற புலவர்‌ பாடிய பாடல்‌

அகநானூற்றில்‌ (19) வருகிறது;

அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே! வந்து நனி

வருந்தினை! – வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து

உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை

உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்

கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம்

–அகநானூறு 19.            ர

பொருள்‌

என்‌ நெஞ்சே !நீ நாம்‌ புறப்படும்‌ நாளன்று

நான்‌ வரமாட்டேன்‌ என்று சொல்லி இல்லத்திலேயே தங்கி

விடவும்‌ இல்லை. இவ்வளவு தூரம்‌ வந்து மிகவும்‌

வருத்தம்‌ அடைந்தாய்.‌

உயர்ந்த யா மரங்களில்‌ இருந்துகொண்டு பருந்துகளும்‌

துன்பம்‌ உண்டாக்கும்‌ ஒலியை எழுப்புகின்றன. அங்கு

உருளும்‌ இழுகு பறையின்‌ ஓசையினைப்‌ போல்‌ பொருள்‌

தெரிய ஒலிக்கும்‌ கடுமையான குரலைக்‌ கொண்ட

ஆந்தைகள்‌ உள்ள நீண்ட மலைகள்‌ இருக்கின்றன.

நெஞ்சே இவற்றை என்னோடு சேர்ந்து கடக்கவும்‌

வரமாட்டாய்‌ …….

(அதாவது மனம்‌ என்னும்‌ குரங்கு காதலியின்‌ பக்கம்‌

திரும்பிப்போய்‌ விடுகிறது|

பொருள்‌ தெரிந்து இசைக்கும்‌ என்ற வரிக்கு-

உரைகாரர்கள்‌ சொல்லும்‌ அர்த்தம்‌-

அவ்வோசையைக்‌ கேட்பவர்தம்‌ இயல்புக்கு ஏற்பப்‌

பொருள்‌ தெரியுமாறு ஒலிக்கும்‌. இதன்‌ பொருளாவது: ்‌

வழிப்பறி செய்பவர்‌ வாழும்‌ இயல்புடைய அவ்வழியில்‌

பொருளுடன்‌ போகும்‌ வழிப்போக்கர்க்குக்

“குத்திப்‌ புதைசுட்டுக்குவி”

என்ற பொருள்‌ தோன்ற ஒலித்தல்‌ ; வினைவயின்‌

செல்பவர்க்குத்‌ தீய நிமித்தம்‌ அல்லது நன்னிமித்தமாக

ஒலித்தல்‌ .

உருள்துடி மகுளி– உருண்ட வடிவுடைய இழுகு என்னும்‌

பறை (தோற்கருவி)

மகுளி பற்றி பரிபாடல்‌ (12-10), மலைபடுகடாம்‌ (131) ஆகிய

சங்க நூல்களிலும்‌ காணலாம்‌.

இந்த ஒரு வரியை மட்டும்‌ வைத்துக்கொண்டு ‘டமாரப்‌

பேச்சு’ பற்றி அறிவது இயலாது. எனது முந்தைய

கட்டுரைகளையும்‌ காண்க.

 —Subham—

 Ancient Tamil Encyclopaedia -Part 37; One Thousand Interesting Facts -Part 37, Talking Drums, Akananuru 19, Tamil Games, Jugglery

நம்மாழ்வார் பாசுரமும் இலங்கைத் தமிழும் (Post No.15,170)

Written by London Swaminathan

Post No. 15,170

Date uploaded in London –  10 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நான் லண்டனில் வாழும் வெம்பிளி பேட்டை, BRENT COUNCIL பிரென்ட் என்னும் நகரசபையின் கீழ் உள்ளது . இதை இலங்கைத்  தமிழர்கள் எழுதுகையில் பிரென்ற் என்று எழுதுவார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிக்கூட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பாடசாலை கிரிக்கெற் போட்டி என்று அறிவிப்பார்கள்  . விக்கிப்பீடியாவுக்குப் போனால் அவர்கள் கனடா நாட்டிலுள்ள டொராண்டோ  , ஒண்டாரியோ பெயர்களை எப்படி எழுதுகிறார்கள் என்று காணலாம் . இதோ விக்கிப்பீடியா :

ரொறன்ரோToronto in Canada

தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) . இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ONTARIO ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

***

இது பற்றி வியப்புடன், ஒரு இலங்கைத் தமிழரை இதை எப்படி உச்சரிப்பீர்கள் என்று கேட்டபொழுது டொரோண்டோ என்றார்

எழுதும்போது ஆங்கில “டி ” அல்லது தமிழ்ச் சபதத்திற்கு  “ற்” என்று எழுதுகிறார்கள். இது வேறு எங்கும் இல்லாத வினோத இலக்கணம் . தமிழில்  “ற்”  எண்டு முடியும் சொற்களைக் காண முடியாது. ஆனால் இடையில் வரும்போது “டி ” என்னும் ஒலி “ற்”  ஆக மாறுவதை நம்மாழ்வார் பாசுரங்களில் காணலாம் . பத்மநாபன் என்பதை ப”ற்”பானாபன் என்று  சொல்லி அவர் பாடுகிறார் .

தமிழ் இலக்கணப்படி கல், பல், சொல் என்பதெல்லாம் இடையில் வரும்போது கற்குவியல், பற்பொடி, சொற்கள் என்று மாறுவதைக் காண்கிறோம் ஆனால் துவக்கத்திலும் இறுதியிலும் காண முடியாது  எப்படி யாழ்ப்பாணத்தில் மட்டும் இப்படி வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியதே !

பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்,

எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த

கற்பகம், என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்

வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே. 2-7-11

***

கிறி உறி  மறி நெறி

கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே,

உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்,

மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை,

நெறி பட அதுவே நினைவது நலமே. 2-10-6

English translation of verse 2.10.6:

Desist from base deeds and remember

‘Tis good to think solely of traversing the road

Which leads to Māliruñ Cōlai where live together

Herds of deer and young ones and stays our Lord,

Who from hanging hoops ate up all the butter.

(From wisdomlib.org)

நம்மாழ்வாருக்கு மிகவும் பிடித்த சொற்கள் சில; இராப் பகல் என்பதை நிறைய பாசுரங்களில் உபயோகிக்கிறார் அது போல கிறி என்ற சொல்லும் அவருக்கு மிகவும் பிடித்த சொல்.

அகராதியில் இதற்குள்ள பொருள்:

பொய், வஞ்சம், தந்திரம், மாயாஜாலம், வழி, குழந்தைகளின் முன் கையில் அணியும் ஆபரணம்.

இங்கு வழி , நல்ல வழி என்ற பொருளில் வருகிறது.

தமிழில் பொருள்

நல்ல வழியை எண்ணுவதே சிறந்தது ; இதை வீட்டுக் கீழ்மையை எண்ணாதீர்கள் . அத்திருமாலிருஞ் சோலையில்தான் உறி வெண்ணையை எடுத்துண்டு கண்ணன் கோயில் கொண்டுள்ளான். பெண் மான்கள் தன் குட்டிகளோடு சேர்ந்து வாழும் சோலை மலைக்குச் செல்லும் வழியை நினைப்பதே நல்லது .

மறி என்றால் ஆடு என்றே பெரும்பாலும் பொருள் வருகிறது. இங்கு மான்கள் என்று வருவதும் நோக்கற்பாலது .

***

திருக்குறளுக்கு புதுப் பொருள்!

ஈரடியால் உலகளந்தவனும் மூவடியால் உலகளந்தவனும்

பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ; அந்த அவதாரத்தைச் சொல்லும்போதெல்லாம் நம்மாழ்வார், குறளா திருக்குறளா என்று பாடுகிறார் . அவர் மனத்தில் உள்ள கருத்தினை நாம் அறிய முடிகிறது ; மூன்று அடிகளால் உலகத்தினை அளந்து ஓங்கி உலகளந்த உத்தமன்- த்ரி விக்ரமன் – என்ற பெயர் பெற்றான் விஷ்ணு .

இரண்டே அடிகளால் (குறள்) உலகத்தினையே அளந்துவிட்டான் வள்ளுவன்; அவன் பேசாத பொருள் இல்லையே! 

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி

வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே

செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்

செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

குறளா என்று பல பாசுரங்களில் அழைத்தவர் இங்கு திருக்குறள் என்ற சொல்லையே பயன்படுத்துவத்தைக் கவனிக்க வேண்டும் . நம்மாழ்வார் திருக்குறளை நன்றாகக் கற்றவர் என்பதை பல பாசுரங்கள் மூலம் அறிய முடிகிறது . மாணிக்க வாசகரின் திருவாசகமும் அவர் பாசுரங்களில் எதிரொலிக்கிறது. அவற்றைத் தனியாகக் காண்போம் .

***

இதைத் திருவள்ளுவமாலையில் பரணரும் பாடியுள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்

ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்

வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

இந்த பரணர் பிற்கால பரணர் ஆவார்.

–subham—

Tags- திருக்குறளுக்கு, புதுப் பொருள், கிறி உறி  மறி நெறி, நம்மாழ்வார் இலங்கைத் தமிழ், திருக்குறளா

My Old Articles

இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

Post No. 13,659

Date uploaded in London – 12 September 2024         

பரிகரிஅரிநரிமறிகிரிசுரிவரி (Post No.6057)


Date: 10 FEBRUARY 2019


Post No. 6057

தமிழ் ஒரு அழகான மொழி. பழைய கால ஆநந்தவிகடன் அகராதி அல்லது அதற்கு முந்திய நிகண்டுகள் ஆகியவற்றை எடுத்துப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இத்தனை பொருளா என்று ஒரு புறம் வியப்போம். ஒரே பொருளைச் சொல்ல இத்தனை சொற்களா என்று மறு புறம் வியப்போம். தாமரை என்பதற்கு பல சொற்கள் இருக்கும். அரி என்ற ஒரு சொல்லுக்கு பல வித அர்த்தங்கள் இருக்கும். மேலும் ஒருஎழுத்து,  இரு எழுத்துச் சொற்களைக் கொண்டே நிறைய விஷயங்களைச் சொல்ல முடியும்.

இந்தச் சொல்லையோ,சப்தத்தையோ வேறு மொழிகளில் பிரயோகித்தால் இன்னும் வியப்பான விஷயங்கள் வரும்.

உதாரணமாக அரி என்ற சொல்லுக்கு விஷ்ணு, பகைவன், சிங்கம் இன்னும் பல பொருள்கள் வரும். ஹீப்ரூ (Hebrew)  மொழியிலும் அரி என்றால் சிங்கம்  என்பதைக் கண்டு வியப்போம். கேஸரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் (கேசம்/முடி உள்ள மிருகம்)  ஸீசர் என்று உச்சரிக்கப்பட்டு ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் என்ற பெயர்களில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புகுந்தது.

ஒரே சப்தம் வரும் சொற்களைச் சொல்லுவதும் கவிதை போல இருக்கும். அதை நினைவு வைத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும். சொல் விளையாட்டுகளை விளையாடவும் ஏதுவாக இருக்கும்.

குறுக்கெழுத்துப் போட்டி, தமிழ் ஸ்க்ராபிள் (Tamil Scrabble) , சொல் போட்டி போன்றவை மூலமும் விடுகதைகள் மூலமும் மாணவர்களை டெலிவிஷன், வீடியோ கேம்ஸ் முதலியவற்றில் இருந்து திசை திருப்பலாம்.

நான் என் மகன்களுடன் ரயிலில் செல்லும்போது ஒரே சப்தத்தில் முடியும் ஆங்கிலச் சொற்களைச் சொல்லி விளையாடுவோம். ‘ஷன்’ (Tion or Sion)  என்று முடியும் சொற்கள் என்றால்

Consternation

Conflagration

Concentration

Condemnation

Education

Fruition

என்று நூற்றுக் கணக்கில் வரும்.

