
Picture of Norwegian Sanskrit scholar Sten Konow.
Compiled by London Swaminathan
Post No 953 Dated 4th April 2014
Part 4 அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவ யாத்திரை………………………….
இந்த நாலாவது பகுதியுடன் இந்தத் தொடர் நிறைவுபெறுகிறது.
தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்
“இங்கிலாந்தில் புகழ்பெற்ற சிறந்த வித்தியாசாலையுள்ள ஆக்ஸ்போர்ட் என்ற நகரத்தைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்விடமுள ஸம்ஸ்கிருத புஸ்தகசாலை அதிகப் பிரஸித்திபெற்றது ஸமீபத்தில் கூட நேபால் மகாராஜா அவர்கள் சுமார் 6000 ஏட்டுப் பிரதிகளை அப் புஸ்தகசாலைக்குக் கொடுத்திருக்கிறார். இங்குள்ள உயர்தரக் கல்லூரியில்தான் மியாக்ஸ் முலர் என்ற (இப்பொழுது ஸ்வர்கலோகத்தில் வாஸம் செய்கிற) புகழ்பெற்ற ஸம்ஸ்கிருத வித்வான் சுமார் 80 வருஷங்களுக்கு முன் ருக்வேத பாஷ்யம் முதலானவைகளை ஆராய்ந்து வெளியிட்டார். இப்பொழுது அவரது சீடர்கள் பலர் அநேக கலாசாலைகளில் உபாத்யாயர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
நார்வேயின் பிரதான நகரமான ஓஸ்லோ போய்ச்சேர்ந்தேன். அவ்விடத்து வித்தியாலய ஸம்ஸ்கிருத பண்டிதர் பிரஸித்தி பெற்றவர். அவர் பெயர் ஸ்டென் கோநோ என வழங்கும். இந்தப் பண்டிதர் மூலமாக மகா மேரு யாத்திரா ஸௌகரியங்கள் கிடைத்தன. அங்கிருந்து புறப்பட ஒரு வாரமாயிற்று. நாள்தோறும் ஸ்டென் கோநோவுடன் வேதாந்த விசாரணை செய்வது வழக்கம். இந்த வித்வானுடைய ஆசாரத்தையும் ஞானத்தையும் நோக்கினால் நம் ரிஷிகளுள் இவரை ஒருவராகக் கொள்ளலாம். என்னை மேருப் பிரதேசத்துக்கு வழியனுப்ப மேற்படி பண்டிதர் தம் சீடர்களுடன், ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்; சம்பாஷணை முழுவதும் ஸம்ஸ்கிருதத்திலேயே நடந்தது. எங்கள் சம்பாஷணை முடிகிற வரை ரயில்வே கார்ட் தூரத்திலிருந்து பெருந்தன்மையுடன் கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் நம் பண்டிதர் ஸமீபம் வந்து ரயில் வண்டியை விடலாமா வென்று கேட்டார். உடனே பண்டிதர் கடியாரத்தைப் பார்த்து, ஓ! பத்து நிமிஷம் அதிகமாகிவிட்டதே என்றார். அதற்கு கார்ட் துரை, “அதனால் குற்றம் ஒன்றுமில்லை. கீழ்நாட்டு வித்வானை ரயில் வண்டியில் உடகாரவைத்து அவர்கள் அனுமதியைப் பெற்று வாருங்கள். பிறகு நான் வண்டியை ஓடவிடுகிறேன்” என்றார்.

