திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post No.3036)

260px-Japanesethieves

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3036

Time uploaded in London :– 7-52 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

kili 2

சம்ஸ்கிருதத்தில் திருட்டுக் கலை பற்றி தனி நூல்களே இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அளவுக்கு பரந்த வீச்சு உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. காம சாஸ்திரம், விமான சாஸ்திரம், ஆயுர்வேதம், மூலிகை விஷயங்கள், திருட்டு சாஸ்திரம்,  ஜோதிட சாஸ்திரம், இலக்கணம், இலக்கியம், தர்க்க சாஸ்திரம், நாடகம், கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள், சட்ட நூல்கள்,  நிகண்டு, மொழியியல்  என பல நூறுவகை விஷயங்கள் அதில் அடக்கம். எனக்குத் தெரிந்தவரை, கிரேக்க மொழி இதற்கு கொஞ்சம் பக்கத்தில் வரும். ஆனால் கிரேக்க மொழி சம்ஸ்கிருதத்தை விட குறைந்தது 600 வருடமாவது வயது குறைந்த மொழி.

நிற்க.

 

திருடர்கள் இரண்டு வகை என்கிறார் உலகின் முதல் சட்டப் புத்தகத்தை எழுதிய மனு. அதில் சோதிடர்கள், குறி சொல்லுவோர், ரேகை சாத்திரக்காரர் கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்!

 

இதோ அவர் எழுதிய மனு ஸ்மிருதியில் உள்ள சில பாக்கள் (ஸ்லோகங்கள்):–

 

ப்ரகாச வஞ்சகா: தேஷாம் நானா பண்ய உபஜீவின:

ப்ரச்சன்ன வஞ்சகா: து ஏதே யே ஸ்தேன ஆடவிகாதய:

 

உத்கோச  காஸ்ச: பதிகா: வஞ்சகா: கிதவா: ததா

மங்களாதேசவ்ருத்தா: ச பத்ரா ச ஏகக்ஷணிகை: சஹ

 

அசப்ய காரிணை: ச ஏவ மஹாமாத்ரா சிகித்சகா:

சில்யோபசாரயுக்தாஸ்ச நிபுணா: பண்யயோஷித:

மனு 9-258 -260

 

 kili 5

மனு 9-256

உளவாளிகள்தான் அரசனுக்குக் கண்கள்; அவர்கள் மூலமாக மக்களின்  உடைமைகளைத் திருடும்  வெளிப்படைத் திருடர்கள், மறைமுகத் திருடர்கள் ஆகிய இரண்டு வகைத் திருடர்களையும் அரசன் கண்டுபிடிக்க வேண்டும்

 

மனு 9-257

வணிகத்தில் மோசடி செய்யும் அனைவரும் வெளிப்படைத் (தெரிந்த) திருடர்கள்; வீடு புகுந்து திருடுவோர், காடுகளில் வழிப்பறி செய்வோர் முதலியோர் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-258

லஞ்சம் வாங்குவோர், மோசடிப் பேர்வழிகள், ஏமாற்றுப் பேர்வழிகள், சூதாட்டக்காரர்கள்,  மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்லுவோர், குறி சொல்லுவோர்…………..

 

மனு 9-259

முறையற்ற வழியில் ஈடுபடும் மந்திரிகள், டாக்டர்கள், கலைகள் மூலம் சம்பாதிப்போர், வேசிகள்………….

 

மனு 9-260

இப்படிப்பட்டோர் வெளிப்படைத் திருடர்கள்; நல்லோர் வேஷம் போட்ட கீழ் ஜாதியார் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-261

இப்படிப்பட்ட திருடர்களை ரகசிய உளவாளிகள் மூலம் கண்டுபிடித்தவுடன் அவர்களைக் குற்றம் செய்யும் சூழ்நிலையை உருவாக்கி அதில் சிக்கவைத்து  கையும் களவுமாகப் பிடிக்கவேண்டும்.

மனு 9-262

ஒவ்வொருவர் செய்த தவறு என்ன என்பதைச் சொல்லி, தவற்றுக்கு ஏற்ற அளவு தண்டணை கொடுக்கவேண்டும்.

மனு 9-263

இந்தப் பூமியில் அமைதியாக உலவிவரும் தீயோரின்  நடவடிக்கைகளை  தீயோரைத் தண்டிப்பது ஒன்றினால்தான் செய்ய இயலும்.