நாங்கள் மூவரும் சொன்ன சொற்களைக் கேட்டு ஆங்கிலேயர் ஒருவரே வியந்து பாராட்டினார். இன்னும் சிலர் மூக்கில் விரலை வைத்து வியக்காமல் கண்களால் வியந்தனர்.

தமிழிலும் இது போல அறிவு தொடர்பான விஷயங்கள்  பரவ வேண்டும்

யூ ட்யூப், You Tube, Social Media, சோஷியல் மீடியா (பேஸ் புக், வாட்ஸ் அப்), பத்திரிக்கைகள், சினிமா, நாடகங்களில் சில காட்சிகள், பள்ளிக்கூடங்களில் போட்டிகள் மூலம் இவைகளை வளர்க்கலாம்.

நான் சொல்லுவதை விளக்க ஒரே ஒரு உதாரணம்:–

“ரி” சப்தத்தில் முடிய வேண்டும்

விலங்கியல் பெயராக இருக்க வேண்டும் என்று போட்டி விதி வைத்துக் கொள்வோம். எனக்கு உடனே நினைவில் வரும் சொற்கள்

அரி- சிங்கம்

பரி-குதிரை

வரி-வண்டு

நரி- நரி,குள்ள நரி

மறி- ஆடு

கரி- யானை

கிரி-பன்றி

உரி– கடல் மீன் வகை

சுரி- ஆண் நரி

அரி-குரங்கு, சிங்கம்

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறுக்கெழுத்துப் போட்டிகள் பிரபலமான காலத்தில் வந்த ஆநந்தவிகடன் அகராதி போன்றவை இருந்தால், ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள வேறு பொருள்களும் வியப்பைத் தரும்

வியப்பான செய்தி

தமிழில் அகராதியே இல்லை!!! இப்போது நீங்கள் எந்தக் கடையில் சென்று எந்தப் பதிப்பக அகராதி வாங்கினாலும், ஆங்கில-தமிழ், இந்தி -தமிழ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தமிழ் என்ற பெயரில், சம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும். தனித் தனியாக ஒவ்வொரு பக்கத்திலும் தமிழ்- ஸம்ஸ்க்ருத சொல் விகிதாசாரம் போட்டுப்  பார்த்தால் ஸமஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்.

நம்  முன்னோர்கள்   தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் இரு கண்களாக   பார்த்ததால் தமிழ் அகராதி என்ற பெயரில் ஸம்ஸ்க்ருதச் சொற்களையும் சேர்த்தனர். ஆங்கிலத்திலும் இப்படித்தான். பிற மொழிச் சொற்களும் ஆங்கில அகராதியில் இருக்கும்.

(ஆக்ஸ்போர்டு அகராதியில் உள்ள ‘ஐயோ,’ ‘பறையா’ என்ற தமிழ் சொற்களை அகற்றக் கோரி நான் இயக்கம் நடத்தி வருகிறேன்.)

எடிமலாஜிகல் டிக்சனரி என்ற பெயரில் பர்ரோ, எமனோ போன்றோர் திராவிடச் சொற்களை மட்டும் கொண்டு சொற் பிறப்பியல் (Etymological)  அகராதி தொகுத்தனர்.

ஆனால் அதிலும் குறை கண்டேன். நீர் (Nereids=water nymphs) என்ற தமிழ்ச் சொல்

கிரேக்க மொழியிலும் உள்ளது அரிசி என்ற(Oryza) சொல் செமிட்டிக் மொழிகளிலும் கிரேக்கத்திலுமுளது. இவை தொடர்பின் மூலம் பரவியதா அல்லது மனித இனம் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசி, இப்போது மிச்சம் மீதியாக நிற்கின்றனவா  என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

எடுத்துக் காட்டாக சப்த=ஏழு என்ற சொல் செமிட்டிக், ஸம்ஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் 3000 ஆண்டுகளாக இருக்கிறது. ஆக, சிந்து-ஸரஸ்வதி நாகரீகத்திலும் இது இருக்கவேண்டும். இப்படி அணுகினோமானால் பல புதிர்களுக்கு விடை  கிடைக்கும்.பிலோனிய தெய்வமான செப்பெத்து, யூதர்களின் சப்பத் (sabbath day= seventh day) ஆகியவை ஏழு தொடர்பானவை.

நிற்க.

சொல் ஆட்டம், சொற் சிலம்பாட்டம் விளையாடுவோம்.

தமிழை வளர்ப்போம்!!

–சுபம்–

TWO BOOKS ON AZVARS

ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

பொருளடக்கம்

1.நான் பெருந்தமிழன் :பூதத்தாழ்வார் பெருமிதம்

2. ஆழ்வார் தரும் அதிசயச் செய்தி: 7 மலை, 7 கடல், 7 முகில்;

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

3. ஊர்வசியே வந்து ஆடினாலும் போகமாட்டேன் :ஆழ்வார் உறுதி

4. நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்

5. பொய்கை ஆழ்வாரின் அற்புதச் சொல் வீச்சு; பாணினியின் ஒப்பீடு

6. முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம்

7. வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு சிவப்பு! அப்பரும் ஆழ்வார்களும் – ஒரு ஒப்பீடு

8.நலம் தரும் சொல் – திருமங்கை ஆழ்வார் கண்டுபிடிப்பு

9.நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை

10.ஆழ்வார்கள் கேள்வி-பதில் குவிஸ்

11. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், 

உப்பைப் போல இருப்பான் பக்தன்

12. பாரதி – நம்மாழ்வார் – கிருதயுகம்

13. தமிழில் வைஷ்ணவ ஜனதோ -அசலாம்பிகையின் அற்புதக் கவிதை :

நாமக்கல் வெ .ராமலிங்கம் பிள்ளை

14.தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை

15. கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம்

*****

தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

பொருளடக்கம்

1.திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! ஆண்டாளும் நகைகளும்

2.பறை என்றால் என்ன ?

3.ஆண்டாளும் மொழியியலும்

4.ஆண்டாள் காலம் பற்றிக் குழப்பம்!

5.ஆண்டாள் போடும் மார்கழி மாதப் புதிர்!

6.பாவை என்பது என்ன? 

7.ஆண்டாள் பாடல்களில் இயற்கைக் காட்சிகள்! 

8.ஆண்டாள் பாடலில் உபநிஷத்தும் சன்யாசிகளும்!

9.திருப்பாவையின் அமைப்பு

10.திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு!

11.முப்பத்து மூவர்

12.அம்பரமே தண்ணீரே சோறே!

13.‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா?

14.கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ?

15.திருப்பாவை ராகங்கள்

16.ஆண்டாள் பொன்மொழிகள்

*****

17.வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

18.வள்ளலார் முருக பக்தனா ? சிவ பக்தனா ?

19. தெய்வமணி மாலையில் உவமை நயம்

20. மேலும் பல உவமைகள்

21.வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள் -5

22.வள்ளலார் பாடலில் பகவத் கீதையின் தாக்கம்- 6

23.தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்

24.வள்ளலாரின் சிவ பக்தி!

25.வள்ளலாரும் மூலிகைகளும்!

26.வள்ளலாரின் கந்தர் சரணப்பத்து

27.அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

28.அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

29.நால்வர்க்கு வள்ளலார் போடும் பெரிய கும்பிடு!

30.வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்!

31.நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் கடும் தாக்கு

32.ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள்

33.நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?

வடலூர் வள்ளலாரின் சத்ய ஞான சபைக்கு விஜயம்

34. வள்ளலார் பொன்மொழிகள்

—subham—

அட்டையிலுள்ள ஆண்டாள் படம் , விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி . வடலூர் வள்ளலார் படம் லண்டன் சுவாமிநாதன் எடுத்தது.

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் புண்ணிய நகரங்கள் (Post.15,124)


Written by London Swaminathan

Post No. 15,124

Date uploaded in London –  27 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் (GEM STONES) ரத்தினைக் கற்களை முந்தைய கட்டுரையில் கண்டோம் ; ஹயக்ரீவர் இதை அகஸ்தியருக்கு உபதேசித்தபோது புண்ணிய நாகரங்களின் பெயர்களையும் (HOLY CITIES) சேர்த்துள்ளார். தேவியின் நாமங்களை மக்கள் தங்களுடைய நகரங்களுக்கு, குறிப்பாக மன்னர்கள், சூட்டிக்கொண்டார்கள் என்பதே சரியான கருத்தாகும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ஸ்ரீவிஜயம் என்ற நாமத்தைச் சூட்டிக்கொண்ட  தென் கிழக்கு ஆசிய  நாகரீகம்  நீண்ட காலத்துக்கு கொடி கட்டிப் பறந்தது. அதைப்  போல ஆதிசங்கரரும் ஹயக்ரீவரும்   பெயர் சூட்டிய ஸ்ரீநகர் இன்றுவரை காஷ்மீரின் கவர்ச்சிமிகு தலைநகராக இருந்து வருகிறது.

முதலில் எல்லா நகரங்களின் பெயர்களையும் ஒரே மூச்சில் சொல்லும் ஆதி சங்கரரின் செளந்தர்ய லஹரி ஸ்லோகத்தை எடுத்துக்கொள்வோம்.

விஶாலா கல்யாணீ ஸ்புடருசிரயோத்யா குவலயை:

க்ருபாதாராதாரா கிமபி மதுராபோகவதிகா ।

அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகரவிஸ்தாரவிஜயா

த்ருவம் தத்தன்னாமவ்யவஹரணயோக்யா விஜயதே ॥ 49 ॥

தேவியின்  கண்கள் அகன்று இருப்பதால் – விசாலா ;

கல்யாணங்களை நடக்கச் செய்வதால் கல்யாணி ;

குவளை மலர்களாலும் வெல்லமுடியாத அழகுடையவள் என்பதால் அயோத்யா ;மழை போல் கருணை பொழிவதால் தாரா ;

இனிமையானவள் என்பதால் மதுரா;

போகத்தைத் தரும் பார்வையுடன் சிவனை நோக்குபவள் அல்லது

அபோகவதீ =நீண்ட பார்வை / நெடுநோக்குள்ளவள்  போகவதீ;

காக்கும் சக்தி உடையவள்  அவந்தீ ;

வெற்றியைத் தருபவள் விஜயா;

विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः

कृपाधाराधारा किमपि मधुराभोगवतिका।

अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया

ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते॥

viśālā kalyāṇī sphuṭarucirayodhyā kuvalayaiḥ

kṛpādhārādhārā kimapi madhurābhogavatikā |

avantī dṛṣṭiste bahunagaravistāravijayā

dhruvaṁ tattannāmavyavaharaṇayogyā vijayate ||

Meaning:-“All glories to Thy eyes which are wide (vishaalaa); auspicious (kalyaani) because of being brilliantly clear; undefeated (ayodhyaa) even by blue lillies; shedding a continuous flow of grace (kripaadhaaraa-dhaaraa); subtly sweet (madhura); long (abhogavathi); and offering protection to the world (avanthee). Surpassing all these great cities in their uniqueness, Thy glance is fit to be reffered to by the respective appellations.”

