மலை ஏறும் வீராங்கனை (Post No.4968)

Written by S NAGARAJAN

 

Date: 2 MAY 2018

 

Time uploaded in London –  7-05 AM  (British Summer Time)

 

Post No. 4968

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 20-4-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள  எட்டாம் ஆண்டு ஏழாம் கட்டுரை

.நாகராஜன்

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

நான் ஷெப்பேர்ட் (Nan Shepherd) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபலமான மலை ஏறும் வீராங்கனை. சிறந்த கவிஞரும் கூட.(பிறப்பு : 11-2-1893; மறைவு 23-2-1981)

ஸ்காட்லாந்து அருகில் உள்ள கெய்ர்கார்ம் (Cairmgorm)  மலைப் பகுதியில் அவர் போகாத இடமே கிடையாது. அங்குலம் அங்குலமாக அதை அளந்து தன் அனுபவங்களை அவர் ‘தி லிவிங் மவுண்டன்’ என்ற அரிய நூலை எழுதினார். மலைப் பகுதிகளின் வரைப்படத்தையும் அவர் வெளியிட்டது அரிய சாதனை!

நாற்பது வயதிற்குள் நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.பின்னர் தன் கவிதைகளைத்  தொகுத்து அந்தத் தொகுப்பை வெளியிட்டார். பின்னர் பல வருடங்கள் ஒரு புத்தகத்தையும் வெளியிடவில்லை. 1945இல் எழுதிய ‘தி லிவிங் மவுண்டன்’ என்ற நூல் 1977இல் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது.

அவர் தான் சிறுமியாக இருந்தபோது வாழ்ந்த வீட்டிலேயே 87 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியையாகவும் 1956ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்தார்.

அவரது மலையேற்ற அனுபவங்கள் உலகினரின் கவனத்தை ஈர்த்தது.

ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து அவரது உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து டாலர் நோட்டை 2016ஆம் ஆண்டு வெளியிட்டு அவரை கௌரவித்தது.

ஒரு பெண்மணி துணிச்சலுடன் மலை ஏறும் வீராங்கனையாகத் திகழ முடியும் என்று வாழ்ந்து காட்டிய அவர் பெண்களுக்கு உத்வேகமூட்டும் வழிகாட்டியாகக் கொண்டாடப்படுகிறார்.

***