நார்வேயில் ‘சம்பாஷணை முழுவதும் ஸம்ஸ்கிருதத்தில்’

konow_sten
Picture of Norwegian Sanskrit scholar Sten Konow.

Compiled by London Swaminathan
Post No 953 Dated 4th April 2014

Part 4 அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவ யாத்திரை………………………….
இந்த நாலாவது பகுதியுடன் இந்தத் தொடர் நிறைவுபெறுகிறது.
தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்

“இங்கிலாந்தில் புகழ்பெற்ற சிறந்த வித்தியாசாலையுள்ள ஆக்ஸ்போர்ட் என்ற நகரத்தைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்விடமுள ஸம்ஸ்கிருத புஸ்தகசாலை அதிகப் பிரஸித்திபெற்றது ஸமீபத்தில் கூட நேபால் மகாராஜா அவர்கள் சுமார் 6000 ஏட்டுப் பிரதிகளை அப் புஸ்தகசாலைக்குக் கொடுத்திருக்கிறார். இங்குள்ள உயர்தரக் கல்லூரியில்தான் மியாக்ஸ் முலர் என்ற (இப்பொழுது ஸ்வர்கலோகத்தில் வாஸம் செய்கிற) புகழ்பெற்ற ஸம்ஸ்கிருத வித்வான் சுமார் 80 வருஷங்களுக்கு முன் ருக்வேத பாஷ்யம் முதலானவைகளை ஆராய்ந்து வெளியிட்டார். இப்பொழுது அவரது சீடர்கள் பலர் அநேக கலாசாலைகளில் உபாத்யாயர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

நார்வேயின் பிரதான நகரமான ஓஸ்லோ போய்ச்சேர்ந்தேன். அவ்விடத்து வித்தியாலய ஸம்ஸ்கிருத பண்டிதர் பிரஸித்தி பெற்றவர். அவர் பெயர் ஸ்டென் கோநோ என வழங்கும். இந்தப் பண்டிதர் மூலமாக மகா மேரு யாத்திரா ஸௌகரியங்கள் கிடைத்தன. அங்கிருந்து புறப்பட ஒரு வாரமாயிற்று. நாள்தோறும் ஸ்டென் கோநோவுடன் வேதாந்த விசாரணை செய்வது வழக்கம். இந்த வித்வானுடைய ஆசாரத்தையும் ஞானத்தையும் நோக்கினால் நம் ரிஷிகளுள் இவரை ஒருவராகக் கொள்ளலாம். என்னை மேருப் பிரதேசத்துக்கு வழியனுப்ப மேற்படி பண்டிதர் தம் சீடர்களுடன், ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்; சம்பாஷணை முழுவதும் ஸம்ஸ்கிருதத்திலேயே நடந்தது. எங்கள் சம்பாஷணை முடிகிற வரை ரயில்வே கார்ட் தூரத்திலிருந்து பெருந்தன்மையுடன் கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் நம் பண்டிதர் ஸமீபம் வந்து ரயில் வண்டியை விடலாமா வென்று கேட்டார். உடனே பண்டிதர் கடியாரத்தைப் பார்த்து, ஓ! பத்து நிமிஷம் அதிகமாகிவிட்டதே என்றார். அதற்கு கார்ட் துரை, “அதனால் குற்றம் ஒன்றுமில்லை. கீழ்நாட்டு வித்வானை ரயில் வண்டியில் உடகாரவைத்து அவர்கள் அனுமதியைப் பெற்று வாருங்கள். பிறகு நான் வண்டியை ஓடவிடுகிறேன்” என்றார்.

oxford bodleian libraries
Picture of Oxford Bodleian Library

இதை இவ்விடத்தில் தெரிவிக்கும் காரணம் மேல்த் தேசத்தில் ஸம்ஸ்கிருத வித்வான்களுக்குப் பொதுஜன ஆதரவு எவ்வளவு என்பதை விளக்குவதற்காகவே. பிறகு மாணவர் வழியனுப்புப் பாட்டை நார்வே பாஷையிற் பாடி எனக்குத் தம் குருவுடன் வணக்கம் கூறினர். கார்டு துரைக்கு ரயிலை விட அனுமதி கொடுத்தார்கள். நண்பர்களே இவ்விஷயம் இந்தியாவில் நடக்கக்கூடுமாவென்று யோசியுங்கள்.