முதலில் ஆதிசங்கரரின் வியத்தகு பூகோள அறிவினை மெச்ச  வேண்டும் . எட்டு நகரங்களின் பெயர்களின் வாயிலாக தேவியின் அபூர்வ குணங்களை நமக்கு எடுத்துரைக்கிறார் . அயோத்தி, காசி முதல் விஜயவாடா வரை நமக்கு புவியியலையும் கற்பிக்கிறார் அப்படிப்பட்ட அறிவியல் நோக்கு இருந்ததால்தான் நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு சங்கர மடங்களை நிறுவினார்; காலடியில் துவங்கி  காஷ்மீர்  வரை கால் நடையாகவே சென்று நாட்டினை வலம் வந்தார்

எந்த அசட்டுப்பிச்சுக்களாவது வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டினை ஒற்றுமைப்படுத்தினான் என்று சொன்னால் புறநாநூற்றின் இரண்டாவது பாடலையும் இந்த ஸ்லோகத்தையும் அவர்கள் முகத்தில் வீசலாம்; இமயம் முதல் பொதியம் வரை என்று பாடினார் மிஸ்டர் நாகராஜன் புறநானூற்றில்! அதாவது முடிநகராயர்! இங்கு சங்கரர் அயோத்தியில் துவங்கி விஜயவாடா வரை வந்து விட்டார் என்பது எனதுரையாகும்.

போகவதி என்ற நகரம் நாகலோகத்தில் உள்ள நாகர்களின் தலை  நகரம் ; நல்ல அனுபவம் மிக்க பெண் என்பதால் பெண்களின் பெயர்களாகக் கதைப்புஸ்தகங்களில் காண்கிறோம்.

கல்யாணி என்பது சாளுக்கியர்களின் தலைநகரம் ;

மதுரா என்பது கிருஸ்ணன் பிறந்த பூமி; மதுரை மீனாட்சி அம்மனின் நகரம் என்றும் சொல்லலாம்

தாரா DHARA வில் ஒரு மசூதிக்குள் சரஸ்வதி கோவிலும் சித்திரக் கல்வெட்டும் உள்ளது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான உரையாற்றியுள்ளார்

ராமர் பிறந்த அயோத்தியின் பெருமை இப்போது உலகெங்கும் பரவிவிட்டது கோடிக்கணக்கானோர் அந்த ராமர் கோவிலுக்குச் சென்றவண்ணம் உள்ளனர்.

விஜயவாடாவில் உள்ள கனக துர்கா அம்மன் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் வருகின்றனர்

காசியில் உள்ள விசாலாக்ஷி சமேத விஸ்வநாதரைத் தரிசிக்க ஆயிரக்கக்கான ஆண்டுகளாக இந்துக்கள் காசி யாத்திரை சென்று வருகின்றனர்

இதற்கு ஆதரவான சில நாமங்களை சஹஸ்ரநாமத்தில் காண்போம். லலிதா சகஸ்ரம் நாமத்தில் உள்ள  எல்லா  பெயர்களும் மிகவும் அர்த்தம் உள்ளவை.

இதில் டாக்கீஸ்வரி கோவில் உள்ள பங்களாதேஷ் தலைநகரம் டாக்கா வருகிறது

பஞ்சாபில் உள்ள ஜலந்தரும் வருகிறது

ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ நகரும் வருகிறது

சண்டிகர் என்ற நாமத்தில் சண்டியைக் காணலாம்; சிம்லா  என்ற ஹிமாசலப்பிரதேச தலை நகர் சியாமளா என்பதன் மருவு ஆகும்.

கல்கத்தா என்பது காளிகாட் என்பதிலிருந்து வந்ததை நாம் அறிவோம்

மும்பை என்பது மும்பாயி தேவி பெயர்; சென்னை என்பது சென்னம்மா தேவியின் பெயர் காமரூபம் என்னும் அஸ்ஸாம் காமாக்யா தேவி கோவில்கொண்ட இடம் ; கன்னியாகுமரியின் பெயரிலேயே பகவதி உறைகிறாள் காஸ்மீர் முதல் கன்யாகுமரிவரை தேவியின் பூமி என்று சொன்னாலும் மிகை ஆகாது ; இதோ உங்கள் பார்வைக்கு சில நாமங்கள்-

கல்யாணீ – நாமத்தின் எண் 324; காமகோடிகா / காஞ்சி – 589; சண்டிகா-755டாகினீஸ்வரி – டாக்கா -484; துர்கா /துர்காபூர் – 190; திரிபுரா -626; பவானி-112; பாபநாசிநீ-பாபநாசம் – 167;  புவனேஸ்வரீ – புவனேஸ்வர் -294; புஷ்காரா – புஷ்கர் -804; மஹாகாளி – காளிகாட்-கல்கத்தா – 751; மாயா /ஹரித்வார் – 716; விஜயா / விஜயவாடா – 346; வைஷ்ணவீ ; வைஷ்ணவிதேவீ- 892; ஜயா  – ஜெயப்பூர் – 377; ஜாலந்தர ஸ்திதா -ஜலந்தர்– 378;ஸ்ரீ என்ற எழுத்துடன் துவங்கும் 12 பெயர்கள் அம்மனுக்கு உள்ளது ; இதன் தமிழ் வடிவம் திரு என்பதாகும் ; ஆகவே ஸ்ரீநகர் முதல் திருநகர் வரை உள்ள எல்லா ஊர்ப்பெயர்களையும் அம்பாளின் நகரங்களாகவே சொல்லலாம் .

–சுபம்—

Tags- லலிதா சஹஸ்ரநாமத்தில், புண்ணிய நகரங்கள் , ஆதி சங்கரரின், செளந்தர்ய லஹரி

பாரதி போற்றி ஆயிரம்- மூன்றாம் பாகம் (Post.14,986)

Bharatiyar Statue in Delhi 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,986

Date uploaded in London – 15 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பாரதி போற்றி ஆயிரம்

மூன்றாம் பாகம் 

ச. நாகராஜன்

(இந்த நூலைத் தொகுத்தவர்) 

22 கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய 254 பாடல்கள் முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.

 2 கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய 324 பாடல்கள் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.

 இந்த மூன்றாம் பாகத்தில் கே.பி.அறிவானந்தம் மற்றும் 27 கவிஞர்கள் இயற்றிய 422 பாடல்கள் இடம் பெறுகின்றன.

மூன்றாம் பாகம்

பிற்சேர்க்கை

கவிஞர்கள், பாடல்களின் பட்டியல்

கவிஞர்கள்

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம்   87 பாடல்கள்

(பகுதிகள் 71 முதல் 78 முடிய)

புலவர் கு.பொ.பெருமாள்                    283 பாடல்கள்

(பகுதிகள் 79 முதல் 88 முடிய)       

கலைமாமணி புலவர் நாகி,
புதுச்சேரி – 9
     1 பாடல்

தமிழ்மாமணி புலவர்         

சீனு. இராமச்சந்திரன், புதுச்சேரி-9             2 பாடல்கள்        கலைமாமணி இலந்தை இராமசாமி
கனடா   1 பாடல்

கவியோகி வேதம்
சென்னை                  1 பாடல்

பாவலர் எஸ். பசுபதி,
கனடா                 1 பாடல்

கலைமாமணி கல்லாடன்
புதுச்சேரி          2 பாடல்கள்

பாவலர் அண்ணா. தருமலிங்கம்
புதுச்சேரி    1 பாடல்

புலவர் செ. இராமலிங்கன்
புதுச்சேரி          1 பாடல்

புலவர் துரை. மாலிறையன்
புதுச்சேரி
         2 பாடல்கள்

பாவலர் சூரிய விசயகுமாரி
புதுச்சேரி         2 பாடல்கள்

கவிஞர் தே. சனார்த்தனன், 
புதுச்சேரி          1 பாடல்

பாவலர் வே. முத்தையன்,
புதுச்சேரி           1 பாடல்

பாவலர் கி. பாரதிதாசன்,
பிரான்சு.               1 பாடல்

கவிஞர் வ. பழனி,
புதுச்சேரி                  1 பாடல்

கவிஞர் மு. தியாகராசன்,
புதுச்சேரி           1 பாடல்

கவிஞர் இராச.தியாகராசன், புதுச்சேரி
         2 பாடல்கள்

புலவர் மு. இறைவிழியனார்
ஆசிரியர்

‘நற்றமிழ்’ – புதுச்சேரி
                          1 பாடல்

பாவலர் சிவ. இளங்கோ
புதுச்சேரி             2 பாடல்கள்

கவிஞர் முனைவர் உரு. அசோகன்
புதுச்சேரி  2 பாடல்கள்

கவிஞர் ந. இராமமூர்த்தி,புதுச்சேரி           2 பாடல்கள்

ஹா.கி.வாலம் அம்மையார்                    1 பாடல்

ப.ஜீவானந்தம்                                1 பாடல்

தேனம்மை லட்சுமணன்                      2 பாடல்கள்

கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி                1 பாடல்

மன்னை பாஸந்தி                           10 பாடல்கள்

ச.நாகராஜன்                                  9 பாடல்கள்

**

காளிதாசன் காவியங்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் பிரம்மா! (Post.14,847)

Written by London Swaminathan

Post No. 14,847

Date uploaded in London –  9 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

முதலில் முக்கிய சொற் பிரயோகத்தை அறிவோம் ; பிரம்மம் வேறு,  பிரம்மா வேறு, பிராமணன் வேறு ; நிறைய பேருக்கு இந்த வேறுபாடு தெரியாது ; ஆங்கிலத்திலும்  இந்தியிலும் வடக்கத்தியர்களின் பேச்சு வழக்கிலும் ‘பிரம்மன்’ குழப்பம் உண்டானது .

பிரம்மா என்பவர் படைப்புத் தெய்வம் ; அவர் த்ரி மூர்த்திகளின் ஒருவர் – பிரம்மா விஷ்ணு சதாசிவம் என்று மும்மூர்த்திகளை அழைக்கிறோம் .

பிரம்மாவுக்கு நான்கு தலைகள் ; அவருக்கு நான்கு கைகள் ; அவருடைய மனைவி சரஸ்வதி; அவர்கள் வசிக்கும் இடம் சத்ய லோகம்.  அவர்கள் இருவருக்கும் வாஹனம் அன்னம் என்னும் பறவை ; பிரம்மாவின் வாயிலிருந்து வேத முழக்கம் வந்துகொண்டே இருக்கும். மனிதனின் பேச்சு, அறிவு, விவேகத்திற்கான கடவுள்  சரஸ்வதி; இந்தக் கருத்துக்கள் வேத காலம் முதல் இமயம் முதல் குமரி வரை வழங்கி வருகிறது . பிரஜாபதி என்பது பிரம்மாவின் இன்னுமொரு பெயர் ஆகும்.

பிரம்மாவின் நான்கு கைகளில் கமண்டலம் என்னும் தண்ணீர் பாத்திரம் , ருத்ராக்ஷ மாலை , வேத  புஸ்தகம், யாகத்தில் நெய் அல்லது சாதத்தைப்போட உதவும் ஸ்ருவம் என்னும் கரண்டி ஆகியன இருக்கின்றன. வேதமும் வேள்வியும் படைப்பு முதலே உள்ளன என்பதை இவை குறிக்கும் .

இந்துக் கடவுளர் எல்லோரும் தண்ணீருடன் சம்பந்தப்பட்டவர்கள் ; இது ஆரிய -திராவிட வாதம் பேசும் மாக்ஸ்முல்லர் கும்பலுக்கு  செமை அடி கொடுக்கிறது சிவன் தலையில் கங்கை;  விஷ்ணு இருப்பதோ கடல் நடுவில்; பிரம்மா வைத்திருப்பது தண்ணீர் பாத்திரம்; வேத கால முக்கிய நதியின் பெயரோ சரஸ்வதி ; பனி நிறைந்த மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் வந்திருந்தால் ஆப்ரஹாமிக் மதங்கள் (யூத, கிறிஸ்தவ முஸ்லீம்) போல தண்ணீர் வாசனையே இல்லாமல் இருக்கும். இந்துக்கள் இந்த நாட்டிலியேயே தோன்றி இந்த நாட்டிலேயே வளர்ந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை வேத புராண இதிகாசங்களும் சங்கத் தமிழ் நூல்களும் தெளிவாகச் செப்புகின்றன.

