
Written by London swaminathan
Date: 18 FEBRUARY 2017
Time uploaded in London:- 20-59
Post No. 3648
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்து பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் கூறியதையும் அது குறித்து தனது கருத்தையும் ஏ.கல்யான்ணராமன் எழுதிய ஆரியதரங்கிணி என்ற நூலில் பல்வேறு பக்கங்களில் தனித்தனியே அளித்துள்ளார். அவற்றைத் தொகுத்து (தமிழில்) தருகிறேன்:-
செமிட்டிக் மொழிகளில் குரங்கு, மயில், கிதார், நீலம் (ரத்தினக் கல்) முதலியவற்றின் சொற்கள் சம்ஸ்கிருத மொழியிருந்து வந்துள்ளன. இது ஹீப்ரு முதலிய மொழிகளில் இந்தியாவின் தாக்கததைக் காட்டுகிறது.
வேதத்திலுள்ள மனு- மீன் கதை (பிரளயம்) பைபிளின் பழைய ஏற்பாட்டில் (Jonah and the Whale) உள்ளது. இது இந்து கலாசாரத்தின் தாக்கத்தைக் காட்டுகிறது. கி.மு.3000 வாக்கில் இந்தியாவிலிருந்து பலர் அங்கு குடியேறினர்.
எகிப்தை டாலமி (Ptolemies) வம்ச அரசர்கள் ஆண்டபோது அங்கு ஆரிய புரோகிதர்கள் இருந்ததும் அங்குள்ள சம்ஸ்கிருதப் பயிற்சிப் பள்ளீகளில் அவர்கள் சொற்பொழிவாற்றியதும் தெரியவந்துள்ளது.
பல எகிப்திய தெய்வங்கள், வைதீக சமய தெய்வங்களைப் போல இருக்கின்றன. இது பற்றி இன்னொரு இடத்தில் விளக்கியுள்ளேன். எகிப்தியர்களின் முக்கியக் கடவுள் Ptah பிதா ( பரலோக பிதா) வேதத்திலுள்ள வானுலக பிதாவை Dyaus Pitar இது குறிக்கும் இதை கிரேக்கர்கள் ஜ்யூஸ் பேடர் Zeus Pater என்றும் ரோமானியர்கள் ஜூ+பிடர் Jupiter என்றும் வழிபட்டனர்.

எகிப்தியர் வழிபட்ட Hathor ஹதோர், வேத கால தெய்வமான சவிதர் (Savitur) என்பதைப் போன்றது எகிப்தியரின் ஹோரஸ் (Horus or Sorus) அல்லது சோரஸ் என்பது வேதத்திலுள்ள சூர்ய (Surya=Sun)என்பதைப் போன்றது.
(கிரேக்க மொழியிலும் பாரசீக மொழியிலும் S எஸ் என்பது H எச் என்று உச்சரிக்கப்படும்)
எகிப்தியர் மன்னர்களை பாரோ (Pharaoh) என்று அழைத்தனர். இது சம்ஸ்கிருதச் சொல்லான பர Para (உயர்ந்தது, சிறந்தது என்பதன் திரிபு ஆகும்.
மன்னர்களை எல்லோரையும் விட உயர்வாகக் கருதியதால் இவ்வாறு அழைத்தனர். அவரை வாழும் தெய்வாமாகக் கருதியதோடு, இறந்தபின்னர் ஆசிரிஸ் Osiris என்று கருதினர். ஆசிரிஸ் நைல் நதி வெள்ளத்துக்குக் காரணமானவர்; உயிர்கள் தோற்றத்திற்கான கடவுளும் ஆவார். ஆசிரிஸின் நகரம் Heliopolis ஹீலியோபோலிஸ். இது சூர்யபுரி Suryapuri என்பதன் திரிபு.
வேத இலக்கியமான பிராமணங்களில் அரசர் பற்றி கூறிய கொள்கைகளே எகிப்தியர் கொள்கையாகவும் இருந்தது.

