
Date: 18 JANUARY 2018
Time uploaded in London- 5-33 am
Compiled by S NAGARAJAN
Post No. 4629
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 29
பாடல்கள் 165 முதல் 168
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கண்ணதாசன் பாடல்கள்
பாரதியைக் கண்டேன் (தொடர்ச்சி)
வாழ்பவர்க்குச் சோறுத ராதவன்!
மாண்ட வர்க்குமண்டபம் கட்டுவோ
ஆள்ப வர்க்குத் துதிபல பாடுவோன்
அச்ச மென்பதன் அரும்பெறல் மைந்தனாம்!
சூழ்சு டற்புவி தனைஇவன் முன்னையர்
துளைத்த காதையைச் சொல்வத லாலொரு
வாளெடுக்கும் திறனுமில் லாதவன்
வம்பெ தற்கென ஒதுங்கியே செத்தவன்!
அன் றிலங்கையை ஆயிர மாயிரம்
ஆனை தானைகள் வென்றதைச் சொல்லுவான்!
இன்றி லங்கையில் ஆதர வற்றவன்
இன்ன வன் துணைத் தம்பிய ரல்லரோ?
இன்னும் இந்தத் திசைகல் எட்டினும்
இழிந்தி ருப்பவன்! தமிழர் திருமகன்,
வென்றி கொண்ட வீரனின் பிள்ளையாம்!
வீணர் சொன்ன பொய்மைக் கதையடா!
இருவர் சேர்ந்தங் கொருவரை மற்றவர்
ஏற்றிப் பாடும் “பரஸ்பர முகஸ்துதி”
தரும மானது தமிழரின் நாட்டினில்!
தம்பி நீஇவர் தலைகவிழ்ந் தாரெனப்
பொருமிச் சாவதும் போர்செயச் செல்வதும்
பொருத்த மற்றதுன் பெற்றவர் உற்றவர்
கரும மட்டும் கணக்கினி லேற்றுவாய்
கண்கள் மூடுமுன் கவலைகள் மாற்றுவாய்!
யான்:
சோர்ந்து கூறும் சொற்களோ பாரதி?
தூய தேன் தமிழ்ப் பாவினம் பற்பல
ஆய்ந்து வைத்தவன், அன்னையின் நாட்டினர்
அடிமை தீர்த்திடும் போர்முர சானவன்
வேய்ந்த கூரையாய் வெள்ளொளிக் கைகளால்
வீர நாட்டினைக் காக்கத் துடித்தவன்
தேர்ந்த பாவலன் செந்தமிழ்ச் சாரதி
சிந்தை நொந்தியோ செப்படா பாரதி!
(கவிதையின் இறுதிப் பகுதி அடுத்து வெளிவரும்)
கவிஞர் கண்ணதாசன்: கவியரசு கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 5000க்கும் மேற்பட்ட இதர பாடல்களையும் புனைந்தவர். தமிழ்நாட்டில் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தோற்றம்: 24-6-1927 மறைவு: 17-10-1981. இதழ் ஆசிரியர். பல காவியங்களைப் புனைந்தவர். நாவல் ஆசிரியர். பல சிறந்த நூல்களை எழுதியவர். பல விருதுகளை வென்றவர்.சிறந்த பேச்சாளர்.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
***