மனு 9-264— மனு 9-266

சபைகள், சாலை ஓர நீர் குடிக்கும் இடங்கள், தாசி வீடுகள், உணவு விடுதிகள் (ஆப்பக் கடைகள்), மதுபானக் கடைகள், முச்சந்திகள், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக் கூடும் இடங்கள், புனித மரங்கள், தோட்டங்கள், கலைஞர் வீடுகள், காலியாக இருக்கும் மனைகள், பொட்டல் காடுகள், புதர் மண்டிய பிரதேசங்கள் ஆகிய இடங்களில் உளவாளிகளையும் துருப்புகளையும் நிறுத்தி வைப்பதாலோ, அல்லது ரோந்து (காவல் சுற்று) செய்வதாலோ திருட்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

 

kili 7

மனு 9-267

ஏற்கனவே திருட்டில் ஈடுபட்டு, இபோது திருந்தியவர்களைக் கொண்டு  புதிய திருடர்களைப் பிடிக்க வேண்டும் . அவர்களுடன் பழக வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து, அந்தத் திருடர்களை அடியோடு அழிக்க வேண்டும்

மனு 9-268

சாது சந்யாசிகளை சந்திக்க அழைப்பது போல அழைத்தோ, உணவு, கேளிக்கைக்காக கூப்பிடுவது போல கூப்பிட்டோ அல்லது அவர்களது சாகச செயல்களைப் பாராட்டுவது போல பாசாங்கு செய்தோ அவர்களை வளைத்துப் பிடிக்க வேண்டும்.

மனு 9-269

 

இந்த வலையில் சிக்காமலோ, அல்லது இதை அறிந்தோ தப்பித்து ஓடும் திருடர்களையும் , அவர்களுடைய தாய்வழி, தந்தை வழி உறவினர்களை  யும், நண்பர்களையும் அழிக்க வேண்டும் (உறவினர் நண்பர் மூலம் தான் செய்தி தெரிந்திருக்கும் என்பதால்)

 

(திருக்குறள் 550–ம் கொலையில் கொடியாரை மரண தண்டனை கொடுத்து தீர்த்துக் கட்டுங்கள் என்று செப்பும்.)

 

ஒரு திருடனிடம், அவன் திருடிய பொருட்கள் இல்லை என்றால் அவனைத் தண்டிக்கக்கூடாது. திருடிய பொருட்களோ திருட்டுச் சாதனங்களோ இருந்தால் தயக்கமின்றி தண்டணை கொடுக்க வேண்டும்.

 

இதற்குப் பின்னர், திருட்டுகளை ஒழிப்பதில் உதவாத அதிகாரிகளைத் தண்டிப்பது பற்றி பகர்கிறார்.

 

அதற்குப்பின்னுள்ள ஒரு ஸ்லோகம் குறிப்பிடற்பாலது:–

ஒரு கிராமம் கொள்ளை இடப்படுகையிலோ, ஒரு அணை உடைந்தபோதோ, சாலை வழிப்பறி நடக்கும்போதோ, அவர்களுக்கு உதவாதபடி, வேடிக்கை பார்ப்பவர்களை நாடுகடத்த வேண்டும்.

 

இரவில் திருடுபவர்களின் இரண்டு கைகளையும் வெட்டுங்கள். பிக் பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடர்களின் விரல்களை வெட்டுங்கள் என்றும் மனு உத்தரவு இடுகிறார்.

 

ஒன்பதாவது அத்தியாயம் திருடர்கள் பற்றி இன்னும் பல விசயங்களை இயம்புகிறது. அக்காலத்தில் திருடர்கள் விஷயத்தில் எவ்வளவு கடுமையான விதிகள் இருந்தது என்பதை அறிவது அவசியம். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் – குப் தர் காலத்தில் — இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் பாஹியான், இந்தியாவில் திருட்டு பயமே இல்லை, மக்கள், வீடுகளின் கதவுகளைப் பூட்டாமல்தான் தூங்குவார்கள் என்று எழுதியுள்ளான்.

 

வாழ்க மனு! வளர்க மனு நீதி!

 

2.சர்ச்சிலுக்கு சாந்தி தந்த புத்தர்

14 Main Image, at the Mahabodhi Temple, Bodhgaya

by ச.நாகராஜன்

இரண்டாம் உலக மகா யுத்தம்  

உலக சரித்திரத்திலேயே மிக பயங்கரமான ஒரு ஏடு இரண்டாம் உலக மகா யுத்தம். பழைய புராண கால ராட்சஸர்களை நினைவு படுத்துவது போலத் தோன்றிய ஹிட்லர் உலக மக்களை நடுநடுங்க வைத்தான். நாளை என்ன நடக்குமோ என்பது சாமான்யனின் கவலையாக ஆனது. பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தலைமை தாங்கி பிரிட்டிஷ் மக்களை தைரியத்துடன் இருக்குமாறு அறைகூவல் விடுத்தார். நேச நாட்டுப் படைகள் பெரும் வீரத்துடன் போரில் ஈடுபட்டன.