****

சங்கத் தமிழ் நூல்களில் பிரம்மா

நீலநிற உருவின் நெடியோன் கொப்பூழ்

நான்முக ஒருவற் பயந்த   பல்லிதழ்த்

தாமரைப் பொகுட்டிற் காண் வரத்தோன்றி  — பெரும்பாணாற்றுப்படை வரிகள் 402-404

***

தாமரை பயந்த தாவில் ஊழி

நான்முக ஒருவர் கட்டி — முருகு. வரிகள் 164-5

***

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ– பரி 5-22

இதை முதல் திருக்குறளில் வள்ளுவன் பயன்படுத்தயுள்ளார்

***

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் – கலி 2-1

இது அப்படியே காளிதாசனின் மொழிபெயர்ப்பு .

படைப்புத் தொழில் துவங்குவதற்கு முன்னர் தோன்றியதால் அவன் ஆதி அந்தணன்..

பிரம்மா வாயிலிருந்து வேதங்கள் ஒலித்த வண்ணம் இருக்கும்…

மாநில மியலா முதன்முறை அமையத்து

நாம வெள்ள நடுவண் தோன்றிய

வாய்மொழி மகனோடு  மலர்ந்த தாமரை…………….. பரி 3-91/4

இதில் மலர்மிசை ஏகினான் பிரம்மா என்ற வள்ளுவர் கருத்தினைக் காணலாம் ; எல்லோரும் காளிதாசனிலிருந்து எடுத்திருக்கலாம்

***

உலகு படைத்தோன் என்ற கருத்து –குறள் 1062,  பரி.   கலி 106-17; 129-2. நற்றிணை 240 , புறம்.194 ஆகியவற்றில் பல இடங்களில் வருகிறது.

பூவினுட் பிறந்தோன் என்ற கருத்து பரிபாடலில்  பல இடங்களில் உள்ளது..

****

காளிதாசன் குமார சம்பவத்தில்தான் பிரம்மா பற்றி அதிகம் பாடியிருக்கிறார் ; ரகு வம்ச காவியத்தில் பிரம்மா இருக்கிறார்.

ஆத்ம பூ , ஸ்வயம்பு, கமலாசன / மலர்மிசை ஏகினான் , பிதாமஹ, பிரஜாபதி , வாகீச, விஸ்வயோநி முதலிய பெயர்களை காளிதாசன் பயன்படுத்தியுள்ளார்.

தமிழில் திருக்குறளில் மூன்றாவது குறளிலேயே இவருடைய பெயர் (மலர்மிசை ஏகினான்) வருவது குறிப்பிடத் தக்கது.

यज्ञाङ्गयोनित्वमवेक्ष्य यस्य सारं धरित्रीधरणक्षमं च।

प्रजापतिः कल्पितयज्ञभागं शैलाधिपत्यं स्वयमन्वतिष्ठत्॥ १-१७

yajñāṅgayonitvamavekṣya yasya sāraṁ dharitrīdharaṇakṣamaṁ ca |

prajāpatiḥ kalpitayajñabhāgaṁ śailādhipatyaṁ svayamanvatiṣṭhat || 1-17

இமய மலையை வருணிக்கும் காளிதாசன் அதுதான் வேத விளைவிக்க பொருள்களை அளிக்கிறது என்றும் அவைகளை  பிரம்மாவே சோதித்து வேள்வியின் பலனை இமவானுக்கும் அளித்தார் என்கிறார் — குமார சம்பவம் 1-17

பிரஜாபதி என்ற சொல் இங்கே வருகிறது

****

तस्मिन्विप्रकृताः काले तारकेण दिवौकसः|

तुरासाहं पुरोधाय धाम स्वायम्भुवं ययुः॥ २-१

tasminviprakṛtāḥ kāle tārakeṇa divaukasaḥ |

turāsāhaṁ purodhāya dhāma svāyambhuvaṁ yayuḥ || 2-1

தாரகன் என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்தியவுடன் அவர்கள் பிரம்மாவிடம் சென்றனர்.

****

तेषामाविरभूद्ब्रह्मा परिम्लानमुखश्रियाम्|

सरसां सुप्तपद्मानां प्रातर्दीधितिमानिव॥ २-२

பிரம்மா ஒளியிழந்த தேவர்கள் முன்னர் தோன்றினார் ; பிரேமா என்ற சொல் இங்கே பயிலப்படுகிறது

teṣāmāvirabhūdbrahmā parimlānamukhaśriyām |

sarasāṁ suptapadmānāṁ prātardīdhitimāniva || 2-2

***

अथ सर्वस्य धातारं ते सर्वे सर्वतोमुखम्|

वागीशं वाग्भिरर्थ्याभिः प्रणिपत्योपतस्थिरे॥ २-३

இந்த ஸ்லோகத்தில் அவர் நான்கு முகம் உடையவர், எல்லாவற்றையும் படைப்பவர் , சொற்களுக்கு இறைவன் என்றும் அவர் தோன்றியவுடன் எல்லோரும் துதித்தனர் என்றும் சொல்லப்படுகிறது

atha sarvasya dhātāraṁ te sarve sarvatomukham |

vāgīśaṁ vāgbhirarthyābhiḥ praṇipatyopatasthire || 2-3

***

नमस्त्रिमूर्तये तुभ्यं प्राक्सृष्टेः केवलात्मने|

गुणत्रयविभागाय पश्चाद्भेदमुपेयुषे॥ २-४

பிரம்மாவைப் புகழும் தேவர்கள் அவரே  படைப்புக்கும் முன்னால் வந்தார் என்றும் மும்மூர்த்தி என்றும் முக்குணங்கள் சேர்க்கை என்றும் பாடுகினறனர்

namastrimūrtaye tubhyaṁ prāksṛṣṭeḥ kevalātmane |

guṇatrayavibhāgāya paścādbhedamupeyuṣe || 2-4

***

स्त्रीपुंसावात्मभागौ ते भिन्नमूर्तेः सिसृक्षया|

प्रसूतिभाजः सर्गस्य तावेव पितरौ स्मृतौ॥ २-७

இன்னும் ஒரு ஸ்லோகத்தில் அவரே இரண்டாகி ஆண் பெண் ஆனார் என்று போற்றுகின்றனர்

strīpuṁsāvātmabhāgau te bhinnamūrteḥ sisṛkṣayā |

prasūtibhājaḥ sargasya tāveva pitarau smṛtau || 2-7

***

पुराणस्य कवेस्तस्य चतुर्मुखसमीरिता|

प्रवृत्तिरासीच्छब्दानां चरितार्था चतुष्टयी॥ २-१७

purāṇasya kavestasya caturmukhasamīritā |

pravṛttirāsīcchabdānāṁ caritārthā catuṣṭayī || 2-17

முந்திய ஸ்லோகத்தில்  பிரம்மாவை வேதாஹா  என்று சொல்லிவிட்டு அடுத்த ஸ்லோகத்தில் புராண கவி- பழம்பெரும் கவி –என்கிறான் காளிதாசன்

****

ரகுவம்சத்திலும் வேதாகா 1-29  என்று சொல்கிறார்.

ब्राह्मे मुहूर्ते किल तस्य देवी कुमारकल्पं सुषुवे कुमारम्|

अतः पिता ब्रह्मण एव नाम्ना तमात्मजन्मानमजं चकार॥ ५-३६ ராகு வம்சம்

பிரம்ம முஹுர்த்த நேரத்தில் பிறந்த ரகுவின் பிள்ளை முருகனைப்போல இருந்தான். அவனுக்கு பிரம்மாவின் பெயரான அஜன் என்ற பெயரைச் சூட்டினான்

brāhme muhūrte kila tasya devī kumārakalpaṁ suṣuve kumāram

ataḥ pitā brahmaṇa eva nāmnā tamātmajanmānamajaṁ cakāra || 5-36

****

வேத கால இலக்கியங்களில் 300- க்கும் மேலான இடங்களில் பிரம்மாவின் பெயர் வருகிறது.

Please go to wisdomlib.org for more details

***

அமரகோசத்தில் பிரம்மாவுக்கு 29  பெயர்கள் 

1.பிரம்மா= மூச்சுக்காற்றை அளிப்பவர்; பெரியவர்

2.ஆத்மபூ= தான் தோன்றி

3.சுரஜேஷ்ட= தேவர்களில் மூத்தவர், பெரியவர்

4.பரமேஷ்டி= பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர்; யாகத்தால் பூஜிக்கப்படுபவர்; இதய தாமரையில் வீற்றிருப்பவர்.

5.பிதாமஹர்= பாட்டனார்

6.ஹிரண்யகர்ப்பர்= தங்க முட்டை (யிலிருந்து வந்தவர்)

7.லோகேச= மக்கள் ஈசன், உலகு இயற்றினான்

8.ஸ்வயம்பூ= தான் தோன்றி (இது ஸ்வயம்பூ லிங்கமாகத் தோன்றும் சிவ பெருமானுக்கும் உள்ள பெயர்)

9.சதுரானானன= நான்முகன் ( நாற்புறமும் பார்வை உடையவர் )

10.தாதா = உயர் தலைவன்

11.த்ருஹினஹ= படைப்போன்

12.அப்ஜயோனி = தாமரையில் உதித்தோன்

13.கமலாசன = தாமரையில் அமர்ந்தோன்

14.ஷ்ரஷ்ட= உலகைப் படைத்தோன்

15.பிரஜாபதி= மக்களை உருவாக்கியவன்; படைத்தோன்

16.வேதா= வேதம் உடையோன்

17.விஸ்வஸ்ரு = எல்லாம் அறிந்தவன் (கேட்பவன்)

18.விதாதா= உயர் தலவன்

19.விதி = வேதம் உடையவன்; விதிகளை எழுதுபவன்

20.நாபிஜன்ம= நாபியில் (தொப்புள்) உதித்தோன்

21.பூர்வ= முன்னோன்

22.கமலோத்பவ = தாமரையில் உதித்தோன்

23.சதானந்த = எப்போதும் மகிழ்பவன்

24.நிதன = ( மரணம் எனப் பொருள்; ஆயினும் பிரம்மாவுக்கு இது எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை)

25.ரஜோ மூர்த்தி = ரஜோ குணம் உடையவர்

26.சத்யக = உண்மை விளம்பி

27.ஹம்சவாஹன; அன்னப் பறவை வாஹனம் உடையோன்

28.விரிஞ்சி = உலகைப் படைத்தோன்

29.அண்டஜ= முட்டையில் உதித்தோன்.

–subham—

Tags- காளிதாசன் காவியங்கள், சங்கத் தமிழ் நூல்கள், பிரம்மா, படைப்போன், ஆதி அந்தணன், முதியவன்

காளிதாசன் காவியங்களில் விஷ்ணு கொடி, வாகனம்!- Part 5 (Post No.14,837)

Written by London Swaminathan

Post No. 14,837

Date uploaded in London –  6 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காளிதாசன் காவியங்களில் விஷ்ணு கொடி, வாகனம்  !- Part 5

சங்கப்புலவர்களும் காளிதாசனும் விஷ்ணு பற்றியும் அவருடைய அவதாரங்கள், கொடி, வாகனம் அவனுக்குப் பிரியமான துளசி  உதளியான பற்றி சொல்லும் விஷயங்களை மேலும் விரிவாக விஷ்ணு ஸஹஸ்ரநாம உரைகள் ஆழ்வார் பாடல்களில்  மற்றுமுள்ள பக்தி இலக்கியங்களில் காண்கிறோம்.

