கல்விக்கு அழகு கசடற மொழிதல்

narendra-modi-speech

பிரதமர் நரேந்திர மோடி, டில்லி செங்கோட்டை

Article No. 2065

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 12  August  2015

Time uploaded in London :–  9-22 am

 

வாணீ = சொல்வன்மை = நன்மொழி தொடர்பான 30 பொன்மொழிகள்

 

1.அக்னிதா: அபி விசிஷ்டம் வாக் பாருஷ்யம் – சாணக்ய நீதி

சூட்டை விட சுடு சொல்லின் வெப்பம் அதிகம்.

((தீயினாற் சுட்ட புண் ஆறும், நாவினாற் சுட்ட புண் ஆறாது))

 

2.அனவசரே யதுக்தம் சுபாஷிதம் தச்ச பவதி ஹாஸ்யாய

நல்ல விஷயங்களைச் சொல்ல்பவரும் கேட்பவரும் அரிது.

 

3.கர்தவ்யம் ஹி சதாம் வச: — கதாசரித் சாகரம்

நல்லோற் சொற்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

4.கிம் கரிஷ்யந்தி வக்தார: ஸ்ரோதா யத்ர ந வித்யதே – சாணக்ய நீதி

கேட்பாரில்லாவிடில் பேசுபவர் என்ன செய்வார்?

((கடை விரித்தேன், கொள்வாரில்லை (ராமலிங்க சுவாமிகள்))

 netaji

நேதாஜி வங்காளி மொழிப் பிரசங்கம்

5.கோ வா துர்ஜனவாகுராசு பதித: க்ஷேமேண யாத: புமான் – பஞ்ச தந்திரம், பர்த்ருஹரி

கெட்டவர்களின் வலையில் விழுந்தவர்கள், யார் நல்ல நிலையில் மீண்டு வந்தனர்?

((நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும் – பாஞ்சாலி சபதம், பாரதியார்))

 

6.க்ஷீயந்தே கலுபூஷணானி சததம் வாக்பூஷணம் பூஷணம் – பர்த்ருஹரி

உடம்பில் அணியும் அணிகலன்களுக்கு அழிவு உண்டு. சொல் எனும் அணிக்கு அழிவே இல்லை

 

7.ந ஹி ப்ரியம்  ப்ரவக்தும்  இச்சந்தி ம்ருஷா ஹிதைக்ஷிண:  — கிராதார்ஜுனீயம்

உண்மையான நலனை விரும்புவோர், இனிமையாக இருக்கும் என்பதற்காகப் பொய்யைச் சொல்லுவதில்லை.

 

8.நாப்ருஷ்ட: கஸ்யசித் ப்ரூயாத் – மனு

கேட்காததைச் சொல்லாதே

((பாத்திரம் அறிந்து தானம் செய்))

 

9.பரோபகரணார்த்தாய வசனே கா தரித்ரதா

பயனுள்ள சொற்களைச் சொல்வதில் கூடவா தரித்திரம்?

 

10.மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண: –  சிசுபாலவதம்

பெரியோர்கள் இயற்கையிலேயே குறைவாகப் பேசுவர்

(ராமபிரான் மித பாஷி, ஹித பாஷி, ஸ்ரீஉத பாஷி, பூர்வ பாஷி—வால்மீகி ராமாயணம்)

 nehru

பாரதத்தின் முதல் பிரதமர் நேருஜி சொற்பொழிவு

11.மிதம் ச சாரம் சவசோ ஹி வாக்மிதா — நைஷத சரிதம்

குறைவாக – பொருளுள்ள — விஷயங்களைப் பேசுவதே பேச்சுக் கலை

 

12.லௌகிகானாம் ஹி சாதூனாமர்தம் வாகனுதாவதி

ருஷீணாம் புனராத்யானாம் வாசமர்த்தோ அனுதாவதி – உத்தர ராம சரிதம்

 

நாம் காணும் பெரியோர்களின் சொற்கள், பொருளை அடிப்படையாக வைத்துச் சொல்லப்படுபவை. ஆனால் ரிஷிகளின் சொற்களே பொருளாகி விடுகின்றன. (அதாவது ரிஷிகளின் சொற்களே அஸ்திவாரம்)

 

13.ஸ்ருதேன யத்னேன ச வாகுபாஸிதா த்ருவம் கரோத்யேவ கமப்யனுக்ரஹம்  — காவ்யதர்ச:

 

கேள்வி ஞானம் மூலம் அல்லது முயற்சியின் மூலம் கற்றோருக்கு, சரஸ்வதி தேவி, எப்படியாவது நற்பயனைத் தருவாள்.

((கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு))

14.பல சொல்லக் காமுறுவர் மன்றமாசற்ற

சில சொல்லல் தேற்றாதவர் (குறள்  649)

சில சொற்களால் சொல்ல முடியாதோர், பல சொற்களைச் சொல்வர் (நேரத்தை வீணடிப்பர்)

 

15.சுமங்களோ பத்ரவாதி வதேஹ  — ரிக் வேதம்

மங்களகரமான, நன்மை பயக்கும் சொற்களைச் சொல்

 

indira UN Conference

ஐ.நா. சபையில் முன்னாள் பிரதமர் – இந்திராகாந்தி பேருரை

16.சதாம் ஹி வாணீ குணமேவ பாஷதே – கிராதார்ஜுனீயம்

நல்லோர்கள் எப்போதும் நற்குணங்களை மட்டுமே உரைப்பர்

 

17.சுதுர்லபா: சர்வமனோரமா கிர: – கிராதார்ஜுனீயம்

எல்லோரும் ஏற்கக் கூடிய இனிய சொற்களைப் பேசுவது கடினம்

 

18.ஹிதம் மனோஹாரி ச துர்லபம் வச: – – – கிராதார்ஜுனீயம்

நலம்பயக்கும், பிரியமான சொற்கள் கிடைப்பது அரிது.

 

19.ஆ நோ பத்ரா: ருதவோ யந்து விஸ்வத: – ரிக்வேதம் 1-89-1

எல்லா திசைகளிலிருந்தும் எங்களுக்கு உயர்ந்த கருத்துகள் வரட்டும்

 

20.சில்லெழுத்தினாலே பொருளடங்கக்

காலத்தால் சொல்லுக செவ்வி அறிந்து (ஆசாரக்கோவை)

கொஞ்சமாகப் பேசு, பொருளோடு பேசு, காலம் அறிந்து பேசு, கேட்பவர் விருப்பம் அறிந்து பேசு

 

21.சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்

செவ்வனாடியிற் செறித்தினிது விளக்கும் – நன்னூல்

 martinluther

மார்ட்டின் லூத கிங்

  1. கல்விக்கு அழகு கசடற மொழிதல் — வெற்றி வேர்க்கை

 

23.சொற்சோர்வுபடேல் – ஆத்திச் சூடி

சொல்ல வேண்டியதை மறக்காமல் சுவைபடச் சொல்லுக

 

24.மிகைபடச் சொல்லேல் — ஆத்திச் சூடி

அதிகமாகப் பேசாதே

 

25.பிழைபடச் சொல்லேல் – ஆத்திச் சூடி

 

26.மொழிவதறமொழி — ஆத்திச் சூடி

பேசும் பொருளை சந்தேகம் வராதபடி விளக்குக

 

27.சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மான்பினிது – இனியவை நாற்பது

 

28.பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்

மெய் போலும்மே மெய் போலும்மே – வெற்றி வேர்க்கை

பொய் சொல்பவன் தேன் ஒழுகப் பேசுகையில் அது உண்மை போலத் தோன்றும்

  1. மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையினால்

பொய் போலும்மே பொய் போலும்மே – வெற்றி வேர்க்கை

பேசத்தெரியாதவன் உண்மை பேசினாலும் அது பொய் போலத் தோன்றிவிடும்.

vajayee

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயீ

30.சிறந்தமைந்த கேள்வியராயினும் ஆராய்ந்து

அறிந்துரைத்தல் ஆற்றல் இனிது – இனியவை நாற்பது

பல நூல்களை நன்கு படித்திருந்தாலும், ஆராய்ந்த பின்னர் ஒன்றைச் சொல்லுவதே இனியது (நல்லது)

திருவள்ளுவரின் திருக்குறளில்  சொல்வன்மை (65 ஆவது) என்னும் அதிகாரத்தை ஒப்பிட்டு மகிழ்க!