பிரமிடுகளும் ராஜசூய யக்ஞமும்
பிரமிடுகளை ஏன் எகிப்தியர் கட்டினர்?
மன்னரின் ஆவி சுவர்க லோகத்துக்குச் செல்லும் ஏணிதான் பிரமிடு என்று எட்வர்ட் (Edward) காட்டுகிறார். இதற்கு ஆதாரமாக பபைரஸ் (Papyrus) காகிதத்திலுள்ள ஒரு பழைய வாசகத்தை அவர் சுட்டிக்காட்டினார். ரே (Eye of Re) கடவுளின் கண்ணாக நான் சுவர்கத்துக்கு ஏகுவேன். ரே கடவுளின் கிரணங்களை படியாகப் பயன்படுத்துவேன் என்பது எகிப்திய வசனம்.
ரிக்வேதத்தில் இறுதிச் சடங்கு பற்றிய மந்திரத்தில் இறந்தவரின் கண் சூரியனிடம் செல்லுவதாக உள்ளது:-
சூர்யம் தே சக்ஷுஹு கச்சந்து (10-15)
சோழ மன்னரும் தருமபுத்திரனும் மற்றும் பலரும் செய்த ராஜசூய யக்ஞத்தில் 17 படியுள்ள கம்பத்தில் (17 sided post) மன்னர் ஏறுவார் இது அந்த மன்னரை நப (வானத்துக்கு) என்ற இடத்துக்கு அழைத்துச் செல்லும். இதற்குப் பின்னர் மன்னர் அறிவிப்பார்:
வானத்துக்கும் அப்பாலுள்ள லோகத்துக்கு சென்று பிரஜாபதியின் மகன் ஆகிவிட்டேன்.
இது போன்ற பொருளுள்ள வசனங்கள் எகிப்திய புனித நூல்களிலும் உள.
இந்துக்களை போல அவர்களும் பார்லியைப் பயன்படுத்தினர். அதுதான எகி ப்தின் முக்கியப் பயிர்.
குப்ரு (Khufu) என்ற மன்னன் குரு வம்சத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம்.
ராம்செஸ் (Ramses) என்ற மன்னரின் பெயர் ராம ஈச என்று சில இந்தியவியலாலர் கருதுகின்றனர். அவர் மாதா மாரி அம்மனின் (Maat Meri Ammon) மகன்.
வேத கால இந்துக்கள் விவசாயிகளாக இருந்ததால் நதிகளைத் தெய்வமாகக் கருதினர். இதுபோல எகிப்தியர்களும் நதியைப் புனிதமாகக் கருதினர். அவர்களும் விவசாயிகள்.
ஆதிகால எகிப்தியர்களுக்கு தங்கமும் தாமிரமும் மட்டுமே தெரியும். கி.மு.1600 ல் ஹிக்ஸோஸ் (Hyksos) தான் இரும்பு பற்றிச் சொல்லிக் கொடுத்தனர்.
மன்னர் ஏர் உழும் காட்சி எகிப்தில் சித்தரிக்கப்பட்டது. ரிக்வேதத்தில் நிறைய விவசாயக் குறிப்புகள் உள்ளன (7-6; 10-101; 10-8; 10-99; 3-45)
ஆரிய என்ற சொல்லே ஏர் என்னும் விவசாயச் சொல்லில் இருந்து உருவானதே.
பேராசிரியர் ஜே.பி.எஸ். ஹால்டேன் (J B S Haldane) போன்றோர் ரொட்டிக்கான கோதுமை பஞ்சாபிலிருந்தே உலகம் முழுதும் பரவியது என்பர்.
அடுத்த பகுதியில் சூர்ய வம்சத்துக்கும் எகிப்துக்கும் உள்ள தொடர்பு பற்றி ஏ.கல்யாணராமன் சொல்லும் விஷயங்களைக் காண்போம்.
source:Aryatarangini by A Kalyanaraman, 1969