சாமிநாதப் புலவன் நெற்போர்கள் எரியப் பாடிய வசை வெண்பா! (Post 6338

WRITTEN  by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 3 May 2019


British Summer Time uploaded in London – 15-18

Post No. 6338

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கொங்கு மண்டல சதகம்

சாமிநாதப் புலவன் நெற்போர்கள் எரியப் பாடிய வசை வெண்பா!

ச.நாகராஜன்

தமிழ் ஒரு அதிசய மொழி. உயிர் தழைக்கவும் அதனுடைய ஜீவ சொற்கள் உதவும்.

மனம் வெதும்பி ஒருவர் மீது வசை பாடவும் அது உதவும்.

திருஞானசம்பந்தர் தமிழ்ப் பாடல் பாடி தன் அருளாணையால் மயிலையில் பூம்பாவையின் எலும்புகள் இருந்த அஸ்திக் குடத்திலிருந்து அவளை மீண்டும் உயிருடன் எழச் செய்தார்.

அதே போல பல புலவர்கள் வசைப் பாடல் பாடியதையும் தமிழக வரலாற்றில் பார்க்க முடிகிறது.

எடுத்துக்காட்டாக கொங்கு மண்டலத்தில் நடந்த ஒரு நிகழ்வை கொங்கு மண்டல சதகம் தனது 81ஆம் பாடலில் கூறுகிறது.

தமிழ்ப் புலவன் ஒருவன் அறம் பாடிய வரலாறு இது.

குறுப்பி நாட்டில் உள்ள விஜயமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த

சாமிநாதப் புலவன் என்னும் புலவர் தமிழில் வல்லவர். அவர் ஒரு சமயம் பொன்கலூர் நாட்டில் உள்ள புற்றிரைச்சல் என்ற ஊருக்குச் சென்றார். அவ்வூருக்கு அதிபனாக முத்தன் என்பவர் இருந்தார். தனது வறுமை நிலையை அவரிடம் எடுத்துரைத்த சாமிநாதப் புலவன் தனக்கு உதவி புரியுமாறு வேண்டினார்.

நெற்போர்கள் நிறைய இருந்தும் கூட தன்னிடம் ஒன்றும் இல்லை என்று சொன்னார் முத்தன்.

மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டார் புலவர். ஆனால் முத்தன் இல்லை என்றே சொன்னார்.

அதனால் மனம் வெதும்பிய சாமிநாதப் புலவன் ஒரு வசை வெண்பா பாடினார் இப்படி :

பாழ்த்தவவப் புற்றிரைச்சற் பாவிமுத்தான் குன்றையொப்ப

வீழ்த்தநெற்போர் வெண்பொடியாய் வேகவென்றே – வாழ்த்தக்

கொடாதா னிடாதான் குறுந்துணியுந் தோய்ந்தே

உடாதான் பெருந்துயரு ளுற்று       (தனிப்பாடல்)

இந்தப் பாடலைப் புலவர் பாடியவுன் நெற்போர்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்து வெந்து சாம்பல் ஆயிற்று.

தமிழின் ஆற்றலை அனைவரும் கண்டு வியந்தனர்.

கொங்கு மண்டல சதகத்தின் பாடல் இது :

போயா தரவுட னெற்போர் கிடந்திடப் புற்றிரைச்சற்

றீயார வெந்து பொடிபட வென்றன்று செந்தமிழால்

ஓயாத வாக்கிதென் மங்கைச் சுவாமியென் றோர்புலவன்

வாயார வங்கதம் பாடின துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

விஜய மங்கலம் சுவாமிநாதப் புலவன் புற்றிரைச்சலுக்குப் போய் அங்கிருந்த நெற்போர் சாம்பலாகுமாறு வசை பாடியதும் கொங்கு மண்டலமே.

***