(இதற்குப் பின் ஐயர் நார்வேஎ நாட்டு நள்ளிரவு சூர்ய தரிசனத்தை வருணிக்கிறார். மகாமேரு யாத்திரை என்ற இரண்டு கட்டுரைகளில் சுருக்கம் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஆகையால் புத்தகத்தின் இறுதிப் பகுதியிலிருந்து சில விஷயங்களைக் காண்போம்)

ஐரோப்பா கண்டம் நம் இந்தியாவை விடச் சிறியது; ஆதலால் அடிக்கடி ஒரு நாடு விட்டு அடுத்த நாடு வரும்பொழுது சுங்கச் சாவடியாட்களின் சோதனை நடக்கும். ஏதாவது தவறுதல் நேர்ந்தால் உடனே அந்த யார்த்திரைக்காரனை கீழே இறக்கிவிடுவார்க.ள். சோதனையும் மிகக் கடுமையக இருக்கும். இந்தச் சோதனைத் துன்பம் எனக்குக் கொஞ்சம் கூடவில்லை. ஒரு யோக்கியதா பத்ரம் என்னிடத்தில் உண்டு. அதில் நான் “இந்தியாவில் ஒரு வைதீகப் பிராமணன்; ஆகார நியமம் உள்ளவன்; புகையிலை முதலானவைகளை நிந்திக்கிறவன்’ ஒரு ஆரியன்; வித்வான்; எல்லோராலும் உபசரிக்கத்தக்கவன்” என்று எழுதி இருந்தது; ஒவ்வொரு கஸ்டம்ஸ் ஆபீஸரும் என்னையும் என் தலைப்பாகை சால்வை முதலானவற்றை பார்த்தது,ம், யோக்கியதா பத்ரத்தைப் பார்த்தது,ம், எழுந்திருந்து வந்தனம் சொல்லி வினயத்துடன் போய்விடுவார்கள்.

ஜரூஸலத்தில் ஸ்வாமி புறப்பாடு

பக்கம் 73ல் ஜரூஸலம் பற்றி ஐயர் எழுதுவது:

இந்நகரம் ஐந்து மலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் மலை கிறிஸ்துவை விசாரணை செய்து சிலுவையில் அறைந்த இடமாகும்; இரண்டாவது மலையில் இப்பொழுது யூதர்கள் வித்தியாசாலை ஸ்தாபித்திருகிறார்கள். மூன்றவதில் ஜர்மன் சக்கரவர்த்தி தாம் வந்து இறங்குவதற்காகக் கட்டின அரண்மனையுள்ளது. ஐந்தாவதில் கிறிஸ்துமாதா ஸமாதி இருக்கிறது. இந்துக்கள் ஸ்ரீகாசியிருப்பது போல இந்த இடங்களில் மரணத்தை எதிர்பார்க்கும் கிறிஸ்தவர் பலர் நெடுந்தூரத்திலிருந்து வந்து காத்திருகிறார்கள். ஸ்ரீ கிறிஸ்துவின் ஸமாதி இந்த ஐந்து மலைகளுக்கும் நடிவில் உள்ளது. ஸமாதியின் மேல் ஒரு கண்ணாடிக் கூண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சுற்றிலும் பெரிய மண்டப முண்டு. ஸமாதிக்கு மின்சார விளக்குகள் போடப்பட்ட்டு அணையா விளக்கொடு பூஜை நடக்கிறது.

greek mary idol
Picture of Mary idol in Jerusalem

கிறிஸ்தவ மத உட்பிரிவுகளில் உள்ள ஏழு மடாதிபதிகள் நாள்தோறும் ஒவ்வொருவராக அவரவர்க்கு நியமிக்கப்பட்ட காலங்களில் வந்து நேரே பூஜை செய்கிறார்கள். ஸ்ரீ சிதம்பரம் முதலான கோவில்களில் எப்படி உத்ஸவ காலங்களில் பூஜைகளும் பாராயணங்களும் அலங்கார முதலானவைகளும் நடக்கின்றனவோ அப்படியே இந்த ஸமாதிக்கு பெருஞ் செலவில் பூஜை நடத்தப்படுகிறது.