பக்தி இயக்கம் என்பது ரிக் வேத காலத்திலியேயே துவங்கி விட்டது அப்போதிட்ட விதைகள் மரமாக வளர்ந்து பூத்துக்குலுங்கிப் பழங்களைக் கொடுத்தது  காளிதாசன் காலத்தில்- பரிபாடல் பாடிய சங்க காலத்தில்– என்றால் மிகையாகாது . ராமாயணம் இயற்றிய வால்மீகி  ராமனை அவதாரம் என்று சொல்லவில்லை ஆனால் காளிதாசன் அவன் விஷ்ணுவின் அவதாரம் என்றும் அவனது வாகனம் , கொடி, மனைவியர்  இவை இவை என்றும் சொல்கிறான் . ரகு வம்ச காவியத்திலிருந்தும் சங்க இலக்கிய நூல்களிலிருந்தும் சில பாடல்களை மட்டும் காண்போம்.

अथात्मनः शब्दगुणम्गुणज्ञ्यः

पदम्विमानेन विगाहमानः।

रत्नाकरम्वीक्ष्य मिथः स जायाम्

रामाभिधानो हरिरित्युवाच॥ १३-१

athātmanaḥ śabdaguṇamguṇajñyaḥ

padamvimānena vigāhamānaḥ |

ratnākaramvīkṣya mithaḥ sa jāyām

rāmābhidhāno harirityuvāca || 13-1

ராமன் என்ற ஸ்ரீ ஹரி என்று சொல்லும் ஸ்லோகம் இது . ராமன் சிங்கையில் விமானத்தில் ஏறிக்கொண்டு கடலினை காண்பித்து சீதையிடம் பேசும் காட்சி இது

****

त्रस्तेन तार्क्ष्यात्किल कालियेन मणिम् विसृष्टम् यमुनौकसा यः|

वक्षःस्थलव्यापिरुचम् दधानः सकौस्तुभम् ह्रेपयतीव कृष्णम्॥ ६-४९

trastena tārkṣyātkila kāliyena maṇim visṛṣṭam yamunaukasā yaḥ |

vakṣaḥsthalavyāpirucam dadhānaḥ sakaustubham hrepayatīva kṛṣṇam || 6-49

இந்துமதி சுயம்வர கட்டத்தில் ஒரு மன்னரை அறிமுகப்படுத்திய தோழி அந்த மன்னன் யமுனை நதியில் வாழும் காளியன் என்னும் பாம்பு கொடுத்த டீ ரத்தினத்தை மார்பில் அணிந்து விஷ்ணு கெளஸ்துப மணியை மார்பில் அணிந்து போல இருக்கிறது என்கிறாள் . இதை யமுனை, கிருஷ்ணன் அடக்கிய காளியன், விஷ்ணு அணியும் ரத்தினம்  முதலியன வருவதைக் கவனிக்க வேண்டும்.

****

स्वासिधारापरिहृतः कामम् चक्रस्य तेन मे।

स्थापितो दशमो मूर्धा लभ्याम्श इव रक्षसा॥ १०-४१

svāsidhārāparihṛtaḥ kāmam cakrasya tena me।

sthāpito daśamo mūrdhā labhyāmśa iva rakṣasā || 10-41

ராவணன் ஒரு அரக்கன் என்பதை புறநானூறு குறிப்பிட்டத்தை முந்தைய கட்டுரையில் கண்டோம் இந்த ரகுவம்ச பாடல் அவனை ராக்ஷஸன் என்றும் அவனது பத்தாவது தலை தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் வெட்டப்படும் என்றும் தேவர்களுக்கு விஷ்ணு உறுதி  தருகிறார்  முன்னொரு காலத்தில் கடும் தவம் இயற்றிய ராவணன் ஒன்பது தலைகளைத் தியாகம் செய்தபோது பிரம்மா தோன்றி வரம் கொடுத்து ஒன்பது தலைகளையும் மீண்டும் கொடுத்ததாக ஒரு வரலாறு உண்டு. இதில் ராவணன் ஒரு அரக்கன், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் ஆகியன  வருவதைக் கவனிக்க வேண்டும்.

***

யாதவப் பெண்ணுக்கு காளை மாடு  காட்டிய கணவன்!

கிருஷ்ணனும் தெய்வ மாலும் (திரு மால் /விஷ்ணு/ ஹரியும் ) ஒன்று என்பதைக் காட்டும் வருணனை கலித்தொகையில் முல்லைக்கு காலையில் வருகிறது ஆயர்கள் -அதாவது யாதவ இடையர் வீட்டுப் பெண்மணிகள்  காளை அடக்கும் போட்டியில் (ஜல்லிக்கட்டு/ மஞ்சசுவிரட்டு) யார் வெல்கிறாரோ அவரையே

கல்யாணம் செய்வது வழக்கம் காளை அடக்கும் போட்டி, முதல் முதலில் பாகவதத்தில் வருகிறது

 கலி .107-22

ஒரு யாதவ பெண் தான் வளர்த்த காளையை மைதானத்துக்குள் அனுப்பினாள்; அந்தக் காலத்தில் ஆண்களும் தலையில் பூக்களை அணிவது வழக்கம்; காளையை அடக்க வந்த ஆண்மகனின் பூ மாலை காளையின் கொம்பில் சிக்கிக்கொண்டது அதை யாதவ இளைஞன் அடக்கியபோது துள்ளிக்குதித்த காளையின் கொம்பில் சிக்கி இருந்த அந்தப் பூ மாலை , யார் அந்தக் காளையை வளர்த்து போட்டிக்கு அனுப்பினாளோ அவள் மீது போய் விழுந்தது உடனே தோழியர் அனைவரும் பாராட்டி விஷ்ணுவே/ திருமாலே உனது கணவனைக் காட்டிவிட்டார் என்று சொல்லி மகிழ்கிறார்கள் இதை முல்லைக் கலி  பாடிய சங்கப்புலவர் சித்தரிக்கிறார் ; இதில் யாதவர்கள் வணங்கும் கிருஷ்ணனே மால் என்று வருவதைக்க  கருத்திற்கொள்ள வேண்டும்  .

வருந்தாதி
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன்   30
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, ‘திண்ணிதா,
தெய்வ மால்காட்டிற்று இவட்கு எனநின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு

வருந்தவேண்டாம். உன் கூந்தலில் அவன் பூ விழுந்தது எனக் கேட்டு “இவளுக்குத் தெய்வம் காட்டிய வழி” என்று எண்ணிக்கொண்டு உன் தாய் தந்தையரும், அண்ணன்மாரும் திருமணம் செய்துதர உறுதி பூண்டுள்ளனர். உன் விருப்பம் நிறைவேறும்.

****

மார்பில் லெட்சுமி , கெளஸ்துப மணி கருடன்

பரிபாடல் 1 

எரிமலர் சினைஇய கண்ணை; பூவை

விரிமலர் புரையும் மேனியை; மேனித்

திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்

தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை

எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை 10

சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல் உழந்தமை கூறும்,

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

பொருள்

எரியும் தீ போலப் பூக்கும் தாமரை-மலர் போன்ற கண்ணை உடையவன்.

பூவை என்னும் காயாம்பூ பூத்திருப்பது போன்ற ஒளிர்-நீல-நிற மேனியை உடையவன்.

அந்த மேனியில் திருமகள் நிமிர்ந்து அமர்ந்திருக்கும் மார்பினை உடையவன்.

அந்த மார்பில் தெரிப்பாக மணி ஒளிரும் பூணினை (கவச-அணிகௌவுத்துவ-மணி) உடையவன்.

பெரிய மலை பற்றி எரிவது போன்ற பொன்னிழையாலான உடுக்கை-ஆடை உடையவன்.

கருடச்சேவல் அழகு தரும் கொடியை வலப்புறம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பவன்.

உன் ஏவலின்படி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நாக்கு வல்லமை பெற்ற (வடமொழி மந்திரத்தை வளமாக ஓதும் வல்லமை) அந்தணர்கள். அவர்கள் ஓதும் அருமறையின் பொருளாக விளங்குபவன். இப்படி விளங்குபவனே!

****

தசரதன் மனைவியர் கர்ப்பமாக இருக்கும்போது கண்ட கனவுகள்

गुप्तम् ददृशुरात्मानम् सर्वाः स्वप्नेषु वामनैः।

जलजासिकदाशार्ङ्गचक्रलाञ्छितमूर्तिभिः॥ १०-६०

guptam dadṛśurātmānam sarvāḥ svapneṣu vāmanaiḥ।

jalajāsikadāśārṅgacakralāñchitamūrtibhiḥ || 10-60

விஷ்ணுவின் அவதாரத்தைக்கோடி காட்டும்

சங்கு சக்ர சாரங்க கதையுடன் உள்ள இளைஞர்களைக் கனவில் கண்டனர்.

हेमपक्षप्रभाजालम् गगने च वितन्वता।

उह्यन्ते स्म सुपर्णेन वेगाकृष्टपयोमुचा॥ १०-६१

hemapakṣaprabhājālam gagane ca vitanvatā।

uhyante sma suparṇena vegākṛṣṭapayomucā || 10-61

ஒளியை வீசிக்கொண்டு பறக்கும் கருடன் தங்களை சுமந்து செல்வதாகவும் மேகங்கள் பின் தொடர்வதாகவும் கனவு கண்டார்கள்.

बिभ्रत्या कौस्तुभन्यासम् स्तनान्तरविलम्बितम्।

पर्युपास्यन्त लक्ष्म्या च पद्मव्यजनहस्तया॥ १०-६२

bibhratyā kaustubhanyāsam stanāntaravilambitam।

paryupāsyanta lakṣmyā ca padmavyajanahastayā || 10-62

லட்சுமி தனது மார்பில் கெளஸ்துப மணி விளங்க தாமரைப்பூ விசிறி கொண்டு வீசி உபசரிப்பதாகவும் கனவில் தெரிந்தது.

அடுத்த ஸ்லோகத்தில் சப்த ரிஷிகள் உபசரித்த கனவு வருகிறது இதையெல்லாம் அவர்கள் கணவன் தசரத சக்கரவர்த்தியிடம் சொன்னவுடன் அவர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார்.

****

அகநானூறு 175

கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் 10

ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த

வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என

மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,

நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்

போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், 15

திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு

மண் பயம் பூப்பப் பாஅய்,

தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?

இப்போது வானம் மின்னுகிறது. செழியன் கைவண்மை மிக்க வள்ளல். அவன் வலிமை மிக்க சக்கரம் கொண்ட தேரில் சென்று ஆலங்கானம் என்னுமிடத்தில் போரிட்டான். அப்போது அவன் வேல்கள் மின்னியது போல வானம் மின்னுகிறது. அப்போது அவன் முரசு முழங்கியது போல இடி முழங்குகிறது. சக்கரத்தைக் கையிலே கொண்ட திருமால் மார்பில் உள்ள ஆரம் போல வானவில்லை வளைத்துக் காட்டுகிறது. மண்ணெல்லாம் விளைச்சல் பயன் தருமாறு மழை பொழிகிறது. அவர் வருவேன் என்று சொன்ன காலம் இதுதானே?

நான்கு தெய்வங்களின் கொடிகள் வாகனங்கள் பற்றி சங்கப்புலவர் நக்கீரர்

புறநானூறு 56

காளைமாட்டு ஊர்தி,

தீ போன்று விரிந்த செஞ்சடை,

கையில் கணிச்சி ஆயுதப் படை,

கழுத்தில் நீலநிற நஞ்சுமணி

ஆகியவற்றை உடைய சிவபெருமான் (1)

இவன் கூற்றுவன் போல் சினம் கொண்டவன்.

கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி,

கலப்பை ஆயுதப் படை,

பனைமரக் கொடி

ஆகியவற்றை உடைய பலராமன் (2)

இந்தப் பலராமன் போல் வலிமை கொண்டவன்

கழுவிய மணிக்கல் போன்ற நீலநிற மேனி,

கருடப்பறவைக் கொடி

ஆகியவற்றை உடைய திருமால் (3)

திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்

மயில் கொடி,

மயில் ஊர்தி

ஆகியவற்றுடன் வெற்றியாளனாக விளங்கும் முருகன் (4)

முருகன் போல் எண்ணியதை முடிக்கும் திறனாளன்.

