நீரின் வகைகளும் அவற்றின் பயன்பாடும் (Post No.6248)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 10 April 2019


British Sumer Time uploaded in London – 7-54 am

Post No. 6248

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 6-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை

நீரின் வகைகளும் அவற்றின் பயன்பாடும்!

ச.நாகராஜன்

அறிவியல் வளர வளர அதன் அடிப்படையில் ஒவ்வொன்றிற்குமான தர நிர்ணயமும் துல்லியமாக நிர்ணயிக்கப்படுகிறது.

ஆக இந்த வகையில் அன்றாடம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத நீரின் தரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொருவரும் அறிவது அவசியம்.

சுத்தமற்ற நீரால் ஏராளமான வியாதிகள் பரவுகின்றன என்பதை அனைவரும் அறிவோம். காலரா உள்ளிட்ட தொற்று வியாதிகளையும் இதர வியாதிகளையும் பரவாமல் செய்ய நீரின் தன்மையை உயரிய அளவில் தரமுள்ளதாக மேம்படுத்துவது இன்றியமையாததாக அமைகிறது.

நீரை மூன்று விதமாகப் பிரிக்கலாம். க்ளாஸ் ஏ (Class A), க்ளாஸ் சி (Class C) க்ளாஸ் ஏயும் இல்லை, சியும் இல்லை என்ற ரகம் (Neither in Class A nor Class C) ஆக இப்படி மூன்று விதமாக நீரின் தரத்தை நிர்ணயிக்க முடிகிறது.

க்ளாஸ் ஏ என்ற நீரில் ஒரு லிட்டர் நீரில் 6 மில்லி கிராமுக்கும் அதிகமாக ஆக்ஸிஜன் கரைந்திருப்பதைக் குறிக்கும் (Dissolved Oxygen more then 6 mg/l). தொற்றுநீக்கம் (Disinfection) செய்யப்பட்ட பின் இப்படிப்பட்ட நீர் பருகுவதற்கு உகந்ததாக அமைகிறது.

அடுத்து க்ளாஸ் சி என்பதில் நீரை முதலில் தொற்று நீக்கம் செய்து பின்னர் நன்னீராக்கும் முறை (water treatment process) கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் ஒரு லிட்டர் நீரில் 4 மில்லி கிராமுக்கும் அதிகமாக ஆக்ஸிஜன் கரைந்திருப்பதைக் குறிக்கும் (Dissolved Oxygen more then 4 mg/l).

இந்த இரண்டுமற்ற நிலையில் உள்ள நீரை மிகவும் உயரிய நிலை நன்னீராக்கும் வழி முறைப்படி நன்னீராக்கிய பின்னரே பயன்படுத்தலாம்.

குளிக்கும் நீருக்கும் கூட இப்படிப்பட்ட தர நிர்ணயம் இருப்பதால் உரிய முறையில் நீர் நன்னீராக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து அதன் பின்னரே பயன்படுத்தல் வேண்டும்.

கழிவு நீரை சுத்த நீருடன் சேர்க்காமல் இருக்கும் படி செய்வது கிராமப்புறங்களில்  வாழும் ஒவ்வொரு வீட்டாரின் கடமையாகும்.

இன்றைய நவநாகரீக வாழ்க்கை முறையில் பெரு நகரங்களில் கேன்களில் அடைக்கப்பட்டு வரும் நீர் சுகாதார முறைப்படி நன்னீராக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே அவற்றைப் பயன்படுத்தல் வேண்டும்.

சீரைத் தேடின் நீரைத் தேடு என்பது தமிழ்ப் பழமொழி. அந்த நீரும் நன்னீராக இருப்பது அவசியம் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.

***

–Subham–