நான் அவ்விடம் போனபொழுது ஸமாதியில் சிறந்ததொரு உத்ஸவம் நடந்தது. மாலையில் ஸ்வாமி வீதி புறப்பாடும் உண்டு. சிறந்த தங்கச் சப்பிரத்தில் கிறிஸ்து விக்கிரகமும் மற்றொரு வாகனத்தில் மாதா மேரியின் விக்கிரகமுமிருந்தன. புத்தமத உத்ஸவங்களே இப்படி கிறிஸ்தவ மத உத்ஸவங்களாகப் பரிணமித்தன.

jerusalem-panorama-500
Panoramic View of Jerusalem.

இவ்வளவு ஸம்பத்துக்களை நம் க்ஷேத்திரங்களில் நான் பார்த்தது இல்லை. அளவிற்படாத ஸொத்து……………………………………

நாம் இப்பொழுது உலகில் காணும் ஸொத்தை ஒரு தராசிலும் ரோமாபுரி போப்பின் ஸொத்தை ஒரு தராசிலும் வைத்தால் அநேகமாகப் போப்பின் ஸம்பத்தே அதிகமாக இருக்கலாம்.

(இவை எல்லாம் 1935-ல் எழுதப்பட்டது. ஐயரின் புத்தகம் 1936 ஜனவரியில் விற்பனைக்கு வந்துவிட்டது. 110 பக்கம் உடைய புத்தகம் என்னிடம் உள்ளது. பிற்காலத்தில் ஆராய்ச்சியாளருக்குப் பயன்படலாம்).
முற்றும்.

contact swami_48@yahoo.com
Pictures are used from various sites;they are NOT from aiyer’s book. Thanks.

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –2

 

Picture shows Arctic Circle (North Pole)

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –பகுதி – 2

                                       ச.நாகராஜன்

தெய்வப் பணி, நாட்டுப் பணி, தமிழ்ப் பணியை முனைந்து செய்து வந்த செட்டியார் குலத்தில் தோன்றிய உலகம் சுற்றிய தமிழன் திரு ஏ.கே.செட்டியார் குமரி மலரில் வெளியிட்ட மகாமேரு யாத்திரையின் சென்ற இதழ் தொடர்ச்சியைக் கீழே படிக்கலாம் :

இவ்விடத்தில் ஒரு ஆப்சர்வேடரி ( நக்ஷத்திர யந்திரசாலை) வைக்கப் பட்டிருக்கிறது.கணித சாஸ்திரம், வான சாஸ்திரங்கள் படிக்கும் ஐரோப்பியர், அமெரிக்க மாணவர்கள் பள்ளிக்கூடப் படிப்பு முடிந்தவுடன் ஒரு வருஷம் இவ்விடம் வந்து பயிற்சி பெற்றுப் போவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் ஜர்மன் தேச மாணவருடன், சூரியன் நாடோறும் மாறும் வர்ணங்களைக் குறித்தும் படவுதவியுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது இதற்கு அடுத்தது உருக்கின தங்க

 

வர்ணம் நாளைக்குப் படத்தில் வருமென்று நான் சொன்னவுடன் அவருக்கு ஆச்சரியமுண்டாயிற்று.”எப்படி ஐயா, தங்களுக்கு இவ்வளவு நிச்சயமாகத் தெரியும்?” என்று என்னைக் கேட்டார். உடனே நான், உத்தராயண முதலில் தாமிர வர்ணமும், பிறகு அருணம், அப்புறம் பப்புரு நிறம் கடைசியில் ஸுமங்கல் (உருக்கின தங்க வர்ணமென்று) ஸ்ரீ ருத்திரத்தில் கூறியிருப்பதைச் சொன்னேன். உடனே அம்மாணவர் வியப்புற்றார்.ருக் வேதத்தில் சூரியனுக்குத் தங்க வர்ணத்திற்கு மேலான வெண்மை நிறத்தை வர்ணிக்கவில்லை என்பது ஆர்க்டிக் பிரதேச சூரியனைக் குறிப்பதாகும்.இதற்கு நேரே வடக்கில் “மேரு நுனி” இருக்கிறது. இந்த இடத்திலிருந்து தான் பௌதிக நூல் வல்லார் மேரு நுனியைக் காணப் போய்க் காலமடைந்தார்கள். அவர்களது யந்திரம் முதலியவைகளை ஞாபகார்த்தமாக இவ்வூர்க் கோவிலில் வைத்திருக்கிறார்கள்.

