
Written by S. NAGARAJAN
Date: 3 October 2016
Time uploaded in London:5-49 AM
Post No.3212
Pictures are taken from various sources; thanks
By ச.நாகராஜன்
இந்தியா, பாகிஸ்தான் என்றெல்லாம் போட்டுக் குழம்பிக் கொள்ள வேண்டாம். இது – Just a – கதை தான்!
ஒரு ஊரில் உள்ள ஒரு குடும்பத்திற்குக் கலாட்டா செய்வதே பொழுது போக்கு. அந்த வீட்டுக்காரர்கள் குண்டு தயாரித்து விற்பதில் நிபுணர்கள். அந்த வீட்டில் ஒருவன் இங்கிலாந்தில் மேல் படிப்புப் படிக்கச் சென்று அங்கிருந்த விஞ்ஞானிகளிடம் அணுகுண்டு தயாரிப்பது எப்படி என்பதைத் திருடிக் கொண்டு வந்து சொந்த வீட்டில் அதைச் செய்து பார்க்க ஆரம்பித்தான். அது அரைகுறையாக வெடிக்கும் நிலையில் தயாரானது.
துரதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் இரண்டொரு பைத்தியங்களும் உண்டு.
அந்த வீட்டின் அண்டை வீட்டுக்காரரோ அஹ்மிசாவாதி. மிக நல்லவர். வம்பு தும்புக்குப் போகாதவர். வந்த வமபையும் பயந்து கொண்டு விலைக்கு வாங்க மாட்டார்.
குட்டக் குட்டக் குனிவார்,குனிந்து கொண்டே இருப்பார்.
இது போதாதா நமது கலாட்டா குடும்பத்திற்கு.
அவர்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் அண்டைவீட்டுகாரரை சும்மாவாவது சீண்டிக் கொண்டே இருப்பார்கள்.
ஒரு நாள் கலாட்டா குடும்பத்தின் பைத்தியக்காரன் ஒரு வெடிகுண்டைக் கையில் எடுத்துக் கொண்டான். அந்தப் பைத்தியத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் எதை எடுத்தாலும் கடித்துத் தூக்கிப் போடுவது.
பைத்தியத்தின் கையில் இருந்த வெடி குண்டைப் பார்த்தவுடன் கலாட்டா குடும்பத்தினர் திகைத்தனர். அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.
அண்டைவீட்டுகாரர் – அந்தப் பக்கம் வந்தவர் – வெடிகுண்டைப் பார்த்துத் திடுக்கிட்டார்.
பைத்தியம் அவரை நோக்கி வந்தது. சுற்றிச் சுற்றிக் கும்மாளம் போட்டது. வாயில் வெடிகுண்டின் திரியைக் கடிப்பது போல பாவ்லா செய்தது. ஆனால் கடிக்கவில்லை.
அண்டைக்காரர் பயந்து அதைப் பார்க்க, கலாட்டா குடும்பத்தினரும் திகைப்புடனும் மிரட்சியுடனும் அதைப் பார்க்க அது துள்ளிக் குதித்துக் கொண்டே இருந்தது.
யாரும் பைத்தியத்தின் அருகே போக முடியவில்லை.
பயம், பயம், பயம்!
இப்போது பைத்தியக்காரனின் குண்டைச் செய்லிழக்கச் செய்ய வேண்டும்.
ஒன்று அது சொந்த வீட்டின் மேலேயே குண்டை – வாயில் திரியைக் கடித்து விட்டுத் தான் – போட்டால் ஆயுதக் கிடங்கான அந்த வீடு வெடித்துச் சிதறி அதில் உள்ள அனைவரும் கோரமாகச் சாவர்.
அண்டை வீட்டுக்காரர் மீது போட்டாலோ அவர் விபரீதமாக மாண்டு போவார்.
தூரத்தில் இருந்த வீட்டினரெல்லாம் இந்தக் கூத்தைப் பார்க்க ஒருங்கே திரண்டனர்.
யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை!
மாற்றி யோசிக்க வேண்டும். அப்படி யோசிப்பவர் யாரேனும் இருந்தால் ஒரு வழி சொல்லுங்கள்!

*******
You must be logged in to post a comment.