
COMPILED by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 24 November 2018
GMT Time uploaded in London –15-21
Post No. 5697
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
மநு, தனது மானவ தர்ம சாஸ்திரம் என்னும் மநு ஸ்ம்ருதியில், பத்து கெட்ட குணங்களைப் பட்டியலிட்டு விட்டு மற்ற அனைத்தும் நல்ல காரியங்களே என்று சொல்லுகிறார். மனம், மொழி,மெய் (மனோ, வாக், காயம்) ஆகிய மூன்றும் செய்யக்கூடிய அசுபசெயல்கள் இவை. இதோ பட்டியல்
பர த்ரவ்யேச்வபித்யானம்மனஸா நிஷ்ட சிந்தனம்
விததாபிநிவேசஸ்ச த்ரிவிதம் கர்ம மானஸம் -12-5
ஒருவன் பொருளை எப்படி அபகரிக்கலாம் என்று திட்டம் போடுதல்,
மிகவும் கெட்டசெயல்களை நினைத்தல்
இந்த உடலே ஆத்மா என்று தவறாக நினைத்தல்
–இவை மூன்றும் மனதில் அசுப கர்மங்கள்; அதாவது தவறான சிந்தனை.
xxx

பாருஷ்யமன்ருதம்சைவ பைசுன்யஞ்சாபி ஸர்வசஹ
அஸம்பத்தப்ரலாபஸ்ச வாங்மயம் ஸ்யாச் சதுர்விதம் 12-6
கொடும் சொல், பொய் பேசுதல், கோள் சொல்லுதல், வீண் பேச்சு ஆகிய நான்கும் வாய் மூலம் செய்யும் அசுபகர்மங்கள்
xxxx
அதத்தானாமுபாதானம் ஹிம்ஸாசைவாவிதானதஹ
பரதாரோபஸேவா ச சரீரம் த்ரிவித ஸ்ம்ருதம்
12-7
கொடுக்கத் தகாதவர்களுக்குக் கொடுத்தல்
யாகமின்றி ஹிம்ஸை செய்தல்,
பிறன் மனைவியை விரும்பல்,
ஆகிய மூன்றும் உடலால் செய்யும் தீய செயல்கள்.
இவை பத்தும் இல்லதவர்கள் வாய்மை, மெய்மை, உண்மை என்னும் மூன்று த்ரி கரண சுத்திஉடையவர்கள் ஆவர்.
परद्रव्येष्वभिध्यानं मनसाऽनिष्टचिन्तनम् ।
वितथाभिनिवेशश्च त्रिविधं कर्म मानसम् ॥ Bछ्.Sछ्॥
पारुष्यमनृतं चैव पैशुन्यं चापि सर्वशः ।
असंबद्धप्रलापश्च वाङ्मयं स्याच्चतुर्विधम् ॥ Bछ्.Sछ्॥
अदत्तानामुपादानं हिंसा चैवाविधानतः ।
परदारोपसेवा च शारीरं त्रिविधं स्मृतम् ॥ Bछ्.Sछ्॥
मानसं मनसेवायमुपभुङ्क्ते शुभाशुभम् ।
वाचा वाचा कृतं कर्म कायेनेव च कायिकम् ॥ Bछ्.S
tags–பத்து கெட்ட குணங்கள்
–சுபம்–