 

இது முதல் வடக்கே சென்றால் அவிச்சின்ன சூரியனைப் பார்க்கலாம். ஆகையால் “உதயாஸ்தமனம் இல்லாத”  சூரியனைச் சில விரதக்காரர் உபாசிக்க வேண்டுமென்று வேதத்தில் கூறியதை அனுஷ்டிக்க விரும்பினால் அவர்கள்  இந்த ஸ்தானத்தை அடைய வேண்டும்.

 

என் வாழ்நாள் முழுதும் கண்ணுக்குக் கண்ணாடியில்லாமலும் கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பவர்களை யோகப்பயிற்சியின் பலனாக எடுக்கும்படியும் செய்திருப்பதுண்டு.நாம் அதை உபயோகியாததினால் ஸம்ஸ்கிருதத்தில் கண்ணிலணியும் கண்ணாடிக்குப் பெயர் இல்லை. நாள்தோறும் சுமார் பத்து மணி வரை பகலில் ஏட்டுச் சுவடியிலுள்ள சிறிய எழுத்துக்களைப் படித்துக் காலங் கழித்து வருவேன். ஒரு நாள் பகலில் சூடான ஓரிடத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சூரிய ஒளி மூளையில்  (ஸன் ஸ்ட்ரோக்) விழக் கண்களுக்குக் கெடுதல் நேர்ந்தது. கர்ம விபாக சாஸ்திரப்படி உதயாஸ்தனமில்லாத சூரியனைத் தரிசித்து அவனைப் பார்த்துக் கொண்டே சூரிய அஷ்டோத்திரத்தை சில ஆயிரம் ஜபித்துப் பிறகு ஸ்ரீ ருத்திரத்தினாலும் “வயஸ் ஸுபர்ணா” என்கிற மந்திரத்தினாலும் புரச்சரணை செய்து விரத சமாப்தி செய்வதாக சங்கல்பித்தேன். உடனே யாத்திரையை ஆரம்பித்து ஆர்க்டிக் பிரதேசம் வந்தேன்.

 

நாள்தோறும் கப்பல் எஜமானனைப் பார்த்து ‘ட்றோம்ஸோ போனவுடன் சூரியன் மேகத்தாலும், பனிமழைகளினாலும், மறைபடாமல் எனக்கு தரிசனம் கிடைக்குமா?” என்று ஆவலுடன் கேட்பேன்.அப்பொழுதெல்லாம் அவரும் கப்பலில் அமைந்திருக்கிற யந்திரத்தைப் பார்த்துக் கொண்டே கால நிலைமையை முன்னே யறிந்து சொல்ல முடியாதென்று கூறுவார்.

நானோ இந்தியாவிலிருந்து சுமார் 8000 மைல் வரை யாத்திரை செய்து பெருஞ் செலவில் அதை நிறைவேற்றப் போனவன். “அவிச்சின்ன சூரிய” தரிசனமில்லாமல் திரும்பினால் இதை விட மனோ துக்கம் எனக்கு வேறு என்ன வேண்டும்? எனக்காகக் கப்பலை நிறுத்த முடியுமா?

 

ஒரு நாள் மாலை என் மனத்தில் ஈசுவர கிருபையினால் ஒன்று தோன்றிற்று. அதாவது சூரியனை நினைத்து “சூரியனே! நீ நாளை முதல் மூன்று தினங்கள் மேகம் முதலியவற்றால் மறையாமல் தரிசனம் கொடுத்து என் விரதத்தை முற்றுப் பெறச் செய்யாவிடில் என் சாபத்துக்கு உட்பட நேரும். ஈசுவராதிகளெல்லாம் பக்தர் சாபத்தால் தசாவதாரம் எடுக்க நேர்ந்ததை ஞாபகப் படுத்துகிறேன்” என்று சொல்லி விட்டு என் அறைக்குள் போய் சிரம பரிகாரம் செய்து கொண்டேன்.