 

 

பங்கரில் அமைதி இழந்து இருந்த சர்ச்சில்

 

நாளாக நாளாக போர் உக்கிரமானது. சர்ச்சில் பங்கர் எனப்படும் பாதாள அறையிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கேயே படுத்து காலையில் எழுந்து யுத்த கள நிலவரங்களை பகுத்துப் பார்த்து அன்றாட உத்தரவுகளை பங்கரிலிருந்தே பிறப்பித்தார் அவர். மதியம் ஒரு குட்டித் தூக்கமும் அங்கே தான். பின்னர் தான் வெளியே வருவார்.

 

 

எல்லையற்ற மன அழுத்தத்தைத் தந்து அவரது முழு சக்தியையும் உறிஞ்சியது உலகப் போர். அமைதியிழந்த அவர் மனம் தவித்தது.

இந்த நிலையில் தான் அவருக்கு ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது,

 

bodhgaya in Bihar

Picture of Bodhgaya Temple in Bihar.

ஹாமில்டன் அனுப்பிய புத்தர் சிலை

 

ஜெனரல் ஐயான் ஹாமில்டன் பர்மாவில் சிதிலமடைந்த விஹாரத்திலிருந்து ஒரு புத்தர் சிலையைக் கண்டெடுத்தார். அதை சர்ச்சிலுக்கு அனுப்பி “ நீங்கள் கவலைப்படும் போதெல்லாம் சாந்தி தவழும் இந்த முகத்தைப் பாருங்கள். உங்கள் கவலைகளைப் பார்த்து சிரியுங்கள்” என்று எழுதியிருந்தார்.

 

 

சர்ச்சில் அதைத் தன் படுக்கை அறையிலேயே யுத்த காலம் முழுவதும் வைத்திருந்தார். கவலைப்படும் போதெல்லாம் அந்த அற்புத புத்தர் அவருக்கு ஆறுதல் தந்தார்.போரை பிரமாதமாக வழி நடத்தி வெற்றிக்கு வழி வகுத்தார்.அஹிம்சையை வலியுறுத்தி கொலையை அறவே ஒதுக்கிய புத்தபிரான் உலகளாவிய கொலைகளை விரும்பாமல் சர்ச்சிலை தெளிவுற சிந்திக்க வைத்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் என்றே எண்ண வைக்கிறது இந்தச் சம்பவம்!

 

 

புத்தரின் உருவத்தைப் பற்றி பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு,”அவரது கண்கள் மூடி உள்ளன. என்றாலும் ஏதோ ஒரு சக்தி அதிலிருந்து வெளிப்படுகிறது. ஒரு அபார சக்தி அந்த சிலை முழுவதும் இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் கூட புத்தர் ஏனோ தொலைவில் இருப்பது போலவே தோன்றவில்லை.அவரது குரல் நம்  காதுகளில் முணுமுணுத்து, “போராட்டத்திலிருந்து ஓடாதே! அமைதி பொழியும் கண்களுடன் எதிர்த்து நில்! வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமான பிரம்மாண்டமான வாய்ப்புகளை வாழ்க்கையில் பார் என்று சொல்கிறது” என்கிறார்.

 

 

உண்மை தான், உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான புத்தரின் விக்ரஹங்கள் லட்சக்கணக்கானோரை கணம் தோறும் ஊக்குவித்து வருகின்றன.

 

 

உயிருடன் இருக்கும் போது சிலை அமைக்கலாமா?

 

புத்தரின் பிரதம சீடரான ஆனந்தர் புத்தரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: “நீங்கள் உயிருடன் இருக்கும் போது உங்களுக்கு ஒரு பகோடா அமைத்து (கோவில் கட்டி சிலை வைத்து அதை) வணங்கலாமா”

 

 

புத்தர் பதிலளித்தார் இப்படி : “ஆனந்தா! அது கூடாது. உயிருடன் இருக்கும் போது சிலை வைக்கக் கூடாது. நான் மறைந்த பிறகு வழிபடும் தலத்தை அமைக்கலாம்”

 

garlands in bodhgaya

பாஹியான் தரும் சுவையான வரலாறு

 

புத்தரின் முதல் விக்ரஹம் அமைந்தது பற்றி சீன யாத்ரீகரான பாஹியான் தனது நூலில் ஒரு சம்பவத்தைச் சித்தரித்துள்ளார்.

ஒரு சமயம் புத்தர் சுவர்க்கத்திற்கு மூன்று மாதம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவரைப் பார்க்காமல் யாராலும் இருக்க முடியவில்லை. துடித்துப் போயினர். இதை அவரது பிரதான சீடரான சரிபுத்தர் புத்தரிடம் சொன்னார்.

