
Date:13 FEBRUARY 2018
Time uploaded in London- 6-15 am
WRITTEN by S Nagarajan
Post No. 4736
PICTURES ARE TAKEN from various sources.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
இணையிலா இந்து மதம்
சிவாகமங்கள் 28; என்ன பிரச்சினை பகுத்தறிவுவாதிகளுக்கு?!
ச.நாகராஜன்

1
சிவாகமங்கள் 28. சிவ வழிபாட்டை நியமத்திற்குத் தகவும், ஆங்காங்குள்ள தொன்மத்திற்குத் தகவும் உரியவர்கள் இதைக் காலம் காலமாக நூற்றுக் கணக்கான ஆலயங்களில் நடத்தி வருகிறார்கள்.
விக்கிபீடியா மற்றும் இதர சைவ இணைய தளங்களில் இவற்றைப் பற்றி முழுவதுமாக அறியலாம்.
28 சைவ ஆகமங்களின் பட்டியல் இது:
The Sivabheda Agamas
1) Kamika, 2) Yogaja, 3) Chintya, 4) Karana, 5) Ajita, 6) Dipta, 7) Sukshma, 8) Sahasraka, 9) Amshumat and 10) Suprabheda.
The Rudrabheda Agamas
(1) Vijaya, 2) Nihshvasa, 3) Svayambhuva, 4) Anala, 5) Vira (Bhadra), 6) Raurava, 7) Makuta, 8) Vimala, 9) Chandrajnana (or Chandrahasa), 10) Mukhabimba (or Bimba), 11) Prodgita (or Udgita), 12) Lalita, 13) Siddha, 14) Santana, 15) Sarvokta (Narasimha), 16) Parameshvara, 17) Kirana and 18) Vatula (or Parahita).
இதில் பகுத்தறிவுவாதிகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை.

2
எல்லா பிராமணர்களும் பூஜையைச் செய்து விட முடியாது.அலங்காரங்களைச் செய்ய முடியாது. தெய்வ உருவங்களைத் தொட்டு விட முடியாது.சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள்,சிவாலயங்களில் உரிய சிவாசாரியார் என்று ஒரு வரைமுறை உண்டு.
அவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
சில ஆலயங்களில் பிராமணர்கள் பூஜை செய்ய முடியாது.
பாரம்பரியத்திற்குத் தக்கபடி யார் பூஜை செய்ய வேண்டுமோ அவர்களே செய்வார்கள்.
ஆக இது தான் உண்மை.
3
இந்தச் சடங்கைச் செய்யக் கூடாது, அந்தச் சடங்கை செய்யக் கூடாது என்று முழங்கும் பகுத்தறிவுவாதிகள் தாங்களே சடங்குகளில் எப்படிக் கட்டுண்டிருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்.
இவர்களின் தலைவர் சமாதிக்கு எதற்கு ஊதுபத்தி? செருப்பை ஏன் வெளியில் கழட்டிப் போட வேண்டும்?கொடி எதற்காக?
சீருடை எதற்காக?
பகுத்தறிவுக்கு ஒத்ததா இது?
ஆஸ்பத்திரிகளில் சர்ஜன்கள் ஏன் பச்சை உடை அணிய வேண்டும்?
ஏதோ நினைத்த சட்டையை ஏன் போடக் கூடாது?
வக்கீல்களுக்கு எதற்குக் கறுப்பு கோட்டு.
நீதிபதிகளுக்கு (அயல்நாட்டில்) எதற்கு விக்?
இந்தப் பட்டியல் முடிவற்ற ஒன்று.

4
பகுத்தறிவுச் செல்வங்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?
பள்ளி மாணவன் கூட சற்று யோசித்தால் இவர்களின் கலாட்டா நோக்கத்தைப் புரிந்து கொள்வான்.
திருஞானசம்பந்தரை இழிவு படுத்து. சிறிது நாள் ஆனால் ஆண்டாளை இழிவுபடுத்து.
இதன் மூலம் தாங்கள் பொதுவாழ்க்கையில் பரபரப்பாக இருப்பதை உறுதி செய்வது தான் இவர்களின் நோக்கம்!
ஆமாம், இதே அளவு சடங்குகள், ஏன் இன்னும் அதிகமாகக் கூட சடங்குள் கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் உள்ளனவே.
பகுத்தறிகவு மனித குலம் அனைத்திற்கும் பொதுவானது தானா,அல்லது ஹிந்து மதம், கோவில்களுக்கும் மட்டுமான ஒன்றா?!
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியரிடம் கொஞ்சம் பகுத்தறிவை இவர்கள் சொல்லட்டுமே. இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையாவது இவர்கள் அவர்களைச் சீண்டவில்லையே!

இந்த போலி பகுத்தறிவுவாதிகளை ஒவ்வொருவரும் சமயம் கிடைத்த போதெல்லாம் தோலுரித்துக் காட்ட வேண்டும்.
அது ஒன்றே நல்ல வழி!
***