Picture of Oxford Bodleian Library
இதை இவ்விடத்தில் தெரிவிக்கும் காரணம் மேல்த் தேசத்தில் ஸம்ஸ்கிருத வித்வான்களுக்குப் பொதுஜன ஆதரவு எவ்வளவு என்பதை விளக்குவதற்காகவே. பிறகு மாணவர் வழியனுப்புப் பாட்டை நார்வே பாஷையிற் பாடி எனக்குத் தம் குருவுடன் வணக்கம் கூறினர். கார்டு துரைக்கு ரயிலை விட அனுமதி கொடுத்தார்கள். நண்பர்களே இவ்விஷயம் இந்தியாவில் நடக்கக்கூடுமாவென்று யோசியுங்கள்.
(இதற்குப் பின் ஐயர் நார்வேஎ நாட்டு நள்ளிரவு சூர்ய தரிசனத்தை வருணிக்கிறார். மகாமேரு யாத்திரை என்ற இரண்டு கட்டுரைகளில் சுருக்கம் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஆகையால் புத்தகத்தின் இறுதிப் பகுதியிலிருந்து சில விஷயங்களைக் காண்போம்)
ஐரோப்பா கண்டம் நம் இந்தியாவை விடச் சிறியது; ஆதலால் அடிக்கடி ஒரு நாடு விட்டு அடுத்த நாடு வரும்பொழுது சுங்கச் சாவடியாட்களின் சோதனை நடக்கும். ஏதாவது தவறுதல் நேர்ந்தால் உடனே அந்த யார்த்திரைக்காரனை கீழே இறக்கிவிடுவார்க.ள். சோதனையும் மிகக் கடுமையக இருக்கும். இந்தச் சோதனைத் துன்பம் எனக்குக் கொஞ்சம் கூடவில்லை. ஒரு யோக்கியதா பத்ரம் என்னிடத்தில் உண்டு. அதில் நான் “இந்தியாவில் ஒரு வைதீகப் பிராமணன்; ஆகார நியமம் உள்ளவன்; புகையிலை முதலானவைகளை நிந்திக்கிறவன்’ ஒரு ஆரியன்; வித்வான்; எல்லோராலும் உபசரிக்கத்தக்கவன்” என்று எழுதி இருந்தது; ஒவ்வொரு கஸ்டம்ஸ் ஆபீஸரும் என்னையும் என் தலைப்பாகை சால்வை முதலானவற்றை பார்த்தது,ம், யோக்கியதா பத்ரத்தைப் பார்த்தது,ம், எழுந்திருந்து வந்தனம் சொல்லி வினயத்துடன் போய்விடுவார்கள்.
ஜரூஸலத்தில் ஸ்வாமி புறப்பாடு
பக்கம் 73ல் ஜரூஸலம் பற்றி ஐயர் எழுதுவது:
இந்நகரம் ஐந்து மலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் மலை கிறிஸ்துவை விசாரணை செய்து சிலுவையில் அறைந்த இடமாகும்; இரண்டாவது மலையில் இப்பொழுது யூதர்கள் வித்தியாசாலை ஸ்தாபித்திருகிறார்கள். மூன்றவதில் ஜர்மன் சக்கரவர்த்தி தாம் வந்து இறங்குவதற்காகக் கட்டின அரண்மனையுள்ளது. ஐந்தாவதில் கிறிஸ்துமாதா ஸமாதி இருக்கிறது. இந்துக்கள் ஸ்ரீகாசியிருப்பது போல இந்த இடங்களில் மரணத்தை எதிர்பார்க்கும் கிறிஸ்தவர் பலர் நெடுந்தூரத்திலிருந்து வந்து காத்திருகிறார்கள். ஸ்ரீ கிறிஸ்துவின் ஸமாதி இந்த ஐந்து மலைகளுக்கும் நடிவில் உள்ளது. ஸமாதியின் மேல் ஒரு கண்ணாடிக் கூண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சுற்றிலும் பெரிய மண்டப முண்டு. ஸமாதிக்கு மின்சார விளக்குகள் போடப்பட்ட்டு அணையா விளக்கொடு பூஜை நடக்கிறது.

Picture of Mary idol in Jerusalem
கிறிஸ்தவ மத உட்பிரிவுகளில் உள்ள ஏழு மடாதிபதிகள் நாள்தோறும் ஒவ்வொருவராக அவரவர்க்கு நியமிக்கப்பட்ட காலங்களில் வந்து நேரே பூஜை செய்கிறார்கள். ஸ்ரீ சிதம்பரம் முதலான கோவில்களில் எப்படி உத்ஸவ காலங்களில் பூஜைகளும் பாராயணங்களும் அலங்கார முதலானவைகளும் நடக்கின்றனவோ அப்படியே இந்த ஸமாதிக்கு பெருஞ் செலவில் பூஜை நடத்தப்படுகிறது.
நான் அவ்விடம் போனபொழுது ஸமாதியில் சிறந்ததொரு உத்ஸவம் நடந்தது. மாலையில் ஸ்வாமி வீதி புறப்பாடும் உண்டு. சிறந்த தங்கச் சப்பிரத்தில் கிறிஸ்து விக்கிரகமும் மற்றொரு வாகனத்தில் மாதா மேரியின் விக்கிரகமுமிருந்தன. புத்தமத உத்ஸவங்களே இப்படி கிறிஸ்தவ மத உத்ஸவங்களாகப் பரிணமித்தன.
இவ்வளவு ஸம்பத்துக்களை நம் க்ஷேத்திரங்களில் நான் பார்த்தது இல்லை. அளவிற்படாத ஸொத்து……………………………………
நாம் இப்பொழுது உலகில் காணும் ஸொத்தை ஒரு தராசிலும் ரோமாபுரி போப்பின் ஸொத்தை ஒரு தராசிலும் வைத்தால் அநேகமாகப் போப்பின் ஸம்பத்தே அதிகமாக இருக்கலாம்.
(இவை எல்லாம் 1935-ல் எழுதப்பட்டது. ஐயரின் புத்தகம் 1936 ஜனவரியில் விற்பனைக்கு வந்துவிட்டது. 110 பக்கம் உடைய புத்தகம் என்னிடம் உள்ளது. பிற்காலத்தில் ஆராய்ச்சியாளருக்குப் பயன்படலாம்).
முற்றும்.
contact swami_48@yahoo.com
Pictures are used from various sites;they are NOT from aiyer’s book. Thanks.


You must be logged in to post a comment.