 

 

அதைக் கேட்ட புத்தர்,” சரி, என்னைப் போலவே அசலாக ஒரு சிலையை அமைத்து அவர்களிடம் காண்பி” என்றார். இதனால் மனம் மகிழ்ந்த சரிபுத்தர் அரசனிடம் வந்து நடந்ததைச் சொல்லி. தகுந்த நபர் ஒருவரை  ஏற்பாடு செய்ய வேண்டினார். அரசனும் ஒரு அருமையான சிற்பியை இதற்கென நியமித்தார். அந்த சிற்பி புத்தரின் உருவத்தை சந்தன மரத்தில் செதுக்கினார்.

 

 

அனைவரும் அதைப் பார்த்து ஆனந்தப்பட்டனர். இப்படித் தான் முதல் புத்த விக்ரஹம் உருவானது! நாளடைவில் உலகெங்கும்  பிரம்மாண்டமான சிலைகளோடு புத்த விஹாரங்கள் கட்டப்பட்டன.

புத்த மதம் பிறந்த தாயகமான பாரதத்தைப் போலவே சீனா, தாய்லாந்து, ஜப்பான், பர்மா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் புத்த விஹாரங்கள் பெரிய அளவில் கட்டப்பட்டன.

 

great_buddha_statue

ஸ்வாமி விவேகானந்தர் பார்க்க விரும்பிய புத்த விஹாரம்

 

ஸ்வாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது. ஒரு முறை சீனாவில் காண்டன் நகருக்குச் சென்றிருந்த விவேகானந்தர் அங்குள்ள புத்த விஹாரம் ஒன்றைப் பார்க்க விரும்பினார். ஆனால் புத்த மதத்தினரைத் தவிர வேறு யாரும் அதற்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கூறிய மொழிபெயர்ப்பாளர் அவரை அங்கு செல்லக் கூடாது என்று கூறினார்.

ஆனால் விவேகானந்தரோ அவரைத் தன்னுடன் வருமாறு கூறி, அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறினார்.

 

 

புத்த விஹாரத்திற்குள் இருவரும் (கூட சில ஜெர்மானியப் பயணிகளும் வேறு) நுழைய இருந்த போது தூரத்தில் இருந்த புத்த பிக்ஷுக்கள் அதைப் பார்த்து தமது குண்டாந்தடியை ஆட்டியவாறே வேகமாக ஓடி வந்தனர். இதைப் பார்த்த மொழிபெயர்ப்பாளர் தனது உயிருக்கு பயந்து ஓடலானார். அவர் கையைப் பற்றிய ஸ்வாமிஜி அவரிடம் “ இந்தியாவிலிருந்து வந்த யோகி என்பதற்கான சீன மொழி வார்த்தைகளைச் சொல்லி விட்டு ஓடிப் போகலாம்” என்றார்.

அதைச் சொல்லிவிட்டு ஓடிய அவர் சற்று தூரத்தில் நின்று என்ன நடக்கிறது என்று பார்க்கலானார்.

 

 

தடியைச் சுழற்றியவாறே வந்த புத்த பிக்ஷுக்கள் அருகில் வந்தவுடன் தான் இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருக்கும் யோகி என்பதை ஸ்வாமிஜி உரக்கச் சொன்னார்.

 

 

அவ்வளவு தான், அவர்கள்  அவரை நமஸ்கரித்து ‘கபச்’ (கவசம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையின் திரிபு – தாயத்து என்று பொருள்)தருமாறு வேண்டினர். ஸ்வாமிஜி சில துண்டுப் பேப்பர்களில் ஓம் என்று எழுதி அவர்களிடம் தந்தார். அவர்கள் ஸ்வாமிஜியை மகிழ்வுடன் உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

இதைப் பார்த்த மொழிபெயர்ப்பாளர் பிரமித்துப் போனார்.

இந்த சம்பவத்தை ஸ்வாமிஜி அளசிங்கருக்கு 10-7-1893 தேதியிட்ட கடிதத்தில் விரிவாக விளக்குகிறார்.

 

இந்திய யோகிகளுக்கும் சீனத் துறவிகளுக்கும் காலம் காலமாக இருந்த ஆன்மீகப் பிணைப்பை இந்தச் சம்பவம் நன்கு விளக்குகிறது.

புத்தரின் சிலைகளில் அவரது குணநலன்கள் அனைத்தையும் காண்பிக்கும் சிற்பக்கலையின் நேர்த்தியை இன்றும் கூடக் காணலாம். அதில் உத்வேகம் பெறலாம்.

 

 

சின்ன உண்மை

 48 மீட்டர் (சுமார் 156 அடி) உயரமுள்ள உலகின் மிக உயரமான புத்தரின் சிலை கிழக்கு சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தில் 1610 லட்சம் டாலர் செலவில் வெண்கலத்தில் அமைக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது.

 

-தொடரும்

This is the second article on The Buddha by Santanam Nagarajan which is publsed in nilacharal.com recently: London Swaminathan. Contact:- swami_48@yahoo.com