இப்படி நான்கு பெருந் தெய்வம் போல்

ஆற்றல் மிக்க உனக்கு செய்யமுடியாதது என்று ஒன்று உண்டா?

இல்லை.எனவே

இரப்போருக்கு வேண்டிய பொருள்களைக் குறைவின்றி வழங்குவாயாக.

யவனர் தந்த பொன்-கிண்ணத்தில்

மகளிர் நாள்தோறும் ஊட்டும் தேறலை உண்டு

மகிழ்ந்து இனிதாக வாழ்வாயாக.

வாளோக்கிய மாறனே!

இருளகற்றும் சூரியன் போலவும்,

மேற்குத் திசையில் காணப்படும் வளர்பிறை நிலாப் போலவும்

நிலைபேற்றுடன் உலகில் வாழ்வாயாக.

பாடல்

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி,

அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;

மண்ணுறு திரு மணி புரையும் மேனி,       5

விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,

பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என

ஞாலம் காக்கும் கால முன்பின்,

தோலா நல் இசை, நால்வருள்ளும்,                 10

கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;

வலி ஒத்தீயே, வாலியோனை;

புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;

முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;

ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்   15

அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,          20

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!

அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!    25

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

****

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை

மதுரை மருதன் இளநாகனார் பாடிய முந்தைய பாடலில் மன்னனை முருகனுக்கும் சிவனுக்கும் ஒப்பிடுகிறார் . இதிலிருந்து இன்னுமொரு விஷயம் தெளிவாகத்தெறிகிறது ; காளிதாசன் சங்க காலத்துக்கு முந்தையவன் ஏனெனில் அவன் மன்னர்களை வேத கால இந்திரன், அக்கினி, வருணன் , யமனுக்கு ஒப்பிடுகிறான் ; தமிழ் தெரியாத வடகத்தியர்களும் வெளிநாட்டுக்காரர்களும் காளிதாசனைக் குப்தர்  காலத்தில் வைப்பது பொருந்தாது என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

****

ஆதிசேஷன்படுக்கையில் விஷ்ணு

பிரம்மாவை வருணிக்கும் பாடலில் ஆதிசேஷன் என்னும் பாம்புப்  படுக்கை வருகிறது அதை அடுத்ததாகக் காண்போம்

–subham–

Tags- காளிதாசன் காவியங்கள், விஷ்ணு கொடி, வாகனம் ,சங்கப்புலவர் நக்கீரர், அகநானூறு 175,யாதவப் பெண், காளை மாடு,   கணவன், கலித்தொகை

காளிதாசன் காவியங்களில் விஷ்ணு அவதாரங்கள்!- Part 4 (Post No.14,833)

Written by London Swaminathan

Post No. 14,833

Date uploaded in London –  5 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரசுராமன்

விஷ்ணுவின் பல அவதாரங்கள் சங்கத் தமிழ் நூல்களிலும் காளிதாஸனிலும் பாடப்படுகின்றன .

பரசுராமன்- ராமன் மோதலை காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் விரிவாகவே பாடுகிறான் (ரகு வம்சம் 11-ஆவது சர்க்கம்). காளிதாசன் பிருஹுபதி என்ற பெயரில் பரசுராமனை மேகதூதத்திலும் (59) குறிப்பிடுகிறான். 

பரசுராமன் பற்றிய குறிப்பு சங்கத் தமிழில் அகம்-220 ல் காணாலாம்.

இதை மருதன் இளநாகனார் பாடியதால் சங்க காலத்தின் கடைசி கட்டத்தில் (200-300 CE)  இது பாடப் பெற்றிருக்க வேண்டும் .

நான்கு முக்கியச் செய்திகள் இதில் உள்ளன

மழுவாள் நெடியோன் = பரசுராமன்

ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,

தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,

கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,

கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்     5

முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,

கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,

அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்….”

1..கெடுதி செய்யாத வேள்வித் தீ செல்லூரில் எரிந்தது.

2..“மழுவாள் நெடியோன்” என்னும் பெயர் கொண்டவன் யானைப்படையுடன் வந்து தாக்கிய அரசர்களை பூண்டோடு அழித்தான்.

3..வேள்விக்கு நடப்பட்ட வேள்வித்தூண் நாற்புறமும் கயிறுகளால் கட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அது காணத்தக்க பொலிவு கொண்டதாக விளங்கியது. வேள்வித் தூண் – யூபஸ்தம்பம் .

4.அந்த வேள்வித்தூண் போன்றது உன் மார்பு.

ஆனால் அந்தத் தூணைப் போல அனைவராலும் காணமுடியாத மார்பு உன்னுடையது; நினைத்தாலும் நடுங்கவைக்கும் மார்பு அது.

****

பலராமன் – கண்ணன் ஜோடி

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடலில் நீங்கள் இருவரும் இருபெருந் தெய்வங்களாகிய பலராமனும், திருமாலும் போல ஒன்றிப் பகைவர்கள் அஞ்சுமாறு தோன்றுகிறீர்கள் என்று சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனையும்  பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் புகழ்கிறார். .

செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,

அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,                  10

வரைய சாந்தமும், திரைய முத்தமும்,

இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;

பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,

நீல் நிற உருவின் நேமியோனும், என்று                    15

இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,

இதில் மேலும் சில செய்திகளையும் தமிழ்ப்புலவர்கள் கொடுக்கின்றனர் . பலராமன்  நிறம்  வெள்ளைக் கலர் (வாலியோன்); கிருஷ்ண நிறம் நீலம் சேர்ந்த கருப்பு . பலராமன் கொடி பனைக்கொடி ; கிருஷ்ணன் கொடி புள் கொடி என்பது வேறு பாடல்களில் வருகிறது

கிருஷ்ணனும் பலராமனும் ஆதிகாலத் தமிழ் நாட்டில் கோவிலில் ஒருங்கே வழிபடப்பட்டனர் . காலியான/ வெற்றிடமான  பலராமன்  சந்நிதிகளை இன்றும் சில கோவில்களில்  காணலாம் . பலராமனை லாங்கலின்,  ஹலப்ருத் (மேகம் 61, 51) என்று காளிதாசன் அழைக்கிறான் அதாவது கலப்பையை ஏந்தி; காடு திருத்தி நாடாக்கிய பெரும் விவசாயி; அவன் இந்தியா முழுதும் விவசாயத்தைப் பரப்புவதற்காக மஹாபாரத யுத்த காலத்தில் பயணம் செய்தான் . இந்தக் காளிதாசனின் கலப்பை ஏந்தியவன் என்ற சொல்லைத் தமிழ்ப்புலவர்களும் பாடுகின்றனர்.

பலராமன், கிருஷ்ணன்  – பரி  2-20-27 ; 15-13/4,

பலராமன்  மட்டும் பாடப்பட்ட இடங்கள்  – கலி  105-11/12; பரி  15-19 to 21

பனைக்கொடி  , நாஞ்சிலோன்=ஹல ப்ருத்   பரி  13-35; புறம்  58-14; கலி104-7; பரி 1-4; கலி 105-11;பரி 13-33

***

இடைக்குல கண்ணனை மேகதூதத்தில் முன்னரே கண்டோம் .அகநானூற்றில் கண்ணன் லீலைகள் உளது 

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்

வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5

மரம் செல மிதித்த மாஅல் போல,

…..

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,              10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை…………”

வட நாட்டில் ஓடும் தொழுனை என்ற  யமுனை ஆற்று மணலில் அண்டர் என்னும் இடையர் குல மகளிர் தழையாடை உடுத்திக் கொள்வதற்காகக் கண்ணன் மரத்தில் ஏறிக் கிளைகளை மிதித்து வளைத்துக் கொடுத்தான் என்று பிற்காலப் புலவரான மருதன் இளநாகன் பாடுகிறார்  . இது  கோபியரின் புடவைகளை குருந்த மரங்களில் கண்ணன் ஒளித்துவைத்ததையும் தொலைவில் அண்ணன் பலராமன் வருவதைக்கண்டவுடன் அவசர அவசரமாக புடவைகளைத் திருப்பிக்கொடுத்ததையும் கூறும் பாகவதக் கதையின் தமிழாக்கம் ஆகும் —அகம் 59

பரிபாடல் பாடிய அந்துவன் பற்றி இளநாகன் குறிப்பிடுவதால் அவன் மிகவும் பிற்காலப் புலவன் என்பதும் அந்துவன் முருகனைப் பாடிய செய்தியும் உளது .

தொழுனை என்ற மர்மப் பெயரை யாரும் விளக்கவில்லை! கோபியர் தொழுது மன்றாடியதால் தொழுனை என்ற பெயர் வந்தது போலும்!

***

புறம் 174,

அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,

சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,

இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து

இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்

அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,5

அரசு இழந்திருந்த அல்லல் காலை,

முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது

இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி

மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,

பொய்யா நாவின் கபிலன் பாடிய,           10

மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்

செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட

எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,

அரு வழி இருந்த பெரு விறல் வளவன்

மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை 15

புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!

விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,

சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்

ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,

உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,     20

ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்

கவலை நெஞ்சத்து அவலம் தீர,

நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!

கல் கண் பொடிய, கானம் வெம்ப,

மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,        25

கோடை நீடிய பைது அறு காலை,

இரு நிலம் நெளிய ஈண்டி,

உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.- புறம் 174,

SOLAR ECLIPSE

இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார் ; அவரால் பாடப்பெற்ற மன்னன் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா =மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.

கிருஷ்ணன் எப்படி சூரியனை மறைத்த இருளை அகற்றி சூரியனை வெளிக்கொணர்ந்தாரோ SOLAR ECLIPSE அது போல காட்டில் ஒளிந்து கொண்டிருந்த சோழ மன்னனை நீ மீட்டுவந்து அரசுக்கட்டிலில் ஏற்றினாய் என்ற உவமை உள்ளது. அப்படிக் கிருஷ்ணனாகிய நீ என்ற சிலேடையை வைத்துள்ளார் . சோழமன்னன் சூரியகுலத்தவன் என்பதால் அவனை சூரியனுக்கு ஒப்பிட்டார் ; பாடல் முழுதும் சிலேடை நயமும் உவமை நயமும் உளது ; கபிலனை புலவர் குறிப்பிடுவதால் அவர் காலத்துக்குப் பிற்பட்டவர் நப்பசலையார் என்ற செய்தியும் உளது

இதிஹாஸக் கிருஷ்ணன் மஹாபாரத யுத்தத்தில் சூரிய கிரகணத்தைப் பயன்படுத்தி ஜயத்ரதனை வீழ்த்தினார் .

இதே போல ரிக்வேதத்தில் சூரியனை அத்ரி மகரிஷி வெளிக்கொணர்ந்தார் என்ற பாடலும் உளது.

****

வராஹ அவதாரம்

குமார சம்பவ ஸ்லோகத்தில் (6-8) வராஹ அவதாரத்தைக் காளிதாசன் வருணிக்கிறார்;  நாட்டிலேயே மிகப்பெரிய வராஹ அவதார சிலை குப்தர்கால உதய கிரி குகையில் (400 CE)  உள்ளது .காளிதாசன் பாடியதால் இது உருவாக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.