 

சில மணி நேரத்துக்கெல்லாம் கப்பல் தலைவன் என்னிடம் ஓடி வந்து ‘சூரியன் இனிப் பிரகாசமாகுவான்; யந்திரமும் அப்படியே தெரிவிக்கிறது. தாங்களும் விரதத்தை நிறைவேற்றலாம்” என்று சொன்னான். நான் அவரை ஒரு தேவ தூதனாக நினைத்து உடனே விரதத்தை மேற்கொண்டேன்.

 

கப்பல் போகக் கூடிய “வடக்கு முக்கு” என்று ஓர் இடம் இருக்கிறது. அதையடைந்த  பிறகு  கொஞ்சம் தென் கிழக்காகக் “கர்கிஸ்” என்ற சிற்றூர் போய்ச் சேர வேண்டும். அது தான் யாத்திரா முடியும் இடம். இவ்விடத்தில் நிலக்கரி கிடைக்கிறது. ஆகையால் ஒரு காலத்தில் இந்த இடம் நம் தேசம் போல அதிக வெப்பமுள்ளதாய் மரம் செடிகள் நிரம்பப் பெற்று பூகம்பம் முதலானவற்றால் அழிந்து ஆயிர வருஷக் கணக்காக அப்படியே யிருந்திருக்க வேண்டுமென்று நம்பலாம்.

சில காலங்களில் வருஷம் பூராவும் சூரிய ஒளியின்றி பனி மழையால் உணவுக்கு வேண்டிய பயிர் முதலாயின உற்பத்தியாகாமல் போனதினால் நம் முன்னோர் இதை விட்டுத் தெற்கே சென்றார்கள் என்று சாந்தோக்கிய உபநிஷத்தில்  முதல் அத்தியாயத்தில் கூறியிருக்கிறது.

 

வடக்கு நுனியிலிருந்து மேற்கு நுனிக்கு சுமார் 190 மைல் இருக்கிறதென்று ஆராய்ச்சியாளர் சொல்லுகிறார்கள். அந்த இடம் எப்படியிருக்கிறதென்பதைப் பார்க்க அறிஞர்களால் முடியவில்லை. ஆகாயவிமானமாவது கப்பலாவது அவ்விடம் போகவியலவில்லை. மேரு நுனியை நெருங்கின விமானமும், கப்பலும் கிழக்கே யிழுக்கப்பட்டு சுமார் 500 மைலுக்கு அதிக தூரத்தில் தள்ளப்படுகின்றன.

 

(வடக்கே காட்டுகிற முள்ளை) நீங்கள் சாதாரணமாகப் பார்த்திருப்பீர்கள். மேரு நுனிக்குப் போனால் அந்த முள் எந்தப் பக்கம் திரும்புகிறதென்று தெரிய வேண்டும். இது தான் ரஹஸ்யம். இந்த வடக்கு நுனியிலிருந்து கொஞ்ச தூரத்தில் வடமேற்காக ‘ஸ்விஸர்பர்கு தீவு’ இருக்கிறது.அவ்விடத்திலிருந்து மேரு நுனி சுமார் இருநூறு மைலுக்குள்ளேயே இருக்கக் கூடும். அங்கிருந்து மேரு நுனிக்குப் போனாலும் முன் நேர்ந்த கதி தான். ஆண்டுதோறும் உத்தராயணத்தில் மேல் நாட்டுப் பேரறிஞர் பலர் முயற்சி செய்துகொண்டே வருகிறார்கள். ஏதாவது ஒரு தடை நேருகிறது.

அதனாலேயே தைத்திரிய ஆரணத்தில் ஒரு ரிஷி மற்றொருவரைப் பார்த்து ‘நான் மேருவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய பார்த்ததில்லை” என்றார்.

அதற்கு மற்றொருவர், “நான் நேரே பார்த்தேன்” என்றார்.

அவர் மகான்; நாம் மனிதர்; ஆகையால் மேருவைப் பார்க்க முடியாது. நான்கு தினங்களில் சூரியனைத் தரிசித்து ஜபம் செய்து திரும்பவும் ட்றோம்ஸோவுக்கு வந்தேன்.

 

மேரு யாத்திரை முற்றும்.