வராஹஅவதாரம்  பரி  2-16/19; 3-21/3; 3-34/6; 4-22/4

பரி பாடல் முழுதும் குறைந்தது நான்கு இடங்களிலாவது வராஹ அவதாரம் பாடப்பட்டுள்ளது 

****

பரசுராமன்

கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள்  அணியுமிடம்  தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது. –

கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்    20

செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே

இருங் கிளைத் தலைமை எய்தி,சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியதுபுறநானூறு 378

அகநானூற்றில் ராமயணம்

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,

……………………………………

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த     15

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்றுஇவ் அழுங்கல் ஊரே..

மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடல்

காளிதாசன் மூன்று ரகுவம்ச சர்க்கங்களில் ராமாயணத்தை அற்புதமாகச் சுருக்கிக் கொடுத்துள்ளான் .12 ஆவது சர்க்கத்தில் வால் மீகியின் ஐந்து காண்டங்களின் சாரத்தை சுருக்கிக் கொடுக்கிறான்  .

To be continued…………………………………

Tag– பரசுராமன் , காளிதாசன் காவியங்களில், விஷ்ணு, அவதாரங்கள், Part 4

அவை, சட்டை, சட்ட – தமிழ் சொற்கள் இல்லை; சட்ட மேலவை என்பது ஸம்ஸ்க்ருதம் (Post.10656)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,656

Date uploaded in London – –    13 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 17

அதர்வண வேதத்தில் உள்ள 63 மந்திரங்கள் உடைய பூமி சூக்தத்தின் மேலும் சுவையான பகுதிகளைக் காண்போம்:-

பாடல்/ மந்திரம் 55

அதோ யத் தேவி ப்ரதமானா புரஸ்தாத் தேவைருக்தாத் வ்ய ஸர்போ மஹித்வம்

ஆத்வா ஸு பூதமவிசத்ததா நீம கல்பயதாஹா ப்ரதிசஸ்சதஸ்ரஹ -55

பாடல் 55 பொருள்

முன்னேறிச் செல்லும் தேவிய!  உன்னை தேவர்கள் போற்றி, உன் புகழை விரிவாக்கியுள்ளனர்.அதனால் உன்னுள் பெரும் புகழ் நுழைந்துவிட்டது நீயே நான்கு திசைகளையும் உனதாக்கிக் கொண்டுவிட்டாய் .

இதன் விளக்கம் – பூமாதேவியை தேவர்களும் புகழ்ந்து போற்றுகின்றனர். அதனால் அவள் புகழ் மேலோங்கி அவள் நாலு திசைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறாள் .

இதை பாரதியாரும் சத்ரபதி  சிவாஜி பாடலில் சொல்கிறார் ,

தேவர்கள் வாழ்விடம் திறலுயர் முனிவர்

ஆவலோ டடை யும் அரும்புகழ் நாடு

ஊனமொன்றறியா ஞான மெய்ப் பூமி

வானவர் விழையும் மாட்சியார் தேயம்

பூமி சூக்தப் புலவன்  பூமா தேவி பற்றிப் பகன்றதை, பாரதியார், பாரத தேவி மீது ஏற்றிப் பாடிவிட்டார்!

XXX

பாடல்/ மந்திரம் 56

யே க்ராமா யதரண்யம் யாஹா ஸபா அதி பூம்யாம்

யே ஸம் க்ராமா ஸமிதயஸ் தேஷு சாரு வதேம தே -56

பாடல் 56ன் பொருள்

கிராமங்களில், காடுகளில், பாரிலுள்ள அனைத்து சபைகளில் , மக்கள் கூடும் கூட்டங்களில் , சமிதிகளில் உன் புகழ் படுவோம்; இனிமையானதையே சொல்லுவோம்

இது மிகவும் பொருள் பொதிந்த பாடல். கிராம சபை முதல் ஐ.நா . சபை வரை பூமியை — பாரத பூமியைப் புகழ்வோம் ; காதுக்கு இனிமையானதைப் பேசுவோம்.

என்ன பக்தி பாருங்கள் !!!

இதில் இரண்டு முக்கியமான மொழியியல் LINGUISTIC FACTS விஷயங்கள் வருகின்றன.

சபை SABHA என்ற சொல்லை திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்கப் புலவர்களும் அவை என்று மாற்றிப் பாடியுள்ளனர். அதாவது தமிழில் ச- என்னும் எழுத்தில் சொற்கள் வரக்கூடாது என்று பிராமண தொல்காப்பியன் — த்ருண தூமாக்கினி – தடை போட்டுவிட்டான்; ஏனெனில் ஸம்ஸ்க்ருதத்தில் , டஸ் புஸ் என்று ஸ – வில் துவங்கும் சொற்களே அதிகம். ஆகையால் வடக்கிலிருந்து சிவன் அனுப்பிய அகஸ்தியர் — தொல்காப்பியரின் குருநாதர் — ஸ -வுக்குத் தடை விதித்தார் போலும். வியாஸ மகரிஷிக்கு ஸ -கார குக்ஷி என்று பெயர்; நினைத்த இடங்களில் எல்லாம் ஸ – எழுத்தை அள்ளி வீசி விட்டார்.

“ச” வரும் இடமெல்லாம் ஒரு உயிர் எழுத்தைப் போட்டு அவை ஆக்கிவிட்டனர் தமிழர்கள்  .

இந்த ஸபா என்னும் சொல் ரிக்வேதத்தில் வரும் சொல். இன்றும் லோக் ஸபா, ராஜ்ய ஸபா, தமிழ்நாடு சட்ட மேலவையில் உள்ளது. ஆக தமிழர் பயன்படுத்தும் சட்டை, சட்டம், அவை எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.

ச – வில் துவங்கும் எல்லா சொற்களும்) ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதை 18 மேல் கணக்கு நூல்களிலும் (சங்க இலக்கியம்) 18 கீழ்க் கணக்கு நூல்களிலும் (திருக்குறள், பழமொழி, நாலடியார் முதலியன) காணலாம்.

XXXX

இதையும்விட இரண்டு முக்கிய அதிசயங்கள் உள்ளன.

ஸபா எப்படி அவை ஆனது ?

‘ப = வ’ ஆக மாறி ‘பை = வை’ ஆகிவிட்டது. (B=V; V=B)

இன்றும் வங்கத்தை பெங்கால் BENGAL என்று வ=ப மாற்றத்தைக் காண்கிறோம்.

இந்த ப= வ B= V மாற்றம் 3000 ஆண்டுப் பழமை உடைய ஈரானிய – பாரசீக இலக்கியத்திலும் உளது. அஸ்வ என்பதை அஸ்ப ASVA = ASBA என்பர். ஈரான் என்ற பெயரோ ஆர்ய ARYA = IRAN என்பதன் திரிபு, மரூஉ என்பதை உலகமே ஒப்புக்கொள்கிறது. எப்படித் தமிழிலும் ப- வ ஆனது.??

ஆக லண்டன் சாமிநாதன் சொல்லும் THEORY/HYPOTHESIS  தியரியே சரி; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் வெவ்வேறு குடும்பம் என்று சொல்லும் BISHOP CALDWELL கால்டுவெல் கும்பலுக்கு வேட்டு வைக்கும் சொல் இது.

இதை விடப் பெரிய அதிசயம் ரிக் வேத, அதர்வண வேத “சமிதி” என்னும் சொல்;  கமிதி COMMITTEE  என்று உலக மொழிகளில் புழங்குகிறது ; பிரெஞ்சு மொழி செய்த குழப்பத்தால் ச = க C= K ஆக மாறுகிறது; சமிதி என்பதை SAMITI = COMMITTEE இன்றும் நாம் ஆங்கிலத்தில் கமிட்டி என்று பயன்படுத்துகிறோம். சமிதி என்று எழுதிவிட்டு அதை கமிட்டி என்று உச்சரிக்கிறோம் !!!

காடுகளிலும் கூட புகழ் பரப்புவோம் என்று அதர்வண வேத புலவன் செப்புவது நோக்கற்பாலது. என்ன சிம்பிள் SIMPLE LANGUAGE மொழி பாருங்கள்!! இந்த மந்திரத்தில் உள்ள கிராமம், ஸபா, சமிதி, ஆரண்யம் பூமி – எல்லாம் கிராமத் தமிழனுக்கும் கூடப் புரியும்; தெரியும்

COMMITTEE = SAMITI

SABHA = AVAI; LOK SABHA, RAJYA SABHA

ARANYAM, GRAMA, BHUMI

CHARU = SWEET ; CHARU LATHA

XXX

பாடல்/ மந்திரம் 57

அஸ்வ இவ ரஜோ துதுவே வி தான் ஜனான் ய ஆக்ஷியன் ப்ருதிவீம் யாத ஜாயத

மந்த்ரா க்ரேத் வரீ புவனஸ்ய கோபா வனஸ்பதீனாம் க்ருபிரோஷதீனாம் –

57

பாடல் 57-ன் பொருள்

பூமாதேவி ஆனவள், குதிரை தன்  கால் தூசியை உதறித் தள்ளுவது போல இதுவரை தோன்றியவர்களை எல்லாம் தான் பிறந்த நாளிலிருந்து உதறிவிட்டாள் ; அவள் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறாள்; இந்த ப்  பூமியிலுள்ள  தாவரங்களையும் மரம் செடி கொடிகளையும் காப்பவள் அவளே.

நல்ல கருத்து ; தோன்றிய மனிதர்களை உதறித்தள்ளிய போதும் தொடர்ந்து மரம் செடி கொடி கானகங்களை உதறவில்லை ; பசுமை என்னும் ஆடையுடன், நீலத் திரை கடல் சூழ வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

மனிதர்களின் நிலையாமை பற்றிப் பாடிய புறநானூற்றுப் புலவர் பாடல்களை இது நினைவுபடுத்தும்.

பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தியற்றே!

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்

கைவிட்டனரே காதலர்; அதனால்

விட்டோரை விடா அள்திருவே;

விடாஅதோர் இவள் விடப்பட்டாரே

வான்மீகியார், புறம் 358

பொருள்:

கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.

–தொடரும் ……………………………

tags– அவை, சட்டை, சட்டம் , தமிழ் , மேலவை,  ஸம்ஸ்க்ருதம், சபை

வெளிநாட்டில் தமிழ் கற்பது தேவையா? (Post No.10096)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,096

Date uploaded in London – 15 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Written by London Swaminathan for a magazine recently; (Former BBC Broadcaster, University Tamil Tutor & Dinamani Senior Sub Editor)

ஆங்கில  மொழியோ வேறு ஐரோப்பிய மொழியோ பேசும் நாட்டில் வாழும் நாமும் நம் குழந்தைகளும் தமிழ் மொழி கற்பது அவசியமா? வீட்டில் தமிழ் பேசுவது தேவையா? தமிழ் பண்பாட்டைக்  காப்பதற்காக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ‘டிக்கெட்’ வாங்கிப் போக வேண்டுமா ? தமிழ் மொழியைக் கற்கும் நேரத்தில்  வேறு மொழியையோ, புதிய தொழில்களையோ  கற்றால் பணமும் சம்பாதிக்கலாம், புதிய வேலைகளையும் செய்யலாமே! — இவ்வாறு பல வாதப் பிரதிவாதங்கள் நடப்பதை நாம் அறிவோம்.

London University Tamil Department (SOAS)- dr Stuart Blacckburn, Dr John Marrin the Centre, London Swaminathan (Far right) Dr Singvi, High Commissioner (far left). Year 1996

முதலில் ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரையாளர் 43 ஆண்டுகளுக்கு தமிழ் தொடர்பான வேலைகளை மட்டுமே செய்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் வேறு வேலைகளுக்கு மனுப்போட்டும் கிடைக்கவில்லை!! ஆனால் தமிழ் வேலைகள் மட்டும் தேடித் தேடி வந்தன.(பத்திரிகை ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர், பி.பி.சி ஒலிபரப்பாளர் ,தமிழ் சங்க மானேஜர், தமிழ் மொழி பெயர்ப்பாளர்…… என்று) சுருக்கமாகச் சொன்னால் எனக்கும் என் குடும்பத்துக்கும், ‘தமிழ் சோறு போட்டது’. அதுவும் லண்டனில்!!

இது எல்லோர் வாழ்விலும் நடக்க முடியாதல்லவா? ஆகவே பொதுவாக விவாதிப்போம் .

ஒருவர் பிறந்த நாட்டையும், பிறந்த மதத்தையும், பேசும் மொழியையும், சேர்த்த புட் பால் (Foot Ball Club)  அணியையும், கிரிக்கெட் அணியையும் ஆதரிப்பதை எல்லா கலாசாரங்களிலும் பார்க்கிறோம் . நாம் மட்டும் ஏன் நமது மொழியையும் பண்பாட்டையும் விடவேண்டும்?

அது சரி, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி ,கீட்ஸ் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தமிழில் என்ன இருக்கிறது? என்று சிலர் நினைக்கலாம்.

தமிழ் ஒரு கடல். இன்று நாம் படிக்கத் தொடங்கி 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியாது. அதில் பெரும்பகுதி ஆங்கில இலக்கியம்  தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை! தமிழ் பண்பாடோ மற்றவர்கள் முழு அளவு ஆடையின்றி நாகரீகம் இல்லாமல் திரிந்த காலத்தில் இந்தோனேஷியாவரை கொடிகட்டிப் பறந்து இருக்கிறது.

மேலும், எல்லா மரங்களுக்கும் வேர் இருப்பது போல ஒவ்வொருவருக்கும்- ஒவ்வொரு சமுதாயத்துக்கும் – ஒரு வேர் இருக்க வேண்டும். அதற் காகவும் நம் மூலத்தை (மூலம்= வேர்)ப் பிடித்துக் கொண்டு இருக்கவேண்டும்.

சிறு பிள்ளை ஆக இருக்கும்போது விளையாட்டில் கவனம்; இளம் வயதில் வாழ்க்கைத் துணையில் கவனம்; வயதானபோது உடல் நலனில் கவனம்- இப்படி வாழ்நாள் ஓடிவிடுகிறது. இடையே அலுப்பு சலிப்பு தட்டும். அப்போது ஏதாவது ஒரு பொழுது போக்கு தேவைப்படுகிறது அதற்கும் தமிழில் ஆடல், பாடல் என்று நிறைய இருக்கின்றன. பயனுள்ள விஷயங்களை அறிய தமிழில் எல்லாத் துறைகளிலும் கடல் அளவு செய்திகள் இருக்கின்றன. அற்புதங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட 18 சித்தர்கள் வழிகாட்டுவார்கள்.

பல திகில் திரைப்படங்களில் சங்கேத மொழியில் செய்தி அனுப்பி வில்லனை மடக்குவதை பார்த்திருப்பீர்கள்; நமக்கோ சங்கேத மொழியே தேவை இல்லை. நமக்குள் ரகசியமாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள தமிழ் உதவும். அதாவது ஆங்கிலம் போன்ற மொழி புழங்கும் இடங்களில்!

வேலை வாய்ப்புக்கும் தமிழ் உதவும். நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக . இதன் மூலம் கற்கும் கலைகள் நமக்கு பல இடங்களில் சிறப்பான வரவேற்பைத் தருகிறது. சொல்லுவது புரிகிறதா?

தமிழ் இட்டிலி , தோசை, வடை, பொங்கல், சாம்பார், ரசம் பிடிக்காத வெள்ளைக்காரர்கூட இல்லையே. அந்தக் காலத்திலேயே தமிழ் மிளகு ரசமும், கட்டுமரமும் ஆக்ஸ்போர்ட் அகராதியில் நுழைந்துவிட்டதே!.

ஒவ்வொரு ஆண்டும் நான் லண்டன் பல்கலைக் கழகத்தில், தமிழ் வகுப்பில்,  எல்லோரையும்  அறிமுகம் செய்துகொள்ளும்படி சொல்லிவிட்டு ஏன் தமிழ் படிக்க வந்தீர்கள்? என்றும் சொல்லும்படி கேட்பேன். பெரும்பாலோர் தமிழ் பேசும் ஒருவரைக் கல்யாணம் கட்டியதால் தமிழ் தேவைப்பட்டது என்பர். இன்னும் சிலர் மாமியார், மாமனார் பேசுவது (திட்டுவது??) புரியவில்லை என்பதற்காக வந்தேன் என்பர். இன்னும் சிலர் தமிழ் சினிமா, கலை மூலம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பலர் தமிழ் நாடு, இலங்கை தொடர்பான ஆராய்ச்சியில் உதவும் என்று  எண்ணி வந்ததாக இயம்புவர். ஒரு வெள்ளைக்காரர் துணிச்சலாக ஆண்டு தோறும் இட்லி, தோசை சாப்பிடுவதற்காகவே தமிழ் நாட்டுக்குச் செல்வதாகவும் ஹோட்டல்காரக்ளுடன் நன்கு உரையாட தமிழ் படிப்பதாகவும் சொன்னார். அது பொய்யல்ல என்பது அவர் பல ஆண்டுகளுக்கு என்னிடம் தமிழ் படித்ததிலிருந்து தெரிந்தது. இட்டிலி தோசைக்கு அவ்வளவு மஹிமை!

குறைந்தது தமிழ் திரைப்படங்களில் வரும் நகைச் சுவை காட்சிகளையும் பாடல்களையும் ரசிப்பதற்காகவாது தமிழ் கற்க வேண்டும்.

ஆயினும் பழம் பெருமை மட்டும் பேசுவதோடு நில்லாமல் ஆங்கிலம், இந்தி போல பிறமொழிச் சொற்களையும், நமது மொழியின் அடிப்படை கெடாத அளவுக்கு, ஏற்க வேண்டும். ‘தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் தமிழர்கள் கோஷமிடுவது காதில் கேட்கிறது. உலகிலுள்ள புகழ் பெற்ற பிற மொழி இலக்கியங்களோ, அறிவியல் விஷயங்களோ இன்னும் தமிழில் கால்வாசி கூட மொழிபெயர்க்கப்படவில்லை. வெளிநாட்டில் வாழும் நமக்குக் கிடைக்கும் வசதிகள் தமிழ் மொழி வழங்கும் இடங்களில் கிடைப்பதில்லை. அந்த மொழிபெயர்ப்புப் பணியையும் நம்மில் சிலர் செய்யலாம். அதனால்தான் பாரதியும் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றார் . அத்தோடு ‘பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் மேலும் ஒருபடி போய் ‘இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும்’ என்றார் .இந்த மூன்று பணிகளில் முடிந்ததை நாம் செய்யலாமே.

முயற்சி திருவினை ஆக்கும்!

–subham–

tags –வெளிநாட்டில், தமிழ், கற்பது, தேவை, 

உமாபதி சிவம் இயற்றிய தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்! (Post.9078)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9078

Date uploaded in London – –26 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உமாபதி சிவம் – 4

இயற்றியுள்ள தமிழ் மட்டும் சம்ஸ்கிருத நூல்கள்!

ச.நாகராஜன்

ஸ்ரீ உமாபதி சிவாசாரியர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த விற்பன்னர்.

தமிழ் நூல்கள்

சைவ சித்தாந்தத்தை விளக்கும் மெய்கண்ட சாத்திர நூல்கள் மொத்தம் 14.

அவற்றில் உமாபதி சிவாசாரியர் அருளிய நூல்கள் 8.

அவையாவன :-

சிவப்பிரகாசம்

திருவருட்பயன்

வினாவெண்பா

போற்றிப் பஃறொடை

உண்மை நெறி விளக்கம்

கொடிக்கவி

நெஞ்சு விடு தூது

சங்கற்ப நிராகரணம்

மெய்கண்ட சாத்திர நூல்கள் தவிர பல்வேறு நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கி திருத்தொண்டர் புராணசாரம் என்ற நூலை இவர் யாத்துள்ளார்.

அடுத்து சேக்கிழாரின் வரலாற்றை சேக்கிழார் புராணம் என்ற நூலில் கூறியுள்ளார்.

அடுத்து சிதம்பரம் கோயிலின் வரலாற்றை அற்புதமாக கோயிற் புராணம் என்று எழுதியுள்ளார். இதில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன.

மேலும் திருமுறை கண்ட புராணம்,திருத்தொண்டர் புராண வரலாறு, திருப்பதிகக் கோவை, தேவார அருள்முறைத் திரட்டு, ஞான ஆசார சாத்திர பஞ்சகம் உள்ளிட்ட நூல்களையும் இவர் இயற்றி அருளியுள்ளார்.

சம்ஸ்கிருத நூல்கள்

சம்ஸ்கிருத விற்பன்னர் என்பதால் இவரது சம்ஸ்கிருத நூல்களும் பெரும் புகழைப் பெற்றுள்ளன.

பௌஷ்கராகமத்திக்குப் பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்ற பெயரில் விளக்கவுரையை இவர் எழுதியுள்ளார்.

தில்லையில் நடனமாடும் நடராஜரின் தாண்டவத்தைக் கண்டு பிரமித்து அவர் நடராஜ த்வனி மந்த்ர ஸ்தவம் என்ற நூலையும் குஞ்சிதாக்ரி ஸ்தவம் என்ற நூலையும் படைத்துள்ளார்.

ஸ்ரீ உமாபதி சிவாசாரியார்  காலம்

சங்கற்ப நிராகரணம் என்ற இவரது நூலின் அடிப்படையில் இவரது காலம் பதினான்காம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறதி.

ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் ஸ்துதி

இவ்வளவு பெருமை வாய்ந்த உமாபதி சிவாசாரியரைப் போற்றித் துதி செய்யும் துதிப்பாடல் இது:-

அடியார்க் கெளியன் எனத்தில்லை

    யண்ணல் அருளுந் திருமுகத்தின்

படியே பெற்றான் சாம்பாற்குப்

    பரம முத்தி அப்பொழுதே

உடலுங் கரைவுற் றடைந்திடுவான்

   உயர்தீக் கையினை அருள் நோக்காற்

கடிதிற் புரிகொற் றங்குடியார்

    கமல மலரின் கழல் போற்றி.

லண்டன் ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியாரின் அரும் பணி!

லண்டனில் இன்று வேத அடிப்படையிலான அனைத்து நல்ல காரியங்களையும் முன்னிட்டு நடத்துபவர் லண்டன் ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியார்.

கந்தபுராண பாராயணம், அதைப் பதித்தல் உள்ளிட்ட அரும் பணியை அவர் ஆற்றி அனைவராலும் மதிக்கப்படுபவர் அவர்.

உமாபதி சிவாசாரியாரின் நூல்களை ஆழக் கற்று அவற்றின் பால் தீராக் காதல் கொண்ட அவர் பல பழம் பெரும் ஓலைச் சுவடிகளை ஒப்பு நோக்கி வருகையில்  ஒரு அரிய செல்வத்தைக் கண்டார். satatatnasangraham நூலில் 100 பாடல்கள் இருக்க வேண்டிய சத சங்க்ரஹத்தில் இதுவரை கிடைக்கப் பெற்றவை 93 மட்டும் தான். ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியார் இது வரை கிடைக்காதிருந்த 7 ஸ்லோகங்களையும் ஒரு ஓலைச் சுவடியில் கண்டு அவற்றின் மூலம் நூலை முழுமையாக்கியுள்ளார்.

இவர் செய்யும் அனைத்துப் பணிகளும் பிரம்மாண்டமானவை; பொருளுதவி தேவைப்படுபவை. இந்த அரும் பணியில் தங்கள் பங்கையும் செய்ய விழைவோர் இவரைத் தொடர்பு கொள்ளலாம்.

tags– உமாபதி சிவம், தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்

***